உலக இந்து சமய செய்தி மடல் 27-6-2021 (Post No.9787)

BRHANNAYAKI SATHYANARAYANAN

COMPILED BY LONDON SWAMINATHAN 

Post No. 9787 

Date uploaded in London – –28 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com




இன்று ஞாயிற்றுக் கிழமை ஜூன் 27-ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர்
 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYANARAYANAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXX

வழக்கை சந்திக்க தயார் வி.எச்.பி.அறைகூவல்

நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்’ என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.


உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல் புரிந்துள்ளதாக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்திற்கு சந்தை விலையை விட குறைவாகவே கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:

ராமர் கோவிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது.

இதில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டும் எதிர்கட்சிகள், ஆதாரமில்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகாமல் உள்ளன. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது- பிரதமர் சிறப்புரை

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி திங்கட் கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். 

அப்போது, ‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி  வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள்  காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் என்றார். 

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை என தெரிவித்தார்.

TIMES SQUARE, NEW YORK, USA

யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.


இதைப்போல உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற

நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களை செய்து அசத்தினர்

XXX

ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை

மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.

இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

 கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.. 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை

நமது நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக மீண்டும் பாரத் என்றே மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் அறிவிப்பில்  கூறியிருப்பதாவது,
ஆங்கிலேயர்கள் கொடுத்த அடிமை பெயர் தான் இந்தியா…சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம்.

இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். இந்தியாவின் பண்டைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதே, நமது நாகரீகத்தின் ஆன்மாவாக திகழ முடியும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள் மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.

ஆகவே, அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?. இந்தியா என்னும் பெயரை சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் நமக்கு கொடுத்தனர். இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? நமது குழந்தைகளுக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.


கங்கனா நடித்த தலைவி ஜெயலலிதா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே தலைவி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போனது. அந்த படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்

XXX

காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.

இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது.

கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன

.கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

XXXX

கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை :அமைச்சர் பேட்டி

நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும் திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு திருக்கோயில் பணியாளர்களுக்கான கொரோனோ நோய் தொற்று பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

பின்னர்  செய்தியாளரிடம் பேசுகையில் இந்து அறநிலை துறை கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம்  கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி தற்போது தமிழகத்தில் 207.பேர பயிற்சி முடித்து  உள்ளனர்.சைவ மற்றும் வைணம்  வழிபாட்டு தலங்களில் பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மீண்டும் ஒரு  தேர்வு எழுத்திய  பின் கோயில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறது அதை உடனடியாக சட்டரீதியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்

XXXX

திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியாா் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வித்யாதான அறக்கட்டளைக்கு வித்யாதான அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலையாக ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.


அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். அந்தப் பக்தருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

XXXX

வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க  பாபா ராம்தேவ் முறையீடு

கடந்த மாதம், யோகா குருவான பாபா ராம்தேவ், ‘அலோபதி மருத்துவம் குறித்து வெளியிட்ட கருத்துக்களுக்கு  , இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அலோபதி மருந்துகள் குறித்த கருத்துகளை ‘வாபஸ்’ பெறும்படி, பாபா ராம்தேவிடம் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்று, பாபா ராம்தேவும், தன் கருத்தை திரும்ப பெற்றார்.எனினும், பாபா ராம்தேவுக்கு எதிராக, பல மாநிலங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், பாபா ராம்தேவ் முறையிட்டு உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:எனக்கு எதிராக, போலீசாரிடம் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

XXXX


இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவ


நன்றி, வணக்கம்


TAGS – TAMILHINDU, NEWSRPONDUP, 27621

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 27-6-2021 (Post.9786)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9786

Date uploaded in London – –28 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by SUJATHA RENGANATHAN 

XX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

  • Read by SUJATHA RENGANATHAN .


Xxx

Those alleging corruption in Ayodhya land deal should approach court if they have evidence: VHP

The Vishwa Hindu Parishad (VHP) on Saturday said those who have accused the Ram temple trust of corruption in the land deal in Ayodhya should go to court if they have evidence to back their claims.

AAP leader Sanjay Singh and former SP MLA from Ayodhya Pawan Pandey had recently alleged that a piece of land worth Rs 2 crore was purchased by the Shriram Janmabhoomi Teerth Kshetra Trust in Ayodhya at an inflated price of Rs 18.5 crore.

Dismissing the allegations as ”baseless”, VHP’s joint general secretary Surendra Jain Saturday said the Shriram Janmabhoomi Teerth Kshetra Trust conducted the land deal with ”utmost honesty and transparency”.

”There is no scam in it. If there is anything wrong, why don’t they go to court? They should move the court if they have any evidence,” he told reporters here, lashing out at the Aam Aadmi Party, the Samajwadi Party, the Congress and other opposition parties which have been demanding a probe into the deal. Singh and Pandey had alleged money laundering in the deal, and demanded a probe by the Central Bureau of Investigation (CBI) and the Enforcement Directorate (ED). The Shriram Janmabhoomi Teerth Kshetra Trust’s general secretary Champat Rai strongly dismissed the allegations, claiming the land was purchased at a price much lower than the prevailing market rate.

AAP Rajya Sabha member Singh told the media last week that he was preparing to take the matter to court.

”We are still waiting for that. Why haven’t they approached the court so far? They should do it. Truth will come out before everybody,” the VHP general secretary said.

XXXX

International Yoga Day News Highlights:

Prime Minister Narendra Modi on Monday said yoga remains a “ray of hope” as the world fights the coronavirus pandemic and asserted that in these difficult times it has become a source of inner strength.

Addressing the 7th International Yoga Day programme, Modi also said that in collaboration with the World Health Organization (WHO), India has taken another important step and now the world is going to get the power of M-Yoga application, which will have many videos of yoga training based on Common Yoga Protocol available in different languages of the world.

This will help us in making the ‘One World, One Health’ motto successful, he said.

“At a time when the whole world is fighting the coronavirus pandemic, yoga remains a ray of hope,” Modi said.

Yoga shows us the way from stress to strength and from negativity to creativity, he asserted.

xxx

Yoga included in govt school curriculum from Classes 1 to 10 in Haryana

Haryana Chief Minister Manohar Lal Khattar on Monday said that yoga has been included in school curriculum for classes 1 to 10 from the current academic session.

He was addressing an event here on the occasion of the International Yoga Day.

“…We have included yoga in school curriculum from this year for Classes 1 to 10 so that children make it a part of their daily lives,” Khattar said. “Like we need oxygen, food and water, likewise, to keep the body healthy yoga has its own importance. To inculcate the habit of practising yoga and to make it a part of students’ lives since childhood, we have decided to include it in school curriculum from this year,” he added.

XXXX

Times Square celebrates International Yoga Day with over 3,000 yogis

The seventh International Yoga Day was celebrated at the iconic Times Square in New York on Sunday. The day-long yoga festival with the theme of ‘Solstice in Times Square 2021’ was attended by more than 3,000 people where yogis, with their yoga mats and flexible bodies, filled Times Square to mark the start of summer.

Xxxx

xxxx

Ramdev moves SC against multiple FIRs over his allopathy remarks

Yoga guru Ramdev on Wednesday approached the Supreme Court seeking a stay on the proceedings in multiple cases lodged against him in various states over his alleged remarks on the efficacy of allopathy in the treatment of COVID-19.

Ramdev has sought protection from coercive actions in FIRs lodged by Indian Medical Associations’ (IMA) Patna and Raipur branches, and transfer of FIRs to Delhi.

He has also sought clubbing and consolidation of FIRs and stay of the proceedings.

Randev has been booked under sections 188 , 269, 504 of the Indian Penal Code (IPC) and other provisions of Disaster Management Act, 2005.

Xxx

Chardham yatra to open partially for locals from July 1

Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri will be opened for residents of Chamoli, Rudraprayag and Uttarkashi districts respectively from July 1 with a cap on the number of pilgrims.

Uttarakhand Cabinet on Friday decided to partially open the Chardham yatra for locals in limited numbers from July 1.

Briefing reporters about the cabinet’s decision, state government’s spokesman Subodh Uniyal said Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri will be opened for residents of Chamoli, Rudraprayag and Uttarkashi districts respectively from July 1 with a cap on the number of pilgrims to visit the temples daily.

A senior official will be appointed for each of the four Himalayan temples who will coordinate with the district administration concerned about the arrangement for pilgrims, he added.

Xxx

AMARNATH YATRA CANCELLED; ONLINE DHARSAN ARRANGED

The Jammu & Kashmir government has cancelled the annual Amarnath pilgrimage due to the prevailing Covid-19 situation after a discussion with Amarnathji Shrine Board members.

However, Shri Amarnath Ji Shrine Board said it will arrange online darshan for all the devotees worldwide.


The 56-day yatra to the 3,880-metre-high cave shrine of Lord Shiva, located in the upper reaches of Himalayas, was supposed to start from the twin routes of Pahalgam and Baltal on June 28 and culminate on August 22.


The pilgrimage was cancelled in 2020 as well due to the pandemic.

Xxxx

Siva Shankar Baba case: Police launch complaint cell

A statement issued by the police informed victims to contact Investigation Officer DSP Gunavarman on mobile number 98405-58992 and Inspector Renukadevi on 98406-69982.

Days after the arrest of Siva Shankar Baba on charges of sexually abusing girl students and a woman teacher for abetting the crimes, police have announced a complaints cell to encourage victims to file complaints. A statement issued by the police informed victims to contact Investigation Officer DSP Gunavarman on mobile number 98405-58992 and Inspector Renukadevi on 98406-69982.

Victims can also file complaints on inspocu2@gmail.com, The police assured to secure the identity of complainants.

xxx

Pak clothing brand apologises after sharing morphed picture of Hindu God

Wednesday 23rd June 2021 06:24 EDT

Pakistani womenswear brand, Generation, had mocked Hinduism by putting up a morphed image of a Hindu deity in their office. In its post, Hindu Samata said, “This famous Pakistani brand put up a disrespectful poster mocking a Hindu deity in their office.

 Pakistan has blasphemy laws that only apply to non-Muslims.

Generation had morphed the image of the Hindu deity and replaced the ‘astras’ with laptop and other items. The desecration of the Hindu Goddess by a brand, founded by a Pakistani husband-wife duo named Saad and Nosheen Rahman, did not go unnoticed. Hindu rights activist points out the dual standards of the Pakistani justice system.

Clothing brand tenders apology

Following the outrage on social media, Generation tendered an apology. In a statement, the brand said, “A few days ago a grave oversight occurred at the Generation HQ. An ignorant and insensitive image became public that was hurtful to our patrons, especially for those that represent the white in our flag (referring to minorities).”

It further added, “We are so so sorry! We pledge to strive to be better, to make better and more informed choices. We also pledge to conduct regular sensitivity workshops at the HQ to learn more about the people we share our country with. We hope you can forgive us, and that we can grow to be more sensitive and mindful as a community.”

XXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY SUJATHA RENGANATHAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

tags- Hindu news roundup,27621,

ஆங்கிலக் கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் (Post No.9785)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9785

Date uploaded in London – –28 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பிறந்த தேதி –அக்டோபர் 21,1772

இறந்த தேதி – ஜூலை 25, 1834

ஆங்கிலக் கவிதை உலகத்தில் மகிழ்ச்சியூட்டும்  கற்பனைமிக்க படைப்புகளைத் துவக்கிவைத்தவர் கோல்ரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE). தி ரைம் ஆப் தி ஏன்ஷியன்ட் மரினர் (THE RIME OF THE ANCIENT MARINER )கவிதை மூலம் ரசிகர்களின் நினைவில் நீங்காத  இடம்பெற்றவர்.

கோல்ரிட்ஜ் , ஒரு மதப் பிரசாரகரின் மகன். இங்கிலாந்தில் ஒரு கிராமப்புறத்தில் ஒன்பது பேருடன் பிறந்தவர் .லண்டனில் பள்ளிக்கூட படிப்பின்போது பிரபல எழுத்தாளர் சார்ல்ஸ் லாம்பு (CHARLES LAMB) டன் பழக்கம் ஏற்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும்காலையில் கவிஞர் ராபர்ட் சதேயுடன்  (POET ROBERT SOUTHEY) பரிச்சயம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து பென்சில்வேனியாவில் ஒரு லட்சிய சமுதாய அணியை (IDEAL COMMUNITY) உருவாக்க இருவரும் திட்டம் போட்டனர். ஆனால் அது நிறைவேறவில்லை.

இந்தத் தொடர்பு காரணமாக 1795-ல் சதேயின் காதலியின் சகோதரியை கோல்ரிட்ஜ் கல்யாணம் செய்துகொண்டார்.

1797ம் ஆண்டில் இயற்கையைப் போற்றும் புகழ்மிகு கவிஞர் வோர்ட்ஸ் வொர்த்து (Wordsworth) டன் நட்பு மலர்ந்தது. இருவரும்  சேர்ந்து லிரிக்கல் பாலட்ஸ் (Lyrical Ballads)  என்ற கவிதை நூலை வெளியிட்டனர்.

எளிய, அனறாடம் புழங்கும் சிறந்த மொழி நடையில் இவை  இருந்தன . இயற்கையை புதிய கோணத்தில் பார்க்கும் எண்ணத்தையும் உண்டாக்கியது . இதில் கோல்ரிட்ஜ் படைத்த ஏஷியன்ட் மாரினர் Ancient Mariner கவிதையும் அடக்கம். கடலில் பறக்கும் மிகப் பெரிய ஆல்பட்ராஸ்  (Albatross) பறவையை ஒரு மாலுமி கொன்ற பின்னர் ஏற்படும் துயரங்களை வருணிக்கும் பாடல் இது. இயற்கைக்கு எதிரான குற்றம் இழைத்தற்குக் கிடைத்த தண்டனை குறித்த கவிதை இது.

அவருடைய மற்ற சிறந்த கவிதைகளை குப்ளா கான், கிரிஸ்டாபல் கவிதைகள் ஆகும். இவை மர்மமும் அதிசயமும் நிறைந்தவை. குப்ளா கான் கவிதை வரிகளை இவர் கனவில் கண்டாராம்.

சொந்த வாழ்க்கையில் பல பிரச்ச்சினைகளை சந்திக்க நேரிட்டது. அபினி, கஞ்சாவுக்கு (Opium)  அடிமையானதே இதற்குக்காரணம். குடும்பத்தை விட்டு வெளியேறினார். ஆயினும் கவிதை, கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. கலைகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.

ஒரு கவிஞனின் பணி என்ன என்பதை ‘பயக்ராபியா லிட்டரேரியா’ (BIOGRAPHIA LITERARIA) என்ற நூலில் எழுதினார். சம காலத்தில் புழங்கும் நம்பிக்கைகள் எண்ணங்கள் ஆகியவற்றைக்கொண்டு, புதியவற்றை படைப்பதே புலவரின் வேலை என்று அதில் கோல்ரிட்ஜ் எழுதினார்.

இவரது முக்கிய இலக்கியப் படைப்புகள் :-

PUBLICATIONS

1796 – POEMS ON VARIOUS SUBJECTS

1798 – LYRICAL BALLADS – WITH WILLIAM WORDS WORTH

1802 – DEJECTION – AN ODE

1816 – CHRISTABEL

1816 – KUBLA KHAN

1817 – BIOGRAPHIA LITERARIA

1825 – AIDS TO REFLECTION

PUBLISHED AFTER HE DIED—

1895 – ANIMA POETAE

-SUBHAM-tags – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், S T Coleridge 

ஆலயம் அறிவோம்- ஸ்ரீ காள ஹஸ்தி கோவில் (Post No.9784)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9784

Date uploaded in London – – 28 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம்- ஸ்ரீ காள ஹஸ்தி கோவில்-Part 35

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 27-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி

வட்டவார் சடையனை வயல் அணி காழியான்

சிட்ட நால்மறை வல் ஞானசம்பந்தன் சொல்

இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே 

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக அமைவதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், ராகு கேது ஸ்தலமாக அமைவதுமான ஸ்ரீகாளஹஸ்தி தலமாகும். இது திருப்பதியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீ என்றால் சிலந்தி. காள என்றால் பாம்பு. ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். இந்தத் தலத்தில் ஞானப் பிரஸூனாம்பாள் சமேதராகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் தன்னை வழிபட்ட சிலந்திக்கும், பாம்பிற்கும், யானைக்கும் ஒரே சமயத்தில் காட்சி அளித்து இவை மூன்றையும் ஒன்றாக முக்தி அடையச் செய்தார்.

அவ்வுருவங்களையும் அந்தப் பெயர்களையும், தான் இணைத்து,  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்தைப் பெற்றார். ஏராளமான புராண வரலாறுகளையும் சரித்திரச் சம்பவங்களையும் கொண்டுள்ள மிகப் புராதனமான ஸ்தலம் இது. ராகுவும் கேதுவும் வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. ஆகவே, லிங்கத் திருமேனியில் நாகப்பாம்புகள் பின்னலிடப்பட்டது போன்ற தோற்றத்தை இங்கு காண முடிகிறது. இது ராகு கேதுவிற்கான விசேஷ ஸ்தலம் என்பதால் காலம் காலமாக ராகு, கேது தோஷம் உடைய லட்சக்கணக்கானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். சர்ப்ப சாந்தி உள்ளிட்ட பல வழிபாடுகளை நடத்தி தங்கள் தோஷத்தைக் கழிக்கின்றனர். திருமணத் தடை உள்ளிட்ட பல தடைகள் நீங்கி மனம் மகிழ்கின்றனர்.

கோவிலைச் சுற்றி பிரம்மாண்டமான கற்சுவர்களும் வானளாவிய கோபுரங்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. இதன் ஆதி வரலாறு ஒன்று உண்டு. கர்ப்பூர லிங்கம் ஒன்றை இங்கு ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாயு பகவான் வழிபட்டு வந்தான். இதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான் அவனுக்கு மூன்று வரங்களை அருளினார். அதன் படி வாயு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையையும், ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்கும் தன்மையையும், அவன் வழிபட்ட கற்பூர லிங்கம் அவன் பெயராலேயே வழங்கப்படும் பெருமையையும் பெற்றான். இங்கு, சிறிதும் காற்று வீசாமல் இருக்கும் கர்பக்ருஹத்தில் உள்ள திருவிளக்கின் சுடர், தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பது ஒரு அதிசயமாகும். ஆகவே இங்குள்ள லிங்கம் வாயு லிங்கம் எனப்படுகிறது. படைப்புக் கடவுளான பிரம்மா ஒருமுறை கைலாயத்தைத் தன் தோளின் மீது எடுத்து பூலோகம் வழியாகச் செல்லும் போது எங்கு சிகரத்தின் பாரத்தை உணர்கிறாரோ அங்கு அதை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தால் சுபிட்சம் ஏற்படும் என்ற அசரீரி ஒலி கேட்டது. தென் திசை வழியே செல்லும் போது சிவபிரான் வாயுலிங்கமாக சிகரத்தில் நுழைந்தார். பாரம் அதிகமானது. ஆகவே பிரம்மா அதை அங்கேயே வைத்தார். அந்த இடம் தான் திருக்காளத்தித் தலமாகும். அவர் அங்கேயே தங்கு தவம் செய்யத் தொடங்கினார்.              

ஒருமுறை காமதேனுவை வழிபடாமல் புறக்கணித்த லக்ஷ்மி தேவி, அதனால் தன் ஒளியை இழந்தாள். திருமால் லக்ஷ்மியைப் புறக்கணித்து, காளத்தி சென்று தவம் புரியுமாறு கூற, அவரும் ஸ்வர்ணமுகி நதியில் நீராடி ஒரு ஸ்ரீ சக்ரத்தை அம்பிகை ஞானப் பிரஸூனாம்பாளின் திருப்பாதங்களில் வைத்து வழிபடலானார். சில காலம் கழித்து ஒரு வைகாசி மாதம் பௌர்ணமி கழிந்த ஐந்தாம் நாள் ஸ்ரீசக்ரத்திலிருந்து அம்பிகை வெளிப்பட்டுக் காட்சி தர லக்ஷ்மி தேவி இழந்த தனது பிரகாசத்தை மீண்டும் பெற்றாள். திருமால் லக்ஷ்மியை ஏற்றுக் கொண்டு வைகுந்தம் ஏகினார். பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று!    

மிக பிரசித்தமான கண்ணப்ப நாயனாரின் சரித்திரத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அர்ஜுனனே கலியுகத்தில் வேடுவர் குலத்தில் கண்ணப்பனாகப் பிறந்தார் என்று தெலுங்குக் கவிஞர் தூர்ஜடி கூறுகிறார். ஒருமுறை கண்ணப்பன் இங்குள்ள தன் இஷ்ட தெய்வமான லிங்கத்தை வழிபடச் செல்ல, லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வழியவே திகைப்புற்ற கண்ணப்பன் தன் கண்ணைப் பிடுங்கி இறைவனின் கண் இருந்த இடத்தில் அப்ப, ‘நில்லு கண்ணப்ப, இது எனது திருவிளையாடலே’ என சிவ்பிரான் அவனுக்குக் காட்சி அளித்துக் கூறினார். கண்ணப்பனின் பக்தியின் பெருமையை உலகம் அறிந்த இடம் திருக்காளத்தியே.

சந்திர வம்சத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் இங்கு வந்து தவம் புரிந்து இறைவனின் தரிசனத்தை நேரில் பெற்றான். ஆகவே இந்தத் தலம் வரகுணபுரம் என்ற பெயரைப் பெற்றது. சிவபிரானின் பாடல் பிழையானது என்று நக்கீரர் ஒருமுறை கூற சிவபிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க, நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர். அதனால் சிவபிரான் அவருக்கு குஷ்ட நோய் வருமாறு சாபம் தர, தன் பிழையை உணர்ந்த நக்கீரர் இறைவனிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு வேண்ட சிவபிரான் நீ கைலாயத்தை அடையும் போது உன் நோய் தீரும் என்று அருள் பாலித்தார். திருமுருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரர் திருப்பரங்குன்றம் குளத்தில் குளித்து எழும் போது எதிரே ஸ்வர்ணமுகி ஆறு ஓடுவதைக் கண்டு அதிசயித்தார். தக்ஷிண கைலாய மலையான காளத்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததனால் ஆனந்தம் அடைந்த அவர் கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி நூலை இயற்றி மனம் மிக மகிழ்ந்தார். காளத்தி கோவிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள தக்ஷிண கைலாய மலைச் சரிவில் நக்கீரருக்கு ஒரு கோவில் உண்டு. சித்துலய்யா என்று அங்கு இவர் அழைக்கப்படுகிறார். இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஸ்ரீஞானப்ரஸூனாம்பாளும், ராகு, கேது பகவானும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். சுந்தர நாயனாரின் நல் வாக்கு இது :            

நீறார் மேனியனே, நிமலா நினை அன்றி, மற்றுக்,                                         கூறேன் நா அதனால், கொழுந்தே, என் குணக்கடலே,                                      பாறார் வெண்தலையில் பலி கொண்டுஉழல்காளத்தியாய்,                                

ஏறே, உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே! 

நன்றி வணக்கம்!       

***

tags-  காளஹஸ்தி கோவில்

உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை! (Post.9783)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9783

Date uploaded in London – –  –28 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மரணம் என்னும் மாயை! உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை!

ச.நாகராஜன்

யோக வாசிஷ்டத்தில் பேருண்மைகளை விளக்கும் அற்புதமான கதைகள் உள்ளன. அவற்றில் மிகச் சுவையானதும் அற்புதமானதும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதுமான ஒரு கதை லீலாவின் கதை.

உற்பத்தி பிரகரணத்தில் 15ஆம் அத்தியாயம் முதல் 60ஆம் அத்தியாயம் முடிய இந்தக் கதை சுவையாக விவரிக்கப்படுகிறது.

இங்கு சுருக்கத்தைக் காண்போம்:

பத்மா என்ற அரசன் தனது மனைவியான லீலா என்ற அரசியுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தான். லீலாவிற்கு ஒரு ஆசை பிறந்தது. தானும் தனது கணவரும் மரணமே அடையாமல் என்றும் ஒன்றாக சந்தோஷமாக இருந்து பூவுலகில் வாழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. லீலா தனது நாட்டில் இருந்த அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்தாள்.எப்படி மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்து இந்தப் பூவுலகிலேயே இருக்கலாம், அதற்கு ஒரு வழியைச் சொல்லுங்கள் என்றாள் அவள். அறிஞர்கள் அனைவரும் திகைத்தனர். அனைவரும் ஒருமித்தமாக மரணம் அடையாமல் இருக்கவே முடியாது, மனிதனாய்ப் பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம் உண்டு என்றனர்.

லீலா அவர்கள் அனைவரையும் போகச் சொன்னாள். சரஸ்வதி தேவியை நோக்கிக் கடும் தவம் புரிய ஆரம்பித்தாள். அதே சமயம், கணவனுக்கான தனது பணிகளை அவன் சந்தேகப்படாமல், விடாமல் தொடர்ந்து செய்து வந்தாள். சரஸ்வதி தேவி அவளது தவத்திற்கு மெச்சி நேரில் அவள் முன் பிரசன்னமானாள்.

லீலாவை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் சரஸ்வதி தேவி.

இரு வரங்கள் வேண்டும் என்றாள் லீலா.

“அவை என்ன, சொல் என்றாள் சரஸ்வதி.

“ஒன்று, எனது கணவர் இறக்கும் போது அவரது ஜீவன் அரண்மனையிலேயே இருக்க வேண்டும். இரண்டாவது நான் விரும்பிய போதெல்லாம் சரஸ்வதி தேவியாகிய நீங்கள் எனக்கு முன்னால் நேரில் பிரசன்னமாக வேண்டும். இவை தாம் நான் வேண்டும் இரண்டு வரங்கள் என்றாள் லீலா.

“தந்தோம் இரு வரங்களை, உனக்கு என்று கூறிய தேவி மறைந்தாள்.

சில காலம் கழிந்தது. ஒரு நாள் மன்னன் பத்மா மரணமடைந்தான். மிகுந்த துயரத்தை அடைந்த லீலா சரஸ்வதி தேவியை நேரில் வருமாறு பிரார்த்தித்தாள். நேரில் பிரசன்னமான சரஸ்வதி, “பிணத்தை மலர்களினால் மூடு என்று கூறியதோடு, பின்னால் அவன் திருப்பி வருவான் என்றாள்.

தேவி கூறியபடியே லீலா செய்தாள்.

சில நாட்கள் கழிந்தன. லீலாவிற்குத் துக்கம் தாளவில்லை. மீண்டும் சரஸ்வதியை அழைத்தாள். “என்னை என் கணவன் எங்கு இருக்கிறாரோ அங்கு அழைத்துச் செல்லுங்கள், அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை என்று கூறினாள்.

சரஸ்வதி அவளது உடலை விடுமாறு கூறி அவளை அவள் கணவரிடம் அழைத்துச் சென்றாள்.

இன்னொரு ராஜ சபையில் தனது கணவன் அமர்ந்திருப்பதை லீலா பார்த்தாள். இப்போது அவனுக்கு வயது பதினாறே ஆகி இருந்தது. அது மட்டுமல்ல, தனது அரச சபையில் இருந்த பலரும் கூட அங்கே அங்கம் வகிப்பதையும் அவள் பார்த்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். இவர்கள் கூட இறந்து விட்டார்களோ என்று அவள் எண்ணினாள். அதை சரி பார்த்து விடலாமே என்று தோன்றியது அவளுக்கு.சரஸ்வதி தேவியிடம் வேண்டிக் கொள்ள அவர் அருளால் தனது அரண்மனைக்குத் திரும்பினாள். அங்கு அவளே ஆச்சரியப்படும்படி அவளது அனைத்து அரசவை உறுப்பினர்களும் இருந்தனர். அவளது கணவனின் உடலை எப்படி விட்டாளோ அப்படியே விட்டது விட்டபடி அது இருந்தது!

லீலாவிற்கு ஒரே ஆச்சரியம்! எப்படி அவளது குடிமக்கள் இங்கும் இருக்க முடிகிறது, இன்னொரு இடத்திலும் இருக்க முடிகிறது?!

இதில் எது உண்மை, எந்தக் காட்சி பொய்?

தேவியானவள் அவள் முன் தோன்றி இரண்டு அனுபவங்களுமே கனவினைப் போன்றவையே, இரண்டுமே மாயை தான் என்றாள்!

மேற்கொண்டு சரஸ்வதி வசிஷ்டர் என்ற ஒரு பிராமணரின் கதையைக் கூறினாள்.

மிக்க ஏழையான வசிஷ்டர் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அரசன் ஒருவன் வேட்டையாடச் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். இப்படி வலிமை வாய்ந்த அரசனாக அல்லவோ பிறக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அடுத்த பிறவியில் அவர் பராக்ரமம் பொருந்திய ஒரு அரசனாகப் பிறந்தார். வசிஷ்டரின் மனைவியும் தொடர்ந்து இறக்கவே, அவள் அரசனின் மனைவியாக ஆனாள். சரஸ்வதி இந்தச் சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் நடந்தது என்று விளக்கினாள். அது மட்டுமல்ல, வசிஷ்டர் என்ற அந்த பிராமணரே பத்மா என்ற அரசன் என்றும் அவள் தான் வசிஷ்டரின் மனைவி என்றும் கூறினாள்.

லீலாவிற்கு ஒரே திகைப்பு, பிரமிப்பு! இது எப்படி சாத்தியம் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தன் கணவர் பத்மாவுடன் பல ஆண்டுகள் அல்லவா வாழ்ந்து வந்தாள்! ஒரு வாரத்திற்கு முன்னர் மட்டுமே இறந்து போன இவர்கள் எப்படி பற்பல ஆண்டுகள் வாழ்ந்தது போலத் தோற்றமளிக்கின்றனர்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சரஸ்வதியை அவள் திகைப்புடன் பார்க்க, தேவியோ, “ காலமும் வெளியும் மனக் கற்பனைகளே என்று விளக்கினாள். ஒருவன் எதைக் கற்பனை செய்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான். ஒருவன் கனவு காணும் போது வெகு தூரத்தில் அவன் இருப்பதைக் காண்கிறான். அங்கு நெடுங்காலம் வசிப்பது போலவும் அவன் காண்கிறான். ஆனால் விழித்துக் கொண்டவுடன் தனது பழைய இடத்தில் அதே காலத்தில் இருப்பதைக் காண்கிறான். கனவில் தான் கண்ட நெடுங்காலமானது கனவு கண்ட சில நிமிடங்களில் ஏற்பட்டதே தான் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.

லீலா இந்த விஷயத்தை இன்னும் சரி பார்த்து விடலாம் என நினைத்து சரஸ்வதி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். அங்கு வசிஷ்டரின் மகன்கள் வசிஷ்டர் இறந்து விட்டதை நினைத்து இன்னும் துக்கம் அனுஷ்டிப்பதைக் கண்டாள்.

ஆக இப்படியாக சரஸ்வதி, லீலாவிற்கு மூன்று கணவர்கள் இருப்பது மெய்யே என உணர்த்துகிறாள். வசிஷ்டர் என்ற ஏழை, பத்மா என்ற வயதான அரசன், புதிய அரசை ஆளும் இளமையான அரசன்! ஆக தேவி லீலாவை நோக்கி அவளது இந்த மூன்று கணவர்களில் யாரிடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்கிறாள். லீலா தனக்கு நிறைய பிறப்புகள் இருப்பதையும் நிறைய கணவர்கள் இருப்பதையும் இப்போது உணர்ந்து விட்டதாக தேவியிடம் கூறுகிறாள்.

தேவியிடம் தன்னைத் தனது மூன்றாவது கணவனான இளைஞனான அரசனிடம் அழைத்துச் செல்லுமாறு லீலா வேண்டுகிறாள். அங்கேயோ அந்த அரசின் மீது எதிரிகள் ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுத்துள்ளனர். ஆகவே இளைய அரசன் தனது மந்திரிகளுடன் அந்தப் படையெடுப்பை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறான். மந்திராலோசனை முடிந்த பின்னர் அரசன் தூங்கச் செல்கிறான். அப்போது தேவி அவனை எழுப்புகிறாள். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசன் தனது இரு புதிய விருந்தாளிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறான். பின்னர் தேவி தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரை எழுப்பி அவருடைய அரசன் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு கேட்க அவர் அரசனின் பெயர் விதுரதா என்றும் அவர் இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

 உடனே தேவி அரசனின் தலை மேல் கையை வைத்து அவனது இறந்த காலத்தைப் பார்க்குமாறு சொல்கிறாள்.  அரசன் எப்படி ஒரு வாரத்திற்கு முன்னர் தான், தான் கிராமத்தில் இறந்து விட்டதையும், அதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த பத்மா என்ற அரசனாக இருந்து இறந்து போனதையும் இப்போது பல காலமாக விதுரதா என்ற பெயரில் தான் வாழ்ந்து வருவதையும் பார்த்து வியப்பின் உச்சிக்கே செல்கிறான். சரஸ்வதி இந்த மூன்றுமே மாயை என்று கூறி ஒரு போதும் அவன் இறக்கவும் இல்லை, பிறக்கவும் இல்லை என்று உணர்த்துகிறாள். உண்மையில் அவன் சுத்த விஞ்ஞானம் அதாவது சுத்தமான பிரக்ஞை என்றும் கூறுகிறாள்.

இளைஞனான அரசன் தேவியிடம்  புதிய ராணியையும் புதிய அமைச்சரையும் தனது பழைய அரசுக்குக் கூட்டிச் செல்ல தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்கிறான். தேவி, அதற்கு அவன் போரில் இறக்க வேண்டும் என்றும் பின்னர் தனது புது மனைவியுடனும் புது அமைச்சருடனும் அவனது பழைய உடல் கிடக்கும் இடத்திற்கு அப்படிச் செல்லலாம் என்றும் கூறுகிறாள்.

அதன்படியே அரசன் போருக்குச் சென்று அங்கே கொல்லப்படுகிறான். பிறகு தேவி அவனையும் அவனது ஒரே மாதிரியாக இருக்கும் இரு மனைவிகளையும் அதாவது பழைய லீலா, புதிய லீலா ஆகிய இருவரையும் கூட்டிச் செல்கிறாள். அங்கு உடலாகக் கிடந்திருக்கும் பழைய மன்னன் பத்மாவை உயிர்ப்பிக்கிறாள்.

இந்தக் கதை இப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது. பெரிய உண்மை என்னவெனில் சங்கல்பம், ஆசை, எண்ணங்கள், காலம் வெளி ஆகியவற்றின் ஒப்புமைத் தோற்றம் ஆகியவை இந்தக் கதை மூலம் நன்கு விளக்கப்படுகிறது. நாம் காணும் உலகத்திற்குள் இன்னும் பல நுண்ணிய உலகங்கள் இருக்கின்றன என்பதையும் இந்தக் கதை புலப்படுத்துகிறது. ‘புருஷா சேதனா மாத்ரம் – அதாவது புருஷன் என்பவன் வெறும் சேதனா தான் – ஆன்மா என்பது பிரக்ஞையே என்ற உண்மையை உணர வேண்டும்.  விதுரதா என்ற மன்னனின் உடல் பத்மா என்ற மன்னனின் உடலாக இருப்பது ஏன் என்றால் அதற்கான காரணம் உள்ளூர அவனிடம் இருக்கும் ஆசையே தான் – வாஸனையே அதன் காரணம் என்று இந்தக் கதை விவரிக்கிறது.

இந்தக் கதையை நன்கு ஆழ ஊன்றி சிந்திப்பதன் மூலம் பல பேருண்மைகளை அறிந்து கொள்ள முடியும்!

இதில் உள்ள உண்மைகளை ஹ்யூ எவரெட் (Hugh Everett) என்ற நாஸா விஞ்ஞானி சமீப காலத்தில் கூறிய போது உலகமே வியந்தது. யுனிவர்ஸ் (Univierse)  என்பது ஒன்று மட்டுமல்ல, பல பிரபஞ்சங்கள் உள்ளன, (Multiverse)  என்றார் அவர். இந்தக் கொள்கையை அறிவியல் உலகம் இப்போது தீவிரமாக ஆதரித்து மேலும் ஆராய்ந்து வருகிறது. இன்னொரு செய்தி, இந்த பல் பிரபஞ்சங்கள் ஒன்றிற்கு மேல் ஒன்றாக ஒரு மிலிமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறதாம்!

யோக வாசிஷ்ட உண்மைகளும் நவீன அறிவியல் உண்மைகளும் ஒன்றே என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது இல்லையா?!

***

Index

யோக வாசிஷ்டம் உற்பத்தி பிரகரணம்

லீலாவின் கதை

பல பிறப்புகள், அனைத்தும் மாயையே,

ஆன்மா என்ற பிரக்ஞையே உண்மை

சரஸ்வதி தேவியின் வரங்கள்

பத்மா, வசிஷ்டர், விதுரதா

உலகத்திற்குள் உலகங்கள்

தமிழர்கள் ஏன் ரிக் வேத பெயரிடும் முறையைப் பின்பற்றினர்?(Post.9782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9782

Date uploaded in London – –27 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் பின்பற்றும் நூற்றுக் கணக்கான விஷயங்களுக்கு மூலம்/ ஆணிவேர் , உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அடர்ந்த காடுகள்; பிரம்மாண்டமான நதிகள்; பாலங்கள் கிடையாது. அகஸ்தியர் விந்திய மலையில் ரோடு  போடும்வரை சாலைகள் கிடையாது. கடலோரமாகவோ, கப்பல் மூலமாகவோதான் கங்கை நதி வழியாக வட இந்தியாவுக்குள் நுழைய முடியும் ;மின்சாரமும், மொபைல் போனும் இன்டர்நெட்டும் இல்லாத காலத்தில்- குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு– முன்னர் ஒரே நம்பிக்கை இருந்ததென்றால் அதிசயம்தானே . அதுவும் அப்போது இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு!

பெயரிடும் முறையைக் காண்போம் .

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், அண்டர் மகன் குறுவழுதி என்பன புறநானூற்றுப் புலவர் பெயரில் உள்ளனர். அதாவது இன்னார் மகன் நான்  என்று பெருமையாக செப்புவது பழைய வழக்கம். இதன் மூலம் ஒருவரை அடையாளம் காண்பதும் எளிது. ஏனெனில் பழங்காலத்தில் ஒரே பெயருடன் ஒரு ஊரில் பலர் இருப்பர்!

ஆங்கிலத்தில் மகன் பெயரை தந்தை  பெயருடன் ஒட்டிவிடுவார்கள்:-

எ .கா . டேவிட்சன், ஸ்மித்சன்

ஸ்காட்டிஷ், ஐரிஷ் மொழிகளில் முன்னால் ஒட்டிவிடுவர்

எ .கா .

மக் டொனால்ட் = டொனால்ட் மகன்

இந்த ஸ்காட்டிஸ் பெயரில் தமிழ் சொல் மகன் (மேக்) இருப்பதைக் காண்க

ஓ’ ஷானஸ்ஸி = ஷானஸ்ஸி வழிவந்தவன் (தாத்தா பெயர் ஷானஸ்ஸி )

இதிலும் முந்தைய பெயரிலும் மகன், தாத்தா என்பதெல்லாம் தனியாகவோ ஒட்டிக்கொண்டோ இருக்கின்றன . அதுவும் ஐரிஷ் ஸ்காட்டிஷ் பெயர்களில் முன்னால் ஒட்டப்படுகின்றன அல்லது இணைக்கப்படுகின்றன இப்போது தமிழ்ப் பெயரை ஒப்பிடுங்கள்

அண்டர் மகன் குறு வழுதி

மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார்

பேய் மகள் இள வெயினி

இது ரிக் வேத முறையாகும்.

‘மானா’ வின் மகன் அகஸ்தியன் என்று மந்திரங்களில் வரும் .

குசிக விச்வாமித்ரன் இக்ஷிதரன் மகன் (3-33) என்று காண்கிறோம்.

தமிழ் முறையில் ‘மகன்’ என்பது தனியே வரும்.

இன்னொரு முறையும் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. தசரதன் மகன் தாசரதி , ஜனகன் மகள் ஜானகி, பாண்டு புதல்வன் பாண்டவன் என்றும் வரும். அந்த அமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.

ஆனால் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்தும் மற்றுமுள்ள ஒற்றுமை மகன் என்பதை பிரித்துச் சொல்வதாகும்.

XXX

மநு மர்மம்

தமிழில் மநு நீந்திச்  சோழன் கதையை எல்லோரும் அறிவர். இந்த மநு பற்றியும் புராணத்தில் வரும் பிரளய கால மநு பற்றியும் பலரும் அறிவோம். ரிக் வேதத்தில் மனு பற்றி பல மண்டலங்களில் வருகிறது. இவர் எந்த மநு ? எத்தனையாவது மனு? இவருக்கும் நீதி நூலுக்கும் சம்பந்தம் உண்டா? இவருக்கும் பிரளயா காலத்தில் உயிரிங்களைக் கப்பலில் ஏற்றிக்  காப்பாற்றிய  மநுவுக்கும் தொடர்பு உண்டா? அல்லது தற்கால மன்வந்தரத்தின் அதிபதி வைவஸ்வத மனுவா என்றெல்லாம் தெரியவில்லை. யாரும் இது பற்றி பிரஸ்தாபிப்பதும் இல்லை.

எந்தத் துறை எடுத்தாலும் அதில் ரிக் வேதமே வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியா தவிர மற்ற கலாசாரங்களில் 4 பருவங்கள் தான் உண்டு. ரிக் வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மட்டும் 6 பருவங்கள் இருக்கின்றன. இதை விட  நமக்கு  வேறு என்ன சான்று தேவை? இமயம் முதல் குமரி வரை ஒரே கலா சாரம் அதுவும் கைபர் கணவாய் வழியாக வந்ததல்ல ; மண்ணின் மைந்தர்கள் தோற்றுவித்ததே அது .

கர்நாடக  சங்கீதத்தி ல்  கடைசியில் பெயரைச் சொல்லி முத்திரை வைப்பதை திருஞான சம்பந்தர்தான் சொல்லிக் கொடுத்தார் என்று நினைத்தேன். சமப்ந்தருக்குப் பின்னர் ஜெயதேவர் அஷ்டபதியில் அவருடைய பெயர் ஒவ்வொரு பாடலிலும் முத்திரையாக வருகிறது. பின்னர் புரந்தரதாசர், தியாகராஜர் பாடல்களிலும் பாடியோர்  பெயர்களைக் காண்கிறோம். இதுவும் ரிக் வேத மந்திரத்தில் துவங்கியதே. பல்லவி அனுபல்லவி, ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அதே வரிகள் ஆகிய எல்லாவற்றையும் ரிக் வேதத்தில் காணும் போது வியப்பு மேலிடுகிறது.

உவமைகளில், நண்பர்கள் பற்றிய உவமைகள் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலாவது இந்த அளவுக்கு இருக்குமா என்பது ஐயப்பாடே. பெற்றோர்கள், மனைவிமார்கள் உவமைகளும் அன்பின் இலக்கணமாக உவமிக்கப்படுகின்றன .

உலகின்  மிகப் பழைய கவிதைத் தொகுப்பு, வரலாற்று நூல், வாய் மொழி இலக்கியம் என்ற பெருமையுடன் மேற்கூ றியனவும்சேரும்போது ரிக் வேதத்தின் சிறப்பு அதிகரிக்கிறது.

-SUBHAM—

TAGS – பெயரிடும் முறை, ரிக்வேதம் மக்டொனால்ட்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய எழுத்தாளர் சிசரோ (9781)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No. 9781 

Date uploaded in London – –27 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிறந்த தேதி – ஜனவரி 3, கி.மு.106

இறந்த தேதி – டிசம்பர் 7, கி.மு.43

வாழ்ந்த காலம் – 63 ஆண்டுகள்

சிசரோ (CICERO) ஒரு சக்தி வாய்ந்த பேச்சாளர், எழுத்தாளர், ராஜ தந்திரி ஆவார் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் ரோமாபுரியில் கொ டி கட்டிப் பறந்தவர் ;உரைநடையில் வல்லவர். அவர் லத்தீன் மொழி யில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இன்றும் எழுத்து வடிவில் கிடைக்கின்றன. அவருடைய காலத்திலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியது இந்த செல்வாக்கிற்குக்  காரணம் சிசரோ போன்றோரின் காலத்தால் அழியாத படைப்புகள்தான்.

சிசரோ மத்தியதர குடும்பத்தில் பிறந்தார். பணப் பிரச்சினை இல்லை. ஆகையால் ரோம் நகரில் அருமையான கல்வி வசதி அவருக்குக் கிடைத்தது. வழக்கறிஞராக வாழ்க்கையைத் துவங்கினார். ஆயினும் அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெரும்புகழ் தந்தது. 30 வயதிலேயே அவர் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செனட் SENATE என்பது ரோமானிய சாம்ராஜ்ய ஆட்சிக்குழு.  அந்த அரசில் பெரும்பதவி ‘கான்சல்’ (CONSUL) எனப்படும். ஒரு அமைச்சரைப் போன்ற பதவி. அதில் அவர்க்கு ஆசை பிறந்தது பிரபுக்கள் குடும்பத்தில் பிறவாத எவர்க்கும் இப்பதவி கிடைப்பது அரிதிலும் அரிது. ஆயினும் அவருடைய பேச்சாற்றல் மூலம் கி.மு.63-ல் செனட் உறுப்பினர் ஆனார்.

அப்போது ரோம் அரசுக்கு எதிரான சதியை சிஸரோ  கண்டுபிடித்து அதில் சமபந்தப்பட்டவர்களுக்கு மரண தண் டனை வாங்கித் தந்தார். இதில் தகாத வழிகளை அவர் பின்பற்றியதாக ஜூலியஸ் ஸீஸர் (JULIUS CAESAR ) குற்ற ஞ்சாட்டி அவரை ஒரு ஆண்டுக்கு நாடு கடத்தினார். அதற்குப் பின்னர் ஜூலியஸ் சீஸர் , ரோமாபுரியை ஆளும் சர்வாதிகாரி ஆனார்.

ஓராண்டுக்குப் பின்னர் ரோமுக்குத் திரும்பிவந்த சிசரோ, அரசியலை விட்டு விட்டு இலக்கியத்தில் முழு கவனம் செலுத்தினார். அந்தக் காலத்தில்தான் அவர் தத்துவம், சமுதாயம், பேச்சாற்றலை பற்றிய அரிய படைப்புகளை எழுதினார்.

கிமு.44-ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது பதவிப் போர் வெடித்தது. கான்சல் மார்க் ஆன்டனிக்கும் (MARK ANTON)Y எதிர்கால ஆட்சியாளர் அகஸ்டசுக்கும் (EMPEROR AUGUSTUS) இடையே பெரும் போராட்டம். மார்க் ஆண்டனிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சொற்பொழிவு வாயிலாக சிசரோ உதிர்த்தார். இது பிலிப்பிக்ஸ் PHILIPPICS என்ற நூலாக மலர்ந்தது. இதுவே அவரது உயிரைக் காவு கொண்டது.

மார்க் ஆன்டனியும் அகஸ்டசும் (EMPEROR AUGUSTUS)  கைகோர்த்து ஓரணியில் சேர்ந்தனர். ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து சிசரோவை சிரச்சேதம் செய்தனர். அவருடைய உடல் உறுப்புகளை சேதப்படுத்தி பழிதீர்த்துக் கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவர் புகழ் உயர்ந்து ஓங்கியது.

PUBLICATIONS

(ALL YEARS IN BCE)

63 -ORATIONS AGAINST CATILINE

55  -ON ORATORY

52 -ON THE REPUBLIC

52 -ON THE LAWS

46 – BRUTUS

44 – ON OLD AGE

44 – ON FRIENDSHIP

44 – ON THE NATURE OF THE GODS

44 – ON DUTY

44-43 – PHILIPPICS

–SUBHAM–

TAGS- ரோமானிய எழுத்தாளர்,  சிசரோ, CICERO,

ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி! (Post No.9780)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9780

Date uploaded in London – –  –27 JUNE   2021    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூன் 27 ஹெலன் கெல்லர் டே (Helen Keller Day)! அவரது நினைவைப் போற்றுவோம்!

ஹெலன் கெல்லர் : ஒரு அபூர்வமான பெண்மணி!

ச.நாகராஜன்

ஹெலன் கெல்லர் : பரிவும் விடாமுயற்சியுமே வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்த்திய ஒரு அபூர்வமான பெண்மணி!

அமெரிக்காவில் பிறந்த ஹெலன் கெல்லர் உலகினருக்கு ஒரு அபூர்வமான உண்மையைக் காட்டுவதற்காகப் பிறந்த சாதனையாளர் என்றே சொல்லலாம். (பிறப்பு ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)

மனம் தளராத விடா முயற்சி எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி தரும்! இது அவர் காட்டிய உண்மை.

19 மாதக் குழந்தையாக இருந்த போது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களின் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிது வந்த அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்ஸில் இருந்த பெர்கின்ஸ் ஸ்கூர் ஃபார் தி ப்ளைண்ட் என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் (Annie Sulliven)  என்ற ஒரு ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர் தான்.

அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை CUP என்பதற்கான அசைவுகள்! அடுத்து  அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது W A T E R என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் CUPக்கும் WATERக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுஸுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் WATER என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது. நீர் அவர் கையில் பாய ஆரம்பித்த போது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது. (It was as if I had come back to life after being dead – Helen Keller).

இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் நான் எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான்.  (“The most significant day I remember in all my life is the one on which my teacher, Anne Mansfield Sullivan, came to me. I am filled with wonder when I consider the immeasurable contrast between the two lives which it connects.” – The Story of My Life)
ஆன்னி தன் பணியில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான் ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர ப்ரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம். லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

பல வருடங்கள் கடுமையாக உழைத்த பின்னர் 1900ஆம் ஆண்டில் ராட்க்ளிஃப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904ஆம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

1902ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும் போதே அவர், ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்” (The Story of my life) என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி (John Albert Macy) என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார்.

30 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார். குறிப்பாக அவர்களுது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1968ஆம் ஆண்டு அவர் மறையும் போது அவருக்கு வயது 87. அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14ஆம் தேதியன்று அவருக்கு ‘ப்ரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்; (Presidential Medal of Freedom)  என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம். எந்த சூழ்நிலையிலும்  எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது; துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

***

INDEX

ஹெலன் கெல்லர் : பிறப்பு, மறைவு, கண் பார்வையின்மை, காது கேளாத தன்மை, ஆன்னி சல்லிவன், ஆசிரியை, கற்பித்த விதம், கற்ற மொழிகள், சுய சரிதை, 14 புத்தகங்கள், அமெரிக்க ஜனாதிபதியிடம் பெற்ற விருது, ஹெலன் கெல்லர் டே

 —subham–

 tags- ஹெலன் கெல்லர்

Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-2 (Post No.9779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9779

Date uploaded in London – –26 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In this second part; let us look at the rivers in the Rig Veda and compare them with the rivers in Panini’s Ashtadhyayi.

We must remember that none of them wrote a book on geography. I wanted to point out the size of the books as well. Rig Veda is a book with over 1000 hymns running to 10,000 mantras running to 20,000 lines; but lot of repetitions are there. But we can expect more from the Rig Veda than from Panini who has only less than 4000 pithy sayings/Sutras on grammar.

We have over 30 rivers in the RV. And over 125 direct references are there to the rivers mentioned. Over 100 references to seas and oceans are in the Rig Veda. Apart from this, innumerable river, boat, sea, lake similes are there.

We have ancient rivers in the RV which are not found anywhere else. The best example is Aapayaa mentioned in the Third Mandala. No one can identify it.

We see a beautiful ode to Three Rivers by Visvamitra there.

In the matter of rivers, all the mischiefs of Griffith and gang are exposed by Shrikant Talageri in his scholarly work.

(Following list is taken from ‘THE RIGVEDA- A HISTORICAL ANALYSIS BY SHRIKANT G TALAGERI’.)

PLEASE SEE THE CONCLUSIONS AT THE END

Rivers in Ten Mandalas of RV

Sarasvati

1-3-10/12, 1-89-3, 1-13-9,, 1-142-9,, 1-164-49,52, 1-188-8

2-1-11, 2-3-8,2-30-8,2-32-8,2-41-16/18

3-4-8,3-23-4,3-54-13

No Sarasvati in Fourth Mandala

5-5-8,5-42-12,5-43-11,5-46-2

6-49-7,6-50-12,6-52-6,6-61-1/7, 6-10-11,6-13-14

7-2-8,7-9-5,7-35-11,7-36-6,7-39-5,7-40-3,7-95-1/2, 7-95-4/6,7-96-1,3/6

8-21-17,18, 8-38-10,8-54-4

9-5-8,9-67-32,9-81-4

10-17-7/9,10-30-12,10-64-9,10-65-1,10-65-13,10-66-5,10-75-5,10-110-8,10-131-5,

10-141-5,10-184-2

Xxx

Sindhu

1-83-1,1-44-12,1-122-6,1-126-1,1-186-5,1-94-6,1-94, refrain in the last verses of 1-96,1-98, 1-100,1-103,1-105,1-115

Sindhu is absent in Mandala 2&3

4-30-12,4-54-6,4-55-3

5-53-9

No Sindhu in 6&7

8-12-3,8-20-24,25, 8-25-14,8-26-18,8-72-7

9-97-58

10-64-9,10-65-13,10-66-11,10-75-1,3,4,6,9

Xxx

Ganga

Jahnavi 1-116-9,3-58-6

6-45-31, 10-75-5

Xxx

Yamuna

5-52-17,7-18-19,10-75-5

Xxx

Rasa

1-112-12,4-43-6,8-72-13,9-41-6,10-75-6,10-108-1,2,10-121-4

Xxx

Apaya

3-23-4,

Xxx

Gomati

8-24-30,10-75-6

Xxx

Sarayu

4-300-18,5-53-9,10-64-9

Xxx

Asikni 7-5-3,8-20-25,10-75-5

Gauri 1-164-4,

Vipss 3-33-1,

Sutudri 3-33-1,10-75-5

Drsadvati 3-23-4,

Kusavaa 4-18-8

Parushni 4-22-2,7-18-8/9, 8-75-15,10-75-5

Vipas 3-31-1,4-30-11,

Kubha 5-53-9,10-75-6

Krumu 5-53-9,10-75-6

Anitabhaa 5-53-9

Asmanvati 10-53-8

Amsumati8-96-13

Aarjikiiyaa 8-7-29, 8-64-11, 9-65-23

Suvaastu 8-19-371

Susoma 10-75-5

Susartu 10-75-6

Sveti 10-75-6

Svetyaavari 8-26-18

Mehatnu 10-75-6

Marudvrdhaa 10-75-5

Trstaamaa 10-75-6

Vitastaa 10-75-5

Hariyupia 6-27-5

Yavyaavati 6-27-6

Prayiyu 8-19-37

Vaiyiyu 8-19-37

River Sarasvati has the highest number of references.

SHRIANT  has arranged the Ten Mandalas in chronological order and made comments on the basis of the order.

He has found out Vedic Hindus migrated towards West from the East.

He has pointed out the blunders in Griffith’s translation and interpretation.

RV 3-33 and 10-75-5 and 10-75-76 are important.

The evidence of the rivers in the RIGVEDA is unanimous in identifying to the east of Sarasvati as the original homeland of the Vedic Hindus.

The reference in 1-116-9 associates river Jahnavi with sage Bharadvaja,Divodasa and Gangetic dolphin. It is clear that the river is specially associated with the oldest period of the Rigveda .

The Sarasvati is so important in the whole of the Rigveda that it is worshipped as one of the three great goddesses in the Apri suktas of all ten family composers . The Indus finds no place in these Apri suktas.

In the Nadi Stuthi, nearest river Ganges is mentioned first and then other rivers are mentioned. Griffith deliberately misleads the readers by adding a foot note that the most distant river (Ganges) is mentioned first. And in the same way in 3-33 also he adds a note to say ‘this shows the eastward expansion of the Vedic Aryans. but it is actually the Hindus westward march!

Xxx

My comments

In RV 3-33 there is a beautiful ode to rivers. It is the fifth dialogue poem if you start from Mandala 1. Viswamitra says to the rivers ‘I have come from far away. The far away is Bihar. But Griffith mischievously puts the ‘far away’ beyond India’s borders. How do we know whether Shrikant is right or Griffith is right ?. Though Shrikant has stated enough reasons I will add one more point.

In the poems regarding rivers we see Jamadagni, Visvamitra, Bharadvaja and other seers. The three seers mentioned above are in Valmiki Ramayana as well. So we know for sure Visvamitra’s journey to Mithila in Bihar- Nepal border. We know where Janaka, Sita’s father ruled. We know Rama’s victory over Parasurama, son of Jamadagni. All these places the far away in Bihar- Nepal border and not Afghanistan or Iran . Mischief maker Griffith confesses in every other hymn of Rig Veda that he cant understand and yet he never stopped damaging the Vedas. Hindus must be careful about the 30 +++ clowns and jokers in the Max Muller gang.

—subham—

 Tags- Rigveda, Rivers, Griffith, Westward , Hindus March,Panini

ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீஃபோ (Post No.9778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9778

Date uploaded in London – –26 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புகழ்பெற்ற ராபின்ஸன் க்ரூஸோ  கதையை அறியாதவர்கள் எவரும் இல்லை. இதை எழுதியவர் டேனியல் டீ ஃபோ (DANIEL DEFOE) .

டேனியல் டீஃபோவை ஆங்கில நாவல்களின் தந்தை (Father of the English Novel) என்று அழைப்பார்கள் அவருடைய ராபின்ஸன் க்ரூஸோ (ROBINSON CRUSOE) நாவல் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

டீ போவின் படைப்புக்கு முன்னால் , கதைகள் அனைத்தும் நாடகங்களாகவோ செய்யுட்களாகவோ எழுதப்பட்டன. டீ போதான் முதன்முதலில் உரைநடையில் நம்பத் தகுந்த கதாபாத்திரங்களைப்  படைத்து எளிய நடையில் கதை எழுதினார்.கதையின் சூழ்நிலையும் நம்பத் தகுந்த வகையில் அமைந்தது .

டீ போ, லண்டனில் கசாப்புக் கடைக்காரர் மகனாகப் பிறந்தார் .படிப்பு முடிந்தவுடன் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்தார். வணிகராக, வியாபாரியாக வாழ்க்கை நடத்தினார். இளம் வயதில் அவர் துவங்கிய வியாபாரங்கள் அனைத்தும் நஷ்டத்தில் முடிந்தன. இதனால் பெரும் கடன் வலையில் சிக்கிக்கொண்டார் .

எழுத்து மூலம் சம்பாதிக்கலாமே என்று எண்ணி எழுதத் துவங்கினார். சமுதாயத்திலுள்ள அநீதி, அக்கிரமங்களை விமரிசித்து எழுத ஆரம்பித்தார். துவக்க காலத்தில் நூற்றுக் கணக்கான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார் அவர் எழுகாத விஷயமே இல்லை. அரசியல், சமயம், பூகோளம், பயணம், பேய் பிசாசு, மர்மம் என்று எழுதித் தள்ளினார். அவர் அரசியல் பற்றி எழுதியது அங்கத நடையில் இருந்ததை பலரும் விரும்பினர் . ஆயினும் அவரால் கிண்டலும் கேலியும் செய்யப்பட்ட அரசியல்வாதிகள்,  டீபோவுக்கு எதிராக அணி திரண்டனர் .பல நேரங்களில் இது சொல்லொணா கஷ்டங்களைக் கொடுத்தது. ஒரு முறை சிறையிலும் அடைக்கப்பட்டார் .

40 வயதில் ஞானோதயம் பிறந்தது. இனிமேல் அரசியல்வாதிகள் பற்றி  எழுத வேண்டாம் என்று முடிவு செய்து கதைகள் எழுதத் துவங்கினார். அவற்றில் கிடைத்த வெற்றியால்தான்  நாம் இன்று அவரின் புகழ் பாடுகிறோம்.

டீபோவுக்கு 59 வயதான போது அவர் எழுதிய ராபின்ஸன் க்ரூஸோ – கதைதான் அவருக்கு அழியாப்புகழ் ஈட்டித் தந்தது . ஒரு மனிதன் கப்பல் விபத்தில் சிக்கி, உடைந்த கப்பலிலிருந்து தப்பி ஒரு தீவை அடைகிறான் அங்கு மனிதர்களே இல்லை. தனிமையில் அவன் என்ன செய்தான் என்பது இக்கதையாகும் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. டீபோவின் புகழ் எங்கும் பரவியது .

அலெக்ஸ்சாண்டர் செல்கிர்க் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியதே ராபின்சன் க்ரூஸோ கதை  ஆகும். அவருடைய இரண்டாவது நாவல் மோல் பிளான்டர்ஸ் MOLL FLANDERS . இதற்கும் நல்ல வரவேற்பு. இன்று ஆங்கில இலக்கியம் படிப்போர் இந்த இரண்டு நாவல்களையும் அறிந்தே ஆகவேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பிறந்த ஆண்டு- 1660

இறந்த தேதி – ஏப்ரல் 24, 1731

வாழ்ந்த காலம் – 71 ஆண்டுகள்

அவர் எழுதிய நூல்கள்

1719- ROBINSON CRUSOE

1719 – FURTHER ADVENTURES OF ROBINSON CRUSOE

1720- MEMOIRS OF A CAVALIER

1720- CAPTAIN SINGLETON

1722- MOLL FLANDERS

1722 – A JOURNAL OF THE PLAGUE YEAR

1722 – COLONEL JACK

1724- ROXONA

தமிழில் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ , ராஜம் அய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ போன்ற பெருமை உடைத்து டீபோவின் கதைகள்.

–SUBHAM—

TAGS– ராபின்சன் க்ரூசோ டேனியல் டீபோ, Daniel Defoe, Robinson Crusoe