Compiled by London Swaminathan swami_48@yahoo.com Date: 28 December 2018 GMT Time uploaded in London – 8-21 am Post No. 5846
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாகவத புராணம் அபூர்வ படங்கள்- பகுதி 7
கடந்த 6 நாட்களில் வெளியான அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.
பாகவதத்தில் மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (பிரிவுகள்) உண்டு. இத்துடன் பத்தாவது ஸ்கந்தம் முடிவடைகிறது. மேலும் இரண்டு ஸ்கந்தங்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தால் அவற்றையும் (பொருளடக்கமும் படங்களும் மட்டும்) வெளியிடுகிறேன்.
இது வரை மொத்த பக்கங்கள்-2466
PART SEVEN OF BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED IN THE PAST SIX DAYS. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK, available in the British library in London.
TWO MORE CHAPTERS (SKANAM 11&12) ARE THERE. I WILL POST THEM WHEN I GET THEM FROM THE BRITISH LIBRARY.
I AM PUBLISHING ONLY THE PICTURES AND CONTENTS.
PAGES SO FAR (IN TAMIL)—-2466
SUDYUMNAN SEES RUDRA AND PARVATI
GOPIS BEG TO KRISHNA FOR THEIR CLOTHES
KRISHNA BLESSING THE BRAHMIN WOMEN
KRISHNA LIFTING THE GOVARDHANA HILLS TO SAVE THE COWHERDS FROM A TORRENTIAL DOWNPOUR
KRISHNA DANCING WITH HIS DEVOTEES
KRISHNA RELEASING NANDA FROM A PYTHON
KRISHNA KILLING THE BULL THAT WAS SENT TO KILL HIM
AMBASSADOR AKRURA MEETING KRISHNA AT GOKULAM WITH A MESSAGE FROM KAMSA.
ஆற்றில் வெள்ளம் அடித்துக் கொண்டு போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்;
நாயாவது நல்ல தண்ணீரைச் சிறிதாவது வெள்ளத்திலிருந்து எடுத்து நக்கிப் பருகுகிறது!
ஆனால் கழுதை! அதற்கு என்ன தெரியும்? கற்பூர வாசனை தெரியாது; ‘காள் காள்’ என்று தான் கத்தும்.
அதே போலத் தான் முதல் பக்கமே பார்க்கத் தெரியாத முட்டாள் கீதையின் மறுபக்கம் பார்த்தானாம்!
சிரிப்புத் தான் வருகிறது. குருடனுக்கு முதல் பக்கமாக இருந்தால் என்ன, மறுபக்கமாக இருந்தால் என்ன, ஒன்றும் தெரியாது.
ஆனால் இந்த முட்டாளைக் குறை கூறி என்ன பிரயோஜனம்? இவன் வந்த வழி அப்படி!
இவனது தலைவன் உலகம் வணங்கும் லோக மாதா சீதா தேவியைப் பார்த்த பார்வை எப்படித் தெரியுமா?
மற்ற கோடானு கோடி பேர்கள் அன்னையின் பாதங்கள் இரண்டை மட்டும் பார்த்து வணங்குவோம்.
ஆனால் தலைவனோ கழுத்துக்குக் கீழேயும், இடுப்புக்குக் கீழேயும் பார்த்தான்.
கோணல் பார்வை! ராக்ஷஸ பிறப்பு! வம்ச தோஷம்!
அதே போல கீதையின் மறுபக்கத்தை இவன் பார்த்து விட்டானாம்!
சரி, போகட்டும் விடுங்கள். குருடன் ராஜமுழி முழித்தால் தான் நமக்கென்ன?
அவன் யார் என்கிறீர்களா? 1967க்குப் பின் தமிழக நூலகங்களில் படிக்குச் சரி பாதி அதாவது ஐம்பது சதவிகிதம் குப்பை நூல்கள் பெருகி உள்ளன அல்லவா,
அதில் ஒன்று தான் இந்தக் குருடன் பார்வையில் விளைந்த புத்தகம்.
அவனுக்கு என் மூலம் விளம்பரம் வேறு ஒரு கேடா?
நல்லதைப் பற்றிப் பேசுவோம்.
*
கீதையை நன்கு புரிந்து கொள்ள விரும்பினாள் ஒரு மஹாராணி.
எத்தனை ஸ்லோகங்கள் என்று கீதையில் பாண்டித்யமுள்ள ஒரு பண்டிதரை வரவழைத்துக் கேட்டாள்.
எழுநூறு ஸ்லோகங்கள் என்றார் அவர்.
தனாதிகாரியை வரவழைத்த மஹாராணி, “700
பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள். கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் நம் பண்டிதர் சொல்லச் சொல்ல அவருக்கு ஒரு பொற்காசு தர வேண்டும். ஆக எழுநூறு ஸ்லோகங்களுக்கு எழுநூறு பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள்” என்றார்.
பண்டிதருக்கு மஹா ஆனந்தம். 700 பொற்காசுகளா?
வீடு சென்ற அவர் ஏராளமான நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.
மஹாராணிக்கு விளக்க வேண்டுமே!
மறுநாள் சபை ஆரம்பமானது.
700 பொற்காசுகள் குவியலாக இருக்க பண்டிதரின் கண்கள் அதை நோட்டம் விட்டன.
‘கடவுளே! மஹாராணிக்கு கீதையைப் புரிந்து கொள்ள அருள் செய்வாயாக! கண்ணபிரானே நீயே துணை.’
கம்பீரமாக முதல் ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.
‘தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’
மஹாராணிக்குக் கண்களில் நீர் வழிந்தது.
“நிறுத்துங்கள்!” என்று பண்டிதரை நோக்கிக் கூவினாள்.
பண்டிதர் திடுக்கிட்டார்.
மஹாராணி மந்திரியை அழைத்துப் பல்லக்கைத் தயார் செய்யுங்கள், கிளம்பலாம் என்றார்.
‘அட 700 காசுகளும் போச்சே’ என்று பண்டிதர் வருந்தினார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணியாரே! இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லையே” என்று இழுத்தார்.
“அட என்ன அற்புதமான விளக்கம்; நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன், கீதா தாத்பர்யத்தை. இதோ, இந்தாருங்கள் 700 பொற்காசுகள்; ஒரு கணமும் இனி தாமதிக்க மாட்டேன்; இதோ நீங்கள் கூறியபடியே செய்யப் போகிறேன்.”
மஹாராணி இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவருக்குத் தலை சுற்றியது.
“நான் என்ன விளக்கினேன்?” அழாக் குறையாக அவர் கேட்டார்.
அது தான் அழகாகச் சொல்லி விட்டீர்களே; கீதா தாத்பர்யத்தை! தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே – அதை எப்படிப் பிரிக்க வேண்டும்? ‘க்ஷேத்ரே க்ஷேத்ரே தர்மம் குரு!’ என்று. க்ஷேத்ரே க்ஷேத்ரே -க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகச் சென்று அதாவது ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று- தர்மம் குரு – தர்மத்தைச் செய்- அதாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். அது தானே கீதை காட்டும் பாதை! கீதையின் போதனை! இதோ தர்மம் செய்யக் கிளம்பி விட்டேன்” என்றாள் ராணி.
பண்டிதர் தன் ஆயுளிலும் அறியாத ஒரு பெரிய உபதேசத்தை கால் ஸ்லோகத்தில் ராணி அறிந்து விட்டாரே என்று மகிழ்ந்தார்.
இத்தனை நாள் படித்தும் தமக்கு கீதா போதனை ஏறவில்லையே என்று வருந்தினார்.
‘மஹாராணியாரே! உங்களிடமிருந்து கீதா பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் பொற்காசுகளை என் சார்பாக நீங்களே தர்மத்திற்குச் செலவிடுங்கள்; இதோ உலகைத் துறக்கிறேன். என் வழியில் போகிறேன்’ என்று சொல்லி விட்டுத் தவம் புரியச் சென்றார்;பின்னர் பெரும் மஹான் ஆனார்.
*
ஆக அந்த மஹாராணி எங்கே, இந்த முட்டாள் எங்கே!
கீதையின் மறுபக்கம் பார்க்க வேண்டாம்; முதல் பக்கத்தில் முதல் ஸ்லோகத்தின் கால் ஸ்லோகம் பார்த்தாலும் கூட நாடு முழுவதும் தர்மம் பெருகும்; தழைக்கும்!
கீதை காட்டும் பாதையை முழுவதுமாகப் படித்து அறிவோம்; உயர்வோம்!
***
சென்னை கோடம்பாக்கம் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஆன்மீக மாநாட்டில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் சொன்ன ராணியின் கதைக்கு இங்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.
swami_48@yahoo.com Date: 27 December 2018 GMT Time uploaded in London – 8-20 am Post No. 5842
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை– இயல் இசை நாடகம் — ஆகிய முத்தமிழையும் வளர்த்தது. மதுரை தந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியை யாரும் மறக்க முடியாது. பரிதிமாற் கலைஞர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்ப் பணி ஆற்றிய மதுரை வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியின் தமிழ் நாடகங்களை எவரும் மறக்க முடியாது.
அந்தக் காலத்தில் மதுரை, நாடகங்களின் ஆதார பூமியாக விளங்கியது. நாடகம் வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம், நாடகம் எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரையும் மறப்பதற்கில்லை.
ஆயினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வாரம்தோறும் செல்லும்போது அந்தக் காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியோர் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் என்பது புரிகிறது; தெரிகிறது.
இது டாக்டர் பட்டம் பெறுவதற்கு நிறைய தகவலுள்ள துறை. நானும் அவ்வபோது கண்ட நாடகங்களைப் பற்றிய தகவல்களைப் பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தேன்.
மதுரையில் இருந்ததொரு நாடகக் கம்பெனி பற்றிய சுவையான விவரம் இதோ:–
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910ஆம் ஆண்டில் .எஸ். எம். சச்சிதானந்தம் பிள்ளை துவக்கினார். இளைஞர்களைக் (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். அவர் பல நாடகங்களை இயற்றினார்; அவற்றில் சில:-
கங்காராம் அல்லது கவர்னர்ஸ் கப்
பஞ்சாப் கேசரி
வீர சிவாஜி
அவர் சொல்லும் தகவல்
நல்ல நீதிகளைக் கொண்ட நாடகங்களால் உலகத்தவர்கள் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது பெரியோர் அபிப்பிராயம்; எனக்கும் அந்த அபிப்பிராயம் உண்டு.
காலஞ்சென்ற கன்னையாவைப் போல நானும் ஏராளமான பொருட்செலவில் தசாவதாரம் என்ற பிரயாதிமிக்க நாடகத்தை நடத்தி முடித்தேன்.
பிறகு காலப்போக்கை அனுசரித்து ஜனசாரச் சீர்திருத்தம் சம்பந்தமான நாடகம் நடத்த முற்பட்டு
ராஜாம்பாள், மனோஹரன், கள்வர் தலைவன் முதலியன்வும்
பதிபக்தி, பம்பாய் மெயில் முதலியனவும் நடத்தினேன்.
கிண்டியில் நடக்கும் குதிரைபந்தயம் என்னும் சூதாட்டத்தினால் விளையும் தீமைகளை விளக்க ‘கவர்னர்ஸ் கப்’ என்ற இந்த நாடகத்தை எழுதினேன் (ஆண்டு 1935).
வரகவி அ .சுப்பிரமணிய பாரதியிடம் தந்துஅவர் திருத்தியமைத்தபின் அச்சிட்டேன்; அவருக்கு நன்றி
என் நாடகத்தில் பிரதான நடிகர்கள்
டி ஆர் பாபு ராவ், காளி, என். ரத்தினம்
XXX
தமிழ் கூறு நல்லுலகம் சச்சிதானந்தம் பிள்ளைக்கும் நாடக நடிகர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது.
TAGS–
சச்சிதானந்தம் பிள்ளை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, தமிழ் நாடகங்கள், கன்னையா
Compiled by London Swaminathan swami_48@yahoo.com Date: 27 December 2018 GMT Time uploaded in London – 6-27 am Post No. 5841
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாகவத புராணம் அபூர்வ படங்கள்- பகுதி 6
கடந்த 5 நாட்களில் வெளியான அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.
PART SIX OF BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED IN THE PAST FIVE DAYS. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK, available in the British library in London.
Durvasa falls at the feet of Ambarish and asks for pardon
Sita’s Wedding
Rama’s Coronation
Krishna’s Birth- His Father Vasudeva crssing the flodded River Yamuna at the dead of night. River divides into two and gives him way in the middle.
Kamsa tried to kill the Yoga Maya, but it flew away in the sky.
Krishna, as a boy, killed Bhutana who tried to poison him
Krishna smashed the wheels that were sent to crush him. A demon rolled the wheels against Krishna
The heron demon is killed by Krishna
Another demon called Agasura ( a dinosaur) is killed by Krishna
Krishna saved his colleagues by devouring the Forest Fire.
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியிடப்பட்டுள்ள 405வது அத்தியாயம் (எட்டாவது ஆண்டு 41வது கட்டுரை)
அமேஸிங் க்ரெஸ்கின்!
ச.நாகராஜன்
மனமறியும் வித்தை எனப்படும் மெண்டலிஸம் (Mentalism) இன்று விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. எண்ணத் தூண்டுதலால் எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு கருத்து என் எல் பி எனப்படும் நியூரோ லிங்க்விஸ்டிக் ப்ரொக்ராம் என்ற உத்தியினால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பிறர் மனதைத் தூண்டி அவரை தனது வசத்திற்கு உள்ளாக்குவது சாத்தியம் தானா? விஞ்ஞானிகள் பலர் இந்த்த் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் இந்த நாளில், இது சாத்தியம் தான் என்று இதைச் செய்து காட்டி அசத்துபவர் க்ரெஸ்கின்.
தி அமேஸிங் க்ரெஸ்கின் என்ற பெயரால் இன்று உலகெங்கும் பிரபலமாக அறியப்படும் இந்த மாயாஜால நிபுணரின் இயற் பெயர் ஜார்ஜ் ஜோஸப் க்ரெஸ்ஜி. (George Joseph Kresge; பிறப்பு 21-1-1935; வயது 84). அமெரிக்கரன இவர் லீ ஃபாக்கின் மாண்ட் ரக், தி மாஜிஷியன் என்ற காமிக் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்டு மாஜிக் கலையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்க தொலைக்காட்சி சேனலில் அமேஸிங் க்ரெஸ்கின் என்ற தொடரால் பிரபலமானார். ஐந்து வருடங்கள் இந்தத் தொடர் சக்கை போடு போட்டது.இதை அனைவரும் விரும்பவே மீண்டும் தி நியூ க்ரெஸ்கின் ஷோ என்று புதிய தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
புகழ் பெற்ற இவரது மாஜிக் வித்தைகளில் அனைவரையும் மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் தலையாய வித்தை, நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தினுள் இவருக்குத் தரப்பட வேண்டிய ஒளித்து வ்வைக்கப்பட்டிருக்கும் செக்கைக் கண்டுபிடிப்பது தான்.
இவர் அரங்கத்தின் வெளியே சென்ற பின் அங்குள்ளோர் ஏதாவது ஒரு இடத்தில் செக்கை ஒளித்து வைத்து விடுவார்கள். வரலாம் என்று சொன்னவுடன் அரங்கத்தில் நுழைந்து நேராக செக் இருக்கும் இடத்திற்குச் சென்று அதை எடுத்துக் கொள்வார். கரகோஷம் வானைப் பிளக்கும்.
செக் கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தனக்கு அன்றைய ஷோவுக்காகத் தரப்படவேண்டிய தொகையை வாங்க மாட்டேன் என்பது இவரது உறுதி மொழி.
சுமார் 6000 ஷோக்களில் 11 முறை மட்டுமே இவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்!
சமீபத்தில் 2018, ஏப்ரல் 14ஆம் தேதி நியூயார்க் லயன் தியேட்டரில் இவரது இரண்டு மணி நேர நிகழ்ச்ச்சி நடந்தது. ஆடியன்ஸில் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரிடம் வழக்கம் போல் இவர் ஒப்பந்தத்தை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அந்த ஒப்பந்தப் பெப்பரைக் கண்டுபிடிக்கவில்லை எனில் பணம் வாங்க மாட்டேன் என்ற அவரது உறுதி மொழி அந்தப் பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.
வெளியில் சென்றவர், அழைக்கப்பட்டவுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். ஆனால் உடனே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் எப்போதும் செல்வது போல இந்த முறை அவரால் செல்ல முடியவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத் திருப்பித் திருப்பிச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அங்கு அந்த பேப்பர் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்ட அவர் அன்று டிக்கட் மூலம் வசூலான அனைத்துப் பணமும் விலங்குகளின் நலனுக்காக அவைகள் பராமரிக்கப்படும் ஒதுங்கிடங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் அந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், முதலில் குழுவினர் ஒரு இடத்தில் அந்தப் பேப்பரை ஒளித்து வைத்தனர். அவரை வருமாறு கூறிவிட்டு அவர் வருவற்குள் இன்னொரு இடத்திற்கு அதை மாற்றி ஒளித்து வைத்தனர்.க்ரெஸ்கினோ முதலில் ஒளித்து வைக்கப்பட்ட இடத்திற்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டிருந்தார். இது குழுவின் ஏமாற்று வேலை என அவரது ரசிகர்கள் கோபத்துடன் கூறினர்.
மாயாஜால நிபுணரான க்ரெஸ்கின் மாஜிக்கை ஒரு பொழுது போக்குக் கலையாகவே கருதுகிறார். பிறர் மனதை அறியும் சக்தி எதையும் கொண்டிருப்பதாக அவர் கூறியதே இல்லை.
ஆனால் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை அவர் வெளியிடுவது வழக்கம்.
2002ஆம் ஆண்டில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி லாஸ் வேகாஸில் மாலை 6 மணியிலிருந்து 9.45க்குள் வானில் ஒரு பறக்கும் தட்டு தென்படும் என்றும் அதி ஆயிரக்கணக்கானோர் பார்ப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் இருந்தது. அப்படி ஒருவேளை யாரும் அதைப் பார்க்கவில்லையெனில் 50000 டாலர் நன்கொடையாக அளிப்பதாகக் கூறினார். ஆனால் அப்படி ஒரு வானியல் நிகழ்வு நிகழவில்லை. க்ரெஸ்கினை இது பற்றிக் கேட்ட போது பல பச்சை வண்ணப் பொருளை வானில் பார்த்ததாகக் கூறி இருப்பதால் 50000 டாலரை நன்கொடையாகத் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார். ஹிப்நாடிஸத்தில் நிபுணரான அவர் 200 பேரை மனோவசியம் செய்து பறக்கும் தட்டைப் பார்க்க வைக்க முடியும் என்றார்.
ஹிட்லர் கூட மனோவசியத்தினாலேயே கூட்டத்தினரை ‘கட்டி’ வைத்தார் என்பது அவரது எண்ணம்.
.அவரிடம் மானேஜராக வேலை பார்த்த சீன் மக்ஜின்லி 2008ஆம் ஆண்டு அவருடனான தனது அனுபவங்களை வைத்து ‘தி க்ரேட் பக் ஹோவர்ட்’ (The Great Buck Howard ) என்ற படத்தை எடுத்தார்.
உலகம் கண்ட மனோவசிய நிபுணர்களில் க்ரெஸ்கின் தனிப்பெருமை கொண்டவர். முப்பது வருட வாழ்க்கையில் பதினோரு தரம் மட்டுமே செக்கைக் காணாமல் தோல்வியை ஒப்புக் கொண்ட அவரது நிகழ்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ரால்ப் வில்லியம் ப்ரான் (Ralph William Braun பிறப்பு :18-12-1940 மறைவு: 8-2-2013) அமெரிக்காவில் இண்டியானாவில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயதாகும் போது அவரால் நடக்க முடியவில்லை. முதுகுத்தண்டு வடத்தில் ஏற்பட்ட கோளாறு அவரை ஊனமுற்றவராக ஆக்கியது. ஆனால் மனம் தளராதா ப்ரான் சக்கர நாற்காலியில் செல்ல ஆரம்பித்தார். இண்டியானா பல்கலைக் கழக வளாகம் மிக அகன்ற ஒன்றாக இருக்கவே அவரால் அதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியவில்லை. அதிலிருந்து விலகி சுலபமாக ஓடும் நாற்காலி ஒன்றைச் செய்தால் என்ன என்று யோசித்தார். விளைவு, கடுமையான உழைப்பின் மூலமாக எலக்ட்ரிக் வீல் சேர் ஒன்றை வடிவமைத்தார்.
அத்துடன் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்றையும் வடிவமைத்தார். இதைப் பார்த்து வியந்த பலர் ஊனமுற்ற தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் அதே போலச் செய்து தருமாறு வேண்டினர். உற்சாகத்துடன் ஒரு தொழிலகத்தைத் தொடங்கிய அவர் எலக்ட்ரிக் வீல் சேர்களைத் தயார் செய்து விற்க ஆரம்பித்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் ஒரு தீ விபத்து ஏற்பட அது கருகிச் சாம்பலானது. ஆனால் அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் ஒன்றாக இணைந்து ப்ரானுக்கு உதவி தொழிற்சாலையை மீண்டும் துவங்க உதவினர். 700 தொழிலாளர்கள் பணியாற்றும் மூன்று தொழிற்சாலைகளை அவர் உருவாக்கினார். ஒவ்வொரு மாகாணமாகச் சென்று தன் தயாரிப்புகளுக்கு விற்பனை பிரதிநிதிகளை நியமித்து தனது நிறுவனத்தைப் பெரியதொரு நிறுவனமாக ஆக்கினார் அவர். இன்று 20 கோடி டாலர் நிறுவனமாக அது திகழ்கிறது. அவரது ஊக்கமூட்டும் இந்த மேற்கோளை உலகம் பாராட்டிக் கொண்டாடுகிறது :
மேலே உயருங்கள், எனது நண்பர்களே! பின்னர் மற்றவர்களை வாழ்க்கை ஏணியில் ஏற உதவுங்கள்!
(Rise above, my friends, and reach back to help others climb the ladder of life!)
Research Article by London Swaminathan swami_48@yahoo.com Date: 26 December 2018 GMT Time uploaded in London – 13-54 Post No. 5837
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
River ordeal or Water ordeal and Fire ordeal are found in Vedic literature and later books. We read about Sita’s Fire Ordeal in Ramayana and Fire walking in Jaiminiya Brahmana. It is interesting to see the Babylonian king Hammurabi also listed River ordeal as one of the punishments.
As I have explained in my article posted yesterday, Manu lived before Hammurabi (1792 BCE). Manu is in the oldest book Rik Veda. The following sloka not only showed Manu lived during the days of flowing mighty Sarasvati River but also water ordeal was one of the punishments or atonements.
In chapter 2 Manu says
“The country that the gods made between the two divine rivers, the Sarasvati and Drsadvati, is what they call the Land of the Veda”- Manu 2-17
In chapter 11 he says,
A priest killer……………
“Throw himself three times, head first, into a blazing fire -11-74
Or he may eat food fit for an oblation and walk the length of the Sarasvati river against the current”-11-78.
Manu lived before 2000 BCE; later the river dried up according to the latest scientific discoveries.
Water Ordeal in Code of Hammurabi
Witchcraft
(2)If a man has laid a charge of witchcraft against another man but cannot substantiate his guilt, the person against whom witchcraft is alleged shall go to the river and jump into the river.
And if the mighty river overpowers him, the one who laid the allegations against him shall take possession of his house.
But if the river cleanses him of the guilt, he shall go away restored.
The one who laid a charge of witchcraft against him shall be put to death; the one who jumped into the river shall take possession of the house of the one who made the allegations against him
Tamil Periya Purana
Fire and Water ordeal figured also in the Pariyapurana which gives the life stories of 63 great Saivite saints.
When the politically motivated Jains set fire to the Brahmin boy Sambandar’s residence he came out without any harm. Later the Jains challenged him in various ways. One of the tests they held was Fire ordeal. Both the Jains and Sambandar placed the palm leaf manuscript with their holy Mantras. Sambandar’s palm leaf remained intact whereas the Jains’ one burnt to ashes. Then the water ordeal took place. Both of them placed their palm leaf manuscripts in the Vaigai River. Jains’ palm leaf was washed away; but Sambandar’swent against the river current and reached the banks 12 miles away Madurai. That place is called Thiru Edu Akam (Thiruvedakam). This water ordeal is at least 1400 year old.
River Ordeal in Mahabharata
Bandi was a Vedic scholar in the court of King Janaka . He used to hold learned discussions and debates on Vedic scripture s with visiting scholars who after being defeated, were thrown into river. One such unfortunate loser was Kahoda. Later Kahodas son Ashtavakra mastered all the scriptures by the age of twelve. He defeated Bandi and he was thrown into a river. But being the son of god Varuna , no harm came to him and he ended his earthly existence. Kahoda was restored to life. Later Ashtavakra bathed in the River Samang and his crooks in the body straightened out. This shows the miraculous powers of the river or water. Ashtavakra got eight crooks in his body when he was in the womb of his mother and his father Kahoda spelt the Vedas with mistakes.
What is Water Ordeal?
In Mesopotamia, from the old Babylonian period on, if the sworn testimony by the parties in a legal dispute conflicted or if for some reason the case was not solvable by rational means , it was usual to refer the decision to the river god; in other words to decide by means of a river ordeal . This solemn expedient was in effect a form of divination and the judgment would then be declared in the name of Id, the Divine River, or Shazi, son of the Divine River or Ea, Enki.
It seems likely that one of the litigants, selected by lot, underwent the ordeal. He had to submerge himself in the river at a special location in the presence of the authorities, and possibly swim to a certain distance. If he came out safe he was cleared. If he was overcome by the current and sank, he was guilty and had to return to court for sentencing—- fine or execution. It was not intended that he should drown.
Sometimes a holy river was specified. Daban, Diyala, Hubur , all rivers outside Babylon.
Sources
Hammurabi’s Laws, M E J Richardson, Sheffield Academic Press Who is who in the Mahabharata, Subash Mazumdar, Bharatiya Vidya Bhavan, Bombay Dictionary of the Ancient Near East, British Museum Periapuranam Manu Smrti