பாப்பாவுக்கு பாரதியார்- படங்கள் மூலம் பாடம்!(Post No.5425)

Written by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 13 September 2018

 

Time uploaded in London – 6-11 am (British Summer Time)

 

Post No. 5425

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதியார் பாடிய ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாடல் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது. பாகவத புராணத்தில் பறவைகளையும் மிருகங்களையும் காடு மலைகளையும் வைத்து தத்தாத்ரேயர் பாடம் கற்றது போல பாரதியாரும் தன் வாழ்வில் கற்றார். இதை அவர் பாடிய காகம், கிளி, குருவி, குயில் பாட்டுகளில் தெளிவாகக் காணலாம். இங்கே சிறுவர்களுக்கும் அதே உத்தியைப் பயன் படுத்துகிறார். ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் (William Wordsworth- Daffodils)  ‘டாஃfஓடில்ஸ்’ என்னும் பூக்கள் பற்றிப் பாடிய பாடல் உலகப் பிரசித்தமானது. இன்னும் ஒரு பாடலில் புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு (Up Up My Friends, Quit your books) இயற்கையிடம் பாடம் கற்க வாருங்கள்; ரிஷி முனிவர்களிடம் கற்பதை விட அதிகம் கற்கலாம் என்கிறார்.

“One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can”.

இதோ பாரதியார் பாடலைப் படங்கள் மூலம் காண்போம்.

பாரதியாரின் பாடல் மூலம் விக்கிபீடியவில் இருந்து எடுக்கப்பட்டது; நன்றி

 

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

 

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

 

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

 

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

 

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

 

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

 

–subham–

“நான் கொன்று விடுவேன்!” – புத்தரின் பதில்!! (Post No.5424)

Written by S NAGARAJAN

Date: 13 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-48 AM (British Summer Time)

 

Post No. 5424

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

“நான் கொன்று விடுவேன்! – புத்தரின் பதில்!!

 

ச.நாகராஜன்

 

எல்லையற்ற தேஜஸுடனும், சாந்தத்துடனும், கருணையுடனும் புத்தர் தனது சிஷ்யர்களுக்கு,தேவையான அனைத்தையும் உபதேசித்து வந்தார்.

 

அவர்களுக்கு நல்ல பயிற்சி தந்து அவர்களை மேம்படுத்தும் ஒரு நல்ல பயிற்றுநராக (trainer) அவர் இருந்தார்.

கேசி என்று குதிரைகளைப் பழக்கும் பயிற்றுநர் ஒருவர் அவரிடம் சீடராக இருந்தார்.

 

அவரை புத்தர் அழைத்தார்.

 

“ஓ! கேசி! நீ குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஒரு நல்ல பயிற்றுநர். குதிரைகளை எப்படி நீ பழக்குகிறாய்? சொல்லேன்.”

கேசி பதில் கூறினார்: “ஐயனே! குதிரைகளை சில சமயம் மிருதுவாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன். சில சமயம் கடுமையாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன்.இப்படி இரண்டு விதமாகவும் நடந்து கொண்டு சொல்லித் தருவேன்.”

 

 

“கேசி! ஒரு வேளை அந்தக் குதிரை நீ சொல்கிற படி கேட்கவில்லை என்றால் அதை என்ன செய்வாய்?”

 

“ஐயனே! அதைக் கொன்று விடுவேன். ஏனெனில் அது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கே ஒரு களங்கத்தைத் தந்து விடுகிறது. ஐயனே! நீங்கள்  எல்லோருக்கும் சொல்லித் தருகிறீர்கள். நல்ல ஒரு பயிற்சியாளர். நீங்கள் எப்படிச் சொல்லித் தருகிறீர்கள்?”

 

“கேசி! நானும் கூட சில சமயம் அனைவரையும் மிருதுவாக நடத்திச் சொல்லித் தருவேன். சில சமயம் கடுமையாக நடந்து கொண்டு சொல்லித் தருவேன். இப்படி இரண்டு விதமாகவும் நடந்து கொண்டு சொல்லித் தருகிறேன். இது தான் உடலால் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள். இப்படிச் செய்தால் இன்ன நல்ல பலன்கள் கிடைக்கும். இது தான் நல்ல முறையில் பேச வேண்டிய வழி. இதனால் வரும் நல்ல பலன்கள் இவை. இது தான் நல்ல சிந்தனை கொள்ளும் முறை. இதனால் அடையும் பலன்கள் இன்னின்னவை. இப்படி இருப்பவர்கள் தேவர்கள்; இப்படி இருப்பவர்கள் மனிதர்கள்.

 

இதோ பார்; இப்படி நடப்பது  உடலால் செய்யும் தவறான வழிகள்; இதனால் ஏற்படும் தீமைகள் இவை. இதோ பார்; இப்படிப் பேசுவது தவறான வழி; இதனால் ஏற்படும் தீய விளைவுகள் இவை;இதோ பார் இப்படி சிந்திப்பது தப்பான வழி; இதனால் வரும் தீய பயன்கள் இவை. இது தான் நரகத்திற்கு வழி. இதுவே மிருகங்களின் வழிமுறை; இதுவே பிசாசுகளின் நடத்தை. என்று இந்த விதமாக நான் மிருதுவாகவும் கடுமையாகவும் ஆக இருவிதமாகவும் சொல்லித் தருகிறேன்.”

 

“ஐயனே! இப்படி இரு விதமாகவும் சொல்லித் தந்தும் ஒருவன் நல்ல விதமாக நடக்கவில்லை எனில் அவனை நீங்கள் என்ன செய்வீர்கள்?”

 

“அப்போது அவனை நான் கொன்று விடுவேன்.”

 

“ஐயனே! நீங்கள் ததாகதர். உங்களை நீங்களே அப்படி அழைத்துக் கொள்கிறீர்கள். அதன் அர்த்தம் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றி சொல்வதையே வாழ்ந்து காட்டுபவர் என்பது தானே! நீங்கள் அஹிம்சையை உபதேசிப்பவர். உங்களால் கொல்வது என்பது இயலவே இயலாது. ஆனால் நீங்களே நான் கொன்று விடுவேன் என்று சொல்கிறீர்களே!”

 

புத்தர் புன்முறுவல் பூத்தார்.

 

ததாகதர் என்ற சொல்லுக்கு உண்மையின் வழி நிற்பவர் என்பதிலிருந்து அநேக அர்த்தங்கள் உண்டு. புத்தர் தன்னை எப்போது ததாகதர் என்றே சொல்லிக் கொள்வது வழக்கம். அதற்கு சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்து வாழ்பவர் என்ற பொருளும் உண்டு. அதைச் சுட்டிக் காட்டி கேசி கேட்ட கேள்விக்கு அவர் பதில் தந்தார் இப்படி:

 

“ கேசி! உண்மை தான். ததாகதர் இன்னொருவரின் உயிரை எடுக்க நினைக்கக் கூட மாட்டார். என்றபோதிலும் ஒருவருக்கு மிருதுவாகவும், கடுமையாகவும் இந்த இரு விதமாகவும் சொல்லித் தந்த பின்னரும் அவர் அதன் படி நடக்கவில்லையெனில் அவருடன் ததாகதரோ அல்லது அவருடன் சேர்ந்த பிக்ஷுக்களோ பேசவே மாட்டார்கள். நமது பண்பாட்டின் படி இப்படி பேசாமலிருப்பதே ஒருவனைக் கொல்வதற்குச் சமம். அவனை நல்வழிப் படுத்த முடியாது என்று ததாகதரும் அவருடன் இணைந்த மற்ற பிக்ஷுக்களும் நினைத்து விட்டால் அவ்வளவு தான், அவனுடன் பேச மாட்டார்கள்.”

 

 

புத்தர் பேசவில்லை என்றால் அவன் என்ன செய்வான்; திருந்தியே ஆவான் – உயிர் வாழ ஆசைப்பட்டால்!

 

இந்த ஒரு சம்பவமே புத்தர் எவ்வளவு கருணையுள்ளவர், அவர் எப்படி தன் சீடர்களை நல்வழிப் படுத்தி வந்தார் என்பதைப் புரிய வைக்கும்.

 

“ஓ! பிக்ஷுக்களே! தீமையை விட்டொழியுங்கள். தீமையை விட முடியாது என்றால் ததாகதர் இப்படிச் சொல்ல மாட்டார். அதை விட முடியும். ஆகவே தீமையை விட்டொழித்தால் நல்லதைக் கடைப்பிடித்தால் வளமும் செல்வமும் பெருகும்.”

என்று அவர் தன் சீடர்களை நோக்கிக் கூறி அருளினார்.

புத்தரின் வழி தனி வழி; அது கருணை வழி!

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சா

***

TAMIL BOY WHO COMPOSED POEMS WHILE PLAYING MARBLES! (Post No.5423)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 19-16 (British Summer Time)

 

Post No. 5423

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

The are many unsung heroes among Indian poets and one of them was Murugadasa Swamigal of Tamil Nadu. He composed about 100,000 poems. Among them is a remarkable work called ‘Pulavar Purana’ meaning a Purana of Poets. He composed 2828 stanzas on 72 Hindu Poets of Tamil Nadu. He was born in Tirunelveli in 1838 and lived for 60 years. His family gave all the manuscripts to Tamil Pundit of Madras (Chennai) who published all his poems on 72 Tamil poets starting from the legendary Vedic seer Agastya.

 

Krishnmachari in his first part published in 1901, introduced Murugadasa swamikal with two interesting anecdotes :-

“ Though trustworthy information respecting the gifted poet is wanting, yet the date of his birth in Tirunelveli about 1838 harmonises with what is known of his career and death in the Tamil Vilambi year (1898). The young poet seems to have been a popular favourite and a leader of sports where he resided, but study and writing of poetry were nevertheless more attractive to him than play. He is a remarkable instance of intellectual precocity for he always carried with him his iron pen or stylus and palm leaf ready for use. It is said that he composed, at intervals of play at marbles, before he was ten years old, a short poem ‘Pannirumaalai’ in praise of the 12 powerful arms of the war god Subrahmanya.

 

When Murugadasa was old enough to leavehome,he visited all famous shrines in India and Sri Lanka and met many religious leaders in  monasteries.

 

Krishnamachari adds,

“ He was cultured and thoughtful and his delicate tact, piety and prudence well fitted him for the task of a biogrpaher. He covered imporatant Saivite and Vaishnavite poets andshowed no hositility towards any sect.He gave the history of Hindu poets leaving out Buddhist and Jain Tamil scholars.

 

He is known to have visited Madras before he was twenty years old and to have astonished a earned audience in Kandaswami Temple by his elquent exposition and ready powers of versification.

 

He is said to have composed no less than a lakh of verses consisting mainly of hymns and sacred legends of gods. I have given the list of Tamil Books in my Tamil version of this article). His greatest and most original work is ‘Pulavar Puranam’ (Legend of the Poets). It may be placed as a monumental work by itself, charming in all freshness and vivecity.

 

In short Murugadsa seems to have offended none and instructed many till his demise in sixtieth year in his clay built cloister in a little village of Tiruvamaattur in South Arcot.

Metrical Biographies of Tamil Poets

V Krishnamachariar published all the 2828 veses in three volumes from 1901 to 1906. Here is the list of all the 72 poets covered in his work:-

 

 

 

 

–subham–

 

Veena and Tamil Yaaz in the Rig Veda (Post No.5422)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 16-02 (British Summer Time)

 

Post No. 5422

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Veena or Vina is seen in the hands of Sarasvati and Veena Dakshinamurthy (Shiva). Ravana and Agastya were very good Veena players. I have already given the story of a competition beween the two. Narada, the inter galactic traveller,was the greatest Veena player.Demon Ravana has Veena on his flag. Veena is found in the Rig Veda and thee Atharvan Veda. But in the 2000 year old Sangam Tamil literature we dont find Veena but Yaaz. Yaal is similar to veena, a string instrument. Veena figures for the first time in Post Sangam work, Silappadikaram,the most beautiful epic of the Five Tamil Epics.

Yaal or Yaaz is similar to lyre and harp.

Did Veena become Yaal (Yaaz) or Yaaz become Venna is a debatable point. Alternately they might have evolved simultaneously because  we find wind instruments, string instruments and drums all over the world. Even he Australian aborigines invented their own unique musical instrument.

 

My research shows that the seven notes went to Greece, Sumer and other parts of the world from the Hindu scriptures. Tamils also speak of seven notes with special Tamil tecnical terms. Since the seven notes are found in the Rig Veda, the oldest book in the world, it should have spread to other parts of the world fron the Vedic land.

 

There are supporting evidences in the Vedas. They talk of different musical instruments and they formed part of the main Vedic rituals.

 

Word Research

 

Yaaz gave birth to the musical term Jaaz (J and Y are interchangeable as we see in Jesus = Yesu, Judaism = Yuda etc)

 

Vaanan a musical term became Banan in Tamil (B and V are interchageable as we see in Bengal= Vanga in Tamil aad Sanskrit; even in ancient Tamil we seethis B=V change. Bandi was cart in Sangam Tamil; now Vandi is the modern Tamil word for cart).

I can give innumerable examples.

 

Vanan= Banan change is an important one. Throughout 2000 year old Tamil literature we see Banans (bards) singing the praise of Tamil kings. Greek God ‘Pan’ (god of the wild and Music) is also a cognate word to Banan and Vanan.

Now the question is how did Yaaz or harp or lyre disappear and only Veena survived. The strange thing is until fifth century CE we see only Yaaz in Tamil (except one refrence in Tamil epic about ‘Naradar Veenai’ in Silappadikaram); but after fifth century we see only Veena and not Yaaz (harp or lyre). The starnge thing about this harp or lyre or Yaaz is , it is seen in Gupta scultures and Gupta coins. Slolwly it disappeared from the scene.

Picture taken by me in London

 

Even today Yaaz is seen in East European countries. I took a picture of harp player in South Kensington, London where a lyre player was playing the music in the street. I got a similar picture in social media from Croatia. Why did this disppear and yield to Veena in India is a subject for research.

 

Now let us look at the Tamil Yaaz. We have refrences to several types of Yaaz from 7 to 1000 stringed instruments. The commentators of the Tamil epic gave all thse details about them. Swami Vipulananda was one of the scholars who collected all refrences to Yaaz from literature and published a book.

Yaaz or Lyre in Sumer

Like Vedic ceremoies musical instruments were used in religious rituals; Hittite texts attest to this. Like Vedic Hindus (Narada, Ravana), even priest played harps and lyres. Though lot of muscial instruments were discovered in tombs in Mesoptamia, they were only parts and not intact. But the 4000 year old reconstructed instruments are on display  in the museums now. Cylinder seals attest to Platforms on which musicians played.

Mesopotamia had two musical systems Akkadian and Sumer. It can be compared to the two main music streams in modern India- Carnatic and Hindustani. The Sumerian system used fixed tunings and prescribed patterns. Akkadian system used seven muscial notes and nine strings. Both have similarities to Indian Ragas and Spata Svaras.

 

This is the summary of my research paper submitted to souvenir in connection with Swami Vipulananda memorial Celebrations in France.

 

Please see the refrences from the Vedic literature given below:–

Vana in Rig Veda (RV) 1-85-10; 8-20-8; 10-97-8; 10-32-4

Atharvana- 10-2-17

 

Sapta Svara in RV (SEVEN NOTES) – 10-32-4

 

Pancha vimsa Brahmana says Sata tantu (hundred string Yaaz or Lyre) was used in MAHA VRATA CEREMONY.  taittiriya Samhita (7-5-92), Kataka Samhita (24-5) also refer to this 100 stringed lyre or Yaaz.

Picture shows Makara Yaaz and Senkotti Yaaz

 

‘Sapta Vani occurs in RV (1-164-24; 3-1-6; 9-103-

 

SOURCE FOR REFRENCES- VEDIC INDEX OF NAMES AND SUBJECTS, VOL.2, AA MACDONELL AND AB KEITH

 

 

‘Veena in Taittiriya Samhita  6-1-4-1; Kataka Samhita 24-5; Matrayani Samhita , 3-6-8; Satapata Brahmana 3-2-4-6

 

Veena Vaadha (Palyer on Veena)Vajasaneyi Samhita

‘30-20; Taittiriya Brahmna 3-4-15-1

 

Veena Gathin (Veena palyer), Parts of Veena, Skin cover of Veena are also mentioned in the edic literature

 

 

‘Taiitiriya Brahmana 3-9-14-1; Satapata Brahmana 13-1-5-1 etc.

 

–subham–

72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் (POST No.5421)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 8-29 AM (British Summer Time)

 

Post No. 5421

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழுக்கு பெரும் சேவை செய்த பெரியார்களில் ஒருவர் முருகதாஸ் சுவாமிகள். இவர் பத்து வயதிலேயே கவி பாடியவர். கோலிக் குண்டு விளையாடும் இடை வேளையிலும் கவி எழுதுவாராம். எப்பொழுதும் இதற்காக எழுத்தாணியையும் பனை ஓலையையும் கூடவே எடுத்துச் செல்வாராம். அப்படிச் சிறுவயதிலேயே இவர் பாடிய முதல் நூல் பன்னிருமாலை ஆகும். முருகப் பெருமான் அவரது 12 கரங்களில் தாங்கிய ஆயுதம் முதலியவற்றை போற்றித் துதி பாடிய கவிகள் அவை. இவர் செய்த மஹத்தான சாதனை- எவரும் செய்யாத சாதனை- 72 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தாம் அறிந்த முறையில் செய்யுட்களில் தந்தமை ஆகும். அகத்தியர் முதல் துவங்கி நாம் அதிகம் அறியாத அறிவுத்தன்மைப் புலவர் வரை 2828  செய்யுட்களில் பாடிவிட்டார்.

 

 

‘புலவர் புராணம்’ என்ற பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை மூன்று தொகுதிகளில் இவை வெளியாகிற்று. திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் சரிதம் எழுதியுள்ளார். இவர் முருகன் மீது பக்தி பூண்டதால் முருக தாசர் என்று அழைக்கப்பட்டார். தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்ற பெயர்களும் உண்டு. இவர் திருநெல்வேலியில் 1838ல் பிறந்து 1898-ல் இறந்தார் என்று 1901 ஆம் ஆண்டு வெளியான ‘புலவர் புராண’ முகவுரையில் வி. கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.

 

 

இது ஒரு புது வகை இலக்கியம் என்றும் வருங்கால சந்ததியினர் இவர் விட்டுவிட்ட விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி முகவுரை கூறுகிறது. முருகதாசர் இந்துக் கவிஞர் வரலாறு மட்டுமே யாத்துள்ளார். பௌத்த, சமணர்கள் எவரும் இல்லை. மேலும் அவர் அறிந்த வகையில் கால வரிசைப்படி கவிஞர்களை வைத்துள்ளார். நல்ல தூய, செம்மையான பாக்கள் அவை. முருக்தாசரின் மகன் கொடுத்த தகவலின் படி அவர் எழுதிய வேறு நூல்கள்:–

 

தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம்,தெய்வத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், அருணகிரிநாதர் புராணம், நான்கு நூல், திருச்செந்தூர் திருப்புகழ்,  திருச்செந்தூர் கோவை, திருவாமாத்தூர் தலபுராணம்,ஏகபாதத்திதழகலந்தாதி, பதிகச் சதகம், சதகப் பதிகம், திருமகளந்தாதி.

தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் இலங்கையிலுள்ள தலங்களையும் இவர் தரிசித்தார். இவர் பல பெரியோர்களைச் சந்தித்து சைவ மடங்களுடன் தொடர்பு கொண்டார். ஆயினும் சைவ வைணவ வேற்றுமை இவருக்கில்லை என்பது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய இரு கோவில்கள் மீதும் பாடியிருப்பதிலிருந்து புலப்படும். இவர் இருபது வயதாகும் முன்னர் சென்னைக்கும் வந்து அங்குள்ள கந்தசாமிக் கோவிலில் தனது சொற்பொழிவாலும் கவி புனையும் திறத்தாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை புரிந்தாலும் வேறு எவரும் செய்யாத ‘புலவர் புராணம்’ என்ற புதுமைப் படைப்பே இவருக்குப் புகழ் ஈட்டித் தந்தது. அறுபது வயது வரை தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் ஒரு குடிசையில் இவர் வாழ்ந்தார் என்றும் தெரிகிறது.

சென்னைத் தமிழ்ப் பண்டிதர் வி. கிருஷ்ணமாச்சாரி கையில் அவரது படைப்புகளை அவரது குடும்பத்தினர் தந்ததால் அவர் மூன்று பகுதிகளாக 72  புலவர் வரலாற்றையும் வெளியிட்டார்.

 

இதோ 72 புலவர்க்ளின் பெயர்கள்:

 

 

 

 

(ஒவ்வொரு புலவர் பற்றியும் முருகதாசர் பாடியதைத் தனியே இன்னொரு கட்டுரையில் தருகிறேன்)

 

-சுபம்-

 

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்(Post No.5420)

Written by S NAGARAJAN

Date: 12 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 8-08 AM (British Summer Time)

 

Post No. 5420

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்; அதை வதை செய்யாதே!

 

ச.நாகராஜன்

 

பசு ஹிந்துக்களுக்கு வெறும் மிருகம் அல்ல; அது தெய்வம்.

ஆகவே தான் அதை வதை செய்யக்கூடாது என்கின்றனர் ஹிந்துக்கள்.

பசுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பொருளாதார ரீதியாக வல்லுநர்கள் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தார்மீக ரீதியாக நமது இதிஹாஸ புராணங்கள் பசுவின் மேன்மையைப் பற்றிக் கூறுவதை நாம் முதலில் ஏற்கிறோம்.

பத்ம புராணத்தில் பாதாள காண்டத்தில் 18 மற்றும் 19 அத்தியாயங்களில் வரும் ஒரு சம்பவம் பசுவின் பெருமையைக் கூறுகிறது.

ஜனக மஹாராஜா தனது புவி வாழ்வை விட்ட உடனேயே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவர்களுடன் கூடிய ஒரு அழகிய விமானம் வந்தது.

அதில் ஏறிச் சென்ற ஜனகர் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் யமபுரியைக் கடக்க நேர்ந்தது.

அது யமபுரியைக் கடக்கும் போது தீனமான குரல் ஒன்று எழுந்தது.”ஓ ! ஜனக மன்னரே! தர்மவானே! இந்த இடத்தை விட்டுப் போகாதீர்கள். உங்கள் உடலைத் தொட்டுச் செல்லும் காற்று இந்தப் பக்கம் வீசும் போது எங்களது துன்பத்தை அது வெகுவாகக் குறைக்கிறது.”

இந்தக் குரலைக் கேட்ட ஜனகமன்னர் உடனே, “ஓ, அப்படியானால் நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.

அவரது இந்த முடிவைக் கேட்ட யமதர்ம ராஜன், “மன்னரே! இங்கு இருக்க வேண்டாம்.இது பாவிகள் இருக்கும் இடம். நாம் மேலே செல்வோம்” என்றான்.

ஆனால் ஜனகரோ, “ முதலில் இந்த துன்பத்திலிருந்து இவர்களை மீட்போம். அப்புறம் தான் என்னால் நிம்மதியாக சொர்க்கத்திற்குச்  செல்ல முடியும்” என்றார்.

உடனே யமதர்மன், “ மன்னரே! இவர்கள் அனைவரும் பொய்யர்கள். கொள்ளையடித்தவர்கள். கற்பழித்தவர்கள். இவர்களை நிச்சயமாக நீங்கள் மீட்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் மர்யாதா புருஷோத்தமனான ராமனின் ராம நாமத்தை உச்சரித்ததால் கிடைத்த புண்ணியத்தை இவர்களுக்குத் தாருங்கள்” என்றான்.

உடனடியாக தனது புண்ய பலனை ஜனக மன்னர் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் துன்பம் தீர்ந்தது.

இப்போது ஜனகருக்கு ஒரு சந்தேகம் உதித்தது.

அவர் யமனை நோக்கி  தான் ஏன் இந்த நரகத்தின் அருகில் வந்து இந்தக் குரலைக் கேட்க நேர்ந்தது என்று கேட்டார்.

அதற்கு யமன், “ ஜனகரே! ஒரு சமயம் ஒரு பசு புல்லை மேய்ந்து கொண்டிருந்த சமயம் அதை நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்தச் செயல் தான் உங்களை நரகத்தைப் பார்க்கச் செய்து விட்டது” என்று பதில் கூறினான்.

பசு எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்த பத்ம புராணம் இந்தச் சம்பவத்தை இப்படி விளக்குகிறது.

*

மஹாபாரதத்தில் ஒரு சம்பவம்.

திரௌபதி தனது ஐந்து கணவர்களில் ஒருவர் வீட்டில் வசிக்கும் போது மற்ற நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.

இந்த விதியை யாரேனும் ஒருவர் மீறி விட்டால் அவர் 12 வருடம் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஒருமுறை திரௌபதி தர்மரின் இல்லத்தில் இருந்தாள். அப்போது ஒரு பிராமணன் அர்ஜுனனிடம் வந்து தனது பசுவை திருடர்கள் திருடிச் செல்வதாகச் சொல்லி அதைக் காக்க வேண்டும் என்று வேண்டினான்.

உடனே பிராமணனின் பசுவை எப்படியேனும் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தர்மபுத்திரரின் இல்லத்தில் இருந்த தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அங்கு நுழைந்தான்.

பசு காப்பாற்றப்ப்பட்டது.

 

 

ஆனால் விதியை மீறிய செயலுக்காக அர்ஜுனன் 12 வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.

ஆனாலும் கூட இந்த 12 வருடங்களில் அர்ஜுனன் பெறுதற்கரிய பல அஸ்திரங்களையும் பேரறிவையும் பெற்றான்.

பசுவைக் காத்த தர்மம் அவனைப் பின் தொடர்ந்தது.

இந்த அஸ்திரங்களின் உதவியாலேயே குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெல்ல  முடிந்தது.

பசு தெய்வம். அதைக் காப்பது ஹிந்துக்களின் கடமை.

அதை வதை செய்வதைத் தடுப்பது நமது கடமையே!

***

Mark Twain, Coleridge, Boswell, Dr Johnson Books Anecdotes (Post No.5419)

 

Mark Twain, Coleridge, Boswell, Dr Johnson Books Anecdotes (Post No.5419)

 

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 11 September 2018

 

Time uploaded in London – 18-28  (British Summer Time)

 

Post No. 5419

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

     
Mark Twain Startled!

 

It was an English man, met somewhere in Europe, who startled Mark Twain by saying abruptly, Mr Clemens, I would give ten pounds not to have read your Huckleberry Finn! And when Mark looked up awaiting an explanation of this extraordinary remark, the English man smiled and added
“So that I could have again the great pleasure of reading it for the first time.”

Xxx

‘Life of Johnson’ Book!

Sir John Malcolm once asked Warren Hastings, who was a contemporary and a companion of DrJohnson and Boswell, what was his real estimation of Boswell’s Life of Johnson?

Sir, replied Hastings, ‘it is the dirtiest book in my library’.
Then proceeding he added,
‘’I knew Boswell intimately; and I well remember when his book made its first appearance. Boswell was full of it that he could neither think nor talk of anything else; so much so, that meeting Lord Thurlow hurrying through parliament street to get to the House of Lords, where an important debate was expected, for which he was already too late, Boswell has the temerity to stop and accost him with,
‘Have you read my book?’
‘Yes, damn you! replied Lord Thurlow, ‘every word of it; I could not help myself’.

Xxx

‘Thief’ Coleridge

Coleridge was always a tremendous reader. While he was a student at Christ’s Hospital he used to spend his free time wandering aimlessly about London, shivering in front of the window s of book shops and print shops. Once, while so standing, he got, in his own words, ‘absent mindedly involved with the coat tail pocket of a stranger, who at first took him for a thief, then was so charmed by his conversation that he made him free of a library’ in Cheapside . Thenceforth he would run all risks in skulking out to get the two volumes to which he was entitled daily.

Xxx

 

Rousseau

When Dr Johnson was told that Rousseau’s ‘Confessions’ would contain every motive that had induced him to act in every situation— ‘Then’, replied he, ‘if he was an honest man, his book will not be worth a farthing’.

Xxx Subham xxx

பாரதியாரும் ஆதி சங்கரரும்! (Post No.5418)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 11 September 2018

 

Time uploaded in London – 8-15 am (British Summer Time)

 

Post No. 5418

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி ‘தேச விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரோ மனிதர்களின் மோட்சம், முக்தி எனப்படும் ‘ஆன்ம விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அற்புதமான கவிதை நூல். பாரதியாரோ 300 க்கும் மேலான கவிதைகளைப் பாடிய பெருங் கவிஞன்.

இருவர் பாட்டிலும் ‘விடுதலை’ பற்றிய பாடல்களில் ஒரே சிந்தனை ஓட்டமும், ஒருமித்த உவமைகளும் இருப்பது, கற்றோருக்கு இன்பம் தரும்.

 

முதலில் பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் கவிதையை ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

 

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

 

ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்

 

அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)

 

மானுட ஜன்மம் பற்றி பாரதியார் சொல்லும் கருத்து ஆதி சங்கரரும் போற்றிய கருத்து. ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’- என்பது அவ்வையின் வாக்கு.

 

இதோ ஆதி சங்கரரின் விவேக சூடாமணியின் இரண்டாவது ஸ்லோகம்:-

 

‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபதஹ’. மனிதனாய் பிறப்பது அரிது என்கிறார்.

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது’– என்பது இந்தப் பாட்டில் பாரதியின் வரிகள்

XXX

சூரியனை விட்டு விட்டு எவரும் மின்மினிப் பூச்சியை நாடுவரோ என்பது பாரதியின் வாக்கு. ஆதி சங்கரர் சொல்வார்,

சூரியனும் மின்மினியும் போல, அரசனும் சேவகனும் போல, கிணற்று நீரும் கடல் நீரும் போல என்று முரண்பாடுகள் உள்ளன (241).

 

இந்த ஸ்லோகத்திலும்  பாரதி- சங்கரர் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.

XXXX

கண்கள் இரண்டையும் விற்றுவிட்டுச் சித்திரப் படம் வாங்கினால் சிரிக்க மாட்டார்களா என்பது பாரதியின் கேள்வி.

 

நிலவொளி பிரகாஸிக்கும்போது, சித்திரத்திலெழுதிய நிலவை எந்த புத்திசாலியாவது நாடுவானா என்கிறார் சங்கரர் (522)

 

XXXX

 

பொய்மை எனும் பாம்பு கடித்தவகுக்கு ஒரே மருந்து, பிரம்ம ஞானமே என்பது சங்கரரின் வாதம் (ஸ்லோகம் 61)

 

பாரதி ஒரு பாட்டில் பாடுகிறார்,

‘பயமென்னும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்

வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்

 

-என்று ஜயபேரிகை கொட்டுகிறார்.

 

இங்கு இருவர் படியதும் பிரம்ம ஞானம், மாயப் பாம்பு பற்றியே.

XXXX

 

குருவின் பெருமையைப் போற்றும் சங்கர்,

குருவின் சொற்களைக் கேட்ட சீடன் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபட்டுச் சென்றான்; குரு என்பவர் சதானந்தத்தில் திளைத்து உலகையே  தூய்மையாக்குகிறார். அப்போது வேறுபாடுகள் மறையும்; இப்படிப்பட்ட ஆசார்ய- சிஷ்ய ஸம்வாதம் ஐயங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று மூன்று ஸ்லோகங்களில் பாடுகிறார் (576-578)

 

பாரதியும் சுயசரிதையில்,

‘ஞானகுரு தேசிகனைப் போற்றுகின்றேன்

நாடனைத்துந்தானாவான் நலிவிலாதான்

மோனகுரு திருவருளால் பிறப்புமாறி

முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்’

 

என்று ஆனந்தக் கூத்தாடுகிறான்.

 

சங்கரர் தனது 580 ஸ்லோகங்களில் பலமுறை சொல்லும் தத்வமஸி (நீயே அது/கடவுள்) என்ற உபநிஷத வாக்கியத்தையும் பாரதி பாடுகிறான்.

‘சாமி நீ சாமி நீ கடவுள் நீயே

தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்’ என்று பாடுகிறான்.

XXXX

 

ஆதிசங்கரர் போன்றோர் ஞானம் எனும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட போதும் பக்தி மார்க்கம் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதற்காக விவேக சூடாமணி, சௌந்தர்ய லஹரி, பஜ கோவிந்தம் போல 120க்-கும் மேலான துதிகளைப் பாடி வைத்தார். பாரதியும் பக்தியின் பெருமைதனைப் பாடுவான்,

 

பக்தியினாலே, தெய்வ பக்தியினாலே

 

பக்தியினாலே – இந்தப்

பாரிலெய்திடும் மேன்மைகள் கேளடீ

சித்தந்தெளியும்- இங்கு

செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்

வித்தைகள் சேரும்-நல்ல

வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்

தத்துவமுண்டாம், நெஞ்சிற்

சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

 

ஆசையைக்கொல்வோம்- புலை

அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாசமறுப்போம்……

என்று நீண்டதொருபாடலைப் பாடுகிறார்.

XXXX

எண்ணிய முடிதல் வேண்டும் என்ற பாட்டில், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்’- என்கிறார்.

 

இதே உவமையை ஆதி சங்கரர்,

சூரியனைக் கண்ட இருள் விலகுவது போல, ஞானம் எய்தியவுடன் எல்லாம் பிரம்மத்தில் கரைந்து விடும் என்பார் (ஸ்லோகம் 564). அதாவது எல்லாம் ஒன்றே என்ற உணர்வு பிறக்கும்.

XXX

பாரதியின் வேதாந்தப் பாடல்கள் அனைத்திலும் சங்கரரின் அத்வைதக் கருத்துகளைக் காணலாம். பாரதப் புதல்வர்களின்- தவ சீலர்களின்- கருத்து ஒன்றே என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

 

வாழ்க பாரதி- வளர்க அத்வைதம்

 

–SUBHAM-

 

 

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்! (Post No.5417)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-24 AM (British Summer Time)

 

Post No. 5417

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சிறப்புக் கட்டுரை

செப்டம்பர் 11. விவேகானந்தர் தனது உரையால் அமெரிக்காவை வெற்றி கொண்ட நன்னாள்!

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!

 

ச.நாகராஜன்

 

1

செப்டம்பர் 11. இன்று (11-9-2018) ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மகாசபையில் வெற்றிகரமான உரையாற்றிய 125 ஆண்டு விழா நாளாகும்.

அந்த மகத்தான வெற்றி ஹிந்து மதத்தின் வெற்றி. கூடியிருந்த அவையினர் அனைவரும் ஸ்வாமிஜி உரை முடித்தவுடன் இரு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிலிருந்து தொடங்கி அவரது பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

ஸ்வாமிஜியை இறுதிப் பேச்சாளராக அறிவிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ஏனெனில் அவரது பேச்சைக் கேட்க விரும்பி வரும் மக்கள் அதுவரை காத்திருப்பர் என்பதால் தான்.

 

2

மன்மத நாத் கங்குலி என்பவர் ஸ்வாமிஜியின் பால் அத்யந்த பக்தி கொண்டவர். அவர் தனது நினைவலைகளைப் பின்னால் பகிர்ந்து கொண்டார்.அவரது அனுபவங்கள் வேதாந்த கேசரி இதழில் 1960ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் இது.

கங்குலி 1897ஆம் ஆண்டு ஸ்வாமிஜியை கல்கத்தாவில் தரிசித்தார்.பின்னர் அடுத்த முறை டிசம்பர் கடைசி வாரத்தில் சந்தித்தார்.

ஸ்வாமிஜியைக் கண்டவுடன் கங்குலி விரைந்து சென்று அவர் பாதங்களைக் கையால் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த ஒரு சிறு கூடாரத்தின் பக்கத்தில் ஒரு  டீ மேஜை இருந்தது. உட்காருவதற்கு சில ஸ்டூல்களும் இருந்தன. ஸ்வாமிஜி பிரம்மானந்தரிடம் கங்குலி அருந்துவதற்கு டீ கொண்டு வருமாறு கூறினார். டீயும் பிரசாதமும் வந்து சேர ஸ்வாமிஜி தனது சம்பாஷணையைத் துவக்கினார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஸ்வாமிஜி தன் நினைவுகளைச் சொல்லலானார்.

அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்:

 

“சிகாகோவில் ஹிந்து மதம் தான் உலகிலேயே மிகப் பெரிய மதம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதைப் பாதிரிகளால் பொறுக்க முடியவில்லை. அவர்கள் கோபத்தால் கொதித்தனர். பிரான்ஸில் இன்னொரு சர்வமத மகாசபையைக் கூட்ட அவர்கள் விரும்பினர். பாரிஸில் அதை நடத்த எண்ணிய அவர்கள் அதில் பேசும் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசுவதைக் கட்டாயமாக்கலாம் என முடிவு செய்தனர். அப்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதனால் என்னை அந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் நான் பிரான்ஸுக்கு சென்று பிரெஞ்சு மொழியை ஆறு மாதங்களில் நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன். பிரெஞ்சு மொழியிலேயே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினேன். இதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் உற்சாகத்தை இழந்தனர். இன்னொரு மாநாட்டை நடத்துவது என்ற அவர்களது எண்ணமே கிடப்பில் போடப்பட்டது.”

ஸ்வாமிஜியை புறந்தள்ளி ஓரங்கட்ட நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியை மிக சுலபமாக அவர் முறியடித்து விட்டார். பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றதால் அதிலேயே பேசி பிரான்ஸ் மக்களை அவரால் கவர்ந்து ஈர்க்க முடிந்தது.

ஸ்வாமிஜி தங்கியிருந்த அறைக்கு வெளியே ஒரு பிரைவேட் லெட்டர் பாக்ஸ் இருந்தது. அதில் அவருக்கு வரும் தபால்கள் போடப்படும்.

அதில் அவருக்கு மிரட்டல் கடிதங்கள் ஏராளம் வந்தன. ஹிந்து மதம் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மிரட்டல் அந்தக் கடிதங்களில் இருக்கும்.

அஞ்சா நெஞ்சரான ஸ்வாமிஜி அதைச் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.

ஸ்வாமிஜி ராபர்ட் க்ரீன் இங்கர்சாலைச் சந்தித்த சமயத்தில் இங்கர்சால் அவரிடம், “நல்ல வேளை, நீங்கள் இப்போது வந்தீர்கள். சிறிது காலம் முன்னர் வந்திருந்தால் உங்களைக் கொன்றே இருப்பார்கள்” என்றார்.

ஹிந்து மதம் பற்றிய ஸ்வாமிஜியில் அரிய உரைகளால் பாதிரிகள் திடுக்கிட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

இதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகள் பல.

அவற்றில் ஒன்று தான் பிரான்ஸில் நடத்த திட்டமிட்ட அடுத்த மாநாடு.

அதை சுலபமாக உடைத்து எறிந்தார் அவர். ஒருவேளை பிரான்ஸில் மாநாடு நடந்திருந்தால் அமெரிக்காவை வெற்றி கொண்டது போல பிரான்ஸையும் அவர் வெற்றி கொண்டிருப்பார்.

 

3

இந்த 125வது ஆண்டு தினத்தில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகளாவிய விதத்தில் நிலை நாட்டிய ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது பக்தியுடனான பணிவான அஞ்சலியைச் செலுத்துவோம். அவர் போதித்த நமது மதத்தின் பெருமைகளை நினைத்துப் போற்றி அதைப் பாதுகாப்போம். நமது மதத்தின் அருமை பெருமைகளை உலகெங்கும் பரப்பி அனைவரும் உணரச் செய்வோம்!

***

ஆதாரம் : அத்வைத ஆஸ்ரமம்., கல்கத்தா வெளியிட்ட  Reminiscences of Swami Vivekananda என்ற நூல். (முதல் பதிப்பு  மே 1961; மேலும் பல பதிப்புகள் கண்ட நூல்) 430 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஸ்வாமிஜியின் பக்தர்கள் மற்றும் அபிமானிகள் தெரிவிக்கும் சுவையான தகவல்கள் ஏராளம் உள்ளன.வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். ராமகிருஷ்ண மடம் கிளைகளில் கிடைக்கும்.

–subham–

பாரதி 97! – 3 (Post No.5416)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-09 AM (British Summer Time)

 

Post No. 5416

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை!

பாரதி 97! – 3

 

ச.நாகராஜன்

 

  1. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்கு தாகூர் வருவதை அறிந்து அவருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றித் தொடராமல் அப்படியே விட்டு விட்டார். தாகூரின் பாடலையும் கட்டுரைகளையும் மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

  1. சுயசரிதை எழுதியவர்

தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

 

  1. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

அனைத்து மதங்களையும் மதித்தவர். அல்லா,அல்லா, அல்லா என்று பாடியவர்.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடியுள்ளார்.

 

  1. சிறந்த ரசிகர்

அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர். ஓவியர் ரவிவர்மா மறைந்ததை ஒட்டி இரங்கல் பா பாடினார்.சுப்பராம தீக்ஷிதர் மறைந்ததற்கும் இரங்கல் பா பாடியுள்ளார்.

 

  1. இயற்கை ஆர்வலர்

இயற்கையை ரசிப்பதில் அளவிலா ஆர்வம் கொண்டவர். பாஞ்சாலி சபதத்தில் சூரியாஸ்தமனம் பற்றி எழுதியுள்ளார். அநேக பாடல்கள் அவரது இயற்கை ஆர்வத்தை விளக்கும்.

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

நேர நிர்வாகம் பற்றி மிகவும் அக்கறையுடனிருந்தவர். பொழுது வீணே கழிய சற்றும் இடங்கொடேன் என குறிப்பில் எழுதியவர்.சோம்பலின்றி தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

  1. நையாண்டி வல்லுநர்

எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர் என்பதைத் தாண்டி நையாண்டி செய்வதில் வல்லுநர். ஒரு பெரிய நையாண்டி கதையையே எழுதியுள்ளார். கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்டவர்.

 

  1. மதமாற்றம் எதிர்த்தவர்

மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து அழுதார்.

 

  1. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

சிறிய எழுத்துக்கள். இடம் விட்டு இடம் எழுதும் பாங்கு. அழகிய கையெழுத்தைக் கொண்டவர். அவரது கையெழுத்துப் பிரதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

 

  1. நன்கு உடை அணிபவர்

சுத்தமான உடை.அழகிய உடை அணிய விரும்பியவர்.கோட்டு, தலைப்பாகை என அவரது கம்பீரமான உருவத்தை உடையால் இன்னும் மேம்படுத்திக் கொண்டவர்

 

  1. நண்பர்களை அரவணைத்தவர்

சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வெகுவாக மதித்து நட்பு பாராட்டி வந்தார்.

 

  1. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

வலிமையற்ற தோளினாய் போ போ போ என்று நலிந்த பாரதத்தை விரட்டியவர் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றும் எதிரிலா வலத்தினாய் வா வா வா என்றும் புதிய பாரதத்தை வரவேற்று அழைத்தார். அவரது பாரதம் உலக நாடுகளில் மேன்மையுற்ற பாரதம். அதையே அவர் அமைக்க விரும்பினார்.

  1. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

 

  1. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

தன் நூலான மாதா மணிவாசகத்தை தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியிட்டவர்.

 

  1. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

 

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். விண்ணும் மண்ணும் தனி ஆளும் வீரை சக்தி நினதருளே என்றவர் அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

 

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர்.

உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

  1. சகல உயிர்களையும் நேசித்தவர்

தின்ன வரும் புலியையும் அன்போடு நேசிக்க உபதேசித்தவர்; குருவிகளுக்கு அரிசி மணிகளைப் போட்டு ஆனந்தித்தவர். காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

 

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர்

புதுவை வாழ்க்கையில் வ.வே.சு ஐயரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவரது பாடல்களைக் கண்ட ஐயர் வெகுவாக அவரை வியப்புடன் போற்றினார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் போன்ற அக்ஷர லக்ஷம் பெறும் பாடல்களை பாடுபவர் என்று முகவுரை எழுதி அவரது நூல்களை அனைவரும் வாங்கி அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 

84.விவேகானந்தரின் பக்தர்

விவேகானந்தரின் பக்தராக விளங்கினார். அவரது ஜீவித சரித்திரத்தையும் எழுதியுள்ளார். விவேகானந்தரை ‘பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன்’ என்று போற்றிப் பாடியுள்ளார்.

 

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார். அங்கு அவர் முன் மௌனமாக அமர்ந்திருந்தார்; பேசவில்லை.

86.நாடக ஆசிரியர்

குட்டி நாடகங்களைச் சிறப்பாக எழுதியவர். ஜகத் சித்திரம் உள்ளிட்டவற்றில் அவரது நாடகம் எழுதும் வல்லமையைப் பார்க்கலாம்.

 

  1. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதை மாற்றி அமைத்து அதை புதிய பாணியில் மாற்ற நினைத்தவர். அது பற்றி அறிவிப்பும் வெளியிட்டவர். ஆயின் முயற்சி தொடரவில்லை.

  1. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

 

ஆக வந்தேமாதரம் என்ற இந்தியாவின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

 

 

  1. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

 

  1. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

தனது புதிய கவிதா நடையினாலும், பொருளினாலும் தமிழில் புதிய கவிஞர்கள் பரம்பரையை உருவாக்கியவர். பாரதி காலம் தொட்டு இன்று வரை அவரது தாக்கம் இல்லாத கவிஞர் ஒருவர் கூட இல்லை.

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

பெண் விடுதலை வேண்டியவர், ‘முன்னை அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து’ வாழ உபதேசித்தார். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுக்கச் சொன்னவர் மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழச் சொன்னார். பழமையைப் போற்றி அதில் உள்ள நல்லது அனைத்தையும் எடுத்துக் கொண்டு நவீன உலகின் சிறப்புக்களையும் ஏற்று வாழச் சொன்னவர். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க விரும்பியவர்.

 

 

  1. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

 

  1. புராணங்களைப் பரப்ப விரும்பியவர்

புராணங்களைப் பற்றி,’நன்று புராணங்கள் செய்தார்- அதில் நல்ல கவிதை பல பல தந்தார், கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’ என்று பாடினார். ஆனால் புராணங்கள் என்று கட்டுரை எழுதி, (கற்பனை என்றாலும்) அவற்றை நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஏனெனில், ‘புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவை தாம்’ என்று காரணத்தையும் தெரிவித்தார். ஸ்வாமி விவேகானந்தரும் புராணங்களை நாடெங்கும் வெள்ளமெனப் பாய்ச்சுங்கள் என்று கூறியதை நோக்கினால் இருவர் கருத்தும் ஒன்றாகிறது.

 

  1. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

 

  1. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

 

  1. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  1. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.

*

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை

97 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!!

 

முற்றும்

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

 

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.

(www.tamilandvedas.com பார்க்கவும்)

 

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும்