ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் எங்கே போனார்?- Part 1 (Post No.5250)

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 13-52  (British Summer Time)

 

Post No. 5250

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்?-1 (Post No.5250)

 

ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.

 

இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .

 

ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.

 

மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:–

 

கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது?

 

1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான்.

 

2.முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி)- தமஸா நதி

 

முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.

 

3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா–

அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.

 

4.சூர்ய குண்டம்

ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.

 

இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.

 

 

  1. 5-வது மண்டகப்படி- வேதஸ்ருதி நதி

தற்போதைய அஷோக் நகர் அருகில் நதி யைக் கடந்தனர்.

  1. கோமதி நதி

அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.

 

ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!

(ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

என்ற திரைப் படப் பாடல் என் காதில் ஒலிக்கிறது ( இதை எழுதும் போது)

 

 

7.பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர்

ஸ்யந்திகா (சாய் ஆறு) — ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.

 

8.அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர் – தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.

 

9.பாலுக்னி நதி –

நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.

 

இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.

 

10.சிருங்கிபேர புரம்

‘குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன்  பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணிவகுக்கிறான்.

11.ஸீதா குண்டம்

கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.

 

12.சிவன் கோவில்

ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள்.

 

( இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)

 

13.ராம ஜோய்தா

சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.

 

14.பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு

 

ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.

 

15.ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)

 

ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்

 

16.. பதினாறாவது மண்டகப்படி – சங்கம்

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை– யமுனை- ஸரஸ்வதி — நதி கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.

17.ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)

இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்

 

பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர்

  1. சிவ் மந்திர்/ சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்)

கானகம் வாழ் ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு

  1. ஸீதா ரஸோய் (ஜன் வன்)

ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.

 

TO BE CONTINUED……………………………….

ALL PROSTITUTES CAN WEAR JEWELS- ENGLISH KING’S ORDER (Post No.5249)

 

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 9-35 am  (British Summer Time)

 

Post No. 5249

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

VANITY ANECDOTES continued

 

MY DAD WANTS TO BE A BRIDEGROOM IN EVERY WEDDING!

It was one of his own sons who so aptly characterised Theodore Roosevelt, saying,
“Father always had to be the centre of attention. When he went to a wedding, he wanted to be the bride groom; and when he went to a funeral, he wanted to be the corpse”.

Xxxx

DISRAELI’S TRICK

There is a good story told of the way Disraeli got rid of an unfortunate applicant for a baronetcy (the rank of a baronet) upon whom, for many reasons, it was impossible to confer the honour.
“You know I cannot give you a baronetcy, said Disraeli, but you can tell your friends I offered you a baronetcy and that you refused it. That is far better.”

Xxxx

GENERAL WOULD HAVE DIED YEARS AGO!– LINCOLN

In an interview between President Lincoln and Petroleum V. Nasby, the name came up of a recently deceased politician of Illinois whose merit was blemished by great vanity. His funeral was very largely attended.
“If General……….
Had known how big a funeral he would have had, said Mr Lincoln, he would have died years ago”.

Xxx

YOU ARE WONDERFUL!

Oscar Levant was known for his self-esteem. Occasionally he would tell this story on himself. “Once I was saying to an old friend how remarkable was our congeniality since we had practically nothing in common.
Oh, but we have, replied the friend, I think you are wonderful and you agree with me.”

Xxx

HENRY IV EXEMPTED PROS.
Henry IV enacted some sumptuary laws, prohibiting the use of gold and jewels in dress; but they were for some time ineffectual. He passed a supplement to them which completely answered his purpose. In this last he exempted from the prohibitions of the former after one month, all prostitutes and pickpockets. Next day there was not a jewel nor golden ornament to be seen.

Xxx

I AM D’ANNUNZIO! DON’T YOU KNOW?

In London, D Annunzio, the Italian poet asked a policeman to direct him to his destination and remarked,
“I am D Annunzio! The bobby did not understand. Where upon the genius burst forth into oaths and commanded his secretary to present that ignorant lout with copies of all his works”.
Xxx SUBHAM XXX

நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2 (Post No.5248)

Written by S NAGARAJAN

 

Date: 23 JULY 2018

 

Time uploaded in London –   7-26  AM (British Summer Time)

 

Post No. 5248

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 20-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபதாம்) கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2

ச.நாகராஜன்

 

செயற்கை அறிவால் என்ன பயன் என்று கேட்போருக்கு ஒரு சுவையான செய்தி உண்டு!

 

நடிலஸ் (Nautilus) என்ற செயற்கை அறிவூட்டப்பட்ட சூப்பர் கணினி தான் ஒஸாமா பின் லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. உண்மை. அதற்குள் பத்து கோடி செய்திகளும் கட்டுரைகளும் பதிவு செய்யப்பட்டன. அது ஆராய ஆரம்பித்து ஒஸாமா பின் லேடன் ஒளிந்திருக்கும் இடத்தை 125 மைல் தூரத்திற்குள்ளாக இருப்பதாக அறிவித்தது.

 

 

லேரி பிர்ன்பாம் (Larry Birnbaum)என்ற பேராசிரியர் ஒரு கட்டுரையை கணினியில் செலுத்தினார். அது படித்தது. பின்னர் ஏராளமான செய்திகளை அதனுள் செலுத்த அது தானே ஒரு கட்டுரையை எழுதியது. கதைகளையும் அது எழுத ஆரம்பித்தது. ஆக எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இனி பலத்த போட்டி உண்டு.

இன்னொரு அச்சுறுத்தும் செய்தி! ரொபாட்டுகள் தன்னைத் தானே ரிப்பேர் செய்து புதுப்பித்துக் கொள்ளும். ஆம், உண்மை. ஆறு கால்கள் கொண்ட ஒரு ரொபாட்டின் இரு கால்கள் பழுதடைந்தன. அது பார்த்தது, தன்னைத் தானே ஆராய ஆரம்பித்தது. 13000 இயக்கங்களை அலசி ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து தனது இரு கால்களை இயங்க வைக்கும் முறையைக் கண்டுபிடித்து “ஆரோக்கியமானது. எதிர்காலத்தில் அப்படியானால் சாவே இல்லாத சிரஞ்சீவி கம்ப்யூட்டர்கள் உருவாகிவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறதல்லவா?

 

இனி இன்னும் ஒரு செய்தி இருக்கிறது, அதை ஏன் விட்டு வைக்க வேண்டும். ரொபாட்டுகளுடன் மனிதன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியும் என்கிறார் ரொபாட் இயல் நிபுணர்  ஒருவர்.

 

ஆக இவற்றை உயரத் தூக்கி வைக்கவும் முடியாது, ஒதுக்கி வைக்கவும் முடியாது என்பதே இன்றைய நிலை!

 

 

நடிலஸ் (Nautilus)

 

சிந்திக்கும் இயந்திரங்களைப் பற்றி என்ன சிந்திப்பது என்ற கேள்வியை எழுப்பும் வில்லியம் பவுண்ட்ஸ்டோன் கணினி நிபுணரான எட்ஜெர் டிஸ்க்ஸ்ட்ரா கூறியிருப்பதை மேற்கோளாகக் காட்டுகிறார்:

 

 

“இயந்திரங்கள் சிந்திக்குமா என்ற கேள்வி, சப்மரீன்கள் நீந்துமா என்று கேள்வி கேட்பதைப் போல ஆகும். ஒரு திமிங்கிலமும் ஒரு சப்மரீனும் நீரில் வேகமாக முன்னேறும். ஆனால் அவை இரண்டும் அடிப்படையிலேயே வேறு விதமாக அதைச் செய்கின்றன. சிந்திப்பதும் கணினிசெய்வதும் ஒரே முடிவைத் தந்தாலும் அவை அதைச் செய்யும் முறை அடிப்படையிலேயே வித்தியாசமானது.

 

இன்னொரு பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரீமேன் டைஸன் இந்தக் கேள்வியே அர்த்தமற்றது என்கிறார். “சிந்திக்கும் இயந்திரங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை அல்லது அவை சமீப காலத்தில் உருவாகக்கூடும் என்பதையும் நான் நம்பவில்லை. அடிக்கடி நான் எண்ணுவது தவறாகப் போகிறது. நான் தவறு என்றால், இந்தக் கேள்வியைப் பற்றிய சிந்தனைகள் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவை. நான் சரி என்றால் இந்தக் கேள்வியே அர்த்தமில்லாது போகிறது.

1965ஆம் ஆண்டிலேயே கணித மேதையான இர்விங் குட், “ அல்ட்ரா இண்டெலிஜென்ட் மெஷின் மனிதன் வடிவமைப்பதை விட இன்னும் அருமையாக நவீன இயந்திரங்களை வடிவமைக்கும். அப்போது மனிதனின் அறிவை அது மிஞ்சி விடும். ஆக அந்த மெஷினே மனிதனின் கடைசி கண்டுபிடிப்பாக அமையும் என்கிறார்.

 

 

மனிதனின் கையை மீறி இயந்திரங்கள் தாங்களே சிந்திக்க ஆரம்பித்து விட்டால்..?

எப்போது செயற்கை அறிவுள்ள இயந்திரங்கள் மனித அறிவை மிஞ்சும். அப்போது நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா?

செயற்கை அறிவு பற்றி ஆராயும் விஞ்ஞானியான மாக்ஸ் டெக்மார்க் இதை பல வகையாகப் பிரிக்கிறார்.

செயற்கை அறிவு மனித அறிவை இன்னும் சில ஆண்டுகளில் மீறி விடும் என்று நம்புவோர் – இப்படிப்பட்டவர் யாரும் இப்போது இல்லை.

 

 

செயற்கை அறிவு  இன்னும் 50 முதல் 100 ஆண்டுகளில் மனித அறிவை மிஞ்சி விடும். அது மனித குலத்திற்கே ஒரு வரபிரசாதமாக அமையும். இப்படி எண்ணுவோர் பலர்.

இதற்கு எதிர்மாறாக எண்ணுவோர் செயற்கை அறிவு இயந்திரங்கள் மோசமானவை என்கின்றனர்.

 

 

“இன்னும் நூறு ஆண்டுகளில் செயற்கை அறிவு வந்து விடும். அவை நல்லதையே செய்ய வேண்டும் என்பதற்கான வேலையை ஆரம்பிப்போம் என்கின்றனர் இன்னும் சிலர்.

கணினிகளிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் தான் வரும்.ஆனால்  மனித மூளையோ வெவ்வேறு விதமாகச் சிந்திக்கும்.கணினி துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளில் செயல்படும். மனித மூளையோ வாய்ப்புக்கேற்றபடி செயல்படும். கணினிகள் குறிப்பிட்ட சூத்திரங்கள் வழியேயும் புரோகிராம் செய்யப்பட்ட வழிமுறையிலும் செயல்படும். ஆனால் மனித மூளையோ மனத்தின் வழியே உள்ளர்த்தத்தைக் கண்டு விதவிதமாக செயல்படும். கணினிகள் கோட் என்ற பாஷை வழியே செயல்படும் போது மனித மூளையோ நியூரான்கள் வழியேயும் ரத்த ஓட்டம், மற்றும் ஹார்மோன்கள் வழியேயும் அபூர்வ வழியில் சிந்திக்கும்.

 

 

ஒரு ஆச்சரியகரமான விஷயம், செயற்கை அறிவு எப்படி செயல்படும் என்பதை நுணுக்கமாக விவரிக்கும் விஞ்ஞானிகள் மனித மூளை எப்படி செயல்படுகிறது என்பதை லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்னும் கண்டுபிடிக்கவில்லை!

மொத்தத்தில் பல அறிஞர்களின் கருத்து செயற்கை அறிவு நம்மை ஆளப்போகும் யுகத்தில், சினிமா, நடனம், நுண்கலைகள் போன்ற நுட்பமான விஷயங்கள் அறவே இருக்காது!,

 

 

மனிதர்கள் செயற்கை அறிவு சாதனங்களுக்கு அடிமையாக ஆகி, அவர்களை எஜமானராகக் கொண்டு செயல்பட வேண்டி வரும், என்பது தான்!

 

இன்னொரு முக்கிய விஷயம், செயற்கை அறிவு இயந்திரங்கள் பெருமளவில் உலகை ஆக்கிரமிக்கும் போது மனிதர்கள் இன்று பார்க்கும் வேலைகளில் 70 சதவிகிதம் இருக்காது! அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

 

 

ஆகவே செயற்கை அறிவை வரவேற்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக வரவேற்பை நடத்த வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஏகோபித்த கருத்தாக அமைகிறது!

செயற்கை அறிவே உனக்கு ஒரு ஜே போட்டு வரவேற்கிறோம் – சற்று ஜாக்கிரதையுடன்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

செயற்கை அறிவு பற்றிய ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர் பிரபல விஞ்ஞானியான மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky 1927-2016)

அவர் அறிமுகப்படுத்திய இரண்டு விதிகள் அனைவராலும் மேற்கோள் காட்டப்படுகின்றன.

 

முதல் விதி: வார்த்தைகள் உங்களது வேலைக்காரர்களாக இருக்க வேண்டும்; உங்கள் எஜமானர்களாக அல்ல! (Words should be your servants, not your masters)

இரண்டாவது விதி: எதையாவது செய்யவெண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அதில் நிலைத்திருங்கள். (Don’t just do something. Stand there)

 

அவரது ஆராய்ச்சிக்கிணங்க அவரது வீட்டிலும் லாபரட்டரியிலும் நூற்றுக்கணக்கான வினோத பொருள்கள் இருக்கும். அவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் உலகெங்கிலுமிருந்து ஆராய்ச்சி உரைகள் வந்தவண்ணம் இருக்கும். டெலிபோனுக்கு அருகில் உள்ள ஒரு மெஷினிலிருந்து விநோதமான ஒலிகள் எழுந்த வண்ணம் இருக்கும். அந்த விநோதமான ஒலிகளை வைத்து தனது சர்க்யூட்டில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வார்! பின்னால் இந்த உத்தியைப் பயன்படுத்தி பல விளையாட்டு பொம்மைகளைச் செய்யும் கம்பெனி ஒன்றை அவர் தொடங்கினார்.

 

அவரது சோதனைச்சாலயோ இன்னும் விநோதமான ஒன்று. பிளாஸ்டிக்கினால் ஆன ரொபாட் சிலை ஒன்று அங்கு இருக்கும்.

 

துணியினால் ஆன செடி ஒன்று தத்ரூபமாக செடி போல இருக்கும். பெரிய கம்ப்யூட்டர் ஒன்று உண்டு. அது அனைத்து வேலைகளையும் செய்யும் – கதவுகளைத் திறக்கும். லிப்டுகளை இயக்கும். அதற்கு இயந்திரக் கைகள் உண்டு! ரொபாட்டுகளை இயக்க ரிமோட் கண்ட்ரோலும் அதற்கு உண்டு! அது செஸ் போட்டியில் வென்றதற்காக அளிக்கப்பட்ட ட்ராபி அதன் மேல் காணப்படும்! 1963இல் புதுப்பிக்கப்பட்ட அவரது லாபரட்டரி ஒன்பது மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான சோதனைக் கூடம்! அவருக்கு உதவியாக ஒன்பது பேராசிரியர்களும் நூறு மாணவர்களும் அங்கு பணியாற்றினர்.

 

இசை கம்போஸ் செய்வது மின்ஸ்கியின் பொழுதுபோக்கு. உயிரியல் மற்றும் கணிதத்தில் மேதையான அவர் செயற்கை அறிவுக்குத் தாவி ஏராளமான கண்டுபிடிப்புகளைத் தந்து ‘செயற்கை அறிவின் தந்தை என்ற செல்லப் பெயரையும் பெற்றார்!

***

 

அரக்கர் தர்ப்பணம்; கம்பன் அதிசய தகவல்! (Post No.5247)

Written by London swaminathan

Date: 22 JULY 2018

 

Time uploaded in London – 16-27  (British Summer Time)

 

Post No. 5247

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அரக்கர்கள் பற்றி கம்பன் பல அதிசய தகவல்களை அள்ளித் தெளிக்கிறான். ராமனின் மண்டை ஓட்டில் தர்ப்பணம் செய்ய ஒரு பெண்மணிக்கு ஆசையாம்!!

 

  1. அரக்கர்கள் தவம் செய்து கடவுள்களிடம் வரம் பெற்றனர்.
  2. அவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

 

இது மார்கஸீய, திராவிட வாதங்களுக்கு வேட்டு வைக்கும் தகவல்கள். இதைக் கம்பன் ஏராளமான பாடல்களில் கோடிட்டுக் காட்டுகிறான்.

 

 

ராமனின் மண்டை ஓடு தேவை!

 

கர தூஷணர்களை ராமன் வதம் செய்தது ராமாயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வந்து விடுகிறது.

 

அவனது மகன் மனைவி பற்றிய தகவல்களை கம்பன் யுத்த காண்டத்தில் உரைக்கிறான். ராவணன் அனுப்பிய நான்கு கமாண்டர்களையும் (படைத் தளபதிகளையும்) ராம லக்ஷ்மணர்கள் தீர்த்துக் கட்டி விடுகின்றனர். எஞ்சிய சில தலைவர்களில்

ஒருவன் கரனின் மகன். அவன் ராவணனிடம் வந்து, என்ன ஐய? என்னை மறந்து விட்டீர்கள்? என் தந்தையைக் கொன்ற இராமனைக் கொன்று பழி தீர்க்கக் காத்து இருக்கிறேன். அது மட்டுமல்ல. ராமனின் கபாலத்தில் கரனுக்குத்  தர்ப்பணம் செய்ய என் அம்மா ஏங்கிக் கொண்டு இருக்கிறாள். அந்தப் பொன்னாளுக்கு காத்து இருக்கிறேன்.

 

ராவணனும் ‘போய் வா, மகனே! போய் வா’ என் று அனுப்புகிறான். முடிவு தெரிந்த விஷயம்தான். தர்ம வீரர்களின் வில்லாற்றல் முன்பு, சில்லறைகள் நிற்க முடியுமா?

இதோ கம்பன் பாடல்:

கரனின் மகன் மகரக் கண்ணன் செப்பியது:-

அருந்துயர்க் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்

பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்

கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்

பருந்தினுக்கு இனிய வேலாய் இன்  அருள் பணித்தி என்றான்

 

-யுத்த காண்டம், மகரக் கண்ணன் வதைப் படலம்

 

பொருள்

என் அன்னை அழுத கண்ணோடு துன்பக் கடலில் உழல்கிறாள்; அவளுடைய கணவனைக் கொன்றவன் (ராமன்)  தலையில் அல்லாமல் வேறு எதிலும் இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய நீர்க்  கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன் என்றாள். அதனால் இதுவரை தாலியைக் கூட கழற்றவில்லை. பருந்துகளுக்கு பிண உணவினைக் கொடுத்து மகிழ்விக்கும் ராவணா! இனிய போருக்குச் செல்ல எனக்கு இப்போதே ஆணை இடு.’

 

கும்பகர்ணனின் தர்ப்பண ஆசை!

 

கும்ப கர்ணனும் விபீஷணனும் சந்த்தித்த போது, ‘அண்ணா, நீயும் ராமன் தரப்புக்கு கட்சி மாறி விடு; அது தர்மக் கட்சி; கட்டாயம் வெல்லும் கட்சி’- என்கிறான்.

அதற்கு கும்பகர்ணன் தந்த மறு மொழியில்,

‘தர்மக் கட்சி; தாமரை போல மலரும் கட்சி; வெல்லும் கட்சி என்பதெலாம் உண்மைதான்; ஸத்யமே வெல்லும். ஆனால் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற தர்மத்தை நீ மறந்தாயோ?  ராவணன் கட்சி தோற்கப் போவதும் உண்மையே; அந்தக் கட்சி படு தோல்வி அடைந்து ராவணன் மட்டும் தனித்து இருப்பதை காண என்னால் முடியாது; அதற்கு முன்னர் நான் யமலோகத்துக்குச் செல்ல ஆசை; எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எல்லோரும் செத்தால் எங்களுக்குத் தர்ப்பணம் செய்ய, நீர்க்கடன் ஒருவன் வேண்டுமே! ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் கட்சியிலேயே இருப்பா யாக! என்கிறான்.

 

இதோ அந்தப் பாடல்:

 

 

ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே

உய்கிலை என்னின் மற்று இவ்  அரக்கராய் உள்ளோம் எல்லாம்

 

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

 

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

பொருள்:

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

 

ஆக இரண்டு பாடல்களும் தரும் செய்தி யாது?

மார்கஸீயங்களும் திராவிடங்களும், ராவணன் ஒரு பெண்பித்தன்; மாற்றான் மனைவி மீது ஆசை கொள்பவன் என்பதால் கட்டாயம் திராவிடனே என்று சொல்வதெல்லாம் தவறு; அவனும் தர்ப்பணம் வேதம், வேள்வியில் நம்பிக்கை உடையவனே; அரக்கர்களின் தபோ பலமே அவர்களுக்கு அரிய பெரிய ஆற்றலை நல்கியது என்பது தெளிவாகிறது.

 

இது மட்டுமல்ல; இந்திர ஜித், ராவணனிடம் சொல்கிறான்:- ‘’அப்பா என்னிடமும் பிரம்மாஸ்திரம் உள்ளது; லக்ஷ்மணனிடமும் உள்ளது ஆகையால் நான் விட்டால் அவனும் விட்டு வானத்தில் மோதிச் சிதறி விடும்; ஆகையால் நான் போய் குகையில் மாபெரும் யாகம் செய்து அவனைத் தோற்கடிக்க வழி செய்கிறேன் என்கிறான். அந்த யாக விஷயத்தைப் பின்னர் காண்போம்.

 

-சுபம்–

OBITUARY COLUMNS BEFORE DEATH!!! (Post No.5246)

Compiled by London swaminathan

Date: 22 JULY 2018

 

Time uploaded in London – 15-12  (British Summer Time)

 

Post No. 5246

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

More Vanity Anecdotes

PT Barnum craved free publicity. When he was near death the ‘Evening Sun’  of New York, asked the great show man’s publicity agent if Barnum would object to having his obituary published before he died. The agent said, ‘the old man will be delighted’.

Next day Barnum read four columns about his own death, and he loved it.

(Phineas Taylor Barnum was an American showman, politician, and businessman remembered for promoting celebrated hoaxes and for founding the Barnum & Bailey Circus-wikipedia)

Xxxxxxxxxxxx

Theodore Roosevelt, at the height of his prominence in American pubilc life, was once approached by a man on the street who tipped his hat and said,
‘Mr Brown, I believe?’
Roosevelt looked at the man and replied bluntly,

‘Sir, if you believe that, you will believe anything’.

Xxx

Oscar Levant is said to have once asked George Gershwin,
Tell me George, if you had it to do all over, would you fall in love with yourself again?

(George Jacob Gershwin (/ˈɡɜːrʃ.wɪn/; September 26, 1898 – July 11, 1937) was an American composer and pianist.[1][2] Gershwin’s compositions spanned both popular and classical genres, and his most popular melodies are widely known. Among his best-known works are the orchestral compositions Rhapsody in Blue (1924) and An American in Paris (1928), as well as the contemporary opera Porgy and Bess (1935).- Wikipedia)

Gershwin observed Oscar Levant, was the happiest man on earth. He was in love with himself and did not have a rival on earth.
Xxx


When Coolidge was governor of Massachusetts he was once host to A visiting English man of some prominence. The latter ostentatiously took a British coin from his pocket, saying,
‘My great great grandfather was made a Lord by the King whose picture you see on this shilling.’
Coolidge laconically produced a nickel.
‘My great great grandfather, he said, was made an angel by the(Red) Indian whose picture you see on this coin’.

Xxx

An English newspaper once published the following bit of gossip

James Mc Neil whistler and Oscar Wilde were seen yesterday in Brighton , talking as usual about themselves.
Whistler sent the paragraph to Wilde with a note saying
‘I wish these reporters would be accurate. If you remember, Oscar, we were talking about me’.
Wilde sent him a telegram saying,
‘It is true, Jimmie, we were talking about you, but I was thinking of myself’

Xxxx


A little fable was formerly current about Theodore Roosevelt. The great man, after his death, was-supposed to-have ascended to heaven. There he bustled about made himself a nuisance by insisting that he be entrusted with some major responsibility. At last wearily the higher powers instructed St. Peter to authorise T.R. to organise and train a celestial choirs to replace the old one, which it was felt had gone to seed. T. R. continued to be a nuisance by the fierce persistence with which he pressed his requisitions.
I must-have 10000 sopranos, he told the bewildered and weary St. Peter And 10000 contraltos, and 10000 tenors
And hurry hurry everything is waiting on you.
Yes said Peter, how about the basses?
Roosevelt fixed him with a scornful glare.
I will sing bass! He bellowed.

Xxxx SUBHAM xxx

பாரதியார் பற்றிய நூல்கள் – 54 (Post No.5245)

 

Written by S NAGARAJAN

 

Date: 22 JULY 2018

 

Time uploaded in London –   9-36  AM (British Summer Time)

 

Post No. 5245

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 54

ப.ஜீவானந்தம் அவர்களின் ‘பாரதி வழி

 

ச.நாகராஜன்

 

நாடறிந்த தோழர் நல்லவர்.ஜீவானந்தம் பாரதியில் தோய்ந்தவர். பாரதியைப் பரப்பியவர். அவரது உரை மற்றும் கட்டுரைகளை பாரதி வழி என்ற நூலாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடட், சென்னை – 98 வெளியிட்டுள்ளது. நான்கு கட்டுரைகள் கொண்ட இந்த நூலின் பக்கங்கள் 128. முதல் பதிப்பு 1964 ஜனவரியில் வெளியானது. ஆறாம் பதிப்பு 1993 மே மாதம் வெளியானது.

1947 அக்டோபர் மாதம் எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவன்று ஜனசக்தி பிரசுராலயம் வெளியிட்ட பாரதி வழி நூலின் முதல் கட்டுரையாக அமைகிறது.தேசிய இயக்கத்தின் சகல அம்சங்களையும் அறிந்தவர்களே பாரதியைப் பற்றி முற்றிலுமாக அறிய முடியும் என்று கூறுகின்ற ஜீவா பாரதியை அறிய வைக்க அனைத்து அம்சங்களையும் இந்தக் கட்டுரையில் அழகுற எடுத்துக் காட்டுகிறார்பாரதியின் பாடல் வரிகளுடன்.

பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டியதன் அவசியத்தையும் இதில் அவர் வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட பலரது வலுவான வேண்டுகோள்களால் தான் பாரதியின் பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

1955ஆம் ஆண்டில் காரைக்குடி கம்பன் விழாவில் கம்பனும் பாரதியும் என்ற தலைப்பில் ஜீவா ஆற்றிய உரை அடுத்த கட்டுரையாக மலர்கிறது.

கம்பனின் பெருமைகளை பாரதியார் சுட்டிக் காட்டிய விதத்தையும் அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தத்தையும் அழகுற விளக்கும் ஜீவா ஏராளமான மேற்கோள்களை கம்பனின் பாடல்களிலிருந்தும் பாரதியின் பாடல்களிலிருந்தும் தருகிறார்.

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று பாரதி கம்பனை மானுடனாகச் சித்தரிப்பது ஏன் என்பதை விளக்கும் ஜீவா சுக்ரீவன் ,வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா என்று பரவசப்பட்டுக் கூறியதை எடுத்துக் காட்டுகிறார்.

இராமனின் மாண்பையும் புகழையும் ஜீவா விளக்குவது நம்மை பரவசத்திற்குள்ளாக்கும்.

அவரது சொற்கள் இதோ:

இத்தகைய இராவணனைஇன்று போய் நாளை வா என்று சொல்கிறான் மகா மானுடனாகிய இராமன்.

ஹிட்லர் ஆயுதங்களிழந்து தனியாக வந்து, அகப்பட்டுக் கொண்டான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்த்து, “ஹிட்லர் ஐயா, இன்று போய் நாளை வாருங்கள் என்று சொல்வார்களா; அப்படிச் சொன்னால் அதைக் கேட்டுச் சிரிக்க மாட்டார்களா? ஹிட்லர் அப்படி முற்ற முற்ற வலுக்குன்றி நின்றால், அப்பொழுதே, அங்கேயே அவனை எமலோகம் அனுப்பிவிட்டுத் தானே மறு காரியம் பார்ப்பார்கள்? அதைத் தானே மிகச் சிறந்த போர்த்தந்திரம் என்று கூறுவார்கள்?

கம்பன் காவியத்தில் இராமன் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றஇராவணேஸ்வரனை மறத்தின் மகா மேருவைஇன்று போய் நாளை வா என்கிறானே, இத்தகைய பேராண்மைப் பாத்திரத்தை எந்தக் காவியத்திலேனும் சரித்திரத்திலேனும் பிரத்தியட்ச வாழ்விலேனும் உலகில் எங்கேனும், என்றேனும் கண்டதுண்டோ?

கம்பன் என்றொரு மானுடன் என்று பாரதி கூறியது எத்துணை மெய்!கம்பன்ஒரு மானுடன்அவன்காவியம்மானிட மகா காவியம். ஐயமில்லை.

ஜீவாவின் வலுவான வார்த்தைகளுக்கு அப்பீல் உண்டா என்ன?

 

அடுத்து 1958ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டிஜனசக்தியில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

பாரதியின் தத்துவ ஞானம் என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் ஜீவா பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு பொருள் பற்றிப் பல்வேறு இடங்களில் அவன் கூறிய கருத்துக்களை ஜீவா தொகுத்துத் தருவது மிக அழகு.

இறுதிக் கட்டுரையாக அமைவது – ‘பாஞ்சாலி சபதம் புதுமை நயங்கள்’.

இதில், “எளிய பதங்கள், எளிய நடை,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றை உடைய காவியம் ஒன்றைத் தருவோன் நமது தாய்மொழிக்குப் புத்துயர் தருவோனாகிறான் என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி, ஜீவா அப்படி ஒரு காவியத்தை புதுமை நயங்களுடன் பாரதியார் தருவதை அருமையான உதாரணங்களுடன் தருகிறார்.

மொத்தத்தில் பாரதி வழிபாரதி விருந்து.

பாரதி அன்பர்கள் விரும்பிச் சுவைக்கும் நல்ல புத்தகமாக இது மலர்கிறது!

***

 

EVEN TIGER FEARS RAJPUTS! (Post No.5244)

Compiled by London swaminathan

Date: 21 JULY 2018

 

Time uploaded in London – 17-58  (British Summer Time)

 

Post No. 5244

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Rajputs of Rajasthan are great heroes. An old anecdote from Tod’s Rajasthan is given below:

Mukanddas was the head of Kunpanwat Rathores of Marwar. He incurred the displeasure of the Mogul emperor Aurangzeb, by a reply which was disrespectful. The tiger asked his servants to throw him into tiger’s den. Aurangzeb wanted to see him torn into pieces by the tiger.

 

Mukanddas , without a sign of fear entered the arena where the tiger was pacing. It came towards him.  Mukanddas said,

‘Oh Tiger of the Mian, face the tiger of Jaswant (Rajput king)’. He just looked into the eyes of the tiger. His anger inflamed his eyes. The animal, startled by his fearful look, looked at him for a moment. Then it put down his head, turned round and ran away from him.

 

‘’You see, exclaimed Mukandas, that he dare not face me, and it is contrary to the  creed of a true Rajput to attack an enemy who dares not confront him”

 

Even the tyrant, who beheld the scene was surprised into admiration, presented him with gifts and asked if he had any children to inherit his prowess. His reply,

‘How can we get children when you keep us from our wives even after a battle?’

 

This shows Rajputs were great heroes and fear was unknown to them. After this incident Mukandas was called Naharkhna, ‘Tiger Lord”.

 

xxx

 

It was with the Sisodia Rajputs and the Shekarwats that Mohabat Khan performed the most daring exploit in Mogul history, making Jehangir prisoner in his own camp in the zenith of the power.

 

The celebrated heroic charges of of the rathore (Rajput clan) horse at the battles of Tonga and Patun in 191 CE against the disciplined armies of the French General De Boigne, carrying everything before them, show the unequalled dash and élan of the Rathor cavalry when inspired by patriotism.

 

About the part played by Rathors at the battle of Malpura in 1799 CE.

Col. Skinner himself says, “The acts of these Rathors, and the intrepidity they showed in the square, surpasses al that I can say in their praise”.

 

–subham–

 

 

 

அக்பரின் மந்திர சக்தியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் (Post No.5243)

WRITTEN by London swaminathan

Date: 21 JULY 2018

 

Time uploaded in London – 16-48  (British Summer Time)

 

Post No. 5243

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மொகலாய மன்னன் அக்பர் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகள்!

 

அபுல் பாசல் (1551 – 1602 பொது ஆண்டு) என்பவர் அக்பர் என்ற மொகலாய மன்னரின் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர் அக்பரின் வாழ்ககையை மூன்று புஸ்தகங்களாக எழுதினார். அந்தப் புஸ்தகத்தின் பெயர் அக்பர் நாமா; அதன் மூன்றாவது புஸ்தகத்துக்கு அயினி அக்பரி என்ற பெயரும் உண்டு.

அவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.

 

இத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

 

கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

 

  1. அக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.

 

2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.

 

3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.

 

4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.

 

5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்

 

6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.

 

7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.

 

8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்

 

9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.

 

10.பழைய சம்பிரதாயங்களை முரட்டுத்

தனமாகப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.

 

11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ   ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்

12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.

 

13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.

 

  1. காலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.

 

15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.

 

  1. மல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.
  2. தஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.

 

18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்

 

19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.

 

20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.

 

21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.

 

22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில்  அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.

 

23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.

 

24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.

 

  1. ஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.

 

26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.

 

27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.

 

  1. இவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.

 

29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.

 

30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்

 

  1. ஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)

 

  1. தானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது. கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.

இவ்வாறு அபுல் பாஸல்,  அயினி அக்பரியில் செப்புகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

–சுபம்–

 

முஸ்லீம் நாட்டில் துர்கை, அகஸ்தியர் சிலைகள்! (Post No.5242)

WRITTEN by London swaminathan

Date: 21 JULY 2018

 

Time uploaded in London – 9-24 am  (British Summer Time)

 

Post No. 5242

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

உலகிலேயே மிகப்பெரிய முஸ்லீம் நாடு இந்தோநேஷியா. இங்கே 1500 ஆண்டுகளுக்கு இந்துக்களின் ஆட்சி நடந்தது. இப்பொழுது இது பற்றி நிறைய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் மூன்று புஸ்தகங்களில் இருந்து தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட கட்டுரையின் முக்கிய அம்சங்களை மற்றும் குறிப்பிடுகிறேன்.

 

இந்தோ நேஷியாவின் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பாலி தீவுகள் நான்கிலும் ஏராளமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள், ஜாவனிய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றிலிருந்து பல தகவல்கள் கிடைக்கின்றன.

சண்டி என்று துவங்கும் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் துர்க்கையின் பெயரில் அமைந்தவை. இங்குள்ள துர்க்கை இரு வடிவங்களில் காணப்படுகின்றன. எருமை அசுரனை வதைக்கும் மஹிஷாசுர மர்தினி கோலம்,  சோழர் கோவிலில் சாதாரணமாக நிற்பது போன்ற கோலம்.

 

துர்க்கை பற்றிப் பல கல்வெட்டுகள் உள; அவைகளும் இரு வகைப்படும். பழங்கால கல்வெட்டுகளில் துர்க்கையின் சாபம் பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் அரசன் கொடுத்த தானத்தை கபளீகரம் செய்தாலோ ஊறு விளைவித்தாலோ துர்க்கா தேவி அவனைத் தண்டிப்பாள் என்று பொருள்படும் கல்வெட்டுகள் உள.

 

பிற்காலத்தில் வெற்றி வரம் தரும் தேவி என்று போற்றப்படுகிறாள்.

இதே போல அகஸ்தியர் சிலைகளும் இரு வகைப்படும். ஒன்று ரிஷி முனிவர்கள் போல ஜடாமுடியுடன் காட்சி தரும் கோலம்; மற்றொன்று தலைப்பாகை கட்டிய கோலம்.

 

மற்றொரு விநோதம்- பிரம்மாண்டமான பீமன் சிலைகளாகும். பஞ்ச பாண்டவர்களில் மல்யுத்த வீரனான பீமனின் பெரிய சிலைகள் உள. இவைகளில் சிலவற்றைப் பைரவன் என்று கருதுவோரும் உண்டு. பெரிய ஆண் உறுப்புகளைச் சொருகி வைக்கும்படி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு தனி அம்சம்.

 

பிராஹ்மணர் ஆதிக்கம்

மிகப் பழங் காலத்திலேயே தமிழ் நாட்டுப் பிராஹ்மனணர்கள் யாக யக்ஞங்களுக்கு அழைக்கப்பட்டதும் தெரிகிறது. பழைய  கல்வெட்டுகள் பல்லவ கிரந்தம் போன்ற எழுத்துக்களில் உள்ளன. ஆரம்ப கால மன்னர்களின் பெயர்களும் பல்லவர் போல வர்மன் பெயரிலேயே உள்ளன.

 

மூன்றாம் நூற்றாண்டு முதல் தகவல் கிடைக்கிறது. மூல வர்மன் என்ற மன்னன் பஹு சுவர்ணக யாகம் செய்து பிராஹணர்களுக்குத் தங்கம் மற்றும் 20,000 பசு மாடுகள் தானம் செய்த செய்தி ஏழு ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளில் உள்ளன. அவர்கள் தானம் பெற்ற பின்னர் யூப ஸ்தம்பங்களில் இதைப் பொறித்துள்ளனர்.

 

யூபம் என்ற ரிக் வேத ஸம்ஸ்க்ருத சொல் புறநானூற்றில் இரண்டு பாடல்களிலும் அதன் தமிழ் ஆக்கமான வேள்வித்தூணம் என்பது வேறு இரண்டு சங்கப் பாடல்களிலும் வருவதை ஏற்கனவே எழுதிவிட்டேன்.

மூல வர்மனின் தந்தை பெயர் அஸ்வ வர்மன். மற்றொரு முக்கிய மன்னன் பெயர் பூர்ண வர்மன்.

 

மூலவர்மன் யாகம் நடத்திய புனித பூமியின் பெயர் வப்ரகெசவ. இது போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்தது; 70 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களின் காலடி படாத கன்னி பூமிக்குள் நுழைகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் உள்ளே நுழைந்த போது அதிசயமான பிராஹ்மண வேள்வித் தூண்களைக் கண்டு அசந்து போனார்கள்.

 

பூர்ணவர்மனின் பெயர் பொறித்த கற்கள் நிறைய கிடைக்கின்றன. ஒரு கல் ஆற்றோடையில் கிடந்தது. மற்றொரு பெரிய பாறையில் அவனது காலடிச் சுவடுகள் பொறிகப்பட்டுள்ளன. பெரியோர்களின் காலடிச் சுவடுகளைப் பதித்து வணங்குவது இந்து மரபு. அவனது காலடிச் சுவடுகளை விஷ்ணு பதம் என்று போற்றும் கல்வெட்டுக ளும் கிடைத்தன. அவனை உலகத்துக்கே ஆதாரம் என்றும் கல்வெட்டுகள் போற்றுகின்றன.

பூர்ண வர்மனின் தலைநகருக்குப் பெயர் தர்ம நகரம்; இது இப்போதைய இந்தோநேஷிய தலை நகரம் ஜாகர்த்தாவுக்கு அருகில் இருந்தது.

 

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மன்னனை, மநு சொன்னது போல, தெய்வமாகவே பார்த்தனர். இறைவன் என்பது மன்னனுக்கும் கடவுளுக்கும் கோயில் என்பது அரண்மனைக்கும் கடவுளின் இருப்பிடத்துக்கும் பயிலப்பட்டன.

 

சீன யாத்ரீகன் பாஹியான் பல சுவையான செய்திகளை அள்ளித் தெளிக்கிறான். “நான்  பொது ஆண்டு 414 ஆம் ஆண்டில் கப்பலைத் தள்ளும் காற்று துவங்கும் நாளுக்காக ஜாவாவில் தங்கியிருந்தேன்; இங்கு பிராஹ்மண மதம் கொடிகட்டிப் பறக்கிறது. புத்த மதம் பரிதாப நிலையில் உள்ளது” என்று பௌத்தன் (பாஹியான்) எழுதியுள்ளான். சீனாவுக்கு விரைந்து செல்ல காற்றின் திசைக்காக பாஹியான் காத்திருந்த போது கொடுத்த செய்தி இது.

 

தமிழர்களுக்கு பருவக் காற்றின் ரஹஸியம் தெரியும்; அந்தக் காற்று வீசத்துவங்கும் நாளில் புறப்பட்டால் இலங்கையிலிருந்து பாட்னா (பீஹார்) வந்து சேர ஏழே நாட்கள் போதும் அசோக மாமன்னனின் தூதுக்குழு இப்படி வந்த செய்தி மஹாவம்ஸத்தில் உளது ( எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விவரம் காண்க)

 

இன்னொரு முக்கிய மன்னன் உதயணனுக்கும் மஹேந்திர தத்தாவுக்கும் பிறந்த மகன் ஐர்லங்கா ஆவான். ஆனக வாஞ்சன் என்பவன் காலத்தில் 27 கல்வெட்டுகள் வெளியாகின.

 

தமிழைப் பொறுத்த வரையில் சுமத்ராவில் ஒன்றும் மலேசியாவில் இரண்டுமாக மூன்று கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை 1000 ஆண்டுப் பழமை உடையவை. ஆனால் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் மேலாக (தென் கிழக்காஸிய நாடுகளில்) கிடைத்திருக்கின்றன.

 

தமிழ் சொற்களின் ரஹஸிய அர்த்தம்

வியட்நாம் நாட்டில் (சம்பா) கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைய கல்வெட்டு பாண்டியன் திருமாறன் என்பவனின் கல்வெட்டு ஆகும் ( நான் 1990-களில் லண்டன் “மேகம்” பத்திரிக்கையில் எழுதிய “வியட்நாமை ஆண்ட பாண்டியன்” என்ற கட்டுரையில் முழு விவரம் உளது; கண்டு மகிழக)

 

கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற புறநானூற்றுப் பாண்டிய மன்னன் இந்திரன் அமுதம் பற்றி எழுதிய பாடல் ( 182) மிகவும் பிரஸித்தம். அவன் ஏன் கடலில் செத்தான்? தென் கிழக்காசிய நாடுகளுக்குக் கப்பலில் செல்லும் போது புயலில் மாண்டான். அதை மறக்காமல் தமிழனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற புறநானூற்றைத் தொகுத்தளித்த மஹாதேவன் என்ற புலவனும் (தமிழில் பெருந்தேவன்) அப்படியே நமக்குக் “கடலுள் மாய்ந்த” என்ற பெயரைக் கொடுத்துச் சென்றார்.

 

கடல் சுவற வேல் விட்ட பாண்டியன் என்று திருவிளையாடல் புராணத்தில் ஒரு கதை உண்டு. கடலில் இருந்து நிலத்தை மீட்ட ‘நிலம் தரு வில் பாண்டியன்’ , பரஸுராமர் பற்றிய குறிப்புகளும் உண்டு. இதன் தாத்பர்யம்- அவர்கள் எல்லாம் கடலின் சீற்றத்துக்கு அஞ்சாது வில் தாங்கிய படைகளுடன் சென்று, தென் கிழக்காசிய நாடுகளில் இந்து தர்மத்தை நிலை நாட்டினர் என்பதாகும்.

 

பொது ஆண்டு 385-ல் போர்னியோ காட்டுக்குள் தமிழ் பிராஹ்மணர்கள் யாகம் செய்ய, மூலவர்மன் அழைப்பில் சென்றிருந்தால் அதற்கு முன்னதாகவே தமிழ் மன்னர் ஆட்சி அங்கு இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. சாதவாஹனர் என்ற பிராஹ்மண மன்னர்களின் காசுகளில் கப்பல் படமும் உள்ளது இவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்கள்.

மேலும் அகஸ்த்ய ரிஷி என்ற தமிழ் பிராஹ்மண ரிஷியின் சிலைகள் பல நாடுகளில் கிடைப்பதும் திருஞான சம்பந்தரின் கோத்ரமான கௌண்டின்ய கோத்ரப் பிராஹ்மணர்கள் நாக ராணியைக் கல்யாணம் செய்துகொண்ட தென்கிழக்காஸிய நாட்டுக் கதைகளும் இதற்குச் சான்று பகரும்.

 

ஆக, தென்னக மன்னர்களும் பிராஹ்மணர்களும் முதலில் அங்கே காலடி எடுத்து வைத்தற்கு பல்லவர் எழுத்துக்களும் தமிழ் இலக்கியமும் உறுதுணையாய் நிற்கின்றன.

 

கட்டுரையில் காணப்படாத விஷயங்களை ஆங்கிலக் கட்டுரையிலும் , இணைக்கப்பட்ட படங்களிலும் கண்டு மகிழ்க. 1920 ஆம் ஆண்டு டச்சு மொழி நூலில் இருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் அடக்கம்.

 

அகஸ்தியர் கடலைக் குடித்தார் என்று புராணங்கள் சொல்லும். அகத்ஸ்யர் கடலைத் தாண்டி தென் கிழக்காஸியாவுக்குப் போனார் என்று அர்த்தம்.

 

இந்தோநேஷியாவில் துர்க்கை சிலையை வட புற சந்நிதிகளிலும் அகஸ்த்ய ரிஷியின் சிலையைத் தென்புறங்களிலும் வைத்துள்ளனர் வடக்கில் இமய மலையில் இருந்த அகஸ்த்யரை தமிழுக்கு இலக்கணம் உருவாக்க சிவ பெருமான் அனுப்பிய கதை புராணங்கள் முதல் பாரதியார் பாடல் வரை உள்ளது அவர் தென் புறத்துக்கு வந்ததைச் சிறப்பிக்கும் முகத்தான் தென் வானத்தில் ஒளிரும் மிகப் ப்ரகாஸமான நக்ஷத்ரத்துக்கு அகஸ்த்ய நக்ஷத்ரம் என்றும் பெயர் சூட்டினர். அதன் அருகில் த்ரிஸங்கு சொர்கம் எனப்படும் நக்ஷத்ரத் தொகுதியைக் காணலாம்.

–சுபம்—

 

 

எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை! (Post No.5241)

Written by S NAGARAJAN

 

Date: 21 JULY 2018

 

Time uploaded in London –   7-03  AM (British Summer Time)

 

Post No. 5241

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

 

எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!

 

ச.நாகராஜன்

 

‘உண்மையான ஞானஸ்தன் எளிமையான வாழ்க்கையைத் தான் விரும்புவான்; எளிமையாகத் தான் வாழ்வான் என்று நம்பினார் சாக்ரடீஸ்.

தனது வாழ்க்கையிலும் அவர் எளிமையையே கடைப்பிடித்தார். இதனால் அவர் காலில் செருப்பு கூட அணிந்ததில்லை.

இருந்தாலும் கூட அடிக்கடி கடை வீதிக்கு வருவார். அங்குள்ள கடைகள் அனைத்தையும் பார்வையிடுவார்.

 

 

ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர்,”எதையுமே நீங்கள் வாங்குவதில்லை; அப்படியிருக்க தினமும் ஏன் கடைவீதிக்கு வந்து அனைத்துக் கடைகளிலும் உள்ள பொருள்களைப் பார்வையிடுகிறீர்கள்” என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ், “ அங்கு அடிக்கடி போக நான் விரும்புவது உண்மைதான்! எத்தனை விதமான  பொருள்கள் இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அறிவதற்காகத் தான்” என்று பதிலளித்தார்.

**

ஜப்பானில் முதியவர் கூட்டம் ஒன்று அடிக்கடி கூடி செய்திகளைப் பரிமாறிக்கொண்டே டீ அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது.

சுவையான புதிய வகை டீ ஏதேனும் எங்கேயும் கிடைக்கிறதா என்பதைப் பார்ப்பது அவர்களின் ஒரு வழக்கம். அந்த டீ எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி அவர்கள் விசாரித்து அறிந்துகொண்டு அது எப்படிப்பட்ட கலவையைக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வர்.

ஒரு நாள் அங்கிருந்த வயதானவர் ஒருவரின்  முறை வந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த புது மாதிரியான டீயை அனைவருக்கும் தந்தார். அனைவரும் அதை சுவைத்துப் பார்த்தனர்.அருமையோ அருமை! இதுவரை அப்படிப்பட்ட சுவையுள்ள டீயை சாப்பிட்டதே இல்லை என்று ஒருமனதாக அனைவரும் கூறினர். இப்படிப்பட்ட டீயை எப்படிக் கலந்து தயாரிப்பது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டு அவரைக் கேட்டனர்.

அதற்கு அவர்,”நண்பர்களே! இது எனது வயலில் உள்ள குடியானவன் காலம் காலமாகச் சாப்பிட்டு வரும் டீதான்! மிக அருமையான விஷயங்கள் உண்மையிலேயே அதிக விலை கொண்டவையும் அல்ல; எங்கேயோ தூரத்தில் இருப்பவையும் அல்ல; நமக்கு அருகில் உள்ள சிறந்த விஷயங்களை நாம் அறிவதே இல்லை” என்றார்.

 

 

அனைவரும் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு ஆமோதித்தனர்.

**

“I have just three things to teach; Simplicity,Patience, Compassion. These three are your greatest treasures.: – Lao Tsu

எளிமை, பொறுமை, தயை இந்த மூன்றுமே உங்களுக்கு நான் போதிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். இவையே உங்களது பெரிய பொக்கிஷங்கள் என்றார் லாவோட்சு.

 

**

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெரிய பண்டிதர். எளிமையாக உடையை அணிபவர்.  படாடோபமான ஆடை அணிந்தவர்களையே பெரிய மனிதராக நினைத்து வந்த காவலாளி அவரை ஒருமுறை அழைக்கப்பட்ட இடத்தில் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான். படாடோபமான உடைகளைக் காட்டி வித்யாசாகர் இதற்கு அனுமதியை வழங்குங்கள் என்று சொன்ன போது தான் அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

 

இந்த சமபவம் அனைவரும் அறிந்த ஒன்று.

 

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றார் வள்ளுவரும்! (குறள் எண் 667)

**

 

மகாத்மா காந்திஜி எளிமையின் உருவம். உடை, உணவு என்று எதை எடுத்தாலும் மிகக் குறைந்த தேவையையே அவர் கொண்டிருந்தார்.

அவர் இறந்த போது அவருக்கென்று இருந்த உடமைகள் பத்து கூடத் தேறவில்லை. அவரது கண்ணாடி, உண்ணுகின்ற பாத்திரம், செருப்பு, கடிகாரம் போன்றவை தான் அவருக்கென இருந்தன.

இந்தியாவைத் தட்டி எழுப்ப பிரிட்டிஷாரின் துணிகளை பகிஷ்காரம் செய்ய அவர் அறைகூவல் விடுத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்கான இடுப்புக் கச்சையை அவரவரே நூற்று உடுக்கலாம் என்று  கூறி முன்னுதாரணமாகத் தானே நூற்க ஆரம்பித்தார். இந்த எளிமை உணர்வு வெகு ஜன உணர்வைத் தட்டி எழுப்பியது.

 

எளிமை என்றும் மதிப்பைத் தரும் என்பது தான் உண்மை.

சாக்ரடீஸ் முதல் காந்திஜி வரை அனைவரும் உணர்த்தும் உண்மையும் இதுவே தான்!

***