புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை !

gatha_sapt

கட்டுரை எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண் —  1551; தேதி:6 ஜனவரி 2015

பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது. இதில்   சங்க இலக்கிய அகத்துறை பாடல்களைப் போலவே காதல் பாடல்கள் உள்ளன. 700 பாடல்கள் இருப்பதால் `சப்த சதி`  என்று பெயர் இட்டனர். இதைச் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலன் என்ற சாதவாஹன மன்னன் தொகுத்தார் என்பர். இந்த நூல் தோன்றிய வரலாறு ஒரு சுவையான வரலாறு ஆகும். இந்தப் புத்தகத்தில் ஹாலனின் சுமார் 40 கவிதைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் முதலில் அவனுக்குக் கவிபாடும் திறமை கிடையாது.

சாதவாஹனனின் மனைவியின் பெயர் மலயவதி. சம்ஸ்கிருதப் புலமை பெற்ற அறிவாளி. இவ்விருவரும் நீர்விளையாட்டிற்காக ஆற்றங்க்கரைக்குச் சென்று ஒருவர் மீது ஒருவர் நீரை இறைத்து விளையாடினர். அப்பொழுது அவனிடம் அவள் சொன்னாள்: மோதகஸ் தாடய என்று — இதன் பொருள்- மா உதகஸ் தாடய — அதாவது “தண்ணீரால் அடிக்காதீர்கள்”. ஆனால் மன்னனுக்கு வடமொழி தெரியாததால், அவள் மோதகம் (கொழுக்கட்டை) கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு , உடனே கொழுக்கட்டை கொண்டுவாருங்களென்று கட்டளை இட்டான. அவள் குபீர் என்று சிரித்து விட்டாள். வடமொழி சந்தி இலக்கணப்படி மோதக என்பதை மா+உதக என்று பிரிக்க வேண்டும்.

gss 2

உடனே ஹாலனுக்கு அவமானம் தாங்காமல்கல்வி வெறி பிடித்தது! எப்படியாவது சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ஆறே மாதங்க்களில் தனக்கு யார் சம்ஸ்கிருதம் கற்றுத் தரமுடியும் என்று சவால் விட்டான். சர்வ வர்மா என்ற பண்டிதன் தான் கற்பிக்க முடியும் என்றார். அவரது சபையில் இருந்த பிரபல எழுத்தாளர் குணாட்டியரோ முடியவே முடியாது என்றார். அவர்தான் பிருஹத் கதை ( பெருங்கதை) எழுதிய பேரறிஞர். வடமொழி இலக்கணம் கடினமானது என்றும் ஆறு மாத காலத்தில் சர்வ வர்மன் கற்றுத்தந்தால் இனிமேல் தான் சம்ஸ்கிருதத்தில் எழுதுவதையே நிறுத்தி விடுவதாகவும் சூளுரைத்தார்.

 

சர்வ வர்மன் தான் சொன்னபடி ஆறே மாதங்களில் ஹாலனுக்கு சம்ஸ்கிருத இலக்கணத்தைக் கற்றூக் கொடுத்தார். குணாட்டியர் சொன்ன சொல் தவறாமல் அந்த நாட்டைவிட்டே வெளியேறி வேறிடத்திற்குச் சென்றார். பைசாச மொழியில் பெருங்கதை என்னும் நூலைச் செய்தார். குணாட்டியர்,  தான் ஏற்கனவே எழுதிய பெருங்கதையை எரிக்க எத்தனித்தபோது அதை ஹாலனே தடுத்து நிறுத்தி புத்தகத்தைக் காப்பாற்றினார்.

காலப் போக்கில் ஹாலனே பெரும் கவிஞன் ஆனான்

ஏராளமான புலவர்களை ஆதரித்து கவி வத்சலன் என்ற பெயரும் எடுத்தான். விக்ரமாதித்தன் போலவே இவனும் பெரிய அறிவாளி. அவனைப் போலவே இவனது சபையிலும் அறிஞர்கள் இருந்தனர். விக்ரம சஹாப்தம் போலவே சாலிவாஹன சஹாப்தம் என்றும் துவக்கப்பட்டது. ஹாலன் தொகுத்த முக்கிய 700 பாடல்கள் காதா சப்த சதியில் இருக்கின்றன.


gss4

விக்ரமாதித்தன்  சபையை அலங்கரித்த காளிதாசனே இவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தந்திருக்க வேண்டும். விக்ரமாதித்தன் ஆயிரகணக்கில் பொற்காசுகளைக் கவிஞர்களுக்குக்  கொடுத்த ஒரு பாடலும் இந்த சப்த சதியில் இருப்பது இதை மெய்ப்பிக்கிறது. மேலும் காளிதாசனின் உவமைகளை பல ஊர் பேர் தெரியாத புலவர்கள் இதில் (திருடி) பயன்படுத்தியுள்ளனர்.



contact swami_48@yahoo.com

gss3

தமிழ் என்னும் விந்தை! -24 ! திரிபங்கி – 1

தமிழ் என்னும் விந்தை! -24

திரிபங்கி – 1

by ச.நாகராஜன்

Post No 1550 ; Date 6th January 2015

 

ஒரு பாடலிலேயே மூன்று பாடல்கள் வர முடியுமா? தமிழ் என்னும் விந்தையில் மட்டும் முடியும்!

திரி என்றால் மூன்று என்று பொருள். பங்கம் என்றால் பேதம். ஆக திரி பங்கி என்றால் மூன்று பேதம் அல்லது பங்கம் உடையது என்று பொருளாகிறது.

இதற்கு தண்டியலங்காரம் இரு உதாரணங்களைத் தருகிறது. இந்த உதாரணங்களையே பரிதிமால் கலைஞரும் தன் நூலில் விளக்கியுள்ளார்.

பாடல்களைப் பார்ப்போம்.

ஆதரந் தீரன்னை போலினி யாய் அம்பி காபதியே!

மாது பங்காவன்னி சேர் சடையாய் வம்பு நீண்முடியாய்!  

 ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்!  

ஓது மொன்றே உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே!

இதன் பொருள்:-

அன்னையே போன்று இனிமையாய் விளங்குபவனே! அம்பிகையின் நாயகனே! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவனே! வன்னிப் பத்திரத்தைச் சடைமுடியில் தரித்தவனே! மகுடம் போன்ற சடை முடியுடையவனே! குற்றம் நீங்கி உய்ந்தவர் பிறவித் துன்பத்தைத் தரும் வினையைத் தீர்ப்பவனே! பேரின்பத்தினை உடைய ஞானிகளால் போற்றப்படும் ஒப்பற்ற பொருளே! நின்னை நினைப்பவர்க்கு அமுதமாக இருப்பவனே! தேவர்களின் நாயகனே! நின்னை ஏத்துதும்!

இனி இப்பாடலை மூன்று விதமாகப் பிரிப்பதைப் பார்ப்போம்:

  1. “ஆத ரந்தீர்  மாது பங்கா  ஏதம் உய்ந்தார்      ஓதும் ஒன்றே!”
  2. “அன்னை போல் இனியாய்    வன்னி சேர் சடையாய்   இன்னல் சூழ் வினைதீர்  உன்னுவார் அமுதே!”
  3. “அம்பிகா பதியே      வம்புநீண் முடியாய்    எம்பிரான் இனியார்    உம்பர் நாயகனே!”

எப்படி பொருளுடன் கூடிய அற்புதமான மூன்று பாடல்கள் மலர்ந்துள்ளன, பார்த்தீர்களா!

கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல் இது.

திரிபங்கியைக் கட்டங்களில் அமைத்துப் பார்ப்போம்:-

கிடைமட்டமாகப் படித்தால் நான்கு வரிகளில் உள்ள  பாட்டை செங்குத்தாக  மூன்று வரிசைகளில் படித்தால் மேலே உள்ள மூன்று பாடல்கள் மலர்வதைக் காணலாம்!

ஆத ரந்தீர் அன்னைபோ லினியாய் அம்பிகா பதியே
மாது பங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண் முடியாய்
ஏத முய்ந்தார் இன்னல்சூழ் வினைதீர் எம்பிரா னினியார்
ஓது மொன்றே உன்னுவா ரமுதே உம்பர் நாயகனே

 

இதே போன்ற இன்னும் ஒரு வகைப் பாடலைக் கீழே காண்போம்:-

சங்கந்தா பூணாரந் தாமே கலைதாநற்  

 புங்கவன்மால் காணாப் புலவுடைய –

கங்கரா!  கோணா கலாமதி சேர் கோடீர!

சங்கரா!    சோணாசலா சலமே தோ!”

இதன் பொருள்:-

நன்மை புங்கவன் மால் காணா புலவுடைய கம் கரா – நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினை உடையாய்! கோண் ஆ கலா மதி சேர் கோடீர – வளைவு பொருந்திய பிறைச் சந்திரன் பொருந்திய சடை முடியை உடையாய்! சங்கரா – சுகத்தைச் செய்பவனே! சோண அசலா – பொன் மயமாகிய மலையை இடமாகக் கொண்டவனே! சலம் ஏதோ – கோபம் யாதோ? சங்கம் தா – (யாம் இழந்த சங்க வளையல்களைத் தா;     பூண் ஆரம் தா – பூண்டிருந்த மாலைகளைத் தா; மேகலை தா – (நழுவி ஒழிந்த) மேகலாபரணத்தைத் தா!

இந்த வெண்பாவை கீழ்க்கண்ட இரு வெண்பாக்களாக படிக்கலாம். ஆகவே இது திரிபங்கி ஆகிறது.

நேரிசை வெண்பா

  1. பூணாரந் தாமே கலைதரநற் புங்கவன்மால்  காணாப் புலவுடைய கங்கரா – கோணா    கலாமதி சேர் கோடீர சங்கரா சோணா     சலாசலமே தோசங்கந் தா”

 

நேரிசை வெண்பா

  1. “சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே                      கலைதா நற் புங்கவன்மால் காணாப் – புலவுடைய              கங்கரா! கோணா கலாமதிசேர் கோடீர!                    சங்கரா! சோணா சலா!”

திரிபங்கியின் சித்திரம் கீழே தரப்பட்டுள்ளது

 tribhangi

ஒரு பாடலில் மூன்று பாடல்கள் வரும் விந்தை நல்ல பல தமிழ்ப் புலவர்களால் செய்யப்பட்டுள்ளது.

***************

Lord Shiva Composed Tamil Poems! The Wonder that is Tamil- Part 6

siva japam

Written by London swaminathan

Research Article No.1549; dated 5th January 2015.

 

Sangam Tamil litearture has 18 books and one of them is Mullaippattu. It has one finite verb in the whole poem.

 

Nedunal vadai,one of the Ten Long Poems, has got one subject proper that too in the last line –181st line.

 

Kalingathu Parani is one of the famous books in the Parani (Barani) genre. if someone has to be the hero of a Parani poem, he must have killed at least one thousand elephants. The hero of the poem Kalingathu Parani is Karunakara Tondaiman. He led an army against Anantavarman, the King of Kalinga. It happened during the reign of Kulottunga Chola (1070-1120 CE). Jayamkondar was the court poet who composed this Kalingathu Parani.

 

Pallu is another type of composition in Tamil.  It describes the life of farmers and the status of agricultural community. Mukkudal Pallu is the most famous Pallu litearature. No one knows the name of the author. it was written in the later part of 17th century. The town Mukkudal is in Tirunelveli district of Tamil Nadu. the poet lists thirty varieties of paddy, twenty five kinds of bulls and 25 varieties of fish.

rg_hyd_201210_rice_kerala

Tamil is a ‘faceless’ and a ‘heartless’ language. Tamil hasn’t got any word for heart or face in its vocabulary. The words that are  used for face and heart (muham and irudhayam) are of Sanskrit language (Mukam, Hruthaya).

Lord Shiva was not mentioned by the word ‘Shiva’ anywhere in ancient Tamil books. Only devotional books of post Sangam literature use the word ‘Shiva’. But references like ‘ the one with blue throat’, the one with Bull flag, ‘the one who burnt the three forts’ are abound in ancient Tamil books.

 

Tamils consider ‘Tirukkural’ as their greatest book. It consists of 1330 couplets giving moral advice to everyone. The beauty of the book is anyone can follow it irrespective of one’s faith. If anyone wants to understand the meaning of the saying ‘Brevity is the soul of wit’ one must read this book. This is the Tamil book that is translated in more number of languages than any other Tamil work.

 

The strange thing about Tirukural is that the early Christian scholars who translated it into European languages refused to translate the third chapter because it talks about sex. Sex was a taboo for European scholars but not for Indians. Indians praise Vatsyayana, who wrote the oldest book on sex ‘Kama Sutra ‘ in Sanskrit, as a Rishi (sage).

elephant

Oldest Tamil inscriptions exist from third century BC and there are more than 80,000 inscriptions are in Tamil. A lot of research is awaited in to these historical treasure.

 

An epigraph with musical notes is in Arachalur near Erode in Tamilnadu. It is dated to 2nd century AD. Vannakkan Thevan Sathan is the author of this piece. Whatever way you read it, it will be same. The matter found in the epigraph is used in dance and music.

 

Tamils were the first to use white colour wigs in the court of justice. British judges and barristers follow this custom even today. Young Karikal Cholzan, the most famous Tamil king, wore this wig to satisfy two old men. The king did it to pretend like an old judge. Cankam poem :Porunar Atruppadai lines 187-188; also in Manimekalai and Pazamozi refer to this anecdote.

 

Tamil race is very old. The poet Kapila who lived around first century AD mentions in his poem that one of the Tamil kings is 49th king in his dynasty. It takes his ancestors to 1000 or 1500 BC. Irunkovel  is the king and this reference is found in poem 201 of Pura Nanuru.

 

Lord Shiva’s Poems!

Lord Shiva is considered  the first one to preside over the first Tamil Academy called ‘Sangam’. His poem is still there in one of the books. Kurunthokai poem No 1 (by Iraiyanar).

 

Lord Shiva was the first one to give a recommendation letter to a Tamil poet known as Bana Bhadran who went to see a king called Seraman Perumal Nayanar for funds. This poem is still available in Thiruvilaiyadal Puranam (Mathi mali purisai mada kudal——)

murugan1

Proof Reader Skanda

Lord Skanda (Murugan) worked as a proof reader for Kachiappa Sivacharyar who translated Skanda Purana from Sanskrit. He got the first poem from Lord Murugan himself. He composed 10,342 poems during a long period. Every night he used to put the poems he wrote for the day at the temple near the god. When he came the next day poems were corrected and kept ready at the same place. When he was ready to launch the book, scholars objected to the very first poem saying it was not according to the grammar book Tolkappiyam.

He was very upset and went home saying that he would come back the next day with proof. That night Lord Muruga appeared in his dream and told him not to worry and someone came next day to the assembly of poets and showed a proof from another Tamil grammar book called Veerasoziyam.

rice-varieties

20,000 Proverbs !

Tamil is so rich that 20,000 proverbs are listed in three books. The foreigners who came to preach Christianity compiled all of them and translated them in to English. One may not see that many proverbs in any other language in the world. Rev P .Percival published 6156 proverbs and Danish Missionary John Lazarus and Rev. Herman Jensen 9417 and 3644 proverbs respectively.

There is a Tamil book  called ,’Paza Mozi’ with 400 ethical poems each ending with one proverb. No where in the world we can find such a book.

One of the great four Saivaite poets known as Appar alias Thirunavukkarasar sang one pathikam (10 poems)  on Shiva with proverbs.

 

22,000 Devotional Poems !

22000 devotional poems were written, thousand years ago by a number of Saivaite  and 12 Vaishnavaite (Azvars) devotees.

 

Lord Shiva’s play ground was the famous city Madurai which has the architectural wonder of the world -Meenakshi Temple. Shiva’s 64 divine acts were listed in the book called ‘Thiruvilayadal Puranam.’ It was translated in to Sanskrit by a poet under the title ‘Siva Leelarnavam’.

contact swami_48”yahoo.com

 

வள்ளுவர் ‘காமெடி’: சிரிப்பு எத்தனை வகை?

laugh5

President of USA, Obama, laughing

Written by London Swaminathan
Research Article No.1547; Date: 5th January 2015

சிரிப்பது எவ்வளவு அவசியம் என்று இப்போது மருத்துவர்களும் உளவியல் அறிஞர்களும் சொல்லுகின்றனர். வள்ளுவன் இதை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டான. அது மட்டுமல்ல சிரிப்பில், புன்முறுவலில் எத்தனை வகை இருக்கிறது என்பதையும் வெவ்வேறு குறளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்திக் காட்டுகிறான்.

 

காதலியின் புன்முறுவல், நண்பனின் சிரிப்பு, எள்ளி நகை ஆடுவோரின் ஏளன, இளக்காரச் சிரிப்பு, பகைவர்களின் பொய்யான சிரிப்பு, உண்மையான சிரிப்பு என்று பல இடங்களில் பல பொருள் தொனிக்கப் பாடுகிறான். வள்ளுவனுக்கு ‘காமெடி’ என்றால் என்ன என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. கஷ்டம் வந்தாலும் சிரியுங்கள். அதுதான் சிறந்த மருந்து என்று சொல்லுகிறான். அவன் பெரிய மன நோய் நிபுணன் என்றும் தெரிகிறது.

 

நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும் பாற் பட்டன்று (999)

 

மற்றவர்களோடு சந்தோஷமாகப் பேசிப் பழகாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம், பகல் நேரத்திலும் கூட இருட்டாகவே இருக்கும்.

இந்தக் குறள் மூலம் சிரிப்பு என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

laugh3

இடுக்கண் வருங்கால் நகுக !!

 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல் (621)

வேலை செய்கையில் கஷ்டம் வந்தால் அதை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும். அந்த சந்தோஷம்தான் சிறந்த ஆயுதம். அதைவிடச் சிறந்த துணை வேறு ஒன்றும் இல்லை. வள்ளுவன் பெரிய ‘சைக்காலஜிஸ்ட்’ என்பது இதில் தொனிக்கிறது.

 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு (786)

வெளியே சிரித்துச் சிரித்துப் பேசினால் அது உண்மையான நட்பு ஆகிவிடாது. மனதில் மகிழ்ச்சி நிலவ பழக வேண்டும்.

laug1

குடிகாரன் காமெடி

அந்தக் காலத்திலேயே குடிகாரன் காமெடி நிறைய உண்டு என்றும் தெரிகிறது. இன்று சினிமாவிலும் நிஜ வாழ்விலும் பார்க்கிறோம்.

 

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண் சாய்பவர் (927)

எங்கே கள் கிடைக்கும் என்று மறைவாக அறிந்து, யாருக்கும் தெரியாமல் அதைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனைக் கண்டு ஊரே சிரிக்கும்.

 

போலிச் சிரிப்பு !

 

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப்படும் (824)

வெளியிலே சிரித்து சிரித்துப் பேசி, பின் பக்கமாக நமக்கு குழிபறிக்கும் வஞ்கர்களிடம் மிகவும் பயப்படவேண்டும். நேருக்கு நேர் குறைகூறுவோர் நல்ல எதிரிகள்! மறைவாக எதிரி வேலை செய்பவர்களைக் கண்டால் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. குறள். 817-ல் இதையே சொல்கிறார்.

 

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றாதவர் (187)

சந்தோஷமாகப் பேசி நண்பர்களாக ஆவது சிறந்தது. இது தெரியாத புறங்கூறுவோர் —- (நமக்குப் பின்னால் நம்மைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லுவோர்) — உறவினர்களைக் கூடப்பிரித்து விடுவார்கள்.

 

மிகச் செய்து  தம் எள்ளுவாரை நகச் செய்து

நட்பினுள் சாப்புல்லற்பாற்று (829)

 

வெளியே நண்பர் போல நடித்து உள்ளத்தில் வெறுப்பு வைத்து இருப்பவரை சிரித்துக் கொண்டே விலக்கிவிட வேண்டும்.

laugh2

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு (782)

 

சிரித்து மகிழ்வதற்கு மட்டும் நண்பர்கள் அல்ல;

நண்பர்கள் தப்பு செய்தால் இடித்துரைத்து  நல்வழிப்படுத்த வேண்டும்.

 

பூமாதேவியும், பஞ்சபூதங்களும் சிரிக்கும் !

 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் (271)

பொய்யான ஒழுக்கம் (போலி சந்யாசி) உடையவனைக் கண்டு, அவன் உடம்பில் இருக்கும் ஐம்பூதங்களும் சிரிக்கும்.

 

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்  (1040)

உழைக்காமல், என்னிடம் பணமே இல்லையே, என்று வருந்தும் சோம்பேறிகளைக் கண்டு பூமாதேவி சிரிப்பாள்.

 

கோபம் என்பது, முகத்தில் சிரிப்பினையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும். இதைவிடப் பெரிய பகைவன் யார்? (304)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற

 

நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகை என்ப வாய்மைக் குடிக்கு (953)

முக மலர்ச்சி, தயாள குணம், இனிமையாகப் பேசுதல், மற்றவர்களை மட்டம் தட்டாமல் பழகுதல் ஆகிய நான்கு குணங்களும் நல்ல குடியில் பிறந்தோருக்கு அடையாளங்கள்.

laugh4

பெரியவர்கள் முன்னிலையில் சிரிக்காதீர்கள் !

மன்னர்கள் ( இப்போது பெரியவர்கள், அரசாங்கத்தில் பதவியில் உள்ளவர்கள், முதலமைச்சர்கள் )  முன்னிலையில் சிரிக்கக்கூடாது, பிறர் காதில் ரகசியமாக எதுவும் சொல்லக்கூடாது என்றும் வள்ளுவர் எச்சரிக்கிறார் (694)

 

தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி

நன்றி பயப்பதாம் தூது (685)

ஒரு தூதன் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும். சொல்லக் கூடாதவற்றை நீக்க வேண்டும். பகை அரசர் மகிழும் படி பேச வேண்டும். தனது அரசனுக்கு நன்மை கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

laugh7

காதலிகளின் புன்முறுவல்

 

காமத்துப் பாலில் குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் மூன்று குறள்களில் (1094, 1095, 1098) நகும் என்ற சொல் வருகிறது.

நான் அவளைப் பார்க்கும் போது வெட்கத்தால் நிலத்தைப் பார்ப்பாள். நான் பார்க்காத சமயத்தில் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்வாள் (1094)

நேராகப் பார்க்காமல், காணாதவள் போல ஓரக் கண்களால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள் (1095)

 

நான் அவளை ஆசையோடு பார்ப்பேன். அவள் என் மீது கருணை கொண்டு ஒரு மாதிரியாக சாய்த்துப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள். அப்போது அவள் மயில் போல இருப்பாள் (1098)

 

கதுமெனத் தாம் நோக்கி தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து (1173)

முன்பு காதலரைத் தேடி என் கண்கள் ஓடின. இப்போது காதலரைக் காணாது கண்ணீர் விடுகிறன. எனக்கே சிரிப்பு வருகிறது.

laugh8

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு (1140)

என் கண்களுக்கு முன்னாலேயே என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு வந்த கஷ்டம் இவர்களுக்கு வந்தால்தான் தெரியும்! (ஒரு பெண்ணின் புலம்பல்)

குறளில் சிரிப்பு, புன்முறுவல், முகமலர்ச்சி பற்றி வரும் இடங்கள்:–

 

நக=மகிழ 187, 685, 829 மலர 786, சிரிக்க 1173

நகப்படுவர் = இகழப்படுவர் 927

நகல் = மனத்தில் மகிழ்தல் 999

நகா அ = சிரித்து 824

நகுக = மகிழ்க 621

நகுதல் = நகையாடி மகிழ்தல் 784

நகுப = நகைக்கின்றார் 1140

நகும் = இகழ்ந்து சிரிக்கும் 271; மகிழும் 774, இகழ்ந்து தனக்குள் சிரிக்கும் 1040, மகிழும் 1094, 1095, 1095(புன்முறுவல்

laugh6

World Laughing Day, Mumbai

நகை = சிரிப்பு 182, 304, 694, 817, விளையாட்டு 871, 878, 995 முகமலர்ச்சி 953, சிரிப்பு 1274

வள்ளுவர் காலத்தில் சிரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை இவை காட்டும்.

–சுபம்–

 

சுழிகுளம் – 2

suzi 3

தமிழ் என்னும் விந்தை! -23

சுழிகுளம் – 2

by ச.நாகராஜன்

Post No 1548  Dated 5th January 2015

 

சுழி குளத்தை விளக்கும் விதமாக மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:-

“தெழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் ததைக்கொடு   

             சுழித்தடங் குவபோன் றடங்குதல் சுழிகுளம்”

ஆரவாரித்து எழுகின்ற புனல் குளத்தினுள் தனது இடத்தை அடைந்தது யாதொன்று, அதனைக் கைக் கொண்டு சுற்றி உள்ளே அடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் கொண்டடங்குதல் சுழிகுளம் என்பது இதன் பொருள்

மாறனலங்காரம் தரும் உதாரணச் செய்யுள் இது:-

“சதிதகனடனாடீ                                            

திததிதிகாண்ஞானா                                            

ததிதாகார்கண்ட                                             

 கதிகாகிளர்கான

 

இதன் பொருள்:-

தாளவொத்துக்குப் பொருந்தக் கூத்தாட நின்றவனே! உண்மையான காவல் தொழிலை உனதாகக் கொண்டவனே! தயிரைத் தாகித்துண்ட கண்டத்தை உடையவனே! கிளர்ந்த கானத்தை உடையவனே! நீயே கதி, காப்பாயாக!

துறை – வஞ்சித்துறை

இதன் சித்திரத்தைக் கீழே  காணலாம்:

சுழிகுள வகையில் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் பிள்ளை, வஞ்சித் துறையில் இயற்றிய செய்யுள் இது:-

 

“தகுநகு லேசுரங்                                                 

 குலவிவ யச்சிர                                                     

 நவிறல முனாச்சு                                                      

 குவலயம் முயலே”

 

இதன் திரண்ட பொருள் : தகுந்த நகுலேச்சுரம் என்னும், விளங்கி வலிமை பொருந்திய பிரதான தலமாகச் சொல்லப்படும் தலத்தின் முன்னர் உலகம் உய்தல் ஆயிற்று.

இப்படி ஏராளமான செய்யுள்கள் சுழிகுள வகையில் தமிழ் இலக்கியத்தில் உண்டு.

***************

Thousand Kings before Kalidas!

Shivaji

Veera Shivaji

Research paper written by London Swaminathan

Research article No.1546; Dated  4 January 2015.

Foreigners who wrote Indian history said that India had  kings only from sixth century BCE. But Vedic literature and later literature give the names of thousands of kings.  No one has listed all the kings until today. Hearsay reports and temple legends name hundreds of kings. Every country in the world had several kings with same names like Ramses,William, Napoleon, Louis etc. In India we had several Ramas and Dasarathas. No one has listed them like Dasaratha I, Dasaratha II etc.

Purananuru, a Sangam Tamil literature book, sings about “thousands of kings” lived before Sangam age.  Kalidasa, the greatest poet of the classical age also sang about “thousand kings” before the age of Raghu who was the  forefather of Lord Rama. This shows that they had a very clear idea of Indian history. I have already written in  my posts  How ancient is Indian Civilization about the Vamsavali (lineage) given in the Upanishads and the references to  Vamsavali in  Panini’s Ashtadyayi and Purananuru (verse 201 of Kabilan).

I give below two more such references from Kalidasa’ Raghuvamsa and Purananuru:

  1. The sky is full of stars and planets, but yet one moon gives more light than others in the night.

Likewise there are one thousand kings, but yet they say that this king of Magadha is the best

(Raghuvamsa 6-22).

This comparison of moon among stars shows that there are innumerable kings

like millions of stars. This is confirmed by the following Tamil verse that is over

2000 years old:

This big earth was ruled by countless kings like the sand particles on the sea shore.

They are all dead and gone. So, do something good before you die — is the message  given by the poet Siruventheraiyar (Puram 363) to his contemporary ruler.

MaharanaPratap1

Maharana pratap

Once again it shows the historical sense of Tamil poets. They knew that there were thousands of kings before their period and so he aptly used the sand particle simile. There are more poems which sang about countless number of kings.

When Egypt, Sumeria and Israel listed their kings from very ancient times, Indians still stuck to the history written by foreigners. We knew Indus valley Civilization existed from 2600 BCE, but no one did try to find out the names of the kings.Even if we had five kings for every 100 years, we must have 130 kings for each area.  We had several names in the Mahabharata. One must list them chronologically and do more research.

We need a Dictionary of Kings, both historical and not historical. Local temple puranas, what are  known as Sthala Puranas in Tamil Nadu give more names of kings. Stories like Katha sarit Sagara and Vetal and Vikramditya give several names which may be fictional or no fictional. I am compiling a list of all the kings in my Dictionary of Indian Kings. Then there are categories like the kings

who did Aswamedha Yajna. Satapata Brahmana and other Vedic literature give a list of those people.  One has to do a patient research to find out the past history of ancient India.

contact swami_48@yahoo.com

சான்றோரும் சந்திரனும்; சான்றோரும் பாம்புகளும்

moon

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1541; தேதி 4 January, 2015.

சான்றோரும் சந்திரனும் ஒன்றுதான்; ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்! சன்றோரும் சந்திரனும் பிரகாசமானவர்கள்; குளிர்ச்சி மிக்கவர்கள். இவை இரண்டுக்கும் பொது. ஆனால் சந்திரனில் மான் போலவும் முயல் போலவும் தோன்றும் களங்கம் உண்டு. சான்றோரிடத்தில் இப்படி ஒரு களங்கம் வந்தால் அவர்கள் மறு கணமே உயிர் துறப்பர். சந்திரனோவெனில் தேய்ந்தும் வளர்ந்தும் தொடர்ந்து இருக்கும்!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் மன் – திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து

தேய்வர் ஒரு மாசுறின் (நாலடியார்)

வள்ளுவனும் கூட இதையே சொல்லுவான்:-

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (969)

குடிப் பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக் கண் மறுப்போல் உயர்ந்து 957

காளிதாசன் – குமார சம்பவம் 1-3

இவர்களுக்கு எல்லாம் முன்னரே உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் இதைச் சொல்லிவிட்டான். இமய மலை அழகை வருணிக்கும் அவன், அதில் பனி மூடியிருப்பது ஒரு குறையாகாது என்பான். இதற்கு நிலவையே எடுத்துக் காட்டுகிறான. சந்திரனில் ஒரு களங்கம் இருந்தாலும் அது வீசும் வெள்ளி நிற ஒளியில் அந்தக் களங்கம் பொலிவிழந்து போகவில்லையா? என்று குமாரசம்பவம் என்னும் அற்புத காவியத்தில் சொல்லுகிறான்.

pictures-of-king-cobra-snakes

மேன் மக்களும் பாம்பும்

மேன் மக்கள் — தண்ணீர் பாம்பு போன்றவர்கள்; விஷமில்லாத பாம்பு என்பதால் தண்ணீர் பாம்பு எப்போதும் கரையில் கிடக்கும்.யாரும் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுவும் அஞ்சி ஓடுவதில்லை! மேன் மக்கள் அதைப் போன்றவர்கள்.

கீழ் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். நல்ல பாம்பு விஷம் உடையது ஆகையால் அது கரந்துறையும்; மறைந்து வாழும். கீழ் மக்களும் அத்தகையோரே.

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத்தவர் – அவ்வையாரின் வாக்குண்டாம்

பசுவுக்குத் தண்ணீர் கொடுத்தால் அது பாலாகப் பொழிந்து தள்ளுகிறது.

பாம்புக்குப் பாலையே கொடுத்தாலும் அது விஷமாகக் கக்குகிறது.

மேன் மக்களும் கீழ் மக்களும் பசுவும் பாம்பும் போன்றவர்களே. எந்த நூல்களைப் படித்தாலும் மேலோர்கள் அதில் நல்ல பொருளையே காண்பர். இவர்கள் பசு அனையர். தண்ணீரை உட்கொண்டு பால் தருவது போல நல்ல கருத்துக்களை வெளியிடுவர்.

northern-water-snake

அதே நூல்கள் கீழ் மக்களிடம் கிடைத்தாலோ கெட்ட பொருளைக் காண்பர். அர்த்தத்தை அனர்த்தமாக ஆக்கிவிடுவர். வெளிநாட்டு அறிஞர்கள் என்ற பெயரில் இந்துமத நூல்களை இழித்துரைக்கும் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். இந்து மத நூல்களில் எவ்வளவு நல்ல கருத்து இருந்தாலும் அதைத் திரித்தும் கரித்தும் மறித்தும் சிரித்தும் பழித்தும் பேசுவர்.

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளியாம் உய்ர்ந்தார் கண் ஞானம் அதுபோற்

களியாங் கடையார் மாட்டு (அறநெறிச்சாரம்)

ஒரு குட்டிக் கதை

துரியோதனன், தர்மன் (யுதிஷ்டிரன்) ஆகிய இருவரும் கண்ணனிடம் சென்றனர். உலகிலேயே மிகக் கெட்டவனையும், மிக நல்லவனையும் கண்டுபிடித்து வாருங்கள் என்கிறான் கண்ணன் – இருவரும் சென்றனர். உலகில் ஒரு கெட்டவர் கூட கண்ணுக்குத் தெரியவில்லையே என்று திரும்பி வந்து விட்டான் தர்மன். கொஞ்ச நேரம் கழித்து துரியோதனனும் வந்தான். உலகில் நல்லோரே இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்றான். வெளிநாட்டில் இருந்து இந்து மதத்தைக் குறை கூறி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் அறிஞர்கள் – துரியோதனனின் தம்பிகள்!!

Snake-5_1421019i

குன்றின் மேல் இட்ட விளக்கு

கன்றி முதிர்ந்த கழியப் பன்னாள் செயினும்

ஒன்றும் சிறியார் கண் என்றானும் தோன்றாதாம்;

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு  (பழமொழி)

கீழோர்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்குப் புதிய கெட்ட பெயர் என்று ஒன்று வராது. ஆனால் மேன் மக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் உலகமே அதைப் பற்றிப் பேசி இகழும். அது மலையின் மீது வைத்த விளக்கிற்குச் சமம். உலகமே அதைப் பார்க்கமுடியும்! ஆகையால் அவர்கள் மாசு மருவற்ற தூய வாழ்க்கை வாழ வேண்டும். எத்தனையோ சாமியார்கள் பற்றி பலவகையான செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் அந்த ஒரு கெட்ட செய்தி அவர்களை அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது.

light house

சங்க காலத்தில் வாழ்ந்த கபிலன் என்ற பார்ப்பனப் புலவனை ஐந்து சங்கப் புலவர்கள் பாராட்டுகின்றனர். ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று. மூவேந்தர்களுக்கு உலகமே பயந்து நின்றது — ஆனால் கபிலன் பயப்படவில்லை! அவர்களை எள்ளி நகை ஆடுகிறார். இதோ பார் பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டான். நேரே வந்து அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான் என்கிறார். ஆயினும் மூவேந்தர்களும் அவனை வஞ்சனையால் கொன்று விடுகின்றனர். புலன் அழுக்கற்று இருந்ததால் யாருக்கும் அஞ்சாத துணிவு சாணக்கியனுக்கும் கபிலனுக்கும் இருந்தது!

மண் குடமும் பொன் குடமும்

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று

அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் – சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால் – அவ்வையின் வாக்குண்டாம்

மண் குடம் உடைந்தால் குப்பைத் தொட்டியில் போடுவர். பொன் குடம் உடைந்தாலோ தங்கத்தை உருக்கி அழகான புதிய பொன் குடம் செய்து விடுவர். பெரியோர்களுக்கு, அவர்களுடைய முன்வினைப் பயனால் வறுமையோ, நோயோ வந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. மென்மேலும் புகழ் கூடும். அவர்கள் எப்போதும் மேலோர்களே என்கிறார் அவ்வையார். ரமண மகரிஷிக்கும், ராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் புற்று நோய் வந்தது. அவர்கள் மனம் கஷ்டப்படவும் இல்லை. அவர்கள் புஅழ் குன்றவும் இல்லை. பாரதியார் வறுமையில் வாடினார். ஆனால் சிறுமை என்னும் செயல்களில் இறங்கவில்லை. இன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் என்ற பெயரே எஞ்சி நிற்கிறது.

தமிழ்ப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவோம். எளிய நடை! அரிய கருத்து! அழகான உவமை! தமிழ் ஒரு உலக மகா பொக்கிஷம்!!!

வாழ்க மேன்மக்கள்  வளர்க தமிழ்!!

contact swami_48@yahoo.com

ஆருத்ரா தரிசனம்: அப்பர் அருளிய திருவாதிரை பதிகம்

nataraja, himalayan academy

5-1-2015 ஆருத்ரா தரிசனம்

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1545; தேதி 4 January, 2015.

 

ஆருத்ரா தரிசனம்: அப்பர் அருளிய திருவாதிரை பதிகம்

By ச.நாகராஜன்

அப்பர் அருளிய தேவாரம்

தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முழுவதிலும் இறை ரகசியங்கள் உள்ளடங்கி உள்ளன. அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நால்வகைப் பேறுகளையும் பெற தேவாரம் ஓதுதல் சுலபமான வழி.சைவர்களின் மந்திரமாக விளங்கும் தேவாரம் பாரதப் பண்பாட்டின் உயரிய ஆன்மீக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒப்பற்ற பக்தி இலக்கியம்.

தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!

திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை  முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி ‘ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!’, என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார்.

அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ்பெற்று இன்று  வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.

kali, tiruvadirai

Tiruvadirai Kali

இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

 

சிவபிரானின் ஆருத்ரா நட்சத்திரம்

ஆருத்ரா நட்சத்திரம் சிவபிரானுக்குரிய நட்சத்திரம். (இந்த நட்சத்திரத்தின் பெருமையை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய நட்சத்திர ரகசியங்கள் தொடரில் ஆதிரை உக்கிரம் என்ற கட்டுரையில் படித்து மகிழலாம்)

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.

ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடி மேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.

arudra kuuttu

Tiruvadirai Kuuttu

ராவணனின் அற்புதமான சிவ தாண்டவ ஸ்லோகம்

இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர். ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

(ராவணனின் சிவ தாண்டவத்தை யூடியூபில் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=CPVSLjBjxeY இதில் ஐந்து நிமிடம் 32 விநாடிகள் கேட்கலாம். https://www.youtube.com/watch?v=HJ3sb_GqBGg இதில் ஐந்து நிமிடம் 16 விநாடிகள் கேட்கலாம்.. https://www.youtube.com/watch?v=7jrpyQDBS-I இதில் ஒரு நிமிடம் 56 வினாடிகள் கேட்கலாம்; https://www.youtube.com/watch?v=e-GVlj7_UPQ இதில் 46 வினாடிகள் கேட்கலாம்.மாலை நேரத்தில் குறிப்பாக பிரதோஷத்தின் போது கேட்பது மிகவும் சிறந்தது)

திருவாதிரைப் பதிகம்

இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார், பார்ப்போமா:-

பாடல் எண் : 1
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 nataraja, fb

பாடல் எண் : 2
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு 
அணியான்  ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.   

பாடல் எண் : 3
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள்  ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 4
குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கன் ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 5
நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து  
அலமர்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 6
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால்  முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தையென்  அப்பன்  என்பார்கட்கு 
அம்மான்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.   

 

பாடல் எண் : 7
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும்                                                           அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

 nalvar and  natraj

பாடல் எண் : 8
முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

பாடல் எண் : 9
துன்பநும்மைத் தொழாதநாள்கள்  என்பாரும்
இன்பநும்மை ஏத்து நாள்கள்  என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்
அன்பன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 10
பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாடல்  ஆடல் அறாத செம்மாப்பார்ந்து 
ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன்றன்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.

அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

 ரமணர் அவதரித்த ஆருத்ரா நாள்

ரமண மஹரிஷி ஆருத்ரா தரிசன நாளன்று பிறந்தவர் என்பதால் இந்த திருவாதிரைப் பதிகத்தைக் கேட்டு ஆனந்தித்து உத்வேகம் பற்ற ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ரமணரின் மீது பக்திப் பாடல்களை இயற்றினார்.

சிவசக்தி அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ சத்ய சாயிபாபாவும் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவரே. விறல்மிண்ட நாயனார், அரிவாட்டாய நாயனார் கணநாத நாயனார், கூற்றுவ நாயனார், சடைய நாயனார் ஆகியோரும் திருவாதிரை நட்சத்திரத்தில் உதித்தவர்களே! இவர்களுள் சடைய நாயனார் மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசன நாளன்று உதித்தவர்.

ஆதிரையனின் அற்புத நடனத்தை நினைத்து, பெரும் சித்தியைத் தரவல்ல திருவாதிரைப் பதிகத்தை உணர்ந்து ஓதி சிவபிரானைத் துதித்து வணங்கி நலம் பெறுவோமாக!

contact swami_48@yahoo.com

Who are Great Men? What are the Criteria for Greatness?

 sukti_sudha_

Compiled  by London Swaminathan

Post No.1543; Dated  3rd  January 2015.

Sanskrit Sayings on Great Men and Greatness:

 

1.Wow! The hearts of the lofty remain unruffled like the ocean – Kathasarit sagara

Aksóbhyam hrdayam batéha mahataam ambhónidhiinaamiva

2.The noble live up to their promises – Subhasita ratna khanda manjusa & Kahavatratnakar p114

Angiikrtam sukrtinah paripaalayanti

3.Affluence breeds no arrogance in the good – Sakuntalam 5-12; Niti Sataka 61

Anuddhataah satpurusaah samrddhibhih

4.The pains taken to honour the great never go in vain Sisupaala vada 7-1

Abhiraaddhumaamaagataanaam bhavati mahatsu na nisphalah prayaasah

5.Even a stone, consecrated by the holy, turns godly – Hitopadesa 45

Asmaapi yaati dévatvam maahdbhih supratisthitam

panchatantra-5

6.The hearts of great men ruled by scriptural wisdom become easily composed – Svapna vasava datta 2-p42

Aagama pradhaanaani sulabha paryavasthaanaani mahaa purusa hrdayaani bhavanti

7.Mere darsana (sight) of the lofty in adversities, is akin to seeing the wish-yielding tree – Bharatmanjari 13-127-1700 p 677

Aapatsu mahataaméva darsanam kalpapaadapah

8.Do not provoke the honourable! – Granthasthagaathegaaku

Aaraadhyam na prakópayét

9.The wishes of the lofty are mighty! Sakuntalam, Act 7

Utsarpinii khalu mahataam praarthanaa

Svapna-Vasavadattam-Bhasa

10.Even a barren land turns fertile if the king is like Yudhistra – Pancharatra 1-s41

Uusaresvapi sasyam syaadyatra raajaa yudhisthirah

11.What is that the great do not part with?  — Brhat Katha Manjari

Kimadéyam mahaatmanaam

12.What is impossible for the noble?  Ramayana Manjari 4-12-450. P223

Kami asaadhyam mahaatmanaam

13.What can intimidate the noble? Kirataarjuniya 6-19

Kim ivaavasaadakaram aatmavataam

14.The saintly do not prolong their ire  –Bharata Manjari 3-14.794.p212

Kópasciram nahi mahaatmanaam

15.The noble are not attracted to the transient dangerous pleasures Subhasitaavali.299

Ksanaksayini saapaayé bhógé rajyanti nóttamaah

valmiki ramayana

16.Who can fathom the mysterious advent of the great? Bharat Manjari.1-14-687.p5

Guudham hi mahataam janma paricchéttum ka iisvarah

17.Great minds sacrifice their lives, if need be, but will never stray from the virtuous path – Kathasarit sagara

Tyajantyuttama sattvaa hi praanaanapi na satpatham

18.Even the saintly tolerate not repeated crimes! – Yoga vasistha.5-30-12

Na ksamanté mahaantópi paunahpunyéna duskriyaam

The satisfaction of the great will not go in vain — Kathasarit sagara

Na tósó mahataam mrsaa

19.The character of the noble remains unchanged even when their end is near.

Na praanaanté prakrti vikrtir jaayaté cóttamaanaam – Subhasita Ratna Bhaandaagaara.2-229. P51

20.The virtuous are never harsh to women

Na hi strisu mahaatmaanah kvacit kurvanti daarunam – Valmiki Ramayana 4-33-36

21.Great people are never eager for self praise  — Pancatantra

Nót mahaatmaanóstahanté hyaatmaanamupastótum

abhijnanasakuntalam_

22.The waning of the moon, due to the gods having a fill of her ambrosia, is more appreciable than her waxing! – Raghuvamsa 5-16

Paryaaptapitasya suraih himaamsoh kalaaksayah slaagyataró hi vrddhahéh

23.The wrath of the noble has submission as its antidote – Raghuvamsa4-64

Pranipaatapratikaarah samrambhó hi mahaatmanaam

24.A base man is unable to retort to a noble man – Valmiki Ramayana 4-18-46

Prativaktum prakrsté hi naapakrstastu saknuyaat

25.The saintly are resolute even in deluge – Bhaminivilaasa 92

Pralayépyacalaa mahaatmaanah

26.Even after having accomplished a lot, the great consider it to be little  – kathasarit sagara

Bahukrtvaapi manyanté svalpaméva mahaasayaah

27.The words of the great, are to be obeyed – yet it seldom happens – Kiratarjuniya p.73

Mahataam vacanam kaaryam na tvévaacaritam kvacit

kumara

28.Everything about the great is superlative Sisupalavadha 13-17

Mahataam hi sarvamathavaa janaatigam

29.Gods delight in waylaying the noble Brhatkathaakosa 11-55

Mahataamuparódhéna prasiidanti hi dévataah

30.Who indeed is not uplifted by association with the great? – Panchatantra 3-60

Mahaajanasya samparkah kasya nónnatikaarakah

31.The right path is the one paved by the great — Mahabharata 3.117/313 & Subhasita Ratna Bhaandaagaara 3-855.p173

Mahaajanó yéna gatah sa panthaa

32.The noble bless even their enemies who seek refuge – Sisupalavadha 2-104

Mahaatmaanó anugrahanti bhajamaanaan ripunaapi

33.The noble too seek fame – Sanskrit saying

Mahaatmaanópi pracaaramichchanti

34.Like places of pilgrimage, the holy ones possess an ineffable aura! Uttara Rama Carita  6.s11

Mahaarghastirthaanaamiva hi mahataam kopyatisayah

35.By nature, the great are men of few words — Sisupalavadha 2-13

Mahiyaamsah prakrtyaa mitabhasinah

36.The residences of saint are shrines indeed! Kumarasambhava 6-56

Yadadhyaasitamarha dbhih taddhi tiirtham pracaksaté

Kalidas-Cinema-Song-Book

37.The actions of the leaders are emulated by the rest – Bhagavad Gita 3-21

Yadyad aacarati  srésthah tattadévétaró janah

38.For greatness rely on the great  — Satopadesa prabhandha

Srayénmahaantam ahattvaaya

39.Help rendered to the great bears fruit anon! – Meghaduta 1-17

Satkaaraadrah phalati na cirénópakaró mahatsu

40.The wise view both prosperity and adversity with equanimity – Panchatantra 2-7

Sampattau ca vipattau ca mahataamékaruupataa

41.The great alone brave great suffering and gain achievements! Kathasaritsagara

Syaanmahataaméva mahaaklésah  tathoodayah  —

nataka

42.It is the nature of the good-hearted to endeavour for others – Ramayanamanjari 4-5-198. P-203

Svabhaava éva mahataam parakaaryaarthamudyamah

contact swami_48@yahoo.com

சித்திரக் கவி: சுழிகுளம் – 1

suzi kulam 1

தமிழ் என்னும் விந்தை! -22

சித்திரக் கவி: சுழிகுளம் – 1

 

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1542; தேதி 3 January, 2015.

 

சித்திர கவிகளில் சுழி குளம் இன்னொரு வகையாகும்.சுழி குளம் எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே                                                

விலையரு மாநற்பா                                           

முயல்வ துறுநர்                                                    

திருவழிந்து மாயா”

 

இந்தச் செய்யுளின் பொருள்:-

கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே                                        விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;   முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்

திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

picture is given at the top.

அடுத்து இன்னொரு பாடல்:

“மதந விராகா வாமா                                                

 தநத சகாவே நீவா                                                

 நததந தாதா வேகா                                                  

 விசந விரோதா காரா”

 

 

இந்தச் செய்யுளின் பொருள்:-                                      மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!            வாமா – ஒளியை உடையவனே!                                    தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!                                நத் அதந தாதா – மேகத்தினு அதிகமான கொடையாளியே!          விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே!  (இதன் இன்னொரு பொருள்- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)                                                     நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

இந்தச் செய்யுள் அமைந்த சித்திரத்தைக் கீழே காணலாம்:

suzikulam 2

கிடைமட்டமாக செய்யுளின் நான்கு அடிகளும் வருவதை முதலில் காணலாம். பின்னர் எட்டு செங்குத்தான வரிசைகளில் மேலிருந்து கீழாக முதல் வரிசையிலும் அடுத்து கீழிருந்து மேலாக எட்டாம் வரிசையிலும் இப்படி மாறி மாறி 2,7,3,6,4,5 ஆகிய வரிசைகளில் செய்யுள் அமைவதைக் கண்டு இன்புறலாம்.

இன்னும் சில சுழி குள வகைப் பாடல்களை மேலே காண்போம்

  • தொடரும்