In India Rain drops turn into Pearls and Rubies! (Post No.2678 )

rubies-article-8688364

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2678

 

Time uploaded in London :–  18-43

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Arab writers praised India sky high; here are two notes:–

ruby_plain

India is a land where when rain falls it turns into pearls and rubies for those who have no ornaments; from here come musk camphor, amber and aloe wood, and various kinds of perfumes for those who require them; here grow all sweet smelling substances and nutmeg and andropogonnadus; here are found ivory and jai-phal, and aloe wood and sandal, and here is found in abundance the mineral tutia; here are found lions, leopards, elephants and bears; and here are found cranes and parrots, and peacocks and pigeons; and here grow the coconut tree and ebony tree and pepper plant; and here are made the unparalleled swords which need not be polished, and the lances which when wielded, large armies are routed; who can deny the excellence of such a land except fools?

Arabic writer Atharul Bilad, Al-Qazvini

1280-pearl-farming

Indians are the Most Advanced

The Indians are the first (most advanced), very large in number and belonging to a noble country. All the ancient peoples have acknowledged their wisdom and accepted their excellence in the various branches of knowledge. The kings of china used to call the Indian kings the kings of wisdom because of their great interest in sciences. The Indians, therefore according to all the nations throughout the ages had been the mines of wisdom, and the fountains of justice and administration. But on account of the great distance of india from our country, few of their compositions reached us. And, therefore only a small portion of their sciences was received by us.

 

We learnt of only a few of their scholars. In astronomy, for example there are three schools of thought in India

1.The school of Siddhanta

2.The school of Arjbar (Aryabhatta)

3.The school of Arkand (Khandakhadyaka)

But in spite of our efforts we received only the theory of Siddhanta. And this is the theory which is followed by a group of Muslim scholars who based their astronomical tables on it.

In music we have received from them the book called Yafar(?) it literally means ‘the fruits of wisdom’. It contains the principles of modulation and the collections of tunes. And what reached us of their science of ethics is the book “Kalila Wa Dimna’’(Panchatantra stories) which is widely known. And what reached us of their works on arithmetic is the one which has been collaborated by Abu Jafar Muhammed b. Musa al- Khawrizmi. This is the shortest process of calculation easiest to learn. It proves the sharp intelligence of Indians, their creative genius and their excellence in invention.

golden-pearls.jpg

Arabic writer Abu Mashar al –Balkhi

–subham–

 

“எங்க அப்பன் ஒரு கைநாட்டு, ஆனால் அவர் சிங்கம்டா!” (Post No 2677)

Jahangir_with_portrait_of_Akbar

Picture: Jehangir holding a portrait of his father Akbar.

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2677

 

Time uploaded in London :–  8-39 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய மன்னன் ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பில், அவரது தந்தையான அக்பர் குறித்து எழுதியிருப்பது படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. அதைப் படிக்கையில் அக்பர் பற்றிய உண்மையான சித்திரம் நம் மனக் கண்கள் முன் வருகிறது. இதோ ஜஹாங்கீரின் எழுத்துக்கள் – லண்டன் சுவாமிநாதன் மொழியாக்கத்தில், படியுங்கள்:–

 

“என் தந்தை எப்போதும் எல்லா மதங்களைச் சேர்ந்த கற்றறிந்த சான்றோர்களுடந்தான் இருப்பார். குறிப்பாக இந்திய பண்டிதர்களுடன்தான். அவர் ஒரு எழுத்தறியாத கைநாட்டு. ஆயினும் அறிஞர்களுடன் விவாதித்து நிறைய விஷயங்களை அறிந்திருந்தார். எல்லோருடனும் கலந்துரையாடுவார். யாருக்குமே அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பது தெரியாது. கவிதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் கேட்டறிந்திருந்ததால் அவரது குறை வெளியே தெரியவில்லை.

 

அவர் தோற்றத்தில் கொஞ்சம் குட்டைதான்; உயரமாக ஆசைப்பட்டார். ஆள் கோதுமை நிறம். கண்களும் புருவமும் கன்னங்கரேல் என்று நல்ல கறுப்பு. அவரை சிவப்பு என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். சிங்கம் போன்ற அகன்ற மார்பு; ஆஜானபாஹு (நீண்ட கைகள்). அவருக்கு இடது புற மூக்கில் ஒரு பெரிய மச்சம் சதை போல வளர்ந்திருந்தது. அரைப் பட்டாணி அளவுக்கு இருந்தபோதிலும் அவருடைய முகத்துக்கு அழகாகத்தான் இருந்தது. சாமுத்ரிகா லக்ஷணம் அறிந்தவர்கள் இது பேரதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொன்னார்கள். லட்சுமீகரமானது என்றனர். அவருடைய குரல் வளம் கம்பீரமாக இருக்கும். எதைப் பேசுவதிலும், விளக்குவதிலும் ஒரு தனி அழகு இருந்தது.

 

அவருடைய செயல்பாட்டில் அவர் ஒரு அசாதரண மனிதராகத் திகழ்ந்தார். அவருக்கு தெய்வத்தின் கடாக்ஷம் (இறை அருள்) கிடைத்தது. ராஜபோகத்தில் திளைத்தார்; பெரும் செல்வம் வைத்திருந்தார். போர்த்திறமை மிக்க பெரிய யானைகளையும், அராபிய குதிரைகளையும் வைத்திருந்தார். ஆயினும் கடவுளின் சிம்மாசனத்திற்கு முன்பாக ஒரு மயிரிழைகூட தவறு செய்ததில்லை. ஆண்டவனை ஒரு நொடிகூட மறந்தாரில்லை.

the-nav-ratna-of-akbar

எல்லா மதங்கள், வகுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றிலுள்ள நல்லோருடன் இணங்கினார். அவர்களுக்கு அருள் பாலித்தார். இரவு நேரத்தில் தூங்குவது குறைவு. பகலிலும் தூங்க மாட்டார். ஒரு நாளில் அவர் தூங்கியது ஒன்றரை ஜாமம்தான் (ஒரு இரவில் நான்கு ஜாமங்கள் உண்டு). இரவில் எவ்வளவு நேரம் விழித்திருப்பாரோ அவ்வளவுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை. அவர் மிகவும் தைரிய சாலி. மதம்பிடித்த யானைகள் மீது துணிச்சலாக ஏறுவார். கொல்லவரும் யானைகளை அடக்குவார்.”

–ஜஹாங்கீர் நினைவுக் குறிப்பு

இந்த நூல் எது? – 1 (Post No.2676)

VectorToons.com

Written by S NAGARAJAN
Date: 30 March 2016

 

Post No. 2676

 

Time uploaded in London :–  8-04 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தெரிந்து கொள்ள வேண்டிய நூல்

 

இந்த நூல் எது? – 1

.நாகராஜன்

 

QuestionMark

மாபெரும் மன்னன் இவன். பெரும் அறிவாளி. சகல கலா வல்லவன்.

சுமார் 84க்கும் மேற்பட்ட இவனது நூல்கள் உலகினரை பிரமிக்க வைப்பவை.

காதலை பிரதானமாகக் கொண்டு இவன் எழுதிய இந்த நூலுக்கு ஈடு இணை இல்லை.

அபிலாஷா, ஆகாங்க்ஷா, அபேக்ஷா, உத்கந்தா உள்ளிட்ட 64 வகைகள் காதலில் உண்டு.

இந்த 64 வகைகளில் ஒவ்வொன்றுக்கும் எட்டு வடிவங்கள் உண்டு.

 பரத முனிவரின் பரத சாஸ்திரத்தில் உள்ளது போல இவனது நூலிலும் 36 அத்தியாயங்கள் உள்ளன.

ரஸம் என்பது வாழ்க்கையின் பிரதானமான அம்சம். அதனால் தான் ரஸிகன் என்று  மனிதன் அழைக்கப்படுகிறான்.

சப்தம், அர்த்தம், சாஹித்யம் ஆகிய மூன்றிற்கும் இவன் தரும் விரிவான விளக்கங்கள் அற்புதமானவை.

சாஹித்யம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கணத்தை இவன் தரும் பாங்கே தனி! வாக்ய தர்மம் என்பதை எடுத்துக் கொண்டால் அதில் மட்டும் 48 வகை உண்டு.

அவற்றிற்கான இவனது விளக்கங்கள் அற்புதமானவை. சொற்களில் உள்ள தோஷங்கள் உள்ளிட்ட இவன் விளக்காத விஷயங்களே இல்லை.

கவிதையை அனுபவிக்கத் துடிப்பவர்கள் இவனது நூலைப் படித்த பின்னரே ஒரு கவிதையைத் தொட வேண்டும்.

சிருங்காரம் என்ற ரஸத்தைப் பிழிந்து அதன் சுவையை இவனைப் போல இன்னொரு கவிஞன் தந்ததில்லை என்பது மட்டும் உண்மை.

இவனது நூலைப் படிக்காதவர்களே இன்று திரைப்படத்தில் நாம் காணும்  மலினமான சில காதல் காட்சிகளை உருவாக்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல!

இந்திய நாட்டிற்கே, ஹிந்து தர்மத்திற்கே பெருமை தரும் இந்த மன்னன் எழுதிய நூலின் பெயர் என்ன?

  விடை: போஜ ராஜன் எழுதிய சிருங்கார ப்ரகாசா

–சுபம்–

 

 

ஏப்ரல் 2016 காலண்டர் (மன்மத/துர்முகி ஆண்டு பங்குனி/சித்திரை) Post No.2674

 

hanuman raman

Compiled by london swaminathan

Date: 29 March,2016

 

Post No. 2674

 

Time uploaded in London :–  8-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தாவரங்கள் பற்றிய 30 பழமொழிகள், இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

 

முக்கிய நாட்கள்:-  8-யுகாதி/தெலுங்கு புத்தாண்டு,

14-தமிழ் புத்தாண்டு, 15-ஸ்ரீஇராமநவமி, 21-சித்திரா பவுர்ணமி.

ஏப்ரல் 20- மதுரை சித்திரைத் தேர், 22- கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குதல்.

முகூர்த்த நாட்கள்:-4, 25, 29, அமாவாசை:- 6/7, பௌர்ணமி:- 21

ஏகாதசி:- 3, 17/18 இம்மாத காலண்டரில் தாவரம் பற்றிய 30 பழமொழிகள் இடம்பெறுகின்றன.

 

raman full page

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.

ஏப்ரல் 2 சனிக்கிழமை

அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?

ஏப்ரல் 3 ஞாயிற்றுக் கிழமை

அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.

ஏப்ரல் 4 திங்கட்கிழமை

அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.

 

arasamaram

 

ஏப்ரல் 6 புதன்கிழமை

ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.

ஏப்ரல் 7 வியாழக்கிழமை

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு

ஏப்ரல் 9 சனிக்கிழமை

ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.

ஏப்ரல் 10 ஞாயிற்றுக் கிழமை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

 

ஆலமரம்

ஏப்ரல் 11 திங்கட்கிழமை

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்

ஏப்ரல் 13 புதன்கிழமை

இலை சாய்கிற பக்கம் குலை சாயும்

ஏப்ரல் 14 வியாழக்கிழமை

எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

எட்டி மரமானாலும் பச்சை மரத்தை வெட்டாதே.

 

2மர விநோதம்

 

ஏப்ரல் 16 சனிக்கிழமை

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

ஏப்ரல் 17 ஞாயிற்றுக் கிழமை

எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்

ஏப்ரல் 18 திங்கட்கிழமை

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது

ஏப்ரல் 20 புதன்கிழமை

கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?

brinjal white

 

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

யானை வாயில் போன கரும்பைப் போல

ஏப்ரல் 23 சனிக்கிழமை

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

ஏப்ரல் 25 திங்கட்கிழமை

கனியிருக்க காயைத் தின்பரோ?

BANANA HILL

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

காய்த்த மரம்தான் கல்லடி படும்

ஏப்ரல் 27 புதன்கிழமை

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்

ஏப்ரல் 28 வியாழக்கிழமை

கொடிக்குக் காய் பாரமா?

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?

ஏப்ரல் 30 சனிக்கிழமை

சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.

மே 1 ஞாயிற்றுக் கிழமை

–சுபம்–

 

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (Post No.2673)

Apollo_17_Cernan_on_moon

Written by S NAGARAJAN ( for Bhagya Magazine)

Date: 29 March 2016

 

Post No. 2673

 

Time uploaded in London :–  8-05 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 25-3-2016 இதழில் வெளி வந்த கட்டுரை

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

 

ச.நாகராஜன்

apollo 17,schmidt

“சந்திரனில் நின்று முதலில் பூமியைத் திரும்பிப் பார்த்த போது நான் அழுதேன்” – விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட்

 

நீல் ஆர்ம்ஸட் ராங் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்தவுடன் சந்திரப் பயணம் ஆரம்பித்தது. இது சூடு பிடித்து பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் அமெரிக்க விண்வெளி வீரரான செர்னான் சந்திரனில் கால் பதித்து 44 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை யாரும் சந்திர பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இதுவரை மொத்தம் பன்னிரண்டு பேர் சந்திரனில் இறங்கியுள்ளனர்.

 

 

இவர்களில் யாரும் ஒரு தடவைக்கு மேல் சந்திரனில் இறங்கவில்லை என்பதும் ஒரு சுவாரசியமான செய்தி தான்!

அபல்லோ 11

 

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட் ராங் சந்திரனில் இறங்கி பெரும் சாதனையைப் படைத்தார். இவரைத் தொடர்ந்த் பஸ் ஆல்ட் ரின் (Buzz Aldrin)  அங்கு இறங்கினார். அவர்கள் அமெரிக்க கொடியை அங்கு நாட்டினர். பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அபல்லோ 12

இந்தக் கலத்தில் சென்றவர்கள் பீட் கான்ராட் மற்றும் ஆலன் பீன் (Pete Conrad & Alan Bean) இவர்கள் இருவரும் 1969ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்கள் அங்கு இருந்தனர்.

 

அபல்லோ 13

இதில் சென்றவர் யாரும் சந்திரனில் இறங்கவில்லை. ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று வெடிக்கவே கலம் பெருத்த அபாயத்திலிருந்து தப்பியது.

 

அபல்லோ 14

இதில் பயணப்பட்ட ஆலன் ஷெப்பர்ட் மற்றும் எட்கர் மிட்செல்  (Alan Shepard & Edgar Mitchell) 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாளன்று சந்திரனில் இறங்கினர். இதில் ஷெப்பர்ட் கோல்ப் பந்துகளை இரு முறை அடித்துப் பார்த்தார்.

 

அபல்லோ 15

இந்தக் கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் (David Scott & James Irwin) ஆகிய இருவரும் 1971 ஜூலை 31ஆம் தேதி சந்திரனில் இறங்கினர். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர்  ஆகஸ்ட் 2ஆம் நாளன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். பதினெட்டரை மணி நேரம் இவர்கள் கலத்தின் வெளியே இருந்து லூனார் ரோவரை இயக்கிப் பார்த்தனர்.  சுமார் 77 கிலோ எடையுள்ள சந்திரக் கற்களையும் இவர்கள் பூமிக்குக் கொண்டு வந்தனர்.

 

அபல்லோ 16

இந்தக் கலத்தில் பயணித்த ஜான் யங் மற்றும் சார்லஸ் ட்யூக் (John Young & Charles Duke) ஆகிய இருவரும் சந்திரனில் வெற்றிகரமாக இறங்கினர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் இவர்கள் அங்கு இருந்தனர். சுமார் 71 மணிகள் அங்கிருந்த இவர்கள் மூன்று சந்திர நடைப் பயணத்தை மேற்கொண்டனர். சுமார் 20 மணி 14 நிமிடங்கள் இந்த நடைப் பயணம் நீடித்தது. இவர்கள் லூனார் ரோவரை 26.7 கிலோமீட்டர் இயக்கினர்.

apollo-17

Apollo 17 was the sixth and last Apollo mission in which humans walked on the lunar surface. On Dec. 11, Lunar Module Pilot Harrison H. Schmitt and Commander Eugene A. Cernan, landed on the moon’s Taurus-Littrow region in the Lunar Module, while Command Module Pilot Ron Evans continued in lunar orbit.

அபல்லோ 17

இந்தக் கலத்தில் ப்யணித்த யூஜீன் செர்னான் மற்றும் ஹாரிஸன் ஷ்மிட் (Eugene Cernan & Harrison Schmitt) ஆகிய இருவர் தான் சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர்கள். இவர்களுக்குப் பின்னர் இது வரையிலும் யாருமே சந்திரனுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அபல்லோ 17 விண்கலம் 1972 டிசம்பர் 11ம் தேதி சந்திரனில் இறங்கியது. இந்த சந்திரப் பயணிகள் டிசம்பர் 19ஆம் தேதியன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். மூன்று நாட்கள் இவர்கள் சந்திரனில் இருந்தனர். கலத்தின் மொத்தப் பயண நாட்கள் 12. சந்திரனை விட்டுக் கிளம்பும் முன்னர் செர்னான் தனது மகள் ட்ரேஸியின் இனிஷியல்களை சந்திரனில் எழுதினார். அங்கு காற்றோ மழையோ பெய்யாது என்பதினால் இன்று வரை அந்தப் பெயரின் முதலெழுத்துகள் அங்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சுமார் 566 மணிகள் 15 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கும் செர்னான் 73 மணிகள் சந்திரனில் இருந்திருக்கிறார் என்பது ஒரு தனிப் பெருமையாகும்.

 

சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர் என்ற பெருமைக்குரிய செர்னான் தனது பயண அனுபவத்தை ‘தி லாஸ்ட் மேன் ஆன் தி மூன் (The Last Man on the Moon) என்ற டாகுமெண்டரி படத்தில் சுவைபடச் சொல்லியுள்ளார். இந்தப் படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று அமெரிக்க தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

“சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் கனவிலும் நினைக்க முடியாத் ஒரு பயணத்தை மேற்கொண்ட கதை இது”” என்கிறார் இந்தப் படம் பற்றி செர்னான்.

 

இந்தப் படம் தயாரிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் பிடித்தன. இதில்  செர்னான் எப்படி ஒரு விண்வெளி வீரர் கடினமான பயிற்சிகளைப் பெறுகிறார் என்பதை விளக்குகிறார். ஒரு விண்வெளி வீரர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அவர், “ஏனெனில் ஒரு விண்வெளி வீரர் வாரத்திற்கு எட்டு நாட்கள் வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று நகைச்சுவையுடன் வேலைப்பளு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் படம் விண்வெளி ஆர்வலர்களுக்கு பிடித்த படமாக இருப்பதோடு அடுத்து சந்திரனுக்கு ஒரு மனிதன் பயணப்பட வேண்டும் என்ற ஆசையையும் உருவாக்கியுள்ளது.

 

einstein

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் மகாத்மா காந்திஜியின் தொண்டர்களுள் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்ட அவரை காந்திஜி சுதந்திர இயக்கச் செய்திகளை மேலை நாடுகளில் பரப்புமாறு பணித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்ட சுந்தரம் ஏழு மாத காலம் மேலை நாடுகளில் பயணித்தார். அப்போது பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சந்தித்து மஹாத்மாவின் அஹிம்சைப் போராட்டம் பற்றி விளக்கினார். இதனால் பெரிதும் கவரப்பட்ட ஐன்ஸ்டீன் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதி அதை சுந்தரத்திடம் கொடுத்து காந்திஜியிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

அதில் காந்திஜியின் அஹிம்சா வழியை பாராட்டியதோடு, “ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க முடியும் என்று  நம்புகிறேன்” என்று ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார். (I hope that I will be able to meet you face to face some day.)

 

இதைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி தனது கொள்கைகளை ஐன்ஸ்டீன் ஏற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து 18-10-1931 தேதியிட்ட கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார். அதில் ஐன்ஸ்டீன் தெரிவித்திருந்த விருப்பத்தை வரவேற்று, “நானும் உங்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன், அதுவும் இந்தியாவில் என் ஆசிரம்த்தில்” (I do indeed wish that we could meet face to face and that too in India at my Ashram.)  என்று எழுதி அனுப்பினார்.

 

ஆனால் இருவரும் நேரில் சந்திக்க முடியவே இல்லை! மனதால் இணைந்தனர் மஹாத்மாவும் மாபெரும் விஞ்ஞானியும்!

******

It is a silly fish that is caught twice with the same bait (Post No.2672)

Work-Experience

April, 2016 Good Thoughts Calendar

Compiled by london swaminathan

 

Date: 28 March 2016

 

Post No. 2672

 

Time uploaded in London :– 9-47 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

30 Proverbs and Sayings on ‘EXPERIENCE’

Compiled by london swaminathan

Date: 28 March,2016

 

Post No. 2672

 

Time uploaded in London :–  9-25 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Festivals in April, 2016: 8th April-Telugu New Year Day/Ugadi/Vasanta Navaratri begins; 14th – Tamil New Year(Durmukhi) Day, 15th – Ram Navami, 21st – Chitra Pournami; April  20 – Madurai Ratotsavam

 

 

 

Auspicious Days:  4,  25, 29;

 

Full Moon/Purnima- 21

 

New Moon/Amavasya- 6/7

 

Ekadasi Fasting Days: 3, 17/18

 

 customer-experience_1

April 1 Friday

Drawing skills improve by the constant use of hand, Tamil skill improves by the constant use of tongue (speaking)- Tamil Proverb

 

 

April 2 Saturday

The more you sing, the more your voice improves, the more you cover your disease, the more it grows – Tamil Proverb

 

April 3 Sunday

The more you strike, even the grinding stone moves – Tamil Proverb

 

April 4 Monday

Even an ant can make a line on the stone by constantly using it – Tamil proverb

  

April 5 Tuesday

Experience is the mother of wisdom

 ant

April 6 Wednesday

Trouble brings experience and experience brings wisdom

 

April 7 Thursday

Experience without learning is better than learning without experience

 

April 8 Friday

Knowledge without practice makes but half an artist

 

April 9 Saturday

The person who kills 1000, is half a doctor (kills means treats here)

 

April 10 Sunday

An ounce of practice is worth a pound of precept.

 ounce

 

April 11 Monday

Practice makes perfect

 

April 12 Tuesday

Custom makes all things easy.

 

April 13 Wednesday

Experience is the best teacher

 

April 14 Thursday

By writing you learn to write

 

April 15 Friday

Experience is the mistress of fools

 

April 16 Saturday

Once bitten, twice shy

 

April 17 Sunday

The burnt child dreads the fire

 

April 18 Monday

A cat that knows what is hot – Tamil proverb

 

April 19 Tuesday

He that has been bitten by a serpent, is afraid of a rope.

 

April 20 Wednesday

Let another’s ship wreck be your sea-mark

 shipwreck

April 21 Thursday

It is good to learn at other men’s cost

April 22 Friday

It is a silly fish that is caught twice with the same bait

 

April 23 Saturday

You can do a mistake; but you repeat the same mistake, I wont tolerate it – My Editor A N Sivaraman to us in Madurai Dinamani Desk.

 

April 24 Sunday

He that deceives me once, shame fall him; if he deceive me twice, shame fall me.

 

April 25 Monday

In Tamil Chettiyar community, they never write ‘loss Rs100’, but write ‘lesson learnt Rs100’ instead (in their accounts book; Budhi Kolmuthal in Tamil)

 Live-Fishing-Worms-as-Bait

April 26 Tuesday

He that stumbles twice over one stone, deserves to break his shins.

 

April 27 Wednesday

In war, it is not permitted twice to err.

 

April 28 Thursday

Turn your wounds into wisdom –Oprah Winfrey

 

April 29 Friday

Failure is the condiment that gives success its flavour (Failure is the first step to success- Tamil Proverb)

 

April 30 Saturday

People never learn anything being told, they have to find out for themselves – Paulo Coelho

 

Condiments-31-39

–subham–

பெண்களை எங்கே, எங்கே பார்த்தால் குற்றமாகாது? (Post No 2671)

996_Brides_Kashmir

Compiled and Translated by london swaminathan

 

Date: 28 March 2016

 

Post No. 2671

 

Time uploaded in London :– 7-20 AM

 

(Pictures are taken from various sources. Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 2

bengali bride

22.நார்யோ ஹரந்தி ஹ்ருதயம் ப்ரசபம்

நராணாம் – ரத்ன சமுச்ச

ஆண்களின் இருதயத்தை எளிதில் கவர்கிறார்கள் பெண்கள்.

Xxx

23.நிர்தர்பா நாசதீ பவேத் – கதா சரித் சாகரம்

துடுக்கற்ற பணிப்பெண்களே நல்லவர்கள்.

Xxx

  1. நிர்தோஷ த்ருஸ்யா ஹி பவந்தி நார்யோ யக்ஞே விவாஹே வ்யசனே வனே ச – ப்ரதிமாநாடக 1-29

யாகத்திலே, விவாஹத்திலே,துக்கத்திலே, ஆரண்யத்திலே –பெண்கள் பார்க்கப்பட்டால் தவறில்லை. (வேள்வி, திருமணம், காடு, துக்கம் நிகழ்ந்த இடத்தில் பெண்களைப் பார்க்கலாம்; பேசலாம்)

Xxx

25.நிசர்க நிபுணா: ஸ்த்ரிய: – மாளவிகாக்னிமித்ரம்

இயற்கையிலேயே, பெண்கள் நிபுணர்கள்(திறமைசாலிகள்)

Xxx

26.நீதி மாத்ரம் அஹம் மன்யே ஸ்த்ரீணாம் ரக்ஷானியந்த்ரணம் – கதா சரித் சாகரம்

பெண்களைப் பாதுகாப்பதற்கானக் கட்டுப்பாடுகள் நியாயமானவை என்றே நான் நினைக்கிறேன்.

Xxx

27.பரஸ்த்ரியம் ந அபிகாங்க்ஷேத – சதோபதேச ப்ரபந்த

பிறர் மனைவியை விரும்பாதே.

Xxx

 

IMG_4358

28.ப்ரத்யய: ஸ்த்ரீஷு முஷ்ணாதி விமர்சம் விதுஷாமபி – கதா சரித் சாகரம்

கற்றவர்களும் கூட பெண்களை நம்பி முட்டாள் ஆகிவிடுவர்.

Xxx

29.ப்ரத்யுத் உத்பன்னம் மதி ஸ்ரேணம்-சாகுந்தலம்

பெண்கள் புத்திசாலிகள்

 

Xxx

30.ப்ரிய: கோ நாம யோஷிதாம் –சாந்திசதக

யார்தான் இப்பெண்ணுக்கு விருப்பமானவர்?

Xxx

31.பத்த மூலஸ்ய மூலம் ஹி மஹத்வைரதரோ: ஸ்த்ரிய: – சிசுபாலவதம்

பகைமை என்னும் மரத்தின் ஆணிவேர் ( மூல காரணம்) பெண்கள்தான்.

Xxx

32.பீஜம் யுத்தஸ்ய யோஷித: – ப்ருஹத் கதா கோச 69-16

போர்களின் வித்து/விதை பெண்களே

Xxx

33.பவதி விக்லவதா குணோ அங்கனானாம் – சிசுபாலவதம்

பெண்களுடைய குணம் பயப்படுவதே.

Xxx

34.மத்தா நதீ ச நாரீ ச நியந்தும் கேன பார்யதே – கதா சரித் சாகரம்

வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியையும், பெண்களையும் யார் கட்டுப்படுத்த முடியும்?

Xxx

35.மானனீயா ஹி யோஷித: – பாரத மஞ்சரி

பெண்களை மதிக்க வேண்டும்

Xxx

36.முக்த: கலு  அபலாஜன: –

விரைவில் பெண்கள் மிரண்டு/ மருண்டுவிடுவர்

Xxx

IMG_4527

37.முக்தமானசம் ரமந்தே நஹி யோஷித:

முட்டாளுடன் பழகுவதை பெண்கள் விரும்புவதில்லை.

தொடரும்…………………………………….

(ஏற்கனவே நான் எழுதிய 25-க்கும் மேலான பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள், பழமொழித் தொகுப்புகள், இந்த பிளாக்கிலுள்ளன.)

 

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்! – 1 (Post No 2670)

Digital-thermometer-1140x625

Written by S NAGARAJAN ( for Radio Talk)

Date: 28 March 2016

 

Post No. 2670

 

Time uploaded in London :–  6-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இதைக் காக்க எளிய வழிகள் பல உள்ளன. காற்றைத் தூய்மையாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிகள் இதோ:

 

உங்கள் வீட்டை பெயிண்ட் அடிக்கிறீர்களாஆயில் பேஸ்ட் பெயிண்ட் (Oil based paint) எனப்படும் எண்ணெய் சார்ந்த வர்ணங்களைப் பயன்படுத்தாமல் லேடக்ஸ் பெயிண்டுகளைப் (latex paint) பயன்படுத்துவதன் மூலம் ஹைட்ரோகார்பன் புகை வெளியாவதைத் தடுக்கலாம். உங்கள் வாகனங்களுக்கு உரிய காலத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதிக மைலேஜ் கிடைப்பதோடு நச்சுப் புகை வெளியேற்றத்தையும் பெருமளவு தவிர்க்கலாம். காற்று மாசு படுவதைத் தவிர்க்கலாம்.

 latex paint

கழிவுப் பொருள்களை வீட்டின் முன்போ அல்லது சாலையிலோ போட்டு எரிக்கக் கூடாது. இதன் மூலம் வெளியாகும் புகை சுவாசம் சம்பந்தமான கோளாறுகளையும் பல விதமான அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக் கோளாறுகளையும் அருகில் வாழும் பலருக்கும் ஏற்படுத்தும்.

 

மரம் ஒன்றை நடுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழலைப் பெரிதும் காத்தவர்கள் ஆவீர்கள். மரம் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி விடும்.

 

கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் தவிர்த்து நடை பயிலுங்கள். அல்லது பஸ் போன்ற வெகுஜன வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.

 

இனி நாம் வாழும் நிலப்பகுதியைக் காக்கும் சில எளிய வழிகளைப் பார்ப்போம். வீட்டில் உள்ள குப்பைகளைப் போடும் பக்கெட்டில் ஆபத்தை விளைவிக்கும் பெயிண்டுகள், உர வகைகள், கெமிக்கல்கள், கார் பேட்டரிகள், எண்ணெய்க் கழிவுகள் ஆகியவற்றைப் போடக் கூடாது

 

பாதரஸம் உள்ள மெர்க்குரி தெர்மாமீட்டரைப் பயன்படுத்தாமல் டிஜிடல் தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு வரும் பெரும் கேட்டைத் தவிர்க்கலாம். பாதரஸம் கழிவாக அப்புறப்படுத்தப்படும் போது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு பொருளைத் தவிர்த்தவர்கள் ஆவோம். கெமிக்கல்கள், உர வகைகள், பெயிண்டுகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் வைக்காமல் உரிய அளவை மட்டுமே வாங்கலாம். பேப்பரா, பிளாஸ்டிக்கா? பிளாஸ்டிக் தேவையில்லை என்று தைரியமாக எப்போதும் முடிவெடுங்கள். பேப்பரின் இரு பக்கங்களையும் எப்போதும் பயன்படுத்துங்கள்.

சுபம்–

Never Vote for Bad People! (Post No.2669)

ICE MONKEY 2

Compiled by london swaminathan

 

Date: 27 March 2016

 

Post No. 2669

 

Time uploaded in London :– 15-12

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

What will happen if you vote for bad people and help them to come to power? Here is a story:-

 

When a tiger was pursuing a hunter, he ran and climbed a tree. The tiger, sitting beneath the tree, looking at a monkey on the tree said, “Throw him down. He is a hunter. Therefore he is a killer of us all. He is a bad one.”

The monkey answered, “though he be an evil one, I will not do harm to one who has come to me in fear. Depart.”

The tiger waited below.

Afterwards the monkey, because the hunter was hungry, went to fetch fruits for him. Then the tiger, looking at the hunter, said, “The monkey’s young one is there. Throw it down, then I will leave you and take it and go away.”

So the hunter threw down the monkey’s young one.at that time the monkey that had gone to fetch the fruits returned and the tiger said, “O monkey! The hunter to whom you did such kindness has thrown your offspring down. Therefore he is a bad one. Throw him down and I will leave your young one, and go.”

The monkey refused to push him down

“If you do kindness to a cruel one, ruin will come to you from it”, responded the tiger, and, without eating the young one, withdrew.

The hunter having devoured the fruits the monkey had brought, said, “My wife and children have no meat” and slew it as it hung in repose, and carried it off. So will it come to pass, if you give help to the cruel.

—Indian folktale

மல்யுத்த வீரர் ஒருவரின் புதிய யுத்தம் (Post No. 2668)

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Written by S NAGARAJAN
Date: 27 March 2016

 

Post No. 2668

 

Time uploaded in London :–  9-59 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Common Map Turtle.jpg

மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் எல் ஹிஜோ டெல் சான்டோ (El Hijo del Santo) புதிய யுத்தம் ஒன்றில் ஈடுபட்டு உலகத்தினரிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

 

இந்த யுத்தம் நீரில் வாழும் ஆமைகளை வேட்டையாடுவோரையும் கடல் வாழ் திமிங்கிலங்களை அழிப்போரையும் எதிர்த்துச் செய்யும் யுத்தம்.

முகமூடியை அணிந்து மல்யுத்த அரங்கத்தில் எதிரியுடன் சண்டை செய்து வழக்கமாக வெற்றியையே பெறும் இந்த வீரர் முகமூடி இல்லாமல் நேருக்கு நேர் கடல் வாழ் உயிரினங்களைக் காக்கச் செய்யும் போர் அனைவருக்கும் முன் உதாரணமாக இலங்குகிறது.

 

டிஜுவானா என்ற நதி வடமேற்கு மெக்ஸிகோவில் ஓடுகின்ற நதி. இந்த நதியில் குப்பைகளும், கழிவு நீரும் சேர்வதைக் கண்டு மனம் பொறாத அவர் இப் பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதைத் தனது தலையாய பணியாக மேற்கொண்டார். “மல்யுத்தம் செய்வதை விட சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை எதிர்த்துப் போர் புரிவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.இதில் அனைவரும் சேர வாரீர்என்கிறார் அவர்.

கடலில் வாழும் திமிங்கிலங்களும் ஆமைகளும் பெருமளவில் அழிந்துபட்டு வருவதைக் கண்ட அவர் அவற்றிற்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும் அவரது குரலைக் கேட்ட பல்லாயிரக்கணக்கானோர் அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

ஆமைகளை உணவாகச் சாப்பிட வேண்டாம் என்ற அவரது வேண்டுகோளை ஏற்று கடல் ஓரமாக ஒதுங்கும் ஆமைகளைப் பிடித்து உணவாக உண்பதை மெக்ஸிகோ மக்கள் தவிர்க்க ஆரம்பித்ததோடு ஆமை முட்டைகளையும் கூட காப்பாற்ற ஆரம்பித்து விட்டனர். மெக்ஸிகோ அரசு இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கூட மல்யுத்த வீரரின் ஈடுபாடு காரணமாக கடந்த 50 ஆண்டு காலமாக வெகு வேகமாக அழிந்து வந்த இந்தக் கடல் வாழ் உயிரினம் இன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

 

 

மலைக்க வைக்கும் தொகையான் எட்டு லட்சம் டாலர் தொகையுடன் ஆமைகளையும் திமிங்கிலங்களையும் காக்க இறங்கிய அவரது பணி மாபெரும் வெற்றி பெற்று உலகத்தினருக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்து விட்டது. மல்யுத்த வீரரின் புதிய யுத்தத்தில் மக்களும் ஈடுபட்டு வெற்றி பெற்றது ஒரு புதிய சுவையான செய்தி தானே!