தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் -1 (Post No.15,713)

Rare sculptures of Tamil Nau- Part 1

Location – Sri Vaikundam Temple

Drawing by Artist Silpi

Part 1

Written by London Swaminathan

Post No. 15,713

Date uploaded in London –8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பெண்களா யானையா என்று வியக்க வைக்கும் ஒரு சிற்பம்  பெண்களா குதிரையா  என்று வியக்க வைக்கும் வேறு ஒரு சிற்பம் என்று பல சிற்பங்களைப் படைத்து தமிழ் சிற்பிகள் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர் . இவை ஸ்ரீ வைகுண்டம் கோவிலில் உள்ளன ; இவைகளை வெளி உலகுக்குக் காட்டி பெருமை சேர்த்துக்கொண்டார் ஓவியர் சில்பி; அவர் வரையாத கோவில் இல்லை ; அந்தப் படங்களை/ ஓவியங்களைக் கண்டு வியக்காத தமிழன் இல்லை ; அவருடைய ஓவியங்களை வரைபடங்களை விகடன் பிரசுரம் நீண்ட காலத்துக்கு முன்னரே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது .

கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் மனக் கவலை தீரவும் பல பதவிகளையும் வெகுமதிகளையும் எதிர் பார்த்தும் செல்வதால் இந்த அற்புத சிற்பங்களைக் கண்டுகொள்வதில்லை; அதற்கென தனிக் கண்கள் வேண்டும் வெறும் மனிதர்களையும் இயற்கையையும் மட்டும் வரையும்  ஓவியர்கள் உலகெங்கிலும் உண்டு; ஆனால்  தெய்வீக ஓவியங்களை /வரைபடங்களை வரைவோர் அபூர்வமே . தமிழகத்துக் கிடைத்த பொக்கிஷம் ஓவியர் சில்பி  அவர்கள் ! எல்லாக் கோவில்களுக்கும் நாம் செல்ல முடியாவிட்டாலும் விளக்கத்துடன் கூடிய அவருடைய இரண்டு தொகுதிகளை பார்த்தாலே போதும் !. பார்த்தாலே போதும் பசி தீரும் ! உங்கள் அறிவுப்பசி தீரும் !

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காணவும்.

ஸ்ரீ வைகுண்டம் கோவில்

–subham—

Tags- ஸ்ரீ வைகுண்டம் கோவில்,பெண்களா யானையா, பெண்களா குதிரையா , தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் -1, ஓவியர் சில்பி

Leave a comment

Leave a comment