Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 16
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
Family Planning 25 pence, Sarat Chandra Chatterjee, , Olympics, krishna menon, Shivaji, army tank, three mini sheets, Kamaraj, family planning triangle, parliament conference, republic anniversary, medal, muthuswami Dikshitar, Aryabhata satellite, veena, Gandhi big, kncb, child with cock, American revolution, ahalyabhai Holkar, Hindi conference
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 17, Family Planning 25 pence, Sarat Chandra Chatterjee, , Olympics, krishna menon, Shivaji, army tank, three mini sheets, Kamaraj, family planning triangle, parliament conference, republic anniversary, medal, muthuswami Dikshitar, Aryabhata satellite, veena, Gandhi big, kncb, child with cock, American revolution, ahalyabhai Holkar, Hindi Conference
125.தமோதிதர்சன 1-24-15 அடிக்கடி வலிப்பு வந்து மயக்கம் போடுதல்
126.திமிர 1-20-11 ஓரளவுக்கு கண்பார்வையை இழத்தல்
127.த்ரிஷன 6-22-57 தாகம் எடுப்பது தொடர்பான நோய்கள்- ஐந்து வகைகள்
128.த்வகவிதாரண 1-20-14 உலர்ந்த சருமம், சொரசொரப்பான தோல்
129.உதரரோக 6-13-9 வயிற்று நோய்கள்
130.உதர்த்த1-20-17 தோல் அரிப்பு
131.ஊனபதங்குசனியக விகார 3-34 பெருமளவு நோய் பராவுதல்
132.உன்மத்த – பதினைந்து வகை -6-9 பைத்தியம், மனக்கோளாறுகள்
133.உப ஜிஹ்விக 6-12-77 சலவை , நாக்குப்புண்
134.உப குஷ 6-12-78 பாக்டீரியாக்களினால் ஈற்றில் புண் /ஈறு அழற்சி
135.ஊரு சத 1-20-11 தொடையில் ஏற்படும் நலிவு, பலவீனம்
136.ஊரு ஸ்தம்ப 6-27 தொடையில் ஏற்படும் பக்கவாதம்
137.உத் சந்த்ர 6-25-58 உடலுக்குள் உறுப்புகள் இடம்பெயர்தல்
138.வாத பலச 6-29-11 முடக்கு வாதம், வாத நோய்கள்
139.வாதஸ்தில 8-9-36 மல, மூத்திர உறுப்புகளில் தோன்றும் கட்டி
140.விதலிக 6-12-76 இருதயத்தைப் இழிவது போல கடும் வலி
141.விதாரிக 6-12-89 தொடை இடுக்கில்/ கவட்டைப் பகுதியில் கட்டி, வீக்கம்
142.விலோம 6-25-118 வழுக்கை, சொட்டைத் தலை , முடி இழக்கும் நோய்
143.விசர்ப்ப – ஏழு வகை -6-21-29 வீக்கம் பரவுதல்
144.விஷம ஜ்வர- 6 வகை- அடிக்கடி வரும் காய்ச்சல்
145.விஷு சிக 3-2-14 காலரா நோயால் வயிற்றுப போக்கு
146.வ்ரதன 6-12-94 நீடித்திருக்கும் வீக்கம்
147.வ்ரண 6-25 புண்கள்- 44 வகைகள் இருக்கின்றன
148.வ்ரிஷன க்ஷேப 1-20-11 விரை , விதைப்பை, விதைக்கொட்டையில் ஏற்படும் வலி, வீக்கம்
149.யோனிரோக- 17 வகை – 6-30 பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் நோய்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நோய்களை வகைப்படுத்தி அவைகளுக்கு மருந்து, சிகிச்சைகளையும் சம்ஸ்க்ருதத்தில் எழுதியது போல உலகில் வேறு எந்த மொழியிலும் மருத்துவ நூல்கள் எழுதப்படவில்லை.
சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் விரிவான மருத்துவ நூல்களை அளித்துள்ளனர். அவை தவிர அஷ்டாங்க ஹ்ருதயம் நவநீதகம் போன்ற பிற்கால நூல்களும் நமக்கு நிறைய தகவல்களை அளிக்கின்றன. தமிழில் அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற பலருடைய பெயர்களில் பல நூல்கள் உள்ளன ; அவை காலத்தால் மிகவும் பிந்தியவை என்பதை அவற்றின் மொழியும், நடையும், சம்ஸ்கிருதத் சொற்களும் காட்டிவிடுகின்றன .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாம் தமிழர்களாகப் பிறப்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ; காரணம் என்னவெனில் உலகத்தின் இரண்டு பெரிய மொழிகளில் உள்ள இலக்கியங்களை அவர்கள் சொந்த மொழியிலும் மொழிபெயர்ப்பிலும் படிக்க முடிகிறது திருவள்ளுவரையோ, புறநாநூற்றையோ, சிலப்பதிகாரத்தையோ பாரதி பாடல்களையோ ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்த்தால் தமிழ்ச் சுவை இராது ; சம்ஸ்க்ருத்தில் உள்ள காளிதாசன் காவியங்களையும், வேதாந்த தேசிகர் ,முத்துசுவாமி தீட்சிதர் வரையுமுள்ள பேரறிஞர்கள் எழுதிய சம்ஸ்க்ருதப் பாடல்களையும் நாம் அப்படியே தமிழிலும் படிக்க முடிகிறது. குறிப்பாக லிப்கோ வெளியிட் ட காளிதாசனின் நூல்கள் , மற்றும் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மொழிபெயர்த்த மிருச்சகடிகம் ( மண்ணியல் சிறுதேர் ) நூல் முதலியவற்றைப் படிப்போர் கொடுத்து வைத்தவர்களே ; பெரும் பாக்கியசாலிகள் .
ஷேக்ஸ்பியர் எழுதியதை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் ; அது போல சம்ஸ்க்ருத நூல்களையும் அந்த மொழியில் படிக்கவேண்டும் ; அது முடியாதவர்கள் அறுபது பெரியோர்களின் பெயர்களையாவது படிக்கலாம். அவர்களுடைய நூல்களை அடுக்குவதற்கு வீட்டில் ஒரு லைப்ரரியே தேவைப்படும் .
இவர்கள் வேத காலத்துக்குப் பின்னர் தோன்றியவர்கள்; நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிலிருந்து சில நூற்றா ண்டுகளுக்கு முன்னர் வரை சம்ஸ்க்ருத மொழியில் அமிர்த மழை பொழிந்தவர்கள் ஆவார்கள்.
இதோ அந்தப் பட்டியல்
1.காளிதாசன்
காளிதாசன் எழுதிய காவியங்கள்தான் மேலை உலகில் முதலில் பிரபலமாயின ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞன், நாடக ஆசிரியன் , காவியம் படைத்தோன் காளிதாசன் ; இவனது கவிதைகள் குப்தர் கால கல்வெட்டிலும் உள்ளது
எழுதிய நூல்கள் ஏழு ; இதுதவிர நிறைய தனிப்பாடல்களும் உள.
சாகுந்தலம், விக்ரம ஊர்வசீயம், மாளவிகா அக்நிமித்திரம் ஆகிய நாடகங்களையும் ரகுவம்சம், குமார சம்பவம், மேகதூதம் , ருது சம்ஹாரம் ஆகிய காவியங்களையும் கவிதைகளையும் படைத்தான். 1500 உவமைகளை நமக்கு அளித்தான். அதில் இருநூறு உவமைகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தினர் இவரது நூல்களைப் பார்த்து கபிலர் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்க நூலைப் படைத்ததாக ரெவரெண்ட் ஜி யு போப் முதலியோர் சொல்கின்றனர்.
****
2.பாஷா
காளிதாசனுக்கும் முந்திய நாடக ஆசிரியன் பாஷா ; இவனது பதிமூன்று நாடகங்கள் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன அவற்றில் மிகவும் புகழ்பெற்றது ஸ்வப்னவாசவ தத்தம் என்னும் நாடகம் ஆகும்.
பெருங்கதை /பிருஹத்கதா பற்றிய நாடகங்கள் -ஸ்வப்ன வாசவ தத்த, பிரதிக்ஞா யவ்கந்தராயண , அவிமாராக, சாருதத்த.
****
3.அபிநந்த – ராமசரித என்ற கவிதை நூலை யாத்தவர் ; பால வம்ச அரசவைப் புலவர்; காலம் – ஒன்பதாம் நூற்றாண்டு.
ஸந்த்யாகர் நந்தி என்றும் பெயர். சிலேடைகள் மிகுந்த ராமாயணத்தை இவர் இயற்றினார் ராமபால என்ற பால வம்ச மன்னர் பற்றி யும் எழுதினார்.
****
4.அமரு
அமருசதகம் என்ற பெயரில் நூறு காதல் கவிதைகளை எழுதினார் இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
5.அசக
கர்நாடகத்தைச் சேர்ந்த சமண மதப் புலவர் ;திகம்பர சமண ப் பிரிவைச் சேர்ந்த இவர் வர்த்தமான சரிதம் என்ற பெயரில் மஹாவீரர் வாழ்க்கையினை எழுதியுள்ளார் ; காலம்- ஒன்பதாம் நூற்றாண்டு.
****
6.அஸ்வகோஷர்
புத்த மத விஷயங்கள் பெரும்பாலும் பாலி மொழியில்தான் இருக்கின்றன ; இவர் காளிதாசனையும் வால்மீகியையும் காப்பி அடித்து புத்தசரிதம் என்ற நூலினைப் படைத்தார் ; அது புகழ்பெறவில்லை; மேலும் இப்போது நமக்கு கிடைத்த நூல் முழு நூலாகக் கிடைக்கவில்லை; வெள்ளைக்காரர்கள் அங்குமிங்கும் கிடைத்த விஷயங்களையும் மொழிபெயர்ப்புகளையும் ஓட்டுப்போட்டு நூலாகப் படைத்துள்ளனர் . காலம் -முதல் நூற்றாண்டு.
****
7.அதுல
மூஷிக வம்சம் என்ற கேரள அரசர்கள் பற்றி இவர் படைத்த நூலின் பெயர் – மூஷிக வம்ச. இவரது நூல் இல்லாவிடில் அந்த வம்சம் பற்றிய தகவலே இல்லாமல் போயிருக்கும். காலம் 11 ஆம் நூற்றாண்டு.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நூல் அறிமுகம்
கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1 – பதிப்பாசிரியர்சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்
ச.நாகராஜன்
கந்தபுராண ஞானஸபை,, கள்ளக்குறிச்சியின் வெளியீடாக வந்துள்ள நூல் கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1
பத்து அறிஞர்களின் கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த நூலின் பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள்.
சைவ சமயத்தின் மூன்று பெரும் புராணங்களில் ஒன்றாக அமைவது கந்தபுராணம்.
“எந்தப் பொருளும் கந்தபுராணத்தில்” என்பது தமிழ்ப் பழமொழி.
ஞான உபதேசங்கள், தத்துவ ரகசியங்கள், வரலாறுகள், ஆன்மீக உண்மைகள், பக்தியின் மகிமை உள்ளிட்டவற்றைக் கந்தபுராணம் தருகிறது.
இது அனைவரிடமும் சென்று சேரவேண்டும் என்று பாடுபட்டு வருகிறது கந்தபுராண ஞானஸபை
அதில் ஒரு முயற்சியாக அறிஞர்களிடமிருந்து கந்தபுராண ஞானஸபை கந்தபுராணம் சம்பந்தமான கட்டுரைகளை வரவேற்று அதில் தேர்ந்தவற்றைப் முதலாம் பகுதியாக இப்போது வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள பத்து கட்டுரைகள் பின் வருமாறு:
முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்
திருமதி V. இந்திரா
கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்
ச.பாலமணிகண்டன்
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
மு. கிருஷ்ணசாமி
கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்
பனசை மு. சுவாமிநாதன்
முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்
S. மணிமேகலை
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
அ. ராதா
கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்
ர. அருணாதேவி
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
ஈசான சிவ ஆனந்தமீனாக்ஷி
கந்தபுராணத்தில் சிவஸ்தலங்களின் மகிமை
திரு தி. மீனாட்சிசுந்தரம்
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
சிவ. கோமதி திருநாவுக்கரசு
திருமதி V. இந்திராவின் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் கட்டுரையில் பெருமானின் திருவடியிலிருந்து திருமுடி வரை அமைந்துள்ள உபநிடதங்கள், கலைகள், தேவர்கள் உள்ளிட்ட விஷயங்களைக் கண்டு வியக்கலாம்.
கட்டுரையில் கந்தபுராணத்தில் உள்ல அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகள் மற்றும், காப்பிய வருணனைகள் உள்ளிட்டவற்றைப் படித்து மகிழலாம்.
மு. கிருஷ்ணசாமியின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையில் சூரனின் அகந்தையும் அவனது ஆணவ மறைப்பும் பற்றிப் படிப்பதோடு தைப்பூச சிறப்புகள் பற்றிக் காணலாம்.
பனசை மு. சுவாமிநாதனின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள் கட்டுரையில் கந்தபுராண உவமைகள் நயம் பற்றிப் படித்து மகிழலாம்.
S. மணிமேகலையின் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் கட்டுரையில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் மற்றும் தேவர்களுக்குக் காட்டும் பேருருவக் காட்சி பற்றிய அரும் செய்திகள் தரப்படுகின்றன.
அ.ராதாவின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையில் சிவபெருமானின் மேன்மை, சிவபெருமானின் கருணை, சிவபிரானை வழிபடும் முறைமை உள்ளிட்டவை தரப்படுகின்றன.
ர. அருணாதேவியின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள் கட்டுரையில் கந்தபுராணம் தோன்றிய வரலாறு, சுவாமிகள் வரலாறு, காவிய நயங்கள் உள்ளிட்ட விவரங்களைப் படித்து மகிழலாம்.
ஈசான சிவ ஆனந்தமீனாக்ஷியின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
கட்டுரையில் பார்வதியின் தோற்றம், பராசக்தியின் வடிவம், அருள் சக்தி, முருகன் வேல் பெறுதல் உள்ளிட்ட அரும் செய்திகள் தரப்படுகின்றன.
திரு தி. மீனாட்சிசுந்தரத்தின் கந்தபுராணத்தில் சிவஸ்தலங்களின் மகிமை கட்டுரையில் கேதார்நாத், காசி, ஶ்ரீ சைலம், ஶ்ரீ காளஹஸ்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவெண்ணைநல்லூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட தலங்களின் பெருமையும் அருமையும் விவரிக்கப்படுகின்றன.
இறுதியாக உள்ள சிவ. கோமதி திருநாவுக்கரசின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையானது மாயையைப் பற்றி நிற்கும் உயிர்கள் அடையும் தடுமாற்றமும் ஆணவமலத்தின் உருவான சூரபன்மனின் ஆணவக் கொட்டம் அடக்கப்பட்ட விதத்தையும் சித்தரிக்கிறது.
அனைத்துக் கட்டுரைகளும் ஆய்வின் அடிப்படையில் அமைந்திருப்பதால் கந்தபுராணத்தின் சீரிய சிறப்பும் அதில் உள்ள உள்ளார்ந்த ரகசியங்களும் முருகப் பெருமானின் வழிபாட்டின் மேன்மையையும் அது அருளும் பலன்களையும் கண்டு வியக்கிறோம்;பிரமிக்கிறோம்.
கட்டுரை ஆசிரியர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள்; இதைத் தொகுத்து அரும்பணி ஆற்றியுள்ள பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
117.SHOTHA 2-12-1 சோத – கால்களில் நீர் /திரவம் சேர்ந்து வீங்குதல்
118.SHVASA 6-17-46 ஸ்வாச – ஆஸ்த்மா – 5வகைகள் உண்டு
119. SHVETAMUTRAVARCHASTVA 1-20-17 ஸ்வேத மூத்திர வர்சஸ்த்வ- / வெள்ளை நிற சிறுநீர், நூல் திரிகள் போல தோற்றம்.ஸ்வேதா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து தான் ஸ் /வைட் WHITE / வெள்ளை என்ற ஆங்கிலச் சொல் வந்தது.
120.SROTOROA 3-5-8 FOURTEEN TYPES NAMED
ஸ்ரோத ரோக -உடலில் சுரக்கும் திரவங்கள் அவை செல்லும் குழாய்கள் தொடர்பான நோய்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
ஜெய் ஜெய்பூர் – 2
ச. நாகராஜன்
நகார்கர் ஃபோர்ட்
நகார்கர் கோட்டை ஆரவல்லி மலையில் அமைந்துள்ள இன்னொரு கோட்டையாகும். நகார்கர் என்றால் புலி என்று பொருள். இது முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. ஜெய்பூரின் வலிமை வாய்ந்த அரணாக இது திகழ்கிறது. அரசர்கள் ஒரு காலத்தில் நடந்த இந்த இடத்தில் பயணிகள் இன்று நடந்து உத்வேகம் பெறுகின்றனர்!
காலே ஹனுமான்ஜி ஆலயம்
இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.
சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.
தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான் குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.
ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.
சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.
அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.
காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.
எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.
கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.
சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.
ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர். விட்டது வியாதி; போனது தோஷம் என்பது இங்கு வந்து தொழும் பக்தர்களின் நம்பிக்கை வாக்கு!
பிர்லா மந்திர்
பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் லட்சுமிநாராயணன் கோவில் 1988ல் பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோவிலாகும். வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கொவிலில் லட்சுமி தேவியும் நாராயணரும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர்.
சாந்தம், அழகு, இறை வழிபாட்டின் பலன் – இவை அனைத்தையும் ஒருங்கே தருவது பிர்லா மந்திர்!
ஜல் மஹால்
ஜல் மஹால் என்றால் நீர் அரண்மனை என்று பொருள். இது ஜெய்பூரில் மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்துள்ள அழகிய ஒரு அரண்மனையாகும். இதை சவாய் பிரதாப் சிங்க் 1799ல் கட்டினார். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த அரண்மனை முழுவதும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது, ஏரியில் நீர் முழுமையாக நிரம்பும் சமயத்தில் இதில் உள்ள நான்கு அடுக்குகள் நீரிலே மூழ்க ஐந்தாவது அடுக்கு மட்டும் காட்சி அளிக்கும்.
ஜல்மஹால், வானம் நீரைத் தொடும் இடம்; சரித்திரம் கவிதை பாடும் இடம்!
சிசோடியா ராணி அரண்மையும் தோட்டமும்
கூட்டத்தைத் தவிர்த்து அமைதி நாடும் வரும் இடம் இது. ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இது.
மன்னர் சவாய் ஜெய் தனது உதய்பூர் இளவரசியான தனது இரண்டாவது மனைவிக்குப் பரிசாக 1728ம் ஆண்டு கட்டியது இது. இந்த ராணி சூரிய வமிசத்தின் வழி வந்த சிசோடியா பரம்பரையைச் சேர்ந்தவர். பசுமை வாய்ந்த மரங்களும் மலர்ச் செடிகளும் ஒருபுறம் இருக்க பல அடுக்குகள் கொண்ட அரண்மனையை இன்னொரு புறம் காணலாம்.
டக் டக் ரைட் (டக் டக் சவாரி)
ஜெய்பூரில் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக டக் டக் என்று அழைக்கப்பட்டும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இந்த டக் டக் சவாரி மூலம் இதன் டிரைவரே திட்டமீட்ட பாதை வழியே ஜெய்பூர் முழுவதையும் சுற்றிக் காட்டி விடுவார். ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என்று நமது வசதிக்குத் தக்கபடி இந்த சவாரியை நாம் அமைத்துக் கொள்ளலாம். இதில் பயணம் செய்வோர் அனைவரும் இதைப் பொதுவாக ரசிக்கவே செய்கின்றனர்.
ஜெய்பூர் என்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டி விடக் கூடாது. வீரம் வாய்ந்த ராஜபுதன அரசர்களின் பரம்பரைக்கே உரித்தான ஏராளமான அரண்மனைகள், அழகிய மாளிகைகள், பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், இறைவழிபாட்டுத் தலங்கள் என்று இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆங்காங்கே உள்ள அருங்காட்சியகங்கள் பழமையான சிறப்பு வாய்ந்த வரலாறை நமக்கு விளக்கமாகத் தெரிவிக்கும். ஜெய் ஜெய்பூர்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 15
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
Great Writers , Maithili Sharan Gupta, Romesh Chander Dutt, Michel Madhusudan Dutt, Vithalbhai Patel, Indipex, Peacock, Elephant, Masks of India, Ravana, Nicholaus Copernicus, A O Hume, Max Muller, NCC, Kamala Nehru, Gandhi and Nehru, V D Paluskar, Dr Hansen, Syed Ahmed Khan, St Thomas Anniversary, Moon , Sun Masks, Jainarain Vyas, Ranjit Singh, Rajaji, Tipu Sultan, VVGiri
–Subham—
Tags–Part 15, Indian Stamps, Great Writers , Maithili Sharan Gupta, Romesh Chander Dutt, Michel Madhusudan Dutt, Vithalbhai Patel, Indipex, Peacock, Elephant, Masks of India, Ravana, Nicholaus Copernicus, A O Hume, Max Muller, NCC, Kamala Nehru, Gandhi and Nehru, V D Paluskar, Dr Hansen, Syed Ahmed Khan, St Thomas Anniversary, Moon , Sun Masks, Jainarain Vyas, Ranjit Singh, Rajaji, Tipu Sultan, VVGiri, Narasimha, Veeresalingam
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Picture from New Scientist
அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், பிருஹத் ஆரண்யக உபநிஷத் கூற்று
சரக ஸம்ஹிதையும் பெருங்காட்டு ( பிருஹத் ஆரண்யக) உபநிஷத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ஆன்றோர் கணிப்பு; அப்போதே உடலையும் பிரபஞ்சத்தையும் ஒப்பிடும் அளவுக்கு இந்துக்களின் விஞ்ஞான நோக்கு இருந்தது. இதைப் பிற்காலத்தில் கிரேக்கர்கள் நம்மிடமிருந்து கற்று மைக்ரோ காஸம் ,மேக்ரோ காஸம் Microcosm , Macrocosm என்று பகர்ந்தார்கள்; கிரேக்கர்கள் எதையும் இயற்றுவதற்கு முன்னரே சம்ஸ்க்ருத நூல்கள் எழுதப்பட்டுவிட்டன.
பிரபஞ்சத்தில் உள்ள சக்தியும், பொருளும் நமது உடலிலும் காணப்படுகிறது என்ற கூற்று தமிழிலும் சம்ஸ்க்ருதத்தி லும் நீண்ட நெடுங்காலமாக உள்ள கூற்று ஆகும் यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ “Your Body is a Miniature Universe” யத் பிண்டே தத் ப்ரஹ்மாண்டே என்பது சம்ஸ்க்ருத வாக்கியம் ஆகும். இதைத் தமிழில் பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் உளது என்று சொன்னார்கள்.
இதை சரக சம்ஹிதை பின்வருமாறு செப்புகிறது:
ஏவமயம்லோகசமிதஹ புருஷஹ 4-4-13 மனிதன் என்பவன் உலகத்தின் ஒட்டுமொத்த வடிவம் –என்பது இதன் பொருள்.
ஒருவனிடத்திலுள்ள குணங்கள் பிரபஞ்ச சக்திகளின் பிரதிபலிப்பே 4-5-5 என்று 3000 ஆண்டுப் பழமையான சரக சம்ஹிதை புகல்கிறது.
கீழ்கண்ட அட்டவணையில் சரகர் கூறியதைக் காணலாம் –
தட்சப் பிரஜாபதி வடிவத்தில் பிரம்மன் = ஆத்மாவைப் பிரதிபலிக்கும் மனித மனம்
இந்திரன் = அஹம்காரம்
ஆதித்யன் = திரட்சி ; நாம் சேர்த்துவைத்தது
ருத்ரன் = கோபம்
சோமன் = இன்பம்
வசூஸ் = மகிழ்ச்சி
அஸ்வினி தேவர்கள்= புறத் தோற்றம்; வசீகரம்
மருத் = உற்சாகம்
விச்வே தேவர்கள் – புலன்களும் புலன் உணர்வுகளும்
தமஸ் = அறியாமை
ஜோதி = அறிவு
உற்பத்தி / படைப்பு = கருவுறுதல்
கிருத யுகம் = குழந்தைப் பருவம்
த்வாபர யுகம் = நடுத்தர வயது
கலியுகம் = வயதான காலம்
பிரளயம் = மரணம்
****
உபநிஷத காலத்திலேயே கல்லூரி ‘சயன்ஸ் லேப்’-பில் COLLEGE SCIENCE LABORATORY சோதனைகளைச் செய்வது போலத்தான் முனிவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.
மாணவனை உப்பைக் கொண்டுவரச் சொல்லி அதை ஒரு கோப்பைத் தண்ணீரில் போடச் சொல்லி அது கரைந்து மறந்ததை வைத்தும் , ஒரு பெரிய ஆலமத்தின் விதையினைக் கொண்டுவரச் செய்து அதிலிருந்து பிரம்மாண்டமான ஆலமரம் உருவானது எப்படி என்று கேட்டும் சிந்தனையைத் தூண்டினார்கள் .
பெருங் காட்டு / பிருஹத் ஆரண்யக உபநிஷத்துதான் பதினெட்டு உபநிஷதங்களில் பழமையானது . அதில் பிரபஞ்சம் என்பதற்குப் பதிலாக மரத்தினைக் காட்டி அதிலுள்ள உறுப்புகளை மனிதனுடன் ஒப்பிடுகிறார் ரிஷி முனிவர் . இந்த உபநிஷத்தில் வரும் யாக்ஞவல்கியர், மைத்ரேயி காத்யாயனி ஆகியோரின் கதைகளை நாம் அறிவோம்.
காட்டிலுள்ள மரத்தைப் போன்றவனே மனிதன் ;
மனிதனின் தலை முடிகளே இலைகள்;
அவனது தோலே மரத்தின் பட்டை;
சர்மத்திலிருந்து ரத்தம் கசிவது போல மரப்பட்டையிலிருந்து கோந்து கசிகிறது .
தோலைத் துளைத்தால் பீச்சி அடிப்பது போல குபு குபு என்று வருகிறது .
உடலுக்குள் உள்ள சதை போல மரத்துக்குள்ளும் மரச் சோறு உண்டு .
அதன் நாரோ சதை போல வலுவுடையது ;
வைரம் பாய்ந்த மரத்தினைப் போல மனிதனுக்குள் எலும்பு இருக்கிறது .
எலும்பு மஞ்சையும் மரத்தினிலுள்ள மிருதுவான பகுதியைப் போன்றதே .
மரத்தை வெட்டினாலும் அது வளர்கிறது
வேரிலிருந்து விளைய முடிகிறது .
மனித உடல் கீழே சாய்ந்தபின்
எந்த வேரிலிருந்து அவன் மீண்டும் தோன்றுகிறான் ?
மனித விந்துவிலிருந்து என்று சொல்லாதீர்கள் ;
அது உயிருள்ளபோது மட்டுமே நிகழ முடியம் .
வேருடன் மரத்தினை வீழ்த்திவிட்டால் பின்னர் முளைப்பது எங்கே
மனிதன் வீழ்ந்தால் மீண்டும் தோன்றுவது எப்படி?
யக்ஞவல்க்ய ரிஷியின் இந்த உரை பிரம்மனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதாகும். மறுபிறப்பு பற்றிய சிந்தனை என்றே நான் கருதுகிறேன்.
எது எப்படியாகிலும் நாம் காணவேண்டியது அக்காலத்தில் நிலவிய சிந்தனையைத் தூண்டும் ஒப்பீடுகள் தான் !
–SUBHAM—
TAGS- அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு , சரகர், பிருஹத் ஆரண்யக உபநிஷத் .