Part 2 -வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

சாணக்கியன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1935

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி:- 16 ஜூன் 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 17-06

Part 1 was posted yesterday.

(படங்கள் பேஸ் புக் முதலிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி)

ஊர் பேர் தெரியாத கொட்டாம்பட்டி, அரிட்டாபட்டி தமிழ் எழுத்தாளனின் இந்து மத விரோதக் கதைகளை பெரிதுபடுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களில் அதைப் படமாக வைத்து அந்த எழுத்தாளனின் வங்கிக் கணக்கில் பல லட்சம் பவுன்கள் அல்லது டாலர்களை “பம்ப்” செய்யும் சர்வதேச வெளியீட்டு நிறுவனங்களின் சதி—– இந்துமதத்தை மட்டும் தாக்கும் வெண்டி டோனெகர் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு பப்ளிசிட்டி, பணக் குவிப்பு– இதுவரை வேதத்தை அலசி ஆராய்ந்த எந்த “அறிஞ”னும் வேறு எந்த மத நூலையும் ஆராயாத மர்மம் —- அவர்களுக்குத் துணைபோகும் தேச விரோத, தர்ம விரோத திராவிட–மார்க்சிஸ்ட் கும்பல்கள், பத்திரிக்கைகளின் சதி — பற்றி முதல் பகுதியில் குறிப்பிட்டேன்.

இந்த இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு “அறிஞரும்” செய்த வேலை குறித்துக் கண்போம்:–

முதலில் மூன்று முக்கியமான விஷயங்களை எல்லா இந்துக்களும் அறிய வேண்டும். இதில் சில அறிஞர்கள் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணத்தை ஒவ்வொரு இந்துவும் படித்தால் இவர்கள் கொலைபாதகச் செயலுக்கு அஞ்சாதவர்கள் என்பது தெளிவாகும்.

இரண்டாவது இந்த “அறிஞர்களில் பெரும்பாலோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக போடிலியன் பேராசிரியர் பதவி வகித்தோர் அல்லது அதற்கு ஆசைப்பட்டோர். அதில் சம்ஸ்கிருதம் ஏன் கற்க வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்துமதத்தை எள்ளி நகையாட இந்த பதவியை ஏற்படுத்துவதாக அந்த அறக் கட்டளையை ஏற்படுத்தியவர் எழுதி, பணம் கொடுத்துள்ளார்.. ஆக இந்த அறிஞர் கும்பல் எல்லாம் மோசடி செய்ய வந்த கும்பல்!

மூன்றாவதாக இவர்கள் அவ்வளவு பேரும்—தமிழர்கள் தலை மேல் வைத்து கூத்தாடும் கால்டுவெல் பாதிரியார் உள்பட—மாக்ஸ்முல்லர் உள்பட – எல்லோரும் “இந்தியர்கள் அனைவரும் வந்தேறு குடிகள்” என்று எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் இதில் ஒரு அதிசயம் நடந்தது. கங்கை நதியில் கலக்கும் சாக்கடை எல்லாம் புனிதம் அடைவது போல, சில அசத்துக்கள், சத்துக்களாகவும் மாறிவிட்டன. அதில் ஒரு அசத்து மாக்ஸ்முல்லர்.

1651ல் ஆப்ரஹாம் ரோஜர் என்ற பாதிரியார் பர்த்ருஹரியின்  சுபாஷித த்ரிசதியை போர்ச்சுகீசிய மொழியில் வெளியிட்டார். பின்னர் அதை டச்சு மொழியிலும் வெளியிட்டார். இந்த 300 நீதிநெறிப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தின் பெருமையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தன.

பஞ்சபாத்ரம்

தத்துவ போத சுவாமிகள் செய்த திகிடுதத்தம்

ராபர்ட் டி நொபிலி/ தத்துவ போத சுவாமிகள் (Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda:) இவர் கோவாவில் வந்து இறங்கி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தார். பின்னர் மலையாளம் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் பிரசாரம் செய்தார். மதுரையில் தங்கி ஐயர் போல குடுமி, பூணூல் தரித்து மேலை வகுப்பினரை மத மாற்றம் செய்ய முயன்றார். ஆனால் அவரது வேஷம் பலிக்கவில்லை. யஜூர்வேதத்தை கண்டுபிடித்துக் கொண்டுவந்தததாகச் சொல்லி ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது யஜூர் வேதம் இல்லை. அது அப்பட்டமான மோசடி. இதை வால்டேர், கோல்ப்ரூக் போன்றவர்களும் நம்பி ஏமாந்தனர். வால்டேர் அதைப் படித்துவிட்டு (மொழிபெயர்ப்பு) உண்மையென்று நம்பி, அதை பிரான்ஸ் தேசிய  நூலகத்தில் சேர்த்தார். இவர் மோசடி செய்யவில்லை என்றும் இவரது கும்பலில் இருந்த வேறு சிலர் மோசடி செய்ததாகவும் இப்பொழுது பிரசாரம் கிளம்பி இருக்கிறது.

இது வழக்கமாக திருடர்கள் கையாளும் தந்திரம். பிடிபட்டுவிட்டால் மற்றவன் பெயரில் பழிபோடுவார்கள். பிடிபடாவிட்டால் தான் சாதித்ததாகக் கூறுவர். எப்படியாகிலும் வேதத்தின் பெயரில் கிறிஸ்தவ பாதிரிக் கும்பல் மோசடி செய்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இவர் சேர்ந்துள்ள ஜீசைட் கிளப்பின் உறுதி மொழிப் பிரமாணம் பயங்கர வன்முறைப் பிரமாணம். அதாவது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். ஆகையால் அவர் மோசடி செய்ததில் வியப்பொன்றுமில்லை.

இதே போல திருக்குறள் கிறிஸ்த நூல் என்று மெய்ப்பிப்பதாக ஒரு ஐயர் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கை நாம் எல்லோரும் அறிவோம். இப்பொழுதும் கூட வெப்சைட், பேஸ்புக்கில் ஒரு பெரிய கும்பல் வேதத்தில் ஏசு இருக்கிறார், அல்லா இருக்கிறார் என்று பலரைக் குழப்பி மோசடி செய்துவருகிறது. இந்துக்கள் முதலில் தங்களிடம் உள்ள உண்மைச் செல்வத்தை அறிந்தால் இந்த மோசடிக் கும்பல்கள் தானாக கடை கட்டி விடுவர்.

ராபர்ட் டி நொபிளி செய்த மோசடியால், ஐரோப்பாவில் வேதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் பத்திரிக்கைகள் எழுதத் துவங்கின. அப்பொழுது கர்னல் போலியர் என்பவர் ஜெய்ப்பூரி லிருந்து மிகவும் கஷ்டப்பட்டு நான்கு வேதங்களையும் திரட்டி பிரிட்டிஷ் மியூசியத்தில் சமர்ப்பித்தார். இது நடந்தது 1798ல். பின்னர் சர்ச்சை அடங்கியது.

பிராமணர்

மாக்ஸ் முல்லர் அந்தர் பல்டி

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900):

ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வசித்தவர்.

வேதத்திற்கு சாயணர் எழுதிய உரையுடன் அதை வெளியிட்டவர் மாக்ஸ்முல்லர். 1856-59- ஜெர்மன் பாஷையில் ரிக் வேதத்தை வெளியிட்டார். நிறைய நூலகள் எழுதியுள்ளார். கீழ்திசை இலக்கியங்கள் என்று எல்லா நூல்களையும் மொழி பெயர்க்கச் செய்து ஐம்பதுக்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிட்டார். ஆனால் முதலில் உள்நோக்கத்துடன் மொழிபெயர்க்கத் தொடங்கினார். வேதங்களை வேரறுத்து கிறிஸ்தவ மதத்தை நிலை நாட்டுவேன் என்று சூளுரைத்தார். கொக்கரித்தார். இதோ விக்கி பீடியா வாசகம்:

Muller once wrote that;-

The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.[20][21]

As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of, nay, much of the work which is theirs they would probably disclaim. The Christianity of our nineteenth century will hardly be the Christianity of India. But the ancient religion of India is doomed—and if Christianity does not step in, whose fault will it be?

—Max Müller, (1868)[22]

அதி பயங்கர நோக்கத்தோடு மொழிபெயர்ப்பைத் துவங்கிய அவர் அப்படியே மாறிப் போனார் ஜி.யூ. போப் பாதிரியார் போல. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் கி. 1200க்கு முந்தையது என்றார். அது மிகவும் தவறு- இன்னும் மிகப் பழமையானது என்று பல மேலை நாட்டினர் எதிர்த்தவுடன். வேதத்தின் காலத்தை எந்த ஒரு மனிதனாலும் கணிக்க முடியாது. அவ்வளவு பழமையானது என்று பல்டி அடித்தார்.

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),1826-1906

கிரிப்பித் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வசித்து தமிழ்நாட்டில் கோத்தகிரியில் இறந்தார். ஒரு பாதிரியாருக்குப் பிறந்தவர். அவருக்கு முன் வெளியான ரிக் வேத மொழி பெயர்ப்புகளை எல்லாம் கலந்து இவர் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தார். ஆனால் பெரும்பாலும் சாயணர் வாதத்தை ஏற்றார் (இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புதான் என் மேஜையில் எப்போதும் இருக்கும்). பக்கத்துக்குப் பக்கம் விளங்க வில்லை, பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார் .நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் வேலைபார்த்த பின்னர் காசியிலும் கல்லூரி முதல்வராக வேலை பார்த்தார். ராமாயணத்தை ஆங்கிலப் பாடலாக மொழி பெயர்த்தார். காளிதாசனின் குமார சம்பவம் உள்பட பல நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார்.

ஐயங்கார்

தியோடர் ஔபிரெட் 1822-1907(Theodor Aufrecht) இவர் மாக்ஸ்முல்லர், பென்வே ஆகியோருடன் பயின்றார். எடின்பரோ, பான் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.மாக்ஸ்முல்லர், ரிக்வேத மொழிபெயர்ப்பை வெளியிட உதவி செய்தார். அவரைப் போலவே இவரும் 40 ஆண்டுக் காலம் வேத மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபாட்டார். அதே நேரத்தில்(1849-75) ரிக் வேதத்தின் மூலத்தையும் வெளியிட்டார். சம்ஸ்கிருத மொழியில் அச்சிட்ட நூல்கள், இன்னும் அச்சேறாத நூல்கள் என்று மூன்று கேடலாக் (நூல் பட்டியல்) வெளியிட்டார் (இதைப் பார்க்கையில் சம்ஸ்கிருத இலக்கியம் எவ்வளவு விரிவானது என்று விளங்கும்.உலகில் சம்ஸ்கிருத நூல்கள் உருவான காலத்தில் கிரேக்க, எபிரேய, தமிழ், லத்தீன் மொழி நூல்கள் பிறக்கவே இல்லை.அதாவது கி.மு1700 முதல் கி.மு.1000 வரை).

ரோஸனின் பணி

1830-ல் பேராசிரியர் ரோஸன் என்பவர் சில ரிக்வேத சூத்திரங்களைப் பிரசுரித்தார். 1838ல் ரிக் வேத முதல் அஷ்டகத்தைப் பிரசுரித்தவுடன் இந்திய தத்துவம் பற்றிய ஆர்வம் பிறந்தது (ரிக் வேதத்தை எட்டு அஷ்டகமாகவோ பத்து மண்டலங்களாகவோ– இரண்டு முறையில் பிரிப்பது வழக்கம்).

மேனாட்டு வேத பண்டிதர்களில் பேராசிரியர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் என்பவருக்கு  பழைய வேத பாஷ்யக்காரர்களான யாஸ்கர், மஹீதரர், சாயணர் முதலியவர்களிடத்து அளவற்ற மதிப்பு உண்டு.பழைய பாஷ்யக்காரர்களில் கருத்து வேறுபாடு இருந்தால் யாஸ்கரையே பின்பற்ற வேண்டும் என்பது இவர் கொள்கை. ராத், இதற்கு நேர் மாறாக அபிப்ராயம் உள்ளவர்.

போட்லிங், ராத், கிராஸ்மேன் ஆகியோர் பாரதீய விற்பன்னர்களை மதிக்கவில்லை. வேத கால அறிஞர்களை விட தங்களுக்கு கூடுதல் அறிவு என்று கருதினர். இது இந்து மத எதிரிக் கும்பல்.

பிஷெல், கெல்ட்னர் ஆகியோர் சாயண பாஷ்யத்தை அடியொற்றிச் சென்றனர்.

பகவத் கீதை மொழி பெயர்ப்பு

வாரன் ஹேஸ்டிங்ஸ் கொடுத்த உற்சாகத்தால் சார்ல்ஸ் வில்கின்ஸ் என்பார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கும். ஆனால் பகவத் கீதை அழியாது என்று எழுதி இருக்கிறார்.

சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-94), சம்ஸ்கிருதம்—ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்து வியத்தகு ஒற்றுமை இருப்பதை அறிவித்தார். அவர் கல்கத்தாவில்   ஆசிய சங்கத்தை தாபித்து மொழி ஆராய்ச்சிக்கு அடிக்கோல் நாட்டினார். சாகுந்தலம், மனுஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தை வானளாவஒப் புகழ்ந்தார். பின்னர் ஒரு குடப் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தார். அதாவது, ஆரியர்கள் எல்லாம் வந்தேறு குடிகள் என்று!

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்(1765-1837), வில்லியம் ஜோன்சுக்கு உறுதுணையாக நின்றார். நிறைய கட்டுரைகள் எழுதி வேதங்களின் பெருமையைப் பரப்பினார்.

பிரெடெரிக் ஷ்லெகல் (1772-1829) என்பார் 1808ல் On the Language and Wisdom of the Indians என்ற நூல் எழுதினார். அவருடைய சகோதரர் ஏ.டபிள்யூ. வான் ஷ்லெகலும் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்தார்.

ஷேஜி (1773-1832) என்பவர், பிரான்ஸ் தேசீய கழகத்தில் முதல் சம்ஸ்கிருத பேராசிரியர் ஆனார்

பிரான்ஸ் பாப் (1791-1867), ஷேஜியிடம் சம்ஸ்கிருதம் கற்று வினைச் சொற்களை ஒப்பிட்டு ஒரு நூலும், சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டார். லாசன் என்பவர், ஷ்லெகலின் சீடர்.வேதங்கள் பற்றிக் கட்டுரை எழுதினார்

நிறைய பனை ஓலைச் சுவடிகளைச் சோதித்து ரிக்வேத முதல் அஷ்டகத்தை வெளியிட்டார்.

தியோடர் பென்வே (1809-1881)சாம வேதத்தையும் சம்ஸ்கிருத-ஆங்கில நிகண்டையும் அச்சிட்டார்.

கேரம் பாய்ஸ்

ஆட்டோ மற்றும் போட்லிங்க் ஆகிய இருவரும் பிருஹத் சம்ஸ்கிருத நிகண்டு உருவாக்கினர்

விட்னி 1905ல் அதர்வ வேத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

வெபர் 1858ல் பாணீணிய சிட்சை மற்றும் பிங்களனது சந்தஸ் சூத்திரத்தை வெளியிட்டார்.

1877ல் ருடால்ப் மேயர், ரிக் விதானம், பிருஹத் தேவதை ஆகியவற்றை வெளியிட்டார்

1862ல் டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் என்பவர் ரிக் வேதம் மீதான ராவண பாஷ்யத்தை அச்சிட்டார்.

1877லௌப்ரெக்ட் ரிக்வேதம் முழுதையும் அச்சிட்டார்.

1876ல் லுட்விக்கும், 1876ல் கிராஸ்மேன் ஜெர்மானிய பாஷையிலும் வெளியிட்டனர்.

போட்லிங்கும் பேராசிரியர் ராத்தும் அப்போதைய ரஷியத் தலைநகரான செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சம்ஸ்கிருத- ஜெர்மானிய அகராதியை வெளியிட்டனர்.

186ல் பேராசிரியர் மார்ட்டின் ஹாக், ஐதரேய பிராமணத்தை வெளியிட்டார்.

1864-65ல் பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் ஆஸ்வலாயன க்ருஹ்ய சூத்திரத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.

அதே சமயத்தில் ஹெர்மன் ஓல்டன்பர்க், சாங்க்யாயன க்ருஹ்ய சூத்திரத்தை அச்சிட்டார். இது வீபர் வெளியிட்ட பத்திரிகை மூலம் வெளியானது

1857-58 ல், பேராசிரியர் ரேநீர். பிரெஞ்சு மொழியில் ரிக்வேதத்தை வெளியிட்டார்

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith): இவர் மக்டொனலின் சீடர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தவர். தைத்ரீய சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் .சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, நாடக இலக்கிய வரலாறு கர்ம மீமாம்ஸை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

ஏ.ஏ.மக் டொனல் Prof Arthur Anthony MacDonnell (1854-1931): இவர் பென்வேயிடம் பயின்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். Vedic Index of Names and Subjects என்ற புத்தகம் எழுதினார். 1927ஆம் ஆண்டில் India’s Past என்ற நூல் வெளியிட்டார்.. ஆங்கில- சம்ஸ்கிருத அகராதி, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

(கீத்தும் மக்டொனலும் தயாரித்த வேதப் பெயர், பொருள் அகராதியும் என் மேஜையில் எப்போதும் இருக்கிறது)

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner(1853-1929):- இவர் ஒரு ஜெர்மானியர். ராத் என்பவரின் மாணாக்கர். ஜெர்மனியில் பெர்லின், மார்பரி பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார். ராத் கொடுத்த விளக்கங்களை இவர் ஏற்கவில்லை.சாயண பாஷ்யத்தை ராத் புறக்கணிப்பது தவறு என்றும் சாயண பாஷ்யமே சரி என்றும் எழுதினார். சாயண பாஷ்யம் இன்றி வேதத்தில் ஒரு சொல்லுக்குகூட பொருள் சொல்ல முடியாதென்றும் எழுதினார்.

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler: இவர் பென்வேயிடம் கற்றவர்.பிராக் பலகலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார். சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். பம்பாய், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தார். சம்ஸ்கிருத  நூல்கள் பற்றி கலைக் களஞ்சியம் ஒன்றை தயரித்தார்.

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams: இவர் தற்கால இந்து தேசம் என்ற நூலில் சம்ஸ்கிருதத்தின் சிறப்பை எழுதியுள்ளார். சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவிக்கான போட்டியில் மாக்ஸ் முல்லரைத் தோற்கடித்தவர். அந்தப் பதவியே கிறிஸ்தவ மதத்தை நிலநாட்டுவதற்கான பதவியாகும்.

பேராசிரியர் லான்மென் ( Prof. Charles Rockwell Lanman) இவர் விட்னியிடம் பயின்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.இவருக்கு முன் பலர் வேறு மொழிகளில் எழுதிய வேத இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஹெர்மன் ஜாகோபியும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் தனித்தனியே நடத்திய ஆரய்ச்சியில் ரிக் வேதத்தின் காலம் கி.மு.4000 என்று கணித்துள்ளனர். இது வான சாத்திர ஆராய்ச்சி என்பதால் தனிக்கட்டுரையாக தருகிறேன்.

Easy Way to become a Philosopher!

Socrates-large

Written by London swaminathan

Article No.1934

Date :15th June 2015

Time uploaded in London: 20-50

Socrates’ marital difficulties are well known. Out of them he coined this sage advice: “By all means marry. If you get a good wife, you will become very happy; if you get bad one you will become a philosopher – and that is good for everyman”.

To be or Not to be

When Socrates was asked whether it was better for a man to marry or remain single, he answered:

“Let him take which course he will, he will repent of it”

Thunder and Rain

From my post 60 Second Interview with Socrates (posted on 12-2-2012)

We understand that your wife was very rude to you. One day she scolded you for lecturing. When you did not stop, she poured on you a bucket full of water. Shakespeare in his play “Taming of the Shrew” mentions your wife’s rudeness. What did you say to your friends then?

 

You heard thunder and now it is raining”.

HOD HASHARON, ISRAEL - OCTOBER 31:  A flash of lightning lights up the sky before dawn on October 31, 2009 over Hod Hasharon in central Israel. The storm brought much needed rain to the Holy Land which has been suffering from years of below normal precipitation leaving the Sea of Galilee and underground aquifers at dangerously low levels.  (Photo by David Silverman/Getty Images)

HOD HASHARON, ISRAEL 

Football and Marriage

An old gentleman, who had never attended a football game, allowed himself to be persuaded by a fan to accompany him. “Now then”, said his friend, as the game was about to begin, “you are going to see more excitement for a couple of dollars than you ever saw before”. “I doubt it”, said the old timer, “that’s all I paid for my marriage license”

The Light has Gone out

A widower in his great bereavement, expressed his feelings by having engraved on the tombstone of his wife the line, “My light has gone out”. As he was about to marry again, he asked the advice of Bishop Henry C.Potter as to  whether or not he should have the inscription erased as it seemed at variance with the new conditions.

“Oh, No,” said the Bishop, “I wouldn’t have taken it off; just put underneath it, “I have struck another match”.

Rose and Thorns

When the poet Milton was blind he married a shrew. The Duke of Buckingham called her a rose. “I am no judge of colours”, replied Milton, “and it may so, for I feel the thorns daily”.

milton

Tamil and English Proverbs

There is a Tamil proverb , “After marriage there will be  desire for sixty days, lust will last thirty days, and after ninety days have passed, she will be considered a broomstick ( In Tamil – Aasai arupathu Naal, moham muppathu Naal, Thonnuuru Naalum ponaal Thudappai kattai).

There is an equivalent English proverb:

“When a couple are newly married, the first month is honey moon or smick and smack;

The second is hither and thither;

The third is thwick-thwack;

The fourth – The devil take them that brought thee and me together”.

“Mother, what sort of a thing is marriage?

Daughter, it is spinning, bearing children and weeping”.

வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

maxmuller

ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1933

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி:- 15 ஜூன் 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 10-30

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்கள், ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்கள் ஆகிய நான்கு இனத்தினர் பல இடங்களைப் பிடித்து ஆண்டனர். அவர்களை இப்பொழுது விரட்டி அடித்து வெற்றிவாகை சூடிவிட்டோம். ஆயினும் அவர்கள் இருந்த காலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்,  எப்படியாவது இந்து மதத்தின் அஸ்திவாரத்தை அசைத்துவிட்டால் பின்னர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பலாம், அதன் மூலம் ஆட்சி நீடிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும் என்று கணக்குப் போட்டார்கள் – அது அது தப்புக் கணக்காகிவிட்டது. இதற்காக இந்து மதத்தின் மூல வேரான வேதங்களைத் தகர்க்க வேண்டும் என்று திட்டமிட்டனர். உடனே இதில் தீவிரமாக இறங்கினர் சுமார் 35 பேர்.

ஆட்சி அஸ்தமனமானபோதும், அவர்கள் அப்போது ஊன்றிய விஷ வித்து மட்டும் செடியாகி மரமாகி பழுத்தும் விட்டது. அதுதான் ஆரிய-திராவிட இனவெறி வாதம். இப்பொழுது அந்த மரம் ஆடத் துவங்கிவிட்டது. விரைவில் அழியும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழைய கல்வெட்டுகளில் எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாலும் அது வடக்கத்திய பிராமியில் இருப்பதாலும் போலி திராவிடங்களின் வாதங்களும் பிசுபிசுத்துப் போய்விட்டது. பழனியில் கிடைத்த மிகப்பெரிய கல்வெட்டில் வஜ்ரம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இருந்தவுடன் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயன்றனர். முடியவில்லை. எல்லா பழைய கல்வெட்டுகளிலும் இப்படி சம்ஸ்கிருதச் சொற்கள்!

அட, தமிழின் பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தை வைத்தாவது பூச்சாண்டி காட்டலாம் என்று எண்ணும் திராவிடங்களின் வாயில் பனம்பாரனாரும் தொல்காப்பியரும் மண்ணைப் போட்டுவிட்டனர். நான்கு வேதங்களையும் படித்த பிராமணன், அதங்கோட்டு ஆச்சார்யார்தான் தொல்காப்பியத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று அரங்கேற்ற ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து இருக்கிறார். தொல்காப்பியரோ நூலில் பல இடங்களில் வேதங்களையும் வேத வழக்குகளையும், வேத கால தெய்வங்களையும் பாடிப் பரவிப் போற்றியுள்ளார். இது எல்லாம் போலி திராவிடங்களின் வாதங்களைத் தகர்த்துவிட்டது.

இது தவிர வெள்ளைக்காரன் சூழ்ச்சியாலும், காந்தி போன்றவர்களின் பலவீனத்தாலும் இந்தியா இருக்கும் வரை நிரந்தர தொல்லை கொடுப்பதற்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டு குடையுதே குடையுதே என்னும் பழமொழி போல ஆகிவிட்டது. இதற்கு முடிவுகட்டுவது வலுவான இந்திய அரசால்தான் முடியும்.

இன்றும் இந்த வெளிநாட்டுச் சதி நீடிக்கிறது. வெண்டி டோனேகர் போன்ற எழுத்தாளர்களை விட்டு, இந்து மதம் பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல விஷத்தை ஏற்றுவது — எங்கோ கொட்டாம்பட்டியிலும், ஈரோட்டிலும் எவனாவது ஒரு தமிழ் எழுத்தாளன் இந்து மதத்துக்கு எதிராக கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பாடப் புத்தகமாக வைத்து அவன் பாங்குக் கணக்கில் பல லட்சங்களைச் சேர்ப்பது — இதற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட்களை ஏவிவிடுவது — இப்படி எவ்வளவோ சதி நடக்கிறது. எங்களைப் போன்ற 40 ஆண்டு அனுபவ ‘ஜர்னலிஸ்டுகள்’ அந்தச் செய்தியைப் படித்த மாத்திரத்தில் சூட்சுமம் புரிந்துவிடும்.

jones-stamp

நிற்க. வேதங்களை உருக்குலைக்க வெளிநாட்டினர் சதி பற்றிப் பார்ப்போம்.

வேதங்களை ஆராயவந்த வெளிநாட்டினரில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகை சூரியனைக் கண்டு குலைக்கும் நாய் வகை. அதாவது வேதம் முழுவதையும் திட்டித் தீர்ப்பது. சாயணர் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன் எழுதிய உரை முழுவதையும் குதறிக் கிழிப்பது – இந்த வகை

இரண்டாவது வகை: நடுவழி. குற்றமும் சொல்ல வேண்டாம்- புகழவும் வேண்டாம். சாயணர் சொன்னதை ஒட்டியும் வெட்டியும் வாதாடுவது.

மூன்றாவது வகை: சாயணர் சொன்னதை அப்படியே ஏற்பது வேதங்களைக் கொஞ்சம் பாராட்டுவது.

ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரகள், ஜெர்மானியர்கள் ஆகிய மூவரும் இத் “திருப் பணியில்” இறங்கினர். ஜெர்மானியர்கள் இந்தியாவை ஆளவில்லையே. அவர்களுக்கு இதில் என்ன உள் நோக்கம்? என்று நீங்கள் வியக்கலாம். சம்ஸ்கிருதத்துக்கு மிகவும் நெருங்கிய மொழி அது என்பதாலும், இந்திய சம்ஸ்கிருதச் சுவடிகளில் பல ரகசியங்கள் இருந்ததால் அதை எடுத்துச் செல்லும் நோக்கத்தாலும் அவர்களும் களத்தில் இறங்கினர்.

இப்படி இறங்கிய பலரில் ஒருவர்தான் மாக்ஸ் முல்லர். அவர் ஒரு ஜெர்மானியர். அவரை இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக் காரர்கள் வேதங்களை மொழிபெயர்க்க கூலி வேலையில் அமர்த்தினர். முதலில் கைக்கூலி வேலை பார்த்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேதக்கடலில் மூழ்கிப் போனார். திட்ட முடியவில்லை. கொஞ்சம் பாராட்டியும் கூடப் பேசிவிட்டார்.

vedas

எப்படி தமிழ் கூறு நல்லுலகத்தில் கிறிஸ்தவ மததைப் பரப்ப வந்த ஜி.யூ. போப் என்ற பாதிரியார் திருவாசகம் என்னும் கடலில் மூழ்கி தமிழ் அமுதத்தைப் பருகுவதே தன் பிறவிப்பயன் எடுத்ததன் நோக்கம் என்று கருதினாரோ அது போலவே மாக்ஸ்முல்லர் என்னும் உப்பு பொம்மையும் வேதக் கடலின் ஆழத்தைக் காணப்போய், அதன் ஆழத்தை அறிய முடியாமல் அதில் கலந்து விட்டது. நாற்பது ஆண்டுக்காலம் அவர் வேதக் கடலில் நீச்சல் அடித்ததால் அவரை லண்டனில் சந்தித்த பிறகு சுவாமி விவேகாநந்தர், அவரை சாயணரின் மறு  அவதாரம் என்று புகழ்ந்தார். ஆனால் மக்ஸ்முல்லர் இந்தியா வராமலேயே உயிர்நீத்தார். இதன் மர்மம் இன்று வரை புரியவில்லை! இந்திய வேதங்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மாக்ஸ்முல்லர் இந்தியா வர பயந்தது ஏன்? இன்னொரு நாள் விடை காண்போம்.

இரண்டு கடிகார முள் ஒரே நேரத்தைக் காட்டாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல வேதங்களை “மொழி பெயர்த்த” எல்லோரும் நவக் கிரகங்களாக ஆளுக்கொரு திசையைப் பார்த்தனர். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் – பெரும் சதிக் கும்பல் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு—இவர்கள் அனைவரும் “இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்” என்று ஆணித்தரமாக வாதாடினர். மேலும் பைபிள் பிரசாரகர்கள் சொல்லுவது போல உலகம் கி.மு.4004-ல் படைக்கப்பட்டது என்று நம்பினர். மேலும் இவ்வளவு தூரத்துக்கு குடைந்து குடைந்து வேதங்களை அக்கு வேறு ஆணி வேராக அலசியோர் தங்கள் ஆப்ரஹாமிக் (யூதம்,கிறிஸ்தவம், இஸ்லாம்) மதங்களை இப்படி ஆராயவுமில்லை; குறைகூற வுமில்லை.

கீழ்க் கண்ட பட்டியலில் உள்ள எல்லோரும் வேதங்களை ஆராய்ந்து கருத்து தெரிவித்தவர்கள் அல்லது கட்டுரை எழுதியவர்கள், பலர் மொழி பெயர்த்தனர்:–

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900),

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),

பேராசிரியர்  ராத் (Prof R Roth)

பிரெடெரிக் லுட்விக், Ludwig Geldner

பேராசிரியர் வீபர் Prof Weber

treecolor

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith).

ஏ.ஏ.மக் டொனல் Prof A A MacDonnell,

வின்டர்நீட்ஸ் Winternitz ,

வில்சன், Prof H H Wilson

கோல்ட்ஸ்டக்கர் Prof Theodore Goldstucker

வில்லியம் ட்வைட் விட்னி William Dwight Whitney (1827-1894),

மோரீஸ் ப்ளூம் பீல்டு Maurice Bloomfield,

பேராசிரியர் ஆர்.பிஷெல் Prof. R Pischel

பேராசிரியர் சார்ல்ஸ் ராக்வெல் லான்மேன் Prof.Charles Rockwell Lanman

ஹெர்மன் ஜாகோபி Herman Jacobi,

ஏ.லாங்ல்வா A Langloi – French Translation

ஆல்ப்ரெட் வீபர் Albrecht Weber – Yajur Veda Vajasaneyi Samhita

ஜே.எக்லிங் J Eggeling

டாஸன் Deussen

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler

பாட்லிங் Bohtlingk

பென்பே Theodore Benfey

கிராஸ்மேன் Grossman

ஆட்டோ Otto

whitney

பேராசிரியர் யூஜின் பர்னப்  Prof Eugene Burnouf

கிறிஸ்டியன் லாசன் Christian Lassen

பிரெடெரிக் ரோசன் Friedrich Rosen

ஹெர்மன் ஓல்டன்பர்க் Herman Oldenburg – Sankyana Grhya sutra

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams

ராபர்ட் டி நொபிலி Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda

லிட்லி Lydley Bibliotheca Indica from 1847

டாக்டர் ரோயர் Dr Roer

டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் 1877 Brhatdevata Dr Fitz Edward Hall

பேராசிரியர் மார்ட்டின் ஹாக் 1863 Prof Martin Haugh

பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் 1864-65 Prof Stenzler

சர் வில்லியம் ஜோன்ஸ்  Sir William Jones

இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அடுத்த பகுதியில் சுருக்கமாகப் பார்ப்போம்.

லண்டனைக் கலக்கிய அற்புதத் தேர்த் திருவிழா!

0a128-img_4265

Written by London swaminathan

Article No.1932

Date : 14th June 2015

Time uploaded in London: 21-34

லண்டனில் இன்று (14 ஜூன் 2015) நடந்த ஹரே க்ருஷ்ணா இயக்க தேர்த் திருவிழா— ரத யாத்ரா – லண்டனை ஒரு கலக்கு கலக்கி விட்டது. மத்திய லண்டனையே குலுக்கியது என்று சொன்னாலும் மிகை இல்லை. ஆண்டுதோறும் நடக்கும் தேர்த் திருவிழாதான் இது. என்றாலும் நான் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனில் மீண்டும் ஹரே க்ருஷ்ணா தேர் விழாவில் கலந்து கொண்டதால் 25 ஆண்டுகளில் – கால் நூற்றாண்டில் – ஏற்பட்ட மாறுதல்களை எடை போட்டுப் பார்க்க முடிந்தது.

b9ce0-img_4272

லண்டனில் 25-க்கும் மேலான தமிழ்க் கோவில்கள் உள. அவற்றின் தேர்த் திருவிழாக்களிலும் நான் கலந்து கொள்வதுண்டு. இருந்தபோதிலும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் பக்கத்தில் கூட அவர்கள் வர முடியாது. இதற்குக் காரணம் வெள்ளைக்கார பக்தர்கள் இருப்பதாலும், கட்டுப்பாடான ஒரு இயக்கம் என்பதாலும் இவர்கள் ஒருவருக்கு மட்டுமே மத்திய லண்டனில் தேரை இழுக்க அனுமதி தருகிறார்கள். இது ஒரு பெரிய வேறுபாடு. மத்திய லண்டனின் முக்கிய சுற்றுலா இடங்களை தேர் கடந்து செல்வதால் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது.

இனி இன்றைய தேர்விழாவின் சொல் சித்திரம் இதோ:

ஆண்டுக்கு ஒரு முறை பிரிட்டிஷ் மஹாராணி, பக்கிங்ஹாம் அரண்மனையில்– கார்டன் பார்ட்டி—தோட்ட விருந்து தருவார். ஒரு முறை எனக்கும் என் மனைவிக்கும் அரண்மனைக்கு வர அழைப்பு வந்தது. நானும் என் மனைவியும் போனோம். மஹாராணி மிக அருகில் நின்றோம். ஆனால் அவரோ எங்களைக் கண்டு கொள்ளவில்லை. பகத்தில் இருந்த தெரிந்த முகங்களைப் பார்த்து குசலம் விசாரித்தார். இது ஆண்டுதோறும் நடக்கும். 1000 பேருக்கு அழைப்பு வரும். அங்கே எங்களைப் போன்ற வெஜிட்டேரியன்களுக்கு தனி ஸ்டாலில் உணவு. அது தவிர 20 வகையான ஐஸ்கிரீம், 20 வகையான கேக்குகள், 20 வகையான பானங்கள் என்று பரிமாறினர். இது ஆயிரம் பேருக்குதான்.

IMG_1158

ஆனால் இன்றோ தேர் வந்து நிலை சேரும் டிரபால்கர் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இலவச சாப்பாடு!! பகல் 12 முதல் மாலை 5 மணி வரை மிக மிக நீண்ட வரிசையில் 200 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களோடு நின்று உணவு உண்டு களித்தனர். இந்த அரிய காட்சியை காணும் இந்துக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்கும்.

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகும்போது வாரத்தில் ஒரு நாள் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வந்து மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுப்பர். அதை வாங்க எல்லா இன மாணவர்களும் வரிசையில் நிற்பர். இன்றோ அதை விட பல நூறு மடங்கு பல இன மக்கள் வரிசையில் நின்றனர்.

IMG_1219

நான் 25 ஆண்டுகளுக்கு முன் ‘’மார்பிள் ஆர்ச்’’ சென்றபோது தேர் இழுக்க குறைவான ஆட்களே இருந்ததால் நானும் ஒரு கை கொடுத்தேன். இன்றோ பல்லாயிரம் மக்கள்; தேர் பக்கத்தில் சென்று வடக் கயிறைத் தொடக்கூட முடியவில்லை! லண்டனின் முக்கிய கடைத்தெருக்கள், பிக்கடில்லி சர்கஸ், ஹைட் பார்க், டிரபால்கர் ஸ்கொயர் என்று எல்லா இடங்களும் தேர்ச்சக்கரத்தின் தடம் படும் புண்ணியம் பெற்றது. அடியார்களின் பாத துளிகள் பட்ட இடத்தில் நடு ரோட்டில் பல ஹரே கிருஷ்ணா பக்தர்கள் நெடுஞ்சான் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர்.

பல்வேறு குழுக்கள் மதுரைத் தேர்த் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடுவது போல ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வந்தனர். ஹரே கிருஷ்ணா, ஹரே ராம என்ற புண்ய கோஷம் ஆங்கில உச்சரிப்பில் மைக்குகள் மூலம் அலறின. மத்திய லண்டன் முழுதும் பக்தி அலைகள் பரவின.

f79dc-img_4281

சில சிறுவர்கள் கிருஷ்ணனாகவும் ராதையாகவும் வேடம் தரித்து வந்து பலரையும் கவர்ந்தனர். தேர் சென்ற வழித்தடம் முழுதும் 200 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் காமெராக்கள் பல்லாயிரம் தடவை க்ளிக் சப்தம் எழுப்பின. கிருஷ்ணன் — ராதை வேடம் அணிந்தோருடன் படம் எடுத்துக் கொள்ள போட்ட போட்டி!!

தேர் நிலை சேர்ந்த இடத்தில் பல புத்தகக் கடைகள் — இலவச பகவத்கீதை புத்தகம் விநியோகம் — பொதுவாக அவர்கள் புத்தங்களை விற்பதில்லை. நன்கொடை கொடுத்தால் மட்டும் ஏற்பர்.

இது போன்ற தேர்த்திருவிழாவைப் பார்த்தாலேயே புத்துணர்ச்சி பெற முடியும். எங்கும் நல்ல உணர்வுகளை எழுப்பும் ஒரு சூழ்நிலை. 25 ஆண்டுகளில் ஹரே கிருஷ்ணா இயக்கம் பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதை உணர முடிந்தது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் அதீத பக்தி பாராட்டப்பட வேண்டியதே. சிவன் முதலிய தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று கூறுவதால் அவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்க முடியாவிட்டாலும்  அவர்களுடைய குருட்டுத் தனமான பக்தியையும் கட்டுப்பாட்டையும் மெச்சாமல் இருக்க முடியாது. மது, மாமிசம் சாப்பிடாததும், புகை பிடிக்காததும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு எடுத்துக் காட்டு.

IMG_1148

இன்றைய லண்டன் தேர்த் திருவிழாவில் போலீஸ் ‘கார்’களும் வரவில்லை—போலீஸ்காரர்களும் வரவில்லை. இயக்கத் தொண்டர்களே கட்டுப்பாடாக வழி நடத்திச் சென்றனர். மற்ற விழாக்களில் முன்னும் பின்னும் போலீஸ்’கார்’கள் வரும். இந்த இயக்கத்தினர் மீது அவ்வளவு நம்பிக்கை! 30 ஆண்டுக்காலத்துக்கும் மேலாக உலகம் முழுதும் பெரிய நகரங்கள் அனைத்திலும் ஹரே கிருஷ்ணா இயக்கத் தேர்கள் பவனி வருவதிலிருந்தே இதை அறியலாம். இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநில பூரி ஜகந்நாதர்  ரதத்தைப் போல வடிவமைத்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ராவை வைத்து கொண்டு செல்வர்.

IMG_1150

IMG_1239

ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா! கிருஷ்ண, க்ருஷ்ணா ஹரே ஹரே!!

Wonderful Chariot Festival in London

Written by London swaminathan

Article No.1931

Date :14th June 2015

Time uploaded in London: 18-33

Hare Krishna movement (Iskcon) is organising Rath Yatra like Puri Jagannatha Ratha Yatra (chariot festival) in  big cities around the word. I have attended one such event 25 years ago in London. Today I went again to participate in the Chariot festival held in London. It was a marvellous event attended by thousands and thousands of people. There was a big difference between today’s Ratha Yatra and the one that happened 25 year ago.

Then there were not many people as devotees. Now it has grown and I could see followers themselves in thousands. And then there were people like me who support all Hindu causes in London.

Though Tamil Temples in London also condcut chariot festivals, nothing is comparable with Hare Krishna Ratha Yatra. The reason being this is done in the heart of London. Other festivals are not allowed to do it in the city centre.

Now to what happened today:

Thousands of people had stood in the Queue for free food and enjoyed the Prasad. When I go to teach at the University of London (SOAS), I used to watch students queuing up for Hare Krishna free food at lunch time. It was done once a week during term time. Students from all ethnic backgrounds stand there to get the food. But at today’s Central London chariot festival, tourists from 200 different countries also stood in the Q and enjoyed the food! A lot of Hindus and Hare Krishna devotees did a very good service. Food was served continuously from 12 noon to 5 pm.

Once I was invited to Buckingham Palace for lunch with the queen. Every year this garden party is organised by the palace and 1000 people are invited. Only thousand people will be invited. Though we had twenty different ice creams 20 types of drinks, 20 different cakes and twenty different main dishes, they fed only 1000 people. But ISKCON feeds thousands and thousands at their annual Rath Yatra. I haven’t seen anything like this in London.

The whole atmosphere was surcharged with devotion. Tufted “white Brahmins” (foreign devotees) danced in the streets. One furlong long procession took half hour to cross each point. Several chanting groups attracted a big crowd around them. Since it covered important tourist spots of London such as Hyde Park, Piccadilly Circus, main Shopping Streets and Trafalgar Square, thousands of tourists watched it with wonder. Amazed by the sight, millions of cameras clicked for good pictures. Young children dressed as Krishna and Radha attracted more photographers. Each one vied others to take photos with them. Even the watching tourists repeated the holy chant Hare Krishna, Hare Rama.

Apart from blaring music, free food, lot of Bhagavad Gita copies were distributed. They never sell the books in public events but accept donations. One conspicuous thing is the absence of police. Normally I see police vans in the front and in the back of other processions. Here everything was done by the dedicated volunteers.

Though I don’t see eye to eye with their teachings their adherence to self-discipline of not using liquor, cigarettes, non- vegetarian food is appreciated by all the Hindus. In spite of these strict conditions they are able to attract more foreigners to the movement. They shave their head like Hindu priests and wear saffron clothes. Other family people in the movement wear just special tilaks.

Every Hindu must participate in such events to draw inspiration. It spreads positive vibrations. Most of the foreigners took their leaflets politely. Only few said no.  in India such events are common and it is easy to feel the atmosphere. But in Western Countries it is not that easy. I enjoy such events celebrated in the heart of London. I will wait for June 2016 Rath Yatra.

Prayer Anecdotes from America

ORANGES

Compiled by London swaminathan

Article No.1930

Date :13th June 2015

Time uploaded in London: 22-27

TWO ORANGES

Chateauneuf, the keeper of the seals of Louis XIII, when a boy of only nine years old, was asked many questions by a bishop, and gave very prompt answers to them all. At leanth the prelate said, “I will give you an orange if you will tell me where God is”.

“My Lord”, replied the boy, “I will give you two oranges if you will tell me where He is not”.

FOUR GENTLEMEN

Four gentlemen – a Baptist, Presbyterian, Methodist and Roman Catholic – met by agreement to dine on fish. Soon as grace (prayer before meal) was said, the Catholic rose, armed with a knife and fork, and taking about one third of the fish, including the head, removed it to his plate, saying with great satisfaction: The Pope is the head of the church”.

Immediately the Methodist minister arose, and helping himself with to about one third, embracing the tail, said: “The end crowns the work”.

The Presbyterian now thought it was time for him to move, and taking the remainder of the fish to his plate, exclaimed, “Truth lies between the two extremes”.

Our Baptist brother had nothing before him but an empty plate, and the prospect of a slim dinner, so seizing a bowl of melted butter, he dashed it over them, exclaiming: “ I baptize you all”.

THOREAU

NO QUARREL

Shortly before the death of Henry Thoreau, a pious aunt visited him and asked, “Have you made your peace with god, Henry?”

“I don’t know that we ever quarrelled”, he replied.

EDISON

Henry M.Stanley, the famous deliverer of Dr Livingston from darkest Africa, one time came to Edison’s laboratory to see the great inventor demonstrate his new invention, phonograph.

Having heard the machine, and been tremendously impressed by it, he asked,, “Mr Edison, if it were possible for you to hear the voice of any ma whose fame is known in the history of the world, whose voice would you prefer to hear?”

“Napoleon”, Edison answered without any hesitation.

“No, No”, said Stanley with an overtone of disapproval, “ I should like to hear the voice of Our Saviour”.

“Oh, Well”, replied Edison slightly embarrassed by his guest’s religious feeling, “You know I like a hustler”.

(hustler= someone who knows how to get money from others; aggressive salesman”

EDISON 2

LINCOLN’S RELIGION

Abraham Lincoln, once remarked to a friend that his religion was like the religion of Glenn in Indiana, whom he heard speak at a church meeting and who said: “When I do good I feel good; when I do bad, I feel bad; that is my religion”

XXXXX

To a clergyman during the early (American Civil) war Abraham Lincoln made a significant remark.

“Let us have faith, Mr President”, the minister said with solemnity, “that the Lord is on our side in this great struggle”

To which Lincoln quietly retorted, “I am not at all concerned about that, for I know that the Lord is always on the side of the right; but it is my constant anxiety and prayer, that I and this nation may be on the Lord’s side”.

392px-Young_Lincoln-1c

PIOUS LADY

A pious lady had prayed to St Raboni for the conversion of her husband – a few days after, he died  — whereupon the widow exclaimed, “What a gracious saint is Raboni, he even gives us more than we pray for.”

OLIVER CROMWELL

It was said that Oliver Cromwell, the English statesman and soldier, usually said the following grace (prayer) before meals: “Some people have food but no appetite others have appetite, but no food. I have both. The Lord be praised”.

BENJAMIN FRANKLIN

Dr Franklin, when a child, found the long graces (prayer before meal) used by his father before and after meals very tedious. One day after the winter’s provisions has been salted: “I think, father, said Benjamin, “If you were to say grace over the whole cask (barrel storing alcohol), once for all, it would be a vast saving of time”.

Benjamin-Franklin

PREACHER’S LIST

The new preacher had finished his sermon in which he had listed all the human wants that he thought the Lord should gratify.

The deacon asked the old janitor, who had listened patiently throughout this sermon, if he did not think the minister had offered a good prayer.

“Ah, most certainly does, boss. Why that man asked the Lord for the things the other preacher didn’t even know He had”

பிரார்த்தனையின் சிறப்பு

Indian devotees touches the foot while praying and seek blessings at a 52 foot tall idol of the elephant-headed Hindu god Lord Ganesh during the 'Ganesh Chaturthi' Hindu festival in Hyderabad on September 2, 2011. Hindu devotees bring home idols of Lord Ganesha during the 'Ganesh Chaturthi' in order to invoke his blessings for wisdom and prosperity, during the eleven day long festival which culminates with the immersion of the idols in the Arabian Sea.   AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

 AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

Compiled by S NAGARAJAN

Article No.1929

Date :13th June 2015

Time uploaded in London: 20-34

 

By ச.நாகராஜன்

பிரார்த்தனையின் சிறப்பு

பிரார்த்தனை மனிதனுக்கே உள்ள தனி உரிமை. தனிச் சிறப்பு. ஈ, எறும்பு, சிலந்தி, யானை போன்றவை இறைவனை அழைத்து உயர்ந்ததை புராண வாயிலாகப் படிக்கிறோம். என்றாலும் நூலறிவாலும் பட்டறிவாலும் இறைவனின் பெருமையை அறிந்து அவனைத் துதித்துப் போற்றுவது மனிதனுக்கே உரியதாகும்.

ஆகவே தான் அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஔவையாரும் ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம் என ஆதி சங்கரரும் மனிதப் பிறப்பைச் சிறப்பித்தனர்.

மனிதர்களில் நாத்திகரைத் தவிர அனைவரும் பிரார்த்தனை புரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக. சி.ல பலிக்கின்றன. சில பலிப்பதில்லை.

அரவிந்தரின் அருளுரை

மஹரிஷி அரவிந்தர் இது பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம். அவரது சீடராக இருந்தவர் இசை விற்பன்னர் திலிப் குமார் ராய்

“Sri Aurobindo came to me” என்ற நூலில் அரவிந்தருடனான தனது அனுபவங்களைச் சுவைபடத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இடத்தில் பிரார்த்தனையின் பலிதம் பற்றி அரவிந்தரின் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

அரவிந்தரின் தாய்வழி மாமன் ஶ்ரீ கிருஷ்ண குமார் மித்ராவின் மூத்த பெண் டாக்டர்களால் கை விடப்பட்டு விட்ட நிலை. அவர் தந்தை கூறினார்: “கடவுள் ஒருவர் தான் இனி துணை; பிரார்த்தனை செய்வோம்” அவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவுடன் குணம் தெரிய ஆரம்பித்தது. டைபாய்ட் ஜூரம் போயே போனது. நோயாளி பிழைத்தார். சில பிரார்த்தனை பலிக்கும். சில பலிக்காது. அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்று பலிக்க வைத்தால் கடவுள் மிக மோசமான நிலையில் தள்ளப்படுவார்.

அரவிந்தரின் எழுத்துக்களில் இவை சொல்லப்படுகிறது இப்படி:-

“As for prayer, no hard and fast rule can be laid down. Some prayers are answered, all are not. The eldest daughter of my maternal uncle, Sri Krishna Kumar Mitra (the editor of Sanjivani – not by any means a romantic, occult, supra-physical or even an imaginative person) was abandoned by the doctors after using every resource, all medicines stopped as useless. The father said: ‘There is only God now, let us pray.’

He did and from that moment the girl began to recover, the typhoid fever and all symptoms fled, death also.

I know any number of cases like that. Well? You may ask why should not then all prayers be answered. But why should they? It is not a machinery; put a prayer in the slot and get your asking. Besides, considering all the contradictory things mankind is praying for at the same moment, God would be in a rather awkward hole if he had to grant all of them; it would not do.”

 

மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இருவர் இரு வேறான நிலைகளில் எதிரும் புதிருமாக பிரார்த்தித்தால் கடவுள் யாருக்கு அருள்வார்?

இறைவனின் வழிகள் தனி. விளக்கத்திற்கு அப்பாற்பட்டவை. (ஏடிஎம் மெஷினில் கார்டை செருகி வேண்டியதை எடுப்பது போல அல்ல பிரார்த்தனை!)

THF_Memorial02

லண்டனிலொரு நிகழ்ச்சியில் திருமதி சீதா வெங்கட்ராமன், திரு.கல்யாண குருக்கள் பிரார்த்தனை

வள்ளுவர், மணிவாசகர், தாயுமானவர் ஆகியோரின் அருளுரைகள்

“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்ற வள்ளுவர் குறளில் (குறள் 4) இறைவன் இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.

வேண்டத்தக்கது அறிவோய் நீ;

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய்

வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உன்தன் விருப்பன்றே” என்கிறார் மாணிக்கவாசகர்.

எனக்கு நல்லது எது என்பது உனக்கே தெரியும்; அதை அருள்வது உனது பொறுப்பு என்ற அவரது அருளுரை மனித குலத்திற்கே ஒரு வழி காட்டுதலாக அமைகிறது.

தாயமானவரின்,

எனக்கெனச் செயல் வேறிலை யாவும் இங்கு ஒரு நின்                          தனக்கெனத் தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன்                         மனத்தகத்து உள அழுக்கெலாம் மாற்றி                                     எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

(நீதம் – முறை)

என்ற பிரார்த்தனை அருமையான பிரார்த்தனை. என் மன அழுக்கை மாற்றி, நீ நினைத்ததை எனக்கு அருள் என்று இறைவனிடம் பொறுப்பை அவர் ஒப்படைக்கிறார்.

பிரார்த்தனை பற்றிய தெளிவு மகான்களின் வாக்கால் பிறக்கிறது.

***************

MORE PROVERBS, MORE STORIES!

lion and fox

Compiled by London swaminathan

Article No.1928

Date :12th June 2015

Time uploaded in London: 15-42

Please read earlier posts for Stories behind Tamil Proverbs:

Queen who bolted the door doubly, posted on 5th June (Post No 1913) and

Stories behind five Tamil Proverbs, posted on 3rd June (Post No 1908)

1.It has come to this that grass is sold in the flower market, that a cat lives in the forest where a tiger lived, a jackal occupies the den where the lion lived, and that who he used to ride on an elephant now herds sheep.

பூ விற்ற கடையிலே புல் விற்கவும், புலி இருந்த காட்டிலே பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவுமாச்சுதே!

This is about the story of King Nala in Hindu scriptures. He lost all his property and wandered in the forest with his queen Damayanti. After sometime he lost his wife as well. Now quoted about losses of property and fortune.

2.There has been enough of your help in my confinement, and of your embracing my husband!

பிள்ளைப்பேறு பார்த்ததும் போதும், என் ஆம்புடையானைக் கட்டி அணைத்ததும் போதும்

One woman went to help another woman who was pregnant. She went to her house every day under the excuse of helping her, but she had developed intimacy with the husband of pregnant woman. Her real intention was to get access to her husband with whom she was in love. The pregnant lady realised it only after some time. But she could not do anything about it because the delivery day approached.

When she became pregnant for the second time, the next door neighbour went and offered her help. She rebuked her with the above statement.

This proverb is used when someone offered some help with bad intention or a motive.

glass-cosmetic-crystal-perfume-bottle-purple

3.When I entered the home, the smell disappeared!

நானும் வந்தேன், நாற்றமும் போச்சுது!

A young merchant whose father sold salt fish, married the daughter of a dealer in perfumes, and after the wedding the girl came to her father-in-law’s home to live with her husband. At first she could not bear the smell of the fish, but after a while she became used to the odour and ceased to perceive it. She was conceited enough to suppose that her presence her driven it away.

The meaning of the proverb is, that those who live in an atmosphere of sin become blind to the disgrace of sin.

Even if you bathe a dog and leave it in the kitchen of your house it will run out for the leftover food in the streets.

4.He speaks like the nose less man in the story!

மூக்கறையன் கதை போல பேசுகிறான்!

A certain man who had no nose was always ridiculed in the village. To make the other people as badly off as himself, he began at certain times to praise god and to thank him that he had enabled him to see him. When he thus burst out loud praise, people gathered around him, and asked what they should do to see god. His advice was that they should cut off their noses. This they did one after another. And though they could not see god, they pretended that they could out of very shame. Thus wicked people will try to draw good people over to their own wicked ways.

“A hog that is bemired, endeavours to bemire others”

5.Ponnan has become old Ponnan, the vessel has become an old vessel

பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை!

There was once a servant, who found a vessel full of gold buried in the earth. He did not remove it, but went daily to look at it. At the same time he became proud and unruly. His master watched him closely and found out about the treasure, which he took secretly. When the servant found out that his treasure was gone, he resumed his usual docility and when asked for the reason of the change in his bearing, he replied as above.

This is said of one who suddenly becomes rich, but as suddenly loses his wealth.

gold-coin-israel-found-

6.If the dancing girl be alive, and her mother dies, there will be beating of drums; but if the dancing girl dies there will be no such display.

தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கம், தேவடியாள் செத்தால் ஒன்றுமில்லை.

To get the favour of the dancing girl, many men will attend her mother’s funeral; but if the dancing girl herself dies, there is nothing to be gained by attending the funeral.

A famous dancing girl’s mother died in a town; there was a big crowd attending the funeral. Each one went to the front row to show his face to the girl, just to register his presence. When the dancing girl died after a few months’ time there were only her close relatives in the funeral.

In like manner:– if somebody die in a rich man’s house, all people will attend the funeral that they may gain his favour; but if the rich man die, no one will care as nothing more is to be had from him in future.

கீதை, வேதம் பற்றிய பழமொழிகள்

சாந்தம்

Compiled by London swaminathan

Article No.1927

Date :12th June 2015

Time uploaded in London: 9-25 am

கீதா கங்கோதகம் பீத்வா புனர்ஜன்ம ந வித்யதே

பகவத் கீதையையும், கங்கை நீரையும் அருந்தியவருக்கு மறு பிறப்பு என்பதே இல்லை

கீதா சுகீதா கர்தவ்யா கிமந்யை: சாஸ்த்ர விஸ்தரை:

கீதையை நன்றாகப் படிக்க வேண்டும். மற்ற சாஸ்திரங்களால் என்ன பயன்? – மஹாபாரதம்

ஒப்பிடுக:

பகவத் கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜல லவ கணிகா பீதா

சத்க்ருதபி யேன முராரி சமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா – பஜகோவிந்தம்,20

பொருள்:கீதையைக் கொஞ்சமேனும் படித்தவர்களுக்கு, கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பருகியவருக்கு முரஹரியை (கண்ணன்) ஒரு முறையாவது வனங்கியவருக்கு யமனுடன் சண்டை போட வேண்டியது வராது (பீஷ்மர் போல நீங்கள் நினைத்த நேரத்தில் அமைதியாக, ஆனந்தமாக, சுற்றம் புடைசூழ நிற்க, உயிர் துறக்கலாம்)

இதிஹாச புராணாப்யாம் வேதம் சம உப ப்ரும்மயேத் – மஹாபாரதம்

வேத மந்திரங்களை இதிஹாச புராணங்கள் வாயிலாக விளங்கிக் கொள்ள வேண்டும்

ருஷயோ மந்த்ர த்ருஷ்டார:

ரிஷிகள் மந்திரத்தைக் கண்டவர்கள் (இயற்றியவர்கள் அல்ல; ஐன்ஸ்டைன், நியூட்டன் சொன்ன விதிகள் போல அவை முன்னமே உள்ளன; என்றும் இருப்பன)

சின்ன பையன்கள்

வேதோகில தர்மமூலம் (மனு 2-6)

எல்லா  தர்மங்களுக்கும் வேதங்களே வேர் போன்றவை

பாரதே பாது பாரதி

பாரத தேசத்தில் பாரதி (சம்ஸ்கிருதம்) பிரகாசிக்கட்டும் (வாழ்க சம்ஸ்கிருதம் என்று பொருள்)

வேதானாம் சாமவேதோஸ்மி – பகவத் கீதை

வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்

ஸ்ரவணசுகசீமா ஹரிகதா – ப்ரசங்காபரணம்

கேட்பதில் கிடைக்கும் சுகங்களில் உயர்ந்தது ஹரிகதை கேட்கும் சுகமாகும்.

ஸ்ருதிர்விபன்னா ச்ம்ருதயஸ்ச பின்னா: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வேதங்கள் வேறு; ஸ்மிருதிகள் வேறு (வேதங்கள் சொல்வதை திருத்தவே முடியாது. ஸ்மிருதிகளை பெரியோர்கள் ஒவ்வொரு காலத்திலும் திருத்துவர் அல்லது புதிதாக எழுதுவர்)

ஸம்ஸ்க்ருதி: ஸம்ஸ்க்ருதாஸ்ரிதா

பண்பாடு, சம்ஸ்கிருதத்தை அண்டி வாழ்கிறது.

சர்வஞானமயோ ஹி ச:

வேத இலக்கியமே அனைத்து அறிவும் அடங்கிய களஞ்சியம்.

சர்வம் வேதாத் ப்ரசித்யதி

வேதத்திலிருந்தே எல்லாம் கிடைக்கிறது

சர்வத சம்ஸ்க்ருதீ பூய சுகின: சர்வ சந்து சர்வதச

எல்லாவிதத்திலும் பண்பட்டு எப்போதும் சௌக்கியமாக வாழுங்கள்!

ஸ்துதா மயா வரதா வேத மாதா – அதர்வ வேதம்

வரங்களை அளிக்கும்  வேத மாதா என்னால் தொழப்பட்டாள்.

Pictures are from Face book friends; probably from Art of Living Centre.

–SUBHAM-

அன்றும் இன்றும் – கொள்ளையோ கொள்ளை!

kamaraj 2

Compiled by S NAGARAJAN

Article No.1926

Date :12th June 2015

Time uploaded in London: 8-22 am

By ச.நாகராஜன்

‘பறந்து போன பக்கங்கள்’ என்ற நூலை கோமல் சுவாமிநாதன் என்ற நாடகாசிரியர் (தோற்றம் 27-1-1935 மறைவு 1995) எழுதியுள்ளார்.1997இல் நூலாக அவரது கட்டுரைகள் வந்த போது அவர் அமரராகி விட்டார்.

தனது வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை அருமையான நடையில் எழுதியுள்ளார். தமிழக நாடகக் கலையின் வரலாறை இதன் மூலம் அறிய முடியும்.

காங்கிரஸ் பேச்சாளராக அவர் இருந்த இளம் வயதில் காமராஜரைப் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

விருதுநகரில் ஒரு உபதேர்தல். பொதுப்பணித்துறை பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது கோமல் சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் காமராஜரின் தாயாரைப் பார்க்கச் சென்றனர். “என் வீடு இருக்கும் போது அங்ஙனே போய் ஏன் தங்குறான்?” என்று அந்த மூதாட்டி கேட்டபோது தான் காமராஜர் அவரைப் பார்க்க வரவே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவனை ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்லுங்கப்பா” – தாய்க்கே உரித்தான ஆதங்கத்துடன் அவர் இருபது வயது கூட நிரம்பாத ஒரு ‘பையனிடம்’ சொல்ல, அந்தப் பையனான கோமல் சுவாமிநாதன் அதை காமராஜரிடம் சொன்ன போது,”கிறுக்கச்சி! அது ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் காமராஜர்.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி கூறிய ஒரு விஷயம் இது. அவர் காமராஜருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி அனுப்பும் பொறுப்பில் இருந்த போது நிகழ்ந்தது இது.

காமராஜரின் தாயாரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில்,”நீ மாசம் அனுப்பற ஐம்பது ரூபாய் பத்தலை. விலைவாசி ஏறிக் கிடக்கு. கூட பத்து ரூபா அனுப்பு” என்று அவர் எழுதியிருந்தார்.

அதற்கு காமராஜரின் பதில் ;”உனக்கு பத்து ரூபாய் அதிகம் அனுப்ப வேண்டுமென்றால் பாலமந்திர் ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்திலிருந்து பத்து ரூபாய் குறைத்து அதை உனக்கு அனுப்ப வேண்டும். அந்த பிள்ளைகளுக்கு குறைத்து அனுப்பக் கூடாது. அதனால் இந்தப் பணத்திலேயே சமாளித்துக் கொள்”

எப்படிப்பட்ட தலைவர்கள் சமீப காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்! அவரைப் பற்றி அந்தக் காலத்தில், தீய சக்திகள் அடுக்கு மொழியில், கொள்ளை அடித்து சுவிட்சர்லாந்தில் கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார் அவர் என்று மேடை தோறும் முழங்கும். அதை நம்பி ஏமாந்த அப்பாவிகள் ஏராளம்.

இன்று எத்தனை சைபர்கள் அந்த எண்ணுக்கு என்றே தெரியாதபடி கோடி கோடியாக கொள்ளை. கொள்ளை அடித்தவர் பெரிய ஹீரோவாக மொபைல் போனுடன் காரில் வலம் வருவதை வேறு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். அவ்வளவு தைரியம்!

இடம் ரேஷம் கார்டு விநியோகிக்கும் மையம். இட மாற்றத்திற்கான விண்ணப்பத்தை நீட்ட, அதை வாங்கிய இளம் பெண்மணி முன்னும் பின்னுமாக ஐந்து நிமிடம் திருப்புகிறார். கொடுத்தவருக்கு தன் ‘இங்கிலீஷில்’ சந்தேகம் வந்து விட்டது. “ஏதேனும் தப்பா இருக்கா!”

“பேப்பர் சரியில்லை. கீழே போய் எழுதி வாங்கிட்டு வாங்க!”

kamarajar_stamp.

அரை மணி நேரம் மண்டையைப் பிய்த்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார் அவர். கீழே இருந்த ஒருவர் மாடியிலிருந்து வரும் அவரைக் கூப்பிட்டு விஷயத்தை விசாரிக்கிறார்.

தன்னிடமுள்ள பேப்பரை எடுத்து பழைய கால ரெஜிஸ்ட்ரார் அலுவலக தமிழில் தமிழ் கூட்டெழுத்தில் மனு ஒன்றை எழுதி, ஒரு பேப்பரைக் கொடுத்து, “இதை கொடுங்க” என்கிறார்.

ஐந்து ரூபாய் கட்டணம்.

மேலே போய் பேப்பரைக் கொடுத்தவுடன் அந்த எழுத்தைப் பார்த்தவுடன் இளம் பெண்மணி புன்முறுவல் பூக்க இடமாற்றத்துடன் ரேஷன் கார்டை அடுத்த வாரம் வாங்கிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.

சிறுதொகையில் கூட கேவலமான லஞ்சப் பங்கு. இதே நிலை தான் – (பழைய கால பிறப்பிதழில் பெயர் இருக்காது. அதை எழுத) கார்பரேஷனிலும் லஞ்சத் தொகை.

ஆர்டிஓ ஆபீஸிலும் இதே நிலை தான். சார்பதிவாளர் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம்.

எங்கும் லஞ்சம்; எதிலும் லஞ்சம். ஸயின்டிபிக்காக ஊழல் முறைப்படுத்தப் பட்டுள்ளது.

ஆங்காங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏஜெண்டுகள். அவரை மீறிச் சென்றால் ஆயிரம் நொள்ளைகள் சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

காமராஜர் போல ஊழலின்றி தியாகம் செய்த தலைவர் எங்கே! ஊழலை முறைப்படுத்தி ஒன்றரைத் தலைமுறையை அழித்து விட்டவர்கள் எங்கே!

தமிழகம் இறைவனின் சாபத்தை வாங்கி விட்டதோ!

அவன் அருளின்றி சாப விமோசனம் கிடைக்காது.

சாப விமோசனத்திற்கு பிரார்த்திப்பது ஒன்றே நமது வழி.

ஆனால் அப்போதும் தீய சக்திகளின் ஒலி

“சீரங்கநாதரையும் தில்லை நடராஜரையும்;…..”

என்று ஓங்கி ஒலிக்கத் தான் செய்யும்.

ஒரு மனதாக அனைவரின் நலத்திற்காகவும் செய்யப்படும் பிரார்த்தனையில் தீயினில் தூசாகும் மாசுகள்; லஞ்சம் ஒழியும்.தர்மம் வெல்லும்.

*******