பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

plasticproducts

Article Written by S NAGARAJAN

Date: 6 November 2015

Post No:2305

Time uploaded in London :– 8-51  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

  1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

Yuenkong-ltd-plastic-injection-material

பிளாஸ்டிக் பொருள்களினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம். சுமார் 250 டன்கள் வரை இந்திய நகரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் ஏற்படுகிறது என்பது மலைக்க வைக்கும் ஒரு உண்மை. இவற்றில் 50 விழுக்காடு பிளாஸ்டிக் பைகள் என்பதை நாம் உணர்ந்தால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் நமது பொறுப்பு எத்தகையது என்பதை அறிய முடியும்.

பிளாஸ்டிக் பைகள் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை மட்காது அப்படியே இருக்கும் என்பதால் இது ஆயிரம் வருடம் நீடிக்கும் அபாயம் என்று கூறி விடலாம். கிழிந்த துணிகளும் காகிதங்களும் வெறும் ஐந்தே மாதங்களில் மட்கி விடும் போது குழந்தைகளுக்காக நாம் பயன்படுத்தும் டயபர்கள் 500 முதல் 800 வருடங்கள் வரை மட்காது என்பதையும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அழியவே அழியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

மறு சுழற்சிக்கு உட்படும் பிளாஸ்டிக் பொருள்கள் வெறும் 7 சதவிகிதம் தான் என்பதால் இது பெரிய மாற்றத்தை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்தி விட முடியாது என்பதையும் உணரலாம்.

இந்தப் பெரும் அபாயத்திற்கு ஒரே தீர்வு பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்ப்பது தான்!

இதற்கு முன் உதாரணமாக கன்யாகுமரி மாவட்டம் திகழ்கிறது. அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன் வந்து கடைகளுக்கு துணிப்பைகளையும் சணல் பைகளையும் கொண்டு சென்று தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அறவே குறைந்து சுற்றுப்புறச் சூழலில் அற்புதமான பெரும் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.

நிலத்தில் மட்டுமின்றி நீரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் கழிவாக தூக்கி எறியப்படுகின்றன. கடலில் மிதக்கும் குப்பைகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் தான்! இவற்றை உணவுப் பொருள் என நினைத்து உண்ணும் ஜெல்லி மீன்கள் உள்ளிட்ட மீன்களும், ஆமைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து படுகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு செய்தி!

சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக்கை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.கடைகளுக்கு துணிப்பை அல்லது சணல் பையை நிச்சயம் கொண்டு செல்வேன் என்று உறுதி பூண வேண்டும். இந்த நல்ல பழக்கத்தை நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லி இதை அவர்கள் மேற்கொள்ளுமாறு செய்தால் வருங்கால சந்ததியினர்க்கு வளமான பூமியை விட்டுச் செல்லும் நன்மையைச் செய்தவர்கள் ஆவோம்!

to be continued……………………..

பாகற்காயின் தீர்த்த யாத்திரை: ஒரு சுவையான சம்பவம்!

ashta vinayak

அஷ்ட சித்தி விநாயக ஸ்தலங்கள், மஹாராஷ்டிரம்.

Article Written by London swaminathan

Date: 6 November 2015

Post No:2304

Time uploaded in London :– 6-12  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?

கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?

ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. (5-99-2 அப்பர் தேவாரம்)

புனித யாத்திரை போவது அவசியம்தான். ஆனால் அதை அர்த்தமில்லாத சடங்காகவோ, சுற்றுலாவாகவோ நடத்தக் கூடாது. காசி, கயிலாயம், பத்ரிநாத், கேதார்நாத், திருப்பதி, சபரிமலை, கன்யாகுமரி என்று யாத்திரை போவோரை நினைத்து அப்பர் பாடிய தேவாரத்தை மேலே கண்டோம். துகாராம் சுவாமிகளின் கதை ஒன்றைக் காண்போம்.

நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம், சமர்த்த ராமதாஸ் என்போர் மகாராஷ்டிர பூமியை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த பெரியோர்களாவர்.

இவர்களில் ஒருவரான துகாராம் செய்வித்த “பாகற்காய் யாத்திரை” கதையைக் கேளுங்கள். ஒரு முறை கிராம மக்கள் எல்லோரும் தீர்த்த யாத்திரை செய்ய முடிவு செய்தனர். துக்காராம் சுவாமிகளிடம் சென்று அவரும் வரவேண்டுமென்று வேண்டினர். அவர் தான் வரமுடியாதென்றும் ஆனால் தன் கொடுக்கும் பாகற்காய்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் நீராடும்போது அவைகளையும் குளிப்பாட்டி, கோவில்களுக்குச் செல்கையில் பாகற்காய்களையும் தரிசினம் செய்விக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.

கிராம மக்கள் ஆகையால் ஏன், எதற்காக என்று கேட்காமல் அப்படியே பாகற்காய்களை அவரிடம் பெற்று  தாங்கள் சென்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர்; புனித நீராடச் செய்தனர். கடவுளரை தரிசினம் செய்யும் போதெல்லாம் அதையும் சந்நிதியில் வைத்தனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் யாத்திரை முடிந்தது. எல்லோரும் பரம திருப்தியுடன் ஊருக்குத் திரும்பி துகாராம் சுவாமிகளின் காலில் விழுந்து நம்ஸ்கரித்துவிட்டு பாகற்காய்களையும் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் சொன்னார்:

bitter gourd

நீங்கள் எல்லோரும் நான் சொன்னபடி செய்து பாகற்காய்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் விருந்து தர விரும்புகிறேன். வருகின்ற வெள்ளிக் கிழமை எல்லோரும் என்னுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள் என்றார்.

அனைவரும் அறுசுவை விருந்துக்கு ஆசைப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தனர். வடை, பாயசம், அப்பளம், பொறியலுடன் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அப்பொழுது துகாராம் சுவாமிகள், யாத்திரைக்குப் போன பாகற்காயையும் பொறியலாகச் செய்து அனைவர்க்கும் இது பிரசாதம் என்று பரிமாறினார். அனைவரும் அதை வாயில் வைத்த அடுத்த கனமே “மகா கசப்பு” என்று முகம் சுழித்தனர்.

துகாராம் சுவாமிகள், வியப்புடன், கசக்கிறதா? என்ன அதிசயம்? எத்தனை புனிதத் தலங்களுக்கு எடுத்துச் சென்றீர்கள்! எத்தனை புனித நீர் நிலைகளில்  நீராட்டினீர்கள்! இன்னும் அதன் பிறவிக்குணமான கசப்பு மாறவில்லையா? என்று வியந்தார். எல்லோருக்கும் சுவாமிகளின் உட்கருத்து விளங்கியது. பின்னர் சொன்னார்: உள்ளன்போடும் தூய்மையோடும் இறைவனை நினைத்துக் கொண்டு செய்வதே தீர்த்த யாத்திரை. அது உல்லாசப் பயணம் இல்லை. மனதில் மாற்றமில்லாமல் செய்யும் யாத்திரை பாகற்காய் யாத்திரை போன கதை போலத்தான் என்றார்.

—சுவாமி ராமதாஸ் சொன்ன கதை

12 jyotirlinga

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை

பசுவினிடமுள்ள பாலானது, வாஸ்தவத்தில் அதன் சரீர முழுவதிலும் ரத்த ரூபமாய் பரவியுள்ளது என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதற்கு அதன் முலைக் காம்புகளைப் பிடித்துத்தான் கறக்க வேண்டும் அதுபோல ஈசுவரன் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காண முடியாது. பூர்வ பக்தர்களுடைய குண விசேஷம் நிரம்பிய புண்யஸ்தலங்களாகிய கோவில்களில்தான் அவன் சுலபமாய்த் தென்படுகிறான்.

வயிறு நிறைய புல்லைத் தின்ற ஒரு பசு ஓரிடத்தில் சாந்தமாகப் படுத்துக்கொண்டு அசைபோடுவதைப் போல, தீர்த்த யாத்திரைக்கு நீ போய் வந்தால், அந்தந்த திவ்ய ஸ்தலத்தில் உன் மனத்தில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அவற்றிடையே ஆழ்ந்து போக வேண்டும். அவ்வாறின்றி அங்கிருந்து வந்ததும், அவ்வெண்ணங்கள் உன் மனத்தைவிட்டு அகன்று போகும்படி, நீ உலக விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளக்கூடாது

பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.

கங்கையில் குளிப்பதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமென்றால், கங்கை நதியில் வசிக்கும் மீன்களெல்லாம் மோட்சத்துக்குப் போய்விடுமே!

–ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி.

Hiring and Firing Anecdotes

Youre-fired

Article Written by London swaminathan

Date: 5 November 2015

Post No:2303

Time uploaded in London :– 11-39 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Demand for Typists (During World War)

So great has been the demand for typists in the many war bureaus of Washington, that the legend has come to existence that the following test is now the standard by which applicants for such positions are hired:

The girl is shown into a room containing three objects: a washing machine, a typewriter and a machine gun; if she can identify the typewriter, she is hired.

Mark Twain: Idle and Fool!

Mark Twain was always impressed by the story of an industrious boy who became a millionaire. One of the things which remained in his mind was the fact that the boy had gotten his big chance by being noticed by a big business man while in the act of picking up a pin from the sidewalk.

When Mark Twain went to look for a job, he deliberately went to the street in front of an office window and began to pick up some pins which he had surreptiously strewn about. After a while he did succeed in attracting the attention of one of the men in the office. He came out into the street and, instead of the expected praise at such industry, Twain was astonished to hear the man say, “Here you, haven’t you anything better to do than pick up pins in the street? You must be an utterly idle and worthless fool.”

Xxx

Authority !!

In Tamil there is a proverb that says, “If you give power/authority to a scorpion it keeps on stinging.”

The Irish foreman on the construction job was new to his post of dignity. One of his first acts was discharge of one of his erstwhile fellow-workers. Asked why he had fired the man, he said, “I fired him not because I had anything against him, but I had the authority.”

Xxx

hired

Little Work!

A personnel manager found himself confronted with a real problem. He had explained to the applicant that he could not place him because the firm was overstaffed. “That is alright,” said the job seeker. “The little bit of work I would do wouldn’t be noticed.”

–Subham–

லண்டனில் எல்லோருக்கும் 13 கிலோ தங்கம் கிடைக்கும்!

IMG_8016

Article Written by London swaminathan

Date: 5 November 2015

Post No:2302

Time uploaded in London :– 9-20 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7982

லண்டனுக்கு வருவோர் அதிர்ஷ்ட சாலிகள்! லட்சுமி கடாக்ஷம் நிறைந்தவர்கள்!. தங்கக் கட்டி கிடைக்கும்! அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல! 13 கிலோ தங்கம், அதாவது 13,000 கிராம் தங்கம்! தொடலாம், எடுக்கலாம், தூக்கலாம். ஆனால் வீட்டுக்கு மட்டும் கொண்டு செல்ல முடியாது! ஏன்?

லண்டனில் த்ரெட்நீடில் தெருவில் இங்கிலாந்து வங்கியின் காட்சியகம் (Bank of England Museum in Thread needle Street, London) உள்ளது. அங்கு ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் 13 கிலோ தங்கக் கட்டியை வைத்துள்ளனர் அதன் கீழே ஒரு கை நுழையும் அளவுக்கு ஓட்டையும் போட்டு வைத்துள்ளனர். எல்லோரும் அதைத் தூக்கிப் பார்க்கலாம். நானும் முயன்றேன். ஒரு கையால் தூக்குவது கடினம்தாம். இவ்வளவுக்கும் அந்தக் கட்டி முக்கால் அடி நீளம் கூட இல்லை.

IMG_7992 IMG_7996

இதன் விலை என்ன?

இந்திய மார்க்கெட்டில் ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை

ரூபாய் 2600. அப்படியானால் 13,000 கிராம் x ரூ 2600 = ???

நீங்களே பெருக்கிக் கொள்ளுங்கள்!! இது உங்களுக்கு இன்றைய வீட்டுப் பாடம் (ஹோம் ஒர்க்).

மத்திய லண்டனில் பாங்க் ஸ்டேஷன் அருகில் இந்த மியூசியம் இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் காப்பகத்தில் டன் கணக்கில் தங்கக் கட்டிகள் இருக்கின்றன. நமக்கு மாதிரிக்காக ஒரு சிறிய கட்டியை மேலே வைத்தூள்ளனர்.

இந்த மியூசியத்துக்கு வருவோருக்கு, குறிப்பாக வணிகவியல், வங்கிகள் பற்றிப் படிப்போருக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். பள்ளி மாணவர்கள், விளையாட்டு மூலம் தெரிந்துகொள்ள பணவீக்கக் கருவி ஒன்று வைத்திருக்கிறார்கள். அதை நெம்புகோல் போல அழுத்தினால் பணவீக்கம் மேலே செல்லும். அருகிலேயே, பணவீக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இங்கிலாந்து வங்கி அதை இரண்டு சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்துவது எப்படி? என்று பல பெரிய போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

IMG_7991

இங்கிலாந்து வங்கி, இந்தியாவின் ரிசர்வ் பாங்கு போன்றது. 400 ஆண்டுகளுக்கு முன் வங்கி தோன்றியதிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி, மாற்றங்கள், கரன்ஸி, நாணயம் அச்சிடுவது எப்படி? என்பனவற்றை விளக்கி வீடியோ ஆடியோ காட்சிகள் அமைத்துள்ளனர்.

சிறுவர்கள் விளையாடுவதற்காக பல கரன்ஸி துண்டுகளை வெட்டி இணைக்கும் புதிர் வைத்து இருக்கிறார்கள். நான் திங்கட் கிழமை அங்கே போன போது எடுத்த புகைப்படங்களைப் பாருங்கள்.

பாலிமர் (Polymer Currency) கரன்ஸி வருகிறது!!

காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து சேதம் அடைவதால் உலகில் முப்பதுக்கும் மேலான நாடுகள் பாலிமர் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துப் பயன்படுத்துகின்றனர். இனி பிரிட்டனிலும் பாலிமர் நோட்டுகள் அச்சடிக்கப் போகிறார்கள். கொஞ்ச காலத்தில் காகித கரன்ஸி நோட்டுகள் அரிய பொருள் ஆகி விடும்.

இந்த மியூசியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த தினசரி உபயோக நாணயங்கள், ஆண்டு தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவாக வெளியிடப்படும் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களை விலைக்கும் விற்கிறார்கள். காசுள்ளவர்கள் வாங்கலாம்.

ஆனால் மியூசியத்தைப் பார்க்க கட்டணம் இல்லை. 13 கிலோ தங்கக் கட்டியைத் தொடவும் தூக்கவும் கட்டணம் இல்லை. அந்த ‘த்ரில்’ ஒன்றே போதுமே. லண்டனுக்கு வந்தால் கட்டாயம் பாருங்கள்.

IMG_7962

இந்தியாவில் உள்ள வங்கி மியூசியங்களிலும் இப்படிப் பல உத்திகளைக் கையாண்டால் மக்களின் பொது அறிவு மிகும்!

இங்கிலாந்து வங்கியில் லெட்சுமி!

பிரிட்டனின் செல்வச் செழிப்புக்கு என்ன காரணம்?

நம்முடைய கோஹினூர் வைரம் போன்ற பல அபூர்வ, அதிர்ஷ்டகரமான வைரங்களையும், செல்வம் கொடுக்கும் பல மர்ம சிலைகளையும் பிரிட்டிஷ்காரகள் வைத்திருக்கின்றனர். பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் பொம்மை போலத் தோன்றும். ஆனால் அதன் ரஹசியங்களைத் தக்கோரிடம் அறிந்து இதை வைத்துள்ளனர். இங்கிலாந்து வங்கி மியூசியத்தில் லெட்சுமியின் சிலை கிரேக்க பாணியில் இருக்கிறது. தான்ய லெட்சுமியை, கிரேக்கர்கள் செரிஸ் (Ceres= Sri) என்பர். ஸ்ரீ = திரு என்னும் லெட்சுமியின் பெயரே இப்படி செரி என்று மறுவியுள்ளது. நமது அருகிலுள்ள ஸ்ரீலங்காவில் கூட ஸ்ரீ என்பதை ‘சிரி’ என்பர். சிரிமாவோ பண்டாரநாயகெ (நாயக) என்பர்.

இந்த மியூசியத்தில் ஆடியோ, வீடியோ காட்சிகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். நான் போன போது பிரான்ஸ், ஜெர்மனியிருந்து வந்த பள்ளி மாணவ, மாணவியர் — பல கருவிகளை இயக்கி பல விஷயங்களைக் கற்பதைப் பார்த்தேன். 400 ஆண்டுகளுக்கு   முன் லண்டன் எப்படி இருந்தது, வங்கி எப்படி துவங்கியது போன்றவை பொம்மை உருவில் காட்டப்பட்டுள்ளன. ஹெண்டல் என்ற இசை மேதை ஒரு வங்கிக் கணக்கர் என்ற வியப்பான செய்தியும் படம் மூலம் அறிந்தேன்.

IMG_7984 IMG_7985

மாதத்துக்கு ஒரு வியாழக்கிழமையன்று வங்கியின் கவர்னர்கள் கூட்டம் நடைபெறும். அதை மக்கள் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து நிற்பர். காரணம் என்னவெனில் வங்கியின் வட்டி விகிதம் உயருமா, குறையுமா, அதேயளவு நீடிக்குமா என்று அக்கூட்டம் முடிவு செய்யும். வட்டி விகிதம் கூடினால், ஒவ்வொரு குடும்பமும் மாதம்தோறும் கட்டும் வீட்டுக் கடன் வட்டி விகிதமும் உயரும். இந்த முடிவு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது என்ற விவரங்களையும் மியூசியத்தில்  அறியலாம். சின்ன மியூசியம்தான். ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டால் பக்கத்திலுள்ள கில்ட் ஹால் ஆர்ட் காலரி (இலவசம்),  சாமுவேல் ஜான்சன் மியூசியம் (கட்டணம் உண்டு) ஆகியவற்றையும் பார்க்கலாம். அருகில் லண்டன் மியூசியமும் உளது.

IMG_7951 IMG_7976 IMG_8007 IMG_8013

மாணவர்கள் விளையாடுவதற்காக பண வீக்கக் கருவி, வெட்டி ஒட்டும் புதிரகள் முதலியன வைத்துள்ளனர்.

–சுபம்–

கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

jeffrey book

Article Written by S NAGARAJAN

Date: 5 November 2015

Post No:2301

Time uploaded in London :–  8-06 AM

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

 

.நாகராஜன்

 

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் நீங்கள் இளமையோடு இருக்க முடியும். ஆனால் மனமுதிர்ச்சி இன்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்” –ஆக்டன் நாஷ்

 

திருமணமாக இருக்கும் கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் இலவச ஆலோசனைடிப்ஸ் தர முன் வந்துள்ளது.

 

 

    இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே இளம் பெண்களின் எதிர்பார்ப்புகளும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

 

     இளமையாக, மிக அழகாக இருக்க வேண்டும், உயரமோ அதிகமாக இருக்க வேண்டும். வருடாந்திர வருமானம் பல லகரமாக இருக்க வேண்டும், வீடு மற்றும் இதர சொத்துகள் தன் பெயரிலேயே இருக்கும் டாகுமெண்டைக் காண்பிக்க வேண்டும், முக்கியமாக லக்கேஜுகள் (மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட மூட்டைகள்) எதுவும் இருக்கக் கூடாது.. இத்யாதி, இத்யாதி நிபந்தனைகளை கன்னியர்கள் விதிக்கும் போது பெண்ணின் வீடியோ புரொஃபைலை பார்த்தால் தான் தங்களால் முடிவே எடுக்க முடியும் என்கின்றனர் இளைஞர்கள்!

 

 1139-54aec479aaeec

 

      எல்லா பத்திரிக்கைகளும், இணையதளங்களும், ஜோதிட மற்றும் மேட்ச்மேகிங் நிலையங்களும் அலறுகின்றனஇந்த கண்டிஷன்களைப் பார்த்து. “எங்கள் வருட வருமானம் எவ்வளவு தெரியுமா? நாங்கள் எவ்வளவு படித்திருக்கிறோம் தெரியுமா? இப்போதே எங்கள் பெயரிலேயே த்ரீ பெட்ரூம் அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறோமேஎன்று புன்னகைக்கின்றனர், இளம் கன்னியர்கள்!! இளைஞர்களும் சளைக்கவில்லை, அவர்கள் இவ்வளவு எதிர்பார்க்கும்போது நாங்களும் அவர்களுடன் சாட் செய்து தானே முடிவெடுக்க முடியும் என்கின்றனர்.

 

 

      இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்களை உளவியலாளர் ஜெஃப்ரி ஜென்ஸன் ஆர்னெட் (Jeffrey Jensen Arnett) அழகாகத் தெரிவிக்கிறார்:” ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பெண்கள் வேலை பார்க்க அவ்வளவாகச் செல்லவில்லை; பெரும் பணமும் வருமானமாகச் சம்பாதிக்கவில்லை; இன்றைய நிலையோ மாறுபட்ட ஒன்று. பொருளாதார மற்றும் உத்யோக அந்தஸ்து ரீதியாகவும் இளம் பெண்கள் இன்று மிக உயர்நிலையை அடைந்து விட்டனர். ஆகவே அவர்கள் மனைவி, தாய் என்ற நிலைகளோடு தனக்கென ஒரு அடையாளம் இருப்பதை விரும்புகின்றனர். இந்த அடையாளம் தேடும் முயற்சியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றனஎன்கிறார் அவர்!

Picture of Jeffrey Jensen Arnett

 

 jeefrey profile

      இவர்கள் இப்படி எதிர்பார்த்து தங்களின் திருமணத்தைத் தள்ளிக் கொண்டே போவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது விஞ்ஞானிகள் களத்தில் இறங்கி ஆய்வு நடத்தி முடிவுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

 

 

     தன்னுடையவனாக ஒருவனை ஏற்றுக் கொள்வதற்கு மிஸ்டர் பெர்ஃபெக்டை (Mr Perfect) எதிர்பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வின் முடிவு ஒன்று வலியுறுத்துகிறது. மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி பரிணாம தத்துவத்தின் படியும் கூட இது முடியாத ஒன்று என்பது தெரிய வருகிறது!

 

 

        ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் ஒரு கணினி மாடலை உருவாக்கினர். இந்த மாடல் அமைப்பு ஆயிரம் தலைமுறைகள் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. அபாயமுள்ள சூதாட்டம் போன்றவற்றில் அதிக ஆதாயம் தரும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இந்த அமைப்பை தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்யும்படி பணித்தனர்!

 

 

       ஆரம்பகால மனிதர்களை இந்த கணினி மூலமாகத் தங்களின் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும்படி செய்து பார்த்து அவர்கள் மிக மிக அருமையான துணைவன் அல்லது துணைவியைத் தேர்ந்தெடுத்தனரா என்பதே கேள்வி!

 

 

     ஆய்வை நடத்திய, மைக்ரோபயாலஜிஸ்டான கிறிஸ் அடாமி ((Chris Adami), “குறைந்த எதிர்பார்ப்புள்ள பார்ட்னரை அவர்கள் மணந்து கொள்ளலாம் அல்லது காத்திருந்துபெர்ஃபெக்டான பார்ட்னரைத்”  தேர்ந்தெடுக்கலாம் என்ற படி மாடல் அமைப்பு உருவாக்கப்பட்டது. மிஸ்டர் அல்லது மிஸ் பெர்ஃபெக்டை

 

விரும்பியோருக்கு அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே முடியவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவருகிறதுஎன்கிறார்.

 

 

     வாழ்க்கையில் ஒரே ஒரு முறை எடுக்கும் முக்கிய முடிவு தனது கணவரை அல்லது மனைவியைத் தேர்ந்தெடுப்பது. இதில் எந்த சூழ்நிலைகள் அவர்களின் முடிவைப் பாதிக்கிறது என்பதையும் பார்த்து விட்டோம் என்கிறார் அடாமி.

 

      ஒரு ஆணோ, பெண்ணோ எந்த சூழலில் அவர்கள் வளர்க்கப்பட்டார்கள் என்பது முடிவை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறதாம்! 150 பேருக்கு மேல் உள்ள சமுகச் சூழலில் வளர்க்கப்பட்டோர் உடனடி முடிவை மேற்கொள்கின்றனர். மிகச் சிறிய குழுவினருடன் இருப்பவர்கள் மிக மிக அதிக எதிர்பார்ப்புகளைக் கொள்கின்றனர். இவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழியில்லாமல் போய்விடுகிறது.

 

 

      ஆகவே இந்த ஆய்வின் முடிவின் படி இளம் பெண்கள் மிஸ்டர் ஓகேயை உடனடியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களின் குழந்தை பாக்கியம் உள்ளிட அம்சங்கள் சிறந்து விளங்கும். மிஸ்டர் பெர்ஃபெக்ட் தான் வேண்டுமெனில் அப்படிப்பட்டவர் கிடைக்க வாய்ப்பு மிகவும் அரிதே! இதே முடிவு

 

இளைஞர்களுக்கும் பொருந்தும். அவர்களும் மிஸ் பெர்பெக்டை எதிர்பார்க்காமல் மிஸ் ஓகேக்கு ஓகே சொல்ல வேண்டும் என்கிறது ஆய்வின் முடிவு.

 naga katturai

      இந்த சமயத்தில் பழைய கால ஜோக் ஒன்றை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நினைத்துப் பார்த்துச் சற்று சிந்திக்கலாம்.

 

ஒரு இளைஞன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். ஏன் என்று அனைவரும் கேட்ட போது, ‘தான் மிஸ் பெர்ஃபெக்டை மட்டுமே எதிர்பார்ப்பதாகக்கூறினான்.

 

ஒரு நாள், அவன் சந்தோஷத்தால் துள்ளிக் குதிப்பதைக் கண்ட அவனது நண்பர்கள் சந்தோஷத்திற்கான காரணத்தைக் கேட்டனர்.

மிஸ் பெர்ஃபெக்டைக் கண்டு விட்டேன்!” என்றான் அவன்.

மறுநாள் அவன் மிகவும் சோகமாக இருப்பதைக் கண்ட அவனது நண்பர்கள், அவனிடம்,”என்ன, இன்னுமா மிஸ் பெர்ஃபெக்டிடம் பேசவில்லை!” என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்னான்:”நேற்றே பார்த்துப் பேசி விட்டேன். ஆனால் அவள் மிஸ்டர் பெர்ஃபெக்டை எதிர்பார்க்கிறாளாம்!”

இந்த ஜோக் இன்று நடைமுறை ஆகி விடக்கூடாது!

 

 

உரிய இளம் வயதில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றன அனைத்து அற நூல்களும் !இதையே இன்று அறிவியலும் வற்புறுத்துகிறது!

 

newton

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் ஐஸக் நியூட்டன் தன் ஆராய்ச்சியில் மூழ்கி விட்டால் அவருக்கு வெளி உலகமோ அல்லது தன்னைப் பற்றிய நினைவோ சிறிதும் இருக்காது. இதை விளக்கும் சம்பவங்களுள் ஒன்று இது.

 

 

ஒருநாள் டாக்டர் ஸ்டக்லி (Doctor Stukely)  என்ற நண்பர் ஒருவர் ஐஸக் நியூட்டனைப் பார்க்க முன்கூட்டியே அவரிடம் நேரம் நிர்ணயித்து விட்டு குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க வந்தார். நியூட்டனின் வேலையாள் அவர் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பதாகவும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அது இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிடும் நேரமானதால் அந்த வேலைக்காரர் ஒரு சிக்கனைத் தயார் செய்து அவர் டேபிளின் மீது வைத்து அதை ஒரு மூடியால் மூடி வைத்தார். ஒரு மணி நேரம் ஆனது. நியூட்டன் வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டாக்டர் ஸ்டக்லி  சிக்கனை எடுத்துச் சாப்பிட்டார். காலி பாத்திரத்தின் மீது மூடியைக் கவிழ்த்து வைத்தார். வேலையாளிடம் இன்னொரு சிக்கனைத் தயார் செய்யுமாறும் கூறி விட்டார். அது தயாராவதற்குள் நியூட்டன் டைனிங் டேபிளுக்கு வந்து விட்டார்.

ஸ்டக்லியை நோக்கி, “ தாமதம் ஆகி விட்டது. மன்னியுங்கள்.  களைப்பாக இருக்கிறது. ஒரே நிமிடத்தில் உணவை முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லியவாறே மூடியைத் திறந்தார். தட்டில் ஒன்றுமே இல்லை. ஸ்டக்லியைப் பார்த்த நியூட்டன், “நான் எப்படிப்பட்ட ஆள் பாருங்கள்!  சாப்பிட்டு விட்டேன் என்பதையே மறந்துபோய் மறுபடியும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்து விட்டேன்!” என்று புன்னகை செய்தவாறே கூறினார்.

 

நடந்ததை ஸ்டக்லி சொன்னது தனிக் கதை!

 

ஆராய்ச்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் நியூட்டன்!

*******

 

5 Funny Stories behind Tamil Proverbs!

gold necklace

Article Written by London swaminathan

Date: 4 November 2015

Post No:2300

Time uploaded in London :– 13-42

(Thanks  for the pictures) 

(கட்டுரையின் இறுதியில் பழமொழிகளை தமிழில் கொடுத்துள்ளேன்)

1).The pestle which the mother-in-law used and her gold necklace should go to the eldest daughter –in- law.

A certain daughter in law hated her mother in law, and one day being alone with her in the house struck her on the breast with the pestle, so that she fell down speechless. The other women were called in, and the mother in law pointed to the wicked daughter in law, to the pestle (rice pounder) and to her own breast. The women asked the murderess for an explanation of these signs, and she said: Being the eldest of you all, I am to have the pestle and the golden necklace on her breast!

2).Weep for the whole at once and be done!

A bridegroom was found to be lame. During the marriage ceremony many of the close relatives of the bride wept on account of the defect in him. Seeing this, the bridegroom threw off his clothes, exposed all his other defects and shouted, “Now, weep for all the defects at one go”.

This proverb is used by someone who knows all about a third person’s faults to another person who is gradually finding them out.

IMG_4564

3).Prasava vairagya, Smasana Vairagya, Purana vairagya

Three types of temporary vows are ridiculed by true ascetics. The renunciation (vow) of sexual intercourse is made by a woman when suffering the pains of child birth; it is called Prasava Vairagya. The renunciation (vow) of worldly things made after studying the sacred books is called Purana vairagya. The renunciation of worldly things made after seeing the corpses burned in the crematorium is called Smasana vairagya. All the three vows are just reactions to some sufferings and so not true renunciation. When the pain or suffering fades away, they resume their normal activities!

pestle mortar

4).“Like handing over a pestle to another person at Srirangam”

Srirangam is a famous Vaishnavite shrine town in Tamil Nadu. At Srirangam women pound rice for the temple for wages. Those who so must work the whole day and there is a man to se that the work is done. If one of these women, hearing her children crying, persuades a by-stander or a passer-by to take her place for a while to enable her to look after her children, and does not return. The substitute is obliged to stay in her place till the sun sets. The proverb is therefore said of one who undertakes responsibilities which involve more than he expected.

razor

5).Work like a Tirupati Barber!

Tiruppati is the holiest Vaishnavite Shrine in South India. Devotees go there and offer their hair to the god. Since thousands of people come to shave off their head at the same time during festival season, the barbers call every one as if they are free of work. When they rush to him, he takes money from every one of them and shave some hair and go to the next place to get more money through more customers. The people who were half shaven could not leave that place, because people would laugh at them seeing the half shaven head.

So this phrase is used to any half finished job, particularly when a person seeks more money.

Proverbs in Tamil:

1.தான் ஆண்ட உலக்கையும், தங்கப் பூஞ்சரடும் தலை மருமகளுக்கு

2.எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே அழுகையாய் அழுதுடுங்க

3.சீரங்கதில் உலக்கை கொடுத்தது போல

4.பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்

5.இது திருப்பதி அம்பட்டன் கதை போல இருக்கு

Source : Tamil Proverbs, year 1897

–Subham–

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

sambadar

ஞான சம்பந்தர் சிலை

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

Research Article Written by London swaminathan

Date: 4 November 2015

Post No:2299

 Time uploaded in London :–  9-32 AM

(Thanks  for the pictures) 

ஞான சம்பந்தர் 16 வயதில் இறைவனடி சேர்ந்தார். அதற்குள் அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்து சைவ வரலாற்றில் அழியா இடம் பெற்றார். அவர் செய்த அற்புதங்களில் ஒன்று ஆண் பனை மரத்தைக் காய்க்க வைத்ததாகும். அதாவது ஆண்மரத்தின் ‘செக்ஸை’ மாற்றியதாகும்! இன்று காலையில் லண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் இதே போன்ற ஒரு அதிசயச் செய்தியை வெளியிட்டுள்ளன.

5000 year old yew tree

படம்:– யூ மரம்

பெர்த்ஷைர் வட்டத்தில் போர்டிங்கல் கிராமத்தில் ஒரு சர்ச்சில் ஒரு யூ மரம் இருக்கிறது. அது ஆண் மரம்; அது திடீரெனப் பழுக்கத் தொடங்கியது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகர தாவரவியல் வல்லுநர்கள், அந்த மரத்தில் காய்த்த பழங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துச் சென்றனர்

5000 ஆண்டுகளாக உயிரோடு வளர்ந்து வரும் புகழ் பெற்ற யூ மரம் ஆண் மரம் என்பது தாவரவியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே. இவ்வாண்டு அதில் பழங்கள் தோன்றின. அதாவது ஆண் மரம், பெண் மரமாக மாறிவிட்டது! இது எப்படி என்பது தாவரவியல் அறிஞர்களுக்குப் புலப்படவில்லை. மிகவும் கீழ்நிலையிலுள்ள சில உயிரினங்களில் ஆண்—பெண் மாற்றம் ஏற்படுவதுண்டு. 5000 வயதுடைய மரம் இப்படி ‘செக்ஸ்’ மாற்றம் அடைந்தது அதிசயத்திலும் அதிசயமே என்று தாவரவியல் அறிஞர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்துள்ளனர்.

ஞான சம்பந்தர் செய்த அற்புதத்தை சந்தேகித்தவர்களுக்கு இப்பொழுது பித்தம் தெளிந்துவிடும்.

palmyra-palm-fruit

சம்பந்தர் செய்த அற்புதம்!

சம்பந்தர் ஊர் ஊராக ஆலய தரிசனம் செய்துகொண்டு போகையில் திருவோத்தூர் கோவிலுக்கும் போனார். அங்கே ஒரு சிவனடியார் வருத்ததுடன் இருக்கக்கண்டார். காரணத்தை வினவிய போது அந்த பக்தர் சொன்னார்:–

“நான் நிறைய பனை மரங்களை வளர்த்தேன். அதன் காய்களை விற்று வரும் வருவாயில் கோவில் பணிகளைச் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லி வந்தேன். ஆனால் எல்லாப் பனை மரங்களும் ஆண் மரங்களாக இருப்பதால் காயே காய்க்கவில்லை. இந்த ஊரிலுள்ள நாத்தீகர்கள் என்னை எள்ளி நகையாடி வருகின்றனர். உன்னுடைய சிவனிடம் போய்க்கேள்; எல்லாவற்றையும் பெண் மரங்களாக்கி காய்க வைத்துவிடுவார் – என்று கிண்டல் செய்கின்றனர்” என்று சொல்லி அழுதார். உடனே சம்பந்தர் பத்து பாடல்கள் அடங்கிய ஒரு பதிகத்தைப் பாடினார். அடுத கணமே பனை மரம் காய்த்துக் குலுங்கியது!!

இப்படி ஆண் மரங்கள், பெண் மரங்களாக மாற முடியுமா? என்பதற்கு இப்பொழுது மேற்கூறிய யூ மரச் செய்தி பதில் கொடுத்துவிட்டது. ஒரே வித்தியாசம். சம்பந்தர் அதை நொடிப் பொழுதில் செய்தார். பிரிட்டனில் அது சில ஆயிரம் ஆண்டுகளில் நடந்துள்ளது.

தமிழ் முனிவர்கள் காலத்தை வென்றவர்கள்; காலம் கடந்தவர்கள்; த்ரி கால ஞானிகள். அவர்கள் நினைத்தால் காலத்தை மாற்றவும் முடியும், நிறுத்தவும் முடியும்; காலத்தைக் கடந்து வெளியே நின்று முக்காலத்தையும் காணவும் முடியும். இவைகளை சுந்தரர், அப்பர், சம்பந்தர் செய்த அற்புதங்களில் காணலாம்.

முன்னரே, இரண்டு தமிழ் முனிவர்களின் காலப் பயணம் குறித்துக் கட்டுரை எழுதி  இருக்கிறேன். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறிய சம்பவங்களையும் கொடுத்து இருக்கிறேன். பகவத் கீதையில் கிருஷ்ணன் காட்டும் விஸ்வரூப தரிசனம், இப்பொழுது விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் கருந்துளை ( BLACK HOLE பிளாக் ஹோல்) போன்றதாகும். கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவில் விஸ்வரூப தரிசனம் என்ன என்பது நமக்கு மேலும் தெள்ளிதின்  விளங்கும்!!!

-சுபம்-

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -10

Kaliya-Mardana-

Article Written by S NAGARAJAN

Date: 4 November 2015

Post No:2298

Time uploaded in London :–  8-35 AM

(Thanks  for the pictures) 

பாரதி இயல்

ச.நாகராஜன்

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் பாரதியார் எப்படி மிகப் பெரும் கவியாக அங்கீகரிக்கப்பட்டார், அதற்கு பாரதி ஆர்வலர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி மகத்தான முயற்சிகளை எடுத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டும் மிக முக்கியமான நூலும் இது தான்.

சுமார் 195 பக்கங்கள் உள்ள இந்த நூல் முதலில் 1937இல் வெளிவந்தது. நல்ல வேளையாக 2007இல் இது மீளவும் பதிப்பிக்கப்பட்டது.

நூலின் பின்னணி குறித்து 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நூல் விவரிக்கிறது:

.ரா.வின் கடிதம்

அதில் சில பகுதிகள்:

“1935 டிசம்பர் மாதம். சென்னையில் மணிக்கொடிக் காரியாலயத்தில் தங்கி இருந்த சமயம். இரவில் ராமையா, கி.ரா. புதுமைப்பித்தன், ஆர்யா, சிட்டி ஆகியோரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். சிட்டி ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார். வ.ரா.வின் கடிதம்.இலங்கையிலிருந்து எழுதி இருந்தார். “வீரகேசரி” ஆசிரியராக அப்போது அங்கே இருந்தார். பத்திரிகையில் ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)யும் தானும் எழுதிக் கொண்ட பகிரங்க கடிதப் போக்குவரத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

1936 இல் தினமணி பத்திரிகை, ‘பாரதி மலர்’ என்று ஒரு அநுபந்தம் வெளியிட்டிருந்தது. அதில் முதல் கட்டுரை ‘நெல்லை நேசன்’ என்ற புனை பெயரால் பி.ஶ்ரீ. ஆசார்யா எழுதிய ‘வீர முரசு’ என்பது. அதில் கண்டிருந்த இரண்டு விஷயங்கள் பற்றித் தான் விவகாரம். ஒன்று, பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம், அல்லவா? என்பது. இரண்டாவது பாரதி ஒரு நல்ல கவி. மகா கவி அல்லர் என்பது.

kalki stamp

கல்கியின் விமரிசனம்

நெல்லை நேசனின் கட்டுரையைப் படித்த ஒருவர் ஆனந்த விகடனுக்குக் கடிதம் எழுத, அதில் ஆசிரியர் குறிப்பாக கல்கி தன் பங்கிற்கு இப்படி எழுதி இருந்தார்:

“ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் தாகூரையும் காட்டிலும் பாரதியார் உயர்ந்தவர். அவர்களது கவிதைகள் எல்லாம் சேர்ந்து பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று யாராவது வெளியிட்டிருந்தால் (இப்படி எழுதியவர் வ.ரா. அவரைக் கல்கி தாக்கும் வகையில் இப்படி எழுதி இருந்தார்.) அவருக்கு இலக்கியம், கவிதை ஆகியவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது வெளிப்படை. அவர் நிரக்ஷரகுக்ஷி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று சந்தேகிப்பதற்கு இடம் உண்டு. அவர் ஷெல்லியையும் தாகூரையும் படித்திருப்பார் என்பது நம்பத்தக்கதல்ல. ஒரு வேளை படித்திருந்தாலும் ஒரு வரி கூட அர்த்தமாகாமலே படித்திருக்க வேண்டும். அவர் பாரதியின் கவிதையைப் படித்து ரசித்தார் என்பதும் சந்தேகத்துக்கு இடமாகும். தேசாபிமானமும் பாஷாபிமானமும் பகுத்தறிவை மறைத்து விட இடம் கொடுக்காது. பாரதியை ஷெல்லியுடன் ஒப்பிடலாம். ஆனால் ஷேக்ஸ்பியருடனும் தாகூருடனும் ஒப்பிடுதல் கூட சரியல்ல. வால்மீகி, திருவள்வக்ளுவர், காளிதாசர், கம்பர், ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரு முறையே தோன்றி உலகத்துக்கே பொதுவாய் விளங்கும் கவிகள். ஷெல்லி, பாரதி போன்றவர்கள் அந்தந்த தேசத்திற்கே சிறப்பாக உரியவர்கள். இலக்கிய ஆராய்ச்சியும் கவிதை உணர்வும் சொற்ப அளவில் உள்ளவர்களுக்குக் கூட இவ்விஷயத்தில் சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லை.”

கல்கியின் மேற்படி குறிப்புக்கு வ.ரா. சுதேசமித்திரன் பத்திரிகையில் விரிவாக எதிர் பதில் எழுதினார்.

இப்படிப்பட்ட சூடான கவிதா விமரிசனப் போட்டியைத் தொடர்ந்து பாரதியாரின் இடத்தை உலக மகாகவிகளுள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமும் காலத்தின் கட்டாயமும் ஏற்பட்டது.

அதன் விளைவாக எழுந்ததே இந்த கண்ணன் என் கவி என்ற நூல்.

globe stamp

பாரதியாரின் உலக பரிமாணம்

ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் கவிதைகளை எடுத்து அலசி ஆராய்ந்து பாரதியாரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இந்த நூல் எழுந்தது.

பல்வேறு ஒப்பீடுகளில் நூல் குறிப்பிடும் ஒரு ஒப்பீடு இது:

“ஷெல்லி, பைரன் முதலியவர்களைப் போல ஜெர்மனியில் கதேக்குப் பிறகு தோன்றிய ஹென்ரிக் ஹைன் என்ற சிறந்த சுதந்திரக் கவிஞர் தமது அபாரமான கவிதா திறமையைக் காட்டி தம் நாட்டாருக்குச் சில ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு உபயோகித்தார். சமீப காலத்தில் ஹைன் திறமைக்கு இணையான கவிஞன் ஜெர்மனியில் தோன்றியதில்லை. ஜெர்மானிய இலக்கியத்தில் மிகவும் எளிதான செய்யுள் முறையையே ஹைன் பெரும்பாலும் உபயோகித்தார். இந்த முறையை மிகவும் லகுவாய் கையாண்டு இதன் மூலம் மகத்தான உணர்ச்சிகளை வெளியிட்டார். பாரதியார் பழைய யாப்பு முறைகளைப் புறக்கணித்து தைரியமாய் எளிதான புது முறையில் பிரம்மாண்டமான கருத்துக்களை அமைத்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது. பாரதி சொந்த இடத்தை விட்டு பிரெஞ்சு நிலமாகிய புதுவையில் வசிக்க நேரிட்டது, ஹைன் பல வருஷங்களுக்கு முன்னால் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையின் பயனாகத் தன் சொந்த நாடாகிய ஜெர்மனியை விட்டு பிரெஞ்சு ஸ்தலமாகிய பாரிஸ் நகரத்தில் வசித்ததும் சிலருக்கு பிரமாத வியப்பாகத் தோன்றாது. ஆனால், கவிதைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளையும் கலை உணர்ச்சிகளையும் வெளியிட்டது, இருவருக்கும் பெரிய கவிகளின் லட்சணமாக அமைந்திருந்தது.”

இந்த நூல் கண்ணம்மா பாடல்களை அலசி ஆராய்கிறது; பாரதியை நிகரற்ற உலக மகாகவிகள் வரிசையில் சேர்க்கிறது.

இப்போது எண்ணிப் பார்த்து வியப்படைகிறோம். பண்டிதர்களில் ஒரு சாராரும், படித்தவர்களின் ஒரு சாராரும், பத்திரிகைத் துறையினரில் ஒரு சாராரும், அரசியல் துறையில் ஒரு சாராரும் பாரதியாரை மூடி வைக்கப் பார்த்ததையும் அவரை அதிலிருந்து தக்க சான்றுகளைக் காட்டி பாரதி ஆர்வலர்கள் அவரை உலக மகாகவியாக மீட்டதையும் வரலாறு சொல்கிறது.

கு.ப.ரா. சிட்டி, வ.ரா போன்ற எண்ணற்றோர் இந்த பாரதி யாகத்தில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்துக் கொண்டதால் அல்லவா உலக மகா கவியாக பாரதி ஒளிர்ந்தான். இந்த ஆரம்பகால பாரதி பக்தர்களுக்கு நம் சிரம் தாழ்த்திய அஞ்சலியைச் செய்து இந்த நூலை பல முறை படித்து மகிழலாம்!

**********

Sex Change: Science agrees with Saint Sambandhar

5000 year old yew tree

5000 year old Yew Tree (from The Guradian News paper)

Research Article Written by London swaminathan

Date: 3 November 2015

Post No:2297

Time uploaded in London :–  15-31

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

What a Tamil saint reported about sex change of trees 1300 years ago is confirmed by scientists today.

London newspapers have published an interesting news time this morning which featured a sex change by a Yew tree. Scientists have reported, probably for the first time, such a change. But we already know that certain lower organisms and a few fishes change sex. Here a 5000 year old Yew male tree became a female tree and started giving berries/fruits.

Here is the London Newspaper Story:–

The Fortingall Yew in Perthshire has always been recorded as male but has started sprouting berries – something only female yew trees do.

The UK’s oldest tree, thought to be up to 5,000 years old, is undergoing a “sex change”.

Records have always noted the Fortingall Yew in Perthshire as a male tree but it has recently started sprouting berries – something only female yew trees do.

Experts at the Royal Botanic Garden in Edinburgh spotted three berries on a high branch of the tree, located in the churchyard of the village of Fortingall, Perthshire, and have now taken them for analysis as part of a conservation project.

Dr Max Coleman, of the Royal Botanic Garden, said yew trees have been known to change sex before but discovering the process on “such a special tree is what makes this a special story”.

The Fortingall Yew is believed to be between 3,000 and 5,000 years old, and is one of the oldest living organisms in Europe.

It has survived the ravages of time and the attention of eager tourists, who in previous centuries took clippings from it as souvenirs.

The trunk changed shape many years ago and has lost its centre and one side, and the tree is now protected by a small wall.

Coleman said: “Yew trees are male or female usually and it is pretty easy to spot which is which in autumn – males have tiny things that produce pollen and females have bright red berries from autumn into winter.

“This process may have happened before but we know the Fortingall Yew has been classed as male for hundreds of years through records.

palmtree

My comments:

This is what the Boy Wonder of Tamil Nadu did 1300 years ago with a Palmyra tree (please see below). One may wonder how Sambandhar, the miracle boy, did it at once. Saints can alter time, interfere with time and go beyond the time. This I have explained in my previous post:

Time Travel by Two Tamil saints, posted on 14th February 2012.

Following is the Palmyra Tree Miracle Story:

From my old post: — “Tree Miracle and Statue Miracle of a Saivaite Saint”, posted on 4th March 2013

 

Thirugnana Sambandhar was a child prodigy. He started composing poems when he was three years old. We know many other child prodigies from different parts of the world who composed poems. But there is a big difference between Sambandhar and those poets. He composed devotional poems in different metres and genres. Though he did compose them 1300 years ago still they are used by millions of Tamil Hindus. His words had miraculous powers. Whatever he wanted to achieve, he achieved them through his verses. His poems led to a big moral and religious reformation. Above all, though we lost several thousands of his verses, we have more than 4000 of them today.

Hundreds of miracles happened during Sambandhar’s life.

When Sambandhar visited Tiruvothur he saw a devotee crying. The devotee raised some Palmyra trees so that he can use the income for his community service in the Shiva temple. By rare coincidence all the trees were male trees and did not yield fruits. Atheists were mocking at him and teased him asking when his god would yield him fruits. When Sambandhar asked him the reason for his sad face, he told him about the male only Palmyra trees. Later Sambandhar visited the Shiva temple and looked at the Palmyra trees and he sang ten verses in praise of the Lord and said the male trees will yield (Kurumpai Aan Panai Eenum in Tamil). Next minute all the trees bloomed and bore plenty of Palmyra fruits!

palmyra-palm-fruit

Dr R Nagasamy, renowned historian and archaeologist, has quoted the Sanskrit lines from the Upamanyu Bhakta Vilasam giving the same meaning: “Tala: pumamsa: sruthvai they bhavanthu paritha: palai:”

 

Once again it proved that what our scriptures say has scientific background.

—Subham—

மறு பிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!

napoleon

Written  by  S NAGARAJAN

Date: 3 November 2015

Post No:2296

Time uploaded in London :–  8-11 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடர்

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 30-10-2015 இதழில் வெளி வந்த கட்டுரை இது. இந்தத் தொடர் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிறது.

மறு பிறப்பு பற்றிய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தளகர்த்தர்களின் நம்பிக்கை!

 

.நாகராஜன்

வருந்தாதே. நீ இழப்பது இன்னொரு உருவத்தில் வந்து விடும்!” – ரூமி

உலகின் தலை சிறந்த தளகர்த்தர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறுபிறப்பின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர்கள்.

 

நெப்போலியன் தன் படையை வழி நடத்திச் செல்லும் போது படை நடுவில் ஆவேசத்துடன் குதிரையின் மீது எழுந்து நின்று இரு கைகளையும் உயர்த்திநான் சார்லி மாக்னே நான் சார்லி மாக்னேஎன்று உரக்கக் கூவுவானாம். (மாவீரனான சார்லிமாக்னே மேற்கு ஐரோப்பா முழுவதையும் ஒன்று படுத்தியவன். நெப்போலியனுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன்). நெப்போலியனின் ஆவேசத்தைப் பார்க்கும் அவன் படைவீரர்கள் உக்கிரத்துடன் போரிடுவார்களாம்!

 

 

அடுத்து அமெரிக்க ராணுவ தளபதியான திறமைவாய்ந்த ஜார்ஜ் பேட்டன் சரித்திரத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இரண்டாம் உலகப் போரில் அவரது சாகஸ செயல்கள் பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. பேட்டன் என்ற படம் தலையாயது. பேட்டன் தனது ஆறு முந்தைய ஜென்மங்களை வரிசையாகக் கூறுவாராம். நெப்போலியனின் படையில் தான் பணி புரிந்து போர்க்களத்தில் போரில் உயிர் துறந்ததை அவர் கூறியதுண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் தனது மறுபிறப்பு நம்பிக்கையை அவர் வலியுறுத்திக் கூறுவார்.

 

 dante

இத்தாலிய கவிஞனான தாந்தேக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. கவிஞர்கள் டென்னிஸன். ப்ரௌனிங், கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், ப்ளேடோ ஆகியோரும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களே. லியனார்டோ டா வின்ஸி, வால்டேர், வாக்னர், ஹென்றி ஃபோர்ட், எடிஸன், எமர்ஸன், ரஸ்கின், பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் ஆகியோரும் இதில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தவர்கள்.

 

 

எட்கர் கேஸ் 3000 மறுபிறப்பு கேஸ்களை சுட்டிக் காட்டி இருப்பது உலக பிரசித்தமான தொகுப்பு நூலானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேறொரு நாட்டில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கல்லறையைச் சரிபார்ப்பது வரை இவரது முன் ஜென்ம கேஸ்கள் பலராலும் தீவிரமாக ஆராயப்பட்டு சரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டன.

 

தியாஸபி இயக்கம் எனப்படும் பிரம்மஞான சபை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியவுடன் மேடம் ப்ளாவட்ஸ்கி, அன்னிபெஸன்ட் ஆகியோர் மறுபிறப்பிற்கான காரணங்களை விரிவாக விளக்கி உலகெங்கும் பேசினர். அன்னிபெஸண்ட் எழுதியரீ இன்கார்னேஷன்என்ற 96 பக்கம் கொண்ட சிறு நூலில் மறுபிறப்பிற்கான ஆட்சேபங்களாக ஐந்தையும் அது உண்டு என்பதற்கு 14 காரணங்களையும் தெளிவாக விளக்குகிறார். நூறு குருடர்களின் ஆயிரம் வார்த்தைகளை விட நேரில் பார்த்து ஒன்றை விளக்கும் பார்வையுள்ளவனின் ஒரு வார்த்தை பொருள் பொதிந்தது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

 Adolf_Hitler_42_Pfennig_stamp

ஹிட்லரின் ஆராய்ச்சிகள் எப்போதுமே சற்று ஆழமானவையாகவும் விசித்திரமானவையாகவும் இருக்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஹிட்லர் என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்தார் என்பதை அறிவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் டி லஸ்டிக் (Dr Robert T Lustig). இவர் எலக்ட்ரோ பயாலஜியில் பெரும் நிபுணர். இவர் ஜெர்மனி சென்று ஹிட்லர் செய்த ஆய்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார். அவற்றில் முக்கியமான சுவையான ஆய்வு ஃப்ராங்க்பர்ட்டில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் டைரக்டரான டாக்டர் பி ராஜேஸ்வ்ஸ்கி (Dr B Rajewski) செய்த ஆராய்ச்சிகளே.

 

 

ராஜேஸ்வ்ஸ்கி மூளை, நரம்பு மண்டலம் மூலமாக செய்திகளை அனுப்புகிறது என்ற பாரம்பரிய கொள்கையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ரேடியோ ஒலிபரப்பு போல நேரடியாக செய்திகள் மூளையிலிருந்து உடல் அங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கான சோதனைச்சாலை ஆதாரங்களையும் அவர் வைத்திருந்தார். இந்த முடிவுகள் வியக்கத்தக்க ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் பற்றிய தீர்க்கமான உண்மைகளைத் தந்திருக்கும். ஆனால் உலக யுத்த முடிவில் அரைகுறையாக கைவிடப்பட்ட ஹிட்லரின் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளுள் இதுவும் ஒன்றானது.

 

ஹிந்து மத யோகிகளை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் பக்கம் மறு ஜென்மத்திற்கென்றே ஒதுக்க வேண்டும். அமெரிக்காவை மிகவும் கவர்ந்த யோகாதா சத் சங்கத்தை நிறுவிய பரமஹம்ஸ யோகானந்தா தனதுஆயோபயாக்ராபி ஆஃப் யோகி’ (Autobiography of a Yogi) நூலில் தரும் சம்பவம் சுவையானது.

 

அவருக்குத் தெரிந்த ஒரு பையன் சீக்கிரமாகவே இறக்கப் போகிறான் என அவருக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பையன் பெயர் காசி. அவன் யோகானந்தரிடம் நான் அடுத்த பிறவி எடுக்கும் போது எங்கு பிறந்திருந்தாலும் என்னைக் கண்டுபிடித்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டான்சில நாட்கள் கழித்து பொல்லாத விதிப்படி அவனது மரணம் சம்பவித்தது. சில காலம் சென்ற பின்னர், யோக முறை மூலம் ஆவி உலகில் சஞ்சரித்த யோகானந்தர், காசி மறு பிறவி அடைந்து விட்டானா என்று பார்த்தார். அவரது உள்ளுணர்வு அவன் சீக்கிரமே பிறக்கப் போகிறான் என்று கூறியது.

 yogananda

 

ஆனால் எங்குஎப்போது பிறக்கப் போகிறான்?

ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தா தெரு ஒன்றின் வழியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது உணர்வில்நான் காசி, இங்கு இருக்கிறேன்என்று தெளிவான குரல் ஒலித்தது.

 

காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல தன் சகாக்களுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்தார் யோகானந்தர். அந்த வீட்டு எஜமானிக்கு பிரசவ சமயம். யோகானந்தர் காசி பிறக்கும் இடம் இது தான் என நிச்சயித்தார். வீட்டு எஜமானன், எஜமானியிடம் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று ஆரம்பித்து அங்க அடையாளங்களைத் தெளிவாகச் சொன்னார். அவன் ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அதில் செல்வான் என்பதையும் கூறி விட்டுச் சென்றார். அதன் படியே நடந்தது. பிறந்த குழந்தை காசியின் மறு தோற்றம் போல இருக்க, சில காலம் சென்ற பிறகு அவன் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானான்.

 

 

இது போன்ற சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. புனரபி ஜனனம் புனரபி மரணம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு) என்ற ஆதி சங்கரின் வாக்கும் நவீன விஞ்ஞானிகளின் வாக்கும் ஒத்துப் போகும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.

மனிதப் பிறவியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என வாழ்க்கையில் சில நிமிடங்களேனும் சிந்திக்க வைக்க விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பெரும் தூண்டுகோலாக விளங்குகின்றன!

 

 Benjamin-Franklin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரும் சிறந்த ராஜ தந்திரியும் விஞ்ஞானியும் மாபெரும் கண்டுபிடிப்பாளருமான பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் (1706-1790) மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 84 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது 22ஆம் வயதிலேயே தனது கல்லறையில் பொறிக்க வேண்டிய வாசகத்தை இப்படி எழுதி வைத்தார்:

 

The Body of B. Franklin, Printer                                                 

Like the Cover of an old book                                                         

Its contents worn out,                                                            

And Stripped of its Lettering and Gilding,                                           

Lies here, Food for Worms,                                                              

But the Work shall not be wholly lost:                                                     

  For it will, as he believed,                                                            

Appear once more                                                               

In a new and more elegant Edition                                                           

Corrected by the Author

 

 

இதன் சுருக்கமான பொருள் இது தான்: பிரிண்டர் பெஞ்சமின் ஃப்ராக்ளினின் உடல் பழைய புத்தகத்தின் அட்டை போல உள்ளடக்கம் தேய்ந்து, எழுத்துகள் உரிக்கப்பட்டு மெருகு தேய்ந்து புழுக்களுக்கு உணவாக இங்கே இருக்கிறது. ஆனால் அது முழுவதுமாக தொலைந்து போகாது; ஏனெனில் அவர் நம்புவது போலவே அது மீண்டும் தோன்றும்அதை எழுதியவரால் சரி செய்யப்பட்டு ஒரு புதிய இன்னும் அதிக எழிலுடன் கூடிய பதிப்பாகத் தோன்றும்.

 

இறுதி வரை அவருக்கு மறுபிறப்பு பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.

*********