The Big and the Small: Conversation between the River and the Ocean! (Post No. 2544)

IMG_2946

Compiled by London swaminathan

 

Date: 15  February 2016

 

Post No. 2544

 

Time uploaded in London :–  14-26

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact  swami_48@yahoo.com)

IMG_9241

It was the time of autumn floods. Every stream poured into the river, which swelled in its turbid course. The banks grew so apart that it was impossible to tell a cow from a house.

 

The spirit of the river shouted for joy that beauty of all the earth was gathered to himself. Down with the stream he journeyed east until he reached the ocean. There looking eastward and seeing no limit to its waves, his face fell. And as he gazed over the expanse he said to the spirit of the ocean:

“A common proverb says that he who hears half the truth thinks no one is equal to himself. And so it is with me.  When formerly I heard people decrying the learning of Confucius or the heroism of Po, I did not believe, but now that I see your vastness – Ah, if I had not reached your dwelling I should have forever been a laughing stock to those who knew better!”

 

To this the ocean spirit replied:

“You cannot talk of the ocean to a frog in a well – the creature of narrow bounds. Nor of ice to summer flies – the ephemera of a day.  You cannot speak of the Law to a pedant. His limits are narrow. But now that you have emerged – that you have seen the great ocean, you know your narrowness, and I may speak of great principles.

 

Nothing beneath the heaven is greater than the ocean. All water flows into it, yet it does not overflow. It is drained yet does not empty. It knows no floods or droughts and thus greater than mere rivers and brooks – though I, its spirit, dare not boast, for I get my shape from the universe, my vital power from the negative and positive principles governing all. In the universe I am as a little stone or a bush on a vast mountain. And of all who inhabit the earth man is but one. Is not he compared with all creation as the tip of  a hair as small?”

IMG_3030

“By no means. Dimensions are limitless. Time has no bounds. Conditions vary. Terms are not final. How then can one say that the tip of a hair is the last word on littleness or the universe the last word on the vastness?”

—-Chuang Tzu (China)

 

 

Never Lose Hope! (Post No.2543)

two pillars

Compiled by London swaminathan

 

Date: 15  February 2016

 

Post No. 2543

 

Time uploaded in London :–  9-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Escape may lie between this pillar and that!

 

An innocent man was condemned to death by an unjust governor, and when the executioner had bound him to a pillar and was about to cut off his head, the victim begged he might be bound to the next pillar instead.

 

The executioner laughed at him, saying “what can you hope to gain so brief an interval? You might just as well let me finish my job.”

But eventually he gave way to the man’s entreaties; and while he was engaged in untying him and fastening him to the next pillar, the king chanced to pass by and asked the meaning of the large crowd that had gathered. On being told, he sent for the condemned man, who was able to convince him of his innocence, and so escaped death.

 

Xxx

cow

May God always bless us with such evil!

A pious man bought a cow in the market and set out for his home. He was followed by a thief who planned to steal his cow. On the way the thief fell in another man who revealed himself as a demon who planned to take the pious man’s life.

 

As they drew near to the latter’s house, where the cow was now tied up, it occurred to the thief that if the demon killed the pious man first, his family may be aroused, and it would be impossible to steal the cow. At the same time the demon thought that, f the thief stole the cow first, the pious man would be awakened by the bellowing, and so would escape death.

 

Each began to ask the other to wait and take the second place, and eventually they came to blows. The thief began to shout, ‘O Pious man, here is a demon who has come to take your life!’ while the demon shouted back ‘O Pious man, here is a thief who has come to steal your cow!’

 

In the end the man and his family were aroused, the thief and the demon took to their heels, and the pious man prayed, “May God always bless us with such evil” for the benefit of his family.

–Subham–

மெத்தக் கற்ற எத்தன் சிட்டாய்ப் பறந்துபோனான்! (Post No.2542)

rifle

Compiled by london swaminathan

Post No. 2542

Date: 15th February 2016

 

Time uploaded in London:- 9-07 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ஜோக்.

ஆதாரம்: விநோத விகட சிந்தாமணி;

அனுப்பியவர்: சென்னை ச. சீனிவாசன்

 

“சாமத்தில் வயிற்றுச் சாப்பாட்டுக்கு வழியின்றி, தந்திரம் ஒன்றும் தோன்றாமல்,சென்னையன் என்ற கருமான் பழைய துப்பாக்கி ஒன்றைச் சம்பாதித்து, கையிற்பிடித்து, அடர்ந்து படர்ந்த சாலையின்கண், துப்பாக்கியும் கையுமாய் உலவிக்கொண்டிருக்கையில், சங்கிலிபோல தங்கக் கொலுசு அரை ஞாணும்  நிறைய வெண்டயம் போல் வளைவுள்ள  விசிறிமுருகுகளையும் அணிந்து கையில் பணப்பையுடன் ஒரு செட்டியைக் கண்டு சந்தோஷத்துடன் கருமான், கையிலுள்ள துப்பாக்கியால் செட்டியைச் சுடுவது போலக் குறிவைத்து, “செட்டி மகனே! உன் கெட்டிக் கொலுசையும், வட்ட முருக்கையும், பொட்டிப் பணத்தையும் கொட்டிக்கொடுக்கிறாயா? சுட்டுப்போடட்டுமா? என்று பயமுறுத்திக்கேட்க, அதற்குச் செட்டி மகன், கெட்டியுக்தி பண்ணி, உன் துப்பாக்கியை எனக்குக் கொடுத்துவிட்டால், என் சொத்தனைத்தையும் உனக்குத் தருகிறேன் என்றான்.

(இதுவரை ஒரே வாக்கியம்; பழையகால நடை!!!!!!!!!!!!!!!!!)

 

கருமான் சம்மதித்து, சொத்தையெல்லாம்  பறித்துக்கொண்டு துப்பாக்கியைக் கொடுத்தான். அதைக் கையிற்பிடித்து, “பட்டி மகனே! என் சொத்து முழுவதையும் கட்டிவைக்கிறாயா? அல்லது உன்னைச் சுட்டுப் போடட்டுமா? என்று செட்டியார் கேட்க, அதற்குக் கருமான், “செட்டியாரே! சுட்டுப் போட அதில் மருந்திருந்தாலன்றோ? என்று சொல்லிக்கொண்டு வந்தவழியே ஓட்டமெடுத்தான். செட்டியார் ஏமாந்து, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன் மதியீனத்தை நினைத்து துக்கித்தார்.

–சுபம்–

கும்பகோணம் கோவிந்தசெட்டி சொன்னது எல்லாம் பலித்தது: விவேகாநந்தர் (Post No 2541)

viveka

Written by S Nagarajan

 

Date: 15  February 2016

 

Post No. 2541

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

 

 

ச.நாகராஜன்

 

 talks-with-swami-vivekananda-400x400-imadzmseukfsp66n

தாயைப் பற்றிய கவலை

 

மேலை நாடுகளில் அற்புதங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஸ்வாமிஜி கூறி முடித்த போது அங்கு அருகிலிருந்த ஸ்வாமி யோகானந்தர், ஸ்வாமிஜியிடம் உங்கள் சென்னை அநுபவத்தை இந்த சிஷ்யருக்குச் சொல்லுங்களேன்” என்றார்.

 

உடனே ஸ்வாமிஜி தனது சென்னை அனுபவத்தைக் கூறலானார்.

ஸ்வாமிஜி சென்னையில் இருந்த சமயம் அது. அவர் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்த மன்மத நாத் பட்டாசார்யாவுடன் இருந்து வந்தார். ஒரு நாள் இரவு அவரது தாயார் இறந்து விட்டது போல அவர் கனவு கண்டார். இது

அவர் மனதை பெரிதும் பாதித்தது.மேலை நாடு செல்வதற்காக மும்முரமான ஏற்பாடுகள் வேறு அப்போது நடந்து கொண்டிருந்தது.ஆகவே அவர் மனம் ஊசலாடியது.

 

 

ஸ்வாமிஜி தனது கவலையை மன்மத பாபுவிடம் தெரிவித்தார். உடனே அவர் உண்மையான நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கல்கத்தாவிற்குத் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அத்துடன் ஸ்வாமிஜியின் கவலையைப் போக்க அவர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் என்னும் கிராமத்தில் குறி சொல்வதில் வல்லவரான கோவிந்த செட்டி என்று ஒருவர் இருப்பதாகவும்  அவரிடம் சென்று குறி கேட்கலாம் என்றும் சொன்னார்.

 

கோவிந்த செட்டி மிகவும் பிரபலமானவர். எதிர்காலத்தைச் சொல்ல வல்லவர். அவரை மைசூர் மன்னர், சென்னை மாகாண கவர்னர் எனப் பலரும் கண்டு குறி கேட்டதுண்டு! அவர் சென்றால் ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படிப்பட்டவரைச் சந்திக்க ஸ்வாமிஜியும் ஒத்துக் கொண்டார்.

 

vivek world

கும்பகோணப் பயணம்

 

அளசிங்கர், மன்மத பாபு, ஸ்வாமிஜி, இன்னுமொரு அன்பர் ஆகிய நால்வர் அடங்கிய குழு ரயிலில் ஏறி கும்பகோணம் சென்றது. அங்கிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வலங்கைமான் சென்று கோவிந்த செட்டியை அவர்கள் சந்தித்தனர். அவர் ஒரு சுடுகாட்டின் அருகில் இருந்தார்.

 

பயமுறுத்தும் தோற்றம் அளித்த அவரைப் பார்க்கச் சற்று பயமாகத் தான் இருந்தது. அங்கிருந்த அவரது உதவியாளர்கள் அவர் அனைத்து ஆவிகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்ட பெரும் சக்தியைக் கொண்டவர் என்று கூறினர்.

வந்தவர்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்ப யத்தனித்தனர்.

 

அப்போது கோவிந்த செட்டி அவர்களை இருக்குமாறு கூறினார்.

பின்னர் ஸ்வாமிஜியை அழைத்தார்.

 

சில படங்களை முதலில் வரைந்த அவர் மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அளசிங்கர் அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

 

 

கோவிந்த செட்டி கூறிய எதிர்காலக் கணிப்பு

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜியின் பெயர், அவரது வமிசாவளி, முன்னோர்களின் பெயர் ஆகிய அனைத்தையும் கூறினார். ஸ்வாமிஜியின் சஞ்சாரம் முழுவதும் ராமகிருஷ்ணர் அவருடன் கூடவே இருப்பதையும் அவர் உரைத்தார். ஸ்வாமிஜியின் தாயார் நலமாக இருக்கும் நற்செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு மதத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைதூர நாடுகளுக்குச் ஸ்வாமிஜி செல்வார் என்றும் அவர் கூறினார்.

இந்த நற்செய்திகளை எல்லாம் கேட்டு குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.

 

 

இதைச் சொல்லி முடித்த ஸ்வாமிஜி யோகானந்தர் பக்கம் திரும்பி, “அந்த மனிதர் சொன்ன அனைத்தும் அப்படியே பலித்தது” என்று கூறி முடித்தார்.

 

 

யோகானந்தர் இப்போது ஸ்வாமிஜியை நோக்கி, “இதையெல்லாம் முன்னர் நீங்கள் நம்புவதில்லை என்பதால் இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது போலும்” என்றார்.

 

 

உடனே ஸ்வாமிஜி, “ எதையும் நேரடி நிரூபணம் இல்லாமல் நம்புகின்ற முட்டாள் நான் இல்லை. ஆனால் மகாமாயையின் ஆளுகைக்குள் வந்தால் நான் பார்த்த மாயாஜால மர்மங்கள் எத்தனையோ! அடடா!! என்ன பேச்சைப் பேசிக்

 

கொண்டிருக்கிறோம் இந்த நாள் முழுவதும்! பிசாசு, ஆவிகளைப் பற்றி! பேயைப் பற்றி பேசுபவர்கள் பேயாகவே ஆகி விடுவார்கள். ‘நான் ஆத்மன்’ என்று நினைப்பவர்கள் அதாக ஆவார்கள்” என்று கூறி நிறுத்தினார்.

 

தேவையற்ற குப்பைகளால் உங்கள் மனதை நிரப்பாதீர்கள் என்று சீடர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தார் அவர்.

இரவு வெகு நேரம் ஆகவே, சீடர்கள் கலைந்தனர்.

 viveka lanka

கோவிந்த செட்டிக்கு ஸ்வாமிஜியின் அருள்

 

இனி கோவிந்த செட்டி சம்பவத்திற்கு மீண்டும் வந்து பின்னர் நடந்த ஒரு சம்பவத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜிக்கு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒரு தந்தி வந்தது – அவரது அன்னை நலமாய் இருப்பதாக!

கோவிந்த செட்டி கூறிய அனைத்தும் அப்படியே நடந்தது.

உலகப் புகழ் பெற்று ஸ்வாமிஜி இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஊர் ஊராக வரவேற்பு, ஆரவாரம், கோலாகலம்!

 

கும்பகோணத்திற்கு விஜயம் செய்த ஸ்வாமிஜிக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

கோவிந்த செட்டியைப் பார்த்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

 

வரவேற்புக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் நிற்பதைப் பார்த்தார் ஸ்வாமிஜி.

 

அவரை அழைத்தார். தன்னைத் தனியே வந்து சந்திக்குமாறு கூறினார் ஸ்வாமிஜி. அவரும் அப்படியே தனியே பின்னர் வந்தார்.

அவரிடம் ஸ்வாமிஜி,” உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் பணமும் புகழையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக்ம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அடி கூட நீங்கள் முன்னேறவில்லையே!. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்களே! இது தானே உண்மை! கடவுளை நோக்கி என்றாவது உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா!” என்றார்.

 

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜி கூறியதில் இருந்த உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் ஸ்வாமிஜி,” கடவுளை நாடாவிட்டால் இந்த சக்திகளால் பயன் தான் என்ன! இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன் பிறகு இவை எல்லாம் பயனற்றதாக ஆகி விடும்” என்று அருளினார்.

 

 

பின்னர் ஸ்வாமிஜி கோவிந்த செட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

என்ன ஆச்சரியம்! அன்றிலிருந்து கோவிந்த செட்டியின் அற்புத ஆற்றல்கள் அவரை விட்டு அகன்றன. இறை பக்தியிலேயே அவர் ஆழ்ந்து உலகைத் துறந்தவராக அவர் வாழ ஆரம்பித்தார்.

 

(ஸ்வாமிஜி தான் வாழ்ந்த நாள் முழுவதும் அன்னை மீது பக்தியும் மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.

39 ஆண்டுகள் 5 மாதங்கள் 24 நாட்கள் வாழ்ந்து 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நான்காம் தேதி சமாதி அடைந்த ஸ்வாமிஜியின் மறைவு கேட்டு அன்னை புவனேஸ்வரி தேவி மாளா துக்கத்துடன் அழுது புரண்டார். அவரை மடத்து துறவிகளும் ஏனையோரும் சமாதானப் படுத்த முடிந்தமட்டில் முயன்றனர்.)          -தொடரும்

 

குறிப்பு: மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க “TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 113 முதல் 116ஆம் பக்கம் முடிய உள்ள பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

 

–சுபம்–

Priest and the Emperor (Post No.2540)

chinese

Compiled by london swaminathan

Post No. 2540

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 17-10

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

Story from China

An old, lame priest was so renowned for his self-denying liberality that the Emperor Chien Lung himself paid him a visit. After some conversation the emperor presented him with a valuable pearl which the old man immediately bestowed on a beggar in the crowd.

 

His Majesty was somewhat taken aback at this act of rudeness and asked it was his habit to give everything away in the same manner. On receiving a reply in the affirmative, the Emperor added, “Even down to the crutch you lean upon”.

 

“Ah”, said the priest, “it is written that the superior man does not covet what his friend cannot spare”.

“But supposing”, said the Emperor, “he was not a superior man?”

“In that case”, answered the priest, “you could not expect me to be his friends.”

 

Xxx

Cheese-Bread

God is the Provider, but he needs a nudge (story from Persia)

 

In other words, God helps those help themselves. Two friends were disputing, one of them maintaining that God would provide all one’s needs, the other arguing that one had to work for one’s living. At length to settle the matter, the first man went and sat in a corner of the mosque to wait his sustenance from god. Two days passed, and then three, and still nothing came from heaven or earth.

 

But on the evening of third day three villagers came into the mosque to eat their bread and cheese. As they were packing up the reminder of the food before leaving, our friend, seeing his last chance about to disappear, coughed gently. The villagers noticed him and taking pity on his haggard appearance, gave him the remains of their food. The man went back to his friend in all humility “God is indeed the Provider”, he admitted, “but he needs a nudge.”

 

Xxx

 

Earth-globe-with-people-Stock-Vector

World is God (Story from India)

 

A man living in this world was disgusted with life, and renouncing it, went to a solitary spot and dwelt in a cave praying God to give His Darshan. He fasted and prayed for a long period and just when he was despairing of seeing God, He appeared before him saying, “Lo, I am here”. What did the man see before him? God had come to him in the form of the world itself which he had renounced in search of Him. On having this vision the man returned to the world and saw God everywhere in it and ever remained filled with bliss and peace.

 

–Subham–

 

108 உபநிஷத்துகளின் பட்டியல் (Post No. 2539)

IMG_2976

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

IMG_2980

 

IMG_2981

 

IMG_2982

 

IMG_2984

IMG_2986

 

IMG_2987

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

 

 

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

மூலிகைப் போர்! (Post No 2538)

IMG_6701

Written by S Nagarajan

 

Date: 14  February 2016

 

Post No. 2538

 

Time uploaded in London :–  6-57  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

மூலிகைப் போர்!

.நாகராஜன்

 

 

IMG_6703

ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்                         – சுப்ரா கிஷன்

                              

கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்?  மூலிகைப் போரில்!

பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.

 

இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.

ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

 

1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து,  பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி  ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.

 

2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.

இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.

இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.

 

லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!

 

உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார்.  உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இந்திய அரசின் நிறுவனமான  சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.

 

இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology)  சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக  20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.

IMG_6704 - Copy

இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.

இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!

 

இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!

 

ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!

அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist)  ஜார்ஜ் குவியே         ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார்.  உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

 

தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.

IMG_6707

மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.

 

தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.

 

பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

 

எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!

IMG_6708

*******

 

 

 

Vows made in Storms are forgotten in Calms! (Post No.2537)

india-500-rupee-note

 

Compiled by london swaminathan

 

Post No. 2537

Date: 13th February 2016

 

Time uploaded in London:- 16-43

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

1.Promises are like pie-crust, made to be broken

2.Eggs and oaths are easily broken

3.Promises are either broken or kept

4.Vows made in storms are forgotten in calms

5.A man apt to promise, is apt to forget

 

Promise

6.The day obliterates the promise of the night (Arabic Proverb)

7.Men may promise more in a day than they will fulfil in a year

8.Many fair promises in marriage making, but few in tocher paying (tocher means dowry)

9.Words and feathers the wind carries away

10.Words are but wind

 

promise (2)

11.Promise is debt

12.An ox is taken by the horns, and a man by his word

13.A man that breaks his word, bids others be false to him

14.To him that breaks his trust, let trust be broken

15.He loses his thanks who promises and delays

 

promises_made

16.He that promises too much, means nothing

17.To offer much is a kind of denial

18.Who gives to all, denies all

19.Promises may make friends, but it is performances keep them

20.One acre of performance is worth twenty of the land of promise

 

mind-blowing-facts-about-indian-currency-9-638

21.Between promising and performing, a man may marry his daughter

22.A long tongue is a sign of a short hand (meaning is  promises made easily are seldom kept).

–Subham–

 

பேசத் ‘தெரிந்தவன்’! (Post No.2536)

Politics 074-0089

Compiled by london swaminathan

 

Post No. 2536

Date: 13th February 2016

 

Time uploaded in London:- 8-30 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஜோக்குகள்; சிரிப்பு வராவிட்டால் என்னைக் கோவிக்காதீர்கள்!

 

ஒரு பிரசங்கியின் பிரசங்கத்தைக் (சொற்பொழிவு) கேட்க அநேக ஜனங்கள் கூடினார்கள். முதலில் பிரசங்கியார் (சொற்பொழிவாளர்) நான் பேசப்போகும் விஷயம் தெரியுமா? என்றார். ஜனங்கள் தெரியாதென்றனர். அப்படியானால் நான் சொல்லிப் பிரயோஜனமில்லை என்று சொல்லி பிரசங்க மேடையைவிட்டுக் கீழே இறங்கினார்.

 

சிறிது நேரம் பொறுத்து மறுபடியும்  மேடையேறி, “இப்பொழுது நான் கூறுவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். ஜனங்கள் தெரியும் என்றனர்.  அப்படியானால் நான் கூற வேண்டியதில்லை என்று சொல்லி, முன்போல் கீழே இறங்கி ஒதுங்கி நின்றார்.

 

சிறிது நேரம் கழித்து மீண்டும் மேடையேறி, “இப்பொழுது நான் சொல்லப்போவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். சிலர் தெரியுமென்றும், வேறு சிலர் தெரியாதென்றும் சொன்னார்கள். “அப்படியானால் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கீழே இறங்கிப் போய்விட்டார்.

Xxx

donkey

இவனா எனது மகன்?

ஒருவன் தன் மகன் மீது கோபித்துக்கொண்டு, அவனை நடுத்தெருவில், “கழுதை மகனே!” என்று அடிக்க ஆரம்பித்தான். உடனே தெருவில் போன கழுதை ஒன்று, “அட! இவனா எனது மகன்?” – என்று கூச்சலிடத் துவங்கியதாம்.

 

Xxx

 

தாடியைப் பறிகொடுத்த முட்டாள்!

ஒருவன் இரவில், கதைப் புத்தகமெடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். அதில் நீண்ட தாடியும் சின்னத் தலையும் யாருக்குண்டோ, அவன் முட்டாளென்று எழுதியிருந்தது. அதைக்கண்டு தன் தலையையும், தாடியையும் தடவிப்பார்த்து அப்படியேயிருக்க, “ ஓகோ, ஈதென்ன ஆச்சரியம்1 நாம் தலையைப் பெருக்க  முடியாது, தாடியை வேணுமென்றால் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் அறிவாளியாகலாமென்று எண்ணி கததரிக்கோலைத் தேடினான்; கிடைக்கவில்லை.

 

கடைசியில் அவன் தாடியைக் குறைப்பதற்காக, படுக்கைக்கு அருகிலிருந்த தீபத்தில் தாடியின் நுனியைக் காட்டினான். தாடி முழுதும் குப்பென்று பற்றி எரிந்து, முகம் வெந்து, தாடி கோவிந்தாவாய்ப் போயிற்று. புத்தகத்தில் சொல்லியிருப்பது மெய்தான், நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க சொல்லிப்புட்டாங்க’ என்று நினைத்துக் கொண்டான்.

beard

Xxx

எனக்கு அம்மா வேண்டாம், ஐயா!

ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின் வாசலில் நின்று, அம்மா, பசிக்குதே; கொஞ்சம் சோறு இருந்தா போடுங்க” என்றான்.  வீட்டெஜமானன் அம்மா, வீட்டில் இல்லை, போ, போ” என்றான். அதற்குப் பிச்சைக்காரன், “நான் பிச்சை கேட்டேனே தவிர, அம்மாவைக் கேட்கவில்லை, ஐயா” என்று கூறிச் சென்றான்.

–சுபம்-

 

பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–