விமானத்தில் பறக்கும்போது நோபல் பரிசு கிடைத்தது!(Post No.2797)

live science

Written  BY S NAGARAJAN
Date: 10 May 2016

 

Post No. 2797

 

 

Time uploaded in London :–  6-42 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 6-5-2016 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியான  கட்டுரை

பிரபல டைரக்டர் கே.பாக்யாராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரந்தோறும் வெளி வரும் சிறந்த பத்திரிகை பாக்யா.

சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி bhagyaweek@gmail.com

 

 

மன்னிக்க வேண்டுகிறேன்!

.நாகராஜன்

 

 sarh miller1

“வாழ்க்கையில் பிளவு பட்ட எதையும் ஒட்டிவிடும் சூப்பர் கோந்து மன்னிப்பு தான்! அது எதையும் ரிப்பேர் செய்து விடும்!” –லின் ஜான்ஸ்டன்

 

உலகின் பிரபல அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் (Live Science) உலகிலுள்ள அறிவியல் கட்டுரைகளிலெல்லாம் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் முத்திரைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்திய ஏப்ரல் 2016, இரண்டாவது வார இதழில் அது வெளியிட்டுள்ள கட்டுரை ‘சாரி ஸயின்ஸ்’ (Sorry Science) பற்றியது. அதாவது மன்னிப்பு பற்றிய அறிவியல் நோக்கிலான கட்டுரை தான் சாரி ஸயின்ஸ் கட்டுரை!. சாரா மில்லர் என்பவர் இதை எழுதியுள்ளார்.

 

 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த மன்னிப்பில் ஆறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்கிறது அறிவியல் ஆய்வு. அமெரிக்காவிலுள்ள ஓஹையோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராய் லெவிகி (Roy Lewicki),” மன்னிப்பு நிச்சயம் வேலை செய்யும் – அதில் ஆறு அம்சங்கள் இருந்தால்” என்கிறார். அவர் தான் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய குழுவின் தலைவர்.

 

 

மன்னிப்பு கேட்பதில் முதலாவது அம்சம் தவறுக்கான பொறுப்பை தான் ஏற்பதாகும். “நான் தான் தவறு செய்தேன்.,” என்று ஒத்துக் கொள்ளும் போது பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் மேம்படுகிறது; ஆறுதல் அடைகிறது.

அடுத்ததாக தவறினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முன்வருவது. ’ஏற்பட்ட ‘டாமேஜை’ சரி செய்கிறேன் என்று சொல்லும் போது எதிராளியின் மனம் மிகவும் சமாதானப்பட்டு விடும்.

 

 

மன்னிப்பு கேட்கும் போது கேட்பவருக்குப் புரியும் அதே மொழியில் கேட்க வேண்டும். உலகில் எந்த  மொழியினராக இருந்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள், “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சொல்வது தான்!

மன்னிப்பை முன் வைக்கும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பை நீங்கள் பாதிக்கப்பட்டவருடன் கொள்ள வேண்டும். உங்களின் தவறினால் அவருக்கு எப்படிப்பட்ட வலி அல்லது வேதனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் வேதனைப்படுவதை அவர் உணர வேண்டும்,

 

 

அடுத்து பாதிக்கப்பட்டவர் சொல்வதை முழுதுமாக அமைதியாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

கடைசியான அம்சம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்பது தான்!

இந்த ஆய்வில் 755 பேர் பங்கேற்றனர்.

முதலாவது சோதனையில் 333 பேர்கள் பங்கேற்றனர். மன்னிப்பின் ஆறு அம்சங்களோ அல்லது அவற்றில் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுக்கப்பட்டு அதை எப்படி அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

இரண்டாவது சோதனையில் 422 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்று முதல் ஆறு வரையிலான மன்னிப்பு அம்சங்களை படிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு எப்படி அதை அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

முதல் சோதனையில் மன்னிப்பின் எத்தனை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று முன்னமேயே சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாம் சோதனையில் எத்தனை அம்சங்கள் மன்னிப்பு கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படவில்லை.

ஆறு அம்சங்களையும் கொண்ட மன்னிப்பே சிறந்த மன்னிப்பாக அனைவராலும் கருதப்பட்டதை சோதனை முடிவு தெரிவித்தது.

 

மன்னிக்க வேண்டுகிறேன் என்பதைச் சொல்லும் போது ஆறு அம்சங்களைச் சிந்திக்க வேண்டுகிறேன் என்று கூறிய ஆய்வின் தலைவர் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்த ஆய்வின் குறையாக ஒன்றையும் இது பற்றி சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த சோதனையில் மன்னிப்பு என்பது எழுதிய வாசகங்களைப் படிப்பதாக மட்டும் அமைந்துள்ளது. நேரடியாக மன்னிப்பு கேட்பது போல அமையவில்லை.

 

 

நேருக்கு நேர் கண்ணொடு கண் பேசும் மொழி இதில் இல்லை. அந்த உணர்வு பூர்வமான வெளிப்பாடு மன்னிப்பு கேட்பதில் தலையாய அம்சமாகும் என்று அந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்பதைப் பற்றி ஆய்வு நடத்திய இன்னொரு உளவியல் நிபுணரான ஃபெர் (Fehr) இது பற்றி ஏராளமான ஆய்வுப் பேப்பர்களை வெளியிட்டுள்ளார்.

 

 

அவர், “மன்னிப்பு என்பது ஒருவரின் செயலையும் அந்த நபரையும் இரண்டாக பிரிவு படுத்திக் காட்டும் ஒன்று” என்கிறார்.

“நான் செய்த செயல் மோசம் தான். ஆனால் நான் கெட்ட ஆள் இல்லை. இதை உளமாரச் சொல்கிறேன்.” என்று ஒருவர் சொல்லும் போது பாதிக்கப்பட்டவரின் மனம் சமனம் அடைந்து மன்னிப்பை நல்கும் மனப்பான்மையை அடைகிறது என்கிறார் அவர்.

 

 

மன்னிப்பைக் கேட்கும் சமயமும் முக்கியமான ஒன்று என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஆக மன்னிப்பு கேட்பதைக் கூட அறிவியல் ரீதியாகக் கேட்கலாம். மற்றவர்களைச் சுலபமாகச் சமாதானப்படுத்தலாம்!

200px-Jerome_Karle,_2009

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரசாயனத்தில் 1985ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம் கார்லே (Dr Jerome Karle- தோற்றம் 18-6-1918 மறைவு 6-6-2013)

அவர் இஸபெல்லா லுகோஸ்கி என்ற இளம் பெண்ணை இரசாயன சோதனைக்கூடத்தில் 1940 ஆண்டு சந்தித்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக 1942இல் அவர் இஸபெல்லாவை மணந்தார். எக்ஸ் ரே கிறிஸ்டலோகிராபி துறையில் இருவரும் இரு வேறு ஆராய்ச்சிகளைச் செய்தனர்.

 

 

நோபல் பரிசு பெற்ற போது அதில் தன் மனைவிக்கு உரிய கௌரவம் தரப்படவில்லையே என்று வருத்தமுற்றார் அவர்.

நோபல் பரிசு பெற்ற செய்தி அவருக்கு ஒரு பெரும் ஆச்சரியமூட்டும் செய்தியாகவே அமைந்தது.

அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்த போது அவர் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.

 

திடீரென்று விமான பைலட் ஒரு செய்தியை மைக்கில் அறிவித்தார்.

“நாம் இந்த தருணத்தில் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டுள்ளோம். நம்முடன் இப்போது தான் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்முடன் இதோ இந்த விமானத்தில் இருக்கிறார். அவருக்கே தனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பது இதுவரை தெரியாது”

விமானிக்குக் கிடைத்த செய்தியை அவர் சுடச்சுடச் சொல்ல அனைவரும் பரபரப்புடன் ஆரவாரித்தனர்.

 

 

விமானி தொடர்ந்தார்: “உண்மையில் இந்த நோபல் பரிசு 29-சி சீட்டில் அமர்ந்திருக்கும் டாக்டர் ஜெரோம் கார்லேக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தியை அவர் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர் மூனிச்சிலிருந்து இன்று காலை  கிளம்பி விட்டார். ஆகவே இப்போது இந்த நல்ல செய்தியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”

 

 

பயணிகள் எல்லோரும் குதூகலப்பட ஜெரோமுக்கு விமானி சாம்பெய்ன் கொடுத்து விசேஷமாக கௌரவித்தார்.
உயரத்தில் பறந்தவருக்கு உயரிய விருது கிடைத்த செய்தியை உரிய விதத்தில் அளித்தார் விமானி!

*************

 

 

 

Two Types of Thieves! Two Types of Knowledge! (Post No.2796)

happy-valmiki-day08

Written by london swaminathan

 

Date: 9 May 2016

 

Post No. 2796

 

Time uploaded in London :–  21-14

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Sanskrit literature gives us very interesting information about thieves, knowledge and charity.

Thieves are of two types:-

Prakaasa – explicit

Aprakaasa – invisible

The Sanskrit saying goes thus:-

“Prakaasaascaprakaasaasca dvividhaastaskaraah smrutaah”

 

My view is corrupt politicians are day light robbers ie. Prakaasa

Night time thieves are invisible i.e Aprakaasa

 

xxx

Knowledge

Knowledge is said to be of two types: Saabdika – verbal (even Vedic and other Sastras transmitted verbally) and Anubhava – experience.

In the olden days lot of things were learnt on the job i.e. through experience.

 

Vedic and other subsidiary scriptures were learnt through verbal teaching. But yet experience counted more than bookish knowledge.

 

Xxx

AVVAI, BATTICAOLA,S.L.

Avvai statue in Batticaola, Sri Lanka

Overstepping the rules of Charity

Mahabharata says that there are two things which violate the scriptural instructions.

Apaatre pratipatti – giving to the undeserving

Paatre apratipatti – not giving to the deserving

Labdhanaamapi vittaanaam boddhauyau dvaatkramau

Apaatrepratipattisca patre chaapratipadanam

Mahabharata, Shaanti parva, 26-31

 

Tamil proverbs also concur with this view. Tamil poets were very strict about giving. One poet says that Ay, the chieftain, was not a ‘Charity businessman’ who expects something when he gives a donation. Ay gives to the poor to get rid of poverty and not expecting a good place in the heaven or good rebirth.

 

Another poet says that even if there is no heaven (for those who give), it is good to give (donate).

 

We see lot of poets praising Dhana/ donation in the Vedas. It is good to see the same concept existed throughout the vast land of India for thousands of years. Majority of the 80,000 Tamil inscriptions talk about donation to Brahmins or temples. Tamil poets of Sangam age praised donating to the poor. Seven chieftains were called the Last Seven Philanthropists. One of them was Ay.

 

The first lesson the Vedic students taught was Do Charity, “Dharmam Chara”. Later Tamil poetess Avvaiyar translated this and put it as the first advice to youngsters in her Athichudi.

–subham–

 

அறவிலை வணிகன் ஆய் அல்லன்! (Post No.2795)

happy-valmiki-day08

Written by london swaminathan

 

Date: 9 May 2016

 

Post No. 2795

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்திய இலக்கியங்களில், இமயம் முதல் குமரி வரை, இழையோடும் கருத்து தானம் (ஈகை) என்பதாகும்.

புற நானூற்றிலும், பகவத் கீதையிலும், மஹாபாரதத்திலும் உள்ள பாடல்கள் இதை மெய்ப்பிக்கின்றன.

தானம்,தர்மம் என்ற இரண்டு சொற்களும் வடமொழி ஸ்லோகங்களில் சேர்ந்தே வரும். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதனான வள்ளுவனும் குறளில் பல இடங்களில் இந்த இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே கையாளுவான் (19, 295); கீதையிலும் (16-1) காணலாம்.

 

எவர்கள் தமக்காகவே சமைக்கின்றார்களோ அவர்கள் பாவிகள் என்பான் கண்ணன் (கீதை 3-13).

IMG_4935

இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்ண வேண்டும் என்கிறார் இளம்பெருவழுதி (பற நானூறு 182)

பழந்தமிழர்கள் சம்ஸ்கிருத நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதால் வரிக்கு வரி இந்திரர், அமிர்தம், அருந்ததி, தர்மார்த்த காமமோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்றெல்லாம் பாடுவர்.தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் பல இடங்களில் தர்ம, அர்த்த, காம (அறம், பொருள், இன்பம்) வருகிறது.

 

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”—

(புறம்134) என்று முடமோசி என்னும் பிராமணக் கவிஞர் ஆய் என்ற குறுநில மன்னனைப் பாடுகிறார். இது கிருஷ்ணன் பகவத் கீதையில் சொன்ன கருத்து (கீதை 2-42). “புறநானூற்றில் பகவத் கீதை” என்ற எனது இரண்டு பகுதிக் கட்டுரையில் விரிவாகச் சொல்லிவிட்டதால் மீண்டும் சொல்லவில்லை.

வையாவிக் கோப்பெரும் பேகனை, பரணர் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய பாடலிலும்

“எத்துனை ஆயினும் ஈத்தல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே” (புறம். 141) என்று சொல்கிறார்.

 

மஹாபாரதத்தில்………

தர்மம் மீறப்படும் இரண்டு இடங்கள்:–

லப்தானாம் அபி வித்தானாம் போத்தவ்யௌ த்வ அதிக்ரமௌ

அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரே ச அப்ரதிபாதனம்

–மஹாபாரதம், சாந்திபர்வம், 26-31

அபாத்ரே ப்ரதிபத்தி = கொடுக்கக்கூடாதவர்களுக்கு தானம் கொடுத்தல்

பாத்ரே ச அப்ரதிபத்தி= ஏழைகளுக்கு தானம் செய்யாமலிருத்தல்

இரண்டும் தானம் தொடர்பான விதிகளை மீறுவதாகும்.

பாத்திரம் அறிந்து தானம் செய் – என்பது தமிழ்ப் பழமொழி.

வறியார்க்கொன்றீவதே ஈகை (குறள் 221) – என்பான் வள்ளுவனும்.வறியவர்க்கு அளிப்பதுதான் தானம்; மற்ற எல்லாம் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதாகும் (குறியெதிர்ப்பை நீரதுரைத்து).

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (குறள் 222) என்று இன்னொரு குறளில் கூறுவான்.

 

IMG_9826

தர்மம் சர (தர்மம் செய்) என்று வேதம் (தைத்ரீயோபநிஷத்) சொல்கிறது. இதை அவ்வைப் பாட்டியும் “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்திச் சூடியில் பாடிவிட்டுப் போனாள். மஹாபாரதம், உபநிஷத், வேதம் ஆகியன தொல்காப்பியத்துக்கும், புறநானூற்றுக்கும் சில ஆயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன் தோன்றியவை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு, ஒரே சிந்தனை என்பதால் வடமொழி வாசகங்களைத் தமிழர்கள் மொழிபெயர்த்ததாகக் கருதத் தேவையில்லை. சிந்தனை ஒன்றென்றால், சொற்கள் ஏறுபடாதன்றோ!

–சுபம்–

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்!- 4 (Post No.2794)

buddha gold

Written  BY S NAGARAJAN

Date: 9 May 2016

Post No. 2794

Time uploaded in London :–  5-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய நான்காவது கட்டுரை இது).

 

 

Third Part was posted on 28th April 2016.

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -4

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னின் பயணம் தொடர்ந்தது. டா-டாங் என்ற இடத்தில் உள்ள டி-கேங் என்ற துறைமுகத்தை அவர் அடைந்து ஆற்றின் கரையோரமாக நடக்கலானார். ஆற்றைக் கடக்க அவர் விரும்பினார். ஆனால் ஆற்றின் நீர் மட்டமோ உயர்ந்து கொண்டே இருந்தது. படகோட்டி ஒருவனைச் சந்தித்தார். அவன் ஆறு நாணயங்கள் கேட்டான். ஆனால் ஸு யுன்னிடமோ ஒரு நாணயம் கூட இல்லை.

அவரை ஏற்றாமல் படகு நகர்ந்தது. கரையோரமாக நடக்க ஆரம்பித்த அவர் தண்ணீரில் அகஸ்மாத்தாக காலை வைக்கவே நீர் பிரவாகம் அவரை உள்ளே இழுத்தது.

 

 

நீரில் சிக்குண்ட அவர் ஒரு பகல் ஒரு இரவு மிதந்து கொண்டே பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.காய் –ஷி துறையை நோக்கி அவர் இழுத்துச் செல்லப்பட்டார். தற்செயலாக அவரது காவி உடையைக் கண்ட ஒரு மீனவன் அவரைத் தன் வலையை வீசி இழுத்தான். அவரது காவி உடையைப் பார்த்ததால் பாவோ ஜி ஆலயத்தில் இருந்த ஒரு துறவியை அவன் அழைத்தான். அந்த துறவி ஏற்கனவே      ஸு யுன்னைப் பார்த்திருந்ததால் நன்கு அடையாளம் தெரிந்து கொண்டார்.

 

 

ஒரு சமயம் இருவரும் ஜின் – ஷான் மடாலயத்தில் சேர்ந்து தங்கி இருந்தனர். ஸு யுன்னின் நிலையைக் கண்ட அவர், “ஆஹா! இவர் மாஸ்டர் டீ – குங் அல்லவா” என்று வியந்து கூவினார். ஸு யுன்னின் மடாலயப் பெயர் டீ – குங்! அருகிலிருந்த ஆலயத்திற்கு அவரைத் தூக்கிச் சென்றனர். தொடர்ந்து நீரில் இருந்ததால் அவரது மூக்கிலிருந்து ரத்தம்; வாயிலிருந்து ரத்தம் அந்தரங்க உறுப்பு, ஆசனவாய் என்று அனைத்து துவாரங்கள் வழியாகவும் ரத்தம்!

 

 

 

பாவோ ஜி ஆலயத்தில் சில நாட்கள் ஸு யுன்  தங்கினார். பின்னர் காவோ-மின்  மடாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைக் கண்ட மடாலய நிர்வாகி அவர் வெளுத்து இளைத்து இருப்பதைக் கண்டு உடல் நலம் சரியில்லையா என்று வினவ ஸு யுன்   ஆம் என்றார். தான் நீரில் விழுந்ததை அவர் சொல்லவில்லை.

 

 

அங்கு நடக்கவிருக்கும் தியான வகுப்பை கவனித்துக் கொள்ளும் வேலையைத்  தர முன் வந்தார் அந்த நிர்வாகி. ஆனால் ஸு யுன் அதை தாழ்மையாக மறுத்தார். ஒரு மடாலயத்தில் ஒரு பெரும் பணியைத் தரும் போது மறுப்பதென்பது பெரிய குற்றமாகப் பொதுவாகக் கருதப்படும்.

 

ஆகவே அவரைத் தடி கொண்டு அனைவரும் தாக்கினர். ஸு யுன்னோ அத்தனை அடிகளையும் பொறுமையுடன் ஏற்றார்! அவர் உடல்நிலை இன்னும் மோசமானது. சிறுநீருடன் விந்து வெளியேறும் மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் ஸு யுன்னோ மிக உற்சாகமாக தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார்.

 

 

உடல் உணர்வே அவருக்குப் போய் விட்டது. இருபது நாட்கள் கழிந்தன. அவர் உடல் நிலை சீரானது.

அப்போது  காய் ஷி துறையிலிருந்து வந்த துறவி ஒருவர் ஸு யுன்னைக் கண்டு அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். அவர் நீரில் விழுந்ததைப் பற்றியும் கூறினார்.

 

buddha in SL

இப்போது ஸு யுன்னின் உடலோ தக தகவென ஜொலித்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும் தங்களை மன்னிக்குமாறு கூறி அவரை எந்த வேலையும் செய்ய வேண்டாமெனக் கூறினர்.

ஒரு நாள் தியானம் முடிந்த போது மிகவும் பிரகாச்மான ஒளி ஒன்றை அவர் கண்டார். பகல் நேரத்து சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம்!

 

 

 

ஸு யுன்  கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! சுவர்களை ஊடுருவி அவரது பார்வை விரிந்தது. சுவர்களுக்கு அப்பால் உள்ள அனைத்தும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ஊதுபத்தியை ஏத்தும் துறவி, கழிவறையில் அமர்ந்திருந்த துறவி, தூரத்தில் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த படகுகள் – அனைத்துக் காட்சிகளையும் அருகிலிருந்து பார்ப்பது போல அவரால் பார்க்க முடிந்தது.

 

 

அவரது நடையோ பறப்பது போல அமைந்தது.

இது ஒரு தற்காலிக நிலை என்பதை ஸு யுன்  உணர்ந்தார்,

ஒரு நாள் அவரது உதவியாளர் அவருக்கு தேநீர் கோப்பையைத் தந்தார். அகஸ்மாத்தாக தேநீர் அவரது தலையில் கொட்ட கோப்பையை ஸு யுன்  கீழே தவற விட்டார்.

தடால் என ஒரு சத்தம்!

 

அவருக்கு திடீரென மனத்தின் மூலம் – வேர் பற்றிய ஞானம் உதித்தது!

ஆஹா! எந்த பெரும் நிலையை அடைய வேண்டித் தவம் இருந்தாரோ அந்த நிலை அவரை வந்து அடைந்து விட்டது.

ஒரு கணத்தில் அவருக்கு வீட்டிலிருந்து கிளம்பி அன்று வரை நடந்த காட்சிகள் மனதில் ஓடின!

அவருக்கு ஒரு ‘கதா’ உதித்தது. அவர் பாடினார் இப்படி:

 

 

“ஒரு கோப்பை தரையில் விழுந்தது!

அது விழுந்த சத்தமும் தெளிவாகக் கேட்டது!

வெளி (Space) பொடிப்பொடியானது!

பைத்தியக்கார மனம் ஒரு நிலைக்கு வந்து நின்றது!

கை பிடித்திருந்ததை விட்டு விட கோப்பை விழுந்து நொறுங்கியது!

குடும்பம் உடையும் போதோ ஒருவர் இறக்கும் போதோ பேசுவது கடினம்!

வசந்த காலம் மலர்ந்த மலர்களின் வாசத்துடன் வருகிறது!

மலைகள்,ஆறுகள், பெரிய பூமி அனைத்துமே ததாகதர் தவிர வேறொன்றில்லை!!”

 

பூரண ஞானம் பொலிந்த துறவியாகி விட்டார் ஸு யுன்!

**********    தொடரும்

An Ounce of Mother is worth a Ton of Priest! (Post No.2793)

mother rangoli

Compiled by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2793

 

Time uploaded in London :–  14-4o

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Following are the proverbs and sayings on Mother in Tamil ,Sanskrit and English

mother_love_

1.A man’s mother is his other God (African Proverb).

2.The teacher is more important than ten instructors; And the father more than a hundred teachers, but the mother more than a thousand fathers- Manu Smriti 2-145

3.Mataa, Pitaa, Guru, Deivam.

4.Guru is the physical form of god, the father the physical form of Brahma, the mother the physical form of the earth and the brother is the physical form of one’s own self- Manu Smrti 2-227

 

5.A mother’s love is best of all.

6.A mother’s love never ages

7.Never forget your mother (Tamil: Mathaavai oru Naalum Marakka veendaam)

8.Though one see’s one’s mother starving let the person not do  those actions which are condemned by the wise- Tirukkural 656

9.It is not as thy mother says, but as thy neighbours say.

10.A father’s goodness higher than the mountains; a mother’s goodness is deeper than the sea (Japanese Proverb)

 

mother baby

11.An ounce of mother is worth a ton of priest.

 

12.Like mother like daughter

 

13.Like mother like daughter; like yarn like the sari (Tamil Proverb)

14.The birth follows the belly (daughter is like her mother)

15.Is there a mother who does not pardon the mistake of her offspring? – Pratima Nataka

16.The mother’s side is the surest

17.The hand that rocks the cradle rules the world.

18.THERE MAY BE BAD SONS BUT NEVER A BAD MOTHER- Devi Aparadha Kshamapana Stotra

 

19.There is only one pretty child in the world, and every mother has it.

The owl thinks her own young fairest (For a crow its young one is golden- Tamil Proverb)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

20.The good mother says not. “Will you?” but gives.

21.The mother’s breath is aye sweet.

22.The mother of the coward does not worry about him (Arabic proverb).

23.Mother and Motherland are greater than heaven  (Jananii janma bhuumisca svargaadapi gariiyasii) – Kahavatranakar

24.Home life is blessed as long as mother is alive– Kahavatranakar

25.Unbrarable are the sorrows of mothers –Brhad Katha manjari

26.When a daughter is given away in marriage, mothers feel distressed-Pratinjaa yaugandharaayana

27.No god beyond mother (Na maatuh daivatam param)—Canakya Neeti

28.The teesth of the mother cat do not harm her kittens

29.For all humans, the mother indeed is the God of all Gods.

30.Hail the Mother as God! Hail the Father as God (Maatr Devo bhava pitr devo bhava) – Taittiriya Upanishad.

31.As the Mother, so the daughter –Kahavatratnakar

32.None indeed can nourish your body like the mother – Subhasitaratnavali

33.The caress of a mother is as soothing as a water-jet to the thirsty.

–subham–

 

அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

Translated by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2792

 

Time uploaded in London :–  6-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7

(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)

mother baby

104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

 

105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

 

106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ

-கஹாவத்ரதனாகர்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே

 

107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

 

108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி

அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

 

109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.

mother rangoli

110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)

 

111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

 

112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.

தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)

 

113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

 

114.மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.

 

115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே – ஹிதோபதேசம்

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)

 

116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்

தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.

 

117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

 

118.மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.

 

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!

119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ

— கஹாவத்ரதனாகர்

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).

mother_love_

120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

 

121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

 

 

–சுபம்–

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5 (Post No.2791)

2srirangam

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8 May 2016

 

Post No. 2791

 

Time uploaded in London :–  5-36 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5

 

.நாகராஜன்

 

IMG_9630 (2)

ஏகாதசி –  சிந்தாமணி என்ற காவேரியில் ஏகாதசியில் ஸ்நானம்.

ஜம்புகேஸ்வரம், மாத்ருபூதம் ரங்கநாதர் இம்முவர்களுடைய வீக்ஷண்யம் இருப்பதால் சிந்தாமணி என்று பெயர் வந்தது. எல்லா ஏகாசதியும் விசேடமே. மார்கழி ஏகாதசி மிகவும் விசேடம். சிதம்பரம் வடமேற்கில் ஏகாதசி விசேடம்

 

துவாதசி – ஐம்பு தீர்த்தம்,  ஸ்ரீரங்கம் லட்சுமி ஸந்நிதானத்தில் உள்ள தீர்த்தம்

 

திரயோதசி – கோகர்ணம் கோடி தீர்த்தம்

 

சதுர்த்தசி – கோகர்ணம்,  ஸ்ரீகாளஹஸ்தி, கேதாரம்,காசி, மத்யார்ச்சுனம், திருவையாறு, மாயூரம் ஆகிய தலங்களில் சிவராத்திரி சதுர்த்தசி தவிர மாயூரத்திலும் கேதாரத்திலும் நாக சதுர்த்தசி விசேடம். தீபாவளியோடு கேதார பூஜை முடிவு பெறும்.

திருவையாறு: காவேரி வடகரையில் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இதற்கு தக்ஷிண கைலாஸம் என்று பெயர்.பஞ்சநத க்ஷேத்திரம். தர்மஸம்வர்த்தனி சமேத பஞ்சநாதேசுவரர் ஆலயம். அப்பருக்கு கைலாஸ தரிசனம் கொடுத்த தலம்.இந்திரன், வாலி ஆகியோரும் பூஜித்த தலம்.

 

 

மாயூரம்: காவேரி தென்கரையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள தலம். ஒரு அசுரன் காவேரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து, தான் அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். மயூர நாதர் கோவில் உள்ளது. தேவி மயில் ரூபம் எடுத்து ஈஸ்வரனை பூஜித்த தலம்.இந்திராணியும் இங்கு பூஜித்தாள்.

 

அமாவாசை, பௌர்ணமி – காளத்தி, மல்லிகார்ஜுனம் (சிவராத்திரி) அமாவாசை, பௌர்ணமி. ஸகலதீர்த்தம், மாயூரம், அர்த்தோதயம். மஹோதயம்.

 

 

வாரங்கள் பூஜித்த தலங்கள்

 

ஞாயிறு:  திருநாகேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருத்தானமுடையார் கோயில், சாயாவனம்

திங்கள்: திருக்கடையூர்,(திருக்கடவூர்), சிவபுரம், திருவாலவாய், காசி

1859 tiruvaiyaru ther

செவ்வாய்: வைத்தீசுவரன் கோவில், அத்திப்புலியூர், இலந்துறை

புதன்: வெண்காடு (சந்திர புஷ்கரணி)

 

வியாழன்: பெருஞ்சேரி, திருக்கொண்டீசுவரம், கச்சி, கழுக்குன்றம்

வெள்ளி: காஞ்சி (வாமதீர்த்தம்)

சனி: திருநள்ளாறு, ஆரூர்

 

மாதங்களும் பர்வங்களும் பூஜை செய்த இடங்களை ஆகமங்கள் மூலம் அறியலாம்.

 

மேலே கண்ட குறிப்புகளை ஆழ்ந்து ஊன்றி கவனித்து அவரவர்கள் தங்கள் தங்களுக்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

 

mahamakam tank view

தலங்கள் பற்றிய அபூர்வ புத்தகங்கள்

தல முறை பற்றி அபூர்வமான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி உள்ளன.

 

 

திரு இராமசுவாமிப் பிள்ளை அவர்கள் தலமுறைப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பயனபடுத்தியது போலவே  ஸ்ரீ உ.வே.சாவும் தொடர் எண்ணிட்டு தலங்கள், தீர்த்தங்கள், விமானங்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தொகுத்துள்ளார். 8135 என்ற தொடர் எண்ணை இவரது குறிப்புகளில் காணும் போது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எத்துணை விஷயங்களை இவர் சேர்த்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவை என்னவாயின?!! வருங்காலம் மீட்டுத் தருமா?

 

 

இது தவிர காசியைப் பற்றிய அபூர்வ விவரங்களை காஞ்சி பரமாசார்யாள் ஆசியுடன் தொகுத்துள்ளவர் திரு ரா.வீழிநாதன். (1987)

 

இன்னொரு தலங்களைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த அபூர்வமான புத்தகம்  ஸ்ரீகாவேரி ரஹஸ்யம் (1962) என்ற நூலாகும்.காஞ்சி பரமாசார்யாள், தமது தொடர்ச்சியான முயற்சியின் மூலம் பல பக்தர்களிடமும் அரிய தல விஷயங்களைச் சேகரிக்குமாறு ஆணையிட்டார். இந்த அபூர்வமான குறிப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்ற கல்வி இலாகா அதிகாரியான  ஸ்ரீ ஈ.வி. கோபாலையரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் காவேரி நதியை ஒட்டி உள்ள வடபுற க்ஷேத்திரங்கள், தென்புற க்ஷேத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள், காவேரி ப்ரதக்ஷிண விதி, ஸ்நான முறை, காவேரி பற்றிய இலக்கியக் குறிப்புகள், புராணக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைத் தொகுத்து காவேரி கலைக் களஞ்சியமாக ஒரு நூலை வெளியிட்டார்.

 

 

ஆன்மீக அன்பர்கள் தல விசேடங்களைப் பற்றிய உண்மையான தொன்மக் குறிப்புகளை அறிய வேண்டுமெனில் இது போன்ற புத்தங்களையும் இது பற்றி நன்கு அறிந்த வல்லாரையும் நாட வேண்டும்.

ganga-arati-modi-abe

Prime Minister of Japan Shinzo Abe and Indian Prime Minister Narendra Modi performing Ganga Arti at Dhashvmegh Ghat in Varanasi on saturday.Express photo by Vishal Srivastav 12.12.2015

வைக்கோல்போரில் ஊசியைக் கண்டெடுத்தவர்கள் நமது தேடலைச் சுலபமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு வரும் காலமெல்லாம் நன்றி சொல்லும்!

–Subham–

********

 

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790)

obbery324-600

Compiled by london swaminathan

Date: 7 May 2016

Post No. 2790

Time uploaded in London :– 12-56

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திருடர்களைப் பற்றி ஒரு சம்ஸ்கிருத பழமொழியைப் படித்தேன். உடனே இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் படம் என் மனக் கண் முன்னால் ஓடியது. நீங்களும் படியுங்கள்; பகற்கொள்ளையர்களின் படங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும்:–

“ப்ரகாசாஸ்ச அப்ரகாசாஸ்ச த்வி வித அஸ்தி தஸ்கரா: ஸ்ம்ருதா:” (திருடர்கள் இரண்டு வகை என்று சொல்லப்படுகிறது; தெரிந்தும், தெரியாமலும் (ஒளிந்து) திருடுபவர்கள்)

பகல் ஒளியில் பகிரங்கமாகத் திருடுபவர்கள் (ப்ரகாச), இருட்டில் யாருக்கும் தெரியாமல் திருருடுபவர்கள் (அப்ரகாச) என்று இரண்டு வகை! திருடர்களைக் கூட அக்காலத்திலேயே வகைப்படுத்தியது மட்டுமின்றி திருடர்கள், திருட்டுத்தொழில் பற்றி ஒரு சம்ஸ்கிருத நூலும் உள்ளது!

 

1900 வேதபாடசாலை

ஞானம் இரண்டு வகை
ஞானம் து த்வி விதம் ப்ரோக்தம் சாப்திகம் ப்ரதமம் ஸ்ம்ருதம்
அனுபவாக்யம் த்விதீயந்து ஞானம் தத் துர்லபம் ந்ருப
–தேவீ பாகவதம் 15-52
ஞானம் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது: 1. முதலாவது, வேத சாஸ்திரம் மூலம் கிடைக்கும் அறிவு (சாப்திகம்= சப்தம்/ஒலி மூல அறிவு) 2.இரண்டாவது, அனுபவ அறிவு, அதாவது பட்டறிவு. அரசனே! இவை இரண்டும் அரிதானவை.

என்னதான் படித்தாலும் அனுபவ அறிவுக்கு ஈடாகாது. அதனால்தான் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்றனர். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் அனுபவ அறிவே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

 

படிப்பறிவு மூலம் மட்டும் ஒருவன் ஞானியாவதல்ல. விட்டகுறை தொட்ட குறையாக – பூர்வ ஜன்ம புண்ணியம் காரணமாக—ஞான வேட்கை இருப்பவனே ஆன்மீகப் பாதையில் அடிவைக்கிறான். பின்னர் குரு மூலம் சந்தேகம் தெளிகிறான்.அப்போது மேலும் மேலும் பல நூல்களைக் கற்கிறான் அல்லது கேட்டு அறிகிறான்.

asceticww2

–Subham–

Interesting Salesman Anecdotes (Post No.2789)

Newspaper-Salesman-1

Compiled by london swaminathan

 

Date: 7 May 2016

 

Post No. 2789

 

Time uploaded in London :– 6-20 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

smarmy salesman

I am them!

The executive was taken down a peg.
You may well feel proud of yourself, young fellow, he said to the life insurance agent, I have refused to see seven insurance agents today.
I know, said the agent, I am them.

Xxx
Taking Orders!
The sales manager was delivering a terrible dressing down to one of his salesmen. He became so abusive in his anger that the culprit protested, saying,

“Don’t talk to me that way. I take ORDERS from no one”.
“That is what I am raising Hell about”, snapped the manager.

Xxx

Bed Bugs!!!
In one of his political speeches in the early days of the NRA (National Recovery Administration), Hugh ‘Ironpants’ Johnson revived an old story, demonstrating the usual futility of letters of complaint.
It concerns the case of the man who was tormented by bedbugs in his sleeping car and who wrote an indignant letter about the matter to the general passenger agent of the railroad.

He was cautioned by his friends that he would probably not receive so much as a reply, and his satisfaction was great when, in due course, he received an apologetic letter assuring him that such a thing could never happen again. His elation was quashed a moment later, however, by the discovery of the inter office memo which had inadvertently been inserted with the letter, which said tersely, “Send this s.o.b. the bug letter”.

Xxxx

salesman

Competition
A young and conscientious fellow ran a newsstand in front of a bank. One day a friend of his stopped by and asked him a loan of five dollars.

“Sorry”, said the young man, “I am afraid I couldn’t do that. You see I have an agreement with the bank”.
“You…… An agreement with the bank. What do you mean?”
“Well, you see, it is this way.
I don’t give loans. The bank doesn’t sell newspapers. It’s a perfect agreement. I am sorry, but I am bound”.

–subham–

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4 (Post No 2788)

3 towers in kanchi

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 7 May 2016

 

Post No. 2788

 

 

Time uploaded in London :–  5-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4

 

.நாகராஜன்

 

 

திதிகள் பூஜித்த தலங்கள்

 

இதே போல 14 திதிகளும் பூஜித்த தலங்கள் வருமாறு:

 

பிரதமைகாஞ்சிபுரம் (காமாட்சி கோவிலுள் காம தீர்த்தம்,

 

புரட்டாசி நவராத்திரி பிரதமை)

காஞ்சிபுரம்: கல்வியிற் பெரிய காஞ்சி பழைய பல்லவ நாட்டின் தலை நகரம். காமாட்சி அம்மன் திருக்கோவிலைக் கொண்டுள்ள தலம். சக்திக்கான தனிப்பெரும் கோவில். ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம். அம்மன் இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது ஒரு கையில் கரும்பு வில்லும் இன்னொரு கையில் தாமரை மற்றும் கிளியும் உள்ளது. தந்திர சூடாமணி நூலின் படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும்.  இங்குள்ள கைலாச நாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

 

 

துவிதியை – 1) கருவிலி என்கிற துர்க்குணேசுவரபுரம்

 

(யமதீர்த்தம் – யம துவிதியை; ஐப்பசி விசேடம்), 2) தாராசுரம், 3) திருச்செங்காட்டங்குடி

கருவிலி:  யமன், மஹாபலி, திருமால், சூரியன் பூஜித்த தலம். தக்ஷிணாமூர்த்தி விக்ரஹம் மஹாமண்டபத்தின் தெற்கில் உள்ளது. பரணி தீர்த்தம். மஹாமண்டபத்தின் கிழக்கே யமனுக்கு உபதேசம் ஆனது.

 

திருதியை – 1) கேதாரம்அக்ஷய திருதியை, கனகல தீர்த்தம்; கேதார பூஜை ஆரம்பம் 2)சிந்தாமணி

 

சதுர்த்தி – 1) செங்காட்டங்குடி  சித்திரை சுக்கில பட்சம் சதுர்த்தி தீர்த்தம், சித்திரை சுக்கில பட்ச கணபதி பூஜை பண்ணிய தினமாகும்.  2) திருவலஞ்சுழி – சதுர்த்தி உற்சவம்

செங்கட்டாங்குடி : காவிரித் தென்கரைத் தலம்.இறைவன்: கணபதீச்சுரத்தார் இறைவி: திருக்குழல் நன்மாது. தலவிருட்சம் ஆத்தி. தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

chidambaram tower close

Chidambaram temple  tower

பஞ்சமிதவத்துறை (லால்குடி)

(ஏழு முனிவர்கள் பூஜித்து முக்தி பெற்றது ரிஷி பஞ்சமி)

 

லால்குடி

காவிரியின் வடபுறத்தில் இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது.

ஸ்வாமி: ஸப்தரிஷிநாதர்: ஸப்த ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட தலம். காயத்ரி என்ற சிறு ஆறும் ஓடுகிறது. சிவகாமி சமேத நடராஜர் சன்னதி பிரபலம். சன்னதியில் சிவகங்கை தீர்த்தம் விசேஷமானது. பைரவி வனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.மாணிக்கவாசகர் இயற்றிய புராணம் கொண்டது இத்தலம்.மழவராஜன் குஷ்டரோகம் நீங்கப் பெற்ற இடம். மாங்கல்ய ரிஷி பெருந்திருவாட்டி அம்மையை மணம் செய்து கொண்ட திருத்தலம். இக்கோயிலில் கமலகொத்த நாயனார், ஐயனார் சன்னதி பிரபலமானவை.

 

ஷஷ்டி – ஸ்கந்த ஷஷ்டி – சுப்பிரமணிய தலங்கள்

வெண்காட்டில் மாசி மாத ஷஷ்டியில் மணிகர்ணிகையில் அவபிருதம்; துவாதசியில் கொடியேற்றம். கிருஷ்ணபட்சம் ஷஷ்டி.

 

 

ஸப்தமி – 1) திருவாவடுதுறை 2) மீயச்சூர் 3) சிதம்பரம் ; ஆனித் திருமஞ்சனம் 4)திருவொற்றியூர்

 

திருவாவடுதுறை : காவேரி தென்கரைத் தலம். இறைவன்: மாசிலாம்ணியீசர் இறைவி: மங்கள நாயகி தீர்த்தம் பிரமதீர்த்தம்.இத்தலத்தில் தருமதேவதை தவம் செய்து இறைவனுக்கு வாகனமான விடை ஆயிற்று என்று தல புராணம் கூறுகிறது.

 

ஸப்தமி – 2 பட்ச உற்சவ தலங்கள்

 

சிதம்பரம், வெண்காடும் செங்காடு, மீயச்சூர், ஆவடுதுறை, ஆனைக்கா

 

மீயச்சூர்: காவேரி தென்கரைத் தலம். இறைவர்: முயற்சி நாதர், இறைவி சுந்தர நாயகி தல விருட்சம் வில்வம் தீர்த்தம்: சூரிய புஷ்கரணி

 

அஷ்டமி – பைரவ தீர்த்தம் (அஷ்டமி தீர்த்தம்) , காசி,  ஸ்ரீ சைலம் என்கிற நீலகிரி, ஐயாறும் மதுரை.

கார்த்திகை ம்கா காளாஷ்டமி, பைரவாஷ்டமி, ஆவணி முதல் பங்குனி வரை காளாஷ்டமி

8 பைரவர்கள் தோன்றிய தினம்: கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி மாத்திரம் மகா காளாஷ்டமி; மகா பைரவர் பிறந்த தினம்; கோடி சிவராத்திரி புண்ணியத்தையும் ஒருங்கே தர வல்லது.

 

 

நவமி  – காஞ்சீபுரம்; காமதீர்த்தம் நவமி சிதம்பரம் பரமாநத கூபம். திருவீழிமலை விஷ்ணு தீர்த்தம்; புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் நவமி

தசமி – திருவாரூர் விஜய தசமி தேவதீர்த்தம் என்ற கமலாலயம்; விஜயலக்ஷ்மி பூஜை பண்ணி கமலாம்பிகை பிரசாதத்தினால் விஜயத்தை அடைந்ந்தபடியால் விஜயதசமி என்று பெயர்; விஜயபுரம் என்று கிழக்கே இருக்கிறது.

 

-அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.