மாமியின் புலம்பல்கள்- தலையணை மந்திரோபதேசம் (Post No.4794)

Written by London Swaminathan 

 

Date: 28 FEBRUARY 2018

 

Time uploaded in London – 16-02

 

Post No. 4794

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

நடேச சாஸ்திரியார் என்னும் தமிழ்ப் பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான கிராமீயக் கதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். மிருச்ச கடிகம் போன்ற ஸம்ஸ்க்ருத நாடகங்களை தமிழில் சுருக்கி மொழி பெயர்த்துள்ளார். அவர் எழுதிய மற்றொரு நூல் தலையணை மந்திரோபதேசம் என்னும் நூலாகும் இதன் ஐந்தாம் பதிப்பு 1922ம் ஆண்டில் வெளியானது. அதை பிரிட்டிஷ் லைரரியில் கண்டேன். ஒரு சில மந்திரோபதேசம் இதோ–(குறிப்பாக பிராமண வீடுகளில் இது போன்ற புலம்பல்களைக் கேட்கலாம்)

 

 

 

 

 

–SUBHAM–

மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

Written by London Swaminathan 

 

Date: 28 FEBRUARY 2018

 

Time uploaded in London – 8-59 am

 

Post No. 4793

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

மாமிசம் உண்ணுவோரும், குடிகாரர்களும் இந்த பூமிக்குப் பாரம் என்று சாணக்கியன் கடுமையாகத் தாக்குகிறான்; வள்ளுவன் அதற்குப் பின் யாத்த திருக்குறளில் கள்ளுண்ணல் , புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் மாம்ஸ பக்ஷிணிகள் மீதும் குடிகாரர்கள் மீதும் சுத்தி அடி, நெத்தி அடி கொடுக்கிறான். இரு பெரும் அறிஞர்களும் செப்புவது ஒன்றே; இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒன்றாக இருப்பதை அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அண்மைக் காலத்தில் மொழிந்ததில் இருந்தும் நாம் அறிகிறோம்.

சாணக்கியன் எழுதியது சாணக்கிய நீதி ;திருவள்ளுவன் எழுதியது திருக்குறள்.

 

 

ஒரு ஜாடி விஷம்!

 

பரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரிய வாதினம்

வர்ஜயேத் தாத்ருசம் மித்ரம் விஷம் கும்பம் பயோமுகம்

2-5

 

நாம் இல்லாத போது நமக்கு குழிபறிப்பதும், நாம் இருக்கும் போது நம்மை இந்திரனே, சந்திரனே என்று புகழ்வதும்  உண்மையான நட்பு அல்ல; அவன் உண்மையான நண்பன் அல்ல; அவன் பால் போல் இருக்கும் விஷ ஜாடி; அதாவது அடிப்பகுதி முழுதும் விஷம் – மேல் பகுதி மட்டும் பால்.

வள்ளுவன் புகல்வான்:–

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829) –வள்ளுவன் சொல்லுவான்- வெளியே நண்பன் போல நடித்து, மனதுக்குள் நம்மை மட்டம் தட்டுவோனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, மெல்ல ஓடிப் போய்விடுங்கள்.

 

xxxxxx

 

உண்மையான மகன்

தே புத்ரா யே பிதுர் பக்தாஹா ஸ பிதா யஸ்து போஷகஹ

தன் மித்ரம் யஸ்ய விஸ்வாஸஹ ஸா பார்யா யத்ர நிவ்ருத்திஹி

2-4

 

தந்தையிடம் மரியாதையும், விசுவாசமும் உடையவன் உண்மையான மகன்;

மகனை கல்வி, கேள்விகளில் முன்னுக்குக் கொண்டு வருபவன்  உண்மையான தந்தை;

 

நம்பக்கூடிய ஒருவனே உண்மையான நண்பன்;

இன்பமும் மகிழ்ச்சியும் அளிப்பவளே உண்மையான இல்லாள்.

 

வள்ளுவன் விளம்புவதும் அஃதே!

 

மங்கலம் என்பது மனைமாட்சி– குறள் 60 — இல்வாழ்க்கையில் இன்பமும் அழகும் சேர்ப்பது மனைவி.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல் (67) — மகனை முதலிடத்தில் நிற்க உதவுபவன் தந்தை.

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் (70) –இவனைப் பெற, இவன் எந்தை என்ன தவம் செய்தனன் என்று வியக்க வைப்பது மகனின் கடமை.

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

நினைக்கரிய யாவுள காப்பு (781) –நட்பினைப் போல அரிய பொருளோ, பாதுகாப்பு தருவதோ வேறு ஏதேனும் உண்டோ!

xxxx

 

Brahmin Tiruvalluvar with Punul/ Sacred thread of Brahmins; from Chennai

தட்டிக் கேட்கும் அமைச்சன் வேண்டும்

 

நதி தீரேஷு யே வ்ருக்ஷாஹா பர க்ருஹேஷு காமினீ

மந்த்ரி ஹீனாஸ்ச ராஜானஹ சீக்ரம்நஸ்யந்த்ய ஸம்சயம்

2-15

ஆற்றோர மரங்கள் அடி சாய்வது நிச்சயம்;

பிறர் இடத்தில் வாழும்/ வேலை செய்யும் பெண்கள் தாழ்வதும் நிச்சயம்;

மந்திரிகள் இல்லாத மன்னன் அழிவதும் நிச்சயம்;

இவை விரைவில் நடப்பதும் நிச்சயம் (உறுதி)

 

வள்ளுவன் இயம்புவான்:–

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரிலானுங் கெடும் (448)

தட்டிக்  கேட்டு புத்தி சொல்லும்  மந்திரி  இல்லாத மன்னனுக்கு எதிரியே தேவை இல்லை; அவன் தன்னாலே அழிந்தொழிவான்

xxxxx

கொக்கு போல இரு

புத்திசாலி மனிதன் கொக்கு போலக் காத்திருக்க வேண்டும்; தக்க இடம், தக்க நேரம், தனது சக்தி ஆகியவற்றை எடை போட்டு, காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேச கால பலம் ஞாத்வா ஸர்வ கார்யாணி ஸாதயேத்

6-16

வள்ளுவன் பகர்வான்:–

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (490) — அமைதியாக இருங்கள்; நல்ல சமயம் வாய்த்ததும் கொக்கு, மீனைக் கவ்விப் பிடிப்பது போலப் பாயுங்கள்.

 

xxxxx

 

மனிதர் உருவத்தில் மிருகங்கள்!

 

மாம்ஸ பக்ஷைஹி ஸுரா பானைர் மூர்க்கஸ்ச அக்ஷர வர்ஜிதைஹி

பசுபிஹி புருஷாகாரைர் பாராக்ராந்தா ச மேதினீ

8-21

 

இந்த உலகிற்கு பாரம் யார்? புலால் உண்ணுவோர், குடிகாரர்கள், எழுத்து அறிவில்லாத மூடர்கள் ஆகியோர் மனித உருவில் நடமாடும் பிராணிகள் ஆவர். இவர்கள் இந்த உலகிற்குப் பாரமானவர்கள் (நடைப் பிணங்களே)

வள்ளுவன் செப்புவான்:–

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (251)- தன்னுடைய சதையைப் பெருக்க மற்றவற்றின் சதையைத் தின்பவனுக்கு கருணை இருக்குமா?

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன் (258) – மயக்கமும், குற்றமும் இல்லாத அறிஞர்கள், உயிர் போன உடலைத் தின்ன மாட்டார்கள்

 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண்ணுபவர் (926)- தூங்குபவனும் செத்துப்போனவனும் சிந்திக்க முடியாது; அதுபோல கள் குடிப்போரும் அறிவு/ சிந்தனை இல்லாதவரே. அவர்கள் விஷம் குடித்து விழுந்தவர் போல நினைவு தப்பிப் போனவர்களே!

 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா  தவர் (393)-  படித்தவனுக்குக் கண் உண்டு; படியாதவனுக்குக் கண் இல்லை; அவன் முகத்தில் இரண்டு  காயங்களே இருக்கின்றன.

xxx

 

ரஹசியம் காவான் அழிவான்

ஒருவருடைய ரஹசியங்களை மற்றவர்களுக்கு வெளியிடுவோர் பாம்புப் புற்றில் வசிக்கும் பாம்பு போல அழிவார்கள்

 

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதர ஸர்பவத்

9-2

 

வள்ளுவான் உரைப்பான்:–

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் (1076) — தாம் கேட்ட ரஹஸியங்களை ஊர் அறியச் சொல்பவன் திருடன்; அவன் ஒரு டமாரம்; தாங்களாகவே பேட்டை தோறும் அடிக்கும் பறைகள் (டமாரம் அடிப்பவன்).

Orignal Tiruvalluvar Picture from an old book.

இன்னும் வரும்…………………..

 

சுபம்- சுபம்-

பாரதி போற்றி ஆயிரம் – 59 (Post No.4792)

Bharatiyar Drama- Directed by Raman, acted by Ramanan. Picture posted by N Seshadry

Date: 28 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-48 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4792

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

  பாடல்கள் 412 முதல் 420

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்

இமயம் எனது சிரம்

குமரி எனது பதம்

     அமைந்திருக்கும் மாநிலங்கள்

     யாவுமெனது மேனி

 

கமழும் நறும ணங்கள்

சிமயம் தொடுவளங்கள்

    எமதுநாட்டில் யாவுமுண்டு

    எனநிறைந்த நலங்கள்

 

சமரில் தீட்டும் வீரம்

குமரி மூட்டும் காதல்

      சமமெனவே  இரண்டினிலும்

     சாதனைகள் மேவும்

 

எந்தன் பெருமை பாட

சிந்தை மகிழ ஆட

      எந்தநாளும் எனைதுதிக்கும்

      மைந்தருண்டு சூட

 

எண்ணற்ற பெருமைகள் எனக்கி ருந்தும்

   எவருமே அந்நாளில் உணர வில்லை

திண்ணமாய் பண்புகள் நிறைந்தி ருந்தும்

   திசைக்கொருவ ரானதால் பயனு மில்லை

அண்டைநா டுகளாக அருகி ருந்தும்

   அவர்க்குளே பகைமையே வளர்த்தி ருந்தாத்

கண்டவர்க் கெந்நாளும் இடம்கொ டுத்து

   கண்போன்ற தன்னவரை விலக்கி வைத்தார்

 

வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தால்

   வாழ்ந்திட்ட காலமெலாம் எந்தன் மக்கள்

நிரந்தரச் சமாதானம் என்ப தேற்று

    நிம்மதியாய் ஒருபோதும் வாழ்ந்த தில்லை

தரமற்ற மிகயெளிய கார ணத்தும்

   தமக்குள்ளே மிகக்கொடிய சண்டை யிட்டு

உரம்வாய்ந்த தமதுடலை மண்ணில் சாய்த்தார்

   உயிர்காக்கும் ஒற்றுமையின் வேர றுத்தார்!

 

அத்தகைய வீரத்தை அந்நாள் வந்தே

    அள்ளியே சென்றமுக மதியர் மீது

மொத்தமாய் செலுத்தியே எதிர்த்தி ருந்தால்

    மொகலாய சாம்ராஜ்யம் இங்கே ஏது?

எத்தர்களாய் வெள்ளையர்கள் வந்த போது

   இவர்களே கனிகளென நாட்டைத் தந்தார்

சித்தமதில் உறுதியுடன் எதிர்த்த பேரோ

    சிலரென்ப தாலவரும் அடிமை யானார்

 

எப்படியோ ஆங்கிலேயன் வந்த தாலே

    என்வடிவம் ஒன்றாகி எழுந்து நின்றேன்

அப்பொழுது வரைதுண்டு துண்டா கத்தான்

    அங்கங்கள் ஒடிபட்டு வீழ்ந்தி ருந்தேன்

எப்படிநான் சொல்லிடுவேன் என்மைந் தர்தாம்

    ஏதோவொரு அந்நியனால் எனையு ணர்ந்தார்

இப்பொழு தேனுமிந்த அன்னை தன்னை

    ஏற்றாரே எனயிதயம் நெகிழ்ந்தேன் யானே!

 

தேசம் அடிமைப் பட்டதாலே – இங்கே

    தேசிய உணர்வு எழுந்ததுவே

பாசம் அகன்ற நெஞ்சமெனும் – அந்தப்

    பாறை களில்நீர் சுரந்ததுவே

நாசம் புரியும் அந்நியரை – இந்த

    நாட்டினர் யாவும் ஒன்றாகி

நேசம் மிகுந்து இணைந்திட்டால் – நாம்

    நிச்சயம் வெல்வோம் என்றுணர்ந்தார்

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

 

Picture posted by Manion cgs from Bharatiyar Drama

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.

சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

ANIMALS IN HUMAN FORM; ATTACK ON MEAT EATERS AND DRUNKARDS (Post No.4791)

 

Image result for image of chanakya niti book

ANIMALS IN HUMAN FORM; ATTACK ON MEAT EATERS AND DRUNKARDS (Post No.4791)

Written by London Swaminathan 

 

Date: 27 FEBRUARY 2018

 

Time uploaded in London – 21-26

 

Post No. 4791

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Parallel Verses from Chanakya Niti and Tamil Tirukkural

 

 

Great men think alike! Look how Chanakya and Tiruvalluvar agree on many important topics:-

 

ON SONS and WIVES

Chanakya Niti

They are the real sons who are devoted to their father, father is one who brings up the off spring, a friend is one who can be trusted, a wife is one who gives happiness.

Chanakya Niti 2-4

ON WIFE

If the wife possesses a noble soul, what more does a man want? Tiruvalluvar in Tirukkural 53

A good wife brings beauty and happiness to family life- Tirukkural 60

ON SONS

What a father is expected to do his son is to make him fit to hold the foremost place among the learned – Kural 67

The duty of the son to the father is to make others exclaim ‘what penance has he done to blessed with such a worthy son’- Kural 70

ON FRIENDS

There is nothing so rare to achieve as a good friendship

And no better armour against enemy machinations.- Kural 781

xxxx

 

 

ON BAD FRIENDS

one should keep away from a friend who harms the mission in one’s absence, but talks sweetly when face to face. He is a jar of poison with milk in its top.

Chanakya Niti 2-5

 

Persons who feign great friendship but full of hatred inside,

Should be crushed, while humouring them –Kural 829

xxx

ON MINISTERS

Trees on the banks of a river, a woman in the household of others and kings with no ministers come to naught, for sure, in all quickness.

Chanakya Niti ,2-15

Without courageous counsellors to point out his faults and so protect him

A king will ruin himself, even without foes – Kural 448

xxxx

 

FOLLOW A CRANE/HERON

A wise man should accomplish all things with a brake on his senses like a crane waiting for the proper time, place and his own capacity.

Chanakya Niti, 6-16

In adverse time, feign peace and wait like a heron. Strike like its peck when  the time is opportune – Kural 490

 

xxx

ON MEAT EATERS AND DRUNKARDS

The earth is weighed down with animals in human form who are meat eaters, drunkards, the unlettered fools.

Chanakya Niti, 8-21

 

How can a man be compassionate who, for the purpose of increasing his own flesh, eats the flesh of other animals? – Kural 251

The wise will not eat flesh from which the life has departed- Kural 258

 

The sleeping and the dead are in no way different; those that drink are always like them that eat poison – Kural 926

The learned alone have eyes on their face; to the ignorant, they are two sores- Kural 393

 

xxx

ON MEANNESS

Those vile men who speak about or disclose each other’s secrets come to naught, for sure like a snake in the ant hill.

Chanakya Niti, 9-2

The mean are like the drum that is beaten, for they hear secrets and betray them – Kural 1076

 

to be contined………………….

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? (Post No 4790)

RESEARCH ARTICLE Written by London Swaminathan 

 

Date: 27 FEBRUARY 2018

 

Time uploaded in London – 14-15

 

Post No. 4790

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

This follows my earlier articles that shows t English and other languages came from the root words of Sanskrit and Tamil

 

 

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும்  தோன்றினவா? (Post No 4790)

நான் 50 ஆண்டுகளாக மொழி ஆராய்ச்சி செய்கிறேன். சின்னப் பையனாக இருந்த போது காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) ஸம்ஸ்க்ருதம்- ஆங்கிலம் தொடர்பு பற்றிப் பேசிய உபந்யாஸத்தில் மாதா=மதர், ப்ராதா= ப்ரதர், ஹோரா= ஹவர் (MAATHAA-MOTHER, BRAATHAA- BROTHER, HORA- HOUR) இப்படிப் பல சொற்களை மேற்கோள் காட்டி மொழிந்த சொற்பொழிவு அது.

 

(அந்தக் காலத்தில் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நுல் கிடையாது; காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பேருரைகளை மடத்தினரே சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டனர்; பின்னர் கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அவைகளில் அவர் சொன்ன ஸம்ஸ்க்ருத ஸ்லோககங்கள் அப்படியே ஸம்ஸ்ருதத்தில் இருக்கும்; இப்போதும் அந்தப் புஸ்தகங்கள் சில என்னிடம் உள்ளன)

உலகம் முழுதும் மொழியியலாளர்கள் (LINGUISTS) இன்று வரை ஒப்புக்கொண்ட ஒரு “உண்மை” — இந்திய ஐரோப்பிய மொழி (INDO- EUROPEAN )ஒன்றின் கிளையே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகள் என்பதாகும். பின்னர் மதுரைப் பல்கலைக் கழக லைப்ரரி உறுப்பினராக இருந்தபோது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் சுமார் 1380 ஆங்கிலச் சொற்களுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பை ஒருவர் மொழியியல்  ரீதியில் சமர்ப்பித்து காசி இந்து பல்கலைக் கழகத்தில் (BENARES HINDU UNIVERSITY) டாக்டர் பட்டம் வாங்கிய நூல் அது. அந்த நூலை அப்படியே

கைப்பட ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்தில் எழுதி லண்டனுக்கு கொண்டு வைத்து இருக்கிறேன்.

 

பின்னர் லண்டனுக்கு வந்து வசிக்கத் தொடங்கியபோது,  25 ஆண்டுகளுக்கு முன்னர்,  பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரன் (30-09-1991)என்ற மொழி ஆர்வலரைப் பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள்

தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.

 

அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.

 

அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.

 

எமனோ, பர்ரோ போன்ற அறிஞர்கள் திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி,  நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS)  முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.

 

ஆக நான் கண்ட உண்மை இதுதான்:

உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தம்ழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் கா, கீ, கு, கொ,கெ, கோ, கே என்ற சொற்களில் துவங்கும்; மனிதன் அவைகளின் ஒலியில் இருந்து உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.

 

 

உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.

 

சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்

எம் வி பி (M=V=P/B) என்பன இடம் மாறும்

ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்

T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)

மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்; கண்ணாடி விளைவு.

 

அதாவது யாளி  (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)

 

தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.

ஆக எனது கொள்கை இதுதான்.

 

ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.

 

ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்

 

 

ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே. கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; ஆதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!

இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

COGNATE WORDS

 

சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்

Tamil/ Sanskrit                                          English

 

Deivam/ Deva                                     Deo தெய்வம்;

Kadavul                                               God கடவுள்

Periya/ Bruhath                                               Big பெரிய

Ondru                                                  One ஒன்று

Ettu /Ashta                                                      Eight எட்டு

 

Paraththai/ Para Stree                                    Prostitute பரத்தை

Veera                                                              Hero வீரன்

Manathu/ Manas                                            Mind மனது காம

Kama/ Kama                                       amorous காம

Patha=Adi                                                        Path, Pedestal, Foot பத, பாத, அடி

Dharma=aram                                    Moral அறம்

Neer                                                                Nereids= water nymphs நீர்

Puttil                                                                Bottle புட்டில்

Arukan/ Bargo                                    Argos (light, sun) அருகன்

Andira/ Aindra/Indra                          Andrew (English name) அண்டிரன் /ஐந்திர,  இந்திர

Pillai                                                                Fille (French) பிள்ளை

Tarai                                                                Terrain தரை

Tele (phone, scope, vision)                 Tolai தொலை

Pazaiya                                                            Paleo (ntology) பழைய

Piththu                                                 Fad பித்து

Kuuli                                                                Ghoul/Ghost கூலி

Vathuvai /Bride                                               Wed வதுவை

Paiyul (Purananuru)                            Paiyon (Greek)= song பையுள்

Aiyavi (smallest seed)                         Iota ஐயவி

Maaya                                                 Magic (g=y) மாய

Staanu/ Thun                                      Stand தாணு

AAndu                                                  Annum, annual ஆண்டு

 

Duusi                                                               Dust தூசி

 

LIST 2 OF COGNATE WORDS

TAMIL WORDS                        ENGLISH WORDS

ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்;  AUGURY- ARIKURI அறிகுறி

ARABLE- ER UZAKKUUTIYA ஏர் உழுதல்;

APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்

 

ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்

MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து;  AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடை

ADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகு

BETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்

BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்பு

BARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்

 

BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;

BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;

BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்கு

 

C

CONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடு

COIR- KAYIRU  கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திரு

 

CHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்பு

CRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறை

CASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;

CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI  கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு  குறுகிய

COLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டு

CUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்

CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓர

CYST- KATTI  கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்

 

Words about genital organs are same In most of the languages with slight changes)

This is not a comprehensive list; only some examples are given.

 

–subham–

ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – (கடைசிப் பகுதி) POST.4789

Date: 27 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-42 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4789

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (கடைசிப் பகுதி)

 

ச.நாகராஜன்

 

 

கவர்னர் அறையில் உள்ளே நுழைந்த உயர் அதிகாரி பதறிப் போய் ஹூ ஆர் யூ என்றார் என்னப் பார்த்து.

அறிமுகம் செய்து கொண்டேன். அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை வந்து விட்டேன். ஒரு சின்ன சப்மிஷன் தான். இரண்டு நிமிட வேலை தான்.

அந்த நேரம் கவர்னர் உள்ளே வந்தார்.

 

யார் – மெல்லிய குரலில் கேட்டார்.

சொன்னேன்.

என்ன விஷயம்?

மிகச் சுருக்கமாக விளக்கினேன்.

 

ஆர்டர் வந்தது.எக்ஸ்கியூட் செய்தோம். இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தவர் முறையாக பாஸ் செய்தார். இதோ டாகுமென்ட்ஸ்.

அந்தமான் சென்றவுடன் அனைத்தையும் ரிஜக்ட் செய்தார்.

அங்கே எதையும் செய்ய வசதி இல்லை. பெருத்த பொருட்செலவில் மீண்டும் பேக்டரி கொண்டு வந்தோம். இந்த முறை அனைத்து ரா மெடீரியல் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளின் முன் அதிகாரி சொன்னவற்றைச் செய்தோம். இதோ இன்ஸ்பெக்‌ஷன் ரிபோர்ட். கண்டெய்னர்கள் மீண்டும் அனுப்பப்பட்டன. இப்போது மீண்டும் பல டெஸ்டுகள் என்கிறார்கள். நீங்கள் தான் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் அழகுற தரப்பட்டன.

கூர்ந்து கேட்ட கவர்னர் மார்பின் மீது கை வைத்தார். நான் பார்த்துக் கொள்கிறேன். அவரது கனிவான செய்கைக்கு நன்றி கூறி கவர்னர் மாளிகை சீலை டாகுமெண்டில் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.

 

பத்து நிமிடத்தில் வேலை – மகத்தான வேலை – முடிந்தது.

பின்னர் மாலை அரவிந்த ஆசிரம தரிசனம்

மறுநாள் ஊர்.

 

நிர்வாகத்திடம் விளக்கினேன்.

எல்லோருக்கும் புரிந்தது – செய்யக்கூடியது அனைத்தையும் நான் செய்து விட்டேன் என்று.

அடுத்து என்ன?

டைரக்டருக்கு போன் செய்தேன். வரலாமா?

வாருங்கள்.

மறுநாள் அந்தமானில் ஆஜர்.

கவர்னரைப் பார்த்தாயிற்று போலும்!

 

ஆம், சார் இவ்வளவு பெரிய் பதவியில் துடிப்பாக இருக்கும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா? ஆச்சரியமாக இருக்கிறது.

வாருங்கள், சாப்பிடப் போகலாம். என் காரிலேயே வாருங்கள். உங்களை லாட்ஜில் டிராப் செய்கிறேன்.

 

போகும் வழியில் இந்தத் தீவில் மாட்டிக் கொண்ட துயரத்தை ஒரு பாட்டம் அழுதார். அவர் நட்சத்திரம், ராசி, லக்னம், இப்போது நடக்கும் தசை, புக்தி அது முடியும் தேதி என்று விலாவாரியாகச் சொல்லிப் புலம்பினார்.

 

லாட்ஜ் வந்தது. நாளை பார்க்கிறேன். தேங்க்ஸ்!

மறுநாள் காலை பத்தரை மணி.

அவர் ரூமில் நுழைந்தேன்.

சார்! உங்களுக்கு ஒரு நற்செய்தி!

எனக்கா? குட் நியூஸா?

ஆமாம் சார், உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாக சென்னை தான்!

அவர் துள்ளிக் குதித்தார்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரு பேப்பரை அவர் முன்னால் போட்டேன்.

 

அதில் அவரது ஜாதகக் குறிப்பும், கோசார ரீதியாகவும், தசா புக்தி ரீதியாகவும் நடப்பதைச் சுட்டிக் காட்டினேன். அன்றிலிருந்து 45 நாட்களில் எல்லாம் முடிந்து விடும். டிரான்ஸ்பர் உறுதி.

 

அவர் உடனடியாக போனில் மனைவியை அழைத்தார். சார் சாப்பிட வருகிறார். உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல வருகிறார். அவரே சொல்வார்.

 

வீட்டில் அவரது மனைவி காத்துக் கொண்டிருந்தார்.

அறிமுகத்திற்குப் பின்னர் அவரிடம் சொன்னேன்.

சாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாகச் சென்னை தான். வீட்டில் இருக்கும் குப்பை கூளத்தை எல்லாம் டிஸ்போஸ் செய்யுங்கள். குப்பை போகப் போக இன்கிரிமெண்ட் நிச்சயம். உடனே ஆரம்பியுங்கள். பாதியை கிஃப்டாகத் தந்து விடுங்கள். கிளம்புகிற வழியைப் பாருங்கள்.அவரால் நம்ப முடியவில்லை. பல வருடமாக டிரை செய்கிறார்.

 

சார், நீங்கள் கிளம்பும் முன் எனக்கு ஒரு வழியைச் செய்யுங்கள். இன்னொருவர் உங்கள் இடத்தில் வந்தால் அடியைப் பிடிடா என்று அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் என்னை ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

 

சாப்பிட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

அலுவலகம் வந்தவுடன் நீங்கள் கிளம்புங்கள் என்றார்.

நாளை உங்கள் ஃபிரண்ட் பத்தரைக்கு என் ரூமுக்கு வருவார். அவர் வந்த மூன்று நிமிடத்திற்குப் பின் உள்ளே வாருங்கள். ஒரு எச்சரிக்கை. உங்களைத் திட்டுவேன். உங்கள் நிறுவனத்தைத் திட்டுவேன். கோபப் படாதீர்கள்!

இப்படி க்ளூ கொடுத்து விட்டீர்களே. நன்றாகத் திட்டிக் கொள்ளுங்கள்.

 

ஏதோ ஒரு பெரிய டிராமா அரங்கேறப்போகிறது.

நான் தயார் தான்!

 

மறுநாள் பத்து மணிக்கு ஒரு மரத்தின் பின்னால் நின்றிருந்தேன்.பங்காளி நண்பர் உள்ளே சென்றார். சரியாக மூன்று நிமிடம் கழித்து உள்ளே நுழைந்தேன்.

கொதித்தெழுந்தார் டைரக்டர்.

 

மேஜையை ஒரு குத்து குத்த பேப்பர் வெயிட்டுகள் உயரப் பறந்தன.

 

வந்துட்டான்யா மூஞ்சியைக் காண்பிச்சுகிட்டு. தினமும் இதே எழவாப் போச்சு. பேரு பெத்த பேரு.ஆனா ஃபிராடு நிறுவனம்

இந்த கவர்ன்மெண்டை ஏமாத்த விட மாட்டேன். என்ன ஆனாலும் சரி. மீண்டும் மேஜையில் ஒரு குத்து. பேப்பர்கள் பறக்க பேப்பர் வெயிட்டுகள் அறையின் நாலா புறமும் சிதறின.

பியூன் உள்ளே வர நடுங்கினார்.

 

அனைவரும் ஜன்னல் வழியே, கதவு வழியே எட்டிப் பார்த்தனர்.இப்படி ஒரு கோர தாண்டவத்தை அவர்கள் இது வரை பார்த்ததில்லை.

 

அரை மணி நேரம் எனக்கும் நிறுவனத்திற்கும் திட்டு. பின்னர் காட்சி மாறியது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மதுரை சென்றீர்கள். அரசாங்கப் பணத்தில். அனைத்தையும் அப்ரூவ் பண்ணினீர்கள். இங்கு வந்த பிறகு ஒரே பல்டி. வெட்கமாயில்லை. உங்கள் கையெழுத்தை நீங்களே மதிக்கவில்லை. சரி, இவர் என்ன செய்தார்? பணம் போனாலும் பரவாயில்லை என்று அனைத்து கண்டெய்னர்களையும் திரும்ப எடுத்துச் சென்றார். திரும்ப அங்கு சென்றீர்கள். மைண்ட் இட். அரசாங்கப் பணத்தில்! உயர் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்தார். பக்கம் பக்கமாகக் கையெழுத்துப் போட்டீர்கள். அவமானமாயில்லை. உங்கள் கையெழுத்துத் தானே! இங்கு வந்தவுடன் புதிய டெஸ்ட் தேவை என்கிறீர்கள். இந்த ப்ராஜெக்டுக்கு அரசு ஒதுக்கிய கால அவகாசம் முடியப் போகிறது. ஒன்று இதை முடியுங்கள் அல்லது டிபார்ட்மெண்டையே முடித்து விடுவேன்.

மேஜையில் மீண்டும் ஒரு குத்து. இன்னும் பத்து நிமிடம் டைம் தருகிறேன். பத்தே நிமிடங்கள். அனைத்து பேப்பர்களும் கையெழுத்திட்டு என மேஜைக்கு வர வேண்டும். இந்த கண்டெய்னர்கள் சரி இல்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே. உங்களிடம் இத்தனை லட்சத்தையும் ரிகவர் செய்வேன். கவர்னர் ஆர்டர் வேறு வந்து விட்டது.

 

ஒரு வழியாக ஓய்ந்தார்.

பலர் அங்கும் இங்கும் ஓடினர்.

 

அடேயப்பா! இன்னும் இவ்வளவு பேப்பர்களில் கையெழுத்து தேவையா. அதிசயித்தேன்.

 

பத்தாம் நிமிடம் பல கத்தை பேப்பர்கள்.  கிரீன் இங்கில் மளமளவென்று கையெழுத்தை விளாசித்

தள்ளினார்.நடுநடுங்கிய பங்காளி பாபு ஓரம் கட்டப்பட்டார்.

அடுத்து அக்கவுண்ட்ஸ் மேனேஜரை சம்மன் செய்தார்.

“இதோ, எல்லாம் ரெடி. இவரது பேமெண்ட் செக் எங்கே?

“பதினைந்து நாளில் அனுப்பிடலாம் சார்!

மீண்டும் மேஜையில் ஒரு குத்து!

 

என்ன விளையாடுகிறீர்களா? இந்த ப்ராஜெக்டின் பணத்தின்  மீது கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. அது வந்து பல மாதமாக ஆகிறது. எங்கே அது? பத்து நிமிடத்தில் செக் வேண்டும். கையெழுத்துப் போட நான் ரெடி. எவ்ரிதிங் இஸ் இன் ஆர்டர் நௌ!

 

அவர் ஆடிப் போனார். சார், நாளை மத்தியானம் தருகிறேன் சார்.

 

நோ, நோ! காலை பத்து மணிக்கு என் டேபிளில் இருக்க வேண்டும். அவ்வளவு தான், எல்லாரும் போகலாம்!

என்னைப் புன்முறுவலுடன் பார்த்தார்.

திருப்தி தானே – கண்ணால் கேட்டார். கோடி தேங்க்ஸ் – கண்களினால் பதில்!

 

எப்போது கிளம்ப வேண்டும்?

ஒப்பன் டிக்கட் தான் சார்!

 

நாளை மறுநாள் எர்லி மார்னிங் கிளம்புங்கள்.

மறுநாள் காலை பத்து மணி. கத்தை கத்தையான பேப்பர்களில் அப்ரூவல்கள். ஒரு செக்!

 

அடேயப்பா! பிரம்மாண்ட தொகை!

 

கோடி நன்றி சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன். மறக்க முடியாத மாபெரும் தமிழர்!

 

ஊர் வந்து சேர்ந்தவுடனேயே தாக்கீது.

உடனடியாக ஹெட் ஆபீஸில் போர்டு மீட்டிங் அறைக்கு வர வேண்டும்.

 

அலறி அடித்துக் கொண்டு வண்டியில் விரைந்தேன்.

அங்கு சார், உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்ற அலுவலர் என்னை இழுத்துக் கொண்டு போர்டு மீட்டிங் நடக்கும் பிரம்மாண்ட அறைக்குச் சென்றார்.

அங்கு யாரும் போகக் கூடாதே!

 

கதவைத் திறந்து இதோ வந்து விட்டார் என்றார்.

மெதுவாக உள்ளே நுழைந்தேன். பேசவே இல்லை. செக்கை எடுத்து மேடத்திடம் நீட்டினேன்.

 

அதை வாங்கிப் பார்த்தார். திகைப்பு. பிறகு மலர்ச்சி. அடுத்தவரிடம் செக்கை நீட்டினார். அவர் வாங்கிப் பார்த்தார். அடுத்தவர், அடுத்தவர்.

 

ஹௌ இட் ஹாப்பண்ட்?

 

நிறுவனத்தின் கமிட்மெண்ட் .. பள பளா. அரை நிமிடத்தில் நிறுத்திக் கொண்டேன். செக்கை கேட்டேன். ஆபீஸில் தர வேண்டுமே!

 

இல்லை, என்னிடமே இருக்கட்டும். தன் ஹாண்ட் பாக்கில் வைத்துக் கொண்டார்.

 

மெதுவாகப் படி இறங்கினேன். உயர் அதிகாரிகள் வந்து என்னஎன்ன என்றனர். நடந்ததைச் சொன்னேன். ஒரே பாராட்டு.

 

ஆபீஸுக்கு செல்வதற்குள் விஷயம் பரவ அனைவருக்கும் ஆனந்தம்.

அந்த போர்டு மீட்டிங் முக்கிய டெஸிஷன்களை எடுக்கும் க்ரூசியல் மீட்டிங்காம். கட் கட் கட். ஒரே வதந்தியில் மூழ்கி இருந்தது ஆபீஸ்.

ஆனால் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டதாம். காபி மீட்டிங்காக.

 

ஒரே நிம்மதிப் பெருமுச்சு – எங்கும்!

பின்னர் அருமை நிறுவனத்தை விட்டு விருப்பத்துடன் விலகினேன்.

 

சென்னை வந்து இன்னொரு கம்பெனியில் மானேஜர் ஆனேன்.

ஒரு நாள் கீழ்க்கட்டளை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது.

 

அட, என்ன அழகாக இருக்கிறது,பாருங்கள், ஃபிஷரி டிபார்ட்மெண்ட் – டிரைவரிடம் சொன்னேன்.

ஆமாம் சார், நல்ல ஒரு டைரக்டர் வி.கி…. பெயரைச் சொன்ன அவர் சிரத்தையுடன் எல்லாம் செய்கிறார் சார்.

என்ன என்று ஒரு உற்சாக அலறல் அலறினேன்.

என்ன சார், டைரக்டரை உங்களுக்குத் தெரியுமா?

புன்முறுவல் பூத்தேன்.

 

கார் சர் என்று தார் சாலையில் வழுக்கி ஓடியது!

 

சொந்த சர்வைவலுக்காக, பெரும் பணத்தொகையைப் பெறுவதற்காக ஜோதிடத்தைத் தவறாக மூன்றாம் முறையாக என் கேரியரில் கையாண்டிருக்கிறேன்.

தப்பு தப்பு தான்!

 

 

இறைவனின் வழிகள் விசித்திரமானவை. அவன் வழிமுறைகள் என்னவென்று எனக்கே தெரியாது என்று வேத வியாஸரே சொல்லி விட்ட பின்னர் அற்பன் நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்!

மஹாகணபதியே துணை!

 

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

****

ஜோதிட கட்டுரைகள் மூன்றும் (3+1) முடிந்தன.

ஒரு தாஸியின் எட்டு அடுக்கு மாளிகை (Post No.4788)

Date: 26 FEBRUARY 2018

Time uploaded in London- 17-53

Compiled by London swaminathan

Post No. 4788

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்ரகன் என்ற மன்னன், ஸம்ஸ்க்ருதத்தில் ம்ருச்ச கடிகம் என்ற நாடகத்தை எழுதினான். இது மிகவும் அருமையான நாடகம். இதை நடேச சாஸ்திரியார் என்னும் பேரறிஞர் தமிழில் வசன ரூபத்தில் எழுதினார். பிற்காலத்தில் பண்டிதமணி கதிரேச செட்டியார் நாடகமாகவே தமிழில் மொழி பெயர்த்தார்.

இதில் வரும் சகாரன் என்னும் கதபாத்திரம் பெரும் துஷ்டன். எல்லாம் தெரிந்தது போல எல்லாவற்றையும் திரித்துப் பேசுவான். ‘’ராமாயணத்தில் திரவுபதி இப்படிச் சொன்னாளே’’ என்பான். திருடர்களின் தெய்வம் சுப்ரமண்ய சுவாமி என்ற செய்தியும், திருடர்களுக்கான ஸம்ஸ்க்ருத நூல் பற்றிய செய்தியும், கன்னம் வைக்கும் முறைகளும் இதில் வரும்  சுவையான விஷயங்கள். இங்கே வசந்த சேனை என்னும் தாசியின் எட்டு அடுக்கு மாளிகை பற்றிய செய்தியை மட்டும் தருகிறேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எவ்வளவு செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது என்பது இந்த நாடகம் மூலம் தெரிகிறது.

 

 

 

 

 

 

–subham–

Divorce Anecdotes (Post No.4787)

Date: 26 FEBRUARY 2018

Time uploaded in London- 11-07 am

Compiled by London swaminathan

Post No. 4787

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

AMERICA- HOME OF THE BRAVE

 

A large number of divorces indicate that America is still the” land of the free”, someone observed.

‘Yes’,said his friend, “but the steady level of the marriage rate shows that it is still the home of the brave”.

 

Xxx

ENOUGH IS ENOUGH

When Mrs Pierre Riendeau,  79 years old, asked for a legal separation from her 86 year old husband, the judge asked how long they had been married,

“Sixty years”, she replied.

Why are you seeking a separation after all this time ?, the court asked.

Enough is enough, she said

 

Xxx

DIVORCE WITHOUT QUARREL!

 

After the manner of Hollywood’s “civilised” social practices, Lewis Brown, the writer, and his exwife appeared together at a party and listened to the announcement of their divorce by a radio commentator.

Leopold Stokowski was among the guests, and said to Browne

“It is very indecent of you to be having such a good time.

At least when my wife and I were divorced, we quarrelled”.

 

Xxx

SWEET REVENGE!

Ilka chase likes to tell the story of the aftermath of divorce from Louise Calhern. His next wife was Julia Hoyt. Miss Chase, going through a trunk, found a box of handsome, engraved cards , bearing simply the name, Mrs Louise Calhern . Feeling it is a shame that they should go to waste, she wrapped them up and sent them to her successor , with the little Note,

“Dear Julia, I hope these reach you in time”.

 

Xxxx

 

ONE HEAD ONLY!

After the death of Jane Seymour, Henry VIII had some difficulty in getting another wife. His first offer was to the Duchesses Dowager of Milan, but her answer was, she had but one head, if she had two, one should have been at his service.

 

–SUBHAM–

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)

Venganur Temple Paintings; from Ponnambalam Chidambaram post

Date: 26 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-48 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4786

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

ச.நாகராஜன்

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (Post No.4786)

 

 

சுமார் 28 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்.

அலுவலக மேலிட நிர்வாகத்திடமிருந்து மிக சீரியஸான தாக்கீது வந்து விட்டது.

 

அவரவர் தங்கள் worth  prove பண்ணுங்கள்! சுருக்கமான மெஸேஜ் தான். லவுட் அண்ட் க்ளியர்!

அந்தமானிலிருந்து டெண்டர் வந்தது.ரெஃப்ரிஜரேடட் கண்டெய்னர் கட்ட.

கோட் quote அனுப்பினோம்.

ஆர்டர் வந்து விட்டது. அதிசயம். மளமளவென்று வேலைகளை ஆரம்பித்தேன். சகாக்கள் அதிர்ஷ்டக்காரர் என்று  சொன்னார்கள்.

 

வேலை முடிந்தது. அந்தமானிலிருந்து உயரிய ஆபீஸரை அனுப்புமாறு ஃபேக்ஸ் கொடுத்தேன்.உடனடியாக வந்து விட்டார். எந்த வித சான்ஸும் எடுத்துக்  கொள்ள விருப்பமில்லை. ஆகவே ரா மெடீரியல் பர்சேஸ், அதன் தர் நிர்ணய சான்றிதழ், வேலை நேர்த்தி என ஒவ்வொரு பார்ட்டையும் வந்தவருக்கு விளக்கினேன். அவர் ஒரு பங்காளி பாபு.

 

 

ஒவ்வொன்றையும் செக் செய்தார். நுணுக்கமாக ஆராய்ந்தார். பின்னர் கையெழுத்திட்டார் – பேப்பர் பேப்பராக.

அனைத்தையும் கவனித்த நிர்வாகத்திற்கு சந்தோஷம்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

இவற்றை நல்லபடியாக அந்தமானில் இறக்கி ஒப்படைக்க வேண்டுமே!

ஏற்பாடுகள் மளமளவென்று நிறைவேறின. எனது அஸிஸ்டண்ட்  ஒருவர் அங்கு சென்று மேற்பார்வை பார்த்து கப்பலிலிருந்து கிரேன் தூக்குவது வரை பத்திரமாகப் பார்த்து அனைத்து கண்டெய்னர்களையும் உரிய முறையில் ஒப்படைத்து நல்ல முறையில் பெற்றுக் கொண்டோம் என்ற ரசீதையும் வாங்கி வந்தார்.

 

 

அனைவருக்கும் ஒரே சந்தோஷம்.

பத்து நாட்கள் கழித்து ஒரு பேக்ஸ் அனுப்பினோம் – பேமெண்ட் வாங்க வரலாமா என்று.

வந்தது பதில் அல்ல – இடி!

 

 

பேமெண்டா எதற்கு? எதுவுமே சரியாகக் கட்டப்படவில்லை. உடனடியாக ஒரு பெரிய டீமை அனுப்பி இங்கேயே சரி செய்யுங்கள். மற்றதைப் பற்றிப் பின்னர் யோசிக்கலாம்!

அனைவருக்கும் பகீர் என்றது.

 

மேலிடம் அவசர சம்மனை அனுப்ப அனைத்து பேப்பர்களையும் காண்பித்து ரப்பர் ஸ்டாம்புடன் உரிய கையெழுத்தை அனைத்து ஆவணங்களிலும் வாங்கியதைக் காண்பித்தேன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நேரில் போய்ப் பார்க்கிறேன்.

 

அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.

 

காலை 10 மணி. டைரக்டரைப் பார்த்தேன். ஒரு தமிழர். இளைஞர். சிரித்த முகம். பண்பாட்டின் உரு. லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. சென்ட்ரல் கவர்ன்மெண்டின் உயர்தர அதிகாரி.

அவருடன் அழாக் குறையாக அவரது ஆள் தந்த சர்டிபிகேட்டுகள், அப்ரூவல் ஆகியவற்றைக் காண்பித்து, வந்த ஃபேக்ஸையும் காண்பித்து, “இது நியாயமா ஸார்! என்று குமுறினேன்.

 

 

அவர், யார்டுக்குப் போய் அவரைப் பாருங்கள் என்றார்.

சென்றேன். மதுரை அப்ரூவல் ஒரு பேஸிக் அப்ரூவல் தான். இங்கு டெஸ்டுகள் உண்டு. அதில் பாஸாக வேண்டும். ஆனால் இவை pass ஆகாது. ஆகவே ஒரு பெரிய டீமை அனுப்புங்கள். பார்க்கலாம்.

 

ஆர்க்யுமெண்ட் எதுவும் செல்லுபடியாகவில்லை.

ஐந்து நாட்கள் ஓடின. நிர்வாகத்திடம் தெரிவித்தேன். என்ன செய்யலாம்?

 

இங்கு ஒன்றும் செய்ய முடியாது. கடற்கரை பரந்த வெளி. கண்டெய்னர்களை மதுரை கொண்டு வர வேண்டியது தான்.

ஓகே. கொண்டு வாருங்கள்.

 

டைரக்டரிடம் சென்று சொன்னேன். “ ஆனால் இது அநியாயம் சார்

“இவன் இப்படித்தான். இரண்டு கம்பெனிகளைத் தவிர தீவுக்குள் வேறு யாரையும் வர விட மாட்டேன் என்கிறான். ஆல் தி பெஸ்ட்

 

பெருத்த செலவில் கண்டெய்னர்கள் திருப்பிக் கொண்டுவரப்பட்டன.

 

அனைவரும் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஆனால் தீவிர ஒத்துழைப்பை நல்க ஆரம்பித்தனர். இது அசாதாரணமான ஒன்று தான்.

மீண்டும் அந்தமான் அதிகாரியை வரவழைத்தோம்.

அந்தந்த ரா மெடிரியலின் கம்பெனியின் உயர்தர அதிகாரி வந்து முகாமிட்டார். பிரஸ்டிஸ் இஷ்யூ ஆகி விட்டது.

சீலண்ட் கம்பெனியோ ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து தனது ஆட்களை அனுப்பியது.பெரிய டீம்.

வந்தவரிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டோம்.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதன்படி செய்கிறோம். எதானாலும் இங்கேயே ஃபைனல்.

 

 

சுமார் 30 அடிக்கு 60 அடி குடோனை வைத்து ஆட்டம் போடும் அவர் நூற்றுக்கணக்கான பிரமாண்டமான மெஷினரிகள், பல நூறு தொழில்நுட்ப தொழிலாளிகள், ஏழே கால் ஏக்கர் (பல்லாயிரம் சதுர அடி) பரப்பிலான ஃபேக்டரி ஆகியவற்றை பார்க்கத் தான் செய்தார்.

 

 

என் விதி, விடவில்லை – அவ்வளவு தான்!

எல்லாம் முடிந்தன. ஒவ்வொரு பேப்பராக கையெழுத்து வாங்கப்பட்டது. அவர் வந்தால் தான் வேலை துவங்கும். 10 மணி நேரம் பார்க்கச் சொன்னாலும் அனைத்துத் தொழிலாளர்களும் அபாரமான ஒத்துழைப்பை நல்கினர்.

எல்லாம் pass!

 

 

கண்டெய்னர்களை அந்தமான் அனுப்பலாம் என எழுத்துபூர்வமாக வாங்கிக் கொண்டோம்.

அவர் கிளம்பினார். அடுத்த நாள் கண்டெய்னர்களும் கிளம்பின.

 

ஃபேக்டரியில் பிரம்மாண்டமான இடம் காலி. அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு.

கண்டெய்னர்கள் சேர்ந்தவுன் ஃபேக்ஸ் அனுப்பினோம். பேமெண்டி ரெடியா, வரலாமா?

வாருங்கள் பார்க்கலாம்.

 

அடுத்த நாள் அந்தமானில் ஆஜர்.

ஆனால் இளங்கோ அடிகள் சொன்னார் இல்லையா – “ஊழ்வினை உருத்து வந்தூட்டும்” –என்று!

வினை வந்தது.

 

இன்னும் அது சரியில்லை, இது சரியில்லை. எங்கள் டெஸ்ட் முடிய பல வாரங்கள் ஆகும். டெஸ்டில் பாஸ் ஆனால் பேமெண்ட் பற்றி யோசிக்கலாம்.

டைரக்டரிடம் குமுறினேன். சார், இது பழி வாங்கும் நடவடிக்கை போல இருக்கிறது. நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா? இல்லையேல் நான் அந்தமான் கவர்னரைப் பார்க்க நேரிடும்.

 

பாருங்கள்.

 

கவர்னர் ஆபீஸ் அருகில் தான் இருந்தது. அங்கு ஒரே கும்பல். உடனடியாக ஒரு பெடிஷனை ரெடி செய்தேன்.

 

நடந்ததை நிர்வாகத்திடம் சொல்லி பெர்மிஷன் வாங்கினேன்.

கவர்னரைப் பார்ப்பது சாத்தியமா? பாருங்கள்.

 

மறுநாள் காலை கவர்னர் ஆபீஸில் ஆஜர். கூட்டத்தையே காணோம். வெறிச்சோடி இருந்தது. என்ன ஆயிற்று?

விசாரித்தேன். முதல்நாள் வரை கவர்னராக இருந்த புருஷோத்தமதாஸ் தாண்டன் ராஜிநாமா செய்து விட்டாராம். கேரளத்தில் சொந்த ஊரில் எலெக் ஷனில் நின்று தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறாராம்.

 

அப்போது அந்தமான் நிர்வாகம்?

 

புதுவை கவர்னராக இருக்கும் ராஜேந்திரகுமாரி பாஜ்பாயி அடுத்த ஆள் நியமிக்கும் வரை அந்தமானின் கூடுதல் பொறுப்பை நிர்வகிப்பாராம்.

 

நிர்வாகத்திடன் சொன்னேன். என்ன செய்யப் போகிறீர்கள்.கிளம்பி வருகிறேன். அங்கு புதுச்சேரி கிட்ட இருக்கிறது. அங்கு அவரைப் பார்க்கிறேன்.

 

மறுநாள் மதுரை. உடனே அடுத்த நாள் புதுவை. கவர்னரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன்.

அங்கு அலுவலகம் சென்ற போது அவர் அலுவலகம் வரவில்லை.

 

கீழே அவர் இருப்பிடம். மேலே ஆபீஸ்.

அவர் வயது 87. உடல்நிலை சரியில்லை என்றால் வரமாட்டார்.

 

Picture from Lalgudi Veda’s post

ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

சரி அரவிந்த ஆசிரமம் கர்மயோகியையாவது பார்க்கலாம்.

அவர் இல்லம் சென்றேன். அவர் தனிப்பட்ட யோக சித்தியை மேற்கொண்டிருப்பதால் யாரையும் பார்க்க மாட்டாராம்.

வந்ததைச் சொல்லி அனுப்பினேன்.

 

சில புஷ்பங்களை ஆசீர்வதித்து அனுப்பினார். ஏமாற்றம் தான். புஷ்பங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

 

ஒரு நப்பாசை. எம்.பி.பண்டிட் பார்க்க அனுமதிப்பாரா என்று.

புன்முறுவலுடன் வரவேற்றார். வங்கத்தினரே அணியும் முறையில் வேஷ்டியை யோக வேஷ்டியாக்ப் போட்டிருந்த அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார்.

நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலம் கேட்டு மகிழ்ந்தார்.

 

நிறுவனமே அரவிந்த பக்த குடும்பம்.

ஆசிரமத்தில் சமாதி அருகே தியானம்!

பின்னர் ஊர் வந்து சேர்ந்தேன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நாளையே புதுவை மீண்டும் செல்லப் போகிறேன்.

போய் வாருங்கள்.

மறுநாள் புதுவையில் ஆஜர்.

 

காலை 10 மணிக்கு செக்யூரிட்டியின் அனுமது பெற்று முதல் ஆளாக கவர்னர் அலுவலகத்தில் ஆஜர்.

 

 

நான் கவர்னர் அறையில். விளக்கு கூடப் போடவில்லை. நான் அங்கு ரெடி!

****    

அடுத்த பகுதியுடன் முடியும்

 

 

வேலைக்காரர் படும் பாடு! (Post No.4783)

Date: 25 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-19 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4783

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வேலைக்காரர் படும் பாடு!

 

ச.நாகராஜன்

 

உலகியல் வாழ்க்கையில் அனைவரது நிலையையும் மிகச் சரியாகக் கணித்து அனுதாபப்படுபவர் கவிஞர் பர்த்ருஹரியைப் போல இன்னொருவரைப் பார்ப்பது துர்லபம்.

வேலைக்காரர்களின் மனோபாவத்தையும் அவர்கள் படும் பாட்டையும் நீதி சதகத்தில் விளக்குகிறார். (பாடல் 47)

 

பாடலைப் பார்ப்போம்:

 

மௌநாத் முக:ப்ரவசந

படு வாசகோ ஜல்பகோவா

த்ருஷ்ட: பார்ச்வே பவதி ச

வஸந் தூரதோப்ய ப்ர கல்ப: |

க்ஷாந்த்யா பீருர்யதி

ந ஸஹ்தே ப்ராயசோ

நாபி ஜாத: ஸேவாதர்ம:

பரம கஹந; யோகிநாமப்ய கம்ய: ||

 

வேலக்காரன் (மௌநாத்) சற்றுத் தள்ளி ப்வ்யமாக இருந்தால் ஊமை எனப்படுகிறான்,

நன்றாகப் பேசினாலோ (ப்ரவசன ப்டு) அதிக ப்ரசங்கி எனப்படுகிறான்.

யஜமானன் பக்கத்தில் நின்றாலோ (பார்ச்வே பவதி) துணிச்சல்காரன் எனப்படுகிறான்.

தூரத்தில் (தூரத:) இருந்தாலோ தைரியமற்றவனாக நினைக்கப்படுகிறான்.

வசவு, திட்டுகளைப் பொறுத்தால் (க்ஷாந்த்யா) பயந்தாங்கொள்ளி எனப்படுகிறான்.

வார்த்தைகளைப் பொறுக்காவிட்டாலோ (யதி ந ஸஹதே) நல்ல குலத்தில் பிறந்தவன் இல்லை என்கிறார்கள்.

பிறரிடம்  ஊழியம் செய்யும் காரியமானது (ஸேவா தர்மம்) பெரும்பாலும் மிகவும் கடினமானது. (பரம கஹன)

மூன்று காலமறிந்த யோகிகளுக்கும் கூட புலப்படாதது. ( யோகிநாமபி அகம்ய)

 

ஒரு நல்ல வேலைக்காரன் எப்படி ஊழியம் செய்தாலும் விமரிசிக்கப்படுகிறான்.

 

அவனால் என்ன தான் செய்ய முடியும்?

 

ஆகவே தான் வாழ்நாள் முழுவதும் ஊழி யம் செய்வதில் மாட்டிக் கொண்ட ஒருவன் இருந்தும் இறந்தவனே என்று பெரியோர் சொல்கின்றனர்.

 

(இருந்தும் இறந்தவர் யார் யார் கட்டுரையைப் பார்க்கவும்)

 

நன்றி: எஸ்.கல்யாணசுந்தரம் 11-2-1949, கும்பகோணம்

பிரசுரகர்த்தா & மானேஜர்

ஸ்ரீ ஜனார்த்தனா பிரிண்டிங் பிரஸ்

***