பார்ப்பனிக்கு வடமொழிச் சீட்டு

சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் ஒரு முக்கியமான செய்தி வருகிறது. பஞ்சதந்திரக் கதைகளில் வரும் கீரி-பார்ப்பனி கதையைக் குறிப்பிட்டு பின்னர் நடந்ததை மாடல மறையவன் கூறுகிறான்.

ஒரு பார்ப்பனப் பெண் வீட்டில் கீரி வளர்ந்து வந்தது. அவள் தண்ணீர் பிடிக்கப் போனபோது ஒரு பாம்பு அவளுடைய குழந்தையைச் சீண்ட வந்தது. உடனே கீரி சீறிப் பாய்ந்து அந்தப் பாம்பைக் கொன்றது. வாய் முழுதும் ரத்தம். குழந்தையைக் காபாற்றிவிட்ட பெருமிதத்தோடு வாசலில் நின்றது. வீட்டை நோக்கி வந்த பார்ப்பனப் பெண் கீரிப் பிள்ளையின் வாயில் ரத்தத்தைப் பார்த்தவுடன் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டு அதைக் கொன்றுவிடுகிறாள். அவசரப் பட்டோ ஆத்திரப் பட்டோ எதையும் செய்துவிடக் கூடாது என்பது இதன் நீதி.

இதற்குப் பின் பார்ப்பனப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை சிலப்பதிகாரத்தின் வாயிலாகக் காண்போம். மாடல மறையவன் கோவலனின் பல சிறப்புகளை எடுத்துரைக்கையில் இதையும் கூறுகிறான்: கீரிப் பிள்ளை இறந்த துயரம் பெரிதாக, அதனாற் கைவிடப்பட்ட மனைவியானவள் வருந்திப் பின்வர, வட திசை நோக்கிப் புறப்பட்ட பார்ப்பனன், நின் கையால் உணவுண்டு வாழும் வாழ்வு இனி முறையற்றது என்று கூறி “வடமொழி வாசகம் எழுதிய இந்த ஏட்டினைக் கடமை அறிந்த மாந்தர் கையிலே நீ கொடுப்பாயாக” என்று தந்து போயினன்.

பின்னர் அப்பெண் தெருத்தெருவாக அலைந்து உதவி கேட்டபோது கோவலன் வலியச் சென்று அவளை அழைத்து மறையவர் சொல்லிய நெறிப்படி அவளது பாவம் போக்க தர்மங்கள் பலவும் செய்து அவள் துன்பத்தைப் போக்கினான். அத்தோடு அவளது கணவனையும் தேடிப் பிடித்து அவர்களைச் சேர்த்துவைத்து பொருளும் கொடுத்து அனுப்பினான். கோவலனின் இந்த சமூகத் தொண்டை அவனிடமே மாடல மறையவன் கூறி உனக்கு ஏன் துன்பம் வந்தது என்று கேட்கிறான். உடனே கோவலன் தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிக் கூறுகிறான் என்று கதை தொடர்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “வடமொழி வாசகம் எழுதிய ஏடு” என்பதாகும். வடமொழி எழுதப் படவே இல்லை, பேசப்படவே இல்லை  என்று சொல்லுவோருக்கு இந்த ஏடு பதில் சொல்லுகிறது.

“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;

வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என…..” (அடைக்கலக் காதை)

சிலப்பதிகார காலத்திலேயே (கி.பி.100) வடமொழியை ஏட்டில், எழுத்தில் எழுதினர். அதை கோவலன் வாழ்ந்த புகார் நகரிலே படித்துப் பொருள் உணர்ந்து தான தர்மம் செய்தனர் என்பதை இதன் வாயிலாக அறிகிறோம். அந்த ஏட்டை கோவலனே படித்தான் என்றும் நினைக்க இடமுண்டு. ஆனால் இது தெளிவாகச் சொல்லப்படவில்லை.

மாதவி கடிதம்

இதற்கு முன் புறஞ்சேரி இருத்த காதையில் மாதவி எழுதி அனுப்பிய ஓலை பற்றிய செய்தியும் வருகிறது. அவள் ஏன் என்னை விட்டுப் பிரிந்தீர் என்று வருத்தமுற்று எழுதிய கடிதம் அது. அவள் தமிழில்தான் எழுதி இருப்பாள். இதிலும் ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை சிறப்பாக இருந்தது. பெண்களும் கடிதம் எழுதினர். அதை பார்ப்பன தூதர் மூலம் அனுப்பினர் என்று தெரிகிறது. கோசிகன் என்பவன் மூலம் வந்த அதே ஓலையை தன் பெற்றோரிடமும் காட்டும்படி கோவலன் திருப்பி அனுப்புகிறான்.

காதல் கடிதங்கள்

கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசன் என்னும் மாபெரும் வடமொழிக் கவிஞன், அவனுடைய விக்ரமோர்வசீய நாடகத்தில் புரூருவஸ் என்னும் மன்னனுக்கு தேவ லோக அழகி ஊர்வசி, பூர்ஜ பத்திரத்தில் எழுதிய காதல் கடிதம் பற்றிக் குறிப்பிடுகிறான்.

விதர்ப நாட்டு இளவரசி ருக்மிணி எழுதிய காதல் கடிதம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டது. கண்ண பிரானுக்கு ருக்மிணி எழுதிய இக்கடிதம் சிசுபாலவதம் என்னும் சம்ஸ்கிருத காவியத்தில் இருக்கிறது.

காதா சப்த சதி என்னும் பிராக்ருத கவிதைத் தொகுப்பில் அழகான காதல் கடிதக் கவிதைகள் உள்ளன. இது தவிர தமயந்தி தன் கணவன் நளனைக் கண்டுபிடிக்க கவிதை வடிவில் அனுப்பிய விடுகதைகள், கவிஞன் காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் எழுதிய விடுகதைக் கவிதைகள் ஆகியனவும் கடித வடிவில் எழுதப்பட்டிருக்கலாம்.ஒரு பெண் காதல் கடிதம் எழுதும் அழகிய சிலை கஜுராஹோவில் இருக்கிறது.

சிவபெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம்

அரசியல் தலைவர்களுக்குச் சிபாரிசுக் கடிதம் எழுதும் வழக்கம் இப்போது உள்ளது. இதைத் துவக்கிவைத்தவர் சிவ பெருமான் தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. சிவ பக்தரான பாணபத்திரர் வறுமையில் வாடவே அவருக்கு பணம் கொடுத்து உதவும்படி சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய சிபாரிசுக் கடிதம் அது. சித்தர் ஒருவர் மூலம் சிவன் இதை பாணருக்கு இதை அனுப்பினார். பாணபத்திரர்- ஏமநாதன் பாட்டுப்போட்டி கதை திருவிளையாடல் என்னும் திரைப்படம் மூலம் ஏற்கனவே பிரபலமான ஒன்று. ஆனால் இந்தக் கடிதம் பற்றி பலருக்கும் தெரியாது. கடிதம் எழுதியதோடு நில்லாமல், சேர மன்னன் கனவிலும் தோன்றி பாணபத்திரரை வரவேற்கவும் சிவன் உதவினார்.

மதிபுலி புரிசை மாடக் கூடல் என்னும் வரிகளுடன் இந்தத் திருமுகம்/ கடிதம் துவங்குகிறது.

மதிபுலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை

யன்னம் பயில்மொழி லாலவாயின்

மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்,

பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்

குரிமயி னுரிமையி னுதவி யொளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைகீழ்ச்

செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க.

பண்பால் யாழ் வல்ல பாணபத்திரன்

றன்போ லென்பா லன்பன் றன் பால்

காண்பது கருதிப் போத்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே

பொருள்: ஆலவாய் எனப்படும் மாடக் கூடலில் வசிக்கும் சிவன் எழுதும் கடிதம் இது. பருவ காலத்து மேகம் போல் வாரி வழங்கும் சேர மன்னனே இக் கடிதத்தைக் காண்க. உன்னைப் போலவே எனக்கு பாணபத்திரனும் அன்பன். அவனுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து அனுப்புவாயாக.

கடிதத்துடன் திருவஞ்சைக் களத்துக்குச் சென்ற பாணரை சேர மன்னனுடைய ஆட்கள் தேடிவந்து கண்டுபிடித்து அழைத்துச் செல்ல ,மன்னனும் பெரும்பொருள் கொடுத்து ஏழடி நடந்து வந்து அவரை வழி அனுப்பி வைத்தான்.( ஏழடி நடந்து வந்து வழி அனுப்புவது வேதத்திலும் திருமணத்திலும்/ சப்தபதி, பத்துப் பாட்டில் கரிகால் வளவன் பாடலிலும் இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.)

********************************

Mysterious Tamil Bird Man

Mysterious Tamil Bird Man

Indian literature is full of stories about birds. The fables of Panchatantra and Hitopadesha are famous and translated into many languages. The seed for all such stories is in the Upanishads, Mahabharata and Ramayana. But certain stories are embedded so deep in Sanskrit and Tamil books that miss our attention. Tamil Bird Man story found in 2000 year old Sangam literature is one of them. Famous Tamil poet Paranar sang about him in five poems. The verses about the mysterious bird man Ay Eyinan are found in Akananuru (verses 148,181,208 etc). To be praised by Paranar, one must be as great as an emperor. Later poet Avvaiyar praised Athiyaman Neduman Anji just for getting a verse on him from Paranar (Puram 99).  He was paired with another great poet Kapilar.(For more details about Paranar, please read my article No Brahimns, No Tamil).

Ay Eyinan was a friend of a chieftain called Nannan. Nannan was attacked by a king from a neighbouring country. He was so worried about leaving his town unprotected. Ay Eyinan came to his help and protected his town. When Njimili attacked that town, Ay Eyinan was killed in the battle. Immediately a large flock of birds came to protect his body from scorching sun light. When his body was taken, the birds moved with it and sheltered him like an umbrella. He was a friend of birds, probably like our great emperor Vikramadiya who even knew the language of the birds!

Bird Girl

Sakuntala, heroine of the world famous drama Shakuntalm by Kalidasa, was named a bird girl. Sakunta means bird in Sanskrit. Abandoned at birth by her parents Visvamitra and Menaka, Sakuntala was looked after by birds. They encircled her protectively so that she remained unharmed until sage Kanva finds her. Kanva gave her the name Sakuntala, because she was first adopted in a sense by the birds who cared for her (More bird stories are in my article Animal Einsteins Part 1 and Part 2)

Sage who called hundreds of birds

Tiruvannamalai near Chennai is famous for its Shiva temple and sages who lived there. Among the famous poets and sages of Tiruvannamalai are Arunagirinathar, Ramana Maharishi and Seshadri Swagal (1870-1929). Seshadri Swamigal performed a number of miracles and one of them was about birds. Venkatachala Mudaliyar and his wife Subbalakshmi Ammal were his great disciples. One day Swamigal visited them and asked Subbalakshmi whether she would like to watch some fun. When she said yes, he just waved his hands looking at the sky. Hundreds of birds came within minutes and occupied the trees and terrace of nearby houses. All kinds of Indian birds were there. It was 4 pm in the evening. When Subbalakshmi Ammal sympathized with the bird lings in the nests and asked him to send the birds to their nests he just pulled a thread from his towel and blew it in the air. All the birds flew away in a few minutes.

Those who have watched Alfred Hitchcock’s film The Bird may be familiar with such scenes.

********************

 

அதிசயப் பறவைத் தமிழன்!!!

தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு அதிசயப் பறவை மனிதன் பற்றிப் பலருக்கும் தெரியாது. இது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். பரணர் என்ற ஒரு பெரிய கவிஞர் மட்டும் இந்த விஷயத்தை விடாமல் நாலைந்து பாடல்களில் பாடிவிட்டார். பரணர் வாயால் ஒருவர் பாராட்டப்பட வேண்டும் என்றால் அவருக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டப் போன போது “பரணன் படினன் கொல்” என்று வியப்படைகிறார் அவ்வையார். நீ பரணனால் பாராட்டப் பட்டவன் ஆயிற்றே (புறம் 99) என்று.

கபிலர்-பரணர் என்று இரண்டு புலவர்களை இணத்தே பேசுவார்கள். சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனோவெனில் தனது மகனையே பரணரிடம் ஒப்படைத்து நீயே கல்வி கற்பி என்று குருகுல வாசத்துக்கு அனுப்பிவிட்டான். இவ்வளவு பெருமை உடைய ஒருவர் வாயால் பாராட்டப்பட்ட  அதிசயப் பறவை மனிதன் யார் தெரியுமா? அவன் பெயர் ஆய் எயினன். அவன் மிஞிலி என்பவனுடன் போரிட்டு உயிர் துறந்தான். அவன் உடல் மீது சூரிய ஒளி பட்டால் உடல் வாடுமே என்று அவன் மீது பறவைகள் ஒன்றுகூடி ப் பறந்து நிழல் செய்தன. இது சங்க காலத்தில் பெரும் அதிசயமாகக் கருதப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் பரணர் போன்ற ஒரு பெரும் புலவர் இப்படி பல பாடல்கள் பாடமாட்டார்.

ஆய் எயினன் கதை ஒரு சுவையான, ஆனால் சோகமான கதை. அவன் நன்னன் என்பவனின் ஆருயிர் நண்பன். நன்னனை வேறு ஒருவன் எதிர்த்தபோது அவனுடைய ஊரை பாதுகாக்க எயினன் சென்றான். அப்போதுதான் மிஞிலியுடன் போரிட்டு உயிரிழக்க நேரிட்டது. நண்பனுக்கு உதவப் போய் இந்த கதி. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனுக்கு உதவியதால்தான் பறவைகளும் அனுதாபம் தெரிவித்தன போலும். எயினனின் மனைவியர் துயறுற்று அழுதபோது அகுதை என்பவன் மட்டும் வந்து மிஞிலியை தோற்கடித்து அவர்களுக்கு உதவினான்.

அகநானூற்றின் பாடல்களில் மேல் விவரங்களைக் காணலாம்:அகம். 148,181, 208, 396 புறம் 351

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந்தேர் ஞிமிலியொடு பொருது, களம்பட்டென

காணிய செல்லாக் கூகை நாணிக்

கடும் பகல் வழங்கா தாஅங்கு……. (அகம்.148,பரணர்)

பொருள்: எயினனுக்கு நிழல் குடை பிடிக்க எல்லா பறவைகளும் போயின. ஆனால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் அந்தப் பறவை மட்டும் போக முடியவில்லை. அதற்காக அது வெட்கப்பட்டது.

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்தூடன் (அகம்.181,பரணர்)

பொருள்: ஆய் எயினன் முருகப் பெருமானைப் போன்ற ஆற்றலுடன் நின்று மிஞிலியுடன் போரிட்டான்.இறுதியில் விழுப்புண்பட்டு வீழ்ந்தனன். கதிரவனின்  ஒளிய கதிர்கள் அந்த ஆயின் மேல் படாதவாறு மறையும்படிப் புதிய பறவைகள் வானத்தில் ஒன்றாகக் கூடின. வானத்தில் வட்டமிட்டன.

அதிசயப் பறவைப் பெண்

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கவிஞன் காளிதாசனின் மிக உன்னத படைப்பு சாகுந்தலம் என்னும் நாடகமாகும். அதில் உள்ள கதா நாயகி சகுந்தலா அதிசயப் பறவைப் பெண்ணாவாள். விசுவாமித்திரரும் மேனகையும் பிறந்த குழந்தையைக் காட்டில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். கண்வர் என்ற மகரிஷி அந்தப் பக்கம் வந்த போது பறவைகளே உணவு ஊட்டி வளர்த்த பச்சிளம் குழந்தையைக் கண்டு வளர்ப்பு மகளாக வளர்த்தார். அந்தப் பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்தபோது அவருக்கு பறவைப் பெண்=சகுந்தலா என்ற பெயரே பொருத்தமாகப் பட்டது. உன்னைப் பறவைகளே ஊட்டி வளர்த்ததால் உனக்கு இப்படி பெயர் வைக்கிறேன் என்று அவரே சொல்லுகிறார்.( ஆலமரப் பறவைகளின் ஒலியை ஸ்ரீ ராமர் அடக்கியது உள்பட ஏனைய பறவைச் செய்திகளை அனிமல் ஐன்ஸ்டைன் Animal Einsteins Part 1 and Part 2 என்ற ஆங்கிலக் கட்டுரையின் இரண்டு பகுதிகளில் காண்க)

சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த பறவை அதிசயம்

திருவண்ணாமலை சாது சந்யாசிகளுக்குப் பெயர் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், ரமண மகரிஷி முதலிய எத்தனையோ ஆன்மீகப் பெரியார்களின் பாத துளிகள் பட்ட புனித ஊர். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் (1870-1929) என்ற மகான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவருடைய மனைவி சுப்புலெட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார்  4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். “சுப்புலட்சுமி இங்கு வா, ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்” என்று சுவாமிகள் சொன்னவுடன் அவர் என்ன வேடிக்கை என்று கேtடுகொண்டே வந்தார். அவர்கள் வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடk கூப்பிட பறவைகளின்  எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டன. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று வித விதமான பறவைகள் வந்துவிட்டன. பக்கத்து வீடுகளில் எல்லாம் பறவைகள் உட்கார்ந்து குரல் எழுப்பின. சுப்புலட்சுமி அம்மாள்,, அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. விக்ரமாத்திதன் கதையில் படிப்பது போல சுவாமிகளுக்கும் பறவைகளின் மொழி தெரியும் போலும்!!

ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் பறவைகள் (Alfred Hitchcock’s film The Bird ) என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஏராளமான பறவைகள் என்றால் என்ன என்பது எளிதில் விளங்கும்.

*****************

தாவரங்களின் அறிவு!–Part 4

அறிவியல் அதிசயங்கள்

தாவரங்களின் அறிவு! -4

———————————-

ச.நாகராஜன்

ஒரு செடியானது கீழே போட்டு மிதித்துக் கொலையுண்ட பின்னர் மீதியிருந்த இன்னொரு செடி  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவனும் அதன் முன்னே நடந்து செல்லுமாறு கூறப்பட்டான். ஐந்து மாணவர்கள் அந்தச் செடியின் அருகே சென்ற போது அந்தச் செட் எந்த விளைவையும் காண்பிக்கவில்லை. ஆனால் ஆறாவது மாணவனான ‘செடியின் கொலைகாரன்’அதன் அருகே சென்றவுடன்  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரோடு வெகு வேகமாக அசையத் தொடங்கியது. அது கொலையாளி யார் என்பதை அடையாளம் காட்டியது!

இந்தச் சோதனையின் மூலம் தாவரங்களுக்கு ஞாபக சக்தி உண்டு என்பதையும் அது தமக்குத் தீங்கு செய்த மனிதரையோ அல்லது இதர வஸ்துவையோ யார் அல்லது எதாக இருந்தாலும் கூட இனம் காண்பித்து விடும் என்பதும் நன்கு தெரிய வந்தது!

தாவரங்கள் அதை வளர்க்கும் எஜமானர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன!

ஒரு முறை பாக்ஸ்டர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் நகருக்குத் திரும்பினார். தனது ரிகார்டரில் பதிவு செய்யப்பட்ட கிராப் பேப்பர்களைப் பார்த்த போது  எல்லா தாவரங்களும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியதை அவரால் காணமுடிந்தது. சில தாவரங்கள் ‘ அப்பாடா’ என்ற பெருமூச்சை வெளியிட்டன. (எஜமானர் திரும்பி வந்து விட்டார்; இனி கவலை இல்லை!) சில தாவரங்களோ அவருக்கு நல்வரவு கூறி வரவேற்றன!

இந்த ‘அப்பாடா’ என்ற பெருமூச்சும், ‘நல்வரவு’டன் கூறிய வரவேற்பும் எப்போது எந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை அவர் கூர்ந்து கவனித்துப் பார்த்தார்.

அது அவர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் திரும்ப முடிவு செய்த அதே நிமிடத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது!

சின்ன ‘செல்லானாலும்’ கூட உயிருடன் இருக்கும் திசு ஒன்று இறந்து போனால் அதைக் கண்டு கொள்ளத் தவறுவதில்லை. இதை பாக்ஸ்டர் எதேச்சையாக ஒரு நாள் கண்டுபிடித்தார். ஒரு நாள் அவர் தன் சாப்பிடவிருந்த யோஹர்ட்டுடன் (தயிர்) ஏதோ ஒரு பழ ஜாமைக் கலந்தார். தயிரில் இருந்த ‘லாக்டோபஸில்லி’ செல்களை ஜாமில் சேர்க்கப்பட்டிருந்த ப்ரிஸர்வேடிவ் கொன்று விட்டது. இதைக் கூடத் தாவரங்கள் உணர்ந்து விட்டன.

பாக்ஸ்டர் சிங்க்கில் (Sink) கொதிக்கும் நீரை ஓட விட்ட போதும் தொட்டியில் இருந்த சில நுண்ணிய  பாக்டீரியாக்கள் இறந்து விட்டதை எண்ணி அவை அலறின போலும் என்று கூறுகிறார் அவர்!

இதை உறுதி செய்வதற்கான இன்னொரு சோதனையை அவர் மேற்கொண்டார். உப்பு நீரில் இருந்த ஒரு ‘ஷ்ர்ம்ப்’ ஒன்றை தானியங்கி மெக்கானிஸம் வாயிலாக தானாகவே சுடுநீரில் கரையும் படி அவர் ஒரு ஏற்பாட்டை அமைத்தார். மனிதன் யாராலும் தொடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே ஆடோமாடிக் மெக்கானிஸம் பயன்படுத்தப்பட்டது. சுடு நீரில் ‘ஷ்ரிம்ப்’ விழுந்தவுடன் தாவரம் அதைப் பதிவு செய்து விட்டது!

இப்படி ஏராளமான சோதனைகளை நடத்தியதன் மூலமாக பாக்ஸ்டர் தாவரங்களின் அதிசயிக்கத்தக்க அறிவைக் கண்டு வியந்தார். இந்த சோதனைக¨ளையும், தனது முடிவுகளையும் உலகிற்கு அறிவித்தார்.

உண்மையிலேயே தாவரங்களின் அறிவு அதிசயிக்கத் தக்க ஒன்று தானே!!

New iPhone game: Bankers vs Humans

Dear All,

A brief aside from my usual postings for a small advertisement:

Please take a moment to download a new game published by my son’s company: Bankers vs. Humans

It has been published for the iPhone and iPad. You can find it on the iTunes AppStore, please see the link below –

http://itunes.apple.com/gb/app/bankers-vs.-humans/id514372526?mt=8

It was recently featured in prominent financial publications like Business InsiderTheBlaze.com (and also the Huffington Post). 

You can visit the associated website: Bankersapp.com for further details on the game.

I hope you enjoy it!

 

Regards,

Swaminathan

தமிழர்களின் எண் “ ஜோதிடம் “ !

தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணையும் நான்கின் வர்க்கங்களையும் நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.

நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்

இதோ நூல்களின் பட்டியல்:

(4) நாலடியார் (400)

நான் மணிக் கடிகை (4)

சதுர் (4) அகராதி

கார் நாற்பது (40)

களவழி நாற்பது (40)

இனியவை நாற்பது (40)

இன்னா நாற்பது (40)

புற நானூறு (400)

அக நானூறு (400)

நற்றிணை நானூறு (400)

குறுந்தொகை நானூறு (400)

பழ மொழி நானூறு (400)

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (4000)

நாலாயிரக் கோவை (4000)

இவ்வாறு எண்களின் பெயரில் புத்தகம் ,பாக்கள் இயற்றுவது வேத காலத்திலேயும் உண்டு. தசம், சதம், சஹஸ்ரம் (1000) என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வரும். இந்த தசாம்ச முறையைக் (Decimal System) கண்டுபிடித்தவர்களே இந்தியர்கள்தான். யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் (100)  என்று சிவன் பெயரில் முக்கியமான துதி வருகிறது. அதில்தான் சைவர்களுக்கு உயிர் போன்ற நம சிவாய மந்திரம் முதல் தடவையாக வருகிறது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களில் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ ( 8 அத்தியாயம்) என்று பெயர் வைத்தார்.

தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது (70), முப்பால் (3), திரி(3)கடுகம், சிறு பஞ்ச(5) மூலம்,பதிற்றுப் பத்து (10X10) ஐங்குறு நூறு (5X100).

எல்லா நூல்களையும் தொகுத்த போதும் அவைகளுக்கும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்று எண் பெயராகவே வைத்ததால்தான் இவர்களுக்கு நியூமெராலஜி பைத்தியம் இருந்திருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

சம்ஸ்கிருதத்தைப் பொறுத்த வரை தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வரும்.

பதிகம் (10), சதகம் (100) சஹஸ்ர நாமம் (1000 , 1008), லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று. மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோருமே எண்கள் மீது காதல் உள்ளவர்கள் தான்.

பல வட மொழித் துதிகள் பஞ்ச ரத்னம் (5), அஷ்டகம் (8) என்று ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்க காலத்திலும் ஐம்பெருங்குழு (5), எண்பேராயம் (8) என்று சபைகளை அமைத்து தமிழர்களும் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

(ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் 9,18,108,1008, 10008 பற்றி எழுதியுள்ளேன். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த சங்க இலக்கியத்தில் நிறம், சங்க இலக்கியத்தில் எண்கள் என்ற கட்டுரைகளில் மேலும் பல அதிசயச் செய்திகள் உள்ளன.)

தாவரங்களின் அறிவு!–பகுதி 3

ச.நாகராஜன்

பாக்ஸ்டரும் அவரது சகாக்களும் நாடெங்கும் சென்று பல்வேறு கருவிகள் வாயிலாக ஏராளமான சோதனைகளை நடத்த ஆரம்பித்தனர். முடிவுகள் அனைத்தும் தாவரங்கள் கொண்டிருக்கும் அதீத புலன் ஆற்றலை மீண்டும் மீண்டும் நிரூபித்தன!

ஒரு தாவரத்தின் இலைகளைப் பறித்து அதைத் துண்டுகளாக்கி  லை -டிடெக்டரின் எலக்ட்ரோடுகளின் அருகே வைத்த போதும் கூட இதே முடிவுகள் வெளியாயின! ஒரு நாயோ அல்லது அறிமுகமில்லாத, நட்பில்லாத நபர் யாராவது வந்தால் எதிர்மறை விளைவுகளை தாவரம் காண்பித்தது.

முதலில், நாம் லை – டிடெக்டர் எப்படி வேலை செய்கிறது என்பதைச் சற்று அறிய வேண்டும். அதன் எலக்ட்ரோடுகள் பொய் சொல்கிறாரோ என்று சந்தேகப்படும் நபருடன் இணைக்கப்படுகிறது. பிறகு அவரிடம் நன்கு வடிவமைக்கப்பட்ட கேள்விக் கணைகள் சரமாரியாக வீசப்படும். ஒவ்வொருவருக்கும் அற்புதமான பிரக்ஞை என்ற உணர்வு (consciousness)இருக்கிறது.ஆகவே எவ்வளவு தான்  முயன்றாலும் காரணங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துக் கூறினாலும் ஒரு பொய்யைக் கூறும் போது பிரக்ஞைக்கு அது நிச்சயமாகப் பொய் என்று தெரியும்.ஆகவே உடலில் உள்ள மின்சார தளம் (electric field) மாறுகிறது.இந்த மாறுதலை ரிகார்டர் துல்லியமாகப் பதிவு செய்கிறது.இதுவே லை – டிடெக்டர் வேலை செய்வதன் அடிப்படைத் தத்துவம்!

 

பாக்ஸ்டர் விநோதமான ஒரு சோதனையைச் செய்து பார்த்தார். லை – டிடெக்டரை ஒரு தாவரத்துடன் முதலில் இணைத்தார். பிறகு சோதிக்க வேண்டியவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அந்த மனிதர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைத் தாவரம் துல்லியமாகக் கண்டுபிடித்தது! அவரிடம் நீ பிறந்த  வருடம் எது என்று பாக்ஸ்டர் கேட்டார். ஏழு வருடங்களை விருப்பத்தேர்வுகளாகத் தந்தார். சரியான வருடத்தைச் சொன்ன போதும் கூட‘இல்லை’ என்று அவர் கூறினார். சரியான வருடத்தை அவர் ‘இல்லை’ என்று கூறி பொய் சொன்னபோது  தாவரம் அதை உணர்த்திக் காட்டியது! கிராப் பேப்பரில் உச்சகட்டத்தை வரைந்து அவர் பொய் சொல்கிறார் என்பதை உணர்த்தியது!

 

நியூயார்க்கில் உள்ள ராக்லேண்ட் ஸ்டேட் ஹாஸ்பிடலில் அதன் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் டைரக்டராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் அரிஸ்டைட் எஸ்ஸர் (Dr Aristide Esser). அவர் ஒரு சோதனைக்குள்ளாகும் மனிதரிடம் தாம் கேட்கும் கேள்விகளுக்குத் தப்பான பதிலைத் தருமாறு கூறினார். அந்த தாவரம் தப்பான பதிலைத் தரவிருக்கும் அதே நபர் வளர்த்தது தான்! என்றாலும் கூட பொய் கூறிய போது தன் எஜமானரை அது ‘காப்பாற்றவில்லை’; மாறாகக் ‘காட்டிக் கொடுத்தது!’

 

சரியில்லாத பொய்யான பதில்கள் கிராப் பேப்பர் பதிவுகள் மூலம் சுலபத்தில் அறியப்பட்டன! பாக்ஸ்டரை நம்பிய போதும் கூட எஸர் தானே சோதனைகளை நேரடியாகச் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார்; செய்து பார்த்து திருப்தி அடைந்தார். பாக்ஸ்டரின் கொள்கைகள் மற்றும் சோதனை முடிவுகள் அனைத்தும் உண்மையே என்று கண்டறிந்தார்.

 

இன்னொரு சோதனையையும் பாக்ஸ்டர் நடத்தினார். இதில் ஆறு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டது.ஒரு தொப்பியில் போடப்பட்ட பேப்பர் சுருள்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. சோதனை நடந்த அறையில் இரண்டு செடிகள் இருந்தன.

 

ஒரு பேப்பர் சுருளில் இரண்டு செடிகளில் ஒன்றை வேருடன் பிடுங்கி தரையில் போட்டு அதைத் தேய்த்து அழிக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இப்படி ஒரு செடியைக்‘கொலை செய்பவர்’ யார் என்று பாக்ஸ்டர் உள்ளிட்ட யாருக்குமே தெரியக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே கண்கள் கட்டப்பட்டது. ஒருவரது எண்ணம் இன்னொருவருக்குத் தெரியாது; யார் செய்வதையும் யாரும் பார்க்க முடியாது – இரண்டு செடிகளைத் தவிர!

ஒரு செடி கொல்லப்படும்! அதைப் பார்க்கும் நேரடி சாட்சியாக இன்னொரு செடி இருக்கும். நடந்தது என்ன?

-தொடரும்

 

தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

Picture: Oedipus kills Sphinx

கிரேக்க நாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி ஆடிகள், கோடங்கி அடிப்போர், குறி சொல்லுவோருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது (இதைப் பற்றி தனி கட்டுரையில் தந்திருக்கிறேன்). இது போலவே கிரேக்க ஸ்பிங்ஸ் (SPHINX)  பூதத்துக்கும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல வகை பூதங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு உதவிய பூதங்கள் பற்றி தனி கட்டுரையில் கூறிவிட்டேன். எகிப்திலும் ஸ்பிங்ஸ் சிலகள் உண்டு. ஆனால் கிரீஸ் நாட்டின் தீப்ஸ் நகரில் உள்ளது பற்றித்தான் இந்தக் கதை.

இதோ சிலப்பதிகார பூதக் கதைகள்:

இந்திரன் தலை நகரான அமராவதியை முசுகுந்தன் என்ற சோழ மன்னன் காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதத்தையும் ஐந்து வகை மன்றங்களையும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் (5: 65-67, 6:7-17). (முசுகுந்தன் என்ற மன்னன் பெயரை உரைகாரர்கள் தந்தனர்).

காவல் பூதம் அமராவதியில் அசுரர் விடுத்த இருள் அம்பினைப் போக்கியது. இந்திரன் அனுப்பியதால் பூம்புகாருக்கு வந்து நாளங்காடியில் தங்கி பலிகளை ஏற்றுவருகிறது என்று சிலம்பு கூறும் (7: 14)

ஐவகை மன்றம் பற்றி சிலப்பதிகாரம் மிகவும் விரிவான தகவல்களைத் தருகிறது (5: 111- 140). 1.) சுருக்கமாகச் சொன்னால், களவாட நினைப்போரை நடுங்க வைக்கும் வெளியிட மன்றம் 2.) நோயால் அழுகியவரைக் குணப்படுத்தும் மன்றம். அதாவது ஒரு பொய்கையில் குளித்தவுடன் நோய்கள் ஓடிவிடும். நம் ஊர் புஷ்கணிகள் போல 3.) நஞ்சாலும் பேயாலும் துன்புற்றாரின் துயர் நீக்க ஒளியை வீசும் மன்றம். அதாவது நவீன லேஸர் ஒளிக் கற்றை சிகிச்சை போல.4.) ஒழுக்கம் கெட்டவரை நிலத்தில் புடைத்துச் சாப்பிட்டு விடும் சதுக்க பூதம் ( இது உண்மையில் இருந்தால் ஜனத்தொகைப் பெருக்கப் பிரச்சினை பற்றி நாம் கவலையே பட வேண்டாம். அதுவே மக்கட் தொகையைக் குறைத்துவிடும்!! 5.) அரசன் செங்கோல் தவறி ஆட்சி புரியினும் சபையோர் நேர்மை குன்றினாலும் கண்ணீர் விட்டு அழும் பாவை மன்றம் ( இது இன்று இருந்தால் நித்திய அழுகைதான்!!)

இது தவிர அழற்படுகாதையில் ஆதி பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் ஆகிய நால் வருணப் பூதங்களும் மதுரை தீப்பற்றி எரிவதற்கு முன்னரே வெளியேறி விட்டதாகவும் இளங்கோ பாடுகிறார்.

அடைக்கலக் காதையில் பத்தினிப் பெண் ஒருத்தியைப் பற்றிப் பொய்யுரை உரைத்த ஒருவனை ஒரு பூதம் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்டதாகவும் இருக்கிறது. பொய்க்கரி சொன்னவனுடைய தாயார் தனது மகனை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கெஞ்சிக் கேட்டபோதும் அதை பூதம் ஏற்கவில்லை. அந்த மனிதனை அவர்கள் கண் முன்னாலேயே அறைந்து கொன்று உண்டு விட்டது என்கிறார் இளங்கோ.

காடுகாண் காதையில் மதுரைக்கு வழி கேட்ட கோவலனுக்குப் பதில் கூறிய மறையவன், திருமாலிருஞ் சோலை பக்கத்தில் மூன்று பொய்கைகள் உள்ளதாகவும் அங்குள்ள தெய்வங்கள் என்ன என்ன கேள்விகள் கேட்கும் என்றும் என்ன பதில் கூறினால் நல்லது என்றும் சொல்லித் தருகிறான். இவை எல்லாம் கிரேக்க பூதக் கதையில் வரும் சில அம்சங்கள்.

புலவர் பெயர்களிலும் பூதம், பேய் உண்டு. சதுக்க பூதனார், பேய்மகள் இளவெயினி, காரைக்கால் பேயார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிரேக்க பூதம்

எகிப்திலும் கிரீஸிலும் ஸ்பிங்ஸ் உண்டு. ஸ்பிங்ஸ் சிலை பாதி சிங்கமாகவும், பாதி பெண் ஆகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் தீப்ஸ் என்ற நகரும் உண்டு. ஆனால் பூதக் கதை கிரேக்க வீரன் ஈடிபஸ் பற்றியது. அவன் பாதி சிங்க உடலும் பாதி பெண் உருவமும் கொண்ட ஸ்பிங்ஸைப் பார்க்கிறான். அது கேள்விகள் கேட்கும். பதில் சொல்லாதவர்களைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். தீப்ஸ் நகர மக்களுக்கு இது ஓயாத கவலை தந்தது. வழிப்போக்கர்களைக் கேள்வி கேட்டு அச்சுறுத்தி வந்தது. இதைப் படிக்கும் போது மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் ப்ரஸ்னம் கதையும் ,விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளும் ஞாபகத்துக்கு வரும்.

ஈடிபஸ் போனபோது அவனிடம் கேட்ட கேள்விகள்: எது சில நேரம் இரண்டு காலகளோடும் சில சமயம் மூன்று கால்களோடும் சில சமயம் நான்கு கால்களோடும் நடக்கும். எது அப்படி 4 கால்களோடு நடக்கையில் பலவீனமாக இருக்கும்?

ஈடிபஸ் கொடுத்த விடை: மனிதன். குழந்தையாக இருக்கும் போது எழுந்து நிற்க முடியால் நாலு “கால்”களில் தவழ்ந்து செல்லுவான். பின்னர் இரண்டுடன் நடந்து கைத்தடியுடன் நடக்கையில் மூன்று கால்களோடு இருப்பான்.

ஒருவரை ஒருவர் பாதிக்கும் சகோதரிகள் யார்? பகலும் இரவும் என்று ஈடிபஸ் பதில் கொடுத்தான். இறுதியில் ஸ்பிங்ஸ் ஒரு மலையிலிருந்து விழுந்து இறந்தது.

ஆக கேள்விகள் கேட்டு அச்சுறுத்துவது, தவறிழைப்போரைச் சாப்பிடுவது ஆகிய அம்சங்களில் சிலப்பதிகார தமிழ் பூதத்துடன் ஒற்றுமையைக் காணலாம்.

***************************

 

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்

கிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் புகழ் பெற்றது. காரணம் என்னெவென்றால் கிரேக்க நாட்டின் அறிஞர்களும் ரோமானிய மன்னர்களும் இங்கு வந்து ஜோதிடம் கேட்டனர். அது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இதில் (கி.மு 800 முதல் கி.பி.300 வரை) நம்பிக்கை வைத்து அங்கே போனார்கள். இப்போதும் இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

 

தமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் எழுதுவோர் என்ன என்ன எல்லாம் செய்தார்களோ அத்தனையும் இங்கே செய்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் இது போல பல குறி சொல்லும் இடங்கள் இருந்தபோதும் பிதகோரஸ், ஹெரோடாட்டஸ், ஈடிபஸ், ப்ளூடர்ச், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ரோமானிய மன்னர்கள்  மற்றும் பல தலைவர்கள் வந்த இடம் டெல்பியே. அங்கு இசைப் போட்டி நடத்தி பரிசு கொடுப்பதும் வழக்கம்.

 

பர்னாசஸ் மலைப் பகுதியில் ஒரு குகை போன்ற அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள். அங்கு புகை வரத் துவங்கும். பின்னர் வந்திருப்பவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு தெளிவில்லாத, விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பதில்கள் கிடைக்கும். அம்மையார் ஓரிரு வரிகளில் பதில் தருவார். பல விஷயங்கள் இரு பொருள்பட இருக்கும். பக்கத்தில் உள்ள ஒரு பூசாரி, அந்த அம்மையார் கூறிய ஆரூடத்தை விளக்குவார். அங்கு பூமியிலிருந்து வந்த புகை “எதிலின்” என்ற ரசாயன வாயு என்றும் அது போதையை உண்டாக்கவே இப்படி அம்மையார் உளரத் துவங்கினார் என்றும் சில ஆராய்ச்சியாளர் சொன்னதெல்லாம் இது வரை நிருபணமாகவில்லை.

டெல்பியில் நடந்ததை ஒவ்வொரு அம்சமாகப் படியுங்கள். நீங்களே தமிழ் நாட்டில் நடந்த, நடக்கும் விஷயங்களுடன் ஒப்பிட முடியும். (சிலப்பதிகாரத்தில் இதே போல கேள்வி கேட்கும் பூதங்கள் பற்றி வருகிறது. அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி செய்தன. அவைகளை ஏற்கனவே தனிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன்).

1.இங்கே அபல்லோ தெய்வத்தின் கோவில் உள்ளது. அவர் பைதான் என்னும் பாம்பைக் கொன்று உலகைக் காப்பாற்றினார். அவர் டால்பின் வடிவு எடுத்து, முதுகில் கிரீட் தீவு பூசாரிகளை ஏற்றிக் கொண்டு வந்தார். (கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனமும் மச்சாவதரக் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும்).

2.இங்கே மூன்று பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் 1.உன்னையே நீ அறிவாய். 2.அளவுக்கும் மிஞ்சாதே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 3. உறுதி எடு, விஷமம் செய்யாதே. இந்தப் பொன்மொழிகள் ஏழு முனிவர்கள் கொடுத்தது. (இப்போது சப்த ரிஷிக்களும், உபநிஷத வாக்கியங்களும் நம் நினைவுக்கு வரும்)

3. சாமி ஆடும் பெண் வேகமாகப் பேசுவார். அதை பூசாரிகள் விளக்கி அர்த்தம் சொல்லுவார்கள் (இதுவும் நம் ஊர் மாதிரிதான். நாடி சோதிடத்தில் அவர் ஒன்று செய்யுள் வடிவில் சொல்ல பக்கத்தில் உள்ளவர்கள் வேறு ஒன்று உரை நடை வடிவில் சொல்லுவார்கள்.)

4. பூசாரினி சொல்லுவதில் ஒரு சொல்லையோ, கமா (காற்புள்ளி) வையோ இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். “Go Return Not Die in War”. என்று பூசாரினி கூறுவாள். இதில் ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்கு முன் காற்புள்ளியை (,,,,,) ப் போட்டால் போருக்குப் போ, திரும்பி வா, போரில் இறக்க மாட்டாய் என்று அர்த்தம் வரும். ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்குப் பின்னால் காற்புள்ளியை வைத்தால் போருக்குப் போ,,திரும்பி வராதே, செத்துத் தொலை என்று பொருள் வரும். ஆக எப்படியும் பொருள் கொள்ளக் கூடிய நாட்ர்தாமஸ் எழுதிய செய்யுள் வடிவ சோதிடம் போல குழப்பத்தோடு வீடு திரும்புவார்கள் (இதுவும் நம் ஊர் ஜோதிடர்களையும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் நினைவு படுத்தும்

5. பூசாரினி இருக்கும் இடத்துக்குக் கீழேயிருந்து நறுமணப் புகை வருவதாக அங்கே பூசாரியாக வேலை பார்த்த ப்ளூடார்ச் எழுதி வைத்துள்ளார். இது இயற்கையான ஊற்றிலிருந்து எழுந்த ரசாயன வாயு என்றும் செயற்கையாகப் போட்ட போதை ஊட்டும் பொருள் என்றும் கூறுவர் ( இதுவும் நம் ஊர் வேத கால சோம பானம் பற்றி மேல் நாட்டார் எழுதி வைத்தது போல எல்லோரையும் குழப்பும்).

6. பூசாரினிகளை இளம் வயதுப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் பிரம்மசர்ய விரதத்தைக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். இது நம் ஊர் சந்யாசினிகளை நினைவுக்குக் கொண்டு வரும்.

7. ஒரு மன்னன் வந்து “நான் எதனால் சாவேன் என்று கேட்டானாம். பூசாரினி சொன்னாள்: மூஸ், மூஸ், மூஸ் என்று. பக்கத்தில் இருந்த பூசாரி எலி என்று மொழி பெயர்த்தானாம். கிரேக்க மொழியில் எலி (மூஷிகம்),தசை (மஸில்), மனிதனுடைய பெயர் (எடுத்துக் காட்டு: மோசஸ்) என்று பல பொருள்கள் உண்டு. ஆகையால் அந்த மன்னன் எலிகளை எல்லாம் ஒழித்தானாம். மூஸ் என்ற பெயருடையவர் எல்லோரையும் விரட்டிவிட்டானாம். கடைசியில் தசைப் (மஸில்) பிடிப்பால் இறந்தானாம். இதே போல கம்சன்–கிருஷ்ணன், இந்திரன் – விருத்தாசுரன், ஹிரண்யகசிபு—பிரஹ்லாதன் கதைகளில் நாம் படிக்கிறோம்.

8. ஒரு நாள் ஒரு ஆட்டிடையன் பர்னாசஸ் மலை அடிவாரத்துக்குப் போனான் என்றும் ஆடுகள் குகைக்குள் போகவே அவை வினோதமாகக் கூச்சலிட்டன என்றும் அவன் உள்ளே போனபோது சாமி ஆடி வருங்காலம் உரைக்கும் கணியன் ஆக மாறினான் என்றும் எழுதி வைத்துள்ளனர். (இது நம் ஊர் ஸ்தல புராணக் கதகள் போல இருக்கிறது!!)

சுருக்கமாகச் சொன்னால் கிரேக்க நாட்டு பழக்க வழக்கங்கள் இந்திய, அதிலும் குறிப்பாக, தமிழ் நடைமுறைகளை ஒத்து இருக்கும். (கிரேக்க—தமிழ் மொழி தொடர்பு பற்றிய வேறு இரண்டு கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

 

 

Dravidian Queen (1320 BC) in North India

Picture shows gUpta Gold Coin With Queen Kumara Devi

A Puranic reference about an ancient queen DRAVIDA missed the attention of many research scholars. It is because we still read the ancient history written by the British 150 years ago. Indian history begins from the days of Buddhists, according to them. But Sumerian, Babylonian, Egyptian, Greek and Mayan histories have been vastly revised and newer and newer information is added every year. But our text books remain the same.

Dravida was a princess mentioned in the Hindu Puranas. Trnabindu’s daughter was Dravida, who was the mother of Visravas. His son was Visala.  Dravida was read as Idavida by some. The confusion arose because there was another girl Idavida mentioned elsewhere. It is easy to suggest that princess Dravida married an Aikshvaka.

Dravida—Visravas—Visala—Hemachandra—Sucandra—Dhumrasva—Srnjaya—Sahadeva—Krsasva—Somadatta—Janamejaya—Pramati is the line of kings and queens.

Pramati  is contemporary with Dasaratha Aja and Lomapada. This synchronism is important, as it places Trnabindu 12 generations up at 1320 BC says R .Morton Smith in his book “Dates and Dynasty in Earliest India” ( Motilal Banarsidas, 1973, pages 70-72).

Lines quoted by him from the Puranas (in Sanskrit):

Atha Dhuntumatah putro dharmatma Vegavan nrpah

Budho Vegavatah putras Trunabindur Bhudatmajah

Treat yugamukhe raja tritye sa babhuva ha

Kanya tu tasya Dravida mata visravas tu sa

 

Dasaratha’s daughter in Egypt

We have several references to Indian queens marrying even foreigners. Mittanni  king  Tushratta  1354 BC (Of Indian origin, but ruled Syria and Turkey) gave his sister Ghilukhipa and his daughter Tadukhipa in marriage to the Egyptian king Amenhotep III. He wrote ten letters to the Egyptian king and all are preserved in clay tablets in Cuneiform script. Anyone who needs the interesting letters can google and find them in websites like Wikipedia.(There were four or five Dasarathas who ruled various parts of India).

Early in the fifth century BC in South India, Pandyan girls were “exported” to Sri Lanka in hundreds. When the banished Indian king Vijayan landed in Sri Lanka, he or his ministers could not find girls of royal blood for marriage. They sent an SOS to the Pandyan king. He tomtomed and assembled all the girls and sent them in bulk to Sri Lanka. Mahavamsa  which gives the history of Sri Lanka narrated it with all the minute details.

The Pandava prince Arjuna also travelled widely and married women of different races according to Mahabharat. There are even folk dances in Tamil Nadu about his wedding to Alli Rani. Dridharashtra married Gandhari from Kandahar of Afganistan. Dasaratha’s wife Kaikeyi was from Iran –Afgan border. Rama’s wife  Mythili was from Mithila on the border of India-Nepal.

Ravana was called a Southerner (Thennavan) in Maduraikanchi written 2000 years ago. He married lot of women and wanted to marry Sita as well. It was the custom of Indian kings to marry from different countries or regions for political gains.

Chandra Gupta Maurya married daughter of Selucas Nicator, the Greek general. Agastya travelled to South East Asia and married a Cambodian girl and founded a Hindu empire which lasted for 1300 years.(Agastya of Rig Veda is different seer who married another princess Lopamudra).

The most famous Indian poet Kalidasa says that kings from various regions of India including the Pandyan King came for the swayamvaram of Indumati. Swayamvaram is the ceremony where a royal princess selects her future husband.

Gujarati-Pandya Contacts

The first king of modern Madurai , Malayadwaja Pandyan married the daughter of a Surasena king, probably from Gujarat. His consort’s name was Kanchanamala. She was the mother of great queen Meenakshi in whose name the world famous Meenakshi temple was built. (Please read my article The Wonder That was Meenakshi Temple). Lord Sundareswara married Meenakshi.

The Jain literature gives very realistic accounts of sea voyages. The “Avasya Churni” informs us that there were regular sailings from Madurai to Sourashtra (Gujarat). It is mentioned in the story that the ruler of Madurai PANDUSENA, had two daughters, who while sailing to Sourashtra, met with a shipwreck in a storm. They prayed to Lord Shiva and Lord Skanda for their protection (Ref. Trade and Trade Routes in Ancient India by Moti Chandra). It is interesting to note that Shiva and Skanda are believed to have sat at Tamil Sangam 2000 years ago. Commentators on Sangam Tamil literature gave us more details in their commentaries. More over 2300 year old inscriptions in and around Madurai confirms the historicity of Madurai.

Boat City and Matsyavatar

Tamil and Sanskrit literature confirm that the first Avatar of Lord Vishnu happened at the southern part of India in the remotest period of history. The Pandyan king who ruled at that time was Sathyvrata. The most famous seventh century Saivaite saint Gnana Sambhandhar also sang about the great floods happened in the past and his town Sirkazi survived this catastrophe giving the name Boat City (Thoni Puram/ Noah’s Ark) to his native place (Ref. Matsyapurana in Sanskrit and Thevaram In Tamil).

All the above facts demolish the fake Aryan-Dravidian divisions. Indians were free to move to any part of the country to marry and maintain unity of the country. There was no mention of Aryan, Dravidian conflicts in the Tamil and Sanskrit literature.

***********************