Research Article by London swaminathan
Date: 8 January 2017
Time uploaded in London:- 6-28 am
Post No.3524
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்
இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே
—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்
யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.
இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.
1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்
3.இப்பி = முத்துச் சிப்பிகளும்
4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்
5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்
6.நந்து = சங்கும்
7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு
8.மீன்றலை = மீன் தலை
9.கொக்கு= கொக்கின் தலை
10.நளினம் = தாமரை
11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து
12.சாலி = செந்நெற் கதிர்க்குலை
13.கழை = மூங்கில்
14.கன்னல் = கரும்பு
15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்
16.கட்செவி = பாம்பு
17.கார் = மேகம்
18.இந்து = சந்திரன்
19.கரா =முதலை
20.உடும்பு= உடும்பின் தலை
Nose ring with pearls; picture from wikipedia
காளிதாசனும் இதையே சொல்கிறான்:
ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!
முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-
சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.
காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)
யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;
தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-
முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173
காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.
பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.
xxx
Ambergris from Sperm Whale used in perfumes
கீழ்கண்டபகுதி நான் எழுதிய பழைய கட்டுரையிலிருந்து:-
வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.
முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:
த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி
முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி
——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81
பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.
வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும் கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.
xxx
கடல் தரும் ஐந்து செல்வங்கள்
ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
நீர்ப்படும் உப்பினோடைந்து
இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்
ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு, பவளம், முத்து, உப்பு என்பன
அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
Amber from trees with insects trapped inside.
MY OLD ARTICLES: _
Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014
http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html
1)Lord Krishna’s Diamond in USA? – posted on 23 April 2012
https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/
2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?
http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html
3)Gem Stones in Kalidasa and Tamil Literature
13th February 2012
http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html
ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!! Posted on 12 -2 -2015
–subham–
You must be logged in to post a comment.