Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேசிய விநாயகம் பிள்ளையின் வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கவியால் தமிழர்களின் மனம் கவர்ந்த பாரசீகப் புலவர் உமர் கய்யாம் (OMAR KHAYYAM) ஆவார்.
உலகின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் இவருடைய ரூபாயத் (RUBAIYAT) கவிதை படைப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தற்காலத்தில் ஈரான் என்று அழைக்கப்படும், பாரசீக நாட்டில் நிஷாபூர் ன்னும் ஊரில் பிறந்தார். அப்போது முஸ்லீம்கள் ஆட்சி நடந்த காலம். அந்தக்கால ஐரோப்பாவைவிட ஈரான் மிக முன்னேறிய நாடகத் திகழ்ந்தது. இதற்குக் காரணம் இந்தியாவிலிருந்து வேதகாலத்தின் முடிவில் அங்கு குடியேறிய இந்துக்களே.
இளம் வயதிலேயே உமர் கய்யாம் , பல சாத்திரங்களைக் கற்றார். கணிதம், வானியல், தத்துவம், மருத்துவம் ஆகியவற்றில் புலமை பெற்றார். அவருடைய நண்பர் ஒருவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவி கிடைத்தபோது அவர் அரசவையிலேயே அமர்ந்து கற்கும் வாய்ப்பு கிட்டியது.
கிரக நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு புதிய இஸ்லாமிய காலண்டரைப்/ பஞ்சாங்கத்தை உருவாக்கினார். இது பொது ஆண்டு 1074(CE) முதல் 1079 (CE) க்குள் நடந்தது
நான்கு வரிகள் கொண்ட சுமார் 200 வெண்பாப் பாடல்களை இவர் இயற்றினார். இவைதான் அவருக்கு இலக்கிய உலகில் அழியாப்புகழ் வாங்கித் தந்தது. இதன் காரணமாகவே முஸ்லீம் அல்லாத மக்களிடையேயும் இவர் புகழ் பரவியது. அவர் இறந்து 700 ஆண்டுகளுக்குப் பின்னர் எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவர் உமருடைய பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மக்கள் இதை விரும்பிப் படித்தனர். பழங்கால மக்களின் ஞானமும், மகிழ்ச்சியான வாழ்வும் இவர் கவிதைகள் மூலம் எல்லோருக்கும் தெரிந்தது . அழகான தோட்டங்கள், பர்தா அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் ஆகியவை மனக்கண்கள் முன் நிழலாடின . இதைத் தொடர்ந்து உலகின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரூபாயத் கவிதைத் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டது.
ஆங்கிலப் பதிப்பு வெளியான ஆண்டு – 1859
உமர் பிறந்த தேதி – மே 18, 1048
இறந்த தேதி – டிசம்பர் 4, 1131
வாழ்ந்த ஆண்டுகள் – 83
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு தெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
கள்வனின் காதலி திரைப்படத்திலும் இந்தப் பாடல் இடம்பெற்றது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Natyasastra written by Bharata has 36 chapters. The first and the last chapter have interesting stories. In the first chapter we saw the origin of Natyasastra (already posted here). In the last chapter Bharata narrated how dance and drama came to earth.
The sages asked Bharata:
How did drama descend from heaven to earth?
Bharata said in his reply,
“It so happened that, once, a King called Nahusa attained the Kingdom of Gods/ Swarga by means of his intelligence, diplomacy and valour. There he saw the musical/gandharva and dramatic/natya performance. Then he thought why should not this be performed in his own home on earth. So, he requested the gods to take the Apsaras women to his own home to perform. Then the gods led by Brhaspati told him that human beings are not supposed to come in direct contact with the divine Apsaras and hence they were unable to accede to his request.
But they said you approach the acharya (Bharata) and he might do what you want. It was thus that Nahusa came to me and said, ‘Oh Divine Preceptor, I would like to have this performance on the earth. I am told you were the first one to teach this, so I have to come to you.’
In the ancestral palace of Nahusa, Urvasi practised it with the ladies of the harem. When Urvasi disappeared, the old king went mad with grief and died. So drama again perished.
So I decided that henceforward it should be performed on auspicious days, so that the drama would bring good luck. Nahusa said he wanted it in his earthly palace and that there should be many characters and graceful movement of women. I agreed and called my sons and said to them ,
‘Here is King Nahusa requesting us with folded hands to produce a natya in his earthly palace. Let us do it and get the curse abrogated. All of you go down to the earth and perform. You will be no longer objects of condemnation, for either the Brahmins or the Kshatrias.
Brahma has said that the success of production depends on following his instructions. As for other details, Kohala by his supplementary technical work will explain. make this a pretext for sporting with the Apsaras. I shall be here in heaven working with Swati in charge of musical instruments and Narada in charge of vocal music.
Thus, they went down to earth and there with he help of females produced various Natyas in Nahusa’s palace. They married earthly females, begot sons and daughters and trained them in Natya. Brahma was pleased with my sons and admitted them to heaven.
Thus, due to a curse, the descendants of Bharata (actors) established themselves on earth.
–Natyasastra Last (36) Chapter
From Natyasasra by Adya Ranagacharya
Drama on earth, dance on earth, Bharata, Natyasastra
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராதன கிரேக்க நாட்டின் புகழ்மிகு புலவர் பிண்டா (ர்) (PINDAR).
அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழப்பட்டார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பாராட்டப்பட்டார்.
பிண்டா (ர்), (THEBES) தீப்ஸ் என்னும் நகருக்கு அருகில் பிறந்தார். அவர் பிறந்த குடும்பம் பிரபுக்களின் குடும்பம். அவர்கள் பழங்கால புராணப் பெருமையுடைய குலத்தின் வழி வந்தவர்கள். நாம் பாண்டியர், சோழ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று சொல்லிக்கொள்வது போல.
இளமைப் பருவத்தில் அவர் ஏதென்ஸ் மாநகரத்தில் சங்கீதம் பயின்றார்.ஒரு இசைப் போட்டியில் கோரின்னா (CORINNA) என்ற பெண்மணியிடம் அவர் தோற்றுப் போனார் . அவர், பிண்டாருடைய ஆசிரியர் என்றும் சொல்லுவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனி பாடகர் யாழ் ( LYRE) போன்ற இசைக்கருவியை வைத்துக் கொண்டு வாசிப்பார்கள். அல்லது ஒரு அணியாக நின்று கூட்டாகவும் (கோரஸ் CHORUS ) இசைப்பார்கள். பிண்டார், கோரஸ் பாடுவோருக்கு பாடல்களை எழுதினார். 20 வயது முதலே அவர் இவ்வாறு கீர்த்தனைகளை எழுதத் துவங்கினார் இவைகளை ஓட்ஸ் (Odes) என்று அழைப்பர். கிரேக்க மொழியில் (Ode= to sing) ‘பாடு’ என்று பொருள். இசையுடன் கூடிய உணர்ச்சிமிகு பாடல்கள் (Lyrics) அவை.
புராதன கிரேக்க நாட்டில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. ஒலிம்பியன், நேமியன், பிதியன் , இஷ்த்மியன் என்பன அவை. கிரேக்க நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் பங்கேற்கக்கூடியது ஒலிம்பிக் (Olympian) விளையாட்டுகள். இன்று நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளும் அதே பெயரைக் கொண்டனவாகும் பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பிண்டார் பாடினார். அவற்றுக்கு ட்ரயம்பல் ஓட்ஸ் / வெற்றி கீதங்கள்(Triumphal Odes) என்று பெயர்.
புலவரின் புகழ் கிரேக்க நாடு முழுதும் பரவவே, பல மன்னர்களும் பணக்கார குடும்பங்களும் எங்களையும் வாழ்த்திப் பாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர் நீண்ட தொலைவு பயணம் செய்து நாட்டை வலம் வந்தார். சென்ற இடமெல்லாம் புகழ் மொண்டுவந்தார். அவருடைய பாடல்களைக் கேட்க ஆங்காங்கே மக்கள் காத்து நின்றனர்.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவருடைய 44 பாடல்கள் நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன.
பிறந்த ஆண்டு- கி.மு.518
இறந்த ஆண்டு – கி.மு.438
வாழ்ந்த ஆண்டுகள் – 80
அவர் எழுதிய பாடல்கள்:-
FIFTH CENTURY BCE
TRIUMPHAL ODES – 44 IN TOTAL
xxx
SURVIVING FRAGMENTS
பல பாடல்கள் முழுமையாக இல்லை.
HYMNS
PAENS
CHORAL DITHYRAMBS
PROCESSIONAL SONGS
CHORAL SONGS FOR MAIDENS
CHORAL DANCE SONGS
LAUDATORY ODES
பிற்காலப் புலவர்களும் எழுத்தாளர்களும் இவருடைய கவிதைகளை மேற்கோள் காட்டியதால் நமக்குத் துண்டுக் கவிதைகள் கிடைத்தன. இன்னும் சில துண்டுகள், எகிப்தில் பேபைரஸ் (Papyrus) காகிதத் துண்டுகளில் கிடைத்தன.
xxxxx
தமிழர்கள், அவர்களுக்கும் முன்னால் , கவிதைகள் எழுதிப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத, கிரேக்க, எபிரேய (ஹீப்ரு), லத்தீன், சீன மொழிப் புலவர்கள் பற்றியும் அவர்களுடைய இலக்கியப்படைப்புகள் பற்றியும் அறிதல் வேண்டும் . பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தல் வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் சொன்னார். இதுவரை நாம் மொழிபெயர்த்தது எள் அளவுக்கே உளது. அதுவும் பழைய கால மொழிபெயர்ப்புகள்; படிப்பதற்கு இனியனவாக இல்லை .
ஜம்புநாதன் , ரிக்வேதம் முதலிய 4 வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து அற்புதமான பணியைச் செய்தார். ஆனால் அது செம்மையான தமிழில் அமையவில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இன்னும் நாம் வரிக்கு வரி (Verbatim) அதே வேகத்தில் மொழிபெயர்க்கவில்லை. ஹோமரின் இலியட், ஆடிசி (ஒடிஸி ) ஆங்கியவற்றின் மொழிபெயர்ப்புகளும் கடனுக்குச் செய்த மொழிபெயர்ப்புகளாகவே உள .
பழங் காலத்தை விட்டு, 100, 200 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் பல்லாயிரம் பல்லாயிரம் நூல்கள் மொழி பெயர்க்கப்படாமல் உள்ளன . இவற்றுக்காக தனித்துறை அமைத்து மொழிபெயர்க்கும் தனியார்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் ; இதைப் பல்கலைக்கழகங்களிடையே விடக் கூடாது. அவர்கள் மெத்த காசு வாங்கிக்கொண்டு, ஒரு நாளைக்கு பத்து வரிகள் மொழிபெயர்ப்பார்கள். அதுவும் ‘எழவுத் தமிழில்’ இருக்கும். படிக்கும் நடையில் இராது. தனியார் செய்த மொழி பெயர்ப்புக்களுக்கு அரசு உதவி அளித்தல் நல்லது .
புகழ்பெற்ற பிரெஞ்சு , லத்தீன் , ஜெர்மானிய, ஆங்கில நூல்களை முதலில் மொழிபெயர்த்தல் வேண்டும். அம் மொழி ஆசிரியர்கள் எழுதிய கடிதங்களையும், சொன்ன பொன்மொழிகளையும் மொழிபெயர்த்தாலே பல்லாயிரம் பக்கங்களுக்கு வரும். கதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்தால் கோடிக் கணக்கான பக்கங்களுக்கு வந்துவிடும்!!!
கிருத யுகத்தில் நடந்த சம்பவம் இது.குளிகன் என்றொரு வேடன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் பிறருடைய மனைவிகள், பொருள்கள், இவற்றை அபகரிப்பான். பிறரை துன்பப்படுத்தல், பிராணிகளை இம்சித்தல், பிராமணர்கள், பசுக்களைக் கொல்லுதல், ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கொள்ளையடித்தல் முதலிய பல பாவகரமான காரியங்களைச் செய்து வந்தான். பிராணிகளுக்கெல்லாம் எமன் போன்று விளங்கிய அவன் ஒரு சமயம் சௌவீரன் என்ற அரசனுடைய ராஜ்யத்திற்குச் சென்றான். அந்த நகரோ அமராவதிக்குச் சமமாக இருந்தது. நகரின் மத்தியில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. அது தங்க ஸ்தூபிகளால் பிரகாசித்து ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. உடனே அவற்றைத் திருட வேண்டுமென்று எண்ணிய குளிகன் அந்தக் கோவிலுக்குள் சென்றான். அந்தக் கோவிலின் உள்ளே ஸ்வாமிக்கு பூஜை செய்யும் தபஸ்வி ஒருவரைக் கண்டான். அவர் விஷயங்களில் பற்றற்ற முனிவர். தனியாக இருந்தார். அவருடைய பெயர் உதங்கர்.
‘இவர் நமக்கு இடைஞ்சலாக இருக்கிறாரே’ என்று எண்ணிய அந்த வேடன் கொஞ்சமேனும் இரக்கமின்றி தன் வாளை உருவினான். அவருடைய மார்பைத் தன் காலால் உதைத்தான். இன்னொரு கையால் அவருடைய சடையைப் பிடித்துக் கொண்டான். அவரைக் கொல்ல எத்தனித்தான்.
அப்போது அவர், “ஓ! சாதுவே! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! குற்றமற்ற என்னை ஏன் கொல்லுகிறாய்? நான் உனக்கு ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால் அதைச் சொல்! உலகில் குற்றவாளிகளைத் தண்டிப்பது வழக்கமாக இருக்கிறது. உலகில் நல்ல மனிதன் தனக்கு தீங்கு சம்பவித்த போதிலும், கோடாலியால் சந்தன மரத்தை வெட்டிய போதிலும் அது அந்தக் கோடாலியின் நுனிக்கு வாசனை அளிப்பது போலவே, தீங்கு செய்யாமல் நல்லதையே செய்வான்.
தெய்வம் மிக வலிமையானது. எல்லாப் பற்றுகளையும் விட்டவன் கூட அதிக கஷ்டத்தை அடைகிறான். உலகில் மான்கள் புல்லினாலும், மீன்கள் ஜலத்தினாலும், சாதுக்கள் நல்லொழுக்கத்தில் சந்தோஷம் என்பதினாலும் திருப்தி அடைகின்றனர். ஆனால் குற்றமற்ற இவர்களும் கூட காரணமில்லாமல் இயற்கையிலேயே வேடன், மீனவன், கோள் சொல்கின்றவன் ஆகிய மூன்று விரோதிகளால் கஷ்டப்படுகிறார்கள்.
எந்த இடத்திலிருந்து வந்த போதிலும் எது ஒருவனுக்கு அவசியம் வரவேண்டுமோ அது வந்தே தீரும்! உலகில் மனிதன் ஆணவத்தினால் மஹா பாவங்களைச் செய்கிறான். தனது மனைவியையும் பிள்ளைகளையும் மிகுந்த முயற்சியுடன் காப்பாற்றுகிறான். இவனால் தேடப்பட்ட செல்வத்தை சுற்றத்தார்கள் நன்கு அனுபவிக்கின்றனர். அந்தச் செல்வத்தை அடைவதற்காக அவன் செய்த பாவ கருமங்களை அடைவது மூடனாகிய அவன் மட்டுமே தான்.”
இவ்வாறு சொல்லிய உதங்க முனிவரைப் பார்த்து வேடன் நடுநடுங்கினான். அந்த மஹரிஷியை விட்டு விட்டு, இரு கரங்களையும் கூப்பியவாறே,” ஓ! மஹரிஷியே! பொறுத்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.
சாதுக்களின் சேர்க்கையாலும் விஷ்ணுவின் சந்நிதியில் இருப்பதாலும் பாவங்கள் அவனை விட்டு நீங்கின. அந்த வேடன் மிகுந்த அநுதாபத்தை அடைந்தான். முனிவரை வணங்கி, “ உமது தரிசனத்தால் நான் செய்த அநேக பாவங்கள் நாசமடைந்து போயின். நான் தினந்தோறும் கெட்ட புத்தியுள்ளவனாயும், பெரிய பாவங்களைச் செய்பவனாகவும் இருந்தேன். அந்தப் பாவங்கள் அனைத்தும் நீங்கி பரிசுத்தனாவதற்கு யாரைச் சரணடைய வேண்டும்? நான் பூர்வ ஜன்மத்தில் மிகுதியான பாவங்களைச் செய்து, இழிவான் இந்த வேடப் பிறவியை அடைந்தேன். இப்பிறவியிலும் அளவற்ற பாவங்களைச் செய்வேனாகில் எனக்கு என்ன கதி கிடைக்கும்?” என்று கேட்டவாறே தன்னைத் தானே மிகவும் நொந்து கொண்டான். மிகவும் வருத்தம் கொண்ட அவன் அப்படியே பூமியில் விழுந்து இறந்து போனான்.
அந்தச் சமயத்தில் மிகவும் இரக்க குணம் கொண்ட தயாளுவான உதங்கர், இறந்து கிடக்கின்ற அந்த வேடனின் சரீரத்தை கங்கா ஜலத்தினால் நனைத்தார். அவனுடைய உடலில் கங்கா ஜலம் பட்டவுடன் அவன் பரிசுத்தனானான். திவ்ய விமானத்தில் ஏறிக் கொண்ட அவன் உதங்க முனிவரை நோக்கி, “ ஓ! மஹரிஷியே! நீரா எனது குரு! உமது தயவினால் அளவற்ற பாவத்தைக் கொண்ட நான் அவை நீங்கப் பெற்று பரிசுத்தனானேன்.உமது உபதேசத்தினால் என் மனதிலிருந்த தாபெமெல்லாம் போயிற்று. நீர் கங்கை ஜலத்தினால் அபிஷேகம் செய்ததால் நான் வைகுந்த் பதத்தை அடையும்படியான நல்ல பேற்றைப் பெற்றேன். இதற்கு முன் உமக்குச் செய்த அபராதத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ நமஸ்கரிக்கிறேன்” என்று இவ்வாறு கூறி விட்டு அந்த வேடன் அந்த மாமுனிவரை சாஸ்திரப்படி மூன்று முறை பிரதக்ஷிணமாக வந்து நமஸ்கரித்தான்.
கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்டு அவன் மிகவும் அலங்காரமான விமானத்தில் ஏறிக் கொண்டு வைகுண்டத்திற்குச் சென்றான். பிறது தபஸ்வியான உதங்கர அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு கைகளை சிரம் மேல் கூப்பி பின் வருமாறு ஸ்தோத்ரம் செய்தார்:_
யாதொருவர் ஸ்தூலம், சூக்ஷ்மம் முதலிய் அநேக பேதங்களால் ஏற்படுத்தப்பட்ட ஜெகத்தைத் தாமே வியாபிக்கிறாரோ, அந்த பிரபஞ்சம் முற்றிலும் நீரே. உம்மைக் காட்டிலும் மேலானது வேறொன்றும் கிடையாது. உமது சொரூபத்தை சாதுக்கள் புலன்களுக்கு அகப்படாததாகவும், சுத்தமாயும், மாயா சம்பந்தம் இல்லாததாகவும், குணம், ஜாதி இவைகள் அற்றதாகவும், பாவ புண்ணிய சம்பந்தம் அற்றதாகவும் அளவிட முடியாததாகவும், பரமார்த்தம் என்ற பெயருள்ளதாயும் அறிகிறார்களோ அப்பேர்ப்பட்ட உமக்கு நமஸ்காரம்!
ஒரே தங்கமானது நகை வேறுபாடுகளினால் வெவ்வேறு பெயர்களை எப்படி அடைகிறதோ அதே போலவே, நீர் பல சொரூபங்களுடன் இருந்து கொண்டு அநேக விதமாகக் காணப்படுகிறீர்!
இந்திரியங்கள், மனம், புத்தி, தேஜஸ், பலம், தைரியம் ஆகியவைகள் வாஸுதேவனுடைய சொருபமென்றே சொல்வார்கள். அந்த வாஸுதேவரையே க்ஷேத்திரன், க்ஷேத்திரக்ஞன் என்றும் சொல்வார்கள்.
சம்சாரமாகிய கடலில் மூழ்கி கரையேறமுடியாமல் கஷ்டப்படுகிறவனும், அநேக விதமான மன சங்கல்பத்தினால் கட்டுப்பட்டவனும், கெட்ட கீர்த்தியை அடைந்தவனும், நன்றி இல்லாதவனும், எப்போதும் பாவத்தில் விருப்பமுடையவனாயும், கோபம் உள்ளவனாகவும், மிகவும் பயந்தவனுமாகவும் இருக்கின்ற என்னை கருணைக்கடலாகிய நீர் ரக்ஷிக்க வேண்டும். அடிக்கடி உம்மைச் சரணமடைகிறேன்” என்று இப்படி உதங்கர் ஸ்தோத்ரரித்தார்.
இதனால் பரம சந்தோஷம் அடைந்த பகவான் அவர் முன் தோன்றினார்.
பக்தவத்சலான விஷ்ணு பகவான் அவரை வாரி எடுத்து, “குழந்தாய்! உன்ன என்ன வரம் வேண்டும்” என்று கேட்டு நான் பிரசன்னமாயிருக்க்கும் போது உனக்கு சாத்தியம் ஆகாதது ஒன்று உண்டா, என்ன?” என்றார்.
உதங்கர், “பகவானே! உம்மிடத்தில் ஒவ்வொரு ஜன்மத்திலும் நீங்காத திடமான பக்தி வேண்டும். வேறெந்த வரத்தினாலும் யாதும் பயனில்லை” என்றார்.
விஷ்ணு அப்படியே ஆகட்டும் என்றார். தனது பாஞ்சசன்னியம் என்னும் சங்கத்தின் நுனியினால் அவரைத் தொட்டு யோகிகளுக்கும் அரிதான திவ்ய ஞானத்தைக் கொடுத்தார். மீண்டும் உதங்கர் அவரைத் துதிக்கலானார்.
பகவான் அவர் சிரசில் தந்து வலது கையை வைத்தருளி,
“ ஓ! பிராமணோத்தமரே! என்னை எப்போதும் கிரியைகளாலும், யோகங்களாலும், ஆராதனம் செய். நர நாராயணர்களின் இருப்பிடத்திற்குச் செல். இறுதியில் நீ மோக்ஷத்தை அடைவாய். உன்னால் செய்யப்பட்ட இந்த உத்தமமான ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்கள் இம்மையில் வேண்டிய அனைத்தும் அடைவர்; பின்னர் மோக்ஷத்தை அடைவர் என்று கூறியருளி மறைந்தார்.
பகவான் கூறியபடியே உதங்கர் நரநாராயணர் இருந்த இடத்திற்குச் சென்று அங்கே கிரியை யோகம் முதலியவற்றைச் செய்து பகவானை பிரார்த்தித்து வந்தார். பின்னர் மோக்ஷத்தை அடைந்தார்.
உதங்க மஹரிஷியின் இந்த வரலாற்றை மஹாபாரதம் ஆதி பர்வத்திலும், நாரதீய புராணத்திலும் விரிவாகக் காணலாம்.
****
INDEX
உதங்கர் வரலாறு, குளிகன் என்ற வேடனுக்கு அருளியது, விஷ்ணு பிரசன்னம், உதங்கரின் விஷ்ணு ஸ்தோத்ரம், நரநாராயணர், மஹாபாரதம் ஆதி பர்வம், நாரதீய புராணம்
சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6
xxx
ஆகஸ்ட் 11 புதன் கிழமை
பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13
xxx
ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை
இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும், இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3
Xxx
ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை
இந்திரனே! கழுதை போலக் கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5
Xxx
ஆகஸ்ட் 14 சனிக் கிழமை
இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய். அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக 1-30-4
Xxx
ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை
அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய் வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6
Xxx
ஆகஸ்ட் 16 திங்கட் கிழமை
ஏ நான்கு கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11
Xxx
ஆகஸ்ட் 17 செவ்வாய்க் கிழமை
அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16
Xxxx
ஆகஸ்ட் 18 புதன் கிழமை
நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1
xxx
ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை
இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4
xxxx
ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை
இந்திரனே நீ அஹி என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14
Xxxx
ஆகஸ்ட் 21 சனிக் கிழமை
வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1
xxx
ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை
என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2
Xxxx
ஆகஸ்ட் 23 திங்கட் கிழமை
அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8
Xxxx
ஆகஸ்ட் 24 செவ்வாய்க் கிழமை
அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16
மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும் நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2
xxxx
ஆகஸ்ட் 25 புதன் கிழமை
மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10
xxx
ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை
மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1
xxx
ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை
பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4
Xxx
ஆகஸ்ட் 28 சனிக் கிழமை
அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3
Xxx
ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை
3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4
Xxxx
ஆகஸ்ட் 30 திங்கட் கிழமை
ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6
xxx
ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை
உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14
–subham–
tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரெஞ்சுப் புரட்சியைத் (FRENCH REVOLUTION )தூண்டிவிட்ட பல்வேறு அம்சங்களில் ஒன்று உலகம் முழுதும் பரவிய ஒரு கோஷம் ஆகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் Liberty, Equality, Fraternity என்ற கோஷத்தைப் பரப்பியவர் தத்துவ ஞானியும் , நாவல் ஆசிரியரும் ஆன ஷான் ஷாக்க்ஸ் ரூஸோ JEAN JACQUES ROUSSEAU ஆவார் . ரூசோவின் எழுத்துக்களில் இவை இருந்தாலும் புரட்சிக்காலத்தில் இவற்றை சேர்த்து முன்வைத்தவர் மாக்ஸ்மில்லியன் ரோபஸ்பியர் என்பவர் ஆவார் .
பிறந்த தேதி – ஜூன் 28, 1712
இறந்த தேதி- ஜூலை 2, 1778
வாழ்ந்த ஆண்டுகள் – 66
பிரெஞ்ச் மொழி இலக்கியத்தில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஒரு கடிகாரத் தயாரிப்பாளரின் மகனாகப் பிறந்தார். அவர் பிறக்கும்போதே அவருடைய தாயார் இறந்தார். ‘என் பிள்ளையை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம்’ என்று அவர் அறிவித்தார். அதற்கேற்ற அம்மாதான் அவருக்கு கிடைத்தார். இதனால் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடினார் . ‘ஓடு காலி’யாக 4 ஆண்டுகளுக்குப் பல நாடுகளில் சுற்றித் திரிந்தார். இருபது வயதானபோது பாரிசில் குடிபுகுந்தார். அங்கே தெரெசா லவாசர் என்ற தையல்கார பெண்மணியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார். அந்த 5 பேரையும் அநாதை விடுதிகளில் சேர்த்துவிட்டார். இதுதான் பிரெஞ்சு தத்துவ ஞானியின் அழகு!
இங்கு ஒரு முக்கிய விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் ஒருவரைப் படித்தவர் என்று சொன்னால் (அந்தக்காலத்தில்; இப்போது அல்ல) அவர் கற்கக் கசடு அறக் கற்று அதற்குப்பின்னர் அதுபோல, படித்தது போல, நடந்தார் என்பது பொருள். ஆனால் மேலை நாடுகளில் படிப்புக்கும் சுய வாழ்வுக்கும் சம்பந்தம் இராது. பெரும்பலாலோரின் வாழ்வு நாற்றம் அடிக்கும் வாழ்வே. இந்தியாவில் ஒருவர் ‘மகான் ஆன பின்னர்’ இப்படிப் பார்க்க முடியாது. அவர்கள் வாழ்வு தூய வாழ்வாகவே இருக்கும். அருணகிரிநாதர் போன்றோர் பாவ (sinful) வாழ்விலிருந்து மீண்டுவிட்ட பின்னர் இப்படிப் பார்க்க முடியாது. மேலை நாடுகளிலோ புகழ் பெற்ற ஓவியர், கவிஞர், புலவர், கதாசிரியர், தத்துவ ஞானிகள் வாழ்வு எல்லாம் ஊழல் மலிந்த தாகவே இருக்கும்).
ரூஸோ தனது கவர்ச்சியால் இலக்கிய வட்டத்தில் பலருடன் தொடர்பு கொண்டார் . அதில் ஒருவர் 1751 முதல் வெளியான பிரெஞ்ச் மொழி கலைக்களஞ்சியம் எழுதும் பணியில் இவருக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இதனால் எழுத்தில் ஆர்வம் பிறந்தது. 49 வயதில் முதல் நாவல் ஜூலி வெளியானது. இது குடும்ப வாழ்வின் மஹிமை பற்றியது! இது அவருக்குப் புகழ் ஈ ட்டித் தந்ததுடன் ஐரோப்பிய புதினப் படைப்புகளில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னார்தான் இவருடைய சிந்தனைகள் அடங்கிய சோஷல் காண்ட்ராக்ட் SOCIAL CONTRACT என்னும் சமூக ஒப்பந்தம் நூல் வெளியானது. அதில் இவருடைய பொன்மொழிகளைக் காணலாம்.
மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். பின்னர் எப்போதும் சங்கிலியால் பிணைக்கப்படுகிறான் என்ற வாசகம் இவருடையது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற இவரது கோஷமும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் வந்தே மாதரம் கோஷம் போலவும், நேதாஜியின் ஜெய்ஹிந்த் கோஷம் போலவும் இது பிரான்ஸ் எங்கும் எதிரொலித்தது .
ரூசோவின் இலாககிய படைப்புகள் பல்வேறு துறைப்பட்டது. கலை , இசை முதலியன பற்றியும் எழுதினார். அறத்தைப் போதிக்கும் எமிலி போன்ற நாவல்களை எழுதினார். பல ஆபரா/ OPERA இசைப் பாடல்களையும் எழுதினார்.
இவருடைய சுய சரிதை என்று சொல்லப்படும் கன்பெஷன்ஸ் CONFESSIONS (ஒப்புதல் வாக்குமூலம்) என்ற நூல் இவர் இறந்த பின்னர் வெளியானது. சுவையான நூல் என்ற போதிலும் அது ரூஸோவின் உண்மை வாழ்க்கை வரலாறு அல்ல.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் இருப்பது பற்றியும், கிணறு, குளங்களில் யாத்ரீகர்கள் வெள்ளிக் காசுகளை எறிவது ஏன் என்பது பற்றியும், யுத்த கால ரசாயன ஆயுதங்களை அழிக்க வெள்ளி உப்பு எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றியும் நேற்று கண்டோம். இதோ மேலும் சுவையான செய்திகள் :-
லத்தீன் மொழியில் அர்ஜெண்டம்(Argentum) என்றால் வெள்ளி. இது ‘ரஜத’ என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. மதுரை என்பதை மருதை என்பது போலவும், குதிரை என்பதை குருதை என்பது போலவும், ‘ரஜத’ என்பது ‘அர்ஜத’ ஆகும். இந்த வெள்ளியின் ரசாயனக் குறியீடு ஏஜி Ag என்பது இதனால் வந்ததே . சரகர் என்பவர் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் வெள்ளியின் மருத்துவ உபயோகங்கள் இருக்கின்றன. வெள்ளி பஸ்மம் பற்றியும் உளது . வேதத்தில் தங்கம் போலவே வெள்ளியும் குறிப்பிடப்படுகிறது .
இங்கு இன்னும் ஒரு சுவையான விஷயத்தையும் காண்போம். அமெரிஷியம் என்ற மூலகம் அமெரிக்காவின் பெயரில் உள்ளது; போலோனியம் என்ற மூலகம் போலந்து நாட்டவர் கண்டுபிடித்ததால் சூட்டப்பட்டது. ரேனியம் என்பது நதியின் பெயரால் ஏற்பட்டது. இது போல வெள்ளியின் லத்தீன் மொழிப்பெயர் தென் அமெரிக்காவில் உள்ள, கால் பந்து புகழ் வீசும் அர்ஜென்டினாவுக்கு ஏற்பட்டது.
அர்ஜென்டினாவில் உள்ள நதிக்கும் வெள்ளியின் வேறு பெயர் பிளாட (Plata) . ஸ்பானிய மொழியில் ரியோ த ல பிளாட்டா Rio de la Plata .ஸ்பானியர்கள் மண்ணின் மைந்தர்களிடமிருந்து வெள்ளியைக் கொள்ளை அடித்தனர். ஸ்பானிய ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தபோதும் அர்ஜெண்டினா என்ற பெயர் மட்டும் – வெள்ளி நாடு – ஒட்டிக்கொண்டது. தென் அமெரிக்காவில் பிரேசில் தவிர மற்ற எல்லா இடங்களையும் ஸ்பெயின் ஆண்டது.
இனி வெள்ளியின் பங்கு பணியைப் பார்க்கலாம். உடலுக்கு வெள்ளி தேவை இல்லை. வெள்ளி கலந்த ரசாயன உப்புகள் கெடுதியே செய்கின்றன. 50 வயதான ஒருவன் வாழ்நாளில் ஒன்பது மில்லிகிராம் வெள்ளியை உடலில் சேர்க்கிறான் என்றும் அது கல்லீரல் அல்லது தோலில் தங்கிவிடுகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
நாம் சாப்பிடும் சாதாரண உணவுப் பண்டங்களில் மிகச் சிறிதளவு வெள்ளி உலோகம் இருக்கிறது. பால், மாவு, தவிடு போன்றவற்றில் இது இருக்கிறது
xxx
மருத்துவ உபயோகங்கள்
சில்வர் நைட்ரேட் (Silver Nitrate) என்னும் வெள்ளி உப்பை உடம்பில் ஏற்படும் வடுக்களை, மருக்களை அகற்ற பயன்படுத்தினர். இதே போல குழந்தைப் பருவத்தில் கண் பார்வை இழக்கும் நோய்களைத் தடுக்கவும் சில்வர் நைட்ரேட் கரைசல் பயன்பட்டது. முகப்பருக்களை அகற்றும் மருந்திலும் இது உபயோகிக்கப்பட்டது. இவை எல்லாவற்றிலும் உள்ள ராகசியம் என்னவென்றால், அந்த உப்பு பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிக்கும் என்பதே. சிகரெட் குடிப்பதை நிறுத்த சில்வர் அசிடேட் (Silver Acetate) உப்பை பயன்படுத்துகின்றனர். இது கலந்த மாத்திரை புகை பிடிப்போ ரின் வாயில் கசப்பை உண்டாக்குவதால் புகைபிடிப்பது குறையும்.
நீண்ட கால உபயோகம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், வெள்ளியை உடலுக்குள் செலுத்திவிடும் என்பதை அறிவோம். ஆகையால் வெள்ளியை மெதுவாக விடுவிக்கும் புதிய பொருள்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முகப்பருக்கு வெள்ளி மருந்துகள் (Colloidal Silver) இன்றும் பயன்படுகிறது.
பாக்டீரியாக்காளை அழிக்கும் குணத்தால் சில்வர் உப்புக்களை தீக்காயங்களைக் குணப்படுத்தவும்,உபயோகிக்கின்றனர். உடலுக்கு மேலே போடப்படும் பாண்டேஜ் (Bandage) , எலும்பு முறிவு மாவு ஆகியவற்றிலும் உடலுக்குள் செலுத்தப்படும் கதீட்டர் (Catheter) என்னும் குழாய்கள் ஆகியவற்றிலும் கலக்கப்படும் வெள்ளிப் பொருட்கள் கிருமிகளை அழிக்கின்றது.
வெள்ளி உப்புக்களை பயன்படுத்துவதால் முடி முதலியன விரைவில் நரை (Greying) தட்டும் (வெள்ளி மயிர்) அபாயமும் உளது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது. இவைகளை எல்லாம் கருத்திற்கொண்டுதான் வெள்ளியை மெதுவாக வெளியிடும் பாலிமர்களை பிரிட்டிஷ் கம்பெனி ஒன்று தயாரித்துள்ளது.
நீரை சுத்தப்படுத்தவும் வெள்ளி பயன்படுகிறது
xxx
வெள்ளியின் வரலாறு
மனிதனுக்கு வெள்ளியின் பயன்பாடு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளின் அகழ்வாராய்ச்சியில் வெள்ளி உருக்கிய தடயங்கள் உள்ளன. ஆயினும் தங்கம் போல அதிகம் பயன்படவில்லை. காரணம் இது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. வட, தென் அமெரிக்காவில் பெரு, பொலிவியா, அர்ஜென்டினா , மெக்சிகோ முதலிய நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது வேதம், பைபிள் போன்ற மத நூல்களில் வெள்ளி காணப்படுகிறது.
பல நாடுகள் வெள்ளிக் காசுகளை நாணயங்களாக வெளியிட்டன. பின்னர் நிக்கல், செம்பு கலப்புடன் வந்தன. இப்போது விஷேச விழாக்களைக் கொண்டாட மட்டுமே வெள்ளி நாணயங்கள் (Commemorative Coins) அச்சாகின்றன.
வெள்ளி கிடைக்கும் நாடுகள் தென் அமெரிக்காவில் பொலிவியா, மெக்சிகோ, பெரு, வெளியே சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா , ரஷ்யா. கனடா ஐரோப்பாவில் நார்வே , ஜெர்மனியில் சிறிதளவு கிடைக்கிறது
xxxx
தொழில்களில் வெள்ளி
வெள்ளியின் ரசாயன குணங்கள்
குறியீடு – ஏ ஜி Ag
அணு எண் – 47
உருகு நிலை 962 டிகிரி C சி
கொதி நிலை – 2212 டிகிரி C சி
ஐசடோப்புகள் – சில்வர் 107, 109.
புகைப்படத் தொழிலில்தான் வெள்ளி அதிகம் பயன்பட்டது. இது தவிர பாத்திரங்கள், ஸ்பூன், கத்தி (Cutlery) ஆகியன தயாரிப்பிலும் கண்ணாடி, நகைகள், அலங்கார சாதனங்கள் ஆகியன தயாரிப்பிலும் இப்போது வெள்ளி உபயோகப்படுத்தப்படுகிறது.
வெள்ளி அயோடைட், வெள்ளி ப்ரோமைட் (Silver Iodide and Bromide) ஆகிய உப்புகள் ஒளி பட்டால் மாறிவிடும் (Light sensitive) . இதனால் புகைப்படத் தொழில் இதை நாடியது. மின்சாரத்தை எளிதில் கடத்தும் குணத்தால் மின்சார மற்றும் மின் அணு சாதனங்களிலும் வெள்ளி இடம்பெறுகிறது .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
‘ஸ்வச்ச பாரத் உருவாக்குவோம்’, ‘பசுமை பூமியை உருவாக்குவோம்’, போன்ற குறிக்கோள்களை நாம் கொள்ளும் போது அவை மிகவும் கடினமானவை என்றோ அல்லது அடைய முடியாத இலக்கு என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கழிவைக் குறைப்பதும், ஆற்றல் அல்லது சக்தியை மேம்படுத்துவதும் ஒவ்வொருவரும் மனது வைத்தால் எளிதில் அடையக் கூடிய லட்சியமாகும். எடுத்துக் காட்டாக சிலவற்றைப் பார்ப்போம். ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் உள்ள சாதாரணமான பல்புகளில் ஒன்றே ஒன்றை மட்டும் காம்பாக்ட் ஃப்ளோரெஸண்ட் பல்பாக (Compact Flourescent Bulb) மாற்றினால் குறைந்த பட்சம் பத்து லட்சம் கார்களை சாலைகளிலிருந்து அகற்றினால் கிடைக்கும் மாசற்ற சூழ்நிலையை அடைவோம். கணினிகளை அப்படியே ‘ஸ்லீப்’ பாங்கில் (mode) வைத்து விட்டுச் செல்லாமல் அவற்றை முழுவதுமாக மூடி விட்டால் 40 வாட்- ஹவரை நாள் ஒன்றுக்குச் சேமிக்கலாம்.
டிஷ் வாஷரை அல்லது வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும் போது அவற்றை உரிய முறையில் முழுக் கொள்ளளவு பயன்படுத்தினால் ஏராளமான நீரைச் சேமிக்க முடியும். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பொருள்களைப் பயன்படுத்தினால் காற்று மாசு விலகும். பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே கழிவாகத் தூக்கி எறிந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் அவை மக்கிப் போகாது. தினமும் அசைவ உணவைச் சாப்பிடுவோர் வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் அதை விலக்கினால் பூமியின் மாசைக் குறைத்தவர்களாவோம். ஒரு கிலோ இறைச்சிக்கு 15400 லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்து கொண்டோமானால் நீரை எப்படி சைவ உணவினால் காக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். பல மரங்களையும் காப்பாற்றியவர்களாவோம். பேப்பர் நாப்கின்களைப் பயன்படுத்தும் பழக்கம் பரவலாக அதிகமாகி வருகிறது. இதைக் குறைத்தால் குப்பை நிரப்புப் பரப்பு வெகுவாகக் குறையும்.
ஆயிரக்கணக்கான டன் பேப்பர்கள் அலுவலகங்களிலும் வணிக வளாகங்களிலும், கல்வி பயிலும் இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தி பேப்பரை எறியாமல் இரு பக்கமும் பயன்படுத்தும் பழக்கத்தினால் பேப்பர் பயன்பாடு பாதியாகக் குறையும். இதனால் மரங்கள், காடுகள் பாதுகாக்கப்படும்.
ஒவ்வொரு சிறு விஷயமும் அரிய விதத்தில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் என்பது இதிலிருந்து புலனாகிறதல்லவா?