யானைக் காப்பி:கோப்பை £30 (ரூ.2500)

 

லண்டன் பத்திரிக்கைகள் ஒரு சுவையான செய்தி வெளி யிட்டிருக்கின்றன. யானையின் ஆசன வாயிலிருந்து வரும் காப்பிக் கொட்டையை வறுத்து தயாரிகும் காப்பி இது. படிக்க கொஞ்சம் அறுவெறுப்பாக இருந்தாலும் குடிக்கச் சுவையாக இருக்குமாம். ஒரு கோப்பை 30 பவுண்டுகள் (இந்திய ரூபாய் ரூ2500).

யானைக்கு காப்பிக்கொட்டை பழங்களைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அது அவைகளை முழுதும் ஜீரணிக்காமல் பின்பக்கம் வழியாக வெளியே தள்ளிவிடும். அந்த யானை லத்தியிலிருந்து ஒவ்வொரு காப்பிக்கொட்டை பழத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு கொட்டைகளை வெளியே எடுப்பார்கள். யானை வயிற்றிலுள்ள அமிலங்கள் அந்தக் காப்பிக் கொட்டைகளுக்கு ஒரு மாயாஜால சுவையைக் கொடுக்கிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த பிளேக் டின்கின் என்பவர் 3 லட்சம் பவுன்ட் செலவில் இந்த ஏற்பாடைச் செய்துள்ளார். அவர் 20 யானைகளுக்கு இப்படி கொடுத்து 70 கிலோ காப்பிக்கொட்டை உற்பத்தி செய்துவிட்டார். முழுதும் விற்றுப்போய்விட்டன.

ஒரே கேள்விதான். யானைக்கு முழுதும் ஒவ்வாத ஒரு பொருளைச் சாப்பிடக் கொடுத்து பின்னர் அதையே வெளியே தள்ளச் செய்வது நியாயமா? மேலை நாட்டினருக்குப் பணம் கிடைத்தால் போதும், தார்மீக சிந்தனை பறந்தோடிப் போய்விடும்.

இந்துக்கள் எல்லா மிருகங்களையும் விட பசுவையும் யானையையும் மிகவும் மதித்தனர். எல்லா கோவில்களிலும் மடங்களிலும் காலையில் கோ (பசு) பூஜையும் கஜ (யானை) பூஜையும் நடைபெறுகிறது. இதற்கு பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. இதை இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர். மாட்டுச் சாணத்துக்கு பாக்டீரியா கிருமிகளைக் கொல்லும் சக்தி இருப்பதை அறிந்து வீட்டையும் சமையல் அறையையும் மெழுக சாணத்தைப் பயன்படுத்தினர். அதன் மூத்திரத்துக்கு உள்ள மகத்தான மருத்துவப் பயன்களை அறிந்து அதை மருந்திலும் சமயச் சடங்கிலும் பயன்படுத்துகின்றனர். உலகில் இரண்டு மிருகங்களின் சாணத்தை மட்டுமே இப்படிப் பயன்படுத்தமுடியும். ஒன்று பசு, மற்றொன்று யானை.

இந்துக்கள் சமயச் சடங்கில் பயன்படுத்தும் பஞ்சகவ்யம் பற்றிப் படித்துவிட்டு யானையைப் பார்ப்போம்.

பஞ்ச கவ்யம் என்றால் என்ன?

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், முக்கியச் சடங்குகளின் போது பஞ்ச கவ்யம் சாப்பிட வேண்டும். பஞ்ச கவ்யம் என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் என்று பொருள். இதோ விவேக சிந்தாமணி என்ன சொல்கிறது என்று படியுங்கள்: “இது கோமூத்திரம், கோமயம் (சாணி), பால், தயிர், நெய் இவை பஞ்ச கவ்வியம் என்று கூறப்படும். கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்குச் சந்திரனும் தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.

பின்னும் செந்நிறத்த பசுவிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப் பசுவிடம் கோமயத்தையும், பொன்னிறப் பசுவினிடம் பாலையும், நீல நிறப்பசுவிடம் தயிரையும், கரு நிறப் பசுவினிடம் நெய்யையும் கொள்ளின் நலமெனப்படும்.

கோமூத்திரம், கோமயம் இவை இரண்டும் ஆறு மாத்திரை எடையும், நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை எடையும் இருத்தல் வேண்டும் இதை மந்திர பூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவன் சகல் பாபத்திலிருந்தும் விடுபட்டு சுத்தமடைகிறான்”.

 

யானை லத்தியின் மகிமை

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ் பழமொழி. யானையின் தந்தத்தை மத சம்பந்தமான சிலை , பூஜைப் பொருட்களுக்குப் பயன்படுத்துவதை அறிவோம். கேரளத்தில் யானை வால் முடியை நோய்த் தடுக்கும் தாயத்தாகப் பயன்படுத்துவர். யானை லத்தி போட்டால் அதை மிதிக்க பெரியோர்களும் சிறியோரும் ஓடோடி வருவர். காலில் உள்ள பித்தவெடிப்பு, சேற்றுப் புண் இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் அதற்குண்டு. யானையின் மூத்திரத்தையும் தலையில் தெளித்துக் கொள்வார்கள். யானையின் துதிக்கை வழியாக வரும் தண்ணிரை தலையில் விழச் செய்வார்கள். இதை கஜ லெட்சுமி சிலைகளிலும் காணலாம். 2200 ஆண்டுகளுக்கு முந்திய கஜலெட்சுமி சிலைகள் இலங்கை, டென்மார்க் வரை சென்று அங்கு நாணயங்களிலும் பாத்திரங்களிலும் பொறிக்கப்பட்டன. இது பற்றி எனது முந்தைய கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.

யானை லத்தி நல்ல உரமும் கூட.

யானை பற்றிய பழமொழிகளும் நாம் அதை எவ்வளவு மதித்தோம் என்பதைக் கட்டுகிறது. இதை எல்லாம் படித்த பின்னர் மேற்கூறிய யானை லத்தி காப்பியைக் குடிக்க நாம் எல்லோருக்கும் தயக்கமே இருக்காது. விலையை மட்டும் குறைத்தால் போதும்.

படிக்கவேண்டிய எனது மற்ற கட்டுரைகள்:

1.யானை பற்றிய நூறு பழமொழிகள் 2.Gajalakshmi in Kalidasa and Sangam Literature 3.Gajendra Moksha in Africa

Contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

Who can read all 300 Ramayanas?

Picture: Rama on currency note issued by Maharishi Maheshyogi Organisation. It is accepted at many places in Nederland

Part 4– Ramayana wonders

 

Millions of Lines

Millions of Words

300 versions from India to South East Asia

Literature spanning over 3000 years

Conflicting versions; Interesting interpretations!

Ramayana has made a great impact in the life of Indians. No other EPIC story in the world has made such an impact on any other community in the world. No one can read all the 300 different versions in one’s lifetime. It is in every major language of India- from Assamese to Tamil. One must have proficiency in Sanskrit to read Valmiki, in Tamil to read Kamban and in Hindi to read Tulsidas, leave alone the Pali and Prakrit versions. South East Asian countries have their own versions of Ramayana.

 

A sloka (couplet) says, “Saritham Ragunathasya Sathakoti Pravistharam, Ekaikam Aksharam Proktham Mahapathaka Nasanam” (Rough translation: Rama’s history is in THOUSAND MILLION couplets. If anyone says even a single letter from it, all the sins will vanish).

Scholars have listed up to 300 different versions of Ramayana. If we take the references to Ramakatha in various scriptures it will be more than 300 versions. All the singers, composers, writers, saints have sung about Rama. Ram Charit Manas of Tulasidas (in Hindi) and Kamba Ramayana (in Tamil) are read by millions. Valmiki, Kamban and Tulasidas are household names in India.

Shri Ramadasa Gauda in his book Hindutva lists some of the Ramayana works:

1.Maha Ramayana:

It is part of a dialogue between Siva and Parvati. It describes 99 Rasa Lilas of Sri Rama.It proclaims complete divinity of Rama.

2.Samvrta Ramayana

Author of this work is Narada. It contains 24,000 slokas.

3.Lomasa Ramayana

Dasaratha and Kausalya are spoken of as King Kumuda and queen Viramati reborn.

4. Agastya Ramayana

It gives the stor ofBhanupratapa Arimardana. Here King Kuntala and Sindhumati are described reborn as Dasarath and Kausalya. It contains 16,000 slokas.

5.Manjula Ramayana

Author is Sutiksna. This also give the story of Bhanupratapa.

6.Sarupadya Ramayana

Author Atri gives the Pupavatika episode describing meeting of Rama with Sita.

7.Mahamala Ramayana

Bhusundi removes the infatuation ofGaruda.

8.Sauharda Ramayana

Author Sarabhanga refers to the cleverness of Rama and lakshmana in comprehending and conversing in the language of the monkeys

9. Maniratna Ramayana

Vashista and Arundhati are the authors. It gives the Vasantotsava celebrated by Rama in Mithila and Ayodhya.

10.Saurya Ramayana

Hanuman and Surya are the authors. It gives Suka’s life. Suka is reborn as a washer man whose gossip resulted in the banishment of Sita.

11.Candra Ramayana

It is a dialogue between Hanuman and Candra. It gives the story of previous birth of Kaivata

12.Mainda Ramayana

It is in the form of a dialogue between Mainda and Kaurava

13.Suvarchasa Ramayana

It is a dialogue between Sugreeva and Tara. It contains a dialogue between thw washerman and his wife.

14.Deva Ramayana

It is in the form of a dialogue between Indra and Jayanta.

15. Svayambhuva Ramayana

Dialogue between Brahma and Narada. Sita is described as a daughter of Mandodari

16.Subrahma Ramayana

Narada and Brahma debates

17.Sravana Ramayana

Dialogue between Indra and Jayanta Janaka also comes to Citrakuta when Bharata visited.

18.Duranta Ramayana

Bharata’s greatness is extolled in a dialogue between Vasista and Janaka.

19.Campu Ramayana

It is a Dialogue between Siva and Narada. Reference to swayamvara conducted by Silanidhi is found in it.

20.Ananda Ramayana

Ananda Ramayana has nine cantos divided into 109 chapters (sargams). It has 12,252 slokas/couplets. This is also attributed to Valmiki. But this Valmiki may not be the contemporary of Rama. It differs with the original Valmiki Ramayana in many places.

21. Bhusundi Ramayana

The original dialogue between Bharata and Atri is narrated by Bhusundi to Sandilya. Holy places around Citrakuta are mentioned in it.

22.Mantra Ramayana

It is conspicuous by the absence Ramakatha. It gives different Ramamantras

23.Vedanta Ramayana

This gives the story of Parasurama.

Picture: Indonesia released stamps with Ramayana characters during International Ramayana Conference

Rama’s name in Vedas

Rama’s name is in Rig Veda, Parisishta of Sama Veda and Patanjali’s Mahabhasya. Satapata Brahmana gives the list of performers of Asvamedha in which Rama’s name appeared. Following are other religious literature where Ramayana story is found:

1)Jaiminiya Asvameda 2)Mailravana Carita 3) Sahasramuka Ravanacaritam 4)Satyopakhyana 5) Hanumat samhita 6)Brhatkosalakhanda

Ramayana in Poetry

Ramayana is found in the poems of Kalidasa (Raghuvamsa), Pravarasena (Ravanavaho or Setubandha),  Bhatti (Ravanavadha), Kumaradasa (Janakiharana), Abhinanda (Ramacarita), Ksemendra ( Ramayana Manjari and Dasavatara Carita), Sakalyamalla (Udararaghava), Cakra Kavi (Janakiparinaya), Advaita Kavi (Ramalingamrta), Mohanaswami( Ramarahasya or Ramacarita) and the Dramas of Bhasa (Pratima and Abhiseka), Bhavabhuti ( Mahavira Carita and Uttararama Carita), Dinnaga (Kundamala), Murari( Anargharaghava), Rajasekhara (Balaramayana), Hanuman (Hanumannataka or Mahanataka), Saktibhadra ( Acaryacudamani), Yasovarman (Ramabyudaya), Mayuraja (Udattaraghava).

Ramayana in Dramas

Ramayana is in the dramas of Ksiraswami (Abhinavaraghava), Ramachandra (Raghuvilasa and Raghabyudaya), Jayadeva (Prasannaraghava), Hastimalla (Maithilikalyana)Subhata (Dutangada), Bhaskarabhatta (Unmattaraghava) Tryasamisradeva(Ramabdhyudaya), Mahadeva (Adbhutaramayana), Ramabhadra Dikshita (Janaki Parinaya).

Anonymous Ramayana Dramas : Chalita Ramayana, Krtya Ramayana, Mayapuspaka Ramayana and Svapnadarsana

Ramayana in Slesakavyas (Puns):

Dhanajaya (Raghavapandaviya), Madhavabhatta (Raghavapandaviya), Haradatta Suri (Raghava Naisadiya), Cidambara (Raghavapandaviya-Yadaviya), Gangadara mahadevakavi (Sankatanasana stotra).

Picture: Rama stamp issued by India

Ramayana in Vilomakavyas:

Suryadeva (Ramakrsna Vilomakavya), Venkatadhvari (Yadhavaraghaviya)

Ramayana in Citrakavyas

Krsnamohana( Ramalilamrta), Venkatesa (Citrabandha Ramayana)

Ramayana in Amorous Khandakavyas

Venkatadesika (Hamsasandesa or Hamsaduta), Rudravacaspati (Bhramaraduta), Vasudeva( Bhramara sandesa), Anonymous (Kapiduta), Venkatacarya( Kokilasandesa), Jayadeva (Rama Gitagovinda), Krsnacandra (Candraduta), Harisankara (Gitaraghava), Prabhakara ( Gitaraghava), Haryacarya( Janakigita), Harinatha (Ramavilasa), Visvanathasimha( Sangita raghunandana), Visvanatha (Raghavavilasa), Somesvara (Ramasataka)

Prose Romance and Campus

Ksemendra (Brhatkathamanjari), Somadeva (Kathasaritsagara), Bhoja (Campu Ramayana), Vasudeva (Ramakatha).

Ramayana in Regional languages and South East Asian languages are not listed here.

(Campu means Mixture of Prose and Poetry)

 

Continued in Part 5………………………………….

Please read other posts by Santanam Swaminathan about Rama: 1. Ram –the Best PR Man 2. தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 3.நாமும் அனுமார் ஆகலாம் 4.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 5.ராமாயண வினா-விடை (க்விஸ்) 5.Where is Rama Setu (Rama’s Bridge) ? 6.Did Sita Devi Die in Earth Quake? 7. Ramayana Wonders Part1 (8) . Ramayana Wonders Part2 :How many miles did Rama walk? (9) Ramayana Wonders Part 3 : Rama and Sanskrit G’ramma’r

Contact swami_48@yahoo.com

 

 

பல்கலை வித்தகன் அதிசய மன்னன் போஜராஜன்

பல்கலை வித்தகன் அதிசய மன்னன் போஜராஜன்

எழுதியவர்: ச.நாகராஜன்

 

 

Picture of Siva Temple at Bhojapuri (Bhopal)

கவிதா ரஸிகர்களைக் கொண்ட உலகின் ஒரே தேசம் 

உலகிலேயே சரித்திரத்தில் நாம் காணும் எந்த தேச மன்னனும் நினைக்கக் கூட முடியாத ஒரு அபூர்வத்தை நிகழ்த்திக் காட்டிய ஒரே மன்னன் போஜராஜன். இன்றைய போபால் (போஜன் நிறுவிய போஜபாலே இன்று போபால்!)அந்தக் காலத்தில் போஜ சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. தாரா என்ற நகரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி நடத்திய போஜராஜன்,

விப்ரோபி யோ பவேன்ன மூர்க்க: ச புராத்ஹிரஸ்து மேI                      கும்பகாரோபி யோ வித்வான் ச திஷ்டது புரே மமII“

என்று பிரகடனம் செய்தான்!

(இதன் பொருள்:-“அந்தணன் என்றாலும் படிப்பறிவற்றவன் என் தேசத்தில் வசிக்க வேண்டாம். குயவனாக இருந்தாலும் கற்றறிந்தவன் என் தேசத்தில் வசிக்கட்டும்”) அதே போல அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் உன்னதமான கவிதையை ரசிக்கும் திறன் கொண்டவராகத் திகழ்ந்தனர்.

 

84 அபூர்வ நூலைப் படைத்தவன் 

போஜராஜன் பல் கலை வித்தகன் . அஸ்வ சாஸ்திரம் சங்கீதம்,இசை, ஜோதிடம்,வானியல் உள்ளிட்ட ஏராளமான கலைகளில் வல்லவனாததால் இவனை பஹ¤வித்யா விஷாரத் (பல்கலை வித்தகன்) என அறிஞர்கள் அழைத்துப் போற்றினர். சுமார் 84 அரிய நூல்களைப் படைத்தவன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையின் தலையாய நூலாகத் திகழ்வதோடு அந்தத் துறையில் வேத கால ரிஷிகள் தொட்டு அன்றைய வரை இருந்த மேதைகள் அந்த துறை பற்றி கூறியவற்றைத் தொகுத்துக் கூறும் களஞ்சியமாகவும் திகழ்கிறது. அவன் இயற்றிய நூல்களில் சில:

சரஸ்வதி கண்டாபரணா: வடமொழி இலக்கணம் பற்றியது; சமராங்கத சூத்ரதாரா: ஆகாயவிமான வகைகள் அவைகள் கட்டும் விதம் பற்றிய தொழில்நுட்ப நூல்;தத்வ ப்ரகாசா: சிவன் குறித்த சித்தாந்த தந்த்ர சாஸ்த்ரம் பற்றியது;ரஸராஜ ம்ரிகங்கா: இரசாயன நூல் யுக்திகல்பதரு: கப்பல் எப்படிக் கட்டுவது, கப்பல் வகைகள் பற்றியது; தர்மசாஸ்த்ர விருத்தி: தர்மசாஸ்திரம் பற்றியது; சம்புராமாயணம்:காளிதாஸனுடன் இணைந்து பாடியது; ராஜமார்த்தாண்ட வ்ருத்தி அல்லது போஜ விருத்தி:பதஞ்சலி யோக சூத்ர விரிவுரை;         ச்ருங்காரப்ரகாசா: இந்த அரிய நூலில் சிருங்கார ரஸமே பிரதான ரஸம் என்பதை போஜராஜன் சுட்டிக் காட்டுகிறான். (இந்த நூல் மட்டும் 1926லிருந்து 2007 முடிய 25 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. உலகின் 74 நூலகங்களில் இது தனியிடம் பெற்றுள்ளது!)

 

பிரபல வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான மேலை நாட்டு அறிஞர்கள் போஜராஜனைப் பற்றியும் அவனது வாழ்க்கை வரலாறுகள் பற்றியும் நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி அவனை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

 

காளிதாஸனோடு இயற்றிய போஜ சம்பூ 

      மஹாகவி காளிதாஸனின் உயிர் நண்பன் போஜன், போஜனைப் பற்றிய நூற்றுக் கணக்கான சம்பவங்களில் முக்கியமான ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

தன்னைப் பற்றிய காளிதாஸனின் உண்மையான மதிப்பீட்டை அறிய விரும்பிய போஜன் காளிதாஸனை தன் பேரில் ஒரு சரம கவி பாடுமாறு வேண்டிக் கொண்டான். சரம கவி என்பது ஒருவர் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைப் பற்றி மனம் நெகிழ்ந்து பாடும் கவிதை. காளிதாஸன் திடுக்கிட்டான். பொய்யா வாக்கை உடைய தான் சரம கவி பாடினால் தன் ஆருயிர் நண்பன் உயிரை இழந்து விடுவானே! மனம் நடுங்கிய காளிதாஸன் அந்தப் பாட்டைப் பாட முடியாது என்று மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த போஜன் காளிதாஸனிடம் என் முகத்தில் விழிக்காதே, போ என்று கூறி விட்டான்.

 

மனம் நொந்த காளிதாஸன் ஒரு சந்யாசி வேடம் பூண்டு நாடெங்கும் சுற்றலானான். சில நாட்களிலேயே காளிதாஸன் இல்லாத வாழ்க்கை சாரமற்றுப் போக போஜன் அவனைத் தேடி மாறுவேடம் பூண்டு அலையலானான். ஒரு நாள் தற்செயலாக காளிதாஸனை ஒரு மண்டபத்தில் சந்திக்க இருவரும் அளவளாவினர். சந்யாசி வேடம் பூண்டவன் காளிதாஸனே என்பதைக் கண்டு கொண்ட போஜன் தான் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.தான் தாரா நகரத்திலிருந்து வருவதாக அவன் தெரிவித்துக் கொண்டான். உடனே மனம் நெகிழ்ந்த காளிதாஸன், “அங்கே போஜ மன்னர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று ஆவலுடன் கேட்டான். தன் எண்ணம் நிறைவேற இது தான் சரியான சமயம் என்று எண்ணி மனம் மகிழ்ந்த போஜன்.”அடடா, உங்களுக்கு விஷயம் தெரியாதா? போஜ மன்னர் இறந்து விட்டார்!” என்று கூறினான். உடனே மனம் கலங்கி அழுத காளிதாஸனிடமிருந்து அற்புதமான சரம கவிதை வெளிப்பட்டது:

 

 

“அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி I                                    பண்டிதா கண்டிதா சர்வே போஜராஜம் திவம் கதே II”

 

(இன்று தாரா நகரம் நிராதரவாகி விட்டது; சரஸ்வதி ஆதரவற்றுப் போனாள். பண்டிதர்கள் அனைவரும் போஜராஜன் சொர்க்கம் அடைந்ததால் சிதறிப் போனார்கள்) இதைக் கேட்டவுடன் மனம் மகிழ்ந்தான் போஜன். ஆனால் கவி வாக்கு பொய்க்காது என்பதால் அவன் உடனே கீழே விழுந்து உயிரை விட்டான். தன் நண்பன் போஜ ராஜனே தன் பாட்டைக் கேட்டு உயிரை விட்டான் என்பதை அறிந்த காளிதாஸன் அவன் உயிர் பிழைக்க  மாற்றுப் பாடலைப் பாடி அவன் உயிர் பிழைக்க வைக்குமாறு காளி தேவியை இறைஞ்சினான்.

“அத்ய தாரா சதாதாரா சதாலம்பா சரஸ்வதி I                                      பண்டிதா மண்டிதா சர்வே போஜராஜம் புவம் கதே II”

 

(போஜன் பூமியை அடைந்ததால்   தாரா நகரம் எப்போதும் ஆதரவுடன் திகழ்கிறது. சரஸ்வதிக்கு நிரந்தர ஆதரவு உள்ளது.பண்டிதர்கள் அனைவரும் மிகவும் ஆதரிக்கப்படுகின்றனர்)

பாடலைக் கேட்ட போஜன் உயிர் பிழைத்து எழுந்தான். நேரில் பிரசன்னமாகிய காளி அவன் விதி முடிந்தாலும் காளிதாஸனின் பாடலுக்காக மூன்றே முக்கால் நாழி அவன் உயிர் வாழ்வான் என்று அருளினாள். மீதமிருக்கும் ஒரு கணத்தையும் வீணடிக்காத போஜன் வாழ்வாங்கு வாழ ராமாயணத்தைத் தானும் காளிதாஸனும் சேர்ந்து பாடி இலக்கியம் படைக்க விரும்பினான். இருவருமாக இணைந்து பாடிய காவியம் போஜ சம்பூ என்றும் சம்பு ராமாயணம் என்றும் பெயரிடப்பட்டு நாடெங்கும் புகழ் பெற்றது. இன்றும் படிக்கக் கிடைக்கிறது.

 

கஜினியை விரட்டியவன்

கி.பி. 1000ம் ஆண்டு முதல் 1050 முடிய அவன் செய்தஅரசாட்சி அனைவரையும் வியக்க வைத்தது! இன்றைய மத்யபிரதேசத்தில் உள்ள போபாலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போஜ்பூரை அவனே ஸ்தாபித்தான். போஜேஸ்வர ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களை அவன் நிறுவினான்.இன்று தார் என்று கூறப்படும் நகரில் அவன் நிறுவிய வடமொழி மையம் ஒன்று போஜ்சாலா என்ற பெயரில் பல் கலைகளையும் கற்பித்தது. புஜபலா மற்றும் பீம பராக்ரம என்ற விசேஷ விருதுகளால் உலகினரால் அவன் அழைக்கப்பட்டதால் பாண்டவ பீமனைப் போன்ற அசாத்திய பலமும் வீரத்தையும் அவன் பெற்றிருப்பது தெரிய வருகிறது!மாபெரும் வீரனான போஜன் முகம்மது கஜினியைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். ஹிந்து மதத்தைப் பாதுகாத்த தீரனாகத் திகழ்ந்தான்.

 

போஜ ப்ரபந்தம்

போஜராஜனின் மூளையில் ஒரு கட்டி இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்து அவனை வைத்தியர்கள் குணப்படுத்தியதாகவும் வரலாறு கூறி அதிசயிக்கிறது! இந்த அறுவைசிகிச்சையைத் தாங்கி போஜன் உயிர் பிழைத்து அரும் பெரும் செயல்களைப் புரிந்தான் என்பதையும் வரலாறு குறிப்பிடுகிறது!

போஜனின் சரித்திரம் பற்றி போஜ சரித்ரம் மற்றும் போஜப்ரபந்தம் ஆகிய இரு நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.இவற்றில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சுவை பட சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை காலகட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்து மன்னர்களும் கவிஞர்களும் வீரர்களும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தது போல எழுதப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்!

 

பின்னால் 17ம் நூற்றாண்டில் பல்லாள தேவர் எழுதிய போஜ ப்ரபந்தம் போஜனின் வாழ்க்கை வரலாற்றை நன்கு சித்தரிக்கிறது. இதன் படி சிந்துலர் முஞ்சர் ஆகிய இருவர் அண்ணன் தம்பிகள். சிந்துலரின் மகனாக போஜன் பிறந்தார். தன் தம்பிக்கு மகுடம் சூட்டி உரிய வயது வரும் போது போஜனுக்கு முடி சூட்டி அரியணையில் ஏற்றுமாறு கூறி சிந்துலர் முடி துறந்தார். ஒரு நாள் அரண்மனைக்கு வந்த ஜோதிடர் போஜனின் ஜாதகத்தைப் பார்த்து

 

“பஞ்சாஸர் பஞ்சவர்ஷாணி ஸப்தமாஸாதிநத்திரியம்                          போஜராஜோ போக்த வ்யஹ கௌடோதக்ஷ¢ணாபத’ என்றார்.

அதாவது இந்த போஜன் 55 வருடம் 7 மாதம் 8 நாள் கௌடதேசம் உள்ளிட்ட தென்னாட்டை பெரும் புகழுடன் ஆளப் போகிறான் என்று கூறினார். இதனால் கலக்கம் அடைந்த முஞ்ச ராஜன் போஜனைக் கொல்லுமாறு தன் பணியாளரிடம் உத்தரவிட்டான். குருகுலத்திலிருந்த போஜன் கொலை செய்வதற்காக அழைத்து வரப்படும் போது தன்னை முஞ்ச ராஜன் கொலை செய்ய ஆணை பிறப்பித்திருப்பதை அறிந்து ஒரு ஓலை நறுக்கைக் கொடுத்து அதை முஞ்ச ராஜனிடம் கொடுத்துத் தனது கடைசி ஆசையை நிறைவேற்றுமாறு வேண்ட கொலை செய்ய வந்தவர்கள் அதை முஞ்ச ராஜனிடம் சென்று தந்தனர். அந்த ஓலை நறுக்கில் ஒரு சுலோகம் இருந்தது.அதில் மகா புத்திசாலியான போஜன், “சத்யயுகத்தில் இருந்த உலகின் ஜ்வலிக்கும் மணி என்று கருத்தப்பட்ட சக்கரவர்த்தி மாந்தாதா இறந்து போனான். கடல் மீது பாலம் கட்டி ராவணனைக் கொன்ற ராமரும் இப்போது இல்லை! யுதிஷ்டிரர் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் இந்த பூவுலகை ஆண்டுள்ளனர். ஆனால் இந்த பூமி அவர்கள் இல்லாமல் கூட இன்னும் இருக்கிறது. ஓ முஞ்ச ராஜனே! இந்த பூமி நீ நிலையாக இருக்க, தான் போக விரும்புகிறது போலும்!” என்று  எழுதி இருந்தான்! இதைப் பார்த்தவுடன் முஞ்ச ராஜனுக்கு ஞானம் வந்து அவன் அரசைத் துறந்து போஜனையே அரசனாக்கினான். இளைஞனாக இருந்த போதே இப்படி அபாரமான கவித் திறமையையும் கூர்மையான புத்தியையும் கொண்டிருந்த போஜன் எப்படி நாட்டை ஆண்டிருப்பான் என்பதை நாம் யூகித்து உணர்ந்து கொள்ளலாம்!

 

 

ஜோதிட நூல் வித்வத்ஞான வல்லபா 

பூபாலக்ருத்ய சமுச்சயா என்னும் அவனது நூல் பல்வேறு விரதங்களை எப்படி எந்த திதியில் அனுஷ்டிப்பது என்பதையும் அதற்கான பலன்களையும் விவரிக்கிறது.கார்த்திகை சுக்ல ஏகாதசி அன்று விஷ்ணுவை எழுப்ப வேண்டும் என்றும் ஆஷாட சுக்ல ஏகாதசி அன்று அவர் நித்திரைக்குச் செல்வார் என்றும் இந்த நூல் விவரிக்கிறது. இது போன்ற ஏராளமான ரகசியங்களை ஜோதிடத்தின் அடிப்படையிலான திதி, நாள் முதலியவற்றால் இது விவரிப்பதால் போஜனது பரந்துபட்ட ஜோதிட மற்றும் ஆன்மீக அறிவு விளங்குகிறது!விலக்க வேண்டிய கறிகாய்கள், பழங்கள், உப்புகள். தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டிய நாட்கள் உள்ளிட்ட நுட்பமான விஷயங்களை இதில் போஜன் விவரிப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று  மேலை நாட்டு ஆய்வாளர்கள் வியந்து கூறுகின்றனர்.

அடுத்து ஜோதிட சாஸ்திரத்தை விரிவாக விளக்கி வித்வத்ஞானவல்லபா என்ற அற்புதமான ஜோதிட நூலையும் அவன் எழுதியுள்ளான். 1970ல் பரோடா பல்கலைக் கழகத்தால் இந்த நூல் பிரசுரிக்கப்பட்டது. உலகின் தலை சிறந்த 31 பல்கலைக்கழகங்களில் இந்த நூல் இருக்கிறது.தஞ்சாவூர் சுவடிகள் காடலாக்கில் இந்த நூல் 14வது தொகுதியில் 11604 கேடலாக் எண்ணாகக் குறிப்பிடப்பட்டு அங்கு இருப்பதை உறுதி செய்கிறது!

 

சுருக்கமாகச் சொல்லப் போனால் இராமாயண மஹாபாரதம் மற்றும் புராணங்கள் சித்தரிக்கும் மாபெரும் மன்னர்களுக்கு நிகராக போஜன் தர்ம சாஸ்திரம் நூலை எழுதியதோடு அந்த தர்மத்தின் படி வாழ்ந்த  பல்கலை வித்தகன் என்று போற்றிப் புகழ்ந்து வணங்கலாம்!

*******************

Note: There were tow great kings with the same name Bhojarajan ruling at different times

பாரதி பாட்டில் பகவத்கீதை

11th December is Bhrathy’s Birth Day

பாரதி படிக்காத நூல்களே இல்லை என்று தோன்றுகிறது. அவனே கம்பன், இளங்கோ, காளிதாசன் முதலிய பல பெரும் புலவர்களின் பெயர்களைச் சொல்லி பாராட்டுகிறான். பாணிணி, ஆதி சங்கரன், உ.வே.சா, தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் ஆங்கிலப் புலவர்கள் ஷெல்லி, கீட்ஸ் ஆகிய புலவர்களும் அவனை ஆட்கொண்டனர். ஆழ்வார்கள், சைவப் பெரியார் நால்வர் ஆகியோர் செல்வாக்கும் அவனது பாடல்களில் உள்ளது. குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி போலவே பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி இருக்கிறது. சங்கப் புலவர்களின் செல்வாக்கு மிகவும் காணப்படுகிறது. ஆயினும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பகவத் கீதையின் செல்வாக்குதான் பல பாடல்களில் தூக்கி நிற்கிறது. அது மட்டுமல்ல பிரெஞ்சு தேசிய கீதம், தாமஸ் மூரின் உடோபியா போன்ற துக்கடா மொழிபெயர்ப்புகளை விட்டு விட்டு, ஒரு நூல் என்று எடுத்தால் அவன் பகவத் கீதை மொழிபெயர்ப்பு ஒன்றுதான் மிஞ்சும்.

பாரதியின் பகவத் கீதை மொழிபெயர்ப்பில் இலக்கிய நயம் எதையும் பார்க்கமுடியாது. இது ஓரு புனித நூல். அதில் அவன் சொந்த சரக்கைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் பாரதி பாடல்களில் பகவத் கீதை மேற்கோள் வரும் இடமெல்லாம் இலக்கிய நயத்தைக் காணலாம். கண்ண பிரானைவிட அதே கருத்தை கொஞ்சம் ஆணித்தரமாகவே கூறுவான். இதோ சில இடங்கள்:

போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை

புகன்றதெவருடைய வாய்? – பகை

தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத

தேவி மலர்த்திரு வாய்.

 

இந்தியாவின் பணி

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்

என்று அவன் கூறுவதே பகவத் கீதையை மனதிற்கொண்டுதான் என்பதை கீழ்கண்ட மேற்கோள் தெள்ளிதின் விளக்கும்:

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”

என்றுரைத்தான் கண்ணபெருமான்;

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் -–ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்– ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க!”

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

ஆரிய தரிசனம் என்ற பாடலில் கிருஷ்ணார்ஜுன தரிசனம் என்ற தலைப்பில் கீதையின் சாரத்தைப் பிழிந்து தருகிறான்:

வில்லினை எடடா!—கையில்

வில்லினை எடடா!—அந்தப்

புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா.

வாடி நில்லாதே– மனம்

வாடி நில்லாதே;–வெறும்

பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே

“க்லைப்யம் மாஸ்மகம:” என்ற ஸ்லோகத்தின் பொருளைத் தருவதோடு அடுத்த சிலவரிகளில் ஆன்மா அழியவொண்ணாதது என்பதையும் கூறுகிறான். இதைப் படித்துப் பயனுறவேண்டும்.

ஞான வாள்

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

இதுவும் பகவத் கீதை ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பே. ஞான வாள்

என்பது கிருஷ்ணனின் சொல்.

 

சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள், உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
 
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் “

இப்படி எவ்வளவோ இடங்களில் பகவத் கீதையை நேரடியாகவும்  இன்னும் பல இடங்களில் மறைமுகமாகவும் போதிக்கிறான்.”பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம்: என்ற கருத்தை

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்—அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்”

 

பாரதி கீதையை மொழிபெயர்த்தபின் கீதை முன்னுரை என்ற கட்டுரையில் கீதை குறித்த தனது அணுகுமுறை என்ன என்று விளக்கினார். இறைவன் எங்கும் உளன், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதே அவன்  கீதையில் கண்ட உண்மை.

 

இறுதியாக ‘கண்ணன் பாட்டிலும்’, ‘பாஞ்சாலி சபதத்திலும்’ பல இடங்களில் பகவத் கீதையைக் காண்கிறோம். அவைகளை வரி வரியாகப் படித்துச் சுவைத்துப் பயன் பெறுக.

Read also

நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda (6) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (7) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்

டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியுமா?

Mayan-Calendar

 

Picture of Mayan Calendar

தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் 3000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாகரீகத்தை நிலைநாட்டியவர்கள் மாயா இன மக்கள். அவர்களுடைய பழைய காலண்டர்/ பஞ்சாங்கம் டிசம்பர் 21 ஆம் தேதி முடிவு அடையப்போகிறது. இதைக் காரணம் காட்டி அந்த நாளில் உலகம் அழிந்துவிடும் என்று பல ஆண்டுகளாக ஏராளமான நூல்களும் கட்டுரைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வை ஆயிரக கணக்கான மக்கள் இது பற்றி கேள்வி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் இது பற்றி ‘நாசா’ பதில் சொல்லி வருகிறது உலகம் அழியாது என்று.

 

உலகில் இன்னும் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மேலும் சாட்சியம் கிடைத்து இருக்கிறது. உலகம் அழியும் நாளில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதை வாங்குங்கள் என்று முகமூடி, உடுப்பு ஆகியவற்றை விற்போரிடம் ஏரளமானோர் அதை வாங்கியும் வருகின்றனர்!

 

மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன?

மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்  பாண்டவர்கள்- நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள் படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் காண்க.

மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்றதால் கலியுகக் கணக்கையே துவக்க ஆண்டாக வைத்திருக்கின்றனர். கொஞ்சம் வித்தியாசம் உண்டு. ஆனால் அதன் பின்னர் அவர்களாகவே இரண்டு மூன்று வகையான காலண்டர்களை உருவாக்கிப் பின்பற்றினர். அதில் ஒன்று டிசம்பர் 21 ஆம் தேதி முடிவடைவது உண்மைதான். ஆனால் அவர்கள் உலகம் அழியும் என்று சொல்லவில்லை. இருந்தபோதிலும் டிசம்பர் மாதத்தில் உலகையே உலுக்கிய சுனாமி ராட்சத அலைகள் வந்தது மக்களின் நினைவில் இன்னும் இருப்பதால் ஒரு பக்கம் பயம்!

 

மெக்சிகோவுக்கு அடித்தது ‘லக்கி ப்ரைஸ்’!

சாதாரணமாக மெக்ஸிகோ நாட்டில் உள்ள மாயா தொல் பொருட் சின்னங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த மாயா புரளியால் ஐந்தரைக் கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து மாயா இனச் சின்னங்களைப் பார்க்கிறார்கள். புரளி, வதந்திகளில் கூட கொஞ்சம் பயன் இருக்கிறது—சுற்றுலா வளர்ச்சி!

நாசா அமைப்புக்கு 5000 ஈ மெயில்கள் வந்திருப்பதால் அவர்கள் வான சாஸ்திரம் பற்றிச் சொல்லிக்கொடுக்க ஒரு அரிய வாய்ப்பும் இந்த வதந்தியால் கிடைத்துள்ளது! உயிரைக் காப்பாற்ற உபகரணங்கள், சிறப்பு உடைகள் விற்போருக்கு காசும் கிடைக்கிறது!

 

உலகம் அழிவது எப்போது?

உலகம் அழியும் என்ற புரளிகளும் வதந்திகளும் இந்த பூமிக்குப் புதிதல்ல. 1960—களில் அஷ்ட கிரஹ சேர்க்கையில் உலகம் அழியும் என்று புரளி கிளப்பப்பட்டது. உடனே சோதிடர்களும் கோவில்களும் நன்கு பயனடைந்தன. ஞான சம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகம்’ பிரபலமாகியது

போப்பண்டவர் இன்னொசென்ட்-3 1244ல் உலகம் அழியும்—அதாவது இஸ்லாமிய சமயம் தோன்றி 666 ஆண்டுகளில்— என்று கூறினார்.

மார்ட்டின் லூதர் 1600 ஆம் ஆண்டை ஒட்டி உலகம் அழியும் என்றார்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1658ல் உலகம் அழியும் என்றார். அவர் கணக்கின் படி கடவுள் உலகைச் சமைத்த 7000 ஆண்டுகளில் உலகம் அழியவேண்டும்!

பிரபல ஆரூடக்காரர் நாட்ர்தாமஸ் 1999 இல் உலகத்தின் கதை முடிந்துவிடும் என்றார். சர் ஐஸக் நியூட்டன் 2000 ஆண்டில் உலகம் அழியும் என்றார். ஆனால் இன்று இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் உலகம் அழியவில்லை!

 

மாயா இன காலண்டர்

மாயா இன மக்களின் காலண்டர் துவங்கிய ஆண்டு கி.மு 3114.

அது 144,000 நாட்களுக்கு ஒரு முறை மாறும்.

அவர்கள் 394 ஆண்டுகளை ஒரு பக்தூன் என்று அழைப்பர். இப்போது 13ஆவது பக்தூன் முடிவடையப் போகிறது.

மாயா காலண்டர் டிசம்பர் 21 என்று உலக அழிவுக்கு நாள் குறிக்காவிட்டாலும் டிசம்பர் 21 நீண்ட இரவு நாள் என்பதால் மேலை நாட்டு சோதிடர்கள் இப்படி நாள் குறித்தார்கள்!

இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டில் பத்திரிக்கைகளில் தினமும் அடிபடும் பெரிய செய்தி பைரினிஸ் மலையில் இருக்கும் பிக் டெ புகாரா கிராமம் ஆகும். அங்கு வருபவருக்கு வெளி உலக வாசிகள் பாதுகாப்பு தருவார்கள் என்ற வதந்தி காரணமாக வீட்டு வாடகை லட்சக் கணக்கில் உயர்ந்து விட்டது. அதாவது டிசம்பர் 21 இரவு மட்டும் தங்க 1200 பவுண்டுகள் என்று ப்ரிட்டிஷ் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெஞ்சு போலீசார் மிகவும் விழிப்புடன் நிலைமையைக் கவனித்து வருகின்றனர்.

 

மாயா இன மக்கள் பற்றிய எனது ஏனைய கட்டுரைகள்:

1.Amazing similarities between Hindu Ngas and Mayas 2.Are Mayas ,Hindu Nagas? 3. Amazing similarities—Part 2 (all published in April, May 2012 in my blogs) 4.மாயா இன மக்கள் இந்திய நாகர்கள் 5. நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்—பகுதி 1,பகுதி 2

contact: swami_48@yahoo.com

 

ஜோதிட மேதைகள்: காளிதாஸ்

Picture: Maldives, a Muslim country, has issued stamps on Zodiac Signs in 1974.

ஜோதிட மேதைகள் தொடருக்காக

பாரதத்தின் சாரம் மஹாகவி காளிதாஸ்

By Chitra Nagarajan

 

நவரத்னங்களில் ஒருவர்

விக்கிரமாதித்தன் அரசவையில் இடம் பெற்றிருந்த மேதைகளில் மஹாகவி காளிதாஸரின் கவித் திறன் பாரதமெங்கும் பரவி இருந்ததை வரலாறு வியப்புடன் பொன்னேட்டில் பொறிக்கிறது! மஹரிஷி அரவிந்தரோ, “ வால்மீகி, வியாஸர், காளிதாஸர் ஆகியோர் புராதன இந்தியாவின் சாரம்” என்று வியந்து கூறுகிறார். அறநெறி, அறிவுத்திறன், உலகியல் பொருள் ஆகிய மூன்றிலும் ஆர்யர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதை அவர்கள் தங்கள் நூல்களில் சித்தரிக்கின்றனர் என்று மேலும் கூறும் அவர் மனித ஆன்மாவின் மேம்பாட்டை அவர்களது கவிதைகள் சித்தரிக்கும் பாங்கைப் புகழ்கிறார்.

காளிதாஸரின் கதை

காளிதாஸரின் கதை அனைவரும் அறிந்ததே. வழி வழியாகக் கூறப்படும் கதைப்படி காளிதாஸர் ஒன்றுமே அறியாத முழு மூடனாக இருந்தார். அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளைக் கேட்க காளிதாஸன் மனம் போனபடி சைகைகளைக் காட்ட அதற்கு அரசவை பண்டிதர்கள் அற்புதமான வியாக்யானம் தந்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணமுடித்தாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

 

இதற்குப் பின்னர் காளிதாஸன் மனம் நொந்து காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸரின் கவி மழை பாரதமெங்கும் பொழிந்தது. இதையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன. இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸன் மனம்  நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.

பல்துறை மேதையின் காவியங்கள்

எது எப்படியானாலும் காளிதாஸர் பல் துறை மேதை. சொற்களையும் அதன் ஆழத்தையும் சொல்லும் பாங்கையும் மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதையும் அறிந்த விற்பன்னர் அவர். அவரது காவியங்களின் வர்ணனைகள் தென் பாரதத்தையும் வட பாரதத்தையும் அற்புதமாக வர்ணிப்பதால் அவர் நாடு முழுவதும் சுற்றி வந்த பயணி என்பதும் அவர் ருதுக்களை வர்ணிப்பதை வைத்து அவர் இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர் என்பதும் தெரிய வரும். ரகுவம்சம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், அபிஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், ருதுசம்ஹாரம் ஆகிய அற்புத கவிதை காவியங்களில் ஜோதிடக் குறிப்புகளையும் தேவ ரகசியங்களையும் காளிதாஸர் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்வது அவர் அருள்சக்தி படைத்த மாமேதை என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

 

காளிதாஸரைப் பற்றிய ஏராளமான  (நூற்றுக்கும் மேலானவை) சுவையான சம்பவங்கள் உள்ளன.இவரது முழு வாழ்க்கையை அறிவதோடு இவரது நூல்களைப் படிப்பது இந்திய கலாசாரத்தை அறிய விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

காளிதாஸர் தரும் நட்சத்திர சித்திரங்கள்

 காளிதாஸர் நூற்றுக்கணக்கான நட்சத்திர ரகசியங்களை தன் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்கிறார். மாதிரிக்கும்ஸோமதாரையை ஸ்வர்க்க பத்ததி என்றும் (ரகுவம்சம் 9-87) அஸ்வினி நட்சத்திரத்தை குதிரை தலை போல இருக்கிறது (தன்வி கோடகமுகாக்ருதௌ த்ரிபே) என்றும் அவர் கூறுவதைக் குறிப்பிடலாம்! நவீன வானவியல் நிபுணர்கள் நட்சத்திர தொகுதிகளைப் பற்றி இன்று என்ன கூறுகிறார்களோ அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விளக்கமாக அவர் குறிப்பிட்டிருப்பது வியக்க வைக்கும் விஷயம்!

உத்தரகாலாம்ருதம்

உத்தரகாலாம்ருதம் என்ற ஜோதிட நூல் காளிதாஸரால் இயற்றப்பட்டதாகக் காலம் காலமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஒரு இலக்கிய மேதையே இதை எழுதி இருக்கக் கூடும் என்பதால் மஹாகவி காளிதாஸரே நிச்சயமாக இதை இயற்றினார் என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் இதை எழுதியவர் இன்னொரு காளிதாஸர் என்றும் (பிற்காலத்தில் புழக்கத்தில் வந்த சரஸ சல்லாபம், உத்யோகம் போன்ற வார்த்தைகளையும் ஆந்திர மற்றும் பாரசீக பாஷைகளைப் பற்றிய அவரது குறிப்புகளினாலும்) அவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நூலின் சுவடிகள் சென்னையில் உள்ள கவர்ன்மெண்ட் ஓரியண்டல் மானஸ்க்ரிப்ட் லைப்ரரி உள்ளிட்ட பல நூலகங்களில் உள்ளன.வேத ஜோதிடத்தை உத்தர காலாம்ருதம் போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை என்ற புகழ் இந்த நூலுக்கு உண்டு.பல்வேறு அறிஞர்களின் விளக்க உரையுடன் எல்லா கடைகளிலும் இது கிடைக்கிறது.

 

12 பாவங்களின் முக்கியத்துவம். கிரஹங்களின் முக்கியத்துவம், குளிகை, மாந்தியை நிர்ணயிக்கும் விதம், ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கும் முறை,கேந்திர திரிகோணங்களின் முக்கியத்துவம், ராஜயோகம், விபரீத ராஜ யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட ஏராளமான யோகங்கள் பற்றிய அபூர்வமான விளக்கங்கள், தசா காலமும் அதன் பலன்களும் என்று இப்படி ஜோதிட களஞ்சியமாக அனைத்து விஷயங்களையும் இந்த நூல் விளக்குகிறது.இதை ஒரு ஜோதிட பொக்கிஷம் என்றும் ஜோதிட புதையல் என்றும் ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.

 

காளிதாஸர் இந்தியாவின் சாரம் என்றால் உத்தரகாலாம்ருதம் ஜோதிடத்தின் சாரம் என்று ஒரே வரியில் கூறி விடலாம்!காதலின் மென்மையையும் மேன்மையையும் உணர வேண்டுமா? தேவ ரகசியங்களை அறிய வேண்டுமா? மனித மனத்தின் உன்னதமான அகல நீள ஆழங்களை தரிசிக்க வேண்டுமா?பாரதம் போற்றும் ஆன்மீக சிகரத்தில் ஏற வேண்டுமா? ஜோதிடக் கடலை ஒரே மடக்காகக் குடிக்க வேண்டுமா? இவை அனைத்துக்கும் ஒரே வரியில் பதில் உண்டு: காளிதாஸரைப் படியுங்கள்! காளிதாஸரை மட்டும் படியுங்கள், போதும்!!

 

************************

Part 3-RAMA and Sanskrit G‘RAMMA’R!

Ramayana Wonders—Part 3

Sanskrit is a unique language in the world. Sanskrit teaching is more unique. It is the only language that teaches grammar in the first class of the primary school. And it is about RAMA! In the very first class students are asked to repeat after the Guru/teacher the case suffix table: Rama:–Ramau—Ramaa:, Ramam – Ramau– Ramaan………. It doesn’t stop there. In the very first class young children will be asked to repeat the first sloka of Raguvamsa—an epic about Rama’s Dynasty. It is equal to teaching Shakespeare for the English students in the primary school class. So Sanskrit teaching is unique and it is all about RAMA.

 

Rama in Thailand

Rama occupies an important position in Thailand. Kings of Thailand (Siam) are called Ramas and their capital was called Ayodhya. Ramayana has influenced the life of Thais so much. Postage stamps have been issued for Ramayana characters.

 

Around the World in 80 Days

Lot of you are already familiar with French writer Jules Verne’s fiction ‘Around the World in 80 Days’. Phileas Fogg struggled hard to finish the journey in 80 days and he was saved by gaining one day when he crossed the International Date Line. We all know the first man in space Yuri Gagarin circled the earth several times in his historical space flight. But no one knew this concept was evolved by Valmiki in his Ramayana. Jambavan circled the earth 21 times, says Valmiki. Even if you don’t believe it, at least you must agree he beat Jules Verne in writing a fiction of this type.

Jambavan says when Vishnu covered the world with three strides, I circled the earth with its mountains, forests and woods one and twenty times. Then commissioned by the Gods we gathered all the herbs which produced the nectar of immortality (Kishkinda Kanda 66-32).

 

Rama’s Ritual Suicide

When great people decide to leave the body they enter one of the five elements voluntarily at the appointed time on the appointed day. Mostly it is water or fire, they enter. For them leaving the body is like discarding old and worn out clothes. Physical body has no value for them when they accomplished what they wanted to accomplish. So we don’t call it a suicide. It is Jala Samadhi (Watery grave). When great people leave the earth they have the power of taking any one who is ready to accompany them. I have explained it in my post “Strange Facts about VIP deaths”.

It is like buying a direct flight ticket to heaven. So Rama was accompanied by several thousand people. They jumped in to River Sarayu along with Rama. Valmiki in Uttara Kanda (some believe it was not Valmiki’s work) gives graphic description about this scene:

“Then Rama, clothed in fine silk, invoking Brahma and reciting Vedic Mantras, taking Kusha grass in both his hands, set out for the Sarayu River, halting from time to time, silently making his way along the rough path. Radiant as the sun, he setout from his palace bare footed and on his right walked goddess Lakshmi with her lotus, on his left, was the great goddess Vyavasaya (Goddess of the Earth), and assuming human form , his innumerable arrows, marvellous bow and all the other weapons accompanied him. The Vedas, in the persons of Brahmins, the Holy Gayatri, Protector of the World, the sacred syllable AUM and the invocation “Vashat” followed in Rama’s train as also great souled Rishis,  and all the deities of the earth accompanied that hero to the open gates of heaven.”

“In his steps trod the women of inner apartments with the aged, the children, servants, eunuchs and personal assistants. The faithful Bharata with his wives accompanied by Shatrughna followed in Rama’s train. All the magnanimous sages with their wives and children joined the procession of virtuous Kakustha. Ministers, groups of servants with their offspring, their kinsmen and their flocks joyfully followed in the footsteps of their master. Not a single being, not even the least of them, was to be seen Ayodhya; even those born of animals followed in Rama’s wake”

“ When he had proceeded about six miles, the Pride of the Raghus, beheld the waters of Sarayu flowing westwards, eddying and rippling in their course, and he went on further to Goprataraka Ghata (Cows Ford), his subjects thronging him on all sides. He ascended to the heaven in aerial chariot to the accompaniment of musical instruments played by the Gandharvas”

At the request of Rama, all those who accompanied him were allowed to go to the region called Santanakas. Even the beasts that died meditating on his holy feet lived in the vicinity of Brahmaloka.

This beautiful description reminds some of the scenes of Piper of Hamlyn Story and the Egyptian funeral rituals.

Handshaking Custom

Lot of us think that shaking hands is a western custom. It is not. Sugreeva and Rama shook hands as soon as the Friendship Treaty was solemnised (signed). Sugreeva said to Rama, “This is a great fortune and greatest of gains for me, O Lord, that you desire to ally you in friendship with me, who is one of the Monkey Tribes. Should that friendship favour with you, then here is my hand, take it in to yours and let us bind ourselves fast with a vow”. Hearing Sugreeva’s sweet words, Rama with a joyful heart clasped his hand and happy in thought of the alliance they were about to conclude, embraced him warmly. (When we read this, we are reminded of international agreement signing ceremonies: Hand shaking, embracing etc.! Only difference is  both of them went round the fire and solemnised it instead of signing on papers with golden pens!

Contd………………… in Part 4

Source Materials: India in the Ramayana Age by Shantikumar Nanooram Vyas; The Ramyana of Valmiki- translated by Hari Prasad Shastri . Pictures are from Face Book and other websites. Thanks. Contact swami_48@yahoo.com

 

Please read other posts by Santanam Swaminathan about Rama: 1. Ram –the Best PR Man 2. தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 3.நாமும் அனுமார் ஆகலாம் 4.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 5.ராமாயண வினா-விடை (க்விஸ்) 5.Where is Rama Setu (Rama’s Bridge) ? 6.Did Sita Devi Die in Earth Quake? 7. Ramayana Wonders Parts 1,2,3.

ஜோதிட மேதை பாஸ்கராசார்யர்

Picture: Postage Stamps issued by Hong Kong

ச.நாகராஜன் 

கலைகளின் தலைநகரம் உஜ்ஜயினி 

ஜோதிடம், வானவியல் மற்றும் கணிதம் ஆகிய கலைகளுக்கு தாயகமாகவும் தலைநகரகமாகவும் திகழ்ந்த உஜ்ஜயினிக்கு மேலும் புகழ் சேர்த்த ஒரு பெரிய ஜோதிடமேதை பாஸ்கராசார்யர். இவரது காலம் 1114 முதல் 1185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரில் (விஜயபுரம் என்னும் ஊரில்) அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.இவரது தந்தையார் மஹேஸ்வரர் ஒரு பெரிய ஜோதிட மேதை. உஜ்ஜயினியில் இவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஜோதிடம் வானவியல் கணிதம் ஆகிய கலைகளுக்குத் தன்னை அர்ப்பணித்து பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளைக் கண்டு உலகினரை வியக்க வைத்தார்.

சித்தாந்த சிரோமணி என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. கோள அத்யாயம் மற்றும் க்ரஹகணிதம் ஆகிய இரு பாகங்களைக் கொண்டுள்ள இதில் பூமி சூரியனைச் சுற்றி வரும் காலத்தை 9 தசமஸ்தான சுத்தமாக, 365.258756484 என்று கண்டுபிடித்துள்ளது பிரமிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு.

 

லீலாவதியின் கதை

இவர் எழுதிய லீலாவதி என்ற நூலைப் பற்றிய சோகமான நிகழ்வு ஒன்று உண்டு! இந்த நூலை பின்னால் 1587ம் ஆண்டில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்த பைஜி என்பவர் இந்தக் கதையை விரிவாக எழுதியுள்ளார்.

லீலாவதி பாஸ்கராசார்யரின் அன்புக்கு உகந்த புத்திரி.அவள் ஜாதகத்தை கணித்த பாஸ்கராசார்யர் திடுக்கிட்டார். அவளுக்கு ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தால் மட்டுமே அவளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்க்கை நடத்த முடியுமே தவிர அது தவறி விட்டால் அவள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பே இல்லை என்பதை அவர் ஜாதக மூலம் கண்டார்.

உரிய காலத்தில் திருமணத்தை நிச்சயித்த பாஸ்கராசார்யர் குறிப்பிட்ட முகூர்த்தம் தவறி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் ஒரு புதிய சாதனத்தை அமைத்தார்.ஒரு சிறிய கோப்பையில் துவாரம் ஒன்றைச் செய்து அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மிதக்க விட்டார்.சரியான முகூர்த்த நேரத்தில் அந்த கோப்பை பெரிய பாத்திர நீரில் மூழ்கி விடும். அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாம் என்பது அவரது எண்ணம். எல்லாம் சரியான படி அமைக்கப்பட்டது.

ஆனால் திருமண நாளன்று (ஆறு வயதே ஆன) லீலாவதி அந்த கோப்பையில் என்ன இருக்கிறது என்று ஆவல் மீதூற  பார்க்கக் குனிந்த போது அவள் அணிந்திருந்த முத்து மாலையில் இருந்த ஒரு சிறிய முத்து நழுவி அவளை அறியாமல் அந்த கோப்பையில் விழுந்தது. அது சரியாக  கோப்பையிலிருந்த துவாரத்தை அடைத்து விட்டது. நேரம் சென்று கொண்டே இருந்ததைக் கவனித்த பாஸ்கராசார்யர் ஏன் கோப்பை மூழ்கவில்லை என்று ஆராயப் போனார். துவாரத்தை ஒரு சிறிய முத்து அடைத்திருந்ததையும் அதனால் நல்ல நேரம் கடந்து விட்டதையும் அறிந்து விசனித்தார். திருமணம் செய்து கொண்ட லீலாவதி சிறிது காலத்தில் கணவனை இழந்து விதவையானாள். அவளுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அவள் பெயரில் லீலாவதி என்ற புகழ் பெற்ற நூலை அவர் தனது 30வது வயதில் எழுதினார்!

லீலாவதி நூலின் புகழ்

லீலாவதி ஒரு அபூர்வமான நூல் இதில் 13 அத்தியாயங்களில் கணிதம் ஜியோமிதி சூத்திரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளன.டிபரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்னாமெட்ரி உள்ளிட்ட கணிதத் துறைகளில் அவரது கண்டுபிடிப்புகள் மேலை நாட்டினரை வியக்க வைக்கின்றன. லீலாவதியைப் படிப்பவர்களுக்கு சந்தோஷமும், உற்சாகமும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று பாஸ்கராசார்யரே கூறி இருப்பது உண்மை என்பதை இந்த நூலைக் கற்பவர்களுக்கு நன்கு புரியும். பொது மக்கள்  லீலாவதியைப் பற்றி, “லீலாவதியை நன்கு கற்றவர்கள் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறது என்று நிச்சயமாகக்  கூறி விடுவர்” என்று கூறி அதைப் புகழ்ந்தனர்.

லீலாவதியைத் தவிர பீஜ கணிதம்,சித்தாந்த சிரோமணி, வசனபாஷ்யம்,கரணகுதூகலம்,ப்ரஹ்மதுல்யா ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். பாஸ்கராசார்யர் தனக்கு முன் வாழ்ந்த வானவியல் நிபுணரான பிரம்மகுப்தரின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினார். இவரது மகனான லோக்சமுத்ரரும் ஒரு பிரபல ஜோதிடராகத் திகழ்ந்தார்.லோக்சமுத்ரரின் மகன் பாஸ்கராசார்யரின் நூல்களைக் கற்பிக்க 1207ம் ஆண்டில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார்.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரக சஞ்சாரங்கள் மிக முக்கியமானவை. அவை குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்களைக் கூற முடியும். இந்த வகையில் கிரகங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் விதத்தைத் தன் நூல்களில் பாஸ்கராசார்யர் விளக்கியுள்ளார் என்பதே இவரது தனிச் சிறப்பு.

 

மயிலின் உச்சி எனத் திகழும் மாமேதை

 இந்திய கோவில் ஒன்றில் உள்ள மத்தியகால கல்வெட்டு பாஸ்கராசார்யரைப் பற்றிக் கூறுவது  அவரைப் பற்றிய சரியான கணிப்பாக அமைகிறது. அது இது தான்:                            ‘‘அறிஞர்களாலும் மேதைகளாலும் மதிக்கப்படும் அபூர்வ திறமைகள் கொண்ட ஒப்பற்ற பாஸ்கராசார்யருக்கு வெற்றி! புகழ் கொண்டு ஆன்மீகத்தில் சிகரம் ஏறிய அந்தக் கவிஞர் மயிலின்  உச்சி போலத் திகழ்கிறார்! ‘’

 

**********************

How Many Miles Did Rama Walk?

Ramayana Wonders- Part 2

In the first part, I mentioned that over 200 plants and 185 weapons are mentioned in the Valmiki Ramayana. Bible mentioned only 110 plants. Those who want the lists of plants and weapons can get them from the glossary of Hari Prasad Shastri’s translation of Ramayana. I have also got the full list of weapons and plants mentioned in the Ramayana

How many miles did Rama walk?

Indians are the Ancient Marathon champions. No literature in the world talks about long walks. Only two ancient Indians walked long distance and beat all the world records. Rama walked over 2000 miles from Ayodhya to Sri Lanka. He did not walk in a straight line as the crow flies. He had to cross the thick tropical forest, Dandaka Aranya, and cross several rivers before he entered Karnataka (Kishkinda) where he met Hanuman and Sugreeva. Then he came to Rameswaram in Tamil Nadu and crossed the sea to go to Sri Lanka. He covered over 2000 miles. Adi Shankara who came several thousand years after Rama, walked all over India several times and established four centres in the four corners of India.

Some foreign scholars tried to belittle Rama’s grand travel by saying that the Lanka  that Valmiki mentioned was an island in the Godavari River. Those myths were exploded by the Sangam Tamil Works and Saivaite and Vaishnavaite references to Lanka in Thevaram and Divya Prabandham. Scholars who put forth those absurd theories did not know Tamil literature. One of the Sangam Tamil poets name is Valmiki!

ChineseRamayana

Buddhists took Ramayana to China in the first century AD. The names are distorted as Lomo (Rama), Poloto (Bharata), Loman (Lakshman),Naloyen (Narayan). The Pali Tripitaka was rendered in Chinese and compiled in the name of Taisho edition. Dasaratha Jataka and Story of Unnamed king were translated in 472 and 251 AD. Ravana was described as a wicked Naga King. Dasaratha Jataka has a verbatim Pali translation of Valmiki’s Sanskrit sloka!

Buddhists tried to enlist the national hero of India Rama on their side by transcribing his legend into their own in the Dasaratha Jataka.

Kush Vamsa in Ethiopia

Rama’s son ruled Kusha Dwipa. Ethiopian King considers himself as a descendant of Kush. According to P.N. OAK, swami Krisnananada was told by Haile Selaasie, King of Ethiopia that his dynasty came from Kush , son of Ham (Ram).

Niroshta (No Lip Touching) Ramayana

Of the 300 versions of Ramayana, Niroshta Ramayana,  is an interesting piece. When one reads it or recites it the lips won’t touch or close together. No labial letters are used. Hindus believe human saliva or spit is unclean, particularly when they do religious rituals. So they wanted to say Rama’s name without spit/saliva polluting it.

Saraswati Mahal Library in Thanjavur has got rare books. One of the books is Sabdarth Chintamani. This Sanskrit book was written by Chidambara Kavi sometime in the 15th or 16th century. If anyone reads the couplets from left to write, it is Ramayana story. If one reads it from right to left it is Mahabharata. Later he wrote Kathathreya including Ramayana, Mahabharata and Bhagavatha in the same verse. It is a Three in One Hindu scripture. Only Sanskrit language can do such wonders! Tamil has Poet Kalamegam’s puns, but that is entirely a different genre.

In Sanskrit Kalidasa dealt with the story of Rama in Raguvamsa, Bhavabhuti in Uttara Ramacharita, Bhojaraja in Ramayana Chambu and Ramachandra Dikshitar in Janaki Parinayam. In Tamil the great poet Kamban wrote the story of Ramayana in verse form, Arunachala Kavirayar in Drama. Number of references is in Bhasa’s dramas and Alvars hymns.

Ramayana in One Day

Rajatarangini of Kalhana says that Damodaran, predecessor of Kanishka heard the whole of Ramayana in one day to cure a curse.

Ramayana recitation and musical discourses are done in every language in all parts of India. When Chera King Kulasekara was listening to a musical discourse of Ramayana he got mesmerised by the talk. When the speaker described how Rama was fighting all alone with 14000 demons of Kara Dushana army, the king stood up and ordered his army to march to help Ramayana. He was so absorbed in the story he even forgot he was listening to a story. Then the embarrassed ministers sent some men to say to king that Rama defeated the Kara Dushanas.

Bodi Palace Ramayana Paintings

Not many people knew Tamil Nadu has beautiful Ramayana paintings on the walls of Ramanathapuram and Bodi palaces. Nayak kings made artists paint them on the walls at least four hundred years ago. Ramanathapuram palace paintings describe Ram’s history up to Sita Kalyanam (Sita’s wedding). Bodi palace has got more on this topic. All the colour paintings were done with herbs. Madurai Meenakshi temple and Alagarkoil also got some Nayak paintings on the same theme.

 

New Information in Sangam Tamil Literature

Ramayana, Mahabharata and Bhagavatham (Krishna’s life history) are very familiar in Tamil Nadu 2000 years ago. Tolkappiam, the oldest Tamil book refers to Baladevan’s Palmyra flag. Sangam literature speaks about river Yamuna and Gopika girls bathing with Krishna. But it gives some new information about Rama and Sita which was not found in Valmiki Ramayana. Rama consulted engineers under a banyan tree on the sea shore. Lot of birds were making a big noise. Rama asked them to keep quiet and all the birds fell into pin drop silence. This is in one of the verses. Another verse says that when Sita threw the jewels, the monkeys that picked up the jewels wore them in the wrong way. Likewise when a king gave the singers lot of jewels they did not know what to wear where. This is in Purananuru, Sangam Tamil anthology.

Lakshmana in GSS

Gatha Sapta Sati is an anthology of 700 sexy love poems in Prakrit language. One of the poems beautifully describes Lakshman’s chastity. Rama’s brother Lakshman was most famous for his character of observing a  vrata (vow) not to look at married women. He never saw Sita’s face after she got married to Rama. On the banks of River Godavari an amorous gentleman looks at his brother’s wife when his brother was away. The sister in law who was embarrassed showed him a painting on the wall where a Ramayana scene was painted. Painting showed Lakshmana looking at the earth or Sita’s feet in the company of Rama and Sita. This couplet speaks a lot: 1.There were Ramayana paintings in homes like we have calendars today 2.Chaste women were intelligent enough to give the message without mincing words.

Contd. In the third part………………………..

Source Materials: India in the Ramayana Age by Shantikumar Nanooram Vyas; The Ramyana of Valmiki- translated by Hari Prasad Shastri and Articles by PN Oak and CV Vaidya. Pictures are from Face Book and other websites. Thanks. Contact swami_48@yahoo.com

Please read other posts about Rama: 1. Ram –the Best PR Man 2. தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 3.நாமும் அனுமார் ஆகலாம் 4.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 5.ராமாயண வினா-விடை (க்விஸ்) 5.Ramayana Wonders Part 1

 

*****

கவி மழை பொழிய ஆசையா?

அவ்வையார், கம்பன், அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள், பாரதி, காளிதாசன் ஆகியோர் எல்லாம் கவி மழை பொழிந்து நம்மை அருள் வெள்ளத்திலும் ஆனந்த வெள்ளத்திலும் மிதக்கச் செய்தனர். அவர்களைப் போல கவி பாடவும் மொழி அறிவு பெறவும் ஆசைப் பட்டால் நீங்களும் அவர்களைப் போல இறைவனிடம் வேண்டுங்கள்.

பெரிய கவிஞர்கள் எல்லாம் இறைவனின் அருள் பெற்றே கவி பாடினர். அவர்கள் அல்லும் பகலும் அனவரதமும் “நாவில் சரஸ்வதி நல் துணையாக” (கந்த சஷ்டிக் கவசம்) என்றும் “நனி வாக்கை விநாயகர் காக்க” (விநாயகர் கவசம்) என்றும் வேண்டிப் பலன் பெற்றனர். இதோ அவர்கள் என்ன வேண்டினர் என்பதைப் படித்து, அதையே மனம் உருக வேண்டினால் மொழி அறிவு பெருகும், கவி மழை பொழியலாம், பல மொழிகளைப் பேசலாம்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தத் துதிகளை தினமும் படித்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு உண்மையான மொழி அறிவும், கவி புனையும் ஆற்றலும் பெறுவர்.

அவ்வையார்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்குண்டாம்—மேனி நுடங்காது பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

arunagirinathar

அருணகிரிநாதர்

புமியதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல

அமிர்தகவித் தொடை பாட அடிமை தனக்கருள்வாயே

சமரில் எதிர்த் தசுர் மாள தனியயில் விட்டெறிவோனே

நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே

புகலி வித்தகர்=திரு ஞான சமபந்தர்

குமரகுருபரர்

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

****

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

*****

 

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி: ஒரு கோடி தமிழ் பாடல்

வெள்ளை மலர்மிசை வேதக் கருப் பொருள்

ஆக விளங்கிடுவாய்!

தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு

விண்ணப்பம் செய்திடுவேன்;

எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி

இராதென்றன் நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி

வேல் சக்தி வேல் சக்தி வேல்!

*****

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்

தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

***

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்

இமைப் பொழுதும் சோராதிருத்தல்—உமைக்கினிய

மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்

சிந்தையே இம்மூன்றும் செய்

***

பக்தியினாலே—இந்தப்

பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி!

சொல்லுவதெல்லாம்—மறைச்

சொல்லினைப் போலப் பயனுளதாகும், மெய்

வல்லமை தோன்றும்—தெய்வ

வாழ்க்கையுற்றேயிங்கு வாழ்ந்திடலாம்

***

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்

கவிப் பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்

இங்கு அமரர் சிறப்பு கண்டார்.

*****

கம்பர் பாடிய சரசுவதி அந்தாதி

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை—தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரைப் போற்கையும்—துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி

காளிதாசர்

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ (ரகுவம்சம் 1-1)

சொல்லும் பொருளும் போல சேர்ந்திருப்பவர்களும் உலகத்திற்குத் தாய் தந்தையாக இருப்பவர்களுமான பார்வதி பரமேஸ்வரனை, சொல், பொருள் இவைகளை அறியும்பொருட்டு வணங்குகிறேன்

*****************