Did Hindus sacrifice 184 Human beings in Purusamedha Yajna?(Post No.4001)

Research Article Written by London Swaminathan
Date: 14 June 2017
Time uploaded in London- 19-58
Post No. 4001
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

Foreigners happily described the Asvamedha Yajna where a horse was sacrificed by the Kshatriyas, the ruling caste. 200 more animals are also listed by the Yajur Veda as victims in the same Yajna (Fire Sacrifice); but the surprising thing is many animals are not at all identified! Vedas are very old and no one knows the meaning of several words! Another surprise is that the listed animals were not thrown into fire. they were symbolically tied to the post and then released. This came to my notice from a 2000 year old Tamil poem in Akananuru. In a poem about love a simile is used about the tortoise that came from the fire altar.

 

Even if we believe that a horse was killed in that sacrifice, the number of kings who performed Asva medha are under 20 in 5000 years! Many of them are not historical personages! When we compare this with the number of animals killed every minute now and in the ancient times are huge and incomparable.

 

There is another proof in Yajur Veda where paddy grains were sacrificed instead of meat (Satapata Brahmana 1-2-3-7-9). The disciple asked the Guru for the reason. He told him that with the ghee the particles of paddy looked like meat. This is the second proof. And there is one more proof in the Yajur Veda.

The Purusamedha Yajna (Human Sacrifice) Yajna is explained in Vajasaneyi Samhita of YV chapters 30 to  36. There are 184 different human beings doing various jobs and people suffering from diseases are listed. Even a leper is listed in the list of victims. But in the massive Hindu scriptures, there is not a single example of human sacrifice. One instance of a boy tied to a post rescued by Vishvamitra also said that he was not sacrificed.

 

Foreigners kept quite when it came to Purusamedha. The point proved here is that when the Vedas say “victims at a sacrifice”, what they meant was the sacrifice was done for the benefit of all those kinds in the list. Otherwise why should they list a dwarf, a blind, a leper, a lame etc. In fact, the lists show the composition of the Vedic society and the sacrifice was done for the benefit of 184 different kinds of people. No archaeological or inscriptional evidence came to light so far about actual sacrifice. In fact, the various professions received a recognition through this sacrifice.

Sacrifice= Fire ceremony

All other ancient cultures such as Aztec, Egyptian, Babylonian, Chinese have a clear description of such a sacrifice. Even the tribal Khonds did it like the Mayan and the Aztecs.

 

Some examples of unidentified animals and strange victims are given below: –

 

 

Aja-gara (goat-swallower)

It occurs in the Atharva veda and in the list of animas at the Asvamedha as the name of a boa-constrictor. Elsewhere it is called Vahasa. It denotes a person at the snake feast in the Pancavimsa Brahmana (Please note the confusion -person, snake!)

 

Anu-ksatr

This word occurs in the list of victims at the Purusamedha and means, according to Mahidhara, an attendant on the door-keeper and according to Sayana an attendant on the charioteer (The meticulous details show that he was not sacrificed, his welfare was also taken into account).

Abhi-krosaka

This word designates one of the  victims at the Purusamedha, meaning, PERHAPS, herald. The commentator Mahidhara renders it as reviler.

Abhisektr

The sprinkler who sprinkles water on the king during his consecration is also one of the victims!

Purusa Mrga

This means the man wild beast, occurs as a victim in Asvamedha.It is translated as Ape and Man by others. Confusion!

Purusa Hastin

It means the man with a hand. Victim in the Asvamedha. Translated as Ape ( look at the confusion; previous word also translated Ape. God only knows whether apes existed. If they have existed why there is referece in other Hindu scriptures? ( My guess is it is not ape)

Puskara- saada

It means sitting on the lotus. one of the animal victims in the Asvamedha. It is translated as a Bird, a snake, a bee by different authors! Foreigners fantasies.

All these fellows have interpreted Brotherless girls as Prostitutes!

(I have given just some examples. If you read the interpretation of nearly 300 victims in the Asvamedha and 184 victims in the Purusamedha, you will have a good laugh! Their translations are good comedies in English! Please read all about the 484 victims!

Asvamedha= Horse sacrifice

Purusamedha=Human sacrifice.

 

–subham–

 

 

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

Thank you for reading our 4000 posts!

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

 

Written by London Swaminathan
Date: 14 June 2017
Time uploaded in London- 11-02 am
Post No. 4000
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

நம்முடைய முன்னோர்கள், தெய்வத்தின் மூலமாக, பெரிய நம்பிக்கை உணர்வை ஊட்டினர். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது நாம் அறிந்ததே; கோடீஸ்வர்களுக்கும் மனத்துயரம் உண்டு; பயம் உண்டு; உடல் உபாதைகளும் உண்டு; சாலையில் வசிக்கும் ஏழைகளுக்கும் இன்பம் உண்டு. எல்லோரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று உறுதிபடக் கூறுகிறார் திருஞான சம்பந்தர். இதை அவர் சொன்னபோது அவருக்கு 16 வயத்துக்கும் குறைவு. இறைவனின் உரையை தனதுரையாக வழங்கியவர் சம்பந்தர். ஆகையால்தான் அதை நாம் வேத வாக்கியம் என்கிறோம்; தமிழ் மறை என்கிறோம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
 

 

சமயச் சொற்பொழிவாற்றுவோர் எல்லோரும் “லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து” என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி முடிப்பர். நல்ல மழை பெய்யட்டும்; நாடு செழிக்கட்டும்;

Thank you for supporting my two blogs

உயிரினங்கள் எல்லாம் சுகமாக வாழட்டும்; அரசர்கள் நன்முறையில் ஆட்சி செய்யட்டும்; உலகம் முழுதும் — மக்கள் யாவரும் – வாழ்க வளமுடன்! – என்று சொல்லி முடிப்பர். என்ன அருமையான சிந்தனை.

 

 

உலகில் காக்கை, குருவி, பசு, நாய் போன்ற ஏனைய உயிரினங்களுக்கும் சேர்ந்து பிரார்த்தனை செய்வர் இந்துக்கள்!

மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல்

முறைசெயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்மை

இறையவனிராமன்   வாழி இக்கதை கேட்போர் வாழி

அறைபுகழ்ச் சடையன் வாழி அரும்புகழ் ராமன் வாழி

–யுத்தகாண்டம், விடைகொடுத்த வாழ்த்து

 

இந்து மதம் விஞ்ஞான முறையில் அமைந்த மதம்; பாம்புகளும், வாழ்ந்தால்தான் எலிகள் குறையும்; அறுவடை பெருகும் என்ற அறிவியல் உண்மை அவர்களுக்குத் தெரியும் ஆதலால் அதற்கு நாக பூஜையும் செய்வர்; அதையும் தினமும் வாழ்த்துவர்.

கம்பன் ஆறு காண்டங்களிலும் இக்கருத்தைப் பல முறை பாடியிருப்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இதற்கு முன்னரே சம்பந்தர் (வாழ்க அந்தணர்

…), அதற்கும் முன்னரே இளங்கோ (சில ப்பதிகாரம்), ஓரம் போகியார் (ஐங்குறு நூறு) ஆகியோர் இவ்வாறு பாடியுள்ளனர்.

 

இதைத்தான் கம்பனும் சொல்லி வைத்தான்; இது பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை, கம்ப ராமாயண ஏட்டுப் பிரதிகளில் இருக்கிது; ஆனால் அச்சுப்பதிப்பில் இல்லை என்று காட்டிய பாடல் (காண்க- தமிழ் சுடர் மணிகள்)

Thank you all for your four million hits!

தொல்காப்பியர் அவரவர் குலதெய்வம் காப்பாற்றும் வாழ்த்து ஒன்றைத் தொல்காப்பிய பொருளாதிகாரத்தில் பாடுவார்:

 

‘வழிபடு தெய்வம் நின் புறங்காப்பப்
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து,
பொலிமின்’ என்னும் புறநிலை வாழ்த்தே;
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

-1367, பொருள் அதிகாரம்

 

“வழிபடும் தெய்வம் உன்னைக்  காப்பாற்றட்டும்;  நிறைய செல்வத்துடன் இன்பமாக வாழ்வாயாக! – என்பது இதன் பொருள்.

 

‘ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என்பது வள்ளலாரின் வேண்டு கோள்.

 

“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”- என்பது திருமூலரின் ஆசை.

 

‘இன்பம் இடயறாது ஈண்டும்’ (குறள் 369)

‘மன்னுயிர்க்கெல்லாம் இனிது’ (குறள் 68) என்பது வள்ளுவன் வாழ்த்து. எல்லா உயிர்களும் என்பது இந்து சிந்தனை; வேறு எங்கும் காண முடியாது.

 

“இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்” என்பது பாரதியின் உறுதி.

 

“இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”  என்பது அப்பர் பெருமான் அடித்துக் கூறும் உண்மை.

 

இப்படி எங்கு நோக்கினும் “எல்லோரும் வாழ்க, இனிதாக வாழ்க” என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.

 

 

உங்கள் ஆதரவினால்  4000 கட்டுரைகளை இந்த பிளாக்குகளில் ஏற்ற முடிந்தது! அனைவருக்கும் நன்றி.

எல்லோரும் வாழ்க; இனிதே வாழ்க!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! நன்றி.

 

–Subham–

‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு! (Post No.3999)

Written by S NAGARAJAN

 

Date: 14 June 2017

 

Time uploaded in London:-  6-13  am

 

 

Post No.3999

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 9-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங் யோஷிரோ நகாமட்சு!

ச.நாகராஜன்

 

      “கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு தாம்ஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார். – அறிவியல் தகவல்

     இன்றைய உலகில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான பேடண்டுகளை எடுத்து பேடண்ட் கிங் என்று பெயர் பெற்றிருப்பவர் யோஷிரோ நகாமட்சு (Yoshiko Nakamatsu) என்னும் ஜப்பானியர் தான்! 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பிறந்து இப்போது 89 வயதாகியுள்ள இவர் தான் ஃப்ளாப்பி டிஸ்கைக் கண்டுபிடித்தவர். தாமஸ் ஆல்வா எடிஸன் ஏராளமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தது போல இவரும் லீஃப் ஸ்பிரிங்குகளுடன் கூடிய குதிக்கும் ஷூக்கள், காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனை அதிகமாக்கும் நாற்காலி, செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி(CD), மூளைத் திறனைக் கூட்டும் சிகரட் போன்ற சாதனம், கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும் படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி உள்ளிட்ட சுமார் 4000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    6000 பேடண்டுகள் எடுப்பதும் 144 ஆண்டுகள் வாழ்வதுமே தன் லட்சியம் என்கிறார். பிரபலமான டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றவர் இவர்.

   ‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்ஸ் என்று ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம்  இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது!

    2013ஆம் ஆண்டு இவருக்குப் கான்ஸர் நோய் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்த இவரிடம் டாக்டர்கள் இன்னும் 15 நாள் தான் வாழ முடியும் என்றும் டிசம்பர் 31, 2015இல் இறுதி வந்து சேரும் என்று கூறினர். ஆனால் அதைப் பொய்யாக்கி தனது சிகிச்சையிலும் தானே புதுவழிகளை மேற்கொண்டு இவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.ஆலிவ் ஆயிலும் ஒய்னும் கலந்த கான்ஸரை எதிர்க்கும் தன்மை கொண்ட ஒரு கலவையைக் கண்டு பிடித்து தனது கான்ஸரைக் குணமாக்க அவர் முயன்று வருவது லேடஸ்ட் செய்தி!

   ஜப்பானிய டாக்ஷோக்களில் பிரபலமாகிய இவர் தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

   தான் எப்ப்டி இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிக்க முடிந்தது என்பதற்கு இவர் கூறும் காரணம் சற்று விசித்திரமானதுநீரில் மூழ்கி இருக்கும் போது மூச்சுத் திணறி ஆக்ஸிஜன் இல்லாமல் போகும் நிலையில் மூளையில் இவருக்கு ஐடியாக்கள் தோன்றுமாம். மூளை ஆக்ஸிஜன் இல்லாமல் அறவே செயல் இழந்து இறக்கும் நிலைக்கு வருவதற்கு அரை வினாடி முன்னால் அவருக்கு படைப்பாற்றல் திறன் கூடுமாம்.

   அத்துடன் அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை என்ற காம் ரூமும் (Calm Room) அவருக்கு உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

  வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான்  எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது என்கிறார்.

 

   சிறந்த கண்டுபிடிப்பாளரான நகாமட்சுக்கு அரசியல் ஆர்வமும் ஆசையும் நிறைய உண்டு. கண்டுபிடிப்பின் ஒரு அங்கம் தான் அரசிய்ல் என்பது இவரது கருத்து.

     டோக்கியோவின் கவர்னருக்கான தேர்தலில் பலமுறை போட்டியிட்டிருக்கிறார், வெற்றி தான் கிடைக்கவில்லை. ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

      2005ஆம் ஆண்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கப்படும் இக்நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. எதற்காக இந்தப் பரிசு என்றால் சுமார் 34 ஆண்டுகள் தான் சாப்பிடுவதற்கு முன் தன் உணவை விடாமல் போட்டோ எடுத்ததற்காக! ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காக அவரால் எடுக்கப்பட்ட போட்டோக்களே இவை! இக்நோபல் பரிசை மகிழ்வுடன் ஏற்ற இவர் அந்த விழாவில் தனது மருத்துவ நிலை பற்றி ஒரு பாடலையும் பாடினார்!

  நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு வாழ்நாள் தீர்க்கதரிசன விருது ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது

இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர்லவ் ஜெட் என்ற இவரது படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. அந்தரங்க ஜனன உறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டிய அதிசய படைப்பு இது. ‘ப்யான் ப்யான் பூட் என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

  இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

   ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாகி இளைய தலைமுறையினருக்கு இவர் ஹீரோ என்றால் இன்னும் பல ஜப்பானியருக்கோ இவர் கடவுளே தான்! புதுக் கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை   வென்றிருக்கும் இந்த புது படைப்புக் கடவுளின் புராணம் பெரியது, மகத்தானதும் கூட!.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படிப்பாலும் உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தனது இளமை நாட்களில் தன் குடும்பத்தின் வருமானத்திற்காக செய்தித்தாள்களை தினமும் விநியோகிப்பது அவரது வழக்கம்.

 

அவர் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணமும் கொண்ட்வர். 1979இல் நடந்த சம்பவம் இது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் அவர் திட்ட இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு சாடலைட்டை விண்வெளியில் அனுப்புவதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. ஆனால் சாடலைட் ஏவுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக  கம்ப்யூட்டர் ஏவுகணையைச் செலுத்துவதில் உள்ள ஒரு தவறைக் காட்டியது. ஆனால் அப்துல்கலாமோ அந்த எச்சரிக்கையை ஒதுக்கி விட்டு அதை விண்ணில் திட்டமிட்டபடி ஏவி விட்டார். இதைப்பற்றி நகைச்சுவையுடன் பின்னால் அவரே கூறியது: “மீடியாக்களுக்கு நான் மிகவும் பயந்தேன். அது விண்ணில் செல்வதற்கு பதிலாக வங்காள் விரிகுடாவில் விழுந்தது”

 

 

ஆனாலும் இஸ்ரோவின் தலைவரான சதீஷ் தவான் பத்திரிகையாளர் கூட்டத்தில், “இன்னும் ஒரு ஆண்டில் விண்ணில் சாடலைட்டைப் பறக்க் விட்டு வெற்றி பெறுவோம்” என்றார். அதன்படியே பின்னால் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது.

புருஷ மேத யாகத்தில் 184 மனிதர்களை பலியிட்டார்களா? (Post No.3998)

Research Article Written by London Swaminathan
Date: 13 June 2017
Time uploaded in London- 21-09
Post No. 3998
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

அஸ்வ மேத யாகத்தில் ஒரு குதிரை பலியிடப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். இதை நாம் அப்படியே எடுத்துக்கொண்டு நம்பினாலும் இதுவரை அஸ்வமேத யாகம் செய்த வரலாற்று அரசர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதிஹாச புராண புருஷர்களையும் சேர்த்தாலும் வெள்ளைக்காரர்களும் முஸ்லீம்களும் நாள்தோறும் கொல்லும் கோடிக்கணக்கான மிருகங்களைப் பார்க்கையில் இது கால் தூசுக்கு சமம். அதுமட்டுமல்ல அவர்கள் மாடுகள், கோழிகளைச் செய்யும் சித்திரவதைப் படங்களைப் பார்த்து, அழுதுவிட்டு, வெஜிட்டேரியன்களாக மாறிய வெள்ளைக்காரச் சிறுவர்கள் ஏராளம். இவர்கள் ஏன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது எவருக்கும் விளங்காது. நிற்க.

 

 

அஸ்வமேத யாகத்தில் 200 வெவ்வேறு வகையான உயிரினங்களை   பலியிட்டதாகச் சொல்லுவர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை. மேலும் அந்த உயிரினங்களின் பட்டியலில் பாதிப்பெயர்களுக்கு அர்த்தமே விளங்கவில்ல!. இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று ஒரு ஊகத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளனர்.

 

 

ஆனால் அக நானுற்றுச் செய்யுள் ஒன்றில் வேள்விக்  குண்ட ஆமை ஒன்று ஊர்ந்து வந்ததை ஒரு பாட்டில் காணும் போது அவர்கள் , பல உயிரினங்களை அடையாளபூர்வமாக ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு அவிழ்த்து விட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

 

மேலும் யஜூர் வேதத்தில் ‘நெல்’லை மாமிசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திய செய்தியும் உளது.

 

 

எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதி வெளியிட்ட யஜூர்வேதக் கதைகள் என்ற நூலில் கீழ்கண்ட கதை உளது:-

“ஆதியிலே யக்ஞம் செய்யுங்கால்

மனிதனை பலியயளிக்க தேவர்கள் நினைத்தார்கள்.  அவனை எண்ணியவுடன் அவனிடமிருந்த யக்ஞசாரம் சென்றுவிட்டது. உடனே ஒவ்வொரு மிருககங்களாக எல்லா மிருகங்களையும் அளிக்க எண்ணியவுடன்  அவைகளிடமிருந்து  யக்ஞசாரம் எல்லாம் சென்றுவிட்டன. எங்கு சென்றன என்று தேடியபோது அவை பூமியிலே சென்று மறைந்துவிட்டன. பூமியிலிருந்து எடுத்தவுடன் அது நெல் தானியமாயிற்று. இந்த நெல் தானியத்தை அளிப்பதே மிருக பலி அளிப்பது போலாகும் என்று ரிஷி ஒருவர் சொல்லியதற்கு அது எப்படியாகும்? என்று சீடன் ஒருவன் வினவினான்.

 

அதற்கு ரிஷி பதில் அளித்ததாவது:-

அதன் நுணுக்குகள் ரோமம் போலாகும். சலத்துடன் கலந்தால் அது மாமிசம் போலாகும். சுட்டால் அது எலும்பாகும்.  நெருப்பிலிருந்து எடுத்து நெய்யுடன் கலந்தால் தாது போலாகும்” (1-2-3-7-9)

இந்தக் கதையைப் பார்க்கையில் வேத காலத்திலேயே நெல் தானியத்தைப் “பலி” கொடுத்து ஒவ்வொரு பிராணியையும் பலியிட்டதாக எண்ணினர் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இதே போல புருஷமேத யக்ஞத்தில் 184 தொழில் செய்வோர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோரை அடையாளம் கூடக் காண முடியவில்லை.

 

ஆயிரக்கணக்கிலுள்ள இந்து சமய நூல்களில் அரிச்சந்திரன்   மகன்  ஒருவனைப் பற்றி மட்டுமே புருஷ மேதம் தொடர்பான செய்தி உளது. அதிலும் கூட அவனை விஸ்வாமித்ரர் கூட்டிச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆக புருஷமேத யாகத்தில் எவரும் பலியிட்டதாக எழுத்தில் கூட இல்லை. ஆனால் உலகில் போரில் பலியிடுவோரின், பலி இடப்படுவோரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இதைப் பறேறி வெளிநாட்டினர் எழுத நியாயமே இல்லை.

வாஜசயனேயி சம்ஹிதையில் அத்தியாயம் 36 முதல் 40 வரை பல புதுவகை யக்ஞங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்தப் புருஷமேதம்.

 

உலகில் கோண்டு (Khonds) இனப் பழங்குடி மக்கள், கெல்த் (Celt) இன மக்கள், எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், அஸ்தெக் (Aztec) நாகரீக மக்கள் எல்லோரும் உண்மையிலேயே மக்களைப் பலியிட்டதை விரிவாக எழுதி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட எந்த வருண னையும் நம் நாட்டிலுள்ள பல்லாயிரக் கணக்கா சமய நூல்களில் இல்லை. இது ஒரு பெரிய வித்தியாசம். இதுவே நமது கலாசாரம் பழங்காலத்தில்     மற்றவர்களை விட  எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தது என்பதைக் காட்டுகிறது. அஸ்வமேத யாகப் பட்டியலில் உள்ள 200-க்கும் மேலான உயிரினங்கள், புருஷ மேத யாகத்திலுள்ள 184 வகையான மனிதர்கள் — இவை எல்லாம் வெளிநாட்டுக் காரர்களுக்கு விளங்கவே இல்லை. யாகத்தில் பலியிடுவோர் பட்டியலில் குஷ்டரோகி முதலிய வியாதிக்காரர்களும் சேர்க்கப் பட்டிருப்பதால் அவர்கள் பலியிடப் படவில்லை; அவர்கள் எல்லோரும் நலம்பெற வேண்டுவதே புருஷ மேத யாகம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். யஜூர் வேதத்தில் ஒரு அத்தியாயம் முழுதும் புருஷமேதம் பற்றி இருக்கிறது. ஆனால் எவராலும் வாயே திறக்க முடியவில்லை!

Article related to this topic:-

தித்தியம், ஆமை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தித்தியம்-ஆமை/

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை (தித்தியம் ஆமை ) பற்றி சொல்லப்படுகிறதே; …

 

 

–சுபம்—

 

 

Buddha and Valluvar on Words and Deeds: Great Men Think Alike-3 (Post No.3997)

Buddha and Valluvar on Words and Deeds: Great Men Think Alike-3 (Post No.3997)

 

Written by London Swaminathan
Date: 13 June 2017
Time uploaded in London- 18-06
Post No. 3997
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

(Though I have posted upto part 7, part 3 is missing in the series. So I am posting it today)

 

Valluvar says in Tirukkural on Words and Deeds

It is harmful even to dream of association with friends, whose words and actions are disgracefully different (Kural 819)

Buddha says in Dhammapada

If a man speaks many holy words but he speaks and does not, this thoughtless man cannot enjoy the life of holiness; he is like a cowherd who counts the cows of his master –(Dhammapada 19)

 

All the Hindu scriptures insist if anyone has Tri Karana Suddhi—purity in three: Thoughts, Words and Deeds – then that person can do miracles. It is very easy to write about it or talk about it but very difficult to follow it.

 

Hindu ascetics became great when they practised what they preached and preached only what they practised.

xxxx

 

Valluvar says in Tirukkural on Giving Advice

To give advice is easy for all; but to act according to one’s advice is indeed difficult (Kural 664)

Buddha says in Dhammapada

Let him first find what is right and then he can teach it to others, avoiding thus useless pain.

If he makes himself as good as he tells others to be, then he is in truth can teach others. Difficult indeed is self-control  –(Dhammapada 158,159)

 

xxxx

Valluvar says in Tirukkural on Adultery and Lying

Valluvar deals with adultery in ten couplets in chapter 15. Buddha also deals with it in various places.

Valluvar insists speaking truth in ten couplets. Buddha also speaks about it in several couplets. Since they are considered part of FIVE GREAT SINS (Panca Maha Patakas), they repeat it as many times as possible. We will look at a few couplets:

The Ideal house-holder is who he will not be attracted by the feminine grace of another’s wife (Kural 147)

 

If a man could conduct himself true to his own self he would be in the heart of all in the world (Kural 294)

In all true scriptures, we have known, nothing is praised so highly as truthfulness (300)

(Eg. Harischandra, Rama, Gandhiji)

In the Hindu Gurukula education system, the first thing the child learns is Satyam Vada (speak the truth); Truth alone triumphs is also in the motto of Government of Tamil Nadu and Government of India. It is from the Mundakopanishad)

 

Buddha says in Dhammapada

He who destroy lives

who utters lies

who takes what is not given to him

who goes to the wife of another

who gets drunk with liquor

–he digs up the root of his life (Dhammapada 246,247).

—Subham–

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்! (Post No.3996)

Written by S NAGARAJAN

 

Date: 13 June 2017

 

Time uploaded in London:-  5-56  am

 

 

Post No.3996

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜூன் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்!

ச.நாகராஜன்

மனிதனின் செயல்பாட்டை நிர்ணயிக்க வல்ல முக்கியமான உறுப்பு மூளை. இதை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் அதிக ஆற்றலுடனும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாளுக்கு நாள் முன்னேறி வரும் மூளையியல் ஆராய்ச்சிகள் பல உத்வேகமூட்டும் உதவிக் குறிப்புகளை நல்குகின்றன.

மூளை ஆரோக்கியத்திற்கென மையம் ஒன்றை நிறுவியவர் சான்ட்ரா பாண்ட் சாப்மேன். (Sandra Bond Chapman Ph.D.) டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தப் பெண்மணி ‘மேக் யுவர் ப்ரெய்ன் ஸ்மார்டர் (Make Your Brain Smarter)  என்ற நூலை எழுதியுள்ளார். மூளை ஆற்றலை மேம்படுத்த  அவர் கூறும்         வழிகளில் முக்கிய,மான சிலவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம் :

அறிவியலின் வேகமான முன்னேற்றத்தால் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய காலத்தை ஒப்பிடும்போது இது அதிகம். என்றாலும் கூட மூளை ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்பவர் மிகச் சிலரே. சிறிது ஆர்வம் இருந்தால் கூட போதும், ஒருவர் தன் மூளை ஆற்றலை வெகுவாக முன்னேற்றிக் கொள்ளலாம்.

புதிய் விஷயங்களில் ஆர்வம் காட்டுவது, மூளைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது, தனக்கென பிரத்யேகமான சில பொழுதுபோக்கு ஹாபிகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்றவற்றால் மூளை ஆற்றல் மேம்படும்., நினைவாற்றலும் கூடும்.

போட்டி மிகுந்த இன்றைய நாட்களில் மூளையை கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். சிறிது நேரம் வேலை பார்த்தாலேயே மூளை களைப்புற்று சோர்வை அடைவது இன்றைய நாட்களில் பலருடைய அனுபவமாக ஆகி விட்டது.. இதற்காக வெவ்வேறு சுற்றுலா தலங்களை நாடி புத்துணர்ச்சி பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆனால் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சியை அன்றாடம் எடுத்து வந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமே!

 

எனக்கு கூர்மையான மூளை இல்லையே என்று ஏங்குவோருக்கு ஆறுதலைத் தரும் ஆறு வழிகள் இதோ:-

  • பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதைத் தவிருங்கள்

இன்றைய அவசர யுகத்தில் பலரும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய முயல்கின்றனர். மல்டி டாஸ்கிங் யுகம் இது என்று பெருமையாக வேறு சொல்லிக்  கொள்கின்றனர். மல்டி டாஸ்கிங் ஒருவரது மனோ ஆற்றலைக் குறைக்கிறது. மூளையைச் சீக்கிரம் சோர்வடையச் செய்கிறது. மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது. மாறாக ஒரே ஒரு காரியத்தை எடுத்துக் கொள்வது அதை செவ்வனே திற்ம்படச் செய்வது என்ற வழி முறையை மேற்கொண்டால் வேலையும் சிறப்பாக முடியும்; மூளையும் சோர்வடையாது.

2)  தேவையான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை அன்றாடம் ஒவ்வொருவருக்கும் உறக்கம் தேவை. தூங்கும் நேரத்தில் தான் மூளை உள்ளார்ந்த ஆழ்நிலை மட்டத்தில் தகவல்களை ஒருங்கு சேர்த்து இணைத்துக் கொள்கிறது. இரவில் வெகு நேரம் முழித்திருந்து தூக்கத்தை தியாகம் செய்தால் மூளை ஆற்றலையும் செயல் திறனையும் தியாகம் செய்ததற்குச் சமம்

  1. உடல்பயிற்சி தேவை

ஒரு நாளைக்கு 30 நிமிட திறந்த வெளி உடற்பயிற்சி செய்வது உத்தமம்..  வாரத்திற்கு கும்றைந்த பட்சம் நான்கு முறையாவது இந்த 30 நிமிடப் பயிற்சியை அவசியம் செய்தல் வேண்டும். இது நினைவாற்றலைக் கூட்டுகிறது. கவனக் குவிப்பை மேமபடுத்துகிறது. மனதை ஒருமைப்படுத்துகிறது. மூளையில் உள்ள் நினைவாற்றலுக்கான பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது

  1. முக்கிய விஷயங்களைத் தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் படித்தவற்றில் முக்கியமானவற்றின் சுருக்கத்தை தனியே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கோர்ஸ் அல்லது கருத்தரங்கம் சென்றீர்களா, உங்களுக்குத் தேவையான முக்கியமானவற்றைத் தனியே எழுதுங்கள். நல்ல புத்தகம் படிக்கிறீர்களா, அதன் அடிப்படை செய்தியை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய ஐடியாக்கள் அல்லது யோசனைகள் தனியே குறிப்பது, நல்ல கவிதை அல்லது மேற்கோள்களுக்கான தனி நோட்புக்கைப் பயன்படுத்துவது ஆகியவை மூளையின் நீண்ட கால நினைவாற்றலைக் கூட்ட வழி வகுக்கிறது. இது உலகளாவிய அளவில் உள்ள நல்ல கருத்துக்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளவும், அடிப்படை உண்மைகளைத் திரும்பத் திரும்ப பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.

5. முக்கிய விஷயங்களில் கூர்மையான கவனக் குவிப்பு தேவை

தேவையற்ற விஷயங்கள் மற்றும் தகவல்களைத் தூக்கி எறியுங்கள். தேவையற்றதை படிக்காமல், பார்க்காமல் இருப்பது மூளை செயல்பாட்டைத் திறம்படச் செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியம் வேண்டுவோர் ‘இன் டேக் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் உள் கிரகிக்கும் விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது  என்பது பற்றிய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

  1. உத்வேகத்துடன் இருங்கள்

எப்போதும் உத்வேகமூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை வேகமாகவும் மிக்க வலுவுடனும் மூளையில் நியூரல் கனெக்‌ஷன்களை – மூளைத் தொடர்புகளைக் கொள்ண்டதாகவும் ஆகிறது. உங்களுக்கு விருப்பமான விஷயங்களை இனம் காணுங்கள். அதில் அக்கறை செலுத்தி அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்து பரவ்சப்படுங்கள்.

 

ஆறு மனமே ஆறு, மூளையை மேம்படுத்தும் வழிகள் ஆறு!

இவற்றைக் கடைப்பிடித்தால் கூர்மையுடனும் ஸ்மார்ட்டாகவும் ஆகி விடலாம்!

****

 

 

 

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி (Post No.3995)

Written by London Swaminathan
Date: 12 June 2017
Time uploaded in London- 20-12
Post No. 3995
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

நம்மில் பலருக்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் நமது பேச்சுதான். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ (நுணல்= தவளை) என்பது போல எதையாவது பேஸ்புக் ( Facebook) -கிலோ,  ஈ மெயி (E mail) லிலோ, கட்டுரையிலோ எழுதி வைப்போம்; அல்லது வீட்டில் மனைவியிடம் ஏதாவது திட்டி வைப்போம்; அதுவுமில்லாவிடில் அலுவலகத்தில் வேண்டாத உரையாடலில் ஈடுபட்டு அதிகாரியைப் பற்றி ஏதாவது சொல்லி இருப்போம். அதை அதிகாரியிடம் போய்ச் சொல்லிக் கொடுத்து பதவி உயர்வு பெறவும் சலுகைகளைப் பெறவும் ஒரு கும்பல் இருக்கும்.

 

 

இப்படி எல்லாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கத்தான் வள்ளுவன்  ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று சொல்லி வைத்தான். ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? நம்மால், சாப்பாட்டு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை; பேச்சு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

இப்படிக் கட்டுபடுத்த முடியாதவர்களுக்கு ஒரு நல்ல வழியையும் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். பேசாமல் மவுனமாக இருக்கப் பழகிக்கொள் என்று

 

மௌனமாக இருந்துவிட்டால் அங்கு சண்டை , சச்சரவுகள், தகராறுகள் கலகங்கள் வெடிக்காது.

 

உற்றதொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம்

பற்று செபத் தோர்க்கில்லை பாவங்கள் — முற்றும்

மவுனத்தோர்க்  கில்லை வருகலகம் துஞ்சாப்

பவனத்தோர்க்  கில்லை பயம்

–நீதி வெண்பா செய்யுள்

 

தமக்கேற்ற தொழிலைச் செய்வோருக்கு பணப் பற்றாக்குறை வராது;

அன்போடு வழிபடுவோருக்கு கர்ம வினை என்பது ஒட்டாது;

சிறிதும் பேசாமல் மவுனத்தைக் கடைப்பிடிப்போருக்கு தகராறு, கலகம் என்பதே கிடையாது;

துஞ்சுதல் (உறங்குதல்) இல்லாத தேவர்களுக்கு  பயம் என்பதே இல்லை. (கண்ணை மூடினால்தானே பயம்!)

மவுனம் பற்றிய இதே கருத்து சாணக்கிய நீதியிலும் வேறு பல நூல்களிலும் உளது. இதோ சில பொன் மொழிகள்:-

 

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

xxxx

 

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

 

xxx

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

xxx

 

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

 

My old articles on Silence:

மௌனம் சம்மதத்துக்கு சமம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/மௌனம்-சம்மதத்துக…

Article No.1734; Date:- 20th March, 2015. Written by London swaminathan. Uploaded at London time 9-04 am. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்.

மௌனம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மௌனம்/

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள் … மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா).

 

–Subham–

More Wedding Anecdotes (Post No.3994)

Compiled by London Swaminathan
Date: 12 June 2017
Time uploaded in London- 11-03
Post No. 3994
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

Marie Antoinette’s Diary

Here is Marie Antoinette’s rather dreary account  of her wedding and honeymoon from her diary :-

Sunday, 13  Left Versailles.  Supper and slept at Compignee, at the house of M. de Saint Florentine.

Monday,14. Interview with Mme. la Dauphine

Tuesday,15–supped at La Muette . Slept at Versailles.

Wednesday 16– My marriage. Apartment in the gallery. Royal banquet in the Salle d Opera.

Thursday,17– Opera of “Perseus”.

Friday 18—Stag hunt. Met at La Belle image. Took one.

 

Saturday,19 —Dress Ball in the Salle de Opera, Fire works .

Thursday 31– I had indigestion.

 

XXXX

 

Matrimony and Purgatory!

Archbishop Ryan was one time attending confirmation in a smaller parish. The local pastor was giving the preparatory questions to one rather frightened little girl. He asked her to define the state of matrimony.

“It’s a state of terrible torment which those who enter are compelled to undergo for a time to prepare them for a better world”, she replied.

“No, no”, chided the rector,

“That is not matrimony. That is the definition of purgatory”.

“Leave her alone”, said the Archbishop, “perhaps the child has been shown the light”.

 

Xxx

Not Spirit, but Flesh!

 

Miss Drummond, the famous preacher among the Quakers some time ago, was asked if the spirit had never inspired her with thoughts of marriage

“No, friend, said she, but the flesh often has”

 

Xxx

She has no Burro!

Like many tourists, Lewis Cotlow, President of the Adventures Club, wondered why Mexican peons always ride on burros while their wives walk along behind. Finally, he stopped a peasant and asked him the reason.

The Mexican, looking very surprised, replied,

“But, Senor, my wife doesn’t own a burro”.

 

Xxx

 

Friends satisfied, enemies delighted!

Lord Lansdowne was speaking to Samuel Rogers about the marriage of a friend they both knew.

“She has made a good match”, Lansdowne ventured to remark.

I am not so sure about that, returned Rogers dubiously.

“No, why not? All her friends approve it”.

“Then, said Rogers,” she is able to satisfy everyone. Her friends are pleased and her enemies are delighted.”

—Subham—

 

“ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன் (Post No.3993)

Written by S NAGARAJAN

 

Date: 12 June 2017

 

Time uploaded in London:-  6-59  am

 

 

Post No.3993

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாக்யாவில் வெளி வரும் அறிவியல் துளிகள் தொடரில் 19-5-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

“ஆற்றல் புரட்சி செய்யும் 13 வயதுச் சிறுவன்

ச.நாகராஜன்

“ மின்சாரம், நீர், ஏன், இசை நிகழ்ச்சி கூடத்தான் – இவை எல்லாவற்றையுமே நாம் எளிதில் கிடைப்பவையாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த வரங்களை எண்ணிப் பாருங்கள் – டாமியன் மார்லே

 

    பதிமூன்றே வயதான ஒரு சிறுவன் உலகில் ஆற்றல் புரட்சியைச் செய்கிறான் என்றால் அது விழிகளை விரிய வைக்கும் ஆச்சரியச் செய்தி தானே

அதிசயம், ஆனால் உண்மை! அமெரிக்காவில் நெவேடா பகுதியைச் சேர்ந்த மாக்ஸ் லோகன் (Max Loughan)  என்ற சிறுவன் தான் பிறந்ததன் நோக்கமே உலகைபிரகாசப்படுத்தத் தான் என்று அடித்துச் சொல்கிறான்.

தந்தையின் பாய்லர் அறை தான் அவனது லாபரட்டரி. எப்போதும் ஒரு லாபரட்டரி கோட்டை அணிந்து வலம் வரும் இந்தச் சிறுவனுக்கு உத்வேகம் ஊட்டுவது ஐன்ஸ்டீனும் நிகோலா டெஸ்லாவும் தான்.

இன்றைய தேவை பவர் தான். இதை இலவசமாக எடுக்க முயன்றால் உலகின் சர்வ பிரச்சினைக்ளும் தீரும் என்று தீர்க்கமாகக் கூறும் லோகன் தனது இரட்டைபிறவியாகப் பிறந்த தம்பி ஜாக்கின் மீது வயர்களைச் சுற்றுகிறான்.

ஒரு காப்பி டின், கொஞ்சம் வயர்கள், இரண்டு காயில்கள், ஒரு ஸ்பூனை வைத்து அவன் உருவாக்கியது எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர்.

இந்தக் கருவியியை வைத்துக் கொண்டு வயர்களை வானத்தை நோக்கிக் காட்ட வானிலிருந்து ஹார்வெஸ்டர் மூலமாக ஆற்றலைப் பெறுகிறான். அதை .சி. மின்சாரத்திலிருந்து டி.சியாக மாற்ற தம்பியின் மீது சுற்றப்பட்ட வயரில் இணைக்கப்பட்ட எல்..டி.பல்புகள் பளிச்சென்று எரிகின்றன.

இந்தச் சிறிய கருவியை உருவாக்க ஆன செலவு வெறும் 14 டாலர்கள் தான். இதையே பெரிய அளவில் செய்தால் ஏராளமான மின்சக்தி கிடைக்கும்.

அதாவது படிம எரிபொருளான பெட்ரோல், டீஸல் போன்றவை இல்லாமல் விண்ணிலிருந்தே இலவசமாக ஆற்றலைப் பெற முடியும். படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் வாகனங்கள் கக்கும் புகை வளி மண்டலத்தை மாசு படுத்தாது. வளி மண்டலம் சுத்தமாக இருந்தால் உலகின் இன்றைய அபாயமானபூமி வெப்ப மயமாதல் என்பது நீங்கி விடும்.

ஆக, இலவசமாக ஆற்றலைப் பெகறுவது சாத்தியம் தான் என்பதை நிரூபித்துக் காட்டிய லோனை டி.விக்கள் மொய்க்கின்றன.

பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா 75 ஆண்டுகளுக்கு முன் வகுத்த கருத்தின் அடிப்படையில் அவர் செய்ய விழைந்த இலவச ஆற்றலைப் பெறும் உத்திக்கான கருவியை இப்போது செய்யும் லோகனைப் பாராட்டாதவரே இல்லை.

 

எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர் என்னும் கருவி எங்குமுள்ள எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றலைத் தன்னுள் பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு தேவையான இடத்தில் மின் சக்தியை வழங்கும்.

அபல்லோ 13 என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு பரபரப்பான காட்சி வரும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருக்கும் அதி புத்திசாலிகள் முடங்கி விட்ட விண்கலத்தை எப்படி மீண்டும் இயக்கி அதில் இருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை எவ்வாறு மீட்பது  என்பதைப் பற்றி தீவிரமாக விவாதிப்பர். அதில் ஒருவர், “நண்பர்களே, இது அனைத்துமே ஆற்றலைப் பற்றியது தான்! (Hey Fellows, It is all about Powr) என்று முத்தாய்ப்பாகக் கூறுவார். இந்த திரைப்படத்தின் பொருள் பொதிந்த இந்தக் கூற்று பிரபலமாகி விட்டது.

 ஆமாம், ஆற்றல் மயம் உலகம். ஆற்றல் இல்லையேல் உலகமே இயங்காது.

உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா (Nicola Tesla – பிறப்பு 10-7-1856 மறைவு 7-1-1943)வயர்களே இல்லாமல் மின்சக்தியை உலகெங்கும் வழங்குவது குறித்து ஆழ்ந்து சிந்தித்து ஒரு காயிலை 1891ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அது நிகோலா காய்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் இந்த அரிய வயர்கள் இல்லாத மிவின்சக்தியைக் கண்டுபிடிக்கப் போகும் போது ஏற்பட்ட விபத்தினால் அதன் பயன்பாடு தடைப்பட்டது.

  அவரது டெஸ்லா காயிலை மேம்படுத்தி உருவாக்கிப் பயன்படுத்தும் முயற்சியில் உலகின் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

  இதில் வெற்றி பெற்றால் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போகும்.  இந்த வகையில் 13 வயதுச் சிறுவன் லோகன் உத்வேகமூட்டும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துச் சாதித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அனலாடிகல் ஜாமட்ரியின் தந்தை என்று கூறப்படும் பிரபல விஞ்ஞானியான ரெனே டெஸ்கார்டெஸ் (1596-1650) இளமையிலேயே மேதையாக விளங்கியவர். ஆனால் அவருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் கிடையாது. தினமும் காலையில் 11 மணிக்கு முன்னதாக அவர் நிச்சயமாக எழுந்திருக்க மாட்டார். அவர் இராணுவத்தில் பணியாற்றியபோது கூட இந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. இராணுவத்தில் அவரது உயர் அதிகாரிகளோ அல்லது அவரது பள்ளியில் அவருக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களோ இதை மாற்ற முயற்சிக்கவில்லை. அவரது காலை பழக்கம் அப்படியே தொடர்ந்து வந்தது.

பின்னால் தனது இந்தப் பழக்கத்தைப் பற்றி அவர் கூறுகையில் தனது எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தத்துவ சிந்தனைகளும் காலையில் படுக்கையில் படுத்திருக்கும்போதே தோன்றின என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த சந்தோஷகரமான காலைத் தூக்கம் 1649ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஸ்வீடனின் ராணியான கிறிஸ்டினா அவரைத் தனக்கு ஜாமட்ரி சொல்லித் தரும் பணியைத் தந்தார். ஆகவே அவர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ராணிக்கோ காலை ஐந்து மணிக்குத் தான் கணிதம் கற்க நேரம் இருந்தது. ஆகவே டெஸ்கார்டெஸ் காலையில் எழுந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

 

காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற் அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அத்துடன் காலையில் இருளில் பனி படர்ந்த குளிர் காலத்தில் நடந்து ராணியின் அரண்மனைக்குத் தொடர்நது சென்று வந்ததால் அவருக்கு நிமோனியா ஜுரம் வந்தது. அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக ஆனது.

காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் ஒரு சின்ன கெட்ட பழக்கம் ஒரு விஞ்ஞானிக்கு எமனாக அமைந்தது துரதிர்ஷ்டமே!

***

 

 

 

 

Significance of Neem Tree in Hinduism (Post No.3992)

Compiled by London Swaminathan

Date: 11 June 2017

Time uploaded in London- 13-17

Post No. 3992

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

contact: swami_48@yahoo.com

 

Some interesting stories about Neem trees (Margosa tree, Veppa Maram in Tamil) were compiled by Rev Osborn Martin in  his book the ‘Gods of India’, published in 1914.

 

“There is a special sect of Sun Worshippers called the NIIbaarak. They are Vaishnavas and, as their name implies, they worship the ‘Sun in the Neem Tree’.

Botanical name of neem tree: Azadirachta indica; Family- Meliaceae

The story runs that their founder was a Bairagi ( a wandering ascetic) to dine with him. He prepared the dinner, but unfortunately delayed to call his guest until the sun had well nigh set. Now the holy man was forbidden by the rules of his order to eat except during the day time, and was afraid he would be compelled to refuse the dinner; but at the solicitation of his host, Surya Narayan (Suuraj Naaraayan), the Sun God, descended on the Neem trees under which the feast was spread and continued beaming upon them till the feast was over”

(This is an extract taken from Popular Religion and Folk lore by Crooke).

“The neem tree in connection with the godlings of disease who are supposed to reside in it. In particular, it is occupied by Sitala (Siitalaa), the small-pox deity, and her six sisters. Hence during the rainy weather when epidemics prevail women bathe, dress themselves in clean clothes, and offer rice, sandalwood, flowers, and sometimes a burnt offering with incense at the foot of this tree. The neem is also connected with snake worship, as its leaves repel snakes.

 

The leaves are used through out India for its curative and medicinal purposes. Wounds and sore are bound up in Neem leaves, and by mourners they ae used as a means of avoiding death pollution, or as a mode of driving off the evil spirit which accompanies the mourners from the cremation ground. After the cremation of a dead body, people in the funeral procession chew the Neem leaves and some water is sprinkled over them with a branch of the tree.

 

On the Hindu New Year’s Day it is considered essential for every Hindu to worship the Neem tree., and to eat its leaves mixed with pepper and sugar, that he may not suffer from sickness or disease during the year. In practice, very few worship the tree, but its leaves are generally eaten by most of the.

At child birth a branch of a neem tree is often set at the door of the chamber.

 

Nearly every Hindu villager cleaned his teeth with a twig of a Neem tree, till plastic tooth brushes were sold.

Test of Truth Speaking

It is used in the test of truth speaking and a few Hindus would date to speak a falsehood whilst under the shade of the tree. Sangam Tamil literature (Kalitokai, Palai Kali verse 37) says that if someone speaks falsehood under a tree, it would wilt and wither away.

Among some tribes, the Banjaras for instance, a jealous husband throws a branch of the Neem tree on the ground and says to his wife, “ If you are a true woman, lift that neem branch”.

My old articles on the same subject:

neem tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/neem-tree/

The sadhu instructed one of his disciples to bring a good quantity of neemleaves. These leaves are very bitter. He was asked to grind them and make Laddus …

Posted on 16 October 2015

Bodhi Tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bodhi-tree/

Tamils have been using Neem (Veppa Maram in Tamil வேப்ப மரம்) for ages to stop the virus of small pox. If one takes it from young age in the prescribed …

Posted on 3 October 2014

Banyan Tree and Sanatkumaras | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/banyan-tree-and-sanatkumaras/

Tamils have been using Neem (Veppa Maram in Tamil வேப்ப மரம்) for ages to stop the virus of small pox. If one takes it from young age in the prescribed …

Posted 25 November 2102

Indian Wonder – The Banyan Tree – South Indian Society

http://www.sisnambalava.org.uk/…/indian-wonder-the-banyan-tree-20130318043049.aspx

18 Mar 2013 – Reand and enjoy this article about “Banyan Tree” from Mr. Santhanam Swaminathan.

 

Tamarind Tree | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/tamarind-tree/

Tamils have been using Neem (Veppa Maram in Tamil வேப்ப மரம்) for ages to stop the virus of small pox. If one takes it from young age in the prescribed …

Posted on 26 March  2016

Magic of Trees! | Tamil and Vedas

Magic of Trees!

 

25 Nov 2012 – Magic of Trees! Picture shows Newton under Apple Tree. Hindu Saints composed Upanishads under the Himalayan Trees. Buddha attained …

 

Strange LUTA Disease in Kashmir! (Post No.3890); posted on 8 May 2017

 

–Subham–