ஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை! (Post No. 5121)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 17 JUNE 2018

 

Time uploaded in London –  10-03 am  (British Summer Time)

 

Post No. 5121

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை! (Post No. 5121)

 

ஜப்பானுக்கு எப்படி சர்க்கரை வந்தது? இக்ஷ்வாகு வம்சம் இந்தியாவில் புராண வம்ச பரம்பரையில் முதலில் நிற்பர் ; இக்ஷ்வாகு என்றால் கரும்பு. அவர்தான் கரும்பு என்னும் பயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் வழியில் வந்தவர் புறநானூற்றுப் பாடலில் புகழப்படும் அதியமான். சத்தியவான் என்பதை தமிழில் அதியமான் என்பர். அவரைக் கரும்பு கொண்டு வந்ததாக      அவ்வையாரும் பாராட்டுகிறார் புறநானூற்றில்! ( எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் உளது); சிந்து சமவெளியிலும் சர்க்கரை கண்டு பிடிக்கப்பட்டதால், சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகம், வேத காலத்துக்கும்  பிற்காலத்தியது என்பது உறுதியாகிறது.

 

ஜப்பானியர்களுக்கு இனிப்பும் சர்க்கரையும் தெரியாது-டாங் (Tang) வம்ச காலத்தில் கஞ்சின் (Ganjin) என்ற குரு சர்க்கரையைக் கொண்டுவந்தார் (கி.பி.753). பின்னர் 806-ல் கோபோ டாய்ச்சி (Kobo Daichi)  சில இனிப்புப் பண்டங்களைக் கொணர்ந்தார். இப்படியாக இக்ஷ்வாகு மன்னர் கண்டு பிடித்த கரும்பு, பாரத தேசத்திலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்றது இனிப்பான- சுவையான செய்தி.

British PM Margaret Thatcher with Daruma Doll in 1986

தர்மபோதி

ஜப்பானியர் இல்லங்களில் தொழிற்சாலைகளில் உள்ள அதிர்ஷ்ட பொம்மை தர்மா பொம்மை. இது இந்தியத் துறவி தர்ம போதியின் சிலை ஆகும்.

ஆறாவது நூற்றாண்டில் சீனாவுக்கு ஜென் புத்தமதத்தைக் கொண்டு சென்ற இந்தியத் துறவி தருமபோதி ஜப்பானியரின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டார். ஜப்பானின் லக்கி/ அதிர்ஷ்ட பொம்மை தர்மா (Daruma Doll) பொம்மை. இதயத்தைத் தொடும் கொள்கைகளை உரைப்பது ஜென் கொள்கை.

 

தர்மபோதி எட்டு ஆண்டுகளுக்கு அல்லும் பகலும் அனவரதமும் தியானம் செய்தார். இப்படி வால்மீகி முனிவர் தியானம் செய்ததால் அவர் மீது புற்று வளர்ந்து, அவர் பெயரே ‘புற்று’ என்று ஆகிவிட்டது. ஆனால் தர்மபோதியின் கால்களோ, சுருங்கிவிட்டன. ஒரு உறுப்பை நீண்ட காலம் பயன்படுத்தாவிடில் அது செயல் இழந்து விடும். இதனால் கால்கள் இல்லாத உருட்டு வடிவமாக — தர்மா பொம்மை உருவானது. அது வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இன்று வரை அது வணிக நீதியில் பலவகையாக உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

 

 

தர்மா பொம்மையின் கண்ணில் வர்ணம் பூசுவது அதிர்ஷ்டத்தைக் கொணரும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உளது. அரசியல்வாதிகளும் இதை எல்லோர் முன்னிலையிலும் செய்வர். க்யோடோ பிராந்தியத்தில் 28 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த யூகியோ ஹயசிடா இப்படிச் செய்தார். தேர்தலுக்கு முன்னர் ஒரு கண்ணில் அவர் மை பூசினார். வெற்றிக்குப் பின்னர் தர்மா பொம்மையின் மறு கண்ணில் மை தீட்டினார்.

 

பிரிட்டனில் ஸண்டர்லாண்ட் என்னும் இடத்தில் மிகப்பெரிய ஜப்பானிய கார் (நிஸ்ஸன்) தொழிற்சாலை உளது; அங்கே 1986-ல் கார் தொழிற்சாலையைத் துவக்கிவைத்த பிரதமர் மார்கரெட் தாட்சர் ஒரு தர்மா பொம்மையின் கண்ணில் மை தீட்டினார். . சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற பிரதமர் டேவிட் காமெரோன் மின்சார கார் உறபத்தியைத் துவக்கி வைத்தார். அந்தத் தொழிற்சாலையின் வெற்றியைக் குறிக்கும் முகத்தான் அதே தர்மா பொம்மையின் இன்னொரு கண்ணில் மை தீட்டினார்.

 

1990 பிப்ரவரி 21-ல் ஜப்பானிய லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் டொஷிகு கைப்பு வெற்றி பெற்றார். அவர் மிகப்பெரிய தர்மா பொம்மையில் வர்ணம் பூசி வெற்றி விழா நடாத்தினார்.

ஜப்பானில் லெட்சுமி

 

இந்துத் தெய்வமான லக்ஷ்மி ஜப்பானில் கோவில் கொண்டுள்ளார். அவளுடைய ஜப்பானியப் பெயர்- கிச்சிஜோடன். 1997ல் இந்தியாவின் ஐம்ப தெய்தாவது சுதந்திரக் கொண்டாட்டங்கள் ஜப்பானிலும் நடந்தன. துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன், பிரிட்டிஷ் மஹாராணி எலிசபெத் ஆகியோர் வருகை புரிந்தனர். அப்பொழுது பிரிட்டிஷ் மியூஸியம் 300 கலைப் பொருட்கள், சிலைகளை அனுப்பி வைத்தது. அதில் ஒன்று ஜப்பானிய லக்ஷ்மி. ஒரு கை, வரத முத்ரை காட்டும் மறு கையில் சிந்தாமணி ரத்தினம் இருக்கும். இது ஹையன் (Heiyan Period) கால பொம்மை.

 

இந்த விழாவில் இந்திய ஜப்பானிய அறிஞர் லோகேஷ் சந்திரா உரை ஆற்றுகையில் “ராணியாரே, நன்றி; உங்கள் நாட்டில் செல்வம் செழிக்க நாங்கள் லக்ஷ்மியை (பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு) அனுப்பிவைத்தோம் ; செல்வம் பாய்ந்து ஓடுகிறது; இப்பொழுது அதை அடையாள பூர்வமாக இந்தியாவுக்கு இலாவிடினும் இந்திய சுதந்திர விழாவுக்கு அனுப்பினீர்களே; நன்றி” என்றார். உடனே இந்திய துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன்— லோகேஷ் சந்திரா கைகளை நைஸாக அமுக்கி ‘சபாஷ்’ கொடுத்தார்.

 

–SUBHAM–

குடித்தால் கழுதை! (Post No.5120)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 17 JUNE 2018

 

Time uploaded in London –  9-21 am  (British Summer Time)

 

Post No. 5120

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒரு குடிபோதை எதிர்ப்புக் கூட்டத்தில் மது விலக்கின் சிறப்புகளை ஒரு பேச்சாளர் அள்ளி வீசிக் கொண்டு இருந்தார். உங்களுக்குத் தெரியுமா? குடிக்கும் மதுபானத்தில் புழுப்பூச்சிகள் நெளிகின்றன; நாற்றம் வீசும்;

‘குடி- குடியைக் கெடுக்கும்;

மடியிலுள்ள பர்ஸைப் பிடிக்கும்’ என்றெல்லாம் சொன்னார்.

கடைசியில் எடுத்துக் காட்டுகளுடன் விளக்க முயன்றார் மதுபானத்  தீமைகளை!

 

“ஒரு கழுதைக்கு முன்னால்,

ஒரு வாளியில் மதுபானத்தையும் மற்றொரு வாளியில் தண்ணீரையும் வைத்தால், அது எதைக் குடிக்கும்?”

 

உடனே கூட்டத்திலிருந்து ஒருவர், கட்டைத் தொண்டையில், உரத்த குரலில் சொன்னார் :

“தண்ணீரைக் குடிக்கும்!”

 

‘ஏன்?’ என்று பேச்சாளர் உற்சாகத்துடன் கேட்டார்.

பதில்:–

‘ஏனென்றால் அது ஒரு  கழுதை! (Jack ass) ‘ஜாக் ஆஸ்’

 

ஆங்கிலத்தில் ‘ஜாக் ஆஸ்’ என்றால் கழுதை, முட்டாள் என இரு பொருள் உண்டு!

 

அனைவரும் கொல் என்று சிரித்தனர்.

 

xxx

 

முழு பாட்டில்…. அரை பாட்டில்…. கால் பாட்டில்… காலி பாட்டில்!!!

 

ஒரு ஏலக் கம்பெனி, அதன் பிரதிநிதியை ‘ஸ்டாக்’ எடுப்பதற்காக ஒரு வீட்டுக்கு அனுப்பியது; அந்த வீட்டிலுள்ள பொருட்களை ஏலம் விடுவதற்கு முன்னால் பட்டியல் (inventory) தயாரிக்கும் பொறுப்பு அவருடையது.

 

அவரும் வீட்டுக்குள் சென்றார்; உண்மை ஊழியராகப் பணியைத் தொடர்ந்தார்.

1.ஒரு பெரிய மேஜை

2.அழகான டைனிங் டேபிள்

3.தேக்கு மர நாற்காலிகள்

4.கருங்காலி மர ஸ்டூல்கள்

5.நல்ல இரும்பு பீரோ

6.விஸ்கி ‘முழு’ பாட்டில்

 

இன்னும் கொஞ்சம் வேலை செய்தார்;

விஸ்கி ‘அரை’ பாட்டில் என்று எழுதினார்

இன்னும் கொஞ்சம் நேரம் போனது;

விஸ்கி ‘கால்’ பாட்டில் என்று பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

இன்னும் நேரம் ஆனது

விஸ்கி பாட்டில் – ‘காலி’ பாட்டில் ஒன்று

 

அடுத்தாகப் பட்டியல் எழுதினார்.

“அறையில் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு கம்பளங்கள்!!

 

(ஏன் இப்படி உலகமே என்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது!!)

 

–சுபம்–

 

TAMIL ARTICLE:- Dear God, I have a problem! (Post No.5119)

Written by S NAGARAJAN

 

Date: 17 JUNE 2018

 

Time uploaded in London –  7-21 am  (British Summer Time)

 

Post No. 5119

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

Dear God, I have a problem!

 

S.Nagarajan

 

1

Dear God, I have a problem என்று மனம் நொந்து எழுதிய அன்பர் ஒருவர் அடுத்த வரியையும் எழுதினார்.

It is Me!

 

Dear God, I have a problem.

It is Me!

 

எவ்வளவு உண்மை.

நமது பிரச்சினைகள் எல்லாம் எங்கிருந்தோ வருவதில்லை.

நம்மிடமிருந்தே தான் உருவாகின்றன.

நமது பிரச்சினைகளுக்குத் தீர்வை வெளியில் எங்கும் காண முடியாது; காணத் தேவையில்லை.

சாதாரண காசு சம்பாதிக்கும் பிரச்சினையிலிருந்து நான் ஏன் பிறந்தேன், பிரபஞ்சத்தில் நான் யார் என்ற பெரிய கேள்வி வரை விடை நம்மிடமே தான் இருக்கிறது! இப்படி நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கண்ணபிரான் கீதையில்

உத்தரேத் ஆத்மனாத்மானம்

நாத்மானம் அவஸாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ

பந்துர் ஆத்மைவ ரிபுர் ஆத்மன:  (பகவத் கீதை 6-5)

என்று கூறுகிறார்.

 

தன்னைத் தானே (ஆத்மாவை) உயர்த்திக் கொள்ள வேண்டும்.

தனக்குத் தானே நண்பன்.

தனக்குத் தானே எதிரி என்பது கண்ணபிரானின் அருள் வா.

 

 

2

நாலடியாரில் வரும் ஒரு பாடலும்  இதை அருமையாக விளக்குகிறது:

நன்னிலைக் கண்தன்னை நிறுப்பானும் தன்னை

நிலைகலக்கிக் கீழிடுவானும் – நிலையிலும்

மேன்மேலுயர்ந்து நிறுப்பானும் தன்னை

தலையாகச் செய்வானும் தான்

இதன் பொருள் : நல்ல நிலையிலே தன்னை நிறுத்துபவனும், தான் நின்ற நிலையிலிருந்து கலங்கச் செய்து தன்னைக் கீழ்ப்பட்ட நிலையில் சேர்க்கின்றவனும் தான் நின்ற நிலையை விட மிக மேலான நிலையில் நிறகச் செய்பவனும் தன்னை மற்றவர்களிலிருந்து முதன்மையாகச் செய்பவனும் தானேயாவான்.

 

 

 

3

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் வரும் ஒரு பாடல் இது:

 

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான்ச் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி

 

இதன் பொருள் : தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நண்பனும் தானேயாவான்.பிறர் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தை இம்மை இன்பத்தைச் செய்து கொள்பவனும் தானே தான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால் தான் செய்த வினைகளுக்குச் சான்றாக இருப்பவனும் தானே ஆவான்.

 

 

4

யோக வாசிஷ்டமும் இதே கருத்தைத் தான் கூறுகிறது.

ஆக

Dear God, I have a problem.

It is Me!

 என்று சொல்லும் போது பிரச்சினையை முதலில் இனம் கண்ட நபரைப் பாராட்ட வேண்டும்.

பின்னர் அவர் தன் பிரச்சினையைப் போக்க தன் வழியே முயன்றால் அவர் கூறுவது இப்படி மாறும் :

Dear God, I have a valuable possession

It is Me!

இப்படி அவர் கூறும் போது அவர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் என்பதை உணர்வோம்.

உன்னையே நீ அறிவாய் என்று சாக்ரடீஸ் கூறினார்.

நான் யார்? Who am I? என்று விசாரம் செய்யச் சொன்னார் மஹரிஷி ரமணர்.

விசாரம் மூலம் சாரமான விஷயத்தை அறியலாம் என்பது சத்தியம். மஹரிஷிகள் சென்ற பாதை இது தான்; அவர்கள் நம்மைச் செல்லத் தூண்டும் பாதையும் இது தான்!

Dear God, I have a problem.

It is Me!

என்று கூறுகின்ற அன்பருக்கு இறுதியாக ஒரு வார்த்தை.

If God brings you to it,

He will bring you through it.

***

 

 

HINDU AND BUDDHIST WONDERS IN JAPAN (Post No.5118)

Bodhi Daruma doll

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  18-36  (British Summer Time)

 

Post No. 5118

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

SUGAR
Sugar was invented by Ikshvaku dynasty, Ikshvaku means sugarcane. Sugar was found in the Sarasvati -Indus Valley civilisation . Sugar went to to China from India. It was brought to Japan by Chinese priest Gangin of the Tang Dynasty in 753. Kobo Daishi brought sweets from China. From 15th century sweets of all kinds were manufactured in Japan.

Uruchi
India and Japan shared uruchi I.e. rice which is ARISI (in Tamil).
Oryza sativa in botanical term= Vrihi in Sanskrit.
xxx


Daruma Doll
Bodhidarma who introduced Zen Buddhism to China in early part of sixth century lives in the daily life of Japan as Daruma doll.

 

In 1978 the Conservative Yukon Hayashida won the gubernatorial election in Kyoto ending 28 years of communist administration in their traditional stronghold. As a sign of victory, he daubed in the other eye of Daruma doll, and one eye had already been painted before the elections.

 

On 21 February 1990, prime minister Toshiku Kaifu inked an eye to a huge Daruma doll, to celebrate the victory of the ruling Liberal Democratic Party in the National elections.

The stylised mask of Daruma-san emphasises the fierce mien of Bodhidharma . From the fire of his meditation arose the martial arts as well as from his training as a young prince Kanchi .
The roundish Daruma doll is a must for success in life. Bodhidaruma spent eight years in uninterrupted meditation. At last when he tried to stand up, he found that his legs atrophied. That is how the round doll came up.

 

Margaret Thatcher and Bodhi Daruma Doll

British Prime Minister David Cameron has praised Nissan’s production of their new 100% Electric car, the Nissan LEAF, at its Sunderland plant. The Japanese company has invested £420million in the production of the car, which will support 2,000 jobs in the UK’s automotive industry.

David Cameron also got the chance to take part in a traditional Japanese ceremony, when he coloured in the eye of a Daruma doll, which late former Prime Minister Margaret Thatcher had done when the plant first opened in 1986. Since then the plant has went on to produce over seven million cars.

Xxx

Lakshmi came to Japan

Japanese Lakshmi in British Museum
The British museum sent 300 treasures to Japan in celebration of the 50 years of India in independence in 1997. A star attraction of the e hibition was the eleventh century Heian wooden image of Kichijoten or Lakshmi. She wore the robe s of the Heian period, her right hand in Varada Mudra of granting affluence, and the left hand held a Cintamani jewel.

 

Lakshmi in Japan

Source Lokesh Chandra Book- CULTURAL INTER FLOW BETWEEN INDIA AND JAPAN

–subham-

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)


Written by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  12-49  (British Summer Time)

 

Post No. 5117

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அதிகச் சாப்பாடும் குடிபோதையும்

சி.ஆர்.டபிள்யு. நெவின்ஸன் (C R W Nevinson) என்பவர் புகழ்பெற்ற ஓவியர். அவர் ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்கிறார்:-

” சிஸ்லி ஹடில்டன்னும் (பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் Sisley Huddleston,) நானும் நெருங்கிய நண்பர்கள்; அவருக்கு பூதாஹார உடல்; ஆள் வாட்ட சாட்டமாய், ஆஜானுபா ஹுவாக இருப்பார். பாரிஸ் நகரில் நாங்கள் போகாத ஹோட்டல் அல்ல; குடிக்காத மதுபானக் கடை இல்லை; நல கூத்தடிப்போம்; சிரிப்போம்; பெண்களைக் கிண்டல் செய்வோம். ஒருமுறை நானும், க்ளைவ் பெல்லும் (Clive Bell)  சிஸ்லியுடன்  சென்று வயிறு புடைக்கச் சாப்பிட்டோம்; அரிசிச் சோறும் கோழிக்கறியும் உண்டோம். சிஸ்லிக்குப் பெரிய வயிறு என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிட்டுவிட்டார்.

 

ஒரு சிறிய டாக்ஸியில் ஏறிக்கொண்டு புலிவர் சாலியில் உள்ள செய்ன்ட் ஜெர்மைனுக்குச்( Boulevard street St Germain)

சென்றோம். அங்கு போய் வண்டி நின்றது. சிஸ்லியால் வெளியே வரமுடியவில்லை. அந்தக் கதவு, இந்தக் கதவு என்று எல்லாக் கதவுகளிலும் புகுந்து வெளியே வர முயன்றும் வர முடியவில்லை. வயிறு ஊதிவிட்டது! டாக்ஸி ட்ரைவருக்கும் எனக்கும் ஒரே சிரிப்பு. நன்றாக வயிறு குலுங்க சிரித்தோம்; இறுதியில் டாக்ஸி ட்ரைவரே மேல் கூரையைத் திறக்கவே அவர் பின்புறமாக இறங்கினார்.

 

செயின்ட் ஜெர்மைனுக்குள் போக விரைந்தோம். அங்குள்ள காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்கள் அடித்த கூத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் நாங்கள் குடிபோதையில் கூத்தடித்ததாக நினைத்தனர். க்ளைவ் பெல்லுக்கு ஒரே கடுப்பு; காரணம்? அவர் அங்கு புகழ்பெற்ற ஓவியர்  டெரய்னை (Derain) அங்கே சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்

அவருக்கு ஆத்திரம் ஒரு பக்கம்; ஏமாற்றம் மறு பக்கம்; எரிமலை போலப் பொங்கினார்!
xxxx  xxxxxx

குண்டுப் பாடகியின் பண்பு

மேடம் ஷூமான் ஹைங்க் (Madame Shumann Heink) என்பவர் அமெரிக்கப் பாடகி. ஆள், உருவத்தில் உருட்டுக் கட்டை. நம்ம ஊர் நடிகைகள் போல உருண்டு திரண்டு தார் ட்ரம் (Tar Drum) அல்லது பீப்பாய் (Barrel) போல இருப்பார். ஒருமுறை அவரது மகன் படிக்கும் கல்வர் (Culver) ராணுவப் பள்ளிக்குச் சென்றார். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்குத் தெரியாமல் திடீரென்று போய் நிற்க வேண்டும் என்று அந்த தாய்க்கு நல்ல ஆசை.

 

கல்லூரி வளாகத்துக்குச் சென்றார். மகன் விடுதி இருக்கும் இடம் பற்றி வினவினார். அவர்களும் இடத்தைக் கூறினர்.

 

அம்மையார் அங்கு சென்றபோதுதான் தெரிந்தது இன்னும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று.

 

ஒரு புறம் செங்கல்; மறுபுறம் மூங்கில் கம்புகள்; எங்கு பார்த்தாலும் இடித்தன. ஒருவாறாகச் சமாளித்துகொண்டு குறுகிய வழிக்குள் புக முயன்றார். திணறினார்.

ஒரு துடுக்கான மாணவன் இதைப் பார்த்து ஒரு காமெண்ட் (comment) அடித்தான்.

“ஓ மேடம்! பக்கவாட்டாக நுழையுங்கள்!”

அவருக்கு அதைக் கேட்டவுடன் ஒரே சிரிப்பு. பலமாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்:-

“அன்பு நண்பா; இந்தப் பூத உடலுக்கு பக்க வக்கவாட்டு என்பதே கிடையாதே! (வட்டவடிவ உடல்_)

 

இதைப் படித்தவுடன் எனக்குப் பழைய சினிமாப் பாடல் நினைவுக்கு வந்தது

“தங்கத்திலே ஒரு குறை யிருந்ததாலும் தரத்தினில் குறைவதுண்டோ

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பண்புகள் மறைவதுண்டோ!”

(பாட்டின் வரிகளைச் சிறிது மாற்றிப் பாடியிருக்கிறேன்)

 

xxxx

ஜப்பானில் ஸம்ஸ்க்ருதம்! (Post No.5116)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  7-33 am  (British Summer Time)

 

Post No. 5116

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் இல்லாத நாடுகளே உலகில் இல்லை; போர்னியோ (இந்தோநேஷியா) காட்டுக்குள் சம்ஸ்கிருத கல்வெட்டுகள்; மத்திய ஆஸிய பாலைவனத்தில் சம்ஸ்கிருதச் சுவடிகள்; சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு; துருக்கியில் வேதகால தெய்வங்களைக் கூறும் கி.மு1400 ஆண்டுக் கல்வெட்டு. எகிப்தில் தசரதன் (கி.மு1300) கடிதங்கள்; துருக்கியில் தசரதன் (துஷ்ரட்ட) பிரதர்தனன் ஆட்சி; தென் கிழக்காசிய நாடுகளில் 1500 ஆண்டுகளில், 1000 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள். ஜப்பான் கொரியா முழுதும் போதிசேனர் மூலம் ஸம்ஸ்க்ருத்ச் சுவடிகள்; மேலை நாடுகள் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இதாலியன்,ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம்– தமிழிலோ ஸம்ஸ்க்ருதக் கலப்பில்லாமல் ஒருவர் கூட, ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாத நிலை. எந்தப் பத்திரிக்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஸம்ஸ்க்ருத சொற்கள்!!!

 

ஸம்ஸ்க்ருதம் இல்லாத கட்டுரை, பிளாக், உரை, சொற்பொழிவு, நாளிதழ், டிவி, அன்றாடப் பேச்சு — எதுவும் இல்லை! நிற்க.

 

இப்பொழுது லோகேஷ் சந்திரா என்பவர் எழுதிய நூலில் ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி அரிய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். இதோ லோகேஷ் சந்திரா செப்பும் அற்புதச் செய்திகள்:-

 

 

ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருத மொழியை பொங்கோ (BONGO) என்று அழைப்பர்

பொன் =பிராஹ்மன்

கோ = மொழி

 

இளவரசர் ஷோடோகு ஜப்பானின் முதல் அரசியல் சட்டத்தை ஸம்ஸ்க்ருத துதியுடன் — உஷ்னீசவிஜயா – தாரணீ என்று– எழுதி புனிதப் படுத்தினார். இது ஓலைச் சுவடியில் குப்தர் கால லிபியில் (எழுத்தில்) பொறிக்கப்பட்டுள்ளது.

 

கி.பி.706-ல் போதிசேனர் என்ற இந்திய யோகியை புத்தமத ‘க்யோகி’ (GYOGI) ஜப்பானிய- ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழியில் வரவேற்றார்.

 

டாய்ஞ்சி கோவிலில் போதிசேனரும், புத்தஸ்திராவும் ஜப்பானியர்களுக்கு ஸம்ஸ்க்ருதம்  கற்றுக்கொடுத்தார். 1300 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருதம் கற்பித்த அறையை குரு ஒனோ (ABBOT ONO) எனக்குக் காண்பித்தார்.

 

ஜப்பானிய புஸ்தகங்களை உள்ளபடி அறிய வேண்டுமானால் ஸம்ஸ்க்ருத அறிவு அத்யாவஸியம் என்பதை கோபோ டைச்சி (கி.பி806) அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஷிங்கோன் (SHINGON) கோவில்களில் தினசரிப் பிரார்த்தனைகள் ஸம்ஸ்க்ருத  மந்திரங்களுடன் ஹோமத்துடன் நடை பெறுகின்றன.

 

மெய்ஜி புனர்நிர்மாணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய அறிஞர்கள் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் சென்று ஸம்ஸ்க்ருதம்  பயின்றனர்.

 

தி யங் ஈஸ்ட் (THE YOUNG EAST) என்ற பத்திரிக்கையில், இந்திய- ஜப்பானிய உறவு பற்றி  பேராசிரியர் ஜுஞ்சிரோ டகாகுசு (PROF.JUNJIRO TAKAKUSU) ஏழு கட்டுரைகள் எழுதினார். அவற்றில் இந்தியாவிலிருந்து ஜப்பான் பெற்றது என்ன? என்று விளக்கினார்:

 

1, 2- யோகிகள் பற்றிய கட்டுரை

3 இந்து மத தெய்வங்கள்

4 சங்கீதமும் நாட்டியமும்

5 சதுரங்க விளையாட்டும் பருத்தித் துணியும்

6 பெயர்களும் சொற்களும்

7 மேலும் பல பெயர்களும் சொற்களும்

 

அவர் கொடுத்த நீண்ட பட்டியலில் அன்றாட வழக்கிலுள்ள ஜப்பானிய  சொற்களின் ஸம்ஸ்க்ருத  மூலம் கட்டப்பட்டுள்ளது:

 

ஜப்பானிய மொழி — ஸம்ஸ்க்ருத மொழி

 

ஹதா = பதாகா (கொடி, சின்னங்கள்)

சரவ= சரவா (தட்டு)

கஹர ஓடு= கபால

அபட = அற்புத

சொர = ஸ்வர் (வானம்)

மோஷ= மூர்ச்சா (MODULATION ஏற்றி இறக்கும் குரல்)

டஸ்ஷின்= தக்ஷிணை

 

அகா= அர்க்ய (தீர்த்தம்/தண்ணீர் AQUA)

(எனது கருத்து– இன்றும் பிராஹ்மணர் குடும்பங்களில் குழந்தைகளுக்கு அமுது ஊட்டும்போது மம்மம் சாப்பிடு ‘அக்கம்’ குடி என்று சொல்லுவர்- இவை இரண்டும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து பிறந்த லத்தீன் மொழிச் சொற்கள்- ஆக்வா AQUA= தண்ணீர்)

 

நமோ = நம (ஸ்தே; ஸ்காரம்’ நம’ சிவாய)

வனன் = வந்தனம்

பன்டய்= வந்தே (மாதரம்)

 

தேர= மூத்தோர் (பாலி, ஸம்ஸ்க்ருத சொல்)

அரண்ய (கோவில்)= அரன்

கரன் = சங்காராம

தோ= தூப, பகோடா

 

 

ஷுமி-தன்= சுமேரு (நடுப்பகுதி)

ஷரி= சரீர

அகட (விஷ முறிவு)= அகத

ரூரி= வைடூர்ய

ஹரி = ஸ்படிக

(எனது கருத்து- ஹரி என்பது மஞ்சள் பச்சை ஆகிய நிறக் கற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் பயன்படுத்தப்படுகிறது)

 

கேச = காஷாய உடை

கண்ட (நிறம்) = கந்த

செந்தன் = சந்தன

க்யார= அகரு/ அகில்

கரிரோகு= ஹரீதக (கடுக்காய்)

ஆமலக = ஆமலக/நெல்லிக்காய்

 

உடோங்கே= உடும்பரா

குன்ரோகு= குன்டுருக

யென்பு= ஜம்பூ (நாவல் மரம்)

ஷர = சால

தொரயோ/ பைதர= தால பத்ர

முட (வீண்)= முதா

செட்சுன= க்ஷண ( நொடியில்)

யஜுன் = யோஜனை (தூரம்)

கிசா = கஜ/யானை

முஷிர= மற்கட (குரங்கு)

கர்யோபிங்க ( வான் குருவி)= கலவிங்க

பிடா (அறிவு)= வேத

யுக , யுய் = யோகி, யோக

ஷமோன், பிகு= ஸ்ரமண, பிக்ஷு

டலி, ஜபி= தகனம் (ஜபிட-பாலி மொழி)

ட்சுசுமி/ துடுமி- துந்துபி ( வாத்யம்)

 

இன்னும் பல சொற்களை அவர் பட்டியலிட்டுள்ளார். நல்ல ஸம்ஸ்க்ருத  அறிவுடையோரே அவற்றை புரிந்து கொள்ள முடியும்.

 

-சுபம்-

நடக்காத சந்திப்பு – தப்பிப் பிழைத்த பாரதம் (Post No.5115)

Written by S NAGARAJAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  6-57 am  (British Summer Time)

 

Post No. 5115

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தேசப் பிரிவினையின் கதை

இதற்கு முன்னர் வெளியான ஆகா கானின் அட்டகாசம்: பிரிவினையின் சோகக் கதை என்ற அத்தியாயத்தைப் படித்தவர்களுக்கு இன்னும் ஒரு கட்டுரை இது :

 

 

 

 

நடக்காத சந்திப்பு – தப்பிப் பிழைத்த பாரதம்! பிரிவினையின் சோகக் கதை!

1

ஒரு சுவாரசியமான (நடக்காத) நிகழ்வை இங்கு பார்க்க வேண்டியிருக்கிறது.

 

இந்திய பத்திரிகையாளர்களில் அந்தக் காலத்தில் பிரபலமானவர் எம்.எஸ்.எம். சர்மா (M.S.M. Sarma) என்பவர்.அவர் தனது நினைவலைகளை (Reminiscences) ‘பீப்ஸ் இன்டு பாகிஸ்தான் ( Peeps into Pakistan) என்ற நூலில் எழுதியுள்ளார்.

அதில் ஒரு சம்பவம் தான் இது.

 

சவர்காரின் அதி தீவிர தீர்க்கதரிசனத்தால் அவர் ஆதரவு தர தேசம் முழுவதிலிருந்தும் சுமார் இரண்டு லட்சம் ஹிந்து-சீக்கிய இளைஞர்கள் பிரிட்டிஷாருக்கு இரண்டாம் உலக மகா யுத்தத்தில் உதவ ராணுவத்தில் சேர்ந்தார்கள்.

பயங்கரமான கோர யுத்தத்தில் பல முனைகளிலும் பணியாற்றிய அவர்கள் பெறுதற்கரிய அனுபவத்தைப் பெற்றனர்.

 

சவர்க்கார் எதிர்காலத்தில் இந்திய ராணுவம் வலிமை வாய்ந்ததாக உருவாக இதை தீர்க்கதரிசனத்துடன் செய்தார்.

ஆகா கான், முகம்மதலி ஜின்னாவின் தீவிர தாக்குதலைத் தடுக்க இந்த வீரர்களின் அமைப்பு பெரிதும் பின்னால் உதவியது. இல்லாவிடில் பல லட்சம் ஹிந்துக்கள் உயிரை இழந்திருப்பர்.

 

ஜின்னாவின் கூட இருந்தவர்கள் பாகிஸ்தான் ஏற்படாவிடில் ரத்தக் களரி தான் ஏற்படும் என்று எச்சரித்தவண்ணம் இருந்தனர்.

 

ஜின்னா நடப்பதைப் பற்றி யோசித்தார். நேருவைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. அவர் ஒரு கோழை என்று ஜின்னா நினைத்தார்.சவர்க்காரின் வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை உணர்ந்த ஜின்னா அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் உணர்ந்திருந்தார்.

 

ஆகவே தனது நலனை உத்தேசித்து ஜின்னா பிரபல பத்திரிகையாளரான எம்.எஸ்.எம். சர்மாவைச் சந்தித்து சவர்க்காருடன் ஒரு ரகசிய சந்திப்பை நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

 

முஸ்லீம்கள் நிச்சயமாக தாங்கள் கூறும் ரத்தக் களரியை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உறுதி மொழியை அளிக்க அவர் விரும்பினார். இதற்கு பதில் உபகாரமாக இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவில் ஏராளமான நிலங்களை வைத்திருக்கும் முஸ்லீம் பிரமுகர்கள் அதை அப்படியே வைத்து உரிமை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொள்ள நினைத்தார்.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இந்த சந்திப்பு நிகழவே இல்லை.

இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகிறது என்ற செய்தி கசிய விடப்பட்டு ஜின்னா மிகவும் சங்கடத்திற்கு உள்ளானார்.

ஆகவே அவர் சர்மாவைக் கூப்பிட்டு சந்திப்பை ரத்து செய்யுமாறு கூறி விட்டார்.

 

2

 

இன்னொரு நடக்காத முக்கிய நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

 

பாரதத்தை இரண்டாகப் பிரிக்காமல் இருக்க முகம்மதலி ஜின்னாவை பாரத பிரதமர் ஆக்குவது, அப்படி ஆக்கினால் பாகிஸ்தான் என்ற தனி நாட்டைக் கேட்கும் எண்ணத்தை முஸ்லீம்கள் விடுவது என்பது ஒரு திட்டம்.

நல்ல வேளையாக மஹாத்மா ஜின்னாவைச் சந்திக்காமலேயே இந்த திட்டம் கை விடப்பட்டது.

பாரதத்தின் சோகமான பிரிவினை பற்றி அந்த நாட்களில் உயர் மட்டத் தலைவர்களுடன் இருந்த பலரும் பின்னால் எழுதிய புத்தகங்கள் பல திடுக்கிடும் விவரங்களைத் தருகின்றன.

இவற்றையெல்லாம் படித்தால் தெரிய வருவது ஒன்று தான்:

தனி நாடாக முஸ்லீம்களுக்காக மட்டும் பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும். (அங்கு ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது – அடிப்படை உரிமைகள் கூட!)

 

செகுலர் என்ற பெயரில் செகுலர் நாடாக உருவாகும் இந்தியாவில் மைனாரிட்டி ரைட்ஸ் என்ற பெயரில் ஏராளமான சலுகைகளைப் பெற்று இந்தியாவை உருக்குலைக்க வேண்டும்.

 

 

 இந்த திட்டத்தினால் இப்போது ஏற்பட்டிருக்கும் தீராத தொடர் வியாதியை நீக்க ஒரு வழி இருக்கிறது.

பாரதத்தை ஹிந்து ராஷ்டிரமாக அறிவித்து விட்டால் அனைத்து தீவிரவாத இஸ்லாமிய பிரச்சினைகள் தீரும்; கிறிஸ்தவ பாதிரிகளின் மத மாற்ற முயற்சியில் மண் விழும்.

எதிர்காலம் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் என்றே அனைவரும் நம்புவோமாக!

****

 

 

SANSKRIT WORDS IN JAPANESE (Post No.5114)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 15 JUNE 2018

 

Time uploaded in London –  18-13  (British Summer Time)

 

Post No. 5114

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

Sri Lokesh Chandra in his book CULTURAL INTEFLOW BETWEEN INDIA AND JAPAN gives some interesting information about Sanskrit words in Japanese language.

It is very interesting to see how they are spelt and pronounced in Japan.

Sanskrit is BONGO in Japanese.

Bon means Brahman

Go means language

Prince Shotoku consecrated the First Constitution of Japan with the Sanskrit hymn Usniisavijayaa- dhaaranii written in the Gupta script in palm leaf.

Monk Gyoogi welcomed the Indian Bodhisena in 736 in mixed language of Sanskrit and Japanese.

Bodhisena and Buddhasthira taught Sanskrit to Japanese monks at the Daianji Temple. Abbot Ono showed me the room where Sanskrit was taught 1300 years ago.

Kobo Daishi (806) laid emphasis on a knowledge of Sanskrit to understand the texts correctly.

Sanskrit mantras sanctify the Homa (Goma in Japanese) ceremonies in Shingon temples every day.

Japanese scholars studied Sanskrit in England and Germany as part of modernisation after Meiji restoration (1868)

 

Prof. JunjiroTakakusu wrote a series of seven articles What Japan owes to India in the Young East in 1925. Seven articles covered 1,2 Ascetics; 3 Hindu Pantheon; 4 Music and Dance; 5 Cotton and Chess; 6 Names and Words; and 7 More names and words.

 

Takakusu lists the following Sanskrit words in daily use in Japanese:–

 

 

 

–SUBHAM–

 

Smoking and Hotels Anecdotes (Post No.5113)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 15 JUNE 2018

 

Time uploaded in London –  8-11 am  (British Summer Time)

 

Post No. 5113

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Charles Steinmetz, the electrical wizard, was an inveterate smoker. When a notice forbidding smoking was posted in the General Electric plant where he worked, Steinmetz ignored it until an executive asked if he was not aware of the rule.  The answer was a cold indifferent stare.

The next day Steinmertz didn’t show up, and for two days no one heard  from him, while important work untouched.  Then began a serious search which ended in the lobby of a Buffalo hotel where he was found sitting at ease in a huge chair puffing a cigar.

 

Told that the whole company was looking for him, and asked why he had left so unceremoniously, he calmly replied, came up here to have a smoke.

After that the smoking rule was never applied to him.

 

Xxx

Profane Archbishop!

A certain Elector of Cologne, who was at the same time Archbishop, had one day made mad use of profane words and then said to a farmer who could not conceal his astonishment,

“Why do you look so surprised?”

The farmer replied, “because an archbishop can be so profane”

 

“I do not swear as an archbishop”, replied that person, but as a prince.

“But Your Highness, answered the farmer, when the prince goes to hell, what will become of the archbishop?”

Profane= to treat something sacred with abuse

xxx

 

HOTELS AND RESTAURANTS ANECDOTES

A game of poker Dolmonico’s had lasted well into the night when one of the party, the late Colonel John R Fellows, ordered a plate of sandwiches. The familiar dainty triangle variety was served and  disappeared instantly. A hungry about went up for more.

 

More sandwiches, waiter, said Fellows.

Yes, sir; how many sir? Returned the waiter.

Well, said Fellows, with a calculating air, judging by the size of your sandwiches and the size of this bill, I should say about 2000 dollars’ worth.

 

Xxx

Mr Disraeli said he did not remember a certain inn, upon which the owner assured  him he must be mistaken.

 

You must remember the house, sir; there was a very handsome bar maid there, monstrous fine gal–  you must have been in Kings Arms sir.

Perhaps, said Disraeli, “if I had been in her arms I might have remembered it.

 

Xxx

For a laconic philosophy, it is hard to match the case of the man who checked into a hotel in small Mid-Western city and went up to his room. Later in the evening he came down, his suit case in his hand,  and checked out.

What is the trouble, sir? Asked the clerk, slightly puzzled.

Don’t you find the room satisfactory?

The room is alright, said the man, except for one thing. It is on fire.

Xxx  SUBHAM xxxx

 

 

 

நீங்கள் மட்டும் சிகரெட் குடிக்கலாம்! (Post No.5112)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 15 JUNE 2018

 

Time uploaded in London –  7-47 am  (British Summer Time)

 

Post No. 5112

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜெனெரல்  எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்தவர் சார்லஸ் ஸ்டெய்ன்மெர்ட்ஸ் ( Charles Steinmetz). அவர் இல்லாமல் கம்பெனி ஓடாது என்று சொல்லும் அளவுக்கு திறமை சாலி. ஆனால் அவரிடம் உள்ள ஒரு தீய பழக்கம் புகை பிடிப்பது- இடைவிடாமல் சிகரெட் பிடிப்பார் அல்லது சுருட்டு புகைப்பார்.

 

ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனி (GENERAL ELECTRIC) திடீரென ஒரு விதி கொண்டுவந்தது. யாரும் கம்பெனி வளாகத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று ஆங்காங்கே போர்டு வைத்தனர். ஆயினும் சார்ல்ஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு அதிகாரி வந்தபோதும் இவர் புகை கக்கிக் கொண்டிருந்தார்.

 

“ஐயா! உங்களுக்கு இந்தக் கம்பெனியில் புகைபிடிக்கக் கூடாது என்ற விதி இருப்பது தெரியாதோ?” என்று கடுமையான குரலில் உரைத்தார். அது சார்ல்ஸின் மனதில் உரைத்தது. ஆயினும் பதில் சொல்லாமல் அதிகாரியை ஏற இறங்க உற்றுப் பார்த்தார்.

 

அதிகாரியும் இடத்தை விட்டு அகன்றார். மறு நாள் சார்ல்ஸ் ஸ்டெய்ன்மெர்ட்ஸ் வேலைக்கு வரவில்லை. நாள் ஒன்று, இரண்டு, மூன்று என்று உருண்டு ஓடின. எல்லோருக்கும் ஒரே கவலை. அவர் சம்பந்தப்பட்ட துறை வேலை அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. உடனே தேடும் வேலை துவங்கியது.

 

அவர் வெகு தொலைவில் ஒரு நகரில் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு வழக்கம்போலப் புகை விட்டுக் கொண்டு இருந்தார்.

என்னப்பா, இது? உன்னை உலகமே தேடிக் கொண்டு இருக்கிறது. என விஷயம்?

அவர் சொன்னார்- ஒன்றுமில்லை- கொஞ்சம் சந்தோஷமாக புகைபிடிக்க இங்கு வந்தேன் என்று.

மறுநாள் அவர் வேலைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் தொடர்ந்து ஊதிக்கொண்டுதான் இருந்தார். யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

 

அறிவுக்கும் திறமைக்கும் அவ்வளவு மதிப்பு. அதனால்தான் பிராஹ்மணர்களுக்கு பெரிய குற்றம் செய்தாலும் மரண தண்டனை கிடையாது என்று மநு முதலியோர் எழுதி வைத்தனர். புத்தரும் மநுவும் பிராஹ்மணர்கள  என்ன செய்தாலும் அவர்களைத் துன்புறுத்தக்கூடாது என்று சொல்லிவைத்தனர் (காண்க தம்ம பதம்)

 

 

அரசர்கள் அட்டூழியம் செய்தாலும் அவர்கள் கொல்லப்படமாட்டார்கள்; பிராஹ்மணர்களைப் போல அரசர்களும்; அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்; இப்படி இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து விரட்டப்பட்ட விஜயன்தான் இலங்கையில் ஒரு சிங்கள சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.

 

ரஷ்ய அரசாங்கத்தை எதிர்த்த எல்லோரும் தொலைதூர சைபீரியாவுக்கு அனுப்பபட்டு தீர்த்துக் கட்டப்பட்டனர். ஆயினும் அந்நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்பப்படும் ஷகாரோவை மட்டும் அரசு கொல்ல வில்லை. கம்யூனிஸ்ட் அரசும் கூட அவருடைய அறிவுக்கு மதிப்பு கொடுத்து, வீட்டுச் சிறை (HOUSE ARREST) மட்டுமே வைத்தது. பிற்காலத்தில் விடுதலையும் செய்யப்பட்டார்.

 

கம்பனுக்கும் சோழனுக்கும் சண்டை வந்த போது கவிச் சக்ரவர்த்தி கம்பன் கோபித்துக் கொண்டு வெளியேறினான்.

 

 

கம்பன் சொன்னான் – உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு? ( “எந்த மரமாவது குரங்கை வேண்டாம் என்று சொல்லுமா? நீ இல்லாவிடில் எனக்கு வேறு ஒரு அரசன் ஆதரவு தருவான்” என்று தொனிக்கச் சொல்லி சென்று விட்டார்.

–SUBHAM–