A Saint is all Forgiveness !

eknatha

Compiled by London swaminathan

Post No.2246

 

Date: 15 October 2015

Time uploaded in London: 18-40

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Eknath was a great saint of Maharashtra. He lived in Paithan. He was married and had a wife and a son. He had gained fame for his extremely patient and forgiving nature. He was kindness, mercy and peace personified.

Once it happened a poor Brahmin who wanted to give his daughter in marriage was wandering from place to place for getting monetary help from wealthy people. He came to Paithan and went to a rich man of the place. The rich man had no respect for saints. He had heard that saint Eknath never got angry. He was on the lookout for an occasion to make him angry and falsify the report about his patient and forgiving nature.

He told the poor Brahmin, “Go to Saint Eknath and provoke him to anger. If you do so I will gladly give you Rs 200 for the marriage expenses|. The avaricious Brahmin undertook to fulfil the wish of the rich man and directly proceeded to the saint’s house. When he approached the saints house he found the saint seated on the veranda chanting god’s name. The Brahmin, as he ascended the steps of the house, started abusing the Saint. The Saint was unperturbed. He led the Brahmin guest inside the house and giving him a proper seat, asked him what he wanted.

The Brahmin without giving him any reply continued to hurl abusive epithets at the Saint. The time was nearing for the midday meal. So the Saint requested the Brahmin to have his bath and partake of the humble meal which was being prepared for him. Eknath’s wife was his ideal partner. She was also very devout and good natured. Eknath took the guest to the bathroom and gave him a clean wash and brought him to the dining room for taking food.

ekanatha2

The Brahmin had tried his best to provoke the Saint to anger but so far he had failed completely. When he and the Saint sat for meals, a new thought struck the Brahmin. He got up from the seat and, as the saint’s wife was bending to serve food, sat on her back as on horse-back. Now, he fully expected the Saint would fly into temper. On the contrary, calmly looking on the scene, he warned his wife not to stand erect lest the honoured guest should topple down. Then his wife replied

Certainly I shall see to it that the Brahmin does not fall down. I know how I balanced our son when he used to climb on my back.

When the Brahmin heard the conversation between the Saint and his wife, he was stung with remorse. He got down from her back and, falling prostrate before both of them, sobbing with grief, prayed for their forgiveness.

Saints are so kind and gracious that they do not recognise any harm or insult from anybody. The Saint assured the Brahmin that he had done nothing wrong. They somehow persuaded him to take his food.

After the meals, when they sat together, saint asked the Brahmin why he had been so highly disturbed. Now the Brahmin told the entire story how a rich man had promised him to give him a sum of Rs 200 provided he provoked Eknath to anger. But fool as he was trying to make the Saint angry by use of a buses against him once more he fell at the feet of the Saint and sought pardon for his bad behaviour.

Eknatha FDC

Then the Saint with great love and compassion, said, “O, If you had only told me earlier, I would have got angry so that you might get the generous gift from the rich man”.

Swami Ramdas of Anandhashram in Kerala told this story.

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

here on arth

Compiled by S NAGARAJAN

Post No.2245

 

Date: 15 October 2015

Time uploaded in London: காலை 8-54

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 2-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 241ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

.நாகராஜன்

எல்லோரும் சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டாலும் கூட இரண்டு விஷயங்களைப் பற்றித் தான் நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை. காதலும், காலநிலையும் தான் அந்த இரண்டு விஷயங்கள்!  

 

 –  ஆலிஸ் ஹாஃப்மேன் (பிரபல பெண் எழுத்தாளர் ‘Here on Earth’ என்ற நாவலில்)

காலநிலை மாறுபாடு என்பது சாதாரண விஷயமில்லை. மனிதகுல வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும் புயல்கள், சுனாமி, தீவிரமான பருவமழை போன்றவை பல நாடுகளின் சரித்திரப் போக்கையே அதிரடியாக மாற்றியுள்ளன. ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தது முதல் நெப்போலியனின் குதிரைப்படை அழிந்தது வரை பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பித்தது முதல் ஜார்ஜ் வாஷிங்டன் அதிர்ஷ்டவசமாக தோல்வி அடையாமல் இருந்தது வரை காலநிலையை மட்டுமே வரலாறு காரணமாகக் குறிப்பிடுகிறது.

காலநிலை மாறுபாடு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறும் சரித்திரப் போக்கின் மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பார்க்கலாம்.

 

பன்னிரெண்டாம் சார்லஸின் ரஷ்யப் படையெடுப்பு  

1709ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் சார்லஸ் ரஷியாவின் மீது படையெடுத்தார். ஐரோப்பாவிலிருந்து ரஷியா மீது படையெடுத்த முதல் ஆள் இவர் தான்! அதுவும் ரஷியாவின் கடுங்குளிர் காலத்தில் தன் படைவீரர்களை மரணத்தை நோக்கி நடை போட வைத்தார் இவர். ஸ்வீடன் தேசத்துப் படைகளுக்கு ரஷிய குளிர் என்றால் என்ன என்று புரிந்தது. ஏராளமானோர் மடிந்து விழ  ரஷிய மன்னர் முதலாம் ஜார் பீட்டர் வெற்றி வாகை சூடினார்.

 wasshingtom

ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் ஒரு அதிசயம்!

அமெரிக்க ராணுவத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அவரது படைவீரர்களுக்கு யூனிஃபார்மே கிடையாது. அவர்களிடம் ஆயுதமும் கிடையாது. தன்னார்வத் தொண்டர்கள் அவர்கள். ஆனால் அவர்களை எதிர்த்த பிரிட்டிஷ் ராணுவமோ அசுர பலம் பொருந்திய ஒன்று. ஏராளமான ஆயுதங்கள். அவர்களை ஜெயிப்பது நிச்சயமாக முடியாத ஒன்று. 1776ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி லாங் ஐலேண்டில் பிரம்மாண்டமான போர் ஒன்று நடக்க இருந்தது. போர் மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்குமானால் அமெரிக்கா மண்ணைக் கவ்வுவது நிச்சயம். ஆனால் என்ன ஆச்சரியம். திடீரென்று கடும் பனிப் போர்வை ஒன்று தோன்றியது. பிரிட்டிஷ் வீரர்கள் திகைத்தனர். எதுவுமே கண்ணுக்குத் தெரியாத நிலையில் யாருடன் எங்கு சண்டை போடுவது. அவர்கள் பின் வாங்கிச் சென்றனர். சரித்திரம் காலநிலை மாறுபாடு காரணமாக அமெரிக்காவை வாழ வைத்தது. அந்தப் பனியை திடீரென்று உருவாக்கியவர் யார்?இயற்கையா, கடவுளா?

 11-old-french-postage-stamp-howard-hershon

பிரெஞ்சு புரட்சி எப்படி உருவானது?

பிரான்ஸ் நாட்டில் பொருளாதாரம் பயங்கரமான வீழ்ச்சியைக் கண்ட காலம் அது! அமெரிக்கர்கள் பிரிட்டிஷாருடன் போர் புரிந்த சமயமும் அது தான்! ஏகப்பட்ட கடன் சுமை! பிரான்ஸில் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது. கடைசி மரண அடியாக ஒரு பெரும் புயல் வந்தது. நாடு முழுவதும் இருந்த பயிர்களை அது நாசப் படுத்தியது. கொஞ்ச நஞ்சமிருந்த பயிர்களும் காலி; அவர்களின் நம்பிக்கையும் காலி! ஒட்டு மொத்த ஜனங்களும் கிளர்ந்தெழுந்தனர். வெடித்தது பிரெஞ்சுப் புரட்சி. இதைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அனைவரும் அறிவர். அந்த கடைசிப் புயலை உருவாக்கி உலகத்தையே மாறுதலை அடையச் செய்தது எது? காலசக்தியா???!!!

 nuclear stamp

ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டு!

நல்ல கோடைக்காலம். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் வழக்கம்போல இயல்பான வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காலை மணி 7.09 

ஹிரோஷிமா மீது பறந்த விமானம் ஒன்று செய்தி ஒன்றை பரிபாஷையில் அனுப்பியது. அதன் உண்மையான அர்த்தம் இது தான்:- பத்தில் மூன்று பகுதிக்கும் குறைவாகத் தான் மேகம் இருக்கிறது. குண்டைப் போட்டு விடலாம்!

அதாவது குண்டு போட சரியான காலநிலை உள்ளது. போட்டு விடலாமா என உத்தரவு கேட்கப்பட்டது. போடலாம் என்று பதில் வந்தவுடன் ஹிரோஷிமாவின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. அதன் மீது அணுகுண்டு போடப்பட்டு உலக வரலாற்றின் ஒரு கோரமான நாடகம் அரங்கேற்றப்பட்டது. அடுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி. கோகுரா என்ற ஜப்பானிய நகர் மீது குண்டு போட அமெரிக்க விமானம் பறந்தது.ஆனால் அந்த நகரின் மீது குண்டு போட முடியாதபடி மேகமூட்டம் இலக்கை மறைத்து விட்டிருந்தது. விமானம் மாற்று இலக்கான நாகசாகி நோக்கி பறந்தது. காலநிலையால் கோகுரா பிழைத்தது!

இன்னும் சில மாறுதல்களை அடுத்த வாரம் பார்க்கலாம்!

kelvin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

லார்ட் கெல்வின் பெரிய விஞ்ஞானி. அவர் பெயரால் தெர்மாமீட்டரில் கெல்வின் என்ற உஷ்ணநிலை அளவீடே குறிக்கப்படுகிறது.

ஒரு நாள் அவர் ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு திடீரெனச் சென்றார். தன்னை யார் என்று அவர் சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு ஃபோர்மன் அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்த நிலையம் முழுவதும் சுற்றிக் காண்பித்தார். ஒவ்வொரு இடமாக நன்கு விளக்கியதோடு மின்சாரம் பற்றிய அனைத்தையும் எடுத்துரைத்தார்.

மின் நிலையம் முழுவதும் சுற்றிப் பார்த்து விட்ட நிலையில் விடை பெறும் நிலையில் இருந்த கெல்வின் ஃபோர்மனை இறுதியாக ஒரு கேள்வி கேட்டார்: அது சரி, அப்படியானால் மின்சாரம் என்றால் என்ன?”

இது வரை விளக்கி வந்த ஃபோர்மன் வாயடைத்துத் திகைத்துப் போய் நின்றார்.

அன்புடன் அவரை நோக்கிய கெல்வின், “பரவாயில்லை, அந்த ஒன்று தான் உங்களுக்கும் எனக்கும் தெரியாது!” என்று சொல்லியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர் தான் ஃபோர்மனுக்கு வந்தவர் லார்ட் கெல்வின் என்பது தெரிய வந்தது.

************

2.Herbs, Trees, Flowers in Sanskrit Literature – Part 2

850_Lotus

Compiled by London swaminathan

Post No.2244

Date: 14 October 2015

Time uploaded in London: 19-22

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

download

1.Cupid’s Five Flower Arrows

Aravinda – Red Lotus

Asoka – Asoka flower (saraca asoka)

Cuutam – Mango Flowers

Navamallikaa – Jasmine Flowers

Niilotpala – Blue Lotus or Lily

Aravindamasokamcha chuutancha navamallikaa

Niilotpalamcha panchaite panchabaanasya  saayakaa:

–Amarakosa 1-1-27

xxx

Sita-Ashok_(Saraca_as

2.Pancha pallavam (Five Leaves) used for Puja

Jack fruite tree leaves

Amra/ Mango leaves

Asvattha/Pipal leaves

Vata/Banyan leaves

Bakula/Mimusops elengi leaves

Panasaamra tathaasvattham vatam bakulameva cha

Panchapallavamuktam cha munibhis tantra vedibhi:

—Sabda kalpa druma, 3-9

Xxx

852_Kadamba

3.Five Fragrant leaves

Amra- mango leaves

Jambu-rose apple

Kapittha- wood apple

Biijapuura- Guava

Bilva – Vilva (wood apple variety)

Amra jambu kapitthaanaam biijapuurabilvayo:

Gandhakarmani sarvatra  patraani pancha pallavam

Xxx

851_Rhododendron

4.Panchamuula (Five Roots)

Hrasva

Prsniparnii, Saalaparnii, Kantakaarikaa, Brhatii, Goksuraka

Jiivana

Sataavarii, Kaakolii, Jiivantii, Jiivaka, Rsabaka

Xxx

1142_Rose_Sugandha

5.Panchavati (Five Trees or Five trees at Panchavatii)

Asvattha/Pipal leaves

Vata/Banyan leaves

Bilva – Vilva (wood apple variety)

Dhaatrii = Myrobalan

Asoka – Saraca asoka

Asvatthabilva vrksancha vatadaatrii asokakam

Vatii panchamiyuktam (Sabda kalpa druma 3-14)

Xxx

1993-Pride_of_India_Tr

6.Five Flowers for Puja

Campaka, Amra, Samii, Padma, Karaviira.

Champakaamrasamii Padma karaviiram  cha panchakam

–Subham–

16 வயதினிலே!

donkey1

Compiled by London swaminathan

Post No.2243

Date: 14 October 2015

Time uploaded in London: 10-40 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ந உலூக அபி அவலோகதே யதி திவா சூர்யஸ்ய கிம் தூஷணம்? (பர்த்ருஹரி)

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது; இது சூரியனுக்கு என்ன குறை?

Xxx

2.பத்ரம் நைவ யதா கரீர்விடபே தோஷோ வசந்தஸ்ய கிம்? (பர்த்ருஹரி)

கரீல செடியில் (துளசி) இலை இல்லாததற்கு வசந்த காலம் என்ன செய்யும்?

Xxx

3.ப்ராணீ ப்ராப்ய ருஜா புனர்ன சயனம் சீக்ரம் ஸ்வயம் முஞ்சதி –ஸ்வப்னவாசவதத்தம்

நோயாளி தானாகவே படுக்கையைவிட்டு உடனடியாக எழுவதில்லை

Xxx

donkey2

4.ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே கர்தபீ சாப்யப்சராயதே.

16 வயது வந்துவிட்டால் கழுதைகூட அப்சரஸ் (தேவ லோக அழகி) போலத் தோன்றும்!

Xxx

5.மலயேபி ஸ்திதோ வேணு: வேணுரேவ ந சந்தனம்

மூங்கிலானது மலய பர்வதத்தில் வளர்ந்ததால் சந்தனம் ஆகிவிடாது.

Xxx

6.ப்ரம்மசர்யேன தபஸா ராஜா ராஷ்ட்ரம் விரக்ஷதி – அதர்வ வேதம்

பிரம்மசர்யரூப தவத்தினால் அரசன் ஆனவன் நாட்டைக் காப்பாற்றுகிறான்

Xxx

7.மனுர் பவ, ஜனயா தைவ்யம் ஜனம் – ரிக்வேதம்

மனிதனாக இரு; தெய்வீகமான குழந்தைகளைப் பெறு

Xxx

crow nest2

8.ப்ரசாதசிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே (சாணக்ய நீதி தர்பணம், பஞ்சதந்திரம்)

அரண்மனையின் உச்சியில் உட்கார்ந்தால், காக்கை என்ன கருடன் ஆகிவிடுமா?

ஒப்பிடுக: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாசி சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி – அவ்வையாரின் மூதுரை.

Xxx

9.மலயே பில்லபுரந்த்ரீ சந்தனதருமிந்தனம் குருதே – சு.ர.பா.

மலய பர்வத ப்ரதேசத்தில் மலைஜாதிப் பெண்கள், சந்தன மரத்தை விறகாகப் பயன்படுத்துவர்

crow nest

Xxx

10.முண்டே முண்டே மதிர் பின்னா

ஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொரு எண்ணம் (புத்தி)

ஒப்பிடுக (இந்தி)

அப்னா அப்னா டங் ஹை

அப்னீ அப்னீ சமக்ஞா ஹை

Xxx

11.யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகதா

ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் – ஹிதோபதேச

இளமை, அதிகாரம், செல்வம், விவேகமில்லாத போக்கு – இந்த நான்கில் ஒன்று இருந்தாலே கெடுதல் ஏற்படும். நாலும் சேர்ந்து இருந்தால் என்ன கதியோ!!

Xxx

12.ரிக்த: சர்வோ பவதி ஹி லகு: பூர்ணதா கௌரவாய – மேகதூதம்

வெற்றிடமாக உள்ள ஒரு பொருளுக்கு எடை இராது;

பூரணமாக இருந்தால் அதற்கு எடை இருக்கும்

ஒப்பிடுக: குறைகுடம் கூத்தாடும் (தழும்பும்) நிறைகுடம்

தழும்பாது.

பெரியார் அடக்கமாக இருப்பர். அரைவேக்காடுகள் ஆர்ப்பரிக்கும்!!

–Subham–

இறைவன் ஏமாந்தான்!

siva, jabalpur

திருவாசக சுகம்

இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

 

Written by S Nagarajan

Post No.2242

Date: 14 October 2015

Time uploaded in London:  7-47 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it at least for a week.

 

.நாகராஜன்

 

தன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..?

ஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.

விஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.

பையனும் வந்து பவ்யமாக நின்றான்.

 

 

காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

தந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்? எப்படிக் கிடைக்கும்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

 

 

அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

பையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்?”

என்றாள்.

நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றார் தந்தை!

*

 

 IMG_6892 (2)

படம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

எப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டுநரியைப் பரியாக்கிய புகழ்மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.

ஒன்று கொடுத்தார்; ஒன்றை வாங்கினார்.

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை!”

இப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்?

யார் கொலோ சதுரர்?

எனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்!

உனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்?

 

 

நானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்!

நம்மில் யார் சதுரன்? உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்!

கோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை

சங்கரா ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்?!

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறை சிவனே!

எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

*

 

 siva head

தந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்? தந்தையா, பையனா?

இங்கே மணிவாசகரா, சிவபிரானா!

இப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பது தான் பதில்!

எதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

–சுபம்–

Five Divine Trees and Five Important Grasses!

861-Flame-of-the-For

Compiled by London swaminathan

Post No.2241

Date: 13 October 2015

Time uploaded in London: 17-53

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Herbs, Trees, Creepers, Flowers in Sanskrit Literature – Part 1

1.Five Devapaadapa = Five Divine Trees

Trees are called ‘paadapa’ in Sanskrit = eating with/by foot; they take their food through their feet i.e.roots!

Mandaara

Paarijaata

Santaana

Haricandana

Kalpavrksa

Panchaite devataravo mandaara: paarijaataka:

Santaana: kalpavrkshascha pumsi vaa harichandanam

–Amarakosa 1-50

xxx

sandalwood

2.Fragrances

Kasturi = musk (animal product; not from plants)

Candana – a variety of sandal wood tree

Karpura = camphor (extracted from plant)

Agaru = aloewood tree

Malayaagaru = Candana from Malaya Hills

Kastuuricandanam chandramagaru dvitiiyam tathaa

Panchagandha samaakyaatam sarvakaaryeshu sobhanam

These five plants add beauty and colour to any event.

Xxx

862-Crateva-Indian-Flowering-Tre

3.Guduucii Pancakam

Guduucii

Padmaka

Arista

Dhaanakaa

Rakta candana

Group of these five plants is helpful in the subjugation of fever, vomiting, burning sensation, thirst and improves digestion.

Guduuciipadmakaarishtadhaanakaararaktacandanam

Pittasloshmajvarachardidaahatrushnaadhvamagnikrut

–ashtaanga nighandu -66

xxx

864-Bauhinia-

4.Trnapanchamuula = Five (Important) Grasses

Kusa

Kaasa

Nala

Darbha

Kaandeksu

Kusakaasanaladarbhakaandekshukaa iti trunasamknaka:

–Susruta Sutra 38-75

xxx

5.Aamalapanchaka = Five varieties of Aamala (sour) Fruits

Kola = jujube

Daadima =Pomegranate

Vrsaamla = Tamarind (imli)

Cullikaa

Cukrikaa = wood soorel

Kola dadima vrkshaamlachullikaa chukrikaarasa:

Panchaamlakam samudhdhishtam tacchoktam  cha aamla panchakam — Rasa ratna samuchaya

Xxx

1272_Trees_Pipal

6.Kasaaya = medicinal decoction

Sami

Udumbara

Asvatta

Nyagrodha

Palaasa

Samyudumbara masvattam nyagrodham cha palaasakam

Yajnam yajne vimantreens dadhyaath pancha kashaayikam –Saptakalpadruma

Xxx

1549_Yellow_Silk_Tree

7.Thorny plants

Karamardi;  Trikantaka; Saireyaka; Sataavari; Grdranakhi

–Susruta Sutra 38-73

xxx

Source: compiled from the Encyclopaedia of Numerals –Volume 1; The Kuppuswami research Institute, Chennai; 2011

–Subham–

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் !!

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

Research Article  by S NAGARAJAN

Post No.2240

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-34

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

ரிஷிகள் சரித்திரம்

 

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

.நாகராஜன்

 

ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இதிஹாஸங்களும் நமது புராணங்களும் ஏராளமான ரிஷிகளின் சரித்திரத்தைக் குறிப்பிடுகின்றன.

மஹாபாரதத்தில் ஆதி பர்வம் மற்றும் சல்ய பர்வத்தில் வரும் இரு ரிஷிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

 

 

அக்னிவேசர்

இவர் அக்னியிலிருந்து ஜனித்தவர். இவர் தவ சக்தியுள்ள ஒரு ரிஷி. பரத்வாஜருடைய சிஷ்யர். இவர் சூத்திரம் இயற்றியவரில் ஒருவர்.

பரத்வாஜரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட ஆக்னேயாஸ்திர மந்திரத்தை பரத்வாஜருடைய புத்திரரும், தம்முடைய சீடருமான துரோணாசாரியாருக்கு இவர் உபதேசம் செய்தார்.

அதே போல, சாதாரண மனிதர்கள் மேல் பிரயோக்கிக்கக் கூடாததும், உலகையெல்லாம் அழிக்கக் கூடியதும், எப்போது பிரயோகித்தாலும் வீண் போகாததுமான “பிரம்மசிரஸ்” என்ற அபூர்வமான தேவாஸ்திரத்தையும் துரோணருக்குக் கொடுத்தார்.

Agni-II_missile

அதை துரோணர் அர்ஜுனனுக்குக் கொடுத்தார்.

அர்ஜுனனுக்கு மட்டும் துரோணர் இதை ஏன் கொடுக்க வேண்டும்? அதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

ஒரு நாள் அனைத்து சிஷ்யர்களுடனும் கங்கையில் குளிப்பதற்காக துரோணாசாரியர் சென்றார். குளிக்கும் போது, பலமான முதலை ஒன்று அவரது கணுக்காலைப் பிடித்தது. தன்னை விடுவித்துக் கொள்ளும் சக்தி அவருக்கு உண்டு என்றாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. “முதலை என்னைப் பிடித்து விட்டது. காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரலிட்டார். மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். அர்ஜுனனோ ஐந்து அம்புகளை வீசி நீருக்குள் இருந்த முதலையைக் கொன்று துரோணரை விடுவித்தான்.

இதனால் துரோணர் மகிழ்ந்தார்.

அர்ஜுனனுடைய திறமையை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணிய துரோணர், அனைத்து சிஷ்யர்களையும் அழைத்தார்.

துரியோதனன், சித்திரஸேனன், துச்சாஸனன்,விவிம்சதி, அர்ஜுனன், அஸ்வத்தாமா ஆகியோரை முன்னே வரச் சொல்லி, மண்ணால் ஒரு குழந்தையைச் செய்து அதை  சிஷ்யர்கள் பார்க்கும் போதே கங்கையில் போட்டார். அனைவரின் கண்களையும் துணிகளால் கட்டி, வில்லைக் கொடுத்தார். “கண் கட்டியிருக்கும்படியே ஜலத்தில் இருக்கும் பொம்மைக் குழந்தையை அடியுங்கள்” என்றார்.

மற்றவர்கள் பேசாமல் இருக்க, அர்ஜுனன் மட்டும் 15 பாணங்களினால் நீருக்குள் மூழ்கி இருந்த அந்த பொம்மையை அடித்தான்.

அனைவரிலும் அர்ஜுனனே திறமைசாலி என்ற முடிவுக்கு வந்த துரோணர் ‘பிரம்ம சிரஸ்’ என்ற அஸ்திரத்தை உபதேசித்தார். அஸ்திரம் விடுவது, திருப்பி வாங்குவது, அதன் சொரூப நிர்ணயம் ஆகிய மூன்றையும் விதிப்படி அர்ஜுனன் கற்றுக் கொண்டான். அர்ஜுனனிடம், “மனிதர்கள், அற்ப சக்தியுள்ளவர்கள் மேல் இதை பிரயோகிக்காதே! மனிதரல்லாத தேவர் முதலியோர் உன்னை வருத்துவாரானால் இதை நீ பிரயோகிக்கலாம்” என்றார் துரோணர். “உலகில் உன்னைப் போன்ற ஒரு வில்லாளி இன்னொருவன் இனிமேல் இல்லை” என்று புகழாரமும் சூட்டினார். (சல்ய பர்வம் 143வது அத்தியாயம்)

(மஹா பாரதம், ஆதி பர்வம், 140வது, 143வது அத்தியாயம்)

saras2

அரிஷ்டஸேனர் அல்லது ஆர்ஷ்டிஸேனர்

முன்னொரு காலத்தில் பிரம்மா தமது சக்தியால் “லோகாலோகம்” என்ற பர்வதத்தைப் படைத்து அருளினார். அங்கே ஒரு சிறந்த புண்ணீய தீர்த்தம் இருக்கிறது.

அந்த இடத்தில் அரிஷ்டஸேனர் என்னும் பெரும் முனிவர் கடுமையான தவம் செய்து பிராமணர் என்னும் உயர் பதவியை அடைந்தார்.

இவரைப் பற்றிய இன்னொரு செய்தி மஹாபாரதம் சல்ய பர்வத்தில் நாற்பத்தோராவது அத்தியாயத்தில் வருகிறது:

ஆதி காலத்தில் கிருத யுகத்தில் அரிஷ்டஸேனர் என்ற ஒருவர் இருந்தார். அவர் தனது குருவின் வீட்டில் இருந்து கொண்டு கல்வி கற்று வந்தார்.

அவ்வாறு வெகு காலம் கற்றும், குருகுலத்தில் இருந்தும், அவரது வித்தை ஒரு முடிவுக்கு வரவில்லை. வேதங்களும் முடிவு பெறவில்லை. பிறகு கவலையுடன் அவர் பெரும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் மூலம் வேதங்களை அறிந்தார்.

அவ்வாறு சிறந்த கல்வியையும், வேத ஞானத்தையும் அடைந்து மேலே சொன்ன தீர்த்தத்தில் இருந்து கொண்டு பெரும் பயனைப் பெற்றார்.

அவர் பிறகு அந்தப் புண்ணிய தீர்த்தத்திற்கு மூன்று வரங்களை அளித்தார்.

இன்று  முதல் சரஸ்வதி நதியினுடைய இந்த தீர்த்தத்தில் குளிப்பவன் அசுவமேத யாகம் செய்த பெரும் பயனை அடைவான்.

இன்று முதல் இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு பாம்புகளாலும், காட்டு மிருகங்களாலும் எவ்வித அபாயமும் நேரிடாது.

சிறிய முயற்சிகளைச் செய்பவனும் கூட இவ்விடத்தில் பெரும் பயனை அடைவான்.”

 

இந்த மூன்று வரங்களையும் கொடுத்து விட்டு அரிஷ்ட ஸேனர் சுவர்க்கத்தை அடைந்தார்.

 

                            (மகா பாரதம், சல்ய பர்வம் அத்தியாயம் 41)

 

சுபம்–

***

திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

Was Draupadi Disrobed

Compiled by London swaminathan

Post No.2239

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-15

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். சமய சம்பந்தமான நூல்களில் இதுவே உலகில் பெரிய நூல். இது ஒரு பெரிய பொக்கிஷம். கடல் போலப் பரந்த விஷயங்கள் இதில் உள்ளன. இதில் எப்போது மூழ்கினாலும் முத்து, பவளம், வலம்புரிச் சங்குகள் கிடைக்கும். ஆனால் இதிலுள்ள விஷயங்களை யாரும் விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிடவில்லை. இதிலுள்ள கதாபாத்திரங்கள், உவமைகள் முதலியன பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால் பொன்மொழிகளை விஷயம் வாரியாக (சப்ஜெக்ட்) வெளியிட்டால் நன்றாக இருக்கும். கீழேயுள்ள நான்கு ஸ்லோகங்கள் பல முக்கிய விஷயங்களைத் தரும்:

‘லக்கி’ திரவுபதி

சதுர்பி: காரணை: க்ருஷ்ண த்வயா ரக்ஷ்யாஸ்மி நித்யச:

சம்பந்தாத் கௌரவாத் சக்யாத் ப்ரபுத்வேநைவ கேசவ

(மஹாபாரதம், வனபர்வம்,12-127)

திரவுபதியைக் கிருஷ்ணன், காப்பாற்றியதற்கு நான்கு காரணங்கள் உண்டு:

1.சம்பந்தாத் = உறவு முறை

2.கௌரவாத் = மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு

3.சக்யாத்= நட்புமுறை

4.ப்ரபுத்வாத்= இறைவன் என்ற முறையில்

longest step

சுவர்க்கத்துக்குப் போக உதவும் படிக்கட்டு எது?

சத்யமே (உண்மை) ஸ்வர்கத்துக்கான மாடிப்படி. அதில் ஏறினால் எளிதில் சொர்க்கத்தை அடையலாம்.

ஏகமேவாத்விதீயம் யத் தத் ராஜன் நாவபுத்யசே

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் பாராவாராஸ்ய நௌரிவ

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,33-47)

எவ்வாறு படகு ஒன்று கடல், அல்லது, நதியைக் கடக்க உதவுமோ அவ்வாறு சுவர்க்கம் செல்ல சத்யம் என்பது படிக்கட்டாகத் திகழ்கிறது.

ஏ, மன்னனே, நீ இதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். இதைவிட வேறொன்றுமில்லை.

(சுவர்க்கம் என்பது மேலே இருப்பதால் மேலேறிச் செல்லும் படி உவமையாக்கப்பட்டது)

Simple-Indoor-Stair-Treads

தர்மத்தின் விளக்கம், இலக்கணம் என்ன?

வேதோக்த: பரமோ தர்ம: தர்மசாஸ்த்ரேஷு சாபர:

சிஷ்டாசாரஸ்ச சிஷ்டானாம் த்ரிவிதம் தர்ம லக்ஷணம்

(மஹாபாரதம், வன பர்வம்,207-83)

தர்மம் என்பது மூன்று இடங்களில் இருக்கிறது:–

வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாம் தர்மம்

தர்மசாஸ்த்ரம் = நீதி நூல்கள் செப்புவது அனைத்தும் தர்மம்

சிஷ்டாசார: = ஆசாரம் பற்றிய விதிமுறைகலைச் சொல்லுவது எல்லாம் தர்மம் ( இதை ஒவ்வொரு காலத்திலும் குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்கள் சொல்லும் மொழிகள் எனக் கொள்ளலாம்)

 krshna eating

மற்றவர்கள் வீட்டில் சாப்பிடலாமா?

கிருஷ்ணர், கௌரவர்களின் பெரிய அரண்மனை விருந்தை விட்டுவிட்டு, தேரோட்டி விதுரன் வீட்டில் தங்கினார். ராமன், சபரி என்னும் வேடுவச்சி கடித்துக் கொடுத்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டார். கண்ணாப்ப நாயனார், எச்சில்படுத்டிக் கொடுத்ததை, சிவ பெருமான் ஏற்றார். ஏன்?

சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:

ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)

அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)

ஆபத்துக் காலத்திலும் எங்கும் சாப்பிடலாம் (உயிரைக் காப்பதே முதல் கடமை; சுவர் இருந்தால்தானே சித்திரம்? உயிர் இருந்தால்தானே சாஸ்திரம்!)

–சுபம்-

Satyam Svargasya Sopaanam: Truth is Step to Heaven

longest step

Compiled by London swaminathan

Post No.2238

Date: 12  October 2015

Time uploaded in London: 17-52

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Mahabaharata, the longest epic in the world, has got thousands of quotable quotes; there are thousands of similes as well. All the great scholars quote such beautiful sentences and phrases in appropriate places, but no one has done them subject wise or indexed them subject wise. One has to go deeper like pearl fishing. Here are some quotations:

Simple-Indoor-Stair-Treads

Truth – Step to Heaven

Ekamevaaadvitiyam tad yad Raajan naavabudhyase

Satyam svargasya sopaanam paaraavaarasya nauriva

–Mahabharatam (Udyoga Parva 33-47)

A boat helps one to cross the ocean and truth helps one to go to Heaven acting like Steps (sopaana); O,King you failed to understand it. There is no second opinion about it.

Eating in Other’s House

You can eat food in others’ houses under two circumstances.

Sampriti = Mutual affection

Apad  = when you are in difficulty

Sampriitibojyaanyannaani apadbojyaani vaa puna:

Na cha sampriiyase Rajan na chaivaapagataa vayam

–Mahabharatam (Udyoga Parva 91-25)

krshna eating

What is Dharma’s Definition?

The definition or the qualities of Dharma (Righteousness) is/are

Vedoktah = As stated in the Vedas

Dharmasastra = As found in scriptures dealing with Rules of Conduct

Sistaacaarah = Code of Conduct

Vedokta: paramo dharma: dharmasaastreshu chaapara:

Sistaachaarascha sistaanaam trivdham dharmalakshanam

–Mahabharatam (Vana Parva 207-83)

Was Draupadi Disrobed

Why did Krishna help Draupadi?

Four Reasons for the Lord to protect Draupadi:

Sambandha = Relationship

Gaurava = Honour

Sakhya = Friendship

Prabhutva = Lordship

Chaturbi: kaaranai: Krishna tvayaa rakshyaasmi nityasa:

Sambandhaad gauravaatsakhyaat prabhutvenaiva Kesava

–Mahabharatam (Vana Parva 12-127)

–subham–

தேவி, அருள் புரி!

durga on lion

நவராத்திரியை ஒட்டி விசேஷ கட்டுரை

 

Compiled by ச.நாகராஜன்

Post No.2237

Date: 12  October 2015

Time uploaded in London: 9-02 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

By .நாகராஜன்

 

 

சித் ரூபிணி பைரவி                                                        

சிவே மனோஹரி                                                                 

பக்த ஜனப்ரிய                                                                     

பாலே தயாபரி

*

பார்வதி சங்கரி                                                                        

காளி சுபகரி                                                                         

பகவதி சாம்பவி                                                                   

தேவி அருள் புரி

15-12-76 5 p.m.

 

தந்தையார் கைப்பட எழுதிய கீதம்

devi santanam

 

 

 

 

 

இது எனது தந்தையார் (V.Santanam) 15-12-1976 அன்று மாலை ஐந்து மணிக்கு இயற்றிய கீதம்.

தினமணியின் மதுரை இதழின் பொறுப்பாசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய அவர் பன்முகம் கொண்ட ஒரு உயர் மனிதர்.

ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமானவர். சென்னை, ஆபட்ஸ்பரிக்கு அழைத்து ஒரே மேடையில் இருக்கும் போது பாபா அவரை பேசுமாறு அருளினார்.

1965 நவம்பர் மாதம் புட்டபர்த்திக்கு மதுரை அன்பர்கள் ஏராளமானோர் அவரவர் கார்களில் கிளம்பி புட்டபர்த்திக்குச் சென்றோம். நவம்பர் 23ஆம் தேதி பிறந்த நாளுக்கு முன்னர் அங்கே சென்று சேர்ந்தோம். அங்கே தான் இயற்றிய கீதங்களை பாபாவிடம் சமர்ப்பித்தார் என் தந்தை.

அந்தப் பாடல்கள் பல்வேறு சங்கீத விற்பன்னர்களால் பல மேடைகளில் நன்கு இசை அமைத்துப் பாடப்பட்டன. பாரத் ரத்னா திருமது எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் சகோதரரான திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

இவற்றில் 108 கீதங்கள் பின்னர் தொகுக்கப்பட்டு சத்ய சாயி சேவா சங்கம், மதுரையினால் 1966இல்ஸாயி கீதங்கள்என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.

*

அதில் எனது தந்தையார் எழுதியுள்ள முகவுரையைக் கீழே தருகிறேன்.

 

முகவுரை

     இந்த கீதங்களைப் புனைந்தவர் ஶ்ரீ இதய சாயி. எழுதுகோல் போன்ற கருவி தான் நான். நூறு நாட்களில் நூற்று எட்டு பாட்டுகளும் நாமாவளிகளும் ஶ்ரீ இதய சாயி கூற நான் எழுதினேன். சில கீதங்கள் ராகம், மெட்டுகளுடன் வந்தன. சிலவற்றிற்கு சங்கீத வித்வான்கள் மெட்டுகள் அமைத்துக் கொடுத்தனர்

     “அவருக்கு சங்கீத ஞானமே கிடையாது. சாஹித்ய ஞானம் கிடையாது. எழுதியதெல்லாம் அவரே மறந்து போய் விட்டார். அவரை வேண்டுமானால் கேளுங்கள்என்று பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா இன்னொருவரிடம் இந்த கீதம் எழுதப்பட்ட விதம் பற்றி கூறினார். பகவானின் பாதகமலங்களில் இந்த கீதங்களை சமர்ப்பித்த போது மேற்சொன்ன மொழிகளைப் புகன்று, “பதங்கள் பரதநாட்டியம் போல நடை போட்டுச் செல்கின்றனஎன்று அருளினார் பகவான்.

 

    “இரண்டு இரண்டு பாட்டுக்களாக எழுதி பகவான் பாத கமலங்களில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்என்று ஒரு நண்பர் பகவான் முன்னிலையில் எழுதியவரை நோக்கிக் கூறினார். உடனே பகவான் குறுக்கிட்டுஒவ்வொரு கீதமும் எழுதப்படும் போதே முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டதுஎன்று ஆசீர்வதித்தார். அந்த பகவானின் பாத கமலங்களில் மீண்டும் இந்த கீதங்களை சமர்ப்பிக்கின்றேன்.

 

    என்ன ராகம், என்ன மெட்டுகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். பதங்களை மட்டும் யாரும் மாற்றவே கூடாது. அது பகவத் அபசாரமாகி விடும்.

 

    இந்த பாட்டுகள் யாவும், இது சம்பந்தப்பட்ட எல்ல உரிமைகளும் மதுரை சத்திய சாயி சேவா சங்கத்துக்கே சமர்ப்பணம்.

மதுரை                                                      வெ.சந்தானம்

1-3-’66   

        

*

     நூலில் முதல் கீதமாக இடம் பெறும் மகா கணபதி பற்றிய கீதத்தைக் கீழே காணலாம்.

 

swastk ganesh

மகாகணபதி

                                                       ஹம்ஸத்வனிஆதி

பல்லவி

மகா கணபதே நமஸ்தே கஜமுக

மகா சுகிர்த வர வல்லப கணபதி

..

தேஹி ஸித்தி புத்தி மங்கள நாதா

ஓங்கார ரூபா விக்னஹர பாதா

சரணம்

கவிகள் நாயகா ஹரன் சிவை புத்ரா

கானம் கல்வி கலை வர அருள் நேத்ரா

நமோ விநாயகா தெய்வநாயகா

பாதகத்துயர் போக்கி சாதக வாழ்வருள்

*

 

BABA PU ALANKARAM

ஒவ்வொரு நவராத்திரியும் ஒன்பது நாட்களிலும் சத்தியசாயி சேவா சங்கம், மதுரையில் சங்கீத கச்சேரி, பாபா பற்றிய சொற்பொழிவுகள், அஷ்டோத்திரம், பஜனை, பூஜை என்று அனைத்து ஆன்மீக நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடக்கும்.

 

அந்தக் கச்சேரிகளில் எனது தந்தையார் இயற்றிய கீதங்களை அபார கற்பனை வளத்துடன் பல வித்வான்கள் பாடி மகிழ்வர்; குழுமி இருப்போரை மகிழ்விப்பர்.

 

பொன்னான காலம் அது. அதை ஒட்டிய மலரும் நினைவுகளை இந்த நவராத்திரி கட்டுரை கொண்டுள்ளது.

*

 Pictures are added now from different sources.Thanks.