சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2 (Post No.10,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,618

Date uploaded in London – –    1 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2

நேற்றைய கட்டுரையில், ஏழடுக்கிய பாலை பற்றி பரி பாடலிலும் காளிதாசனின் ரகு வம்சம் மற்றும் சாகுந்தலம் நாடகத்திலும் கண்டோம் .  அதே போல ஏழிலைகள் கொண்ட சிற்பங்களை கி.மு 900 அஸீரிய நாகரீகத்தில் கண்டோம். மூன்றிலும் புனிதத் தன்மை உளது.

இதோ மேலும் சில மரம் விஷயங்கள்

காளிதாசன் நூல்கள்

மேக தூதம் 25- கிராம சதுக்கத்தில் புனித அரச மரம்:_

காளிதாசன், மேகத்தை தனது காதலி இருக்கும் இடத்திற்கு தூது அனுப்புகையில் குறுக்கிடும் தசார்ணம் என்னும் நாடு பற்றி வருணிக்கிறான் . அங்கே தினமும் இல்லத்தரசிகள் வழங்கும் பலி உணவினை காக்கைகள் உண்டுவிட்டு பெரும் ஆரவாரத்துடன் கூடு கட்டும் காலம் இது. கூடுகள் கிராம சைத்யங்களில் இருக்கும்.

இதற்கு உரைகாரர்கள் எழுதிய பாஷ்யத்தில் மேடைகள் அமைக்கப்பட்ட மரங்களென்றும் ஆல் , அரசு முதலியவற்றைச் சுற்றி இப்படி மேடை அமைப்பர் என்றும் உள்ளது 

இதே பாட்டில் அன்னப் பறவைகள் மானஸ ஏரியை நோக்கிப் பறக்கும் காட்சியும் உள்ளது. பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் புறநானுற்றுப் புலவரும் இது பற்றிப் படியுள்ளதை முன்னரே எழுதியுள்ளேன் (புறம் 67)

xxx

ரகு வம்சம் 17-12  பல்வேறு மரம் செடி கொடிகளுடன் அபிஷேகம் :–

மன்னன் அரியாசனத்தில் அமர்ந்தபோது அறுகு , யவ தானிய முளை , ஆலம் பட்டை, இளம் தளிர் இவைகளை வைத்து ஆரத்தி எடுத்ததாகவும் உரைகாரர்கள் கூறுவார்கள்.

“புற்களில் அரசன் அருகம் புல் ; அது போல நீயும் சிறந்த அரசனாகுக” என்று பட்டமேற்கும் சம்ஸ்க்ருத மந்திரங்கள் கூறுகின்றன. ஆகவே பட்டமேற்கும் மன்னர்கள் அருகம்புல் மீது கால் வைத்த ஏறினார்கள் என்ற அரிய செய்தியை தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது நூலில் கூறுகிறார்.  இது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்கம் என்பது காளிதாசன் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.

சாகுந்தலத்தில் சகுந்தலா எப்படியெல்லாம் மரங்களைப் போற்றி வளர்க்கிறாள் என்றும் காளிதாசன் காட்டுகிறான்

XXX

வட இந்தியா முழுதும் வட சாவித்திரி விரத த்தின்போது இன்றும் பெண்கள் ஆலமர வழிபாடு செய்கின்றனர்

சங்க இலக்கிய நூல்கள்

புற நானூறு 198- வ.வ . பேரி சாத்தன் — ஆலமரக் கடவுள்

புற நானூறு   199  – மகா பத்மன் – கடவுள் ஆலம்

“காமர் நெஞ்சம்  ஏமாந்து உவப்ப

ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்

வேல் கெழு குருசில் “

பெரும்பதுமனார் பாடிய அடுத்த பாடலில் ,

“கடவுள் ஆலத்துத் தடவுசினைப் பல் பழம்

நெருநல் உண்டனம் என்னாது பின்னும்” …..

என்று பாடுகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு வரும் யாதவ குல இளைஞர்கள் ஆலம் , மரா மரங்களின் கீழ் உறையும் தெய்வத்தை வணங்கிவிட்டு வந்ததாக முல்லைக் கலி பாடிய நல்லுருத்திரனார் பாடுகிறார்

Xxxx

குறுந்தொகை 87- கபிலர் பாடியது  — மரத்திலுள்ள கடவுள் கொடியோருக்கு துன்பம் கொடு ப்பார்.

கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடலில்

“மன்ற மரா அத்த பே எ முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூ உ மென்ப யாவதும்

கொடியரல்ல ரெங்குன்று கெழு  நாடர்” — பாடல் 87

என்பார்

பொருள்-

பொது இடத்தில் மரத்தின் கண் தங்கும் அச்சம் ஊட்டும் கடவுள் கொடுமையுடையாரை  வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்

கலித்தொகை 101-14/15 மற்றும் பரிபாடல் 8-65/68 வரிகளில் கடவுள் வசிக்கும் மரங்கள் வருவதைக் காணலாம்

அக நானூறு 70-  கடுவன் மள்ளனார் பாடல் – ஆல  மரத்தின் கீழ் அமர்ந்து இராம பிரான் ,வானர என்ஜினீயர்களுடன் கடல் மீது பிரிட்ஜ் கட்டுவது பற்றி ஆலோசனை.

xxx

நற்றிணை 83- மகாதேவன்பாடல்- கடவுள் முதுமரம்

நற்றிணையில் பெருந்தேவனார் பாடிய பாடலில் கூகையை நோக்கி ஒரு பெண் பாடுவதாக அமைந்துள்ளது. கடவுள் உறைகின்ற பருத்த மரத்தின் மீது இருக்கும் ஆந்தையே இரவில் குரல் எழுப்பி எல்லோரையும் எழுப்பிவிடாதே என்கிறாள் . இவ்வாறு கடவுள் வசிக்கும் மரம் என்ற கருத்து நெடுகிலும் காணப்படுகிறது .

சம்ஸ்க்ருத நூல்களிலும் இக்கருத்து உளது

இது தவிர நாணயங்களில் ‘மேடை அமைக்கப்பட்ட மரம்’   உள்ளது

சிற்பங்களிலும் மரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையில் 15-1ல் வரும் அஸ்வத்த/ அரச மரம் பற்றிய உவமை எல்லோரும் அறிந்ததே 99ஊர்த்வமூலம் அதஸ் சாகம………………..

இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன ? மரங்களில் கடவுள் உறைவர் ; அவர்கள் தீயோரைத் தண்டிப்பர் ; மரங்களில் உள்ள தெய்வங்கள் வணங்குதற்குரியர் என்ற கருத்துக்கள் காளிதாஸனிலும் சங்க இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது

–subham—

tags- சங்க இலக்கியத்தில், மர வழிபாடு,

மன்னிக்க வேண்டுகிறேன்! மரங்களே!

deodar-tree1

Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru)

Research Paper written by London swaminathan

Research Article No.1664; Dated 21 February 2015.

இயற்கையை மதிக்கக் கற்றுக் கொடுப்பது பாரதப் பண்பாடு! இயற்கையை ‘மிதி’க்கக் கற்றுக் கொடுப்பது மேற்கத்தியப் பண்பாடு!

எங்கள் லண்டனில் அண்டர்கிரவுண்ட் (மெட்ரோ) ரயில்களில் “கால்களை உட்காருமிடத்தில் வைக்காதீர்கள்” – என்று எழுதிப் போட்டிருக்கும். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் எதிரே இருக்கும் ஆசனத்தில் கால்களை வைத்தே உட்காருவர். அவர்கள் உட்காந்திருக்கும் இடத்தையும் யாரோ ஒருவன் இப்படி அசுத்தம் செய்திருக்கிறான் என்பதை ஏன் அவர்கள் அறிவதில்லை?

ஏன் என்றால் இயற்கையை மதிக்கும் “விஷ்ணு பத்னி நஸ்துப்யம்” – போன்ற விஷயங்களை அவர்கள் தாய் தந்தையர் கற்பிக்காததுதான்.

ebony-tree2

கருங்காலி (எபனி) மரம்

அந்தக் காலத்தில் எல்லா இந்துக்களும் காலையில் எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்று காலையில் நினைவுகூற வேண்டிய நல்ல விஷயங்களைப் பாடல் வடிவத்தில் நினைவு கூறுவர். அதில் ஒரு ஸ்லோகம்:

ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே – என்று சொல்லும்

பொருள்:–நீராரும் கடலுடுத்த நிலமடந்தையே! என் கால்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதைப் பொறுத்தருள்க – என்று சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருப்பர்.

சிறு வயது முதலே, இந்துக்கள் — நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவைகளை “உயிர் வாழத் தேவையான அளவு மட்டுமே” பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய தத்துவத்தைப் போதித்தனர். மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த — ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரமான – “ஈஸாவாஸ்யம் யத் ஸர்வம்” – என்ற மந்திரமும் இதே கருத்துடைத்தே!

kadamba

கடம்ப மரம்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிகிரர் எழுதிய, அற்புதமான ஸம்ஸ்கிருத என்சைக்ளோ பீடியா – பிருஹத் சம்ஹிதா — வில் இறைவனின் திரு உருவங்களைச் சமைப்பதற்கு மரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதில் உள்ள சில சுவையான விஷயங்களை மட்டும் தருகிறேன்.

2_vilvam_tree

வில்வ மரம்

1.இறைவனின் திரு உருவத்தைச் செதுக்க தெரிந்தெடுக்கப்பட்ட மரத்தை முதலில் பூக்களால் பூஜித்து வழிபடவேண்டும் .உணவு படைக்க வேண்டும்.

2.பிராமணர்கள் கோவில் கட்டுவதானால் தேவதாரு, சந்தனம், வன்னி மரம், மதூக மரம் ஆகிய மரங்களால் சிற்பம் செய்யலாம்;

க்ஷத்ரியர்களாக இருந்தால் அரச மரம், கடிர மரம், வில்வ மரம், அரிஷ்ட மரம்

வைஸ்யர்களாக இருந்தால் ஜீவக (வேங்கை), சிந்து, கடிர ,ச்யாந்தன மரங்கள்

சூத்திரர்களாக இருந்தால் திண்டுல்க, கேசர, அர்ஜுன (மருத மரம்), சார்ஜ, மாமரம், சால (ஆச்சா) மரங்களால் சிற்பம் செய்யலாம்

(இதிலிருந்து அக்காலத்தில் நான்கு ஜாதியினரும் கடவுள் சிற்பங்களை நிர்மாணித்து வழிபட்டது தெரிகிறது.)

vengai3

வேங்கை மரம்

  1. வெட்டுவதற்கு முன்பாக மரத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பால், சாதம், கஞ்சி, ஊதுபத்தி, சாம்பிராணி முதையவற்றைப் படைத்துவிட்டு மரத்தில் வசிக்கும் தேவர், அசுரர், பேய்கள், சிவ கணங்கள், முன்னோர்கள், கணபதி, சிவன் ஆகியோரை வழிபட்டுவிட்டு மரத்தைத் தொட்டுக்கொண்டே கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்:

“ஓ, மரமே! ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்குவதற்காக உன்னைத் தெரிந்தெடுத் துள்ளோம். உனக்கு நமஸ்காரம். சாஸ்திர விதிகளின்படி செய்வதால் இதை தயவுசெய்து ஏற்றுக் கொள்வாயாக.உன்னிடத்தில் வசிக்கும் அனைவரும் நான்படைத்த படையல்களை ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மரத்திற்குச் சென்று வசிப்பார்களாக. எங்களை மன்னித்துவிடு. உன்னை வணங்குகிறேன்”

–அத்தியாயம் 59,பிருஹத் சம்ஹிதா

jamblon_03

ஜம்பூ (நாவல் மரம்); ஜாம்பூத்வீபம் = நாவலந்தீவு

naval

நாவல் பழம்

எவ்வளவு பணிவு பாருங்கள்! இது மூட நம்பிக்கை அல்ல. சங்க இலக்கியச் சன்றுகளை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். ஒரு பெண் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்த மரத்தின் கீழ் காதல் செய்ய மறுக்கிறாள். ஏனெனில் அது அவளுடைய சகோதரியாம். இதே போல உலக மஹா கவிஞன் காளிதாசனும் சகுந்தலாவுக்கும்- இயற்கைக்கும் உள்ள உறவு முறையை சாகுந்தலத்தில் வருணித்திருப்பதையும் முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் தந்து விட்டேன். சகுந்தலா என்றாலே – பறவைப் பெண் – என்று சம்ஸ்கிருதத்தில் பொருள். இது பாரதீய சிந்தனையின் மகத்தான உயர்வைப் பிரதிபலிக்கிறது. இமயம் முதல் குமரி வரை இது எதிரொலிப்பது என் காதுகளில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கிறது.

shami-puja

வன்னி மரத்துக்கு (ஷாமி மரம்) பூஜை;சுவாமி கணப்தி சச்சிதானந்தா

வனஸ்பதி சிவ பெருமான்

பாரதீயனுக்கு எப்போது இந்த சிந்தனை மலர்ந்தது என்பதை எண்ணும் போது இன்னும் வியப்பு மேலிடுகிறது. மோசஸ் பத்து கட்டளைகளைப் பெறுவதற்கு முன், ஹோமர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதும் முன், சரஸ்வதி நதி தீரத்திலும், கங்கை நதி தீரத்திலும், அகத்தியன் மூலமாக காவிரி நதிதீரத்திலும் ஒலித்த யஜூர் வேதத்தில் – பிறவா யாக்கைப் பெரியோன் ஆன சிவ பெருமானை “வனங்களின் அதிபதி” (வனானான் பதி) என்றும் மரங்களின் அதிபதி என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதே இந்த சிந்தனை பூத்துவிட்டது.

இமயம் முதல் குமரி வரையுள்ள – கங்கை முதல் காவிரி வரையுள்ள — சிவன் கோவில்களில் தினமும் நடக்கும் அபிஷேகத்தின்போது ருத்ரம்-சமகம் என்ற யஜூர்வேத மந்திரத்தைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செய்வர். அதில்தான் மேற்கூறிய மந்திரங்களும் ஓம் நம சிவாய என்ற அற்புத மந்திரமும் வருகிறது. மேலும் சிவனையே காடாக வருணித்து அவன் தலை முடியெல்லாம் பசுமையாகக் காட்சியளிப்பதாகவும் மந்திரம் சொல்லுவர். அதில் அவனை உயிரினங்களனை த்துக்கும் இறைவன் என்னும் “பசுபதி” என்ற சொல்லும் வரும்.

gsv_vanni

வ்ருக்ஷானாம் ஹரிகேசேப்ய: பசூனாம் பதயே நம:

என்றும் நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேசேப்யோ என்றும் போற்றுவர். இன்னும் பல இடங்களில் நீ பச்சிலை, நீ செடி,கொடி புதர் என்றும் சொல்லுவர்.

விஷ்ணுவையும் இப்படி வருணிப்பர். புகழ் பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நீ ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று போற்றுவர் (ந்யக்ரோதோ அஸ்வத்த உடும்பரா).

gsv_paraay

Following is taken From Face book posting by Akila Kalaichelvan: Compare this with point No.2

சிற்பங்கள் செய்யப்பட்ட மரங்கள்
பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, துவளை, மருக்காரை, பல முள்ளிப் பாலை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகியன இரண்டாம் வகை மரங்களாகும். வெட்பாலை, மராமரம் அல்லது ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளைக் கருங்காலி, அசோகம், கருவேம்பு ஆகியவை மூன்றாம் பிரிவு மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, செண்பகம், மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியன நான்காம் வகையைச் சேர்ந்த மரங்களாகும். இத்தனை வகை மரங்கள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ளமருது ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

மரங்களை வளர்ப்போம்!! மரங்களை மதிப்போம்.

acacia catechu_tree (1)

அகேசியா கடேச்சு

சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார புத்ரர்கள்!

Deodar means Tree of Gods

 

Picture of Deodar; Deodar means Tree of the Gods.

குழந்தை இல்லாதோர் மற்றவர்களின் குழந்தைகளை தத்து எடுத்தலையும் சுவீகாரம் எடுப்பதையும் நாம் அறிவோம். சிவ பெருமானும், தமிழர்களும் மரங்களை தத்து எடுத்து புத்திரர்களாக வளர்த்ததைப் பலர் அறியார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளாலார் பெருமான் நமது முன்னோர்களின் கருத்தைத்தான் மீண்டும் சொல்லி இருக்கிறார்.

 

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசன் ஒரு புதிய செய்தியைக் கூறுகிறார். சிவ பெருமான் ஒரு தேவதாரு மரத்தை மகனாக வளர்த்தார் என்று. இதே போல நற்றிணைக் கவிஞன் ஒருவன் ஒரு தமிழ்ப் பெண், அவளுடைய மகளாக வளர்த்த ஒரு புன்னை மரம் பற்றிய சுவையான செய்தியைக் கூறுகிறார். மேலே படியுங்கள்:

 

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

 

ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் கூறுகிறான்:’’அதோ அந்த தேவ தரு மரத்தைப் பார். அதை சிவ பெருமான் மகன் போல வளர்த்தார். பார்வதி தேவி தனது இரண்டு ஸ்தனங்களால் முருகப் பெருமானுக்கு எப்படி பால் ஊட்டினாரோ அதே போல இந்த மரத்துக்கும் தங்கக் குடங்களால் தண்ணீர் வார்த்தார். ஒரு நாள், ஒரு காட்டு யானை அதன் தலையை இதன் பட்டையில் உரசவே அது உதிர்ந்தது. தேவிக்கு மிக வருத்தம். முருகப் பெருமானை அசுரர்கள தாக்கி காயப் படுத்தியது போல அவர் வருத்தப் பட்டார்’’.–(ரகு.2–36/39)

 

இதே கருத்தை மேக தூதத்திலும் (பாட்டு 74) கூறுவார்: ‘’ஏ மேகமே! அங்கே ஒரு மந்தார மரத்தைப் பார்ப்பாய். என் மகன் போல வளர்த்த மரம். இப்போது அதுப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். என் காதலி அதனை எளிதாகப் பறிக்கும் அளவுக்கு அது வளைந்து தொங்கும். (இந்தக் கருத்து நற்றிணைப் பாடல் 170-இல் எதிரொலிப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன்).

 

காளிதாசனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலத்தில் முழுக்க முழுக்க தாவர, பிராணிகள் அன்புச் செய்திகளைக் கண்கிறோம். மல்லிகைக் கொடிகளை சகுந்தலை, தனது சகோதரி என்று அழைக்கிறார். ஒரு மல்லிகைக் கொடிக்கு ‘வனஜோத்ஸ்னி’ என்று பெயரும் சூட்டுகிறார். மான்களையும் சகோதரி என்றே அழைக்கிறார்.  சாகுந்தலம் நாலாவது காட்சி முழுதும் இந்த வசனங்கள் வருகின்றன. ஓரிடத்தில் தோழி சொல்கிறார்: ‘’அதோ பார். மாதவி பூப் பந்தல். உனது தந்தை கண்வ மகரிஷி உன்னை வளர்த்தது போல அன்பாக ஊற்றி வளர்த்தாரே, நினைவு இருக்கிறதா?’’

 

குமார சம்பவம் (2-55) என்னும் காவியத்தில் விஷ மரத்தையும் கூட யாரும் அடியோடு வெட்ட மாட்டானே எனற வசனமும், சாகுந்தலத்தில் (4-1) மல்லிகைக் கொடியில் எந்த மகா பாவியாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற வசனமும் வருகிறது. இவை அத்தனையும் தமிழிலும் இருக்கின்றன.

punnai-tree

Picture of Punnai Tree

தமிழ் மரம் ஒரு தங்கை

நற்றிணையில் (172) ஒரு அற்புதமான பாடல். எழுதியவர் பெயர் பாடற்குறிப்பில் இல்லை:

‘’யாம் தோழிமாரோடு விளையாடும்போது வெண்மையான மணலில் புதைத்து மறந்து கைவிட்ட புன்னை மர விதை முளைத்து வெளிவந்தது. அதற்குத் தேன் கலந்த இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அது வளர்ந்து மரமாகியது. அப்போது அன்னை, ‘’நும்மிலும் சிறந்தது புன்னை; அது நும் தங்கையாகும்’’ என்று புன்னையது சிறப்பைக் கூறினாள். ஆகையால் புன்னையின் கீழ் உள்ள நிழலில் நும்மொடு அளவளாவலை யாம் நாணுகிறோம்’’.

 

சகுந்தலை சொன்னதை அப்படியே இந்தப் பாடலில் காண்கிறோம். நான் ஏற்கனவே எழுதிய ஏழு கட்டுரைகளில் காளிதாசன், சங்க இலக்கிய காலத்துக்கு முன் , கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொன்னதற்கு இது மேலும் ஒரு சான்று.

 

நற்றிணை 230 ஆம் பாடலில், நான் வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றியது போல மகிழ்கிறேன் என்று பாடுகிறான் ஒரு கவி. இன்னொரு பாடலில் மருந்து மரத்தைக் கூட யாரும் முழுதும் வெட்ட மாட்டார்களே என்று வசனம் பேசுகிறான் ஒரு தமிழ்ப் புலவன் (நற்றிணை 226-கணி பூங்குன்றனார்).

தாவரங்கள், பிராணிகள் பால் அன்பு மழை பொழிந்த கடை எழு வள்ளல்கள் பாரியும் பேகனும் உலகிற்கே உதாரணமாகத் திகழ்கிறார்கள். முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி. கொழு கொம்பு இல்லாமல் காற்றில் பட படத்தவுடன் அவன் மனமும் படபடுத்தது, பரிதவித்தது. பேகன்,  மழை மேகம் கண்டு ஆடிய மயிலைக் குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி தனது விலை மிகு சால்வையைப் போர்த்தினான் அன்றோ. இவர்கள் எல்லாம் சகுந்தலையின் சகோதரர்கள் என்றால் மிகையாகா.

 

ராமன், சீதை, கண்ணகி, சகுந்தலை பிரிவைப் பொறுக்க முடியாமல் பிராணிகளும் தாவரங்களும் என்ன என்ன செய்தன என்பது பற்றீ நூற்றூக் கணக்கான உதாரணங்கள் உள. எழுத இடம் போதா.

ரிஷி முனிவர்களைச் சந்திக்க காட்டிற்குள் நுழைந்த அரசர்கள் தொலை தூரத்தில் சேனை சைன்யங்களை நிறுத்திவிட்டு வருவார்கள். இதற்குக் காரணம் கூறும் காளிதாசன், செடி கொடி மரங்களை சேதமுறாமல் தடுக்கவே என்பான் (ரகு 11-52). புறச் சூழல் பாதுகாப்பிலும் மரங்கள் பாதுகாப்பிலும் எத்தனை கவனம்!! இன்று பத்திரிகைகளில் பெரிதாக வரும் விஷயங்களை 2000 ஆண்டுகளுக்கு முன் போகிற போக்கில் கவிதையில் தந்த வடமொழி, தென் மொழிக் கவிஞர்கள், ஒரே நாடு ஒரே சிந்தனை என்ற கொள்கைக்கு வலுச் சேர்ப்பர்.

 

இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே (பைகஸ்) குடும்பத்தைச் சேர்ந்த ஆல மரம், அரச மரம், அத்தி மரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி முதல் பிராமணர்களின் அன்றாட யாகம் சமிதாதானம் ஆகியன முதல் முக்கியத்துவம் பெறும் அரச மரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் இருப்பதாக வட மொழி ஸ்லோகம் கூறுகிறது.

cedus deodara in Kumaon, Himalayas painting at London Kew Gardens

 

Picture of Himalayan Deodars; painting from Kew Gardens, London

மரங்கள் வாழ்க! ’’காடு வளர்ப்போம், நல்ல கலை வளர்ப்போம்’’:-பாரதி

Please read my earlier posts on Kalidasa:

1.Gem stones in Kalidasa and Tamil Sangam Literature

2.Holy River Ganges in Kalidasa and Sangam Tamil Literature

3.Gajalakshmi in Kalidasa and Sangam Tamil Literature

4.Sea in Kalidasa and Sangam Tamil Literature

5. Bird Migration in Kalidasa and Tamil literature

6.Hindu Vahanas in Kalidasa and tamil literature

7.Amazing Statistics on Kalidasa

8.Kalidasa’s age: Tamil works confirm 1st Century BC

9.சங்கத்தமிழ் இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள்

10. காளிதாசனின் னூதன் உத்திகள்: தமிழிலும் உண்டு

Contact swami_48@yahoo.com; pictures are used from other websites;thanks.