முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!!

rubiks-cube-world-record

Picture of Rubik’s Cube

Written by London swaminathan

Date: 9 July 2016

Post No. 2954

Time uploaded in London :– 8-06 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு செயலைச் செவ்வனே முடிக்க பல வழிகள் உள்ளன. சிறிது சிந்தித்துச் செயல்பட்டால் எதையும் எளிதில் முடிக்கலாம்.

 

 

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். துன்பம் என்று எதுவுமே இல்லை. ஏனெனில் உலகில் எல்லாவகைத் துயரங்களுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அது என்ன என்று தெளிதல் வேண்டும்.

கடவுள் யாருக்கும் துன்பம் தருவது இல்லை!

 

சின்னக் குழந்தைகள்  ரூபிக் கியூப் (RUBIK CUBE)  போல பல புதிர் விளையாட்டுகள் விளையாடும். ஒருமுறை அதற்கு விடை கண்டுவிட்டால் பின்னர் எளிதில் அதைத் தீர்த்துவிடலாம். முதல் முறை மட்டும் கொஞ்சம் கடினமாகத் தோன்றும். ஆனால் ,ஒவ்வொரு புதிருக்கும் ஒரு விடை உண்டு.

 

இது போலவே கடவுள் சில கஷ்டங்களைத் தரும்போது அதற்கான தீர்வையும் தருவான். அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் நமக்கு வேண்டும். அது இல்லை என்றால் இது போன்ற கட்டுரைகளைப் படித்து அறிய வேண்டும். பெரியோர்களிடமும் அறிவுறை கேட்கலாம்.

 

இதற்கு ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய நூற்றுக் கணக்கான Self Improvement சுய முன்னேற்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதில்லை. திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு முதலிய நூல்களைக் கற்று சுய முன்னேற்றம் தொடர்பான விஷயங்களை எழுதி வைத்துக்கொண்டால் போதும். அதை அடிக்கடி “பாராயணம்” செய்தால் போதும்.

caged birds

 

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி!

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

முள்ளை முள்ளால் எடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

வைரத்தை வைரத்தால் அறு சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது.

 

நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடி என்பதை அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் என்ற பிராமணனும், பின்னர் திருவள்ளுவரும் “யானையால் யானை யாத்தற்று” – என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

வினையால் வினையாக்கிக்கோடல் நனைகவுள்

யானையால் யானை யாத்தற்று (குறள் 678)

பொருள்: ஒரு செயலைச் செய்ய இன்னொரு செயலைப் பயன்படுத்தலாம்; நனைந்த மத நீரையுடைய யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போல.

(நனை கவுள் = மத நீரினால் நனைந்த கபோலத்தை உடைய)

 

இதே உவமையை வால்மீகி ராமாயணத்திலும் காணலாம் (3-56-31)

(6-16-16)

 

பரணர் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் 276-லும் காண்க:-

தாரும் தானையும் பற்றி, ஆரியர்

பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல

 

(பிடி = பெண் யானை, களிறு = ஆண் யானை)

 

வடக்கில் , குறிப்பாக இமய மலையில், சம்ஸ்கிருத மொழியைப் பயன்படுத்தும் ரிஷி முனிவர்களையும் கற்றோரையும் “ஆரியர்” என்ற சொல்லால் சங்க இலக்கியம் அழைக்கும். இங்கே பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிக்கும் உவமையை பரணர் கையாளுகிறார்.

25KI-ELEPHANT_1155726f

ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து!

 

நன்னெறி என்னும் நூலில் ஒரு நல்ல பாடலும் இதே கருத்தை வலியுறுத்தும்.

 

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்

தங்கட் குரியவரால் தாங்கொள்க – தங்கநெடுங்

குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் ஆவின்பால்

கன்றினாற் கொள்ப கறந்து.

 

பொருள்:–

தங்கநெடுங்குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் – நெடிய பொன் மலையால் செய்தது போன்ற அழகிய கொம்பு போன்ற பெண்ணே (அட! என் தங்கக் கட்டியே!)

 

ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து- மாட்டுப் பாலை அதன் கன்றினாற் கறந்து கொள்வார்கள் (கன்று பக்கத்தில் இருந்தால் மாடு தானே பால் சுரக்கும். மற்றொரு பொருள்- கன்று இல்லாவிடினும் இறந்து போன கன்றின் தோலுக்குள் வைக்கலை அடைத்து கன்று போல பொம்மை செய்து , பசு மாட்டின் பக்கத்தில் வைத்துப்   பால் கறப்பது)

 

(அதுபோல)

 

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளின் – தங்களுக்கு உதவி செய்யாத ஒருவரிடமிருந்து உதவி பெற வேண்டுமானால்,

 

தங்கட் குரியவரால் தாங்கொள்க- அவருக்கு யார் நண்பர் என்று அறிந்து அவரை அணுகுக; அல்லது உங்கள் நண்பர்களில் யார், அவருக்கு நெருக்கமோ அவர் மூலம் அணுகி உதவி பெறுக.

 

எவ்வளவு அருமையான, எளிமையான விஷயம் பாருங்கள்.

 

2670_bessie_cow_calf_

 

நாட்டுப் பிரச்சினையானாலும், வீட்டுப் பிரச்சினையானாலும், குடும்பப் பிரச்சினையானாலும் திண்ணையில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்காதீர்கள்; முக்காடு போட்டுக் கொண்டு அழாதீர்கள்.

 

கஷ்டங்களைக் கொடுப்பவன் இறைவனே யானாலும், அதற்குத் தீர்வும் உண்டு!

 

முடியாதது என்ற சொல்லை என் அகராதியில் காண முடியாது என்று சொன்னான் நெப்போலியன். அதற்கு முன்னரே நாம் (தமிழர்கள்) சொல்லிவிட்டோம்.

 

–Subham–

 

தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? (Post No 2872)

aryakumari1

Research Article written by London swaminathan

 

Date: 6 June 2016

 

Post No. 2872

 

Time uploaded in London :–  15-33

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

arya2

கடந்த 100 அல்லது 200 ஆண்டுகளில்  சாதனை புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே காணமுடிவதில்லை. ஏன் இப்படிக் கடந்த கால பெண் எழுத்துச் சிற்பிகளை மறந்தார்கள் அல்லது ஒதுக்கினார்கள் என்பது ஒரு புதிராக இருக்கிறது. இவ்வளவுக்கும் அசலாம்பிகை அம்மையார் போன்றோர் திரு.வி.க. போன்றோரின் நல்லாசிகளைப் பெற்றுள்ளார்கள்!

 

உலகிலேயே அதிக பழைய பெண் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உடையது பாரத நாடுதான். ரிக்வேதத்தில் 20-க்கும் மேலான பெண் கவிஞர்களும், அதற்கு 1500 ஆண்டுகளுக்குப்பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களும் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே. ஆனால் அவ்வையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என்ற பெயர்களைத் தவிர, பாமர மனிதனுக்குப் வேறு பெயர்கள் தெரியுமா என்பது சந்தேகமே. இன்றைய பத்திரிக்கைகளில் எழுதும் பெண்கள் பெயரையும், நடிகைகள், பாடகிகள், நடன மாதர்கள் பெயரை மட்டும் எல்லோரும் சொல்லிவிடுவர்.

 

அசலாம்பிகை, வாலாம்பாள், பண்டிதை விசாலாக்ஷ்மி அம்மாள், அம்புளு, பாலாமணி என்று பெயர்களை அடுக்கினால், யார் இவர்கள்? பழங்காலக் கதைகளில் வரும் கதா பாத்திரங்களா? பெயர்களே பழைய பத்தாம் பசலிப் பெயர்களாக உள்ளனவே என்று வியப்பார்கள். கோலங்கள், சமையல் கலை பற்றிய பல புத்தகங்களைப் பெண்கள் எழுதியதில் வியாப்பொன்றும் இல்லை. ஆனால் இங்கே தரும் பட்டியல் கதை, கவிதை, நாடகம் எழுதிய பெண்களாவர்.

 

நான் லண்டனில் வாரந்தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போய் பழைய புத்தகங்களைப் பார்ப்பதால் இவர்களைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர்களுடைய புத்தகங்களைத் தொட்டு வணங்கும் பாக்கியமும் கிடைத்தது. அத்தனையையும் படிக்க நேரம் போதவில்லை. “பேஸ்புக்” -கில் அவ்வப்பொழுது இந்த நூல்களின் படங்களையும், முகவுரை, விமர்சனம் போன்ற விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறேன்.

 

பழைய நீதி நூல்களிலும் புராணங்களிலும் போற்றப்படும் பண்புகளைப் போற்றும் வகையில் பல பெண்களும் நாவல்களை எழுதியுள்ளனர். ஆரிய சிகாமணிகளே! என்று அவர்கள் வாசகர்களை அழைப்பது “ஆரிய = பண்பாடுமிக்க” என்ற உண்மைப் பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்

IMG_3996 (2)

இதோ ஒரு சின்னப் பட்டியல்:–

 

1.அசலாம்பிகை அம்மாள்:

புத்தகங்களில் இவர் பெயர் ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மாள் என்று காணப்படுகிறது. இவர் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையை காந்தி புராணம் என்ற பெயரில் மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கிறார். (நான் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டது 3 பாகங்கள்) 1921 முதல் 1924 ஆம் ஆண்டு வரை இவை வெளியாகியிருக்கின்றன. தமிழ் அறிஞர் திரு. வி.கலியாண சுந்தர முதலியார் எழுதிய முகவுரையில் இவரைப் பாராட்டி எழுதி இருக்கிறார். தமிழில் காரைக்கால் அம்மையாருக்குப் பின்னர் அந்தாதிப் பாட்டு எழுதிய பெண்மணி இவர்தான்!! ஆண்களில் பலர் அந்தாதி எழுதினர். ஆனால் பெண்களில் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் ஒரு சாதனை செய்தார். காந்தியின் வரலாற்றைக் கவிதையில் எழுதுவதே கடினம். அதையும் அந்தாதிப் பாட்டுகளாக எழுதுவது அதைவிடக் கடினம்!

 

இவர் திண்டிவனம் தாலுக்கா இரட்டணையில் 1875ல் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்ததால் இவரது தந்தை பெருமாள் ஐயர், இவரை திருப்பாதிரிப்புலியூரூக்கு அழைத்துச் சென்று தமிழும் சம்ஸ்கிருதமும் கற்பித்தார். பின்னர் இவர் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். பெண் விடுதலை, நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். இவரை திரு.வி.க. ‘தற்கால அவ்வையார்’ என்று அழைத்தார். அசலாம்பிகை அம்மையார் எழுதிய பிற நூல்கள்:- திலகர் புராணம், திருவுடையூர் தல புராணம், திருவாமாத்தூர் புராணம், இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல், ஆத்திச் சூடி வெண்பா, குழந்தை சுவாமிகள் பதிகம்

IMG_4175

IMG_4176

 

IMG_4186

 

 

 

 

 

IMG_4189

IMG_4190

2.வி.எஸ்.வாலாம்பாள் அம்மாள்:-

வேதாந்தப் பாட்டுகள் என்ற பெயரில் இவர் தொகுத்து வெளியிட்ட நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. 1907ஆம் ஆண்டு பதிப்பு இது. ஜீவ நாடகம் முதலிய அத்வைதப் பாட்டுகளும் பஞ்சீகரண மகா வாக்கியமும் என்று 1908ல் ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில் பலவர்ண இணைப்பு வரைபடமும் உள்ளது. கிடைக்கும் பல பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதாக அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இவருக்கு அத்வைதத்தில் உள்ள ஈடுபாடும் ஞானமும் அந்தத் தொகுப்பிலேயே தெரிகிறது.

 

இவர்பின்ன வெளியிட்ட நூல்கள்; வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டமுள்பட) ஞான ராமாயனக் கப்பலும் (இரண்டாம் பதிப்பு), குசல வாக்கியம்,  அனந்தங்காடு ஸ்ரீ பார்வதியம்மன் சோபனம்.

இவர் புத்தகம் கிடைக்கும் இடம் என்று தனது பெயருடன், போஸ்டாபீசுக்கு பக்கத்து வீடு, எழும்பூர் என்று எழுதி இருப்பதால் எழும்பூர்வாசி என்பது தெரிகிறது.

IMG_2527IMG_2534

3.அம்புளு:

இவர் 1910 ஆம் ஆண்டில் “அப்பாசாமி சாஸ்திரி” என்ற தமிழ் நகைச்சுவை நூலை எழுதியுள்ளார்.

4.கே.அலர்மேல் மங்கை:

பண்டிதை ஸ்ரீமதி கா.அலர்மேல் மங்கை என்ற பெயர், ‘திராவிட மதம்’ என்ற நூலின் ஆசிரியராக காணப்படுகிறது. இது 1914ல் வெளியான நூல்.

 

5.வள்ளியம்மன் சோபனம்:

அலமேலு அம்மாள் என்பவர், பாலக்காட்டிலிருந்து 1915-ல் வள்ளியம்மன் சோபனத்தை வெளியிட்டுள்ளார்.

IMG_5910 (2)

6.பண்டிதை விசாலாக்ஷியம்மா:

கடந்தகாலத்தில் அதிக நூல்களை எழுதிக் குவித்தவர் பண்டிதை விசாலாக்ஷியம்மா. இவர் கதைகளையும், நாவல்களையும் எழுதியர். இவர் எழுதிய கதைகள்:-

 

மஹேச ஹேமா என்ற நாவலை 1912ம் வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்திலேயே இவருடைய படைப்புகளின் நீண்ட பட்டியல் இருக்கிறது.

லலிதாங்கி, ஜலஜாக்ஷி, தேவி சந்திரபிரபா, ஜோதிஷ்மதி, நிர்மலா,ஆனந்த மஹிளா, ஹேமாம்பரி, ஸரஸ்வதி, கௌரி, ஞானரஞ்சனி, ஸுஜாதா, வனஸுதா, ஜெயத்சேனா, மஹிஸுதா, ஸ்ரீமதி ஸரஸா, இரட்டைச் சகோதரர்கள், விராஜினி, ஆரியகுமாரி, ஸ்ரீகரீ, ஜ்வலிதாங்கி

 

ஒவ்வொன்றும் எட்டு அணா விலை உடையது. 1908க்கும் முன்னரே இவர் 10 நூல்களை எழுதியது 1908 ஆம் ஆண்டு வெளியான ஸுஜாதா முதல் பக்கத்திலிருந்து தெரிகிறது. வித்யா குரு வி.நடராஜ அய்யருக்கு அதை சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்தான் இவரை எழுத்துத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர்.

 

லோபகாரி பத்திரிக்கைக்கு ஆதரவு கோரியும் விசாலாட்சி எழுதியுள்ளார்.

பின்னர், இவர் தன்னை “எடிட்டர், ஹிதகாரிணீ, மயிலாப்பூர்” என்றும் எழுதி இருப்பதால் இவர் சென்னையில் வசித்தவர் என்பது தெரிகிறது.

 

IMG_5914 (2)

7.ஸ்ரீமதி பாலம்மாள்

இவர் எழுதிய நூல்:- ‘சாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம்’

டாக்டர் ஏ.ஆர்.வைத்தியநாத சாஸ்திரியார் அவர்களின் குமாரத்தியாகிய ஸ்ரீமதி பாலம்மாள் இயற்றியது,என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். வெளியான ஆண்டு 1914.

பாலம்மாள் முன்னுரையும் இதிலுள்ளது.

 

8.கிருஷ்ணம்மாள்:

ஸ்ரீ மஹாபக்த விஜயம் (ஞானேசுவர சரித்திர கீர்த்தனைகளும், பக்தி வைராக்கிய கீர்த்தனைகளும்) – என்ற நூலில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி பிரம்மஸ்ரீ கிருஷ்ணம்மாளவர்களால் இயற்றப்பட்டன என்று அச்சிடப்பட்டுள்ளது. வெளியிட்ட ஆண்டு 1915

 

9.ராதாமணி

ஸ்ரீமதி ராதாமணி எழுதிய “பிரசன்னகுமாரி” என்ற நூல் 1937ல் தஞ்சாவூரில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பின்கீழ் பழங்கால தமிழ் நாடகம் என்று எழுதியுள்ளார். விலை 12 அணா.

IMG_5957 (2)

10.சாமுவேல் அம்மாள் மலைமகள்

இல்லற இன்ப இரகசியம் என்ற கிறிஸ்தவ சமய நூலை ஏ.எம்.பி.சாமுவேல் அம்மாள் இயற்றியுள்ளார். விலை 10 அணா. இந்திய கிறிஸ்தவ லிடெரேச்சர் சொசைடி இதை வெளியிட்டது.

11.மலைமகள்

மலைமகள் என்ற பெயரில் அமிருதவல்லி என்ற நாவலை ஒரு  பெண்மணி எழுதியிருக்கிறார். இதை வெளியிட ஊக்குவித்த விசாலாக்ஷ்மி அம்மாளுக்கு அவர் நூல் முகவுரையில் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.

 

மேலே கண்ட நூல்களில் பெரும்பலானவை 100 ஆண்டுகளுக்கு முன் வெளியானவை. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாரதி கண்ட கனவு அவர் வாழ்ந்த காலத்திலேயே ஓரளவு நிறைவேறியதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

நூற்றாண்டுக்கு முன் பெண்கள் ஆற்றிய எழுத்துத்துறை சேவை, டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்குரியது. பிரிட்டிஷ் லைப்ரரியிலும், அது போன்ற பழைய லைப்ரரிகளிலும் நிறைய நூல்கள், காத்திருக்கின்றன.

–சுபம்–

 

 

புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி (Post No.2859)

கம்ப1

Article written by London swaminathan

 

Date: 1 June 2016

 

Post No. 2859

 

Time uploaded in London :–  8-03 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

kalidasa_20405

Poet Kalidasa

அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது. ஆயினும் அவர்கள் முதல் பாடலை எழுதி பெரும் காவியத்தைத் துவக்கியபோது இது மக்களின் ஆதரவைப் பெறுமா, காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா என்றெல்லாம் பயமும் ஐயமும் இருந்திருக்கும். அவர்களிருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன் காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:

திதீர்ஷு துஸ்த்ரம்  மோஹாத் உட்டுபேன  அஸ்மி சாகரம்

 

சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!

காளிதாசனின் ரகுவம்சம் 1-2

xxx

மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்

ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

 

எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)

ரகுவம்சம் 1-3

xxx

அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:

மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்

ரகுவம்சம் 1-4

 

காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.

cat

கம்பன் ஒரு பூனை!

கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

–பாலகாண்டம்

பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.

valmiki

தெய்வ மஹா கவி வால்மீகி

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே

பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.

(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)

ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.

raguvamsam_b

–சுபம்–

 

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

தருமி1

ஜூன் 2016 காலண்டர் (துர்முகி வைகாசி/ஆனி)

 

Compiled by london swaminathan

Date: 27 May ,2016

 

Post No. 2844

 

Time uploaded in London :–  10-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“இனியவை நாற்பது” நூலிலிருந்து  – முக்கிய 30 இனிமையான பொன்மொழிகள்

 

முகூர்த்த நாட்கள்:- 8, 9, 16, 23, 26

அமாவாசை:- 5

பௌர்ணமி:- 20

ஏகாதசி:- 1,16

 

 

சிவ சிவ

 

ஜூன் 1 புதன் கிழமை

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே (முக்கண் உடைய சிவபெருமானின் பாதகமலங்களை இடையறாது சிந்தித்தல் இனிமையானது)

 

ஜூன் 2 வியாழக் கிழமை

பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே (வங்கியில் கடன் வாங்கியாவது படி)

 

ஜூன் 3 வெள்ளிக் கிழமை

உடையான் வழக்கு இனிது ( செல்வம் உடையவர்கள், அதை வறியவர்க்கு அளித்தல் இனிது)

 

ஜூன் 4 சனிக் கிழமை

ஏர் உடையான் வேளாண்மை தான் இனிது

 

ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே (வெஜிட்டேரியன்ஸ் – வாழ்க)

 

 hare krishna food 2

ஜூன் 6 திங்கட் கிழமை

கோல்கோடி மாராயம் செய்யாமை முன் இனிது (நடுவு நிலைமை தவறி பாராட்டி பரிசு வழங்காதிருத்தல் இனிது)

 

ஜூன் 7 செவ்வாய்க் கிழமை

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே (சான்றோரின் நல்ல மொழிகளைக் கேட்பது இனிது)

 

ஜூன் 8 புதன் கிழமை

அந்தணர் ஒத்து உடைமை ஆற்ற மிக இனிதே (அந்தணர்கள், வேதங்களை மறவாது ஓதுதல் இனிது)

ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே (வேதம் ஓதும் பார்ப்பனர்க்கு பசுவையும் தங்கக் காசுகளையும் தானம் செய்; உன் குலம் செழிக்கும்; ஊர் தழைக்கும்)

 

ஜூன் 9 வியாழக் கிழமை

ஊரும் கலிமா உரன் உடைமை முன் இனிதே (நீ செல்லும் குதிரை வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்; அதாவது காரில் செல்லும் முன் அதில் பெட்ரோல், டயரில் காற்று முதலியவற்றை சரி பார்)

 

ஜூன் 10 வெள்ளிக் கிழமை

அங்கண் விசும்பில் அகல்நிலாக்  காண்பு இனிதே (ஆயிரம் பிறை காண்; அதாவது 100 ஆண்டு வாழ்)

 நிலவு, சந்திரன், மூன்

ஜூன் 11 சனிக் கிழமை

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே ( கடன் வாங்கிச் சாப்பிடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை.

குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே ( பழைய உரைகாரர் எழுதியதை விட்டுவிட்டு, நூல்களுக்கு குதர்க்கமான பொருள் காணாமை இனிது)

 

ஜூன் 13 திங்கட் கிழமை

கிளைஞர் மாட்டு அச்சு இனிமை கேட்டல் இனிதே ( சுற்றத்தார் சுகமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இனிமையானது)

 

ஜூன் 14 செவ்வாய்க் கிழமை

தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (தன் கையே தனக்குதவி; சோம்பேறித் தனமில்லாமல், மற்றவர்களை ஏவாமல், அவரவர் காரியத்தை அவரவர் செய்தல் இனிது)

 

ஜூன் 15 புதன் கிழமை

குழவி தளர் நடை காண்டல் இனிதே;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (குழவி=குழந்தை)

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (குழந்தைகள் நோயில்லாமல் வாழ வகை செய்ய வேண்டும்; அதுவே இனிது)

குழந்தை சுட்டி

ஜூன் 16 வியாழக் கிழமை

பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது (அயலான் மனைவியை காம எண்ணத்துடன் திரும்பிக்கூட பார்க்காமை இனிது)

 

ஜூன் 17 வெள்ளிக் கிழமை

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே ( நன்கு படித்தவர் அறையில் அமர்ந்து நல்ல விஷயங்களை விவாதி; அப்பொழுது நீ படித்த விஷயங்களைச் சொல்லி, மகிழவைப்பது இனிது)

 

ஜூன் 18 சனிக் கிழமை

நட்டார்க்கு நல்ல செயல் இனிது (நண்பர்களுக்கு நல்ல உதவி செய்)

 

ஜூன் 19 ஞாயிற்றுக் கிழமை.

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே ( தந்திர நூல்களைக் கற்ற தவ முனிவர்கள் பெருமையைப் பேசுவது, காண்பது இனிது)

 

ஜூன் 20 திங்கட் கிழமை

சலவரைச் சாரா விடுதல் இனிதே (வஞ்சகருடன் சேராமல் இருப்பது இனிது)

 

தருமி2

ஜூன் 21 செவ்வாய்க் கிழமை

புலவர்தம் வாய்மொழி  போற்றல் இனிதே (கற்றறிந்தோரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடத்தல் இனிது)

 

ஜூன் 22 புதன் கிழமை

பிறன் கைப்பொருள் வௌவான் வாழ்தல் இனிதே (மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 23 வியாழக் கிழமை

ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே ( வேண்டியவர்க்கு சலுகை காட்டாத நடு நிலை இனிது)

 

ஜூன் 24 வெள்ளிக் கிழமை

 

காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே (மரத்தை வளர்; சோலைகளை உருவாக்கு; குளங்களை உருவாக்கு; கோவில்களில் இவையிருந்தால் அதைப் பாதுகார்)

 சுசீந்திரம் கோவில்குளம்

 

ஜூன் 25 சனிக் கிழமை

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே (இரவு நேரத்தில் துணையில்லாமல் செல்லாதே)

 

ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை.

நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே ( உன்னிடம் ஒரு பொருளை நாடி வந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றல் இனிது)

 

ஜூன் 27 திங்கட் கிழமை

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே ( ஒரு காரியத்தைச் செய்ய இயலாதவனிடம் போய், இதைச் செய், இதைச் செய் என்று நச்சரித்து, உன் சக்தியை எல்லாம் வீணடிக்காமல் இருப்பது இனிது)

 

ஜூன் 28 செவ்வாய்க் கிழமை

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே (உயர்ந்த குறிக்கோளை முன் வை; ஊக்கத்துடன் அதை அடை; உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராப்யவான் நிபோதத)

 

ஜூன் 29 புதன் கிழமை

மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே ( பொது மன்றத்தில் ஏறிப் பொய் சாட்சி சொல்லாதே; அ ந்தப் பாவம் உன்னை சும்மா விடாது)

 

ஜூன் 30 வியாழக் கிழமை

பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வது இனிதே ( பத்துப் பொருட்களைக் கொடுத்தாவது, சொந்த ஊரில் சுற்றத்தாருடன் வாழ்வதே இனிது).

 

school village

-சுபம்-

 

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! (கட்டுரை எண்.2832)

short 3

Article written by London swaminathan

 

Date: 23 May 2016

 

Post No. 2832

 

Time uploaded in London :–   9-58 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

குள்ளமாக இருப்பவர்களைக் கேலி செய்வது எல்லா கலாசாரங்களிலும் இருக்கிறது.

 

“கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பலாகாது” – என்று தமிழ்ப் பழமொழி கூறும். சர்கஸிலும் கூட நகைச் சுவை உண்டாக்க, குள்ளர்களையே பயன் படுத்துகின்றனர். கோமாளி என்றாலே – குள்ளர்கள்தான் என்று ஆகிவிட்டது.

short 1

வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்திலும் இவ்வாறு கேலி செய்தனர் போலும். உடனே வள்ளுவன் சொன்னான்:

 

உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து (குறள் 667)

பொருள்:– பெரிய தேருக்கு முக்கியமானது அச்சாணிதான். அது கழன்று விழுந்தால் தேரே குடை சாயும். அது போல உலகிலும் பலர் உருவத்தில் சிறிதாயிருப்பர், அவர்கள் தேர்ச்சக்கர ஆணி போன்றவர்கள்; ஆகையால் குள்ளர்களைக் கேலி செய்யாதே என்கிறான் வள்ளுவன்.

 

ஓங்கி உலகளந்த உத்தமனாக – த்ரிவிக்ரமானாக – உருவெடுக்கும் முன்னர் திருமாலும் வாமனனாக (குள்ளமாக) இருந்தான். இதையொட்டியே “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது” என்பர்,

 

அவ்வையாரும் அழகாகச் சொன்னார்:-

மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல் சிறியரென்றிருக்க வேண்டா – கடல் பெரிது

மண்ணீரும் ஆகாஅதனருகே சிற்றூரல்

உண்ணீரு மாகிவிடும்

–வாக்குண்டாம், அவ்வையார்

 

பொருள்:–தாழம்பூ மடலுடன் பெரிதாக இருக்கும். மகிழம் பூ சிறியதாக இருக்கும். ஆயினும் மகிழம்பூ மணமே இனியது. கடல் பெரிதாக இருக்கலாம்; ஆயினும் அதன் நீரை யாரும் பருக முடியாது. அதனருகே ஒரு சிறிய நல்ல நீரூற்று இருந்தாலும் அதற்குத்தான் மதிப்பு அதிகம்.

 

சூரியனும் குடையும்

அறநெறிச்சாரம் என்னும் நூலிலும் ஒரு பாடல் உண்டு:–

பல கற்றோம் யாம் என்று தற்புகழ்தல் வேண்டாம்

அலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னது ஓர் சொல்

பொருள்:–

பெரிய சூரியனின் ஒளியை மறைக்க கையிலுள்ள ஒரு குடை போதும்; கொஞ்சம் படித்தவர்கள் கூட ஒரு சொல்லினால் மற்றவர்களை மடக்கிவிட முடியும். ஆகையால் நாந்தான் மெத்தப் படித்தவன் என்ற செருக்கு வேண்டாம்.

tall-and-short-t11509

விரலான் கதை

சிறியவர், பெரியவர் என்ற உருவங்களை வைத்து உலகில் ஏழு குள்ளர்கள், லில்லிபுட் மனிதர்கள் என்று பல கதைகள் உண்டு. ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய (லில்லிபுட்) கல்லிவரின் யாத்திரை நம்முடைய விரலான் கதையைக் காப்பி அடித்து எழுதப்பட்டது என்று நான் முன்னர் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் கூறினேன். இதோ அந்தக் கட்டுரை:–

சூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார்: 31 டிசம்பர், 2011

 

–subham–

 

 

Auspicious Words in Sanskrit and Tamil Books (Post No.2825)

08.08.67.earth.med

Research article written by London swaminathan

 

Date: 20 May 2016

 

Post No. 2825

 

Time uploaded in London :–  13-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Ancient Hindu writers who wrote in Sanskrit and Tamil had some wrting traditions which were not found anywhere else in the world. They had a set of rules about the opening sentence or opening word of a great work in literature. They always started with some auspicious words or with the name of God. Either the prayer in the book or the first verse had that Mangala or auspicious words.

 

Here is a simple sloka which gives the rule:-

Omkaarascha atha sabdascha dvaavethau brahmanah puraa

Kandam bitwaa viniyaartau tasmaan maangalikaavubau

-Paatanjala darsanam

 

The sounds ‘Om’ and ‘Atha’ came first from the mouth of Brahma. So both these are considered auspicious words.

moon night

This ancient tradition lead the poets and compilers to begin a book with these words. The first letter of the alphabet in most of the old languages is ‘A’. Tamils and Sanskritists used this word as well.

Om or Aum has got a mystical meaning; it is the primordial sound from which everything came out/ originated

‘Atha’ means now

Here are some examples to illustrate the tradition:-

Atha yogaanusaasanam – Opening line of Patanjali Yogasutram

Atha Srimad Bhagavd Gita – Bhagavad Gita

Athaatho brahmajijnaasaa – Brahmasutra

Agni meele – Rig Veda (Om is also added with every mantra in the Vedas).

When the Guru opens the book in front of the students, he would say

Atha Valmiki Ramayana, Atha Rik Vedah etc. and then teaches the students.

Kalidasa, the greatest of Indian poets, prays to god with various words. If god is not directly referred to then the poets used words like ‘Viswa’, ‘Loka/world’.

 

Vishu Sahsranama begins with ‘Viswam’ vishnur Vashatkaro……..

tricolour om

But all the Sanskrit religious texts used Om or Atha in the beginning.

Amarakosa also says ‘Atha’ is an auspicious word. So we know that it has been in vogue for thousands of years.

Tamil Rule

Tamils have used the following words as the initial word in their works if it does not contain a direct Prayer to God:–

Siir(Sri), Ezuthu(word),Pon(gold), Puu(flower), Thiru (Sri/Lakshmi), Mani(Gem/Bell), Yaanai (Elephnt),Ther(chariot), Pari(horse), kadal(Sea), Malai(hill) Pukaz(fame), Mathi(Moon), Neer (water) Aaranam(Vedas) ,Sol(wprd), Puyal (rain/storm), Nilam (Earth), Ganga (Holy Ganges River), Ulakam(world),Parithi(Sun), Amirham (Ambrosia/Amrut).

Ulakam/World

Famous Tamil works such as Tirumurukatruppadai, Manimekalai, Valayapathy, Periya Puranam, Kamba Ramayanam, Mullaippaattu, Mudumozikanchi, Seevaka Chintamani, Villi Bharatam begin with the word ‘Ulakam’.

Other books such as Sirupaanatrupadai, Natrinai, Tirikaduka used the synonyms of world (Maanilam)

Oldest Tamil book Tokaappiam begins with Ezuthu(Word).

Tamil Epic Silappathikaram begins with Moon, Sun and Rain.

swastik, om lamps, kotipali shivratri

Tamil Veda Tirukkuran begins with ‘Akara’.

All the ancient Sanskrit and Tamil inscriptions begin with Swasti Sri, another auspicious word.

All the literary works ended with the word SUBHAM ( meaning Well, Good, Prosperity)

No other ancient culture except the Hindus had this literary tradition.

sheep, sun

–Subham_

 

தமிழர்களின் கோழிச் சண்டை, ஆட்டுக் கிடாச் சண்டை!! (Post No.2823)

cockfighting

Research article written by London swaminathan

 

Date: 19 May 2016

 

Post No. 2823

 

Time uploaded in London :–  9-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழர்களின் பொழுது போக்காக சில விளையாட்டுகள் இருந்து வருவது சிறப்புக்குரியது. சேவல் கோழி, கவுதாரி முதலிய பறவைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது, அதே போல ஆடு, மாடுகளை சண்டை போட வைத்து வேடிக்கை பார்ப்பது பற்றி சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் சுவையான செய்திகள் உள்ளன. இங்கே ஒன்றிரண்டைத் தொட்டுக் காட்டுகிறேன்.

கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் அயோத்தி நகர மக்களின் பொழுதுபோக்குகளை கம்பன் வருணிக்கிறான். கோசல நாடு பற்றி கம்பன் கூறியது அனைத்தும் சோழ நாட்டை மனதிற்கொண்டு சொல்லப்பட்டவையே.

கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி

உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றி சீறி

வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர ஆக்கை

மறுப்பட ஆவிபேணா வாரணம் பொருத்துவாரும்

 

பொருள்:–

சினம் மிகுந்த மனமும், கண்களைப் போலச் சிவப்பு நிறமுள்ள உச்சிக் கொண்டையும் தோன்ற, தமது காலிலே கட்டப்பட்ட கத்தியால் தம்முடன் போரிடும் கோழியைத் தாக்கி, முன்பகை ஏதுமில்லாமலே கோபித்துப் போர் செய்வதில் வெறுப்பில்லாதனவாகி, செருக்கினால் அப்போரில் வலிமை பெற்று, வீர வாழ்க்கைக்கு களங்கம் உண்டானால், உயிர்துறக்கும் சேவற் கோழிகளை சிலர் போர் செய்யுமாறு செய்தார்கள்.

goat fight

எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து

உரும் இவை என்னத் தாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்

விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி

அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்

பொருள்:–

 

எருமைகள் பெற்றெடுத்த செந்நிறக் கண்களையுடைய ஒரு எருமைக் கடாவுடன், மற்றோர் எருமைக் கடா, இவை ‘உருமும் இடிகள்’ ஆகும், என்று சொல்லும்படி மோதி, இருட்டு, இரண்டு பகுதியாகிப் போர் செய்வது போல போரிட்டன. அந்தக் கடாக்களின் போரினை வேடிக்கை பார்த்து ஆரவாரித்து வண்டுகள் மேலே எழுந்தன. மக்களில் சிலர் வானம் வரை சப்தம் கேட்கும்படி ஆரவாரம் செய்தார்கள்.

தமிழர் நாகரீகமும் பண்பாடும் என்ற நூலில் அ.தட்சிணாமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:–

வீரவுணர்வு மிக்க தமிழர்கள் ஆட்டுக் கிடாய்களையும், காடை, கவுதாரி, கோழி முதலான பறவைகளையும் பழக்கிப் போரிடச் செய்து மகிழ்வதில் நாட்டம் கொண்டிருந்தனர். ‘குப்பைக் கோழி தனிப் போர் போல’ (பாடல் 305) என்று குறுந்தொகைப் புலவர் ஒருவர் அரிய உவமையை ஆள்கின்றார். இதனால் கோழியைப் பழக்கிப் போரிடச் செய்தலும் வழக்கிலிருந்தது என அறியலாம். புறப்பொருள் வெண்பா மாலையில் பூழ்ப்போரும் தார்ப்போரும் வாகைத் திணையில் பேசப்படுகின்றன.

 

பூழ்= காடை, கானாங்கோழி பறவை வகைகள், தார்=ஆட்டுக் கிடா

நமது இலக்கியங்களில், குறிப்பாக கம்பராமாயணம், பெருங்கதை போன்ற இடைக்கால நூல்களில், இது போன்ற நிறைய குறிப்புகள் உள.

 

goat fight 2

–சுபம்–

 

Three Tamil Kings fast unto Death! (Post No 2820)

bow arrow

Research article written by London swaminathan

Date: 17 May 2016

 

Post No. 2820

 

Time uploaded in London :– 20-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Tamils who lived 2000 years ago valued good reputation and family honour. They thought that it was better to die than to live in disgrace. This is a typical Hindu thinking. Throughout Valmiki Ramayana we come across several references to losing one’s life just to save their name and fame. Rama, Lakshmana, Bharata and Hanuman thought of killing themselves once or twice because they couldn’t do what they were supposed to do. The popular method of losing one’s life was jumping into a ritual fire. Alternative method was fast unto death.

IMG_3325

Tamil literature has listed at least three kings who lost their lives by ritual fasting.

Popular Tamil poet Tiruvalluvar says in his

Tirukkural (970)

The world will admire the glory of men, who give up their life,

When overtaken by dishonour

Purananuru, part of Sangam literature, has a verse sung by the Chera king Kanaikal Irumporai (Puram 74). He was defeated by the Chola king Chenganan. After his defeat hhe was thrown into the prison. Suddenly he felt thirsty and he asked for some cold water. The prison guards delayed t under some false excuses. He fasted unto death and refused to take the water which was brought to him after a deliberate delay.

He sang the verse when he was insulted by the prison guards:–

“Royal babies that die and even moles delivered from the womb of queens, even though they are not men, are cut to pieces with swords (warriors are supposed to die in battle fields; so it is done symbolically as if they died in battle fields). When this is so, could any king beget a son, when tied like a chained dog, would be so weak to drink  water charitably offered by his jailor, for allying the  fire in his stomach?”

 

When he got the water after a long delay, he composed this poem, holding the water in his hand. He never drank it. He starved him to death.

Tiruvalluvar says in another couplet

Hair lost, the yak lives not

Honour lost, noble men leave their life(969)

Ike hair that is fallen from the head are men athat have fallen from their height (964)

Pandya_territories

Asi Dhara Vrata (Sharp Sword Edge Vow)

 

It is like standing on the sharp edge of a sword. The meaning is  it is difficult to maintain that balance or it would hurt if slipped. A bachelor can lie in the same bed with a beautiful girl but yet never swerve from the vow of chastity. It is said that a sword will be placed in between them in the bed according to the commentator (Raghuvamsa 13-67).

 

 

When Rama returned to Ayodhya after 14 year stay in the forest, he saw Bharata walking towards him. He praised Bharata as practising Asidhara Vratam, without enjoying the Rajyalakshmi  (Kingdom or Earth is praised as Lakshmi, Goddess of Wealth in Hindu scriptures).

 

 

Tamil Kings Kopperum Choza and Neduncheralatha

 

Tamil Kings Kopperum Choza and Neduncheralatha of Sangam age also followed similar type of vow. They sat facing North on the banks of a river and fast unto death. They were also holding a sword in their hands, probably meaning the same, i.e. sharp edged vow. Verses in Purananuru 65 (by Kazath thalaiyar) and Akananuru  55 (by Mamulanar) are about the Chera King Neduncheralathan who died facing North. When such a great person sacrificed his life, scholars and general public joined them and made it a “mass suicide”. We see it when Lord Rama drowned himself in the Sarayu River and in the Tamil Kings’ deaths. Lot of Tamil poets and scholars joined them in the fast unto death ceremony. In Tamil it is called “Vaal Vatakkiruthal”, meaning Facing North with a Sword.

 

When the greatest of the Chola kings, Karikalan fought with Chera King Nedunseralathan, Chera king was wounded on his back. No Tamil king tolerated a wound on his back. Those who were injured on the back were called cowards. So Chera king decided to die through fasting. Several poets sang in praise of both the kings ( see Puram verses 65 and 66).

 

In another episode we read about a family feud where the sons of Chola king Kopperuncholan revolted against their dad. Immediately a poet advised him to go into fasting. When he decided to die through fasting, several famous poets joined him and died with him. One of them, Pisiranthaiyar, has never met him but considered him as his best friend (see Puram 214 to 223).

 

IMG_3459

Apart from Jain’s Sallekhana we come across several examples in Sanskrit scriptures. Kishkinda Kanda of Valmiki Ramayana has one such episode. Angatha, son of Vali, went in search of Sita, but in vain. He decided to sit tight on Dharba grass and die. Only minor difference was he faced east but not north.

Alexander and Purushottama

When Alexander the Great conquered the valiant Hindu King Purushottama alias Porous, he asked him how he would like to be treated, Purushottama said,

“I am King. Treat me like a king”.

Alexander was greatly impressed with his bold answer and treated him like a king. When Alexander saw this little king fighting valiantly, he had second thoughts attacking the mighty Mauryan army.

Honour was valued and no king could live in disgrace. Chittor Queen Padmini jumped into fire with hundreds of her loyal servants just the avoid the disgrace from the cruel Alauddin Khilji.

 

Honour in Animal World

Sangam Tamil literature gives some interesting details about Tigers. Tamil poets say that the tigers wont eat their prey if it falls on its left side. It will eat the animal only when it falls on its right side. In Hindu culture left is inauspicious and right is auspicious. All the auspicious things are done in clockwise direction (right turn) and inauspicious or funeral rites are done in leftward direction/anti clockwise direction. This simile is always used to illustrate the greatness of honour.

Tiger_2504157f

–subham–

 

 

 

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

bob painting 3

Written by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2787

 

Time uploaded in London :– 10-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bob painting 2

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

 

சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

xxx

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

 

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

Xxx

bob painting1

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

Xxx

thalai atti bommai

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

 

–Subham–

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–