தோல்வி இதயத்திற்கு,வெற்றி தலைக்கு போகக் கூடாது (Post No.9126)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9126

Date uploaded in London – – 10 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 17

                    Kattukutty

உன்னால் ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாவம்,

உனக்காக ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாசம் !!!

XXX

மனிதனாக வாழ வழிகள்

மிகவும் மதிப்பிற்குரியவர்கள் – தாய், தந்தை, குரு

மிக நல்ல நாள் – இன்று

மிகவும் வேண்டியது – பணிவு

மிகவும் வேண்டாதது – வெறுப்பு

மிகப் பெரிய தேவை – நம்பிக்கை

மிகக் கொடிய நோய் – பேராசை

மிக சுலபமானது – குற்றம் காணல்

மிக தரமற்ற குணம் – பொறாமை

நம்பக்கூடாதது – வதந்தி

ஆபத்தை விளைவிப்பது – அதிகப் பேச்சு

செய்யக் கூடாதது – நம்பிக்கை துரோகம்

செய்யக் கூடியது – உதவி

விலக்க வேண்டியது – சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி – உழைப்பு

நழுவவிடக் கூடாதது – வாய்ப்பு

பிரியக் கூடாதது  – நட்பு

மறக்க கூடாததது – நன்றி

ஒவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது – இறை பக்தி

XXXX

தேனீர்ல சர்க்கரை கொட்டினாலும், சர்க்கரை மீது தேனீர்

கொட்டினாலும், கரையப் போவது சர்க்கரை தான்……….

வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டாலும், வருத்தப்பட்டுக்

கொண்டே வாழ்ந்தாலும் வீணாகப் போவது உன் வாழ்க்கைதான்!!!

XXXX

நம்பிக்கை கிடைத்த இடத்தில் அன்பு கிடைக்காது,

அன்பு இல்லாத இடத்தில் சந்தோஷம் இருக்காது,

சந்தோஷம் இல்லாத இடத்தில் வாழ்க்கை இருக்காது !!!.,

XXXX

சில பொழுது சிந்தித்தால்,

பல பொழுது அவசியமில்லை அழுவதற்கு!!!

XXXX

தோல்வி இதயத்திற்குப் போகக் கூடாது,

வெற்றி தலைக்கு போகக் கூடாது ……….

XXXX

வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதைவிட,

யாரையும் வேதனைப் படுத்தவில்லை என்பதே சிறந்தது!!!

XXXX

தலைவர் தன்னை யூத் YOUTH ன்னு நினைச்சுகிட்டு பண்ற அட்டகாசம்

தாங்கலை………..

ஏன்.? என்ன ஆச்சு…….?

இன்னைக்கு ஒரு குழந்தைக்கு WHATSUP (WHATSAPP) ன்னு பேர் வச்சிருக்காரு!!!

XXXX

                                                                      ***

tags-  நவீன ஞான மொழிகள்17

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்? ENGLISH & TAMIL(Post.9125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9125

Date uploaded in London – –10 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ENGLISH VERSION FOLLOWS TAMIL MATTER

விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்? ENGLISH & TAMIL(Post.

ச.நாகராஜன்

1940களிலோ அல்லது 1950 களிலோ ஒரு நாள் ஒருவர் காஞ்சி மஹாபெரியவாளை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு டேப் ரிகார்டரைப் பயன்படுத்தி பேட்டியை ரிகார்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது பெரியவாள் ஒரு கேள்வியைக் கேட்டார்: யாருக்காவது உலகின் மிகப் பழைய டேப் ரிகார்டர் எது என்று தெரியுமா?

ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர் மஹாபெரியவாள் இன்னொரு கேள்வியைக் கேட்டார் : “விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? ‘பீஷ்ம பிதாமஹர் நமக்குக் கொடுத்தார், என்று ஒருவரிடமிருந்து பதில் வந்தது. அனைவரும் இதை ஒப்புக்கொண்டனர். பின்னர் மஹாபெரியவாள் இன்னொரு கேள்வியைக் கேட்டார் : “போர்க்களத்தில் அனைவரும் பீஷ்ம பிதாமஹர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த போது குருக்ஷேத்திரத்தில் யார் அதை எழுதிக் கொண்டிருந்தார்?

ஸ்ரீ மஹாபெரியவாள் விளக்க ஆரம்பித்தார் : “பீஷ்ம பிதாமஹர் கிருஷ்ணரை ஆயிரம் நாமங்களால் (சஹஸ்ரநாமம்) போற்றிக் கொண்டிருந்த போது கிருஷ்ணரும் வேத வியாஸ முனிவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் ஆயிரம் நாமங்களை முடித்த பின்னர் தான் அனைவ்ரும் கண்களை விழித்தனர். அப்போது முதலில் பேசியவர் யுதிஷ்டிரர் தான்! அவர் கூறினார் : “பிதாமஹர் வாசுதேவரின் ஆயிரம் நாமங்களை உச்சரித்தார். நாம் அனைவரும் அதைக் கேட்டோம். ஆனால் ஒருவருமே அதை எழுதி வைத்துக் கொள்ளவில்லையே! அந்த நாம வரிசை இப்போது இல்லையே!

உடனே அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து அவரது உதவியை நாடினர்.

வழக்கம் போல அவர், “நானும் எல்லோரையும் போலக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது நாம் என்ன செய்வது?” என்றார். அனைவரும் கிருஷ்ணரைச் சூழ்ந்து கொண்டு எப்படியாவது அந்த அருமையான நாமங்களை மீண்டும் பெறுவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டினர்.

“அது சஹாதேவன் ஒருவனால் மட்டுமே முடியும். அதை அவன் சொல்ல வியாஸர் எழுதிக் கொள்ளட்டும்” என்றார் கிருஷ்ணர்.

அனைவருக்கும் சஹாதேவனால் மட்டும் அதை எப்படிச் செய்ய முடியும் என்று ஆச்சரியம். அவர்கள் அதை கிருஷ்ணரிடமே கேட்டனர்.

கிருஷ்ணர் கூறினார் இப்படி :”  இங்கு கூடியிருந்த அனைவருள்ளும் சஹாதேவன் ஒருவனே சுத்த ஸ்படிகத்தைத் தரித்துக் கொண்டிருந்தான். அவன் சிவனை நோக்கி தியானம் செய்து பிரார்த்தித்தால் ஸ்படிகத்தை ஒலி அலைகளாக மாற்ற முடியும்; அதை வியாஸர் எழுதலாம்”

உடனே வியாஸரும் சஹாதேவனும் பீஷ்ம பிதாமஹர் வாசுதேவனைக் குறித்து உச்சரித்த விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்ன இடத்திலேயே அமர்ந்தனர். சஹாதேவன் ஸ்படிகத்தில் இருந்த ஒலி அலைகளைப் பெற தியானம் செய்ய ஆரம்பித்தார்.

ஸ்படிகத்தின் இயற்கை என்னவெனில், ஒரு அமைதியான சூழ்நிலையில் ஸ்படிகம் ஒலி அலைகளை அப்படியே கிரஹிக்கும்; ஸ்வேதாம்பரராகவும் ஸ்படிகமாகவும் விளங்கும் மஹாதேவரை முறைப்படி தியானம் செய்தால் அதை மீண்டும் பெற முடியும். ஆகவே உலகின் முதல் டேப் ரிகார்டர் ஸ்படிகம் தான்; அது தான் நமக்கு அருமையான விஷ்ணுசஹஸ்ரநாமத்தைத் தந்தது!

மஹா பெரியவாள் இப்படி விளக்கிய பின்னர் அனைவரும் பிரமித்து நின்றனர். ஸ்படிகம் ரிகார்ட் செய்ய, வேத வியாஸர் மூலமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்குக் கிடைத்தது!

(காஞ்சி ஜகத்குரு மஹா பெரியவாள் – காஞ்சி பரமாசார்யாள் உரையிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஆதாரம், நன்றி : ட்ரூத், கல்கத்தா ஆங்கில வார இதழ்; தொகுதி 88 இதழ் 24 தேதி 1-1-2021

*

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :

Who recorded the Vishnu Sahasranamam? 

Once, way back in the 1940’s or 50’s, someone was interviewing Sri Maha Periyava. That gentleman recorded the interview using a tape recorder. Periyava then posed a question, “Does anyone know which is the oldest known tape recorder?” 

Nobody was able to answer. Then Sri Maha Periyava asked another question, “How did Vishnu Sahasranamam come to us?” Someone said that Bheeshma Pitamah gave it to us. All agreed. Then Sri Maha Periyava posed another question, “When all were listening to Bheeshma on the battlefield, who took the notes at Kurukshetra?”Again silence. 

Sri Maha Periyava explained, “When Bheeshma Pitamah was glorifying Sri Krishna with Sahasranamam, everyone was looking at him including Sri Krishna and the sage, Veda Vyasa. After he finished the 1000 Namas, all opened their eyes. The first to react was Yudhistirar. He said, “Pitamah has chanted 1000 glorious names of Vasudeva. All of us listened to it but none of us have noted it down. The sequence is lost.” Then all turned to Sri Krishna and asked for His help. 

As usual He said, “I was also listening like the rest of you. What can we do?” Then all beseeched Sri Krishna to help them recover the precious rendition. Then Sri Krishna said, “It can only be done by Sahadeva and Vyasa will write it down.” 

Everyone wanted to know how Sahadeva could do it. Sri Krishna replied, “Sahadeva is the only one amongst us wearing the Shuddha Sphatika. If he prays to Shiva and does dhyanam, he can convert the Sphatika into waves of sound and Vyasa can write it down.” 

Then both Sahadeva and Vyasa sat in the same place under Bheeshma Pitamah, where he had recited the Vishnu Sahasranamam. Sahadeva started doing the dhyanam to rocover the sound waves from the Sphatika. 

The nature of Sphatika is that it will capture sounds in a calm environment which can be got back with proper dhyanam of Maheswara who is Swethambara and Sphatika. So, the world’s earliest tape recorder is this Sphatika which gave us the wonderful Vishnu Sahasranamam. 

When Sri Maha Periyava explained this all were stunned. From the Sphatika recording, the grantha came to us through Veda Vyasa. 

[Compiled by Jagadguru Sri Maha Periyava– Kanchi Paramacharya.]
Source : English Weekly :  TRUTH VOL. 88 NO. 24

***

TAGS- விஷ்ணு சஹஸ்ரநாமம், ரிகார்ட் ,

வீணைக் கொடியுடைய வேந்தனே! (Post No.9124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9124

Date uploaded in London – –9 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீணைக் கொடியுடைய வேந்தனே!

கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்.  சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள் (READ MY OLD RESEARH ARTICLES ON VAHANAS, SYMBOLS AND FLAGS PLEASE). தொல்காப்பியத்திலேயே பலராமனின் பனைக்கொடி உளது.

புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில்  சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக்  கொடி  ஆகிய அனைத்தும்  குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய  மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது

துரியோனாதணனுக்கு பாம்புக் கொடி ; ராவணனுக்கு வீணைக் கொடி என்பதும் நமக்குத் தெரியும் .

ஆயினும் திருக்குறள் காலம் வரை யாழ் பற்றிய குறிப்பே கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுத்து வடிவில் உருவான சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலில் வீணையை சந்திக்கிறோம்.(6-18). ‘நாரதர் வீணை’ (6-18, 22) பற்றி இளங்கோ பாடுகிறார். பின்னர் மணிமேகலையில் (CHAPTER 29) காண்கிறோம் . ஆனால் கம்பன் பல இடங்களில் வீணைக் கொடியைக் குறிப்பிடுகிறான்; பாடுகிறான்

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் இராவணன் பற்றிய பாடல் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல் …………….

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி

வால்மீகி ராமாயணத்தில்தான் இதற்கான மூலம் உளது. ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.

யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது  ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.

கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .

ஆரண்ய காண்டத்தில் ராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் கொடியை மறக்கவில்லை

“இடிப்பு ……………

…………….

கடிப்பக் கடிது உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்”

பொருள் —

இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்

Xxx

பின்னரும் சடாயு உயிர் நீத்த படலத்தில் கொடியை மறக்கவில்லை கம்பன் …

இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர்

“பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல் “–

இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறான்.

Xxxx

கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல் இதோ ………………………

ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்

சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி

வாழிய உலகு எலாம்  வளைத்து வாய் இடும்

ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

பொருள் ……….

“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.

யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் வீணைக்கொடியின் அவல நிலையைப் பாடுகிறான் கம்பன் …

எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்

கழுகும் காகமும் மொய்த்தன 

பொருள்

வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது  காகமும் கழுகும் மொய்த்தன .

XXXX

MY OLD ARTICLE………

அகத்தியரும் வீணை வாசிப்பதில் வல்லவர்

நச்சினார்க்கினியர் சொல்லும் இராவணன் வீணைக்  கதை 

ராவணன் – பாண்டியர் சமாதான …

tamilandvedas.com › 2014/06/24 › ர… 

24 Jun 2014 — ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை ! pandya-flags. Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் …

–subham—

tags- வீணைக் கொடி, நச்சினார்க்கினியர், ,ராவணன் 

புராணத்துளிகள்- முக்தி அடைய உள்ள 3 யோகங்கள்! (Post.9123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9123

Date uploaded in London – –9 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 2

ச.நாகராஜன்

2. பரமபதம் அடைவது எப்படி?

பரமபதம் அடைவது எப்படி என்பதை துருவ சரித்திரத்தில் நாரதர் விளக்குவதைக் கண்டோம். மஹாகவி பாரதியாரின் கவிதைப் பகுதி இதே கருத்தை வலியுறுத்துவதை இங்கு கண்டு மகிழலாம்.

எங்கள் மதம் (உயிர் பெற்ற தமிழர் பாட்டு)

தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்

துன்பத்தோடின்பம் வெறுமையென்றோதும்

மூன்றில் எது வருமேனும் – களி

மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி

3. நமது துக்கத்திற்குக் காரணம்!

நமது துக்கத்திற்குக் காரணம் என்ன என்பதை துருவனின் தாயான ஸுநீதி அவனிடம் கூறுகிறாள்:

“அப்பா! பிறர் மேல் அபராதத்தை நினைக்காதே! எவன் பிறருக்குத் துக்கத்தை விளைவிக்கின்றானோ, அவன் தானும் அந்த துக்கத்தையே அனுபவிப்பான். நாம் ஜன்மாந்தரங்களில் எவருக்கு என்ன துக்கத்தை விளைவித்தோமோ, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றோம். ஆகையால் இது நம்முடைய பாவத்தின் பலனேயன்றி  வேறன்று. இதற்கு நாம்  பிறர் மேல் தோஷத்தை நினைக்கலாகாது.”

பாகவதம் சதுர்த்த ஸ்கந்தம் எட்டாம் அத்தியாயத்தில் இடம் பெறுவது இந்த உரையாடல்.

4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!

தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 37ஆம் அத்தியாயத்தில் வருவது இது:

தேவியானவள் பர்வதராஜனுக்குக் கூறுவது : “மோக்ஷத்தை அடைவதற்குச் சொல்லப்பட்ட வழிகள் மூன்று. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவையே அவை. இம்மூன்றும் எப்போதும் சுலபமாக சுவாதீனம் செய்து கொள்ளலாம்.

5. மூவகை பக்தி

தேவியானவள் மேற்கொண்டு பக்தியின் மூன்று வகைகளை விளக்குகிறாள் இப்படி:-

மனிதர்களின் குண பேதங்களால் பக்தி யோகமானது தாமஸ பக்தி என்றும், ராஜஸ பக்தி என்றும் சாத்விக பக்தி என்றும் மூவகைப்படும்.

தாமஸ பக்தியாவது : பிறர் வருந்தவேனும், டம்பமாகவேனும் மாச்சரியத்தினாலும், குரோதத்தினாலும் என்னிடம் விஸ்வாசம் வைத்துச் செய்யும் செயல்களாம்.

ராஜஸ பக்தியாவது : பிறருக்குத் துன்பம் செய்யாமல் தனக்கு மாத்திரம் நன்மையான செயல்களைச் செய்து கொண்டும் ஏதேனும் ஒரு இச்சையை நாள்தோறும் எண்ணியும் புண்ணிய பலன்களை அனுபவிக்கும் பொருட்டும் பேத புத்தியினால் என்னை உபாசித்தல் ஆகும்.

சாத்விக பக்தியாவது : பாவ நிவர்த்தியின் பொருட்டு எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணமாகச் செய்வதாகும். இச்செயல் வேதோக்தம் என்பதால் இதை எப்போதும் செய்ய வேண்டும்  என்கிற நிச்சய புத்தியை உடையவனாக ஆதல், ஆண்டான் அடிமை என்கிற பேத புத்தியோடு தெய்வத்தினிடத்தில் பிரியம் உடையவனாக இருத்தல் முதலியனவாம்.

6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?

தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்கந்தம் அத்தியாயம் எட்டில் வரும் அற்புதமான கால அளவைகள் கீழே தரப்படுகின்றன.

மனிதர்களுக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். மனிதர்களுக்கு முன்னூற்றறுபது யுகம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு யுகமாகும்.

எழுபத்தோரு தேவ யுகம் ஒரு மன்வந்தரமாகும்.

அது இந்திரனுடைய காலத்துக்குச் சமமாகும்.

இருபத்தெட்டு இந்திரகாலம் கழிந்தால் அது பிரம்மாவுக்கு ஒரு நாளாகும்.

நூற்றேட்டு வயதானால் பிரம்மாவுக்கு ஆயுள் முடிந்து விடும்.

அப்போது பிராகிருத பிரளயம் ஏற்படுகிறது. பூமி ஜலத்தினால் மூடப்பட்டு விடும்.

மும்மூர்த்திகளும், மஹரிஷிகளும், சகல ஞானிகளும் சத்ய ரூபமான சிதாத்மாவில் ஐக்கியமாகின்றனர்.

பிரகிருதியும் சிதாத்மாவில் லயமடையும் காலமானது தேவிக்கு இமை கொட்டும் காலமாகும்.

இவ்வாறு அசைவில்லாத பிரம்மாண்டங்கள் லயித்துப் போகின்றன.

மறுபடியும் தேவி சிருஷ்டிகிரமத்தால் ஒரு நிமிஷ காலத்துக்குள் சிருஷ்டித்து விடுகிறாள்.

இப்படி சிருஷ்டிலயம் கற்பங்கள் எத்தனையோ நடந்து விட்டன.

இதன் கணக்கையும், பிரம்மாண்டங்களின் கணக்கையும் எவர் அறிவார்?!

***

tags- புராணத்துளிகள்,  மூன்று யோகங்கள்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 21 (Post No.9122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9122

Date uploaded in London – –8 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -21

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

3-1-41

LIH – LICK

NAKKU IN TAMIL.

லேஹியம் ; நக்கு ; நாக்கு

LEHIYAM WHICH IS LICKED FROM HAND by TONGUE.

DHAAYA – RELATIONS தாயம், தாயாதி

DHAAYAATHI, THAAYAM ARE USED IN TAMIL WITH SAME MEANING

VYAADHAHA – VETTAI+ KARAN IN TAMIL வ்யாத = வேட்டை

SVAASA – BREATHING IS USED IN ALL INDIAN LANGUGES சுவாசம்

 SAMSRAAVA – STREAM

XXXX

3-1-142

NAAYA – LEAD நாயக

NAAYAK KINGS OF TAMIL NADU; நாயக்க மன்னர்கள்

NAAYAKAN, KATHAANAAYAKAN/ HRO IN A FILM ARE USED IN TAMIL

நாயகன் – தலைவன்; கதா நாயகன்

XXX

HINDUS DISCOVERED GRAVITY

GRAH – GRAB, GRIP, GRAVITY

கிரஹ = பிடி; கிரஹம் – ஈர்ப்பு/ பிடிப்பு சக்தியுடையவை

HINDUS KNEW ABOUT GRAVITY AND THEY NAMED ALL HEAVENLY BODIES/ OBJECTS AS THINGS WITH GRAVITY/GRAH.

எல்லாப் பொருட்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு என்று அறிந்த இந்துக்கள் அவைகளுக்கு ‘கிரஹ’ என்று பெயர் சூட்டினர்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஈர்ப்பு சக்தி இருப்பதால் அவைகளையும் கிரகத்தில் சேர்த்தனர்

கிரக = கைப்பற்று

பாணிக்கிரஹணம் – திருமணம் = கைப்பிடித்தல், கைப்பற்றல்

XXX

3-1-144

GRUHAM – HOME

கிருஹம் – ஹோம்

GRUHAM IS USED IN MANY INDIAN LANGUAGES.

THE PLACE WHERE YOU SEE GRHAM BECOMES GRAAMAM.

கிருஹங்கள் நிறைந்த இடம் கிராமம்

தமிழிலும் குடிசைகள் நிறைந்த இடம் குடி

ஆங்கிலத்திலும் குடிசைகள் நிறைந்த இடம் ஹேம்லெட்.

க்ருஹம் நிறைந்த இடம் கம், ஹாம் – பர்மிங்கஹாம், நாட்டிங்ஹா ம் , ஜில்லிங்ஹாம் IN ENGLAND 

IN ENG. THEY BECOME HAM, GHAM- SUFFIX OF TOWNS IN ENGLAND.

XXX

3-1-145

நர்த்தக- நர்த்தகி

NARTAKA – DANCER

NARTAKI – DANSEUSE

GANAKA – ONE WHO DIGS

GANAKI – ONE WHO DIGS/FEMININE

கானக – கானகி

RAJAKA – WASHERMAN

RAJAKI- WASHERWOMAN

ராஜ – ராஜகி= வண்ணான் –  வண்ணாத்தி

TAMIL ALSO FOLLOWS SKT AND ADDS I SOUND TO MAKE EVERYTHING FEMININE

EG. KIZAVAN – KIZAVI, KIZATHI

KURAVAN – KURATHTHI

FROM SANGAM DAYS, TAMILS ADD ‘I’ TO MAKE A WORD FEMININE

FEMININE = WOMAN = VAAMI IS FEMALE OF THAT S LEFT.

சம்ஸ்கிருதம் போலவே பெண்பால் சொற்களை உருவாக்க ‘இ’ சப்தம் சேர்க்கப்படும்

கிழவன்- கிழவி ; குறவன்- குறத்தி

‘வாமி; என்றால் பெண் மிருகங்கள்; அது ஆங்கிலத்தில் வுமன் ஆயிற்று .

வாம பாகம் = இடது பாகம் = பெண்கள் = VAMA= WOMA N வுமன்

FEMALE IS ALSO = VAAMI; F=V

XXXX

3-1-45

SILPINI – SILPAM- SIRPAM- SCULPTURE

SIRPAM, SIRPI USED IN TAM.

சில்பிணி – சிற்பம் – சிற்பி.

ஸ்கல்ப்சர்

XXX

3-1-146

GAATHAKAH= ONE WHO SINGS

காதக – காதகி

GAATHAKI – FEM

GATHA IN PERSIAN IN PRAKRIT

GATHA- POEMS FOR SINGING

காதா = பாட்டு

GAAYANAHA- SINGER

GAAYANI – SINGER – FEMALE

காயனஹ – காயனி

XX

3-1-149

PRAVAKA – PROGRESS

ப்ரவக – முன்னேற்றம்

LAVAKA – LAAVAKAM

லாவக – லாவகம்

XXX

3-1-150

JEEVAKA – LIVE; LONG LIVE

ஜீவக – வாழ்க்கை J=Y/I

NANDAKA – BE HAPPY

நந்தக – மகிழ்சசி ‘ஆனந்தா’க்கள்

ANANDA SUFFIX IN MANY NAMES , PARTICULARLY IN ASCETICS’ NAMES

XXX

3-2-1

MAAMISAM – MEAT

மாம்சம்

KALYAANA – GOOD

கல்யாண

THEY ARE USED IN TAMIL AND OTHER LANGUAGES

XXX

3-2-3

ANGULI- THUMB FINGER SIZE

அங்குலி – கட்டை விரல்

அங்குல ம் = விரற்கடை

ANGHULI- FINGER

XXX

ஆமை அதிசயம் , பாம்பு அதிசயம் 

3-2-4

DWIPAHA – USING TWO BODY PARTS TO DRINK

த்விப = இரு கை வேழம்

பா- குடித்தல்

இரு செயல்களைக் கொண்ட உறுப்பா ல் குடித்தல் (சுவாசம்; நீர் எடுத்தல்)

TAMILS TRANSLATED IT AS IRU KAI YAANAI WHICH MEANS LONG HAND AND HAND USED FOR TWO PURPOSES

இரு கை  வேழம் (திருவாசகம்)

நீண்ட கை ; குடிப்பதற்கு இரண்டு செயல்கள்; துதிக்கை உறி ஞ்ச்சும்; வாய்க்குள் கொண்டு சென்று ஊற்றும்

PAATHAPAHA – FOOT DRINKERS – USING FEET FOR DRINKING- THAT IS TREE; USE THE BOTTOM PARTS

பாதபகா – காலால் குடித்தல் = மரங்கள் – வேரால் தண்ணீர் உறிஞ்சுவதால் இந்தப் பெயர்

KACHCHAPAHA – TORTOISE/TURTLE  கச்சப- ஆமை – கண்களுக்கு அடியிலுள்ள சுரப்பிகள் உப்பை பிரித்து எடுத்து கண்ணீர் வழியே வெளியேற்றுவதால் அவைகளை கச்சப என்று அழைத்தனர்

THEY DRINK SEA WATER AND THE SALT IS FILTERED AND SHED AS EYE TEARS. THE GLANDS ARE NEAR EYES. THIS SCIENTIFIC FACT IS KNOWN TO HINDUS AND THEY NAMED TURTLES AS KACHCHAPAHA MEANING DRINKING THROGH SIEVES;

இதே போல அகச் சிவப்பு INFRA RAD RAYS கதிர்களை பயன்படுத்துவதால் பாம்புகள் நாக ரத்தினத்தைக் RUBY RED கக்கி ஈறி தேடுவதாக சொன்னார்கள்; அதற்கு கண்களே செவி — கட்செவி — என்ற பெயரும் இதனால்தான் வந்தது.

கண்களுக்குக் கீழே இதற்கான விசேஷ உறுப்பு உளது ( எனது பழைய கட்டுரைகளில் முழு விவரம் உளது கட் செவி என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மொழி பெயர்ப்பு

XXXX

3-2-5

TUNDHA- THONTHI IN TAMIL

துந்த = தொந்தி

தொப்புள் – டம்மி/ஆங்கிலம்

ALSO TOPPUL – TUMMY

VAARTTIKA GIVE ‘AALASYA’ – LAZY

ஆலஸ்ய = லேஸி /ஆங்கிலம் = சோம்பேறி

XXX

3-2-8

SAMKYA – SAMIKNGAI IN TAM.

சம் க்யா = சமிக்கை

SIGN  LANGUAGE IN ENG.

XXX

3-2-9

SURAAPA- SURAAPI- MALE AND FEMALE DRINKER

SITUPA – SITUPI – SITU DRINKER

SITUPA – JUICE, STARCH

சுரபா –சுரபி

சிடுப – சிதுப்பி

தமிழர்களும் பெண்பாலைக் குறிக்க ‘இ’ சப்தம் சேர்ப்பர்

AMSA – A PART, FACTOR

அம் சம்

VAARTTIKA ADDS…………….

SAKTI – SPEAR, EETTI IN TAM.

சக்தி – ஈட்டி

LAANGULA –‘ ER’ IN TAM.

லாங்குல – ஏர்

TOMARAM – HEAVY WOOD; MENTIONED AS WEAPON IN TAMIL LIT.

தோமரம் – மதிலில் உள்ள ஆயுதங்கள் பட்டியலில்  இது வரும்

GHATA- POT ; MUSICAL INSTRUMENT GHATAM

கடம் ; கடம் வாசித்தல்

SUTRAGRAHAKA- ONE WHO HOLDS THREAD.

நூல் பிடிப்போர்

இந்துக்கள் பிரமிடுகளைக் கட்டினார்களா? என்ற எனது 2012-ம் ஆண்டு ஆராய்சசிக் கட்டுரை காண்க.

நேர் கோட்டைக் கண்டு பிடிக்க ஒரு கல்லில் நூலைக் கட்டி தொங்க விடுவர் . நூல் பிடித்து யாக குண்டம் கட்டுவர்

PYRAMID BUILDERS ALSO USED THIS WORD; USED TO MEASURE STRAIGHT LINES; PLUMB LINES

(read my article posted in 2012; Did Hindus build Egyptian Pyramids?)

XXX

3-2-10

ASTI – OSTEO – BONE

அஸ்தி – எலும்பு

ஆஸ்டியோ – எலும்பு

OSTEOPOROSIS

 TO BE CONTINUED………………………………..

TAGS –  PANINI TAMIL WORDS 21

FIVE THINGS MAKE AN INDIAN HAPPY (Post No.9121)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 9121

Date uploaded in London – – 8 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

AN AMERICAN ASKED AN INDIAN CHILD,

HOW OLD ARE YOU???

THE CHILD REPLIED,

IN MY HOUSE…………11

IN SCHOOL…………….12

IN BUS…………………….10

IN TRAIN………………….7

IN FACE BOOK ……….18!!!

xxxx

HOLDING A GRUDGE IS LETTING DOWN SOMEONE LIVING

“RENT FREE” ON YOUR HEAD…..

Xxxx

NEVER HATE PEOPLE WHO ARE JEALOUS OF YOU.

BUT RESPECT THEIR JEALOUSY BECAUSE

THEY ARE THE ONES WHO THINK THAT YOU ARE

BETTER THAN THEM,!!!

XXX

BEFORE YOU SPEAK, ‘THINK’

T………… IS IT TRUE???

H……….. IS IT HELFUL???

I…………..IS IT INSPIRING.???

N…………IS IT NECESSARY.???

K………….IS IT KIND???

XXXX

NEVER BLAME ANY ONE IN YOUR LIFE

GOOD PEOPLE GIVE YOU HAPPINESS

BAD PEOPLE GIVE YOU EXPERIENCE

WORST PEOPLE GIVE YOU LESSON

BEST PEOPLE GIVE YOU MEMORIES !!!

XXXX

BEST JOKE OF THIS CENTURY IS

“COMPUTER AND MOBILE WERE INVENTED

TO SAVE OUR TIME” !!!

XXXX

From  : SAINT NITHYANANDA

LOVE THE LADY

BUT DONT TOUCH THE BODY

IF YOU TOUCH THE BODY

SOME ONE WILL MAKE C. D………

அப்புறம் நீ நாட்டை விட்டு ஓடி………..

XXXX

CHANGE CANNOT BE GIVEN.

YOU ONLY MUST BRING THE CHANGE……..

GREAT LINE SAID BY MR. MADA SAMY, TOWN BUS CONDUCTOR…….

PL READ AGAIN,!!!

XXXX

AN APPLE A DAY IS ALMOST RS.1000/- MONTH.

BUT YOU SEE, SEEING A DOCTOR IS MUCH MORE CHEAPER!!!

XXXX

SON :DAD, THERE IS A SMALL GET TOGETHER IN THE SCHOOL TOMORROW. PLEASE COME

DAD : WHAT DO YOU MEAN BY “ SMALL”???

SON : ONLY YOU, ME , AND PRINCIPAL………

XXX

SPEAK IN SUCH A WAY THAT OTHERS LOVE TO

LISTEN TO YOU !!!

LISTEN IN SUCH A WAY THAT OTHERS LOVE TO

SPEAK TO YOU.!!!

XXXX

SOME PEOPLE COME IN YOUR LIFE AS BLESSINGS,!!!

OTHERS COMING IN YOUR LIFE AS LESSONS!!!!

XXX

WHO SAID THAT ENGLISH IS AN EASY LANGUAGE?

FILL IN THE BLANKS WITH “YES” OR “NO”

1)______I DONT HAVE BRAIN.

2)______ I DONT HAVE SENSE

3)______ I AM A STUPID.

XXX

BEAUTIFUL HAS NOTHING TO DO WITH LOOKS

IT HAS EVERYTHING TO DO HOW YOU ARE A PERSON

AND HOW YOU MOVE WITH OTHERS AND FEEL ABOUT THEMSELVES.

XXX

SUCCESSFUL PEOPLE ALWAYS CARRY TWO THINGS ON THEIR FACES.

SMILE AND SILENCE

SMILE TO SOLVE PROBLEMS !!!

SILENCE TO AVOID PROBLEMS!!!

XXX

FIVE THINGS MAKE AN INDIAN HAPPY

1) BUY ONE AND GET ONE FREE !!!

2) FLAT 50% OFF !!!

3) ‘TATKA’L TICKET CONFIRMATION!!!

4) INDIA WINNING IN CRICKET MATCH !!!

5) WIFE NOT AT HOME

XXXX

OUR LIFE BEGINS WITH OUR CRY, AND ENDS WITH OTHERS CRY.

TRY TO FILL THE GAP WITH LAUGHTER

AS MUCH AS POSSIBLE!!!!

XXXX SUBHAMXXXXX

tags – FIVE THINGS , INDIAN HAPPY

காற்றுள்ள போதே தூங்கிவிடு! கரண்ட் போனா தூக்கம் வராது!!(Post 9120)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 9120

Date uploaded in London – – 8 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 16

                                                    Kattukutty

தடைகள் தோற்கட்டும், மடைகள் திறக்கட்டும்,

சோகம் போகட்டும், யோகம் பெருகட்டும்,

நன்மைகள் நடக்கட்டும், நாடு நலம் பெறட்டும்,

மண்ணில் மறைந்து மக்கிப் போன உறவுகள் மலரட்டும்,

மகிழ்ச்சி பெருகட்டும், வெற்றிப் பூ பூக்கட்டும்!!!

XXX

10 வருஷத்திற்கு முன்,

வடை ஒன்று………….ரூ 1/-

CALL CHARGE ……ரூ 10/-

AFTER THE TECHNOLOGY CHANGE

வடை ஒன்று ………….ரூ 10/-

CALL CHARGE……….ரூ 1/-

வடை போச்சே…………!!!

XXXX

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும்போது

அவன் “புத்திசாலி”ஆகிறான்.

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை

கொள்ளும் போது “முட்டாள்” ஆகிறான்.

XXXXXX

தவறான பாதையில் வேகமாக ஓடும் மானை விட,

சரியான பாதையில் ஓடும் ஆமையாக இரு.

XXXX

இன்றைய புது மொழிகள்

ஒரு பனை சோத்துக்கு ஒரு குண்டா குழம்பு…….

தம்பி உடையார், அண்ணன் ரெட்டியார்,

ஊரான் புள்ளய ஊட்டி வளர்த்தா உன்பொண்டாட்டி

உன்ன சந்தேகப் படுவா…….

ஊரான் புள்ளய ஊட்டீல வளர்த்தா உன புள்ள

கொடைக்கானல்ல வளரும்!!!

XXXX

நல்ல மாட்டுக்கு 5 கிலோ புண்ணாக்கு……

தோல் கொடுப்பான் கறிக்கடை பாய் !!!

காற்றுள்ள போதே தூங்கிவிடு

கரண்ட் போனா தூக்கம் வராது!!!!

XXX

முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும்

அஹமது நட்பே நட்பு!!!

XXX

அஹிம்சை – காந்தியோடு எரித்து விட்ட ஒன்று.

இனஸ்யூரன்ஸ் – நவீன சீதக்காதி

உண்ணாவிரதம் – நாட்டில் பலர் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா!!!

வீடு – ஒரு கௌரவ சத்திரம்

கடவுள் – கஷ்டம் வரும்போது மட்டுமே நினைக்கப்படுபவர்

XXX

காதலிப்பதை விட திருமணம் செய்து கொள்ளலாம்.

எவன் மனைவிக்கோ செலவு செய்வதை விட நம்

மனைவிக்கே செலவு செய்து விட்டு போகலாம் !!!

போகும்போதே என்னை ரசித்துக் கொண்டே போ !!!

திரும்பி வர மாட்டேன்.

இப்படிக்கு உன் வாழ்க்கை.

tags –நவீன ஞான மொழிகள் – 16

புராணத்துளிகள்- யோக ரஹஸ்யம், பரமபதம் (Post No.9119)

PRIME MINISTER NARENDRA MODI DOING YOGA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9119

Date uploaded in London – –8 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது ஆரம்பிக்கப்படுகிறது.

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 1

ச.நாகராஜன்

  1. யோக ரஹஸ்யம்

ஸ்ரீ தேவியானவள் பர்வதராஜனுக்கு யோக ரஹஸ்யங்களையும் மந்திர சித்தி பற்றியும் உபதேசித்து அருளுகிறாள்.

இது தேவி பாகவதம் ஏழாம் ஸ்கந்தம் 35ஆம் அத்தியாயத்தில் வரும் பகுதியாகும்.

தேவி : ஓ! யோகசீலனே! ஜீவாத்ம, ப்ரமாத்ம ஐக்கியமே யோகம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தடைகள் உள்ளன. இதைத் தடுப்பவர்களே ஜீவான்ம பரமான்ம ஐக்கிய யோகத்தை அடைவர். இந்த யோகத்திற்கு எட்டு அங்கங்கள் உண்டு. அவையாவன : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவையாகும். இவையே யோகத்திற்கான சாதனங்களாகும்.

1. இயமமாவது :- அஹிம்சை, ஸத்தியம், களவில்லாமை, பிரம்மசரியம், தயை, சன்மார்க்கம், பொறுமை, தைரியம், மிதமான ஆகாரம், சௌசம் எனப் பத்தாகும்.

2. நியமமாவது :- தவம், சந்தோஷம், ஆஸ்திகம் அதாவது தெய்வம் உள்ளது என்ற நம்பிக்கை, தானம், தேவ பூஜை, சித்தாந்த சிரவணம், நாணம், புத்தி, ஜபம், ஹோமம் எனப் பத்தாகும்.

3. ஆசனமாவது : –  பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம், பத்ராசனம், வீராசனம் என ஐந்தாகும்.

பத்மாசனம் என்பது பாதங்களைத் தொடைகளின் மேல் வைத்து இரண்டு கைகளால் பெரிய விரல்களைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்திருத்தலாகும்.

ஸ்வஸ்திகாசனம் என்பது இரண்டு பாதங்களையும் தொடைகளுக்கும் முழங்கால்களுக்கும் இடையிலுள்ள சந்தில் வைத்து நேராக இருத்தலாகும்.

அடுத்து பத்ராசனம் என்பது புறங்கால்களைப் பிருஷ்ட பாகத்தில் மடக்கி வைத்து, விருக்ஷணத்தின் அடியின் வழியாக அப்பாதங்களை பாத சந்திகளோடும் கைகளால் பிடித்திருத்தலாகும்.

வஜ்ராசனம் என்பது தொடைகளின் மேல் பாதங்களை முறையாக வைத்து, முழங்கால்களில் கை விரல்களை மேல் முகமாக அமைத்து நிமிர்ந்திருத்தலாகும்.

வீராசனம் என்பது ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தைத் தொடையிலும் வைத்து சரீரத்தை நேராக வைத்திருத்தலாகும்.

4. பிராணாயாமம் : பிராணாயாமமாவது வெளியே இருக்கிற வாயுவை இடகலையினால் உள் வாங்கி பதினாறு மாத்திரையளவு சுழிமுனை நடுவில் நிறுத்திப் பின்னர் முப்பத்தியிரண்டு மாத்திரையளவு பிங்கலை நாடியின் வழியாய் விடுவதே ஆகும்.

இது சகர்ப்பம், விகர்ப்பம் என இருவகைப்படும். சகர்ப்பம் என்பது அடிக்கடி வெளியே செல்லும் வாயுவை பன்னிரண்டு மாத்திரை அல்லது பதினாறு மாத்திரை காலம் ஜபம் மற்றும் தியானிதிகளால் உள்ளே கிரஹித்து ஜபதியானிதிகளைச் செய்தல் ஆகும்.

விகர்ப்பம் என்பது ஜபம் மற்றும் தியானம் இல்லாமல் மேலே கூறியபடி பிராணாயாமம் செய்தலாகும். இப்படி முறையாக பிராணாயாமத்தைச் செய்யும் காலத்தில் சரீரம் வியர்க்குமானால் அதமம் என்றும், நடுங்குமானால் மத்திமம் என்றும் பூமியை விட்டு மேலெழும்புமானால் உத்தமம் என்றும் சொல்லப்படும்.

5. பிரத்யாஹாரம் : பிரத்யாஹாரமாவது இயம, நியமாதிகளால் கொள்ளப்பட்ட உத்தம குணங்கள் நிறைந்து, தான் எண்ணிய அபீஷ்டங்களைப் பெறுமளவும் இந்திரியங்களை விஷயங்களில் போக விடாமல் தடுத்து ஸ்வாதீனம் செய்து கொள்ளலாகும்.

6. தாரணை : தாரணையாவது காலில் உள்ள பெருவிரல்கள், முழங்கால்கள், தொடைகள், மூலாதாரம், ஆண்குறி, நாபி, இருதயம், கண்டம், கன்னம், நாசி, நடுப்புருவம், நெற்றி, தலை, துவாதசாந்தம் இவ்விடங்களில் பிராணவாயுவை விதிமுறையாக நிறுத்துவதாகும்.

7. தியானம் : தியானமாவது தன்னால் விரும்பப்பட்ட தேவதையோடு தனது அசைவற்ற மனதை லய்ப்பித்தல் ஆகும்.

8. சமாதி : சமாதியாவது ஜீவாத்மாவாகிய தான் பரமாத்மாவினின்று வேறாகாது, சமத்துவ பாவனை செய்து கொண்டு எப்போதும் இருப்பதாகும்.

இவையே அஷ்டாங்க யோக லக்ஷணம் என்று யோக விசாரம்  உடையவர் கூறுவர்.

*

2. பரமபதம் அடைவது எப்படி?

ஸ்ரீமத் பாகவதத்தில் சதுர்த்த ஸ்கந்தத்தில் எட்டாம் அத்தியாயம் துருவ சரித்திரத்தை விவரிக்கிறது.

அதில் நாரத  மஹரிஷி துருவனுக்கு பரமபதம் அடைவது எப்படி என்பதை விவரிக்கிறார். அதைக் கீழே காணலாம்.

நாரதர் துருவனிடம் கூறுகிறார் :-

எந்த ஒருவனுக்கு சுகமோ அல்லது துக்கமோ தெய்வாதீனமாய் விளையுமோ அவன் அங்ஙனம் நேர்ந்த சுக, துக்கங்கள் இரண்டினாலும் மனக் களிப்புற்றவனாகவே இருப்பானாகில் அவன் கடைசியில் பிரகிருதி மண்டலத்திற்கு வெளிப்பட்டதாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தைப் பெறுவான். தெய்வாதீனமாக சுகம் நேரும் போது மனக் களிப்புறலாம். ஆனால் துக்கம் நேரும் போது எப்படி மனக்களிப்பு அடைய முடியும் என்று கேட்பாய் ஆகில், சொல்லுகிறென் கேள்.

தெய்வாதீனமாய் வரும் சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டிலும் மனம் கலக்கம் அடையக் கூடாது. இரண்டிலும் மனக்களிப்பு மாறாமல் இருப்பதே யுக்தம். சுகம் நேரில் புண்ணியமானது நசித்துப் போகின்றது. துக்கம் நேரில் பாவம் நசித்துப் போகிறது. எப்படி பாவம் துக்கத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்குமோ, அதே போலவே புண்ணியமும் சுகத்தை அனுபவிப்பதாகி மென்மேலும் சரீர சம்பந்தத்தை விளைவித்து சம்சாரத்தை வளர்க்கும்.

ஆனால் பாவத்தினால் விளையும் சரீரம் துக்கானுபவத்திற்கும், புண்ணியத்தினால் விளையும் சரீரம் சுகானுபவத்திற்கும் இடமாகும் என்பதால் அனுபவம் மாத்திரமே வித்தியாசமாக இருக்கும். ஆயின் சம்சாரத்தை வளர்ப்பதில் புண்ய பாவங்கள் இரண்டுமே சமமானவையே.

சம்சார வர்த்தகங்களான புண்ய, பாவம் இரண்டும் சுகம் மற்றும் துக்க அனுபவங்களால் கழிந்து விடும் என்றால் உடனே சம்சாரத்திலிருந்து ஜீவன் விடுபடுவான் ஆகையால் அந்த இரண்டைப் பற்றியும் விவேகம் உள்ளவன் சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி வருத்தப்படலாகாது. சுகானுபவத்தில் சுகம் அனுபவிக்கப் பெற்றோம் என்று அதில் மனப்பற்றுடன் சந்தோஷிக்கக் கூடாது.  சரீர சம்பந்தத்தை விளைவிக்கக் கூடிய புண்ணியம் நசித்துப் போகப் பெற்றோம் என்று சந்தோஷமே அடைய வேண்டும். அதே போல துக்க அனுபவத்தில் பாவம் நசிக்கப் பெற்றோம் என்று சந்தோஷிக்க வேண்டுமேயன்றி வருத்தப்படக் கூடாது.

இப்படி தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு சுக துக்கம் ஆகிய இரண்டிலும் எவன் ஒருவன் மனக்களிப்பு மாறாது இருப்பானோ அவன் ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்து பரம பதம் போய்ச் சேர்வான்.

TAGS – புராணத்துளிகள் 3/1, பரமபதம்,அஷ்டாங்க யோகம்

*

INDEX 42 FOR LONDON SWAMINATHAN’S MAY 2016 ENGLISH & TAMIL ARTICLES (Post.9118)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9118

Date uploaded in London – –7 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

INDEX 42- MAY 2016

List of Tamil Posts

தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856); 31 MAY 2016

சூரியனுக்கு 37 பெயர்கள்! (Post No. 2850)

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே! (Post No.2847)

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

விஷம் எத்தனை வகை? எது விஷம்? (2842)26/5

கம்ப ராமாயணத்தில் பஞ்ச மா பாதகம்- 5 பாவங்கள்(Post No.2838);

மனது இரண்டு வகைப்படும்! (Post No.2835);24/5

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! (கட்டுரை எண்.2832);23/5

கடலுக்கடியில் சக்ரவாள மலை:கம்பன் தரும் தகவல் (Post No. 2830);22/5

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828);21/5

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826);20/5

தமிழர்களின் கோழிச் சண்டை, ஆட்டுக் கிடாச் சண்டை!! (Post No.2823);19/5

சமயோசித புத்தி! நறுக்கென பதில்கள்!! (Post No 2821);18/5

தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819);17/5

என் கணவர்: ராஜலக்ஷ்மி சந்தானம் (Post No 2819);17/5

வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816);16/5

ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814);15/5

தமிழ் முட்டாளும் சம்ஸ்கிருத முட்டாளும் (Post No.2810);14/5

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு! (Post No.2807);13/5

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல்!! (Post No.2804);12/5

நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும் ( Post No.2801);11/5

ஆட்டிடையன் ராஜாவான கதை! (Post No.2798);10/5

அறவிலை வணிகன் ஆய் அல்லன்! (Post No.2795);9/5

அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792);8/5

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790);7/5

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787);6/5

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783);5/5

அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது! (Post No 2780);4/5

கந்தபுராணத்திருந்து ‘ரஸவாதி ஏமாற்றிய கதை’ (Post No 2777);3/5

கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774);2/5

உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! (Post No 2772);1/5

S NAGARAJAN’S TAMIL ARTICLES ARE ALREADY INDEXED AND BLOGGED HERE; THE NUMBERS OF HIS POSTS ARE 2855, 2852,2849,2846,2843,2840, 2837, 2834,2827,2815,2812, 2809, 2806,2803, 2800, 2797, 2794,2791,2788, 2785,2782,2779,2775,

LIST OF ENGLISH ARTICLES IN MAY 2016

The Choice of Four Friends (Post No.2857), 31  MAY 2016

Chinese and Indian Parables of the Turtles and Frogs (Post No.2854);30/5

Animals in Buddha’s Dhammapada (Post No 2851);28/5

No Bees no Honey, No Work no Money (Post No.2848);28/5

Minus X Minus = Plus: Hindu Science of Poisons (Toxicolo-gy)—Post No 2845;27/5

A Good Face is a Letter of Recommendation (Post No.2841);26/5

Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839);25/5

Two Types of Mind -Pure Mind and Impure Mind (Post No.2836)24/5

Men are NOT to be measured by Inches!!! (Post No.2833); 23/5

‘Madura, Most Celebrated City of the Kingdom of Regio Pan-dionis’ (Post No.2831);22/5

How Hindu Lahore became Muslim Lahore: A.H. Hallam Murray, Year 1905 (Post No 2829);21/5

Auspicious Words in Sanskrit and Tamil Books (Post No.2825);20/5

Lateness Anecdotes (Post No. 2824);18/5

Melancholy Anecdotes (Post No. 2822);18/5

Three Tamil Kings fast unto Death! (Post No 2820);17/5

A New Anecdote from Ananda Ramayana (Post No.2817);16/5

Mahabharata–about Women! (Post No.2813);15/5

Children and Fools have merry lives (Post No 2811);14/5

Bernier’s Description of Peacock Throne (Post No.2808);13/5

Quick Thinking Anecdotes! (Post No.2805);12/5

Misers are the Best Philanthropists! (Post No 2802);11/5

Secret Box of a Shepherd! Persian Story!! (Post No.2799);11/5

Two Types of Thieves! Two Types of Knowledge! (Post No.2796);9/5

An Ounce of Mother is worth a Ton of Priest! (Post No.2793);8/5

Interesting Salesman Anecdotes (Post No.2789);7/5

Boy and the House Hunter: Evidence Anecdotes (Post No.2786);6/5

What is Rare? Views of Three Great Poets! (Post No.2784);5/5

Art of Bargaining! How to bargain? (Post No.2781);4/5

IGNORANCE: Sexy Simile of Tamil Poet Valluvan! (Post No.2778);3/5

DROWN MISERS IN THE SEA: MAHABHARATA (Post No 2773);2/5

‘Hitch your wagon to a star’ – Ralph Waldo Emerson (Post No 2771); 1ST MAY 2016.

–SUBHAM–

tags– Index 42, swaminathan posts, May 2016

நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் ! (Post.9117)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9117

Date uploaded in London – –7 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகை பிறக்கின்ற வாயன்,பொறி பிறக்கின்ற கண்ணன் !

கம்ப ராமாயணம் யுத்த கண்டத்தில் ராவணனின் தோற்றம் பற்றிய ஒரு பாடல் மிகவும் ரசித்துப் படிக்க வேண்டிய பாடல் . அதை  யாராவது வரைந்து ஓவியம் தீட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் . இருந்த போதிலும் நம் மனதில் அதை ஓவியமாக வரைந்து ரசிப்போம்.

இராவணன் களம் காண்படலத்தின் கடைசி பாடல் இது.

அரக்கர் படைகளை எல்லாம் இராம பிரானின் அம்புகள் அழித்ததை ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டான் . பின்னர் கீழே இறங்கி வந்தான்.

கோபத்தால் ‘ஹ ஹா  ஹா’ என்று சிரித்தான்.

நாக்கை வெளியே நீட்டி மீசையை நக்கிக் கொண்டான்.

கண்களில் தீப்பொறி பறந்தது.

மூக்கிலிருந்து சூடான கோபக்  காற்று அனல் கக்கியது .

நெஞ்சில் மேலும் குற்றம் செய்யும் எண்ணம் பிறந்தது.

தீக்கொழுந்து விட்டெரியும் சொற்கள் வாயி லிருந்து வந்தன

இந்தக் கோலத்தில்  அரசவைக்குச் சென்றான்

சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் முகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தீயைக் கக்கியது.

அப்படிச் சொல்லிவிட்டால் கம்பனுக்கும் நமக்கும் வித்தியாசமே இராது. இதையே கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள்

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய்நக்கப்

புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன்

மிகை பிறக்கின்ற நெஞ்சன்  வெஞ்சினத் தீ  மேல் வீங்கி

சிகை பிறக்கின்ற சொல்லன்  அரசியலிருக்கை சேர்ந்தான்

–இராவணன் களம் காண் படலம், யுத்த காண்டம் , கம்ப ராமாயணம்

இப்படி ஒவ்வொரு பாடலையும் ரசித்துப் படித்தால் வாழ்நாள் முழுதும் ராமாயணம் படிக்கலாம்.  ஏன் என்றால், இரண்டாம் முறை படிக்கும் பொழுது புதிய பொருள் தோன்றும்!!!

–SUBHAM—

tags—நகை பிறக்கின்ற வாயன்,இராவணன்