ஜோதிடரிடம் Rs.1,57,000 ஏமாந்த பெண்மணி! (Post No.5619)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 3 November 2018

GMT Time uploaded in London – 12-28

Post No. 5619

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

என் அண்ணனிடம் (ஸந்தானம் ஸ்ரீநிவாஸன்) இலவசமாக ஜோதிடம் கேட்க நிறைய பேர் வருவார்கள். அதில் ஒரு சுவையான சம்பவம்.

பரோடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி “என் பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளாகக் கல்யாணத்துக்குப் பார்க்கிறோம்; ஒன்றும் அமையவில்லையே; யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லுகிறாள்” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

என் அண்ணன் சொன்னார்–

“அந்தப் பெண்ணின் மனதில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நாசுக்காக கேட்டுப் பாருங்கள்; ஏனெனில் இது லவ் மேரியேஜ் (LOVE MARRIAGE) ஜாதகம்” .

அந்தப் பெண்மணி சொன்னார்:

“ஐய்யய்யோ!அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது. என் பெண் ஒரு ‘நெருப்பு’. யாரையும் அப்படியெல்லாம் அண்ட விடமாட்டாள்”- என்று.

அந்த அம்மணி போகிறபோக்கில்  இந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக, தான் RS.1,57,000 செலவழித்த கதையைச் சொன்னார்.

அவர் பார்த்த ஒரு ஜோஸ்யர் சொன்னது:

“இதோ பாருங்கள்; உங்கள் பெண்ணின் ஜாதகம் , தோஷ ஜாதகம்; நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரஹத்துக்கும் சாந்தி ஹோமம் செய்ய 17,500 ரூபாய் ஆகும், ஒன்பது பேருக்கு வேஷ்டி, ஒன்பது பேருக்கு சாப்பாடு. ஆனால் ‘எனக்கு குரு தட்சிணை ஒரே ரூபாய்தான்!”

இப்படிச் சொல்லி பலவித கணக்குப் போட்டு ரூ.1 57 000 வாங்கிவிட்டார். இன்னும் கல்யாணம் ஆகவில்லையே!

கொஞ்ச காலம் கழித்து அந்தப் பெண்மணி மீண்டும் வந்தார். நீங்கள் சொன்னது சரிதான் நீங்கள் (என் அண்ணன்) சொன்ன படியே அவள் காதல் கல்யாணம் செய்து கொண்டாள்.

லண்டன் வந்திருக்கும் என் அண்ணன் சந்தானம் சீனிவாசன் சொன்ன சம்பவம் இது.

 

ஸ்வாமிஜி அடித்த ஜோக்!

எங்களுக்கு எல்லாம் மந்திரோபதேசமும் அறிவுரைகளும் வழங்கியவர் ஆயக்குடி (தென்காசி- செங்கோட்டை) ஸ்வாமிஜி கிருஷ்ணா.

அவர் சொல்லுவார்–

‘யாரையும் நம்பக்கூடாது; எந்த சாமியாரையும் நம்பக் கூடாது; சிருங்கேரி, காஞ்சி சங்கராசார்யார்களைத் தவிர வேறு யாரையும் நம்பவேண்டாம்’- என்று 50 ஆண்டுகளுக்கு முன் சொல்லுவார்.

அவர் சொன்ன விஷயம்:

ஒரு சாமியார்  திருவனந்தபுரத்துக்கு வந்தாராம்.

அவர் சொன்னாராம்–

“நான் ஸந்யாஸி; எனக்கு அதிகம் உணவு வேண்டாம்; கொஞ்சம் அன்னமும் மோரும் போதும்; ஆனால் சிஷ்யர்களுக்கு பஞ்சபக்ஷ பரமான்னம் போடுங்கள்; வடை பாயஸம், அப்பளம், ஸ்வீட் எதுவும் குறைவு வைக்கக் கூடாது”- என்று.

அவர் அறைக்குள் ஜன்னல் வழியாகப் பார்த்தால் அவர் அத்தனை வகைகளையும் ‘அடித்து நொறுக்கினாராம்’. (கபளீகரம் செய்தார்).

முன்னர் சொன்ன ஜோதிடர் ‘தனக்கு ஒரே ரூபாய் குரு தக்ஷிணை’ என்று சொன்னவுடன் இது நினைவுக்கு வந்தது!

தலைவனை நம்பாதே; தத்துவத்தை நம்பு.

ஸ்வாமிஜி கிருஷ்ணா எங்களுக்கு சொன்ன இன்னொரு அறிவுரை முன்னரே மநு தர்மசாஸ்திரம் சொன்ன அறிவுரைதான்.

“உண்மையே பேசு; பொய் பேசாதே உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே” (MANU SMRITI 4-138).

எவ்வள வு அருமையான அட்வைஸ்!

 

சுவாமிஜி சொல்லுவார்:

“டேய், யார் ஆத்துக்காவது போய் சாப்பிட்டால் எதையும் நல்லா இல்லை என்று சொல்லாதே; மோர் மிகவும் நன்றாக இருந்தது” என்று சொல்லு என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார்.

அதாவது எதையும் பாஸிட்டிவாக (POSITIVE) சொல் என்பதே இதன் தாத்பர்யம்!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்- குறள் 291

மநு சொன்னதை அப்படியே வள்ளுவனும் செப்பினான்.

-சுபம்–

ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை; 100 அறிஞர்கள் வேண்டுகோள்! (Post.5618)

WRITTEN BY S NAGARAJAN

Date: 3 November 2018

Time uploaded in London – 8-10 AM (GMT)

Post No. 5618

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை; நூறு அறிஞர்களின் வேண்டுகோள்!

ச.நாகராஜன்

1

  1. 2018, செப்டம்பர் 22ஆம் தேதியன்று புதுடில்லியில் ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீக தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட நூறு பேர் ஒன்று கூடி ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநியாயத்தை நீக்குவதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1)   நமது நாட்டில்  அனைவருக்கும் சமமாக ஹிந்துக்களையும் நடத்த வேண்டும். இதற்கென லோக்சபாவில் நிலுவையில் உள்ள பில் நம்பர் 226-2016 உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன்படி ஹிந்து கல்வி நிறுவனங்களை சுயேச்சையாக நடத்த அனுமதிக்க வேண்டும்.

2)   ஹிந்து ஆலயங்கள் சுயேச்சையாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

3)   ஹிந்து சம்பிரதாயங்கள், பண்பாடு ஆகியவை பேணிக் காக்கப்பட வேண்டும்.

4)

  1. வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணம் நமது நாட்டிற்கு வருகிறது.இந்தப் பணம் தேசப் பிரிவினைக்காகவும், இங்கு சண்டையை மூட்டவும் சுயநலமிகளால் செலவழிக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,
  2. ஹிந்து மதத்தின் பண்பாடு, சம்பிரதாயம், சடங்கு உள்ளிட்டவை அரசின் தலையீடின்றி நடத்தப்பட வேண்டும். இதற்கென மத்திய அரசுFreedom of Religion Actஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
  1. காஷ்மீரில் ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட ஆவன செய்ய வேண்டும்.
  2. 2017-18இல் 14 லட்சம் டன்கள் மாமிசம்- பசு மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் விலையேற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் இந்த ஏற்றுமதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  1. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.இவற்றை புனருத்தாரணம் செய்ய வேண்டும். வேத பாடசாலைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். நாட்டுப்புறக்கலைகள், சிற்பம், இலக்கியம் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். இவற்றில் ஈடுபட்டுள்ளோருக்கு வாழ்க்கையை உரிய விதத்தில் நடத்தத் தேவையான பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்க வேண்டும்.
  1. இதர நாடுகளிலிருந்து மத அடிப்படையில் துரத்தப்படும் ஹிந்துக்களுக்கு உரிய விதத்தில் அகதி மற்றும் இந்திய குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்காக இப்போதுள்ள சட்ட குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும்.
  2. அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டு சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். மொழிகளின் அடிப்படையில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் களையப்பட வேண்டும். 80 கோடி ஹிந்துக்களுக்கு சம உரிமை, நீதி ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

***

 

நியாயமான இந்தக் கோரிக்கைகளைச் சொல்லவே சற்று சங்கடமாக இருக்கிறது – 70 ஆண்டுகள் ஆகியும் ஹிந்துக்களின் சொந்த மண்ணில் இவை இல்லை என்பதை எண்ணி இன்று வலியுறுத்த வேண்டிய நிலைமையில் இருக்கும் போது.

ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகள், விசேஷ சலுகைகள், விசேஷ சட்டங்கள் மைனாரிட்டிகளான முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளன. ஆனால் ஹிந்துக்களுக்கோ …

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

இணைவோம்; வெல்வோம்!

நன்றி  : 5-10-2018  Truth  தொகுதி 86~ இதழ் 25

2

அறிஞர்களின் கூட்டம் பற்றிய முழு விவரங்களை ஆங்கில மூலத்தில் கீழே படிக்கலாம் :

 

IndiaFacts Staff @indiafactsorg writes under the caption– “Concerned Hindus demand– end of institutionalized discrimination against Hindus” on 24-09-2018 as follows:

[Editor’s Note: A group of Hindu thinkers and activists met in Delhi on 22nd of September, 2018 to discuss about issues affecting Hindu society. After deliberations they have released a charter of demands which they expect the central government to fulfil. Here is a copy of their press release.]

A group of around one hundred Hindus, including spiritual leaders, academics, authors, doctors, engineers, journalists, public intellectuals and concerned citizens from all walks of life, across the country, deeply disturbed by the systemic and institutionalized discrimination against the Hindu society, gathered in New Delhi on 22nd of September, 2018 to deliberate on various constitutional, legal and public policy issues affecting the Hindu society.

During the deliberations, it was acknowledged that as the inheritor, custodian and trustee of the Indic civilization based on the ethos of Sanatana Dharma the Indian State has bounden civilizational responsibility to protect, preserve and promote the Indic civilization.

A Charter of key Hindu Demands Rights (Discrimination & Appeasement) was debated and drafted, to be presented to the Government of India and the public.

The Charter demands:

  1. End of legal and institutionalised discrimination against Hindus by the Indian State, which is against the spirit of the equality of citizens irrespective of religious identity.

To this effect, the group demands that Dr Satyapal Singh’s Private Member’s Bill No. 226 of 2016 pending in Lok Sabha for amending Articles 26 to 30 of the Constitution should be passed forthwith in the forthcoming Parliament Session, to ensure equal rights to Hindus on par with others in the matters of :

  1. Running educational institutions without undue interference of State;
  2. Removal of Govt control of Hindu temples and places of worship by restoring their management to Hindu society;
  3. Preserving and promoting Hindu heritage and culture; The group recalled that late Syed Shahabuddin, having understood the problem of the Constitutionally imposed disabilities on majority Hindus, had introduced a Private Member’s Bill No. 36 of 1995 in Lok Sabha to widen the scope of Article 30 of the Constitution by suitable amendment to include all communities and sections of citizens bysubstituting the word ‘minorities’ with “all sections of citizens” therein.
  1. A large amount of money comes to Indian entities from abroad, a lot of which is from institutions with ties to foreign governments and their agencies. This money often drives the vested interests of these agencies in India and often ends up subverting Indian society and fuelling conflict and separatism. The following official data indicates that irrespective of political colour of the Central Govt. and despite best efforts of the present Central Govt. to tighten and enforce the law, the quantum of foreign contributions continues to rise leading to ever increasing undue foreign interference in our internal affairs. We rightly refuse foreign aid even in natural disasters not only on grounds of national pride but also because we are capable of generating enough money internally. As there is no free lunch and India is not a beggar Nation, the group urges the Central Government to completely ban all sorts of foreign contributions except those by OCIs in their personal capacity (in recognition of their emotional connect with India) by repealing the existing FCRA and enacting a new Foreign Contributions (Prohibition) Act immediately.
  1. In order to protect and preserve the Hindu native cultural and religious traditions, practices and symbols from unwarranted interference not only by the State and its agencies but also from others, the group urges enactment of Freedom of Religion Act by the Central Government immediately.
  2. In order to prevent repeat of genocide and religious persecution as suffered by the Kashmiri Hindus, the group demands immediate;
  3. Tripartite division of J&K into 3 States of Kashmir, Ladakh and Jammu; b. Abrogation of Article 370 which is the problem of Kashmir, along with repeal of the Constitution (Application to J&K) Order, 1954 issued there under, so that the changes made to the Constitution with respect to J&K, such as the discriminatory Article 35A, also get repealed.
  1. With about 14 lakh tons of meat/beef exported during 2017-18, India has achieved the shameful distinction of the largest meat/beef exporter in the world, quite contrary to Article 48 of the Constitution. This has not only skyrocketed the prices of meat/beef but has also led to growth of meat/beef mafia. The group urges immediate complete ban on export of all types of meat/beef to lower its prices by increasing its availability in domestic market while reducing the adverse impact on the environment and eliminating social friction and law & order issues.
  1. Thousands of temples and sacred places of Hindus are in desecrated, destroyed or ruinous condition. Further, Veda Pathasalas, traditional and folk art forms, literature, dance, music, painting, sculpture, architecture etc which are our intangible heritage and the vehicles for sustenance and transmission of Sanatana Dharma and our age old culture, are all dying for want of patronage and regular livelihood for their practitioners. Therefore, the group while reminding the Indian State of its civilisational responsibility, urges the Central Govt. to immediately establish a Central Public Sector Undertaking to be styled as Haindava Samskruti Jeernoddhaarana Nigam (Hindu Culture Restoration Corporation) with an initial seed capital of not less than Rs. 10,000 crores and an annual grant of similar amount for undertaking reconstruction and restoration of all damaged, desecrated, abandoned and dilapidated Hindu temples and sacred places; revival, nurturing, patronising and promotion of Veda Pathasalas, various traditional and folk art forms, dance, music, sculpture, architecture, painting etc.
  1. Expediency in granting refuge and citizenship to peoples of Indic faiths fleeing religious persecution from any country. The Central Govt. introduced in Lok Sabha a Bill in 2016 to amend the Citizenship Act, which having been referred to a Select Committee, is pending. The Bill in its current form suffers certain difficulties including its doubtful constitutional validity. There are also some genuine concerns expressed by certain people of North Eastern States which needs to be addressed. The group therefore urges the Central Govt for immediate:
  1. Withdrawal of the pending Citizenship (Amendment) Bill,
  2. Amendment of the Constitution by inserting an enabling Article 11-A in the Constitution;
  3. Thereafter amend the Citizenship Act, 1955 by introducing a new Citizenship (Amendment) Bill, 2018 in the forthcoming session of the current Parliament itself.
  1. The creation of an equal opportunity environment for all Indian languages, ending the institutionalized discrimination that exists today. This will fuel both an economic and cultural renaissance, since a large part of India’s population is currently excluded from development and justice due to linguistic discrimination by the State. The Charter as drafted by prominent citizens of India, will include specific demands and policy suggestions to assist the Government and the legislature in ensuring the rights of 800 million Hindus on par with other sections are upheld, as the principles of equality, justice and liberty are essential for the health and vitality of our cherished democracy and for enabling growth of a truly secular and religion-neutral legal, governance and public policy regime and polity as envisaged by Dr. Ambedkar and other founding fathers of our Constitution. (India Facts– Truth be told).

Dr. Eeshankur Saikia For and on behalf of the Group.

Courtesy :  5-10-2018 dated Truth – Volume 86~Issue 25

***

 

16 வகை தானியப் புதிர் (Post No.5617)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 21-27

Post No. 5617

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கூலம் எட்டு என்றும் 16 என்றும் பகர்வர். இந்தக் கட்டத்திலுள்ள

16 வகைத் தானியங்களையும் கண்டு பிடியுங்கள். கீழேயே விடையும் உளது.

16 types of grains

லை ழு ந் து
சா ரா கி கு மொ
மை நெ ங் ச்
பு ல் று சை
ள் ரை
று ளு ள் கொ தோ தி னை

 

கடலை, சா மை , ப ய று, நெல், புல் , ராகி, வரகு, இறுங்கு, தினை, உழுந்து, எள்ளு, கொள்ளு, மொச்சை, அ வரை, தோரை, துவரை,

புல் என்பதைப் புல்லரிசி என்று கொள்ளலாம்.

 

–subham–

HINDU FESTIVALS CROSS WORD PUZZLE (Post No.5616)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 16-53

Post No. 5616

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

IN THIS HINDU FESTIVAL CROSSWORD PUZZLE, THERE ARE OVER 15 NAMES OF HINDU FESTIVALS. JUST TO HELP YOU FIND THE WORDS, I HAVE NUMBERED THE STARTING POINTS.

 

I HAVE GIVEN THE SOLUTION BELOW THE PUZZLE.

1 2 3 4
XXX 5 6
7
8
9 10 11
12
13 14
15
16
17

SOLUTION:–

 

HINDU FESTIVAL NAMES

1.RAKSHABANDAN; 2.SHIVRATRI; 3.NAVARATRI; 4.ONAM

5.HOLI; 6.DIWALI; 7.RAMNAVAMI; 8.VIJAYADASAMI

9.DURGA PUJA; 10.UGADI; 11.BOGI

12.NAGAPANCHAMI; 13.MELA;  14.JANMASHTAMI;

15.EKADASI; 16.SANKRANTI (PONGAL); 17.GANESH CHATURTI

XXX  KUMB MAY BE JOINED WITH MELA (NO.13)

1

R

A K S2 H A B A N D H A N3 O4
K H

5

O L I L A W I D6 A N
U I M A V A N M A R7 V A
M V8 I J A Y A D A S A M
B D

9

U

10

R G A P U J A R 11

B

12

N

A G A P A N C H A M I A O
I M

13

A T H S A M N A J

14

T G
E D R E

15

K A D A S I R I
L I I T N A R K N A S

16

I I
17

G

A N E S H C H A T U R T I

–SUBHAM–

காஞ்சி ஸ்வாமிகள் அடித்த ‘ஜோக்’! (Post No.5615)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 7-59 AM

Post No. 5615

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

என் தந்தை பெயர் வெங்கட்ராமன் சந்தானம் ( V.SANTANAM). மதுரை தினமணிப் பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர் ஆகப் பணியாற்றியவர் (DIED IN 1998)- தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டு புரட்சி செய்தவர். இப்பொழுது இந்து விரோத, மார்கஸீய பத்திரிக்கையாக இருக்கும் ஹிந்து பத்திரிக்கை கூட ஆன்மீகம் என்றால் கடைசி பக்கம் தான் இருக்க வேண்டும், அதுவும் அரைக்கால் ‘பத்தி’ (one eighth of a column) தான் இருக்க வேண்டும் என்ற காலத்தில் என் தந்தை முதல் பக்கத்தில் மூன்று பத்தி (Three column heading) வரை செய்தி போடுவார்.

பத்திரிக்கையின் ஆசிரியரான ஏ.என்.சிவராமனுக்கு (ANS) பக்தி உண்டு என்றாலும் சடங்குகள், கோவில்களில் பகிரங்கமாக ஈடுபடமாட்டார். பத்திரிக்கையிலும் போட மாட்டார். ஆயினும் என் தந்தை, ஏ.என்.எஸ். (சிவராமன்) ஆகியோர் ஏக வசனத்தில் பேசிக்கொள்ளும் அளவுக்குப் பழக்கப்பட்டதால் ஒன்றும் சொல்ல மாட்டார். மேலும் அவர் வசத்தில் இருந்த சென்னை தினமணிப் பதிப்பைவிட மதுரை தினமணிப் பதிப்பு சர்குலேஷனும் (Sales and Circulation) அதிகம்.

 

இப்படி எவ்வளவுதான் ‘நல்ல’ செய்திகளைப் போட்டாலும் என் அப்பாவும் பலமுறை ஏமாந்து இருக்கிறார். ‘வெளுத்தது எல்லாம் பால்’ (All that glitters is not gold) என்று நம்பக் கூடியவர் சந்தானம் (என் தந்தை) என்று ஸ்வாமிஜி கிருஷ்ணா (ஆயக்குடி) கூட காமெண்ட் Comment அடிப்பார். ஒரு முறை குங்குமத்தில் இருந்து விக்ரஹங்களைக் கொடுக்கும் ஒரு ‘மாதாஜி’ (Mataji) பற்றி என் தந்தை செய்தி போட்டார். அவருக்கு நல்ல வரும்படி!! சில மாதங்களுக்குப் பின்னர் அந்த மாதாஜி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தி பம்பாயிருந்து   வந்தது. இது போல பல ப்ஃ ராடு (frauds) களும் பயன் பெற்றனர்.

நிற்க.

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் கூட ஒருவரை தினமணிப் பத்திரிக்கையை வாசிக்கச் சொல்லிக் கேட்பாராம். பின்னர் ஸ்நானம் செய்யச் செய்வார் என்று ,மடத்துக்கு நெருங்கிய வட்டாரம் பகரும்.

சிருங்கேரி சங்கராச்சார்யார், காஞ்சி சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் வந்தால் பெரிய செய்திகளைப் போடுவார். ஆயினும் இரு தரப்பிலும் புகார்கள் வரும். மடத்தில் இருந்து அல்ல. அவர்கள் மஹா பெரியவர்கள். மடத்தின் “மட” பக்தர்களிடமிருந்து!

என் தந்தைக்கு மொட்டைக் கடிதங்கள் வரும். ‘ஏய் சந்தானம், நீ காஞ்சி மடத்து ஆள்! சிருங்கேரி செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறாய்!’ என்று.

இதே போல சிருங்கேரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது ‘ஏய்! ஸந்தானம்’ என்று ஏக வசனத்தில் காஞ்சி பக்தர்கள் மொட்டைக் கடிதங்களும் வருவதுண்டு.

இரண்டு சங்கராசார்யார்கள் மதுரைக்கு வரும்போதும் எனது தந்தை வரவேற்புக் குழுவிலும் இருப்பார். அவர்களும் எங்கள் குடும்பத்துக்கு குறைவிலா ஆஸிகள் வழங்குவர்.

ஒருமுறை காஞ்சிப் பெரியவரை (சந்திர சேகர இந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 1894-1994) எனது தந்தை சந்தித்து நமஸ்காரம் செய்தார். பின்னர் வழக்கம்போல லோகாயத விஷயங்கள் பற்றி சம்பாஷனை தொடர்ந்தது. அப்பொழுது என் தந்தை பய பக்தியுடன் மொட்டைக் கடித விஷயங்களையும் அவருக்கு எடுத்துரைத்தார். உடனே காஞ்சிப் பெரியவர் சிரித்துக் கொண்டே சிலேடை மொழியில் ( இரு பொருள்பட விளம்பல்) “மடச் சண்டை” என்று சொன்னார்.

திருவள்ளுவர் இரண்டு அடிகள் எழுதி சொன்னதை சுவாமிகள் இரண்டு சொற்களில் சொல்லி விட்டார்!

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து- குறள் 645

பொருள்:-

பிறிதொரு சொல்லால் தான் சொல்லும் சொல்லை வெல்லவல்ல இன்னொரு சொல் இல்லாமை அறிந்த பிறகே தான் சொல்லக் கருதியதைச் சொல்ல வேண்டும்.

இவ்விஷயத்தில் காஞ்சிப் பெரியவரை வெல்லும் பெரியவர் எவருமிலர்.

மட= மடம்; மட = மூட, முட்டாள்தனமான)

லண்டன் வந்திருக்கும் என் அண்ணன் சந்தானம் சீனிவாசன் சொன்ன சம்பவம் இது.

— சுபம் —

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை? (Post No.5614)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 2 November 2018

Time uploaded in London – 6-58 AM (GMT)

Post No. 5614

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 2-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஐந்தாம்) கட்டுரை  

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

ச.நாகராஜன்

1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தார். ஆனால் புதிதாக அவர் கண்டுபிடித்த அமெரிக்காவிற்கு அவர் பெயர் சூட்டப்படவில்லை, ஏன்?

ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாட் க்ராஃபோர்ட் இது பற்றிய புதிய ஆய்வு ஒன்றை நடத்தி தனது கருத்துக்களை இப்போது முன் வைத்துள்ளார்.

ஐரோப்பியர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளுக்குப் பெயர் சூட்டியபோது அவர்கள் கொலம்பஸை மதிக்காததும் அதே சமயம் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி செய்த பிரச்சாரமுமே தான் அவர் பெயர் அமெரிக்காவிற்குச் சூட்டப்படாததற்குக் காரணம் என்று மாட் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, கொலம்பஸ் தான் கண்டுபிடித்த நாடு ஆசியாவைச் சேர்ந்தது என்று தான் இறக்கும் நாள் வரை உறுதியாக இருந்ததோடு அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அமெரிகோ வெஸ்புகியோ அது ஆசியாவைச் சேர்ந்த நாடு அல்ல என்று திடமாகத் தெரிவித்தார்.

1451ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனிவாவில் பிறந்த கொலம்பஸ் 1476ஆம் ஆண்டு தனது 25ஆம் வயதில் போர்ச்சுகலுக்குச் சென்றார். அந்தக் காலகட்டம் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் காலமாகத் திகழ்ந்தது. அதற்காக பல்வேறு வரைபடங்களைத் தயாரிக்கும் வணிகத்தில் கொலம்பஸ் ஈடுபட்டார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த கடல் பயணிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த மடெய்ரா தீவுகள் மற்றும் அஜோரஸ் ஆகிய புது இடங்களைக் கண்டுபிடித்தனர்.

 

அந்தச் சமயம் ஐரோப்பாவிற்கு இந்தியாவை அடைய ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கும் தேவை அதிகரித்திருந்தது.  ஏனெனில் ஆடோமேன் சாம்ராஜ்யம் ஐரோப்பிய மாலுமிகள் கான்ஸ்டாண்டிநோபிள் வழியாகச் செல்லும் வழியை அடைத்ததோடு வட ஆப்பிரிக்காவில் செங்கடல் வழியே செல்வதையும் வெற்றிகரமாகத் தடுத்தது.

 

இந்தச் சமயத்தில் தான் கொலம்பஸ் மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று ஒரு புது உத்தியைத் தெரிவித்தார். அப்போது உலகம் உருண்டை என்ற கொள்கை உண்மை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

உலகம் தட்டையானது என்ற கொள்கையை முன் வைத்து அதைத் தன் பிரபலமான எழுத்துக்களால் வலியுறுத்தி வந்த வாஷிங்டன் இர்விங்கின் கருத்து தவறானது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட உலக மக்கள் புதிய கடல் வழிகளைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் கொலம்பஸின் மேற்கு நோக்கிய பயணத் திட்டத்தை போர்ச்சுக்கல் அரசு நிராகரித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, கொலம்பஸ் இதற்குத் தகுதியானவர் இல்லை என போர்ச்சுக்கல் கருதியது. இரண்டாவதாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு இடையில் உள்ள தூரத்தை அவர் மிகக் குறைவாகத் தப்பாகக் கணித்திருக்கிறார் என போர்ச்சுக்கல் நம்பியது.

ஆகவே நிராசையடைந்த கொலம்பஸ் தன் திட்டத்தை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்று அங்கு முன் வைத்தார். ஸ்பெயின் அரசு இதனால் ஏற்படும் வர்த்தக லாபத்தைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு வழியைக் கொலம்பஸ் கண்டுபிடித்தால் இந்தியாவின் வைசிராயாக அவர் நியமிக்கப்படுவார் என்ற உறுதி மொழியைத் தந்தது.

இதனால் மகிழ்ந்த கொலம்பஸ் பஹாமா தீவு  வழியே பயணிக்க ஆர்ம்பித்தார். கியூபாவில் முதலில் கால் பதித்தார். பின்னர் தென் அமெரிக்காவை அடைந்தார்.

ஆனால் தான் அடைந்தது ஆசியாவைத் தான் என்று உறுதிபட அவர் நம்பினார். இதன் மூலம் ஸ்பெயின் அரசு, தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க தனக்குப் பெரும் பதவியையும் செல்வத்தையும் அளிக்கும் என அவர் நம்பிக் கொண்டிருந்தார்.

 

ஆனால் இதே சமயம் போர்ச்சுக்கலைச் சேர்ந்த வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியே சென்று இந்தியாவை அடைந்ததோடு வெற்றிகரமாகத் திரும்பியும் வந்து விட்டார். 1497 முதல் 1499 முடிய நடந்த இந்தப் பயணத்தால் ஸ்பெயினை போர்ச்சுகல் தோற்கடித்து கடல்வழிப் பயணங்களில் புதிய சாதனை படைத்துத் தலைமை இடத்தை அடைந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த ஸ்பெயின் அரசு கொலம்பஸின் தோல்விக்காக அவரைக் கைது செய்து ஸ்பெயினுக்குத் திருப்பி அழைத்து வரத் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருதுகள் அனைத்தையும் உடனடியாக ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்தது.

1493ஆம் ஆண்டு கொலம்பஸ் தனது ஆதரவாளரான லூயிஸ் டி சண்டாஞ்ஜெலுக்கு தான் கண்டுபிடித்த புது நாடு பற்றி ஒரு  கடிதம் எழுதினார்.

ஆனால் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி (1459-1512) போர்ச்சுகல் கொடியைப் பறக்கவிட்டுத்  தன் கப்பலைச் செலுத்தி 1499ஆம் ஆண்டு புதிய உலகைக் கண்டுபிடித்தார். அதைத் தன் கடிதம் மூலம் அவரை ஆதரித்த பிரபுவான லோரென்ஸோ டி மெடிசி என்பவருக்குத் தெரிவித்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களின் பாலியல் பழக்கங்கள், இதர வாழ்க்கை முறைகளையும அவர் சுவைபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்டு ஜெர்மனியைச் சேர்ந்த நிலப்படத் தயாரிப்பாளரான மார்டின் வால்ட்சீமுல்லர் என்பவர் பெரிதும் ஆர்வமுற்று அமெரிக்காவின் முதல் வரைபடத்தைத் தயாரித்தார். அவர் தான் முதன் முதலில் அமெரிக்கா என்ற பெயரைச் சூட்டினார்.

அமெரிகோவின் பெயரை கௌரவிக்கும் வண்ணம் இந்த நிலப்பரப்பிற்கு அமெரிக்கா என்ற பெயரை மார்டின் சூட்டினார். இதனைக் கண்டுபிடித்த பெரும் திறமைசாலியான அமெரிகோவின் நினைவாக இந்தப் பெயரால் இந்த நிலப்பரப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றார் அவர்.

இதைத்  தொடர்ந்து ஆயிரத்து ஐநூறுகளில் அமெரிக்கா என்ற பெயர் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. கொலம்பஸின் பெயர் சூட்டப்படாமல் அமெரிக்காவிற்கு அமெரிகோ வெஸ்புகியின் பெயர் சூட்டப்பட்ட கதை இது தான்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சார்லஸ் குட்இயர் (பிறப்பு 29-12-1800 மறைவு: 1-7-1860) வல்கனைஸிங் உத்தியைக் கண்டுபிடித்த பெரும் கண்டுபிடிப்பாளர். ரப்பரைப் பற்றி அவர் அறியாத விஷயம் இல்லை. என்றாலும் அவர் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வியையே பலமுறை கண்டார். இறுதியில் வென்றார்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். ஒரு முறை நியூயார்க் அருகிலிருந்த க்ரீன்விச்சில் அவர் வாழ்ந்தபோது அவரது மைத்துனரைச் சந்தித்தார். “எனக்கு பத்து டாலர் கொடுங்கள். என்னிடம் இருந்த கடைசி சென்டையும் செலவழித்து விட்டேன். வீட்டிற்குத் திரும்பப் பணம் வேண்டும்” என்றார் அவர்.

“இப்படியெல்லாம் வாழக்கூடாது. இப்படி இருந்தால் வாழவே முடியாது” என்றார் மைத்துனர். “நிச்சயமாக ஒரு நாள் பெரிய ஆளாக ஆவேன்” என்று பதிலளித்தார் குட் இயர்!

தனது இளங் குழந்தையான மகனின் இறுதிச் சடங்கு செய்யக் கூட அவரிடம் பணம் இல்லை. வல்கனைஸிங்கை அவர் கண்டுபிடித்தாலும் கூட அதன் பேடண்ட் உரிமையைப் பெற அவர் போராட வேண்டியதாயிற்று. சிறைவாசமும் அனுபவிக்க நேரிட்டது. நோய்வாய்ப்பட்ட தனது மகளைக் காண நியூயார்க் சென்ற போது வழியிலேயே தனது மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அவர் கேட்க நேரிட்டது.

ஆனால் இவ்வளவு சோகத்திலும் அவர் மனம் கலங்கவில்லை.

தனது வாழ்நாளில் தன் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய அவர் அதற்காக உழைத்தார்; போராடினார். இறுதியில் வென்றார். வாழ்நாளின் இறுதிக்காலத்தில் அவர் பெரிய செல்வந்தராக ஆனார்.

“டாலர் சென்ட் என்ற கணக்கில் வாழ்க்கையை மதிப்பிடக்கூடாது. நான் விதைத்து மற்றவர்கள் பழங்களை அனுபவித்தனர் என்று நான் புகார் கூறவில்லை. ஒரு மனிதன் விதைத்து பழங்களை யாரும் அனுபவிக்கவில்லை என்கின்ற போது தான் அவன் வருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார் அவர். எத்துணை பரந்த மனப்பான்மை அவருக்கு இருந்தது என்பதை இதிலிருந்தே அறியலாம்.

***

University and College Anecdotes (Post No.5613)

 

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 17-43

Post No. 5613

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

GREATNESS OF HARVARD

Dr Charles W Eliot, the eminent educator of Harvard whose fate it has been to be dubiously immortalised by a five foot shelf of books, was once asked how Harvard had gained its prestige as the greatest storehouse of knowledge in the nation.

In all likelihood , said Dr Eliot slyly, it is because the freshmen bring us so much of it, and the seniors take away so little.

Xxx

 

SAVE OUR TOBACCO
Attorney General Seymour of Virginia snorted at the establishment of William and Mary College, which was founded not only to inculcate learning but to save souls? He cried.

Damn your souls. Make tobacco.

Xxx

COW AND COLLEGE

Sir William B—, being at a parish meeting, made certain proposals which were objected to by a farmer. Highly enraged, Sir, said he to the farmer, do you know, sir, that I have been at two universities, and at two colleges in each university?

Well, sir, said the farmer, what o’ that? I had a calf that sucked two kye, an’ the observation I made was, the mair he sucked the greater calf he grew.

Xxx

100 years to make an oak tree!
When James A. Garfield was president of Hiram College a man brought up his son to be entered as a student. He wanted the boy to take a course shorter than the regular one.

My son can never take all those studies, said the father.
He wants to get through more quickly. Can’t you arrange it for him?
Oh, yes, said Mr Garfield, He can take a short course: it all depends on what you want to make of him. When god wants to make an oak he takes a hundred years, but he only takes two months to make a squash.

Xxx

ADVENTURE OF A TOURIST GUIDE
A guide, New at his business, was showing a group of tourists around Oxford. Conscientiously, he pointed out all the places of interest. Coming in front of one of the buildings he paused and said,
‘And this is Trinity Hall, where the president of the college, the famous Benjamin Jowett, lives.’
Glancing around at the upturned faces, the guide then stooped and picked up a handful of gravel and threw it at a second story window. A red faced and a furious man opened the window almost immediately and peered out.

And that is president Jowett himself, said the guide in a tone of voice as though he had just completed a task well done.

Xxx

MISS

Hendrik Willem Von Loon was visiting Cambridge.
That, said someone who was showing him around the university, is Miss Jones, pointing to a formidable looking female striding along before them. She is the mistress of Ridsley Hall.

Who, asked Von Loon, is Ridsley Hall?

Xxx Subham xxx

ஸம்ஸ்க்ருதம் சாகாது! சாகவும் முடியாது!! (Post No.5612)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 8-53 am

Post No. 5612

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஸம்ஸ்க்ருதம் செத்தால் தமிழும் சாகும். ஏனெனில் தமிழ் இலக்கியம், தமிழ் அகராதி, நிகண்டு முழுவதும் பிரிக்க முடியாத அளவுக்கு சம்ஸ்க்ருதச் சொற்கள்!!

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் எழுதிய ‘மைத்ரீம் பஜத’ என்ற உலக சமாதான, உலக அமைதி, மக்கள் நல் வாழ்வு பற்றிய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி , ஐ.நா.சபையில் பாடியதன் மூலம் ஸம்ஸ்க்ருத ஒலி உலக நாடுகள் முழுவதிலும் ஒலித்தது.

ஸம்ஸ்க்ருதத்தில் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் போன்ற தனிப்பாடல் திரட்டு நூல்கள் ஏராளம், ஏராளம். அதில் அதி பயங்கர ‘செக்ஸி’ பாடல் முதல் நக்கல், கிண்டல் பாடல்கள் வரை பல்லாயிரம் உள.

யார் எல்லாம் ஸம்க்ருதத்தைக் கிண்டல் செய்கிறார்களோ அவர்கள் பெயர்கள், அப்பா பெயர்கள், அம்மா பெயர்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்றும் காட்டினேன்.

 

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ, திருக்குறளில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ அவை செத்துவிடும் என்றும் காட்டினேன்.

தமிழில் இது வரை ஒரு அகராதியோ, நிகண்டோ வரவில்லை என்பதையும் சொல்லுவேன். பக்கத்துக்குப் பக்கம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!! ஆனால் நாம் அதை தமிழ் நிகண்டு, தமிழ் அகராதி என்போம்!!

நிற்க.

இன்றும் கூட ஸம்ஸ்க்ருதத்தில் நையாண்டி பாடல் எழுத முடியும் என்று மதுரை அன்பர் எழுதியதை எனது சகோதரர் (வாட்ஸ் அப்பில் வந்ததை எனக்கு) அனுப்பினார். இதோ இட்லி பற்றிய ஸம்ஸ்க்ருத  கவிதை:–

 

–subham–

தன்னைத் தானே புகழாதே-குறள் கதை (Post No.5611)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 7-03 am

Post No. 5611

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. இதை அவ்வையார், மநு, வள்ளுவர், அதிவீரராம பாண்டியன் முதலிய பல அறிஞர்கள் சொன்னதைக் கீழே கொடுத்துள்ளேன். இதை விளக்க ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துரைப்பேன்.

கல்கத்தா நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. அந்தக் காலத்தில் கடுமையான குற்றம் புரிந்தோரை அந்தமான் தீவிலுள்ள தனிமைச் சிறைக்கு அனுப்பி விடுவர். மனித வாடையே இல்ல்லாமல், புழுத்த கஞ்சியைச் சாப்பிட்டுக்கொண்டு வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும். இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோரையும் பிரிட்டிஷார் இப்படிக் கடும் குற்றம் இழைத்ததாகக் கருதி அனுப்பினர். சாவர்க்கர் போன்றோர் இப்படி அனுப்பப் பட்டனர். அது வேறு கதை. நான் சொல்வது உண்மைக் குற்றவாளி கதை.

வத்தலும் தொத்தலுமாக இருந்த ஒருவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி போலீஸார் சொன்னார்கள்:- இவன் அதி பயங்கரக் குற்றவாளி. இவனுக்கு ஜீவாந்தர சிக்ஷை கொடுத்து அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்.

நீதிபதி சொன்னார்-

ஐயோ பாவம்! காற்றடித்தால் பறந்துவிடுவான் போல் இருக்கிறதே. இவன் என்ன அப்படிக் குற்றம் புரிய முடியும்? இவனைப் போய் அந்தமானுக்கு அனுப்பச் சொல்லுவது நியாயமா?

இதைக் கேட்டதுதான் தாமதம்! அந்தக் குற்றவாளி, அனுமார் போல ஒரே தாவாகத் தாவி, கூண்டுக்கு வெளியே குதித்தான்.

“என்ன நினைத்தீர்கள் என்னை? நான் காற்றடித்தால் பறப்பவன் அல்ல. என்னால் எதுவும் செய்ய முடியும்” என்று மாரைத் தட்டி வீர வசனம் பேசினான்.

 

ஜட்ஜ் சொன்னார்:

யார் அங்கே? அவனை மீண்டும் கூண்டுக்குள் ஏற்றுங்கள். இந்த ஆள் எதையும் செய்ய வல்லவன். நோஞ்சான் அல்ல. அந்தமானுக்கு அனுப்புங்கள். இவனுக்குக் கடுங்காவல் தண்டனை.

தன்னைத் தானே புகழ்வது எவ்வளவு அபாயம்!

நுணலும் தன் வாயால் கெடும், எங்கப்பன் குதிருக்குள் இல்லை — என்ற பழமொழிகளும் நினைவுக்கு வரும்.

From my old post:–

இதோ அறிஞர்கள் சொன்னது என்ன என்று படியுங்கள்:–

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே), வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில்  அவ்வையார்  அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

பொருள்:

தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

–SUBHAM–

 

மீ டூ?! Me Too – ஓடாதீங்க, படியுங்க!! (Post No.5610)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 1 Novemberr 2018

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

Post No. 5610

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

ச.நாகராஜன்

Me Too? மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

Me Too பற்றி ஒரு ஜோக் சொல்லப் போறேன்னு சொல்ல வந்தேன். அதற்குள் இப்படி ஓடினா, எப்படிங்க!

கொஞ்சம் மேலே படிங்க!

ஜோக் இது தான்! கார்ட்டூனில் வந்தது இது.

கணவன் அலுவலகம் செல்லும் போது “ ஐ லவ் யூ” என்று சொல்லி விட்டுக் கிளம்ப ஆயத்தமானான்.

மனைவி Me Too என்கிறாள்.

அவ்வளவு தான், அலறி அடித்துக் கொண்டு கணவன் ஓடுகிறான்!

நல்ல ஜோக், இது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை!

*

மீ டூவை ஒட்டி எழுந்த வீடியோக்களை இணையதளத்தில் காணலாம்.

நாளுக்கு ஒரு – இல்லை, பல – வீடியோக்கள் –  காமவெறிக் கவிஞரைப் பற்றிய பரபரப்பூட்டும்  செய்திகளைத் தருகின்றன.

‘உன் இடுப்போ ஒரு உடுக்கை

உன் மார்போ  ஒரு படுக்கை’

என்ற ‘தமிழை வாழ வைக்கும் மகத்தான தமிழ் காமக் கொடூரக் கவிஞர்’ என்னை நோக்கிப் போனில் பாடினார் என்று ஒரு பெண் சொல்லும் வீடியோ!

பிரபல பாடகர் ஒருவரின் மருமகள், ‘அந்த ஆள் அப்படிப்பட்டவர் தான்’ என்று கூறும் ஒரு வீடியோ!

ஆண்டாளைப் பழித்த அவனுக்கு ஆயுள் முழுவதும் சாபம் தான் என்று ஒரு வீடியோ!

காமக் கொடூரக் கவிஞரின் மனைவியே அவர் நடத்தும் பெண்கள் ஹாஸ்டலில் அந்த மனிதர் வரும் போதெல்லாம் எல்லாப் பெண்களும் கதவை சாத்திக் கொண்டு ரூமிலேயே இருக்க வேண்டும், வெளியில் இருக்க வேண்டிய பெண்கள் மார்பில் துப்பட்டாவைக் கண்டிப்பாக மார்பில் போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாக ஒரு வீடியோ!

ஏகப்பட்ட பெண்கள் அந்தக் கொடூரனால் அவஸ்தைப் பட்டதாகத் தனக்கு ஏராளமான ட்விட் வருவதாக ஒரு வீடியோ!

சொல்லி மாளவில்லை, வீடியோக்களின் எண்ணிக்கை.

இதை வழக்கம் போல பார்ப்பனீயமாக மாற்ற முயலுகிறது இன்னொரு வீடியோ!

தடவிப் பார்க்க ஆசைப்படும் போது பார்ப்பனீயம் தெரியவில்லை, அதைத் தட்டிக் கேட்டால் பார்ப்பனீயமா என்று இன்னொரு வீடியோ!

பிரபல நடிகர் இப்படிப்பட்ட கொடூரங்களைத் தட்டிக் கேட்க நான ஒரு தளம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லும் ஒரு வீடியோ;

அட, உனக்கே ஒரு மீ டூ வரப்போகிறது என்று அவரை நையாண்டி செய்து இன்னொரு பிரப்ல மாஜி வில்லன் நடிகரின் வாரிசு முழங்கும் இன்னொரு வீடியோ!

அட, நல்ல தமிழகமே! உனக்கு இப்படி ஒரு சாபக் கேடா!

நல்லவரை வீட்டிற்கு அனுப்பியதன் பலனை 1967லிருந்து அனுபவிக்கிறாயா!

*

ஒரு அரைவேக்காடு – கிறிஸ்தவ திராவிட இயக்கப் பேர்வழி – சின்ன வயது – கண்டபடி தமிழ்நாட்டாரைப் பேசும் ஒரு வீடியோ! அதில் அந்தப் பண்பாடு கெட்டவன் ரமண மஹரிஷியைப் பற்றியும் பேசுவதைக் கேட்ட பின்னர் தமிழகத்தின் மொத்த அவலமும் தெரிய வருகிறது.

பிரபல அப்பா நடிகரைப் பற்றி மகள் உண்மைகளைக் கொட்டிப் பேசும் வீடியோ!

பிரபல நடிகை பரிதாபமாக நடு இரவில் முழித்துப் புலம்புவதாக – “கேள்விப்படுவதாக” – ஒரு வீடியோ!

பழைய கால ஹீரோ நடிகர் – இன்று பரிதாபகரமான நிலையில் இருப்பதாக ஒரு வீடியோ!

முஸ்லீம்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

எல்லாம் ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் நீடிக்கும் அவ்வளவு தான்!

அதற்குள் செய்ய வேண்டிய டாமேஜை செய்து முடித்து விடும்!

*

இவற்றில் எத்தனை உண்மையோ!

எத்தனை பொய்யோ!

ஒரு தொழில்நுட்ப உத்தியை இந்த அளவு கேவலமாக மாற்றும் “சிறந்த பண்பை” இன்றைய தமிழகம் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கிறதா?

காமக் கொடூரக் கவிஞன் போன்றவரை எக்ஸ்போஸ் செய்ய வீடியோவின் துணையை நாடினேன்; மீடியாவை அழைத்து ‘ மீ டூ’ செய்தேன் என்றால் புரிகிறது;

ஆனால் இதையே வெறுப்பை வளர்க்கும் கிறிஸ்தவ, ஜிஹாதி, கம்யூனிஸ, தீய திராவிட சக்திகள் முதலியவற்றின் கருவியாக மாற்றும் போது தான் மனம் கசக்கிறது!

*

ஆபாசமாக எழுதும் மஞ்சள் பத்திரிகையான ‘இந்துநேசனை’ கண்டு கொதித்து சின்ன அண்ணாமலை அருள் என்ற கமிஷனரிடம் ரிபோர்ட் செய்ய, அவர் ஒரே நாளில் அந்தப் பத்திரிகையைத் தடை செய்ததை சின்ன அண்ணாமலை புத்தகத்தின் வாயிலாகப் படித்து அறிகிறோம்.

மஞ்சள் பத்திரிகை ஒழிந்தது.

இப்போது ஒரு தொழில்நுட்ப உத்தியாக மஞ்சள் வீடியோ மலர்கிறதோ?!

மஞ்சள் வீடியோ தமிழகத்தை மஞ்சள் தமிழகமாக ஆக்கி விடுமோ?!

’இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்’, மீ டூ இயக்க வெளிப்பாடுகள் நிச்சயம் அவசியமே!

ஆனால் இதை பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால் திசை திருப்புவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம் அல்லவா!

இதற்கு இன்றைய சட்டத்தில் இடமில்லையா, அல்லது இடமிருந்தும் அமுல் படுத்த மனம் இல்லையா?

சிந்திக்க வேண்டிய கேள்வி இது!

***