Will Power, Worrying, Appearance Anecdotes (Post No.3416)

Compiled by London swaminathan

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 7-57 am

 

Post No.3416

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

Will power Anecdote

A young man contemplating marriage, was almost shocked out of his future state by overhearing the following conversation

Several young women, discussing their husbands, were talking of their men’s vices and how they have succeeded in curing them.

“Incidentally, said one of them to a very young thing standing by, I hear that John has given up smoking. He used to smoke a great deal. That must have taken a strong wil”l.

In contrast to her frail prettiness, the young woman was heard to say,

“It certainly did. But that’s the kind of will I have got”.

 

Xxx

Worrying anecdote

Secretary of the Treasury Chase happened to remark

“Oh, I am so sorry that I didn’t write a letter to Mr So and so before I left home”.

President Lincoln promptly responded,

“Chase never regret what you don’t write; it is what you do write that you are often called upon to feel sorry for”.

xxx

Physical Characteristics Anecdote 

Mark Twain often received photographs from men whose friends had made them believe that they looked like him. Discovering that his house was beginning to run over with pictures of these aspirants to fame, mark determined to relieve himself of the burden of answering the heavy correspondence, and so had his printer strike off a few hundred copies of the following from letter,

 

“My dear Sir,

I thank you very much for your letter and your photograph. In my opinion you are more like me than any other of numerous doubles I may even say that you resemble me more closely than I do myself. In fact, I intend to use your picture to shave by”.

Yours thankfully,

S Clements

—Subham–

 

அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)

Written by London swaminathan

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 7-07 am

 

Post No.3415

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு மகன், அவனது தந்தையின் நல்ல குணங்களை பின்பற்றவேண்டும். மகன் என்பவன், தந்தையின் மறு அச்சு என்று சம்ஸ்கிருத  நூல்கள், கூறுகின்றன. பிரம்மாவுக்கு எப்படி அத்ரி மகரிஷி நல்ல புத்திரனாக இருந்தாரோ, சந்திரன் எப்படி அத்ரிக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ , புதன் எப்படி சந்திரனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ, புரூருவசு மன்னன் எப்படி புதனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ அப்படி ஆயுஸ் என்ற புதல்வன் அவன் தந்தைக்கேற்ற மகனாகப் பிறந்தான்.

பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூருவஸ் – என்று அழகாக ஐந்து தலைமுறைகளை அடுக்குகிறான் காளிதாசன்.

அமர முனி: இவ அத்ரி:ப்ரம்மண: அத்ரே: இவ இந்து:புத: இவ சசினாம்சோ: போதனஸ்ய ஏவ தேவ: பவ : பிது:அனுஸ்த்ரூப: த்வம்

குணை: லோக காந்தை: அதிசயினி சமாப்தா வம்சஏவாசிஷஸ்தே

–விக்ரமோர்வசீயம் 5-21

ரகுவம்சம்

 

ரகு வம்சத்திலும் மகன்கள் பற்றிய அழகிய பாடல்கள் வருகின்றன:-

அத நயன சமுத்தம் ஜ்யோத்ரத்ரேரிவ த்யௌ:

சுரசரிதிவ தேஜோ வன்னிநிஷ்டயூதமைசம்

நரபதி குல மூர்த்யை கர்பமாதத்த ராக்ஞோ

குருபிரபிநிவிஷ்டம் லோகபாலானுபாவ:

–ரகுவம்சம் 2-75

 

பொருள்:

பிறகு ஆகாசம், அத்ரி மகரிஷியின் கண்களிலிருந்து எழுந்த ஒளியாகிய சந்திரனை தரித்தது போலும், கங்கா நதி அக்னி தேவனால் கொடுக்கப்பட்ட பரமசிவனுடைய தேஜசாகிய சுப்ரமண்யனை (தரித்தது) போலும், அரசியான சுதக்ஷிணை ராஜகுலத் தின் க்ஷேமத்தின் பொருட்டு அதிகமான லோகபாலகர்ளின் அம்சங்களினால் பிரவேசிக்கப்பட்ட கர்ப்பத்தைத் தரித்தாள்.

 

லோகபாலகர்களின் அம்சம்: இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என எண்மர். இவர்களுடைய சக்தி அரசனிடம் பிரவேசிப்பதாக மனு கூறுகிறார். தமிழ் இலக்கியமும் மன்னர்களை இந்திரன் என்றும், அக்கினி என்றும், வாயு என்றும், எதிரிகளுக்கு எமன் என்றும் புகழ்கின்றன.

 

அத்ரியின் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளை திக் தேவதைகள் தாங்கவே அது சந்திரனாக மாஇறியது.

 

பரமசிவனுடைய கண்களிலிருந்து விழுந்த ஆறு தீபொறிகளை கங்கை தாங்கவே அது சுப்பிரமணியனாக உருவாகியது என்பது புராணச் செய்திகள்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரும் மகன் தந்தைக்குள்ள உறவைப் பற்றி பேசுகிறார்:

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் (குறள் 70)

 

அதாவது ஒரு மகன் அவனுடைய தந்தைக்கு எப்படி நன்றி செலுத்துவது? இப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்னென்ன நோன்புகளைக் கடைப்பிடித்தானோ?

 

ஒரு இந்துவானவன் நல்ல பிள்ளை கிடைக்க கடவுளை வேண்டுவான். மகன், வாழ்நாள் முடியும்வரை தந்தைக்கு சாப்பாடு போட வேண்டும், கை கால் பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் வள்ளூவன் சொல்லவில்லை. அவன் தந்தையை விட அறிவாளியாகவும், தந்தையைப் போல குணவானாகவும் இருப்பதே பெரிய கைம்மாறு! இதனால்தான் காளிதாசனும் பிரம்மா முதல் ஐந்து தலைமுறைகளைப் புகழ்ந்து அப்படிக் குணவானாக இருந்தான் அந்தப் பிள்ளை என்கிறான்.

 

ஏனைய இடங்களில் வள்ளுவன் கூறும் கருத்துகளும் சிறப்புடைத்து. பெற்றபோது இருந்த இன்பத்தைவிட, ‘உன் மகன் அறிஞன்’ என்று சொல்லும்போது தாயார் கூடுதலாக மகிழ்வாளாம் (குறள் 69). ஒரு தந்தையினுடைய கடமை, பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்த்து அவனை வகுப்பில் முதல் மாணவனாகக் கொண்டுவரவேண்டும் என்றும் வள்ளுவன் வலியுறுத்துவான்.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் (குறள் 67)

ஒரு மகனுக்கு தந்தை செய்யக்கூடிய நன்மை யாதெனில் கற்றோர் உள்ள சபையில் தன் மகன் அறிவாளி என்று புகழப்படும் அளவுக்குக் கல்வியை அளிப்பதாகும்.

 

இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-

 

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா

–பெரியாழ்வார் 2.2-6

 

எத்துணைத் தவம் செய்தான் கொல்

என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567

 

வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்

எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்

–கம்ப, சடாயுகாண் படலம் 41

 

–சுபம்–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 20 (Post No.3414)

 

Article Written by S NAGARAJAN

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 5-43 AM

 

Post No.3414

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 20

ச.நாகராஜன்

 

Picture sent by Dr Carani Sanjeevi

சரணாகதி அடைவதற்கான காலம் இல்லை என்று

வூ அழுத்தம் திருத்தமாகக் கூறி நிறுத்த அங்கு அமைதி நிலவியதைத் தொடர்ந்து ஸு யுன் சாந்தமாக வூவைப் பார்த்தார்.

 

 

 

வூவின் ஆவேசமான உரைக்கு பதிலாக ஸு யுன் கூறலானார் : “தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து  கொள்ள வேண்டாம்.மத்திய அரசின் முக்கியமான அதிகாரி டாங். அவருக்கு உங்களுடன் சமாதானம் பேச எல்லா அதிகாரமும் உண்டு. அப்படி சமாதானம் எற்பட்டால் பீஜிங்கின் அதிகாரபூர்வமான அதிகாரிகளுள் ஒருவராக நீங்களும் ஆகி விடுவீர்கள். இது வரை இறந்து போன உங்களின் வீரர்களைப் பற்றி என்னால் செய்ய முடிவது அவர்களுக்கு உரிய  முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்வது தான். சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பற்றி டாங்குடன் பேசி அவர்களை விடுவிக்கச் சொல்கிறேன். இந்த என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை என்றால் பகை இன்னும் தொடரும். உங்களிடமும் படைபலம் உண்டு.டாங்கிடமும் அது இருக்கிறது.

உங்களுடைய பலம் குறைவு என்பதால் டாங்கின் பண பலம், படைபலம் இவற்றுடன் பீஜிங்கின் அதிகார பலத்தின் துணையும் டாங்கிற்கு வரும். என்னிடம் அதிகார பலம் இல்லை. ஆனால் என் சொல்லின் மூலம் பகையை முடித்து நாட்டிற்கும்  மக்களுக்கும் நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.”

இந்த ஸு யுன்னின் உரையைக் கேட்டு வூவும் அவனது சகாவும் நெகிழ்ந்து போனார்கள்.

 

 

வூ  தன் சார்பில் ஸு யுன் பேசலாம் என்று கூறினான்.

தனது சார்பில் ஆறு நிபந்தனைகளைச் சொல்ல வேண்டுமென்று வூ சொல்ல அதை கவனமாக ஸு யுன் கேட்டார்.

1)சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் வூவின் ஆட்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.2) வூவின் படையைக் கலைக்க நிர்ப்பந்திக்கக் கூடாது. 3) வூவின் ராணுவ அந்தஸ்தைக் கீழிறக்கக் கூடாது 4) தனது படையை கமாண்ட் செய்ய வூவுக்கு உரிமை உண்டு 5) கடந்த காலச் செயல்களைப் பற்றி எந்த விதமான் விசாரணையும் செய்யக் கூடாது  6) இரண்டு படைகளும் சம உரிமை பெற்றவையாக் இருத்தல் வேண்டும்.

 

 

ஸு யுன் கூறினார்: “இதற்கு டாங் சம்மதிப்பார் என்றே நம்புகிறேன். அவருடன் நான் பேசிய பின் அவரது பிரதிநிதிகள் இது  பற்றி முழுவதுமாக உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.”

வூ : “பூஜ்யரே! உங்களைத் தகாத விதத்தில் நடத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த விஷயத்தை  மட்டும் நீங்கள் கூறியபடி முடித்து வைத்தால் உங்களுக்கு எப்போதுமே நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்.”.

 

 

ஸு யுன் : “ஐயோ அந்தப் பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். எனக்கும் இது நன்மையைச் செய்வ்தால் தானே நான் இதைச் செய்கிறேன்.”

 

வூவும் அவனது ச்காவும் மிகுந்த மரியாதையுடன் ஸு யுன்னை நடத்தினர். சில நாட்கள் தங்களுடன் இருக்குமாறு அவர்கள் கூறியதை பணிவுடன் ஸு யுன் மறுத்தார்.

பயணத்திற்கான பணம், உணவு, வண்டி, கூட வழிகாட்டி துணைக்கு வருவதற்கான படை வீரர் ஆகிய அனைத்திற்கான ஏற்பாடுகளையும் வூ செய்வதாகக் கூற் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிய் ஸு யுன் கொஞ்சம் உணவை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

 

 

அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட ஸு யுன் தன் வழியில் பயணப்பட்டார்.

சிறிது தூரத்தில் வூவின் ஆட்களில் பலர் ஸு யுன்னை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினர்.

அவர்கள் தான் முதலில் ஸு யுன்னைப்  பிடித்து அடித்தவர்கள்.

அவர்க்ள் கண்களில் இப்போது கண்ணீர். “போதிசத்வர் எங்களை மன்னிப்பாரா” என்று அவர்கள் புலம்ப ஸு யுன் அவர்களுக்கு ஆறுதல் அளித்துத் தேற்றினார்.

 

 

குன்மிங் நகருக்கு வந்த ஸு யுன்னுக்கு வரவேற்பு பிரமாதமாக் இருந்தது.டாங் அவரை  ம்டாலயம் வந்து சந்தித்தார்.

“உங்களைப் பல காலமாகச் சந்திக்கவில்லை.எனது பாட்டி, தந்தை,மனைவி, சகோதரன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். நான் மிகுந்த மனச்சோர்வுட்ன் இருக்கிறேன்.போதாதற்கு நாடெங்குக் கொள்ளைக்காரர்கள் பெருகி விட்டனர். “ என்று டாங் கூறினார்

 

 

 

அதைக் கேட்ட ஸு யுன், “இறந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடைய புத்தமத இறுதிச் சடங்குகளை நடத்தித் தருதல்,  யுயான் டாங்கில் உள்ள மடாலயத்தை விரிவுபடுத்திப்  பெரிதாக்குதல், புத்த தர்மத்தைப் ப்ரப்பி துயர்படுவோரின் துயரை நீககுதல் ஆகிய மூன்று பணிகளையும் தான் செய்ய விழைவதாகக் கூறினார்.

டாங்  ஸு யுன்னிடம், “முதல் மற்றும் கடைசி பணியைச் செய்வது சுலபம். இரண்டாவது பணிக்கு அரசின் நீதித் துறையின் ஆணை வேண்டும்” என்றார்.

 

 

“நீதித் துறையுடன் நீங்கள் பேசினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்தக் கொள்ளைக்காரகள் பற்றிய விஷயத்திற்கு வருவோம். அந்தக் கூட்டத்தின் இரு தலைவர்களுடன் நான் பேசினேன். அவர்க்ள் சமாதானத்திற்குத் தயார். அவர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்” என்று ஆரம்பித்த ஸு யுன் அனைத்து விஷயங்களையும் விவரமாகக் கூறினார்.

 

 

இதையெல்லாம் கேட்ட டாங் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

உடனே உரிய அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது.

எல்லாம் சுபமாக முடிந்தது. கொள்ளையடிப்பதும் போர் நடப்பதும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

அந்த வருடமோ முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஷாங்காயில் உள்ள தர்ம மையத்திற்கு நிது திரட்டுவதும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

குன்மிங் நகரில் ஸு யுன் தன் புது வருட ஆரம்ப நாளைக் கழித்தார்.

ஸு யுன்னுக்கு 79ஆம் வயதும் முடிந்தது.

******* தொடரும்

 

 

 

Mirror Images in Hindu Literature (Post No.3413)

Research Article Written by London swaminathan

 

Date: 3 December 2016

 

Time uploaded in London:12-20

 

Post No.3413

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

Tamil version of this article is also posted.

 

Mirrors have been used by us from time immemorial. it is found in all the ancient civilizations. Etruscan mirrors are famous for their engraved mythological scenes on the back of the mirror. In ancient Mexico Aztec god Tezcatlipoca was called smoking mirror.

 

The mirror has got special significance in the Shinto tradition of Japan. It is an attribute of the sun goddess Amaterasu. A sacred mirror is handed to each new emperor.

 

According to one tradition, the mirror bears the Hebrew inscription of “I am who am”.

Psychologists have different interpretations for mirror images.

In Hinduism mirror is considered one of the auspicious objects. As soon as they get up in the morning they look at their right-hand palm or a mirror. Young girls are invited to homes and mirror, comb and Kumkum are distributed them during Navratri festival period. On the new year day, they look at the mirror when they wake up. When the god’s statue is taken in palanquin procession through the city streets, a mirror is placed in front of the idol so that people can see it from different angles. If mirror is broken by fall they consider it as an ill omen.

 

Mirror in Gita and Kalidasa

Mirror is used as simile from the days of Mahabharata. Krishna, Adi Sankara, great poet Kalidasa, Tamil poets Tiruvalluvar, Tolkappiar, Kapilar and many more use it for imagery.

 

They send various messages through mirror imagery.

Lord Krishna says in Bhagavd Gita (3-38):

“As fire is enveloped by smoke, as a mirror by dust, as an embryo by the womb, so this wisdom is enveloped by that (desire or anger)”.

 

Swami Chinmayananda gave a detailed commentary on this couplet. He says though they look similar, they are not. Repetition is an unpardonable crime against the scriptural style and the Gita faithfully follows the immortal style common to all religious books. There is no redundancy or wasteful repetition in the Divine Song.

The first image ‘fire by smoke’ is sattvic/good. Even the sattvic desires veil the infinite glory of the Spirit.

The second image ‘ as dust on a mirror” illustrates the veiling  caused by agitations that cover the purer intellect due to our thick desires for glory and power. So it is Rajasic/passionate.

 

The last imagery, as the foetus in the womb imagery, is tamasic/bad. This is an illustration to show how completely the Diviner aspect in us is screened off by the low animal appetites and the vulgar desires for the sensuous.

Picture of Greek Mirror

Kalidasa

In the Raghu vamsa, Kalidasa imagines the face of Indumati (7—68) to be like a mirror. The face of Indumati shone with joy when freed from the sadness arising from the adversary. The mirror also resumes its brightness by the disappearance of moisture.

 

When the wind, charged with rain drops blows, a mist like moisture gathers on the surface of the mirror which obscures in transparency, similarly the infamy of the acceptance of Vaidehi who had dwelt in the house of Ravana which is a stain now come upon the royal family sprung from the sun and pure by virtues of good conduct (Raghu vasa 14-37).

in Sakuntam drama also Kalidasa used this image (AS 7-32)

 

 

 

Adi Shankara says in his Viveka Cudamani (291):-

That in which there is this refection of the universe, as of a city in a mirror – that Brahman are you; knowing this you will attain the consummation of your life.

 

This refection of a big city or some object in a small mirror has been used by Tamil Poets Kapilar, Tolkappiar and Tiruvalluvar. It looks like it is popular imagery.

 

Famous Tamil poet Kabilar, in the laudatory verse Tiruvalluva malai, praised the book Tirukkural and compared it to a small dew drop on a grass tip reflecting a big tree nearby. Every couplet of Tirukkural reflects big things like this.

Picture of Etruscan Mirror

Face is the index of the mind!

 

Tiruvalluvar himself used the mirror image in his work Tirukkural:-

The mirror reflects nearby objects; even so the face indicates emotions throbbing in the mind (Kural 706).

 

Tolkapiyam, oldest Tamil book, also used similar image. When the author Tolkappiyar explained what a Sutra (an aphorism) is he used this beautiful simile (1425)

A sutra is like a big mountain reflected In a mirror, shows/explains everything.

There are innumerable works where we come across mirror or looking glass in Tamil and Sanskrit works. I have already written about the Mirror Temple constructed by Sri Narayana Guru, a social reformer of Kerala. Big temples in Tamil Nadu has a beautiful mirror room for god where the idol is reflected thousands of times. Though God is one we see him in 330 million ways- that is the message these mirror rooms convey.

 

Mirror Temples! Hindu Wonders!! (Posted on 3 October 2013)

—Subham–

 

கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)

Research Article Written by London swaminathan

 

Date: 3 December 2016

 

Time uploaded in London: 8-25 am

 

Post No.3412

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

English version of this article is also posted.

கண்ணாடி என்பது நம் நாட்டிலும் உலகில் ஏனைய பழைய நாகரீகங்களிலும் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் உள்ளது.  இது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை முதல் ஆண்டாள் பாடிய திருப்பாவை வரை (தட்டொளி) கண்ணாடியைக் காண்கிறோம். தமிழில் மிகப் பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியம் முதல் கேரளத்தில் பெருந்தலைவர் நாராயண குரு கண்ணாடிக் கோவில் வைத்தது வரை இது நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பதையும் காணலாம்.

திருவிழாக் காலங்களில் கன்யாப் பெண்களை வீட்டுக்கு அழைத்து கண்ணாடி, குங்குமச் சிமிழ், சீப்பு கொடுக்கும் வழக்கமும் உளது. தீபாவளி, விஷுக் கனி காணுதலின் போது கண்ணாடியில் முகம் பார்க்கும்/ விழிக்கும் வழக்கமும் உளது.

 

கண்ணாடி உடைவது அபசகுனம் முதலிய பல சகுன சாத்திர தகவலும் உள.

 

மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்தில் ஒருவர் பெயர் ‘புகைக் கண்ணாடி’. ஜப்பானில் ஆட்சியாளர் மாறும்போது கண்ணடி கொடுப்பர். கண்ணாடி தேவதை அமர்தரேசுவும் இருக்கிறது. எட்ருஸ்கன் நாகரீகக் கண்ணடிகளின் பின்னால் அற்புதமான வரைபடங்கள் உள்ளன.

 

முதலில் வான்புகழ் வள்ளுவன் தேனினும் இனிய தமிழில் செப்பியதைக் காண்போம்

 

 

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

பொருள்:-

தன்னை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகமே காட்டிவிடும்.

 

 

திருவள்ளுவமாலையில்

 

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனயளவு காட்டும்படித்தால் – மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி

-திருவள்ளுவ மாலை, கபிலர்

பொருள்:-

மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைக் குஞ்சுகள், உலக்கைப் பாட்டால் கண் உறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டை உடைய மன்னவனே! திரு வள்ளுவனின் குறட்பா அளவில் சிறிது; ஆனால் அது காட்டும் பொருள் மிகப்பெரிது. எப்படியென்றால், புல் நுனியில் படிந்துள்ள பனித்துளி, ஒரு தினையரிசிக்கும் சிறியது; ஆயினும் பக்கத்திலுள்ள பனைமரத்தை அதன் உள்ளே (கண்ணாடி போல) பார்க்கலாம் அல்லவா? -திருவள்ளுவ மாலை, கபிலர்

 

xxx

ஒல்காப் புகழ் தொல்காப்பியன் பகர்வதையும் பார்ப்போம்

 

சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே

தொல்காப்பியம், பொருளதிகாரம் (1425)

 

பொருள்:-

சூத்திரம் என்பது, கண்ணாடிக்குள்  அதன் பிரதிபலிப்பில் ஒரு பெரிய மலையே தோன்றுவது போல, ஆராய்தல் இல்லாமலேயே, கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும்.  யாப்பினுள் ஏதாவது ஒன்று வடிவமைத்து அமைப்பதாகும்.

 

xxx

 

5000 ஆண்டுப் பழமையான பகவத் கீதை கூறுவதைக் கேளுங்கள்

பகவத் கீதையில் (3-38)

தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்சோ மலேன ச

யதோல்பேனாவ்ருதோ கர்ப்பஸ் ததா தேனேதமாவ்ருதம்

 

பொருள்:–

எப்படித் தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால், இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. (3-38)

 

விவேக சூடாமணியில்

ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்:

யத்ரைச ஜகதா பாஸோ தர்ப்பணாந்தபுரம் யதா

தத் ப்ரஹ்ம்மமிதி ஞாத்வா க்ருத க்ருத்யோபவிஷ்யசி

பொருள்:-

ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம்; இதை உணர்ந்துவிட்டால் பூரணத்துவம் பெறுவாய். பிரபஞ்சமே உன்னிடத்தில் பிரதிபலிக்கிறது.(ஆதி சங்கரர்)

 

 

Etruscan Mirror

காளிதாசனில்

 

ராஜரிஷி வம்சஸ்ய ரவி ப்ரசூதேருபஸ்தித: பஸ்யத கீத்ருசோயம்

மத்த சதாசார சுசே: கலங்க: பயோதவாதாத் இவ தர்பணஸ்ய

 

பொருள்:-

மக்களின் ஆர்வங்களையும் உணர்ச்சியையும் மன்னன் பிரதிபலிக்கிறான். ஆதலின் அரசன் அழுக்கற்ற கண்ணாடியாகத் திகழ வேண்டும் (ரகுவம்சம் 14-37

 

ரவிப்ரஸூதே= சூர்யனிடமிருந்து உண்டானதும்

சதாசார சுசே:= நன்னடத்தையால பரிசுத்தமாக இருப்பதுமான

ராஹர்ஷிவம்சஸ்ய= ராஜ ரிஷியான இக்ஷ்வாகுவின் வம்சத்திற்கு

மத்த:= என்னிடமிருந்து

தர்பணஸ்ய = கண்ணாடிக்கு

பயோதவாதாத் இவ = மேகத்திலிருந்து வந்த காற்றினாலே (மாசு ஏற்படுவது) போல

கீத்ருச: = எப்படிப்பட்ட

அயம் கலங்க: = இம் மாசு

உபஸ்தித: = ஏற்பட்டது

பஸ்யத= பாருங்கள்

 

எப்போதும் தூயதாய் விளங்கும் என் குலத்துக்கு என்னால் அவப்பெயர் வந்துவிட்டதே (மேகம், காற்றினால் வரும் அசுத்தம் எப்படி எளிதில் கண்ணாடியிலிருந்து நீங்குமோ அது போல இதுவும் எளிதில் போய்விடும் என்பது உட்பொருள்; அதாவது நிரந்தர களங்கம் இல்லை)

Greek Mirror

காளிதாசன் சாகுந்தலம் நாடகத்திலும் ரகு வம்சத்தில் பிற இடங்களிலும் கண்ணாடி உவமையைக் கூறுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தோறும் கண்ணாடி இருந்ததும், அதில் நம் குலப் பெண்கள் முகம் பார்த்து அலங்கரித்ததும் நம் மனக் கண் முன் வரும்.

இது போன்ற கண்ணாடி உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் இருக்கின்றன. அவைகளைப் பின்னர் காண்போம்.

Mirror Temples! Hindu Wonders!! (Posted on 3 October 2013)

 

 

-Subham-

 

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 19 (Post No.3411)

Picture of Buddha’s foot print

Written by S NAGARAJAN

 

Date: 3 December 2016

 

Time uploaded in London: 6-28 am

 

Post No.3411

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 19

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 78.

மரகத புத்தர் வசந்த காலத்தில் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டார். எட்டு கூலியாட்கள் மரகத புத்தரை சுமந்து செல்ல அமர்த்தப்பட்டனர். காக்ஃபுட் மவுண்டனைச் சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தருவதற்காக ஒரு பெரிய தொகை நிர்ணயிக்கப்பட்டு அது அவர்களிடம் சொல்லப்பட்டது.

மோசமான குண்டும் குழியும் நிறைந்த மலைப்பாதை வழியே பல வாரங்கள் அவர்கள் பயணப்பட வேண்டும்.

 

 

மவுண்ட் யேரனுக்கு மரகத புத்தர் நெருங்கிய போது கூலியாட்கள் தங்கள் பயணத்தை திடீரென்று நிறுத்தினர்.

மரகத புத்தரினுள்ளே ஏராளமான பணமும் இரத்தினக் கற்களும் ஒளித்து வைத்திருக்கப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்ட அவர்கள் புத்தர் மிகவும் கனக்கிறார் என்று கூறி இன்னும் ஒரு பெரிய தொகையை கூடுதலாகக் கேட்டனர்.

 

 

இது முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை விட  பல மடங்கு அதிகம் என்பதால் ஸு யுன் அவர்களை சாந்தப்படுத்த முயன்றார்.ஆனால் அவர்களோ கூச்சல் போட்டனர். அவர்களை பேசிச் சமாளிக்க முடியாது என்று தோன்றிற்று ஸு யுன்னுக்கு.

அவர் அவர்களை அருகே அழைத்தார்.

அங்கே சாலையின் ஓரத்தில் இருந்த மிக பிரம்மாண்டமான ஒரு பாறாங்கல்லைச் சுட்டிக் காண்பித்தார்.

 

Old picture of Sanchi Stupa

 

“சொல்லுங்கள்,இதோ இந்தப் பாறை கனமா அல்லது மரகத புத்தரின் சிலை கனமா” – ஸு யுன் அவர்களிடம் கேட்டார்.

“சந்தேகமில்லாமல் அந்தப் பாறை தான் கனமானது. இரண்டு அல்லது மூன்று ம்டங்கு அந்தப் பாறை அதிக கனமுடையது” –அவர்கள் சொன்னார்கள்.

 

உடனே ஸு யுன் அந்தப் பாறை அருகே சென்று அதை அலாக்காக அப்படியே பூமியிலிருந்து ஒரு அடி மேலே தூக்கினார்.

 

அதைப் பார்த்த் கூலியாட்கள் பிரமித்து நின்றனர்.

ஒரு பேச்சும் பேசாமல் மரகத புத்தரைத் தூக்கிக் கொண்டு காக்ஃபுட் மவுண்டனை அடைந்தனர்.

ஸு யுன் பேசியதற்கு மேலாகவே அவர்களுக்கு அதிகத் தொகையைக் கொடுத்தார்.

 

 

ஸு யுன்னுக்குத் தெரியும், அவ்வளவு பெரிய பாறையைத் தூக்கக் கூடிய வலிமை அவருக்கு இல்லை என்பது.

தெய்வீக அருளே அதைத் தூக்க வைத்தது, அவ்வளவு தான்!

நாட்கள் நகர்ந்தன.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 79.

கவர்னர் டாங் ஜி-யாவ் ஸு யுன்னுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.அதில் அவரை தலைநகருக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

ராணுவத்தினர் மரியாதையுடன் அவரை அழைத்துச் செல்வதை மறுத்த ஸு யுன், தானே தனது சீடர் ஸு யுவானுடன் நடந்தே வருவதாக கூறி விட்டார்.

 

வழியில் சூசியாங் என்ற இடத்தில் சில கொள்ளைக்காரர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.

அவருக்கு அடி மேல் அடி விழுந்தது.

“என்னை அடிக்காதீர்கள். உங்கள் தலைவனிடம் என்னை அழைத்து செல்லுங்கள்” என்றார் ஸு யுன்.

அவர்களது தலைவன் பெயர் வூ ஸு ஸியான். தனது ச்கா ஒருவருடன் அவன் இருந்தான்.

 

 

ஸு யுன்னைப் பார்த்த வூ உரத்த குரலில் “யார் நீங்கள்” என்று கத்தினான்.

“காக் ஃபுட் மவுண்டனில் உள்ள மடாலயத்தில் இருப்பவன் நான்”, என்றார் ஸு யுன்.

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் ஸு யுன்”

“ஏன் நீங்கள் தலை நகர் நோக்கிச் செல்கிறீர்கள்?”

“புத்த தரமத்தில் உள்ள சடங்குகளைச் செய்வதற்காக.”

“எதற்காக?”

 

Picture of Buddha

“அனைத்து மக்களும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காக”

“கவர்னர் டாங் ஒரு  கொள்ளைக்காரன். அவன் ஒரு மோசமான பேர்வழி. அவனுக்கு உதவ நீங்கள் செல்வதால் நீங்களும் ஒரு மோசமான ஆள் தான்!”

“ஒரு மனிதனை மோசமான பேர்வழி என்று அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது”

“ஏன்?”

 

 

:”ஒரு மனிதனைப் பற்றிய நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவன் நல்லவனே. அவனது தீய குணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவன் தீயவனே!”

“இதற்கு என்ன அர்த்தம்?”

 

 

“நீங்களும் டாங்கும் இணைந்து மக்கள் நலனுக்காகப் பணி ஆற்றினீர்கள் என்றால் உங்கள் ஆணைப்படி நடக்கும் படை வீரர்களும் அப்படியே பணியாற்றினால் நீங்கள் அனைவருமே நல்லவர்கள் ஆகி விட முடியாதா? மாறாக நீங்களும் டாங்கும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு சண்டையிட்டு மக்களைத் துன்புறுத்தினால் நீங்கள் அனைவருமே மோசமான பேர்வழிகள் என்று ஆகி விடாதா? ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் ஒன்று உங்களைப் பின்பற்ற வேண்டும். அல்லது டாங்கைப் பின்பற்ற வேண்டும். அப்போது அனைவருமே கொள்ளைக்காரர்கள் தானே! அடடா, எல்லோரும் பரிதாபத்திற்குரியவர்கள் தானே!”

இதைக் கேட்டவுடன் வூவும் அவனது சகாவும் கடகடவென்று சிரித்தனர்.

 

 

“நீங்கள் சொல்வது சரிதான்! அதற்கு நான் என்ன செய்யமுடியும்?”

 

“எனது ஆலோசனை என்னெவெனில் நீங்கள் சண்டை இடுவதை நிறுத்த வேண்டும். சமாதானமாகப் போக வேண்டும்”

“அதாவது நான் சரண் அடைய வேண்டும், அப்படித்தானே?”

“இல்லை, அப்படியில்லை. உங்களைப் போல இருக்கும் ஒத்த மனத்தினருடன் இணைந்து நீங்கள் சமாதானத்திற்காக பணியாற்ற வேண்டும். நமது நாட்டிற்காகவும் மக்களின் நலனுக்காகவும் உங்கள் கர்வத்தைச் சற்று விட்டு விடுங்கள் என்கிறேன்”

வூ கேட்டார் –“ சரி அதை எப்படி நான் ஆரம்பிப்பது?”

“டாங்குடன்!”

 

 

என்ன என்று பிரமித்தார் வூ. டாங்குடன் நான் பேசுவதா?

“அவர் எனது வீரர்கள் ஏராளமானோரைக் கொன்று  குவித்தவர். ஆக இது பழி வாங்கும் நேரமே தவிர சரணாகதி அடைவதற்கான காலம் இல்லை”

 

வூ அழுத்தம் திருத்தமாகக் கூறி நிறுத்தினார். அங்கு அமைதி நிலவியது.

-தொடரும்

 

Rapist on run gave up after being fed! Food + Kindness melt even Criminals! (Post No.3410)

   

Written by London swaminathan

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 14-06

 

Post No.3410

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

Rapist Admi Headley, 34, absconded from HMP Leyhill on November 13 

  • He later collapsed outside home of students Tom Phillips and Aidan Byrne 
  • The convict opened up to the two friends as they gave him a hot meal
  • Students later convinced him to turn himself in and took him to the station

 

 

Escaped rapist on the run from prison saw the error of his ways after he was taken in by students who gave him a chocolate muffin and a chicken kiev and listened to Jay Z with him.

 

A rapist who escaped from prison turned himself in after he was taken in by two university students.

 

Admi Headley, 34, collapsed outside the home of University of Bristol students Tom Phillips, 22, and Aidan Byrne, 21, on November 16, three days after he absconded from HMP Leyhill in Wootton-under-Edge, Gloucestershire (United Kingdom).

 

The students invited Headley into their flat and fed him soup, a chicken kiev and a chocolate muffin. They also put on rap music after Headley said he was a fan.

 

Over three hours, Headley opened up about his time in prison and the students were eventually able to convince him to hand himself into police.

They even accompanied Headley to the local station, where he hugged them before being taken into custody.

 

Mr Phillips, a physics and philosophy student, told student newspaper Epigram: ‘Any crime of that nature is horrific, however all we could see was the person in front of us.

 

‘The person that I saw was someone who I felt needed food and water, and that is what we gave him.’

 

 

The convict also told the friends he had not spoken to his ex-girlfriend or 12-year-old son in nine years.

 

 

He gave Headley his mobile phone and listened as he spoke to his son. Headley reportedly said: ‘Do you know who this is? It’s your father. I’m sorry that I haven’t been there for you, but when I come home I will do anything for you.’

 

A tearful Headley told the students how he had converted to Islam in prison and carried a set of prayer beads with him at all times.

 

They said that he also carried a contacts book with the name of every friend he had made in jail, and the address and phone number of the friend’s mum.

 

At one point Headley told the students that they could call the police but, keen to keep the situation calm and under control, they said they wouldn’t.

 

Instead they cooked for him, listened to music and chatted for hours.

Mr Phillips said: ‘I didn’t consider kicking him out but it was in the back of my mind that at some point he would have to leave.

 

‘I was desperately hoping that he would just go somehow, but he himself said, ‘I will be off in a minute’ – and he did eventually.’

 

He added: ‘He made the decision himself, although he asked us, ‘Do you think I should probably hand myself in?’ and we said yes.

‘I said, “The sooner you’re in, the sooner you’re out. The longer you leave it, the worse it will be”.

 

Avon and Somerset Constabulary confirmed that Headley attended a Bristol police station on the night of November 16 and handed himself in.

Mr Phillips added: ‘If he ever gets hold of this article, we want to thank him.

‘Now that I’ve reflected, I would like to thank him because he trusted us and he was honest with us and he gave in a very short time a huge amount to us.

 

‘He gave his life story. That is no small thing.’

 

My Comments:–

 

Hindus always do Annadhana (Serving food to all) in the temples and in the community on festive days. Some people used to criticise this good gesture as supporting lazy people. but the people who it believe that even if one good soul takes the food, that will help the entire town or community here in this story we see that even a rapist is moved after the kind food served by the students.

 

in Tamil these is a verse saying that when one is hungry one loses ten virtues. that also confirms when one is not hungry he can think logically.

 

moreover kindness always cure several problems. Tamil poet Tiruvalluvar says in his book Tirukkural

 

affection cannot be controlled by shutters;

uncontrollable tears will rolldown spontaneously

when one sees the sufferings and sorrows of the loved ones (Kural 71)

 

–Subham–

 

 

அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர் (Post No.3409)

Written by London swaminathan

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 10-39 am

 

Post No.3409

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழில் ஒரு பாடல் உண்டு; பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதாவது

மானம்,  குலம்,  கல்வி, வலிமை,  அறிவு,  தானம்,  தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம் எல்லாம் பசி வந்தவனிடத்தில் இருக்காது.

 

இதையே மாற்றிப் போட்டால், பசி இல்லாவிடில் இந்த பத்து குணங்களும் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

லட்சம் பேர் சாப்பிட்டால், அதில் ஒருவர் நல்லவர் இருந்தாலும், அதன் காரணமாக நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை விளையும் என்று காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவில் கூறியுள்ளார். ஆனால் அன்னதானத்தின் மூலம் சிறைக் கைதியும் மனம்மாறிய செய்தி நேற்று பிரிட்டிஷ் (1-12-2016) பத்திரிக்கைகளில் வெளியாகியது.

 

 

கற்பழிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்–  அத்மி ஹெட்லி (வயது 34). அவர் சிறையிலிருந்து தப்பித்து ஓடினார்…. ஓடினார்…. மூன்று நாள் ஓடினார். பசி வயிற்றை வாட்டியது. மயக்கம் வந்து ‘தொப்’ என்று கீழே விழுந்தார்.

எங்கே தெரியுமா?

டாம் பிலிப்ஸ் (வயது 22), ஐடன் பைர்ன் (வயது 21) ஆகிய இருவர் வசித்த வீட்டின் வாசலில் விழுந்தார். அவர்கள் கதவைத் திறந்தவுடன் மயக்கம் தெளிந்து கொஞ்சம் தண்ணீர் கேட்டார் ஹெட்லி .

தண்ணீர் குடித்தவுடன் ஒரு வெடிகுண்டுச் செய்தியைப் போட்டார். பிள்ளைகளே , நீங்கள் என்னிடம் அன்பு காட்டினீர்கள். நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் லேஹில் சிறையிலிருந்து ஓடி வந்த கைதி. என் பெயர் அத்மி ஹெட்லி. சிறைவாசத்தின்போது நான் முஸ்லீமாக மதம் மாறிவிட்டேன். நீங்கள் போலீஸைக் கூப்பிட்டு என்னை ஒப்படைக்கலாம்.

 

ஆனால் மணவர்களோ உடனே அப்படி போலிஸைக் கூப்பிடவில்லை. “கொஞ்சம் பொறுங்கள்– சாப்பிட்டுவிட்டுப் போக லாம்” என்று சொல்லி, சுவையான, சூடான் உணவைச் சமைத்தனர். கோழிக்கறி, சூப், பாஸ்தா எல்லாம் சூடாகப் பறிமறினர் அன்புள்ளம் படைத்த மாணவர்கள்.

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள்)?

கைதியின் கண்களில் இருந்து கண்ணீர் குபுகுபுவெனப் பாய்ந்தது.

மேலும் தனது சொந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார்:

“எனக்கு 12 வயது மகன் உண்டு. அவனை 9 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை”.

 

உடனே இரண்டு மாணவர்களில் ஒருவரான பிலிப்ஸ் (பிரிஸ்டல் பல்கலைக் கழக தத்துவ இயல் மாணவர்), “அதனால் என்ன? கவலைப் படாதீர்கள். இதோ என் மொபைல் போன். உங்கள் மகனைக் கூபீட்டுப் பேசுங்கள்” என்று போனைக் கையில் கொடுத்தார்.

 

ஆனால் நாங்கள் ஏன் 9 ஆண்டுகளாக நீங்கள் பேசவில்லை? என்ன நேர்ந்தது என்று அந்தக் கைதியிடம் கேட்கவே இல்லை.- என்று மாணவர்கள் சொன்னார்கள் பத்திரிக்கை நிருபர்களிடம்!

 

கற்பழிப்புக் குற்றம் என்பது பயங்கரமான குற்றம்தான். ஆயினும் எங்கள் கண் முன் உணவும், தண்ணீரும் வேண்டும் என்று ஏங்கும் ஒரு மனிதனைத்தான் காண முடிந்தது;  குற்றவாளியைக் காணவில்லை. என்றும் மாணவர்கள் சொன்னார்கள்.

 

சாப்பிட்டு முடிந்த பின்னர் அந்தக் கைதி மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்: “நான் போலீஸில் போய்ச் சரணடைய வேண்டுமா? அல்லது ஓடிவிடட்டுமா?”

 

மாணவர்கள் சொன்னார்கள்: “எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சரண் அடைகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் விடுதலையாகி வெளியே வந்து விடுவீர்கள்”.

கைதியும் இதற்குச் சம்மதித்தவுடன் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை, கைதியுடன் நடந்து சென்று அவரை ஒப்படைத்தனர். அவர் இரண்டு மாணவர்கலையும் அன்புடன் கட்டித் தழுவி விட்டு போலீஸிடம் சரண் அடைந்தார்.

 

தத்துவ இயல் மாணவர் பிலிப்ஸ் சொன்னார்: நாங்களும் அந்தக் கைதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். ஒரு கற்பழிப்புக் காரனின் உண்மைக் கதையைக் கேட்க முடிந்தது. முன்னததாக ஏவன் –சாமர்செட் நகர் போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “கைதி ஹெட்லி பயங்கரமானவன் – யாரும் அருகில் நெருங்க வேண்டாம்; எங்களுக்குத் தகவல் மட்டும் தாருங்கள்” என்று ஹெட்லியின் படத்துடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

 

அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71)

 

பொருள்:-

அன்பை, பிறர் அறியாமல்  மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் பலரும் அறியும்படி பறை சாற்றிவிடும்.

 

–சுபம்–

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி! (Post No3408)

Picture of Jimo

 

Written by S NAGARAJAN

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 6-12 am

 

Post No.3408

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

 

“நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மனத்திற்கு மரணம் என்பது அடுத்த ஒரு பெரிய சாகஸ செயல்!” – ஜே. கே. ரோலிங்

 

 

ஒரு மனிதனின் கடைசி விநாடிகளில் என்ன தான் நடக்கிறது? அறிய ஒவ்வொருவருக்கும் ஆசை தான்

இதைப் பற்றி மட்டும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஏராளம் பேர் உண்டு.

 

 

முதலில் இதயத் துடிப்பு நிற்கிறது. மூளை ஆக்ஸிஜனுக்காக ஏங்குகிறது. அப்போது என்ன நடக்கிறது. இறக்கும் தருணங்களில் 20 சதவிகிதம் பேருக்கு “உண்மையைக் காட்டிலும் உண்மையான” காட்சியாக உடலை விட்டு உயிர் நீங்குவதும் பிரகாசமான ஒளியைக் காண்பதும் ஏற்படுகிறது என்கிறது அறிவியல்!

 

 

இது மூளை தரும் காட்சி தானா, அல்லது உடலுக்குப் பின்னால் உள்ள இன்னொரு உலகின் விளிம்பைக் காண்பதன் ஆரம்பமா?

 

மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான ஜிமோ போர்ஜிகின் (Jimo Borjigin) என்ற பெண்மணி இதை ஆராய ஆரம்பித்தார்.

 

முதலில் எலிகள் உள்ளிட்ட மிருகங்களின் மீது சோதனைகளை அவர் நடத்தினார். அவரது லாபரட்டரியில் சில மிருகங்கள் திடீரென இறந்தன. இறக்கும் போது அவற்றின் மூளை சம்பந்தமான சில கெமிக்கல்களின் மின் இயக்கம அதிகமானது.  இதனால் தான் நினைவகத்தில் இருந்த சில அனுபவங்கள் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்களுக்குத் தோன்ற அது இறக்கும் போது காணும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை உறுதி செய்ய ஒன்பது எலிகளின் மூளைகளில் எலக்ட்ரோடைச் செருகி ஒரு மணி நேரம் மயக்க மருந்தைச் செலுத்தினர். இது சோதனையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறநெறிகளில் ஒன்று. பின்னர் பொடாசியம் க்ளோரைடை ஒவ்வொரு எலியின் இதயத்திலும் செலுத்தினர்.

அடுத்த 30 விநாடிகளில் எலியின் கடைசி இதயத்துடிப்பு ஏற்பட, மூளை இயக்கமின்றி நிற்கும் போது கடைசியாக மின் சிக்னலகளை வெளியிட அதை ஆய்வாளர்கள் துல்லியமாக ரிகார்ட் செய்தனர்.

 

 

இதை ஆராய்ந்த குழுவினர், தகவல்களை முறைப்படுத்துவது,  விழிப்புணர்வுடன் இருப்பதை விட எட்டு மடங்கு அதிகமாக ஆகிறது என்பதைக் கண்டனர். அது உணர்வின் அதிக உச்ச நிலை என்று அவர்கள் தெரிவித்து, அது தான் இறக்கும் போது பல காட்சிகளைக் காண்பது போன்ற தோற்றத்தை மனிதர்களுக்கு அளிக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆனால் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான் சாம் பார்னியா மிருகங்கள் கடைசி நிமிடங்களில் என்ன நினைக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? இது கடைசி நிமிடங்களில் இரத்த ஓட்டத்தின் நிலை என்ன என்பதையும் மூளையின் கெமிக்கல் வெளிப்பாடுகள் எப்படி உள்ளன எனபதையும் அறிய மட்டுமே உதவும் என்கிறார்.

 

 

    சாம் பார்னியா தனது சக விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பெரிய ஆய்வை நான்கு ஆண்டுக் காலம் செய்தார்.  மாரடைப்பு ஏற்பட்ட 2060 நோயாளிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் உயிர் பிழைத்த 330 பேர்களில் நாற்பது சதவிகிதத்தினர் தாங்கள் இறந்ததாக மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்ட இறுதி விநாடியில் பெரிய விழிப்புணர்ச்சியைப் பெற்றதாக அறிவித்தனர்.

இவர்களின் ஐந்து பேரில் ஒருவர் எல்லையற்ற அமைதி கிடைத்ததாகத் தெரிவித்தனர். மூன்றில் ஒருவர் காலமே இல்லாத  ஒரு உணர்வை அடைந்ததாக அறிவித்தனர்.

இவர்களில் 46 சதவிகிதம் பேர், நினவுகளில் பல மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததாகக் கூறினர். இரண்டே இரண்டு சதவிகிதம் பேர்கள் மட்டும்  “திரும்பி வந்ததை” பார்த்தும் உணர்ந்தும் அனுபவித்ததாகக் கூறினர்.

 

 

பல லட்சம் பேர் இப்படி இறுதி விநாடி அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். இதை இன்னும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.

57 வயதான “இறந்த” ஒரு ராணுவ வீரரின் அனுபவம் சுவையானது. மருத்துவ ரீதியில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் “இறந்த” அறையில் நடந்ததை எல்லாம் அவர் பிட்டுப் பிட்டு வைத்தார். இதயம் நின்ற பின்னர் மூளை 20 முதல் 30 விநாடிகளில் செயல் இழக்கும். ஆனால் அவரோ இரண்டு ப்ளீப் ஒலிகளைக் கேட்டதாகச் சொன்னார். இது மருத்துவ ரீதியாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்று நிமிடங்கள் இடைவெளியில்  ஒரு மெஷினிலிருந்து வெளிப்படும் ஒலியாகும்!

 

 

இது நம்ப முடியாத அதிசயம் என்பதைக் கூறிய பார்னியா, இத்னால் ஒருவர் இறந்து விட்ட பின்னர் கூட நாற்பது நிமிடங்கள் வரை மூளை சேதம் அடைவதில்லை என்ற முடிவுக்கு வரலாம் என்று கூறினார். மற்ற விஞ்ஞானிகள் அவரை ஆதரித்து குறைந்த பட்சம் 20 நிமிடம் மூளை சேதமின்றி அப்படியே இருக்கிறது என்கின்றனர்.

 

 

    அதாவது இற்ந்த பின்னர் கூட ஒருவரின் பிரக்ஞை அல்லது உணர்வு சில நிமிடங்களாவது நீடிக்கிறது என்பதையே தங்கள் ஆய்வின் முடிவு கூறுகிறது என்கிறார் அவர்.

      இன்னொரு சுவையான தகவல் உயிரின் எடையைப் பற்றியதாகும்!

 

 

      உயிரின் எடை 21 கிராம் என்று சொல்லப்படுவதன் மூல காரணம் 1907இல் நடந்த ஒரு ஆராய்ச்சியினால் தான்!

மசாசூசெட்ஸில் டங்கன் மக்டௌகால் (Duncan MacDougall)

என்ற ஒரு டாக்டர் இறக்கும் தருவாயில் இருந்த ஆறு நோயாளிகளை (இரகசியமாக மருத்துவ அற நெறிகளையும்  மீறி) மிக துல்லியமாக அளவுகளைத் தெரிவிக்கும் ஸ்பிரிங்குகள் உள்ள படுக்கைகளில் படுக்க வைத்தார். அவர்கள் இறந்தவுடன் மிகச் சரியாக 21 கிராம் எடையில் குறைந்து விட்டது தெரிய வருவதாகத் தெரிவித்தார். ஆகவே உயிரின் எடை 21 கிராம் தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல் உலகில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் இதை  மறுத்த இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் அகஸ்டஸ் பி. க்ளார்க் என்பவர் ‘அப்படியானால் நாய்கள் இறந்த பின்னர் இப்படி எடை குறையவில்லையே, அப்படியானால் நாய்களுக்கு “உயிரே” கிடையாதா!’ என்று பதில் கேள்வி கேட்டார்.

 

 

       ஆனால் ஆன்மா பற்றிய அனைத்து மதங்களின் தத்துவமும் ஒன்று தான். ஆன்மாவுக்கு எடை, காலம், வெளி எதுவும் கிடையாது என்பது தான். பிளேட்டோ காலத்திலிருந்து சொல்லி வரப்படும் உண்மை. ஆன்மா எதையும் கடந்தது என்பதை யார் தான் மறுக்க முடியும்?

 

 

    ஆன்மா அல்லது உயிரின் எடை பற்றிய இன்னொரு ஆராய்ச்சி 1907க்குப் பின்னர் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆன்மாவிற்கே ஒரு ஆராய்ச்சியா? ஹ, ஹ, ஹா என்கின்றனர் மெய்ஞானிகள்.

அதை கண்டு பிடிக்காமலா இருப்போம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சபாஷ், சரியான போட்டி! காலத்தின் கையில் தான் விடை இருக்கிறது!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. …

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside : பிறப்பு 18-5-1850 மறைவு 3-2-1925) பிரபல விஞ்ஞானி. கணித மேதையும் கூட. மின் சர்க்யூட்களைப் பற்றி அபாரமான ஆராய்ச்சிகளைச் செய்தவர் அவர்.

 

அவரது வாழ்க்கை சற்று விசித்திரமானது. பள்ளிப் படிப்பு என்பது ஆரம்ப காலத்தில் மட்டும் அவருக்கு ஒரு சிறிதே இருந்தது. ஆனால் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் சுயமாகக் கற்றார். உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானியானார்.

அவருக்கு காது சற்று மந்தம். ஆகவே தன்னைச் சந்திக்க வருவோரை மிகவும் குறைத்துக் கொண்டார். ஏறக்குறைய தனிமையில் வாழும் ஒரு சந்யாசியைப் போல வாழ்ந்தார்.

ஒரு நாள் தற்செயலாக  ஒரு வாயு எரிய அதில் அவரது முகம் பட்டு முற்றிலுமாக வெந்து போனது.

 

கோரமான முகத்தைக் காட்ட விரும்பாது ஒரு தலைப்பாவை முகம் முழுவதும் மூடும் படியாகக் கட்டிக் கொண்டு வாழலானார். முகமூடியோ கழுத்துடன் ஒரு கயிற்றினால் இறுகக் கட்டப்பட்டிருக்கும். அவரது கண்கள் மட்டும் பெரிய முகமூடி வழியே மின்னும்!

 

 

உலகம் அவரைப் பாராட்டியபோதும் போதுமான பணமின்றி ஏழையாகவே அவர் வாழ்ந்தார். நண்பர்களோ யாரும் பார்க்க வரவில்லை அல்லது அவர் வரவிடவில்லை!

70 வயது ஆன பிறகு நிலைமை இன்னும் மோசமானது. கரண்ட் பில் கட்டக் கூட பணமில்லை. அவரோ அசரவில்லை. மின்சார இணைப்பு இல்லாமலேயே 15 மாதங்கள் இருட்டில் வாழ்ந்து வந்தார்.   அவரது குறிப்புப் புத்தகங்களும் ஆராய்ச்சி பற்றிய அனைத்து நோட்டுகளும் இன்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப்     எஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் காக்கப்பட்டு வருகிறது.

 

விசித்திரமான விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆலிவர் ஹெவிசைட்

*********

 

குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)

Written by London swaminathan

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 19-40

 

Post No.3407

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

மேல் நாடுகளில் குகைகள் பற்றி ஆராய்வோருக்காக (Speleology) சங்கங்கள் உள்ளன. உலகில் எங்கு குகைகள் இருந்தாலும் அங்கு சென்று நவீன கருவிகளை வைத்து முதலில் ஆராய்ந்துவிட்டு பின்னர் கயிறு கட்டி உள்ளே இறங்குவர். பின்னர் அது பற்றிய சுவையான தகவல்கள் வெளியாகும். நமது இந்தியாவில் ஏராளமான குகைகள் உள்ளன. மேகாலயாவில் உள்ள குகைகளைப் பற்றி கூட ஒரு ஆங்கிலக் கட்டுரை வந்தது.

 

வால்மீகி ராமாயணத்தில் கதையின் முக்கியத் திருப்பமே குகை மூலமகத்தான் வந்தது. கிஷ்கிந்தையில் குகைக்குள் போன வாலி வரவில்லை என்றவுடன், பயந்து போனதம்பி சுக்ரீவன் அதன் வாயிலை மூடவே வந்தது வம்பு! பின்னர் நடந்த கதை எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

 

இமயமலையில் நைமிசாரண்யம் என்னும் இயற்கை அழகு மிக்க பூமி அருவிகளும், அடவிகளும் (காடு), குகைகளும் வனவிலங்குகளும் நிறைந்த இடம். அங்குதான் முனிவர்கள் தங்கி புராணக் கதைகளைக் கேட்டனர்; எழுதினர்; யாக யக்ஞங்களைச் செய்தனர்.

இதே போல கிஷ்கிந்தையிலும் குகைகள் இருந்தது வாலியின் கதை மூலம் தெரிகிறது. கிஷ்கிந்தை குகைகள் பற்றிக் கம்பன் கூறும்  பாடலைக் காண்போம்:

 

சரம்பயில்நெடுந்துளி நிரந்த புயல் சார

உரம் பெயர்வு இல் வன் கரி கரந்துற ஒடுங்கா

வரம் பகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்

முரம்பினில் நிரம்பல முழைஞ்சியடை நுழைந்த

கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானில் பரவிக்கிடந்த மேகங்களில் இருந்து மழை கொட்டியது அம்புகள் சரமாரியாக வந்ததுபோல இருந்தது. அப்போது தேன்கூடுகளில் இருந்து தேன் வழிந்தது. அப்பொழுது அந்த யானைகள்  மழையைப் பொறுக்க முடியாதபடி குகைக்குள் ஒவ்வொன்றாக நுழைந்தன.

 

இப்பொழுது நாம் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்ப்போம்; யானைகள் நுழையும் அளவுக்கு பெரிய வாயில்கள்!! அவ்வளவு யானைகளுக்கும் இடம் தரும் அளவுக்கு அகன்ற ஆழமான குகைகள்! இப்படி இருந்ததாம் கிஷ்கிந்தைப் பகுதி.

 

(முழை=குகை, பிரசம்=தேன்கூடு)

 

முழை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பரிபாடல், அகநானூறு, புறநானூறு பாடல்களில் வருகிறது. பேகன் ஆண்ட மலைப் பகுதியில் பெரிய குகைகள் இருந்தனவாம். அகநானூறு பாடல் ஒன்றில் இரவுநேரத்தில் தன்னைக் காண வரவேண்டாம்; ஏனெனில் மலைக்குகைகளில் புலிகள் இருக்கின்றன என்று காதலனுக்கு காதலி கூறுகிறாள்.

 

குகை என்ற சம்ஸ்கிருதச் சொல் சங்கப் பாடல்களில் கிடையாது. முழை என்ற சொல்லே நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

காளிதாசன் பாடலில் குகைகள்

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன், குமாரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் 18 பாடல்களில் இமய மலையை அற்புதமாக வருணிக்கிறான். அதில் இரண்டு பாடல்களில் குகைகளைப் பற்றியும் சொல்கிறான். கிம்புருஷப் பெண்கள், இமயமலைக் குகைகளில் இருப்பதாகவும் மேகங்கள் குகைகளின் வாயிலில் தவழ்ந்து செல்லுகையில் அவை திரை போல இருந்து அவர்களுக்கு உதவின என்றும் பாடுகிறான்.

 

சங்க இலக்கியப் பாடல்களில் குகை (முழை)

அகம்-168, பரி-8, 19, புற. 147, 157, 158.

 

காளிதாசன் குமார சம்பவம் – 1-12, 1-14

 

–SUBHAM–