ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்! (Post No.3249)

 

time-health

Written by S. NAGARAJAN


Date: 14 October 2016

Time uploaded in London: 6-16 AM

Post No.3249

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் அக்டோபர்,2016  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்!

BY ச.நாகராஜன்

healthy-living-1

 

அமெரிக்காவில் மட்டுமல்ல, பொதுவாக உலகில் எல்லா நாடுகளிலுமே இப்போது நீடித்த ஆயுளைக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

என்றாலும் கூட வயதான போது நீடித்த வியாதிகளினால் பலரும் அவஸ்தைப் படுகின்றனர்.

 

இதைப் போக்க முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.

ஆரோக்கியமாக, நீடித்த நாட்கள் வாழ எட்டு எளிய வழிகள் உள்ளன.

 

 

அவையாவன:

  • அறுபது வயது ஆயிற்றே, எழுபது வயது ஆயிற்றே என்று நினைக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்க இன்றைய நாளும் நல்ல நாள் தான் என்று நினைக்க வேண்டும். தாமதப்படுத்த வேண்டாம். உடனே ஆரம்பிக்கலாம் நல்ல வாழ்க்கை முறையை! வயதாகும் போது உடல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அவை வியாதியைத் தருபவை என்று அர்த்தமுமில்லை, உடல் இயக்கத்தைத் தடுப்பவை என்றும் அர்த்தமில்லை. ஆக வாழ்க்கை முறை மாற்றத்தை இன்றிலிருந்தே தொடங்கலாம்.

 

  • உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டுமெனில் உலகெங்குமுள்ள அனைத்து நிபுணர்களும் ஒரே குரலில் ஓங்கிச் சொல்வது உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதைத் தான்! ஹூஸ்டனில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக மெடிகல் ஸ்கூலில் பணியாற்றும் கார்மல் பி.டையர்,” எனக்குத் தெரிந்து எழுபது வயதானவர்களில் ஏராளமானோர் உடற்பயிற்சியை மேற்கொண்டு அற்புதமான ஆரோக்கியத்தை அனுபவித்து வருகின்றனர்” என்கிறார். மஸில் மாஸ் (Muscle Mass ) கூடும் போது மருந்துகள் ஒரு இளவயதுக்காரரின் உடலில் என்ன வேலை செய்கிறதோ அதைச் செய்கிறது. அதாவது மருந்துகள் உரிய முறையில் உடலிலிருந்து எளிதாக அகற்றப்படுகின்றன. அத்துடன மட்டுமின்றி உடல் இயக்கம் மறதி நோயை வராமல் தடுக்கிறது. நடைப்பயிற்சி, தோட்ட வேலை செய்தல், அல்லது உடல் இயக்கத்தைத் தூண்டும் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

 

  • .தினமும் ஸ்ட்ரெட்சிங் எனப்படும் நீட்சி (Stretching) தேவை என்கிறார் டையர். செயலற்ற நிலையில் உங்கள் தசைகள் சுருங்குவதோடு விரைத்தும் போகின்றன. யோகா போன்றவற்றை மேற்கொண்டால் அது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றது.

“ஐந்து நிமிடம் தானே, என்ன செய்யப் போகிறது என்று நினைக்காமல் செய்தால், அது வயதான காலத்தில் நம்ப முடியாத அளவு நன்மையைத் தருகிறது” என்கிறார் டையர்.

மூட்டுவலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு நிவாரணம் யோகா தான்! தியானம், சுவாச முறை, சமச்சீரையும் வலிமையையும் தரும் ஆசனங்கள் என யோகா தரும் அனைத்துமே உடலுக்கு ந்ன்மை பயப்பவையே

healthy-living-3

 

  • உடலின் எடையைச் சீராகப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று.உடல் பயிற்சி, சரியான திட்டமிட்ட உணவு முறையை மேற்கொள்வது, ஆகியவை பல்வேறு நன்மைகளைத் தருவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

“உங்கள் எடையைக் குறைவாகவே வைத்துக் கொண்டால் டயாபடீஸ் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மூட்டுவலியும் வராது. ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை அளவு பழச்சாறு அல்லது கறிகாய்கள் சாப்பிடும் ஒருவருக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இதய நோய்கள் வருவதில்லை. கான்ஸர் அபாயம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. நோய் எதிர்க்கும் சக்தியை உடல் அதிகமாகக் கொள்கிறது” என்கிறார் வாஷிங்டனில் உள்ள உணவுத் திட்ட நிபுணரான டெய்ல்மெட்ஜ்

 

 

  • நோய் வராமல் இருக்கச் செய்யும் தடுப்பு முறைகள் பல உண்டு. ஆண்டொன்றுக்கு ஒரு முறை மார்பகத்தை சோதனை செய்து கொள்வது பெண்களுக்கு நல்லது. ஃப்ளூ தடுப்ப்பூசி போன்றவற்றைப் போட்டுக் கொள்ளலாம். கான்ஸர், இதய நோய் வராமல் இருக்கிறதா என்பதற்கான டெஸ்டுகளையும் செய்து கொள்ளலாம். நோய்களின் அறிகுறிகளான அதிக இரத்த அழுத்தம், டயாபடீஸின் ஆரம்ப நிலைகள் ஆகியவற்றின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். உடல் இயக்கம் சீராக இருந்தால் மூட்டுவலி போன்றவை வராது என்பதை உணர்ந்து இயக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்

 

 

  • மத உணர்வு நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆலயத்திற்குச் செல்வது நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் தருவதை ஒரு ஆய்வு உறுதி செய்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது முக்கியம். மதச் சடங்குகள், விழாக்கள் வாழ்வை தைரியத்துடன் எதிர்நோக்க உதவி செய்கிறது.

2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஆராய்ந்தது. அதில் தைரியத்துடன் வாழ்வை எதிர்நோக்கியோர் 55 சதவிகிதம் இறப்பைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு 23 சதவிகிதம் இதய நோய்த் தாக்குதல் குறைவாக அவர்களுக்கு இருப்பதும் தெரிய வந்தது!

 

%e0%ae%a4%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

  • மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை பற்றி மிச்சிகன் பல்கலைக் கழகம் 10317 பேர்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வை நடத்தியது.1957லிருந்து 2004ஆம் ஆண்டு முடிய தன்னார்வத் தொண்டு செய்து வருபவர்கள் இவர்கள்.

அவர்களில் பலர் சேவை செய்யும் போது சொந்தத் துன்பங்கள் மறைந்து போகின்றன என்பதைத் தெரிவித்தனர். பலனை எதிர்பார்க்காமல் உதவும் தன்னார்வத் தொண்டர்களின் வாழ்வு நீடிப்பதையும் ஆய்வு உறுதி செய்தது.

 

 

  • நடுத்தர வயது உள்ள பெண்மணிகள் ஆல்கஹால் அருந்துவதைப் பற்றி ஆராய்ந்ததில் எப்போதேனும் ஒரு முறை ஆல்கஹாலை உட்கொள்பவர்கள் சீரான உடல்நிலை கொண்டிருப்பதை நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி ஒன்று தெரிவிக்கிறது. தேவையற்ற தீய பழக்கங்களை மன உறுதியுடன் வெட்டி விடுங்கள்!

ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வு என்பது தான் என்ன? நீடித்த வியாதிகள் எதுவும் இருக்கக் கூடாது. முக்கியமாக இதய நோய்கள், டயாபடீஸ், கான்ஸர் போன்றவை வரக் கூடாது. மனத்தளவில் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். இவையே வெற்றிகரமாக முதுமை அடைவதைக் குறிக்கிறது.

%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

************ நன்றி: ஹெல்த் ஸயின்ஸ்

 

நூறு வயதானவர்களின் மகிமை! (Post No.3136)

100-yr-old-berry-seller

100 year old lady sells berries on the road!

Written by London Swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 21-34

 

 

Post No.3136

 

Pictures are taken from various sources; thanks.

A over 100 year old Sadhu at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

A over 100 year old Sadhu with his incredible long hair at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

ஒரு பந்தியில் (வரிசையில்) யார் யார் உட்கார்ந்தால் அந்த வரிசையே தூய்மையாகிவிடும், புனிதமாகிவிடும் என்று மனுஸ்மிருதியில், மனு ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதில் 100 வயதுக் கார்களையும் சேர்த்திருக்கிறார். அவர்கள் அனுப்பும் VIBRATIONS வைப்ரேஷன்ஸ் — எல்லோரையும் உயர்த்திவிடும். அதுவும் அவர்களை யாருடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கையில் 100 வயதானவர்களின் மதிப்பு இன்னும் உயர்கிறது!

அவர்களுக்கு “பங்தி  பாவனாள்” என்று பெயர்

 

ஆக்ரயா: சர்வேஷு வேதேஷு சர்வ ப்ரவசனேஷு ச

ஸ்ரோத்ரியான் அன்வயஜா: ச ஏவ விக்ஞேயா:  பங்க்திபாவனா:

 

வேதார்த்தவித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரி சஹஸ்ரத:

சதாயுஸ்சைவ விக்ஞேயா: ப்ராஹ்மணா:  பங்க்திபாவனா:

 

மனு 3- 184-186

 

வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், அதன் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= ஷடங்கம்=சடங்கு) அறிந்தவர்கள், அவர்கள் வம்சத்தில் பிறந்தவரகள், ஆகியோர் வரிசையைப் புனிதப்படுத்துவர்.

 

குருவினிடத்தில் வேதப் பொருளை அறிந்தவன்,  அதைச் சொல்லிவைப்பவன், பிரம்மச்சாரி, ஆயிரம் பசுக்களை தானம் செய்தவன், நூறு வயதானவன் ஆகியோரும் எங்கே உட்காருகிறார்களோ அந்த வரிசையே தூய்மை ஆகிவிடும்!

 

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் மனு இதைச் சொல்லுகிறார்.

0phil

இந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் வேதம் கற்றவர்கள், தானம் செய்தவர்கள். ஆனால் இதில் வயதுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது விஷேஷமானது.  நூறு வயது ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் வாழ்வு சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்; மேலும் வேத மந்திரங்களில்  நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது.

 

வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும்.

 

வாழ்க நூற்றாண்டு கண்டோர்!

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்! (Post No.2896)

eyeanat

Article written by S.NAGARAJAN

 

Date: 15 June 2016

 

Post No. 2896

 

Time uploaded in London :–  6-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

ச.நாகராஜன்

eye3

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

 

 

அறிவுஜீவியான இண்டிகோ  பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.

 

 

அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.

விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.

ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!

 

 

‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்

 

டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின்  மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.

இதை நம்ப  மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.

 

நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.

 

ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி   – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக  வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன்  மீதும் இடிக்காமல் நடந்தார்.

இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.

மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!

பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின்  முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.

 

 

உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.

இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

elizabeth susler

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.

 

பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.

2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில்  ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.

 

ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)

இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.

 

 

அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.

 

 

இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.

 

 

ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.

 

இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

7_Sulser

 

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய  முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!

 

ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு  மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)

இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

 

john bardeen

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.

டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.

முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.

 

 

ஜான் பர்டீனுக்கு  மூன்று  மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.

அவரை வரவேற்ற ஸ்வீடன்  மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.

 

 

உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.

எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.

 

 

அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?

 

ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.

1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!

************

 

To Increase Your Life Span, To Decrease Your Life Span (Post No.2873)

curd-rice

Compiled by London swaminathan

 

Date: 6 June 2016

 

Post No. 2873

 

Time uploaded in London :–  16-29

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

Age old Indian wisdom about everything under the sun was summarised in Sanskrit couplets and was followed by our forefathers. Even today those couplets remain relevant and useful. Here below are two couplets which say what increases your life span and what factors cause a decreased life span.

 

Vrddaarko homa dhuumasca baalastrii nirmalodakam

Ratrau kshiiraannabuktisca aayurvrddhir dine dine

 

Evening sun light, smoke form the fire sacrifice (Havan or Homa smoke), marriage with a younger girl, crystal clear pure water, milk rice in the night increase your life span every day.
What is not good?

Baalaarkah pretadhuumasca vrddastrii palvalodakam

Ratrau dadhyaannabuktisca aayu: kshiinam dine dine

 

Morning sun light, smoke for the funeral fire, marriage with a girl older than you, muddy impure water, yogurt (curd) rice reduce your life span every day.

 

Another couplet in the book written by Susruta divides Ayurveda into eight minor divisions. This shows that they have very clear idea about the needs of the patients:-

milk-yoghurt-3-2_0

1.Salyam:-

Sugery

2.Saalakyam:-

Diagnosis

3.Kaaya chikitsaa:-

Body care and Treatment

4.Bhutavidyaa:-

Mental Health, treating mentally sick patients

5.Kaumaarabrutyam:-

Treatment of Child’s diseases (paediatrics)

6.Agatatantram:-

Anti dote to poisons

Treating patients affected by poisons

7.Rasaayana tantram:-

Chemical or medical treatment for longevity

8.Vaajikarana:-

Sexual health, curing impotency and increasing sexual vigour.

 

–Subham–

Four Benefits of Breath control/ Pranayama! (Post No 2681)

_pranayam

Compiled  by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2681

 

Time uploaded in London :–  15-16

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

There are some slokas/couplets to explain the benefits and types of Yoga in Sanskrit. When one reads it in verse form, it is easily remembered and retained.

pranayama

1.Types of Breath Control (Pranayama):

Recaka – Exhalation

Puuraka – Inhalation

Kumbhaka – Retention

Suunyaka – only Retention

Recaka Puurakascaiva Kumbhaka Suunyakastathaa

Evam caturvidhah proktah Praanaayaamo maniishibhih

–Brhannaradiya Puranam

Xxx

2.Effects of Pranayama

Saanti – Peace

Prasaanti – Tranquility

Diipti – Splendour

Prasaada – Calmness

Prayojanaani catwaari  praanaayaamasca viddhi vai

Saanti Prasaantirdiipti sca prasaadasca cathustayam

Xxx

 

krishnamacharya-pranayama

3.Four types of Yoga

Mantrayoga,

Layayoga

Raajayoga

Hathayoga

Mantrayogo layascaiva raajayogastritiiyakah

Hathayogascaturthah syaat praaninaam mokshadaayakah

–Hatharatnaavali

Xxx

4.Krishna on True Yogi

Arjuna, he who looks on all as one, on the analogy of his own self, and looks upon he joy and sorrow with a similar eye – such a Yogi is deemed the highest of all (Bhagavad Gita 6-32)

Aatmaupamyena sarvatra samam pasyati yoarjuna

Sukham vaa yadi vaa dukham ca yogii pramo mathah (B G 6-32)

Xxx

113474-299x401-Pranayama4

5.Yoga is Difficult

Yoga is difficult of achievement for one whose mind is not subdued; by him, however, who has the mid under control, and is ceaselesley striving, it can be easily attained through practice. Such is my conviction ( B G 6-36)

Asamyataatmanaa yogo duspraapa ite me matih

Vasyaatatmanaa tu yatataa sakyo vaaptumupaayatah

-Bhagavad Gita 6-36)

–subham–

 

 

 

 

இதயத்தை மெதுவாகக் ‘கொல்லும்’ 6 உணவுகள் (Post 2506)

salt-sugar

Written by S Nagarajan

 

Date: 4 February 2016

 

Post No. 2506

 

Time uploaded in London :–  8-08 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை ஹெல்த்கேர் ஜனவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள்

.நாகராஜன்

 

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இதயத்தை மெதுவாகச் செயலிழக்க வைத்து உங்களைக் கொல்லும் ஆறு உணவு வகைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இதயம் ஒரு விசித்திரமான அமைப்புடன் கூடிய அற்புத இயந்திரம். சரியானபடி   பொருத்தமான அளவில் ஊட்டச்சத்து இருந்தாலேயே போதும், அது நீடித்து இயங்கும்!

ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு நம்மை நாமே மெதுவாகக் கொன்று கொள்கிறோம்!

 

என்ன அநியாயம் இது!

 

அமெரிக்காவில் மட்டும் நான்கு இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

சரியான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, நீடித்த வியாதிகளைக் கொண்டிருப்பது ஆக இந்த மூன்று காரணங்களே இறப்புக்கான காரணமாகப் பெரும்பாலும் அமைகிறது. இந்த மூன்று காரணங்களை நீக்கி விட்டாலே போதும் இதய நோய் வராமல், நீடித்த ஆயுளை நிச்சயம் கொள்ளலாம்!

 

 

சில உணவு வகைகள் நேரடித் தாக்குதலில் இதயத்தைப் பாதிக்கும். மேலும் சில உணவுகளோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி மெதுவாகக் கொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக சர்க்கரை நேரடியாக இதயத்தைப் பாதிக்காது. ஆனால் அதிக அளவில் சர்க்கரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தால் அது உடல் பருமனைக் கூட்டி இதயத்தைப் பாதிக்கும்.

 

 

TRANS FATS

 

வெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சில கொழுப்பு வகை உணவுப் பொருள்கள் நல்ல கொலஸ்ட்ராலான HDLஐக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கொழுப்புகளில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவற்றை trans fats, saturated fats, polyunsaturated fats, unsaturated fats என்று குறிப்பிடுகின்றனர்.

 

உயிர் வாழ கொழுப்பு சத்து நிச்சயம் தேவை. ஆலிவ் ஆயில், கொழுப்புடைய மீன், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் முதலானவை தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளவை. இவை மூளையையும் இதயத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள இன்றியமையாதவை.

 

பாக்கேஜ்களில் வரும் பிஸ்கட், பாப்கர்ன், க்ரீம் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை ஒதுக்கி விடுதல் நலம்.

 

 

REFINED GRAINS

 

மெஷினில் தீட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் விற்கப்படும் உணவு வகைகளை விட்டு விட்டு பாரம்பரிய முறையில் அன்றாடம் சமைத்துச் சாப்பிடுவது இதயத்தைச் சீராக வைக்கும் அருமையான வழிமுறையாகும்.

 

எந்த தானியத்தையும் அரைத்து விட்டால் அதை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது. இரண்டு வாரங்கள் என்பது உச்ச பட்ச எல்லை.

 

sugar

SUGAR

க்ளூகோஸ் உடலுக்குத் தேவை தான் என்றாலும், சர்க்கரை சாதாரண அளவில் எடுத்துக் கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்காது என்ற போதிலும் லாலிபாப் ஒன்றை எடுத்துக் கொண்டு இதர இனிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் உள்ள இனிப்பு ஜீரோ ஊட்டச்சத்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

 

ஷுகர் கேண்டி சாப்பிட்டால் சக்தி அதிகமாகும் என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதே சக்தியை ஒரு பழத்துண்டு தந்து விடுகிறது. பழம் சீரான ஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. லாலிபாப் போன்றவற்றில் உள்ள ரிஃபைண்ட் ஷுகர் (Refined sugar) அடிக்கடி அவற்றை உண்ணத் தூண்டும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். களைப்பையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே செயற்கை சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கேன்களில் அடைக்கப்பட்ட பழ வகைகளை வாங்கும் போது அது பழச்சாறாக இருந்தால் அதில் விடமின் ‘சி’யும் அதிக கலோரிகளும் இருக்கும். ஆனால் அவை சிரப்பாக (Syrup) இருந்தால் அதில் ஊட்டச்சத்து இருக்காது.

 

 

FATTY MEATS

இறைச்சி உட்கொள்பவர் என்றால் அது உங்கள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கேன்களில் அடைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது இதயத்திற்கு நல்லது.

 

 

ENERGY DRINKS

 

சக்தியூட்டும் எனர்ஜி பானங்கள்

சக்தி தரும் பானங்கள் என்று விளம்பரங்களில் குறிப்பிடப்படும் பானங்களில் காபின், ஜின்செங், விடமின்பி’, சர்க்கரை போன்றவை இருந்தாலும் இவை அனைத்தும் உடனடியாக சக்தியை அதிகப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தை பானம் அருந்தியதிலிருந்து இரண்டு மணி நேரம் வரை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதயமும் இரத்த அழுத்தமும் சீராக ஒருவருக்கு இருக்கும் வரை இந்த பானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி இவற்றை குடிக்க ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; இதயமும் பழுதாகும்!

 

salt

SALT

உப்பு

 

உப்பு இரத்த கனஅளவை உயர்த்தி நாளங்களில் நல்ல ஆரோக்கியமான முறையில் ஓட வைக்க உதவுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் உப்பு தான் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க வைக்க உதவுகிறது. அதிக உப்பு உடலில் சேர்ந்தாலோ அல்லது உப்பை நீங்கள் சீரான முறையில் வைக்கவில்லை என்றாலோ இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்த பாதிப்பு உடையவர் என்றால் உடனடியாக உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

உடலுக்கு உப்பு நிச்சயம் வேண்டும். உயிர்வாழ அந்த தாது அவசியமே. ஆனால் அதை ‘அதிகமாக’ எடுத்துக் கொள்ளக்  கூடாது!

 

 

இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகள்

 

சரி, சுருக்கமாகச் சொல்லுங்கள், எவற்றை விலக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதைச் சொல்வது எளிது. கீழே உள்ளவற்றை எப்போதாவது சாப்பிடுவது என்று வைத்துக் கொண்டால் ஒரு பயமும் இல்லை. அதை தினசரியோ அல்லது அடிக்கடி சாப்பிடும் ழக்கம் உண்டு என்றால் அவை இதயத்தை பாதிக்கும் எபன்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீஸா

 

பேக் செய்யப்பட்ட கேக்குகள் (Baked Cakes)

கொழுப்புள்ள இறைச்சி வகைகள்

சிக்கன் ஸ்கின் (Chicken skin)

எண்ணெயில் வறுக்கப்பட உணவு வகைகள்

பாஸ்தா

ஐஸ்க்ரீம் மற்றும் இதர உறைநிலை frozen treats

சர்க்கரை உள்ள பானங்கள்

க்ரீம் சாஸ் வகைகள்

கெட்ச் அப்

assorted_ice_cream_cones

 

ஆரோக்கியமான உணவு வகைகள்

 

எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டுமா என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஆலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவை நல்லவையே.

 

ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கோப்பை பழத்துண்டுகளைச் சாப்பிடலாம்.

I

இதயத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மேலே கூறியவற்றை மனதில் இருத்திக் கொண்டு உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றிக் கொண்டாலே போதும். நீண்ட நாள் வாழலாம் – ஆரோக்கியத்துடன்

******

சத்வ, ரஜோ, தாமச உணவு வகைகள் எவை? (Post No. 2396)

IMG_9939

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2396

 

Time uploaded in London :– காலை 9-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9937

267 உணவுகளின் பட்டியல்:

பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த அருமையான தமிழ் உணவு என்சைக்ளோபீடியாவில் உணவு பரிமாறுவது எப்படி? என்ற விவரங்களை நேற்று வெளியிட்டேன். இதோ 267 உணவு வகைகளில் எவை உத்தம (சத்வ), மத்தியம (ரஜோ), அதம (தாமஸ) உணவு வகைகள் என்ற பட்டியல். இதற்கான அறிவியல் காரணங்கள் ஆராயப்படாவிடினும், இது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாகும். 1891-ஆம் ஆண்டில் வெளியான இப்புத்தகம் 1912-க்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. இதில் குறிப்பிடப்படாத தமிழ் உணவு வகை இல்லை என்றே சொல்லிவிடலாம். யாராவது ஒருவர் இதை மறுபதிப்பு செய்வது பயனுள்ள பணியாக இருக்கும். சேர், வீசை போன்ற அளவை முறைகளை கிலோ முதலிய தற்கால அளவுகளுக்கு மாற்றுவது அவசியம். இதை எழுதியவர் டி.கே.ராமசந்திர ராவ்.

சத்துவ குண, உணவு வகைகள்

IMG_0336 (2)

 

ரஜோ குண, உணவு வகைகள்

IMG_0337 (2)

 

தமோ குண, உணவு வகைகள்

IMG_0338 (2)

நூலிலடங்கிய விஷயங்கள்

IMG_9957 (2)

 

IMG_9945

 

IMG_9946IMG_9947

–சுபம்–

TEN “INAUSPICIOUS DREAMS”; DREAMS IN VEDAS AND UPANISHADS!

Sleep-training

Research Article No.2025

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 28  July 2014

Time uploaded in London : 16.19

Hindus stand out in understanding TIME, Working of MIND and Explaining DREAMS. Western scientists have not reached the level of Hindus In these fields. They still lag behind.

Dreams find a place in a Hindus’ everyday life. They knew about the REM sleep and the unavoidability of dreams. Brahmin Hindus pray to Sun thrice a day to kill the nightmares (Dus Swapna Nasanam). This shows how much they have understood about the dreams.

Adi Shankara, greatest philosopher of India, use dream hundreds of time in his hymns and commentaries. Mandukya Upanishad use it to explain the state of mind. Varahamihira, author of Brhat Samhita and several others before him dealt with the dreams. Hindus have several books interpreting dreams. Poets of Sangam Tamil literature even sing about the dreams of birds and animals. Tamil encyclopaedia Abidhana Chintamani has a summary of the interpretation of dreams over six pages. It is the summary of Sanskrit book on dreams attributed t Deva Guru Brhaspati. Like the dream of a dumb person is a popular simile used in Hindu literature.

FRANCE - CIRCA 2005: A stamp printed in France shows sleeping baby in a rose, circa 2005

FRANCE – CIRCA 2005: A stamp printed in France shows sleeping baby in a rose, circa 2005

Ten Bad Dreams in Vedic Literature

The meaning of dreams was an interesting part of Vedic literature. It is dealt with in various passages, including an Athrvan Parisista. The Rig Veda regards as ominous the making of a garland or neckband in a dream.

Ten dreams which presupposed death are recorded in Aitareya Aranyaka (3-2-4); they are

When a black man with black teeth kills you

When a boar kills you

When a wild cat springs on you

When one eats and spits out gold

When one drinks honey and eats lotus roots

When one goes to a village with asses or bears

When one drives south a black cow with a black calf

Wearing a garland of nard (Spikenard plant; Death of Jesus Christ is also associated with nard!)

If one has a dream one should wash one’s mouth.

Dreams in Rigveda:–2-28-10; 10-162-6; evil dreams – RV 2-28-10;

Atharvaveda :– 7-101-1; 10-3-6 (evil dreams)

Vajasaneyi Samhita :– 20-16

Satapata Brahmana:– 3-2-2-23

In classical Sanskrit literature we have several references to dreams.

Separate book on dream interpretation is attributed to Deva Guru Brhaspati.

Svapna is the Sanskrit word for dream. In Sanskrit hymn books there special slokas/hymns to avoid nightmares.

Sleeping-Beauty

Sleeping Beauty Stamp of USA

My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

STRANGE DREAMS, POSTED ON 27TH JULY 2015.

The Sleepless Four: Garuda Purana List

Awaken man

Written by London Swaminathan
Pot No.1166; Dated 11th July 2014.

Anxiety, grief, stress and worrying play a major role in sleeplessness, says doctors. There are other causes such as ageing, depression, alcoholism, shift work, diseases, sleeping during much part of the day and illicit drug use. But Garuda Purana approaches this problem from a different angle: moral angle. What it says is very true and it covers many causes such as anxiety, worry, stress etc.

Here is the list given by Garuda Purana (115-68):
Following four can’t have good sleep:
1.Those who suffer from poverty
2.Those who have gone abroad for spying
3.Those who desire for another man’s wife
4.Those who desire for another person’s property

How true the list is! We ourselves know that these caused big problems in our life or in the lives of our family members or friends. Stress due to on coming exams, job interviews, weddings, health check up results etc. are temporary. When the event is over, we are relieved of the stress. But the Garuda Purana list is more important because three of the four listed problems are immoral or illegal and resulting in permanent damages. Even the first one, poverty, may lead one to do immoral things. Those who have watched spy movies or James Bond films would have noticed the risks involved in spying, particularly the activities undertaken during the night.

Here is the sloka (verse) from the Garuda Purana:
Kuto nidra dharidrasya parabreshya charasya cha
Para nari prasakthasya para dravya harasya cha
-Garuda Puranam, chapter 115, verse 68

sleepless

Three Gateways to Hell
Krishna tells us about the three Gateways (16-21) to Hell in the Bhagavad Gita:
“The gateway of this hell leading to the ruin of the soul is threefold, lust, anger and greed. Therefore one should abandon these three” — (16-21).

Lust, Anger and Greed lead to grief, stress, anxiety and worries. Then we lose inner peace and sleep.

Adi Shankara also mentioned six sorrows common to all men which rise one above the other like waves and toss everyone about on the waters of their tumultuous restlessness. The six sorrows are 1.Hunger 2.Thirst 3.Grief 4.Delusory fascination for pleasurable objects 5.Old Age/decay and 6.Death (Viveka Choodamani, verse 256).
This list nearly coincides with the list of causes (for sleeplessness) given above.

The more we read, the more we learn.
The more we learn, the more we remember.
The more we remember, the more we practise.
The more we practise, the more we benefit.

contact swami_48@yahoo.com

நின்றுகொண்டே தவம் செய்தது ஏன்? விஞ்ஞான விளக்கம்

bhagiratha
Mahabalipuram: Bhageerathan Penance also called Arjunan Penance.

Written by London Swaminathan
Post No. 1123; Dated 22 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from now on wards. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

பிரிட்டனில் உள்ள லண்டனில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிக்கைகளில் இன்று (21/6/2014) காலையில் ஒரு சுவையான செய்தி வெளியாகி இருக்கிறது. பகீரதனும் பார்வதியும், அர்ஜுனனும் காமாக்ஷியும் நின்றுகொண்டே தவம் செய்ததற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. லண்டன் ‘’டெய்லி மெயில்’’ வெளியிட்ட செய்தியின் தலைப்பு:

நீண்ட நாள் வாழ ஆசையா? நாள்தோறும் 3 மணி நிற்கவும்!!
“WANT TO LIVE LONGER? STAND UP FOR THREE HOURS A DAY”.

பகீரதன் கங்கை நதியைக் கொண்டுவரவும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெறவும், உமாதேவி சிவ பெருமானை அடையவும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததை நாம் அறிவோம். கும்ப மேளாவுக்குப் போனால் பல சாது சந்யாசிகள் பலவித கோலங்களில், நிலைகளில் தவம் செய்வதை இன்றும் காண்கிறோம். அசுரர்களும் கூட சிவனிடம் வரம் பெற இப்படித்தான் தவம் செய்தனர்!

((அசுரர்கள், ராக்ஷசர்களை ‘திராவிடர்’ என்று இனம் பிரித்துப் பிரிவினை பேசும் அறிவிலிகளுக்கு குட்டு வைக்குக்கும் ‘பாயிண்ட்’ இது என்பதையும் நிணவு படுத்த விரும்புகிறேன்))
kamakshi 5 fire
kaamakshi penance on one leg.

ஒரு மனிதன் நாள் தோறும் மூன்று மணி நேரம் நின்றால் அவனுடைய ஆயுள் குறைந்ததபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கும். இவ்வாறு நிற்பது ஆண்டுதோறும் பத்து மராத்தன் ஓட்டம் ஓடுவதற்குச் சமம் என்று டாக்டர் மைக் லூஸ்மோர் கூறுகிறார். விளையாட்டுக் கல்விக் கழகத்தில் பயிற்சி சாதனப் பிரிவு நிபுணர் இவர். சென்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைக் குழுவின் தலைமை மருத்துவர் பொறுப்பையும் வகித்தவர்.

மூன்று மணி நேரம் நிற்பதற்கே இவ்வளவு பலன் என்றால், நூற்றாண்டுக் காலம் நின்று தவம் செய்த நம் முனிவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததில் வியப்பேதும் இல்லை. அது மட்டுமல்ல. நம் முனிவர்களும் யோகிகளும் வெறுமனே நில்லாமல், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளையும் செய்தனர். காற்றைத் தவிர வேறு எதையும் உண்ணவும் இல்லை. ஆகையால உடலில் வளர்-சிதை மாற்றமும் மிகக் குறைவு. இப்படி இருந்தால் மிக மிக நீண்ட காலம் வாழலாம்!

டாக்டர் மைக் லூஸ்மோர் கூறுகிறார்: நிற்பதால் சர்க்கரை வியாதி, புற்று நோய், இரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் எதுவுமே வராது தடுக்கலாம்.

2013- ஆம் ஆண்டில் செஸ்டர் பல்கலைக் கழகத்தில் டாக்டர் ஜான் பக்லி தலைமையில் ஒரு ஆய்வு நடந்தது. அவர்கள், சில பேருடைய உடலில் எல்லா நவீன கருவிகளையும் பொருத்தி ஆய்வு செய்ததில் ஒரு நாளைக்கு 750 கலோரி வீதம்– ஆண்டுக்கு 30,000 கலோரி வரை– எரிக்க முடியும் என்றும் இதனால் ஒருவர் எட்டு பவுண்டு வரை எடையைக் குறைக்க முடியும் என்றும் கண்டு பிடித்தனர்.
வின்ஸ்டன் சர்ச்சில், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, பெஞ்சமின் ப்ராங்லின் போன்ற பல்துறை வல்லுநர்கள் நின்று கொண்டே வேலை செய்வதற்காக உயரமான ‘டெஸ்க்’குகளை விசேஷமாக செய்து உபயோகித்தனர்!!!

4. Arjuna's penance
பஸ் கண்டக்டர்கள், பஸ் டிரைவர்களைவிட குறைவான இருதய நோய்களுடன் வாழ்ந்தது இன்னொரு ஆய்வில் கண்டறியப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் நிற்பவர் வாழ்வர்; உட்காருபவர் ஒழிவர். படுக்கையில் எட்டு மணிநேரமும், கம்ப்யூட்டர், டெலிவிஷன் முன் பத்து மணி நேரமும் உடலைக் கிடத்துவது நல்லதல்ல.

நாமும் பகீரதன், அர்ஜுனன் போல கொஞ்சம் நிற்கப் பழகினால் அவர்கள் போல நீடூழி வாழலாம்! ஒற்றைக் காலில் இல்லா விட்டாலும் இரட்டைக் காலிலாவது நிற்கலாம்.. இதன் மூலம் ‘பேஸ்புக்’ வியாதி, ‘இன் டெர்நெட்’ வியாதி, டெலிவிஷன் ‘சீரியல்’ வியாதி ஆகிய தீராத நோய்களையும் தீர்க்கலாம்!!!