இன்று போய் நாளை வாராய்!

01cp_sampoorna_ram_1129781f

Research Paper written by ச.நாகராஜன்

Research Article No.1658; Dated 18th February 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 4

ச.நாகராஜன்

ராமனை தோள் வலி கூறுவதன் பயன்!

காலம் காலமாக பாரத மக்களிடம் இருந்து வரும் நம்பிக்கையை அப்படியே சுருக்கமாக மஹாகவி கம்பன் இப்படிக் கூறுகிறான்:

“நாடிய பொருள் கை கூடும்ஞானமும் புகழும் உண்டாம்

 

வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

 

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய

 

ராமன் தோள் வலி கூறுவோர்க்கே!”

ராமன் தோள்வலியைக் கூறி மக்களிடம் உத்வேகம் ஊட்ட ஜனரஞ்சக ஊடகமான

 

திரைப்படம் முன் வந்தது.

பக்திப் படங்களில் ஒரு திருப்பம்!   

 

1958-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் அரங்கங்களில் வெளியிடப்பட மனத்தைக் கொள்ளை கொண்ட இதிஹாஸத்தின் திரை வடிவைப் பார்க்க ரசிகர்கள் அலை மோதினர்.

எம்.ஏ. வேணு தயாரிக்க கே.சோமு இயக்க திரைப்படக் கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்க ராமராக என்.டி.ராமாராவும், பரதனாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், சீதையாக பத்மினியும், ராவணனாக டி.கே.பகவதியும் மண்டோதரியாக சந்தியாவும் தோன்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

திரைப்படத்தை எள்ளி நகையாடியவர்கள் கூட அது அரும் பங்கை ஆற்றவல்லது என்று ஒத்துக் கொள்ளுமளவு படம் அனைவரின் மனதிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.


ravana

மஹாதேவனின் இசை; மருதகாசியின் பாடல்கள்!

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நடிப்பால் படம் களை கட்டிய போது இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இசை அமைத்தவர் கே.வி.மஹாதேவன்.

பாடலை எழுதியவரோ கவிஞர் ஏ.மருதகாசி. ராமன் பாடல்களுக்கும் இவருக்கும் நிறையப் பொருத்தம் இருப்பதாகத் திரையுலகே முத்திரை குத்தி விட்ட ஒரு பெரும் கவிஞர் மருதகாசி.

படத்தின் வில்லனாக இருக்கும் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாகப் படமாக்கப்பட்டிருந்தது. ராவணனுடைய சபையில் வீணை இசைத்துப் பாடி பரிசு பெற விழையும் வெளிநாட்டுப் பாடகன் ஒருவனை ராவணன் வரவேற்றுப் பாட வைக்கும் காட்சி அது.

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

 

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

 

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி)

மோஹன ராகத்தில் அற்புதமான பாடல், திருச்சி லோகநாதனின் குரலில், மலர இதைத் தொடர்ந்து

ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது.

காலையில் பாடும் ராகம் பூபாளம்

உச்சியில் பாடும் ராகம் சாரங்கா

மாலையில் பாடும் ராகம் வசந்தா

இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி

மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி

யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை

வெண்பா பாட சங்கராபரணம்

அகவல் இசைக்க தோடி

 

தாழிசைக்கு கல்யாணி

 

என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி (சந்தியா) வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறான்.

 

அற்புதமாக இப்படி ராவணனின் ஏற்றத்தைச் சித்தரிக்கக் காரணம் அப்படிப்பட்ட ஏற்றமுடையவன் தவறாக, அயலான் மனைவியை அபகரித்த பெரும் பாவத்தைச் செய்து அழிந்தான் என்பதை வலியுறுத்தவே தான்!


Sampoorna-Ramayanam

கம்பனின் ராவணன்

 

கம்பன் ராவணனை மிக அழகாகச் சித்தரிப்பான்.அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதைத் தன் காவியத்தின் லட்சிய வாசகமாக வைத்து எப்படிப்பட்ட பெரும் ராவணேஸ்வரன் தன் செய்கையால் இப்படி வீழ்ந்து பட்டான் என்பதைத் திறம்பட எடுத்துரைப்பான்.

 

தாரணி மௌலி பத்து.

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நா

சங்கரன் கொடுத்த வாள்.

முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெரும் தவமும் கொண்டவன்! – இது தான் ராவணன்.

ஆனால் தேவியைக் அபகரித்து வந்ததைப் பாவம் என்று சொல்லி அவளை விடுவிக்க அனைவரும் ஆலோசனை கூறுகையில்,

 

“ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்று அகங்காரத்துடன் மொழிந்தவன் ராவணன்.’என்னையே நோக்கி நான் இந்த நெடும் பகையைத் தேடிக் கொண்டேன்’ என்கிறான்! தன் வீரத்தின் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை!


rama fb

போர், பெரும் போர்!

 

போர் எனில் இது போர். புண்ணியத் திருப்போர். அறத்திற்கும் மறத்திற்கும் இடையே நடந்த கடும் போர்! அது எப்படி இருந்தது?

 

விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர்

கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர்

எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே

திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான்!

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

ஆனால் அண்ணலின் கடும் அஸ்திரங்கள் அவனை வீழ்த்த, ஆயுதமின்றி இருக்கும் ராவணனை நோக்கி,

 

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை;

 

இன்று போய் போர்க்கு நாளை வா”

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

 

என்று  ராமன் கூறுகிறான். ‘பெரும் காற்றில் பறந்த பூளைப் பூக்களைப் போல உன் துணைப் படைகள் பறந்தே போயின; இன்று போய் (இன்னும் போர் புரியும் எண்ணம் இருக்குமானால்) நாளை வா; (இல்லையேல் சரணாகதி எனில் உடனே சரண் அடை”)’ என்கிறான் ராமன்!

ramarama

சிவனிடம் முறையீடு!

 

போர்க்களக் காட்சியை அடுத்து ராவணன் மனம் சோர்ந்து அரண்மனை திரும்புகிறான்.

 

சிவனுக்கு சாம கானம் இசைத்தவன்; சிவ பக்தனான ராவணன் சிவனிடம் முறையிடும் காட்சி அடுத்து இடம் பெறுகிறது.

 

டி.கே.பகவதி வீணை இசைக்கும் காட்சியில் இன்று போய் நாளை வாராய் என்ற அற்புதமான பாடல் மலர்கிறது. பாடலைப் பாடியவர்  சிதம்பரம் ஜெயராமன்.

 

கே.வி,மஹாதேவன் இசை அமைத்த திலங் ராகப் பாடல் இன்றளவும் ஜீவன் உள்ளதாய் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

“இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!

மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?

 

எண்டிசை வென்றேனே! அன்று இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே” (பாடல்- ஏ.மருதகாசி)

அற்புதமான பாடல்; அற்புத இசை; அற்புத நடிப்பு.

அனைவரின் மனமும் தவறு செய்த பேரரசனுக்காக ஒரு கணம் உருகவே செய்கிறது, காட்சி அமைப்பால்!

 

மக்களை மனம் கவர்ந்த ராமர் என் டி ராமாராவ் என்றால் சீதை பத்மினி தான்; பரதன் சிவாஜி கணேசன் தான். இராவணன் டி.கே பகவதி தான். தசரதன் நாகையா தான்!

அனைவராலும் பார்க்கப்பட்ட நல்ல படமாக அமைந்த சம்பூர்ண ராமாயணம் திரைப்பட வரலாற்றில் பக்திப் படங்களில் ஒரு மைல் கல்!

-தொடரும்

குறிப்பு: படம் வெளியிடப்பட்ட ஆண்டாக 1956 என சில தளங்களும் பத்திரிகைகளும் குறிப்பிட்டாலும் கூட, 1958 என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சிவாஜிகணேசனின் அதிகாரபூர்வமான இணையதளமும் அதைச் சுட்டிக்காட்டும் விக்கிபீடியா தரும் விவரத்தின் அடிப்படையிலும் தான்!

 

-தொடரும்

Lord Shiva and Panini, the Greatest Grammarian!

maheswara-sutrani

Lord Nataraja Shiva with 14 Sutras

Research Paper written by London swaminathan

Research Article No.1657; Dated 17th February 2015.

Vakyakaram Vararuchim, Bhashyakaram Patanjalim

Paninim Sutrakaram cha pranatosmi Munitrayam

Let us bow to the great three seers Vararuchi, Patanjali and Panini.

Two thousand seven hundred years ago, there lived a man in India who is considered the father of grammar in the world. His name was Panini. He lived before Buddha and other great philosophers of sixth century BCE. Though he mentioned several great grammarians before his time, we don’t know anything about them. We could not get their books. Panini’s grammar book Ashtadyayi was the first in the world.

Here is a story of a person who gained the greatest knowledge in the world of languages by the grace of Lord Shiva! Tamil Hindus in South India and their counter parts in North India consider Lord Shiva was the one who gave them the language and the grammar.

nataraja (1)

The world is not celebrating Panini’s work Ashtadyayi or Paniniyam just because it was the first grammar book known in any language, but because of its amazing structure. He constructed a grammar for Sanskrit which shows the greatest height to which human thought can raise. This marvellous thing happened 2700 years ago!

Homer’s Iliad was just 100 years old by that time. Other languages except Sanskrit did not have any literature at all! Moses could repeat only Ten Commands of the God! Of course we have Gilgamesh in the Middle East and some other writings in Hieroglyphs (Book of Dead) in Egypt. But they are all museum materials and that too primitive thinking without any higher thoughts. They are not literature. But Sanskrit had huge volume of literature by then. The world’s greatest literary wonder Rig Veda was reverberating in the nook and corner of Asia. Turkey had Rig Vedic Gods in Cuneiform letters. And Rig Veda is still preserved in its pristine form without a change of single syllable. All this is done by word of mouth!! That is another world wonder. Nowhere in the world a literature of that size is preserved without writing till today!

cola1

Lord Shiva’s Grace!

Panini was a student of Guru (teacher) Varsha. He was the dullest student in the group. Guru (teacher) was not happy. Guru’s wife also told him to go out into the world and learn the basics. He went to the Himalayas and did penance. Lord Shiva appeared before him and told him that he was fully satisfied with his prayer and was ready to give him whatever he wanted. Panini was very intelligent. He did not ask for gold coins or beautiful women or a kingdom. He asked Lord Shiva to bestow him knowledge in the language. Shiva was very happy started to dance. His kettle drum boomed and the Himalayan Mountains echoed it.

Paninni was so focussed he could get only 14 beats from the drum called ‘Damaruka’ in Sanskrit. Based on the fourteen sounds he wrote the most famous grammar book in the world called Eight Chapters (In Sanskrit Ashta+Adhyayi). It contains 3959 Sutras. Sutra means formulas. He wouldn’t waste a single space. Even if he could avoid a full stop or a comma he would feel as if he had saved one million dollars. But his grammar was complete, no gap, no incoherency.

  1. a i u ṇ
    2. Ṛḷ k
    3. e o ṅ
    4. ai au c
    5. ha ya va ra ṭ
    6. la ṇ
    7. ña ma ṅa ṇa na m
    8. jha bha ñ
    9. gha ḍha dha ṣ
    10. ja ba ga ḍa da ś
    11. kha pha cha ṭha tha ca ṭa ta v
    12. ka pa y
    13. śa ṣa sa r
    14. ha l

This contain all the letters of Sanskrit language.

 cola2

He mentioned 500 towns in his work. This shows his vast geographical knowledge. He talks about 51st generation of Bharadwaja etc. This shows his knowledge in the ancient history of India. People erected a statue for him in his birth place, now in Pakistan. Chinese traveller Huan Taang saw the statue 1400 years ago. Patanjali who wrote a commentary praised him as Bhagavan Panini. Like Divine Homer and Divine Tiruvalluvar he was called Divine Panini. He was considered a seer – a Maharishi.

Patanjali says that holding the holy grass Dharba in his hand, facing East, he wrote the marvellous grammar in the world. I will explain the 14 sounds he heard in another article. They are called Maheswarani Sutrani. Brahmins repeat the 14 sutras every year on the day they change their sacred thread and start the Vedic studies again. Great Sanskrit scholars say that his grammar is closer to Vedic language than classical Sanskrit. He never mentioned Buddha or Mahavira. He lived well before their time.

Panini mentioned the grammarians before his time: Upavarsha, Parasarya, Karmanda, Sakatayana, Apitali and Sakalya. When he was going into a jungle with his students, there came a tiger! All the students ran away. But Panini stared at the tiger and analysed the word Vyagra, Sanskrit word for tiger.

Western linguists wonder how a person can write a grammar in such a scientific way at that period. Most of the world was uncivilised at that time. But India had produced wealthy literature, quantitatively and qualitatively very high.

In Kashmir a king passed an order that everyone must learn Ashtadyayi and those who passed in it were awarded 1000 gold coins each!

nata2

Panini died on a Trayodasi day (13th day either after the full moon or new moon). Even today traditional learners of Sanskrit in North India declare holiday for the studies on 13th day. Unlucky number 13!! Author of Panchatantra Vishnusarman said that Panini was killed by a lion. We know that his town was Salaturya in Pakistan and his mother was Dakshi. All other details and stories about him are just hearsay!

The name Panini is synonymous with the words WONDER, MARVELLOUS and AMAZING. Those who study his grammar will understand it.

Panini of Seventh Century

Indologist Goldstucker placed him in the seventh century BCE and Max Muller in the sixth century BCE. Dr Radha Kumud Mukerjee, Bhandarkar and Pathak thought that Goldstucker was correct. VS Agrawala, the author of a monumental work “India as Panini knew it” —dated him to fifth century.

A.Kalyanaraman in his book Aryatarangini rightly points out, “A language takes a long time to develop. European languages took several hundreds of years in this process. Modern grammar in English began only under the Stuarts. The earliest grammatical treatises in Sanskrit were written around 1000 BCE.  Had Panini lived in fourth century BCE, then there would not be any commentaries by Vararuchi and Patanjali within a short period. Patanjali was placed in 150 BCE or before. Other languages in the world show a big gap between the original work and the commentaries. In Tamil the commentaries came 1300 years after the original grammar book Tolkappiam. In other languages also there is a 500 to 1000 year gap. So we can boldly say that Panini existed at least 500 years before the commentators.

tanjur1

Let us sing the glory of Lord Shiva and his disciple Panini on this Shivaratri day (17 February 2015).

Pictures were taken from Sangatham.com and other sites;thanks.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

ja,mbu fruits

Research Paper written by London swaminathan

Research Article No.1656; Dated 17th February 2015.

வராகமிகிரர் என்னும் மாமேதை 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியா – பிருஹத் சம்ஹிதையில் – கூறிய அரிய பெரிய அபூர்வ விஷயங்களைக் கண்டோம். இன்று மேலும் சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவேன்.

வறண்ட பூமிகளிலும் பாலைவனப் பிரதேசங்களிலும் வளரும் சில மரங்கள் முதலியவற்றைக் கொண்டு தண்ணீர் கண்டு பிடிக்கும் உத்தி / டெக்னிக் இது. வராஹமிகிரர் ஒரு விஞ்ஞானி. ஆகையால் மாய மந்திரம் – அண்டாகா கசும் அபூர்வ கா குசும் – என்று மம்போ ஜம்போ –வுக்குப் போகாமல் அறிவியல்பூர்வ முறையில் இதை அணுகியுள்ளார்.

சிலவகை மரங்கள் அதிக இலைகளுடன் காணப்படும். அவற்றின் செழுமை, மற்றும் பாம்புப் புற்றுகள், தவளை இவைகளைப் பார்த்து நிலத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.

எப்படி எண் திசைக்கும் காவல் தெய்வங்கள் இருக்கிறதோ அதே போல எட்டு திசைகளில் பூமிக்கடியில் உள்ள தண்ணீருக்கு அந்தக் காலத்தில் பெயர்கள் இருந்தன என்பதையும் இவர்தம் நூல் செப்புகிறது.

Bassia latifolia_clip_image002

இலுப்பை வகைத் தாவரம்

உடம்பிற்குள் எப்படி ரத்த நாளங்கள் ஓடுகின்றனவோ அப்படி வானத்திலும் நிலத்துக்கு அடியிலும் நீரோட்டம் உண்டு என்றும் இவர் சொல்கிறார்.

எறும்பும், பாம்புப் புற்றுகளை உண்டாக்கும் கறையான் களும் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப் பதத்தின் மூலம் தண்ணீர் பெறும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. அவைகள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் புற்று உண்டாக்கும். ஈரப்பசை இல்லாவிடில் புற்று உதிர்ந்து விடும். இதை எல்லாம் அறிந்து மனு, சாரஸ்வதர் என்ற இரு அறிஞர்கள் நூல்களை எழுதியதாகவும் அதையே தான் பின்பற்றுவதாகவும் சொல்லுவார். அந்த நூல்கள் இன்று கிடைக்காவிடினும் உரைகாரர்கள் பல விஷயங் களை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

1500 ஆண்டுகளுக்கு முன் இதை வராகமிகிரரும், அவருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்திருந்தால்தான் இப்படி நூல் எழுத முடியும். மேலும் வேறு எந்த மொழியிலும் இது போல நூல்கள் இருந்ததாக யாம் அறியோம்.

2_vilvam_tree

வில்வ மரம் பற்றியும் வராகமிகிரர் சொல்கிறார்

சுமார் 125 ஸ்லோகங்களில் இவர் தரும் தகவல்களை தாவரவியல் துறையினரும், நீரியல் துறையினரும் ஆராய்ந்து கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்காலாம். மேலும் இதில் செலவு என்பது கிணறு வெட்ட மட்டுமே ஆகும். பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க பணமோ கருவிகளோ தேவை இல்லை.

125 பாடல்கள், அதற்கான உரைகள் முழுதையும் எழுதினால் அது புத்தக உருப் பெறும் என்பதால் ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காட்டுவேன்.

தண்ணீர் இல்லாத இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால் சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் எறும்புப் புற்று (பாம்புப் புற்று) இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.

மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.

kadamba

கடம்ப மரம்

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்!

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் பகருவார் வராகமிகிரர்.

அவர் நிறைய மரங்கள், புல், செடி, கொடி வகைகளைச் சொல்லுவதாலும், பழைய கால நீட்டல் அளவை சொற்களைப் பிரயோகிப்பதாலும் செயல் முறையில் பரிசோதித்து நிறை குறைகளை அறிய வேண்டும்.

இது பயனுள்ள ஒரு துறை என்பதால், ஆர்வத்துடன் ஆராய வேண்டிய அத்தியாயம் இது. வெளிநாடுகளில் இன்ன தாவரங்கள் இருந்தால் பூமிக்கடியில் இன்ன இன்ன உலோகங்கள் கிடைக்கும் என்னும் தாவர இயல் துறை நன்கு வளர்ந்திருக்கிறது. பழங்கால நூல்களில் உள்ள ரகசியங்களை நாம் கற்றோமானால் செலவு இல்லாமல் கனிமச் சுரங்கங்களைக் கண்டு பிடிக்கலாம்.

kantankattari

கண்டங்கத்தரி

நம்முடைய முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து அதன் ரகசியங்களை எழுதிவைத்துள்ளனர். சூரியன் சந்திரன் ஆகியவற்றின் போக்கைக் கண்டுபிடித்து கிரஹணம் முதலியவற்றைச் சொன்னவர்கள் எறும்பையும் தவளையையும் கண்டு பல சாத்திரங்களைச் செய்துள் ளனர்! இதை எண்ணி எண்ணி வியப்பதைவிட செயல் முறையில் பயன்படுத்த வேண்டும்.

எனது ஆங்கிலக்கட்டுரையில் கூடுதல் தாவரங்களின் பெயர்களைக் கொடுத்து இருக்கிறேன். முழு விவரம் வேண்டுவோர் பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 54-ஐக் காண்க.

சிவராத்திரி சபதம்!

Linga-in-Brihadisvara-big

One of the Biggest Lingas, Thanjavur Brhadeeswar Temple, Tamil Nadu

மஹா சிவராத்திரி அன்று சிறப்பான சில சிந்தனைகள்!

சிவராத்திரி சபதம்!

Post No.1655;    Dated 16th February 2015

by ச.நாகராஜன்

எளியவரின் கேள்விகள்

கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார் எனில் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?

அவரை என்னால் ஏன் காணமுடியவில்லை? எப்படிக் காண முடியும்?

யாருடன் நான் சேர்வது? யாரை நான் உதறுவது? சுருக்கமாகச் சொல்லப் போனால் யாருக்கு நான் ஓட்டுப் போடுவது?

இப்படி எல்லாம் கேள்வி எழுவது உலகியல் வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்!

இதற்கான பதில்களை அற்புதமாக அருளாளர்கள் தங்கள் அழியாப் பாடல்களில் தந்துள்ளனர்.

thirukkaravasal maragatha linga

Thirukkaravasal Maragatha (Emerald )Linga

அப்பரின் அற்புத பதில்கள்!

இவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துள்ள அழியாத் தவநெறிச் செல்வர் அப்பரின் அருளுரைகளை சிவராத்திரி தினத்தன்று பார்த்துத் தெளிவோம்!

“விறகில் தீயினன்,  பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்” என்கிறார் அப்பர். விறகிலே தீ போல பாலிலே நெய் போல மறைந்து நின்று இருக்கிறான் எம் சிவ பிரான் என்பதே கடவுள் இருக்கிறாரா, எங்கே இருக்கிறார் என்று கேட்பவருக்கான பதில்!

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்                                         

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே                                    

ஈசன் எந்தை இணையடி நீழலே

எப்படி இருக்கிறார் எனில் மாசு இல்லாத வீணை போல, மாலை  மதியம் போல, வீசுகின்ற தென்றல் போல, வீங்கு வசந்தம் போல மூசு வண்டறை தடாகம் போல அவனது நீழல் உள்ளது என்பதே எப்படி இருக்கிறார் என்பதற்கு அவர் தரும் பதில்!

Amarnath-Linga

One of the Natural wonders of the World-Ice Linga of Amarnath Caves, Kashmir, India

நியூட்டனின் பதில்!

 

பிரபல விஞ்ஞானி நியூட்டன் ஒரு பெரும் ஆத்திகவாதி. அவரது நண்பர் ஒருவரோ பெரிய நாத்திகர். நியூட்டனின் கடவுள் பக்தியை அவர் ஏற்கவில்லை. ஒரு நாள் நியூட்டன் சூரிய மண்டலத்தின் மாதிரி ஒன்றை ஸ்கேல் மாடலில் அதாவது சிறிய் அளவில் சூரிய மண்டலம் இருப்பது போலவே சுற்றி வரும் கிரகங்களின் தூரம். ஓடு பாதை. அளவு ஆகியவற்றை எல்லாம் நிர்ணயித்து சுழலும்படியான ஒரு அமைப்பில் செய்து வைத்திருந்தார். அற்புதமான அந்தச் சாதனத்தில் ஒரு சிறிய கைப்பிடியைச் சுற்றினால் கிரகங்கள் தனது இயல்பில் சுழல அதனதன் ஓடு பாதையில் அது அது தனது வேகத்தில் சென்று சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

நியூட்டனின் நண்பர் ஒரு நாள் உள்ளே வந்தார். இந்த அபாரமான அமைப்பைப் பார்த்து பிரமித்து நின்று விட்டார். அப்போது அந்த அறையின் ஓரத்தில் தன் மேஜையின் அருகே நாற்காலில் அமர்ந்து நியூட்டன் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். வந்த நண்பர் வியப்புடன் கூவினார்:” ஆஹா! பிரமாதம்! நியூட்டன்! இதை யார் செய்தது?” அவரது ஓங்கிய குரலுக்கு நியூட்டனிடமிருந்து சுவாரசியமின்றி சாந்தமான குரலில்,”ஒருவரும் இல்லை!” என்று பதில் வந்தது. தனது கேள்வியை நியூட்டன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணிய நண்பர் சற்று உரக்க,”இதை யாரேனும் செய்திருக்க வேண்டுமே! யார் செய்தது என்று நான் கேட்கிறேன்!” என்றார்.

spatika2

Crystal/ Spatika Linga

இன்னும் அமைதியான தாழ்ந்த குரலில் நியூட்டன், “அது தான் ஒருவரும் செய்யவில்லை என்கிறேனே” என்றார்.

இப்போது நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. தன் நண்பர் இடக்காகப் பதில் சொல்கிறார் என்று நினைத்த அவர் நியூட்டனிடம் சென்று அவரின் தோளைக் குலுக்கி, “ யாரும் செய்யாமல் இது எப்படி உருவானது? தானே தோன்றியதா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

அவரைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் நியூட்டன். வானத்தைச் சுட்டிக் காட்டினார், பிறகு சொன்னார்:” இதோ மேலே பாருங்கள். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், அதன் சுழற்சிகள்! இவை எல்லாம் தானே சுற்றுகையில் இந்த வெறும் சாதனம் தன்னைத் தானே தோற்றுவித்திருக்கக் கூடாதா, என்ன!”


nataraja

One of the most beautiful Natarajas; smiling Nataraja of Gangai Konda Choza Puram, Tamil Nadu

நியூட்டனின் பதிலால் விக்கித்து நின்று விட்டார் அவர். கோடானு கோடி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் இன்ன பிறவற்றையும் தோற்றுவித்தவன் யார்? அவருக்கு உறைத்தது. அன்று முதல் அவர் சிறந்த ஆத்திகரானார்.

விஞ்ஞானி நியூட்டன் சொன்ன பதிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “இயற்கையைப் பார்; அதைப் படைத்தவனை அறி” என்று மூசு வண்டறைப் பொய்கையைக் காட்டிக் கூறிய அருளாளர் அப்பர்,

“விறகில் தீ ஆகவும், பாலில் நெய்யாகவும் மறைய நின்றிருப்பவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்று கூறி அவனைப் பார்க்க – அடைய –  உறவு என்னும் கோலை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் அவன் நம் முன் வந்து நிற்பான்”

என்கிறார்.

hh-shiva-pooja

Sringeri Acharya’s Abhisheka to Spatika Linga

இதை விட அற்புதமாக எளிமையாக இறைவனை அடையும் வழியை யாரேனும் சொல்லி இருக்கிறார்களா?!

“விறகில் தீயினின் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணி ஜோதியான்

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே”

தென்னாடுடைய சிவன் அவன்! எந்நாட்டவர்க்கும் இறைவன் அவன்!

வாழ்த்த வாயும் நினைக்க மனநெஞ்சும்                                    

தாழ்த்த சென்னியும் தநத தலைவனைச்                                     

 

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே                                            

first_abhishekam1

ganapathy Sachidananda Swamiji’s Abhishek to Lord Shiva

வீழ்த்த வாவினையே நெடுங்காலமே என்று பலகாலம் சிவனை எண்ணாமல் காலம் கழித்த தன் வினையை எண்ணி நோகிறார் அப்பர். இப்படி அவர் சொல்வதற்கான காரணம் நம்மை நல் நெறிப் படுத்தவே!

“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்” என்று நம்மை அறை கூவி அழைக்கும் அப்பர் இறைவனை காண முடியாமல் நாம் இருப்பது நம் பண்டை வினைப் பயனாலே என்பதைச் சொல்லி, “ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே” என்கிறார்.


2011-01jan-03-nithyananda-photo-1 1008 linga

1008 Lingas at Tiruvannamalai, Tamil Nadu

யாருடன் சேர்வது!

இப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அப்பர் யாருடன் சேருவது, யாரை உதறுவது, இன்னும் கேட்டால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தானா சொல்ல மாட்டார்!

 

“சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லர் ஆகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்

 

கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!”

என்ற அவரது வாக்கு அள்ள அள்ளக் குறையாத சங்க நிதி, பத்ம நிதி இரண்டையும் கொடுத்து பூலோகம் இந்திர லோகம் இரண்டையும் ஆளும் உரிமையையும் தந்தாலும் அவர் சிவனுக்கு அன்பர் இல்லை எனில் அவர் செல்வத்தை உதறி எறிந்து அவரையும் உதறுவோம். மாறாக கொல்லக் கூடாத பசுவைக் கொன்று தின்னும் புலையன் என்றாலும் அவன் சிவனின் அன்பன் எனில் அவனை கடவுளாக வணங்கி அவன் தாள் பணிவோம்” என்கிறார்!


PERUVUDAYAR+THAYIR

Curd/ Yogurt Abhishek

ஆழ்ந்த கருத்து உடைய இந்தப் பாடல் சிவ அன்பர்கள் அனைவரும் வாழ்நாள்  முழுவதும் பேணிக் காப்பதற்கான லட்சியப் பாடல்!

சிவனை வணங்காதார் முகம் பார்க்காதே என்று அவர் சொல்லும் போதே பணத்தையும் சலுகைகளையும் தந்து ஓட்டுக் கேட்கும் நாத்திகர் பக்கம் சேராதே, மாறாக எளியவராக இருந்தாலும் சிவன் கோவிலையும் சிவ பக்தியையும் போற்றும் நல்லோரை நாடு, வணங்கு என்று அவர் கூறுவதில் இக உலக இயலுக்கான உபதேசமும் அதில் அடங்கி இருக்கிறதல்லவா!


nithya1

சிவராத்திரி சபதம்

மஹா சிவராத்திரி அன்று அப்பரின் அருளை வேண்டி மாபெரும் சபதம் ஏற்போம்!

சிவனை வணங்காத நாத்திகரை ஒரு நாளூம் சேரோம்; எம் நண்பர்களையும் சேர விடோம்; சிவ பக்திச் செல்வர்களுடன் இணங்குவோம்; அவர்களை வணங்குவோம் என்ற சபதம் ஏற்று முன்னேறுவோம்.

சிவ பிரானின் தமர் (தமர் – உறவினர்) நாம் , ஆகவே அவர் வாக்குப் படி

“அஞ்சுவது    யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”

தென்னாடு உடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

abhisheka-bilva

Bilva/ Vilva Archana to Lord Siva

************

contact swami_48@yahoo.com

How to find Water in the Desert?

arid land

Research Paper written by London swaminathan

Research Article No.1654; Dated 16th February 2015.

Varahamihira on Water Divination

Varahamihira in his Brhat Jataka has devoted one full chapter for exploration of water springs. He deals with the subject in a very scientific way. There is no mumbo-jumbo. He links water springs with certain trees and anthills.  We all know that both the trees and ants need water. Ants get water from moisture in the atmosphere. Naturally ants build ant hills where there is humidity. Ant hills need moisture for its existence. Certain trees with lot of leaves need more water. So they grow only under certain conditions. In some slokas (couplets) he refers to frogs as well. He even tells us how to find water by tapping the ground and listening to the sound!

Ancient Hindus were keen observers of Nature. They observed the huge heavenly bodies as well as the tiny ants. To develop a branch of study like this, they must have observed them for centuries!

Varahamihira was not the first one to write on this subject. He and his commentators refer to various authors who lived before Varahamihira. He wrote it in the fifth century. He says that Baladeva, Garga, Kasyapa and Devala wrote about rain water and Saraswata and Manu wrote books on underground water. Unfortunately we lost the books written by Manu and Saraswata. But commentator Bhattotpala gives us lot of information.

Varahamihira says, “ Just as there are veins in the human body so do they exist higher up, others lower down, in the earth. Rain water has no colour or taste; but ground water assumes colour taste from its surroundings”.

The Gods who preside over eight directions are Indra, Agni, Yama, Nirrti, Varuna, Vayu, Chandra and Siva. The water veins in different directions are named after their presiding deities.

What is interesting is that his observation of the trees, the soil underneath, the ants and frogs living in the vicinity and the direction of water veins. I have given only the bare facts, not all the details. One must remember that he gives this for the waterless arid lands and deserts. If it is a river bed, we don’t need a Varahamihira to tell us where to dig a well!

calamus rotang

Calamus rotang

Now Varahamihira gives the names of trees and the source of water at the depth of …. Cubits in waterless places:–

1)Rotang Tree – Depth of seven and half cubits

(A cubit is approximately 18 inches)

Calamus rotang: Rattan palms (Pirampu in Tamil)

If a pale white frog found – water is at two and half feet depth.

2)Jambu tree  — water is at the depth of 10 cubits.

Jambu: Syzygium  jambolanum (Family: Myrtaceae)- Naval in Tamil.

Ant hill near Jambu tree – inexhaustible water at 10 cubits

ja,mbu fruits

Fruits from Jambu tree

3)Fig tree – 12 and half cubits

Ant hill near Arjuna tree – 17 and half cubits.

4)Arjuna : Terminalia arjuna (Family: Combretaceae);

Marutha maram in Tamil

2_vilvam_tree

Bilva/ Vilva Tree

5)Bilva and Fig tree joined together – 15 cubits

Bilva = Aegle marmalos (Family: Rutaceae)

Ant hill near opposite leaved fig tree (Phalgu) – 16 cubits

Fig Tree is Aththi in Tamil; Bilva is Vilvam in Tamil

6)Kampillaka tree – 16 cubits

Mallotus philippinensio

Kamla or Red Kamala or Kumkum Tree

7)Ant hill near Myrobalan tree – 7 and half cubits

Amla (nellikkay in Tamil), Haritaki (Kadukkay in Tamil) all belong to this group.

8)Ant hill near mountain ebony tree – inexhaustible water at the depth of 22 and half cubits

Bauhinia species

9)Echites tree with ant hill – 25 cubits

If a frog is found under any tree – 22 and half cubits

Echites scholaris or Alstonia scholaris (Devil tree)

nickernuts

Grey banduc (Nickernuts tree)

10)Ant hill near Grey Bonduc tree – 17 and half cubits

Nickernuts=Caesalpinia bonduc

11)Ant hill near Bassia tree – 37 and half cubits

Bassia latifolia = Madhuca indica (Family Sapotaceae)

Jatropa or Mahwa; Iluppai in Tamil

Bassia latifolia_clip_image002

Bassia latifolia

12)Ant hill + Durva grass + Tilaka tree – 25 cubits

Durva grass: Cynodon dactylon

13)n Tilaka tree:Clerodendrum phlomoides (Agnimantha, Vaijayanthi in Sanskrit)

14)Ant hill near Kadamba tree – 28 cubits

Kadamba: Anthocephalus cadamba (Rubiaceae)

(Katampa maram in Tamil)

kadamba

15)Ant hills +Palm or Coconut tree – 25 cubits

Coconut: Cocos nucifera (Arecaceae)(Tennai in Tamil)

16)Palm tree: Borassus flabellifer (Palmae) (Panai in Tamil)

17)Ant hill + Daru haldi tree – 28 and half feet

Berberis aristata

daruhaldi

Daruhaldi

18)Ant hill +Asmantaka tree – 17 and half feet

Asmantaka tree : Bauhinia tomentosa (Pilo asondaro in Gujarati)

19)If there are creepers Navamalika, Lakshmanaa – 15 cubits

Navamallika: Jasminium arborescens

Then Varahamihira describes glossy leaves of the trees and its link to underground water sources.

He says that if one branch lowers towards earth that indicates underground water.

kantankattari

Kantakari/ Solanum xanthocarpum

Sound and Water

If the earth being struck by feet emits a loud and pleasant sound, a northerly water vein will be found at the depth of 17 and half cubits.

If the fruits or leaves look unnatural that is also an indication of underground water according to Varahamihira.

20)If Kantakari (Prickly Nightshade) is seen without thorns that shows water is at the depth of 17 and half cubits.

Kantakari :Solanum xanthocarpum (Kandankattari in Tamil)

If steam or smoke arises from the ground that shows water is at the depth of 10 cubits.

Then he explains water sources found in desert regions. This is a lengthy chapter with 125 couplets. If villagers living in arid regions study this they will be benefitted. Alternately botany departments of local colleges can help our people. There is no equipment or money required to identify the sources. Only when it comes to digging a well, money and man power are required. This must be studied seriously and utilised for the benefit of the people.

Pictures are taken from various sites; thanks.

சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1653; Dated 16th February 2015.

சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25  கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.

50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை–  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால்  — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.

InscriptH506

மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.

சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.

Indus_script.jpg3

இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.

இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்)  என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.

ammonite-king.jpgthree generations

இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.

பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.

kassite weapon 1275 BCE

அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்”  (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்”  (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.

அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.

indus1

உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).

inscription

ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.

லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.

rosettastone-detail

Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.

முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.

வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!

swami_48@yahoo.com

Mac Donald and O’Shaughnessy in Indus Valley Civilization!!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

Three Generations in Indus Valley Civilization!

This article explains the apostrophe like strokes after the circle sign. See the pictures please.

 

The Irish name ‘Mac Donald’ means Son of Donald and O’Shaughnessy means Grandson of Shaughnessy. Mac means son (Makan in Tamil) and O is the abbreviation for grandson (Mor means big or Og means young).

Studying Irish names may help us to decipher Indus seals. Many of the scholars in this field think that the 4000+ seals found in the Indus Valley have names of people or the quantity of exports or imports.

Instead of O’, female will have Ni which means daughter of grandson of XXXX.

Instead of Mac, female will have Nic which means daughter of son of XXXX.

This is what we find in ancient Sanskrit and Tamil works. Hindus always remember three generations. The Irish people simply followed the ancient Hindu customs. The famous Vishnu Sahasranama sloka runs like this:–

Indus_script.jpg3

(1)Vyasam (2)Vasistha – naptharam (3)Sakthehey pauthram-akalmasham I

 

(4)Parasara-athmajam vande (5)Suka thatham thaponidhim II

 

I bow to the flawless Vyasa, great grand-son of Vasistha, grandson of

Sakthi, son of Parasara, and father of Suka, and one who leads a simple, austere life.

Names of five generations:

 

Here we see Vasistha, his son Sakthi, his son Parasara, his son Vyasa and his son Suka – five generations in one sloka and the all the five generations are saluted. This Hindu custom is followed in Assyria and other places where we see Hindu influence through Hittites, Kassites and Mitannians.

inscription

Assyrian Inscription

Here are some more examples:

kassite weapon 1275 BCE

Kassite weapon 1275 BCE

1.A bronze arrow head inscribed with the owner’s name in early Phoenician letters, ‘Arrow of Ada’ son of Bala. It is dated 1100 BCE

(Picture is in page 13 of Dictionary of the Ancient Near East, British Museum)

ammonite-king.jpgthree generations

2.Limestone statue of  Yerah, Azar from Amman citadel, late eighth century BCE, inscribed with his name and those of his father and grandfather.

(Picture is in page 15 of Dictionary of the Ancient Near East, British Museum)

Indus_script.jpg3

This is a typical Hindu custom. Tamils also follow their north Indian colleagues in naming. Most of the Tamil poets have the prefix Nal (Nar) meaning good as in Nakkiran, Nannagan, Nachellai, Nappinnai. They simply followed Sanskrit names. In Sanskrit Su as in Sugandhi, Sumathy, Sukarna (Indonesian President Sukarno) etc

Tamils follow Sanskrit language in the alphabetical order, Case suffixes, origin of sound etc. My theory is that both the languages have come from same source. The biggest proof is Sandhi rules. No other languages except Tamil and Sanskrit have these Sandhi (Punarchi) rules. If there is any language that has Sandhi to some extent they are related to Sanskrit!

(I have already written an article about it in Tamil)

Like Irish Mor (big), Tamils have Mudu Kannan, Mudu Kuthan and like Og (young), they have Ila nagan (Mudu=old or big and Ila= young). In Sanskrit they have Maha, Yuva etc. (Purananuru poet Masathan=Maha Sastha)

Tamils also say son of so and so XXX (e.g. Madurai Kanakkayanar Makanar Nakkiranar (Madurai Kanakkayanar’s son Nakkiran).

Tamil takes prefixes like Sanskrit in names and adjectives!

InscriptH506

Indus Seals

On Indus seals we see round symbol and then apostrophe (two strokes) followed by several letters. I guess that this also like Mac Donald or O Shaughnessy. Just to identify the person, they say son or daughter or grandson of so and so.

Hindu Brahmins who perform Tharpan every month for their ancestors also pray to the departed souls  “father, grandfather and great grandfather”- Pitha , Pitha Mahan, Prapita mahan. Remembering three generations and paying respects to them at all times is a must in Hinduism. Understanding these things will help us to decipher the Indus seals properly if they contain personal names.

indus1

(Please Read my 20+ Indus articles)

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

sangam-map1

தமிழ் பூமி- தமிழ் நாடு

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

தமிழ் நாட்டுக்குத் தெற்கே இப்பொழுதுள்ள கன்யாகுமரியைத் தாண்டி ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததும், அது அடுத்தடுத்து வந்த இரண்டு சுனாமி கடல் எழுச்சியால் அழிந்து போனதும் மறுக்க முடியாத உண்மைகள். இதற்கு இலக்கியச் சான்றுகள் இருப்பதோடு கடலியல், பூகர்ப்பவியல் சான்றுகளும் உள.

இந்து மகாசமுத்திர கடலுக்கடியில் உள்ள மலைகள் படத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் (மாத இதழ்) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதிலும் ஒரு புறம் லட்சத் தீவுகள் வரையிலும் மறுபுறம் அந்தமான் நிகோபர் தீவுகள் – இந்தோ நேஷியத் தீவுகள் வரையும் கடலடி மலைகள் இருப்பதைக் காண முடிகிறது. மிகவும் பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை நிலமும் கடலும் விட்டு விட்டு இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம்- ஒருவேளை நாகரீகம் மிக்க மனித இனமே தோன்றாத காலத்து இருந்திருக்கலாம்.

நாம் அறிந்த – தென் தமிழ் நாட்டை மூழ்கடித்த சுனாமி எல்லாம் 2300 அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவையே. இதை மொழி இயலும் மெய்ப்பிக்கிறது.

மூன்று தமிழ் சங்கங்களும் சுமார் 300 அல்லது 500 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க முடியும் என்பதை எனது மூன்று தமிழ் சங்கம் பற்றிய கட்டுரையில் எழுதிவிட்டேன். அதாவது இரண்டாவது தமிழ் சங்க காலப் பாடல்கள் என்று நாம் எதை எதை அறிந்திருக்கிறோமா அவை எல்லாம் அதிக மொழி வேற்றுமை உடையன அல்ல. ஆகவே ஏறத்தாழ ஒரே காலத்தில் உருவானவையே.

south_east_asia_map

தமிழ்க் கொடி பறந்த நாடுகள்

சிலப்பதிகாரமும் கலித்தொகையும்

தென் மதுரை, கபாடபுரம் ஆகிய பாண்டியத் தலைநகர்களை கடல் அழித்தது பற்றி சிலம்பும் கலியும் செப்புவது என்ன?

“வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை;

ஊழிதோறு ஊழி உலகம் காக்க;

அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி!

(காடுகாண் காதை,சிலப்பதிகாரம்)

—இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் தொகை) சொல்கிறார்:

map-5

கர்நாடக பிரதேசம்

மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேல் சென்று மேவார் நாட்டு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த புகழ் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்

(முல்லைக் கலி, கலித்தொகை)

அதாவது கடல் கொண்ட பகுதிகளுக்கு நஷ்ட ஈடு கோருவதுபோல இமயம் வரை உள்ள பூமியை வென்றான் தென்னவன் (பாண்டியன்). சுனாமிக்கும், வட இமய விஜயத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் புகழ்ச்சிக்காக இப்படிப் பாடுவதுண்டு. வட திசையை வென்றதும் உண்மை- தென் திசையை கடலுக்குப் பலி கொடுத்ததும் உண்மைதான். கவிஞர்கள் இணைத்துப் பாடுவது மட்டுமே செயற்கையானது.

பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டுக் கொடுத்ததால் மலையாள பூமிக்குப் ‘’பரசுராம க்ஷேத்திரம்’’ — என்ற பெயர் உண்டு. இதுவும் பழைய சுனாமியின் போது கடல் பின்னாலுக்குப் போனவுடன் வெளிவந்த பூமியாக இருக்கலாம். ஆயினும் இதை நிரூபிக்க நமக்கு உறுதியான சான்றுகள் வேண்டும்.

Chola_dynasty_map_-_Tamil

தமிழர்கள் இழந்த பூமி பற்றி அடியார்க்கு நல்லார் , தனது சிலப்பதிகார உரையில் நமக்குத் தெரியாத செய்திகளைச் செப்புகிறார்:

“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடஎல்லை ஆகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது”.

அடியார்க்கு நல்லார் பொய் சொல்லவோ எட்டுக்கட்டி கதை எழுதவோ தேவை இல்லை. அவர் சொல்வது எல்லாம் உண்மை என்பது அர்த்தசாஸ்திரத்தில் (கி.மு.300) பாண்டிய கவாடம் என்னும் முத்து பற்றிக் குறிப்பதாலும், வால்மீகி ராமாயணம் கபாடபுரம் என்னும் இரண்டாம் தமிழ் சங்க ஊர் பற்றிக் குறிப்பிடுவதாலும், ராமனுக்கு நினவுப் பரிசாக இலங்கை அரசன் விபீஷணன் ஏழு தங்கப் பனைமர பொம்மைகளைக் (ஏழ்குறும் பனைநாடு) கொடுத்ததாலும், பரசுராமன் காலத்தில் கேரள பூமி கடலுக்கு மேலே வந்ததாலும் உண்மை என்று உறுதியாகிறது.

அடியார்க்கு நல்லார் 700 காதம் என்பதை சிலர் 7000 சதுர மைல் என்பர். அது மிகப் பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு இருக்க முடியாது. இரண்டு முறை அடுத்தடுத்து சுனாமிப் பேரலைகள் தாக்கியதால் பாண்டிய மன்னன் இருமுறை தலை நகர்களை மாற்றினான். ஆகவே 700 சதுர மைல்களாவது கடலுக்குள் போயிருக்கலாம்.

2000px-India_Tamil_Nadu_locator_map.svg

பஃறுளி என்ற ஆறு வட எல்லையாக இருந்தது. குமரி ஆறு தென் எல்லையாக இருந்தது. இதன் இடையே இருந்த தென் மதுரையைக் கடல் விழுங்கியதால் முதல் தமிழ் சங்கத்தை இழந்தோம். அதன் பிறகு கபாடபுரம் தலை நகரமானது. 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள் அதையும் கடல்கொண்டது. பின்னர் தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தலைநகர் மாற்றம் பற்றி ரோமானிய யாத்ரீகர்களும் சொல்லுவதால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கபாட புரம் அதற்குப் பின் கடலுக்குள் போனதாகவும் ஊகிக்கலாம்.

இந்துமத நூல்கள் 7 கடல், 7 மலை, 7 தீவுகள் என்று ரிக் வேத காலம் முதல் கூறிவருகிறது. இதே போல தமிழர்களும் ஏழு , ஏழாக நாடுகளைப் பிரித்திருப்பது பொருள் பொதிந்ததே. மேலும் கங்கை முதல் காவிரிவரையுள்ள 700 காதம் என்று ஒரு தமிழ் கல்வெட்டு கூறுவதால் நமக்கு அடியார்க்கு நல்லார் கூறும் “700 காவத” விஷயமும் உண்மையே எனக் காட்டும். (நாடு என்பது சங்க காலத்தில், ஒரு தாலுக்கா அல்லது ஜில்லா (வட்டம்/மாவட்டம்) அளவுடைய நிலப்பரப்புகள்).

historical_map_of_Tamil_Nadu

பழந்தமிழ் நாடு

தமிழர் இழந்த நூல்கள்

தமிழ் தாத்தா உ.வே சாமிநாத அய்யர் என்ற ஒருவர் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்து, நமக்குக் கொடுத்திராவிடில் தமிழர்களின் வரலாறு முற்றிலும் அழிந்திருக்கும். பழைய உரைகளில் இருந்து இது வரை தமிழர்கள் இழந்த நூல்கள் என்ன என்ன என்பதை அறிய முடிகிறது. ஆனால் அடியார்க்கு நல்லார் சொல்லும் பாண்டிய மன்னன் பெயரும் (சயமா கீர்த்தி), கீழேயுள்ள பல நூல்களும் சம்ஸ்கிருதச் சொற்களுடன் இருப்பதையும் நோக்குதல் வேண்டும். தொல் பழங்காலத்தில் மொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை இது காட்டும்:

u-v-2

அகத்தியம், அவிநயம், இசை நுணுக்கம், மயேச்சுரம், மாபுராணம், பூதபுராணம் ( தமிழ் புலவர்கள் வேண்டுகோளை எல்லாம் புறக்கணித்து கணவன் சிதைத் தீயில் பாய்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி “பூத”ப்பாண்டியன் தேவி என்று புறநானூறு சுட்டுவதையும் நினைவிற்கொள்க), பனம்பாரம், பல்காப்பியம், பன்னிருபடலம், முதுகுருகு, முதுநாரை, முறுவல், சயந்தம், பரதம், செயிற்றியம், பெருங்கலம், பஞ்சமரபு, இந்திரகாளியம், காக்கைபாடினியம், நற்றத்தம், வாய்ப்பியம், வியாழமாலை, பரத சேனாபதீயம், சிற்றடக்கம், பெரும்பொருள் விளக்கம், வெண்டாளி, களரியாவிரை, வாமனம், வையாபிகம், சிகண்டியம், பஞ்சபாரதீயம், குணநூல், மதிவாணம், கழாரம்பம், சங்கயாப்பு, துராலிங்கம் – முதலிய நூல்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

உரைகாரர்கள் மேற்கோள் காட்டியதன் பெயரில் இந்த நூல்களின் பெயர்களும் அவற்றில் உள்ள சில செய்யுட்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

வாழ்க தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

பாரதி போற்றிய ஐயர்!

Dr_U_V_Swaminatha_Iyer_stamp

உ.வே.சா. தபால்தலை

Post No: 1651;  Dated: 14 February 2015

by S Nagarajan

மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை வணங்கிப் போற்றி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

 

உ.வே.சாமிநாத ஐயர் : தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942

 

பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் நீ வாழ்வாய்!

 

எழுதியவர் ச.நாகராஜன்

மகாகவி போற்றிய ஐயர் அவர்கள்!

கவிஞர்களுக்குப் பல சிறப்புக் குணங்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவர் மகாகவி பாரதியார்.

 

கவிஞன் காலத்தின் கண்ணாடி. கவிஞன் ஒரு தீர்க்கதரிசி. இந்த இரண்டு குணங்களையும் அவரது மகாமகோபாத்தியாயர் என்ற கவிதையில் காண்கிறோம்.

தமிழுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த மேதையான உ.வே.சாமிநாதையரைப் பாராட்டி பிரஸிடென்ஸி காலேஜில் ஒரு விழா   நடந்தது. அதில் கலந்து கொண்டு மகாகவி அவரை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார். இறவா வரம் படைத்த பாடல் அது. காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்த பாரதி தமிழ் மேதையின் அன்றைய நிலைமையை அப்படியே வடித்து விட்டார்


who-are-these-people

உ.வே.சாமிநாத  ஐயரின்  அபூர்வ புகைப்படம்.

இதிலுள்ள தமிழழறிஞர்கள்  யாரென்று தெரியவில்லை.

இந்தியன்     எக்ஸ்பிரஸ்  டீ.ஏ. சீனிவாசன் கொடுத்த படம்

.

“நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி         இன்பவகை நித்தம் துய்க்கும்                                   கதியறியோம் என்று மனம் வருந்தற்க              குடந்தை நகர்க் கலைஞர் கோவே!”

என்ற இந்த வரிகளால் தமிழுக்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் நிதியின்றி வாடினார்; உலகத்தில் உள்ள கோடி வகை இன்பங்களையும் அனுபவிக்கவில்லை என்பதை படம் பிடித்துக் காட்டி விட்டார்.


உ வெ ச

அதே சமயம் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால், “

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்  காலமெலாம் புலவோர் வாயிற்                                 துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்      இறப்பின்றித் துலங்குவாயே”

என்று தீர்க்கதரிசன வாக்கால் தமிழ் உள்ளளவும் அவர் தமிழை உண்மையாக நேசித்துப் போற்றும் நல்லோரால் நினைக்கப்படுவார் என்று கூறி அவரை வாழ்த்துகிறார்.

மகாகவியே பிறிதோரிடத்தில் கூறியபடி,”பார்ப்பனக்குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்” சாமிநாத ‘ஐயர்’ என்ற மேதைக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் உரிய மரியாதை இல்லை; மறைந்த பிறகும் மரியாதை இல்லை என்பதை உளம் சோர, வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியதாயிருக்கிறது.

 

அவர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டதை தினமணி நாளிதழ் 2014, டிசம்பர் 14ஆம் தேதி பதிவு செய்கிறது.

உ.வே சா வீடு படம்

தமிழை அரசியலாக்கி அதன் பெயரைச் சொல்லி தன் நலத்தையும் தன் வாரிசுகள் நலத்தையும் பேணுவோர் இருக்கும் இன்றைய தமிழகத்தில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது தான்.

ஆங்கில அரசும் பாண்டியர் அரசும்

மகாகவி தன் கவிதையில் ஆங்கில அரசையும் முன்னமிருந்த பாண்டியர் தம் அரசையும் ஒப்பிடுகிறான். மனதால் ஆங்கில அரசை முழுவதும் வெறுத்தாலும அப்படிப்பட அரசே உ.வே.சாமிநாதையரைப் பாராட்டுவதை உள்ளக் களிப்புடன் ஏற்றுக் கொண்ட மகாகவி, முன்னம் இருந்த பாண்டியர் அரசு இருந்தால் இவரை உச்சி மேல் வைத்து எப்படியெல்லாம் கொண்டாடி இருப்பார்கள் என்று மனதால் எண்ணிக் களிக்கிறான்.

“அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்    இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னிய சீர் மகாமகோ பாத்தியாயப்      பதவி பரிவுடன் ஈந்து

பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிதா      தன்றனக்குப் புகழ் செய்வாரேல்,

முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்  இவன் பெருமை மொழியலாமோ?”

என்ற மகாகவியின் பாடல் எவ்வளவு பொருள் பொதிந்ததாக ஆகிறது, இன்று!

uvesa_table1_320x115

பிரான்ஸ் நாட்டவரின் வருத்தம்

 

ஐயர் அவர்கள் எழுதிய ‘நினைவு  மஞ்சரி’யின் முதல் பாகத்தில் முதல் கட்டுரையாக ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரை இடம் பெறுகிறது. அதில் பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை ஐயர் அவர்கள் விளக்குகிறார். ஜூலியன் விண்ன்ஸோனின் மாணாக்கரான பொண்டெனூ என்பவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் அங்கிருந்து ஐயர் அவர்களைப் பார்க்க அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வந்த போது தான் இருந்த நிலையை ஐயர் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்:-
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது.”

 

இது போன்று  தமிழ் ஆராய்ச்சியை எந்தெந்த நிலையில் எல்லாம் அவர் செய்ய வேண்டி இருந்தது என்பதை அவரது நூல்களைப் படிப்போர் நன்கு அறிய முடியும். பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் அவ்வப்பொழுது உதிரியாக அவர் தம்மைப் பற்றிக் குறித்தவை தாம் இவை. தனது கஷ்டங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அல்ல இவை.

 

91க்கும் மேற்பட்ட நூல்களை அயராது உழைத்த ஆராய்ச்சியால் வெளியிட்டவர் தமிழ்த் தாத்தா. அவரது நல்லுரைக் கோவை (4 பாகங்கள்), நினைவு  மஞ்சரி உள்ளிட்ட பல நூல்களை www.projectmadurai.org  தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

தமிழ் வளர்த்த பாண்டியர் நாள் மலருமாக!

அவரை நினைப்பவர் மனதில் அவர் புகழோடு இன்றும் இலங்குகிறார். கெட்ட கலி யுகம் அழிந்து பாண்டியர் நாள் ஒரு நாள் எழும்; அன்று மாமேதை நன்கு போற்றப்படுவார்! தமிழை உளமார நேசிக்கும் நல்லோர்கள் மனதில் அவர் என்றும் இற்வாமல் புகழோடு வாழ்வார்.

அவரது பிறந்த நாளான இன்று உண்மையாக தமிழை நேசிப்போர் அவரை ஒரு கணம் நினைந்து அவரை உளமார வணங்குவோமாக! அப்படி வணங்கும் போது அவரால் மறும்லர்ச்சி கண்ட தமிழ்த்தாய் நம்மை ஆசீர்வதிப்பாள் என்பதில் ஐயமில்லை!

********

2014 டிசம்பர் 14ஆம் தேதி, தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தி  கீழே தரப்பட்டுள்ளது:

uvasae_2242800f

சென்னை திருவல்லிக்கேணியில் இடிக்கப்பட்ட தமிழறிஞர் உ.வே.சா வாழ்ந்த வீடு.

சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது.

 

தமிழின் தொன்மையான ஓலைச்சுவடிகளையும், இலக்கியங்களையும் மீட்டுத் தந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இவர் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஓலைச் சுவடிகள், கையெழுத்து ஏடுகள், நூல்கள் ஆகியவற்றை பத்திரமாக மீட்டு, பதிப்பித்தார்.

இன்று தமிழில் உள்ள பெரும்பான்மையான இலக்கியங்கள் இவரால் மீட்கப்பட்டவை. புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் என தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்கள், இவரின் முயற்சியாலேயே தமிழர்களுக்குக் கிடைத்தது.

 

கும்பகோணம் உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்ற 1903-ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

 

அப்போது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்த ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். பின்னர் அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார்.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையில் இருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார். காலப்போக்கில் உ.வே.சா.வின் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த திருவல்லிக்கேணி வீடு, பிறருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டின் உள்பகுதியை இடிக்கும் பணி நடைபெற்றது. அதனைக் கண்டித்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்தனர்.

 

தமிழின் இலக்கியங்களை மீட்டுத் தந்த உ.வே.சா.வின் நினைவாக அந்த வீட்டை உ.வே.சா. நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

uvesa_table2_420x187

இந்த நிலையில் வீட்டை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர்கள் வீட்டை இடிக்கும் பணியை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டுள்ளனர். இப்போது அந்த வீடு முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது என்று அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

*******

Gems of Women: Varahamihirar’s Definition

pen paint 10

Research Paper written by London swaminathan

Research Article No.1650; Dated 14th February 2015.

VANENTINE DAY SPECIAL: 14TH FEBRUARY, 2015

Varahamihirar, author of encyclopaedic Sanskrit book Brhat Samhita, gives the definition of great women. He says, the excellences of women are

Youth, Beauty, Charming Dress, Favourable Attitude, Knowledge of the arts of winning man’s affection, graceful gait and the like. The best of those, possessed of the above excellences, are termed “Gems of women”, whereas others are “Feminine diseases for a cultured men”.

STRINAAN GUNAA YAUVANA RUUPA VESHA DAKSHINYA VINJAANA VILASA PURVAA:

STRI RATNA SAMNJAA SA GUNAANVINTHAASU STRI VYDHYO ANYAS SATHURASYA PUMSA:

–CHAPTER 73, BRHAT SAMHITA

pen paint5

Manu in his Manu Smrti (Hindu Law Book) even dictates how a woman’s name should be, “The names of women should be easy to pronounce, not harsh, of patent meaning, and auspicious; they should captivate the mind and heart, end in a long vowel, and contain a word of blessing” (Manu 1—33)

Hindu women names are always auspicious: Shanti, Karunaa, Lathaa, Shantaa, Sumati, Sugandhi, Siitaa, Raadhaa (long vowel ending), Nidhi etc.

Manu adds that how a man should introduce himself to a woman, who is not related, “Now, to woman who is another man’s wife and not related by birth, one should say LADY! and GODD WOMAN! and SISTER!. (Manu. 2—129)

Jewel of a Woman (Gem of a Woman= Stri Ratna)

A man who has faith may receive good learning even from a man of the lowest caste, and a Jewel of a Woman even from a bad family (Manu 2—238)

Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody — (Manu 2—240)

tulasi lady

Ladies! Don’t Send Money to Your Relatives: Vyasa

Women belonging to Ethnic minority communities living in western countries cause a big rift in the families by sending money to their relatives living on the subcontinent. Veda Vyasa has warned women against such a thing 5000 years ago! This is applicable to women living in the subcontinent also.

Vyasa warns

Don’t give anything to your relatives without the knowledge or permission of your husband.

Bhartur aknjaam vinaanaiva sva bandhubyodisech dhanam

Athyaalaapa santhosham paravyaapaara sanjitham

amuthasurabhi

Kalidasa’s Advice

Kalidasa, the most celebrated Indian poet, gave the following advice to women, who are going to their husbands’ home immediately after the marriage:

Kanva to Shakuntala : My child, you are now leaving for your husband’s home; when you enter it:

Serve your elders with diligence; be a friend to your co wives

Even if wronged by your husband do not cross him through anger;

Treat those who serve you with the utmost courtesy;

Be not puffed up with pride by wealth and pleasures;

Thus do girls attain the status of Mistress of the Home;

Those who act contrary are the bane of their families. Sakuntalam 4-21

Long Live Indian Women!

Pictures are taken from face book; thanks.

Drawings by S Ilayaraja and others.