கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து! (Post. 4804)

Written by London Swaminathan 

 

Date: 3 MARCH 2018

 

Time uploaded in London – 13-18

 

Post No. 4804

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மேல் ஜாதி கீழ் ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், சாணக்கியன் ஒரே கருத்து! (Post. 4804)

 

நான்கு வருண (ஜாதி) மக்களில், கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் கற்றால் அவனையே எல்லோரும் வணங்குவர், போற்றுவர் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றிலும், வள்ளுவன்  திருக்குறளிலும், சாணக்கியன் சாணக்கிய நீதியிலும், மனு அவரது தர்மசாஸ்திரத்திலும் உரைக்கின்றனர்.

 

மேல்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

 

பொருள்

உயர் குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவராக இருந்தால், கீழ்க்குடியில் பிறந்து கல்வி கற்றுச் சிறந்து விளங்கும் கற்றாரைப் போலப் பெருமை பெற முடியாதவர்களே.

 

 

xxx

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு சாணக்கியன்

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் ஜாதி மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

xxxx

 

மனு தர்ம சாஸ்திரத்தில்

மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.

 

“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;

குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;

எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;

தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”

மனு ஸ்ம்ருதி 2-239

“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,

தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்

ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-240

 

“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-241

xxx

புற நானூற்றில் நெடுஞ்செழியனும்

இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!

பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே

 

 

 

பொருள்:-

“நான்கு ஜாதிகளில்,  கீழ் ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)

 

அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்தவனை, பிராமணனும் வணங்குவான்.

 

 

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் …

https://tamilandvedas.com/…/மேல்-ஜாதி-கீழ்-ஜா…

16 Apr 2017 – மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! … இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) … என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன.

 

–subham–

 

 

 

பூமி தினக் கொண்டாட்டங்கள் (Post No.4803)

Date: MARCH 3, 2018

 

 

Time uploaded in London- 6-50 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4803

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் பத்தாவது உரை

 

  1. விழிப்புணர்வை ஊட்டும் பூமி தினக் கொண்டாட்டங்கள்

 

ச.நாகராஜன்

 

உலகெங்கும் 192 நாடுகளில் ஏப்ரல் 22ஆம் தேதியை எர்த் டே (Earth Day)ஆக – பூமி தினமாகக் கொண்டாடுகிறோம்.

எப்படி பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson)  பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் முதல்  பூமி தினத்தைக் கொண்டாடினார்.

இதனால் உலகெங்கும் ஏராளமானோர் விழிப்புணர்வு பெற்றனர்.

பல்வேறு நாடுகளிலும் கடந்த 47 ஆண்டுகளில் சுற்றுப்புறச் சூழலைக் காக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கும் பல இரசாயனப் பொருள்களின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

நீரைக் காக்க வேண்டிய அவசியத்தையும் காற்றைச் சுத்தமாகக் காக்க வேண்டிய அவசியத்தையும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் இந்த தினத்தில் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி  விட்டது.

இதில் நாமும் பங்கு கொண்டு நம் பங்கிற்கு உரியதை ஆற்றுவது நமது கடமையாகும்.

ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.

ஒவ்வொருவரும் இதில் இணைந்து வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!

***

 

 

 

 

 

STRANGE BELIEFS OF SANGAM TAMIL POETS AND CHANAKYA (Post No.4802)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 16-56

 

Post No. 4802

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

India is one country; Indian culture is one culture from Himalayas to Kanyakumari. India has been united for several thousand years. Even before the foreign invaders came, it was one country with one culture. It is amazing to see the people in the north and the south shared the same beliefs about fish, tortoise and crocodile for over 2000 years. What Chanakya said in a sloka/verse 2300 years in Bihar (Magada Samrajya) is in  2000 year old Sangam Tamil literature. And this belief is unique to India!

Chanakya said in Chanakya Niti

“Just as a female fish rears its offspring by sight, a female tortoise by thinking about it and a female bird by touching it, so does contact with good people (the human beings)”

The message is that good people’s thought, contact and sight influence a person. It helps a person.

darsana dyaanasam sparsair matsii kuurmii ca pakshnii

sisum paalayate wityam tathaa sajjanasangatih

4-3

 

In south India goddess Meenakshi of Madurai is called Fish eyed goddess. She protects her devotees like the fish. Sangam Tamil literature say that the tortoises and turtles always think about the eggs they have laid and this only hatches them.

Sangam Poets say,

The hero’s love is as essential to the life of the heroine as is the tender care of the mother turtle to the growth of its young ones.

-Kuruntokai 152

 

Like the young ones of turtles  looking towards their mother’s faces.

–Ainkurunuru 44, Akam.160

In several places around the world, the turtles lay eggs in thousands in the coastal areas and when the turtle eggs are hatched they swim towards their mother turtles by instinct. Probably this led to the belief that the turtle and its young one always think about each other.

Fish Eyed Goddess Meenakshi of Madurai Temple.

 

xxx

Education

(I have already given part of the following passage)

 

“One should accept nectar even from poison, gold even from filth, knowledge even from a lowly person and a jewel of a woman even from a lowly family”

Chankaya niti, chapter 1, sloka/verse17

Vishaadapyamrutam graahyamedhyaadapi kaancanam

Niicaadapyuttamaam vidhyaam striiratnam dushkulaadapi

Tamil Poet Tiruvalluvar says,

Men with learning, even of lower birth, are of greater worth,

Than ignorant men though high born (Kural 409)

Parimel Azakar, the most famous commentator of Tirukkural says,

“This means that the superiority of the understanding born of learning, which gets attached to the soul for ever, is greater than the superiority of one’s caste which dies along with one’s body” (K M Balasubramaniam’s translation of Parimel Azakar’s comment)

 

Tamil king Nedunchezian in Purananuru  verse 183 says that the king would call for service one from the lowest of the four Varnas if he is more educated.

Manu says that a person can learn from the lowest caste and treat him like Guru. He also says women can be married from any caste if they are good. Vasistha’s wife Arundhati is shown as an example.

 

Manu Smrti says in second chapter

2-238. He who possesses faith may receive pure learning even from a man of lower caste, the highest law even from the lowest, and an excellent wife even from a base family.

2-239. Even from poison nectar may be taken, even from a child good advice, even from a foe (a lesson in) good conduct, and even from an impure (substance) gold.

(This verse is in Chanakya  Niti as well)

2-240. Excellent wives, learning, the knowledge of the law, the rules of purity, good advice, and various arts may be acquired from anybody.

2-241. It is prescribed that in times of distress a student may learn the Veda from one who is not a Brahmana; and that he shall walk behind and serve (such a) teacher, as long as the instruction lasts. (This shows Vedas were memorised by other castes as well; Brahmins, Kshatriyas and Vaisyas wen to Guru Kula to learn the Vedas)

Great Men Think Alike!

 

–Subham–

 

 

 

 

 

தமிழ் வணிகர்களின் பரிபாஷை (Post No.4801)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 7-49 AM

 

Post No. 4801

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு “யோக்கியர்களையும்” எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

முன்னால் நிற்கக்கூடிய வாடிக்கையாளருக்குதெரியக்கூடாது என்பதற்காக தமிழ் வணிகர்கள், விநோதமான பரிபாஷையைப் பயன்படுத்துவர். இது குறித்து செட்டியார்கள் கதை ஒன்றை பிரசுரித்தேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த ஒரு நூலில் ஒரு பட்டியலே கொடுத்துள்ளார் ராஜகோபால பூபதி.

நூலின் பெயர் – மதிமோச விளக்கம் (115 விதமான தமிழ் மோசடிகளைக் கொண்ட நூல்)

எழுதியவர்- தூசி. இராஜகோபால பூபதி, வெளியிட்ட ஆண்டு-1907

எதிர்கால மொழி ஆராய்ச்சியாளருக்குப் பயனுள்ள குறிப்பு இது. இதோ அந்தப் பட்டியல்

 

 

 

பத்து செட்டியார்கள், மூன்று …

swamiindology.blogspot.com/2018/01/post-no-4664.html

26 Jan 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. … முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து … Labels: திருடர்கள் செட்டியார்கள்பரிபாஷை பூனை யானைக்கு …

வைஷ்ணவ பரிபாஷை | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/வைஷ்ணவ-பரிபாஷ…

Written by S NAGARAJAN. Date: 30 May 2017. Time uploaded in London:- 6-44 am. Post No.3954. Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.com. தமிழ் இன்பம். வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017). வைஷ்ணவபரிபாஷை …

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மான்! (Post No.4800)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 6-37 AM

 

Post No. 4800

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

வள்ளுவனும் சாணக்கியனும் ஒரே கருத்தை பல உவமைகளால் அழகுபட வர்ணிப்பது பாரதீய சிந்தனைப் போக்கு — தென் குமரி முதல் வட இமயம் வரை ஒன்றே — இன்றும் அன்றும் ஒன்றே– என்பதைக் காட்டி நிற்கிறது. இதோ மேலும் சில அரிய கருத்துக்கள்.

 

மானம் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்பதில் இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். தற்காலத்தில் தற்கொலைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் முக்காலத்தில் மானம் போனால் உயிர் போச்சு என்று கருதினர். கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் தண்ணீர் கொண்டுவர தாமதித்தவுடன், சிறைச்சாலையில் உயிர் நீத்த சம்பவத்தைக் கண்டோம்.

 

இதோ சாணக்கியன் கூற்று:-

 

வரம் ப்ராண பரித்யாகோ மானபங்கேன ஜீவனாத்

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம் மானபங்கே தினே தினே

சாணக்கிய நீதி 16-16

 

அவமானத்துடன் வாழ்வதை விட இறப்பதே மேல்; சாகும்போது அந்த நேரத்தில் மட்டுமே வலிக்கும்; அவமானத்துடன் வாழ்ந்தாலோ தினமும் துயரம்தான்.

 

இதோ வள்ளுவன் இயம்புவது:–

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா  அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின் (குறள் 969)

 

உடம்பில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், கவரி மான் உயிரிழந்து விடும்;

அதுபோல மானம் போகுமாயின், உயிரையே விட்டு விடுவர் (உயர்ந்தோர்).

 

xxxx

கனியிருப்பக் காய் கவர்வது ஏனோ?

 

இனிய சொற்களைச் சொன்னால் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது;

ஆகையால் ஒருவர் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்;

பின்னர் ஏன் இனிய சொற்களை இயம்புவதில் கருமித்தனம்?

 

ப்ரிய வாக்யப் ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவஹ

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

சாணக்கிய நீதி – 16-17

இதோ வள்ளுவன் செப்புவது:-

 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

 

இனிய சொற்கள் இன்பம் தருவதைக் கண்ணால் கண்ட  பின்னும், ஒருவன் கடுஞ் சொற்களைப் பயன்படுத்துவது ஏனோ!

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100)

 

நல்ல பழம் இருக்கும்போது யாராவது புளிச்சுக் கொட்டும் காய்களைத் தின்பார்களா?  இன்பம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் கடும் சொற்களைப் பயன் படுத்துவானா?

 

ப்ரஸ்தாவஸத்ருசம் வாக்யம் ப்ரபாவஸத்ருசம் ப்ரியம்

ஆத்மசக்திஸமம் கோபம் யோ ஜானாதி ஸ பண்டிதஹ

சாணக்கிய நீதி 14-15

ஒருவன்  தன் புகழுக்கேற்ற இனிய சொற்களையும், இடத்துக்கு ஏற்ற காலத்துக்கேற்ற சொற்களையும், தன் வலிமைக்கு ஏற்ற கோபத்தையும் கொண்டிருந்தால் அவன் புத்திசாலி

 

xxxx

யாகாவா ராயினும் நாகாக்க

 

யதீச்சஸி வசே கர்தும் ஜகத் ஏகேன கர்மணா

பராபவாதஸஸ்யேப்யோ காம் சரந்தீர் நிவாரய

சாணக்கிய நீதி 14-14

ஒரே செயல் மூலம் உலகை வெல்ல ஆசையா? மற்றவர்களைக் குறை சொல்லாதபடி நாக்கை அடக்குங்கள். ( உலகே உங்கள் வசமாகிவிடும்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சு)/ நாக்கை அடக்குங்கள்; அல்லது சொன்ன சொல்லே பெரும் துன்பத்த உண்டாக்கும்.

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (711)

அவைக்கு ஏற்ற சொற்களைச் சொல்லுக; அந்தச் சொற்களின் ஆழத்தையும் தாக்கத்தையும் அறிந்து பேசுக

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

 

சொல்ல வந்த விஷயங்களை  இனிதாக, அழகாகத் தொகுத்துக் கூறும் ஒருவனுடைய சொல்லைக் கேட்டு உலகமே அதன்படி உடனே செயல்படும்

 

xxx

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி 

 

யதா கனன் கனித்ரேண பூதலே நிந்ததி

ததா குருகதாம் வித்யாம் சுஸ்ருஷுர் அதி கச்சதி

சாணக்கிய நீதி   13-16

ஒருவன் நிலத்தடி நீரை எப்படி மண்வெட்டி, கோடரி மூலம் தோண்டி எடுக்கிறானோ, அதே போல ஆசிரியரிடம் உள்ள அரிய செல்வத்தை மாணவன் (கேள்விக் கணைகளால் தோண்டி) எடுத்துக் கொள்ளவேண்டும்

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு – குறள் 396

 

மணலைத் தோண்டி இறைக்க இறைக்க நீர் சுரந்து கொண்டே இருக்கும்; அதுபோல கற்கக் கற்க அறிவு வளரும்

 

 

xxxx

தலை விதி துரத்தி அடிக்கும்

யதா தேனுஸ்ஹஸ்ரேஷு வத்ஸோ கச்சதி மாதரம்

ததா யச்ச க்ருதம் கர்ம கர்தாரம் அனுகச்சதி

13-14

 

ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக்குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்ம வினை அவனிடம் வந்து சேரும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்   தான்முந்  துறும் (380)

 

விதியைவிட வலியது உண்டா? விதியை மாற்ற ஒரு வழி கண்டு பிடித்தாலும் அங்கும் அதுதான் முன்னே நிற்கும்

 

xxx

Rain water used in Thiruppullani; Facebook picture.

நீர் இன்றி

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் ஸுபாஷிதம்

மூடைஹி பாஷாணகண்டேஷு ரத்ன ஸம்க்ஞா விதீயதே

14-1

 

 

பூவுலகில் மூன்று ரத்தினங்கள் உள; தண்ணீர், உணவு, சான்றோரின் பொன்மொழிகள்; இதை அறியாத மூடர்கள் கற்களை ரத்தினம் என்று சொல்கின்றனர். (அதாவது உண்மையான ரத்னக் கற்களைவிட இவை மூன்றும் உயர்ந்தவை)

 

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

நீர் இல்லாமல் வாழ முடியாது; மழை இல்லாவிடில் தர்ம நியாம் இராது.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை (12)

உணவை உண்டாக்குவது மழை நீர்; உணவை உண்பார்க்குத் தானும் உணவு ஆவது மழை நீர்.

வள்ளுவன் வாழ்க! சாணக்கியன் வாழ்க!

 

–சுபம், சுபம்—

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 60 (Post No.4799)

 

Date: MARCH 2,  2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4799

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 421 முதல் 429

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

10 முதல் 18 வரை உள்ள பாடல்கள்

இமயம் தன்னில் எழுந்த குரல் – தென்

   குமரி வரைஎதி ரொலித்ததுவே

குமரி யிலொருவன் அடிபட்டால் – அந்த

   இமயம் கண்ணீர் உகுத்ததுவே

சமமென் றனைவரும் சேர்ந்ததினால் – இங்கு

   சகல பேதங்களும் தீர்ந்ததுவே

தமது நாடெனும் உணர்வுடனே – இந்தத்

   தாயினை  யாவரும் வணங்கினரே

  

அன்னை என்னைத் தென்னகம் தன்னில்

    முன்னம் உணர்ந்தாய் பாரதியே

தன்போல் தமிழர் நன்கு உணர்ந்திட

   முன்மொழிந் தனையே பாரதியே

அன்னாள் உந்தன் கவிகளை எனக்கே

   அர்ப்பணி த்தாய்நீ பாரதியே

பன்மணிக் கவிதை உன்போல் எனக்குப்

   படைத்த வருண்டோ பாரதியே

 

பாரத மாதா பாரத மாதா

   பாட்டுகள் யாவும் எனதாக

பாரதம் உந்தன் பாவினி லுளதென

   பாரினில் யாவரும் புகழ்பாட

பாரதி யென்னும் மலையி லிருந்து

   பாய்ந்துறு தேசிய அருவியது

பாரத மாய்த்தமிழ் நதியென ஓடி

   பாரதக் கடலில் படர்ந்ததுவே

 

காலம் தனது தேவைக் கேற்பக்

   கவிஞன் தன்னை உருவாக்கும்

சீலம் மிகுந்தோர் சொல்லுக் கேற்ப

   தேசியத் திற்கே உனையீந்தாய்

ஆலம் உண்டே அமுத மளித்த

   அரனாரைப் போல் உயர்ந்திட்டாய்

காலக் கவிஞன் ஆனதி னாலே

   காலம் கடந்து வாழ்ந்திட்டாய்

 

என்றுநீ தேசிய உணர்வினைப் பெற்றாய்

  என்பதை என்போல் யாரறிவார்?

உன்றன் இளமையில் ஊரூ ராக

   ஓடிய போதும் உதிரத்தில்

என்றும் நீங்கா சுதந்திர வேட்கை

   இருந்ததி னால்நீ சிலிர்த்தெழுந்தாய்

சென்னை நகருறை வாழ்வில் தேசிய

   சேவையி லொன்றிச் சிறப்புற்றாய்

 

கல்கத்தா மாநாட்டில் கலந்திடச் சென்றவன்

   கலக்கங்கள் தீர்வ தற்கே

சொல்லினால் உலகையே சிலிர்த்திடச் செய்திட்ட

   தூயவிவே கானந் தர்தம்

நல்லதோர் மாணவியாய் நாடெல்லாம் மதித்திட்ட

   நிவேதிதா தன்னைக் கண்டாய்

பலவளம் பெற்றதால் களையெலாம் நீங்கிய

   பயிராக வளர்ச்சி பெற்றாய்

 

பாரதியாம் உந்தனைக் குழந்தையாய் அந்நாளில்

   பெற்றவள்லட் சுமியம் மாள்தான்

தீரமுள நல்லதோர் தேசியக் கவிஞனாய்

   தோற்றுவித்தாள் நிவேதி தாவே

ஆரமாம் தங்கத்தை தேசபக்தி என்றிடும்

   அனலிலே சுட்டெ டுத்தாள்

ஈரமுள புதைகுழியில் எழுந்திடும் நெருப்பென

   எழுச்சிமிகு கவிஞ னானாய்

 

இருவேறு வழிகளில் சென்றதால் அல்லவோ

   இலக்கினை அடைவ தற்கு

பெருமளவில் தாமதம் நேர்ந்ததுதீ விரவாதம்

   புகல்மித வாதம் என்றார்

இருஇரு பொறுமையாய் எனும்மித வாதியாய்

   இருந்திட்டார் கோகலேவே

ஒருபெரும் தீவிர வாதிகள் தலைவனாய்

   உயர்திலகர் தலைமை ஏற்றார்

 

திகழ்கின்ற காந்தமது இரும்பினை இழுத்தல்போல

   திலகருனை ஈர்த்துக் கொண்டார்

அகழ்ந்திட்டார் மிதவாதச் சோம்பலினை நாடெல்லாம்

   ஆர்த்தெழுந்து நிற்கச் செய்தார்

இகலறவே அவருக்கோர் போர்முரசாய் முழங்கிடவே

   இந்தியா என்னும் பேரில்

தகவுளதோர் இதழதனை தழலெனவே கொணர்ந்திடாய்

   தமிழகமே பற்றச் செய்தாய்

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.

சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

PLAN YOUR DAY- CHANAKYA’S ADVICE (Post No.4798)

Written by London Swaminathan 

 

Date: 1 MARCH 2018

 

Time uploaded in London – 20-54

 

Post No. 4798

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

It is amazing to see that Chanakya advised us 2300 years ago on the things what we read in hundreds of Self Improvement books today. How to Win Your friends? How to live your life? How to make money? How to plan your day? and books like these decorate the bookshelves at our home and in the book shops.

Here are a few slokas/verses from Chanakya Niti:

One should think about these again and again:

What time it is?

Who are friends?

Which country/town/place it is?

What are the income and expenditure?

Who I am?

How is my strength?

In short, we should take into account the time, place, our aim/purpose/goal in life, our friends and money matters.

kaha kaalaha kaani mitraani ko desaha kau avyayaa agamau

kaschaaham kaa ca me saktiriti cintyam muhurmuhuhu

Chanakya Niti 4-18

xxx

 

 

Don’t Worry Too much

Which family is there that does not have its loopholes?

Who is there who has not suffered ailment?

Who is there who has not met with an adversity?

Who has had happiness endlessly?

3-1

kasya doshah kule naasti vyaadhinaa ko na piiditah

vyasanam kena na praaptam kasya saukhyam nirantaram – 3-1

 

xxx

Who are your Six Relatives?

Truth is mother, knowledge is father, Dharma is brother, compassion is sister, peace is wife, forgiveness is son – these six are my relatives.

satyam maataa pitaa njaanam dharmo brataa dayaa svasaa

saantih patnii kshamaa putrah shadete mama bhandavaah – 12-11

 

xxx

Sacrifice One Person!

One should surrender one person for the sake of the family;

the family for the sake of the village;

the village for the sake of the country and

the earth for one’s own sake

3-10

tyajedekam kulasyaarthe graamasyaarthe kulam tyajet

graamam janapadasyaarthe aatmaarthe pruthviim tyajet

xxx

All Alone!

One takes birth and dies alone, alone one experiences what is good and bad, goes to hell alone and attains the highest goal alone.

5-13

Who is your Friend?

Knowledge acts as friend in foreign visits;

Wife is friend at home;

Medicine is the friend of the sick;

Dharma is the friend of the dead

vidhyaa mitram pravaaseesu bharyaa mitram gruhesu ca

vyaadhitasyausadham mitram Dharmo mitram mrutasya ca

5-15

xxx

Don’t live

 

One should not live there which does not have the following five:–

the means of livelihood, fear (about rules, regulations) , modesty, civility and charity (the nature to give or relinquish)

lokayaatraa bhayam lajjaa daakshinyam tyaagasiilataa

panca yatra na vidyante na kuryaat tatra samsthatim

 

Chapter 1, Sloka 10

xxx

Earth rests on Truth

The earth rests on Truth, through truth the Sun radiates the heat, through truth blows the wind. Everything rests on truth

 

Satyena dhaaryate pruthvii Satyena   tapate ravih

Satyena vaati vaayusca sarvam Satye  pratishtitam

5-19

 

–Subham—

 

 

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் விநோதக் கணக்கு! (Post No.4797)

Written by London Swaminathan 

 

Date: 1 MARCH 2018

 

Time uploaded in London – 7-56 AM

 

Post No. 4797

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

பண மோசடி செய்தவர்கள் எப்படி அழிவார்கள் என்பது பற்றி திருவள்ளுவன் திருக்குறளிலும் ,உலக மஹா மேதை சாணக்கியனின் சாணக்கிய நீதியிலும் சுவையான கணக்குகள் உள்ளன. அழ, அழ பணம் சம்பாதித்தவனை அழ அழ வைத்து லெட்சுமி போய் விடுவாளாம்– இது வள்ளுவன் கணக்கு; ஆனால் சாணக்கியனோ ஒரு விநோதக் கணக்குப் போடுகிறான். பண மோசடி செய்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஆட்டம் போடுவார்களாம்; பின்னர் 11 ஆவது வருஷத்தில் ‘அம்போ’ன்னு போவார்களாம்; வள்ளுவன், சாணக்கியன் சொற்களிலேயே படியுங்கள்.

அகலாது அணுகாது வாழ்க!

 

அக்னிராபஹ ஸ்த்ரியோ மூர்க்காஹா ஸர்பா ராஜ குலானி ச

நித்யம் யத்னேன ஸேவ்யானி ஸத்யஹ ப்ராணஹராணி ஷட்

 

கீழ்கண்ட ஆறு விஷயங்களில் கவனமாக நடக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் வெகுண்டால் உடனே மரணம் சம்பவிக்கும்: தீ, தண்ணீர், பெண்கள், முட்டாள்கள், பாம்பு, ஆட்சியாளர்கள் (ராஜ குலம்)

 

14-12

அத்யாஸன்னா விநாசாய தூரஸ்தா ந பலப்ரதாஹா

தே ஸேவ்யா மத்யாபாகேன ராஜா வஹ்னிர் குருஹு ஸ்த்ரியஹ

14-11

அரசன், ஆசிரியர், அக்னி (தீ) , பெண்கள் ஆகியோருக்கு மிகவும் அருகில் இருந்தாலும் மிகவும் தூரத்தில் இருந்தாலும் பயனில்லை; ஆகையால் நடு வழியில் செல்க.

 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர் சேர்ந்தொழுகுவார் – குறள் 691

 

அரசனைச் சார்ந்து வாழ்பவர்கள்; நெருப்பில் குளிர் காய்பவனைப் போல, மிக அருகிலும் போகக்கூடாது; மிக விலகியும் போகக் கூடாது. நடுவழியில் நின்று கடமை ஆற்ற வேண்டும்

 

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப்பட்டார் தொடர்பு (920)

 

பொது மகளிர், கள், சூது ஆகியவற்றில் ஈடுபடுவோரிடம் லெட்சுமி தேவி தங்க மாட்டாள்

XXX

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

–SUBHAM–

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் (Post No. 4796)

Date: MARCH 1,  2018

 

 

Time uploaded in London- 6-50 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4796)

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

2-3-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு முதல் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 1

.நாகராஜன்

1961இல் மனிதன் விண்ணில் பறந்து 56 வருடங்கள் உருண்டோடி விட்டன. என்னென்ன வியத்தகு சாதனைகளை மனிதன் சாதித்து விட்டான்! பாக்யா வாசகர்களுக்கான ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ரிபோர்ட் – அனைத்து சாதனைகளும் ஒரே இடத்தில்!

யூரி ககாரின்

1961,ஏப்ரல்,12. ரஷிய வீரரான யூரி ககாரின் 108 நிமிட விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து உலகை வியக்க வைத்துச் சாதனை படைத்தார்!

 

விண்வெளியில் முதல் வீரர்கள்

ககாரினை அடுத்து ஆலன் ஷெப்பர்ட் என்னும் அமெரிக்கர் 1961, மே,5ஆம் தேதி விண்வெளிக்கு ஏகினார்.

ரஷிய வீ ராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா 1963,ஜூன் மாதம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு விண்வெளி ஏகிய முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார்; பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தார்! அவருடன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா அப்போது அவருடன் பறக்க முடியவில்லை. காத்திருந்தார். 1982ஆம் ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்பு வந்தது.

விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி ஸாலி ரைட். ஸ்பேஸ் ஷட்டில் மிஷன் STS 7இன் ஒரு பகுதியாக 1983, ஜுன்18இல் அவர் விண்வெளியை அடைந்து சாதனை படைத்தார்.

விண்வெளியை ரஷியர்களும் அமெரிக்கர்களுமே சுமார் 20 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடின.இந்த இரு தேசங்களைத் தவிர முதலில் விண்வெளியில் நுழைந்தது  செக்கோஸ்லோவேகியா. 1978இல் சோவியத் சோயுஸ் 28 மிஷனில் செக்கோஸ்லோவேகிய வீரர் விளாடிமிர் ரெமக் விண்வெளி ஏகினார். இதன் பின்னர் ஏராளமான நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு வீ ரர்களை அமெரிக்க, ரஷிய விண்கலங்களில் விண்ணுக்கு அனுப்பின.

விண்வெளியில் அதிக வயதானவர்

அமெரிக்க செனேட்டர் ஜான் க்ளென் தனது 77ஆம் வயதில் டிஸ்கவரி STS -95 மிஷனில் 1998 அக்டோபரில் விண்ணில் பறந்தார்.இந்த மிஷனில் அவரது பயணம் இரண்டாவது பயணம். 1962 பிப்ரவரியில் அவரது முதல் பயணம் அமைந்தது. ஆக அவர் இன்னொரு அரிய சாதனையையும் நிகழ்த்தி விட்டார். மிக நீண்ட இடைவெளியான 36 வருடம் 8 மாதங்களில் பயணம் மேற்கொண்ட ஒரே வீரர் அவர் தான்!

விண்வெளிக்குச் சென்ற அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெறுபவர் பெக்கி விட்ஸன். வயது 57. 2016-2017இல் எக்ஸ்பெடிஷன் 50, 51இல் அவர் பறந்தார்.

விண்வெளியில் பறந்த இளைஞர்

ரஷியரான ஜெர்மன் டிடோவ் சோவியத் விண்கலமான வோஸ்டாக் 2இல் ஆகஸ்ட் 1961இல் பறந்தார். அப்போது அவரது 26வது பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு மாதமே இருந்தது.25 மணி நேர பயணத்தில் 17 லூப் பயணம் மேற்கொண்டு பூமியை  வலம் வந்த இரண்டாவது வீரர் இவர்.

டிடோவ் தான் முதலில் விண்வெளியில் தூங்கியவர் என்ற பெருமையைப் பெருகிறார். முதலில் ஸ்பேஸ் சிக்னெஸ் வியாதியால் அவஸ்தைப் பட்டவரும் அவரே. (இதை மோஷன் சிக்னெஸ் என்றும் சொல்வர்)

தெரஷ்கோவா விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி மட்டுமல்ல; 26 வயதில் பறந்த மிகக் குறைந்த வயதுடைய மஙகை என்ற அரிய புகழையும் பெறுகிறார். அவரது ரிகார்டை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை என்பது குற்ப்பிடத் தகுந்தது.

 

தொடர்ந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தோர்

ரஷிய வீ ரரான வாலெரி போலியாகோவ் விண்வெளியில் தொடர்ந்து 438 நாட்கள் மிர் ஸ்டேஷனில் தங்கி இருந்து சாதனை படைத்தார். 1994 ஜனவரியிலிருந்து 1995 மார்ச் வரை இவர் அங்கு தங்கி இருந்தார்.

அமெரிக்கரான ஸ்காட் கெல்லி தொடர்ந்து 340 நாட்கள் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் 2015-16இல் தங்கி சாதனை படைத்தார்

அமெரிக்க விண்வெளி வீ ராங்கனை பெக்கி விட்ஸன் 289  நாட்கள் ஒரே பயணத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கி இருந்ததால் அந்தப் பெருமையைப் பெறுகிறார்.

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் 1961,மே, 5ஆம் தேதி தனது மெர்குரி விண்கலமான ஃப்ரீடம் 7இல் பறந்து சாதனை படைத்தார்.

புல்லரிக்க வைக்கும் வெற்றிகள் – மகத்தான தியாகத்தால், உழைப்பால், அறிவுக் கூர்மையால், மனித குலத்தை உயர்த்தத் துடிக்கும் அர்ப்பணிப்பு மனோபாவத்தால்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

1894இல் ஆல்பர்ட் மைக்கேல்ஸன் இயற்பியலில் கண்டுபிடிக்க இனி ஒன்றுமே இல்லை என்றார். முதல் நோபல் பரிசு பெற்ற அவர் சொன்னதை உலகம் ஆமாம் ஆமாம் என்றது. ஆனால் பத்தே ஆண்டுகளில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது இயற்பியல் கொள்கையால் உலகின் போக்கையே மாற்றினார்.

அன்றிலிருந்து இன்று வரை நாளுக்கு நூறு கண்டுபிடிப்புகள்?!

இவையெல்லாம் சரிதானா என்று  ஆராயப் புகுந்தார் ஒருவர். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியரான் ஜான் ஐயான்னிடிஸ் 2005இல் ஏன்  பெரும்பாலான ஆய்வுப் பேப்பர்கள் தவறானவை என்று (Why Most Published Research Findings Are False – John Ionnidis) ஒரு பரபரப்புப் பேப்பரை வெளியிட்டார்.

 

தன் சொந்த அபிலாஷைகளுக்காக நினைத்ததை வெளியிடுவோர் அதிகம். இவை ஊடகத்தால் பரபரப்புச் செய்திகளாக உலா வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் பின்னால் தவறானவை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறு என்பதை ஊடகங்கள் வெளியிடாமல் மௌனம் சாதிக்கின்றன.

இதனால் அறிவியல் ஆய்வுப் பேப்பர் என்றால் யாரும் மதிக்காத ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்கிறார் அவர்.

எதையும் உறுதி செய்து வெளியிடுவதே அறிவியல் ஆய்வு. அதற்கே இந்தப் பாடா என்று விஞ்ஞான உலகம் வியக்கிறது.

பேப்பரில் நடுப்பக்கத்தில் வெளியாகும் “பரபரப்பு” அறிவியல் செய்திகளை இனி சற்று ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டியது தான்!

***

 

Wealth Accumulated by Frauds disappears after 10 Years! – Chanakya (Post No.4795)

Written by London Swaminathan 

 

Date: 28 FEBRUARY 2018

 

Time uploaded in London – 21-16

 

Post No. 4795

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Every day we read in the newspapers that the corrupt people and fraudulent people have accumulated enormous amount of money; suddenly the government take some action against them. But Chanakya and the Tamil poet Tiruvalluvar had their own strange calculations about the wealth of the frauds. Chanakya says it would disappear after 10 years. Valluvan said that it would make the corrupt people cry and then leave them. Great men think alike. Read below in their own words:-

Wealth Accumulated by Frauds disappears after 10 Years! – Chanakya (Post No.4795)

2.Chanakya Niti and Tirukkural part 2

Fate cannot be Averted

Just as a call goes to its mother even in the midst of thousands of cows, in the same way the action done follows the doer.

Chanakya Niti,13-14

What is there more potent than fate? It forestalls every expedient one may resort to for averting it- Tiruk Kural 380

 

xxx

Spring of Knowledge!

Just as one gets to subterranean water by digging with a spade, in the same way does a pupil knowledge embodied in teacher.

Chanakya Niti,13-16

The sand spring flows with water as you dig deeper. By deeper study knowledge flows – Kural 396

 

xxx

Water is Jewel

There are three jewels on the earth –water, food and wise saying. The ignorant gives the name of jewel to pieces of stone.

Chanakya Niti,14-1

Rain is instrumental in the production of good food and is itself food -Kural 12.

Duties of life cannot be performed by any person in the absence of water -Kural 20

By the continuance of rain the world is preserved in existence; it is there fore worthy to be called ambrosia – Kural 11

xxxx

King and Fire

King, fire, teacher and women, when too close, lead to destruction, when far do not serve the purpose. So they have to be approached by the middle path.

Chanakya Niti,14-11

Even like those, who desire to warm themselves before a fire, persons in the king’s service will not go too close, nor stay away too far- Kural 691

Fire burns when it is touched; does it also have the potential to burn, when it goes far away from one?- Kural 1159.

 

xxxx

Hold back your Tongue!

If you want to bring round the whole world to you with one action,

hold back your tongue from speaking ill of others

Chanakya Niti, 14-14

 

Guard your tongue, whatever else you may not guard, otherwise you wi come to grief -Kural 127

xxx

Sweet Speech

One who knows words that go well with the context, the sweet speech that goes well with his glory and anger that befits his strength is wise

Chanakya Niti,14-15

Pleasing speech of good effect is productive of righteousness and virtue- Kural 97

 

Let men of sagacity who understand the use of words study the assembly and address it with discretion- Kural 711

The learning of the scholar shall shine before an assembly if flawless scholars who know the art of words.- Kural 717

 

xxxxx

Why no Sweet Words?

 

All beings feel happy with sweet words. So one should go for them. Why is the Parsimony in sweet words?

Chanakya Niti, 16-17

When a man knows that kind words bring joy and happiness,

why should he resort to harsh words?- Kural 99

 

If you speak at all speak profitably-Kural 200

xxxx

Wealth through Unjust means

The wealth earned through unjust means stays for ten years. With the onset of eleventh year it vanishes root and branch.

Chanakya Niti,15-6

All profits, that make others weep, depart with tears. Kural 659

Another translation of Kural 659:- Wealth amassed in the midst of other people’s tears, will also go that way causing one’s own distress;

while by good actions, even if loss is sustained, final results will be beneficial.

 

xxx

Death better than Insults

 

It is better to die than to live under insult. In death, it is a momentary pain, in insult it is a daily affair

Chanakya Niti, 16-16

It is better to die with honour than be slaves of those that scorn you – Kural 967

Hair lost, the yaks live not; Honour lost, noble men leave their life – 969

 

xxx Subham xxx