ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி! (Post.7633)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7633

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.

சம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.

தெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.

ஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்?

இப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.

தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.

அருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.

தலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.

சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே

கலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய

கங்கரா கோணாகலா மதியக் கோடீர

சங்கரா சோணா சலா.

இதன் பொருள் :-

நாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத

புலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய

கம் – பிரமகபாலத்தைத் தாங்கிய

கரா – கரத்தை உடையவனே

கோணா – மாறுபடாத

கலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த

கோடீர – ஜடாபாரத்தை உடையவனே

சங்கரா – சங்கரனே

சோணாசலா – அருணாசலனே

சலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ

சங்கம் தா – சங்க வளையலைக் கொடு

பூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு

மேகலை தான் – மேகலையைக் கொடு

இந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.

அருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.

சோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.

அருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.

இப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.

பின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.

இராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை!

 tags – இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி, 

–subham–

புத்தர் சொன்ன உணவுகள். மருந்துகள் (Post No.7625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7625

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

புத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று அனுமதித்தவுடன் உணவு, உடை, நடத்தை (நடை உடை பாவனை) முதலிய பல விஷயங்களில் கேள்விகள் எழுந்தன. புத்தர் உயிருடன் இருக்கும் வரை அவரே பதில் கொடுத்ததாக பிற்கால நூல்கள் காட்டுகின்றன. அவர் இறந்தவுடன் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை ஏற்பட்டவுடன் மூன்று முறை மஹா நாடு கூட்டி புதிய, புதிய விதிகளை இயற்றினர் . யார் புத்த பிட்சு? என்பதை ஒரு அறிஞர் குழு முடிவு செய்தது . மஹா நாட்டு பந்தல் வாசலில் அமர்ந்து கேள்வி கேட்டனர் . சரியான பதில்  சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் எழுந்த புத்த மத நூல்களில் அந்த விதிகள் தொகுக்கப்பட்டன. அவைகளில் உள்ள உணவு, மருந்து விஷயங்கள் பற்றிய சுவையான செய்திகள் இதோ ….

விநயபீடகா நூல்களில் இருந்து இவை தொகுக்கப்பட்டன. இதைத் தொகுத்தவர் நாளந்தா மஹாவிஹார பேராசிரியர் சி. எஸ். உபாசிக் ஆவார்; அது பாலி மொழியில் உள்ளது.

அகடயூஸ

பாசிப்பருப்பை பாதி கொதிக்கவைத்த கஞ்சி. இதை புத்த பிட்சுக்களுக்கு மருந்தாகக் கொடுப்பதை புத்தர் அனுமதித்தார்

அந்தோ பக்கம் , அந்தோ உ த்தம் / பிண்டம்

பவுத்த விஹாரத்துக்குள் சமைக்கப்பட்ட உணவை பிட்சுக்கள் சாப்பிடக்கூடாது .

வெளியில் பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். விஹாரத்துக்குள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பயன்படுத்துவது தவறு.

அம்ப பாண

மாம்பழச்சாறு சாப்பிடலாம். புத்தர் அனுமதித்த எட்டு வகைப் பழச் சாறுகளில் இதுவும் ஒன்று. இது ‘யாம காலிக’. அதாவது பகலிலும் இரவிலும் சாப்பிடலாம் .

பல காதநீய, பல பாஜக , பல பேஷஜ

எல்லா வகைப் பழங்களையும் சாப்பிட புத்தர் அனுமதித்தார் .

பாலி மொழி நூல்கள் குறிப்பிட்ட கறிகாய் ,பழங்களில் பலா , மா , தேங்காய் , புளி ,கத்தரிக்காய் முதலியன உள்ளன .

‘பல பாஜக’ என்பவர் சங்கத்துக்கு பழங்களை விநியோகிப்பவர் .

‘பல பேஷஜ’ என்பன மருந்துச் சரக்குகள் — பிப்பலி,  விளங்க , மரிச ஹரிதிக, விபிடக , ஆமலக, கொத்தபல(அதாவது மிளகு, கடுக்காய், திப்பிலி, நெல்லிக்காய் முதலியன)

பழம்’ தமிழ்ச்  சொல்லா?

2700 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதுள்ள பாகிஸ்தானில் பிறந்த, உலக மகா இலக்கண மேதை பாணினி , பலம் /பழம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் . ஆனால் வேதத்தில் ‘பிப்பல’ என்ற சொல்லே உளது. இது ‘ஆப்பிள்’ (Pippala = Berries= Apple) போன்ற சொற்களைத் தோற்றுவித்தது . இதுவே பல /பழ ஆயிற்றா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பாலி மொழி நூல்களில் “பல” (பழம்) மலிந்து கிடக்கிறது.

புத்தர் அனுமதித்த எட்டு வகை பல/பழ  ரசங்கள்

மாம்பழ ரசம், நாவல் பழரசம் , காட்டு வாழைப்பழ ரசம், வாழைப் பழரசம், திராட்சைப் பழரசம், ‘மது ரசம் /இலுப்பைப் பழம்’ , ‘சாலூக பாண / அல்லிப் பூ வேரின் சாறு’ , ‘பாருசக/ பலசாக /தடச்சி’- க்ரிவியா ஏஸியாடிகா Grewia asiatica

கோ ரஸா

புத்தர் அறிவித்ததாக பவுத்த நூல்கள் செப்புவதாவது-

பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைச் சாப்பிட நான் உங்ககளை அனுமதிக்கிறேன்- பால், தயிர், மோர், நெய் , வெண்ணெய்.

இப்போது வெளிநாட்டில் பரவி வரும் (Vegan) வேகன் கொள்கை பழங்கால இந்தியாவில் கிடையாது. வெளிநாட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாமிசம் , மருந்து ஊசி ஆகியன கொடுப்பதால் பலருக்கும் ‘லாக்டோஸ்’ (Lactose) (பாலில் உள்ள ஒரு பொருள்) ஒவ்வாமை வந்து விட்டது. ஆகையால் பால் பொருட்கள் எதையும் உபயோகிக்கக்கூடாது என்ற வேகன் VEGAN கொளகை பரவி வருகிறது. பழங்கால ரிஷிகள் பாலையும் தேனையும் கலந்த உணவையே சாப்பிட்டனர். ஒரு நாடு வளம் பொருந்தியது என்று சொல்ல, அந்த நாட்டில் “பாலும் தேனும் ஆறாக ஓடிற்று” என்ற சொற்றோடர் சம்ஸ்கிருத நூல்களிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டது .

மண் சோறு சாப்பிடு (கரதின்னகாபாதோ)

ஏதேனும் ஒரு வீட்டில் பிச்சை  கேட்டபோது அந்த வீட்டுப் பெண்மணி , புத்த பிட்சுவை மயக்குவதற்காக ஏதேனும் மாய மருந்துகளை , வசிய விஷயங்களைக் கலந்ததாகத் தெரிந்துவிட்டால் , அந்த மாய, வசியத்தை முறிக்க, கலப்பையில் ஒட்டியிருக்கும் ‘சேறு/ சகதி’யைக் கரை த்துக் குடிக்க வேண்டும் . இதன் பெயர் ‘சீதா லோலி’. சீதா தேவி இப்படிக்கு கலப்பையில் உழுகலனில்  பிறந்ததால் அவளுக்கு ஜனக மாமன்னன் ‘சீதா’ என்று பெயரிட்டான் . ஒரு பூமியை யாகத்துக்காக  செம்மைப் படுத்துகையில் மன்னன் வந்து ‘தங்க ஏர்’ கொண்டு அந்த இடத்தை  உழுதல் பழங்கால வழக்கம் .

இந்து மஹா அதிசயம்

உலகில் இந்துக்களைப்  போல இயற்கை நண்பர்கள் எவருமிலர் . ஸீதாவுக்கு ‘கலப்பை/ஸீதா’ என்று பெயரிட்டது போல பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலைக்கு பறவைப் பெண் (Shakuntala= Bird) என்று பெயரிடப்பட்டது. இதுபோல புராண இதிஹாசங்களிலும் , வேத ரிஷிகளின் பெயர்களிலும் 50 பெயர்கள் பறவைகள், மிருகங்களின் பெயர்கள் ஆகும் .

அரசமரம் – பிப்பலதான்

ஆந்தை – கௌசிகன்

ஆமை – காஸ்யபன்

காகம் – பரத்வாஜன்

வேணு – மூங்கில்

இப்படி ஐம்பது பெயர்கள் கிடைக்கின்றன.

இந்துக்கள் இயற்கையில் இன்பம் அனுபவித்தார்கள். காகத்துக்கும் ஆந்தைக்கும் மனிதர்களை போல மதிப்பு தந்தார்கள் .

இந்தப் பெயர்கள் பற்றிய எனது ஆராய்சசியைத் தனியே வரைவேன். தமிழிலும் ஆந்தை (பிசிர் ஆந்தை) காகம் (காக்கை பாடினியார் ) முதலியன உண்டு. தமிழ், சம்ஸ்கிருத பெயர் பட்டியலை பின்னர் தருகிறேன்.

சங்க இலக்கியத்தில், குப்தர்கள் கல்வெட்டுக்களில்  20க்கும் மேலான நாகர் (பாம்பு) பெயர்கள் இருக்கின்றன.

Xxx

குருடு , ஊமை ,செவிடு

குருடர்கள், செவிடர்கள், ஊமைகளை புத்த பிட்சுக்களாக ‘சன்யாசம்’ கொடுக்கக்கூடாது. அந்த மாதிரி நடந்தால் அதில் பங்கேற்போரும் தவறு செய்தவர்களே.

இணைந்த கை விரல் உடையோர், ஆறு விரல்கள் உடையோரையும் பிட்சுக்களாக்கக்கூடாது. நொண்டி, முடவன்,குள்ளன் ஆகியோரும் பிட்சுக்களாகத் தடை விதித்தார் புத்தர். பிராமணர்கள் பவுத்தர்களாக மதம் மாறியபோது அவருடைய முகம் பிரகாசத்தால் ஒளிவிட்டது.

பாலி மொழி அகராதியையும் புத்தமத அகராதியையும் ஆராய்ந்தால் ஆரிய – திராவிட மொழிக் கொள்கைளைத் தவிடு பொடியாக்கலாம் . தமிழும் சம்ஸ்கிருதமும் மிகவும் நெருக்கமானவை, ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை  என்பதை நிரூபிக்கலாம். உலகிலுள்ள பழங்கால மொழிகளில் தமிழும் சம்ஸ்கிதமும் விரவிக் கிடப்பதைக் காட்டி இங்கிருந்தே நாகரீகம் பரவியது என்பதையும் காட்டலாம். திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெள்ளைக்காரன் கொள்கைக்கு முடிவு கட்டலாம் .

Xxx

புத்தர், பெண்களுக்கு எதிரானவர் என்பதை இந்தியாவின் ராஷ்டிரபதியாக இருந்த , உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவரது தம்மபத மொழிபெயர்ப்பில் எடுத்துக் காட்டுகளுடன் தந்தார். (முன்னரே இதுபற்றி எழுதிவிட்டேன்) பிரதம சிஷ்யன் ஆனந்தன் கெஞ்சிக் கூத்தாடவே ‘தொலைந்து போ, பெண்களையும் புத்த பிட்சுணிகளாக்கு !’ ஆனால் ஒன்றைக்  குறித்துக் கொள் ; எனது மதம் எக்காலம் வரை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று கணக்கிட்டேனோ அதில் பாதி காலத்தில் என் மதம் போய்விடும்’ என்றார் .

இன்றும் புத்த மத நூல்ளில் ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்றே விதிகள் உள .

ஒரே ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம் .

ஆராம (தோட்டம் ,பூங்கா)

புராதன இந்தியாவில் மக்கள் இன்பத்துடன் வாழ்ந்தனர். நகரெங்கும் பூங்காக்களும் தோட்டங்களும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பீஹார் மாநிலத்தில் வைசாலி நகரில் 7000க்கும் அதிகமான தோட்டங்கள் (ஆராம) தோப்புகள், நந்தவனங்கள், பூங்காக்கள் இருந்தன. இவைகளுக்கு புத்த பிட்சுணிக்கள் போகக்கூடாது என்று புத்தர் தடை விதித்தார்.

புத்தர் சொன்ன எல்லாம், பிற்காலத்தில் மூன்று மஹாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் ‘‘த்ரி பீடகம்’ (மூன்று பெட்டிகள்) என்ற புஸ்தகங்களாக வெளியிடப்பட்டன. புத்தர் உலவியது முழுதும் இன்றைய இந்தியாவின் பீஹார் , உத்தர பிரதேச மாநிலங்களாகும் . பீஹார் என்ற பெயரே (புத்த) ”விஹார” என்ற சொல்லில் இருந்து வந்ததே !

Reference

kd.6.34.21 Then the Lord on this occasion, having given reasoned talk, addressed the monks, saying: “I allow you, monks, five products of the cow: milk, curds, butter-milk, butter, ghee. There are, monks, wilderness roads with little water, with little food; it is not easy to go along them without provisions for the journey. I allow you, monks, to look about for provisions for a journey: husked rice for him who has need of husked rice; kidney-beans for him who has need of kidney-beans; beans for him who has need of beans; salt for him who has need of salt; Vin.1.245 sugar for him who has need of sugar; oil for him who has need of oil; ghee for him who has need of ghee. 

—subham —

நல்லவர்கள் யார்? அம்பலவாணர் தரும் பட்டியல் (Post. 7620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7620

Date uploaded in London – 26 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அம்பலவாணக் கவிராயர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்லிமலையில் இருக்கும் சிவபெருமானைத் துதித்து பாடிய அறப்பளிச்சுர சதகத்தில் இரண்டு பாடல்களில், நல்லவர்கள் யார்? உத்தமர்கள் யார்? தியாகி யார்? என்று நீண்ட பட்டியலைத் தருகிறார். இதோ அவர் சொல்லும் சுவையான விஷயங்கள்—

செய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள்.  tamilandvedas.com, swamiindology.blogspot.com

பணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும்,  கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும்  உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும்  உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.

அடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.

பிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.

தன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .

ஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான். tamilandvedas.com, swamiindology.blogspot.com

திரிசூல தாரி , சதுர கிரி வாசா , உன்னை அனுதினமும் மனதில் நினைந்து வாழ்த்துகிறேன்.

–subham-

மஹரிஷி காமண்டகர்! (Post 7619)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7619

Date uploaded in London – 26 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காமண்டகர் என்ற மஹரிஷி மிகுந்த தவவலிமை உடையவர். ஒரு நாள் ஆங்கரிஷ்டன் என்ற அரசன் அவர் ஓய்வாய் சுகமாய் அமர்ந்திருந்த சமயத்தில் அவர் அருகே வந்து அவரை வணங்கினான்.

பின்னர் அவரிடம் அந்த அரசன் இரு கேள்விகளைக் கேட்டு அதற்குத் தக்க விடை தந்து அருளுமாறு வேண்டினான்.

கேள்விகள் இவை தாம் :

  1. ஒரு அரசன மூடத்தனத்தினாலும் காமத்தினாலும் பீடிக்கப்பட்டு ஒரு பாவத்தைச் செய்த பிறகு, தான் செய்த பாவங்களை நினைத்து பச்சாதாபப் பட்டு, அவன் என்ன செய்தால் அந்தப் பாவங்களிலிருந்து விடுபடுவான்?
  2. ஒருவன் அறியாமையினால் பாவமான ஒரு காரியத்தைத் தான் சரியாகத் தான் நடப்பதாக நினைத்துச் செய்து விட்டால், அது மனிதர்களுக்குள் வழக்கமாக ஏற்பட்டுவிடாதபடி எப்படி அரசன் அதைத் தடுக்க வேண்டும்?

காமண்டக மஹரிஷி அரசன் இப்படி கேள்விகளைக் கேட்டதைக் கண்டு மகிழ்ந்து தன் பதிலைப் பின்வருமாறு உரைத்தார் :

“ ஒரு  மனிதன் தர்மம், செல்வம் ஆகியவற்றை அடைவதை ஒழித்துவிட்டு இந்திரிய சுகத்திலேயே கவனமுள்ளவனாக இருந்தால்  அந்த நடத்தையின் காரணமாகத் தன் அறிவை இழக்கிறான். எப்போது அறிவை இழக்கிறானோ உடனே அவனுடைய தர்மத்திற்கும் செல்வத்திற்கும் நாசத்தைச் செய்யும் கவனமற்ற மந்தத் தன்மையை அடைகின்றான். அதிலிருந்து தெய்வத்தில் நம்பிக்கை இல்லாத நாஸ்திக எண்ணத்தை அடைந்து கொடுந்தொழிலையே செய்து வரும் அப்பியாசமும் மேலிடுகின்றன.

     இப்படிப்பட்ட பாவிகளாகிய துஷ்டர்களை அரசன் தண்டிக்காவிடில், சாதுக்களாய் இருப்பவர்கள் அனைவரும் ஒரே அறையில் பாம்புடன் இருப்பவனைப் போல அந்தக் கொடியவனைக் கண்டு எப்போதும் பயப்படுகிறார்கள்.

    அப்படிப்பட்ட அரசனுக்குக் குடிமக்களும் கீழ்ப்படிவதில்லை. பிராமணர்களும், இதர சாதுக்களும் அப்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே அவனது நாசத்திற்கும் காரணமாக அமைகிறது. இவ்வாறு அபகீர்த்திக்கும் நிந்தனைக்கும் ஆளாகி அவன் மிகுந்த துக்கத்துடன் காலம் கழிக்க வேண்டியவனாகிறான்.

    புகழ் இல்லாத ஒரு பிறவி இறந்ததற்குச் சமானம்.

பாவத்தை வரவொட்டாமல் தடுப்பதற்காக வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் கீழ்க்கண்டவைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.

  1. அவன் எப்பொழுதும் மூன்று வேதங்களை ஓதுவதிலேயே கவனம் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.
  2. அவன் பிராமணர்களை வழிபட்டு அவர்களுக்குரிய நன்மைகளைச் செய்து வர வேண்டும்.
  3. அவன் தர்ம வழியிலேயே பக்தியுடன் நடத்தல் வேண்டும்.
  4. உயர்ந்த க்ஷமா (மன்னித்தல்) என்கிற உத்தம குணத்தைக் கொண்டிருக்கும் பிராமணர்களுடன் அடுத்துப் பழக வேண்டும்.
  5. நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து புண்ய மந்திரங்களை ஜபித்து சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்க வேண்டும்.
  6. துஷ்ட பிரஜைகளை தன்னிடத்திலிருந்தும் தன் ராஜ்யத்திலிருந்தும் அகற்றி நல்லோருடன் சகவாசம் செய்ய வேண்டும்.
  7. இனிய மொழிகளாலும், நல்ல செய்கைகளாலும் தன்னுடைய குடிமக்களை மகிழ்ச்சியுறச் செய்ய வேண்டும்.
  8. அவன் அனைவரிடமும், ‘நான் உனக்கு வேண்டியவன்’ என்று சொல்வது தவிர, தன்னுடைய விரோதிகளாக இருப்பினும் கூட அவர்களுடைய நற்குணங்களை எடுத்துரைத்தல் வேண்டும்.

இது போல அவன் நடந்து வந்தால் அவன் பாவங்களிலிருந்து நீங்கப் பெற்று பரிசுத்தமானவனாகி யாவராலும் மதிக்கப்படுகின்றான்.

உன்னுடைய பெரியோர்களும், ஆசாரியர்களும் சொல்லுகின்ற உத்தமமான கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.

அவர்களுடைய கிருபையால் நீ எல்லா மங்களங்களையும் நிச்சயம் அடைவாய்.”

இவ்வாறு காமண்டகர் அரச தர்மத்தை உபதேசித்து அவனது கேள்விகளுக்கு பதிலை அளித்தார். அதைக் கேட்ட மன்னன் ஆங்கரிஷ்டன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டான்.

****

குறிப்பு :-

மஹாபாரதத்தில் வன பர்வத்தில் காமண்டக மஹரிஷி பற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளது.

பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?(Post.7615)

Perur Temple, WIKIPEDIA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7615

Date uploaded in London – – 25 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொங்குமண்டல சதகம் பாடல் 19

பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?

ச.நாகராஜன்

கோயமுத்தூரை அடுத்துள்ள பேரூர் பழைய காலத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறை நாடு என்று அழைக்கப்பட்டது.

சுந்தர மூர்த்தி நாயனார் ஊர் ஊராகச் சென்று சிவனை வழிபட்டு வரும் நாளில் ஒரு நாள் பேரூர் சென்றார்.

அப்போது அங்கு எழுந்தருளியுள்ள பட்டீசுரர் பள்ள வேடம் கொண்டு வயலுக்குச் செல்வாராயினர். செல்லும் போது நந்தியிடம் , “நான் எங்கு செல்கிறேன் என்பதை யாருக்கும் தெரிவிக்காதே” என்று கட்டளையிட்டு விட்டுச் சென்றார்

tamilandvedas.com, swamiindology.blogspot.com.

சுந்தரர் அங்கு வந்து இறைவனைக் காணாத நிலையில் நந்தியிடம் எம்பெருமான் எங்கே என்று கேட்டார்.

நந்திக்குத் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. சிவபிரான் தான் செல்லும் இடத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் சிவனடியாரோ சிவன் இருக்கும் இடத்தைக் கேட்கிறார். சிவனடியாரிடம் பொய் சொல்லக் கூடாது, அதுவும் தவறு தான்.

ஆகவே கண் ஜாடையால் சுவாமி சென்ற இடத்தைக் காட்டினார்.

விஷயத்தைப் புரிந்து கொண்ட சுந்தரர் நேராக வயலுக்குச் சென்று சிவ தரிசனம் பெற்றார்.

சுந்தரருடன் கரை ஏறிய பட்டிப் பெருமான் ஆலயத்திற்குச் சென்றார். கோபம் கொண்ட அவர், அங்கு மண்வெட்டி கொண்டு இடபதேவர் முகத்தை வெட்டினார்.tamilandvedas.com, swamiindology.blogspot.com

நந்திகேசுரர் சிவபெருமானை வணங்கி அருள் வேண்டி இறைஞ்ச அவர் முகம் மீண்டும் பழையபடி வளர்ந்தது.

இந்த வரலாற்றை கொங்கு மண்டல சதகம் 19ஆம் பாடலில் விளக்குகிறது இப்படி:-

நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்திசொலப்

பிறைமுடி மேனியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்

குறைபட வெட்டி விழுமுக நந்திசெய் கொள்கையினால்

மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே

பொருள் : சுந்தரமூர்த்தி நாயனார் வருவதைத் தெரிந்து கொண்ட பட்டீச்சுரப் பெருமான் (பள்ள வடிவாக) வயலில் ஒளிந்திருந்ததை நந்திகேசுரர் (கண் ஜாடையால்) காட்ட, கோபம் கொண்ட சிவபிரான் திருக்கையி ற் கொண்ட மண்வெட்டியால் நந்தி முகத்தை வெட்ட, அந்த முகம் மீண்டும் வளர்ந்த பேருர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்ததேயாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த வரலாற்றைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:-

பண்ணையி லேரிற் பூட்டிப் பகட்டொடு முழாது வைத்தால்

நண்ணிய தொண்டர்க் குண்மை நவிற்றுறா திருப்பை கொல்லென்

றண்ணல்வெள் விடையைச் சீறி  யானனஞ் சரிந்து வீழ

மண்ணகல் கருவி தன்னால் வள்ளலார் துணித்திட் டாரால்  (பேரூர்ப் புராணம்) tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுந்தரர் வரலாற்றிலும் இந்தச் சம்பவம் இடம் பெறுகிறது.

****

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி(Post No.7611)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7611

Date uploaded in London – – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – க்ட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி

ச.நாகராஜன்

2. சிவானந்த லஹரி

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது சிவானந்த லஹரி.

லஹரி என்றால் அலை அல்லது பிரவாஹம். சிவனைக் குறித்த ஆனந்த அலை பிரவாஹமே சிவானந்த லஹரியாக அமைகிறது. சிவனைக் குறித்த ஸ்தோத்திர நூல் இது. ஒவ்வொரு செய்யுளிலும் சிவனின் அபார பெருமைகள் விளக்கப்படுவதால் பக்திப் பரவசத்துடன் இந்த துதியை துதிக்க முடியும்.

இதைப் பற்றி பெரியவாள் – காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அருளியிருப்பது :

”சிவாநந்த லஹரீ” என்றால் ”சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்” என்று அர்த்தம். காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.

அதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு ‘சிவம்’ என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே “சிவம்” ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் ”சிவாநந்த லஹரி”க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.”

(முழு உரையையும் ஆசார்யாள் உரைகளில் படித்து அனுபவிக்கலாம்.)

இதிலுள்ள உவமைகள் மிக அற்புதமானவை.

நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதை ஆன்மாவைப் பண்படுத்துவதுடன் ஒப்பிடும் ஸ்லோகம் 40வது ஸ்லோகமாக அமைகிறது.

மாணவனாக இருந்தால் என்ன, கிரஹஸ்தனாக இருந்தால் என்ன, சந்யாசியாக இருந்தால் என்ன, அல்லது வேறு என்னவாக இருந்தாலும் தான் என்ன, ஒருவனது இதய கமலம் உன்னதாக ஆகும்போது, நீ அவனுடைவனாக ஆகிறாய் என்று 11ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

“மனம் ஒரு குரங்கு. அது மாயையென்னும் காட்டில் ஆசைகள் என்னும் கிளைக்கு கிளை எல்லா திசைகளிலும் தாவிக் குதிக்கிறது. ஓ, பிக்ஷுவே, உனக்கு அதை அர்ப்பணிக்கிறேன். அதை பக்தியால் கட்டி விடு.” – இப்படி 20வது ஸ்லோகம் கூறுகிறது.

சிவானந்த லஹரியில் சிவ பிரானின் ஏராளமான லீலைகளை எடுத்துரைக்கிறார் சங்கரர்.

யமனை காலால் உதைத்தது,மன்மத தகனம் உள்ளிட்ட ஏராளமான சரிதங்கள் ஆங்காங்கே ஸ்லோகங்களில் படித்து பரவசமடைகிறோம்.

பக்தி அமிர்தத்துடன் ஆன்ம உபதேசங்களை இந்த நூலில் அளிப்பதால் பகவான் ரமண மஹரிஷி இதிலுள்ள பத்து ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப் படுத்தித் தந்துள்ளார்.

அந்த ஸ்லோகங்களாவன : 61,76,83,6,65,10,12,9,11, 91

இந்த ஸ்லோகங்களை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள அதில் வரும் முதல் வார்த்தைகளை இணைத்து ஒரு ஸ்லோகத்தையும் அவர் அருளியுள்ளார்:

அம்-பக் ஜன- கடோ-வக்ஷஸ்- நர-குஹா -கபீ- வது: |

ஆத்யா – தச சிவானந்த லஹரி ஸ்லோகா சூசிகா ||

பத்து ஸ்லோகங்களின் ஆரம்பத்தைக் கீழே காணலாம் :

ஸ்லோகம் 61 : அங்கோலம் நிஜ பீஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா

ஸ்லோகம் 76 : பக்திர் மஹேஸ பத-புஷ்கரமாவஸந்தீ

ஸ்லோகம் 83 : ஜனன-ம்ருதி-யுதானாம் ஸேவயா தேவதானாம்

ஸ்லோகம் 6 : கடோ வா ம்ருத்பிண்டோऽப்யணுரபி ச தூமோऽக்னிரசல:

ஸ்லோகம் 65 : வக்ஷஸ்தாடன ஸங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:

ஸ்லோகம் 10 : நரத்வம் தேவத்வம் நக-வன-ம்ருகத்வம் மஸகதா

ஸ்லோகம் 12 : குஹாயாம் கேஹே வா பஹிரபி வனே வாऽத்ரி-ஸிகரே

ஸ்லோகம் 9 :  கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே

ஸ்லோகம் 11 : வடுர்வா கேஹீ வா யதிரபி ஜடீ வா ததிதரோ

ஸ்லோகம் 91 : ஆத்யாऽவித்யா ஹ்ருத்கதா நிர்கதாஸீத்-

98வது ஸ்லோகம் ஒரு அற்புதமான சிலேடை ஸ்லோகமாக அமைகிறது.

சிவானந்த லஹரி என்னும் கவிதையை தனது பெண்ணாக வர்ணிக்கிறார் ஆதி சங்கரர்.

கவிதையில் வரும் அலங்காரங்களே மணப்பெண்ணுக்கான அலங்காரம். (சர்வாலங்கார யுக்தாம்)

சரளபத யுதாம் – வார்த்தைகளே அழகிய நடையாக அமைகிறது.

சாதுவ்ருத்தம் –  அழகிய சந்தங்களால் அமைந்தது – பக்தியுடன் இருப்பது

சுவர்ணாம் – அழகு ததும்பியது

நல்லோரால் போற்றப்படுவது

இனிய நடையை உடையது

இலட்சியம் என்றே சொல்லக்கூடியது (இலட்சிய கவிதை- இலட்சிய பெண்)

கல்யாணி (மங்களமயமானவள்)

இப்படிப்பட்ட கவிதை என்னும் பெண்ணை கௌரிப்ரியா, ஏற்றுக் கொள் என்கிறார்.

ஒரு நல்ல கன்னிகையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா!

கன்னிகை போல இருக்கும் எனது கவிதையை ஏற்றருள்- அவள்

நல்ல அலங்காரங்களுடன் கூடியவள்,

அழகிய நடையை உடையவள்,

நற்குணங்கள் உடையவள்,

கவர்ச்சிகரமான நிறம் கொண்டவள்,

நல்லோரால் கொண்டாடப்படுபவள்,

இனிய விரும்பத்தகும் நடத்தை கொண்டவள்,

மற்றவருக்கு முன் மாதிரியாகத் திகழ்பவள்,

அனைத்து லட்சியங்களையும் கொண்டவள்,

ஜொலிக்கும் ஆபரணங்களை அணிந்தவள்,

நற்பண்புகளுடன் நடப்பவள்,

கையில் தனரேகையைக் கொண்டவள்,

அனைத்து நல்லனவற்றின் களஞ்சியமாகத் திகழ்பவள்

ஒரு நல்ல கவிதையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா

எனது கவிதை என்னும் பெண்ணை ஏற்றருள் ;

அது அனைத்து அணிகளையும் கொண்டது,

அழகிய அனைவரும் விரும்பும் பதங்களைக் கொண்டது,

இனிய இசையுடனான சந்தத்தைக் கொண்டது,

தேர்ந்தெடுத்த சொற்களால் ஒளிர்வது,

அறிவாளிகளால் புகழப்படுவது,

அனைத்து குணங்களையும் தன்னகத்தே கொண்டது,

பக்தியைப் பரப்பும் லட்சியத்தைக் கொண்டது,

முன்மாதிரியான கவிதையாக அமைவது,

அழகிய சொற்றொடர்களைக் கொண்டது,

மிருதுவாகவும் இனிமையாகவும் ஒலிப்பது,

ஒளிரும் கவர்ச்சியான பொருளைக் கொண்டது,

அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது,

முழுக் கவிதையின் பொருளையும் வார்த்தை வார்த்தையாகப் பொருள் பிரித்து, படித்து மகிழலாம்.

தேவர்கள் அனைவரும் உத்தமோத்தம பலம் என்று புகழும் (பெறுதற்கரிய உத்தம பலன் என்று புகழும்) சிவபிரானே, உன்னை எப்படிப் புகழ்ந்து போற்றுவது? (அது இயலாத காரியம்) என்று முடிக்கிறார் ஆதி சங்கரர் சிவானந்த லஹரியை.

சிவானந்த லஹரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை திரு T.M.P. Mahadevan , The Hymns of Sankara என்ற நூலில் அளித்துள்ளார்.

சிவ ஸ்தோத்திரமாகவும் அருமையான பக்தி இலக்கியமாகவும், உயரிய ஆன்மீக உபதேசங்களை அருள்வதாகவும், உயரிய கவிதைக்கான இலக்கணமாகவும், வேத, புராண, இதிஹாஸ சம்பவங்களை அடக்கியதாகவும் உள்ள சிவானந்த லஹரி பக்தர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்பதில் ஐயமில்லை.

ஜய ஜய சங்கர,

ஹர ஹர சங்கர!

***

உதவிக் குறிப்பு :

சிவானந்த லஹரியின் தமிழ் வடிவத்தையும் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பையும் பல தளங்களில் பார்க்கலாம். யூ டியூபிலோ பல அறிஞர்கள், பக்தர்கள் விரிவுரைகளத் தந்துள்ளனர். அவரவருக்கு ஏற்ற வகையில் இவற்றை அனுபவித்து மகிழலாம். பரமாசார்யாளின் உரைகளும் இணையதளத்தில் இருப்பதால் அதிகாரபூர்வமான அந்த உரையை அடித்தளமாகக் கொண்டு ஆதி சங்கரர் நூல்களின் பயணத்தை அன்பர்கள் மேற்கொள்ளலாம்.  

புற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள் (Post No.7608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7608

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே ; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;

மறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;

பெண்ணுறு ஒருதிறன்  ஆகின்று ; அவ்வுரு த்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை

பதினெண் கணமும் ஏத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே

கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;

அதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.

அவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்!

சிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக  காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும்.

ஆனால் பிற் காலத்தில் வலிய பொருள் சொல்லப்போய், சிலர் அபத்தமாக மொழி பெயர்த்தும் இருக்கலாம்.புலவர் மஹாதேவன் புறநாநூறு தொகுக்கப்பட்ட நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இதற்குப் பின்னரும் பல சான்றுகள் உள்ளன. திருவிளையாடல்  திரைப்படத்தில் வரும் ‘தருமி கவிதை சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இதை அப்பரும் தேவாரத்தில் பாடியிருப்பதால் அவருக்கு குறைந்தது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னராவது வாழ்ந்திருக்கவேண்டும் .

அப்பர் பாடலில் தருமி என்ற பிராமணனின் சம்ஸ்கிருதப் பெயரும் வருகிறது. ‘சங்கம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வருகிறது .

சங்கம் என்ற சொல்லை வைத்துத்தான் இன்று வரை தமிழர்கள் பெருமை பேசுகிறோம். இறையனார் களவியல் உரை யின்படி மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து. ஆனால் இந்த சங்கம் என்பது சம்ஸ்கிருதச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே யில்லை .தொல்காப்பிய விதிப்படி “ச” எழுத்தில் தமிழில் சொற்களே துவங்க முடியாது  சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் பரிபாடலில் ஒரே இடத்தில் ‘சங்கம்’ வருகிறது.

இதைவைத்து சங்கம் இல்லவே இல்லை அது பிற்காலக் கற்பனை என்று எவரும் சொல்வதில்லை.

ஆக உண்மையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒருவனின் இரு கண்கள் போல விருப்பு வெறுப்பின்றி பயிலப்பட்டன.

இன்னொரு எடுத்துக் காட்டையும் பார்ப்போம். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிராமணர் அல்ல. அவர் சொல்லும் எல்லா பாண்டிய மன்னர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதைப் பார்க்கையில் தமிழ்ப் பெயர்களும் சம்ஸ்கிருதப் பெயர்களும் ஏக காலத்தில் வேறுபாடின்றி வழங்கின என்றே தெரிகின்றது. ஆக எவரோ ஒருவர் வந்து வேண்டுமென்றே அங்கயற்கண்ணி என்ற அழகான தமிழ்ப் பெயரை மீனாட்சி என்று மாற்றியதாக குற்றம் சாட்டுவதில் பசை இல்லை.

மேலும் பிராமணர் அல்லாத அப்பர், காரைக்கால் அம்மையார் கதைகளில் வரும் பெயர்கள் எல்லாம் புனிதவதி, திலகவதி, பரமதத்தன் என்று சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. ஆக 1600 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரும் இரு கண்களைப் போன்ற தமிழ்- சம்ஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டனர் . சங்க இலக்கிய புலவர் பட்டியலில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள  உள்ளன . சிலர் மட்டும் காமாக்ஷி என்பதை காமக்க்கண்ணியார் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை தாயங்கண்ணன் என்றும் மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

63 நாயன்மார் கதைகளைப் பார்த்தால் இன்னும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்ற. இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்காத ஒரு மன்னரின் பெயர்  மூர்த்தி நாயனார். அவர் களப்பிரர் ஆட்சியை ஒட்டி வாழ்ந்தவர். அதாவது 1600 ஆண்டுகளுக்கு முந்தையவர்.

மேலும் இதற்குப்பின்னர் ஜடா வர்மன் என்ற அழகிய சம்ஸ்கிருதப் பெயர், சடையவர்மன் என்று கல்வெட்டுகளில் தமிழ்மயமாக்கப்படுவதைக் காண்கிறோம்.

முடிவுரை

1.தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் விருப்பு , வெறுப்பின்றி பயன்பட்டன.

2.சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை பாதி மட்டும் மொழிபெயர்த்தோ, முழுதும் மொழி பெயர்க்காமலோ பயன்படுத்தினர்.

3.ஆக அங்கயற்கண்ணியை மீனாட்சியாக மாற்றியதெல்லாம் ‘சூழ்ச்சி’ , ‘சதி’ என்று சொல்வதெல்லாம் பிதற்றலே. மேலும் மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலை, தந்தை மலையத்வஜன் , காஞ்சன மாலை யாதவ குலத்தில் வந்தவள் (சூரசேன மகாராஜன் புதல்வி)– என்று ஆராய்ச்சியை நீட்டிக்கொண்டே போகலாம்.

4.இரு மொழிகளும் இரு கண்களைப் போன்றவையே !

வாழ்க சம்ஸ்க்ருதம் ! வளர்க தமிழ் !!!

Tags  —  கடவுள் வாழ்த்து, பெருந்தேவனார், புறநாநூறு

—subham–

பணம் எங்கே நிலைத்து நிற்கும் ? (Post No.7604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7604

Date uploaded in London – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ள எல்லா நீதி நூல்களிலும் லெட்சுமி வசிக்கும் இடமும் அவளுடைய அக்காள் வசிக்கும் இடமும் சொல்லப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் கூட இந்த இரண்டு இந்து தெய்வங்களைப் பலமுறை சொல்கிறார். அதற்கு முன்பாக, நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவாணக்கவிராயர் அறப்பளீச்சுர சதகத்தில் செப்புவதைக் காண்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீண்ட பட்டியலைப்  படியுங்கள் –

நல்ல லட்சணமுள்ள குதிரையின் முகத்தில், அரசனிடத்தில் , பண்பாடு உடையவர் இல்ல த்தில், தாமரை மலரிடத்தில் , வில்வ மரத்தில், துளசியில், கற்புடைய பெண்கள் இடத்தில், கடலில், கொடியில், கல்யாண வீட்டு வாசலில், நல்ல நகரத்தில்,நல்ல நெற்பயிரில், ஒளி உமிழும் விளக்கில்,வலம்புரிச் சங்கில், நல்லோர் சொல்லும் வாக்கில் (சொல்லில்),பொய் பேசாதவர் இடத்தில் , புஷ்பங்கள் மலர்ந்த குளத்தில் , பால் குடத்தில் , யானையின் தலையில் மலர் மங்கை அதாவது செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லெட்சுமி தேவி உறைவாள் (வசிக்கிறாள்).

இதில் மனிதர்களைத் தவிர மிருகங்களும் செடிகொடிகளும் , பால்குடம் போன்ற பொருட்களும் வருகின்றன. இந்துக்கள் இவைகளை சுப சின்னங்களாகக் காண்பர். மேலும் அத்தகைய இடங்களில் பாஸிட்டிவ் அலைகளை (Positive vibrations) அதிகம் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு கல்யாண வீட்டில்  என்னதான் செலவானாலும், உள்ளுக்குள் என்னதான் கசமுசா இருந்தாலும், அங்கே உள்ள மேள தாள முழக்கமும், மந்திர கோஷமும், அறுசுவை உண்டியின் மணமும் நல்ல உணர்வு அலைகளைப் பரப்புகின்றன. வில்வம் , துளசி போன்றவை மருத்துவ குணம் உள்ள மரம், செடிகள்; தாமரை மலரோ இந்தியாவின் தேசீய மலர். லெட்சுமியும், சரஸ்வதியும் காயத்ரியும், பிரம்மாவும் அமரும் மலர்.

இனி லட்சுமியின் அக்காள் / தமக்கை /மூ தேவி / முகடி/ஜேஷ்டா தேவி/ தெவ்வை  (திருக்குறள் 617,936) வசிக்கும் இடங்களை அம்பல வாணர் பட்டியலில் உள்ளவாறு படிப்போம்:-

சாப்பாட்டு ராமன்கள் , வாயாடிகள், பொய் பேசித் திரியும் பாவிகள் , ஆதரவற்ற அநாதைகள் , அழுக்கும் கந்தலும் உடைய ஆடைகளை அணிவோர் நாய் போலச் சீறும் பேய் மகள்கள் (துஷ்டைகள்) வாழும் வீடுகள் , தயிர்க்குடம் ,கழுதை , ஆட்டுமந்தை, பிணம் ஆகியன tamilandvedas.com, swamiindology.blogspot.com .

இவற்றில் பல சுகாதாரக் கேடானவை என்பது எல்லோரும் அறிந்ததே . இன்னும் சில, வெறி நாய் போன்ற பெண்கள் வசிக்கும் வீடுகள் முதலியன எதிர்மறை / நெகட்டிவ் (Negative vibrations) அலைகளைப் பரப்பும் இடங்கள் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மைகள். அங்கெல்லாம் போகக்கூடாது . போனால் குளிக்க வேண்டும். நெகட்டிவ் அலைகள் கரைந்து, நமக்கு ப்ரெஷ்னஸ் Freshness  / புத்துணர்வு பிறக்கும்

இறுதியாக இலக்குமி பற்றி தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

திருக்குறளில் லக்ஷ்மி – 179, 519, 617, 920, 1101.இது தவிர பத்து குறட் பாக்களில் செல்வம், அழகு என்றும் பாடுகிறார் அவையும் லெட்சுமிகரமானவை என்பதை மேலே அம்பலவாணர் விளக்கிவிட்டார் .

சங்கத் தமிழ் இலக்கியத்தில் லக்ஷ்மி வரும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இடங்கள் —

புறம் 358, 395, 7. பரிபாடல், கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டின் 10 நூல்களில் நிறைய இடங்கள்.

Tags  —  லெட்சுமி, மூதேவி,வசிக்கும் , இடங்கள்

–subham–

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 4 (Post No.7603)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7603

Date uploaded in London – – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 4

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில: tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு டாக்டரின் கவிதை!

ஹரித்வாரில் பூரண்ஜி (ஸ்வாமி ராமா என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர் தான்!) ஸ்வாமியை மிஸ்டர் குதாதத் (Mr Khudadad) என்பவரிடம் அழைத்துச் சென்றார். குதாதத் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். பின்னால் இவர் டாக்டர் பட்டம் பெற்றார்.

அவரைச் சந்தித்த பின்  ஸ்வாமி ராமா கூறினார்; “ஏன், இவர்களையெல்லாம் என்னிடம் அழைத்து வருகிறீர்கள்? அவர்கள் ஏற்கனவே ராமாவின் ஃபாஷனில் வந்து விட்டவர்கள்! அவர்களுக்கு கற்பிக்க ராமாவிடம் ஒன்றுமே இல்லை”

டாக்டர் குதாதத்திடம் அவர் கூறினார் : “ உங்கள் பெயரை ராமாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. குதா (கடவுள் என்று பொருள்) தத் (கொடுக்கப்படது) என்பது குதா என்று இருந்தாலேயே போதுமே!”

உடனடியாக குதாதத் பதில் கூறினார் இப்படி; :கண்கள் உள்ளவர்களுக்கு இது; மற்றவர்களுக்கு அது (“For those who have eyes this, for others that)

இதைக் கேட்டதும் ஸ்வாமி ராமாவிற்கு ஒரே சந்தோஷம்.பெரிய புன்னகை ஒன்றை அவர் மிளிர விட்டார்.

பேட்டியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த குதாதத்  உடனேயே கவிதை ஒன்றை இயற்றினார்:

:ஓ, ஸ்வாமி ராமா! உங்கள் புன்னகை எவ்வளவு மர்மம் பொருந்தியதாக இருக்கிறது!

வாழ்வின் ரகசியம் அதில் உருவெடுக்கிறது”

(O, Swami Rama! How mysterious is thy smile,

The secret of life is manifest therein)

இந்த இருவரிப் பாடலில் ஸ்வாமி ராமதீர்த்தரின் முழு வாழ்க்கையுமே அடங்கி விட்டது!

முதலைகளுக்கு அஞ்சாத ராமதீர்த்தர்!

1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.

ஸ்வாமி ராமா கிஷன்கர் மாநில விடுதியில் (Kishangarh State house) தங்கியிருந்தார். பூரண் சிங்கும் அங்கு வந்து சேர்ந்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில் அது அமைந்திருந்தது. அந்த ஏரியோ ஏராளமான முதலைகள் நிறைந்த ஏரியாகும்.

ஸ்வாமி ராமா தன் கையில் ஒரு சிறிய மூங்கில் தடியை வைத்திருந்தார்.

பூரண் சிங்கிடம் அந்தத் தடியைக் காண்பித்த ஸ்வாமி ராமா, “இந்த மூங்கில் தடியை நீங்கள் பார்க்கவில்லையே! இது பிரமாதமானது. இது தான் ராமாவின் மந்திரக் கோல். முதலைகளை இது விரட்டி விடும். அது மட்டுமல்ல, ராமாவின் பென்சில், பேப்பர் எல்லாவற்றையும் இதில் வைத்து விடலாம்.

(ஸ்வாமி மூங்கிலின் உள்பக்கம் காலியாக இருப்பதையும் அதில் அவரது பேப்பர், பென்சில் இருப்பதையும் காண்பித்தார்). இது தான் ராமாவின் அனைத்துமே! ராமா தனது உடைமைகளை இப்படிச் சுருக்கிக் கொண்டு விட்டார்” என்று கூறிச் சிரித்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

மேலும் அவர் தொடர்ந்து கூறினார்;” ஒருவனின் பயணப் பெட்டி இப்படிச் சுருங்கி விட்டதென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ராஜா தான்! இந்த காலியிடத்திற்குள் அவன் தேவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அது பிரமாதம்”!

ஸ்வாமி ராமாவிற்கு ஒரு அறைக்குள் உட்கார்ந்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. “ராமாவிற்கு அறை என்றாலே பிடிக்காது. ஏனெனில் அது கல்லறை போல இருக்கிறது” என்பார் அவர்.

சூரிய வெளிச்சம் உள்ள மாடியில் தான் அவர் அமர்வார்!

முதலைகளை அண்ட விடாத மூங்கில் கம்பு!

ஒரு நாள் பூரண் சிங்கையும் புஷ்கர் ஏரியில் குளிக்க வருமாறு ஸ்வாமி ராமா அழைத்தார். முதலைகள் நிறைந்த அந்த ஏரியில்  ராமா திரும்பி வரவேண்டுமே என்ற பாதி பயத்துடனும் தனது உயிர் நிலைத்திருக்க வேண்டுமே என்ற முழு பயத்துடனும் பூரண் சிங் இறங்கினார். பூரண் சிங்கிற்கு நீந்தத் தெரியாது.

முதலில் இறங்கிய ராமா, “ ராமா முதலில் போன பின் பின்னால் நீங்கள் நின்றவாறே அவருக்குப் பின்னால் குளித்தால் போதும் என்று பூரண் சிங்கிடம் சொன்னார்.

முதலைகளுக்கு சரியான இரண்டு மாமிச பிண்டங்கள் வருகிறது என்றால் எப்படி இருக்கும்?

இரண்டு விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரில் அமுங்கினார் ஸ்வாமி ராமா. tamilandvedas.com, swamiindology.blogspot.com

தனது மந்திரக்கோலை தனக்கு முன்னே நீரில அவர் மிதக்க விட்டார். ஏதோ அந்த மந்திரக்கோலை முதலைகள் தாண்டக்கூடாது என்று அவர் உத்தரவு போட்டது போல இருந்தது.

பின்னர் அவர் நீரிலிருந்து எழுந்து, “பூரண்ஜி! போகலாம், இதற்கு மேல் நெடுநேரம் நாம் இங்கிருப்பதை முதலைகள் விரும்பவில்லை என்று கூறி விட்டு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். இருவரும் கரைக்கு விரைந்தனர்.

தனது மந்திரக்கோலை ஸ்வாமி ராமா மறக்கவில்லை. ஞாபகமாக அதைக் கையில் எடுத்துக் கொண்ட அவர், “நல்ல அருமையான ஆள், இவன்! ராமாவிற்கு மிகவும் சிரத்தையாக இவன் சேவை செய்கிறான் என்றார்.

தண்ணீரைக் கண்டு அஞ்சாத நீச்சல்காரர் ஸ்வாமி ராமா!

ஆனால் அந்த ஜலத்திலேயே அவர் சமாதி நிகழும் என்று யார் தான் நினைத்தார்கள்?

*** (தொடர்ந்து செல்வோம்)

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 3 (Post No.7599)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7599

Date uploaded in London – 21 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 3

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில:

கணிதத்திற்கு தீர்வு காண்பேன், இல்லையேல் தலையைக் கொடுப்பேன்!

ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கணித மேதை. அவரைப் பற்றி பூரண் சிங், ‘ஸ்வாமி ராமா’ (Puran singh – Swami Rama) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பூரண் சிங் ஸ்வாமி ராமதீர்த்தர் தன்னிடம் கூறியதாக எழுதிய சம்பவம் இது.

ஒரு முறை ஸ்வாமி உயர்கணிதத்தில் சில கடினமான கணக்குகளைத் தீர்வு செய்ய எடுத்துக் கொண்டார். ‘நாளை காலை சூரியன் உதிப்பதற்குள் அவற்றிற்கான தீர்வைக் காண்பேன்; இல்லையேல் என் தலையை உடலிலிருது வெட்டிக் கொள்வேன்’ என்று சபதம் பூண்ட அவர் தலையை வெட்டுவதற்காக ஒரு கூரிய கோடாரியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட சபதம் மிக மிகத் தவறானது தான்; ஆனால் இப்படிப்பட்ட கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டதனால் தான் தனக்கு இருக்கும் அறிவு வந்தது என்றார் அவர். நள்ளிரவிற்குள் நான்கு கணக்குகளில் மூன்றிற்கு அவர் தீர்வைக் கண்டு விட்டார். நான்காவது கணிதத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை.ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.

தான் போட்ட சபதத்திற்குத் தக, கோடாரியை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குப் போனார். அங்கு கூரிய கோடாரியைத் தன் தொண்டையில் வைத்து அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோடாரி முனை கழுத்தில் பட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்த தருணம்.

திடீரென்று ஆகாயத்தில் அந்தக் கணிதத்திற்கான தீர்வு எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். அதை எழுதிக் கொண்டார்.

அந்தக் கடினமான கணிதத்திற்கு அது தான் அபாரமான ஒரிஜினல் தீர்வாக அமைந்தது. அதை தனது கவர்ன்மெண்ட் காலேஜ் பேராசிரியர் முகர்ஜியிடம் காண்பித்தார். பேராசிரியர் பிரமித்துப் போனார்.

இதே போல பல முறை  செய்து தான் கணிதத்தில் யாரும் பெறுதற்கரிய பெரும் நிலையை ராமதீர்த்தர் பெற்றார்.

விவேகானந்தரின் சொற்பொழிவு

1897ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். ஸ்வாமி விவேகானந்தரை சனாதன தர்ம சபாவின் சார்பில் சொற்பொழிவாற்ற லாகூருக்கு அழைத்தார் ராமதீர்த்தர். ஹாலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உடனே ஹாலை விட்டு வெளியேறி திறந்தவெளியில் அனைவரும் கேட்டுத் திருப்தியுறும் வகையில் விவேகானந்தர் பேசினார்.

அடுத்த சொற்பொழிவு வேதாந்தம் பற்றியது. ராமதீர்த்தரின் வேண்டுகோளின் பேரில் அந்தச் சொற்பொழிவை ஆற்றினார் ஸ்வாமி விவேகானந்தர். அது ஒரு சர்கஸ் மைதானத்தில் நடந்தது.

மின்னல் போன்ற பளீரென்ற சொற்பொழிவும், ஸ்வாமிஜியின் நா வன்மையும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டது.

இந்தச் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் தான்,  சந்யாசியாக தான் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில்  உறுதி கொண்டார் ராமதீர்த்தர். ஸ்வாமி விவேகானந்தர் போலவே அமெரிக்கா சென்று வேதாந்தத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இதன் விளைவே தான்!

சண்டை போட வந்த மௌல்வி சாஹப்

1902ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம்.

ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்த்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அங்கு சனாதன தர்ம சபா சார்பில் அவர் ஒரு சொற்பொழிவாற்றினார். இந்த சபை சாந்தி பிரகாஷ் என்ற சூரஜ் லால் பாண்டே என்பவரால் நிறுவப்பட்ட சபா.

இந்த சபை ஹிந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் பங்கு கொள்ளக் கூடிய ஒரு பொதுவான சபா. தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சபையாக இது அமைந்திருந்தது.

ஸ்வாமி ராமதீர்த்தரின் ஆணைப்படி அவரது சிஷ்யரான நாராயணா, ‘ஆத்மா’ என்ற பொருளில் பேசினார். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த மௌல்வி முகம்மது முர்டாஸா அலி கான் (Maulvi Mohammed Murtaza Ali Khan) பல ஆக்ஷேபணைகளை எழுப்பினார்.

ஸ்வாமி ராமதீர்த்தர் மறுநாள்  வந்து ஆக்ஷேபணைகளுக்கு அவர் சமாதானங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

மறுநாள் மௌல்வி குறித்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார்.

வாதம் புரிவதற்காக அல்ல; வம்புச் சண்டைக்காக வந்தார்.

ஸ்வாமி ராமதீர்த்தரின் எதிரில் நேருக்கு நேர் அவர் உடகார்ந்தார்.

இருவரின் கண்களும் சந்தித்தன.

அவ்வளவு தான்! மௌல்வி தனது ஆக்ஷேபணைகள் அனைத்தையும் மறந்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.

கைகளைக் கூப்பியவாறே அவர் ஸ்வாமி ராமதீர்த்தரை நோக்கி, “ஐயனே! மனித்து விடுங்கள் என்னை; உங்களை யார் என்று தெரியாமல் போய் விட்டது! என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.

அன்று முதல் அந்த மௌல்வி இனம், ஜாதி கடந்த இறையன்புக்கு ஆளானார்.

இயற்கையும் ஸ்வாமிக்கு இசையும்!

பாபு சூர்ஜன் லால் பாண்டே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இப்படி விவரித்துள்ளார்;

ஒருமுறை ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்த்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அப்போது அங்கு தினமும் தவறாமல் மழை பொழிந்து கொண்டிருந்தது. கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தது.

பாண்டே ராமதீர்த்தரிடம், “ காலநிலை மந்தாரமாக (Gloomy) இருக்கிறதே” என்றார்.

ராமதீர்த்தர் சிரித்துக் கொண்டே, “இதோ ராமா வந்தாகி விட்டதே; எதுவும் மந்தாரமாக இருக்காது. காலநிலையும் புன்னகை பூக்கட்டும் (Cheerful)” என்றார்.

உடனே மேகங்கள் விலகின. சூரியன் பளீரென வெளிச்சத்தைத் தர ஆரம்பித்தான்.

ஸ்வாமி ராமதீர்த்தர் தனது சொற்பொழிவுகளைத் தொடங்கினார்.

அவர் அங்கிருந்த வரை மழை பொழியவில்லை; சொற்பொழிவுகளுக்கு இடையூறு ஏற்படவே இல்லை!

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இப்படி இன்னும் ஏராளமான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் உண்டு.

தொடர்ந்து பார்ப்போம்.

***