நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)

Written  by  London Swaminathan

Post No.7671

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்பதை சம்ஸ்கிருத நூல்களும், பாலி மொழி நூல்களும்  காட்டுகின்றன.  இதில் மிகவும் சுவையான விஷயம் மாந்தோப்பு அழகி பற்றிய நான்கு  செய்திகளாகும்.

1.அவளுக்கு ஆம்ர பாலி (பாலி  மொழியில் அம்பா பாலி )   ‘மாந் தோப்புக்காரி’ என்று பெயர் வந்தது ஏன்?

2.புத்தர் பிரான் ஏன் அவள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டார்?

3.அவளுடன் ஒரு நாள் படுக்க, அவள் போட்ட ஐந்து நிபந்தனைகள் என்ன?

4.மகத சாம்ராஜ்ய சக்ரவர்த்தி பிம்பி சாரன் அவளுடன் படுக்க செய்த தந்திரம் என்ன?

2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரான் அடிக்கடி சென்ற இடம் பீஹார் மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் வைசாலி என்னும் புகழ்மிகு நகரம் சீ ரும் சிறப்புடனும் திகழ்ந்தது. அதில் சாக்கிய குல பிரபு ‘மஹாநாமா’ வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஒரு நாள் அவர் மாந்தோப்பில் உலவச் சென்றபொழுது ஒரு பெண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்தது. அதை எடுத்து மனைவியிடம் கொடுக்கவே அவளுக்குப் பேரானந்தம் கிட்டியது. செல்வச் சீமாட்டி போல அவளை வளர்த்தார்கள். அவள் பருவத்துக்கு வந்தபோது பேரழகியாகத் தோன்றினாள் . மாந்தோப்பில் கிடைத்த பெண் ஆதலால் அவள் பெயரும் அம்பா பாலி என்றே நிலைபெற்றுவிட்டது (சம்ஸ்கிருத மொழியில் ஆம்ர என்றால் மாமரம். அது பேச்சு வழக்கு மொழிகளான பாலி /பிராக்ருதத்தில் ‘அம்பா’ ஆகிவிடும்).

பெண்ணுக்குக் கல்யாணம் கட்ட வேண்டிய தருணம் வந்தவுடன் பெற்றோருக்கு கவலையும் வந்தது. ஏனெனில் லிச்சாவி குல வழக்கப்படி அந்த ஜாதியில்தான் மணம் முடிக்க வேண்டும். ஆகையால் லிச்சாவி சபை கூட்டப்பட்டது . எல்லோரும் மண்டபத்தில் கண்களை அகலவிரித்து காத்திருந்தனர். பேரழகி அம்பா பாலி  உள்ளே புகுந்தாள் . அனைவரும் ஆச்ச ரியத்தில் மூழ்கினர். இதயம் ‘படக் படக்’ என்று துடித்தது. இவள் எனக்குத்தான் என்று எல்லோரும் ஏகமனதாக தீர்மானம் போட்டுக்கொண்டனர். அறைக்குள் யுத்தம் வெடிக்கும் அளவுக்கு போட்டா போட்டி; காட்டா குஸ்தி. சபைத் தலைவர்கள் ஒரு சமாதானத் தீர்மானம் போட்டனர் . இவளை ‘பொது மகளாக்கி’ எல்லோரும் அனுபவிப்போம் என்று தீர்மானம் போட்டனர். தந்தை தாய் மனம் துடித்தது; ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

வீட்டில் நுழைய ஐந்து நிபந்தனைகள்

ஆனால் பெரும் சண்டை நிகழ்வதைத் தடுப்பதற்காக அந்த புத்திசாலிப் பெண் ஒரு அறிவிப்பைப் பிரகடனம் செய்தாள் . உங்கள் தீர்மானத்தை நான்  ஏற்கிறேன் . நான் போடும்  நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சொல்லிப் புல்லட் பாயிண்டு (Bullet Points )களில் பட்டியல் போட்டாள் –

1. ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்மகன் மட்டுமே என் வீட்டுக்குள் நுழையலாம்

2. அவர் ஒரு இரவு என்னுடன் படுக்க 500 ‘கார்ஷா பணம்’ தரவேண்டும்; (இந்தப் பழங்கால நாணய முறை இன்று வரை தமிழில் கூட ‘காசு’ ‘பணம்’ என்று வழங்கப்படுகிறது )

3.என் வீட்டுக்குள் வந்து போவோரை யாரும் கண்காணிக்கக் கூடாது

(நல்ல வேளையாக அக்காலத்தில் சி சி டி வி C C T V cameras, காமெராக்களும் கிடையாது; கூகுள் வாட்ச் Google Watch-ம் கிடையாது)

4.எனக்கு நகரத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு கொடுக்க வேண்டும்.

5.எந்தக் காரணத்துக்காகவாவது அரசாங்க அதிகாரிகள் என் வீட்டை சோதனை போடவேண்டுமானால் எனக்கு ஏழு நாள் நோட்டிஸ் (Seven Day Notice)  கொடுத்து அதற்குப்பின்னரே என் வீட்டுக்குள் அதிகாரிகள் வரவேண்டும் .

இந்த ஐந்து நிபந்தனைகளையும் சபை ஏற்றுக்கொண்டது.

அம்பாலிக்கு பெரிய வீடு கிடைத்தவுடன் சிறந்த ஓவியனைக் கூப்பிட்டு வீட்டுச் சுவர்களில் மன்னர்கள், பிரபுக்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோரின் ஓவியங்களை  வரைய ச் சொன்னாள் . அதில் மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னன் பிம்பிசாரனின் படமும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு காதல் மலர்ந்தது. இந்தச் செய்தி மன்னன் காதிலும் விழுந்தது . அவனும் அம்பாபாலியின் புகழ் பரவுவதை அறிந்து அவள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான். ஆனால் அதில் ஒரு சிக்கல் . மகதப் பேரரசுக்கும்  லிச்சாவிகளுக்கும் இடையே உரசல் நிலவியது. அமைச் சர்கள் வைசாலி நகருக்குள் நுழைவது ஆபத்து என்று எச்சரித்தனர் . பிம்பி சாரன் மாவீரன் ; ராணுவ தளபதி கோபன் என்பவனைப் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு மாறு  வேடத்தில் வைசாலி நகருக்குள் போய் அம்பாபாலியுடன் ஆறு இரவுகள் தங்கினான்.

இதற்குள்  நகர அதிகாரிகளுக்கு பராபரியாகத் தகவல் கிடைக்கவே எதிரி நாட்டு மன்னனைப் பிடிக்க வீடு வீடாக சோதனை போடத் துவங்கினர். அம்பா வீட்டுக்கும் வந்தபோது அவள் 7  நாள் நோட்டிஸ் நிபந்தனையைச் சுட்டிக்காட்டியவுடன் அவர்கள் போய்விட்டனர். மன்னன் பிம்பிசாரனும் மாறுவேடத்தில் தப்பித்துச் சென்றான்.

பிம்பிசாரன் விடைபெற்றுச் செல்லும் முன்பாக அம்பாபாலிக்கு ராஜமுத்திரை பதித்த மோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எப்போதும் தன் அரண்மனைக்கு வரலாம் என்றான். அவளும் ஒன்பது மாதத்தில் ஒரு பிள்ளையைப் பெற்றாள் .அவன் பள்ளிப்பருவம் எய்தியபோது எல்லோரும் அவனை ‘யாருக்குப் பிறந்தவனோ’ என்று ஏசினர் . உடனே அவனை அம்பா , அரண்மனைக்கு அனுப்பிவைத்தாள். அங்கே அவன் விமல கொண்டன்னா என்ற பெயருடன் வளர்ந்து பிற்காலத்தில் புத்த பிட்சுவாக மாறினான். காலம் உருண்டோடியது .

புத்தர் வருகை

வைசாலி நகருக்கு அருகில் உள்ள கொடிகாம என்னும் ஊரில் புத்தர் தங்கியிருப்பதை அறிந்து அம்பாவும் அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாள் அவருடைய சொற்பழிவைச் செவிமடுத்தாள் ;அதே நேரத்தில் லிச் சாவி குலத் தலைவர்களும் அங்கே வந்தனர். புத்தர் பிரானை சிஷ்யர்கள் புடைசூழ தம் இல்லத்துக்கு விருந்துண்ண அவள் அழைத்தாள் ;லிச் சாவி குலத் தலைவர்களும் புத்தரை அழைத்தனர். அனால் புத்தர் பிரான் அம்பாவின் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்குச் சென்று விருந்துண்டார். இது லிச்சாவி குலத் தலைவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது . புத்தர் பிரான் சாப்பிட்டு முடித்தவுடன் தனது பெரிய மாந்தோப்புகளையும் வீடுகளையும் புத்த சங்கத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் .

நாளடைவில் தனது உடலைத் தானே பார்த்து வருத்தமுற்றாள் . உலகையே ஈர்த்த அழகான தோல், இப்போது சுருங்கிப்போய் அவளுக்கே பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்த நேரத்தில் புத்த பிட்சுவாக மாறிய தனது மகன் விமல கொண்டன்னா உபன்யாசம் செய்வதை அறிந்து காது குளிர கேட்டாள் ; வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தாள்; நித்யானந்தம், பேரானந்தம் பெரும் வழி புத்தரின் வழி என்று அறிந்து புத்த பிக்ஷுணி ஆனார். அதில் அர்க்கத் என்ற பெரிய நிலையை அடைந்து பெரும்பேறு பெற்றாள் ; மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னனான பிம்பி சாரனும் புத்த மதத்துக்குப் பேராதரவு நல்கினான்.

TAGS- அம்பபாலி ,பிம்பி சாரன், புத்தர், நாட்டிய தாரகை

–சுபம்—

‘மேலைச் சிதம்பரம்’ பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்! (Post .7670)

Written  by  S NAGARAJAN

Post No.7670

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Big Thanks for your pictures.

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்ற பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்!

ச.நாகராஜன்

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்றது பேரூர். அங்கு கோமுனி, பட்டி முனி காண மரகதவல்லி சமேதரான பட்டீசுரன் தாண்டவமாடினார். இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பேரூர் உள்ளது கொங்கு மண்டலத்திலேயாம் என்று கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.

பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா

நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்

போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்

வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே

இது கொங்கு மண்டல சதகத்தில் வரும் 17வது பாடல்.

பேரூர் உள்ளது ஆறை நாடு. பேரூர்ப் புராணம் கூறும் செய்யுள் இது:

கோமுக முனியும்பட்டி முனிவனுங் குறுகியேத்த

வேமுறு பூதநாத ரிடனறத் துவன்றிப் போற்ற

காமுறு விசும்பிற் றேவர் கடிமலர் மாரி தூர்ப்பத்

தீமுழங் கங்கைவள்ள றிருநடன நவிற்றலோடும் (பேரூர்ப் புராணம்)

இந்த வரலாற்றைச் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரத்திலும் காணலாம் :

ஏழாம் திருமுறையில் கோயில் பகுதியில் உள்ள பத்துப் பாடல்களில் பத்தாவது பாடலாக அமைவது இது:

பார் ஊரும் அரவு அல்குல் உமைநங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன்

ஊர் ஊரான் தருமனார்தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய்ப்

பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே.

கொங்குமண்டல சதகத்தில் அடுத்த பாடலாக மலரும் 18வது பாடல் பட்டீசுரன் பள்ளனான வரலாறைக் கூறுகிறது இப்படி:

கடுவாள் விழியினைப் பாரூர்ப் பரவை கலவிவலைப்

படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்

நெடுவாளை பாயும் வயலூடு போகி  நெடியபள்ள

வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே

இதன் பொருள் :- சுந்தரர் நம்மைப் பாடி வருவார்; அவருக்குக் கொடுக்கப் பரிசு (பொன்) இல்லையே என்று ஒளிந்தவர் போலப் பட்டிப் பெருமான், பள்ள வடிவு கொண்ட பேரூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.

இதைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:

உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோல மிட்டுரைக்கும்

வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகிமுன் காட்டிப்

பயந்தரு றைவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்

நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா

கொங்கு மண்டல சதகம் தனது நூறு பாடல்களில், பட்டீசுரத் திருவிளையாடலுக்கு மட்டும் மூன்று பாடல்களை ஒதுக்குகிறது. (பாடல்கள் 17,18,19). இந்த மூன்றையும் நமது கொங்கு மண்டல சதகத் தொடரில் விரிவாகப் பார்த்து விட்டோம்.

***

நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி (Post No.7666)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7666

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் . ரிக் வேதத்திலும் நலுங்குப் பாடல்கள் இருக்கின்றன. அது பற்றி தனியாக எழுதுகிறேன். இதோ லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்த பழைய நலுங்குப் பாடல் புஸ்தகம். வாசகர்களும் காமெண்ட் பத்தியில் நலுங்குப் பாடல்களையும் அது  பற்றிய தகவல்களையும் கொடுத்தால் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்தரும்

நூலின் தலைப்பு – நூதன நலுங்குப் பாட்டு

ஆண்டு- 1937

வெளியிட்டவர்- சென்னை திருவொற்றியூர் நாக்கை சரவண முதலியார்

அவர்களது கலை மகள்  பிரஸ்

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரீ (Post No.7656)

 

 

WRITTEN BY S Nagarajan

Post No.7656

Date uploaded in London – 6 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a
non- commercial blog.

 

 

 

ஆதி சங்கரர் அருளிய நூல்கள்
– 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய
நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020

 

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரீ

 

ச.நாகராஜன்

3. சௌந்தர்ய லஹரீ

 

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக்
கொண்ட நூல் சௌந்தர்ய லஹரீ.

இதைப் பற்றி மிக விரிவாக காஞ்சி
காமகோடி பரமாசார்யாள் தனது உரைகளில் எடுத்துரைத்துள்ளார். நூலின் ரஹஸ்ய அர்த்தங்களைத்
தெரிந்து கொள்ளவும், பெருமையைப் புரிந்து கொள்ளவும் அதைப் படிக்க வேண்டியது மிக அவசியம்.

 

 

அவரது உரையின் ஒரு சிறிய பகுதி
இங்கு (நூல் பற்றிய அறிமுகத்திற்காக)

தரப்படுகிறது:

“ஜகன்மாதாவாக இருக்கிற
அம்பாளைப்பற்றி அநேக
மகான்கள், கவிகள்,
ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஸ்தோத்திர
கிரந்தங்களுக்குள் மூன்று
மிகவும் சிரோஷ்டமானவை.
முதலாவதுஸெளந்தரிய
லஹரீ.
(
இரண்டாவது மூகர் அருளிய மூக பஞ்ச சதி; மூன்றாவது துர்வாஸர்
அருளிய ஆர்யா த்வி சதி
)

 

 

ஸ்ரீ சங்கரர் பகவத்பாதர்கள்
கைலாசத்துக்கு போன
போது சாக்ஷாத்
பரமேசுவரன் தாமே,
அம்பிகையைப் பற்றி
செய்திருந்த சௌந்தர்ய
லஹரீ சுவடிக்கட்டை
நம் ஆசாரியாளுக்குக்
கொடுத்து அநுக்கிரஹித்தார்.
அதில் மொத்தம்
நூறு சுலோகங்கள்
இருந்தன. ஆசாரியாள்
கைலாஸத்திலிருந்து திரும்பி
வரும்போது, வாசலில்
காவலிருந்த நந்திகேசுவரர்,
மகா பெரிய
சொத்து கைலாஸத்திலிருந்து
போகிறதே என்று
நினைத்து, ஆசாரியாள்
கொண்டு வந்த
சுவடியிலிருந்து தம்
கைக்குக் கிடைத்ததை
அப்படியே உருவிக்
கொண்டுவிட்டார். முதல்
41
ஸ்லோகங்கள் மட்டுமே
ஆசாரியாள் கையில்
நின்றன. பாக்கி
59
சுலோகங்கள் நந்திகேசுவரர்
கைக்குப் போய்விட்டன.
அப்புறம் ஆசாரியாள்
தாமே அந்த
59
சுலோகங்களையும் கடல்
மடை திறந்த
மாதிரிப் பாடிப்
பூர்த்தி செய்துவிட்டார்.
இவ்விதத்தில்தான் இப்போது
நூறு சுலோகங்களோடு
உள்ளஸெளந்தரிய
லஹரீ
உருவாயிற்று.

சௌந்தர்யம் என்றால் அழகு; லஹரீ என்றால் அலை.

 

அழகு அலை!

சௌந்தர்ய லஹரீ சிறந்த மந்திர சாஸ்திர நூலாக
உலகெங்கும் போற்றப்படுகிறது.

லிங்க புராணத்தில் விநாயகர் வாழ்த்தில்  மகாமேரு மலையில் விநாயகரால் இது எழுதப்பட்டதென்று
கூறப்பட்டுள்ளது.

நூலுக்கு அருமையான உரை ஒன்றை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதியுள்ளார்.
இது
ஸ்ரீ ராமகிருஷ்ண
மடம், சென்னை – 4 வெளியீடாக வந்துள்ளது.

 

 

 

ஸர்வ ஸித்தியை விளக்கும் – ஸ்தோத்ர மஹிமை
ஸ்லோகமான – 22ஆம் ஸ்லோகம் இது:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி
ய: |

ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித
பதாம் ||

 

பதவுரை : –

பவானி – பவன் எனப் பெயர் பெற்ற பரமசிவனுடைய
பத்தினியே

த்வம் – நீ

தாஸே மயி – அடிமையாகிய என்னிடத்தில்

ஸகருணாம் – கருணையுடன் கூடின

த்ருஷ்டிம் – பார்வையை

விதர – செலுத்தியருள்வாயாக

இதி – என்று

ய; – எவனாவது ஒருவன்

ஸ்தோதும் – துதி செய்ய

வாஞ்ச்சன் – விரும்பி

‘பவானி த்வம்
– ‘பவானி நீ என்ற இரண்டு வார்த்தைகளை

கதயதி – சொன்னால்

ததைவ – அப்போதே

த்வம் – நீ

தஸ்மை – அவனுக்கு

முகுந்த-ப்ரஹ்ம- இந்த்ர -ஸ்புட- முகுட- நீராஜித
பதாம்  – விஷ்ணு, பிரம்மா, இந்திரன், ஆகியவர்களின்
கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற திருவடிகளையுடைய

நிஜ – ஸாயுஜ்ய பதவீம் – உனது ஸாயுஜ்ய பதவியை

திசஸி – அளிக்கிறாய்

(பதவுரை – அண்ணா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நூல்)

 

நமஸ்கரித்தல், ஆசி கூறுதல், சித்தாந்தத்தை
எடுத்துக் கூறுதல், பராக்கிரமத்தைப் புகழ்தல், பெருமைகளை விளக்குதல், பிரார்த்தனை செய்தல்
ஆகிய ஆறு ஸ்தோத்திர லக்ஷணங்களைக் கொண்ட சௌந்தர்ய லஹரீ ஆதி சங்கரரின் அற்புதமான நூலாகும்.

 

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு பிரத்யேக பலன்
உண்டு என்பதை மந்த்ர சாஸ்திர விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

லிப்கோவின் ஸ்ரீ சௌந்தர்ய லஹரீ என்னும் நூல் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான
பயனை விளக்குகிறது இப்படி:

முதல் ஸ்லோகத்திலிருந்து நாற்பத்தி ஒன்றாம்
ஸ்லோகம் முடிய வரிசைப்படி பலன்கள்:

 

 

எல்லா நன்மைகளும் பெற, ஜடப்பொருளால் தடை நீங்க,
வேதப் பொருள் விளங்க, வியாதிகள் நீங்க, அனைவரையும் வசீகரிக்க, தம்பதிகளுக்குள் ப்ரேமை
ஏற்பட, சத்ருக்களை வெற்றி கொள்ள,  சம்சார பந்தம்
நீங்க, பஞ்ச பூதங்கள் ஸ்வாதீனமாக, சரீர சுத்தியுண்டாக, மலடு நீங்க, கவிதை உண்டாக, ஸ்திரீ
வஸ்யம் உண்டாக, துர்பிக்ஷம் நீங்க, கவிதை புனையும் வல்லமை ஏற்பட, சபையோரை மகிழ்விக்க,
சகல கலைகளிலும் வல்லமை பெற, ஸ்திரீ வஸ்யம் உண்டாக, ஸ்திரீ மோஹனத்திற்காக,  விஷ பயம் நீங்க, மக்களிடம் மரியாதை பெற, இக லோக
சுகம் பெற, வியாதி கடன் தொல்லை நீங்க, பேய், பூதத் தொல்லை நீங்க, உயர் பதவி கிடைக்க,
பகைமை நீங்க, ஆத்ம ஞானம் உண்டாக, அபம்ருத்யு பயம் நீங்க, முரட்டுத் தனம் நீங்க, எண்வகை
சித்தி பெற, ராஜ வஸ்யம் பெற, தங்கம் செய்யும் வழியை அறிய, செல்வம் செழிக்க, சந்தேகம்
நீங்க, மார்பு நோய் நீங்க, பயங்கர ரோகங்கள் நீங்க, பிசாசு, பீடை நீங்க, குழந்தைகளின்
நோய்கள் நீங்க, துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) நீங்க, வருங்காலம் உணர,  வயிற்று வலி நீங்க.

 

இன்னும் 42 முதல் 100 முடிய உள்ள ஸ்லோகங்களுக்கும்
இதே போல பலன்கள் தனித்தனியே உண்டு. இவற்றை புத்தகத்தில் காணலாம்.

ஸ்லோகங்களை குரு மூலமாக உபதேசம் பெறுதல் சிறப்பாகும்.

சௌந்தர்ய லஹரீ கூறும் மந்திர, யந்திர மகிமைகளை
வல்லார் மூலம் அறியலாம்.

எல்லையற்ற தேவியின் மஹிமையை உணர ஒரு அற்புத
நூல் சௌந்தர்ய லஹரீ!

****

 

Ghosts are Bound Souls பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்களே (Post. 7652)

WRITTEN BY S Nagarajan

Post No.7652

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Swami Ramathirtha’s Parables – 3

ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 3

ச.நாகராஜன்

குறிப்பு : – ராமதீர்த்தர் தன்னை எப்போதும் ராமா என்று அழைத்துக் கொண்டே பேசுவார். (நான் என்று ஒரு போதும் அவர் பேசுவதில்லை.) அதை மனதில் கொண்டு அவரது உரைகளைப் படிக்க வேண்டும்.

பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்களே -இமயமலையில் ஒரு குகை

ராமா ஒரு சமயம் இம்யமலையில் உள்ள ஒரு குகையில் வசித்து வpiந்தார். அது பிசாசுகள் நடமாடும் இடம். அதன் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வந்தோர் பல துறவிகள் அந்தக் குகையில் ஒரு இரவு இருந்தே இற்ந்து விட்டதாகச் சொன்னார்கள். அங்கு சென்றோர் பயந்து போய் மயக்கமடைந்ததாகச் சொன்னார்கள். ராமா அங்கு வசிக்க விரும்புவதாகச் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ராமா அந்தக் குகையில் பல மாதம் வசித்தார். ஒரு பிசாசோ அதன் நிழலோ கூட அங்கு தெரியவில்லை. அவை எல்லாம் பறந்து போய் விட்டன போலும். அங்கு பாம்புகள், தேள்கள் குகையின் உள்ளே இருந்தன; புலிகள் குகைக்கு வெளியே இருந்தன. அங்கிருந்து அவை வெளியே கிளம்பவில்லை. ராமாவின் உடலுக்கு ஒரு தீங்கையும் அவை விளைவிக்கவில்லை. பற்றற்ற ஆன்மாக்கள் அல்லது ஜீவன் முக்தர்கள் மரணத்தையோ அல்லது பிசாசுகளையோ நினைத்து வாழ்வதில்லை என்பதை வேதாந்தம் நிரூபித்திருக்கிறது.

அவர்களது சொந்த உண்மையற்ற பூதத்தின் அடிமைகளே பிசாசாகவோ அல்லது ஆவிகளாகவோ உருவெடுக்கும். அந்த நிழலான வடிவங்களில் கட்டுப்பட ஆன்மாக்களே தளைப்படுத்தப்படுகின்றன.

நீதி : பிசாசுகள் கட்டுப்பட்ட ஆன்மாக்கள், ஆகவே அவை ஜீவன் முகதரின் எத்ரில் நிற்க முடியாது, ஆகவே அவருக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க முடியாது.

தொகுதி 2 (பக்கம் 44-45)

ghosts in Indus Valley Seals

பெரிய வளைவுப்பாலம் பெரும் புயலைத் தன் அடியில் சீறிக் கொண்டு போக விடுகிறது. பல டன்கள் பாரமுள்ள  புகைவண்டிகளை ஓடச் செய்கிறது. அந்த வளைவு கீழே உள்ள காலியாக இருக்கும் பாகத்தால் வலிவுள்ளதாக ஆகிறது.

அதேபோல,

ஒரு பேரறிஞன் வலிமையுள்ளவனாக ஆகிறான்; தன்னைக் காலியாக்கிக் கொள்வதன் மூலம் வெல்ல முடியாதவனாக ஆகிறான்.

*

குரு கோவிந்தசிங்

அவர் ஒரு சிங்கத்தை வேட்டையாடுகிறார், அதன் தோலை உரிக்கிறார், ஒரு கழுதையின் மேல் அந்தத் தோலைப் போர்த்தித் தைக்கிறார். அதை நகர் நோக்கிச் செல்ல விடுகிறார். மக்கள் பயத்தால் பதறி ஓடுகின்றனர். கழுதை மற்ற கழுதைகளைப் பார்த்து காள், காள் என்று கத்துகிறது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்டு பிடித்து அந்த கழுதையைக் கொல்கின்றனர்.

பாடம் : நீங்கள் சிங்கத்தின் தோலை அணிய விரும்பினால் நீங்கள் உங்களது பழைய ஜாதி மற்றும் சம்பிரதாயங்களை முழுதுமாக மறக்க வேண்டும், பழைய கழுதைக் கத்தல்களையும் மொத்தமாக விட்டு விட வேண்டும்.

*

1. ஒரு இரும்புத் துண்டானது வடக்கு-தெற்கு திசையை நோக்கி வைக்கப்படும் போது அந்த காந்தசக்தியை அடைகிறது. மனிதன் ஏன் ஸத்தியம் – அன்பு ஆகியவற்றை ஒருமிக்கும் போது அடையக் கூடாது?

2. நீராவியுடனான ஒரு பாய்லர் எஞ்சினை இயங்க வைக்கிறது, மனிதன் ஏன் உணர்ச்சிகளால் இயங்க வைக்க  முடியாது?

3. தகடு அதிர்வால் அதிரட்டும், மண் அற்புதமான உருவங்களாக உருவாகட்டும். அதே போல சித்தத்தின் அதிர்விற்கு விதிகள் கீழ்ப்படியும்.

*

ஆங்கில மூலம் :

Ghosts are Bound Souls (A cave in the Himalayas)

Rama lived at one time in a cave in the Himalayas, which was noted for being haunted by ghosts. The people who lived in the neighbouring villages spoke of several monks having died by remaining inside that cave for a night. Some of the visitors were said to have been frightened to swooning. When Rama expressed a desire to live in that cave, everybody was amazed. Rama lived in that cave, for several months, and not a single ghost or shade appeared. It seems that they all fled. There were snakes and scorpions inside the cave and tigers outside it. They did not leave the neighbourhood but never did any harm to Rama’s body.

It is proved by Vedanta that free souls or the jiwan-muktas never live after death as ghosts; it is only the slaves of their own phantoms that have to assume the garb of ghosts or spirits. It is only the bound souls that are enchained in those shadowy shapes.

MORAL:—Ghosts are bound souls, hence they 79

Parables of Rama

cannot withstand the presence of a free soul (jiwan-mukta) and can therefore cause him no harm. Vol. 2 (44-45)

*

The great arch lets storm rage under it and trains lead their heavy tonnage over it, and the arch is strong by virtue of the hollowness underneath, and a wise man becomes strong and invincible by emptying himself.

*

Guru Govind Singh

He hunts a lion, flays him, sews the skin on the body of an ass, and sends the donkey to the town. People run away in fear. The donkey brays on seeing other donkeys. People discovered the cheat, and killed the animal.

Lesson : If ye want to wear the sinha-garb (lion-skin) you must forget in toto all about your old castes and creeds, must give up entirely the previous braying habits.

*

1. When an iron-bar is kept North-South it is magnetized. Why not man when in unison with Truth and Love?

2. A boiler with steam works engines. Why not Man with Feeling?

3. Let the plate vibrate, and the sand shapes itself in fantastic figures. So the Laws obey the vibrations fo Chitha.

**

Tags  ராமதீர்த்தர் , குட்டிக் கதைகள் 3, குரு கோவிந்தசிங், பிசாசுகள்

An Optical Illusion ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2 (Post No7648)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7648

Date uploaded in London – 4 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Swami Ramathirtha’s Parables – 2

ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் இன்னொரு குட்டிக் கதை இது :

“ ஆப்டிகல் இல்லூஷன் (Optical Illusion)  எனப்படும் ஒளியியல் கண்மாயத்தைக் கொண்ட பல படங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன். ஒரு படத்தில், வலது பக்கத்திலிருந்து பார்த்தால்  ஒரு அரசன் யானை மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதே படத்தை இடது பக்கத்திலிருந்து பார்த்தால் ஒரு குதிரை வீரன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். படம் ஒன்று தான்!

இன்னொரு படம் ஒரு அறையில் சுவரில் மாட்டப்பட்ட ஒன்று. அறையின் எந்தப் பக்கத்திலிருந்து அந்தப் படத்தைப் பார்த்தாலும்  அந்தப் படம் உங்களை நோக்கியே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்; நீங்கள் அறையில் எங்கு நகர்ந்தாலும் சரி, அதன் கண்கள் உங்களோடு நகர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

ஆனால் ஒரு ஆங்கில நாளிதழின் விளம்பரத்தில் “Here is the Bohemian with his family, where is the cat? – “இதோ பொஹிமியன் தன் குடும்பத்துடன் இருக்கிறார், பூனை எங்கே?” – என்ற விசித்திரமான படத்தைப் பார்த்தேன். (பொஹிமியன் என்றால் பொஹிமியா நாட்டைச் சேர்ந்தவர்)

அந்தப் படம் ஒரு சுவாரசியமான படம். சாதாரணமாக ஒரு பார்வை பார்த்தால், அந்தப் படமானது பொஹிமியனையும், அவரது மனைவி, குழந்தைகள், அவரது வயல்வெளி, கலப்பை, பாரசீகச் சக்கரம், மரங்கள், பறவைகள், விலங்குகள், மற்றும் இதர பல டஜன் பொருள்களையும் காண்பிக்கும், ஆனால் அதில் பூனை மட்டும் இருக்காது!

எவ்வளவு உன்னிப்பாக ஜாக்கிரதையாக அந்தப் படத்தைப் பார்த்தாலும் கூட அதில் உங்களால் பூனையைக் கண்டுபிடிக்கவே முடியாது.

அந்தப் படத்தைத் தூக்கிப் போடுங்கள், ஆஹா!, அந்த கான்வாஸ் முழுவதும் பூனையே நிரம்பி இருக்கும், பொஹிமியன், அவர் குடும்பம் அனைத்தும் மறைந்து விடும்!

“நான் இருந்த போது, நீ இல்லை, இப்போது, நீ இருக்கிறாய், நான் இல்லை!”

இந்தப் படம் சுக்ல யஜுர் வேதத்தின் 40வது அத்தியாயத்தில் வரும் கீழ்க்கண்ட மந்திரத்தின் பொருத்தமான விளக்கப்படமாக அமைகிறது :

“ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் |

தேன த்யக்தேன புஞ்ஜீதா மாக்ருத: கஸ்யஸ்வித்தனம் ||”

“உலகில் உள்ள அனைத்துமே கடவுளால்  நிறைந்திருக்கிறது.   நாமங்களையும் உருவங்களையும் துறந்து விட்டு, இப்படி கடவுளை எங்கும் பார்த்து ஆனந்தத்தை அனுபவி. ஆகையால், அனைத்துமே கடவுள் அல்லது கடவுளுடையது என்னும்போது, உலக செல்வத்தின் மீது கொண்ட ஆசையிலிருந்து விலகி விடு.”

பொஹிமியன் படத்தில் உள்ள பூனையைப் போல, உலகத்தில் ஒருவன் சந்தோஷத்தைக் காணவே முடியாது.

இப்படி கஷ்டமான ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகத்திற்குப் புரியும் வகையில் எளிய உதாரணத்தைக் குட்டிக் கதையாகக் கூறி விளக்குகிறார் ஸ்வாமி ராமதீர்த்தர்.

இது அவரது தனிப் பாணி!

*

இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக மூலம் கீழே தரப்படுகிறது. படித்து மகிழ்க; உணர்க!

An Optical Illusion

I have seen and heard of many pictures containing optical illusions. In one picture, looking from the right, you see a king riding on an elephant, from the left, a groom standing with the reins of a horst in his hand. But the picture is one and the same.

Another picture is hanging in a room on the wall, you may look at it from any side of the room, you will find the picture staring at you, wherever you move, its eyes move with you.

But I read in some English newspaper the advertisement of a strange picture, entitled, “Here is the Bohemian with his family, where is the cat?”

The picture was very interesting, a casual glance disclosed the Bohemian, his wife and children, his fields and plough and Persian wheel, trees, birds and beasts and dozens of other objects but not a trace of the cat. Look at it as carefully as you may, you find no cat. You throw away the picture, and lo! The whole canvas is covered with the cat, the Bohemian, his family and the whole paraphernalia disappear.

“When I was, Thou was not, now Thou art and I am not.”

This picture is an apt illustration of the following Mantra of Chapter 40 of Shukla Yajurveda :-

isavasyam-idagm sarvam yat-kinca jagatyam jagat,
tena tyaktena bhunjitha ma grdhah kasya svid dhanam 

All in the world is coverable by God. After thus renouncing the names and forms, do enjoy the bliss by seeing God everywhere. Hence refrain from the greediness of the worldly wealth when everything is God or God’s.

One can find no happiness in the world, like the cat in the Bohemian picture.

******

சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இப்ராஹீம்!(Post 7644)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7644

Date uploaded in London – – 3 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பீஜப்பூரை ஆண்ட சுல்தான் (இரண்டாம்) இப்ராஹீம் சிறந்த சரஸ்வதி பக்தன். சிறந்த கலைஞன். இசையில் தேர்ந்தவன்.

சுல்தான் இப்ராஹீம் அடில்ஷா II என்று வரலாற்றில் குறிப்பிடப்படுபவன். இவனது காலம் 1580-1627.

அவன் ஏன் சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கினான் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முக்கியமான காரணத்தை முதலில் பார்ப்போம்.

சுல்தான் இப்ராஹீம் (II) பீஜப்பூரை ஆண்ட காலத்தில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் மீது சுல்தானுக்கும் மதிப்பும் மரியாதையும் நிரம்ப உண்டு. இதற்கான முக்கியமான காரணம் சுல்தானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை அவர் சந்தோஷ சம்பவமாக மாற்றியது தான்!

pictures from metropolitan museum of art

சுல்தானுக்கு ஒரு  அருமை மகள் உண்டு. அந்த மகளின் மீது சுல்தானுக்கு அளவற்ற பாசம். ஒரு நாள் திடீரென்று அந்த அருமை மகள் இறந்து விட்டாள். சுல்தான் துக்கத்தால் கதறி அழுதான். இதைக் கேள்விப்பட்ட யோகி உடனடியாக அவனிடம் வந்தார். சுல்தானிடம் சரஸ்வதி தேவியின் உருவச்சிலை உடனடியாக அந்த அறைக்குள் கொண்டுவரப்பட்டு இறந்த மகளின் சவத்தையும் அந்த அறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றார். இப்படிச் செய்தால் சுல்தானின் மகள் உயிர் பிழைப்பாள் என்றார் அவர். உடனடியாக சுல்தான் அப்படியே செய்தான்.யோகி சிறந்த இசைக் கலைஞர்.  அவர் ஒரு ராகத்தைப் பாட ஆரம்பித்தார். அந்த ராகம் பாதி முடியும் முன்னரேயே இறந்த மகளின் உடலில் அசைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ராகம் முடியும் போது  முற்றிலுமாக சுல்தானின் மகள் எழுந்து விட்டாள்.

சுல்தானும் அரசவையில் அங்கம் வகித்தோரும் பிரமித்தனர். யோகியின் ஆற்றலுக்கு அவர்கள் தலை வணங்கினர்.

அன்றே சரஸ்வதியின் திருவுருவச் சிலையை அரண்மனையில் பிரதிஷ்டை செய்த சுல்தான் ஹிந்துக்களின் பூஜை முறைப்படி சரஸ்வதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தான்.

இப்ராஹீம் அனைத்து ராகங்களிலும் வல்லவன் என்பதால் அவன் சரஸ்வதியின் முன் பாடுவான்.

அரசவைக் கலைஞர்களும் பாடுவர்.

சுல்தானுக்கு போர், படையெடுப்பு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஒற்றுமையான அமைதியான வாழ்வையே அவன் விரும்பினான். அதை மக்களிடம் உறுதிப்படுத்தினான்.

விஜயபுரி என்ற நகரத்தின் பெயரை வித்யாபுரி என்று அவன் மாற்றினான்.

ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும் என்று கூறிய அவன் அதைத் தன் வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தான்.

அவனது கவிஞரான ஜுஹாரி (Zuhari) இயற்றிய கிதாப்-இ-நௌரஸ் (‘Kitab-i-Naurs) என்ற நூல் பிஸ்ம் அல்லாவைத் (Bism Allah) தொழுது ஆரம்பிக்கவில்லை.

மாறாக, ஹிந்து கவிஞர்கள் நூலின் ஆரம்பத்தில் துதிக்கும் கணபதி துதியைக் கொண்டு ஆரம்பிக்கிறது!

சிவ பிரான், பார்வதி,பைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் நூலெங்கும் காணப்படுகின்றனர்.

என்றாலும் கூட சுல்தானுக்கு இஷ்ட தெய்வம் சரஸ்வதி தான்!

நா வன்மை, கவிதையின் தாய், அறிவுத் தெய்வம், கலைகளின் இருப்பிடம், சாஸ்திர புராண நாடக சஞ்சாரிணீ – ஆகிய சரஸ்வதி தேவியை அவன் ஆராதித்தான்.

இது அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை.

அரசாங்க ஆவணங்களிலும் பிரதிபலித்தது.

பெர்சிய மொழியிலும் மராத்திய மொழியிலும் எழுதப்படும் ஆவணங்கள், அஜ் பூஜா ஸ்ரீம் சரஸ்வதி (Ai puja shrim Saraswathi) என்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜுபைரி (Zubairi) என்ற வரலாற்று ஆசிரியன், தான் எழுதிய நூலான பசாசின் அல்-சுலாடின் (Basatib al-Sulatin) என்ற நூலில்,” சுல்தான் சிறந்த இசைக் கலைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தான். அவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள். ஆகவே சுல்தான் இப்ராஹிமும் சரஸ்வதி தேவி பால் ஈர்க்கப்பட்டான்” என்று எழுதியுள்ளான்.

இதற்கான இன்னும் பல காரணங்களைத் தங்கள் மனம் போல பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

இன்னும் ஒரு விஷயம். சுல்தானின் மகளை உயிர்ப்பித்த ருக்மாங்கத பண்டிதர் பற்றிய விஷயம் அது.

சுல்தான் ஹிந்து தெய்வத்திற்கு கொடுத்த மரியாதையையும் பக்தியையும் கண்டு பொறாத அப்துல் ஹாஸன் (Abdul- Hasan) என்பவர், தான் பீஜப்பூருக்கு வந்தவுடன் இதை மாற்ற வேண்டுமென்று நினைத்தார். அவரிடம் ஏதாவது செய்ய வேண்டுமென்று பலரும் சொல்லவே, சுல்தானின் கவனம் யோகியிடமிருந்து தன் மீது திரும்பவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களா என்று அவர் கேட்க அவர்கள் ஆமாம், ஆமாம் என்றனர்.

 உடனே அப்துல் ஹாஸன் தன் உருவத்தை ஒரு மண் பாண்டத்தில் வரைந்து அவர்களில் ஒருவனிடம் கொடுத்து, மறுநாள் யோகியைப் பார்க்க சுல்தான் செல்லும் போது அதை அவனிடம் காண்பிக்குமாறு கூறினார். மறுநாள் சுல்தான் வரும் போது அவரிடம் ஹாஸனின் படத்தைக் காண்பிக்கவே அவர் யோகியிடம் செல்லாமல் ஹாஸன் இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.

அங்கு ஹாஸன் சுல்தானை நோக்கி, “உன் மனம் இறைவனிடம் நிலை பெறட்டும் “ என்று பல்வேறு விதமாக உபதேசித்தார்.

யோகியை வரவழைத்த அப்துல் ஹாஸன் அவர் முன்னர் மழை நீரை பாலும் நெய்யுமாக மாற்றிக் காண்பிக்க ருக்மாங்கத பண்டிதர் ருக் அல் டின் (Rukn al-Din) என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமுக்கு மாறினார்.

இப்படி ஒரு கதை உண்மையா என்று வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகப்படுகின்றனர். அப்துல் ஹாஸன் யோகியை விட உயர்ந்தவர் என்ற அபிப்ராயத்தை உருவாக்க இப்படி ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் கருத்து.

சிந்தித்துப் பார்த்தால், இறந்த உயிரை எழுப்பிய யோகி பெரியவரா, மழை நீரை பாலாக மாற்றிக் காண்பித்த ஹாஸன் பெரியவரா என்று கேட்டால் சிறு குழந்தை கூட என்ன பதிலைச் சொல்லும் என்பது புலப்படும்.

தனது இறுதி வரை சரஸ்வதி தேவியின் பக்தனாக சுல்தான் இப்ராஹீம் திகழ்ந்தான் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

*

சரஸ்வதி தேவியை வணங்கிய சுல்தான் இப்ராஹீம் போன்ற ஏராளமான வரலாறுகள் இந்திய சரித்திரத்தில் உண்டு. அதிகாரபூர்வமான நூல்கள் தரும் வரலாறுகள் இவை.

இவற்றை நாம் கேள்விப்படுவதே இல்லை.

காரணம் செகுலரிஸம்.

செகுலரிஸம் என்றால் இன்றைய செகுலரிஸ்டுகளின் உபதேசப்படி, ‘ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் எதையும் உடனடியாகப் பரப்புவது; அதற்குப் பெருமை சேர்க்கும் எதையும் மறைத்து விடுவது; இஸ்லாமிய, கிறிஸ்தவர்களை உண்மைக்கு மாறாகக் கூடப் புகழலாம்; ஆனால் ஒரு போதும் உண்மையான விஷயமாக இருந்தால் கூட இகழக் கூடாது’ என்பது தான்!

இது மாற வேண்டும் இல்லையா, சுல்தான் இரண்டாம் இப்ராஹீம் வாழ்க்கைச் சம்பவம் போல உள்ளவற்றை ஹிந்துக்கள் உணர வேண்டும்; பரப்ப வேண்டும்!

****

ஆதார நூல் : Sufi’s of Bijapur 1300-1700 by Richard Maxwell Eaton, 1978 publication

நன்றி : Richard Maxwell Eaton சுல்தான்படம் – நன்றி – ரிச்சர்ட் மாக்ஸ்வெல் ஈடன்

tags சுல்தான் இப் ராஹிம் , அடில்ஷா,பீஜப்பூர், சரஸ்வதி

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 232020 (Post No.7643)

Written by London Swaminathan

Post No.7643

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கடவுளர் கைகளில் உள்ள ஆயுதங்களைக் கண்டுபிடியுங்கள்

குறுக்கே

1. – இந்திரனின் ஆயுதம் (6 எழுத்து)

2. – விஷ்ணுவின் வில் (5)

4. – விஷ்ணுவின் சக்கரம் (5)

6. – அர்ஜுனனின் வில் (5)

7. – முருகனின் ஆயுதம் (2)

8. – சிவனின்/காளியின் ஆயுதம் (5) (இடப்புறம் செல்க)

கீழே

3. – ராமனின் வில் (6 எழுத்து)

5. (மேலே செல்க) – (4) சிவனின் வில்

9. (மேலே செல்க) – (6) கண பதியின் ஆயுதம்

subham

ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் (in English & Tamil) – 1 (Post .7640)

Written by S Nagarajan

Post No.7640

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.

ஏராளமான உவமைகளை அடுக்கடுக்காகச் சொல்வது அவர் வழக்கம். அறநெறி போதிக்கும் parables எனப்படும் குட்டிக்கதைகளை அவர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்தக் குட்டிக் கதைகள்  புரிந்து கொள்வதற்குச் சிரமமான பல பெரிய உண்மைகளை அனாயாசமாக விளக்கி விடும்.

உதாரணத்திற்கு ஒரு குட்டிக்கதையைப் பார்க்கலாம் :

ஆண்டி ஒருவர் தனது சணலால் ஆன கம்பளியை இழந்து விட்டார். ஆண்டியை சோதனை செய்வதற்காகவோ என்னவோ ஒரு கான்ஸ்டபிள் அதைத் திருடி விட்டார். போலீஸ் ஸ்டேஷன் அருகே தான் அந்த ஆண்டி வசித்து வந்தார். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவர் அங்கு இருந்த தானேதாரிடம் (போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி – பழைய கால பதவியின் பெயர் இது) புகார் அளித்தார்.

தானேதார் : எதை இழந்து விட்டீர்கள்?

ஆண்டி : என்னுடைய எல்லாமே போச்சு. முதலில் என் மெத்தை போச்சு.

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட படுக்கை

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட போர்வை

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட கோட்டு மற்றும் மேலங்கியும் போச்சு

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட தலகாணியும் போச்சு

தானேதார் : அப்புறம் வேற என்ன?

ஆண்டி : என்னோட தரை விரிப்பும் போச்சு

தானேதார் : வேற ஏதாவது உண்டா?

ஆண்டி : ஆமாம், உண்டு. என்னோட குடையும் போச்சு

தானேதார் : அவ்வளவு தானா, இன்னும் இருக்கா?

ஆண்டி : இருக்கு சார், என்னோட வேஷ்டி, அதுவும் போச்சு

தானேதார் : வேற ஏதாவது போச்சா, யோசனை பண்ணி சொல்லுங்க

ஆண்டி : அப்புறம்.. அப்புறம்.. அப்புறம்…

அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் விழுந்து விழுந்து சிரித்தார். ஆண்டியை நோக்கி ஏளனமாக அப்புறம்..அப்புறம் . அப்புறம் என்று கேலி செய்தார் அவர். “உன்னோட குடிசை ஒரு பெரிய வணிக கோடவுனா என்ன, எல்லாம் போறதுக்கு” என்றார் அவர்.

பின்னர் ஆண்டியினுடைய மெத்தையை அவர் மேல் தூக்கி எறிந்த கான்ஸ்டபிள் தானேதாரை நோக்கி, “சார்! இது மட்டும் தான் அங்கே திருடு போனது” என்றார்.

ஆண்டி அந்த மெத்தையைத் தன்னுடையது தான் என்று அடையாளம் காட்டி அதைப் பெற்றுக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகர ஆரம்பித்தார்.

ஆனால் தானேதார் அவரை அரெஸ்ட் செய்தார் – பொய் புகார் அளித்த காரணத்திற்காக!

ஆண்டி புன்முறுவல் பூத்தார். தான் ஒரு பொய்யையும் சொல்லவில்லை என்றார்.

மெத்தையை தன் மேல் போட்டுக் கொண்டு இதோ என் மெத்தை என்றார். பின்னர் அதைத் தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்து, “இதோ எனது படுக்கை” என்றார்.

பிறகு அதைத் தன் தலை மேல் விரித்துக் காண்பித்து, “இதோ, எனது குடை” என்றார்.

இப்படி ஒவ்வொரு விளக்கமாக அவர் கொடுத்துக் கொண்டே போனார்.

பிரபஞ்சத்தை சிருஷ்டித்த பிரம்மத்தை உணர்ந்த ஒருவனுக்கு பிரம்மம் தான் எல்லாமே! அவனது உறவெல்லாம் பிரம்மம் தான். அவனை ஆள்வதும் பிரம்மமே; ஆளப்படுவதும் பிரம்மமே. அவனது நண்பர்களும் பிரம்மமே, எதிரிகளும் பிரம்மமே. அவனது தந்தை, தாய், சகோதரன், சகோதர் எல்லாமே பிரம்மமே. அவனுக்கு பிரம்மம் தான் ஆண்டியினுடைய மெத்தை!

ஸ்வாமி ராமதீர்த்தர் பிரம்மத்தை எப்படி விளக்கி விட்டார் பாருங்கள், ஒரு சின்னக் குட்டிக் கதையின் மூலமாக!

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோருக்காக ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :-

The Fakir’s Gudri

A fakir lost his gudri (rags stitched together to form a quilt). It was stolen by a constable (in order, probably, to test the fakir). The fakir lived near the police station. He went and made a report to the police.

The Thanedar asked him, “What have you lost?”

The fakir replied, “ My all. First a quilt.”

Thanedar : “What else?”

The fakir : “My bed.”

Thanedar : “What else?”

The fakir : “My sheet.”

Thanedar : “What else?”

The fakir : “My coat and angarkha.”

Thanedar : “What else?”

The fakir : “My pillow.”

Thanedar : “What else?”

The fakir : “My carpet.”

Thanedar : “Anything else?”

The fakir :  “yes, My umbrella.”

Thanedar : “Is that all?”

The fakir : “No sir, also my dhoti.”

Thanedar : “Just recollect if you have lost anything else?”

The fakir : “And.. and.. and..”

The constable who was standing by, laughed at his long list, and abusing the fakir, said “And.. and.. and… as of thy cottage is a merchant’s godown..” and throwing the gudri at him said to the Thanedar, “Sir, this is all that was stolen.”

The fakir identified the gudri as his; took and walked out of the police station. But the Thandedar had him arrested for making a false report. The fakir smiled and said that he had not told a lie. He covered himself with the gudri and said, “Here is my quilt.” Spreading it on the ground, he sat on it and said, “This is my bed.”. Protecting himself from the son with it, he said, “Look, here is my umbrella.”. And so on.

To him who has realized Brahma the support of the universe, Brahma is all in all, his relations are Brahma, his ruler and his ruled are Brahma, his friends and enemies are Brahma, his father, mother, brother, and sister are Brahma. To him Brahma is the fakir’s gudri.

*****

31 முக்கிய சித்தர் பாடல்கள் (Post No.7634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7634

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மார்ச் 2020 காலண்டர்

(மாசி மாதம் -விகாரி வருஷம்)

பண்டிகை நாட்கள் – மார்ச் 8 உலக மகளிர் தினம்; 8 மாசி மகம் 9 ஹோலி/காம தஹனம்; 14-காரடையான் நோன்பு; 25-யுகாதி புத்தாண்டு தினம்.

அமாவாசை-24; பௌர்ணமி-9; ஏகாதசி -5/6, 20

முகூர்த்த தினங்கள்– மார்ச் 5, 6, 12, 13, 22, 30

நந்த வனத்திலோர் ஆண்டி –  – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்

கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

—கடுவெளிச் சித்தர்

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

நெளிந்து நெளிந்து  நெளிந்து   ஆடு பாம்பே சிவன்

சீர்பாதங் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!

–பாம்பாட்டிச் சித்தர்

XXX

மார்ச் 2 திங்கட்  கிழமை

நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல  பாம்பே

பாதலத்திற் குடிபுகும் பைங்கொள்  பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே !

XXx

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

எட்டு மலைகளைப்  பந்தாய் எடுத்து எறி குவோம்

 ஏழு கடலையும் குடித்து ஏப்பமி டுவோம்

மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்

மகராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 4 புதன் கிழமை

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்

முந் நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்

தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 5 வியாழக் கிழமை

வேந்தன் செய்த சிருட்டிகள் போல வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும்  செய்கை இதென்று ஆடுபாம்பே!

XXX

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்

அதற்கு மேல் ஒரு கலையான தறிந்தோம்

மறுப்பற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 7 சனிக் கிழமை

சீறுபு லி யானை யாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறு பெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச்  செய்குவோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

யானை சேனை தேர் பரியாவும் அணியாய்

யமன் வரும்போது துணை யாமோ அறிவாய்

XXX

மார்ச் 9 திங்கட் கிழமை

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு  மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல் விழுந்து மேவு மாந்தர்

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும்  கிளி போல்

உடல் போனால் ஓடுவாரென்று என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 11 புதன் கிழமை

மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்

மானே என்றும் தேனே என்றும்  வான் அமுதென்றும்

ஒயிலான வன்ன மயிற் கொத்தவளென்றும்

ஓதாமற் கடிந்தோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 12 வியாழக் கிழமை

நாறு மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளும்  கழுவினும் அதன் நாற்றம் போமோ

கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்கா தென்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள் யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டேங்காண் 

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளை

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 14 சனிக் கிழமை

மனமென்னும் குதிரையை வாகனமாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயிற் பூட்டி

சினமென்னும் சீனியின் மேற் சீராய் ஏறித்

தெளிவிடம் சாரி விட்டு ஆடுபாம்பே

Xxx

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி ?

புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ ?அஞ்ஞா னம்?

போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே !

xxx

மார்ச் 16 திங்கட்  கிழமை

சதுர் வேதம் ஆறுவகை சாத்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்றும்  ஆகமம்

விதம் விதமானவான  வேறு நூல்களும்

வீணான நூல்களே என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரி  ந்துங் கதி எய்தல் இல்லையே

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே !

xxxx

மார்ச் 18 புதன்  கிழமை

ஆயிரத்தெட்டித ழ் வீட் டில்  அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம்  நிறைந்திடும் அன்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கி வளர் காரண ச் சித்தன்

கண்ணுள் ஒளியாயினான் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 19 வியாழக் கிழமை

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே

விண்டவர்கள் ஒருகாலும் கண்டிடார்களே

கொண்டகோலம் உள்ள வர்கள்  கோள் நிலை காணார்

கூத்தாடி கூத்தா டியே நீ ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்

Xxx

மார்ச் 21 சனிக் கிழமை

ஓம்காரக்  கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே

Xxxx

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்

Xxxx

மார்ச் 23 திங்கட் கிழமை

பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்

சிவ்வுருவாகியே  நின்றோம் என்றே

சீர் பாதங் கண்டு தெளிந்து

Xxx

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

தா ந்திமி திமி தந்தக் கோனாரே

தீந்திமி திமி திந்தக் கோனாரே

ஆனந்தக் கோனாரே – அருள்

ஆனந்தக் கோனாரே

–இடைக்காட்டுச் சித்தர்

Xxx

மார்ச் 25 புதன் கிழமை

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்ததென்று என்ணேடா தாண்டவக்கோனே

சி னமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – முத்தி

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே

Xxxx

மார்ச் 26 வியாழக் கிழமை

ஆறாதாரத் தெய்வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு

Xxxx

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

ஆதி பகவனையே பசுவே !

அன்பராய் நினைப்பாயேல்

சோதி  பரகதிதான் பசுவே !

சொந்தமது ஆகாதோ?

Xxx

மார்ச் 28 சனிக் கிழமை

மனம், வாக்கு, காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத

தினகரனை நெஞ்சசமத்தில் சேவித்துப் போற்றீரே

xxx

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

பாலிற்  சுவை போலும் பழத்தில் மது போலும்

நூலிற் பொருள் போலும் நுண் பொருளைப் போற்றீரே

Xxxx

மார்ச் 30 திங்கட்  கிழமை

கை  விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல்

மெய் விளக்குன்னுளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

Xxx

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்

முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே

Xxxx subham xxxx