கங்கை நதி பற்றி வியத்தகு புதிய தகவல்! 1117 மூலிகைகள்! 935 மருந்துகள்! (Post.15,724)

Written by London Swaminathan

Post No. 15,724

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கங்கைக் கரையில் வசிப்பவன் நீர் பெறுவதற்கு ஊற்று தோண்டுவது மடமை ; வைரச் சுரங்கத்துக்கு வருபவன் தாவர குந்துமணிகளை நாடுவதும் மடமை அன்றோ !

சுவாமி விவேகாநந்தர் 

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தவும் , கரையோர தாவரங்களைக் கணக்கிட்டு  அவைகளைப் பாதுகாக்கவும் , சாக்கடை நீர் கலப்பத்தைத் தடுத்து கங்கை மாதாவுக்கு புத்துயிர் அளிக்கவும் 2014 ஆம் ஆண்டிலொரு திட்டம் துவங்கப்பட்டது ; இதற்கு மத்திய  அரசு ரூ.20000 கோடியை ஒதுக்கியது.

நமாமி கங்கே ( கங்கை அன்னைக்கு வணக்கம் ) என்று இந்த திட்டத்துக்குப் பெயர் . இதன் அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது ;அதன்படி 935 ஆயுர்வேத மருத்துகளைத் தயாரிக்கத் தேவையான 1117 மூலிகைகளும் தாவரங்களும் கங்கை நதி ஓரம் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுவிட்டது.

கங்கை நதி ஓரம் வளரும் தாவரங்கள் பற்றி நிறைய நாட்டுப்புற பாடல்களும் பழமொழிகளும் 200 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பதை அறிந்தும் கேட்டும் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அதை இந்து சமய மூட நம்பிக்கை என்று கருதி வாளா  இருந்துவிட்டனர்.

1914 ஆம் ஆண்டில் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் இயற்றிய சட்டம், ஆயுர்வேத மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது; இதனால் இந்துக்களின் மூவாயிரம் ஆண்டு மருத்துவ அறிவு மழுங்கிப்போனது.

நரேந்திர மோடி தலைமையில் அமைந்த அரசு 2014 ஆம் ஆண்டில் கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியைத் துவக்கி கங்கையை வணங்குவோம் என்ற முழக்கத்தை  முரசு கொட்டியது. கங்கை நதி ஓடும்  2525 கிலோமீட்டர் நெடுகிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது .

இதனிடையே 212 சாக்கடை நீர் சுத்திகரிப்பு திட்டங்களை உத்தரப்பிரதேச யோகிஜி அரசு துவக்கி சாக்கடை நீர்,  புனித கங்கையில் விழாமல் தடுத்தது ; அதற்காக 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தது.

சரகர் என்ற அறிஞர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை தோன்றும்  இடத்திற்கு அருகில் சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூலை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினார் . அவரையடுத்து வந்த சுஸ்ருதர் வாரணாசியில் கங்கைக் கரையில் அமர்ந்தே இன்னு மொரு நூலை எழுதினார்.

ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட்ட அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற நூல் கங்கை நதி நீரை  குளிர்ச்சியானது லேசானது , அமிர்தம் போன்றது என்று வருணித்தது.

2019 ஆம் ஆண்டில் ரூர்கியில் உள்ள ஐ ஐ டி நடத்திய ஆய்வு கங்கையின் தூய்மைப் படுத்தும்  சக்தி ஏனைய நதிகளை விட அதிகம் என்றது; இதற்கு இமய மலையிலுள்ள தாதுக்கள் மற்றும்  பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் உயிரினங்கள் இந்த நதியில் இருப்பது காரணம் என்று காட்டியது.

டாக்டர் ஹான்பரி ஹேங்கின் British physician E. Hanbury Hankin பிரிட்டிஷ் 1896 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சி செய்து அறிவித்தார். காலரா கிருமிகளை கங்கை நீரில் விட்டால் சில மணி நேரத்துக்குள் இறந்து விடுகின்றன அதே கிருமிகளை சுத்த மான சாதாரண நீரில் விட்டால் அவைகள் பல நாட்களுக்கு உயிருடன் உள்ளன என்றார்

தற்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட சில தாவரங்களின் பயனைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவார்கள் ; துளசி, வேம்பு, அசுவகந்தி, வல்லாரை முதலிய பல மூலிகைகளின் சக்தியைப் பாமர மக்களும் அறிவார்கள்; தற்போதைய ஆராய்சசிகள் அவைகளில் என்ன ராசாயனப் பொருள் உள்ளது என்ற மேல் விவரங்களை வெளியிட்டு வருகின்றது. கோவிட் நோய் பரவியபோது துளசிக்கு 400 சதவிகிதம் அதிக கிராக்கி ஏற்பட்டது .

குப்தர் காலத்தில் இருந்த நாளந்தா பல்கலைக் கழக வளாகத்தில் மூலிகைத் தோட்டமும் இருந்தது ; அப்போதே முறையான ஆராய்ச்சிகளை  இந்திய பல்கலைக் கழக்கங்கள் துவக்கிவிட்டன!

–subham—

Tags- கங்கை நதி , வியத்தகு புதிய தகவல், 1117 மூலிகைகள், 935 மருந்துகள்

Leave a comment

Leave a comment