Gandhi condemned Purdah: Nehru (Post No.5405)

 

Gandhi Statue in San Francisco, USA; picture by Krishna Srinivasan

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 18-45 (British Summer Time)

 

Post No. 5405

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 
India’s first prime minister Jawaharlal Nehru refers to Gandhi several times in his book ‘Discovery of India’.
Here are some quotations:
Some kind of ethical approach to life has a strong appeal for me, though it would be difficult for me to justify it logically. I have been attracted by Gandhiji’s stress on right means and I think one of his greatest contributions to our public life has been this emphasis.
Xxx

Blood-shot Eyes!

I remember the words that Gandhiji said on that fateful evening on August 8 th,1942( about World War II)
We must look the world in the face with calm and clear eyes even though the eyes of the world are blood- shot today.

Xxxx

 

Bogus Interview
Some weeks earlier a friend in Rome had written to me to say that Signor Mussolini would like to meet me. There was no question of going to Rome. And then there had been the bogus interview with Mr Gandhi which the Giomale d’italia had published in 1931.

Xxxx

Picture of Gandhi Statue by  Krishna Srinivasan, SFC, USA.

Gandhi is not a Brahmin
There are innumerable examples of non- Brahmins and even persons belonging to the depressed classes, being so respected and sometimes
considered as saints.

Even today, in this money age, the influence of this tradition is marked, and because of it Ganghiji who is not a Brahmin can become the Supreme leader of India and move the hearts of millions without force or compulsion or official position or possession of money.

Xxx

 

Tapas- Penance does it!
This idea of some kind of penance, tapasya, is inherent in Indian thought, both among the thinkers at the top and the unread masses below. It is present today as it was present some thousands of years ago, and it is necessary to appreciate it in order to understand the psychology underlying the mass movements which have convulsed India under Gandhiji’s leadership.

Xxx


About Bhagavad Gita
Even the leaders of thought and action of the present day— Tilak, Aurobindo, Ghose, Gandhi— have written on it, each giving his own interpretation. Gandhiji places his firm belief in non -violence on it, others justify violence and warfare for a righteous cause.

Xxx

Caste must be eliminated!
Gandhiji’s references to caste have been progressively stronger and more pointed, and he made it repeatedly clear that the caste as a whole and as it exists, must be eliminated. And again, quite recently, he said:
The caste system, as we know, is an anachronism. It must go if both Hinduism and India are to live and grow from day to day.

Xxx
Anti Purdah

Muslim Voters in Gujarat where Gandhi was born

Gandhiji has been, and is, a fierce opponent of purdah and has called it ‘a vicious and brutal custom’ which has kept women backward and undeveloped. I thought of the wrong being done by the men to the woman of India by clinging to a barbarous custom which, whatever use it might have had when it was first introduced, had now become totally useless and was doing incalculable harm to the country. Gandhiji urged that woman should have the same liberty and opportunity of self -development as man.

Xxx
Tagore and Gandhi have undoubtedly been the outstanding and dominating figures of India in this first half of the twentieth century.

 

Picture by london swaminathan; location Bharatiya Vidhya Bhavan, London

— Subam —

ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல் (Post No.5404)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 8-25 am (British Summer Time)

 

Post No. 5404

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்புகள் பற்றி எவ்வளவோ படிக்கிறோம். பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

 

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

 

1924 ஆம் ஆண்டிலேயே சூத்ரகன் என்ற பிரபல ஸம்ஸ்க்ருத நாடகாசிரியர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ (மண்ணியல் சிறுதேர்) நியூயார்க்கில் நாடக மேடை ஏறியதும் அது பற்றி நேஷன் என்ற பத்திரிக்கையின்  கலை விமர்சகர் ஜோஸப் வுட் க்ரட்ச் நீண்ட விமர்சனம் எழுதியதையும் அப்படியே கொடுத்துள்ளார் நேரு.

“அந்த நாடகம் யார் எழுதியது, எந்த நூற்றாண்டில் எழுதியது என்பதைவிட அதன் இதயத்தைத் தொடும் அம்சங்களும், உண்மையுமே மிகவும் கவர்ர்ந்திழுக்கிறது. இது போன்ற ஒரு தூய நாடகத்தை ஐரோப்பாவில் காண முடியாது” என்றார்.

 

ஷேக்ஸ்பியர் எழுதிய Mid Summer Night’s dream

‘மிட் சம்மர் நைட் ட்றீம்’ என்ற நாடகம் அந்தக் காலத்திலேயே , அதாவது 1892 ஆம் ஆண்டில்– ஸம்ஸ்க்ருத மொழியாக்கம் செய்யப்பட்ட செய்தியையும் எழுதியுள்ளார்.

 

 

1789-ஆம் ஆண்டில் ஸர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES) காளிதாசனின் சாகுந்தலம் நடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் மேலை உலகம் முழுதும் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டானதாகவும் உடனே அவரது மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஜெர்மன், பிரெஞ்ச், இதாலிய மொழிகளில் சாகுந்தலம் வெளியானதாகவும்நேருஎழுதுகிறார். அது மட்டுமல்ல கெதே (GOETHE) போன்ற பெரும் புலவர்களை இது மிகவும்  ஈர்த்தது என்கிறார்.

நாடகங்களுக்கு அறிமுகம்/ பீடிகை (PROLOGUE) எழுதுவது ஸம்ஸ்க்ருத நாடகங்களில் மட்டுமே உண்டு. காளிதாசன் நாடகங்களைப் பார்த்துத்தான் பாஸ்ட் (FAUST) போன்ற நாடகத்தில் அறிமுகம்/ பீடிகை இடம்பெற்றது என்றும் சொல்கிறார்.

 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் வில்ஸன் (WILSON) பவபூதி, காளிதாஸன் நாடகங்களைப் புகழ்ந்து எழுதியதையும் மேற்கோள் காட்டுகிறார். ‘இசை போன்று ஒலிக்கும் மஹத்தான காவியங்கள்’ என்பது வில்ஸனின் பாராட்டுரை.

 

2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதித்த வரம்புக்குள் இவ்வளவும் நடந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாடகம் முதலிய கலைத்துறைகள் படிப்படியாகக் குறைந்தமைக்கு இஸ்லாமிய மதத்தின் கலை வெறுப்பே காரணம் என்று ஒரு கருத்து உள்ளது. இந்தக் கலைகள் அனைத்தும் இந்தியாவின் தேசீய மதத்தைத் தழுவி இருந்ததால் ஆட்சியாளரின் ஆதரவு கிடைக்காமல் போயிற்று என்பதைக் குறிப்பிட்ட நேரு இதை முழுதும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே கலைகளின் வீழ்ச்சியைக் காண முடிகிறது என்பார்.

 

ஸர் வில்லியம் ஜோன்ஸ் சொன்ன கருத்தை அப்படியே கொடுத்துள்ளார்.

 

“சம்ஸ்க்ருத மொழி, எவ்வளவு பழமையாக இருக்கட்டும்; அதன் அமைப்பு மிகவும் அதிசயமானது. கிரேக்க மொழியை விட சிறப்பானது; லத்தீன் மொழியைவிட வளம் பொருந்தியது; இரண்டு மொழிகளையும் விடசெம்மையானது; ஆயினும் வியப்பான ஒற்றுமையைக் காணமுடிகிறது. வினைச்சொற்களின் வேர், இலக்கண அமைப்பு ஆகியவற்றில் அதிக ஒற்றுமை இருப்பதை தன்னிச்ச்சையாக நடந்தது என்று எண்ண முடியாது. எந்த ஒரு மொழி அறிஞனும் அவை ஒரே மூலத்திலிருந்து பிறந்த மொழிகள் என்றே எண்ணுவான். அந்த மூல மொழி இப்போது இல்லாமல் இருக்கலாம்”.

 

நேருவும் தனது சொற்களில் சம்ஸ்க்ருத்த மொழியின் வளமை, பழமை, செம்மை ஆகியவற்றைப் பாராட்டுகிறார்.

 

பாணினி பற்றி (ABOUT PANINI)

உலக மஹா இலக்கண மேதை, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதிய, பாணினி பற்றி ஜவஹர்லால் நேரு, டிஸ்கவரி ஆப் இந்தியா- வில் கூறுகிறார்:-

“கி.மு. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டிலேயே பாணினி என்பவர் ஸம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதிவிட்டார். அவருக்கு முந்தி இருந்த இலக்கண வித்தகர்களின் பெயர்களையும் அவர் செப்புகிறார். அவரது காலத்தில் ஸம்ஸ்க்ருத மொழி செம்மொழியாகி  எப்போதும் வளரும் இலக்கியமாக உருப்பெற்றது. அவர் எழுதிய புத்தகம் வெறும் இலக்கண புஸ்தமன்று. அதற்கும் மேலானது . பாணினியின் இலக்கணம் (அஷ்டாத்யாயி) பற்றி சோவியத் (ரஷ்ய) பேராசிரியர் ஸ்டெசர் பாட்ஸ்கி பகர்கிறார்: ‘

‘மனித சிந்தனையின் மஹத்தான சாதனைப் படைப்புகளில் இதுவும் ஒன்று. இதுவும் இதன் மீது பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம் என்னும் பேருரையும் இந்திய விஞ்ஞான சிந்தனையின் அடிப்படையாகத் திகழ்கின்றன.’

 

பாணினிக்குப் பிறகு பல வியாக்கியானங்களும் பிற்சேர்க்கைகளும் வந்த போதும் இன்றும் அது, ஸம்ஸ்க்ருத இலக்கணத்தின் அளவுகோலாக நிற்கிறது. பாணினி யவன லிபி பற்றிச் சொல்லுவது வியப்பானது – அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே இந்தியாவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு இருந்ததை இது காட்டுகிறது.

 

பாணினி பல்வேறு நாட்டியங்கள் பற்றி உரைப்பது 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டியம், நாடகம் வளர்ந்ததைக் காட்டுகின்றது.

 

அடிக்குறிப்பு:

கீத் போன்றோர் கி.மு.300 வாக்கில் பாணினி இருந்ததாகச் சொன்னாலும் அவர் புத்தர் காலத்துக்கும் முந்தியவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாணினி சொல்லும் விஷயங்களில் எங்குமே புத்தமத வாசனை துளிக்கூட இல்லை.

 

 

வட மேற்கு இந்தியாவில் தற்போதைய பெஷாவர் (பாகிஸ்தானில் உள்ளது) நகருக்கு அருகில்  புத்தர் பிறபதற்கு முன்னர் (2700 ஆண்டுகளுக்கு முன்னர்) தட்ச சீலம் நகரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. விஞ்ஞானம் மருத்துவம் கலைகள்,சம்யம் ஆகியவற்றைப் போதித்தது (இதுதான் உலகின் முதல் பல்கலைக்கழகம்).அதில் கல்வி கற்க தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து பிராஹ்மணர்களும் பிரபுக்களின் பிள்ளைகளும் பயமின்றி, ஆயுதப் பாதுகாப்பின்றி பயணம் செய்ததை ஜாதக் கதைகளில் காண்கிறோம். அதில் படித்துப் பட்டம் பெறுவதை பெறும் கௌரவமாகக் கருதினர். பாணினியும் இந்த இடத்தில் கல்வி கற்றவரே.முன்காலத்தில் பிராஹ்மண (வேத) பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் பௌத்தம் கற்பிக்கும் கேந்திரமாக மாறியது.

 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது நான் சேர்த்த விளக்கங்கள்.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர், சிறைவாசத்தின்போது நேரு எழுதியது டிஸ்கவரி ஆப் இந்தியா. அனைவரும் படிக்க வேண்டிய நூல்)

 

–சுபம்–

செம்பைப் பொன்னாக்கி தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-58 AM (British Summer Time)

 

Post No. 5403

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

 

 

செம்பைப் பொன்னாக்கும் ரஸவாதக் கலையில் தேர்ந்தவர்கள் சித்தர்கள்.கருணை பெருக ஏழைகளுக்கும் தகுந்தவர்களுக்கும் செம்பைப் பொன்னாக்கித் தருவது அவர்களின் வழக்கம். இப்படிப்பட்ட சித்தர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரிய சித்தர் கொங்கண சித்தர்.

இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார்.

இவரைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 37ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறுகிறது:

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்

சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்

தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து

மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.

 

இவர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

மகதநாட்டு மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அதைப் பார்த்த சுராநந்த முனிவர் என்பவர் அதை நீடித்து வாழ்வாயாக என்று ஆசி கூறிக் காப்பிட்டார்.

சகல கலைகளும் கற்ற அந்த அரசகுமாரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்று எண்ணினான். அதைத் தன் தந்தைக்கு அவன் தெரிவிக்க உரிய பரிவாரங்களோடு மகனை அனுப்பி வைத்தார் தந்தை. பல ஊர்களையும் சென்றடைந்த பின் ஆதியூருக்கு வந்தான் அரசகுமாரன். அங்கு சுராநந்த முனிவர் தோன்றி அவனுக்கு முக்கால அடைவு உணர்வித்து ஆசி அருளினார்.

இந்த கொங்கண ராஜன் மேல் நாட்டு யாத்திரையாகக் கிளம்பி பல தலங்களையும் தரிசித்து தென் கரை நாட்டில் கொங்கணேசரைத் தரிசித்து அங்கே தங்கி இருந்தான். ஒரு நாள் புன்னாக மர நிழலிலே சிவனைத் தரிசித்து உள்ளமுருகுப் பூசிக்கும் காலத்தில் இறைவன் குருவடிவாகத் தோன்றி அஷ்ட மா சித்தியையும் சிவ யோகத்தையும் தெளிவாக உபதேசித்து அருளினார்.

கொங்கணர் தாமிர முதலியவற்றை பொன்னாக மாற்றும் சித்தியைப் பெற்றதால் விரும்பினோருக்கு அப்படிப் பொன்னாக மாற்றிக் கொடுத்து வந்தார். ஒரு சமயம் ஆகாயத்தில் பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட அதைக் கொங்கணர் விழித்துப் பார்க்கவே அது சாம்பலானது.

கொங்கணருக்கு இன்னொரு சித்தரான கோரக்கநாதரின் நட்பும் உண்டானது.

அப்பிரமேய தல புராணம் கூறும் செய்யுள் இது:-

பாத பத்திரம் பற்பல மூலி கொண்

டூது கற்புட முன்வலி யெய்திய

சூத வேதைசிந் தூரத் துகளினால்

வாத சித்தி கனகம் வழங்கினான்

தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.

இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.

கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக நம்மிடையே இன்று பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.

 

கொங்கணகிரியில் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் ஒன்று உண்டு:

 

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள

ரந்திபக லற்றநிலை                        வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை

அன்பொடுது திக்கமன                   மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்தி பெற

சந்திரவெ ளிக்குவழி                        யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்

சம்ப்ரமவி தத்துடனே                       வருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன

முன்றனைநி னைத்தமைய                  அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி

வந்தனைய புந்தியினை                     யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

அருமையான அர்த்தத்தைக் கொண்ட இந்த அரிய திருப்புகழின் இறுதியில்,

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

என்று வரும் வரிகள் கொங்கண கிரியின் பெருமையைக் கூறுவதைக் காணலாம்.

***

650 Plays! Nehru on Sanskrit Wonders!! (Post No.5402)

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 7 September 2018

 

Time uploaded in London – 18-25 (British Summer Time)

 

Post No. 5402

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

We read about wonders of Sanskrit language. Jawaharlal Nehru adds more interesting information which most of us don’t know.

Following is taken from his book Discovery of India before Independence: –

“Europe first learned of the old Indian drama from Sir William Jones translation of Kalidasa’s Shakuntala, published in 1789. Something in the nature of a commotion was created among European intellectuals by the discovery and several editions of the book followed. Translations also appeared in German, French Danish and Italian. Goethe was powerfully impressed and he paid a magnificent tribute to Shakuntala.
Xxx


The idea of giving a Prologue to Faust said to have originated from Kalidasa’s prologue, which was in accordance with the usual tradition of the Sanskrit drama.
Xxx
Wilson who used to be Professor of Sanskrit at Oxford university, has said of these two,
‘It is impossible to conceive language so beautifully musical or, so magnificently grand, as that of the verses of Kalidasa and Bhavabhuti.

Xxx
Islamic Rule is cause for decay ??

The stream of Sanskrit drama continued to flow for centuries but after Murari , early in the ninth century, there is a marked decline in the quality. That decline, and a progressive decay, were visible in other forms of life’s activities. It has been suggested that this decline may be partly due to the lack of royal patronage during the Indo -Afghan and Mogul periods and the Islamic disapproval of the drama as an art form, chiefly because of its intimate association with the national religion. But there is little substance in the argument though political changes at the top had some indirect effect. The decline was obvious long before the political changes.

Xxxx


Yet , in spite of all this, it is astonishing the Sanskrit drama continued to be produced right through the mediaeval period and up to recent times. In 1892 appeared a Sanskrit adaptation of Shakespeare’s Midsummer Night’s Dream. Manuscripts of old plays are continuously being discovered. A list of these prepared by Professor Sylvain Levi contained 377 plays by 189 authors. A more recent list contains 650 plays.

Xxx

An English translation of Shudraka’s ‘Mrichakatika’ drama was staged in New York in 1924. Mr Joseph Wood Krutch , the dramatic critic of the ‘Nation’ wrote of it as follows,
‘Here, if anywhere the spectator will able to see a genuine example of that pure art theatre of which theories talk, and here, too, he will be led to meditate upon that real wisdom of the East doctrine but in a tenderness, far deeper and truer than that of the traditional Christianity which has been so thoroughly corrupted by the hard righteousness of Hebraism. A play wholly artificial but yet profoundly moving because it is not realistic but real. Whoever the author may have been, and whether he lived in the fourth century or the eighth century he was a man good and wise with the goodness and wisdom which not come from the lips or the smoothly flowing pen of the moralist but from the heart……..
Nowhere in our European past do we find, this side the classics, a work more completely civilised.

Xxx


Vitality and Persistence of Sanskrit

Sanskrit is a language amazingly rich, efflorescent, full of luxuriant growth of all kinds, and yet precise and strictly keeping within the framework of grammar which Panini laid down two thousand six hundred years ago. It spread out, added to its richness, became fuller and more ornate, but always it stuck to its original roots.

Sir William Jones observed as long ago as 1784,
‘The Sanskrit language, whatever be its antiquity, is of a wonderful structure; more perfect than the Greek; more copious than the Latin and more exquisitely refined than either; yet bearing to both of them a stranger affinity, both in the roots of verbs ,and in the forms of grammar, than could possibly have been produced by accident; so strong indeed, that no philologer could examine them all without believing them to have sprung from some common source which perhaps no longer exists’.
Xxx

Nehru has given a detailed list of Sanskrit books with short descriptions in the Discovery of India.

 

–Subham–

 

 

 

பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401)

written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 7 September 2018

 

Time uploaded in London – 6-47 am (British Summer Time)

 

Post No. 5401

 

 

பிரியாடிக் டேபிள் (periodic table) எனப்படும் மூலக     அட்டவணையில் 80-ஆவது இடத்தைப் பிடித்த மூலகம் பாதரஸம். இது ஒரு விநோதமான மூலகம். திரவ ரூபத்தில் இருக்கும். கண்ணாடி முதலியவற்றில் ஒட்டாது. சிறிய வெப்பம் இருந்தாலும் விரிவடையும். இதனால் உடலில் உள்ள சூட்டை அளக்க இதை தெர்மாமீட்டரில் பயன்படுத்தினர். இதன் விநோதத் தன்மையால் இதைக் கொண்டு ஈயத்தையும் இரும்பையும் தங்கம் ஆக்கலாம் (alchemy) என்று உலகம் முழுதும் நம்பிக்கை இருந்தது. ஒருவர் தலை முடியில் பாதரஸம் இருக்கும் அளவைக் கொண்டு அவர் இவ்வித (alchemy or transmutation of metals) ஆராய்ச்சியில் ஈடுபட்டாரா அல்லது காம சம்பந்தமான (syphilis) நோய்களுக்கு மருந்து சாப்பிட்டாரா என்று இறந்த பின்னரும் தலை முடி காட்டிவிடும். இது அந்தக்காலம். இப்பொழுது மெர்க்யுரி எனப்படும் பாதரஸம் (Mercury) விஷம் என அறிந்ததால் அதை உள்ளுக்கு சாப்பிடும் மருத்துகளில் கலப்பது இல்லை.

 

 

நமது ரிஷி முனிவர்கள் ஈயம், இரும்பு தாமிரம் ஆகியவற்றிலிருந்து தங்கத்தை உண்டாக்கியது உண் மையாக இருக்கலாம். ஆனால் மேலை நாட்டில் எந்த ஒரு ரஸவாத ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கவில்லை. விஞ்ஞானம் இன்று வரை நம்பாத அஷ்டமா சித்திகள் , இந்துமத முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உண்டு. ஆகையால் அவர்கள் இப்படி ஒரு சித்தியைப் பெற்றதில் வியப்பில்லை.

 

பாதரஸம் எப்பொழுதுமே திரவ நிலையில் (liquid state) இருக்கும் ஒரு உலோகம் என்ற நம்பிக்கை தகர்ந்து போன ஒரு சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1759-ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரியாவில் வேறு ஒரு சோதனைக்காக சென்றனர். ஏ. பிரவுனும் எம்.வி. லோமோனோசோவும் உப்பையும் பனிக்கட்டியையும் கலந்து வெப்பத்தைத் தாழ்த்தும் சோதனை செய்தனர். அமிலத்தையும் பனிக்கட்டியையும் கொண்டு மேலும் வெப்பநிலையைக் குறைக்கலாமா என்றும் ஆரய்ந்தனர். வெப்பத்தை அளக்க முயன்றபோது தெர்மாமீட்டரில் (வெப்பமானி) பாதரஸம் நகரவில்லை! கண்ணாடிக்குள் அது கட்டியாக நின்றவுடன் அதை உடைத்து வெளியே எடுத்தால் கம்பி போல வந்தது. மற்ற உலோகக் கம்பிகளை வளைப்பது போல வளைக்கவும் முடிந்தது. அப்பொழுது முதல் பாதரஸ  மும் ஒரு சாதாரண மூலகமே என்று உலகம் உணர்ந்தது.

கலோமல் (calomel) எனப்பட்டும் மெ ர்க்யுரிக் குளோரைடு (Mercuric chloride) பேதி மருத்தாகவும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் மருந்தாகவும் இந்தியா உள்பட பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தது. சீன மருந்துகளில் இப்பொழுதும் பாதரஸ கூட்டுப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலை நாடுகளில்  தோல் நோய்களுக்கு வெளியே (Skin Ointments) பூசும் களிம்புகளில் மட்டும் இருக்கும். இது விரைவில் ஆவியாகக் கூடியதால் சோதனைச் சாலைகளில் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் புகுந்து பலவிதக் கேடுகளைத் தந்தது.

கடல் மீன்களைச் சாப்பிடுவோர் (tuna, Sword fish) இந்தக் கேடுகளுக்கு அதிகம் ஆட்படுவர். நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்களில் இது இருந்தாலும் மிக மிகக்குறைவே. அதனால் ஆபத்து ஏற்படாது. கர்ப்பிணிப் பெண்களை மேலை நாடுகளில் சில வகை மீன்களைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிப்பர்.

 

பாதரஸத்தை இப்பொழுதும் மின்சாரக் கருவிகளில் பயன்படுத்துவர். ஆனால் புறச் சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் பாட்டரிகளில் அதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது.

 

எகிப்தியர், கிரேக்கர், இந்தியர் ஆகியோருக்கு ஆதிகாலம் முதல் தெரிந்த ஒரு உலோகம் இது. எகிப்திய கல்லறையில் தேங்காய் வடிவ குடுவை கிடைத்தது. இது கி.மு 1600 ஆண்டில் செய்யப்பட்டது.

 

ஸ்பெயின் நாட்டில் பழங்கால குகை ஓவியங்களில் சின்னபார் (cinnabar) எனப்படும் மெக்யுரி சல்பைடை (Mercuric sulfide) பயன்படுத்தினர். இது 30,000 ஆண்டு பழமையுடைத்து.

தென் அமெரிக்க இன்கா நாகரீக மக்களும் இதை அறிந்து இருந்தனர். ஆகவே தங்கம் தாமிரம் இரும்பு போல பழங்கால மக்கள் அறிந்த உலோகம் பாதரஸம். ஆனால் இதை வைத்து தங்கம் உண்டாக்கும் முயற்சிகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

-சுபம்-

ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறை (Post No.5400)

WRITTEN BY S NAGARAJAN

Date: 7 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-04 AM (British Summer Time)

 

Post No. 5400

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 7-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தியேழாம்) கட்டுரை

 

ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

ச.நாகராஜன்

 

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டு பிடிக்க முயன்று அதைப் பற்றிய உளவியல் ஆய்வில் ஈடுபட்டு பிரபலமான புத்தகத்தை எழுதியவர் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க். (Viktor Emil Frankl பிறப்பு 26-3-1905 மறைவு 2-9-1997) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதர் இவர்

ஆனால் அநியாயமாக ஹிட்லரின் சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்ட லட்சக்கணக்கானோருள் இவரும் ஒருவர்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது போலந்தை திடீரென்று ஆக்கிரமித்த ஹிட்லர் அங்கு சித்திரவதை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தான். இந்த முகாம் அஸ்விட்ஸ் சித்திரவதை முகாம் (Auschwitx Concentration Camp) என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் முகாம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு 45 துணை முகாம்கள் இருந்தன.

 

 

இந்த முகாம்களுக்கு சுமார் 13 லட்சம் பேர்கள் அனுப்பப்பட்டனர். அதில் 11 லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர். 1940இல் மே மாதம் கைதிகள் இங்கு கொண்டு வருவது ஆரம்பிக்கப்பட்டது. ஏராளமான புகைவண்டிகள் இவர்களை ஏற்றி வந்தன. இவர்களில் 90 சதவிகிதம் பேர் யூதர்கள். செப்டம்பர் 1941இல் ஆரம்பித்து கூட்டம் கூட்டமாக கைதிகள் விஷவாயு சேம்பருக்குள் அனுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்.

 

 

செங்கல்லினால் ஆன கட்டிடம் ஒன்றில் அவர்களை அடைத்து காற்றுப் புகாதபடி ஜன்னலை மூடி விட்டு, சயனைடை அடிப்படையாகக் கொண்ட ஜிக்லான் பி (Zyklon B)  என்ற விஷ வாயுவை நிரப்பி இவர்கள் கொல்லப்பட்டனர். இது தவிர, பல்லாயிரம் பேர்கள் உணவின்றி வாடி இறந்தனர். பலர் முகாம்களின் மோசமான நிலையால் வியாதிகளால் பீடிக்கப்பட்டு இறந்தனர். இங்கிருந்து 802 கைதிகள் தப்ப முயன்றனர். ஆனால் வெற்றிகரமாகத் தப்பியவர்கள் 144 பேர்களே.

 

 

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் கொடூரமான சித்திரவதை முகாம் பற்றி உலகம் முழுமையாக அறிந்தது.

 

உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் சோவியத் படைகள் அஸ்விட்ஸை நெருங்கவே கைதிகளை போலந்தின் மேற்கே அனுப்பி அவர்களின் கடைசி யாத்திரையைத் தொடங்கி வைத்தது நாஜி ஜெர்மனி. எஞ்சி இருந்தோர் 1945 ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இப்படி விடுதலையானவர்களில் ஒருவர் தான் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க்.

 

 

முதலில் வியன்னாவில் மன நல  மருத்துவராக ஒரு யூத ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார் அவர். போர் மேகம் ஆஸ்திரியாவைச் சூழவே அமெரிக்கா தனது விசாவை வழங்கி அவரை அமெரிக்கா வருமாறு அழைத்தது. ஆனால் தனது வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு வியன்னாவிலேயே வசித்து வந்தார் அவர். திடீரென்று அவரையும் குடும்பத்தினரையும் கைது செய்தது நாஜிப் படை. குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

 

 

அவர் நான்கு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார். அவரது திறமையைக் கருத்தில் கொண்ட முகாம் அதிகாரிகள் அவரை கைதிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை சொல்லப் பணித்தனர். அங்கு ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாக அவர் பல புதிய உண்மைகளைக் கண்டார். அந்த உண்மைகளை இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான உளவியல் புத்தகமான ‘மேன்ஸ் செர்ச் ஃபார் மீனிங் (Man’ s Search for Meaning) என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

முக்கியமாக தற்கொலைக்கு முயன்றவர்களை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துவதில அவர் வல்லவரானார்.

 

 

சித்திரவதை முகாமில் அவருக்கு அடுத்தாற்போல உட்கார்ந்திருந்த ஒரு கைதி வேடிக்கையாக அவரிடம், “இந்த நிலையில் நமது மனைவிமார் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும்? என்று சொல்லிச் சிரித்தார்.

உடனே ஃப்ராங்க் வானத்தை அண்ணாந்து பார்த்தார். அங்கு மேகக் கூட்டத்தில் அவரது அன்பு மனைவியின் முகம் கள்ளங்கபடமற்றுத் தெரியவே அவரது மனதில் ஒரு புது உத்வேகம் எழும்பியது.

‘உங்கள் அன்புக்குரிய மனைவியை அதிகம் நேசியுங்கள்; உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்கிறார் அவர்.

 

 

சித்திரவதை முகாம்களுக்கு வருவோர் பொதுவாக முதலில் எப்படியாவது யாராவது தம்மைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பர்.அடுத்த நிலையில் அது நடக்காது என்று தெரியும் போது உணர்ச்சி பூர்வமான மரணத்தை அடைகின்றனர். எப்படியோ உயிரோடிருந்தால் போதும் என்ற நிலை அது.நாளைக்கு மரணம் என்ற நிலையிலும் ஒரு துண்டு ரொட்டி இன்றைக்கு வேண்டும் என்ற அந்த நிலையைக் கடந்து மூன்றாம் நிலையில் விடுதலை என்ற நிலை ஏற்படும்.

 

 

இந்த மூன்று நிலைகளைக் கொண்ட முகாம் வாழ்வில் ஏற்படும் துன்பம் சொல்லவொண்ணாதது. அந்த துன்பத்தில் தான் தனது ஆராய்ச்சிக்கான விடையைக் கண்டார் ஃப்ராங்க்.

எவ்வளவு மோசமான நிலையிலும் கூட, சொல்லவொண்ணாத துன்பம் இருந்த போதும் கூட, உங்கள் அணுகு முறையை யாராலும் அடக்க முடியாது; அந்த அணுகுமுறை உங்களுக்குள்ள சுதந்திரம்; அதன் மூலம் வாழ்க்கையை முழுதுமாகப் புரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.

 

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்பதை விட வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் நம்மை என்ன கேள்வி கேட்கிறது என்பதைச் சிந்தித்தாலேயே போதும் நம்முடைய வாழ்விற்கான அர்த்தம் புரிந்து விடும் என்பது அவரது சித்தாந்தம்.

சித்திரவதை முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் வெற்றிகரமான உளவியல் நிபுணராக அவர் பல்லாண்டுகள் பணி புரிந்தார். லோகோதெராபி  (Logotherapy) என்ற புதிய உளவியல் சிகிச்சை முறையை அவர் கண்டுபிடித்தார்.

 

 

வாழ்வில் ஏற்படும் துன்பங்களால் மனம் கலங்க வேண்டாம். அந்தத் துன்பமான வாழ்க்கை உங்களை என்ன கேட்கிறது என்பதை சிந்தியுங்கள்; பிரச்சினைகளிலிருந்து உங்களின் அணுகுமுறையால் மீளலாம் என்பது தான் அவர் உலகினருக்குத் தரும் புதிய சித்தாந்தம்.

உலகின் மகா கொடூரமான சித்திரவதை முகாமில் என்னென்ன நடந்தது என்பதை நேரடியாகப் பார்த்து அனுபவித்த விஞ்ஞானி என்ற முறையில் ஃப்ராங்க் உளவியல் சிகிச்சை உலகில் தனி இடத்தைப் பெறுகிறார்.

 

 

துன்பம் கண்டு கலங்க வேண்டாம்; வாழ்வின் அர்த்தத்தை அதிலிருந்து பெற்று சீராக வாலாம் என்பது அனைவருக்கும் ஒரு ஆறுதலான செய்தி தானே!

 

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஆலிவர் சாக்ஸ் (Oliver Wolf Sacks பிறப்பு 9-6-1933 மறைவு 30-8-2015)    பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூளை இயல் நிபுணர். அறிவியல் வரலாற்று ஆசிரியர். அவரது ‘அவேகனிங்ஸ் (Awakenings) என்ற புத்தகம் சுவையான சம்பவங்களை உள்ளடக்கிய நூல்.இதனால் உத்வேகம் பெற்ற பென்னி மார்ஷல் என்ற அமெரிக்க டைரக்டர் இதே பெயரில் இதை 1990இல் இதை திரைப்படமாகப் பிடித்தார்.

கதை இது தான்:-

முதல் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து ஒரு புது விதமான வியாதி ஆரம்பித்தது. உயிருடன் இருந்த போதும்  தங்களின் பிரக்ஞையை இழந்து தூங்கிக் கொண்டே பல ஆண்டுகள் நடைப்பிணமாக பலர் வாழ்ந்துவந்தனர். இதைப் போக்க எந்த மருந்தும் இல்லாத நிலையில் சாக்ஸ் எல் டோபா (L Dopa) என்ற மருந்தைக் கொடுத்து அவர்களின் வியாதியைப் போக்கினார். தூக்கத்திலிருந்து விழித்த அவர்கள் முழு சுய நினைவுடன் வாழ ஆரம்பித்தனர்.

இவரது பல புத்தகங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்த மிக மிகச் சுவையான சம்பவங்களை சித்தரிப்பதால் அவற்றில் பல திரைப்படங்களாகவும் குறும் படங்களாகவும், நாடகங்களாகவும் ஆக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளன. அவேகனிங்ஸ் மூன்று அகாடமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

‘விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் என்று பல பேர்களைச் சொன்னாலும் இவருக்கு அது விசேஷமாகப் பொருந்துகிறது!

***

 

 

 

கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 6 September 2018

 

Time uploaded in London – 18-55  (British Summer Time)

 

Post No. 5399

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ்ப் பழமொழி. ஏன்?

தந்தத்திற்கு அவ்வளவு மதிப்பு. உலகெங்கிலும் இந்திய தந்தப் பொருட்கள் உள்ளன. இப்பொழுது இங்கிலாந்திலும், ரஷ்யாவிலும், மேலும் பல நாட்டு மியூஸியங்களிலும் இந்திய தந்தப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் பழங்கால எகிப்தில் இந்திய தந்தச் சிற்பங்கள் இருப்பது பற்றி எழுதியுள்ளேன். இதோ மேலும் சில சுவையான செய்திகள்.

இங்கிலாந்தில் இந்திய யானைத் தந்தம்

சென்னை அரும்பொருட் காட்சியகத்தின் சூபெரின்டெண்டாக இருந்த எட்வர்ட் தூர்ஸ்டன் ஒரு செய்தியைக் தெரிவித்ததார். கேரளத்தில் மன்னர் பரம்பரையில் வந்த ராம வர்மா ஒரு முறை ஐந்து அற்புதமான தந்தச் சிற்பங்களைப் பார்த்தார். அவற்றில் மனதைப் பறிகொடுத்து தந்த வேலை செய்யும் சிற்பிகளுக்கு பேராதரவு வழங்கினார். அவரை அடுத்து மன்னராக வந்த மார்த்தாண்ட வர்மா அதில் மேலும் ஈடுபட்டார். அவர் ஒரு பெரிய தந்த சிம்மாசனத்தைச் செய்து அதை  விக்டோரியா மாஹாராணிக்கு அனுப்பி வத்தை வைத்தார். உடனே பிரிட்டிஷார் அதை 1851 ஆம் ஆண்டு லண்டன் பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு வின்ட்ஸர் அரண்மனைக்கு எடுத்துச் சென்றன்ர்.

லண்டனில் உள்ள மியூஸியங்களிலும் தனியாரிடமும் நிறைய தந்தக் கலைப் பொருட்கள் உள்ளன. மூக்குப்பொடி டப்பி முதல் ஆங்கில எழுத்துகளைச்  சிறுவர்களுக்கு கற்பிக்கும் அகரவரிசை வரை ஆயிரக்கணக்கான கலைப் பொருட்கள் இந்திய அரண்மனைகளிலும் இல்லங்களிலும் உள. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாஸ்கோவுக்குச் சென்ற பொழுது ஒரு பெரிய தந்த ஸ்க்ரீனை ரஷ்யாவுக்குப் பரிசாகக் கொடுத்தார். 1955ஆம் ஆண்டில் கொடுத்தது இப்பொழுதுஅங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுதுமுள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்து வந்த பிரிட்டிஷார், லண்டன் பிரிட்டிஷ் மியூஸியத்தில் அஸீரிய நாகரீக தந்த கலைப் பொக்கிஷத்தை வைத்துள்ளனர். ஹைதராபத்தில் சாலார் ஜங் மியூஸியத்தில் சிறப்புமிக்க கலை வேலைப்பாடுகள் மிகுந்த தந்த கைவினைப் பொருட்கள் காட்சியில் உள்ளன. பெரும் பணக்காரர்கள் சதுரங்கக் காய்களை தந்தத்தில் செய்தனர்.

மும்பையிலுள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூஸியத்தில் நிறைய தந்த கைவினைப் பொருட்கள் இருக்கின்றன. நாடு முழுதும், குறிப்பாக கேரளத்தில் நிறைய இடங்கள், தந்தச் சிற்பங்களுக்கு பெயர் போன ஊர்களாகும்.

சிந்து- ஸரஸ்வதி சம வெளி நாகரீக காலத்தில் பெண்கள் தந்தத்தினால் ஆன சீப்புகளைப் பயன்படுத்தியதும் தெரிகிறது.

அது மட்டுமல்ல தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் தந்தம் பற்றிய அரிய விஷயங்கள் இருப்பது எனது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

 

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் காளிதாசன் வாழ்ந்தான் என்று நான் சங்க இலக்கிய உவமைகள் மூலம் நிரூபித்தேன். உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாஸன் எழுதிய ரகுவம்ஸ காவியத்திலொரு அற்புதமான செய்தி வருகிறது:-

ரகு வம்ஸம் 17-21

மன்னன் அதிதி, நாற்கால் மண்டபத்தில் அமர்ந்து அபிஷேகம் செய்துகொண்டபின் உடை உடுப்பதாற்காக அருகிலோர் உள்ள மற்றோர் அறையில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்த ஆசனத்தில் உட்கார்ந்தான் (17-21, ரகு வம்சம்)

 

யானைத் தந்த ஆசனம்= கஜ தந்த ஆசனம்

 

இதே போன்ற ஒன்றைத் தான் கேரள மன்னர் , விக்டோரியா மஹா ராணியாருக்கு   செய்து அனுப்பினார். சிற்ப வேலைகள் அனைத்தும் பரம்பரையாக கற்பிக்கப்பட்டதால் நூற்றாண்டுக் காலத்திலும் அது பெரிதும் மாறி இருக்காது என்று நம்பலாம்.

 

கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடலில் (40-2) பாடுகிறார்,

“வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து

ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்

சாந்த மரத்தின் , இயன்ற உலக்கையால்

ஐவன வெண்ணெல் அறி உரலுள் பெய்து

புலியால் கொல்லப்பட்ட யானையின் தந்தத்தை எடுத்து வந்து செய்த உலக்கை, மற்றும் சந்தன உலக்கையால் மூங்கில் நெல்லைக் குத்தியதாக கபிலர் பாடுகிறார்.

அகநானூற்றில் தொல்கபிலர் பாடிய பாடலில் (282), ஒரு வேடன் காட்டிலே யானையைக் கொன்று கொண்டு வந்த தந்தத்தால் தங்கத்தைத் தோண்டி எடுக்க முயன்றான். ரத்தினக் கற்களுடன் தங்கமும் வந்தது. அந்த நேரத்தில் கோடாரி போல பயன்பட்ட யானைத் தந்தம் ஒடியவே அதிருந்து முத்துக்களும் சிதறின என்கிறார் ( யானையின் மருப்பில்முத்துக்கள் இருப்பதாக , காளிதாசனும் தமிழ்ப் புலவர்களும் நம்பினர்)

 

“பெருமலைச் சிலம்பில் வேட்டம் போகிய

செறிமடை அம்பின் வல்வில் கானவன்

பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு

நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்

கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப

வைத்துதி வால் மருப்பு ஒடிய உக்க

தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு”

 

நல்ல கற்பனை! ஆயினும் அக்காலத்தில் வேடுவர்க்கு யானைத் தந்தம் கிடைத்ததால் அதைக் கொண்டு பல்வேறு பண்டமாற்றம் செய்த தகவல்களுமுள.

பாலி என்ற நகரில் ஒரு தெரு முழுதும் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தனர்.

 

சாஞ்சியில் கிடைத்த 2200 ஆண்டுப் பழமையான கல்வெட்டு விதிசா நகரில் இருந்த தந்த வேலை சிற்பிகள் பற்றி செப்புகிறது.

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் கட்டில் கால்கள் தந்தத்தால் செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கெல்லாம் முன்னதாக வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அயோத்தியில் தந்த வேலைச் சிற்பிகள் இருந்தது பற்றிச் சொல்கிறார்.

 

சூத்ரகர் எழுதிய ‘மிருச்ச கடிகம்’ நாடகத்தில் ஒரு நாட்டிய மாதின் முற்றம் தந்தத்தால் ஆனதாகச் சொல்கிறார்.

 

ஹெர்குலேயம், பெக்ராம் (Herculeum, Begram) போன்ற வெளிநாட்டு நகரங்களில் இந்திய தந்தப் பொருட்கள் கிடைத்தன. சிந்துவில் பிராமணாபாத் நகரில் சதுரங்கக் காய்கள் கிடைத்தன.

 

ஆக இலக்கியமும் கல்வெட்டும் தொல்பொருத் துறை அகழ்வும் தந்தம் பற்றிப் பேசுவதால் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தந்த வேலையில் சிறந்து விளங்கியது தெரிகிறது.

போர்ச்சுகீஸிய, ஆங்கில வரலாற்று ஆய்வாளர்களும் நமது தந்த வேலை பற்றிப் பகர்ந்தனர்.

வெளிநாட்டு தந்தப் பொருட்கள் பற்றிய குறிப்புகள் எனது நேற்றைய ஆங்கிலக் கட்டுரையில் காண்க

–subham–

Nehru to Narendra Modi- Bharat Mataki Jai ! (Post No.5398)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 6 September 2018

 

Time uploaded in London – 13-20 (British Summer Time)

 

Post No. 5398
During Prime Minister Narendra Modi’s visit to London to attend the Common Wealth Leaders Conference in 2018, over one thousand Indians assembled near the British parliament on the banks of River Thames , and raised the slogan ‘Bharat Mataki Jai’ . Jawaharlal Nehru, the first Prime Minister of India also faced such slogans. He had narrated an interesting anecdote in his book ‘The Discovery of India’.

“Often as I wandered from meeting to meeting, I spoke to this audience of this India of ours , of Hindustan and of Bharata, the old Sanskrit name derived from the mythical founder of the race.

Sometimes as I reached a gathering, a great roar of welcome would greet me
Bharat Mataki Jai  — ‘Victory to Mother India’. I would ask them unexpectedly what they meant by that cry, who was this Bharat Mata, Mother India, whose victory they wanted? My question would amuse them and surprise them, and then not knowing exactly what to answer, they would look at each other and at me. I persisted in my questioning. At last a vigorous Jat, wedded to the soil from immemorial generations, would say that it was the ‘Dharti’, the good earth of India, that they meant.
What earth? Their particular village patch or all the patches in the district or province or the whole of India? And so question and answer went on, till they ask me impatiently to tell them all about it.

 

I would endeavour to do so and explain that India was all this that they had thought, but it was much more. The mountains and the rivers of India, the forests and the broad fields, which gave us food, were all dear to us, but what counted ultimately were the people of India, people like them and me, who were spread out all over this vast land. Bharat mata, Mother India, was essentially these millions of people, and victory to her meant victory to these people. You are part of this Bharat Mata, I told them, you are in a manner yourselves Bharat Mata, and as idea slowly soaked into their brains, their eyes would light up as if they had made a great discovery”.

Xxx
Nehru on Panini , World’s Greatest Grammarian

“As early as sixth century BC Panini wrote his great grammar of Sanskrit language. He mentions previous grammars
and already in his time Sanskrit had crystalized and become the language of an ever growing literature. Panini’s book is something more than a mere grammar. It has been described by the Soviet Professor Th. Stcherbatsky of Leningrad, as ‘one of the greatest productions of human mind’. Patanjali wrote a famous commentary called the ‘Mahabhashya’ on Panini’s work in as much of a classic as Panini’s work . The professor said ‘the ideal scientific work for India is the grammar of Panini with the Mahabhashya of Patanjali’.

Panini is still the standard authority on Sanskrit grammar, though subsequent grammarians have added to it and interpreted it. It is interesting to note that Panini mentions the Greek script. This indicates that there was some kind of contact s between India and Greece long before Alexander came to the East.

Taxila (THAKSHASEELAM) was a pre- Buddhist University and a seat of Brahminical learning. Panini, the great grammarian of sixth or seventh century BC, is said to have studied here. It was considered an honour and a distinction to be a graduate of Taxila.

Panini mentions some dramatic forms (this he mentioned when he wrote about the history of Natyasastra).

 

–subham-

மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி! ((Post No.5397)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-49 AM (British Summer Time)

 

Post No. 5397

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

போர் என்பது இனி தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

பஞ்ச பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற இறுதி முடிவுக்கு துரியோதனன் வந்து விட்டான்.

போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை.

 

‘,ஹூம், அவர்களிடம் வெறும் ஏழு அகக்ஷௌஹிணி சேனை மட்டும் தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.

ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் – வெற்றியுடன். அது மட்டுமா,  குடும்பத்தில் அனைவருக்கும் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் வில் வித்தை கற்றுக் கொடுத்த துரோணர் என் பக்கம். ஆசார்ய கிருபர் என் பக்கம். அருமைத் தம்பிகள், மாமா சகுனி, இன்னும் ஏராளமான ராஜாக்கள்! அட,இது போதாதா, வெற்றிக்கு” என்று இவ்வாறு எண்ணி மகிழ்ந்தான் துரியோதனன்.

 

ஆனால் ஒரே ஒரு உறுத்தல்.

 

அந்த மாமாயக் கண்ணன் அவர்கள் பக்கம். அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ – துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது.

 

அவனுக்குப் பதில் தெரிய வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்று தான்!

 

வெற்றி நிச்சயம் என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும், எத்தனை நாள் தான் நடக்கும்?

ஒரு நாள அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட எண்ணினான். இரவு முழுவதும் சிந்தனை.

 

இரவு விடிந்ததும் பிதாமஹர் பீஷ்மரை நோக்கி துரியோதனன் வினவினான்: “இதோ பிரம்மாண்டமான இந்த பாண்டவ சேனையை எவ்வளவு காலத்தில் வெல்வீர்?”

 

இதைக் கேட்ட பீஷ்மர் பதில் அளித்தார்: “ பதினாயிரம் காலாட்கலையும், ஆயிரம் தேராளிகளையும் ஒரு பாகமாகச் செய்து பாண்டவர்களின் சேனையை நாள் தோறும் அழிப்பேன். இது எனது பாகமாகக் கொள்கிறேன். ஓ! பாரத! அல்லது யுத்தத்தில் நின்று கொண்டு லட்சம் பேர்களைக் கொல்கின்ற மஹாஸ்திரங்களை விடுவேன் என்றால் ஒரு மாதத்தில் கொல்லுவேன்”

 

துரியோதனன் இப்போது துரோணர் பக்கம் திரும்பினான்: “ஓ! ஆசார்யரே! நீர் பாண்டுபுத்திரர்களின் சேனைகளை எவ்வளவு காலத்தில் வெல்லுவீ ர்?”

 

துரோணர் அவனை நோக்கிச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்:” கிழவனாயிருக்கிறேன். சக்தியும் முயற்சியும் எனக்குக் குறைந்து விட்டன. பாண்டவ சேனையை பீஷ்மர் போல் ஒரு மாதத்தில் எரிப்பேன் என்பது என் எண்ணம். இது தான் என் சக்தியின் அளவு. இது தான் என் வலிமையின் அளவு”

துரியோதனன் கிருபரை நோக்க அவர், “இரண்டு மாதங்களில் கொல்வேன்” என்றார்.

 

அஸ்வத்தாமன் பத்து தினங்களில் பாண்டவ சேனையை வதம் செய்வதாக பிரதிக்ஞை செய்தார்.

கர்ணனோ ஐந்து தினங்களில் பாண்டவரை வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை செய்தான்.

உள்ளதிலேயே குறைந்த காலம்; ஐந்தே நாட்கள்! பாரதப் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன்! !கர்ணனின் வாக்கு!

கர்ணனின் இந்த வார்த்தையைக் கேட்ட கங்காபுத்திரரான பீஷ்மர்  ஹாஹா என்று சப்தத்துடன் சிரித்தார்.

 

“ஓ! ராதையின் புத்திரா! கர்ணா! தேரில் ஏறி வருகின்ற அர்ஜுனனை நெருங்காத வரையில் நீ இவ்விதம் நினைப்பாய். உன்னாலே இப்படியும் இதற்கும் மேலும் இஷ்டப்படி சொல்லுவதற்கு முடியும்” என்றார் பீஷ்மர்.

இந்த விஷயங்களை தனது ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட தர்மர் தனது தம்பிகளை நோக்கி நடந்த விஷயங்களைச் சொன்னார்.

 

பின்னர் அர்ஜுனனை நோக்கி, “நீ எவ்வளவு காலத்தில் பகைவர்களை நாசம் செய்வாய்?” என்று கேட்டார்.

அர்ஜுனன், “ நான் சத்தியம் தவறாமல் சொல்கிறேன். கிருஷ்ணனின் சகாயத்துடன் தேவர்களோடு கூடிய மூவுலகங்களையும்  எல்லா சராசரங்களையும் சென்றதையும் இருப்பதையும் இனி உண்டானதையும் ஒரு நிமிஷத்தில் கொல்லுவேன்” கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதன் படியே ஆகும்! வேறு விதம் ஆகாது.  பாசுபதாஸ்திரம்  என்னிடம் இருக்கிறது. அதை பீஷ்மரும் அறியமாட்டார். துரோணருக்கு, அது தெரியாது. கிருபருக்கும் தெரியாது. அஸ்வத்தாமனும் அறியான்! எனில் கர்ணனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?

 

என்றாலும் திவ்ய அஸ்திரங்களினாலே  சாமான்ய மனிதர்களைக் கொல்வது உசிதமில்லை. ஓ! பாண்டவரே! ஒருவராலும் வெல்லப்படாத சிகண்டி, யுயுதானன், திருஷ்டத்யும்னன், பீமசேனன், நகுல ஸஹதேவர், யுதாமன்யு, உத்தமௌஜஸ், விராட துருபதர்கள், சங்கன், கடோத்கஜன், அவனது புத்திரனான் அஞ்சனபர்வா, சாத்யகி,அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புத்திரர்கள் ஆகிய இவர்கள் தேவர்களுடைய சேனையைக் கூட வெல்வார்கள். அதே போல கோபத்தால் நீர் எந்த மனிதனைப் பார்ப்பீரோ அவன் சீக்கிரம் இல்லாமல் போய் விடுவான் என்பது நிச்சயம் என்று உம்மை நான் அறிகிறேன்.” என்று பதில் கூறினான்.

 

ஒரு மாதம் நடக்குமா, பத்து மாதம் நடக்குமா, அல்லது ஐந்து நாட்கள் நடக்குமா? அர்ஜுனன் கூறியது போல ஒரு நிமிடத்தில் முடியுமா? அல்லது தர்மரின் ஒரு கோபப் பார்வையே போதுமா?

அர்ஜுனன் கணித்த படி கிருஷ்ணன் எதை விரும்புகிறானோ அதுவே நடக்கும்!

 

மாமாயக் கண்ணன் முன்பே முடிவு செய்து விட்டான்.

படிப்படியாக பதினெட்டு நாட்களில் களை எடுத்து வேருடன் பகைவ்ரை அழிப்பதென்று! அவன் எடுத்த முடிவை யாரே மாற்ற வல்லார்?

 

அற்புதமான தர்ம யுத்தம் கோரமாக நடந்தது.

தர்மம் வென்றது. பாவம் தோற்றது.

போர் எனில் இது போர்! புண்ணியத் திருப் போர்!

பாவிகள் ஒழிந்தனர்; புண்ணியர் ஜெயித்தனர்!

 

***

குறிப்பு : –  வியாச பாரதம், உத்யோக பர்வம் 193, 194 அத்தியாயங்களின் சுருக்கத்தைத் தான் மேலே பார்த்தோம். விரிவாக படிக்க விரும்புவோர், ம.வீ.இராமானுஜாரியாரால் பதிப்பிக்க்ப் பெற்ற ம்ஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் படிக்கலாம்.

-subham-

 

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

Written by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 5 September 2018

 

Time uploaded in London – 10-15 am (British Summer Time)

 

Post No. 5396

 

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

 

பாதரஸம் (Mercury) போல மனிதர்களைப் பைத்தியமாக்கிய ஒரு மூலகம் உலகில் இல்லை. ரஸவாத (alchemy) வித்தையில் மிகவும் பயன்பட்ட மூலகம். இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக்காலாம் என்று உலகம் முழுதும் ஆராயப்பட்ட மூலகம்.

 

இந்தப் பாதரஸம், மனிதன் இறந்த பின்னரும் முடியில், மயிரில் அப்படியே இருக்கும். அதன் மூலம் நாம் என்ன கண்டுபிடிக்கலாம்?

 

அவருக்கு காம சம்பந்தமான நோய்கள் இருந்து சிகிச்சை பெற்றது தெரியும்.

அல்லது

அல்லது அவர்கள் ஏதோ ரஸவாத (alchemy) ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் என்பது தெரியும்.

 

இதோ சுவையான ஆராய்ச்சியில் கிடைக்கும் சோகமான தகவல்கள்:-

 

மனிதனின் தலை முடியில் கந்தகம் இருக்கும் அமீனோ அமிலங்கள் உள. அவை மெர்குரி எனப்படும் பாதரஸத்தை ஈர்த்துக் கொள்ளும். இதனால் ஒருவர் எந்த அளவுக்கு மெர்க்யுரி (பாதரஸ) விஷத்தால் பாதிக்கப்பட்டார் என்று நிரந்தர ரிகார்ட் (பதிவுப் புஸ்தகம்) உண்டாகிவிடும்!

 

முன் காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களுடைய மயிர்க் கற்றையை எடுத்து பாதுகாத்து வைப்பர்.

 

(காஷ்மீரில் உள்ள பிரபல மசூதியில் முகமது நபியின் மயிர், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் அதைத் தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் வருவதையும் முன்னரே ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

 

தற்காலக் கருவிகளைக் கொண்டு பிரபல தலைவர்கள், விஞ்ஞானிகளின் முடியை ஆராய்ந்ததில் பல முக்கிய விஷயங்கள் கிடைக்கின்றன. இதை மயிர் ‘விஷயம்’ என்று ஒதுக்கிவிடாமல் மயிர் ‘விஷம்’ என்று அதிசயிக்க வேண்டியுள்ளது.

காம சம்பந்தமான நோய்கள் ஜனன உறுப்புகளைத் தாக்கும் . அப்படித் தாக்கினால் கலோமெல் (calomel) என்ற  மருந்தைக் கொடுத்தனர் அந்தக் காலத்தில். இந்தப் பொடியில் மெர்குரி க்ளோரைட் முதலியன இருக்கும் . இது பூஞ்சக் காளான் முதலியவற்றை ஒழிக்கும்; நல்ல பேதி மருந்து.

 

மயிரிலுள்ள மெக்யுரி எனப்படும் பாதரஸம் இதன் காரணமாகவோ, அல்லது ஆராய்ச்சிசாலையில் பாத ரஸப் புகையை சுவாசித்ததாலோ வந்திருக்க வேண்டும்.

 

ஐஸக் நியூட்டன் (1642-1727) என்ற பிரபல பௌதீக (இயற்பியல்) விஞ்ஞானியின் முடியை ஆராய்ந்தனர். அவர் ஒரு பிரம்மாச்சாரி. ஆகவே அவர் செய்த ஆராய்ச்சியின் போது பாதரஸ ஆவி அவர் தலை முடிக்கு ஏறியிருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த கருத்து.

 

ராபர்ட் பர்ன்ஸ் (Robert Burns 1759- 1796) என்ற ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) புலவரின் முடியிலும் இப்படி பாதரஸம் இருந்தது. அவரது வாழ்வை ஆராய்ந்தோர், அவர் சிபிலிஸ் (syphilis) போன்ற காம நோக்கு சிகிச்சை பெற்றதால் மெர்க்யுரி தலைக்கு ஏறி விட்டது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

 

 

நெப்போலியனை பிரிட்டிஷ்கார ர் கள் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைத்த போது அவருக்கும் கலோமல் கொடுத்தது அவர் முடியிலிருந்து தெரிந்தது. ஆனால் அவர் இறந்ததற்குக் காரணம் ஆர்செனிக் (arsenic) விஷமாகும். பிரிட்டிஷார் அவரை விஷம் வைத்துக் கொன்றனர். அது தனிக் கதை.

 

அந்தக் காலத்தில் வேறு சில நோய்களுக்கும் பாதரஸ உப்புக்கள் கலந்த மருந்துகளைக் கொடுத்தனர். இதனால் நல்லோரும் கூட உயிர் இழந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ் மிகு வானவியல் நிபுணர் டைகோ ப்ராஹியின் ((Tycho Brahe 1546-1601) கதை சோகக் கதை. அவருக்கு மூத்திரக் காயில் நோய். இதற்காக மருந்து கொடுத்து இருந்தனர். அவர் மறுநாளன்று பிராக் நகரில் ஒரு பெரிய விருந்து ஒன்றில் கலந்து கொள்ள வந்தார். அபோது சிறிநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மன்னர் கொடுக்கும் விருந்திலிருந்து பாதியில் வெளியேறுவது முறையல்ல என்று கருதி மூத்திரத்தை அடக்கினார். இதனால் அவரது சிறுநீர்ப்பை பிய்ந்து போய் சில நாட்களில் உயிரிழந்தார். அவரது முடியை ஆராய்ந்தபோது அவருடைய உயிரைக் காப்பாற்ற அவருக்கு மெர்குரி கலந்த மருந்தது கொடுக்கப்பட்டது தெரிந்தது. ஆகவே முடியில் மெர்க்யுரி இருந்த எல்லோரும் காம நோயாளிகள் என்றும் கணக்குப் போட்டுவிடக்கூடாது.

 

இங்கிலாந்தின் மன்னர்களில் அபகீர்த்தி வாய்ந்தர் எட்டாம் ஹென்றி (1491-1547) மன்னர் ஆவார். அவருக்கு நிறைய மனைவிகள்; பிடிக்காத மனைவியருக்கு எல்லாம் மரண தண்டனை விதித்தவர். அவர் முடியிலும், ரஷ்யாவின் ஐவான் தி டெர்ரிபில் (Ivan the Terrible) முடியிலும் பாதரஸ அளவு அதிகம் இருப்பது அவர்களைக் காம நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கத் தூ ண்டுகிறது. இரண்டாவது சார்ல்ஸ் மெர்க்யுரி விஷத்தால் இறந்தது உறுதி செய்யப்பட்ட செய்தி! அவர் காமக் களியாட்டங்களிலும் ரஸவாத வித்தை ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவர். இந்த இரண்டில் ஏதோ ஒன்று அவர் முடியில் பாதரஸத்தை ஏற்றி இருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.

-சுபம்–