போலி மாப்பிள்ளைத் தோழன் கதை! POST No. 2342

 

 

at_the_feet_of_god_medium

 

Compiled   by London swaminathan

Date: 19 November 2015

POST No. 2342
Time uploaded in London :– 10-25
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:தமிழ் மொழி பெயர்ப்பு-லண்டன் சுவாமிநாதன்

திருமணமான ஒருவருக்கு மாமனாரிடமிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. “தொலைதூரத்தில் வசிக்கிறீர்களே; நீண்ட நாளாகிவிட்டதே; இங்குவந்து எங்களுடன் தங்கிவிட்டுப் போகக்கூடாதா?” — என்று. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் இருந்ததால் அவர் மட்டும் பயணமானார். ஒரு கில்லாடிக்கு எப்படியோ இந்தக் கடித விஷயம் தெரிந்தது. அவனும் டிப்-டாப்பாக உடைகளை அணிந்து மாப்பிள்ளை புறப்பட்ட அதே ரயிலில் புறப்பாட்டான்.

 

இருவரும் மாமனார் ஊருக்கு வந்தனர். மாப்பிள்ளையை வரவேற்க, மைத்துனர் கார் கொண்டு வந்திருந்தார். அவரைக் காரில் பின் சீட்டில் மரியாதையாக அமர்த்தியபோது, அதே ரயிலில் வந்த டிப்-டாப் பேர் வழி “ஹலோ” என்று வணக்கம் சொல்லி காரில் அமர்ந்துகொண்டான். மைத்துனர் நினைத்தார் இவர் மாப்பிள்ளையின் தோழர் போல என்று. மாப்பிள்ளை நினைத்தார், அவர் மாமனார் வீட்டுக்கு வேண்டியவர் போலும்; ஒரே ரயிலில் வந்ததால் அவரையும் அழைத்துப் போகத்தான் மைத்துனர் வந்தார் போலும் என்று!

 

இருவரும்  வீடு போய்ச் சேர்ந்தவுடன் உற்சாக வரவேற்பு கிடைத்தது. டிப்-டாப் பேர்வழி யரும் எதையும் கேட்டு விடக் கூடாதென்பதற்காக என்னுடைய அறை எது? என்று கேட்டவுடன், மாமனார் அவனுக்கு ஒரு அறையை ஒதுக்கினார். மாப்பிள்ளையின் சந்தேகமெல்லாம் பறந்தோடிவிட்டது. ஓஹோ! இவர் மாமனாரின் நெருங்கிய நண்பர் போலும்; அதுதான் உரிமையோடு அறையைக் கேட்க, மாமனாரும் உடனே கொடுத்துவிட்டார் என்று.

 

ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. டிப் டாப் பேர்வழி எல்லா அறைகளிலும் சென்று எல்லாப் பொருட்களையும் எடுத்தார். எல்லோர் உடைகளையும் எடுத்து அணிந்தார்; வீட்டிலுள்ள நல்ல செருப்புகளை தன்னுடைய சொந்த செருப்பு போலப் பயன்படுத்தினார். எல்லோருக்கும் “ஹலோ, குட் மார்னிங்” எல்லாம் சொன்னார்.பேச்சு கொடுக்கக் கூடாதென்பதற்காக, பெரும்பாலான நேரங்களில் வெளியே போய்விடுவார். சாப்பாட்டு நேரத்தில், சாப்பாட்டு ராமன் —  பெருந்தீனீ – என்னும் பெயருக்குரியவராகி விடுவார்!!!

 

மாப்பிள்ளையும், மாமனாரும் இது ஏது, இப்படி இங்கிதம் இல்லாமல் மோசமாக நடந்து கொள்கிறான் என்று மனதுக்குள் புகைந்தனர். ஆனால் எதுவும் சொல்ல பயந்தனர்.

 

மானாருடைய சொந்தக்காரரைக் குறைகூறினால் அவர் தப்பாக நினைப்பாரே என்று மருமகன் பயந்தார். மருமகனின் சொந்தக்காரரைக் குறை சொன்னால் மருமகன் கஷ்டப்படுவாரே என்று மாமனார் தவித்தார்.

 

ஒரு நாள் அந்த ஆள்மாறாட்ட டிப்டாப்  பேர்வழி எல்லை மீறி சுதந்திரத்தைப் பயன்படுத்தினார். யார் அனுமதியும் கேட்காமல் காரை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி எல்லா பெட்ரோலையும் செலவழித்துவிட்டுக் காரை நிறுத்தினார். இந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கருதி மாமனார், மாப்பிள்ளையிடம் யார் இந்த பிருஹஸ்பதி? என்று கேட்போம் என்று அவரை நெருங்கினார். ஆள்மாறாட்டக்காரனின் இந்த அடாத செயலைப் பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளையும் இவ்வளவு மோசமான இவன் யார்? என்று கேட்க மாமனாரை நெருங்கினார். ஆள்மாறாட்டப் பேர்வழிக்கு நிலைமை முற்றிப்போனது தெரிந்துவிட்டது. நைஸாக நழுவிவிட்டார். இப்போது மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் (மருமகன்) உண்மை விளங்கியது.

 

ramdas

படம்: சுவாமி  ராமதாஸ்

அந்த டிப் டாப் ஆள்மாறாட்டப் பேர்வழியின் பெயர் என்ன தெரியுமா? அஹங்காரம்; அதாவது “யான்” “எனது” என்னும் செருக்கு.

 

யார் ஒருவன் அஹங்காரத்தை அடையாளம் காண்கிறனோ, அப்பொழுது அது பயந்து ஓடிவிடும். அதைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு இடம் கொடுக்கும் வரைக்கும் அது (டிப்-டாப் ஆள் மாறாட்டப் பேர்வழி) ஆட்டம்போடும்!

 

இது சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு; லண்டன் சுவாமிநாதன்

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள் 346

 

–சுபம்–

 

புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை ( POST No. 2341 )

 

climate-change

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 19 November 2015

POST No. 2341

 

Time uploaded in London :– 9-23 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

புவி வெப்ப உயர்வானது இந்தியாவின் வழக்கமான பருவநிலை மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிய ஆய்வு ஒன்றின் முடிவு சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது. வருகின்ற இருநூறு ஆண்டுகளுக்குக் கோடைகால பருவ நிலையில் இந்தப் பாதிப்பு தொடரக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

அதி நவீன கணினி தொழில்நுட்பத்தின் மூலமாக பருவநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழு, சராசரியாக இந்தியாவில் கோடைகாலத்தில் பெய்யும் மழையின் அளவில் இனி 40 முதல் 70 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.

 

 

1870ஆம் ஆண்டிலிருந்து பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் இனி அடிக்கடி இப்படி மழை பொய்க்கின்ற வாய்ப்பும் குறைந்த அளவிலேயே மழை பெய்யும் வாய்ப்பும் உருவாகும் என்பதை ஆய்வு தெரிவித்துள்ளது.

தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் வாக்கர் சர்குலேஷன் (Walker Circulation) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேலை ஹிந்து மஹாசமுத்திரத்திற்கு உயர் அழுத்தப் பகுதிகளைக் கொண்டு வருவது, எல் நினோ ஏற்படும் காலங்களில் மாறி அதனால் இந்தியாவில் பருவ மழை அளவு குறையும் நிலை ஏற்படும் என்பதைத் தெளிவாக ஆய்வு குறிப்பிடுகிறது.

 

 

புவி வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையே!

 

polar bear

வளி மண்டலத்தைக் கார்பன் டை ஆக்ஸைடும் கார்பன் மானாக்ஸைடும் தாக்கி பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்குக் காரணம் இந்த நச்சுப் புகைகளை வெளியேற்றும் வாகனங்களே! ஆகவே வாகனங்களுக்கே உரிய நச்சுப்புகை கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

 

***

 

Similes and Analogies used by Sringeri Acharya (Post No. 2340)

carpenter-clipart-dc7ejXEgi

 

Compiled   by London swaminathan

Date: 18 November 2015

POST No. 2340
Time uploaded in London :– 15-54
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Carpenter and Spiritual aspirant

A carpenter, however intelligent he may be, cannot function properly if he squats on a rickety seat or has blunt instruments or does not know how to use them effectively. Similarly a person who wants to launch into the most subtle and difficult of endeavours, namely, to achieve progress in the field of spirituality, must have a strong and healthy body, senses capable of effectively functioning and a strong and healthy mind capable of controlling and directing properly the body and the senses.

 mirror dirty

Mind and Mirror

The mind is like a mirror and, if it is pure and steady, it will reflect clearly the Self. If the mirror is coated with dust and is shaky, it cannot reflect the object before it. The dust which darkens the mind is SIN and its shakiness is due to DISTRACTION. The sin has to be eradicated by the performance of the prescribed good deeds known as Karma and the distraction by the practice of one-pointed devotion known as Upasana.

6lakshmi

Image Worship

Nobody who engages himself in in image worship ever commits the mistake of limiting god to that image. He knows clearly that the image is resorted to for the purpose of establishing contact with the intangible universal godhead who can manifest himself in any form.

 

Nobody who wants to write is immediately able to able to write small letters and in a neat hand. He has to begin the practice of writing big letters on sand or on rough sheets till he gets some proficiency. Similarly, the aspirant who wants to contemplate on god has to begin by concentrating his mind on a gross visible image of God.

 sweetmeats

Sweetmeat shop

If we take some children to a sweetmeat shop and ask them to select what they want, a child may prefer to have a ring shaped sweetmeat, another a rod like one, another in the form of a peacock, another in the form of a chair, and so on. We know all these are made up of sugar and it is not material to us what form each child choses. We know also that, once the children put the sweetmeats into their mouths and begin to taste them, the particular forms will easily dissolve themselves leaving only the taste of sugar and that this taste will be common to all the children though the forms through which they obtain it are quite different from one another. Similarly, our religion recognises that forms of Gods are necessary and that the forms lose their significance when the Godhead in them begins to be realised.

150coin2

Dharma

If 50 people contribute Rs 3 each to honour a Pandit, the total amount will come to only Rs 150, though they all may sincerely feel that this is not an adequate remuneration for the valuable discourse of the Pandit. Any amount of sincere feeling on their part will not affect the arithmetical truth that 50 multiplied by 3 is only 150. It is quite open to the Pandit also to say and feel that this 150 is a1000 to him; but his saying or feeling so will not in any way swell the cash. So truth is one thing and concept is quite another. Our Dharma is Truth and therefore eternal; it is not a concept liable to variations.

 

Other similes used by the two previous Shankaracharyas of Sringeri Mutt are covered in my earlier articles.

–subham–

சேவலிடம் பாடம் கற்போம்! POST No. 2339

cock1

Written  by London swaminathan

Date: 18 November 2015
POST No. 2339
Time uploaded in London :– 14-47
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதம் அழகான மொழி! அற்புதமான ஒரு மொழி! அதில் பேசப்படாத விஷயங்களே இல்லை. வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) பற்றி சரக சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி மஹாபாரதத்தில் ஸ்லோகம் இருக்கிறது; செண்ட் செய்வது பற்றி வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதாவில் ஸ்லோகம் இருக்கிறது.பல்லாயிரம் பழமொழிகளும், நீதி மொழிகளும் உள்ளன.

 

சேவல் பற்றியும் புத்தகப் பாதுகாப்பு குறித்தும் சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு கூறுவதானது:-

 

யுத்தம் ச ப்ராதருத்தானம் போஜனம் சஹ பந்துபி:

ஸ்த்ரியமாபத்ரதாம் ரக்ஷெச்சது: சிக்ஷதே குக்குடாத்

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 162/403

சேவற்கோழி கற்பிக்கும் பாடம் நான்கு:

1.யுத்தம்= சண்டை போடுவது எப்படி?

ப்ராதருத்தானம் = அதிகாலையில் எழுந்திருத்தல்

போஜனம் = அனைவருடனும் உண்ணல்

ஸ்த்ரீ ரக்ஷணம் – பெண்களைப் பாதுகாத்தல்

Books 2

நூல் பாதுகாப்பு

தைலாத் ரக்ஷேத் ஜலாத் ரக்ஷேத் ரக்ஷேத் சிதிலபந்தனாத்

மூர்க்கஹஸ்தே ந தாவ்யமிதம் வததி புஸ்தகம்

தைல – எண்ணெய்

ஜல – தண்ணீர்

சிதில பந்தனாத் – சரியாகத் தொகுத்துக் கட்டாத பக்கங்கள்

மூர்க்க ஹஸ்த தான- படிக்க விருப்பமில்லாத வர்களிடம் அளித்தல்

மேற்கூறிய நான்கிடமிருந்தும் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும்; நீரும், எண்ணையும் நூல்களை நாசம் செய்யுமல்லவா?

(மூடர்களிடம் கொடுத்தால் அவன் பக்கோடா, பஜ்ஜி கட்ட அந்தப் பக்கங்களைப் பயன்படுத்துவான்!!!)

 

தமிழும் சம்ஸ்கிருதமும் படியுங்கள்! அறிவை வளருங்கள்!!

 

 

புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும்! (POST No. 2338)

A woman carries tannery waste as she walks through a dried pond at Hazaribagh area in Dhaka

A woman carries tannery waste as she walks through a dried pond at Hazaribagh area in Dhaka August 19, 2013. REUTERS/Andrew Biraj 

Radio Talk written by S NAGARAJAN

Date: 18 November 2015

 

POST No. 2338

 

Time uploaded in London :– 13-42

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

 

 

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

 

நாளுக்கு நாள் பூமி அதிகமாக வெப்பமாகிக் கொண்டே வருவதால் அபாயங்கள் பெருகி வருகின்றன. இந்த அபாயங்களைப் பற்றி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர் அவர்கள் தரும் எச்சரிக்கையை பொறுப்பான விதத்தில் மனித குலம் ஏற்றுக் கொண்டு புவி வெப்பமாதலைத் தடுக்க முழு முயற்சி எடுத்தல் இன்றியமையாதது.

 

 

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை உயரும் தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு 600 உயிரினங்களின் மீது புவி வெப்பம் அதிகமானால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் கடல் வாழ் உயிரினங்கள் மீது புவி வெப்பம் உயர்வதால் ஏற்படும் அபாயம் தாங்கள் கருதியதற்கும் மேலாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

o-CLIMATE-CHANGE-ARCTIC-facebook

Three Polar bears on an ice flow

கடல் நீரின் உஷ்ண நிலை உயர்வதால் கடலிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவுபடும் என்றும் இதனால் கடலில் வாழும் மீன்களின் உடல் எடை குறையும் என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். முன்பு நடத்திய ஆய்வுகள் மீனின் இனப்பெருக்கத்தை புவி வெப்பம் குறைக்கும் என்று தெரிவித்த நிலையில் அதன் அளவும் குறுகி விடும் என்பதும் இப்போது தெரிகிறது.கடல் நீரின் உஷ்ண நிலை உயர்வதால் மீன்களின் உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். அதனால் அதன் உடல் இயக்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி மீன் கூட்டங்கள் புவி வெப்ப உயர்வால் பூமியின் துருவங்களை நோக்கி விரையும் என்பதையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்தியன் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் மீன்களின் உடல் அளவில் 14 முதல் 24 சதவிகிதம் வரை குறையும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். நேச்சர் க்ளைமேட் சேஞ்ஜ் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

அத்தோடு அடிலெய்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, தாவரங்களின் மீதும் புவி வெப்பத்தின் தாக்கம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. தாவரங்களில் இலைகளின் வடிவங்கள் மாறுவதோடு அவை பெரிதும் சுருங்கி வருகின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இலைகளின் அளவுக்கும் உயர்கின்ற வெப்ப நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை குறுகிய இலைகளை ஆராய்ந்த பின்னர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

 

 

ஆகவே புவி வெப்பம் இயற்கையில் அமைந்துள்ள தாவரங்களையும் பாதிக்கிறது. கடல் வாழ் உயிரினங்களையும் பெரிய அளவில் பாதிக்கிறது. இன்று புவி வெப்பமாதலைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

 

 

*****

Drama is Best: Kavyesu Natakam Ramyam! (POST No. 2337)

shakuntala-raja-ravi-varma

Written  by London swaminathan

Date: 17 November 2015
POST No. 2337
Time uploaded in London :– 21-20
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Shakuntala Popular Four Verses

 

Kavyesu Natakam ramyam tatra ramyaa Sakuntala

Tatraapi cha chaturtankah tatra sloka chatustayam

 

In the classical literature, drama is the best one; Among the Dramas Saakuntalam (of Kalidasa) is the best. Even in that drama fourth Act is the best one. And in the fourth act, there are four beautiful slokas!

 

 

The four verses in the Fouth Act are verses 6,18,19,22

 

Yaasyadya ………………….

Paatum na pratamam …………………

Asana sadhu………………..

Susruusasva ……………………..

 

Verse 6

Seer Kanva says:

This day will Sakuntala depart; at such a thought my heart is smitten with anguish; my voice is choked by suppressing the flow of tears; and my senses paralysed by anxious thought. If such through affection, is the affliction even of me a hermit, O with what pangs must they who are fathers of families be afflicted at the first parting with their daughters?

 

kali stamps 1

Verse 18

Seer Kanva addressing the trees and plants:

 

She who wouldn’t drink water first, before you were watered; she who cropped not through affection for you one of your fresh leaves, though she is fond of ornaments; she whose chief delight was in the season of the first appearance of your bloom; even that same Sakuntala is going to the palace of her wedded Lord. Let all give their consent.

 

Verse 19

 

Kanva says this Sarngarava:

Consider us, who are rich in self restraint

And consider your own exalted lineage

Consider well her love, spontaneous,

That flowed towards you  unprompted by her kin

Regard her then as worth equal  esteem

As your other consorts; more than that rests

On what Fortune has in store for her

The bride’s kin ought not to speak of it

kali stamp 2

Verse 22

 

“ My child, you are now leaving for your husband’s home; when you enter it:

 

Serve your elders with diligence; be a friend to your co-wives; even if wronged by your husband do not cross him through anger.
Treat those who serve you with utmost courtesy.
Be not puffed up with pride by wealth and pleasures;
Thus do girls attain the status of mistress of the home; those who act contrary are the bane of their families”.

 

 

These are the four popular verses in Sakntalam. All these are spoken by the seer Kanva.

 

If one reads in the drama and understands the context, it will add more colour and weight to these statements.

 

Sakuntala is shown as an innocent and  kind forest woman. Shakespeare has modelled his Miranda (The Tempest) on the character of Kalidasa’s Sakuntala.

 

kalidas-cinema-song-book

More about Sanskrit Drama:–

 

Elements of Plots of Drama:

 

Biija seed

Bindu vital drop

Pataakaa episode

Prakarii episodic incident

Kaaryam action

 

 

Stages of Action in Drama

 

Praarambhah — Beginning

Prayatna —  effort

Praapti  Sambhava- Possibility of attainment

Niyataapti — certainty of attainment

Phalapraaptih —  attainment of the object

 

Praarambascha prayatnascha tataa praaptescha sambhavah

Niyataa cha phalapraaptih phalayogascha pacamah

விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘கணக்குப் போடும் குதிரை’! (Post No.2336)

Schoeller_Elberfeld

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 2015, நவம்பர் 13ஆம் தேதி இதழில் வெளியான கட்டுரை

 

Compiled by S NAGARAJAN
Date: 17 November 2015
POST No. 2336
Time uploaded in London :– 14-40
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

விஞ்ஞான உலகத்தையே திகைக்க வைத்த குதிரை ஒன்றை ‘மிருக உலகின் கணித விந்தை’ என்று விஞ்ஞானிகள் புகழ்ந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்று,

 

எல்பர்ஃபெல்ட் குதிரை)கள் (Elberfeld horses) என்று புகழ்பெற்ற அந்த குதிரைகளைப் பற்றி ‘உளவியல் உலகில் மிகவும் பரபரப்பூட்டிய சம்பவம்’ என்று டாக்டர் இ. க்ளாராபிட் (Dr E.Clarapide) வர்ணித்தார்.

1891ஆம் ஆண்டு நடந்த விஷயம் இது!

இந்தக் குதிரைகளின் அபார புத்திசாலித்தனத்தை முதலில் கண்டு பிடித்தவர் வில்லியம் வான் ஆஸ்டன் என்பவர். அவர் ஒரு பள்ளி வாத்தியார். அவர் குதிரைகளை ஒரு விசேஷமான முறையில் பயிற்றுவித்தார். விளைவோ அபாரமாக இருந்தது.

க்ளூஜ் ஹான்ஸ் என்ற குதிரை கணக்குப் போடும் திறனைக் கொண்டிருந்தது.

ஒரு மேஜை மீது கொட்டைகளை வைத்தால் அதில் எத்தனை இருக்கிறது என்பதை தனது குளம்புகளைத் தட்டிக் காட்டி அது சொல்லும்! வான் ஆஸ்டன் முதலில் நம்பர்களை உரக்கச் சொல்வார். பின்னர் ஒரு கரும்பலகையில் அந்த எண்ணை எழுதிக் காண்பிப்பார். அதைப் பார்க்கும் குதிரை அப்படியே அந்த எண்ணை உட்கிரகித்துக் கொண்டு தன் குளம்புகளால் அந்த எண்ணைத் தட்டிக் காண்பிக்கும்! ஆனால் இதை மோசடி என்று பல பேர் சொல்ல ஆரம்பித்தார்கள். தனது அபாரமான குதிரையின் கணிதத் திறமையைப் பாராட்டாவிட்டாலும் சரி, மோசடி என்கிறார்களே என்று மனமுடைந்த வான் ஆஸ்டன் அந்த விரக்தியிலேயே இறந்து போனார். ஆனால் பல விஞ்ஞானிகள் அந்தக் குதிரையை ஆராய்ந்த பின்னர் மோசடி ஒன்றும் இல்லை என்று கூறினர். என்றாலும் அவர் இறந்தது இறந்தது தானே!

1909இல் அவர் இறந்த பின்னர் அவரது பயிற்சி உத்தியால் கவரப்பட்ட எல்பர்பெல்ட் நகரைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி அந்தப் பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் பெயர் ஹெர் க்ரால் (Herr Krall). க்ரால் பொறுமையாக தன்னுடைய சொந்தக் குதிரைகளுக்குப் பயிற்சியை அளிக்க ஆரம்பித்தார்.

குதிரைகள் அடிப்படை கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலைக் கற்றுக் கொண்டன.

முஹம்மது, ஜரீஃப், பெர்டோ மற்றும் ஹான்சென் ஆகிய பெயர்களை உடைய தனது நான்கு குதிரைகளுக்கு இந்தக் கணித வித்தையை அவர் கற்றுக் கொடுத்தார். நான்கு மாதங்களில் ஒரு அபாரமான முன்னேற்றம் ஏற்பட்டது. குதிரைகள் வர்க்கம் மற்றும் க்யூப் ரூட்டையும் போட ஆரம்பித்தன (Square and cube roots). அத்துடன் ஆங்கில ஸ்பெல்லிங்கையும் கூடக் கற்றுக் கொண்டன.

34 என்ற எண்ணை உரக்கக் கூவினால் நான்கு குதிரைகளும் இடது கால் குளம்பை மூன்று தடவையும் வலது கால் குளம்பை நான்கு தடவையும் தட்டும்! க்ரால் ‘Denkende Tiere’ என்ற ஒரு நூலை இது குறித்து எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஞ்ஞானிகள் இந்த விந்தையால் பெரிதும் கவரப்பட்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக விஞ்ஞானிகளின் குழு குதிரைகளின் மீது ஆய்வு நடத்த வர ஆரம்பித்தது. ஏராளமான கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. பல விஞ்ஞானிகள் திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர் – இது உண்மை தான் என்று!

நோபல் பரிசு பெற்ற பிரபல சிந்தனையாளரான மௌரிஸ் மேடர்லிங்க் (Maurice Materlink) (பிறப்பு 28/8/1862 மரணம் 6/5/1949) நேரடியாக எல்பர்பெல்ட் நகருக்கு வந்தார். முஹம்மதைப் பார்த்தார். அந்தக் குதிரைக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். உடனடியாக குதிரை அவரது பெயரை குளம்புகளினால் தட்டிக் கூறியது. மேடர்லிங்க் பல கணக்குகளைப் போடச் சொன்னார். அத்தனை கணக்குகளையும் முஹம்மது மிகச் சரியாகப் போட்டது. ஒரு நம்பரின் ஸ்குயர் ரூட்டை கேட்ட போது குதிரை அதைப் போட மறுத்தது. பின்னால் தான் அது ஸ்குயர் ரூட் போடுவதற்கான  சரியான எண் இல்லை  என்பதை மேடர்லிங்க் புரிந்து கொண்டார்.

சோதனைகள் மிக்க கவனமுடன் நடத்தப்பட்டன. யாரேனும் சிக்னல் தருகிறார்களா என்ற சந்தேகத்தை சில விஞ்ஞானிகள் கிளப்பினர். உடனே டெலிபோன் மூலம் எண்கள் குதிரைகளுக்குத் தரப்பட்டன. ஹெட் போனை குதிரைகளின் காதில் மாட்டி விட்டனர். எண்கள் உரக்கச் சொல்லப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. சில சமயம் ப்ளாக்போர்டில் எண்கள் எழுதப்பட்டு கணக்குகள் எழுதப்பட்டன. சில சமயம் எண்களை குதிரைகளின் முதுகில் எழுதிக் காட்டினர்.

அத்தனை சோதனைகளிலும் குதிரைகள் தேறின!

ஆனால் ஆறு மாதங்கள் கற்ற பின்னர் அதற்கு மேல் ஒரு முன்னேற்றமும் அவைகளுக்கு ஏற்படவில்லை.

டாக்டர் எடிங்கர், ஃப்ராங்க்பர்ட் நகரைச் சேர்ந்த பிரபல நியுராலஜிஸ்டான டாக்டர் ஹெச் க்ராமர் மற்றும் ஸ்டட்கார்ட் நகரைச் சேர்ந்த டாக்டர் ஹெச். ஈ. ஜைக்லர் மற்றும் பேசெலி நகரைச் சேர்ந்த டாக்டர் பால் சாராஸிஸ் ஆகியோர் இந்த சோதனைகளை நிகழ்த்தி ‘கணக்குப் போடும் குதிரைகள் ஒரு மாபெரும் அற்புதம்’ என்று நற்சான்றிதழைத் தந்தனர்!

க்ரால் ஒரு குட்டி யானையையும் பயிற்றுவிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சோம்பேறி யானை எதையும் கற்க மறுத்து விட்டது.

இன்று வரை விஞ்ஞான உலகம் எல்பர்ஃபெல்ட் குதிரைகள் எப்படிக் கற்றுக் கொண்டன என்ற புதிரை விடுவிக்கவில்லை!

விஞ்ஞானம் விளக்க முடியாத ஏராளமான புதிர்களுள் கணக்குப் போடும் குதிரைகளும் ஒன்று!

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

பிரபல இரசாயன இயல் விஞ்ஞானியான ஹெர்மன் ஃபிஷர் (1852-1959) தூக்க வியாதிக்கு வெரோனல் என்ற மருந்தைக் கண்டு பிடித்து 1902 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.

ஒரு முறை அவர் பிரபல நாவலாசிரியரான ஹெர்மன் சுடர்மானைச் (Hermanna sudarmann) சந்தித்தார்.

சுடர்மான் ஃபிஷரைக் கிண்டல் செய்யும் விதமாக, உங்கள் வெரோனலைச் சாப்பிடக் கூட வேண்டாம். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு தூக்கம் வந்து விடுகிறது” என்றார்.

உடனே ஃபிஷர் பதிலடி கொடுத்தார் இப்படி:” அடடா! என்ன ஒற்றுமை பாருங்கள்! உங்கள் நாவல்கள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். அதைப் பார்த்தாலேயே போதும், நல்ல தூக்கம் வந்து விடுகிறது!’

இருவரும் நகைத்தனர்! எழுத்தாளருக்கு விஞ்ஞானி சோடையா, என்ன?

******

 

What can a Cock teach you? (Post 2335)

cock1

Compiled by London swaminathan
Date: 16 November 2015
POST No. 2335
Time uploaded in London :– 21-45
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Sanskrit is a beautiful language. It has at least some couplets on every subject in the world. Here are two couplets about Cocks and Books.

Lessons from Cocks (Kukkutat Jnatavyaani )

Yuddham = Fighting

Praatarutthanam = Early rising

Bhojanam = Sharing food with relatives

Striiraksanam = Protecting females

Yuddham cha praatarutthaanam bhojanam Saha bandhubih
Striya maapadgathaam rakseschatuh sikseta kukkutaath

Subasita ratna bhandaagaaram 162.403

 

Books 2

Protection of Books (Pustaka Rasksanam)

The following four things will damage a book. So those who want to protect books.

Taila = oil
Jala = water

Sithila bandhah = improper binding
Murkhahastadaana = giving to an ignorant person

Tailaadrakshet jalaadrakshed sithila bandhanaat
Muurkahaste na daatavyamidam vadati pustakam

–Subham–

சமாதி என்றால் என்ன? சிவனிடம் பார்வதி கேட்ட கேள்வி! (கட்டுரை எண்: 2334)

samadhi

Compiled  by London swaminathan

Date: 16 November 2015

POST No. 2334

Time uploaded in London :– 9-49 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல்:-

பார்வதி: நாதா! அடிக்கடி என்னை கயிலாயத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறீர்கள். சுடுகாட்டுக்குச் சென்று சாம்பலைப் பூசியும் ஆனந்தமாக இருக்கிறீர்கள். எனக்குப் பிரிவு துயர் தாங்கவில்லை. என் மனதை சாந்தப்படுத்த எனக்கும் தியானம், சமாதி நிலை முதலியவற்றை கற்றுத் தரக்கூடாதா?

சிவன்: அன்பே! ஆருயிரே! நீ இல்லாமல் இவ்வுலகம் இயங்கமுடியாதே. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. வா, உனக்குக் கற்றுத் தருகிறேன். இதோ இப்படி பத்மாசனத்தில் அமர். கண்களை மூடு. தியானத்தைத் துவங்கு. மனதை உள்முகமாகத் திருப்பு.

என்ன தெரிகிறது?

பார்வதி: உங்கள் உருவம்தான் தெரிகிறது.

சிவன்: அதையும் தாண்டிச் செல். இப்போது என்ன தெரிகிறது?

பார்: மிகப் பெரிய ஜோதி (ஒளி) தெரிகிறது.

சிவன்: நல்லது.இன்னும் மேலே செல். என்ன காண்கிறாய்?

பார்: ஓம்கார நாதம் என் காதில் ஒலிக்கிறது.

சிவன்: அந்த நாதத்தையும் தாண்டிச் செல்வாயாக! இப்போது என்ன அனுபவம் ஏற்படுகிறது?

பார்: ! ! ! ! !

சிவனுடைய கடைசி கேள்விகு பார்வதி பதிலே சொல்லவில்லை. அவள் பிரம்மத்தில் (கடவுளிடம்) ஐக்கியமாகிவிட்டாள். அங்கே கேட்பவரும் இல்லை, கேள்வியும் இல்லை. காண்பவருமில்லை, காணப்படும் பொருளுமில்லை.எல்லாம் பிரம்மாண்டசக்தியில், மூலமுதற் பொருளில் கரைந்து விட்டது. மாறுதலற்ற, உருவமற்ற ஒரே பொருள்தான் அங்கே உண்டு.

திடீரென பார்வதியின் சன்னமான, ஆனந்தமயமான குரல் ஒலித்தது.

அஹம் பிரம்மாஸ்மி

நானே பிரம்மம் (இறைவன்)!

இதையே அருணகிரிநாதர் சும்ம இருப்பதே சுகமென்பார். சும்மா இரு! சொல்  அற! என்பார்.

இது வட கேரள காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி ராமதாஸ் சொன்ன கதை! மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன். இது தொடர்பாக நான் முன்னர் எழுதிய நான்கு கதைகளை இதுவரை படித்திராவிடில் தொடருங்கள்………….

Deepak-Osho

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 , தேதி ஏப்ரல் 1, 2014.

கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:

நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.

யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.

RK

நான்கு சுவையான கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.

கதை 1:–

ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

ice1

கதை 2:

புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

கதை 3:-

ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

ice2

கதை 4:

நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

-சுபம்-

கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்! (POST No. 2333)

co metre

Radio Talk written by S NAGARAJAN

Date: 16 November 2015

POST No. 2333

Time uploaded in London :– 9- 31 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

carbon-monoxide-alarm-199357

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.;part 9 on 15th nov.

 

வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.

அபாயகரமான இந்த வாயு சுவாசத்தின் போது உள்ளே சென்றால் தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினைவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம்,மார்பு வலி, நினைவற்று கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

CarbonMonoxideDetectorBG_hero_image

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதாக இந்த வாயுவினால் வீட்டிலும் வெளியிலும் பாதிக்கப்படுவதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.

சமையலுக்காக வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்டவ்வுகள் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்தாத ஸ்டவ்வுகளாக இருப்பது அவசியம்.

வீட்டில் கார் காரேஜில் நின்ற நிலையிலேயே வெகு நேரம் கார் எஞ்சினை இயக்காமல் இருக்க வேண்டும். காரின் எஞ்சின்களை கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றாத தரக்கட்டுப்பாடு நிலையில் உருவாக்கப்பட்டதா என்று சோதித்து கார்களை தெரிவு செய்ய வேண்டும்.

சிகரட்டை புகைக்கும் ஒருவர் தனக்குக் கெடுதலைச் செய்து கொள்வதோடு அருகில் உள்ள மற்றவருக்கும் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்துவதன் மூலம் கேடு விளைவிக்கிறார். ஒரு பாக்கட் சிகரட்டை புகைக்கும் ஒருவருக்கு கார்பன் மானாக்ஸைடின் அளவு இருபது பார்ட்ஸ் பர் மில்லியன் (0 parts per million)என்ற அபாய அளவில் இருக்கிறது.கார்பன் மானாக்ஸைடு நுரையீரல் வழியே ரத்தத்தை அடைந்து ஹீமோகுளோபினுடன் கலக்கிறது. உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் ரத்தத்தின் திறனைக் குறைக்கிறது. கார்பன் மானாக்ஸைடின் அளவு ஒருவரின் ரத்தத்தில் அதிகமாகும் போது அவரது ரத்தம் ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் திறனில் குறைவு படுகிறது. நாளாக நாளாக இதய வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை உருவாக்குகிறது.

ஆகவே சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கும் வாகனப் புகை வெளியேற்றத்தைத் தடுப்பதும், வீட்டிலும் வெளியிலும் புகை பிடிப்பதால் ஏற்படும் கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுப்பதும் வளி மண்டலத்தைச் சுத்தமாக்க உதவும் வழிகளாகும்.

கார், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்துவோம். புகை பிடிப்பவரிடம் கார்பன் மானாக்ஸைடு தீமைகளைக் கூறி அவரைக் காப்பாற்றும் செயலையும் செய்ய ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் முயல வேண்டும். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலுக்கும், இல்லச் சூழலுக்கும் எதிரியான கார்பன்மானாக்ஸைடு நச்சுப் புகையைத் தவிர்ப்போம்; வாழ்வை வளமாக்குவோம்!

To be continued……………………………..