கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2881

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.

 

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதேவாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!

 

வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

–சுபம்–

 

 

உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் ! – 2 (Post No.2880)

Yoga_vasistha_of_valmiki_medium

Article written by S.NAGARAJAN

 

Date: 9 June 2016

 

Post No. 2880

 

Time uploaded in London :–  5-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

யோக வாசிஷ்டத்தில் சிக்கலான கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் உள்ளன என்பதை எப்படி நம்புவது என்று ஒருவர் கேள்வி கேட்டால் அது நியாயமான கேள்வி தான்.

ஏனெனில் அதீதமாகப் புகழ்வது என்ற வரிசையில் இந்த மொழி உரைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது சொல்பவரின் கடமை அல்லவா?

 

 

இதற்கு இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் – ஒரு பானை சோறுக்கு ஒரு பதம் என்பது போல.

 

முதலாவது யோகவாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள அபூர்வமான விஷயங்கள்.

 

இவற்றை அறிவியல் கண்டுபிடித்து நிரூபிக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்!

 

இரண்டாவது யோக வாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை உலகின்  மாபெரும் மேதைகள் என்று கருதப்படுபவர்கள் அப்படியே எடுத்துரைப்பது தான்.

இப்படிப்பட்ட மேதைகள் தனித்தனியே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு நாட்டில் வலியுறுத்திக் கூறியிருப்பதை ஒரே நூலில் அழகாக, கோர்வையாக படிக்க முடிகிறது என்றால் அந்த நூலின் மகிமையை வேறு எப்படிச் சொல்ல முடியும்.

 

 Six Major Sections of Yoga Vasis

அது சந்தேகமில்லாமல் அதிசய நூல் தானே!

எந்தெந்த மேதைகள் எந்தெந்த கருத்துக்களைக் கூறியுள்ளார் என்று ஆராயப் புகுந்தால் அது ஒரு பெரிய புத்தகமாக மிளிரும்.

 

 

அப்படிப்பட்ட அரிய ஆராய்ச்சியை ஒருவர் செய்து புத்தகமாகவும் வெளியிட்டு விட்டார் என்பது அரிய ஒரு சுவையான செய்தி தானே!

 

 

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு பி.எல். ஆத்ரேயா யோகவாசிஷ்டா அண்ட் மாடர்ன் தாட் (Yoga Vasistha and Modern Thougtu by B.L.Atreya) என்ற அரிய ஒரு நூலை எழுதியுள்ளார். 1934ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த நூலைப் பாராட்டாதோர் கிடையாது; மேற்கோள் காட்டாத அறிஞர்கள் இல்லை.

 

 

இந்த நூலில் சுமார் 158 பேரறிஞர்களின் கருத்துக்களை யோக வாசிஷ்டக் கருத்துக்களுடன் பி. எல் ஆத்ரேயா ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

 

 

ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸண்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், பெர்சி கால்ஸன், வீட்லி கேரிங்டன்,எட்வர்ட் கார்பெண்டர், ஜாகுவஸ் கார்னோவா, ஈ.எஸ்.காங்க்ளின்,எஃப் .சி. கான்ஸ்டபிள்,   ஜெரால்டின் காஸ்டர், டேம்பியர் வேதம், சார்லஸ் ஜில்பெர்ட்  டேவின், ஷா டெஸ்மாண்ட், சர் ஆர்தர் எடிங்டன், எமர்ஸன்,எட்வ்ர்ட் டக்ளஸ் ஃபாசெட், ஜே.ஜி.     ஃபிட்ஸே, ஃபின்லே, சிக்மண்ட் ஃப்ராய்ட், ஹிக்கின்ஸன் ஆலிவர் லாட்ஜ். சி.ஈ.எம் ஜோட், ஆரிஸான் ஸ்வெட் மார்டன்,டபிள்யூ, மக்டொனால்ட் என்று இப்படி அறிஞர்களின் பட்டியல் நீளுகிறது.

 

 

43 அரிய தலைப்புகளில் ஆத்ரேயா, யோக வாசிஷ்ட கருத்துக்களையும் இந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஒப்பிடுகிறார். யோக வாசிஷ்டம் கூறும் சில கருத்துக்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இவற்றை விரிவாக இந்த நூலில் பார்க்கலாம்.

 

 

இந்த நூலை ஒரு தடவை படித்தாலும் போதும், யோக வாசிஷ்டம்  மிக அதிசயமான நூல் தான் என்று யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வர்.

 

 

சரி, யோக வாசிஷ்டம் கிடைக்குமா என்ற கேள்வி கேட்போருக்கு பதில் இது தான்:

 

யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம்; பெறலாம்.

அடுத்த கட்டுரையில் எங்கு பெறலாம எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம்!

 

                                                -தொடரும்

 

7 Types of Rains, 7 Types of Winds: Meteorology in Hindu Scriptures! (Post No.2879)

earth-atmosphere-layers

Research Article written by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2879

 

Time uploaded in London :–  18-58

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

15 names for cloud in Sanskrit

Amarakosa, world’s first thesaurus, gives fifteen names for clouds. They are:–

Abram, Meghah ,Vaarivaahah, Stanayitnuh, Bhalaahakah, Dhaaraadharah, Jaladharah, Thadithwaan, Vaaaridah,Ambhubrth, Ganah, Jiimutah,Mudirah, Jalamuga, Dhuumayonih

chart-cloud-types

Seven types of Rains

Following seven types of clouds bring sven types of rains:

Samvartam-  Rain of gems

Avartam- water (we experience it)

Pushkalaavartam- gold (kanakadhara Stotram)

Sangaaritam –flower (Devas)

Dronam- sand (Sahara desert sand storm)

Kalamukhi- stone (hailstorm, meteorite shower)

Neelavarnam- fire (volcanoes, Tsunami)

 

We have some evidence for the six types of rains in the above list.

Rain that pours down water from the sky is known to everyone.

Tungurahua-volcano-

Rain of fire is seen by people living nearby volcanoes. Tsunami waves and worst storms also produce electricity over waves and cause fire accidents. Hindu scriptures describe the Great floods and Armageddon fire.

Rain of stone is caused by meteorite belt, when the earth crosses it every year; but the atmosphere burns most of the meteorites. Yet some areas on earth experience rain of stones. Hailstorms are also described as rain of stones.

Rain of gold: This happened in the life of the greatest of the Indian philosophers Adi Sankara. When he went begging for food (as was the custom for ascetics), a poor lady did not have anything except a gooseberry in her pickle bottle. When she placed it in his begging bowl, he shed tears and prayed wholeheartedly to Goddess to shower wealth on her. And there was a shower of golden gooseberries! Hindus even today sing that hymn Kanagadara Stotra meaning hymn of golden rain.

sandstorm

Sand rain

Sand rain is very common in the Middle East and North African countries. Very often flights are cancelled due to sand storms. Weather is also affected by the dust from the Sahara desert. Two Tamil cities were destroyed by sand rain according to legends authenticated by Tamil literature.

 

Please read my earlier article in this blog:-

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

Hindu scriptures describe the rain of flowers by angels in hundreds of places. Whether it is true or not, Indian politicians very often experience rain of flowers from their supporters. During weddings, Hindus shower flowers on the couples. Brahmin priests recite a flower mantra (Yo paam pushpam vedaa) in all the Pujas and shower flowers on the statues. So rain of flowers is a common sight in India.

Rain of gems is known in the heaven.

 

How rain is produced –

Kalidas and other ancient poets knew that water from the sea and other water sources on earth gets evaporated into steam and form rainy clouds. Kalidas has used it in his similes.

cloud_types

Names for Thick Clouds:- Megamaalaa, Kadambhini

Ten words for Lightning:–Sampaa, Satahrtaa, Hraadini, Airavatii, Kshanaprabaa,Thadith, Saudaaminii, Vidyut,Sanchalaa,Sapalaa

 

Seven types of Atmospheric Layers

Sakuntala drama of Kalidasa has a reference to the different pathways in the heaven (Act 7-5); commentators explain all the seven paths as follows:

“According to Hindu mythology, the heavenly region is divided into Seven Paths, with a particular Vayu/wind is assigned for each.

 

The first of these Vayupathas or vayu margas is identical with the bhuvar loha., or atmospheric region, extending from earth to sun. The wind assigned to this area is AVAHA.

 

The other six make up the Swar loka or heavenly region with which Swarga (paradise) is often identified in the following order:-

The second marga/path is that of the sun; and its wind called PRAVAHA, causes the sun to revolve.

Third path is that of moon and its wind is SAMVAHA impels the moon

Fourth is that of the stars or lunar constellations and its wind is known as UDVAGA; this causes the stars to revolve.

Fifth path is that of the planets and its wind is VIVAHA

Sixth is that of the Saptarishi or Greta Bear Constellation and the Milky Way; its wind PARIVAHA bears along these luminaries.

And the last- seventh- is that of the Dhruva or Pole Star; the pivot or axis of the whole planetary system; its wind is PARAVAHA, causing the revolution of the Pole Star (Dhruva Star).

 

Scientific Facts

These divisions may not correlate with the modern divisions; but yet it shows the scientific bent of mind of our forefathers; dividing them into different types or categories, assigning them different roles – show their keen observation and deep study. What they said about ‘winds’ may be different rays, pulses and waves from the sky.

 

Rain plays a key role in Hindu scriptures. They worship water and its God Varuna from the Vedic days. Tamil books also give at least ten names for clouds and a prayer to Rain (god).

–subham–

 

 

 

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878)

earth-atmosphere-layers

Research Article written  by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2878

 

Time uploaded in London :–  17-45

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் மேகத்துக்கு 15 சம்ஸ்கிருத சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு வகை அதிசய மழைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் உரைக்கின்றன. காளிதாசனின் சாகுந்தல நாடகத்துக்கு உரை எழுதியோர் ஏழு வகை ஆகாய மார்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவைகளில் 75 விழுக்காட்டுக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. மீதியை இனித்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்குமோ!

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

cloud_types

இந்த ஏழு வகை மழைகளில் நாம் எல்லோரும் அறிந்தது நீரைப் பொழியும் மழை.

மற்ற மழைகளைப் பற்றி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்து வியக்கிறோம். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தங்க மழை:

ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).

பூ மழை

தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.

sandstorm

 

மண்மழை

உறையூரும், திருமலைராயன் பட்டிணமும் எப்படி மண்மழையில் அழிந்தது என்று முன்னரே எழுதிவிட்டேன். கீழ்கண்ட எனது கட்டுரையைப் படிக்கவும்.

மணலில் புதைந்த இரண்டு தமிழ் நகரங்கள் ( 7 டிசம்பர் 2013)

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.

கல் மழை

சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.

 

எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.

 

Tungurahua-volcano-

தீ மழை

சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

chart-cloud-types

அறிவியல் சிந்தனை:

விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல்  பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.

அமரகோசத்தில் 15 பெயர்கள்

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–

அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,

பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.

மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.

 

தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.

காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876)

amazing 1

Translated by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2876

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், வியாச பகவான், கண்ண பிரான், திருவள்ளுவர், உலக மஹா கவிஞன் காளிதாசன், மற்றொரு சம்ஸ்கிருதப் புலவன் ஆகிய பலர் உலக அதிசயம் எது? அத்புதம் எது? ஆச்சரியம் எது? என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான, சுவையான பதில்களைத் தந்துள்ளனர்!

 narayana

1.நாராயணன் என்ற சப்தம் இருக்கிறது. வாயில் சொல் இருக்கிறது. எளிமையாக வசப்படுத்தலாம். அப்படியும் கோரமான நரகத்தில் மனிதர்கள் விழுகிறார்களே!! இதுவே அத்புதம்!!!

நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வசவர்தினீ

ததாபி நரகே கோரே பதந்தீதி ஏதத் அத்புதம்

–ஒரு சம்ஸ்கிருதக் கவிஞன்

 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதி, இங்கே வெளியிட்ட கட்டுரை இதோ:–

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? ( 10 நவம்பர் 2013)

 

2.கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

3.வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

4.காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

5.வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

 wow

6.காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

–சுபம்–

 

What is amazing? Six Answers from Six Great People (Post No.2875)

wow

Compiled by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2875

 

Time uploaded in London :–  6-13 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

narayana

1.SANSKRIT POET

How come Terrible Hell is still there when Holy Name of Narayana is easily Available?

Naaraayaneti Sabdosti vaagasti vasavartini

Tathaapi narake ghore patantiityetat adbutam

 

Word Narayana is there. We have the capacity to speak. It is easy to say. Even then some people fall into terrible hell. This is indeed a wonder!

(The poet is wondering how come people miss an opportunity to say the simple word Narayana and still go to hell)

 

 

 

Following matter is posted by me three years ago: “Most Amazing thing in the World!!” (10 November 2013)

 

 

 

What is the most amazing in the world? Great men of India think alike!

2.VYASA

Vyasa has answered this question through Dharma/Yudhistra in Mahabharata. This is one of the last four questions asked by the Yaksha (Spirit in the trees) in the Yaksha Prasna. Yudhistra answered:
“The most amazing thing is that even though every day one sees countless living entities dying, he still acts and thinks as if he will live forever”.

3.TIRUVALLUVAR

Great Tamil saint Tiruvalluvar also dealt with this subject (couplet 336):

“The one, who was here yesterday, is no more today and
That is a matter of great wonderment, in this world”

A man is here one day and is not here next day; that is the special significance of life on earth.

amazing 1

4.LORD KRISHNA

Lord Krishna talks about the wonderful thing in the spiritual world:

“One looks upon Him as a marvel, another likewise speaks of Him as a marvel; another hears of Him as a marvel; and even after hearing no one whatsoever has known Him!” (Bhagavad Gita 2-29)
“Among thousands of men scarcely one strives for perfection and of those who strive and succeed, scarcely one knows Me in truth” (Bhagavad Gita 7-3)

5.KALIDASA

Kalidasa in Raghuvamsa (8-87)

Kalidas in Raghuvamsam says: “For to the one that is born death is certain. Living is the unexpected one. If a living being lives for even a single second, that is a bonus!”

 

6.KANCHI SHANKARACHARYA (PARAMACHARYA 1894-1994)

Kanchi Paramacharya (Sri Chandrasekarendra Saraswati)

Kanchi Shankaracharya in his Madras talk on 15-10-1932 says: “A great man has spoken about the wonder in the world. He says the most amazing in the world is the life breath inside one’s body. Even though there are nine holes to escape still the life is inside the body! Is there a more wonderful thing in the world?

Navadware sarire asmin ayu: vasathi santhatham
Jeevath adhiadbutham thathra gachathithi kimadbhutham

 

—Subham—

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! (Post No.2874)

yoga vasista

 

Article written by S.NAGARAJAN

 

Date: 7 June 2016

 

Post No. 2874

 

Time uploaded in London :–  5-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் !

 

ச.நாகராஜன்

 14_Yoga-Vasistha_1

உலகில் மிக அதிசயமான நூல் எது என்று யாரேனும் ஒருவர் கேட்டால் தயங்காமல் விடையைக் கூறி விடலாம் – அப்படிப்பட்ட மிக அதிசயமான நூல் யோகவாசிஷ்டம் என்று!

 

உலகில் மனித மனதில் சிக்கலான பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அறிஞர்களாலும் கூட சரியாகப் பதில் சொல்ல முடியாத கேள்விகள்!

 

 

தகுதியான மனிதன் என்று சொல்லக் கூடியவன் யார்?

 

மனித முயற்சியின் பலன் என்ன?

 

கடவுள் ஒருவரை சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பி விட முடியுமா?

 

விதி என்று ஒன்று உண்டா?

 

விதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

 

மனித வாழ்க்கையைக் கடக்க உள்ள வழிகள் எவை?

 

நல்லவர்களின் சகவாசம் நமக்கு எவற்றைத் தரும்?

 

காலம் என்பது என்ன?

 

கற்பனை என்பது என்ன?

 

உலகம் என்பது என்ன?

எண்ணம் என்ன செய்யும்?

மனிதனின் மரணம் எத்தனை வகைப்படும்?

முக்தி என்பது உண்டா? இருப்பின். அது எத்தனை வகைப்படும்?

இந்த உலகில் வாழ்ந்து கொண்டே முக்தி அடைய முடியுமா?

விழிப்புணர்வு, கனவு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

விசார மார்க்கம் என்றால் என்ன?

அதனால் அடையும் பயன்கள் என்ன?

கேள்விகள் முடிவற்றவை.

பல அறிவாளிகளும் தங்கள் மனதிற்கேற்றபடி பதிலைத் தந்திருக்கின்றனர்.

ஒன்றை இன்னொன்று மறுக்கும்; ஏளனம் செய்யும்.

இவற்றில் எது உண்மை?

 

 

இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு அருமையாக பதிலைச் சொல்கிறது யோக வாசிஷ்டம்.

“அறியாமையைப் போக்க இதைப் போன்ற இன்னொரு சாஸ்திரம் இல்லை !” என்று இந்த சாஸ்திரத்தின் முதல் பகுதியிலேயே சொல்லப்படுகிறது.

அது உண்மை தான் என்பதை நூலைத் தொடர்ந்து படித்தால் அறியலாம்.

 

 

எளிமையான சம்ஸ்கிருத பதங்கள். அனைத்தும் அருமையானவை.

32000 ஸ்லோகங்கள்!

 

 

வாழ்நாளில் ஒரு முறையேனும் சில பகுதிகளேனும் படிக்க வேண்டிய நூல். ஒரே ஒரு ஸ்லோகத்தை ஊன்றிப் படித்தால் கூட படித்த அளவுக்கு அது அறியாமையைப் போக்கும்.

அரிய உதாரணங்கள். நல்ல  கதைகள். புத்திக்கு வேலை தரும் சுவையான சம்பவங்கள். சொற்கோவைகள்.

 

 

இப்படி இதன் புகழைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த நாட்டவருக்கும் பொதுவான நூல் இது.

வசிஷ்டர் ராமருக்குக் கூறும் அரிய உபதேசக் கோவை இது. இதை இயற்றியவர் வால்மீகி.

 

 

இதைப் படித்துப் பார்த்தால் படிப்பதற்கே ஒரு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பது புரியும்.

அதிர்ஷ்டசாலிகள் அழைக்கப்படுகிறார்கள் இதைப் படிக்க!

படிக்க ஆரம்பித்தால் படித்தவர்கள் மேலே கூறியவற்றை விட இன்னும் அதிகமாகப் புகழ்வார்கள்!

 

நூல் பற்றிய மேலும் சில விவரங்கள் அடுத்த கட்டுரையில்!

***********

  

To Increase Your Life Span, To Decrease Your Life Span (Post No.2873)

curd-rice

Compiled by London swaminathan

 

Date: 6 June 2016

 

Post No. 2873

 

Time uploaded in London :–  16-29

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

Age old Indian wisdom about everything under the sun was summarised in Sanskrit couplets and was followed by our forefathers. Even today those couplets remain relevant and useful. Here below are two couplets which say what increases your life span and what factors cause a decreased life span.

 

Vrddaarko homa dhuumasca baalastrii nirmalodakam

Ratrau kshiiraannabuktisca aayurvrddhir dine dine

 

Evening sun light, smoke form the fire sacrifice (Havan or Homa smoke), marriage with a younger girl, crystal clear pure water, milk rice in the night increase your life span every day.
What is not good?

Baalaarkah pretadhuumasca vrddastrii palvalodakam

Ratrau dadhyaannabuktisca aayu: kshiinam dine dine

 

Morning sun light, smoke for the funeral fire, marriage with a girl older than you, muddy impure water, yogurt (curd) rice reduce your life span every day.

 

Another couplet in the book written by Susruta divides Ayurveda into eight minor divisions. This shows that they have very clear idea about the needs of the patients:-

milk-yoghurt-3-2_0

1.Salyam:-

Sugery

2.Saalakyam:-

Diagnosis

3.Kaaya chikitsaa:-

Body care and Treatment

4.Bhutavidyaa:-

Mental Health, treating mentally sick patients

5.Kaumaarabrutyam:-

Treatment of Child’s diseases (paediatrics)

6.Agatatantram:-

Anti dote to poisons

Treating patients affected by poisons

7.Rasaayana tantram:-

Chemical or medical treatment for longevity

8.Vaajikarana:-

Sexual health, curing impotency and increasing sexual vigour.

 

–Subham–

தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? (Post No 2872)

aryakumari1

Research Article written by London swaminathan

 

Date: 6 June 2016

 

Post No. 2872

 

Time uploaded in London :–  15-33

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

arya2

கடந்த 100 அல்லது 200 ஆண்டுகளில்  சாதனை புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே காணமுடிவதில்லை. ஏன் இப்படிக் கடந்த கால பெண் எழுத்துச் சிற்பிகளை மறந்தார்கள் அல்லது ஒதுக்கினார்கள் என்பது ஒரு புதிராக இருக்கிறது. இவ்வளவுக்கும் அசலாம்பிகை அம்மையார் போன்றோர் திரு.வி.க. போன்றோரின் நல்லாசிகளைப் பெற்றுள்ளார்கள்!

 

உலகிலேயே அதிக பழைய பெண் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உடையது பாரத நாடுதான். ரிக்வேதத்தில் 20-க்கும் மேலான பெண் கவிஞர்களும், அதற்கு 1500 ஆண்டுகளுக்குப்பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களும் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே. ஆனால் அவ்வையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என்ற பெயர்களைத் தவிர, பாமர மனிதனுக்குப் வேறு பெயர்கள் தெரியுமா என்பது சந்தேகமே. இன்றைய பத்திரிக்கைகளில் எழுதும் பெண்கள் பெயரையும், நடிகைகள், பாடகிகள், நடன மாதர்கள் பெயரை மட்டும் எல்லோரும் சொல்லிவிடுவர்.

 

அசலாம்பிகை, வாலாம்பாள், பண்டிதை விசாலாக்ஷ்மி அம்மாள், அம்புளு, பாலாமணி என்று பெயர்களை அடுக்கினால், யார் இவர்கள்? பழங்காலக் கதைகளில் வரும் கதா பாத்திரங்களா? பெயர்களே பழைய பத்தாம் பசலிப் பெயர்களாக உள்ளனவே என்று வியப்பார்கள். கோலங்கள், சமையல் கலை பற்றிய பல புத்தகங்களைப் பெண்கள் எழுதியதில் வியாப்பொன்றும் இல்லை. ஆனால் இங்கே தரும் பட்டியல் கதை, கவிதை, நாடகம் எழுதிய பெண்களாவர்.

 

நான் லண்டனில் வாரந்தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போய் பழைய புத்தகங்களைப் பார்ப்பதால் இவர்களைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர்களுடைய புத்தகங்களைத் தொட்டு வணங்கும் பாக்கியமும் கிடைத்தது. அத்தனையையும் படிக்க நேரம் போதவில்லை. “பேஸ்புக்” -கில் அவ்வப்பொழுது இந்த நூல்களின் படங்களையும், முகவுரை, விமர்சனம் போன்ற விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறேன்.

 

பழைய நீதி நூல்களிலும் புராணங்களிலும் போற்றப்படும் பண்புகளைப் போற்றும் வகையில் பல பெண்களும் நாவல்களை எழுதியுள்ளனர். ஆரிய சிகாமணிகளே! என்று அவர்கள் வாசகர்களை அழைப்பது “ஆரிய = பண்பாடுமிக்க” என்ற உண்மைப் பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்

IMG_3996 (2)

இதோ ஒரு சின்னப் பட்டியல்:–

 

1.அசலாம்பிகை அம்மாள்:

புத்தகங்களில் இவர் பெயர் ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மாள் என்று காணப்படுகிறது. இவர் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையை காந்தி புராணம் என்ற பெயரில் மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கிறார். (நான் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டது 3 பாகங்கள்) 1921 முதல் 1924 ஆம் ஆண்டு வரை இவை வெளியாகியிருக்கின்றன. தமிழ் அறிஞர் திரு. வி.கலியாண சுந்தர முதலியார் எழுதிய முகவுரையில் இவரைப் பாராட்டி எழுதி இருக்கிறார். தமிழில் காரைக்கால் அம்மையாருக்குப் பின்னர் அந்தாதிப் பாட்டு எழுதிய பெண்மணி இவர்தான்!! ஆண்களில் பலர் அந்தாதி எழுதினர். ஆனால் பெண்களில் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் ஒரு சாதனை செய்தார். காந்தியின் வரலாற்றைக் கவிதையில் எழுதுவதே கடினம். அதையும் அந்தாதிப் பாட்டுகளாக எழுதுவது அதைவிடக் கடினம்!

 

இவர் திண்டிவனம் தாலுக்கா இரட்டணையில் 1875ல் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்ததால் இவரது தந்தை பெருமாள் ஐயர், இவரை திருப்பாதிரிப்புலியூரூக்கு அழைத்துச் சென்று தமிழும் சம்ஸ்கிருதமும் கற்பித்தார். பின்னர் இவர் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். பெண் விடுதலை, நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். இவரை திரு.வி.க. ‘தற்கால அவ்வையார்’ என்று அழைத்தார். அசலாம்பிகை அம்மையார் எழுதிய பிற நூல்கள்:- திலகர் புராணம், திருவுடையூர் தல புராணம், திருவாமாத்தூர் புராணம், இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல், ஆத்திச் சூடி வெண்பா, குழந்தை சுவாமிகள் பதிகம்

IMG_4175

IMG_4176

 

IMG_4186

 

 

 

 

 

IMG_4189

IMG_4190

2.வி.எஸ்.வாலாம்பாள் அம்மாள்:-

வேதாந்தப் பாட்டுகள் என்ற பெயரில் இவர் தொகுத்து வெளியிட்ட நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. 1907ஆம் ஆண்டு பதிப்பு இது. ஜீவ நாடகம் முதலிய அத்வைதப் பாட்டுகளும் பஞ்சீகரண மகா வாக்கியமும் என்று 1908ல் ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில் பலவர்ண இணைப்பு வரைபடமும் உள்ளது. கிடைக்கும் பல பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதாக அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இவருக்கு அத்வைதத்தில் உள்ள ஈடுபாடும் ஞானமும் அந்தத் தொகுப்பிலேயே தெரிகிறது.

 

இவர்பின்ன வெளியிட்ட நூல்கள்; வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டமுள்பட) ஞான ராமாயனக் கப்பலும் (இரண்டாம் பதிப்பு), குசல வாக்கியம்,  அனந்தங்காடு ஸ்ரீ பார்வதியம்மன் சோபனம்.

இவர் புத்தகம் கிடைக்கும் இடம் என்று தனது பெயருடன், போஸ்டாபீசுக்கு பக்கத்து வீடு, எழும்பூர் என்று எழுதி இருப்பதால் எழும்பூர்வாசி என்பது தெரிகிறது.

IMG_2527IMG_2534

3.அம்புளு:

இவர் 1910 ஆம் ஆண்டில் “அப்பாசாமி சாஸ்திரி” என்ற தமிழ் நகைச்சுவை நூலை எழுதியுள்ளார்.

4.கே.அலர்மேல் மங்கை:

பண்டிதை ஸ்ரீமதி கா.அலர்மேல் மங்கை என்ற பெயர், ‘திராவிட மதம்’ என்ற நூலின் ஆசிரியராக காணப்படுகிறது. இது 1914ல் வெளியான நூல்.

 

5.வள்ளியம்மன் சோபனம்:

அலமேலு அம்மாள் என்பவர், பாலக்காட்டிலிருந்து 1915-ல் வள்ளியம்மன் சோபனத்தை வெளியிட்டுள்ளார்.

IMG_5910 (2)

6.பண்டிதை விசாலாக்ஷியம்மா:

கடந்தகாலத்தில் அதிக நூல்களை எழுதிக் குவித்தவர் பண்டிதை விசாலாக்ஷியம்மா. இவர் கதைகளையும், நாவல்களையும் எழுதியர். இவர் எழுதிய கதைகள்:-

 

மஹேச ஹேமா என்ற நாவலை 1912ம் வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்திலேயே இவருடைய படைப்புகளின் நீண்ட பட்டியல் இருக்கிறது.

லலிதாங்கி, ஜலஜாக்ஷி, தேவி சந்திரபிரபா, ஜோதிஷ்மதி, நிர்மலா,ஆனந்த மஹிளா, ஹேமாம்பரி, ஸரஸ்வதி, கௌரி, ஞானரஞ்சனி, ஸுஜாதா, வனஸுதா, ஜெயத்சேனா, மஹிஸுதா, ஸ்ரீமதி ஸரஸா, இரட்டைச் சகோதரர்கள், விராஜினி, ஆரியகுமாரி, ஸ்ரீகரீ, ஜ்வலிதாங்கி

 

ஒவ்வொன்றும் எட்டு அணா விலை உடையது. 1908க்கும் முன்னரே இவர் 10 நூல்களை எழுதியது 1908 ஆம் ஆண்டு வெளியான ஸுஜாதா முதல் பக்கத்திலிருந்து தெரிகிறது. வித்யா குரு வி.நடராஜ அய்யருக்கு அதை சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்தான் இவரை எழுத்துத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர்.

 

லோபகாரி பத்திரிக்கைக்கு ஆதரவு கோரியும் விசாலாட்சி எழுதியுள்ளார்.

பின்னர், இவர் தன்னை “எடிட்டர், ஹிதகாரிணீ, மயிலாப்பூர்” என்றும் எழுதி இருப்பதால் இவர் சென்னையில் வசித்தவர் என்பது தெரிகிறது.

 

IMG_5914 (2)

7.ஸ்ரீமதி பாலம்மாள்

இவர் எழுதிய நூல்:- ‘சாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம்’

டாக்டர் ஏ.ஆர்.வைத்தியநாத சாஸ்திரியார் அவர்களின் குமாரத்தியாகிய ஸ்ரீமதி பாலம்மாள் இயற்றியது,என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். வெளியான ஆண்டு 1914.

பாலம்மாள் முன்னுரையும் இதிலுள்ளது.

 

8.கிருஷ்ணம்மாள்:

ஸ்ரீ மஹாபக்த விஜயம் (ஞானேசுவர சரித்திர கீர்த்தனைகளும், பக்தி வைராக்கிய கீர்த்தனைகளும்) – என்ற நூலில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி பிரம்மஸ்ரீ கிருஷ்ணம்மாளவர்களால் இயற்றப்பட்டன என்று அச்சிடப்பட்டுள்ளது. வெளியிட்ட ஆண்டு 1915

 

9.ராதாமணி

ஸ்ரீமதி ராதாமணி எழுதிய “பிரசன்னகுமாரி” என்ற நூல் 1937ல் தஞ்சாவூரில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பின்கீழ் பழங்கால தமிழ் நாடகம் என்று எழுதியுள்ளார். விலை 12 அணா.

IMG_5957 (2)

10.சாமுவேல் அம்மாள் மலைமகள்

இல்லற இன்ப இரகசியம் என்ற கிறிஸ்தவ சமய நூலை ஏ.எம்.பி.சாமுவேல் அம்மாள் இயற்றியுள்ளார். விலை 10 அணா. இந்திய கிறிஸ்தவ லிடெரேச்சர் சொசைடி இதை வெளியிட்டது.

11.மலைமகள்

மலைமகள் என்ற பெயரில் அமிருதவல்லி என்ற நாவலை ஒரு  பெண்மணி எழுதியிருக்கிறார். இதை வெளியிட ஊக்குவித்த விசாலாக்ஷ்மி அம்மாளுக்கு அவர் நூல் முகவுரையில் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.

 

மேலே கண்ட நூல்களில் பெரும்பலானவை 100 ஆண்டுகளுக்கு முன் வெளியானவை. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாரதி கண்ட கனவு அவர் வாழ்ந்த காலத்திலேயே ஓரளவு நிறைவேறியதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

நூற்றாண்டுக்கு முன் பெண்கள் ஆற்றிய எழுத்துத்துறை சேவை, டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்குரியது. பிரிட்டிஷ் லைப்ரரியிலும், அது போன்ற பழைய லைப்ரரிகளிலும் நிறைய நூல்கள், காத்திருக்கின்றன.

–சுபம்–

 

 

வெற்றிக்கு வழி! (Post No.2871)

Success-Motivate

Article written by S.NAGARAJAN

 

Date: 6 June 2016

 

Post No. 2871

 

Time uploaded in London :–  4-50 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

வெற்றிக்கு வழி!

 

ச.நாகராஜன்BusinessFunnel

நான் யார்?

 

இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன?  நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?

எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?

 

என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?

 

பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?

எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)

எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?

எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

 

வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!

 

 

Who am I?

What are the present time and place and what good or evil qualities in evidence?

Who are my enemies, and who are my allies?

What power have I?

 

What means of carrying out a useful plan?

What store of good fortune have I?

What continuance of prosperity?

And what should be my reply if my words are rejected?

Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.

( Translation by F.Edgerton)

 

ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.

 

இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.

 

சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:

 

கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:

 

கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I

 

சம்பத்தே: கோ அனுபந்த:  ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச  மே ஸ்யாத்

 

இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த  II:

வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.

 

உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.

 

ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!

******************