அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
முகலாய ஆட்சியாளரால் பாரத தேசம் குறிப்பாக வங்காளம் இருளில் மூழ்கி இறைபக்தி ஒடுக்கப்பட்டிருந்த சமயம் ஸ்ரீ கிருஷ்ணரது நாமத்தைப் பரப்ப அவதரித்தார் ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு! 1486ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, பல்குனி பௌர்ணமியில் அவர் வங்காளத்தில் நவத்வீபத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ஜகந்நாதர் ஒரு ஏழை பிராமணர். தாயார் சசி தேவி ஹிந்துப் பெண்மணிக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவரது தாயாரின் தந்தை ஒரு சிறந்த ஜோதிடர்.
குழந்தையாக இருந்த போதே அவர் ஒரு பெரிய மகான் என்பதற்கான நிகழ்ச்சி நடைபெற ஆரம்பித்தது. எப்போதும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருக்கும். எத்தனை பேர் வந்து என்ன சமாதானம் செய்தாலும் குழந்தை சைதன்யா அழுவதை நிறுத்தாது. ஆனால் ‘ஹரி போல்’ என்று சொன்னாலோ உடனே அழுகையை நிறுத்தி விடும். இதைப் பார்ப்பதற்காகவே அண்டை அயலார் அங்கு வந்து குழந்தையை அழவிட்டு ஹரி போல் சொல்வது வழக்கம். ஆகவே யார் யாரைப் பார்த்தாலும் ‘ஹரி போல்’ சொல்வது வழக்கமானது. நிமாயி என்ற பெயரால் அவர் எல்லோருக்கும் அறிமுகமானார்.
சிறு பையனாக அவர் இருந்த போது ஒரு அதிதி அவர் வீட்டிற்கு வந்தார்.தனது உணவைத் தானே சமைத்து முடித்து அதை கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது அவர் பழக்கம். அப்படிச் செய்ய முயன்ற போது சைதன்யர் அதை எடுத்து உண்டு விட்டார். திகைத்துப் போன சைதன்யரின் தந்தை ஜகந்நாதர் இன்னொரு முறை அந்த அதிதியைச் சமைக்குமாறு வேண்ட அவரும் அப்படியே சமைத்தார். இந்த முறையும் சிறுவன் சைதன்யன் அதை உண்டு விட்டான். மூன்றாம் முறை அந்த அந்தணர் சமைத்தார். அப்போது இரவு நேரம் என்பதால் அனைவரும் உறங்கச் சென்றனர். அப்போது சைதன்யர் அந்த அதிதி பிராமணருக்கு கிருஷ்ணராகக் காட்சி அளித்தார். பெரிதும் வியப்படைந்த அவர் தனது நிவேதனத்தை கிருஷ்ணரே அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக மகிழ்ந்தார்.
அவருக்கு எட்டு வயதானவுடன் அவரை அருகில் கங்கா நகர் கிராமத்தில் இருந்த பண்டிதர் கங்காதாஸிடம் அனுப்பினர். இரண்டே வருடங்களில் சம்ஸ்கிருத இலக்கணம், நியாய சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேறினார் சைதன்யர். உரிய வயதில் நாடியாவைச் சேர்ந்த வல்லப ஆசாரியர் என்பவரது மகளான லக்ஷ்மி தேவியை அவர் மணந்தார். சிறந்த மேதை என்று இப்போது அவரது புகழ் வங்காளம் முழுவதும் பரவி விட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக லக்ஷ்மி தேவி 1504ஆம் ஆண்டில் சைதன்ய பிரபுவின் 18ஆம் வயதிலேயே மறைந்தார்.
தனது 24ஆம் வயதில் அவர் துறவறம் மேற்கொண்டார். கயா க்ஷேத்திரத்திற்குச் சென்ற சைதன்யர் மாதவேந்திர புரி கோஸ்வாமியின் சீடரான ஈஸ்வர் புரி என்ற வைணவ மகானிடமிருந்து தீக்ஷை பெற்றுக் கொண்டார். பின்னர் நாடெங்கும் யாத்திரையை மேற்கொண்டார். வங்காளத்திலிருந்து கன்யாகுமரி வரை அவர் பாதம் படாத இடம் இல்லை. அவருக்கு பிரதானமாக ஆறு சிஷ்யர்கள் அவர் கொள்கையைப் பரப்ப உருவாயினர். அவர்களில் இருவர் அவருக்கு வயதில் இளையோர். மற்ற நால்வரும் அவரை விட வயதில் மூத்தவர்கள்.
ஆசார்ய அத்வைதர் (1435-1550), பக்த ஹரிதாஸ் (1450-1530), நித்யானந்தா (1478-1545), ராய் ராமானந்தா (1450-1563), ரூப கோஸ்வாமி (1490-1563), சனாதன் கோஸ்வாமி (1488-1558) ஆகியோரே அந்த ஆறு சிஷ்யர்கள்.
வைஷ்ணவ தர்மத்தைப் பரப்பும் சிறந்த மஹானாக அவர் விளங்கினார். பெயரைச் சுட்டிக் காட்டும் விதமாக அவர் தேசத்திற்கு சேதனாவை – பிரக்ஞையை – உணர்வை ஊட்டினார். கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் என்ற கிருஷ்ண பிரக்ஞையை உலகெங்கும் ஊட்ட ஆரம்பித்தார். கிருஷ்ண நாமமே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஒரே தீர்வு என்பது அவரது முடிந்த முடிபு.
அவரது தத்துவம் அசிந்த்யபேதாபேத்வாத் என்று அழைக்கப்பட்டது. கடவுளும் மனிதனும் வேறாக இருந்த போதிலும், எப்பொழுதும் இருப்பது உணர்தற்கு அப்பாற்பட்ட ஒன்றே தான் என்பது இதன் சுருக்கமான அர்த்தமாகும். தெய்வீக லீலையாக இன்றளவும் நாடே கொண்டாடும் ராதா-கிருஷ்ண லீலையை பிரதானமாகக் கொண்டது அவரது கொள்கை. ராதை ப்ரக்ருதியின் உச்ச வடிவமான பெண். கிருஷ்ணர் ஒரே புருஷர். அதாவது அந்தமிலா ஆனந்தம் கொண்டவர் என்பது இதன் பொருள். பரமாத்மா என்னும் புருஷனை விட்டுப் பிரிந்த பெண் சக்தியான ராதை பரமாத்மாவைச் சேர விழைவதே வைணவ தத்துவமாகும். இதற்கு சுலபமான எளிதான வழி ஹரி நாமம் தான்!
புரியில் அவர் இருந்த போது சார்வபௌம பட்டாசார்யா என்ற பேரறிஞர் அவருடன் வாதுக்கு வந்தார். ஆனால் ஒவ்வொரு கருத்தாக அவர் சொல்லச் சொல்ல சைதன்யர் தனது பக்கக் கருத்தை விளக்கினார். இப்படி ஆச்சரியகரமாக சைதன்யர் விளக்கும் விதத்தைக் கண்ட பட்டாசார்யார், “இவர் கிருஷ்ணரே தான். எனது கல்வியில் பெருமையும் அகந்தையும் நான் கொண்டிருந்ததால் இவர் யார் என்று புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். அடடா, தவறு செய்து விட்டேனே” என்று எண்ணி வருந்தினார். இப்படி அவர் வருத்தப்பட்ட போது இறைவன் கருணை மிகக் கொண்டார். நான்கு கரங்களுடனான தனது விஷ்ணு ரூபத்தை பட்டாசாரியாருக்குக் காட்டினார். பின்னர் தனது இரு கரங்களுடனான கிருஷ்ணாவதார காட்சியைத் தந்தார்.
இது போல பல முறைகள் சைதன்யர் கிருஷ்ணராகப் பலருக்கும் காட்சி அளித்ததாக வரலாறு கூறுகிறது.
சைதன்யர் ஜார்கண்ட் காடுகளின் வழியே செல்லும் போது அவர் நாம சங்கீர்த்தனை செய்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு புலி அவர் செல்லும் பாதையில் படுத்திருந்தது. அதை தனது பாதத்தால் சைதன்யர் தொடவே அது எழுந்து நின்று ஹரே கிருஷ்ணா என்று நாமத்தை ஒலித்தது. சைதன்யர் தன் கையை அசைக்கவே அனைத்து மிருகங்களும் நாம சங்கீர்த்தனத்தை ஏற்று மகிழ்ச்சியுடன் ஆடின. கொடிய வன மிருகங்கள் மற்ற சாதுவான மிருகங்களைத் தழுவிக் கொண்டு ஆடியதைக் கண்ட அவர் நாம சங்கீர்த்தனத்தின் சக்தி இது என்று மகிழ்ந்தார்.
புரி ரத யாத்திரை விமரிசையாக நடைபெறும் பெரிய விழாவாகும். ஒரு முறை ஏதோ காரணத்தால் நகரவில்லை. உடனே மன்னன் வீரர்களை அழைத்து ரதத்தை இழுக்கச் சொன்னான். ரதம் நகரவில்லை. வலிமை வாய்ந்த யானைகள் வரவழைக்கப்பட்டன. அவற்றாலும் ரதத்தை இழுக்க முடியவில்லை. அப்போது சைதன்ய மஹா பிரபு ரதம் அருகே வந்தார். ரதத்தின் பின்னால் சென்று தன் தலையால் ரதத்தைத் தொட்டார். அவ்வளவு தான், ரதம் நகரத் தொடங்கியது. கையில் கயிறுகளுடன் ரதத்தை இழுத்துக் கொண்டிருந்தோர் தங்கள் கையில் கயிறுகள் இழுக்கப்படாமல் அப்படியே இருப்பதையும் ஆனால் ரதம் நகர்ந்து செல்வதையும் பார்த்து வியந்தனர்.
சைதன்யரின் வாழ்க்கையை விரிவாக ஏராளமானோர் எழுதியுள்ளனர். அந்த நூல்களில் எல்லாம் இது போன்ற ஏராளமான வியத்தகும் சம்பவங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சைதன்ய சரிதாம்ருதா என்ற நூலை ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் என்பவர் படைத்துள்ளார். அதில் அவர் ஒரு மரம் பற்றிய வர்ணனையைக் குறிப்பிடுகிறார். ஒரு மிகப் பெரிய மரமானது சிறிய விதை ஒன்றினாலேயே உருவாகிறது. அது பெரிதாகி மனித குலத்திற்குப் பெரும் பயனைத் தருகிறது.
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவிஆள் பெரும் படையோடு மன்னர்க்கு இருக்க நிழலாகுமே என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு பாடல். அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை நமக்குத் தரும் செய்தி இது.
இந்தக் கருத்தை மனதில் வைத்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் ஒரு வைஷ்ணவ மரத்தின் தோற்றத்தை விளக்குகிறார். மாதவேந்திர புரி கோஸ்வாமி என்பவர் வைஷ்ணவத்தின் விதையை விதைத்தார். அந்த மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தார் அவரது சிஷ்யரான ஈஸ்வர்புரி ப்ரபுவானவர். அவரது சிஷ்யரான சைதன்ய மஹா ப்ரபு அதை முழுப் பரிணாமம் உள்ள மிகப் பெரும் மரமாக ஆக்கி உலகமே பயனடையச் செய்தார். ஆக அன்பே பிரதானமான வைஷ்ணவத்தை ஒரு அழகிய வழியில் வடிவமைப்புச் செய்தவர் ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபுவே என்பது தெளிவாகிறது. கௌடியா வைணவம் என்ற அவரது கொள்கை பரவலாக இன்று அறியப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் ஏராளமான வியத்தகும் சம்பவங்களையும் செய்திகளையும் தருகிறார். பெரும் கொள்ளைக்காரர்கள் சைதன்யரைச் சந்தித்த மாத்திரத்தில் மாறியதையும், சைதன்யரின் நாம சங்கீர்த்தனத்தால் அரசர்கள் வைணவத்தைத் தழுவியதையும் அவர் வரலாறு தெரிவிக்கிறது. இன்னொரு முக்கிய சம்பவத்தைப் பார்ப்போம். ஒருமுறை சைதன்யரின் பாதுகாப்பிற்காக அவருடன் இரு படைவீரர்களும் இரு வங்காளத்தைச் சேர்ந்த பிராமணர்களும் கூட வந்தனர். வழியில் ஒரு மரத்தடியில் சைதன்யர் இளைப்பாற் அமர்ந்தார். அப்போது அருகில் ஒரு இடையன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எழுந்த புல்லாங்குழல் இசையைக் கேட்ட சைதன்யர் ஆனந்தம் மேலிட பக்திப் பரவசமானார், அப்படியே மயங்கி விட்டார்; அவர் வாயிலிருந்து நுரை கக்கியது.
அப்போது அந்தப் பக்கம் வந்த பதான் இளவரசனான பிஜ்லிகான் என்பவன் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்தான். சைதன்யருடன் கூட இருந்த நால்வரே அவருக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக நினைத்தான். அவர்களைக் கைதும் செய்தான். ஆனால் அவர்கள், “நாங்கள் சைதன்யரின் சீடர்கள்’ என்றும், அவரே விழித்தெழுந்து இதைச் சொல்வார் என்றும் பயத்துடன் கூறினர். சிறிது நேரத்தில் உணர்வு பெற்ற சைதன்யர் பிஜ்லிகானிடம் அவர்கள் தனது சீடர்களே என்றும் பக்திப் பரவசத்தால் தான் கீழே விழுந்து மயக்கமுற்றதாகவும் வலிப்பினால் நுரை கக்கியதாகவும் கூற பிஜ்லிகான் அந்த நால்வரையும் விடுவித்தான். பிஜ்லிகானின் கூட வந்த ஒரு பதான், சூபி கொள்கையில் திளைத்தவன். அவன் சைதன்யரிடம் பேச ஆரம்பிக்க அவர் கிருஷ்ணரைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். இதனால் கவரப் பெற்ற அந்த சூஃபி வைஷ்ணவ கொள்கையை ஏற்றுக் கொண்டு கிருஷ்ண நாமத்தைக் கூற ஆரம்பித்தான். இதனால் சைதன்யர் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். தனது வேலைக்காரனே இப்படி மாறியதைக் கண்ட பிஜ்லிகான் தானும் மனம் மாறி அவரது காலில் விழுந்தான். இவர்கள் நாடெங்கும் சைதன்யரின் பெருமையையும் கிருஷ்ண நாம மஹிமையையும் பரப்ப ஆரம்பித்தனர். இவர்கள் பதான் வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படலாயினர்.
வங்காளத்தை ஆட்சி புரிந்த அலாவுதீன் ஹுஸைன் ஷாவின்- Alauddin Hussein Shah (ruled 1493–1519 -)பொக்கிஷதாரராக விளங்கியவ்ர் சனாதன கோஸ்வாமி. அவரது தந்தை இறக்கவே, அவர் பார்த்து வந்த இந்தப் பதவியை சனாதன் கோஸ்வாமி ஏற்க வேண்டியதாயிற்று. அவர் சைதன்யரை ஒரு முறை தரிசித்தார். அவர் பால் அளவில்லா ஈடுபாடு கொண்டார். அவரை ஹுஸைன் ஷா தர்பாரிலிருந்து விலகி பதவியையும் விடுமாறு சைதன்யர் அறிவுறுத்தவே அவர் உடனடியாக அப்படியே செய்தார். அவருக்கு ரூப சனாதன் கோஸ்வாமி என்ற பெயரை வழங்கினார் சைதன்யர். ரூப கோஸ்வாமி கௌடியா வைஷ்ணவத்தைப் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தார்.
தனது 31வது வயதிலிருந்து மறையும் வரை பெரும்பாலும் அவர் புரியிலேயே வசித்து வந்தார். இறுதியில் 1533ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி அவர் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 47 வருடம் 3 மாதம். தோதா புரி கோவிலில் நாம சங்கீர்த்தனம் பாடிக் கொண்டிருந்த போதே அவர் திடீரென மறைந்தார்.
தனது அனைத்து போதனைகளையும் சுருக்கமாக சிக்ஷாஷ்டகம் என்ற எட்டே எட்டு செய்யுள்களால் அவர் உலகிற்கு தந்து அருளினார்.
எனக்குச் செல்வம் வேண்டாம், ஜனம் வேண்டாம், அழகிய பெண்கள் வேண்டாம். உனது மீதான பக்தியே ஜன்ம ஜன்மத்திற்கும் வேண்டும். இதை ஸ்ரீ பக்திவேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் இப்படி:
O almighty Lord, I have no desire to accumulate wealth, nor do I desire beautiful women, nor do I want any number of followers. I only want Your causeless devotional service birth after birth.
“இறுதியில் கிருஷ்ணரைத் தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. அவன் என்ன செய்தாலும் சரி, அவன் என்னை எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஏனெனில் அவனே நான் வணங்கும் தெய்வம்” என்று சிக்ஷாஷ்டகம் முடிகிறது.
I know no one but Krishna as my Lord, and He shall remain so even if He handles me roughly by His embrace or makes me brokenhearted by not being present before me. He is completely free to do anything and everything, for He is always my worshipful Lord unconditionally.
சிக்ஷாஷ்டகத்தின் மொத்த சாரம் ஒரே வரியில் “கிருஷ்ணனே எல்லாம்” என்பதாகும்.
ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவை வணங்கி சர்வம் ஸ்ரீ கிருஷ்ண மயம் என்று கூறி எனது இந்த உரையை முடிக்கிறேன்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பா.கண்ணன், புது தில்லி
ஞானமயம், தமிழ் முழக்கம் அன்பு நெஞ்சங்களுக்குத் தில்லியிலிருந்துப் பேசும் கண்ணனின் மனம் நிறைந்த வணக்கம் பல. நம்மை மீறியச் சக்தியின் எதிர்பாராத விளைவால் சில மாத இடைவெளிக்குப் பின் தமிழ் ஆர்வலர்களுடன் அளவளாவு வதில் பெரு.மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்கு நாம் கேட்கப் போவது, சூரியனைப் போற்றும் 100 செய்யுட் களைக் கொண்டு கவி மயூரபட்டரால் சம்ஸ்க்ருதத்தில் இயற்றப் பட்டச் சதக நூலான சூரியச் சதகம் பற்றியது. இதன் தமிழாக்கத்தை ஒட்டியே இப்பேச்சு அமைந்துள்ளது. இது ஒரு தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடாகும்.
ஆதவனைத் தொன்றுதொட்டு உலகின் அனைத்து நாகரிகங்களும் போற்றிப் புகழ்ந்துள்ளன.. வேதகாலம் சூரியனுக்குத் தனியொரு இடம் கொடுத்துச் சிறப்பித்துள்ளதை அறியமுடிகிறது. நமது அனைத்து மொழி இலக்கியங்களும் சூரியனைப் போற்றியுள்ளன. பிரபலமாக விளங்கும் தனிக் கோவில்களும் பல இருக்கின்றன.
சூரியசதகம் நூலை இயற்றிய ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மயூரகவி என்ற மயூரபட்டர் ஹர்ஷ சக்கரவர்த்தியின் அவைப் புலவராக இருந்தார். உரைநடைக் காவியம் காதம்பரியை இயற்றியப் பாணபட்டரின் உறவினரும் ஆவார். அச்சமயம் அவர் குஷ்டரோக நோயினால் அவதிப்பட்டார் அதனால் ராஜசபையிலிருந்து வெளியேற்றப் பட்டார் அதிலிருந்து மீள சூரிய சதகத்தை இயற்றிப் பாஸ்கரனை உபாசித்து நோய் நீங்கப் பெற்றார் எனும் செவிச் செய்தி ஒன்றுண்டு ஆனால் இதில் குறிப்பிட வேண்டியது, தனக்கு வந்திருந்த நோயைத் தீர்த்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்நூலில் ஒருவரியில் கூட அவர் சூரியனை வேண்டவில்லை மாறாக உலகோருக்காகவே உபாசித்தார் என்பதே! நோயிலிருந்து நிவாரணம் பெற சூரியனைக் குறித்து நூறு செய்யுட்களாலானத் தோத்திர இலக்கியமாகவும் ,காவியமாகவும் இந்நூலை இயற்றியதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹங்களில் பிரதானமான ஆதவன் கண்நோய் முதலான உடல் உபாதைகளைக் களைபவர். ஆகையால் நோய்த் தீர்க்கும் கருத்துப் பொக்கிஷமாக வடமொழி சிற்றிலக்கியத்தின் ஓர் அங்கமாகச் சூரியச் சதகம் விளங்குகிறது.
மயூரகவி வேதங்கள் உபநிடதங்கள் சாஸ்திரங்கள் மகாபாரதம் ஆகியவற்றிலிருந்துப் பல கருத்துக்களை இந்நூலில் கையாண்டிருக்கிறார். ஆனாலும் மகாபாரதத்தில் காணப்படும் செய்திகளை இதில் வெகு பரவலாகக் காணமுடிகிறது. அதில் வனபர்வத்தில் யுதிஷ்டிரருக்கு அவர்களது குரு தௌம்யர் அருளிய சூரிய ஸ்தோத்திரமே இந்நூல் எழுத உந்துகோலாக இருந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், அதில் இடம் பெறும் ஆதவனின் வேறு பல நாமங்கள், பிற செய்திகளையும் சூரிய சதகத்தில் காணமுடிகிறது.
அன்றாடம் காலையில் உதித்து மாலையில் மறைகின்ற ஒளிக்கோளத்துக்கு அளவற்றச் சக்தியை அருளுவது அதற்கும் அப்பாற்பட்டப் பரம்பொருள் தான் சூரியன். அரூபமானப் பரம்பொருளைஉருவமானச் சூரியக்கோளில் தெய்வமாகப் பாவித்து வழிபடுகிறோம். இக்கருத்தை ஆதாரச் சுருதியாக வைத்து இயற்றப்பட்டதே இந்தச் சூரியச் சதகம். சூரியச் சதகம். ஆதவனின் ஆற்றலைப் பல கோணங்களில் எடுத்துக்காட்டி நம் மனதில் பதிய வைக்கிறது. காட்டாற்று வெள்ளம் போல் அழகியக் கற்பனைகள் தங்குத்தடையின்றிச் சுழன்று ஓடுகின்றன.
தமிழகத்தில் பண்டையக் காலம் தொட்டுச் சூரிய வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. காஞ்சி மகாசுவாமிகளின் வழிகாட்டுதலில் காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலய பானுதீர்த்தப் படிக்கட்டுகளில் பொரிக்கப்பட்டிருந்தச் சுலோகங்களை ஆராய்ந்த வல்லுநர்களிடம் அவை சூரிய சதகச் செய்யுட் களே என்பதை அவர் உறுதிப் படுத்தினார். இதன் மூலம் தமிழக மன்னர்களின் ஆதரவுடன் சூரியசதகம் எனும் நூல் பண்டிதர் முதல் பாமரர் வரைப் பாராயணம் செய்யப்பட்டு வந்துள்ளது என்று அறிய முடிகிறது
அப்படி மயூரகவி கையாளும் சில விஞ்ஞானக் கருத்துக்களைக் காண்போம்.சுலோகம் 63-.சூரியனைச் சுற்றியுள்ள வாயு மண்டங்களான ஆவஹ, ப்ரவஹ, விவஹ, பராவஹ, ஸம்வஹ, உத்வஹ, பரிவஹ ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாகச் சூரிய ரதத்தைத் தங்கள் தோள்களில் சுமந்துச் செல்கின்றனவாம்.
சு.29, 98-ல் சூரியக் கிரணத்தின் தன்மைகளைப் பற்றி விளக்குகிறார். சு.18, 97-ல் பூமியின் சுழ்ற்சியால் சூரியன் உதிப்பது, மறைவது போல் தோன்றுகிறது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துள்ளார். சு.96-ல் சூரிய மண்டல விளக்கம். சு.2, 3-ல் காலை, மாலை வேளைகளில் காணப்படும் சூரியனின் நிறம் மற்றும் உருவம் விளக்கப் படுகிறது.
சூரிய நிறமாலையில் நிரவியிருக்கும் ஃபரான் ஹோஃபர் (JOSEPH VON FRAUN HOFER- 1787-1826) வரிகள் மூலம் ஒளிக்கதிர்கள் ஊடுருவி வெளிப்படும் போது அந்நிறங்கள் வெவ்வேறு வகையான வெப்பங்களைத் தருகின்றன. அதிலும் ஊதாசிவப்பு நிறமே அதிக வெப்பம் தரவல்லதாகும் என்ற விஞ்ஞானிகளின் கூற்றை அன்றே சொல்லிவிட்டார்! எந்த ஒளியின் வீச்சும் அகன்று, அகன்றுச் செல்கையில் ஒளி குறையும், ஆனால் சூரியக் கிரணங்கள் மட்டும் ஒளி குன்றுவதே கிடையாது.அவற்றின் தன்மைகளைப் பற்றியும் சு.29,98-ல் கவி ஒப்பீடு செய்கிறார். ஆதவனின் ஒற்றைச் சக்கரத் தேரின் 7 குதிரைகளும் 7 வண்ணங்களாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன. அருக்க தேவனின் வெண்மை ஒளி இவற்றின் ஒட்டுமொத்தக் கலவையே என்கிறார். சிவப்பு, பச்சை,நீலம் ஆகியவையே பிரதானம் என்ற விக்ஞானிகளின் கூற்றின்படி. இங்கு கவி அக்குதிரைகள் பச்சை நிறமுடையவை என சு.46, 60-ல் குறிக்கிறார்.
சூரியன் அளிக்கும் பயன்கள்(சு 85),யுக முடிவில் சூரியன்-அழிக்கும் ஆற்றல் பெற்ற வனாக உருவெடுப்பான், கடும் வெப்பத்தால் நீர்நிலைகளை வற்றச் செய்து, மலைகளை வெடிக்கச் செய்து எள்ளுப்பொடி போல் தூளாக்கி விடுவான்(சு 78)எனக் கூறி நம்மைச் சிந்திக்க வைத்து விடுக்கிறார்! நவீன விஞ்ஞானக் கருத்துக்களுடன் இக்கவியின் எண்ணோட்டங்களையும் ஒப்பாய்வு செய்துப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் அவர்களது யோக மகிமையினால் வானவி யல் விளக்கச் சாஸ்திரத்தில் எவ்வளவுப் புலமைப் பெற்றிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
இதோ சுலோகம் 59-ல் கவியின் வர்ணனை வார்த்தை ஜாலம்…உதயகிரி எனும் நாடக மேடையில்இருள் எனும் திரைச் சீலை நகர ஆரம்பிக்கிறது. ஒளியிழக்கும் விண்மீன்கள் புஷ்பாஞ்சலி செய்விக்கின்றன.சூரியன் உதிப்பது,வான வீதியில் பரவுவது, மேற்கே சாய்வது,அஸ்தமிப்பது,என்ற காட்சிகள் நடந்தேறப் போகின்றன. ஆதவனை வழிபடத் தேவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைத் தேர் சாரதி அருணன் விசாரிக்கிறான். ‘ஓ,இந்திரனா!உமது ஆயிரம் தாமரைக் கண்களும் மலர்ந்து விட்டதே. ஹே அக்நி தேவரே! பளீரென்றுக் கண்களில் படமாட்டீரோ? பகவானின் ஒளிக்கதிர் முன்னே உமது ஒளி மங்கிவிட்டதோ? அட,எமதர்மராஜனா, உம் தந்தையார் பவனி வருவது தெரியுமல் லவா, பின் ஏன் இப்படி உமது வாகனம் எருமையுடன் பாதையின் குறுக்கே நிற்கிறீர்? மகிஷனைத் தள்ளி இருக்கச் சொல்லுங்கள்! என்ன,தென்மேற்கு மூலையில் ஒதுக்குப் புறமாக நிற்கிறீர்கள்,ராட்சதர்கள் தானே? பகவான் உங்களைப் பார்த்து விட்டாரே! வருணனா ,வாருமய்யா,இக் குதிரைகள் ஓடும்போதே சற்று குளிப்பாட்டுமய்யா, புண்ணியமாய்ப் போகட்டும்! ஓஹோ,வாயுதேவனா! எங்கே என் குதிரை வேகத்துக்கு ஈடாக ஓடி வாரும்,பார்க்கலாம்! இது யார்,குபேரனா? உங்கள் கஜானாவுக்குக் கட்டுக் காவல் சரியாக உள்ளதா? தகவல் தெரிவித்து விடுகிறேன். அட அடா!,ஈசான தேவனா,தாங்களுமா காத்திருக்க வேண்டும். அடியேனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”என்று எண்திசை அதிபர்களையும் குசலம் விசாரிக்கிறானாம் அருணன் மகிஷம், யமன் சனீஸ்வரர் சிரிக்கிறார்களோ, இல்லையோ நம்மைப் புன்முறுவல் பூக்க வைத்து விடுகிறார் கவி..
மற்றொரு காட்சி…அடிவானத்தில் எழும் சூரிய ஒளிக் கதிர்களைக் கண்டு ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பயமாம்,”ஏன்? இருளின் கருமையைப் போக்குபவனான கதிரவன் எங்கே தனது சியாமள மேனி யின் கருமையையும் வெளியேற்றி விடுவானோ என்ற ஐயமாம்! கண்ணனுக்குத் தன் கருமை நிறத்தில் அவ்வளவுப் பெருமை! பாஸ்கரா,கோபிகையர்கள் என்னைப் பரிகசிக்க வைத்துவிடாதே,,என் கருமையை அவமானப் படுத்திவிடாதே என்று வேண்டுகிறான்,போலும்! தேவகி மைந்தனின் எண்ணவோட்டம் இதுவென்றால், மகேசனின் கவலை வேறு விதம். தன் ஐடாமுடியில் அணிந்திருக்கும் சந்திரக் கலை சூரியனின் இளங் கதிர்கள் பட்டு முக்கியத்துவத்தை இழந்து விடுமோ எனச் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாராம்! (சு 16)
ஆதவனைப் பற்றிய மதுரகவியின் கற்பனை வளம், அன்றாடம் நடந்தேறும் இயற்கை நிகழ் வுகள் அனைத்தையும் தன் தேன்மதுரக் கவிதைத் துளிகளால் நம்மை ரசிக்க வைக்கும் போது, ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என்ற பாரதியாரின் பாடல்வரிகள் தான் நினை வுக்கு வருகின்றன. எண்ணை ஆட்டும் செக்கைச் சுற்றி வரும் எருதுகளைப் போல்,நிலைகொள் ளாது அலைபாயும் நம் உள்ளங்களைச் சூரியதேவன் என்ற முளையில் கட்டி அதன் சிந்தனை ஓட்டங்களைச் சூரியனையேச் சுற்றி வருமாறுப் பல காட்சிகளைப் புகுத்தி நம் மனதை ஆதவ னுடன் பிணைத்து விடுகிறார் கவி.
மயூரபட்டர் வாழ்ந்த காலத்தில் சூரிய வழிபாடு நாட்டில் பரவலாக இருந்துள்ளது அதனால் ஆதவனைப் போற்றுபவர்களுக்குச் சூரியனின் அருள் பூரணமாகக் கிடைக்கட்டும் என்று வேண்டுகிறார் கவி. அதிலும், நோய் நொடிகள் நீங்கச் சில பாடல்களை மனனம் செய்ய மறை முகமாகச் சொல்கிறார். சில சுலோகங்களின் ஓசையை வெளிப்படுத்த ஒரே எழுத்தைப் பல முறை உபயோகித்துள்ளார். இதனால் அதன் சுவை கூடி ரசிக்க வைப்பதுமின்றி அப்படி பயன்படுத்துவதன் மூலம் அதன் மந்திரச் சக்தியை வலுவாக்கிப் பாராயணம் செய்வோருக்கு நற்பயன்கள் பெருக வழி காட்டுகிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர் உதாரணமாக சு 36 ல் ‘த்ய’ ( ध्य ) எழுத்தும், சு 70ல் ‘ந்த’ ( न्द ), ‘ச’ ( श ) என்ற எழுத்துக்களும் பெரிதும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நாம் அதையும் தொடர்ந்துப் படித்து உடல் நலம் பேணுவோம். அவற்றில் இரு சுலோகங்கள் இதோ……..
சூரியனின் ஒளியைக்கண்ட கந்தர்வர்கள். மகிழ்ச்சி மேலோங்கத் துதித்து, மனதைக் கவரும் பல்வேறு இன்னிசைக் கருவிகளுடன் அதாவது, வீணை, தம்பூர், ஜாலர், சதங்கை, முரசு, மத்தளம், புல்லாங்குழல், நாதஸ்வரம் ஆகியவற்றுடன் புகழ்ந்துப் பாடுகின்றனர். வேதங்களில் வல்லவர்களான நாரதர் தும்புரு முனிவர்களால் துதிக்கப்படுபவனும், வான்வெளியில் பிரகாசிக்கும் சூரியனின் புத்தம் புதிய ஒளி, உலகை யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது. அது உங்களது பாபங்களை அழிக்கட்டும்.
சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடும் ஸ்லோகம் இது. பெரிய மாடங்களில் வாழும்தேவர்கள் அருக்கனை நேரில் கண்டு வணங்க வான ஊர்திகளில் பயணிக்கின்றனர். ஆதவனின் ரதம் போகும் வேகத்தால் அவர்களால் வணங்க முடியாதத் தொலைவில் அவன் காணப்படுகிறான். அதனால் அவர்களின் ஊர்திகள் மேலே செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று விடுகின்றன. ஆனால் சூரிய ரதம் ஆகாச கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் ஒரே சீராகச் செல்கிறது. அதேசமயம் சந்தடி மிகுந்த நகரம் போல் தோற்றமளிக்கும் மந்தரமலைக் குன்றின் முகடுகள், குகைகளில் மெதுவாகச் செல்கிறது. இத்தனைச் சிறப்பு வாய்ந்ததும்மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சூரிய ரதம் உங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்…என்கிறார்.
சு.71 இவரது இலக்கணப் புலமையைக் காட்டுகிறது. இதன் பதங்கள் யமகவணி சொல் அலங்காரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ளத்
தேவதைகளின் பெயர்களுக்கும், ரதத்தின் பாகங்களுக்கும் உள்ளச் சொற்பொருத்தத்தை எடுத்துக் காட்டி, அவர்கள் அவற்றை வழிபடுவதாக அமைத்துள்ளார் கவி. (உ.ம்.) ஹரி என்பது இந்திரனையும், குதிரையையும் குறிக்கும். சக்ரீ என்ற சொல் திருமாலையும், தேர் சக்கரத்தையும் குறிக்கும்.
இப்படியே இச்செய்யுள் முழுவதையும் படித்து ரசிக்கலாம்!
சூரியனின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. இருளை நீக்கி வெளிச்சம் மட்டும் அளிக்கவில்லை. பக்தர்களின் பாபங்களையும் களைகிறான். தாமரையை மட்டும் மலரச் செய்யவில்லை. அதிகாலையில் தன் திருவடி தொழுது காத்து நின்றவர்களின் உள்ளங் களையும் மலர்விக்கிறான். நாள் என்பதை மட்டும் தினமும் தோற்றுவிப்பதில்லை. அடியார் களுக்கு ஒப்பில்லா மேன்மைகளையும் அருள்கிறான். உதயமாவது என்பது ஒன்றே அவன் எடுக்கும் ஒரே முயற்சி. அதன் விளைவுகள் அனைத்தும் உலகோர்க்கு நன்மைப் பயக்கின்றன.
மகாகவி பாரதியார் பாடுவது போல், ”நின்றன் ஜோதி நிறைந்ததுவாகி, நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா ஞாயிற்றின் கண் ஒளி தரும் தேவா” எனும்
அத்தகையச் சூரியதேவன் நம்மைக் காத்தருளட்டும். படித்துப் பலனடையுங்கள் என்று வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட அரியப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்தப் புண்ணியப் பாரதபூமி, என்று நினைக்கையில் மனம் உவகையில்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரிட்டனில் பிறந்த புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர்களில் ஒருவர் சாமர்செட் மாம் (WILLIAM SOMERSET MAUGHAM). அவர் எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்றில் ரமண மகரிஷியை குருவாக வரும் ஒரு கதாபாத்திரமாக படைத்தார். அந்தப் புத்தகத்துக்கு கத்தி முனை (THE RAZOR’S EDGE )என்று பெயர் வைத்தார். அது கடோபநிஷத்தில் வரும் வாசகம் ஆகும்
சாமர்செட் மாம் ஒரு சிறுகதை எழுத்தாளர்; புதினங்கள் படைத்தவர். நாடகங்களை இயற்றியவர்.
பிறந்த தேதி – ஜனவரி 25, 1874
இறந்த தேதி – டிசம்பர் 16, 1965
வாழ்ந்த ஆண்டுகள் – 91
வில்லியம் சாமர்செட் மாம் நகைச்சுவை, நக்கல், கிண்டல், கேலியுடன் எழுதும் பாணி உடையவர். சில கதைகளில் உண்மைக் கதைகளையே நாவலாகப் படைத்திருக்கிறார்.எளிமையான நடை; ஆயினும் கதை சொல்லுவதில் குறை இல்லாத போக்கு.
பத்து வயதில் தாய் தந்தையை இழந்ததால் உறவினர்கள் அவரை எடுத்து வளர்த்தனர். டாக்டர் படிப்பு படித்து பட்டம்பெற்ற போதும் அதைத் தொழி லாக ஏற்காமல் முழுவேக எழுத்தாளர் ஆனார். 23 வயதில் அவருடைய நாவல் அச்சிடப்பட்டது. அதில் குழந்தை பெறும் பெண்மணியின் பிரசவ அறையில் இருந்த அனுபவம் வருகிறது .
கதைகளை விட நாடகங்கள்தான் இவருக்கு அதிகம் புகழ் ஈட்டித் தந்தன.அவருக்கு 34 வயதானபோதே சாமர்செட் மாமின் 4 நாடகங்கள் லண்டன் தியேட்டர்களில் வெற்றி நடைபோட்டன.
முதல் உலகப் போர் நடந்த ஆண்டுகளில் அரசின் உளவாளியாகப் பணிபுரிந்தார்.. பின்னர் ஒரு நண்பருடன் சேர்ந்து கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் தீவுகள், மெக்சிகோ ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். இறுதிக் காலத்தை பிரான்ஸின் தென் பகுதியில் கழித்தார்.
சுயவாழ்வில் ஒருவர் பின் ஒருவராகப் பலரைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார் .
சாமர்செட் மாம் எழுதிய ‘ரேஸர் எட்ஜ்’ THE RAZOR’S EDGE என்ற நாவலில் கணேசா என்ற பெயரில் ரமண மகரிஷியை அறிமுகம் செய்கிறார். இந்த நாவல் வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்தித்தார். கத்தி முனை அல்லது வாள் முனை என்பது முக்கிய உபநிஷத் நூலாகக் கருதப்படும் கடோபநிஷத்தில் வரும் வாசகம் ஆகும். அந்த வாசகத்தையே புத்தகத்தின் பொன்மொழியாக அவர் கொடுத்துள்ளார் . ஒரு வாள் முனை கடப்பதற்கு அரிதாக எவ்வளவு கூரானதாக இருக்கிறதோ அவ்வளவுக்குக் கடினமானது முக்தி பெரும் வழியும் என்ற வாசகம் கடோபநிஷதத்தில் வருகிறது. இந்தக் கதை இகலோக வாழ்வை வெறுத்த ஒரு அமெரிக்க போர் விமானியின் கதை ஆகும். அவர் வாழ்க்கையின் மெய்ப் பொருளை அறிவதற்காக இந்தியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதே கதையின் கருப்பொருள் ஆகும்.
கதையின் போக்கில் முனிவர்கள் சந்திப்பு ,அத்வைத சித்தாந்தம், சமாதி ஆகியனவும் இடம்பெறுகின்றன .
இவர் எழுதிய ஏனைய நூல்களின் கருப்பொருள்களைக் காண்போம்.
அமெரிக்காவில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் பற்றி OUR BETTERS ‘அவர் பெட்டர்ஸ்’ நாவலில் வருகிறது .
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புவைத்துக்கொண்ட கணவனைப் பழிவாங்கும் மனைவியை ‘CONSTANT WIFE’ கான்ஸ்டன்ட் வைஃ ப் கதையில் காணலாம்.
OF HUMAN BONDAGE ‘ஆப் ஹ்யூமன் பாண்டேஜ்’ என்ற கதை மிகச் சிறந்த கதை. அதில் மாம் தன்னுடைய சுய சரிதத்தைக் கதையாக சித்தரித்துள்ளார்.
பிரபல ஓவியர் பால் கோகெய்ன் PAUL GAUGUIN வாழ்க்கையை அடிப்படையாக வைத்து மாம் எழுதிய கதை மூன் அன்ட் சிக்ஸ் பென்ஸ் MOON AND SIX PENCE என்பதாகும்.
தாமஸ் ஹார்டி என்ற பிரபல நாவல் ஆசிரியரின் சொந்த வாழ்வை அடிப்படையாக அமைத்து மாம் எழுதிய கதை CAKES AND ALE கேக்ஸ் அண்ட் ஏல் என்னும் கதை ஆகும். இதில் ஒரு பிரபல நாவல் ஆசிரியரின் மனைவி எப்படி இருப்பாள் என்பதை மாம் படம்பிடித்துக் காட்டுகிறார்.
Publications
1897 – LIZA OF LAMBETH
1915- OF HUMAN BONDAGE
1917 – OUR BETTERS
1919 – THE MOON AND SIX PENCE
1921 – THE CIRCLE
1921 – THE TREMBLING OF A LEAF (INCLUDING RAIN)
1926 – THE CONSTANT WIFE
1930- CAKES AND ALE
1944 – THE RAZOR’S EDGE.
தி ரேஸர்ஸ் எட்ஜ் முதலிய பல கதைகள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 4-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்
கமுதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
திரு ஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவதான திருக்கருகாவூர் தலமாகும். இது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் முல்லைவனேஸ்வரர் இறைவி கர்ப்ப ரக்ஷாம்பிகை தலவிருட்சம் முல்லைக் கொடி
தீர்த்தம் பாற்குளம். இந்தக் குளம் காமதேனுவால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தலம் பஞ்ச ஆரண்ய தலங்கள் எனப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், ஆலங்குடி,
திருக்கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து தலங்களில் முதலாவது தலமாக அமைகிறது. பஞ்ச ஆரண்ய தல யாத்திரை மேற்கொண்டு ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் ஏராளமானோர் தரிசித்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் யாத்திரையை இந்தத் தலத்திலிருந்து அனைவரும் உஷத் காலத்தில் ஆரம்பிப்பது மரபாக இருக்கிறது. அருகருகே உள்ள இந்தத் தலங்களை காலையில் ஆரம்பித்து இரவுக்குள் தரிசித்து விட முடிகிறது.
மிக புராதன தலமாகிய இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. குறிப்பிடத் தகுந்த ஒன்று இத்தலத்தின் மஹிமையை விளக்கும் ஒன்று. நித்துருவர் என்ற ஒரு முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயம் ஊர்த்வபாதர் என்ற ஒரு முனிவர் இவரது ஆசிரமத்திற்கு வந்தார். உள்ளே வேதிகை கர்ப்பமாயிருந்த காரணத்தினால் தளர்ச்சியால் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை கேட்டு ஊர்த்வபாதர் குரல் எழுப்பினார். அயர்ச்சியினால் வேதிகை வர சற்று தாமதமானது. அதனால் கோபமுற்ற அந்த முனிவர் அவரை நோய் பிடிக்குமாறு சாபம் இட அதனால் வேதிகையின் கரு கலைந்து ஊனமுற்றது.
உடனே வேதிகை இந்தத் தலத்து அம்பிகையையும் இறைவனையும் வேண்ட, முல்லைவனேஸ்வரரின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து வேதிகைக்கு அளித்தது. அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது. இதனால் மனம் மகிழ்ந்த நித்துருவர் இந்தத் தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த வித ஒரு தீங்கும் வராமல் பிரசவம் எளிதில் நடைபெறுமாறும் இந்தத் தலத்தின் அம்பிகையை வேண்டும் பெண்டிர் அனைவருக்கும் சகல வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதிலிருந்து இன்று வரை இந்த அம்பிகையை வேண்டும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கி நல்ல கணவன் கிடைப்பதும் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.
இன்று திருக்களாவூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் முன்னொரு காலத்தில் முல்லை வனமாக இருந்தது. ஆனால் தாயின் வயிற்றில் இருந்த கருவைக் காத்ததால் கரு, கா, ஊர் என்ற பெயரைப் பெற்றது. நான்கு வீதிகளுக்கு இடையில் அழகுற அமைந்துள்ள இந்தக் கோவில் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டது. கிழக்கில் ராஜ கோபுரம் கம்பீரமாக விளங்க தெற்கில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியான லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆகவே மூலவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் பூசப்படுகிறது. சுயம்பு லிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.
மூலவரின் வலது புறம் உள்ள கற்பக விநாயகர் உளி படாத விநாயகர், அதாவது சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கருணையே வடிவான கர்பரக்ஷாம்பிகை நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்கு இடையே முருகனின் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. இவை தவிர, தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நடராஜர், மஹாலக்ஷ்மி, காளி உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு எழுந்தருளி வழிபாடு செய்யப்படுகின்றன. ஸ்தல விருக்ஷமான முல்லைக் கொடி சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலும், கோவில் சுற்றிலுமாக அமைந்து இது முல்லைவனமே தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள் அம்பாள் சந்நிதியின் படியை நெய்யால் மெழுகி அரிசி மாவால் கோலமிடுவது மரபாகும். குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு அம்பாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படும் நெய் பிரசாதம் வழங்கப்படுகிறது. நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்வோர், வேண்டுதல் நிறைவேறி குழந்தைச் செல்வத்தைப் பெற்றவுடன் மீண்டும் இங்கு வந்து தங்கள் சக்திக்குத் தக துலாபாரம் தருவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு அன்றாடம் நடைபெறும் ஒன்று. இந்த துலாபாரம் அம்பிகையின் சந்நிதியில் அமைந்துள்ளது.
இந்தத் தலத்தில் வந்து வழிபட்ட திருஞானசம்பந்தர் இறைவனை அழல் வண்ணமாகக் கண்டு மகிழ்ந்து ஒரு பதிகம் அருளியுள்ளார். திருநாவுக்கரசரும் இறைவனை பல்வேறு விதமாக வர்ணித்து ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருக்கருகாவூர் முல்லைவனேஸ்வரரும், கர்பரக்ஷாம்பிகையும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். அப்பர் பெருமானின் அருள் வாக்கு இது : மூலனாம் மூர்த்தனாம் முன்னேதானாம் மூவாத மேனி முக்கண்ணினானாம்
சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம் செஞ்சுடர்க்கு ஓர் ஜோதி தானாம்
மாலனாம் மங்கை ஓர் பங்கன் ஆகும் மன்று ஆடியாம், வானோர் தங்கட்கு எல்லாம்
காலனாம் காலனைக் காய்ந்தான் ஆகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 18 வெளியான தேதி 16-6-21 கட்டுரை எண: 9740
நடந்தவை தான் நம்புங்கள் – 19
ச.நாகராஜன்
விதவிதமான பதில்கள்!
ரோஜா மலரே சண்டைக்காரி!
மில்டன் கண்பார்வையற்றவர்; மிகப் பெரிய கவிஞர். அவருக்கு வந்து வாய்த்த மனைவி பெரிய சண்டைக்காரி. ஒரு நாள் மில்டன் ட்யூக் ஆஃப் பர்மிங்ஹாமைச் (Duke of Buckingham) சந்திக்கச் சென்றிருந்தார் பேச்சின் இடையில் ட்யூக், மில்டனின் மனைவியை ஒரு ரோஜா என்று கூறினார். உடனே மில்டன்,” எனக்கு வண்ணங்கள் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. (அவர் குருடர் என்பதால்).ஆனால் நீங்கள் சொல்வது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். தினசரி என்னை முள்கள் குத்துகிறது” என்றார்!
XXX
வஞ்சப் புகழ்ச்சி!
பிரபல காமடி நடிகர் ஸ்டான் லாரல் இளம் வயதில் மேடையில் தோன்றிப் பாடுவது உண்டு. அவருடைய பாட்டைக் கேட்ட ஒரு ரசிகர், “நீ வெகு நன்றாகப் பாடுகிறாய்! ஆனால் நீ இருக்க வேண்டியது இங்கு இல்லை; பிரபல பாடகர் கார்ல் ரோசாவோடு அல்லவா நீ சேர்ந்து பாட வேண்டும்” என்று சொன்னார்.
இதைக் கேட்ட லாரல், “ஆனால் கார்ல் ரோசா இறந்து விட்டாரே” என்று திகைப்புடன் சொன்னார்.
“எனக்குத் தெரியும், அதனால் தான் சொன்னேன்” என்றார் அந்த ரசிகர்!
XXX
அது தான் இல்லையே!
பிரபல ஆங்கிலக் கவிஞர்கள் வோர்ட்ஸ்வொர்த்தும் லேம்பும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரு சமயம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். வோர்ட்ஸ்வொர்த் சொன்னார்:” என்னால் ஷேக்ஸ்பியரைப் போல எழுத முடியும், எனக்கு மட்டும் மனம் இருந்தால்…” என்றார். லேம்ப் கொஞ்சம் திக்கித் திக்கிப் பேசுபவர்.
“ஆ..மாம்… வேற ஒண்ணும் தேவை இல்லை.. ம…ம…மனம் தான் வேணும்” என்றார் அவர்! (அது தான் உங்கிட்ட இல்லையே என்பது அவர் கிண்டல்)
XXX
அழகான பேச்சு!
அமெரிக்க ஜனாதிபதியான கூலிட்ஜ் ஒரு முறை கட்டிட அடிக்கல் நாட்டச் சென்றிருந்தார்.
அங்கிருந்த கோடாலியால் தரையை ஒரு கொத்துக் கொத்தி அடையாளபூர்வமாக கட்டிட வேலையைத் தொடங்கி வைத்தார். அங்கு கூடியிருந்தோர், அவரிடம், “இந்தத் தருணத்தில் ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும். இந்த விழாவிற்குப் பொருத்தமாக இருக்குமே” என்றனர்.
உடனே கூலிட்ஜ், தான் தோண்டி எடுத்துப் போட்ட மண்ணைப் பார்த்தார்” “அதோ, என்ன அழகான மண்புழு அது” என்றார்.
XXX
ஜீரணசக்தி உள்ள டியூக்!
ட்யூக் ஆஃப் கம்பர்லேண்ட் (Duke of Cumberland) ஒரு முறை பிரபல நாடகக் கலைஞரும் நடிகருமான சாமுவேல் ஃபுட்டைச் (Samuel Foote 1720-1777) சந்தித்துப் பேசித்துக் கொண்டிருந்தார். நடிகரின் நகைச்சுவைப் பேச்சை அவர் வெகுவாக ரசித்தார். சாமுவேலை நோக்கி ட்யூக், “ மிஸ்டர் சாமுவேல், நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் விழுங்கி விட்டேன்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.
உடனே சாமுவேல், “ மதிப்பிற்குரிய ட்யூக் அவர்கள் நல்ல ஜீரண சக்தி உடையவர், ஏனெனில் அவற்றில் எதையும் திருப்பி வெளியில் கொண்டு வர மாட்டீர்களே” என்றார்!
***
INDEX
Milton, Duke of Buckingham, Wife is a rose
ஸ்டான் லாரல், கார்ல் ரோசா, நல்ல பாட்டு
கூலிட்ஜ், அடிக்கல் நாட்டு விழா, நல்ல மண்புழு
Duke of Cumberland , Samuel Foote, Jokes, Digestion power
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 4-ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXX
ராம ஜென்ம பூமி நில பேரத்தில் ஊழல் இல்லை – சுவாமி கோவிந்த தேவ கிரி அறிவிப்பு
ராம ஜென்ம பூமி கோவில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இருப்பதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. அவர்களை, ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்களேன் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சவால் விட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் கோர்ட்டில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு தொடரவில்லை
இதற்கிடையில் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி வியாழக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார்.; கடந்த மூன்று நாட்களில் நில பேரம் தொடர்பான எல்லா பத்திரங்களையும் நுணுகி ஆராய்ந்ததாகவும் எந்த ஊழலும் நடக்கவில்லை என்பது உறுதியானது என்றும் கூறினார். இருந்தபோதிலும் எல்லா நடவடிக்கைகளும் பகிரங்கமாக நடத்தப்படும் என்றார் தன்னுடன் மேலும் இரண்டு ட்ரஸ்ட் மெம்பர்களையும் வைத்துக்கொண்டு மூன்று நாட்களுக்கு பத்திரங்களை ஆராய்ந்ததாகவும் ஊழல் புகார் சொன்னவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசி இருக்கின்றனர் என்றும் சொன்னார்.
புகார் கொடுத்தவர்கள் நாங்கள் கொடுத்த விலையைவிட குறைவான விலையில் நிலம் வாங்கித் தந்தால் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக கடன்பட்டவர்களாக இருப்போம் என்றும் சுவாமி கோவிந்த தேவ் கிரி கூறினார்
XXXX
வேறு ஜாதி திருமணத்திற்கு தடை: காஷ்மீர் சீக்கியர்கள் கோரிக்கை
ஜம்மு – காஷ்மீரில், வேறு ஜாதி திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, சீக்கியர்கள் கோரியுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில், சீக்கிய மதத்தை சேர்ந்த நான்கு பெண்கள், சமீபத்தில் முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஜம்மு – காஷ்மீரில் மத மாற்ற சம்பவங்கள் தொடர்வதால், மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு, வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற சட்டங்கள், மத மற்றும் இன நம்பிக்கை உள்ளோரை காப்பாற்றுவதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.
காஷ்மீரில் நடந்த கட்டாய மத மாற்றக் கல்யாணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஜம்மு காஸ்மீர் மற்றும் டில்லியிலுள்ள சீக்கியர்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களும் அடங்கிய குழு மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா, கிஷன் ரெட்டி ஆகியோரைச் சந்தித்து மனுவும் கொடுத்தனர்.
XXX
ராம்தேவ் பேசியது என்ன? விபரம் கேட்கிறது கோர்ட்!
யோகா குரு ராம் தேவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது
அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, ‘ராம்தேவ் பேசியது தொடர்பான உண்மையான முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ எங்கே’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
யோகா குருவான பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் மீது, இந்திய மருத்துவர் சங்கத்தின் பல கிளைகள் சார்பில் பீஹார், சத்தீஸ்கர் என, பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, டில்லிக்கு மாற்றக்கோரியும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரியும், ராம்தேவ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.’ராம்தேவ் பேசியது தான் என்ன; பேச்சின் முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ என, அமர்வு குறிப்பிட்டது. நாளை ஜூலை-5ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
XXXX
நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
சொந்தமாக கோயில் கட்டி சிறப்பாக கும்பாபிஷேகம் செய்து முடித்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.
நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.
சில விஷேச பூஜைகள் நத்தப்பட்டபின்னர் கடந்த சில நாட்களுக்கு கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலினும் கும்பாபிஷகத்தில் கலந்து கொண்டார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ராகவேந்திரர் கோவிலை கட்டி உள்ளார்.
நடிகர் அர்ஜூனும் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.
XXXX
2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டுக்கு அனுமதி: திருத்தணி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் 63 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி மூடப்பட்டது. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவின் பேரில், திருக்கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு, முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது., திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்பணி செய்யப்பட்டது.
காலை 6 மணி முதல் இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனர். 63 நாட்கள் கழித்து முருகப்பெருமானின் தரிசனத்தைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
XXXXXX
இதோ தினமலர் நாளேட்டிலிருந்து ஒரு செய்தி
சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு ‘தூசு தட்டி‘ வருணனை
ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, ‘மண்புழு ஓர் ஹிந்து’ என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்.
கடந்த 2015ம் ஆண்டு, சத்குரு டுவிட்டரில், ‘ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து’ என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், ‘ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).
இந்து என்பது மதம், நம்பிக்கை. யானை என்பது முதுகெலும்புள்ள பாலுாட்டி, மண்புழு முதுகெலும்பற்றது, நிலத்தில் வாழக்கூடியது. அதுபோல, ‘சார்லடன்’ என்பதற்கு, தன்னிடம் இல்லாத சிறப்பு அறிவையோ, திறமையையோ இருப்பதாக போலியாகக் கூறிக்கொள்ளும் பகட்டுக்காரர் எனப் பொருள். பன்முக பகட்டுக்காரர்’ என, குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன்.
தியாகராஜன் அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், சத்குருவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். திடீரென சில வாரங்கள் அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். தற்போது மீண்டும், பழைய, அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய டுவிட்டை தோண்டி எடுத்து, விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கோவாவை விமர்சித்தது தொடர்பாக, அமைச்சர் தியாகராஜனுக்கும், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கும், டுவிட்டரில், ‘வார்த்தைப்போர்’ வெடித்தது. அப்போது, ‘பிறவிப் பொய்யர்’ என வானதியை விமர்சித்தார். தற்போது சத்குருவை, ‘பன்முக பகட்டுக்காரர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
XXXX
சித்ர கூடத்தில் முக்கிய ஆர். எஸ். எஸ். கூட்டம்
ராமாயணப் புகழ் சித்ரகூடம் மத்திய பிரதேசத்தில் உள்ளது.அங்கு ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முக்கியக் கூட்டம் ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து நாட் களுக்கு நடைபெற உள்ளது.
இது அகில பாரதீய பிரா ந்த பிரச்சாரகர் கூட்டம். இதில் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் நாட்டை எதிநோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளை அலசி ஆராய்வார்கள். அருகிலுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு மாநில சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளை கூட்டம் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by SUJATHA RENGANATHAN .
Xxx
Ram temple trust gives clean chit to trustees in land purchase
The Shri Ram Janambhoomi Teertha Kshetra Trust has given a clean chit to trustees involved in the purchase of land for the temple project.
Talking to reporters at a press conference on Thursday 2n July, Swami Govind Dev Giri, treasurer of the trust, said that he had studied all relevant documents in the past three days and found no discrepancy in the land deals.
He said that Swami Vishwaprasann Teerth and Kameshwar Chaupal had scrutinised all documents with him.
“All allegations levelled in the land purchase are false and baseless. If those who have levelled allegations can help us in getting cheaper land at the same location, the Trust would be obliged to them,” he said.
Swami Govind Dev Giri further said that the campaign against the Trust was unfortunate.
“However, I want to assure that the work on the Shri Ram temple will continue with full honesty and transparency,” he said.
The Swami’s statement now brings the curtain down on the controversy over the alleged land scam in Ayodhya.
Xxx
Sikh leaders meet Minister Kishan Reddy, seek anti-conversion law
A delegation of Sikh leaders met Minister of State (Home) G Kishan Reddy on Tuesday to discuss the alleged forced conversion and wedding of Sikh women in Jammu and Kashmir. The delegation comprising BJP spokesperson and former BJP MLA from Delhi’s Rajinder Nagar RP Singh, Jago Party president Manjit Singh GK and others submitted a memorandum seeking a strong anti-conversion law.
After meeting the Sikh leaders, Reddy said: “Forced conversion and wedding of Sikh girls in Kashmir is wrong and the delegation has submitted a memorandum. I will discuss this with the Union Home Minister regarding the action that needs to be taken.”
The meeting took place less than 24 hours after members of the Sikh community staged protests in parts of Jammu and Kashmir. The Delhi Sikh Gurdwara Management Committee (DSGMC) also took part in the demonstrations. Earlier, Union Home Minister Amit Shah
had also assured to meet these leaders to discuss the issue of religious conversion and possible action against those found guilty.
On Monday, a massive protest was staged at J&K House in New Delhi.
Xxx
SC seeks original video, statement of Ramdev on his remarks on efficacy of allopathy
The Supreme Court on Wednesday asked Yoga guru Ramdev to place before it the original video and transcript of statements made by him which led to the registration of multiple FIRs against him in various states over his alleged remarks on efficacy of allopathy in treatment of COVID-19.
A bench headed by Chief Justice NV Ramana posted the hearing of Ramdev’s plea seeking clubbing of FIRs and transfer of cases to Delhi lodged against him for July 5, while asking him to place before it the whole video where the remarks were made by him.
Senior advocate Mukul Rohatgi appearing for Ramdev said he will file the original video and transcript before the court, and sought listing of the case next on Monday.
The plea of Ramdev also sought a stay on the proceedings in multiple cases lodged against him and sought protection from coercive actions in FIRs lodged by Indian Medical Associations (IMA) Patna and Raipur branches and asked the court to transfer the FIRs to Delhi.
During the hearing, Rohatgi contended that Ramdev is a public figure and in a private event he propounds a view that Ayurveda is better than allopathy. He said that Ramdev had clarified he has nothing against doctors. He is entitled to have a view whether Allopathy is better, Homeopathy is better or Ayurveda is better, Rohatgi argued.
Rohatgi further submitted that “all kinds of cases have been filed against Ramdev and as multiple FIRs have been filed in different parts of the country we ask the court to club them.”
The case has been posted further hearing tomorrow 5th of July.
xxxx
RSS to hold 5-day brainstorming session at Chitrakoot ahead of UP elections
BJP’s ideological fountainhead, the Rashtriya Swayam Sevak, will be holding its annual ‘Akhil Bhartiya Prant Pracharak Baithak’ in Chitrakoot (Madhya Pradesh) close to Uttar Pradesh, where the saffron party is headed for its biggest electoral challenge next year. Sources say the top brass of the Sangh will brainstorm on several important issues, including the forthcoming elections in key states, between July 9 and 13. UP elections are also expected to figure in Chitrakoot along with ways to improve the image of the Yogi government .
Xxx
Pak body for early drafting of Hindu Marriage Act
A delegation comprising members of Pakistan’s minority communities on Monday urged the provincial government in Khyber Pakhtunkhwa in northwest Pakistan to expedite the drafting of rules for the Hindu Marriage and Divorce Act.
The federal government approved the Hindu Marriage Bill in March 2017 with the consent of the governments in Khyber Pakhtunkhwa, Punjab, and Baluchistan provinces and issued necessary instructions to them to draft the required rules. Pakistan has about 3.8 million Hindus.
Xxxx
Here is A news item from U S A
75 American Hindu temples and spiritual orgs write to Rutgers University expressing concerns regarding Audrey Truschke’s actions
A coalition of 75 American Hindu temples and spiritual organizations (including 17 from New Jersey) from across 20 states sent a letter to Rutgers University on 2nd July expressing anguish and concerns regarding Professor Audrey Truschke’s actions and statements. The letter, coordinated by the Coalition of Hindus of North America (CoHNA), included some of the largest temples and spiritual organizations, whose memberships include tens of thousands of attendees from diverse sectarian, social, ethnic, and national backgrounds – including from the United States, Canada, Bharat, Guyana, Trinidad & Tobago, Nepal, Pakistan, Bangladesh, Sri Lanka, Fiji, Malaysia, and Singapore, among others.
The letter comes against the backdrop of an ongoing controversy at Rutgers University, where Professor Truschke has continued to make disparaging comments about Hindu texts, deities, and festivals while denouncing concerns from Hindu and non-Hindu students and the broader Hindu community as the work of the “Hindu Right.”
“We cannot help but feel intensely hurt and abused when a professor uses her authority and deliberately misinterprets Hindu sacred texts or slanders Hindu deities while rationalizing such behavior as ‘academic freedom,’” remarked the letter.
K V Sampath Kumar (64), editor of ‘Sudharma’, the world’s only Sanskrit daily newspaper, passed away following cardiac arrest in Mysuru on Wednesday.
Sampath Kumar’s father Pandit Varadaraja Iyengar had launched ‘Sudharma’ in 1970. After Varadaraja Iyengar passed away, Sampath Kumar and his wife Jayalakshmi took over its mantle to ensure that it reached the readers.
He used advanced technology, made ‘Sudharma’ available online and launched the e-paper. The print edition of ‘Sudharma’ has nearly 4,000 readers from various Sanskrit universities and institutions across the country.
However, the digital edition of the newspaper has readers from Kashmir to Kanyakumari. The Union government announced the Padma Shri award to Sampath Kumar and his wife K S Jayalakshmi in 2020, under Literature and Education-Journalism category.
In a condolence message, Prime Minister Narendra Modi said Sampath Kumar was an inspiring personality who worked tirelessly towards preserving and popularising Sanskrit, specially among youngsters. His passion and determination were inspiring, he added.