Agastya in Jataka Tales and Kalidasa

450px-Agastya,Prambanan,Indonesia
Agastya Statue from Prambanan, Indonesia.

Written by London Swaminathan
Post No.1105; Dated 13th June,2014.

The Jataka Tales is a collection of tales of the numerous births of Bodhisatva, who later became the Buddha. It is a record of very old folk tales adapted by the Buddhists to suit their needs. They were current among Indians from time immemorial. Buddhists did not hesitate to distort and twist all the old tales including the popular Hindu stories for their purpose. They even used Ramayana, Mahabharata , Puranas and Panchatantra stories and ‘’Buddhaized’’ the stories. One of such stories is the story of great Agastya whom the Tamil poets celebrated as the first patron of Tamil language. Tamil language came to Agastya through Shiva and his son Lord Skanda (Muruga in Tamil).

In the Akitti (Agastya) Jataka, Bodhisattva was born as Akitti as a son of a Brahmana mahasala (Brahmin scholar) Later he became an ascetic with his sister Yasavati. He went to Damila (Tamil country) from Kasi. Agastya lived in a garden in Kaveripattana. The reason for Agastya’s southward movement was the nuisance from his admirers. But he was pestered by his admirers in the South as well. Then he went to Karadipa also called Ahidipa (May be Nagadwipa; Ahi=snake, Naga). Nagadwipa was used for Sri Lanka as well as South East Asia. Agastya attained Moksha there.

Puranas say that Agastya drank ocean to convey the message symbolically that he crossed the ocean to go to South East Asia. His statues are found in different South East Asian countries. He was worshipped throughout South East Asia.

Kalidasa who lived in the first century BCE gives us very interesting details:-

agastya in London
Agastya Statue i London V&A Museum

Kalidasa’s Amazing knowledge about South India
Kalidasa in his Raghuvamsa Kavya confirmed that Agastya was closer to the Pandyas of the South. According to Tamil literature Agastya lived in the Podiya Hills ( a part of the Western Ghats inside the Tamil territory). Kalidasa’s knowledge about India was amazing. He was the first poet to give a clear and complete picture of India. Though Arjuna’s travel in the Mahabharata and Rama’s travel in the Ramayana described South India, a lot of things were vague—mixed with myths.

Kalidasa was the first Tourist guide in the world and he was the first Travel write in the world. Kalidasa’s Meghaduta described India from the Vindhya Hills up to the Northern Himalayas. His Raghu Vamsa Kavya described a vast area from Iran to South India.

During Indumati’s Swayamvara kings from different parts of India assembled to marry Indumati. Pandya king was also there. Kalidasa never mentioned other Tamil kings Choza or Chera. Pandyas were the oldest of the three kingdoms. Chozas came from North West India where Sibi ruled (Please read my article ‘’Sibi Story in Tamil literature’’ for more details)

220px-Kaviratna_Kalidasa_poster

The Agastya story shows that the contact between South India and North India existed even before Buddha. According to the Puranas, Agastya was sent to the South by Lord Shiva to solve the population explosion in the north. Tamil commentators on a Purananuru verse (201 by Kabilar) also confirmed that he came with the Velir tribes to South India.

Following slokas from the Raghuvamsa are noteworthy:–
Raghuvamsa-4-21, 4-44,4-49; 6-60,6-61/65

kalidasa_idk168
4-44 South is the direction of Agastya
4-46 Malaya (Pothiya) hills, Pepper plants, Parrots
4-47- Sandal wood
4-49 even sun shines less bright because of the might of the Pandyas
4-50 pearl fisheries where River Tambraparni meets the sea
4-53, 4-59 Parasurama land between Sahya hills and the sea (Kerala)
4-54 Beautiful Kerala girls and Cosmetics
6-61 Agastya –Pandya connection, Aswamedha yagna of Pandya
6-62 Ravana- Pandya peace treaty
6-64 Malaya hills (Podiya Hills)
6-65 Pandyas are black skinned
4-21 Agastya Star (Canopus)

Pandya kings copper plates, Purananuru verse 201 by Kapilar, Pura. 2 and commentaries on several other verses confirm the link between the Pandyas and Agastya, Podiya and Himalayas, Yagas performed by the Pandyas and Agastya.

Sage Agastya was inseparable from Tamil Nadu as Parasurama was
Inseparable from Kerala.

kalidas encyclopedia
Also read my earlier posts:
Is Brahmastra a Nuclear Weapon? Sept.7, 2011

Great Engineers of Ancient India Sep.10, 2011

Did Agastya drink Ocean? (Post No.931, Dated 25-3-14)

நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!

ram,maha

நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!

ச.நாகராஜன்

Written by S Nagarajan
Post No.1104; dated 13th June 2014.

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

தைவக்ஞர் சூரிய கவி
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

ramayan,mahabaharat

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II
-ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

rama brown

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II
– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

rama B&W

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II
-ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

krishna and balarama
Picture of Krishna and his brother Balarama.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II
– ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!
krisna bow

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

ஜோதிடமும் கோடீஸ்வரர்களும்!

c74d9-hongkongzodiaz

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1103 தேதி ஜூன் 13, 2014.

ஜோதிடம் உண்மையா? ‘’கொஞ்சம் உண்மை’’ இருக்கிறது என்று சொல்ல ஒரு ஆதாரம் கிடைத்து இருக்கிறது.

ஜோதிடம் உண்மையானால் நடக்கப் போகும் விஷயங்களில் நூறு சதவிகிதம் இல்லாவிட்டாலும் 75 சதவிகிதமாவது முன் கூட்டியே சொல்ல வேண்டும். நடந்த பின்னர் நாத்ரதாமஸ் Nostradamus (1503 – 1566) என்பவர் அன்றே சொன்னார் என்று பிதற்றுவதில் பொருள் இல்லை. ஜோதிடர்கள் உண்மை விளம்பிகளாக இருந்தால், நடக்கப் போகும் விஷயங்களை முன்கூட்டியே எழுதி ஒரு ‘கவரில்’ போட்டுக் கொடுக்கட்டும். பின்னர் ஆண்டு முடிவில் நான் சொன்னதில் இத்தனை சரியாக இருந்தது ஆகையால் ஜோதிடம் உண்மை என்று சொல்லட்டும்.

35 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் மதுரை தினமணியில் சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். எனது தந்தை செய்தி ஆசிரியராக இருந்தார். மதுரையில் உள்ள ஒரு வணிகப் பிரமுகர், எல்லா ஜோதிடர்களுக்கும் ஒரு சவால் விட்டார். “நான் பத்து பிரமுகர்களின் ஜாதகங்களை ஒரு உறையில் போட்டுத் தருகிறேன். அதில் பத்து கேள்விகள் இருக்கும்— சரியான பதில் தரும் ஜோதிடருக்கு பெரிய ரொக்கப் பரிசு” என்று அறிவித்தார். ஜோதிடர்களுக்கு அவை யாருடைய ஜாதகங்கள் என்று தெரியாது. ஆனால் மதுரைப் பிரமுகர்கள் அடங்கிய கமிட்டிக்கு மட்டும் தெரியும். குறிப்பிட்ட நாளன்று பொது மக்கள் முன்னால் அந்த உறைகள் (கவர்) பகிரங்கமாகத் திறக்கப்பட்டு ஆராயப்படும் என்று தினமணியில் செய்தி வெளியானது. எங்கள் தினமணி ஜோதிடர் உள்பட யாரும் அந்த சவாலை ஏற்க முன்வில்லை!!

ஜோதிடம் உண்மைதான். ஆனால் அதை சரியாக கணக்கிட்டுச் சொல்லும் திறமைசாலிகள் குறைந்துவிட்டனர். நாம் சூப்பர் கம்ப்யூட்ட்ர் யுகத்தில் வாழ்கிறோம். சரியான முறையில் எல்லா விஷயங்களையும் அதில் போட்டுவிட்டால் பிறகு நல்ல முறையில் ஆரூடம் சொல்ல முடியும். ஒரு காலத்தில் நானும் என் சகோதர்களும் அஷ்டாவர்கம் வரையில் போட்டு ஜாதகங்களை ஆராய்ந்ததால் இதில் எவ்வளவு கணக்குகள் உள்ளன என்பது புரிகிறது. மேலும் ஜாதகம் கொண்டு வருவோரும் சரியான ஜாதகத்தைத் தான் கொடுத்தாரா என்பதையும் அறியவேண்டும்.

ஜோதிடம் உண்மை என்பதற்கான சில ஆதாரங்களைக் காண்போம். பெரிய பெரிய சுவாமிகள், பாபாக்கள் போன்றோர் ஒரு பக்தரைப் பார்த்த மாத்திர த்திலேயே அவர்கள் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளைச் சொல்லிப் பரிகாரம் சொல்கிறார்கள். அவர்களுடைய ஜாதகங்களைப் பாராமலேயே உள்ளுணர்வு, தெய்வீக ஆற்றல் மூலம் இப்படிச் சொல்வதை அருகில் இருந்து கவனித்து இருக்கிறேன்.

லண்டன் டைம்ஸ் கோடீஸ்வரர் பட்டியல்
புகழ்பெற்ற லண்டன் ‘டைம்ஸ்’ பத்திரிக்கை ஆண்டுதோறும் பிரிட்டனில் வசிக்கும் ஆயிரம் கோடீஸ்வர்களின் பட்டியலை வரிசைக் கிரமமாக வெளியிடுவதுண்டு. இதை ஆண்டுதோறும் வாங்கி அலசி ஆராய்வது எனக்குப் பிடித்தப் பொழுது போக்குகளில் ஒன்று. எந்தந்த வகையில் யார் யார் எவ்வளவு பணம் சம்பாதித்தார்கள் என்ற ஆய்வுரைகளும் அதில் இருக்கும். சினிமா மூலம் சம்பாதித்தவர்கள், இசைத்துறை மூலம் சம்பாதித்தவர்கள் வணிகம் மூலம் சம்பாதித்தவர்கள் என்று பல வகைகள் இருக்கும். ஒரு மூலையில் சிறிதாக ஜோதிட விஷயமும் இருக்கும். எந்த ராசிக்காரர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும் ஒரு பத்தி இருக்கும். இதில் வியப்பான விஷயம்,– எப்போதும் மிதுன ராசிக்காரர்கள்—பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். விருச்சிக ராசிக்காரகள் (எனது ராசி) அடிமட்டத்தில் இருக்கிறார்கள்!!

இந்து ஜாதக முறையில் ராசி கணக்கிடுவதும், மேலை நாட்டு முறையில் ராசி கணக்கிடுவதும் வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக எனக்கு ஜாதகப் படி தனுர் ராசி. மேலைக் கணக்குப்படி விருச்சிகம் (ஸ்கார்ப்பியோ). மேலை நாட்டில் நீங்கள் எந்த மாதத்தில் என்ன தேதியில் பிறந்தீர்களோ அதன்படி ராசி இருக்கும். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் மேலை நாட்டு (சூரியக் கணக்கு) முறையில் உங்கள் ராசிகள் என்ன என்பது தெரியும். ஆனால் இன்னும் ஒரு வியப்பான செய்தி:- இந்து ஜோதிட முறையில் கணக்கீட்டாலும் மிதுன ராசிக்கார்கள், — பணக்கார் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்கள்!!!

zodiac

வெளி நாட்டுப் பத்திரிக்கைகளில் விளையாட்டு வீரர்களின் ராசிகள், நடிகர் நடிகையர் ராசிகள் என்று அவ்வப்போது அலசி ஆராயும்போதும் சில ராசிக்காரர்கள், அந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவது ஜோதிடம் உண்மைதான் என்று நிரூபீக்கிறது.

இதோ லண்டனில் இருந்து வெளியாகும் ‘’சண்டே டைம்ஸ்’’ பத்திரிக்கை வெளியிட்ட இரண்டு ஆண்டு (2013 & 2014) கோடீஸ்வர்களின் ராசிகள்:–

According to Sunday Times Rich List 2013:

Gemini மிதுனம் 107 கோடீஸ்வரர்கள்
Aries மேஷம் 102 கோடீஸ்வரர்கள்

Capricorn மகரம் 102 கோடீஸ்வரர்கள்
Leo சிம்மம் 96 கோடீஸ்வரர்கள்
Taurus ரிஷபம் 96 கோடீஸ்வரர்கள்
Aquarius கும்பம் 93 கோடீஸ்வரர்கள்
Sagittarius தனுர் 91 கோடீஸ்வரர்கள்
Cancer கடகம் 87 கோடீஸ்வரர்கள்
Pisces மீனம் 86 கோடீஸ்வரர்கள்
Libra துலா 85 கோடீஸ்வரர்கள்
Virgo கன்னி 83 கோடீஸ்வரர்கள்
Scorpio விருச்சிகம் 71 கோடீஸ்வரர்கள்

sundaytimes2

According to Sunday Times Rich List 2014:

மிதுனம் Gemini 118 billionaires கோடீஸ்வரர்கள்
கன்னி Virgo 111 billionaires கோடீஸ்வரர்கள்
மகரம் Capricorn 98 billionaires கோடீஸ்வரர்கள்
மீனம் Pisces 95 billionaires கோடீஸ்வரர்கள்
மேஷம் Aries 95 billionaires கோடீஸ்வரர்கள்
ரிஷபம் Taurus 91 billionaires கோடீஸ்வரர்கள்
தனுர் Sagittarius 90 billionaires கோடீஸ்வரர்கள்

சிம்மம் Leo 89 billionaires கோடீஸ்வரர்கள்
கும்பம் Aquarius 89 billionaires கோடீஸ்வரர்கள்
கடகம் Cancer 81 billionaires கோடீஸ்வரர்கள்
துலா Libra 76 billionaires கோடீஸ்வரர்கள்
விருச்சிகம் Scorpio 73 billionaires கோடீஸ்வரர்கள்

ஆனால் இந்தப் பட்டியல் துல்லியமானது அல்ல என்றும் அவர்களே அடைப்புக் குறிக்குள் எழுதி இருக்கிறார்கள். ஏனெனில் ஆயிரம் கோடீஸ்வர்களின் ராசிகளும் கிடைப்பதில்லை. எந்தெந்த லட்சாதிபதிகளின் விவரங்கள் கிடைத்ததோ அவைகளை மட்டுமே கொண்டு தயாரிக்கப் பட்டது இந்த ஜோதிட ராசிப் பட்டியல் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

hindujas
Picture of Hinduja Brothers, Richest in the UK.

பட்டியலில் காணப்படும் சுவையான விஷயம் மிதுனராசியும், மகர ராசியும் இரண்டு பட்டியல்களிலும் உச்சியிலேயே இருப்பதைக் காணலாம். வுருச்சிக ராசி எப்போதுமே கீழேயே இருப்பதைக் காணலாம்.

என்னுடைய ராசி விருச்சிக ராசி. எப்போதுமே ஏழைதான். ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். ஏனெனில் லெட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி இருக்க மாட்டாள். சரஸ்வதி இருக்கும் இடத்தில் லெட்சுமி இருக்க மாட்டாள். அறிவு என்னும் நிதி இருந்தால் போதுமே!

(ஆங்கிலக் கணக்குப்படி ராசிகள் வேறு என்பதால் உங்கள் ஜாதகப்படியான ராசியை வைத்து குழம்பிக் கொள்ளாதீர்கள். தமிழ் பத்திரிக்கைகள் பெரும்பாலும் இந்து முறையையும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் மேலை/ஆங்கில முறையையும் பின்பற்றுகின்றன

Billionaires and Astrology!!

zodiac 1
Written by London Swaminathan
Post No. 1102; Dated 12th June 2014.

We have some proof to say that astrology is right to some extent.

If astrology is true, it should give us some concrete proof. If astrology is true, it should forecast all the events, or at least 75% of the events that is going to happen. I don’t believe in Nostradamus. He might have been a true seer or a prophet or a clairvoyant. But the way he wrote always gave us two or three meanings or it may be interpreted in the way you wish. So anyone quoting him must produce all predictions before hand and should say at the end of the year in how many he or she was right. Everybody fools people by saying that Nostradamus (1503 – 1566) had already prophesied or predicted this and that. Had he alive today he himself would refute most of those cheats.

When I was working as Senior Sub Editor for Dinamani Newspaper in Madurai there was a wealthy businessman who challenged all the astrologers of Tamil Nadu. He told them through our newspaper that he would submit ten questions and some horoscopes of living people who are very popular. But the astrologers would not know whose horoscope it is. Only a committee of Madurai VIPs would know. All the envelopes with the predictions of the astrologers would be opened by the committee in front of the general public. Any astrologer with 75% success rate would get a big cash prize. My father who was News Editor at that time published this appeal several times. No astrologer came forward to accept the challenge. The person who challenged the astrologers did this through some club like Rotary or Lions; I don’t remember now. All this happened 35 years ago.

But there are certain indications which show that there is ‘some truth’ in astrology. Only problem is that you need huge calculations and intuition to predict correctly. I have seen even some Swamijis (Babas) saying that because of this planet that someone is undergoing a good or bad period. They don’t do it for money like astrologers. As soon as they look at the person they give predictions like this.

Now and then Western News Papers publish the zodiac signs of sportsmen or actors or actresses. Certain signs always dominate in each and every walk of life.

hindujas
Hinduja Brothers- The Richest in the UK.

Times News Paper Billionaires List
Every year The Sunday Times of London publish a supplement of Rich people in the United Kingdom. They will rank 1000 rich people of the country. The news paper analyses the list from various angles: How many of them made money through mass media, business, arts, films, music, publishing etc. In a small tabular column they also publish the zodiac sign list of the billionaires.

People who are born under Gemini Sign always dominate the billionaires list. Hindu astrology and Western astrology are different. Gemini means Miduna Rasi. So Gemini in Western astrology won’t be the same in Hindu horoscope calculations. Westerners decide your zodiac sign by the date you are born. But to my surprise whether it is Miduna Rasi in Hindu astrology or Gemini sign in Western astrology most of the rich people are born under GEMINI sign!!

Following is the Zodiac Signs on the basis of your birth days. Most of the English news papers follow this:

zodiac 2

According to Sunday Times News Paper Billionaires List 2013:
Gemini 107 billionaires
Aries 102 billionaires
Capricorn 102 billionaires
Leo 96 billionaires
Taurus 96 billionaires
Aquarius 93 billionaires
Sagittarius 91 billionaires
Cancer 87 billionaires
Pisces 86 billionaires
Libra 85 billionaires
Virgo 83 billionaires
Scorpio 71 billionaires

According to Sunday Times Rich List 2014:
Gemini 118 billionaires
Virgo 111 billionaires
Capricorn 98 billionaires
Pisces 95 billionaires
Aries 95 billionaires
Taurus 91 billionaires
Sagittarius 90 billionaires
Leo 89 billionaires
Aquarius 89 billionaires
Cancer 81 billionaires
Libra 76 billionaires
Scorpio 73 billionaires

But this list is not perfect. The list itself says wherever the signs of the billionaires are known they are taken into account. But Gemini and Capricorn are always at the top of the list!!

rich2014

I am a poor Scorpio! I am destined to be poor in money! But rich in knowledge!!!
It is said that Lakshmi (goddess of wealth) and Saraswati (Goddess of Knowledge) never live together!!!

contact swami_48@yahoo.com

ஏலாதி தரும் அபூர்வ செய்திகள்!

tamil veeran

ஏற்றம் தரும் ஏலாதி!-Part 2

லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை (Written by Santanam Nagarajan; Part 2 about Tamil Ethical book Elathi)

By S.Nagarajan ; Post No.1101 dated 12th June 2014.

காலன் வராமல் காக்கும் வழி!
பூமியில் ஒரு ஜனனம் ஏற்பட்டவுடன் அந்தப் பிறப்புடன் உடனே ஒட்டிக் கொள்ளும் ஒரு வார்த்தை மரணம் தான்! பாரபட்சமில்லாது வரும் காலனது வருகையை ஆசிரியர் அழகுற விளக்குவதைப் பார்க்கும் போது நயமான கருத்து நம் உள்ளத்தில் ஆழப் பதிகிறது.

அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை (பாடல் 37)

அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான்,அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்! என்னே இக் காலன் என கணிமேதாவியார் வியக்கும் போது கூடவே நாமும் வியக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவனை வெல்லத் தவம் அல்லவா வழி! அதை மேற்கொள்வோம் என பாடல் வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலைப் படித்து விட்டு கவியரசு கண்ணதாசனின் பாடலைப் பார்ப்போம்:
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது -அது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது-அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா (பாலும் பழமும் திரைப்படப் பாடல்).

நயமான உண்மைக் கருத்தை கண்ணதாசனுக்கு இனம் காண்பித்தவர் ஏலாதியார் என்றால் மிகை அல்ல!

எழுத்தினால் நீங்காது, எண்ணால்ஒழியாது ஏத்தி வழுத்தினால் மாறாது என அடுத்த பாடலிலும் ஜனனம் மரணம் என்பது கல்வி அறிவினாலோ, தியானத்தினாலோ, அல்லது துதிக்கும் பாடல்களினாலோ நீங்காது என்று வலியுறுத்தி நல்ல ஒழுக்கத்துடன் தவம் புரிந்தால் ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபடலாம் என பேருண்மையை நூலாசிரியர் கூறுகிறார்.

ஆறு மனமே ஆறு; நூல் கூறும் கட்டளைகள் ஆறு

இனி பாடல்களில் ஆறு ஆறாகக் கூறும் பல உண்மைகள் சுவை பயப்பதோடு அரிய நீதிகளையும் உணர்த்துகிறது.

போகக்கூடாத இடங்கள் ஆறு:
கொலைக்களம் வார் குத்துச் சூதாடும் எல்லை,
அலைக்களம் போர்யானை ஆக்கும், – நிலைக்களம்,
முச்சாரிகை ஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை,
நச்சாமை நோக்காமை நன்று (பாடல் 12)

கொலை செய்யும் இடம், வெள்ளச் சூழல் உள்ள நீர் நிலை,சூதாடும் கழகம், சிறைச்சாலை,யானைகளைப் பழக்குகின்ற இடம், தேர்,குதிரை, யானை ஆகிய முப்படைகள் செல்லும் இடத்திற்குப் போகாதே!

????????????????????????????????????????????????????

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பாடலைப் பார்த்தால் ஏவுகணைகள் ஏவும் இடம், துப்பாக்கிப் பயிற்சி பெறும் இடம்,தரை, விமானப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் ‘இந்த எல்லையில் வரக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை சாதாரணமாகக் காண்கிறோம். உயிரைப் போக்க வைக்கும் அபாயங்கள் நிறைந்த இடத்திற்கு வலியப் போகாதே என்று கூறி ஆயுளை நீட்டிக்கும் வழிகளை கணி மேதாவியார் காட்டுகிறார்!

பெரியவன் யார்?
கொல்லான்கொலை புரியான்,பொய்யான் பிறர் மனை மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் – சொல்லும்
மறையில் செவி இலன்,தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை (பாடல் 19)
கொலை செய்யாதவன், பிறர் கொலை செய்வதையும் விரும்பாதவன்,பொய் சொல்லாதவன், பிறர் மனைவியிடம் செல்லாதவன்,தீயவர்களிடம் செல்லாதவன், தீய சொற்களைப் பேசாதவன், கேளாதவன் ஆகிய குணங்களை உடையவனே பெரியோன்!

தேவாதி தேவன் யார்?
உரையான் குலன் குடிமை: ஊனம் பிறரை
உரையான்:பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண்ணு குழலாய், ஈத்து உண்பான்,
தேவாதி தேவனாய்த் தேறு (பாடல் 32)

வண்டுகள் மொய்த்து உண்ணும் கூந்தலை உடைய பெண்ணே, தன் குல உயர்வு,குடிப் பிறப்பு உயர்வு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசாதவன்,பிறரது இழிவினை இகழ்ந்து உரைக்காதவன்,தன் பொருளை ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்!

மறை வழி நடப்போருக்கு எவையெல்லாம் வந்து சேரும்?
சென்றபுகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்றநிலை கல்வி வள்ளன்மை – என்றும்,
அளி வந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழி வந்தார் கண்ணே வனப்பு (பாடல் 1)

திசை எங்கும் பரவிய புகழ், செல்வம்,மேன்மையான நிலை,வீரத்தில் அசையாத நிலை,கல்வி,கொடை இந்த ஆறும் மறையை நன்கு கற்று ஒழுகுவோருக்கு அழகைத் தரும்.

hairstyle2

எந்த அழகு உண்மை அழகு?
கல்வியைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் வழிவழியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
அந்தப் பாடல்:-

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடில் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)

இடுப்பழகு, தோளழகு,செல்வத்தின் அழகு, நடையழகு, நாணத்தின் அழகு,கழுத்தின் அழகு – இவையெல்லாம் அழகே அல்ல;எண்ணும் எழுத்தும் கூடிய கல்வி அழகே அழகு!

இந்தப் பாடலை பர்த்ருஹரியின் கீழ்க்கண்ட பாடலோடு (நீதி சதகம் பாடல் 15) இணைத்துப் பார்ப்போம்:

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் – மனிதனை வளைகள் அலங்கரிப்பதில்லை
ஹாரா ந சந்த்ரோஜ்வலா – சந்திரன் போல பிரகாசிக்கும் முத்து மாலைகளோ
ந ஸ்நானம் ந விலேபகம் ந குஸ¤மம் – குளிப்பதோ, சந்தனம் பூசிக் கொள்வதோ
ந அலங்க்ருதா மூர்தஜா – வாரி விட்ட சிகையோ
ந பூஷயந்தி – மனிதனை அலங்கரிப்பவையாகா
யா ஸம்ஸ்கிருதா தார்யதே ஏகாவாணீ – எது நன்கு பரிசுத்தமாகத் தரிக்கப்படுகிறதோ அந்தக் கல்வி ஒன்று தான்
புருஷம் ஸமலங்கரோதி -மனிதனை நன்கு அலங்கரிக்கச் செய்கிறது
அகில பூஷணானி க்ஷ£யந்தே வாக் பூஷணம் பூஷணம்- எல்லா அழகும் நசிக்கின்றன கல்வியுள்ள வாக்கே சிறந்த அழகு.

032maruthi

அபூர்வ செய்திகள்!
ஏலாதி சில அபூர்வமான செய்திகளையும் ஆங்காங்கே தெளித்துச் செல்கிறது!
ஒருவன் தவத்தினைச் செய்வானாயின் அவனுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் பிறப்பில் வீடு பேறு வாய்க்கும் என்று உறுதி படக் கூறுவது சுவையான செய்தி.

அடுத்து பல்வேறு வகையில் பிறப்பு நேரிடுவதைச் சுட்டிக் காட்டி அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு உரிய பெயரையும் பட்டியலிட்டுத் தருகிறது!(பாடல்கள் 31,32).இது வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத ஒரு பட்டியல்!

ஔரதன் – கணவனுக்குப் பிறந்தவன்; கேத்திரசன் – கணவன் இருக்கும் போது பிறனுக்குப் பிறந்தவன்;கானீனன் – திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன்;கூடோத்துபன்னன் – களவில் பிறந்தவன்; கிரிதரன் – விலைக்கு வாங்கப்பட்டவன்;பௌநற்பவன் – கணவன் இறந்த பிறகு பிறனை மணந்து பெறப்பட்டவன்;தத்தன் – சுவீகார புத்திரன்;சகோடன் – திருமணத்தின் போதே கருவில் இருந்தவன்;கிருத்திருமன் – கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன்;புத்திர புத்திரன் – மகனுக்குப் பிறந்தவன்;அபவித்தன் – பெற்றோர்கள் கைவிட மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்;உபகிருதன் – காணிக்கையாக வந்தவன்!

இப்படிப் பற்பல செய்திகளை நூலில் பரக்கக் காணலாம்!

சொல்வளம்
நூலின் சொல்வளம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது.ஒரே ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம்:

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் – மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று (பாடல் 66)

பொய் இல்லாத பெரியோர் ஆராய்ந்த வீடு பேற்றின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளி இல்லை;சொல் இல்லை; மாறுபாடு இல்லை; சோர்வு இல்லை;துன்பமில்லை; இனி தூக்கமும் இல்லை!

tamil puu parithal

நூலின் யாப்பு
உலகிலேயே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியிலும் இல்லாத ஒரு பா வகை வெண்பா. சொல் நயத்தையும் ஓசை நயத்தையும் கருத்து நயத்தையும் தரும் வண்ணம் இதன் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயமே.

ஆகவே இதை மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம்! ஆகவே தான் ‘வெண்பா ஒரு கால் கல்லானை’ என்ற மொழி வழக்கில் உள்ளது. ஒரு முறை கேட்டாலேயே வெண்பா மனனம் ஆகி விட வேண்டுமாம்! வாழ்வியல் நீதிகளைக் கூறும் இந்த நூலை அதனால் தான் கணி மேதாவியார் வெண்பாவில் அமைத்துத் தந்தார் போலும்.அனைவரும் இதனை சுலபமாக மனத்தில் இருத்திக் கொள்ளலாமே!

ஆறு பொருள்களைச் சொல்ல வேண்டியிருப்பதால் உவமை நயங்கள், அலங்கார சாஸ்திரம், அணிகள் ஆகியவற்றிற்கு நூலில் அதிகம் இடம் இல்லாமல் போய் விட்டது. அதிலும் அழகிய பெண்ணை அழைத்து நீதியைச் சொல்வதால் அதில் சில சொற்கள் போய்விடுவதால் சொற்களின் இழப்பைப் புலவர் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்களின் அழகை வர்ணித்து அந்த இடத்தில் உவமை நயத்தைக் காட்டி உவமைகள் உள்ள நூலாக இதை ஆக்கியுள்ளார் அவர்!

மனிதனுக்கு ஏற்றம் தரும் வாழ்வியல் நீதிகளை எண்பது பாக்களில் தர வேண்டும் என்று நினைக்கும் கணிமேதாவியாரின் துடிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெரிவதால் ஏலாதி அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நூல் ஆகி விட்டது.

பல முறை இதைப் படித்தால் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்கையும் அடையும் ரகசியம் புலப்படும்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை.))

****************************************************
தொடர்புடைய இதர கட்டுரைகள்: மந்திர மொழி தமிழ், பத்தும் பெற்ற தமிழ்,சர்க்கரை போற்றிப் பணிந்த தமிழ், ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: snagarajans@gmail.com

காஞ்சிப் பெரியவர் காட்டிய அற்புதக் கல்வெட்டு

 

 

 

poyyilimalai

 

 

 


Nagasamy new 1

Nagasamy new 2

 

 

 

Tamil Arts Academy (Dr R Nagasamy’s website)

 

 

Aintinaikal (Five Land Divisions) in Veda. Dr. R.Nagaswamy 14-Jan-2013. The Camakam, hymns of the Kṛṣṇa Yajur Veda appearing as the seventh prapataka 

 

Dr R Nagasamy’s Tamil and English articles are available in his blog http://www.tamilartsacademy.com

poyyilimalai2

 

Do Saints’ Samadhis have Divine Power? Can They do Miracles?

L_samadi
Shirdi Baba Shrine with Samdhi

Written by London Swaminathan
Post No.1099; Dated 11th June 2014.

Hindus believe that by visiting the Samadhis of saints they can be cured of diseases or their problems can be solved in a trice.

Is it true? Yes, “It is true”, say great saints.

Thousands of devotees visit Manthralaya, where Sri Ragavendra Swami’s Samadhi is located, Shirdi where Sri Baba’s Samadhi is located, Govindapuram Adhistanam where Sri Bodendra Saraswati’s Samadhi is located and several Samadhi’s of Muslim saints in North India.

A Samadhi is a place where an enlightened soul is laid to rest after his or her death. Such holy places are called Brundavanam or Adhishtanam. Usually a Tulsi (holy basil) plant or a Shivalainga is installed on the Samadhi.

Bodendra was the 58th pontiff of Kanchi Kamakoti Peedam. In the calm silence of the night, a melodious voice, uttering Rama Nama (name of Lord Rama) is heard, rising from subdued tones to a crescendo, and then fading into silence again. Sri Bodendra recited Rama Nama throughout his life.
Kanchi Paramacharya (1894-1994) liked to meditate in the serene atmosphere of the Bodendra Adhistana. When he was staying at Tiruvidaimarudur, Paramacharya used to go to Govindapuram and do meditation in the stillness of the night unattended and unseen. That is, nobody would have noticed his departure and suddenly he would be seen sitting there in meditation. Kanchi Paramacharya said that one can hear chanting of Rama nama in the Govindapuram Adhistanam of Sri Bodendra Saraswati.

rayaru-mantralaya
Mantralaya: Sri Ragavendra’s Samadhi

Miracle by Sri Ragavendra
Devotees of Sri Ragavendra believe that his power will remain in the samadhi for 600 years. Sir Thomas Munro, Bellary District collector (later he became Governor of Madras), went to Sri Ragavendra’s Samadhi on the banks of river Tungabadra to discuss a dispute between the Mutt and the Government in the 1800s. When other officials told him that they couldn’t solve it, he himself went there, removed his shoes and hat and went in to discuss the issue. Instead of meeting the Mutt officials, he saw Sri Ragavendra himself emerging from his Samadhi. No one else could see Swamiji. The invisible discussion went in for some time and he went back and quashed the government order. It was duly gazetted.

Famous South Indian temples attract millions of people because the Siddhar (enlightened souls) Samadhis are located in their vicinity. Eighteen famous Siddhars attained Mukti in 18 famous shrines of Tamil Nadu, Kerala and Andhra Pradesh.

Following is the list of 18 Siidhars and the places where their Samadis are located:
1.Agasthiyar – Thiruvanathapuram
2.Idaikkadar- Tiruvannamalai
3.Kamalamuni- Tiruvarur
4.Karuvurar- Karur
5.Kuthampai- Mayavaram
6.Konkanar- Tirupati
7. Gorakkar- Perur
8.Sattaimuni – Thiruvarangam
9.Sundaranandar – Madurai
10.Thanvanthiri _ Vaitheeswarankoil
11.Thirumular _ Chidambaram
12.Nandeeswarar – Kasi
13.Pathanjali – Rameswaram
14.Pambatti – Sankarankoil
15.Bogar – Pazani
16.Machamuni- Tirupparankundram
17.Ramathevar – Azakarmalai
18.Vanmikanathar – Ettukudi

(There are alternate lists with slight variations)

bodendral,govindapuram
Sri Bodendra Adhistanam, Govindapuram

Bones say God’s Name!!

Following anecdote told by Swami Ramdas also prove this point:
A famous saint of Maharashtra once paid a visit to a place called Mangalwedha, about eight miles from Pandharpur. At that time a huge fort was under construction at Mangalwedha. While the saint was passing by the high wall of the fort, where hundreds of labourers were working, the wall collapsed and many including the saint were killed, smashed down by the fall of the wall. The devotees of the saint missed him and started a search. After a long and arduous search, they could not find him. Some people of Mangalwedha reported that in all probability the saint must have been crushed to death beneath the fallen wall of the fort.

Accordingly, a large number of devotees joined in together in the work of removing the fallen wall. When they did so, they found a number of skeletons of people who had died in the accident. The devotees of the saint wished to single out his bones so that they could raise a tomb over them. The difficulty, however, was that the bones of the people killed were mixed up and they did not know which were the bones of the saint.

govindapuram
Sri Bodendra Adhishtanam

Now a great devotee of Pandharpur Vithoba — the Deity of the great temple there – happened to pass that way. He understood the perplexity of the devotees and said,“ I shall be able to pick out the bones of the saint”. So saying he took out the bones that were lying helter-skelter and holding them one by one to his ear, he was able to separate saint’s bones from those of others. Such of the bones as were singing the name of the Pandharpur deity – Vithal – he separated from others. The sound of name of God had entered into the very marrow of the saint’s bones by his unceasing practice of chanting the Name. Such is the power of the Name.

contact swami_48@yahoo.com

ஏற்றம் தரும் ஏலாதி!-Part 1

05FRLIBRARY8_UVS_1507555g (1)

ச.நாகராஜன்

Post No 1098; Dated 11th June 2014.

தமிழ் அறநூல்கள்

தமிழில் அறநூல்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் உள்ளிட்ட வாழ்வாங்கு வாழ வேண்டிய அற நெறிகளைக் கூறும் நூல்கள் ஏராளம் தமிழில் உள்ளன.

இந்த வகையில் பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி சுவையான விதத்தில் அறநெறிகளைக் கூறுவதோடு சற்று வித்தியாசமாகவும் அமைந்துள்ள ஒரு நூல்.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று புறம் பற்றியும்,ஆறு நூல்கள் அகம் பற்றியும் ஏனைய பதினோரு நூல்கள் அறம் பற்றியும் கூறுவது உற்று நோக்கத் தக்கது. கி.பி.100 முதல் கி.பி 500 முடிய உள்ள காலத்தில் மலர்ந்த இந்த நூல்கள் பெரும்பாலும் அறநெறிகளை வலியுறுத்த எண்ணிய முனிவர்கள், பொய்மை இல்லாப் புலவர்கள் மற்றும் சமண ஆசாரியர்களால் எழுதப்பட்டவையாகும். இதே காலகட்டத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பர்த்ருஹரியின் நீதி சதகம் நூறு பாடல்களில் அற்புதமாக பல நீதி உரைகளை விளக்குகிறது. வடமொழியில் அமைந்துள்ள இந்த நூலை மேற்கோள் காட்டாதவர் இல்லைஆக பற்பல அற நூல்கள் பாரதமெங்கும் எழுந்தமையால் இதை அறநூல்களின் காலம் என அழைக்கலாம்.

அறநெறிகளின் முக்கியத்துவம்
அறநெறிகளின் முக்கியத்துவத்தை, “தனது ஆளுமையின் அகத்தன்மையின் நிறைவான நிலையை அடைய மனிதனின் செயல்பாடுகளே அறநெறிகள்” (Ethics is the activity of man directed to secure the inner perfection of his own personality) என்று ஆல்பர்ட் ஸ்வைட்சர் கூறுவார். உலகின் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, தனது ஒப்புமைத் தத்துவத்தையே எடுத்துக் கொண்டு ஒப்புமைத் தத்துவம் இயற்பியலுக்கு மட்டும் தான்;அறநெறிகளுக்கு அல்ல (Relativity applies to physics, not ethics) என்று கூறி மாற்றுக் குறையாத அறநெறி கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்! இந்த வகையில் ஏலாதி போன்ற அறநூலின் தேவையும் வலிமையும் நமக்கு நன்கு புலனாகிறது!

கணிமேதாவியார்
ஏலாதி நூலை எழுதியவர் கணிமேதாவியார். கணித்தலில் மேதையாக இவர் இருப்பதாக இவரது பெயர் சுட்டுவதால் இவர் சோதிடத்தில் வல்லவராக இருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இறைவாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்களைக் கொண்டது ஏலாதி. அருகக் கடவுளை இவர் வாழ்த்துவதால் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

cardamom

ஏலாதி என்ற பெயர் ஏன்
ஏலாதி சூர்ணம் பழைய தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படும் முக்கியமான ஒரு சூர்ணம். ஏலம் ஒரு பங்கும்,இலவங்கப்பட்டை இரண்டு பங்கும்,நாககேசரம் மூன்று பங்கும், மிளகு நாலு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்கும் கலந்த ஒரு கலவை ஏலாதி சூர்ணம்.அரிய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த சூர்ணம் உடல் நலத்தைச் சீராகக் காக்கும் ஒரு அற்புத சூர்ணம்.
இதே போல மன நலத்தையும் அதை முதலாகக் கொண்ட வாழ்க்கை நலத்தையும் சீராக ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கும் வாழ்வியல் நூல் என்பதால் இதற்கு ஆசிரியர் கணிமேதாவியார் ஏலாதி என்ற அதிசயப் பெயரை, அற்புதப் பெயரைச் சூட்டியுள்ளார்.அத்தோடு ஏலாதி சூர்ணத்தை உருவாக்குவதில் ஆறு மூலப்பொருள்கள் இருப்பது போல ஏலாதி பாடல்களில் ஆறு பொருள்களை கணிமேதாவியார் வகுத்து வலியுறுத்துகிறார்.
அற ஸ்பரிசஸங்கள் அன்றாடம் வாழ்க்கையில் ஏற்பட ஏற்பட அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய பெறுதற்கரிய நான்கு பேறுகளையும் பெறலாம் என்பதை அனைத்து அறநூல்களும் வலியுறுத்துகின்றன.

இல்லற நூல், துறவற நூல், நல்லற நூல்
இந்த நூலின் சிறப்புப் பாயிரம்
“இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
அணிமேதையாய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து” என்று வலியுறுத்துவது போல ஏலாதி ஒரு இல்லற நூல்; அத்தோடு துறவிலக்கணம் கூறும் துறவற நூல் அனைத்து அறங்களையும் வலியுறுத்துவதால் ஒரு நல்லற நூல் என்பது நூலைப் படித்தால் விளங்கும்.

பழங்காலத்தில் உளவியல் அடிப்படையில் வாழும் நல் மன வாழ்க்கையைப் பெரியோர் பெரிதும் வற்புறுத்தி வந்தனர். அதற்கான செம்மையான நலங்களை அறநெறி நூல்கள் சுட்டிக் காட்டின.ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தோர்க்கு மனத்தினால் உண்டாகும் நோய்கள் அறவே இல்லாமல் போனது; அவர்களுக்குப் புகழுடைய வாழ்க்கையும் அமையப் பெற்றது.

யாருக்கு இந்த அறநூல் தேவை இல்லை!
கணி மேதாவியார், அற நூல் எதுவும் தேவை இல்லை என்று அறுதியிட்டு உறுதி கூறுகையில் யாருக்குத் தேவை இல்லை என்ற வினா ‘சஸ்பென்ஸாக’ நம் மனதில் எழுகிறது.
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)

பொய்யே சொல்லாதவன், மாமிசம், மது இவற்றை நீக்கியவன், மற்றவர்க்குத் தீங்கு செய்யாதவன், சிறியவர் சேர்க்கையைக் கொள்ளாதவன் மற்றவர்க்கு இன்னாதவற்றைச் சொல்லாதவன் ஆகிய நல் குணங்களைக் கொண்டவனுக்கு மீன் போன்ற கண்களை உடையவளே அறநூல்கள் தேவை இல்லை என்ற பாடலைப் படித்தவுடன் அதில் உள்ள பொருளின் ஆழம் நமக்குப் புரியும்.

chola-flag-2

பொய் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி
சமீபத்தில் பெனிஸில்வேனியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் டேனியல் லாங்பெலோ நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் மனிதர்கள் உண்மை பேசுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு நிகழ்வைக் கண்டார். ஒரு மனிதனைப் பொய் பேசுமாறு சொல்லி அவன் மூளையில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதை ஸ்கேன் செய்து பார்க்கையில் மூளைப் பகுதிகளுக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதோடு அங்கு ரசாயன மாறுதல்கள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டு அதிசயித்தனர்! சிவப்பும் மஞ்சளுமுமாக மூளை ஸ்கேனிங் இயந்திரத்தில் பதிவான மூளைப் படலங்களை அவர்கள் கண்டு வியந்து மேலும் அதிக ஆராய்ச்சிகளைச் செய்தனர். மிகவும் சிக்கலான பொய்களைக் கூட ஒருவன் பேசும் போது கண்டுபிடித்து விடலாம் என்பது அவர்களின் ஆய்வின் முடிவு. பொய் சொல்லச் சொல்ல அந்தப் பொய்யே சொன்னவனைச் சுடும் (தன்னஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் – குறள் 273) என்று அற நூல்கள் சொல்வதை விஞ்ஞான ஆய்வுகளும் இன்று அங்கீகரிக்கின்றன!

இதே போல மாமிசமும் மதுவும் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படுத்தும் தீங்குகளையும் இன்று மருத்துவ வல்லுநர்கள் திறம்பட எடுத்துரைக்கின்றனர்.ஆக வாழ்வாங்கு வாழ ஆறு குணங்கள் தேவை என்பதை இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.தனது பல பாடல்களில் பொய்யை உரைக்காதே என்று அவர் வலியுறுத்திக் கூறுவது அமெரிக்க ஆராய்ச்சியை நினைவுபடுத்தி விஞ்ஞான பூர்வமான வாழ்க்கையை வாழத் தூண்டும் நூல்களின் பெருமை நமக்குப் புலப்படுகிறது!

குபேர பட்டம் பெற வழி!
குபேர பட்டமும் கை கூடும் என்று ஒரு பாடல் வலியுறுத்தும் போது அது எப்படி கை கூடும் என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும்!. 49ம் பாடல் பதில் கூறுகிறது!

யானை குதிரை பொன் கன்னியே ஆநிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம் – ஆன் நெய்யால்
எண்ணன் ஆய் மாதவர்க்கு ஊண் ஈந்தான் வைசிர
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து
வகையறிந்து யானை, குதிரை, பொன், கன்னி,பசு இவற்றையும் தவம் புரிவோர்க்கு பசு நெய்யோடு உணவளிப்பவர் வைசிரவண்ணன் எனும் குபேரனது வாழ்க்கையை அடைவர் என்று கூறுகிறது இந்தப் பாடல். தானம் புரிவோருக்கு தனம் தானே வந்து சேரும் என்பது பொருள்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை .))

(This two part article is written by my brother S Nagarajan:Second part will be published tomorrow: swami)

Guru – Parama Guru – Parameshti Guru – Parapara Guru

Paramacharya-
Sri Kanchi Paramacharya (1894 – 1994) on the throne.

Written by London Swaminathan
Post No. 1097; 10th June 2014.

Guru and God are one. Guru is he who satisfies the spiritual hunger of the aspirant. When an aspirant takes Sanyas (entering Ascetic life) from his Guru he respects him more than God. His respect doesn’t stop there. He worships Guru’s Guru (teacher of the teacher) and his Guru and his Guru. To avoid confusion and to decide the hierarchy, they have special titles.

Guru = One’s spiritual teacher who ordains him.
Parama Guru = Guru’s Guru
Parameshti Guru = Parama Guru’s Guru
Paraapara Guru = Parameshti Guru’s Guru

Kanchi Paramacharya who attained Samadhi in 1994 was respected throughout India including the then Prime minister and President of India. He was installed as the 68th Shankaracharya of Kanchi Kamakoti Peedam with the title Sri Chandra Sekarendra Sarasvati. He had his Parapa guru (1814-1857) with the same name Chandra Sekara. He was Chandra Sekara – 5 and Paramacharya was Chadrasekara -6.

Two anecdotes in the life of Sri Parapa Guru were influenced by some mysterious dreams. He was well versed in Mantra Sastras (scriptures) and so he installed some Yantras in Kanchi Kamakshi Temple and Tiruvanaikka (Jambukeswaram) Akilandeswari Temple near Trichy. Since Adi Sankara made two ear rings to Goddess Akilandeswari long ago which were worn out in course of time, Parapa guru was requested by his devotees to install new ear rings. He did that in Jambhukeswaram and celebrated the Kumbhabishekam (consecration) of Kanchi Temple as well.

kanchi-tapas

Dream No.1
When the Parapaguru was camping in Chennai he had a strange dream at the dead of night. Goddess Kamakshi appeared in his dream and asked him to expedite the consecration ceremony. She showed her head where the hair was dry and matted meaning that Parapaguru must do the consecration quickly. When he had this dream his camp was inside the Fort. Normally the fort was locked during sunset and opened only the next day morning. But he informed the authorities about his dream through some influential people. Immediately the East India Company authorities opened the gates of the Fort in the early hours.

Parapaguru reached Kancheepuram the same day which is forty miles away from Chennai. He went to the temple straight and prayed to Goddess Kamakshi with tears in his eyes. All the arrangements were made for the consecration. Donations were pouring in. There were no transport facilities about 150 years ago and yet a galaxy of intellectuals gathered at Kancheepuram. Consecration of the temple took place in the presence of thousands of devotees.

Dream No.2
When the devotees requested Parapaguru to install new ear studs (Thadanga in Sanskrit) he came to Tiruvanaikka from Kumbakonam. But Sringeri Mutt claimed that they have the sole right to do the Thadanga Prathishta. The issue went to three different courts and the judgements came in favour of Kanchi Mutt. The litigations took four long years and wasted lot of resources. Though Parapaguru installed the new ear studs to goddess Akilandeswari, he himself resented the huge expenditure. He even made a remark that they should have left it Sringeri Mutt.

The devotee who helped the Mutt all through the litigations decided to raise funds. He suddenly disappeared leaving lot of his colleagues to worry. But he came back after a few days. When the Parapaguru asked the reason for it he gave him the reason with a sad face that his proposal was turned down by the King of Thanjavur. He said that the King of Thanjavur could not receive Parapaguru or arrange for his stay at the Thanjavur palace for lack of funds. But the king said that it would be possible another time.

After hearing this, Parapaguru made arrangements to go to Kumbakonam via different route. When his paraphernalia of devotees, officials along with the elephants, horses, cows, and camels reached Tiruvaiyaru road, they were forced to travel towards Thanjavur by the soldiers of Thanjavur. When they resisted they were threatened that it would be considered violation of king’s orders.

shanakara face
Picture of Adi Sankara.

While they were involved in an argument, Parapaguru’s palanquin reached the spot. To everyone’s surprise a grand reception was given to Parapaguru with all the traditional music and Purnakumba. Sri Parapahuru was taken in a grand procession through the streets of Thanjavur with the king. Everyone was wondering what made the king to change his mind suddenly who said early that he had not sufficient funds to receive Parapaguru.
The king had a dream of Lord Sri Chandramouleeswarar who told him to receive Parapaguru with all the traditional honours. Parapaguru stayed there for some time and was honoured with Kanakabishekam (literally bathing with gold coins). Parapaguru was given gold, silver and gem studded jewels. It helped the Kanchi Mutt financially to great extent. All ended well due to the two dreams.

Source: History of Sri Parapaguru of Kanchi Paramacharya (in Tamil) by Brindavanam Trust, Kumbakonam, 1981.

குரு– பரமகுரு — பரமேஷ்டி குரு — பராபர குரு!

Paramacharya-
Sri Kanchi Paramacharya Swami.

கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1096; தேதி 10 ஜூன் 2014.

ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடங்களில் யார் ஒருவர் சந்யாசம் கொடுக்கிறாரோ அவர் குரு என்று அழைக்கப்படுவார். அவ்வாறு சந்யாசம் பெறுபவர் தன்னுடைய குருவை வணங்குவதோடு, குருவுக்கு குரு, அவருக்கு குரு என்று பல தலை முறைகளையும் வணங்குவார். ஆனால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பட்டம் உண்டு.

1.குரு
2.குருவுக்கு குரு = பரம குரு
3.பரம குருவின் குரு = பரமேஷ்டி குரு
4.பரமேஷ்டி குருவின் குரு = பராபர குரு

காஞ்சி சங்கரமடத்தின் தலைவராக இருந்து 1994-ல் சமாதி அடைந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை (பரமாசார்ய சுவாமிகள்) ஆன்மீக உலகம் முழுதும் அறியும். அவர் காமகோடி பீடத்தின் 68-ஆவது பட்டம். எல்லோரும் அவரைப் போற்றி வழிபட்டனர். அவருடைய பராபர குருவைப் பற்றி ஓரிரு சுவையான சம்பவங்கள் உண்டு.

பராபர குருவின் பெயரும் ‘’சந்திரசேகரர்’’தான். சொல்லப் போனால் ’சந்திரசேகரர்’’-5. நமது காலத்தில் நமக்கு அருள் பாலித்த பரமாசார்யார் ’சந்திரசேகரர்’’-6. அவருடைய பராபர குரு 1814 முதல் 1857 வரை பட்டம் வகித்தார். அவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் வேங்கட சுப்ரமண்ய தீக்ஷிதர். தஞ்சாவூர் மஹாராஜாவுக்கு அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதரின் பரம்பரையில் வந்தவர். மந்திர சாஸ்திரத்தில் வல்லவர். ஜம்புகேஸ்வரத்திலும் காஞ்சீ புரத்திலும் மீண்டும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்தவர்.

kanchi-tapas

முதல் கனவு

பராபர குரு அவர்கள் பல தலங்களுக்கு விஜயம் செய்துவிட்டு சென்னையை அடைந்தார். அவர் முகாமிட்ட இடம் சென்னை கோட்டை மதில் சுவருக்குள் இருந்தது. தம்புச்செட்டித் தெருவிலும் ஒரு மடம் இருந்தது. சென்னை சிஷ்ய கோடிகள் சிறப்பான பூஜைகளை குறைவின்றி நடத்தி வந்தனர். திடீரென்று ஒரு நாள் இரவில் பராபர குருவின் (சங்கராசார்யார்) கனவில் காமாட்சி அம்மன் தோன்றினாள். “ இதோ என் தலையைப் பார். என் தலை மயிர், எண்ணை இல்லாது சடையாய்ப் போய்விட்டதைப் பார். பாலாலயம் பண்ணியபின் எத்தனை நாட்களுக்கு தைலாபிஷேகம் இல்லாமல் இருப்பது? உனக்கு ஜீர்ணோத்தாரண கைங்கர்யத்துக்குப் பணம் தேவை என்றால் என்னைக் கேட்டால் கொடுக்க மாட்டேனா? எனக் கூறிவிட்டு மறைந்தனள்.

கனவில் வீசிய ஒளியினால் அப்போதே கண்விழித்த ஆசார்ய ஸ்வாமிகள், அப்போதே காஞ்சீபுரத்துக்குப் போகவேண்டும் என்று மடத்து அதிகாரிகளை எழுப்ப உத்தரவிட்டார்கள். அக்காலத்தில் சென்னைக் கோட்டையின் வாயில் கதவுகள் முன்னிரவில் பூட்டப்பட்டு, விடியற்காலையில்தான் திறப்பது வழக்கம். தன் உத்தேசத்தை செல்வாக்குடைய சில பக்தர்கள் மூலம் சொல்லி அனுப்பினார்கள். ஸ்ரீ ஸ்வாமிகளின் அபிப்ராயத்தை அறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கோட்டைக் கதவைத் திறக்க உத்தரவிட்டனர். பக்தர்களால் மாற்று போகிகளுக்கு (பல்லக்கு சுமப்பவர்களுக்கு) ஏற்பாடு செய்யப்பட்டது. பொழுது புலர்வதற்கு முன் ஸ்வாமிகள் சென்னையை விட்டுப் புறப்பட்டுவிட்டார்.

சென்னையிலிருந்து 40 மைல் தொலைவிலுள்ள காஞ்சீபுரத்தை அடைந்து அன்றே அம்பிகையைத் தரிசித்து தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்தார்கள். சில தினங்கள் கழிந்தன. பணமும் பொருளும் முயற்சியின்றி குவிந்தன. மராமத்து வேலைகள் வெகு விரைவில் முடிந்தவுடன் காமாட்சி கோவில் கும்பாபிஷேகம் (ஜனவரி 22, 1840) சிறப்பாக நடந்தது.

shanakara face
Sri Adi Sankara

தாடங்கப் பிரதிஷ்டை

பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஒன்றான ஜம்புகேச்வரமெனப்படும் திருவானைக்காவலில் கோயில் கொண்டு விளங்கும் ஸ்ரீ அகிலாண்டேச்வரீயின் காதுகளில் ஸ்ரீ ஆதி சங்கரர் தாடங்கங்களை (காதணி) பிரதிஷ்டை செய்தது உலகப் ப்ரஸித்தம். தாடங்கங்கள் சிதிலமடைந்து இருந்ததால் பக்தர்களும் கோவில் ஸ்தானீகர்களும் அந்த தாடங்கங்களை ஜீர்ணோத்தாரணம் செய்து பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று விக்ஞாபனம் செய்தார்கள். ஸ்வாமிகள் இதை ஏற்று 1844ஆம் ஆண்டு திருவானைக்காவலை அடைந்தார்.

ஸ்ரீ சிருங்கேரி மடத்தார் தங்களுக்கே தாடங்கப் பிரதிஷ்டை செய்ய உரிமை உண்டு என்று வழக்கு தொடுத்தனர். திருச்சிராப்பள்ளி பிரின்ஸிபல் ஸதர் அமீன் கோர்ட் (ஜூலை 1844), திருச்சி ஸிவில் கோர்ட், ஸதர் அதலத் உயர்நீதி மன்றம் ஆகிய மூன்று கோர்ட்டு களிலும் வழக்கு, அப்பீல், மேல் அப்பீல் எல்லாம் தள்ளுபடி செய்ய ப்பட்டன. நான்கு ஆண்டுக் காலம் நடந்த இந்த வழக்குகளுக்கு ஏராளமாக பொருட்செலவு ஆயிற்று.

மூன்று நீதிமன்றங்களினாலும் பரம்பரையாகக் காமகோடிபீடத்திற்கு அகிலாண்ட நாயகியின் தாடங்க ஜீர்ணோத்தாரண பாத்யதை ஊர்ஜிதப் படுத்தப்பட்டபின் , பராபர குரு ஸ்வாமிகள், காஞ்சியில் ஸ்ரீ காமாக்ஷிக்கு செய்தபடி, திருவானைக்காவல் அம்பிகை தாடங்கங்க ளுக்கும் கலாகர்ஷணம் செய்வித்து, தாடங்கங்களைப் புதுப்பித்தார். ஒரு நன்னாளில் பரமானந்தத்துடன், ஸ்ரீ அகிலாண்டேச்வரீ அம்பிகையின் காதுகளில் அவைகளைச் சாற்றி, தமக்கும், உலக மக்களுக்கும் தேவியின் பரமானுக்ரஹத்தை ஸம்பாதித்துக் கொண்டார்கள்.

chandrasekara-bharati-abinava-bharati

Sringeri Sankaracharyas Sri Abhinava Bharati and Sri Chandrasekara Bharati swamijis.

இரண்டாவது கனவு

ஸ்ரீ அகிலாண்டேச்வரீயின் தாடங்கங்கப் பிரதிஷ்டை ஸம்பந்தமாக நான்காண்டுக் காலம் நடந்த வழக்கினால் ஏற்பட்ட செலவுகளும்,, யாத்திரைக்கு வேண்டிய அதிகப்படியான பரிவாரங்களினால் ஏற்பட்ட செலவுகளும் சேர்ந்து மடத்திற்குப் பெரிய பளுவாகியது. இதை உணர்ந்த ஆசார்ய ஸ்வாமிகள் மடத்தின் நிர்வாகப் பொறுப்புள்ள அதிகாரிகளைக் கூப்பிட்டு, ‘அம்பிகையின் அனுக்ரஹத்தினால் நமது மடத்தின் பாரம்பர்யமான கைங்கர்யங்கள் ஸ்தாபிதமான மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இவ்வளவு பெரிய பணச் செலவையும், பாரத்தையும், மடத்திற்குப் பிற்காலத்தில் வரக்கூடிய நிர்வாஹி களுக்கு வைத்துவிட்டோமே என்பதை யோஜித்துப் பார்க்கும்போது, ச்ருங்கேரி ஸ்வாமிகள் ஆசைப்பட்டதை அவரே செய்துவிட்டுப் போகட்டுமே என்று இருந்திருக்கலாமே’’ என்று குறைப்பட்டு வருத்தத்துடன் தெரிவித்தார்கள்.

இதைச் செவியுற்ற — நான்கு வருடங்களாகத் தாடங்கங்கப் பிரதிஷ்டை வழக்கில் பிரதிவாதியாக இருந்து , இரவு பகலாகச் சலியாது உழைத்து வந்த மடத்தின் முக்ய அதிகாரி –, ஒருநாள் திடீரெனக் காணப்படவில்லை. எங்கு சென்றார் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.

ஒருவாரம் சென்றது. சோர்வடைந்த முகத்துடன் அவர் திருவானைக்காவல் மடத்திற்குத் திரும்ப வந்து சேர்ந்தார். அவர் வந்த விவரம் அறிந்த ஆசார்யாள், அவரை அழைப்பித்து, சில தினங்களாக எங்கு சென்றிருந்தார் என நிர்பந்தித்துக் கேட்டார்கள். தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்று மஹாராஜாவை பேட்டிகண்டு கும்பகோணம் போகும் வழியில் தஞ்சாவூரில் மஹாசந்நிதானம் முகாமிடலாமா என்று கேட்டதற்கு, அரண்மனையில் தற்போது நிதி வசதி இல்லை என்றும் பின்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். ஆகையால் மனக் கலக்கத்துடன் திரும்பி விட்டேன் என்றார்.

சில தினங்கள் கழித்து ஸ்ரீ ஆசார்யாள் திருவானைக்காவலை விட்டு கும்பகோணம் நோக்கி யாத்திரையை மேற்கொண்டார்கள். திருவையாறு வழியாக யாத்திரை திட்டமிடப்பட்டது. வண்டிகள், மாடுகள், குதிரைகள், யானை, ஒட்டகை சகிதம், திருவையாறு சாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது அரண்மனை சிப்பாய்கள் எதிர்பாராத வண்ணம் வண்டிகளையும், யானை, குதிரைகள் முதலிய யாவற்றையும் கட்டாயப்படுத்தி, தஞ்சாவூர் செல்லும் சாலையில் திரும்பச் செய்தனர். எதிர்த்தவர்களிடம் வேறு காரணம் ஏதும், சொல்லாது இது ராஜாவின் உத்திரவு என்று சொல்லி மிரட்டி அவர்களையும் தஞ்சை நோக்கித் திருப்பிவிட்டார்கள், அரண்மனை வீரர்கள்.

ஆசார்யாளின் பல்லக்கும் அங்கு வந்து அடைந்தது. அரண்மனை அதிகாரிகள் பூர்ணகும்பம் முதலிய மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். சில தினங்களுக்கு முன் ஆசார்யாள் தஞ்சையில் முகாமிடுவதற்கான வஸதி இல்லை எனக் கூறின அரசரின் நிலையில் திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? மஹா ராஜாவிற்குக் கனவில் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரர் தோன்றி உடனே ஆசார்ய சுவாமிகளை அழைத்து வந்து, எல்லாவித மரியாதை களுடன், ஸ்வாமி பூஜைக்கு ஏற்பாடு செய்யவேண்டுமென உத்திரவாகியதே காரணமெனத் தெரியவந்தது. கனவை நினை வாக்கினார் மஹாராஜா. பல நாட்கள் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன. பெரிய அம்பாரியில் நகரப் ப்ரதக்ஷிணம் நடத்தி வைக்கப்பட்டது. சுவாமிகளுடன் தஞ்சை நகர வீதிகள் வழியாக ராஜாவும் பவனி வந்தார். ஸ்வாமிகளுக்கு கனகாபிஷேகமும் செய்துவைத்தார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்த வெள்ளி அம்பாரியை மடத்திற்கே ராஜா அளித்தார்.

Source: காஞ்சி ஸ்ரீ பெரியவர்களின் ஸ்ரீ பராபகுரு ஸ்வாமிகளின் வ்ருத்தாந்தம், Book published by Brindavanam Trust,Kumbakonam, 1981.