இராம பிரானும் தவளையும்

26fr_Prabhu_Kudanthai

Sri Ramaswami Temple, Kumbakonam ( photo from a news paper)

By London Swaminathan
Post No. 958 Dated 6th April 2014.

“ஸ்ரீ ராமசந்திரர் வனவாசம் பண்ணுகையில், ஒரு நாள் தனது வில்லையும் அம்பையும் தரையில் நிறுத்திவிட்டு, தாக சாந்தி செய்து கொள்வதற்காகப் பம்பா சரஸ் என்ற தடாகத்தில் இறங்கினார். மேலே ஏறி வந்து பார்க்கையில் தமது வில் ஒரு தவளையை ஊடுருவிச் சென்றதன் காரணமாக அந்தத் தவளை இரத்ததில் தோய்ந்திருப்பதைக் கண்டார்.

ஸ்ரீ ராமன் இதற்கு மிகவும் வருந்தி, ஏ, தவளையே நீ ஏதாவது சத்தம் போட்டிருக்கலாமே; அப்போது நீ இருப்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேனே. உனக்கு இந்தக் கதியும் நேர்ந்திராதே” என்றார்.

ராமா ! எனக்கு ஆபத்து நேரும்போது, “ராமா என்னைக் காப்பாற்று” என்று சொல்வேன். ஆனால் நீயே என்னைக் கொல்லும்போது, நான் யாரிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டுப் பிரார்த்திப்பது? என்று தவளை பதில் சொல்லிற்று”.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது; உதவிய புத்தகம்:- ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்புர், சென்னை 600 004.

(இந்த நூலில் 1121 உபதேசங்கள் இருக்கின்றன. இது ஒரு அற்புத மான தொகுப்பு. இந்து மதம் எனக்குப் புரியவில்லையே! ஜீவாத்மா, பரமாத்மா, க்ஷேத்ரக்ஞன் இந்த சொற்கள் எல்லாம் புரியவில்லையே!! என்பவருக்கு இந்த நூல்தான் அருமருந்து. எளிய உபதேசம் மூலம் அரிய பெரிய தத்துவங்களை விளக்கும் அற்புத நூல் இது.)

26fr_Prabhu_Kudantharama

Kumbakonam Sri Ramaswami Temple picture from a newspaper.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

எறும்பு முதல் யானை வரை எல்லா ஜீவன்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும் படைத்தவன் இராமன்.
முறையாக அரசு செய்யும் மன்னவனை மக்கள் கடவுளாகக் கும்பிடுவார்கள் என்று வள்ளுவன் சொல்கிறான்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறை என்று வைக்கப் படும் (குறள் 388)
– என்பது வள்ளுவன் வாக்கு.

எப்படி திருஞான சம்பந்தர் தனது திருமணம் முடிந்த அடுத்த நிமிடத்தில் அத்தனை பேரையும் கூண்டோடு கைலாசத்துக்கு அழைத்துச் சென்றாரோ– திருமணப் பந்தலில் தோன்றிய ஜோதியில் மறைந்தனரோ — அதே போல ராமனும் அயோத்திவாசிகள் அத்தனை பேரையும் மோட்சத்திற்கு அழைத்துச் சென்றான். அவனது காந்த சக்தி மக்கள் அனைவரையும் இழுத்தது. அவர்கள் அனைவரும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சத்தை அடைந்தனர். இதை நம்மாழ்வார் பாடி இருக்கிறார்:–

கற்பார் இராம – பிரானை அல்லால், மற்றும் கற்பரோ
புல், பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் – பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் – பாலுக்கு உய்த்தனன் – நான்முகனார் பெற்ற நாட்டுளே?

பொருள்: நான்முகன் படைத்த உலகில் வாழும் அசையும், அசையாப் பொருள்கள் ஆகிய பல உயிர்களையும், புல் பூண்டு முதலாக எறும்பு போன்ற அனைத்து உயிர்களையும், தன் அருளால் இராமன் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனன். இத்தகைய இராமனின் புகழைக் கற்காமல் மற்று எதையும் கற்பார்களோ!

sitarama_5kumbalpnam

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

— என்ற வள்ளுவன் குறளைப் பார்க்கையில், இராம பிரானைக் கடவுள் நிலைக்கு உயர்த்தத்தான் அந்தக் குறளை எழுதினானோ என்று நாம் வியப்புறுவோம்!!.

2014 ஏப்ரல் 8 செவ்வாய்க் கிழமை இராம நவமி. இராமனின் புகழ் பாடி நாமும் நற்கதி அடைவோம்.

Contact swami_48@yahoo.com

Pictures are used from various sites; thanks.

Rama – Embodiment of Dharma

ramabronze

By London Swaminathan
Post No. 957 Dated 5th April 2014

Rama Navami, Birth day of Lord Rama falls on 8th April 2014.

“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda

Valmiki praised Lord Rama as the embodiment of Dharma (righteousness). We have lots of monuments and temples all over India which boasts of their association with Sri Rama. They were made holy the minute Rama walked on the soil of those towns and cities, hills and forests. He was even kind towards animals including small creatures. Ramakrishna Paramahamsa tells us a story where his kindness excelled:

“Sri Ramachandra in the course of his travels through the forest descended into the lake called Pampa to drink water, leaving his bow and arrow fixed on the ground. Coming up he found a frog lying covered all over with blood, having been run through by his bow. He was very sorry and said to the frog, “Why didn’t you make some kind of sound? Then I could have known that you were here and you would not have come to this plight.” The frog replied, “O,Rama, when I fall into danger, I call on Thee, ‘O,Rama, save me’. Now that You yourself are killing me , to whom else shall I turn and pray?

hanuman 4

Tamil saint praise for Rama:

Rama liberated all the creatures in the vicinity of Ayodhya, the capital of his kingdom. All those lived in the city went to heaven. Nammalvar, a Vaishnava saint who lived 1200 years ago praised Sri Rama about his kindness towards plants and animals in one of his hymns:–

“For the seekers of knowledge
Can there be a knowledge?
Better than
The knowledge of the divine, Sri Rama
The one who liberated
Even the blades of grasses
And all the swarms of ants
Leaving none behind
That ever existed
In the good city of Ayodhya.
And placed them in
An exotic heaven
Created exclusively for them
By the Great Grandsire Brahma.

—The Ultimate Liberator by Nammalvar.

Contact :– swami_48@yahoo.com

இராமன் யார்? கம்பன் பதில்

hanuman 4

2014 ஏப்ரல் 8-ஆம் தேதி இராம நவமி; ‘மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரம் இராமன்’ என்று கம்பன் புகழ்கிறான். அத்தகைய இராமன் புகழை நாமும் பாடுவோம்.

கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–956 தேதி ஏப்ரல் 5, 2014

இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்பவன் இராம பிரான். ‘தர்மத்தின் சின்னம் ராமன்’ (ராமோ விக்ரஹவான் தர்ம:, ராமாயணம் 3-37-13) என்று வால்மீகி முனிவன் முன் மொழிவதை கம்பனும் அப்படியே வழி மொழிகிறான். ஒரு பாட்டில் அல்ல, இரண்டு ஒரு பாட்டில் அல்ல; பல பாடல்களில்:–

“குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்”

பரதனே நாட்டை ஆள வேண்டும், இராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போக வேண்டும் என்று கைகேயி உத்தரவிட்டவுடன் ராமன் சென்ற காட்சி மேற்கூறிய பாடலில் உள்ளது. மன்னருக்கே உரித்தான சாமரம் இல்லை, வெண்ணிறக் குடையும் இல்லாமல் ‘விதி’ முன்னே செல்ல, தருமம் போன்ற ராமன் பின்னே சென்றானாம். அவனுடைய விதி — தலை விதி — கைகேயி உருவத்தில் வந்தது. தரும வடிவில் நிற்கும் இராமன், ‘விதியே என்று’ பின்னால் நடந்து செல்கிறான் தன் அம்மாவிடம் விடை பெற்றுக் கொள்ள.

அயோத்தியா காண்டத்தில் ‘தர்ம மூர்த்தி’ என்றே அழைக்கப்படுவதை பின்வரும் பாடல் காட்டும்:–

“புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகழ்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து, யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன்.

பொருள்:– தரும மூர்த்தியாகிய திருமாலே இராமனாக வந்து அவதரித்தான் என்று சொல்வதைத் தவிர, நாம் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது? அந்தத் திறமை மிகுந்த இராமன், எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி— காப்பாற்றி முடிவில் அழிக்கும்– மும்மூர்த்திகளின் செயல்கள் செம்மை அடையும்படி திருத்துபவன் ஆவான். (இந்தப் பகழுரை வசிட்ட முனிவன் வாயிலாக வரும் பாடல்)

ramabronze
Bronze idol of Sri Rama

இன்னொரு பாடலில் சீதையுடன் இராமனை ஒப்பிடுகிறான் கம்பன்:

மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்.
(கலை ஊர் பெண்= மான் வாகனம் உடைய பார்வதி; மலர்மகள்=லெட்சுமி)

பொருள்:– பூமா தேவியைவிட சீதை நல்லவள்; அலைமகள் (லெட்சுமி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி) ஆகிய மூவரையும் விட நல்லவள் சீதை; அவளுடைய கண்களைக் காட்டிலும் நல்லவன் இராமன். பருகுவதற்கான தண்ணிரை விட, பாதுகாக்கும் உயிரை விட, இராமனையே விரும்புவர் கற்றாரும் கல்லாதவரும்.

இறுதியாக வசிட்டன் புகழுரையாக அமைந்த ஒரு பாடலில்,

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
என்ற வரிகளும் படித்து இன்புறத் தக்கது.
(அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்)

”மனிதர்களும் தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் துன்பப்படாமல் தடுத்துக் காப்பதில் இராமனைக் காட்டிலும் சிறந்தவர் யாரும் இல்லை”.

மேலும் பல கட்டுரைகளில் இராமன் புகழ் பாடுவோம்…………..தொடரும்
contact swami_48@yahoo.com

Tamil Saint Pattinathar’s Warning

sadhu shank

By London Swaminathan
Post No. 955 4th April 2014.

Tamil saint Pattinathar warns us about the impermanence of life. He reminds us of the ‘three important chanks’ our family uses. Life is short and we must do everything good within that short period.

Pattinathar’s life was full of very interesting events. He lived in the tenth century CE. He was a rich man of a port city called Kaveri Poom Pattinam, also known as Pumpuhar in Tamil Nadu. He got his name from this city meaning ‘City man’ (Pattinathar). He was married but had no issue. So they took a child that was left uncared for in a garden at Tiruvidaimarudur. The child was given the name Marudaipiran. As he grew up, one day he came to Pattinathar’s wife, his foster mother, and asked her to give a parcel to Pattinathar. Later he disappeared. It was the box that changed his life.

When Pattinathar came home and opened the box with all curiosity he found an eyeless needle and a palm leaf on which a conundrum had been written. He considered that was a ‘special delivery parcel with a special message’ for him from Lord Shiva. Immediately he distributed his vast wealth to the poor and became an ascetic. He wandered far and wide and came to Tiruvotriyur to spend his last days. His thought provoking hymns are well known to Tamils.

lot women conch
In one of his poems he warns us that we must remember three sounds from the blowing conches at family events:

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

bengali blow

(Translation from Tamil into English was done by Sekkizar Adippodi Dr T N Ramchandran of Thanjavur).
The custom of blowing conches in the weddings was practised by all the Hindus until a few centuries ago. Now Bengalis only use Chanks (conches) in all the ceremonies. Andal, a famous Tamil poetess, mentioned about blowing conches in the Tamil weddings 1300 years ago. Hindu mothers used conches (chanks) to feed the babies with milk. Now this practise is also dropped after the introduction of feeding bottles. Just to attract the attention of the child, they used to play blowing chanks in the olden days. Blowing conches is practised during the funeral procession in certain parts of the country even today.

So the last of the three sounds will be heard only by family members, because it will be our last journey.

conch-blowing

A V Subramania Aiyar, in his book ‘The Poetry of Tamil Siddhas’, compared him with another Siddha (enlightened soul) Sivavakkiyar. He aptly commented about Pattinathar’s poems:-

“As a Saiva mystic and saint Pattinathar has been held in great veneration. His poems are happily free from the violent denunciations of idol worship, temples, rituals, caste, Vedas, Agamas etc. which Sivavakkiyar indulges in. He has shown an excessive desire to extol the virtues of unqualified asceticism and Yogic mysticism in language that that can be understood by the masses. He shows leanings towards Bhakti in his later poems. As a poet he is far superior to Sivavakkiyar. Pattinathar has a greater command over imagery and language. His poetry has sweetness, simplicity and emotional appeal. He has sung of his religion and philosophy with freedom, vigour and breadth of outlook. He has good mastery over form, especially Ahaval metre, in which some of his most brilliant poetical passages have been written. Pattinathar is the most widely read Siddhar in the Tamil language”.

conch 4

I would recommend the following two English books for non Tamil readers:
The Poetry and the Philosophy of THE TAMIL SIDDHAS by A.V. Subramania Aiyar, published by S.Mahadevan, Tirunelvely, Year 1957; St.PATTINATHAR, Tamil Text with English Translation by Sekkizhaar Adippodi T N Ramachandran, International Institute of Saiva Siddhanta Research, Dharmapura Adhinam, Dharmapuram, MAYILADUTHURAI 609 001, Year 1990.

Polynesian Man Blowing Conch Shell

Contact swami_48@yahoo.com

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க!

bengali blow

By London swaminathan
Post No.954 Dated 4th April 2014

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

womanconch

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

woman conch
இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

sadhu shank
மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

lot women conch

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com
Hindu_priest conch_

நார்வேயில் ‘சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்தில்’

konow_sten
Picture of Norwegian Sanskrit scholar Sten Konow.

Compiled by London Swaminathan
Post No 953 Dated 4th April 2014

Part 4 அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவ யாத்திரை………………………….
இந்த நாலாவது பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.
தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

“இங்கிலாந்தில் புகழ்பெற்ற சிறந்த வித்தியாசாலையுள்ள ஆக்ஸ்போர்ட் என்ற நகரத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்விடமுள ஸம்ஸ்கிருத புஸ்தகசாலை அதிகப் பிரஸித்திபெற்றது ஸமீபத்தில் கூட நேபால் மகாராஜா அவர்கள் சுமார் 6000 ஏட்டுப் பிரதிகளை அப் புஸ்தகசாலைக்குக் கொடுத்திருக்கிறார். இங்குள்ள உயர்தரக் கல்லூரியில்தான் மியாக்ஸ் முலர் என்ற (இப்பொழுது ஸ்வர்கலோகத்தில் வாஸம் செய்கிற) புகழ்பெற்ற ஸம்ஸ்கிருத வித்வான் சுமார் 80 வருஷங்களுக்கு முன் ருக்வேத பாஷ்யம் முதலானவைகளை ஆராய்ந்து வெளியிட்டார். இப்பொழுது அவரது சீடர்கள் பலர் அநேக கலாசாலைகளில் உபாத்யாயர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

நார்வேயின் பிரதான நகரமான ஓஸ்லோ போய்ச்சேர்ந்தேன். அவ்விடத்து வித்தியாலய ஸம்ஸ்கிருத பண்டிதர் பிரஸித்தி பெற்றவர். அவர் பெயர் ஸ்டென் கோநோ என வழங்கும். இந்தப் பண்டிதர் மூலமாக மகா மேரு யாத்திரா ஸௌகரியங்கள் கிடைத்தன. அங்கிருந்து புறப்பட ஒரு வாரமாயிற்று. நாள்தோறும் ஸ்டென் கோநோவுடன் வேதாந்த விசாரணை செய்வது வழக்கம். இந்த வித்வானுடைய ஆசாரத்தையும் ஞானத்தையும் நோக்கினால் நம் ரிஷிகளுள் இவரை ஒருவராகக் கொள்ளலாம். என்னை மேருப் பிரதேசத்துக்கு வழியனுப்ப மேற்படி பண்டிதர் தம் சீடர்களுடன், ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்; சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்திலேயே நடந்தது. எங்கள் சம்பாஷணை முடிகிற வரை ரயில்வே கார்ட் தூரத்திலிருந்து பெருந்தன்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் நம் பண்டிதர் ஸமீபம் வந்து ரயில் வண்டியை விடலாமா வென்று கேட்டார். உடனே பண்டிதர் கடியாரத்தைப் பார்த்து, ஓ! பத்து நிமிஷம் அதிகமாகிவிட்டதே என்றார். அதற்கு கார்ட் துரை, “அதனால் குற்றம் ஒன்றுமில்லை. கீழ்நாட்டு வித்வானை ரயில் வண்டியில் உடகாரவைத்து அவர்கள் அனுமதியைப் பெற்று வாருங்கள். பிறகு நான் வண்டியை ஓடவிடுகிறேன்” என்றார்.

oxford bodleian libraries
Picture of Oxford Bodleian Library

இதை இவ்விடத்தில் தெரிவிக்கும் காரணம் மேல்த் தேசத்தில் ஸம்ஸ்கிருத வித்வான்களுக்குப் பொதுஜன ஆதரவு எவ்வளவு என்பதை விளக்குவதற்காகவே. பிறகு மாணவர் வழியனுப்புப் பாட்டை நார்வே பாஷையிற் பாடி எனக்குத் தம் குருவுடன் வணக்கம் கூறினர். கார்டு துரைக்கு ரயிலை விட அனுமதி கொடுத்தார்கள். நண்பர்களே இவ்விஷயம் இந்தியாவில் நடக்கக்கூடுமாவென்று யோசியுங்கள்.

(இதற்குப் பின் ஐயர் நார்வேஎ நாட்டு நள்ளிரவு சூர்ய தரிசனத்தை வருணிக்கிறார். மகாமேரு யாத்திரை என்ற இரண்டு கட்டுரைகளில் சுருக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆகையால் புத்தகத்தின் இறுதிப் பகுதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்)

ஐரோப்பா கண்டம் நம் இந்தியாவை விடச் சிறியது; ஆதலால் அடிக்கடி ஒரு நாடு விட்டு அடுத்த நாடு வரும்பொழுது சுங்கச் சாவடியாட்களின் சோதனை நடக்கும். ஏதாவது தவறுதல் நேர்ந்தால் உடனே அந்த யார்த்திரைக்காரனை கீழே இறக்கிவிடுவார்க.ள். சோதனையும் மிகக் கடுமையக இருக்கும். இந்தச் சோதனைத் துன்பம் எனக்குக் கொஞ்சம் கூடவில்லை. ஒரு யோக்கியதா பத்ரம் என்னிடத்தில் உண்டு. அதில் நான் “இந்தியாவில் ஒரு வைதீகப் பிராமணன்; ஆகார நியமம் உள்ளவன்; புகையிலை முதலானவைகளை நிந்திக்கிறவன்’ ஒரு ஆரியன்; வித்வான்; எல்லோராலும் உபசரிக்கத்தக்கவன்” என்று எழுதி இருந்தது; ஒவ்வொரு கஸ்டம்ஸ் ஆபீஸரும் என்னையும் என் தலைப்பாகை சால்வை முதலானவற்றை பார்த்தது,ம், யோக்கியதா பத்ரத்தைப் பார்த்தது,ம், எழுந்திருந்து வந்தனம் சொல்லி வினயத்துடன் போய்விடுவார்கள்.

ஜரூஸலத்தில் ஸ்வாமி புறப்பாடு

பக்கம் 73ல் ஜரூஸலம் பற்றி ஐயர் எழுதுவது:

இந்நகரம் ஐந்து மலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் மலை கிறிஸ்துவை விசாரணை செய்து சிலுவையில் அறைந்த இடமாகும்; இரண்டாவது மலையில் இப்பொழுது யூதர்கள் வித்தியாசாலை ஸ்தாபித்திருகிறார்கள். மூன்றவதில் ஜர்மன் சக்கரவர்த்தி தாம் வந்து இறங்குவதற்காகக் கட்டின அரண்மனையுள்ளது. ஐந்தாவதில் கிறிஸ்துமாதா ஸமாதி இருக்கிறது. இந்துக்கள் ஸ்ரீகாசியிருப்பது போல இந்த இடங்களில் மரணத்தை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர் பலர் நெடுந்தூரத்திலிருந்து வந்து காத்திருகிறார்கள். ஸ்ரீ கிறிஸ்துவின் ஸமாதி இந்த ஐந்து மலைகளுக்கும் நடிவில் உள்ளது. ஸமாதியின் மேல் ஒரு கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் பெரிய மண்டப முண்டு. ஸமாதிக்கு மின்சார விளக்குகள் போடப்பட்ட்டு அணையா விளக்கொடு பூஜை நடக்கிறது.

greek mary idol
Picture of Mary idol in Jerusalem

கிறிஸ்தவ மத உட்பிரிவுகளில் உள்ள ஏழு மடாதிபதிகள் நாள்தோறும் ஒவ்வொருவராக அவரவர்க்கு நியமிக்கப்பட்ட காலங்களில் வந்து நேரே பூஜை செய்கிறார்கள். ஸ்ரீ சிதம்பரம் முதலான கோவில்களில் எப்படி உத்ஸவ காலங்களில் பூஜைகளும் பாராயணங்களும் அலங்கார முதலானவைகளும் நடக்கின்றனவோ அப்படியே இந்த ஸமாதிக்கு பெருஞ் செலவில் பூஜை நடத்தப்படுகிறது.

நான் அவ்விடம் போனபொழுது ஸமாதியில் சிறந்ததொரு உத்ஸவம் நடந்தது. மாலையில் ஸ்வாமி வீதி புறப்பாடும் உண்டு. சிறந்த தங்கச் சப்பிரத்தில் கிறிஸ்து விக்கிரகமும் மற்றொரு வாகனத்தில் மாதா மேரியின் விக்கிரகமுமிருந்தன. புத்தமத உத்ஸவங்களே இப்படி கிறிஸ்தவ மத உத்ஸவங்களாகப் பரிணமித்தன.

jerusalem-panorama-500
Panoramic View of Jerusalem.

இவ்வளவு ஸம்பத்துக்களை நம் க்ஷேத்திரங்களில் நான் பார்த்தது இல்லை. அளவிற்படாத ஸொத்து……………………………………

நாம் இப்பொழுது உலகில் காணும் ஸொத்தை ஒரு தராசிலும் ரோமாபுரி போப்பின் ஸொத்தை ஒரு தராசிலும் வைத்தால் அநேகமாகப் போப்பின் ஸம்பத்தே அதிகமாக இருக்கலாம்.

(இவை எல்லாம் 1935-ல் எழுதப்பட்டது. ஐயரின் புத்தகம் 1936 ஜனவரியில் விற்பனைக்கு வந்துவிட்டது. 110 பக்கம் உடைய புத்தகம் என்னிடம் உள்ளது. பிற்காலத்தில் ஆராய்ச்சியாளருக்குப் பயன்படலாம்).
முற்றும்.

contact swami_48@yahoo.com
Pictures are used from various sites;they are NOT from aiyer’s book. Thanks.

HYMN OF THE GOLDEN AGE

bharati new

This post is in both English and Tamil. Ten verses of Nammalvar are given below in English and Tamil.

பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்!

கட்டுரை எண் 952 தேதி 3 ஏப்ரல் 2014
தொகுத்து எழுதியர் லண்டன் சுவாமிநாதன்

Dawn of Golden Age

Of the Twelve Great Tamil Vaishnavite saints known as ‘Alvars’, Bharati liked Nammalvar and Andal very much. He has translated some of their hymns way back in 1910s. He was greatly influenced by Nammalvar. Alvar’s revolutionary theme of bringing Golden Age (Krta Yuga) in our own time attracted him very much. He wanted to destroy the Iron Age (Kaliyuga) and its associated evils. He wanted to destroy slavery in all forms and attain freedom. Though Nammalvar meant only spiritual freedom in his hymns, Bharati used it for political freedom as well. When Tsar of Russia was dislodged he hailed it as the dawn of Krta Yuga. In three other songs he praised Krta Yuga and swore that he would establish Krta Yuga on earth. No doubt he brought a Golden Age into Tamil literature through his inimitable poetic style. As long as his poems exist there is every possibility of establishing a real Golden Age in India.

பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தைக் கொன்று கிருத யுகத்தை மீண்டும் இப்பூவுலகில் கொண்டுவருவேன் என்று ஆழ்வார் பாடியது, பாரதியை மிகவும் கவர்ந்தது. பாரதி புரட்சிக் கவியன்றோ. ஆகவே தனது கண் முன்பே ஒரு யுகப் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் விரும்பியதில் வியப்பொன்றும் இல்லை. கிருத யுகத்தைக் கொண்டுவந்தே தீருவேன் என்ற இக்கருத்து பாரதியாரின் பாடல்களில் பல இடங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. ஆயினும் அவரால் கிருதயுகத்தைக் கொண்டு வர முடிந்ததா? என்ற கேள்வி நமக்குள்ளே எழத்தான் செய்யும். ஆம், அவர் கிருத யுகத்தைக் கொண்டு வந்தார் என்றே நான் உறுதிபடச் சொல்லுவேன். தமிழ் மொழி என்னும் உலகத்தில் அவர் ஒரு கிருத யுகம் படைத்துவிட்டார்! அவருக்கு முன் இருந்த காலத்துக்கு ஒவ்வாத கவிதை நடைகளை விலக்கி விட்டு, கவிதை உலகில் ஒரு கிருத யுகத்தைப் படைத்து விட்டார்! அவருடைய பாடல்கள் எதிர் காலத்தில் உண்மையான கிருத யுகத்தைப் படைக்கும் ஆற்றல் பெற்றவை என்பதிலும் இருவேறு கருதுக்கு இடமே இல்லை.

nammalvar

அவர் பாடல்களில் பரிணமிக்கும் கிருதயுகம்: இதோ சில வரிகள்:

பாடல் 1
“மொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே,
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விஃதியிதே”
பாடல் 2
கிருத யுகத்தினைக் கொணரும் சக்தி இந்து மதத்துக்கு உண்டு என்று ‘ஹிந்து மதாபிமானத்தார் சங்கத்தார்’– என்ற பாடலில் சொல்கிறார்:–

மக்கள் எல்லாம் கவலை என்னும்
ஒரு நரகக் குழியதனில் வீழ்ந்து தவித்து
அழிகின்றார் ஓய்விலாமே
இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகத்
தனை உலகில் இசைக்கவல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பார் அறியப் புகட்டும் வண்ணம்…………
பாடல் 3

புதிய ருஷியா என்ற கவிதையில் ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி பொங்கப் பாடுகிறார் பாரதி:–
“இடி பட்ட சுவர் போலக் கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ!”
பாடல் 4

சொல் என்ற கவிதையில்
“வலிமை வலிமை என்று பாடுவோம் – என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் – நெஞ்சில்
கவலை இருள் அனைத்தும் நீங்கினோம்” – என்று பாடுகிறார்.

நம்மாழ்வார் பாடல்களை பாரதியார் மொழிபெயர்த்தது, நமக்கு மேலும் சில உண்மைகளையும் காட்டுகிறது. பாரதியாருக்கு ஆங்கில மொழியில் இருந்த நல்ல புலமையும் அதில் எழுதும் துடிப்பு அவருக்கு இருந்ததும் இதில் தெரிகிறது. 1917ஆம் ஆண்டில் எழுதியது இது. நிறைய விஷயங்களை அவர் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். ஆனால் அவரது தமிழ் கவிதைகள் என்னும் சூரிய ஒளிக்கு முன்பாக அவரது ஆங்கிலப் படைப்புகள் மங்கிவிட்டன.

இன்னோரு உண்மை ;’பிற நாட்டு நால்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்க்கவேண்டும்’ என்றும் நம்முடைய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் பாடியும் எழுதியும் வந்தார். அவரே அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததை நம்மாழ்வார் பாடல் மொழி பெயர்ப்புகள், ரவீந்திரநாத் தாகூரின் பாடல் மொழி பெயர்ப்புகள் காட்டுகின்றன. பன்னிரு ஆழ்வார்களில், அவர் ஆண்டாள், நம்மாழ்வார் ஆகியோரின் பல பாடல்களை மொழி பெயர்த்தார். அதில் பத்துப் பாடல்களை மட்டும் காண்போம்.

ramanujan_nammalvar-hymns
HYMN OF THE GOLDEN AGE
From Nammalvar’s Tiruvaymoli, (August, 1917, Arya)

நம்மாழ்வாரின் திருவாய்மொழி
பொலிக; பொலிக; பொலிக !
போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கு இங்கு யாதும் ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டு கொண்மின்;
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து, இசைபாடி,
ஆடி, உழிதரக் கண்டோம்.
1)’Tis glory, glory, glory! For Life’s hard curse has expired; swept out are Pain and Hell, and Death has nought to do here. Mark ye, the Iron Age shall end for we have seen hosts of Vishnu; richly do they enter in and chant His praise and dance and thrive.

கண்டோம், கண்டோம், கண்டோம்;
கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்;
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி,
பரந்து திரிகின்றனவே.
2)We have seen, we have seen, we have seen, …… seen things full sweet in our eyes, come, ye all lovers of God, let us shout and dance for joy with oft-made surrendering. Wide do they roam on earth singing songs and dancing, the hosts of Krishna who wears the cool and beautiful Tulsi, the desire of the bees.

திரியும் கலியுகம் நீங்கி,
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிருதயுகம் பற்றி,
பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில் வண்ணன், எம்மான்,
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து, இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே.
3)The Iron Age shall change. It shall fade, it shall pass away. The gods shall be in our midst. The mighty Golden Age shall hold the earth and the flood of the highest Bliss shall swell. For the hosts of dark hued Lord , dark hued like the cloud, dark hued like the sea, widely they enter in, singing songs and every where they have seized on their stations.

இடம்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே,
தடம் கடல்-பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்,
கிடந்தும், இருந்தும், எழுந்தும்,
கீதம் பலபலப் பாடி,
நடந்தும், பறந்தும், குனித்தும்,
நாடகம் செய்கின்றனவே.
4)The hosts of our Lord who reclines on the sea of Vastness, behold them thronging hither. Me seems they will tear up all these weeds of grasping cults. And varied songs do they sing, our Lord’s own hosts, as they dance, falling, sitting, standing, marching, leaping, bending.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
ஒக்கின்றது – இவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய்,
மாயத்தினால் எங்கும் மன்னி;
ஐயம் ஒன்று இல்லை; அரக்கர்
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை, தொண்டீர்!
ஊழி பெயர்த்திடும் கொன்றே.
5)And many are the wondrous sights that strike mine eyes. And if by magic Vishnu’s hosts have come in firmly placed themselves everywhere. Nor doubt it, ye fiends and demons, if such be born in our midst, take heed! Ye shall never escape. For the spirit of Time will slay and fling you away.
nammalvar__makers_

கொன்று உயிர் உண்ணும் விசாதி,
பகை, பசி, தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான்,
நேமிப்பிரான் போந்தார்;
நன்று இசை பாடியும், துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்;
சென்று, தொழுது, உய்மின்; தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே.
6)These hosts of the Lord of the Discus, they are here to free this earth of the devourers of Life, Disease and Hunger, vengeful Hate and all other things of evil. And sweet are their Songs, as they leap and dance, extending wide over earth, go forth, ye lovers of God, and meet these hosts divine; with right minds serve them and be saved.

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்;
மார்க்கண்டேயனும் கரியே;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா;
கண்ணன் அல்லால், தெய்வம் இல்லை;
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி –
யாயவர்க்கே இறுமினே.
7)The Gods that ye fix in your minds, in His name do they grant you deliverance. Even thus to immortality did the sage Markanda attain. Let none be offended, but there is no other god but Krishna. And let all your sacrifices be to them who are but his forms.

இறுக்கும் இறை இறுத்து, உண்ண,
எல் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக;
அத் தெய்வ நாயகன் — தானே;
மறுத் திரு மார்வன் அவன் – தன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி, ஞாலத்து மிக்கார்;
மேவித் தொழுது, உய்ம்மின் நீரே.
8)His forms he has placed in the various worlds as Gods to receive and taste the offerings due. He, our divine sovereign, on whose mole-marked bosom the Goddess Lakshmi rests – his hosts are singing sweetly and deign to increase on earth. O men, approach them, serve and live.

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்;
வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு, அச்சுதன்—தன்னை
ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து,
மேவித் தொழும் அடியாரும்
பகவரும் மிக்கது உலகே.
9)Go forth and live by serving our Lord, the deathless one. With your tongues chant ye the hymns, the sacred Riks of the Veda, nor err in the laws of wisdom. Oh, rich has become this earth in the blessed ones and the faithful who serve them with flowers and incense and sandal and water.

மிக்க உலகுகள் தோறும்
மேவி, கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன; தொண்டீர்;
ஒக்கத் தொழ கிற்றிராகில்,
கலியுகம் ஒன்றும் இல்லையே.
10) In all these rising worlds they have thronged and wide they spread, those beauteous forms of Krishna – the unclad Rudra is there, Indra, Brahma, all. The Iron Age shall cease to be – do ye but unite and serve these.
நம்மாழ்வார் திருவாய்மொழி

Please read the related articles posted already in this blog:

Post No.915 ‘Nammalvar by Bharatiyar’ (posted on 18-3-14)

Contact swami_48@yahoo.com

அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!

jill bolte

By S Nagarajan
Post No 951 Date 3rd April 2014

ச.நாகராஜன்

புத்தர் தரும் போதம்

புத்தரின் அருமையான போதனைகளைப் போதிக்கும் தம்ம பதத்தின் முதல் ஸ்லோகமே பெரும் உண்மையை விளக்கும் ஒன்று: “நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே அவற்றின் மொத்த விளைவாக நாம் வார்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறோம். யாருடைய மனத்தில் சுயநல எண்ணங்கள் உருவாகின்றனவோ அவர்கள் பேசும் போதும் செயலாற்றும் போதும் துன்பத்தையே விளைவிக்கிறார்கள்.எருதுகள் இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கரங்கள் அந்த எருதையே பின்பற்றுவது போல துன்பங்கள் அவர்களைப் பின் தொடர்கின்றன.”

யோக வாசிஷ்டம் தனது ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களில் இதையே விரிவாகக் கதைகள் மற்றும் உவமான உவமேயங்கள் மூலம் அழகுற விளக்குகிறது.இதை நவீன காலத்தில் விளக்கும் ஒரு அதிசய விஞ்ஞானி Jill Bolte Taylor ஜில் போல்ட் டெய்லர்!

மூளையியல் விஞ்ஞானி ஜில் போல்ட் டெய்லர்

உலகையே பரபரப்புள்ளாக்கி விற்பனையில் சாதனையைப் படைத்து வரும் ‘மை ஸ்ட்ரோக் ஆஃப் இன்சைட்’ My Stroke of Insight என்ற புத்தகம் ஜில் போல்ட் டெய்லர் (Jill Bolte Taylor) என்ற பெண்மணியின் அற்புத அனுபவத்தால் எழுதப்பட்ட ஒன்று.

1996ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று படுக்கையில் எழுந்திருந்த டெய்லர் தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து திகைத்தார். அப்போது அவருக்கு வயது 37 தான். இடது பக்க மூளையில் ஒரு ரத்த நாளம் வெடித்ததால் வந்த நோய் அது. அவரோ பிரபலமான மூளையியல் விஞ்ஞானி. ஹார்வர்டில் படித்தவர். அவரால் தனக்கு வந்த நோயை நம்பவே முடியவில்லை. மூன்று வாரங்கள் கழித்து டிசம்பர் 27ஆம் தேதி அவருக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. கோல்ப் பந்து அளவு இருந்த ஒரு கட்டி அவரது இடது பக்க மூளையை அழுத்தவே அவரால் பேச முடியவில்லை. அந்தக் கட்டியை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள்.

அவரால் படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. பேச முடியவில்லை. எதையும் நினைவில் கொண்டு வர முடியவில்லை. ஆனால் மூளை இயக்கத்தை நன்கு அறிந்த விஞ்ஞானியான அவர் தனது நோயுடன் வெற்றிகரமாகப் போராடி வெல்ல நிச்சயித்தார். இடது பக்க மூளை தர்க்க ரீதியாக சிந்தித்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வகைப்படுத்தி விளக்கி நன்கு மதிப்பிட்டு செயலாற்றுகையில் வலது பக்கமோ உள்ளுணர்வின் அடிப்படையில் நம்மை செயலாக்க வைக்கிறது. டெய்லர் இரண்டு பக்கங்களையும் சரியான விதத்தில் செயலாற்ற தனது உடல் மனம் ஆன்மா இந்த மூன்றையும் பயிற்றுவித்தார். வலது பக்க மூளையின் மூலம் உள்ளுணர்வு ஆற்றலை வளர்த்தார்.

My Stroke of Insight

பிரபஞ்ச ஆற்றலுடன் ஒருங்கிணைவதே வெற்றிக்கு வழி

“நானே ஆற்றல் மயம். என்னைச் சுற்றியுள்ள பெரும் ஆற்றலுடன் என்னை பிரக்ஞை மூலமாகவும் வலது பக்க மூளையினால் இணைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்” என்று பின்னால் அவர் விளக்கினார். இந்த பகுதியின் மூலம் உள்ளுக்குள் அமைதியைக் கொண்டு வர முடியும் என்பதை தேர்ந்த மூளை விஞ்ஞானியான அவர் எளிதில் உணர்ந்து கொண்டார். பிரபஞ்சத்தின் ஒரு கூறான நாம் அதனுடன் ஒன்றும் போது எல்லையற்ற ஆற்றல் நம்மை வந்தடைவதை அவர் அனுபவத்தால் உணர்ந்து கொண்டார்.

எட்டு வருட காலம் போராட்டம் தொடர்ந்தது. டெய்லர் விடவில்லை.இறுதியில் முழு ஆற்றலுடன் அவர் நோயிலிருந்து மீண்டார். தனது அனுபவங்களின் அடிப்படையில் அருமையான தனது ‘மை ஸ்ட்ரோக் ஆஃப் இன்சைட்’ என்ற புத்தகத்தை எழுதினார். அத்தோடு பக்கவாதம் மற்றும் இதர மன நோய்களினால் பாதிக்கப்பட்டோரிடம் எப்படி நடந்து கொண்டால் அவர்கள் எளிதில் மீள முடியும் என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்க ஆரம்பித்தார்.அவரது புத்தகம் 2008ஆம் ஆண்டின் நியூயார்க் பெஸ்ட் செல்லராக ஆனது.

ஓப்ரா வின்ஃப்ரே அவரைத் தனது பிரபலமான ஷோ நிகழ்ச்சிக்கு அழைத்தார். அவர் தனது அனுபவங்களை அதில் சொல்ல லட்சக்கணக்கானோர் பார்த்தனர். பலர் உருகி அழுதனர்.

brain

அமைதி சர்க்யூட் உருவாக வழி

யோகம் தியானம் மூலமாக உள்ளத்தில் ஒரு அமைதி சர்க்யூட்டை உருவாக்க முடியும் என்பது தான் அவர் தரும் சாரமான யோசனை!

இதையே தான் ஸ்வர யோகம் என்று நமது யோகிகள் கூறி வலது பக்க நாசியின் மூலமாகவும் இடது பக்க நாசியின் மூலமாகவும் இடது மற்றும் வலது பக்க மூளை பாகங்களைச் செம்மைப் படுத்த முடியும் என்பதை விளக்கினர். பிராணாயாமம் இதற்காகவே அமைக்கப்பட்டது. வலது பக்க மூளை சர்க்யூட் அமைதியை ஏற்படுத்தும் போது அது பிரபஞ்ச மனத்துடன் இணைந்து அனைத்தையும் அறிய வைக்கிறது. எண்வகை சித்திகளைத் தருகிறது.உலகில் சாந்தியை உருவாக்குகிறது.

நல்ல எண்ணங்களை வளர்க்கும் போது நல்லவராக வளர்கிறோம். அதன் உச்ச கட்டத்தில் ஞானியாக ஆகிறோம்.

இதை யோகிகள் சொல்வது ஒரு புறம் இருந்தாலும் ஒரு மூளையியல் விஞ்ஞானி பெரும் நோயால் எட்டு வருடங்கள் அவதிப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து அறிவியல் அடிப்படையில் சொல்லும் போது நமது யோகத்தின் வலிமையை உணர்ந்து அதிசயிக்கிறோம்!

சில நிமிட யோகப் பயிற்சி நம்மையும் மேம்படுத்தும்; உலகையும் வளமாக்கும் என்பது பொய்யல்ல; மெய்! விஞ்ஞானி தனது அனுபவத்தில் விளக்கும் மெய்யோ மெய்!!

(ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் ஜுன் 2013 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.)

This article was written by my brother S Nagarajan of Bangalore for Tamil magazine Jnana Alyam. Contact swami_48@yahoo.com
********************

Cucumber in the Rig Veda!

CUCUMBERFRUIT

By London Swaminathan
Post No. 950 Date 2nd April 2014.

Ancient Hindu saints loved nature. Hindu saints always used nature to illustrate great truths. They lived a simple life surrounded by beautiful flowering plants, lofty mountains, crystal clear running water and singing birds. Their life was as pure as gold. They composed lot of hymns with very positive thoughts to uplift the mankind. The hymns are universal; common to every human being irrespective of their faiths. The beauty lied in the apt similes they used in their hymns called ‘Mantras’ and’ Slokas’. One such mantra known as — MAHA MRUTYUNJAYA MANTRA–is in the oldest religious literature of the world, the Rig Veda. But the same mantra is in the Rudram-Chamakam hymn of the Yajur Veda as well. Since this Rudram is used every day in the temples and at homes of orthodox Hindus, the Mrutyunjaya mantra was popularised through Rudram.
golden cucumber

Sri Rudram has two parts ‘Namakam’ and ‘Chamakam’. Mrutyun Jaya Mantra comes in the Namakam. The most famous mantra NAMASIVAYA comes in the same Rudram for the first time in the Vedas. Following this Namasivaya, comes this short and sweet Maha Mrutyun Jaya Mantra. The meaning is Great Death Conquering Mantra.

(Maha means Great, Mrutyu means death. English words linked to death such as ‘mortal’ came from this root. Jaya means win, conquer. Mantra is a spell, a hymn or a prayer to god).

Hindus believe that mantras are ‘not composed’ but given by god. The seers ‘hear’ it as we hear certain radio stations when we fine tune to particular frequencies. When the Vedic seers fine tuned their minds after a great penance they ‘heard’ the mantras and passed on to us by word of mouth for thousands of years. So the Vedas are called Sruti = That which is ‘heard’. The seer or Rishi for this mantra is Markandeya.

blonde_cucumber2

Mrutyun Jaya Mantra is very short. It runs as follows:

(Om) Trayamabakam Yajaamahe Sugandhim Pushtivardhanam
Urvaarukamiva Bhandhanaan Mrtyoor Mukshiiya Mamrutaat

The meaning is very simple: We worship the Three Eyed Lord, who is fragrant, who nourishes all living beings. As the ripe cucumber is freed from its bondage (attachment to the plant), May He liberate us from death and give us immortality.

Key Words: Trayambakam= Three Eyed; Sugandhim= Fragrant; Pushtivardhanam= Nourishing; Urvaaruka = Cucumber Fruit; Maa Amrtaat = Give us immortality.

child cucumber
Why did Markandeya Rishi use Cucumber Fruit simile?

Most of the fruits are hanging in the upper part of a tree or a shrub. When it is ripe it falls due to the gravity of the earth. We know the impact of a falling fruit. It creates shock on the earth and if a coconut falls on our heads, it gives us ‘Kapala Moksha! (Straight death). But the beauty of Cucumber plant is, when the fruit is ripe, the stem loosens itself and detach without any impact or fuss! So we pray to god such a smooth detachment when our final minute comes. In the case of other fruits, the fruit is displaced; either it falls to the ground from the top or thrown away. In the case of a cucumber, the fruit never moves even an inch. It stays put.

Cucumber fruit stands for a full life as well. When a ninety or hundred year old person dies in the house, the relatives don’t cry. They know it is the law of nature. Whoever is born must die, but when a person dies after living a full life, we say ‘Good Bye and RIP’ to the departed soul. Cucumber fruit stands for such a ripe old person. Moreover, the way the fruit detaches itself from its stem stands for a peaceful detachment/death. Such a peaceful detachment will release one from the cycle of birth and death. So the prayer is to get released from the bondage of life and death smoothly, as smooth as like the cucumber fruit – stem detachment. The last few words clearly say give me Amrta = sweet nectar of immortality. Amrita in Vedic literature stands for immortality. Every spiritual aspirant knows the famous prayer from the Brihad Aranyaka (Big Forest) Upanishad “ Lead me from the unreal to the Real; Lead me from darkness to Light; Lead me from death to Immortality (Mrtyor Ma Amrtam Gamaya).

golden cucumber2

In the modern documentaries on Nature we see how a flower blooms or a how a pod ripens in slow motion. We enjoy the marvel at nature. In the olden days there was neither powerful camera nor slow motion display. But yet our ancient seers watched the cucumber detaching from its plant and feeling happiness in slow motion through their third eye or keen observation. The simile the seer chose for this occasion is very apt.

Mrutyunjaya is considered a panacea for all diseases by the Hindus. When they want to get rid of the fear of death they recite it. When they smear Vibhuti on their foreheads and at the start of a journey they recite it just to avoid untimely death. When they want to lengthen the life span of a person they recite it hundreds of times. They even do Homas (Fire Ceremonies) with this mantra. They give water or Vibhuti (holy ash) after reciting this mantra a number of times to ward off diseases. One can easily memorise it and say whenever one feels low or scared.

(Kanchi Paramacharya has dealt with this simile very briefly in in his Madras discourses between 1957 and 1959 )

blonde_cucumber

References to Cucumber in the Vedic Literature:

‘URVAARU’ (Cucumber plant or Cucumber or its fruit)
AV 6-14-2 (Plant)
RV 7-59-12; 14-1-17 (FRUIT)
MAITRAYANI SAMHITA 1-10-4
TAITTIRIYA SAMHITA 1-8-6-2
VAJASANEYI SAMHITA 3-60
PANCHAVIMSA BRAHMANA 9-2-19

swami_48@yahoo.com

வேதத்தில் வெள்ளரிக்காய் !

fruit cucumber

By London Swaminathan
Post No. 949 Date 2nd April 2014.

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே !
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே !!
நெற்றி ஒற்றைக் கண்ணனோடு நிர்த்தனம் செய்தாள்!
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே !!
–மஹா கவி பாரதி.

இந்துக்கள் இயற்கையை நேசிக்கும் அன்பர்கள். இயற்கையில் கடவுளைக் கண்டுபிடித்தவர்கள். இயற்கை மூலம் கடவுளைக் காட்டியவர்கள். இன்று எல்லோரும் புறச் சூழல் பாதுகாப்பு என்று பெரிய கூக்குரல் எழுப்புவதற்கு முன் ‘எறும்பு முதல் யானை வரை’ எல்லாவற்றுக்கும் இறை அந்தஸ்து வழங்கினவர்கள், ஒரு ஊருக்கு ‘திரு ஆனைக் கா’ என்று பெயரிட்டு பக்தி இலக்கியத்தில் யானைக்கு அழியாத இடம் கொடுத்தனர். அதன் பக்கத்திலேயே ‘திரு எறும்பூர்’ என்று மற்றொரு ஊரில் எறும்புக்கு மதிப்பு கொடுத்தனர். வேதத்தில்—உபநிஷதத்தில்– ஆலமரவிதை, பசுமாட்டின் வாலில் உள்ள முடி, உப்பு முதலியவற்றின் மூலம் கடவுள் பற்றி பாடம் நடத்தியதைப் படிக்கிறோம். இதே போல வெள்ளரிப் பழம் மூலம் ஒரு பெரிய உண்மையைக் கற்பிக்கிறது யஜூர்வேதம்.

CUCUMBERFRUIT

வேதங்கள் நான்கு : ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று. இவைகளில் சைவர்களின் தாரக மந்திரமான நமசிவாய என்னும் மந்திரம் யஜூர்வேதத்தில் வருகிறது. யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் ருத்ரத்தின் நடுவில் அமைந்துள்ளது நமசிவாய மந்திரம். அதற்குச் சற்றுப் பின்னால் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது (7-59-12). இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம் (இறப்பு)—.அதை ஜயிக்கக்கூடிய மந்திரம் என்பதால்—-மரணத்தை வெல்லும் இம் மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்’’ என்று பெயர். இதில்தான் வெள்ளரிப் பழம் வருகிறது. இதோ அந்த மந்திரம்:–

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்
புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய
த்ரயம்பகம் = முக்கண்ணனை
யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.
உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல
ம்ருத்யோ: = சாவினுடைய
பந்தனாத் = பிடியிலிருந்து
முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!
மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக!

golden cucumber

ஸ்ரீ ருத்ரம் (நமகம்-சமகம்) மந்திரத்தை– கவிதாமணி, உபய பாஷா ப்ரவீண, செந்தமிழ் கவிதைச் செம்மல் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த மந்திரப் பகுதியின் தமிழ் வடிவத்தை மட்டும் பார்ப்போம்:-

இயற்கை நறுமணம் உடைய தேவரே
ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்
வியத்தகு முக்கண் உடைய எம்பெரும
வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்
வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப
மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்
தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்
திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக

வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம். முதலில் வெள்ளரிப் பழத்தை ஏன் இதில் சொன்னார்கள் என்று காண்போம்.

child cucumber

மற்ற பழங்கள் பழுத்தவுடன் அது கீழே விழும். பழம் விழுந்தால் அது தரும் அதிர்ச்சியை நாம் அறிவோம். கீழே விழுந்தாலும் சரி ஒருவரின் தலையில் விழுந்தாலும் சரி, அதில் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் வெள்ளரிப்பழம் மட்டும் பழுத்தவுடன் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். ஒரு அங்குலம் கூட நகராது, அதன் காம்பு மட்டும் தனது தொடர்பை அழகாகத் துண்டித்துக் கொள்ளும். பழுத்த பழத்துக்கு அவ்வளவு மரியாதை. காம்பே ஒரு ‘கும்பிடு போட்டு விட்டு’ சற்றே விலகிவிடும்.

இன்று டிஸ்கவரி (Discovery Channel) சேன்னலில் இயற்கை பற்றிய டாகுமெண்டரிகளை பார்க்கையில் பூ மலர்வதையும் ,காய் வெடிப்பதையும் ‘ஸ்லோ மோஷனில்’ (Slow Motion) பார்த்து வியக்கிறோம். அந்தக் காலத்தில் பெரிய சக்திவாய்ந்த கேமராக்களும் இல்லை. அதை ‘’ஸ்லோ மோஷ’’னில் போட்டுப்பார்க்கும் வசதிகளும் இல்லை. ஆனால் நமது ரிஷிகள் தன் ஞானக் கண்களால் அதை கண்டார்களா அல்லது ஊனக் கண்களை வைத்து உன்னிப்பாகப் பார்த்தார்களா என்று சொல்லமுடியாது. நல்ல ஒரு கவிதை உவமையை நமக்குத் தந்துவிட்டார்கள்.

வெள்ளரிப் பழ உவமையின் பொருத்தத்தையும் காண்போம். வீட்டில் 80, 90 வயதுப் பாட்டி, பாட்டனார் இறந்தால் அதைக் ‘கல்யாணச் சாவு’ என்று சொல்லுவர். பெரிய வருத்தம் இருக்காது. ஏனெனில் பிறந்தவர் எல்லாம் இறப்பதை எல்லோரும் அறிவர். அது இயற்கை நியதி. ஏன் நமக்கு வருத்தம் வரவில்லை? அவர்கள் நிறைந்த வாழ்வு வாழ்ந்து பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன்களைப் பார்த்தாகிவிட்டது. அதாவது முழு வெள்ளரிப்பழம் போல ஆகிவிட்டனர். இனியும் அது இருந்தால் பழமே தன்னால் பிளவுபட்டு வெடித்துவிடும். காம்பே விலகியது போல அதிர்ச்சி இல்லாத, மிருதுவான, அழகான முறையில் மரணம் சம்பவித்தால் இறந்தவருக்கும் கஷ்டம் இல்லை, அவர்களுடைய உறவினர்களுக்கும் வருத்தம் இல்லை. அதாவது பந்தங்களை அதிரடிப் போகில் தூக்கி எறியாமல், நம்மைப் பிடித்த பந்தங்கள்—கட்டுகள்—தளைகள் — விலங்குகள் – தானாக, ‘ஸ்மூத்’தாக, விலகுவதையே வெள்ளைப்பழ உவமை காட்டுகிறது.

blonde_cucumber

ஆகையாலதான் இந்த உவமை; வெள்ளரிப் பழம் காம்பில் இருந்து விடுபடுவதுபோல சாவில் இருந்து விடுபடுவோமாக. ஞானம், பழுத்த நிலையில் மரணம் சம்பவித்தால் நேரடி மோட்சம் தானே. மற்ற மரணங்களைப் போல பல ‘’மண்டகப் படிகள்’’(Stop overs) கிடையாது. இது நேரடி விமான சர்வீஸ். நடுவில் ஸ்டாப் ஓவர் (stop over) கிடையாது.– டைரக்ட் Fலைட் Direct Flight— ஆகையால் வெள்ளரி போல பழுத்த நிலையில் இறப்போம்—அது போல பந்தங்கள் கஷ்டமின்றி பிரியட்டும்—பிரிந்த பின்பு மீண்டும் பிறப்பின்றி மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வோம்– என்பதே இந்த மந்திரத்தின் பொருள் என்று ஆன்றோர் விளக்குவர்.

(காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1957-59 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடத்திய உபந்யாசம் ஒன்றில் வெள்ளரிப் பழ விஷயத்தை சுருக்கமாகத் தொட்டுக் காட்டினார். அதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை).

Contact swami_48@yahoo.com