‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 19-34 (British Summer Time)

 

Post No. 5415

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கொழ கொழ  கண்ணே எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

 

இப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.

 

நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப்  பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.

 

‘கொழ கொழ  கண்ணே’ என்று துவங்கி

 

‘என் பெயர் ஈ, இது தெரியாதா’? என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.

 

 

 

 

 

 

FULL  RHYME

தமிழ் வாழ்க

 

–சுபம்–

லீட்னெர் காலமானார்- 1899-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5414)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 18-52 (British Summer Time)

 

Post No. 5414

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

1899ஆம் ஆண்டு மொழியியல் அறிஞர் டாக்டர் லீட்னர் இறந்தவுடன் விவேக சிந்தாமணியில்

ஒரு அனுதாபச் செய்தி வெளியானது.

 

இதோ அந்தச் செய்தி:–

 

Gottlieb Wilhelm Leitner or Gottlieb William Leitner M.A., Ph.D., L.L.D., D.O.L. (14 October 1840 – 22 March 1899) was a British orientalist.

 

WHAT DID I DISCOVER IN INDIA?– JAWAHARLAL NEHRU (Post No.5412)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 17-53 (British Summer Time)

 

Post No. 5412

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Quotes from Jawaharlal Nehru’s ‘Discovery of India’

Man’s dearest possession is life, and since it is given to him to live but once, he must so live as not to be seared with the shame of a cowardly and trivial past, so live as not to be tortured for years without purpose, so live that dying he can say, ‘All my life and my strength given to the first cause of the world- the liberation of mankind’ –Nicolai Ostrovsky
Xxxx

We in India do not have to go abroad in search of the past and the distant. We have them here in abundance. If we go to foreign countries, it is in search of the present. That search is necessary, for isolation from it means backwardness and decay.

Xxxx

Nearly five months have gone by since I took to this writing and I have covered a thousand hand written pages with this jumble of ideas in my mind. For five months I have travelled in the past and peeped into the future and sometimes tried to balance myself on that point of intersection of the timeless with time.

Xxx

On June 15th both were discharged ( Narendra Deva and Nehru) , 1041 days after our arrest in August 1942. Thus, ended my ninth and the longest term of imprisonment.

Xxx

What did I discover?
The discovery of India — what have I discovered.
It was presumptuous of me to imagine that I could unveil her and find out what she is today and what she was in the long past. Today she is four hundred million separate individual men and women, each differing from the other, each living in a private universe of thought and feeling. If this is so in the present, how much more difficult is it to grasp multitudinous past of innumerable successions of human beings. Yet something has bound them together and binds them still. India is a geographical and economic entity, a cultural unity amidst diversity, a bundle of contradictions held together by strong but invisible threads.

 

Overwhelmed again and again, her spirit was never conquered, and today when she appears to be the plaything of a proud conqueror, she remains unsubdued and unconquered. About her there is the elusive quality of a legend of long ago; some enchantment seems to have held her mind. She is a myth and an idea, a dream and a vision, and yet very real and present and pervasive. There are terrifying glimpses of dark corridors which seem to lead back to primeval night, but also there is the fullness and warmth of the day about her. Shameful and repellent she is occasionally, perverse and obstinate, sometimes even a little hysteric, this lady with a past, but she is very lovable, and none of her children can forget her wherever they go, whatever strange fate befalls them. For she is part of them in her greatness as well as her failings, and they are mirrored in those deep eyes of her that have seen so much of life’s passion and joy and folly, and looked down into wisdoms well.

Each one of them is drawn to her, though perhaps each one has a different reason for that attraction or can point to no reason at all, and each sees some different aspect of her many -sided personality. From age to age she has produced great men and women, carrying on the old tradition and yet ever adapting it to changing times.

 

What Tagore said………………

Rabindranath Tagore, in line with that great succession, was full of temper and urges of the modern age and yet was rooted in India’s past and in his own self built up a synthesis of the old and the new.’ I love India’, he said, ‘not because I cultivate the idolatry of geography, not because I have had the chance to be born in her soil but because she has saved through tumultuous ages the living words that have issued from the illuminated consciousness of her great ones’. So many will say, while others will explain their love for her in some different way.

 

Xxx SUBHAM xxx

இந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்! (Post No.5412)

Lyre player in South Kensington, London taken in August 2018

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 8-59 AM(British Summer Time)

 

Post No. 5412

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ARTICLE WRITTEN ON THE OCCASION OF A MEETING OGANISED IN FRANCE IN MEMORY OF SWAMI VIPULANANDAR IN SEPTEMBER 2018.

யாழ் என்ற இசைக் கருவியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு மனிதரின் பெயர் நினைவுக்கு வரும் என்றால் அவர் சுவாமி விபுலாநந்த அடிகள்தான். சுவாமி விபுலாநந்தர் நினைவைப் போற்றும் வகையில் மகாநாடு கூட்டியிருப்பதும் அவர் நினைவாக மலர் வெளியிடுவதும் போற்றுதற்குரிய பணிகள்.

 

 

சுவாமி விபுலாநந்தர் பற்றியும், யாழ் பற்றியும் விக்கிபீடியாவிலும் ஏனைய பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் ஏராளமான செய்திகள் உள. அவர் இலங்கையின் கிழக்குப் பகுதியில் 1892-ஆம் ஆண்டு பிறந்து, 1947-ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். அதுவும் கரந்தைத் தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்கொள்ளம்புதூர் கோவிலில் அவரது யாழ் நூலை  5-6-1947-ல் அரங்கேற்றிவிட்டு ஆறே வாரங்களில் உயிர் நீத்தார்;  இப்படி இறந்தது, இந்த ஆய்வு நூலுக்காகவே இறைவன் அவரை பூவுலகிற்கு அனுப்பி வைத்தாரோ என்று எண்ணச் செய்கிறது.

 

 

ஏற்கனவே எல்லா கட்டுரைகளிலும் வந்த விஷயங்களை மீண்டும் அலசாமல் ஒரு சில ஆய்வு வினாக்களை எழுப்பி விடை காண முயல்கிறேன்

 

திருக்குறளில் யாழ்தான் வருகிறது; வீணை இல்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு நூல் என்று பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதல் முதலாக வீணையைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் தேவார காலத்திலும் கூட யாழ் பற்றி பாடப்பட்டுள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரை நாம் அறிவோம்.

 

‘யாழ்’தான் வீணையா? அல்லது யாழின் உருவம் மாறி வீணையானதா? இந்துக் கடவுளரின் கைகளில் எல்லாம் வீணை மட்டுமே உளதே!

 

இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. உலகில் எதுவுமே மாறாமல் இருக்காது. பழைய கால பழக்க வழக்கமானாலும், பொருள்களானாலும் மாறிக்கொண்டேதான் வரும் (Change is inevitable). அப்படிப் பார்க்கையில் யாழ் போய் வீணை வந்தது என்றும் சொல்லலாம். அல்லது இந்தியா போன்ற பரந்த ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இசைக் கருவிகளும் இருந்திருக்கலாம்.

 

வேதத்தில் வீணையும், யாழும்!

ரிக்வேதத்தில் பாணன்

யாழ் (Harp or Lyre or Lute) இசைத்துப் பாடிய பாணர்கள் பற்றி சங்க இலக்கியம் முழுதும் காண முடிகிறது. இது உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்திலும் இருக்கிறது. பண் என்பதிலிருந்து பாணன் தோன்றி இருக்கலாம். ரிக் வேதத்தில் வாண (VAANA) என்ற சொல் ‘இசைக் கருவி மூலம் வரும் சங்கீதம்’ என்ற பொருளில் வந்துள்ளது. ‘வ’ என்ற எழுத்தும் ‘ப’ என்ற எழுத்தும் இடம் மாறுவதை இந்திய மொழிகளில் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த எடுத்துக் காட்டு வங்காளம்= பங்காளம்- பெங்கால்- பாங்க்ளாதேஷ். (WEST BENGAL, BANGLADESH= VANGA THESAM)

 

ஆக, வாண =பாண என்று மாறுவதில் வியப்பொன்றுமில்லை. ரிக் வேதத்தில் முதல் முதலாக ஸப்த ஸ்வரங்களைக் காண்கிறோம். பின்னர் இது உலகெங்கும் பரவியது. சுமேர், கிரேக்கம், தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது. ரிக் வேதத்தை தற்போதைய ஆராய்ச்சிகள் கி.மு 1700-க்கு முன் என்று நிர்ணயித்துள்ளது. ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு.6000 என்றும் சொல்லுவர்.

 

மேற்கோள் வரும் இடங்கள்:-

வாண- ரிக் வேதம் 1-85-10; 8-20-8; 10-97-8; 10-32-4

வாண- அதர்வண வேதம்- 10-2-17

 

ரிக்வேதத்தில் ஸப்த ஸ்வரங்கள் (SEVEN NOTES) – 10-32-4

 

மஹாவ்ரத சடங்குகளில் (MAHA VRATA CEREMONY) நூறு தந்திகளுடன் (நரம்புகளுடன்) உள்ள ‘சத தந்து’ (SATA-TANTU) என்ற யாழ் மூலம் இசை எழுப்பப்பட்டது பற்றி பஞ்சவிம்ச பிராமாணத்தில் காணலாம். அதற்கு முன் தைத்ரீய சம்ஹிதை (7-5-92) காடக சம்ஹிதை (24-5) ஆகியவற்றிலும் நூறு நரம்பு இசைக் கருவி குறிப்பிடப்படுகிறது.

 

 

‘சப்தவாணி’ (VAANIIS) என்ற சொல், ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதையும் ஏழு சுரங்கள் என்று கொள்வோரும் உண்டு (1-164-24; 3-1-6; 9-103-3 முதலியன).

மக்டொனல் போன்றோர் இது யாப்பிலக்கணச் சொல் என்பர்.

 

SOURCE FOR REFRENCES- VEDIC INDEX OF NAMES AND SUBJECTS, VOL.2, AA MACDONELL AND AB KEITH

 

Lyre player in Croatia

எனது கருத்து

பண், பாண, வாண முதலிய சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூத்த இந்திய (Proto-Indian) மொழியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். கிரேக்க மொழியிலும் ‘பண்’ என்ற தெய்வம் கிராமீய, கானக சங்கீதத்துக்குரிய தேவதை (PAN- GREEK GOD OF RUSTIC MUSIC) என்பதைக் காண்கையில் இரு உறுதியாகிறது

 

 

முதலில் தோன்றிய யாழ், வீணைக்கு வழி வகுத்திருக்கலாம். அல்லது இரண்டு வகை இசைக் கருவிகளும் ஒரே நேரத்தில் புழங்கி இருக்கலாம்

 

 

தமிழில் நாம் மகர யாழ், சகோட யாழ், பேரியாழ்,  செங்கோட்டி யாழ், நாரத யாழ், தும்புரு யாழ் முதலிய யாழ் வகைகளை சிலப்பதிகார உரை, கல்லாடம் முதலிய நூல்களில் காண்கிறோம். சங்க இலக்கியதில் ஆற்றுப் படை நூல்களிலும் காண்கிறோம்.

Tamil Yaaz from Tamil Kodi Magazine.

வேதத்தில் வீணை

 

யாழ் என்று கருதப்படும் ‘சத தந்து’ (நூறு நரம்பு இசைக் கருவி) வுக்குப் பின்னரே வீணை என்ற சொல் வேதத்தில் வருகிறது. வீணை வாசிப்போன் (வீணா வாத) என்ற சொல் தைற்றீய சம்ஹிதையில் (யஜூர் வேதம்) முதலில் வருகிறது. பின்னர் சதபத பிராமண நூலிலும் குறிப்பிடப்படுகிறது. புருஷமேத யாகத்தில் பலியிடப்படவேண்டிய பல மக்களில் வீணை வாசிப்போனும் ஒருவன் (‘பலி’ என்பது உண்மையில் உயிக்கொலை அல்ல; நாம் கடவுளுக்கு பிரசாதத்தை ‘நைவேத்யம்’ செய்வது போல அவர்களை யாக குண்டத்துக்கு முன் நிறுத்திவிட்டு பின்னர் உயிருடன் அனுப்பிவிடுவர்)

 

வீணையை தோல் உறை போட்டு மூடி வந்த குறிப்பும் வீணையின் தலை, வயிறு , தந்தி, என்று உறுப்பு உறுப்பாக வருணிக்கும் குறிப்புகளும் ஐதரேய ஆரண்யகத்தில் உள்ளன.

 

மேற்கோள் வரும் இடங்கள்:-

‘வீணா’- தைத்ரீய சம்ஹிதை 6-1-4-1; காடக சம்ஹிதை 24-5; மைத்ராயணீ சம்ஹிதை 3-6-8; சதபத பிராமணம் 3-2-4-6

‘வீணா வாத’- யஜூர் வேத வாஜசனேயி சம்ஹிதை 30-20; தைத்ரீய பிராமணம் 3-4-15-1

 

வீணையின் ‘தோல் உறை’, உறுப்புகள்- ஐதரேய ஆரண்யகம் 3-25; சாங்க்யாயன ஆரண்யகம் 8-9.

 

‘வீணா காதின்’ (வீணை வாசிப்போன்)- தைத்ரீய பிராமண 3-9-14-1; சதபத பிராமண 13-1-5-1 முதலிய இடங்கள்

 

இவை அனைத்தும் இசைக்குரிய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. வீணை , யாழ் முதலிய கருவிகளை யாக யக்ஞங்களில் பயன்படுத்தியது அவர்கள் மிகவும் முனேறிய ஒரு நாகரீகத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

 

ஒர் குழுவுக்குத் தலைவனான ‘வீணா  கானகின்’ (ஆர் கெஸ் ட் ரா தலைவர்) பற்றியும் சதபத பிராமணம் சொல்கிறது!

 

 

சிங்கார வேலு முதலியார் வெளியிட்ட அபிதான சிந்தாமணியிலும் யாழ் பற்றிய விவரஙகள் உள.

 

சுமேரியாவில் யாழ்

சுமேரியா, அக்கடிய, ஹிட்டைட் (Sumerian, Akkadian, Hittite) கலாசாரம் தொரபாக கிடைத்த களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் எழுத்துக்களில் இசைக்குறிப்புகள் கிடைத்துள்ளன. அங்கும் நரம்பு, தோல், காற்று வகை வாத்தியங்கள் இருந்தன. ஊர் (Ur) என்னுமிடத்தில் (இராக்), மன்னனின் கல்லறையில் இசைக்கருவிகள் இருந்தன குறிப்பாக யாழ் போன்ற இசைக்கருவிகள் மாட் டின் முகத்துடன் (Bovine shape) வடிவமைக்கப் பட்டிருந்தன.கி.மு.2000 வாக்கில் சதுர, செவ்வக வடிவ (யாழ்) இசைக்கருவிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு  ஹிட்டைட் பீங்கான் பானையில் ஆறு கருவிகள் வரையப்பட்டுள்ளன. இதிலிருந்து கி.மு.2300 முதல் நரம்புக் கருவிகளை அவர்கள் பயன்படுத்தியதை அறிகிறோம். ஏனைய குழல் வாத்தியங்கள் , மத்தளம் போன்ற தோல் கருவிகள் ஆகியனவும் சிலின்டர் முத்திரைகளில் வரையப்பட்டுள்ளன.

 

கி.மு 1800 முதல் பள்ளிக்கூட பாடங்களில் (Part of school curriculum) இசையும் இருந்தது. கோவில்களில் இசையும் கற்பிக்கப்பட்டது. இசைவாணர்கள் அரண்மனையிலும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரியும் (Superintendent) பதவியில் அமர்த்தப்பட்டார். அஸிரிய (Assyrian) குறிப்புகள் வெளி நாட்டு இசைவாணர்கள் பற்றியும் பேசுகின்றன.

 

 

சமயச் சடங்குகள், விழாக்கள், திருமணங்கள், மந்திர-தந்திரச் சடங்குகள் ஆகியவற்றில் இசை ஒரு  முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. குருமார்கள் கூட இசைக்கருவிகளை வாசித்தது பற்றி அறிகிறோம். ஹிட்டைட் கலாசாரத்தில் ஆடல் பாடலுடன்    ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இராக் நாட்டில் (மெஸபொட்டோமியா) சுமேரியன், அக்கடியன் ஆகிய இரண்டு முறைகளும் ஒரே நேரத்தில் வழக்கில் இருந்தன. சுமேரியன் முறையில் முறையான ராகங்கள் (Tunes, Patterns) இருந்தன. அக்கடியன் முறையில் ஏழு ஸ்வரங்கள், ஒன்பது நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டன. க்யூனிபார்ம் எழுத்துக் களிமண் பலகைகளில் சங்கீதக் (Notations) குறியீடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

Source:- Dictionary of the Ancient Near East, British Museum Publication.

Picture by Lalgudi Veda

எகிப்தில்

எகிப்திய ஓவியங்களிலும் யாழ் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைவாணர்களைக் காணலாம். அவர்களும் இசைத் தெய்வங்களை வழிபட்டனர்.

பைபிளிலும் பல இசைக்கருவிகளின் பட்டியல் உள்ளது.

 

மாயன், சீன கலாசாரங்களில் ஆதிகாலத்திலேயே இசை முழக்கம் இருந்த போதும் யாழ் போன்ற கருவிகளைக் காண முடியவில்லை. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் கூட அவர்களுகே உரித்தான இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்து இசைக்கின்றனர்

இந்திய சிற்பங்களில் வீணை தோன்றியது பிற்காலத்தில்தான். ஐந்தாவது நூற்றாண்டு குப்தர் காலத்தில் கூட யாழ் போன்ற இசைக் கருவிதான் உளது. ஆக தொல்பொருட் துறை சான்றின்படி (Archaeological evidence) நமக்குக் கிடைத்த பழைய சிற்பம் யாழ்தான்.

 

யாழ் இப்பொழுதும் உபயோகத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாடதம் லண்டனில் சவுத் கென்ஸிங்க்டனில் (South Kensington in London)  மியூஸியங்களுக்குச் செல்லும் பாதையில் ஒருவர் யாழ் போன்ற கருவியை வாசிப்பதைப் புகைப்படம் எடுத்தேன். குப்தர் கால சிற்பங்களில் யாழ் வாசிக்கும் பெண்மணி இருக்கிறாள். சுமேரியாவில் கிடைத்த சில பாகங்களைக் கொண்டு செயற்கையாக யாழை வடிவமைத்து மியூஸியங்களில் வைத்திருக்கின்றனர். எனவே உலகம் முழுதும் யாழ் அல்லது யாழ் போன்ற கருவிகளை மக்கள் இசைத்து மகிழ்ந்தது தெரிகிறது. இசை என்பது சர்வதேச தொடர்பு மொழி (Music is a universal language) . பிராணிகளையும் மயக்கும் இசைக்கு மயங்காதோர் யார்?

 

முடிவுரை

உலகம் முழுதும் இசை வழங்கியதும் தோல்,காற்று (குழல்), நரம்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதும் பல நாட்டு வரலாறுகளைப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும். ஆயினும் இந்து சமய நூல்கள் மிகவும் தெளிவாக 100, 1000 தந்திகள் உள்ள இசைக்கருவிகள் பற்றிப் பகர்வதும், சரஸ்வதி முதல் வீணா தட்சிணாமூர்த்தி வரை இறைவன் கையிலும் இசைக்கருவிகளை ஏற்றி வைத்திருப்பதும், நாம் இக்கலையில் வல்லவர்கள், ஏனையோரைக் காட்டிலும் முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும்..

 

 

அதுமட்டுமல்ல; ஏழு ஸ்வரங்களை உலகிற்குக் கற்பித்தவர்கள் நாம்தான்.

இன்று பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கிரேக்கத்திலும் யாழ் வடிவ இசைக்கருவிகள் புழங்குகையில் தமிழ்நாட்டில் மட்டும் அவை எப்படி சுவடே இல்லாமல் போயின என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும். பழைய பரதக் கலைக்கு உறைவிடமாகத் திகழும் தமிழ் கூறு நல்லுலகத்தில் யாழ் மட்டும் நழுவி விழுந்தது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

இசைத்துறையில் ராகம் தாளம்  ஆகியவற்றை ஒப்பிட்டு, ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

–subham-

 

பாரதி 97! – PART 2 (Post No.5411)

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-52 AM (British Summer Time)

 

Post No. 5411

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி .. ..

பாரதி 97! – PART 2

 

ச.நாகராஜன்

 

  1. ஜாதிகள் இல்லையென்றவர்

ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று முழங்கியவர்

 

  1. ஆதி திராவிடர்க்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்

1913இல் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடர்க்குப் பூணூல் போட்டு புரட்சி செய்தார்.

 

  1. வானியல் நிபுணர்

வானத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் பாட்டில் கொணர்ந்தவர். வானில் சுழலும் கோளங்களை இறையுடன் இணைத்தவர்

  1. தேசீய ஒற்றுமை போதித்தவர்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள், எனில்

சிந்தனை ஒன்றுடையாள்

என்றும் நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்றும் முழங்கியவர்.

 

  1. பெண் விடுதலை கேட்டவர்

பெண்ணுக்கு விடுதலை வேண்டும்  என்றும் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த பூமியில் என்றும் பாடி பெண்களை அடிமைகளாக நடத்தக் கூடாது என்று முழங்கியவர்.

 

  1. சிறந்த மொழிபெயர்ப்பாளர்

ஆங்கிலத்திலிருந்து அரவிந்தர் கவிதை உள்ளிட்டவற்றையும் மற்றும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்த்தவர். பத்திரிகை துறையிலும் அவர் செய்த மொழிபெயர்ப்புப் பணி மிகச் சிறப்பான ஒன்று.

  1. வரலாற்று ஆசிரியர்

காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதியவர். சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணி பாடல்களைப் புனைந்தவர்.

 

  1. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்

சுவை புதிது பொருள் புதிது என எளிய நடையை உருவாக்கியவர். பாடல்களிலும் இனிய, எளிய, புதிய சந்தங்களைக் கையாண்டவர். கடினமான சொற்களை அறவே வெறுத்து நீக்கியவர்

 

  1. பலரால் பாராட்டப் பெற்றவர்

பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார். பரலி.சு.நெல்லையப்பர் அவரது பாடல்கள் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பாடப்படுவதை நான் காண்கிறேன் என்றார். பல பெரியோராலும், அறிஞர்களாலும், கவிஞர்களாலும் பாராட்டப்பட்டவர்

  1. தமிழறிஞர் உ.வே.சாவைப் பாராட்டியவர்

உ.வே.சாமிநாதையரைப் பாராட்டிப் பாடல் புனைந்தவர். நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறியோம் என்று மனம் வருந்தற்க; பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே என்று பாடி அவரை வாழ்த்தியவர்

 

43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்

காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். செயல் வீரர். பலரை சென்னைக்கு அழைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்.

 

  1. பகைமை பாராட்டாதவர்

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாடியதோடு அதை வாழ்ந்து காட்டியவர். ஆங்கில துரையின் மனைவி இறந்த போது அதற்கு இரங்கல் தெரிவித்தவர்.ஏராளமான நிகழ்வுகள் அவரது பகைமை பாராட்டாத குணத்தைத் தெரிவிப்பவை.

 

  1. ராஜதந்திர நோக்குடையவர்

பிரிட்டிஷ் இந்தியா அடக்குமுறையை ஏவி விட்ட போதும், அவர் பாடல்களைத் தடை செய்த போதும் மனம் தளராமல் பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட புதுவைக்கு ராஜதந்திர நோக்குடன் வந்தார். அங்கும் பணியைத் தொடர்ந்தார்.

 

  1. அஞ்சாநெஞ்சர்

பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர். புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கு வருமளவு அவர் நெஞ்சில் உரமிருந்தது. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முழங்கி அனைவரையும் அச்சத்திலிருந்து விடுவித்தவர்.

 

  1. தபஸ்வி

நீண்ட நேரம் தியானத்தில் அமர்ந்து தவம் இயற்றும் பாங்குடையவர். சொல் ஒன்று வேண்டும் என அனைத்து பிரச்சினைகளுக்குமான மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.

 

  1. கொடையாளி

செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்கு வந்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர். ஏழைகளுக்கு அளித்தவர்.

 

  1. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை இரு முறை மொழிபெயர்த்தவர். வந்தே மாதரம் என்ற சொல்லை மந்திரச் சொல்லாக்கியவர்; தமிழ்நாடு முழுவதும் பரவக் காரணமானவர்.

  1. படிப்பாளி

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உடையவர். ஆய்வு செய்பவர். கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து புத்தகம் வாங்கி வந்த சம்பவமும் அவர் வாழ்க்கையில் உண்டு.

 

  1. விருந்தினரை உபசரிப்பவர்

தனது ஏழ்மை நிலையிலும் கூட வந்தோரை உபசரித்து உணவளிப்பவர். கபாலி சாஸ்திரி, வ.ரா. உள்ளிட்டோரை வரவேற்று உபசரித்தவர்; அரவிந்தரிடம் அவர்களை அழைத்துச் சென்றவர்.

 

  1. புதிய நெறி கண்டவர்

புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி நெறிகளை மாற்றியவர்.

 

  1. கல்வியாளர்

தேடு கல்வி இலாததொரு ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் என்ற புரட்சிப் பாடலைப் பாடி வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்.

  1. விஞ்ஞான ஆர்வலர்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான அறிவியல் திட்டங்களை மனக்கண்ணால் கண்டு பாடல்களில் அளித்தவர். ஜகதீஸ் சந்திர போஸ் உள்ளிட்டவர்களைப் பாராட்டியவர்.

 

  1. சக்தி உபாசகர்

சிறந்த சக்தி உபாசகர். காளியைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்.

 

  1. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்

கண்ணனைப் பல கோணங்களில் கண்டவர். தீராத விளையாட்டுப் பிள்ளையாக, எஜமானனாக, சேவகனாக இப்படிப் பல கோணங்களில் கண்டு பாடல்களைத் தந்தவர்.

 

  1. நல்ல கனவு கண்டவர்

கற்பனையின் சிகரத்தில் ஏறி பல கனவுகளைக் கண்டவர். காணி நிலம் வேண்டும் என்பதில் ஆரம்பித்து சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்பது வரை அவர் கண்ட கனவுகள் ஏராளம்.

 

  1. நடைமுறை வேதாந்தி

ப்ராக்டிகல் வேதாந்தம் என்பதைக் கடைப்பிடித்தார். ஆவது ஆம். போவது போம் என்பது இருந்தாலும் முயற்சியைக் கை விடேல் என்றார்.  மனைவி,மக்கள் வாழ்வு எல்லாம் பொய்யா என்ன என்று கேட்டவர்.

  1. பாஞ்சாலி சபதம் இயற்றியவர்

மகாபாரதத்தின்  முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி காவியமாக இயற்றியவர்.

 

  1. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்

காதல் காதல் காதல் என்ற அமர வரிகளுடன் உள்ள குயில் பாட்டில் வேதாந்தமாக விரித்துரைக்க யாதானும் சற்று இடமிருக்கிறதா என்று கேட்டு வேதாந்தப் பொருளை அதில் அடக்கியவர்.

 

  1. நடுநிலையாளர்

ஏழ்மையிலும் வளத்திலும் ஒரே மாதிரியாக இருந்தார். பகைவரிடமும் கூட அருள் நோக்கைக் கொண்டிருந்தார். சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

 

  1. சிறந்த ஹிந்து

ஹிந்து வாழ்க்கைத் தத்துவத்தை மிகவும் மதித்து வாழ்ந்த சிறந்த ஹிந்து. கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர்.  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை  இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.

 

  1. பயணி

பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசியவர். கல்கத்தா,சூரத், காரைக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, புதுவை, சென்னை என பாரதியார் சென்ற இடங்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர் வாழ்க்கையின் பயண அம்சங்கள் தெரிய வரும்.

  1. சிறந்த சித்தர்

எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தாரப்பா – யானும் வந்தேன் ஒரு சித்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாரதியார் கண்ட சித்தர்கள் பலர். கோவிந்த சாமி உள்ளிட்ட பலரிடம் பழகியவர்; பல அனுபவங்களைப் பெற்றவர்.

 

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.  (www.tamilandvedas.com பார்க்கவும்)

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும் பாரதியின் சொல்லில் அடங்கவொண்ணா சிறப்புக்களைப் படித்து இன்புறலாம். (www.tamilandvedas.com பார்க்கவும்)

 

அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இக்கட்டுரையாசிரியர் எழுதி வரும் தொடரில் உள்ள நூல்களைப் படித்தும் பாரதியாரின் சிறப்புக்களை உணரலாம். இந்த தளத்தில் இதுவரை 56 அத்தியாயங்களில் 56 நூல்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. (www.tamilandvedas.com பார்க்கவும்)

மோனியர் வில்லியம்ஸ் காலமானார்-1899-ம் ஆண்டுச் செய்தி (Post No.5410)

INDOLOGIST MONIER WILLIAMS PASSED AWAY

பிரபல ஸம்ஸ்க்ருத அறிஞரும், ஸம்ஸ்க்ருத அகராதியை உருவாக்கியவருமான மோனியர் வில்லியம்ஸ் 1899ல் பாரீஸில் காலமானர் அவரைப் பற்றி விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி இதோ:

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 September 2018

Time uploaded in London – 18-15 (British Summer Time)

Post No. 5410

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாக்ஸ்முல்லர் காலமானார்- 1900-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5409)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 17-27 (British Summer Time)

 

Post No. 5409

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மாக்ஸ்முல்லர் இறந்தவுடன் விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதோ அந்த இணைப்பு.

 

 

–xxx-xxx

Poet Bharati and Mahatma Gandhi condemned Purdah (Post No. 5408)

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 17-07 (British Summer Time)

 

Post No. 5408

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Bharati born on 11 December 1882

Died on 11 September 1921

 

Subrahmanya Bharati, the greatest of the modern Tamil poets, condemned purdhah (veil) on Hindu women. he teases animaginary lady love Kannamma on wearing veil.

Here is the poem with English translation by Dr T N Ramachandran

 

Removal of the Veil by Bharati
TN Ramachandran’s Translation

It is the custom with Delhi Muslims
To keep the lotus face with veil covered
The liana waist and the jutting breast
Are to be veiled, as Sastras so prescribe

By veiling the breast and liana waist
Beauty is not under bushel hid;
Cupidry is not taught by word of mouth;
Can love flourish behind a veiled visage?


Noble you say are Aryan custom s old;
Did ever Aryan dames their face s veil?
Having met more than once and love exchange d
Wherefore this coy persistence— all formal?

Who will then dare essay, me to obstruct
If by force I pluck the veil from you r face?
Of what avail is pretension idle?
Can ever rind of fruit the eater defy?

 

Orignal Tamil Verse

 

 

Gandhi on veil from Nehru’s ‘Discovery of India’ (posted yesterday)

 


Anti Purdah
Gandhiji has been, and is, a fierce opponent of purdah and has called it ‘a vicious and brutal custom’ which has kept women backward and undeveloped. I thought of the wrong being done by the men to the woman of India by clinging to a barbarous custom which, whatever use it might have had when it was first introduced, had now become totally useless and was doing incalculable harm to the country. Gandhiji urged that woman should have the same liberty and opportunity of self -development as man.

 

–subham–

குருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள் (Post No.5407)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 16-28 (British Summer Time)

 

Post No. 5407

 

பாரதியார் பிறந்த நாள்: டிசம்பர் 11, 1882

இறந்த நாள் செபடம்பர் 11, 1921

 

பறவைகளையும் மிருகங்களையும் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாடம் கற்பிப்பது வேத காலம் முதல் இருந்து வருகிறது. இயற்கையிலிருந்து  தத்தாத்ரேயர் கற்ற விஷயங்களை  முன்னரே பாகவத புராணத்தில் கண்டோம்.

பாரதிக்குக் குருவியும் காகங்களும் போதித்த விஷயங்கள் ஏராளம். இதனால்தான் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் போலும். குருவியின் விடுதலை உணர்வைக் கண்டவுடன் நாட்டு விடுதலை கூட அவருக்கு மற ந்து விட்டது. ஆன்ம விடுதலை பற்றிப் பாடத் துவங்கினார். அதையும் முன்னரே ‘விட்டு விடுதலையாகி’ என்ற பாடலில் கண்டோம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாப்பா பாட்டில் எல்லா மிருகங்கள் மூலம் கற்க வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்து அவைகளிடத்தில் இரக்கம் கொள்ள வேண்டும் பாப்பா என்கிறார்.

 

 

இது தவிர குயில் பாட்டு, கிளிப் பாட்டு என்று பறவைகளை வைத்து பல பாடல்கள் வேறு.

ஆயினும் நிறைய பேரை கவந் து ததி ஈர்க்காத பாடல் ஒன்றில் பெரிய பட்டியலே குருவியின் வாய் மூலமாக கேட்கிறார்.

 

பாரதியார் குருவியிடம் கேட்ட கேள்வி:

ஏ குருவியே நீ என்ன வேலை செய்கிறாய்?

எப்படி வாழ்க்கை நடத்துகிறாய்?

 

உடனே குருவி சொன்ன பதிலைப் பாருங்கள்:

 

எங்களிடம், கீழ் ஜாதி , மேல் ஜாதி இல்லை;

அடிமைகளில்லை; எல்லோரும் மன்னர்!

 

 

மேலும் எங்களிடம் காசு பணம் கிடையாது.

ஆனால் எப்போதும், எங்கும் எங்களுக்கு உணவு கிடைக்கும்

 

சின்ன வயிற்றுக்காக ஆட்டுக் குட்டிகள் போல பிறரிடம் கட்டுப்பட்டிருக்க மாட்டோம்.

 

வீடு வாசல் தேவை இல்லை; ஆகாயமே கூரை!

 

உணவோ உயர்ந்த பொருள்கள்தான்.

 

எங்களிடம் ஏழை பணக்காரர் இல்லை.

ஏற்ற தாழ்வு இல்லை.

கள்ளம் கபடம் கிடையாது.

 

கொலை, களவு கிடையாது;

இளையோரை வலியோர் ஏறி மிதிப்பதும் இல்லை.

 

நீங்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்தாலும் துன்பத்தில் உழல்கிறீர்கள்; நாங்கள் அப்படித் துன்பப் படுவதில்லை.

 

மரம், செடி, மலர்கள், ஏரி, குளங்கள், மலை, குன்று, வீடுகள் ஆகியவற்றில் சுற்றிச் சுற்றி விளையாடுவோம்.

குடும்பக் கவலைகள் இல்லை.பந்தங்கள் கிடையா.

தீட்டு முதலியன இல்லை.

 

இன்பம்; எப்போதும் இன்பம்.

 

காலையில் எழுந்து கடவுளைத் தொழுவோம்.

மாலையிலும் கடவுளைத் தொழுவோம்.

 

துன்பத்தில் உழலும் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்வேன்.

 

மெய்ஞ் ஞானத்தைப் பெறுங்கள்;சிறுமைத் தனங்களை உதறி விடுங்கள். இதனால் தேவர் நிலை கிடைக்கும். கடவுள் உங்களுக்குத் துணை இருப்பான். இன்பம் கிட்டும்.

 

அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடியுங்கள்;

 

பொய் வேஷம் போடாதீர்கள்;

தர்மத்தைக் கைக்கொள்ளுங்கள்.

 

பயத்தை விட்டு துணிச்சலாக நில்லுங்கள்.

 

இப்படி வாழ்ந்தால் என்றும் இன்பம் என்று குருவி நல்ல யோசனை கூறுகிறது.

நல்ல யோசனைதான்; ஆனால்  பின்பற்றுவதோ எளிதல்ல.

குருவிகளைக் கவனித்தோருக்கு அவை எப்போதும் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் திரிந்து விளையாடுவது வியப்பை ஏற்படுத்தும். அவற்றின் ரஹஸியம் இப்போது நமக்கும் தெரிந்துவிட்டது. ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம்; அடிமை வேலை இல்லாத சமுதாயம்; காசு பணம் என்று திரியாத சமுதாயம் ; ஏழை பணக்காரர் இல்லாத எப்போதும் உணவு கிடைக்கும் வளமை! பெரிய பங்களாக்கள், மாட மாளிகைகள் இல்லாத எளிமையான வாழ்வு.

 

வாழ்க சிட்டுக் குருவிகள்!

 

 

 

பாரதி நாமம் வாழ்க

 

–சுபம்—

 

பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.