தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

Inmates in Mumbai Prison

தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

சமூக சேவை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. தாதியர்/ நர்ஸ்கள் என்றால் உடனே ப்ளரன்ஸ் நைட்டிங்கேலை நினைக்கிறோம். குற்றம் புரிந்தோரை நல்ல மனிதர் ஆக்கியவர் என்றால் மணிமேகலையை நினைக்க வேண்டும். யார் அந்தப்பெண்மணீ?

சிறைச் சாலையில் சமூக சேவை செய்து கைதிகளைத் திருத்தி நற்குடி மக்களாக மாற்றும் புரட்சிகர கருத்தை முன்வைத்தவர் மணிமேகலை என்றால் மிகையாகா. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்த மதக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டது மணிமேகலை. ‘’நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார’’த்துடன் இரட்டைக் காப்பியங்களகத் தொன்றியது இந்நூல். சீழ்தலைச் சாத்தனாரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த மணிமேகலையின் காவியத்தலைவி–,கதாநாயகி மணிமேகலை என்னும் இளம் பெண் ஆவார்.

மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணி, ஒரு கட்டத்தில் சிறைச் சாளைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும்  நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.

சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!

பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிகின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புத கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.

பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹாபாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தலகளும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார் என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.

இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? அவனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!

ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனிததலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.

எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!

Prisoners in Amritsar Women’s Prison

சிறுகுடிக் கிழான் பண்ணன்

பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் நிலம் தானம் கொடுத்த ஆயிரக் கணக்கான கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் உள்ளன. புலவர்களுக்கு பொற்காசுகளையும் உணவையும் கொடுத்த சங்க கால மன்னர்களையும் வள்ளல்களையும் நாம் அறிவோம். இவை சமூக சேவை ஆகா. பலனை எதிர்பார்த்தோ, துதி பாடலை எதிர்பார்த்தோ செய்யப்பட்ட உதவி இவை. ஆயினும் ஜாதி மதம் இனம் , குலம் கோத்திரம் என்று பாராது உணவு படைதோரும் உண்டு. சோழமன்னன் கிள்ளிவளவனும் போற்றிய ஒரு வள்ளல் சிறுகுடிக் கிழான் பண்ணன். புறநானூறு 173ஆம் செய்யுளில் எறும்பு முட்டை கொண்டு சாரை சாரையாக செல்லுவது போல பண்ணன் வீட்டை நோக்கிமக்கள் செல்லுவதைப் படித்து இன்புறலாம்.

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் சாலைச் சேவைகளும் தனி ரகம். பாரதத்தின் வழி தனி வழி. எல்லோருக்கும் முன் உதாரணமாகத் திகழும் தனி வழி!

Contact swami_48@yahoo.com

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

 

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

என் பெயர் புலவர் நக்கீரன். “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை’’ என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற மூன்று வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”, ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும். வெளி நாட்டுக்காரர்களும் அரசியல்வாதிகளும் ‘’ஆரிய, திராவிட’’ என்ற சொற்களால் மக்கள் எல்லோரையும் குழப்பி வைத்துவிட்டனர். நீங்கள் எல்லோரும் இது பற்றிக் கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும்.

 

*முதலில் நான் பேசுகிறேன். என் பெயர் பரஞ்சோதி முனிவர். என்னுடைய திருவிளையாடல் புராணம் தமிழர்களுக்கு நன்கு தெரியும். நான் அப்போதே சொல்லிவிட்டேன் தமிழும் வடமொழியும் சிவ பெருமான் கொடுத்த கொடை என்று:

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்

தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

திருவிளையாடல் புராணம்

‘’கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ’’

 

என்றும் பாடிவிட்டேன்

 

*என் பெயர் மாணிக்க வாசகன், என் திருவாசகத்தில்

‘தென் நாட்டுடைய சிவனே போற்றி’ என்றும்

‘பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே’ – என்றும் பாடியுள்ளேன்.

 

*என் பெயர் சிவஞானசுவாமிகள். நான் காஞ்சிப் புராணத்தில்

‘’இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப

இரு மொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பு

மிருமொழியுமான்றவரே தழீஇயனாரென்றாலிவ்

விருமொழியு நிகரென்னு மிதற்கையமுளதேயோ’’ என்று சொல்லிவிட்டேன்

 

என் பெயர் அப்பர். வாகீசர் என்றும் திருநாவுக்கரசு என்றும் என்னை அழைப்பர். நானும் தேவாரத்தில்…….

ஆரியந்தமிழோடு  இசையானவன் (6-132-3)

வானவர் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்

வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் (6-8-60)

கோல மா நீலமிடற்றான் தன்னை

செந்தமிழோடு ஆரியனை சீரீயானை (6-46-7)

இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறயெம் அண்ணல் கண்டாய் (திருமறைக்காடு)

 

என்று எல்லாம் பாடி தமிழும் சம்ஸ்கிருதமும் தேவ பாஷை என்று உணர்த்திவிட்டேன். ஆரிய என்ற சொல்லை நான் சிவனுக்குப் பயன்படுத்திய பின்னரும் என்ன சந்தேகம்?

*என் பெயர் சம்பந்தன். சிறு வயதுப் பாலகன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் அப்பரின் ‘’டியர் ப்ரண்ட்’’. நான் கொஞ்சம் கடுமையான சொற்களைப் பிரயோகித்து இருக்கிறேன்:

மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அலேன்”

தமிழ், வடமொழி நூல்கள் கூறும் கருத்துக்களை அறியாதோரை குரங்கு, குருடன் என்று சொல்லிவிட்டேன். இன்னுமா புரியாது?

 

*என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தைப் பட்டிமன்றங்களில் அலசுவதை நக்கீரன் அறிந்திருப்பீர்கள். நானும்

பல இடங்களில் ‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’ (அகத்தியன்) என்றும், ‘’தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்’’ என்றும்  ‘’என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’ என்றும் பாடிவிட்டேன் தமிழ், மொழி, அகத்தியன், சிவன் ஆகியோருக்குமுள்ள தொடர்பை தெளிவு படுத்திவிட்டேன்.

 

*என் பெயர் திருமூலர். நானும் எவ்வளவோ இது பற்றிப் பாடிவிட்டேன்

அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே! (திருமந்திரம்)

 

*என் பெயர் ஈசானதேசிகர். நான் இலக்கணக் கொத்துரையில்

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்

இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

 

என்று அப்போதே சொல்லிவிட்டேன். நான் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்று சொன்னபோது என்னை ஓரம்கட்டிவிட்டார்கள்.

 

என் பெயர் சுப்பிரமணிய தேசிகர். நானும் 70 முதல் 80 சதம் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று காட்டிவிட்டேன். என்னுடைய பிரயோக விவேகம் நூலைப் படிக்காமலேயே திட்டுகிறார்கள்.

 

என் பெயர் சுந்தரம் பிள்ளை. தமிழில் நாடகமே இல்லை என்ற குறையைப் போக்க  ஒரு ஆங்கில நாடகத்தைத் தழுவி மனோன்மணீயம் என்ற நாடகத்தை எழுதினேன். நான் சம்ஸ்கிருதத்தைக் குறைகூறி எழுதியதை தமிழ்நாடு அரசே நீக்கிவிட்டது. சிதைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்தை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்: ‘’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’ என்ற வரிகளை நீக்கி என் பாட்டையே சிதைத்துவிட்டார்கள். எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் திராவிட (தமிழ் நாடு) அரசே இப்படிச் செய்திருக்கிறது. போகட்டும்.

 

எல்லோருக்கும் நன்றி. அடுத்த வாரத் தலைப்பு : ‘’கா, கா, கா! கா, கா, கா!!’’ சங்கப் புலவர் பாடல்கள் முதல் பராசக்தி திரைப் பாடல் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது நக்கீரன்..

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி

போர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் கூறியபோதும் இந்தியாவில் துவங்கியது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டிய கலைகள் 64 (ஆய கலைகள் 64) என்று பட்டியலிட்டு அதில் இதையும் ஒன்றாகச் சேர்த்திருக்கின்றனர். இது 2400 ஆண்டுகளுக்கு முன்பு ! பெண்கள் படிப்பதையே பழங்கால உலகு ஆதரிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் வேதகாலப் புலவர்களில் குறைந்தது 20 பேரும் சங்க காலப் புலவர்களில் குறைந்தது 20 பேரும் பெண் புலவர்கள்.

 

இது மட்டுமல்ல.

வேத கால ரிஷிகள் தங்களுக்கு ரகசிய மொழிகளில் பாடுவதுதான் பிடிக்கும் என்று ஆடிப் பாடி கூத்தாடி இருக்கிறார்கள். ஆக அவர்கள் 3500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ரகசிய மொழி பற்றிப் பேசி இருக்கிறார்கள். ஆனால் இன்றைய வேதங்களில் என்ன ரகசிய மொழியில் அவர்கள் என்ன ரகசியம் கூறி இருக்கிறார்கள் என்று தெளிவாகக் காட்டமுடியவீல்லை.

மஹாபாரதம் எழுதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. விநாயகப் பெருமான் தான் இக்காரியத்தைச்  செய்யவல்லவர் என்று அறிந்த வியாச மா முனிவர் அவரை வேண்டிக் கொள்ளவே பிள்ளையார் ஒரு நிபந்தனை போட்டார். நீவீர் நிறுத்தாமல் பாடல்களைச் சொன்னால் நான் எழுதத்தயார் என்று. மஹா பரதமோ உலகிலேயே மிகப் பெரிய நூல். ஒரு லட்சம் ஸ்லோகங்களை உடையது. புத்திசாலி வியாசர் உடனே எதிர் நிபந்த்னை போட்டார். அது சரிதான், நான் நிறுத்தாமல் கவி புனைகிறேன். நீவீர் அர்த்தம் புரியாமல் எதையும் எழுதக் கூடாது என்று. பிள்ளையார் நன்கு மாட்டிக் கொண்டார். வியாசர் பல விடுகதைகள், ரகசிய மொழிகள் அடங்கிய கவிதைகளை வீசவே கணேசர் மெள்ள நடை போட நேரிட்டது என்பது கதை. ஆக அப்போதே விடுகதை, புதிர், ரகசிய மொழிகள் தோன்றியது என்று சொல்லலாம்.

 

ஈதன்றி இந்துக்கள் ஆதிகாலம் முதலே ‘’கடபயாதி முறை’’ என்ற ஒரு சங்கேத மொழியைப் பயன்படுத்தினர். இதன் மூலம் சொற்களையும் எண்களையும் எளிதில் நினைவு வைத்துக் கொண்டனர். ஒவ்வொரு எண்ணுக்கும் பல எழுத்துக்களை ஒதுக்குவது இம்முறையாகும். மேலும் அதை வலம் இடமாகப் படிப்பர். உதாரணமாக மஹாபாரதத்தின் பழைய பெயர் ‘’ஜய’’. இது 18 என்ற எண். மஹா பாரதத்துக்கும் 18க்கும் உள்ள தொடர்பை முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்

இது ஒரு புறம் இருக்க, உண்மையிலேயே வியத்தகு ஒரு உதாரணம் கிடைத்துள்ளது. கி.மு நாலாம் நூற்றாண்டில் தோன்றிய காம சூத்திரம் என்னும் பாலியல் நூலை வாத்ஸ்யாயனர் என்ற பிராமண அறிஞர் கி.பி. நாலாம் நூற்றாண்டில் எழுத்து வடிவில் கொடுத்தார். இதில் உள்ள ஒரு பகுதியை லண்டனில் இருக்கும் அறிஞர் சைமன்சிங் சங்கேத மொழி என்னும் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார். பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டிய ஆய கலைகள் 64ல் நாற்பத்தைந்தாவது கலை ரகசிய மொழியில் எழுதுவதாகும். காதல் விஷயங்களைப் பெண்கள் பகிரங்கமாக எழுத முடியாதே?

வாத்ஸ்யாயனர் கூறிய முறை மாற்று எழுத்து முறையாகும். எடுத்துக் காட்டாக 26 ஆங்கில எழுத்துக்களை கீழ்கண்டவாறு அமைத்தால்

A D H I K M O R S U W Y Z

V X B G J C  Q L  N E  F P  T

MEET AT MIDNIGHT =நள்ளிரவில் என்னைச் சந்தியுங்கள் என்பதற்கு,  CU UZ VZ CGXSGIBZ என்று எழுதுவார்கள். எம் என்பது சி, ஈ என்பது யு என்று வரும்.

2400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் இவ்வளவு அறிவு உடையவர்கள் என்றால் எந்த அளவுக்கு கல்வித் திறன் இருந்திருக்கவேண்டும்? கிருஷ்ணனுக்கு சத்யபாமா எழுதிய காதல் கடிதம், கோவலனுக்கு மாதவி எழுதிய காதல் கடிதங்களை ஏற்கனவே இதே பிளாக்கில் படித்திருப்பீர்கள். கஜுராஹோவில் பெண்கள் காதல் கடிதம் எழுதும் அழகான சிற்பமும் உள்ளது.

 

ராணுவ பயன்களுக்கு ரகசிய சங்கேதக் கடிதம் அனுப்பிய பெருமை ஜூலியஸ் சீசரைச் சேரும். அவர் சிசரோ என்பவருக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பினார்.

Please read my earlier posts

  1. Hindu’s Magic Numbers 18, 108, 1008
  2. Love Letters from Ancient India

3.பார்ப்பனிக்கு வடமொழிச் சீட்டு

காக்க காக்க ரகசியம் காக்க!

11.சம்ஸ்கிருதச் செல்வம்

 

காக்க காக்க ரகசியம் காக்க!

ச.நாகராஜன்  

 

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி.எதைச் சொல்ல வேண்டும் எதை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதை அறிந்து கொள்வதே பேசுவதற்கு முன் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம். இதை நன்கு உணரச் செய்யும் விதத்தில் கவிஞர் பாடுகிறார் இப்படி:-

 

ஆயுர்வித்தம் க்ருஹசித்ரம் ரஹஸ்யம் மந்த்ரபோஷதம் I

தயோ தானாவமானௌ ச நவ கோப்யானி காரயேத் II

 

ஆயுர் – ஒருவனின் வயது (ஆயுள்)

வித்தம் – செல்வம்

க்ருஹசித்ரம் – வீட்டின் (மோசமான) நிலை

ரஹஸ்யம் – ரகசியமாக வைத்திருக்க வேண்டியவை

மந்த்ரம் – தான் ஜெபிக்கும் அல்லது தான் பெற்ற உபதேச மந்திரம்

போஷதம் – தான் உண்ணும் மருந்துகள்

தயா – தவம்

தானம் – ஒருவன் கொடுக்கும் தானம்

அவமானம் – ஒருவன் பெற்ற அவமானம்

ச நவ – இந்த ஒன்பதும்

கோப்யானி காரயேத் – ரகசியமாகக் காக்கப்பட வேண்டும்.

 

இதே போல ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்கக் கூடாது.மனதில் நினைத்ததை எல்லாம் எல்லோரிடமும் வெளியில் சொல்லக் கூடாது.

  (நுணலும் தன் வாயால் கெடும்: நுணல்=தவளை)

மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாஷயேத் I

அன்யலக்ஷித கார்யஸ்ய யத: சித்திர்னம் ஜாயதே II

 

மனஸா சிந்திதம் கார்யம் – மனதில் சிந்தித்திருக்கும் ஒரு காரியத்தை

வசஸா ந ப்ரகாஷயேத்வார்த்தைகளால் வெளியில் சொல்லக் கூடாது

 

ஏனெனில் அந்த லக்ஷியத்தை மற்றவர்கள்  புரிந்து கொண்டு விட்டால் அதில் ஒருவர் வெற்றியடைய முடியாது.

நினைத்ததை எல்லாம் வெளிப்படையாகச் சொன்னால் அதை மற்றவர்கள் தாமே முடிக்கப் பார்ப்பார்கள் அல்லது அதற்குத் தடையை எழுப்புவார்கள்.ஆகவே ஒரு கருமத்தை எண்ணித் துணிய வேண்டும். நினைத்ததை நன்கு திட்டமிட்டு முடிக்க வேண்டும்.

 

*************

ஐங்குறு நூற்றில் வேதக் கருத்துகள்

இரண்டாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க நூல்களில் இந்துமதக் கருத்துக்களை ஆங்காங்கே காணமுடிகிறது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறு நூற்றில் 500 பாடல்கள் உள்ளன. மருதத் துறை பற்றி ஓரம் போகியாரும் நெய்தல் துறை பற்றி அம்மூவனாரும் குறிஞ்சித் துறை பற்றி கபிலரும் பாலைத் துறை பற்றி ஓதல் ஆந்தையாரும் முல்லைத் துறை பற்றி பேயனாரும் பாடியுள்ளனர். இதில் ஓரம்போகியார் பாடிய 100 பாடல்களில் முதல் பத்துப் பாடல்களை வேட்கைப் பத்து என்று கூறுவர். ஒவ்வொரு பாடலிலும் உள்ள வரிகள்  வேதங்களிலும் ஏனைய இந்து மத நூல்களிலும் உள்ள கருத்துக்கள் ஆகும்.

இமயம் முதல் குமரி வரை பாரதப் பண்பாடு ஒன்றே என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழ்ப் பண்பாடு என்பது இமயம் முதல் குமரி வரை பாரதம் முழுதும் நிலவிய ஒரே பண்பாடுதான்.

கீழ்கண்ட வடமொழி வாழ்த்துப் பாடல்களில் வரும் கருத்துகள் அழகிய, குறுகிய தமிழ் சொற்றொடர்களில் மந்திரம் போலவே ஓரம்போகியாரால் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் வடமொழி வாழ்த்துப் பாடல்கள்:

1.ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து

சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

 

2.காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:

பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.

 

3.அபுத்ரா: புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண:

அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்

பொருள்: குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.

 

இதோ ஓரம் போகியாரின் வாழ்த்து:

 

1.நெற்பல பொழிக பொன் பெரிது சிறக்க

ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ

 

2.விளைக வயலே வருக இரவலர்

ப்ருதுவி சஸ்ய சாலினீ

புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்தி ஆத்மகாரணாத் (கீதை 10-13 எவர்கள் தமக்காகவே சமைக்கிறார்களோ அவர்கள் பாவிகள்)

 

3.பால்பல ஊறுக பகடு பல சிறக்க

கோ ப்ராம்மணேப்ய சுபமஸ்து நித்யம்

 

4.பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக

ப்ராஹ்மண சந்து நிர்பயா:

 

5.பசியில்லாகுக பிணிகேன் நீங்குக

அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்

 

ஜன்ம, ம்ருத்யு, ஜரா, வ்யாதி, பயம் நைவோப ஜாயதே

(விஷ்ணு சஹஸ்ர நாமம்)

 

6.வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக

ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

ஜீவந்து சரதாம் சதம் (பஸ்யேம சரதச் சதம் என்று துவங்கும் வேத மந்திரமும் இங்கே ஒப்பிடற்பாலது)

 

7.அறம்நனி சிறக்க அல்லது கெடுக

பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம் (பகவத் கீதை)

 

8.அரசுமுறை செய்க களவில் லாகுக

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்

ந்யாயேன மார்கேன மஹீம் மஹிசா:

 

9.நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக

லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

 

10.மாரிவாய்க்க வளம்நனி சிறக்க

காலே வர்ஷது பர்ஜன்ய:

தேசோயம் க்ஷோப ரஹிதோ

பாடல் 62ல் இவர் இந்திர விழா பற்றியும் குறிப்பிடுகிறார். ஆதன் அவினி என்ற சேர மன்னனை வாழ்த்திய பாடல்களில் இந்தக் கருத்துகள் வருகின்றன. வாழ்த்தும் முறையும் வேத கோஷங்களில் வரும் முறையில் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் மூன்றாம் வரி ஒரே மாதிரியாக இருக்கும் (எனவேட் டோளே யாயே யாமே). ஓரம்போகியார் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் உண்டு.

திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இதே பொருளைப் பாடி இருப்பதும் படித்து இன்புறத்தக்கது:

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

 

தொல்காப்பிய செய்யுள் 109ல் வாழ்த்தப்பட வேண்டிய விஷயங்கள் எவை எவை என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இதற்கு உரையாசிரியர்கள் எழுதிய கருத்துக்கள் பாரதம் முழுதும் நிலவிய கருத்துகளே. எல்லா கல்வெட்டுகளும் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் துவங்கும். பல கல்வெட்டுகளில் இதை ஸ்வஸ்திகா அடையாளம் மூலமும் குறிப்பிட்டனர்.

வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற அருமையானதொரு நூலை திரு.கே.சி. லட்சுமிநாராயணன் எழுதி இருக்கிறார். அதில் நான் மேலெ ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் இல்லை. பார்ப்பார் ஓதுக என்ற ஒரு வரியை மட்டும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டுய நூல் அது.

Read related Previous Posts

புறநானூற்றில் பகவத் கீத—பகுதி 1, பகுதி 2

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

Picture of Jesus riding into Jerusalem on a donkey

 

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

‘’எல்லா மிருகங்களும் சமம்; ஆனால் சில மிருகங்கள் மற்ற மிருகங்களை விட கூடுதல் சமம்’’ (‘’All animals are equal, but some animals are more equal than others—George Orwell’s Animal Farm) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. எல்லா மிருகங்களும் சமம்தான். ஆனால் சிங்கத்துக்கு ஏன் ராஜா பதவி? கழுதைக்கு ஏன் இந்த இழி நிலை? பழமொழிகளிலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி, சங்க இலக்கியத்திலும் சரி—கழுதை என்றால் கொஞ்சம் இளக்காரம் தான். ஆனால் வெளிநாடுகளில் கழுதைக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இவ்வளவுக்கும் இது ஒரு ‘வெஜிடேரியன்’.

 

உலகப் பேரழகி கிளியோபாட்ரா, தனது அழகைப் பராமரிக்க கழுதைப் பாலில் குடித்ததாகப் படிக்கிறோம். ஏசு கிறிஸ்து ஜெரூசேலம் நகருக்குள் கழுதை மீது வெற்றிகரமாக ஊர்வலமாக வரும் படத்தைப் பார்த்துள்ளோம். மத்தேயு சுவிசேஷத்தில் படித்டுள்ளோம். ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறான நிலை.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

கழுதை கெட்டால் குட்டிச் சுவரு

இப்படிப் பல பழமொழிகள். எல்லாம் ‘கழுதை எதிர்ப்புப் பழமொழிகள்’தான். இது இன்று நேற்று துவங்கியது அல்ல. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி ‘கழுதை எதிர்ப்பு உணர்வு’ இருப்பதை சம்ஸ்கிருத, தமிழ் காவியங்களும், கல்வெட்டுகளும் காட்டுகின்றன. சில சுவையான எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்.

 

சங்க இலக்கியத்தில் கழுதை

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

பாழ் செய்தனை, அவர் நனதலை நல் எயில்;

(புறம் பாடல் 15, நெட்டிமையார்)

முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:

அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ!  (புறம் 392, அவ்வையார் )

 

இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!

இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும்  வெள்ளை வரகு, கொள்ளு பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.

எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை!

Shitala Devi on donkey

ஹத்திகும்பா கல்வெட்டு

கலிங்க நாட்டு மன்னன் காரவேலன் சமண மததைப் பின்பற்றிய ஒரு மாமன்னன். அவனுடைய ஹத்திகும்பா கல்வெட்டு அரிய தகவல்களை அளிக்கிறது. 2200 ஆண்டுகளுக்கு முன் மூன்று தமிழரசர்களும் வடக்கத்திய படைஎடுப்பைத் தடுக்க வைத்திருந்த கூட்டணியை முறிஅடித்ததாகப் பெருமை பேசுகிறான். அப்போதைய தமிழ்நாட்டின் அரசியல் நிலையை இவன் கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது. காரவேலன் சத்தியம் தவறாத நீதிக்கும் நேர்மைக்கும் பெயர்போன ஒரு தலைவன். சுநீதிமான் என்று நூல்கள் போற்றிய மன்னன்.. ஆன்றோராலும் சான்றோராலும் போற்றப்பட்ட பெருந்தகை. அவனுடைய ஹத்திகும்பா கல்வெட்டும் பாடலிபுத்ரம், ராஜகிரி, தமிழர்களின் துறைமுக நகரம் ஆகியவற்றை கழுதையில் ஏர்பூட்டி உழுததைக் கூறுகிறது. பாண்டிய நாடு வரை அவன் ஆட்சி பரவியதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. குதிரைகள், யானைகள், ரத்தினக் கற்களை பாண்டிய மன்னன் அனுப்பினான்.

 

கரும் புள்ளி செம்புள்ளியுடன் ஊர்வலம்

பழைய காலத்தில் குற்றவாளிகளையும், பெண்களுக்கு எதிராக தவறிழைத்தோரையும் கழுதை மீது உட்கார வைத்து, அவன் முகத்தில் கருப்பு, வெள்ளை வர்ணங்களால் புள்ளிகளை வைத்து நகர் வழியாகக் கூட்டிச் செல்வர். இப்போதும் வட இந்தியாவில் இது நடக்கிறது. கழுதைகளை பாரம் சுமக்கப் பயன்படுத்தியதும் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. அக நானூறு (89) இது பற்றிப் பாடுகிறது பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுபடையிலும் கழுதையின் ‘’புகழ்’’ உள்ளது. மிளகு பொதி சுமக்கும் கழுதை பற்றியும் கழுதை பூட்டிய ஏர் (ப.பத்து 25) உழுதல் பற்றியும் பாடுகின்றனர்.

Napolean was exiled to Elba; a cartoon makes fun of his exile.

 

கல்வெட்டுச் சாபங்களில் கழுதை

பல கல்வெட்டுகளில் கழுதைச் சாபமும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் சொன்ன விஷயங்களை மீறினாலோ, பின்பற்றாவிடிலோ அவர்கள் கழுதைகளைப் புணர்ந்த பாபத்தை அடைவார்கள் என்றும் கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன.

 

வேத காலத்தில் கழுதை

வேத காலத்தில் கழுதைக்கு மதிப்பு இருந்ததாகத் தோன்றுகிறது. அதர்வ வேதமும் (9-6-4), ஐதரேய பிராமணமும் (4-9-1) முறையே இந்திரனும் அக்னியும் கழுதை வாகனத்தில் சென்றதகக் கூறும். கிரேக்க நாட்டில் ஒலிம்பிய தெய்வமன ஹெபைஸ்டோஸ், டயோனிசிஸ் இந்திய கிராம தேவதையான சீதளா தேவி ஆகியோருக்கும் கழுதையே வாகனம்.

 

இனிமேலாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கூப்பிடும்போது ‘’அடச் சீ, கழுதை, இங்கே வா, புத்தகத்தை எடுத்துப் படி ’’ என்று சொல்லாமல் இருப்பார்களாக!!

swami_48@yahoo.com

Tamil Miracle Cure for Flu

 

Picture of Saivite saints and Sambandhar is standing first.

Tamil Miracle Cure for Flu

Flu epidemic has killed 37 children in the U.S. says a latest news story. This infectious disease reaches epidemic proportions in winter.  Elderly people, Children and pregnant women are more vulnerable and are advised to take Flu jab well in advance. It is caused by a virus. Getting flu vaccine every year is still the best way to protect against influenza (flu). It reduces the risk of illness and complications .This is what we read in news papers and medical journals. 1300 years  ago, Tamil Nadu was also in the grip of a flu epidemic. But they had a miraculous cure according to Tamil Hymns Thevaram and Paeriyapuranam.

A boy wonder known as Thiru Gnana Sambandhar did a lot of miracles in Tamil Nadu in the eighth century. A few of them were medical miracles curing diseases with Tamil hymns.

 

Anti Flu Hymn

The boy genius was touring Tamil Nadu visiting different temples. He came to Kongunadu region to worship Shiva at Tiruchengodu temple. That was during severe winter months. The flu that was prevalent spread to all the devotees who accompanied the young poet. Devotees who were very familiar with many miracles of the saintly boy were looking for some miraculous cure. In those days there was no flu jab. Feeling the pulse of his followers he sang a decad (ten verses) beginning with ‘’Avvinaik kivvinai’’ in Tamil. Immediately all were cured of Flu. It was reported in later day books that all the people of the town were also cured of the illness. Even today devotees, who visit temples in the early morning after a shower, wear holy ash by reciting this verse. They are in good health. It is a miracle cure.

Picture: Flu attack in US Schools.

Epileptic Attack

Sambandhar did another miracle with a girl who was suffering from epileptic attacks (Muyalakan in Tamil). When he visited Mazanadu, the daughter of the chieftain Kolli Mazavan was having fits. One day she fainted and Kolli Mazavan took his daughter to Tiruppachchilasrama temple. Sambandhar happened to be there at that time. He asked about her condition and Kolli Mazavan told him that all the medicine men have washed their hands off  this young woman. He sang a decad beginning with ‘’Thuniva Thingal…..’’. Immediately the woman stood up and went near her dad. He was extremely happy. She was completely cured of her illness.

Tamil literature has numerous incidents of deaths due to snake bites. There were several cases where the ‘dead’ were revived by Godly men or miraculous cure. Native medicine men suck the poisoned blood with cocks and hens. Though the animals die at the end, humans survived. Saivite saints applied holy ash and revived many of them. Sambandhar revived one business man at Tirumarugal by singing a hymn.

contact: swami_48@yahoo.com

Tamil references for Tamil readers:

திருச்செங்கோடு பதிகம் (Anti Flu Hymn)

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

 

திருப்பாச்சில் பதிகம்

துணிவார் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப்

பனிவளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆரிடமும் பலிதேர்வர்

அணிவளர் கோலமெல் லாஞ்செய்து பாச்சில் ஆசிரமத்துறைகின்ற

மணிவார் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே.

 

திருமருகல் விஷம் தீர்த்த பதிகம்

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

விடையாய் எனுமால் வெருவா விழுமால்

மடையாய் குவளை மலரும் மருகல்

உடையாய் தருமோ இவளுண் மெலிவே

மாண்டவர் மீண்டுவந்த 3 அதிசய நிகழ்ச்சிகள்

Ramayana

மாண்டவர் மீண்டுவந்த 3 அதிசய நிகழ்ச்சிகள்

உலகப் புகழ் பெற்ற இதிஹாசங்களான ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும், நெஞ்சை அள்ளும் தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் மூன்று அற்புத நிகழ்ச்சிகள் உள்ளன. வால்மீகி, வியாசர், இளங்கோ ஆகிய மூவரும் பொய் சொல்லவோ, மிகைப் படுத்திக் கூறவோ இல்லை. இந்த நிகழ்ச்சிகள் வரும் இடங்களையும் அவை விவரிக்கப்பட்ட முறையையும் பார்கையில் எவரும் நம்புவார்கள்.

இறந்த பின் நாம் எங்கே போகிறோம்? எவ்வளவு காலத்துக்குப் பின் மீண்டும் பிறப்போம்? இறந்தவர்கள் பலருக்குக் கனவில் வருகிறார்கள். சிலர் நீண்ட காலத்துக்கு முன் இறந்த மஹான்களைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ராகவேந்திரர் போன்றோர் 600 ஆண்டுக் காலம் அங்கே சமாதியில் இருந்து அருள் புரிவதாகப் படிக்கிறோம். இப்படி மாண்டவர்கள் மீண்டும் வர முடியுமா? அதற்கு 2000, 3000 ஆண்டுப் பழமையான இலக்கியங்களில் சான்று உண்டா என்று பார்க்கையில் ‘’உண்டு’’ என்றே சொல்லவேண்டும்.

இந்தக் கட்டுரையாளர் வாழ்விலும் இப்படி ஒரு உண்மைச் சம்பவம் நடந்தது. எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா அவர்கள், மதுரையில் ஒரு வீட்டில் கணபதி ஹோமம் செய்து முடித்த பின்னர், திடீரென்று ஒரு திசையை நோக்கி எல்லோரையும் கீழே விழுந்து நமஸ்காரம் செய்யச் சொன்னார். வெற்றிடத்தை நோக்கி ஏன் நமஸ்காரம் செய்யச் சொல்கிறார் என்ற கேள்வியை யாரும் கேட்பதற்கு முன் அவரே விளக்கமும் கொடுத்தார். அந்த வீட்டில் ஒரு மஹான் இருந்ததாகவும், அவர் இன்று நடந்த பூஜையைப் பார்க்க வந்ததாகவும் கூறினார். பிறகு அந்த வீட்டுச் சொந்தக் காரர் சுவாமிஜியை மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களுடைய கொள்ளுத் தாத்தாவின்  படத்தைக் காட்டி அவர் ஒரு பெரிய மஹான் என்று கேள்விப்பட்டதாகச் சொன்னார்.. மஹா கணபதி பற்றி யார் சந்தேஹம் கேட்டாலும் காஞ்சிப் பெரியவரே இவரிடம்தான் அனுப்புவார்.

ராமாயணத்தில் ஒரு காட்சி

(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 121)

ராமரைப் பார்க்க தசரதர் இந்திரலோகத்திலிருந்து வருகிறார். அவருடைய விமான ரதம் வானில் அந்தரத்தில் நிற்கிறது. அன்போடு ராமரையும் லெட்சுமணரையும் அழைத்து மடியில் உகாரவைத்து அரவணைத்துக் கொள்கிறார். பின்னர் சீதை உள்ளிட்ட மூவருக்கும் ஆசிகள் வழங்கிவிட்டு சீதையிடம் ராமர் மீது கோபம் கொள்ளவேண்டாம் என்றும் அவன் செய்ததெல்லாம் (அக்னிப் பரீட்சை) மக்களின் முன்னிலையில் சீதை உத்தமி என்று காட்டவே என்றும் விளக்குகிறார்.

தசரதர் போவதற்கு முன் ராமர் ஒரு அற்புதமான வேண்டுகோள் விடுக்கிறார். தந்தையே, நீங்கள் கோபத்தில் கைகேயி ‘’என் மனைவி இல்லை என்றும் பரதன் என் பிள்ளை இல்லை’’ என்றும் தலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு உயிரை விட்டீர்கள். இன்று முதல் மீண்டும் அவர்களை உங்கள் மனைவி, மகன் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டுகிறேன் என்றவுடன் தசரதரும் அவ்வாறே அருள் புரிந்தார். அத்தியாயத்துக்கு அத்தியாயம், ராமன் உலக மஹா உத்தமன், மனிதருள் மாணிக்கம் என்று காட்டுகிறது ராமாயணம். இதனால் தான் ராமாயணம் காலத்தால் அழியாத காவியமாகத் திகழ்கிறது.

மஹா பாரதத்தில் ஒரு காட்சி

போரில் இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்று ‘ஸ்த்ரீ பர்வ’த்தில் திருதராஷ்டிரனும் யுதிஷ்டிரனும் (தர்மர்) விவாதிக்கிறார்கள். இதற்கு தர்மர் கொடுத்த விளக்கம் கவனிக்கப் படவேண்டியது. போரில் முழு மனதுடன் வீரராக உயிர் இழந்தோர் இந்திர லோகத்துக்கும், அரைகுறை மனதுடன் போரிட்டோர் கந்தர்வலோகத்துக்கும் போகிறார்கள். உயிர்ப் பிச்சை கேட்டவர்களும் புறமுதுகு காட்டியவர்களும் யக்ஷர்களாகிறார்கள் என்று யுதிஷ்டிரர் கூறுகிறார்.

சங்கத் தமிழ் நூலான புறநானூறு மற்றும் பகவத் கீதை முதலியன போரில் இறப்பவர்கள் சொர்க்கலோகத்தை அடைகிறார்கள் என்று திட்டவட்டமாக கூறுகின்றன. இதை ‘’புறநானூற்றில் பகவத் கீதை-பகுதி 1, பகுதி 2’’ மற்றும் ‘’வீரத் தாயும் வீரமாதாவும்’’ என்ற கட்டுரைகளில் முன்பே விளக்கி இருக்கிறேன்.

மஹாபாரதத்தை ஜனமேஜயன் சபையில் வாசித்தபோது போரில் இறந்த பீஷ்மர், துரோணர், அபிமன்யு, துர்யோதணன் ஆகியோர் மீண்டும் வந்ததை ஜனமேஜயனே நம்பவில்லை. இடை மறித்து அப்படியானால் என் தந்தை பரீட்சித்தையும் இப்போது காட்ட முடியுமா? என்று கேட்கிறார். உடனே வியாச மஹரிஷி , பரீட்சித்து மன்னரையும் உயிரோடு காட்டுகிறார்.

கங்கை நதியில் ஒரு அதிசயக் காட்சி (ஆஸ்ரம வாசிக பர்வம்)

காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்களையும் உறவினர்கலையும் பார்க்க துடியாய்த் துடிக்கிறார்கள். வியாச மஹரிஷி இந்தத் துடிப்பை அறிந்து ஒரு நாள் எல்லோரையும் கங்கை நதிக்கு வரச் சொல்கிறார். ஊர் மக்கள், அரச குடும்பத்தினர், மா முனிவர்கள் எல்லோரும் அதிசயத்தைக் காண பெரும் கூட்டமாகக் கூடவே, வியாசர் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி அழைக்கிறார். துரோணர், பீஷ்மர் தலைமையில் மிகப் பெரிய போர் வீரர் கூட்டம் பெரும் சப்தத்துடன் கங்கை நதியில் இருந்து எழுந்து வருகின்றனர். ஆயிரக் கணக்கில் யுத்தத்தில் இறந்த வீரர் அனைவரும் நதிக்கு மேலே காட்சி தருகின்றனர். எல்லோரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். இரவு முழுவதும் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக உரையாடுகின்றனர். பழைய பகைமை எல்லாம் மாயமாய் மறைந்தோடிவிட்டன.

இந்த உரையாடல் முடிவதற்குள், வியாசர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். யார் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் இறந்தவர்கள் திரும்பிச் செல்லும்போது அவர்களுடன் போகலாம் என்று அறிவிக்கிறார். உடனே பல க்ஷத்ரிய குலப் பெண்கள், முன்னர் இறந்த தங்களுடைய கணவர்களோடு சேர்ந்து மேல் உலகம் சென்றனர். மாண்டவர்களின் உருவங்கள் கங்கை நதிக்குள் சென்று மறையும் போது உறவினர்களும் அவர்களுடன் சென்றதாக மஹா பாரதம் கூறுகிறது. இது எல்லாம் போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகள் நமக்குப் புலப்படுத்துவது சில உண்மைகள்: 1.இறந்த பின்னர் பழைய பகைமை மறைந்துவிடும். 2.இறந்தவர்கள் மகிழ்ச்சியான ஒரு உலகத்தில் வசிக்கிறர்கள். 3.வியாசர் போன்ற மந்திர பலம் உடைய மஹரிஷிகள், இறந்தவர்களோடு தொடர்பு கொள்ளமுடியும், அவர்களை பூமிக்கு திரும்ப அழைக்கவும் முடியும். 4.திதி கொடுக்கும் போது இறந்தவர்கள் வந்து பிண்டத்தை வாங்கிக்கொள்வது எல்லாம் உண்மையே என்பதற்கு இது ஒரு சான்று.

தமிழில் சிலப்பதிகார அதிசயம்

தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட 14ஆம் நாளில் ஒரு அதிசயம் நடந்தது. கண்ணகி கேரள தேசத்திலுள்ள திருச் செங்குன்றத்தில் ஒரு வேங்கை மரத்தின்  கீழே நின்று கண்ணிர் விடுத்தாள். அப்போது விண்ணோரும் வியக்கும் வண்ணம் கோவலன் ஒரு விமானத்தில் வந்து கண்ணகியை மேல் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறான். இதை கண்ட கானக மக்கள் வியந்து போற்றுகின்றனர். அத்தோடு நில்லாமல் இந்த அற்புதக் காட்சியை சேர மன்னனிடம் வியப்போடு விளக்கினர்.

சேர மன்னன் செங்குட்டுவன், இதைக் கேட்டு அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து அந்தப் பத்தினித் தெய்வத்துக்கு இன்றே கோவில் கட்ட ஏற்பாடு செய் என்று மந்திரிகளுக்கு உத்தரவு இடுகிறான். புனித இமய மலையில் கல் எடுத்து புனித கங்கையில் அதைக் நீராட்டி அந்தக் கல்லில் கண்ணகி சிலை வடிக்க இமயம் நோக்கிச் செல்கிறான். பின்னர் அவன் எடுத்த சிலைக்கு புனித நீராட்டுகையில் ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ உள்பட பல நாட்டு மன்னர்களும் வருகை தந்து சிறப்பிகிறார்கள் என்று சிலப்பதிகாரம் கூறும் (குன்றக் குரவை காதை, சிலப்பதிகாரம்)

*******

அனைத்தும் பெற ஆறு கேள்விகள் !

 

சம்ஸ்கிருதச் செல்வம்-10

 

10. அனைத்தும் பெற ஆறு கேள்விகள் !

 

ச.நாகராஜன்

   வாழ்க்கையில் வெற்றி பெறவும் ஒரு திட்டத்தில் வெற்றி பெறவும் ஒரு பொருள் அல்லது இடம் அல்லது நிறுவனம் அல்லது ஒரு தனி நபர் பற்றி மதிப்பீடு செய்ய SWOT analysis என்ற உத்தியை நிபுணர்கள் இன்றைய நவீன உலகில் கடைப்பிடிக்கின்றனர். SWOT  என்றால்  Strengths, Weaknesses, Opportunities,Threats என்று அர்த்தம். பலம், பலஹீனம், வாய்ப்புகள், எதிர் வரும் அபாயங்கள் ஆகிய நான்கை நன்கு அலசி ஆராய்ந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது ஆல்பர்ட் ஹம்ப்ரி என்பவர் கண்டுபிடித்த ஸ்வாட் அனாலிஸிஸ்.

 

ஆனால் வெகு காலம் முன்பே நமது அறிஞர்கள் “ஆறு கேள்வி அனாலிஸிஸைக்” கண்டு பிடித்துள்ளனர். கவிஞர் அழகுற அதை இரண்டே வரிகளில் கூறுகிறார்:

 

க: கால: கானி மித்ராணி

    கோ தேஷ: கௌ வ்யயாகமௌ I

கோஹம் கா சைவ மே 

    ஷக்திரிதி சிந்தயம் முஹுர்முஹு: II

 

க: கால: – என்ன நேரம் இது? (What time is this?)

கானி மித்ராணி – எனது நண்பர்கள் யார் யார்? (Who are my friends?)

கோ தேஷ: – இது என்ன இடம்? (Which is this place?)

கௌ வ்யயாகமௌ – இதில் செலவுகள் என்ன? ஆதாயங்கள் என்ன? (What are expenses an gains?)

கோஹம் – நான் யார் (Who am I ?)

கா சைவ மே ஷக்திரிதி – எனது பலம் என்ன? (What is my strength?)

 

“ஒருவன் எப்போதுமே என்ன காலம் இது? எனது நண்பர்கள் யார், யார்? இது என்ன இடம்? இதில் செலவுகள் என்னென்ன, ஆதாயங்கள் என்னென்ன? நான் யார்? எனது பலம் என்ன? என்பனவற்றைச்  சிந்திக்க வேண்டும்.” என்பது இந்தச் செய்யுளின் பொருள்.

 

       இதில் நான் யார் (கோஹம்) என்று எப்போதும் சிந்திப்பது பெரிய சித்திகளை அருளி முக்திக்கே வழி வகுக்கும் என்பது பகவான் ரமணரின் அருளுரை.

 

 

ஆக இந்த ஆறு கேள்விகளை எப்போதும் சிந்திக்கும் எவருக்கும் அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதோடு வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை.

 

சிந்தனீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா I

ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே II

 

“ஒரு ஆபத்தான நிலையை அடையும் முன்னரே ஒருவன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வீடு தீப்பற்றி எரியும் போது கிணறு வெட்டும் வேலையை ஆரம்பிக்கக் கூடாது!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

 

வீடு தீப்பற்றி எரியும் போது  கிணறு வெட்ட ஆரம்பிக்கும் மூடன் அழியாமல் இருப்பது எப்படி? எப்பொழுதும் முன் ஜாக்கிரதையுடன் அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து வாழ்க்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது கவிஞரின் அறிவுரை.

 

வெற்றி பெற வழி வகுக்கும் ஆறு கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்றுத் திட்டங்களை வகுத்தாலே வாழ்க்கையில் ஆபத்தே வராது வந்தாலும் அவற்றை “மா சம்பத்தாக” மாற்றி விடலாமே!

 

*************************************

சிவன் ‘இறந்தான்’- புலவர் விட்ட க(வி)தை!

 

 

 

Forms of Sankaranarayana and Ardhanari

போஜ ராஜன் என்ற மன்னன் மாபெரும் அறிவாளி. கற்றோரைக் காமுறும் பெரும் புலவன். புலவர்களுக்குப் புரவலன். காளிதாசன் போன்ற பெரும் புலவர்களின் இனிய நண்பன். இத்தகைய மன்னன் காலத்தில் ஒரு ஏழைப் புலவனும் வாழ்ந்தான். ஏதேனும் பாட்டு எழுதிச் சென்றால் போஜ மான்னன் தனது போஜனத்துக்கு வழி செய்வானே என்று பரிதவித்தான். அவனுக்கு கவிதை எழுதத் தெரியாது என்பதல்ல. கவி மழை பொழிய வல்லவனே. ஆனால் எல்லாப் புலவர்களும் எல்லாவற்றையும் பற்றி எழுதிப் பரிசு வாங்கிவிட்டார்களே, நான் எதைப் பற்றி எழுதுவேன் என்று அங்கலாய்த்தான். தருமி என்னும் ஏழை அந்தணனுக்கு கவிதை எழுதித்தந்த சிவ பெருமான் இவனுக்கு கவிதை எழுதித் தரவில்லை!

ஏழைப் புலவனுக்கு திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. அதுவும் சிவன் அருள்தான், ஏனெனில் அது சிவனைப் பற்றிய கவிதை! ஆனால் அரைத்த மாவையே அரைக்காத புதுக் கவிதை, அதாவது புது விதமான கவிதை. சிவன் இறந்த கவிதை. இதைக் கேட்டால் போஜன் கட்டாயம் பரிசு தருவான் என்ற நம்பிக்கை ஊட்டிய கவிதை.

இதோ அந்தக் கவிதை:

ஒரு பாதி மால் கொள மற்றொரு பாதி உமையவள் கொண்

டிருபாதியாலும் இறந்தான் புராரி இரு நதியோ

பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்திற் கற்ப

தருவான போச கொடையுடன் கையோடென்கை தந்தனனே (தனிப்பாடல்)

பொருள்:

சிவ பெருமானுடைய ஒரு பாதியை உமா கவர்ந்துவிட்டாள் (அர்த்தநாரீஸ்வரர்), மற்றொரு பாதியை திருமால் (சங்கர நாராயணன்) கவர்ந்துவிட்டார். இவ்வாறு இருவரும் உடலைப் பங்கிட்டதால் சிவ பெருமான் என்பவரே இல்லை என்றார்.

இதைக் கெட்ட அரசனுக்கு திருப்தி வரவில்லை. கேள்விகள்தான் வந்தன. போஜராஜன் கேட்டான்: புலவரே, சிவன் இறக்கவே முடியாது. அப்படியானால் சிவனின் தலை மீதிருந்த கங்கை எங்கே? தலையில் அணிந்த இளம் பிறை எங்கே? அவர் கழுத்தில் நிலவும் பாம்பு எங்கே? அவருடைய கையில் இருந்த திருவோடுதான் எங்கே? என்றான்.

முதலில் மன்னனின் கேள்விகளைக் கேட்டுவிட்டு திடுக்கிட்டுப்போன புலவன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு கதை, இல்லை, கவிதை, விட்டார். அடடா! சொல்ல மறந்துவிட்டேனே, அவர் மீதிருந்த பிறைச் சந்திரன் வானத்திற்கு ஓடிப் போய்விட்டான். பாம்போ பூமிக்குள் இருந்த துளையில் புகுந்துவிட்டது. கங்கை கடலில் கலந்துவிட்டாள். சிவன் கை திருவோடு என் கைக்கு வந்து விட்டது. சிவ பெருமானின் மாபெரும் கொடைத் தன்மை போஜராஜன் என்ற மன்னனிடம் போய்விட்டது என்று போட்டார் ஒரு போடு! போஜ மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி. ஏழைப் புலவன் திருவோட்டில் தங்கக் காசு மழை பெய்தான்.

 

இந்தியப் புலவர்கள் மேதாவிகள். சமயத்துக் கேற்றவாறு கவி மழை பெய்து, தங்க மழையில் நனைவார்கள். மற்றொரு புலவர் ராமநாத சேதுபதியிடம் பொன்முடிப்பு வாங்கச் சென்றார். அவர் தங்கத் தட்டில் பணமுடிப்பு வைத்துத் தந்தார். பண முடிப்பை எடுத்துக் கொண்டு தட்டைத் திருப்பித் தருவது வழக்கம். அவர் புத்திசாலித் தனமாக பணத் தட்டு மன்னனுக்கோ? ஏழைப் புலவருக்கோ? என்றார். மன்னன் சிரித்துக் கொண்டெ ‘உமக்கே’ என்றான். புலவருக்கு அன்று இரட்டை போனஸ்!

(பணத்தட்டு என்றால் பண முடை, பணம் போதாத நிலை என்ற அர்த்தமும் உண்டு).

 

Please read earlier Bhoja Raja stories in this blog:

1.Strange Link between Shiva, Socrates and Thiruvalluvar

2. Who is Dhananjayan?

3. World’s Largest Story Collection

4.போஜராஜன் செய்த தந்திரம் ( in Tamil)

contact: swami_48@yahoo.com