உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!-Part 2 ஆறு கதைகள்!(Post.15,664)

Written by London Swaminathan

Post No. 15,664

Date uploaded in London –27 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிக்வேத திருமண மந்திரத்துக்கு சூர்யா சூக்தம் என்று பெயர்;  பத்தாவது மண்டலத்தில் 85 ஆவது துதி இது .

இந்தத் துதியில் உள்ள மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம் :

கிருத்யா

கிருத்யை என்னும் ஒரு பெண் தேவதை / அணங்கு பற்றி மந்திரம் 28, 29, 30 எச்சரிக்கிறது ; அதன் நிறம் நீளமும் சிவப்பும் ஆகும் ; அதை விரட்டுவோமாகுக என்று ௨௮ஆவாத் மந்திரம் சொல்கிறது .

அழுக்கடைந்த ஆஅடைய யை அகற்றவும் ; இந்த கிருத்யா தேவதை மனைவி போல நடித்து காலடி வைத்து கணவனின் இதயத்தில் நுழைகிறாள்; மனைவியின் ஆடைகளைக்கொண்டு கணவன் தன்னுடைய அங்கங்களை மறைக்கும்போது  அவனுடைய அழகினை இவள் பறிக்கிறாள்.

இதற்கு அடுத்த மந்திரம் நோய்கள் அணுகாமல் இருக்கட்டும் என்று வாழ்த்துகிறது

யார் இந்த கிருத்யா என்னும் துஷ்ட தேவதை ?

 Kṛtyā (कृत्या).—(KṚTYAKĀ) I. A Rākṣasī who is born when the black arts as enunciated in the Atharvaveda are practised to annihilate enemies. Kṛtyā may appear in male form too.

எதிரிகளை ஒழிப்பதற்கு அதர்வண வேத மந்திரங்களை பயன்படுத்தி கிருத்யா என்னும் ராக்ஷஸியை உருவாக்கலாம் ; ஆன் உருவத்திலும் கிருத்யா வரும்

இந்த க்ர்த்யா பேய் பற்றி மஹாபாரத்திலும் புராணங்களிலும் கதைகள் வருகின்றன.

***

முதல்கதை

பாண்டவர்களும் கெளரவர்களும்  (Vana Parva, Chapter 252)

வனபரவத்தில் உள்ள கதை)

பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் துரியோதனன் தனது பரிவாரம் புடை சூழ கானகத்துக்கு வருகிறான்; அப்போது ஒரு கந்தர்வன் துரியாதனனைக் கடத்திச் சென்று விடுகிறான் ; சொந்தக்காரன் என்ற பாசத்தின் பேரில் அர்ஜுனன் அவனை காப்பாற்றுகிறான் . துரியோதன ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பியவுடன் பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யத்தைக் கொடுப்பதா வேண்டாமா என்ற விஷயம் விவாதத்துக்கு வருகிறது . சகுனியும் ஏனையோரும் கொடுத்து விடுவோம் என்கின்றனர் ; பொறாமையே உருவான துரியோதனன் பிடிவாதமாக மறுத்துவிடுகிறான்; உடனே அவனது தந்தை தர்ப்பைப்புல்லினை பரப்பி அதன் மேல் அமர்ந்து உயிர்விட முயல்கிறான் ; அசுரர்கள் இதை அறிந்து மந்திரங்கள்  மூலம் ஒரு கிருத்யாவை உண்டாக்குகிறார்கள் . அந்த தேவதை துரியோதனனை பாதாள உலகத்துக்குத் தூ க்கிச் செல்கிறது; அங்கே அசுரர்கள் துரியோதனனுக்கு துர் போதனை செய்து சமாதானம் செய்யாதே ; என்ன வந்தாலும் நாங்கள் உனக்குத் துணையாக நிற்போம் என்கிறார்கள்.

(இதிலிருந்து அந்த துஷ்ட தேவதையின் சக்தி தெரிகிறது.)

***

கதை 2

தேவேந்திரன் ஒரு முறை அஸ்வினி தேவர்களுக்குச் சோமபானம் கிடைக்காமல் செய்துவிடுகிறான். பின்னொரு சமயம் அஸ்வினி தேவர்கள், காடுகளில் ஸ்யவன ரிஷியைச் சந்திக்கிறார்கள் ; அவர்கள் மந்திர சக்தியைப் பயன்படுத்தி கண் பார்வை இழந்த ஸ்யவன ரிஷிக்கு பார்வையை மீண்டும் வரவழைக்கிறார்கள்; அவரும் மனம் மகிழ்ந்து ஒரு யாகம் இயற்றி அஸ்வினி தேவர்களுக்கு சோமபானம் வழங்குகிறார்; இந்திரன் ஆத்திரமடைந்து அதைத் தடுக்க வஜ்ராயுதத்தை உயர்த்துகிறான்; ரிஷியின் மந்திர சக்தியால் அவனுடைய கைகள் செயல் இழந்து நிற்கின்றன ; மேலும் யாகத்  தீயிலிருந்து ஒரு க்ருத்யாவை உண்டாக்குகிறார். அதன் பெயர் மதன. அதன் பற்கள் மிகவும் நீளமானவை; உருவமோ மலைபோன்றது ; அந்த பயங்கரமான க்ருத்யாயாவைக் கண்டு பயந்த இந்திரன் அஸ்வினி தேவர்கள் சோமபானம் செய்ய அனுமதிக்கிறான்  (இங்கு கிருத்யாவின் தோற்றம் ஒரு பேய் போல ராக்ஷஸன் போல வருணிக்கப்படுகிறது )

***

கதை 3

அம்பரீஷன் என்ற மன்னன் ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தான்; அப்பொழுது அதைத் தடுப்பதற்காக தேவர்கள் துர்வாச முனிவரை அனுப்புகிறார்கள் ; துர்வாசரும் அம்பரீஷனைச் சந்திக்க வந்தார் ; ஸ்நான கர்மாக்களை முடித்துவிட்டு வாருங்கள் என்று அம்பரீஷன் சொன்னான் ; அவர் வரவில்லை; இதனால் தேவர்களுக்கு வழங்க வேண்டிய ஹவிஸ் முதலிய உணவுகளை அம்பரீஷன் வழங்கினான் ; திரும்பி வந்த துர்வாசர் எனக்கு மிச்சம் மீதிகளைத் தருகிறாய் என்று சொல்லி  அவனைத் தண்டிக்க ஒரு கிருத்யாவை உருவாக்குகிறார் அம்பரீஷன் விஷ்ணுவை வேண்டவே சுதர்சன சக்ரம் கிருத்யாவைக் கொன்றுவிட்டுத்  துர்வாசரை விரட்டுகிறது. மூவுலகம் முழுவதையும் சுற்றிவிட்டு களைத்துப் போய் அம்பரீஷன் காலில் துர்வாசர் விழுகிறார் ; இது பாகவத புராண கதை. (Bhāgavata, 9th Skandha).

***

கதை 4

துவாரகையை கிருஷ்ண பரமாத்மா ஆண்டுகொண்டிருந்தபோது காரூசா தேசத்தை பெளண்ட்ரக வாசுதேவ ஆண்டுகொண்டிருந்தார். தான்தான் உண்மையான வாசுதேவ என்றும் ஆகையால் கிருஷ்ணர் வந்து தன்னை வணங்க வேண்டும் என்றும் அவர் தூதனை அனுப்பினார். கோபமடைந்த கிருஷ்ணன், சுதர்சன சக்ரத்தை ஏவி அவனது தலையைத் துண்டித்தார் ; அவனுடைய மகன், சுதட்சிணன் , கிருஷ்ணரை எதிர்க்கும் சக்தியைப் பெறுவதற்கு  காசி மா நகருக்குச் சென்று சிவ பெருமானை நோக்கித் தவம் இயற்றினார்; சிவ பெருமானும் அவன் முன்தோன்றி கிருத்யாவைஉண்டாக்கும் மந்திரத்தை உபதேசித்தார் அவன் யாகத்தியிலிருந்து கிருத்யாவை எழுப்பி கிருஷ்ணன் மீது ஏவினான்; அவர் தனது சுதர்சன சக்ரத்தைக் கொண்டு சுதட்சிணனையும் கிருத்யாவையும் வீழ்த்தினார். 

***

கதை 5

நாராயணனை மட்டுமே வணங்குவேன் என்று சொன்ன இளம் வயது மகன் பிரகலாதனின் மனத்தை மாற்ற, அவனது தந்தை ஹிரண்யகசிபு பல அசுர குருமார்களை அனுப்பினான் . அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறாத போது ‘தீயில் பொசுக்குவேன், விஷத்தைக் கொடுப்பேன்’ என்றெல்லாம் ஹிரண்யகசிபு பயமுறுத்தினான்; இறுதியில் அசுரர்கள் தீயை வளர்த்து ஒரு கிருத்யாவை  உண்டாக்கி ஏவினார்கள்; அந்த கிருத்யா எறிந்த சூலம் பிரகலாதனின் தொண்டையில் பட்ட போது சுக்கு நூறாக உடைந்தது ; கோபம் அடைந்த கிருத்யா , ஏவி னோர்

மீதே பாய்ந்தது; அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர் ; கருணை கொண்டு பிரகலாதன்,  அவர்களைத் தொடவே அவர்கள் உயிர் பெற்றனர். (Viṣhṇu Purāṇa, Part 1, Chapter 18) இது விஷ்ணு புராணத்திலுள்ள கதை.

கதை 6

சிவ புராணத்திலும் ஒரு கதை உள்ளது  Śivapurāṇa 2.5.20 .

சலந்தரன் என்னும் அசுரன் கைலாசத்தை முற்றுகையிட்டான் ; இதைக் கேட்ட சிவபெருமான் ருத்ரனாக மாறினார் ; அவருடைய வாயிலிருந்து ஒரு கிருத்யா உருவானது ; அதனுடைய வாய் குகை போன்று இருந்தது ; கால்கள் பனை மரம் போல இருந்தன; அவளுடைய முலைகள் மரங்களை வீழ்த்தின ; அது விரைந்து சென்று அசுரர்களை விழுங்கியது.

இந்தக் கதைகளை படிக்கும்போதுதான் , ஓரிரு இடத்தில் மட்டும் ரிக் வேதம் குறிப்பிடும் கிருத்யாவின் கோரா தாண்டவம் நமக்கு விளங்குகிறது .

To be continued…………………..

Tags- கிருத்யா , ராக்ஷஸி, பேய், ஆறு கதைகள், உலகத்திலேயே அதிசயமான, திருமண வாழ்த்து- Part 2

Leave a comment

Leave a comment