Prisoners Rehab in Ancient India!

Community Service in Ancient India

Helping poor people or donating clothes to the needy people, serving food to the hungry or feeding the travellers is not new to India. It has been going on for at least three thousand years. We can boldly say this because we have enough documents to support our statement. Jains had even hospitals for birds and animals. We may think that serving prisoners or rehabilitating them is a Western concept. No, that is not correct. Tamils did this 2000 years ago!

 

Chatrams/Choultries ( Community buildings) were constructed along the traveller’s routes to provide them food and shelter. Certain donations like lands and gold coins were made only to Brahmins and temples to serve the religious needs. Poets who praised the kings were also amply rewarded. So we don’t see them as community service. But food and shelter were given to all, irrespective of the caste or creed. We have some interesting information about Water Distribution Centres (in Tamil Thanneer Pandhal) in Periyapuranam in Tamil and Mahabharata in Sanskrit.

We have information about magical vessels called Amutha Surabhi and Ulavaa Kizi in Tamil. They were like Draupadi’s  Akshaya patra. The magical vessels will feed any number of people at times of drought. They were always full with food. Even those who don’t believe in such magical things, must admit that the intention to help the needy was there. Otherwise they would not have recorded it thousands of years ago and left it for the posterity.

Apputhi Adikal was a great admirer of Appar, one of the four great Tamil Saivite saints. So Adikal installed water (donation) Distribution centres on the main roads to give water for the thirsty during hot summer. Even today Tamils do it during summer. People in North India know about the philanthropist Kali Kampaliwala who provided woollen clothes for the people travelling to Himalayan shrines.

When Appar alias Tirunavukkarasar visited Thingalur of Apputhi Adikal he was surprised to see his name in all the places like water donation centres or Dharma Chatras. People told him it was Adikal who did all these charities. When Tirunavukkarau went to Adikal’s house he asked who that Tirunavukkarasu was without revealing his identity. He even belittled him. Apputhi adikal was enraged by that remark. At that time Tirunavukkarasu revealed his true ID. Adikal’s enthusiasm was boundless.

Community Service in Mahabharata

Mahabharata also provide some information about water (donation) Distribution Centres. Salyan, King of Madra Desa was the uncle of Nakula and Sahadevan.  Both Kauravas and Pandavas were trying to enlist his support in the great war. But Duryodhanan tricked him by providing water from his water supply centre along his route. Once he drank water from his shed, he was indebted to him and promised to help Duryodhana. He became the charioteer of Karna and was killed on the last day of the 18 day war. The point here is the water supply along the main routes and then honouring words. Once you eat at a place and give your word, then it is inviolable.  Even if we take Mahabharata time as 1500 BC instead of 3100 BC, then this type of service has been there for at least 3500 years.

Manimekalai’s service in the prison

Prisoners’ rehabilitation is a new concept in the western countries. Manimekalai, the heroine of the Tamil epic ‘Manimekalai’, did this service 2000 years ago and transformed all the prisoners as good citizens. Prisons were converted into charitable homes.

When Manimekalai went to the prison she spoke to the prisoners kindly with gentle words of advice and comfort. She gave them all a hearty meal from her magic bowl Amuthusurabhi. The inmates became penitent and their behaviour was reformed beyond recognition. When the prison guards informed the king he asked Manimekalai to come to the palace. She advised him to release all the prisoners and convert all the prisons in to charitable houses for saints and sages. The king readily agreed to do it. This type of service was unheard of in any other countries till modern days.

Sirukudi Kizan Pannan and Ant line

Sangam Tamil King Killivalavan praised Sirukudi pannan in Puranananuru verse 173: ‘’May Pannan live as long as I live. You bards, note the distress of the relatives of this man. We hear the noise of men feeding, as great as that of birds on a tree which has newly borne fruit. We see boys go in all directions along with their relatives with cooked food in their hands, as the small ants, when they know that the cloud which rains in the proper season is going to rain, take their eggs (in their mouths) and resort to high ground.’’

People were going from Pannan’s place with food in their hands like ants carrying food in a line. There are number of poems like this in Sangam Tamil literature.

 

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

 

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

என் பெயர் புலவர் நக்கீரன். “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை’’ என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற மூன்று வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”, ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும். வெளி நாட்டுக்காரர்களும் அரசியல்வாதிகளும் ‘’ஆரிய, திராவிட’’ என்ற சொற்களால் மக்கள் எல்லோரையும் குழப்பி வைத்துவிட்டனர். நீங்கள் எல்லோரும் இது பற்றிக் கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும்.

 

*முதலில் நான் பேசுகிறேன். என் பெயர் பரஞ்சோதி முனிவர். என்னுடைய திருவிளையாடல் புராணம் தமிழர்களுக்கு நன்கு தெரியும். நான் அப்போதே சொல்லிவிட்டேன் தமிழும் வடமொழியும் சிவ பெருமான் கொடுத்த கொடை என்று:

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்

தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

திருவிளையாடல் புராணம்

‘’கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ’’

 

என்றும் பாடிவிட்டேன்

 

*என் பெயர் மாணிக்க வாசகன், என் திருவாசகத்தில்

‘தென் நாட்டுடைய சிவனே போற்றி’ என்றும்

‘பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே’ – என்றும் பாடியுள்ளேன்.

 

*என் பெயர் சிவஞானசுவாமிகள். நான் காஞ்சிப் புராணத்தில்

‘’இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப

இரு மொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பு

மிருமொழியுமான்றவரே தழீஇயனாரென்றாலிவ்

விருமொழியு நிகரென்னு மிதற்கையமுளதேயோ’’ என்று சொல்லிவிட்டேன்

 

என் பெயர் அப்பர். வாகீசர் என்றும் திருநாவுக்கரசு என்றும் என்னை அழைப்பர். நானும் தேவாரத்தில்…….

ஆரியந்தமிழோடு  இசையானவன் (6-132-3)

வானவர் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்

வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் (6-8-60)

கோல மா நீலமிடற்றான் தன்னை

செந்தமிழோடு ஆரியனை சீரீயானை (6-46-7)

இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறயெம் அண்ணல் கண்டாய் (திருமறைக்காடு)

 

என்று எல்லாம் பாடி தமிழும் சம்ஸ்கிருதமும் தேவ பாஷை என்று உணர்த்திவிட்டேன். ஆரிய என்ற சொல்லை நான் சிவனுக்குப் பயன்படுத்திய பின்னரும் என்ன சந்தேகம்?

*என் பெயர் சம்பந்தன். சிறு வயதுப் பாலகன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் அப்பரின் ‘’டியர் ப்ரண்ட்’’. நான் கொஞ்சம் கடுமையான சொற்களைப் பிரயோகித்து இருக்கிறேன்:

மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அலேன்”

தமிழ், வடமொழி நூல்கள் கூறும் கருத்துக்களை அறியாதோரை குரங்கு, குருடன் என்று சொல்லிவிட்டேன். இன்னுமா புரியாது?

 

*என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தைப் பட்டிமன்றங்களில் அலசுவதை நக்கீரன் அறிந்திருப்பீர்கள். நானும்

பல இடங்களில் ‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’ (அகத்தியன்) என்றும், ‘’தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்’’ என்றும்  ‘’என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’ என்றும் பாடிவிட்டேன் தமிழ், மொழி, அகத்தியன், சிவன் ஆகியோருக்குமுள்ள தொடர்பை தெளிவு படுத்திவிட்டேன்.

 

*என் பெயர் திருமூலர். நானும் எவ்வளவோ இது பற்றிப் பாடிவிட்டேன்

அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே! (திருமந்திரம்)

 

*என் பெயர் ஈசானதேசிகர். நான் இலக்கணக் கொத்துரையில்

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்

இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

 

என்று அப்போதே சொல்லிவிட்டேன். நான் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்று சொன்னபோது என்னை ஓரம்கட்டிவிட்டார்கள்.

 

என் பெயர் சுப்பிரமணிய தேசிகர். நானும் 70 முதல் 80 சதம் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று காட்டிவிட்டேன். என்னுடைய பிரயோக விவேகம் நூலைப் படிக்காமலேயே திட்டுகிறார்கள்.

 

என் பெயர் சுந்தரம் பிள்ளை. தமிழில் நாடகமே இல்லை என்ற குறையைப் போக்க  ஒரு ஆங்கில நாடகத்தைத் தழுவி மனோன்மணீயம் என்ற நாடகத்தை எழுதினேன். நான் சம்ஸ்கிருதத்தைக் குறைகூறி எழுதியதை தமிழ்நாடு அரசே நீக்கிவிட்டது. சிதைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்தை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்: ‘’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’ என்ற வரிகளை நீக்கி என் பாட்டையே சிதைத்துவிட்டார்கள். எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் திராவிட (தமிழ் நாடு) அரசே இப்படிச் செய்திருக்கிறது. போகட்டும்.

 

எல்லோருக்கும் நன்றி. அடுத்த வாரத் தலைப்பு : ‘’கா, கா, கா! கா, கா, கா!!’’ சங்கப் புலவர் பாடல்கள் முதல் பராசக்தி திரைப் பாடல் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது நக்கீரன்..

Donkeys in Tamil and Sanskrit Literature

Picture: No sympathy for the collapsed donkey, laughing at it in Afghanistan.

Donkeys in Tamil and Sanskrit Literature

Donkey is the animal that got most negative publicity in classical Indian literature. Some animals like cow and elephant are elevated to the position of sacred animal. Lion is the unquestionable king of the forest. Bull, Tiger and Lion are used in addressing Vedic and Epical characters. Rama is called the Tiger among men in Venkateswara Subrabatham. Kings called themselves lions (sing or Kesari which became Caesar in Europe). But poor vegetarian donkey is considered a dirty animal. George Orwell is right when he said ‘’All animals are equal, but some are more equal than others’’ in his novel Animal Farm.

The strange thing about donkeys is that they were vehicles of Vedic gods Indra and Agni in Atharva Veda. But later became the vehicle of Jyeshta (Muthevi) and Shitala Devi (Goddesses of poverty and disease). They were relegated to back stage. Greek gods Dionysus and Hephaestus used donkey as their vehicles. Jesus rode into Jerusalem victoriously on a donkey according to Gospel of Mathew.

Picture of overloaded donkey cart in Gaza Strip, Plaestine.

Donkey plough of Tamil and Orissa Kings

2000 year old Sangam Tamil literature and Kharavela’s Hathikumbha inscription have some strange coincidence. When the kings conquer some new countries, they destroy the towns and plough the land with donkeys. This strange custom existed throughout India. Sangam Tamil books Purananuru (verse 15, 392), Pathitru pathu (25) say that the Pandya king Muthukudumi Peuvazuthi , a local chieftain Pokuttezini and Cheran Selkezu Kuttuvan defeated their enemies and ploughed their lands with donkey ploughs. Avvaiayar, Palai Gauthamanar and Nettimaiyar sang in praise of those kings. According to Kalinga (Orissa) King Kharavela’s inscription, he did the same in Pataliputra and Rajagiri. He broke the 100 year old Tamil Federation and did use a donkey plough in a Tamil port. Pandya king sent him gems, elephants and horses as tribute.

Kharavela (2nd century BC) was one of the just kings of India who commanded respect from every one. He was a Jain and ruled a large part of India. Through his inscriptions we know a lot about ancient India.

kalighat_shitala

Picture of Shitala Devi

Donkey procession for Criminals

Now and then we read news items in Indian news papers about criminals taken in procession around the town on donkeys with red and black spots painted on their faces. This is also an ancient punishment followed by Indians for thousands of years. We read about it in Sanskrit literature. Nowadays it is followed in North Indian villages.

Even the Tamil proverbs are against donkeys. Parents use the names of donkeys and dogs to scold their children. From ancient times these animals are used to carry heavy luggage such as salt and pepper and Sangam books Akananuru (verse 89) and Perumpanatrupadai ( line 80) confirm this. But in other parts of the world even Jesus used it because it was considered a humble animal compared to  arrogant horse.

 

Donkey Curses

Another interesting area is the curses in the epigraphs and inscriptions. Those who violate the instructions or damage the gifted articles are cursed to go to hell that is meant for copulating with donkeys. Unnatural sexy sculptures and diagrams accompany such inscriptions.

Donkey demons are painted in Mycenaean culture. The frescoes of demons with donkey heads belong to 1500 BC.

Picture of Jesus riding a donkey into Jerusalem.

Donkeys in Vedic period

I have already written about it in one of my posts on Vahanas (Mounts of Gods). I am reproducing it here:

Hephaistos is an Olympian God in Greece. He rides a donkey. Donkey is Vahana for Hindu Gods and Goddesses as well:

Donkey Vahana for Indra: A.V. 9-6-4

Donkey vahana for Agni: Aitareya Brahmana 4-9-1

Donkey Vahana for other Gods: AV 8-8-22

Jyeshta or Muthevi or Seetala Devi have donkey has her Vahana.

In western countries, people have started charities for abandoned donkeys. They look after them well.

Contact: swami_48@yahoo.com

DonkeyRavens

சிவன் ‘இறந்தான்’- புலவர் விட்ட க(வி)தை!

 

 

 

Forms of Sankaranarayana and Ardhanari

போஜ ராஜன் என்ற மன்னன் மாபெரும் அறிவாளி. கற்றோரைக் காமுறும் பெரும் புலவன். புலவர்களுக்குப் புரவலன். காளிதாசன் போன்ற பெரும் புலவர்களின் இனிய நண்பன். இத்தகைய மன்னன் காலத்தில் ஒரு ஏழைப் புலவனும் வாழ்ந்தான். ஏதேனும் பாட்டு எழுதிச் சென்றால் போஜ மான்னன் தனது போஜனத்துக்கு வழி செய்வானே என்று பரிதவித்தான். அவனுக்கு கவிதை எழுதத் தெரியாது என்பதல்ல. கவி மழை பொழிய வல்லவனே. ஆனால் எல்லாப் புலவர்களும் எல்லாவற்றையும் பற்றி எழுதிப் பரிசு வாங்கிவிட்டார்களே, நான் எதைப் பற்றி எழுதுவேன் என்று அங்கலாய்த்தான். தருமி என்னும் ஏழை அந்தணனுக்கு கவிதை எழுதித்தந்த சிவ பெருமான் இவனுக்கு கவிதை எழுதித் தரவில்லை!

ஏழைப் புலவனுக்கு திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. அதுவும் சிவன் அருள்தான், ஏனெனில் அது சிவனைப் பற்றிய கவிதை! ஆனால் அரைத்த மாவையே அரைக்காத புதுக் கவிதை, அதாவது புது விதமான கவிதை. சிவன் இறந்த கவிதை. இதைக் கேட்டால் போஜன் கட்டாயம் பரிசு தருவான் என்ற நம்பிக்கை ஊட்டிய கவிதை.

இதோ அந்தக் கவிதை:

ஒரு பாதி மால் கொள மற்றொரு பாதி உமையவள் கொண்

டிருபாதியாலும் இறந்தான் புராரி இரு நதியோ

பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்திற் கற்ப

தருவான போச கொடையுடன் கையோடென்கை தந்தனனே (தனிப்பாடல்)

பொருள்:

சிவ பெருமானுடைய ஒரு பாதியை உமா கவர்ந்துவிட்டாள் (அர்த்தநாரீஸ்வரர்), மற்றொரு பாதியை திருமால் (சங்கர நாராயணன்) கவர்ந்துவிட்டார். இவ்வாறு இருவரும் உடலைப் பங்கிட்டதால் சிவ பெருமான் என்பவரே இல்லை என்றார்.

இதைக் கெட்ட அரசனுக்கு திருப்தி வரவில்லை. கேள்விகள்தான் வந்தன. போஜராஜன் கேட்டான்: புலவரே, சிவன் இறக்கவே முடியாது. அப்படியானால் சிவனின் தலை மீதிருந்த கங்கை எங்கே? தலையில் அணிந்த இளம் பிறை எங்கே? அவர் கழுத்தில் நிலவும் பாம்பு எங்கே? அவருடைய கையில் இருந்த திருவோடுதான் எங்கே? என்றான்.

முதலில் மன்னனின் கேள்விகளைக் கேட்டுவிட்டு திடுக்கிட்டுப்போன புலவன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு கதை, இல்லை, கவிதை, விட்டார். அடடா! சொல்ல மறந்துவிட்டேனே, அவர் மீதிருந்த பிறைச் சந்திரன் வானத்திற்கு ஓடிப் போய்விட்டான். பாம்போ பூமிக்குள் இருந்த துளையில் புகுந்துவிட்டது. கங்கை கடலில் கலந்துவிட்டாள். சிவன் கை திருவோடு என் கைக்கு வந்து விட்டது. சிவ பெருமானின் மாபெரும் கொடைத் தன்மை போஜராஜன் என்ற மன்னனிடம் போய்விட்டது என்று போட்டார் ஒரு போடு! போஜ மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி. ஏழைப் புலவன் திருவோட்டில் தங்கக் காசு மழை பெய்தான்.

 

இந்தியப் புலவர்கள் மேதாவிகள். சமயத்துக் கேற்றவாறு கவி மழை பெய்து, தங்க மழையில் நனைவார்கள். மற்றொரு புலவர் ராமநாத சேதுபதியிடம் பொன்முடிப்பு வாங்கச் சென்றார். அவர் தங்கத் தட்டில் பணமுடிப்பு வைத்துத் தந்தார். பண முடிப்பை எடுத்துக் கொண்டு தட்டைத் திருப்பித் தருவது வழக்கம். அவர் புத்திசாலித் தனமாக பணத் தட்டு மன்னனுக்கோ? ஏழைப் புலவருக்கோ? என்றார். மன்னன் சிரித்துக் கொண்டெ ‘உமக்கே’ என்றான். புலவருக்கு அன்று இரட்டை போனஸ்!

(பணத்தட்டு என்றால் பண முடை, பணம் போதாத நிலை என்ற அர்த்தமும் உண்டு).

 

Please read earlier Bhoja Raja stories in this blog:

1.Strange Link between Shiva, Socrates and Thiruvalluvar

2. Who is Dhananjayan?

3. World’s Largest Story Collection

4.போஜராஜன் செய்த தந்திரம் ( in Tamil)

contact: swami_48@yahoo.com

கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள் !

9.சம்ஸ்கிருதச் செல்வம் 

9. கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள் ! 

By ச.நாகராஜன்

 

   சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்றவர் பர்த்ருஹரி. இவரது கவிதைகளை மேற்கோள் காட்டாதவர்களே கிடையாது.ஸ்வாமி விவேகானந்தர் முதல் மஹாத்மா காந்திஜி வரை எல்லாப் பெரியோரும் கவிஞர்களும் அறிஞர்களும் இவரது கவிதைகளைச் சுட்டிக் காட்டி தாம் சொல்ல வந்ததை விளக்கும் அளவு ஆழமான கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் பர்த்ருஹரி.

 

நீதி சதகம், ச்ருங்கார சதகம், வைராக்ய சதகம் என மூன்று சதகங்களை அவர்  படைத்துள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது.

 

அதிர்ஷ்டவசமாக இவரது மூன்று நூல்களும் இன்று நம்மிடையே உள்ளன. எளிய பதங்கள், இனிய நடை, ஆழ்ந்த கருத்து, வார்த்தை ஜாலங்களும் கருத்து ஜாலங்களும் மிக்க கவிதைகள் என இவரது அரிய படைப்புகளைப் பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 

சற்று மிகைப்பாடல்களுடன் கூட நீதி சதகத்தில் 111 பாடல்களும்,ச்ருங்கார சதகத்தில் 104 பாடல்களும் வைராக்ய சதகத்தில் 111 பாடல்களும் நம்மிடையே இன்று உள்ளன.

அனைத்துப் பாடல்களும் பொக்கிஷம். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரே ஒரு தரமாவது படிக்க வேண்டிய கவிதைகள் இவை.

 

முதலில் மாதிரிக்கு ஒன்று!

 

பழுத்த அனுபவஸ்தரான பர்த்ருஹரி தேசம் முழுவதும் சுற்றியவர் போலும். பல நிகழ்வுகளைப் பார்க்கிறார். பலதரப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறார். அவருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

 

நீதி சதகத்தில் 45வது பாடலாக இது மலர்கிறது:

 

சசீ திவஸ தூஸர: கலித யௌவனா காமினி

   சரோ விகத வாரிஜம்  முகமநக்ஷரம் ஸ்வாக்ருதே:I

    ப்ரபுர்தனபராயண: ஸதத துர்கதி ஸஜ்ஜன:

       ந்ருபாங்கண கத: கல: மனஸி சப்த சல்யா இமே II

 

திவஸ தூஸர: – பகலால் ஒளியிழந்த

சசீ – சந்திரனும்

கலித யௌவனா – யௌவனமிழந்த

காமினி – மனைவியையும்

விகத வாரிஜம் – தாமரைப் பூவற்ற

சர: – தடாகமும்

ஸ்வாக்ருதே: – நல்ல அழகுள்ளவனுடைய

முகம் – வாயானது

அநக்ஷரம் – எழுத்து வாசனையே இல்லாமல் இருப்பதும்

ப்ரபு: – பணக்காரன்

தன பராயண: – பணம் சேமிப்பதிலேயே கருத்தாக   இருப்பதும்

ஸஜ்ஜன: -நல்ல மனிதன்

ஸதத துர்கதி – எப்போதும் கஷ்ட தசையில் வாழ்வதும்

கல: -அயோக்கியன்

ந்ருபாங்கண கத: – அரசனுடன் நெருங்கிப் பழகுவதும்

ஸப்த – ஆகிய மேற்கண்ட ஏழு விஷயங்களும்

மே – எனக்கு

சல்யானி – துன்பமளிக்கின்றன

 

1.பகல் வேளையில் சந்திரன் ஒளி இழந்து இருப்பதைப் பார்த்தால் மனதிற்குத் துக்கம் ஏற்படுகிறது.2.இதே போல இளமை அழகு இழந்த மனைவியும், 3.தாமரைப் பூக்கள் இல்லாத தடாகமும் 4.அழகிய ரூபமுள்ளவன் படிப்பறிவே இல்லாமல் இருப்பதும் 5.பணக்காரனாக இருந்த போதிலும் மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதும் 6.நல்ல மனிதர்கள் எப்போதும் கஷ்டமான வாழ்க்கையையே நடத்த நேரிடுவதும் 7.அயோக்கியர்களோ அரசன் வீட்டில் செல்வாக்குப் பெற்று நல்ல காரியங்களைக் கெடுப்பதும் ஆகிய இந்த ஏழும் என் மனதிற்குத் துன்பத்தைத் தருகிறது என்கிறார் கவிஞர்.

 

என்ன அற்புதமான கருத்து! உலகியல் வாழ்வில் அன்றும் இது உண்மை! இன்றும் இது உண்மை! என்றும் பொருந்துவதைச் சொல்வதனால் தான் கவி என்று அழைக்கிறோம் என்பதைப் புரிய வைக்கும் அற்புதப் பாடல் இது!

 

****************

  

என் சரித்திரம் – 3

பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 16

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 3

ச.நாகராஜன்

 

தமிழர்களின் பெரும் புகழ் கூறும் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த பின்னர் புறநானூறு நூலைத் திருத்தமுறப் பதிப்பிக்கும் முயற்சியில் ஐயர் அவர்கள் ஈடுபட்டார். அதைத் திருத்தமுறை முடித்த அவர் இப்படிப் பெருமிதப்பட்டார்:-

 

“புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’
என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன்.புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர்.”

 

புற நானூறைப் பார்த்து மிகவும் மகிழ்ந்த பாண்டித்துரை தேவர் ஐயரை வெகுவாகப் பாராட்டி அடுத்த நூலுக்கென ஐநூறு ரூபாய் வழங்கினார்.

அடுத்து மணிமேகலை ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக இறங்கினார். புத்த சமயம் பற்றிய கருத்துக்களையும் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் நன்கு ஓர்ந்து பயின்றார். மணிமேகலையில் வரும் நல்ல கருத்துக்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

 

அவரே கூறி வியக்கும் சில பகுதிகளைக் காண்போம்:-

“பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம்,
துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும்
நான்கையும்,

பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்ன
தற்றோ ருறுவ தறிக

என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்த பிரானைப் புகழும்
பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.

(புத்தரைத்) ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன்,  தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

அன்ன தானத்தைச் சிறப்பிக்கும்,

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோருயிர்  கொடுத்தோரே

என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன.”

பல்வேறு அறிஞர்களை நாடி தகுந்த விளக்கங்களை எல்லாம் பெற்று மணிமேகலை நூல் வெளியிடப்பட்டவுடன் தமிழ் உலகம் வியந்தது,

1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது

கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை  ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து  கூடினர்.

அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார். எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான் யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.”

 

இப்படி உத்தம சம்பாவனையை திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தார் ஐயர் அவர்கள்.

வாழ் நாள் முழுவதும் தமிழ்ப் பணியே தன் பணி என்ற சீரிய கொள்கையை மேற்கொண்டு அதற்காகவே வாழ்ந்தார் அவர்.

அவரது வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் உழைப்புக்கும் தியாகத்திற்கும் தகுந்த மதிப்பை அவர் பெறவில்லை என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது.

மஹாகவி பாரதியாரே தம் கவிதையில் இதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்,

மஹாமஹோபாத்தியாய என்ற விருதை பிரிட்டிஷ் அரசு வழங்கி கௌரவித்ததை ஒட்டி பிரஸிடென்ஸி காலேஜ் மாணவர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து அதற்கு மஹாகவி பாரதியாரையும் அழைத்தனர். விழாவிற்கு வந்த பாரதியார் ஐயர் அவர்க்ளைப் போற்றிப் பாடிய பாடலில்,

 

நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி

இன்பவகை நித்தம் துய்க்கும்

கதியறியோம் என்று மனம் வருந்தற்க

குடந்தை நகர்க் கலைஞர் கோவே!

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயிற்

துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

 

 

என்று அற்புதமாகக் குறிப்பிட்டு அவர் நிதியின்றியும் உலகத்தின் கோடி இன்பம் துய்த்தலின்றியும் வாழ்ந்ததை வருத்தத்துடன் நினைவு கூர்கிறார். அதனால் என்ன, பொதியமலை பிறந்த தமிழ் உள்ளளவும் அதைப் பாடும் புலவர் உள்ளளவும் அவர் நா உன் துதி செய்யும் என்று அற்புதமாக வாழ்த்துகிறார்.

 

 

அன்னியரே மஹாமஹோபாத்தியாய பட்டம் தருகின்றனர் எனில் முன்னால் இருந்த “அப்பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியாலாமோ” என்று வியக்கிறார்.

 

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் சரித்திரம் மகத்தானது. தமிழர்களுக்கு உத்வேகம் ஊட்டுவது.அனைவரும் படிக்க வேண்டியது!

அன்னாரை நெஞ்சின் ஆழத்திலிருந்து துதி செய்து போற்றுவோம்; அவர் புகழ் பரப்புவோம்!

 

அற்புதமான ‘என் சரித்திரம்’ நூலை முழுவதுமாக (122 அத்தியாயங்கள் சுமார் 772 பக்கங்கள் அடங்கியது)  ஒரு முறையேனும் தமிழர் என நாமம் கொண்டோர் படிக்க வேண்டும். இணையதளத்தில் அதைக் கட்டணமின்றிப் படிக்கலாம்; இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; பிறருக்கும் அனுப்பலாம்.

அதற்கான இணையதளத் தொடர்பு இதோ:-

http://www.tamilvu.org/library/lA471/html/lA471ind.htm

**********************

அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்

 

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்: உங்களுக்கு விடை தெரியுமா?

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை முந்தைய எட்டு கட்டுரைகளில் கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

  1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.

 

  1. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

 

  1. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?

மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் சொல்லுங்கள். என்னுடைய ஊகங்களை முதலில் கூறிவிடுகிறேன். திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

 

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

சரஸ்வதி நதி மர்மம்

சரஸ்வதி நதிக்கரையில்தான் உலகின் மிகப் பழைய மதப் புத்தகமான ரிக்வேதம் உருவானது. அந்த நதி மறைந்து விட்டதால் பிரயாகை என்றும் த்ரிவேணி சங்கம் என்றும் அழைக்கப்படும் இடத்தில் கங்கையும் யமுனையும் இன்று கண்ணுக்குத் தெரிகின்றன. த்ரிவேணியில், மூன்றாவதான சரஸ்வதி பாதாளம் வழியாக கலப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். இப்போது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா எடுத்த புகைப்படங்களில் மறைந்து போன வழித்தடங்கள் தெரிகின்றன. ஆனால் இப்போது சரஸ்வதி நதியும் இல்லை, வயிரவி வனம் எங்கே இருக்கிறது என்றும் தெரியவில்லை. அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக உள்ளொளி பெற்றவர்களுக்கு வயிரவி வனம் என்ன, கைலாசம் க்குடத் தெரியும். ஆனால் நம்மை போன்றவர்களுக்கு வயிரவி வனத்தைக் கண்டுபிடிக்காத வரை தூக்கம் வராது. இண்டியானா ஜோன்ஸ் வேலை செய்து நாமும் முயற்சி செய்து பார்ப்போமே.

இதோ சரஸ்வதி நதி பாடும் திருப்புகழ்:

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்

வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி

வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு

வயிரவி வனத்தில் மேவு பெருமாளே

 

மாங்கனியா? மாதுளங்கனியா?

திருவிளையாடல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு முருகன் – பிள்ளையார் இடையே நடந்த போட்டி தெரியும். கலகம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்ட நாரத மாமுனிவன் ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து அதை வெட்டாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். உலகம் சுற்றும் வாலிபனுக்கே அந்தப் பழம் என்று போட்டி வைக்க, முருகன் மயில் மீது பறந்து சென்றார். கெட்டிக் கார பிள்ளையார் அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவந்து உலகத்தையே சுற்றிவிட்டதாகச் சொல்லி பழத்தை வென்றார்., முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறினார். ஆனால் அது மாம்பழக் கதை. அருணகிரிநாதர் சொல்வதோ மாதுளம்பழம். இது புதுக் கதையா? பழைய கதையில் செய்யப்பட்ட ஒரு சிறிய மாற்றமா?

இதோ மாதுளங் கனி திருப்புகழ்:

உவகாரியன்பர்பணி கலியாணி எந்தை இடம்

முறைநாய கங்கவுரி             சிவகாமி

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை

ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா

 

ஏனைய எட்டு திருப்புகழ் கட்டுரைகளையும் படித்து இன்புறுக.

லண்டன் சுவாமிநாதனைத் தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com

இசைத் தமிழ் அதிசயங்கள்

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

 

3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

 

4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

 

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

 

7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

 

8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்

திகுட திகுதிகு தீதக தொந்தத்

தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

 

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

 

10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

 

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 

11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!

Contact London Swaminathan at swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

Please read other 425 English and Tamil posts already uploaded by me.

Amazing Andal: Where did she see the Lion?

Andal  is one of the famous women poets of Tamil Nadu. She lived around 8th century. Though she is known as a devotional poet, her knowledge in several subjects is amazing. She has sung about various subjects from Astronomy to Zoology. In her A to Z dealings, I am going to touch A for Astronomy and Z for Zoo in this article. Ancient Tamil women were well educated. We have scores of female poets (poetesses) in Sangam Tamil literature. We had more than one Avvaiyar in Tamil literature. Among the devotional poetesses Karaikal Ammaiyar of fifth century and Andal of 8th century AD are more popular.

Andals’s 30 verses known as Tiruppavai and  another 143 verses known as Nachiyar Tirumozi are household names in Tamil Vaishnavite families. Her wedding song Varanam Ayiram (part of Nachiyar Tirumozi) is sung in all the Vaishnavite Brahmin weddings. She is the only one female in the twelve famous Vaishnavite Saints known as Alvars.

Two of the 30 Tiruppavai verses are known for her knowledge in Animal Behaviour and Astronomy. One may wonder whether she encountered a lion in a forest or a zoo when one reads her description of a lion. Unless she had keen observation power or a personal visit to a zoo in Madurai near her native place Srivilliputur she would not have described the lion in the following manner:

“ As a fierce lion, which throughout the rains

Within his mountain lair has lain asleep

And awakes, and flashes fire from the eye

And angrily with bristling mane he moves

All of his body, and shakes himself and stands

Upright and roars, and lordly issues forth:

So who flowerlike art, come graciously

Forth from thy shrine; in grace upon by throne

Of cunning craftsmanship, search out the cause

That brings us here. Ah, Elorembavoy  (23)

(From Hymns of the Alwars by J S M Hooper)

Andal and Astronomy

Andal must be an amateur astronomer. Though she was a teenage girl she knew ornithology, zoology, astronomy etc. She mentioned a particular bird called Anaichathan (Asian Drongo Cuckoo or Valiyan Kuruvi) . Her keen observation of Venus rising and Jupiter setting in the early morning sky 1200 years ago helped us to confirm her period. We know approximately her period because of her father Periyalvar and the Pandya king of his times. Andal’s precise date was determined by her astronomical reference in the following verse:

Singing the glory of him

Who split the bird’s bill and killed

And Him who plucked the wicked demon as a weed

Girlies all reached the site of deity

Venus ascended and Jupiter had slept sunk;

Birds too clanged behold, belle gild:

The eye is a la flower or deer flirting?

Yet asleep in bed

Enjoin to dip and shiver in bath of cold;

Shed off thy stealth untold

This day is auspicious, consider our damsel.

 

In the very first verse of Tirupavai, she says that it was Full moon day in the month of Markazi.( Markazi thingal mathi niraintha nannaalal in Tamil) and then she says Venus ascended and Jupiter went down. This happened on 18th December 731 AD according to scholars Raghava Iyengar and KG Shankar. Thanks to Andal we were able to pinpoint the date.

I am giving both the verses in Tamil for the benefit of Tamil readers:

 

Animal behaviour:

மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய

சீரிய சிங்காசனத்திருந்து, யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 23)

 

Astronomy:

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்ந்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 13)

Contact swami_48@yahoo.com

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

Photos from Face Book; Thanks.

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -8

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

திருப்புகழ் என்பது இறைவனின் புகழ் பாடும் துதிப் பாடல்கள்தான். ஆயினும் அதில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பல இடங்களில் அருணகிரிநாதர் சொற் சிலம்பம் ஆடுகிறார். முருகனை மறந்து விட்டு தமிழின் அழகை ரசிக்கத் துவங்கிவிடுகிறோம். ஏனெனில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் துவங்கி பாரதி வரை வந்த அடியார்கள் அனைவரும் தமிழையும் தெய்வத்தையும் ஒன்றாகவே கண்டார்கள். இதோ சில எடுத்துக் காட்டுகள்:

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

மதித்த முத்தமிழில் பெரியோனே

என்ற வரியிலிருந்து இது தெளிவாகிறது.

 

காமாரி, தீயாடி, ஆசாரி

விராலிமலை பாடலில் காமாரி, தீயாடி, ஆசாரி என்று சிவ பெருமானைப் பாடுகிறார். ஏதோ திட்டுவது போல இருக்கும்.

கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி

கயிலையாளி காபாலி            கழியோனி

கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி

கணமொடாடி காயோகி           சிவயோகி

என்று பாடுகிறார். இதன் பொருள்: யானைத் தோலை உரித்து அணிந்தவர், காமனையும் திரிபுரங்களையும் எரித்தவர், சுடலையில் ஆடுபவர், கயிலை மலையை ஆளுபவர், கபாலத்தைக் கையில் ஏந்தியவர், மூங்கில் கழியின் கீழ் பிறந்தவர்,  கையில் தீயை ஏந்தி ஆடும் ஆசார்யர் (குரு), பரசு எனும் ஆயுதத்தை உடையவர், நள்ளிரவில் ஆடுபவர், பூத கணங்களுடன் ஆடுபவர், காப்பாற்றும் யோகி, சிவயோகி என்று சிவ பெருமானைப் புகழ்கிறார்.

சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா

திருக்கழுக்குன்ற திருப்புகழில் தனா தனா, பளீர் பளீர், கலீர் கலீர், குகூ குகூ, சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா, எழா எழா, குகா குகா, செவேல் செவேல் என்று ஓசை நயத்துடனும் பொருள் நயத்துடனும் பாடி இருக்கிறார். இதோ சில வரிகள் மட்டும்:

ஓலமிட்ட சுரும்பு தனாதனாவென

வேசிரத்தில் விழுங்கை பளீர் பளீரென

வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென             விரக லீலை

ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூவென…………..

 

பழமுதிர்ச் சோலையில் பாடிய சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என

என்ற பாடலும் இதே பாணியில் அமைந்துள்ளது. ஓசை நயத்துடன் அத் திருப்புகழைப் பாடுகையில் நம்மை அறியாமலே உற்சாஅகம் கொப்பளிக்கும்.

 

தகப்பன் சாமி, நடிக்கும் சாமி, ஒழிக்கும் சாமி, பொறுக்கும் சாமி

சிவ பெருமானுக்கே ஓம்காரப் பொருளை உரைத்தவன் ஆதலால் முருகனை தகப்பன் சுவாமி என்பர். ஆனால் அருணகிரி சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு எப்படிச் சிலம்பம் ஆடுகிறார் என்று பாருங்கள்:

புவிக்குன் பாத—— என்று துவங்கும் பாடலில் சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு சாமி ஆடி விடுகிறார்!!

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்குஞ் சாமி எமதுளம்

சிறக்குஞ் சாமி சொருப மீது ஒளி காணச்

செழிக்குஞ் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவமதை

தெறிக்குஞ் சாமி முனிவர்களிடம் மேவும்

தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடிநிலை

தறிக்கும் சாமி அசுரர்கள் பொடியாகச்

சதைக்கும் சாமி எமை பணிவிதிக்கும் சாமி சரவண

தகப்பன் சாமி எனவரு பெருமாளே

சாமியையே கிண்டல் செய்வது போல சொற் பிரயோகம் இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் ஆழந்த பொருள் உடையது.

எண் ஜாலம்

எண்களை வைத்துக் கொண்டு ஜால வித்தை காட்டும் திருப்புகழ் இதோ:

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முனிவோர்கள்

துகளில் இருடி எழுபேர்கள்             சுடர் மூவர்

சொலவில் முடிவில்  முகியாத பகுதி புருடர் நவநாதர்

தொலைவிலுடு வினுலகோர்கள் மறையோர்கள்;

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சத கோடி

அரியும் அயனும் ஒருகோடி            இவர்கூடி

அறிய  அறிய அறியாத அடிகளறிய  அடியேனும்

அறிவு ளறியு மறிவூர அருள்வாயே

 

2,4,7,3,9 என்று சொல்லிவிட்டு கோடி, சத கோடி என்று அடுக்கியதோடு அறிய என்ற சொலை வைத்தும் சிலம்பம் ஆடுகிறார்! விஷ்ணுவும் பிரம்மனும் அறிய முயன்றும் அறியாத உன்னை எனது அறிவுக்குள் அறியும் அளவுக்கு அறிவு ஊர அருளவேண்டும் என்பது இதன் பொருள்.

 

அணிகலம் எது?

ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை

மாலுக்கு அணிகலம் தண் அம் துழாய், மயில் ஏறும் ஐயன்

காலுக்கு அணிகலம்  வானோர் முடியும் கடம்பும் கையில்

வேலுக்கு அணிகலம்  வேலையும் சூரனும், மேருவுமே

பொருள்: ஆலமர்ச் செல்வன் சிவனுக்கு அணி மண்டைஓட்டு மாலை, திருமாலுக்கு அணி துளசி மாலை, மயில் ஏறும் முருகன் காலுக்கு, தேவர்களின் முடியும் கடம்பும் அணிகலம். கையில் உள்ள வேலுக்கு அணி அதன் மூலம் துணிக்கப்பட்ட சூரனும் மலையும் கடலும் ஆகும்.

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி…….

பாரதி பாடிய பாடலில் காணி நிலம், மாளிகை, கிணறு, 10, 12 தென்னை மரங்கள் நிலவொளி, குயில் ஓசை ஆகியவற்றைக் கேட்டுவிட்டு அமைதியை வேண்டுகிறார். அதற்கு முன்னரே அதே பாணியில் அருணகிரி பாடிவிட்டார். பாரதியே இதைப் படித்துதான் காணி நிலம் வேண்டும் பாட்டை எழுதினாரோ !

உடுக்கத் துகில் வேணும் நீள் பசி

அவிக்கக் கன பானம் வேணும் நல்

ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்

இருக்கச் சிறு நாரி வேணும் ஓர் படுக்கத்

தனி வீடு வேணும்……………… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

(நாரி=மனைவி)

 

உருகவில்லை, அறியவில்லை, விழையவில்லை

தீர்த்தமலையில் பாடிய பாடலில் என்ன என்ன செய்யவில்லை என்பதைப் பட்டியல் போடுகிறார்:

பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,

கூற்று வழி பார்த்தும் உருகிலை

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை       தினமானம்

பாப்பணியருள் வீட்டை விழைகிலை

நாக்கின் நுனி கொண்டு ஏத்த அறிகிலை என்று பாடுகிறார்.

 

முந்தைய ஏழு திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கண்டு களிக்க.

swami_48@yahoo.com