சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரில் புஸ்தகம்! புஸ்தகப் பிரியர்கள் இரண்டு வகை! (Post.15,841)

Written by London Swaminathan

Post No. 15,841

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அண்மைக் காலமாக ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்குப் பதிலாக தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது ; உஸ்தகம் புது என்ற சொல்லை நூல் என்று மாற்றி வருகின்றனர் . நான் அப்படித்த காலத்தில் தமிழ்ப் பாட புஸ்தகம் என்று கடையில் கேட்டு வாவங்குவோம்; இப்போதெல்லாம் ஹமிப்பட நாள் என்றே சொல்வர் . ஆயினும் இந்த புஸ்தாக்ம் என்ற சொல் முதலில் தமிழ் இலக்கியத்தில் புகுந்தது நாலடியார் என்னும் நூலில்தான் ; இது சாமானை முனிவர்கள் எழுதிய நூல் ; சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது அக்காலத்தில் தமிழில் ஸ, ஜெ ஹா ஷா முதலிய எழுத்துக்கள் இல்லை ஆகையால் புத்தகம் என்றே எழுதியுள்ளார்கள் .

இதோ அந்தப்பாடல் 

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு. –318,  நாலடியார்

பொருள்

புத்தகங்களை மிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின் பொருள் தெரியாதவராவர்; நூல்களை வீடு முழுமையும் நிறைத்து ,அவற்றை அவர்கள் அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்கள்தான்; அவர்கள் வேறு . அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும் தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்கள் வேறு .

அதாவது புஸ்தகப்பிரியர்களில் இரண்டு வகை; ஒரு வகையினர் லைப்ரரி அலமாரி போல வீட்டில் அவைகளை அடுக்கி மட்டும் வைத்திருப்பார்கள் ; இன்னொரு வகை அவைகளின் பொருள் தெரிந்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்பார்கள் .

உண்மைதான் ; நானே பல வீடுகளில் அவர்களுடைய அப்பா தாத்தா கொள்ளுத்  தாத்தா சேர்த்துவைத்த புஸ்தகங்களை தூசி கூட தட்டாமல் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறேன் ; மற்றவர்களுக்கும் கொடுக்கமாட்டார்கள் ; ஒரு காலத்தில் படிக்கப்போவதாகச் சொல்லுவார்கள் ; வேறு சிலரோ வலிய வந்து நமக்கு அந்தப் புஸ்தகம் பற்றி அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்லி தயவு செய்து இதை படியுங்கள் என்று கொடுப்பார்கள் எனக்கே பலர் இப்படிக்கொடுத்தனர்; நானும்  படித்துப் பலன் அடைந்தேன்.

தொல்பொரு ட்த்துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி, லண்டன்  பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்சந்திரன் . லண்டனில் வசித்த டாக்டர் V S ரெங்கநாதன் , மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்  வி ஜி சீனிவாசன், மதுரை டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (பேராசிரியர் எஸ் ஆர் கே ) முதலிய பலர் நூல்களைக் கொடுத்தார்கள்;   இவர்கள் அனைவரும்    நன்றியுடன் நினைவுகூறத்  தக்கவர்கள் ஆவர் .

***

ஆதி காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில் பாறையில் எழுதும் வழக்கத்தைத் துவங்கினர். பிராமி லிபியில் இவர்கள் எழுதும்போது கொச்சைத் தமிழிலும் பிராகிருதம் கலந்த மொழியிலும் எழுதினார்கள்; இவை,  மதுரை முதலிய இடங்களில் சமண முனிவர்கள் வாழ்ந்த இடங்களை சுற்றி கிடைக்கின்றன. இவை அனைத்தும் மிகச் சின்ன கல்வெட்டுகள்; ஒரு வரி அல்லது இரண்டு வரிக்குட்பட்டவை இவை சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை ; ஆனால் இதற்கும் முன்னால், அசோகர் எழுதிய கல்வெட்டுகள் மிகவும் நீண்டவை; சொல்லப்போனால் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்!

ஒருவேளை அசோகருக்கும் முன்னால், வடக்கில் எழுதியது போல, நாமும் துணிகளிலும் பனை ஓலைகளிலும், மரப்பட்டைகளிலும் எழுதியிருக்கலாம் ; அவை எல்லாம் பருவ நிலையைத் தாங்கி நிற்கக்கூடியவை அல்ல . காலத்தால் அழிந்துபோய்விட்டன  என்றே கருத வேண்டும்!

–subham –

Tags– சமண முனிவர்கள்,  நாலடியார் ,  புஸ்தகம் , பிராகிருதம் அசோகர், பிராமி லிபி, புஸ்தகப் பிரியர்கள், இரண்டு வகை

Leave a comment

Leave a comment