மாதத்துக்கு மூன்று மழை ஏன்?

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்:

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்

ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)

பாரத நாடு முழுதும் மழை பற்றி ஒரே கருத்து நிலவுகிறது. ஒரு மாதத்தில் மூன்று தடவை மழை பொழிய வேண்டும். இக்கருத்து வேத, புராண, இதிஹாசங்களில் ஏராளமான இடங்களில் வருகிறது. தமிழ் இலக்கியத்தில் வரும் சில குறிப்புகளை மட்டும் காண்போம்.

1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பெண் (கல்லூரி மாணவி வயது—டீன் ஏஜ் கேர்ல்) இருந்தாள். அவள் பெயர் ஆண்டாள். அற்புதமாகக் கவி பாடிய அழகிய நங்கை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. வாரணம் ஆயிரம் உள்ளடக்கிய நாச்சியார் திருமொழியையும் திருப்பாவை முப்பதையும் செப்பிய பருவமங்கை. திருப்பாவையில் தெய்வீக கருத்துக்களை விட்டுவிட்டு ஆராய்ந்தால் வரலாறு, பூகோளம், தமிழ்ச் சங்கம், மழை, பாவை நோன்பு, தை நீராடல் என்று தமிழ் கலாசாரம் பற்றி நிறைய விஷயங்களை ஆண்டாள் அள்ளித்தெளித்திருப்பதைக் காணலாம்.

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

………..

என்று திருப்பாவை பாடினார்

ஆண்டாளுக்குத் தெரிந்தது இன்று நமக்குத் தெரியாமல் போய்விட்டது. மாதத்துக்கு முன்று மழை ஏன்? அதிகம் பெய்தாலும் அவலம், குறைத்துப் பெய்தாலோ வறட்சி. இதைத் திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் பத்துக் குறட் பாக்களில் பெய்துவிட்டார். கெடுப்பதும் மழை, கொடுப்பதும் மழை என்று பிட்டுப் பிட்டுவைத்து விட்டார்.

மூன்று மழை பெய்யக் காரணம் என்ன?

விவேக சிந்தாமணி இதை அழகாக விளக்குகிறது:

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

இப்போதெல்லாம் இப்படிப் பெய்வதில்லையே, ஏன்? என்று அந்தக் கவிஞரைக் கேட்ட போது,

அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை

வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை

புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே! என்றார்

நல்லாட்சி, நல்ல மதம், நல்ல பெண்கள் இருந்த போது மாதத்துக்கு மூன்று மழை. கெட்ட ஆட்சி, கெட்ட பெண்கள் ( நிமிடத்துக்கு நூறு டைவர்ஸ் செய்யும் பெண்கள்) அறத்தை மறந்த அந்தணர் இருந்தால் வருடத்துக்கு மூன்று மழை என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார்.

வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= பத்தினிப் பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டார்.(இதைப் படித்துப் படித்துப் பெண்கள் சிரிப்பது அவர் காதில் விழுகிறது. ஆகையால் காவிரி நீர் மேட்டுர் அணைக்குள் வராதபடி தடுத்துவிட்டார்!!)

தமிழ் இலக்கணப் படி “கொழுநன் தொழுது எழுவாள்” என்பதை இப்படியும் அர்த்தம் செய்ய முடியும்= கணவர் ‘பெட் காப்பி’யுடன் வந்து மனைவியை தாயே எழுந்திரு, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும், நான் ஆபீசுக்குப் போகவேண்டும் என்று சொல்லும் காட்சி! (குறள் 55, அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்)

வறட்சி பற்றிய கருத்தும் ஒன்றே

வறட்சி பற்றியும் பாரத நாடு முழுதும் ஒரே கருத்து நிலவுகிறது. 12 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வறட்சி பற்றி ரிக் வேதம் முதல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திரு விளையாடல் புராணம் வரை எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. சூரியனில் தோன்றும் கருப்புப் புள்ளிகளுக்கும் இந்த வறட்சிக்கும் தொடர்பு உண்டு. சரஸ்வதி நதி வற்றிப் போனதால் வறட்சியால் சிந்துவெளி நகரங்கள் மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் சுடுகாடாக மாறியது இப்போதைய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

அந்தக் காலத்தில் அரசர்களைச் சந்த்தித்த ரிஷி முனிவர்கள் கேட்ட முதல் கேள்வி, “மன்னவனே உனது நாட்டில் மாதம் மும்மாரி ( மூன்று மழை) பொழிகிறதா?” என்ற கேள்விதான். மழை பொழியாவிடில் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் அழைத்தாலேயே போதும், அவர்கள் வரும் போதே மழை பொழியும். இந்தக் கருத்தையும் ரிஷ்ய ஸ்ருங்கர் கதை முதல் முத்துசாமி தீட்சிதரின் அமிர்த வர்ஷிணி ராகப் பாடல் வரையும் காணலாம். யாக, யக்ஞங்களால் மழை பொழியும் ( காளிதாசனின் ரகு வம்சம் 1-62) போன்ற கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையைக் கட்டுப் படுத்துவது தனி மனிதனின் ஒழுக்கமே என்று இந்துக்கள் நம்பினார்கள். ஒழுக்கம் தவறத் தவற இயற்கை உத்பாதங்கள் அதிகரிக்கும் என்பது கவிஞர்களின் ஏகோபித்த கருத்து.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக”

காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:

அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;

அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!

(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)

தங்கம் விலை உயரும்

2013ஆம் ஆண்டில் தங்கம் விலை உயரும்

தங்கம் விலை உயரும் என்று ஒரு கட்டுரையைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக செட்டியார் சமூகத்தினர் இதை அறிந்து தங்கத்திலும் வீட்டு மனையிலும் மட்டுமே காசை முதலீடு செய்வார்கள். வீட்டு விலையும் தங்கம் விலையும் உயராத காலமே இல்லை. தங்கத்தில் உள்ள ஒரே சிக்கல் அதைத் திருடர்களிடமிருந்தும் பேராசைக்கரர்களிடமிருந்தும் காப்பாற்றுவதுதான். பல குடும்பங்கள் தங்க நகைகளுக்காக சண்டை போட்ட கதைகளை நாம் அறிவோம்.

இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொக்கத் தங்கத்தின் விலை பத்து கிராம் 31,200 ரூபாயில் நிற்கிறது. இது 2013 ஆம் அண்டில் 37,000 ரூபாயாக அதிகரிக்கும். இது 24 காரட் தங்கம்.

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் /சவரன் 23,000 ரூபாயாக இருக்கிறது. இது 27000 வரை உயரக்கூடும்.

2012 தங்க அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பல சுவையான விஷயங்கள் இருக்கின்றன.:

தங்கத்தின் விலை 2009 ஆம் ஆண்டிலிருந்து 60 சதவிகிதம் உயர்ந்து விட்டது. தங்கம் வாங்கும் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் இதில் பத்தில் அல்லது எட்டில் ஒரு பகுதிதான் கிடைத்திருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 2500 டன் தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது. இதில் 80 சதவிகிதம் நகை செய்யப் பயன்படுகிறது. ஏனைய 20 சதவிகிதம் மின் அணுக் கருவிகளிலும் மருத்துவத் துறையிலும் பயன்படுகிறது. பெரும்பாலான மின்னணுக் கருவிகளில் (எலெக்ட்ரானிக்) கொஞ்சம் தங்கம் இருக்கும். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், கார் பிரேக் சிஸ்டம்,  மொபைல் போன்களிலும் தங்கம் உண்டு.

மருத்துவத்தில் பல் கட்டும் பிரிவு, புற்று நோய் மருந்துகள் தயாரிப்பதற்கான ஆய்வுகள், சூரிய செல்கள் ஆரய்ச்சி ஆகியவற்றில் தங்கம் பயன்படுகிறது. நமது உடலிலும் கடல் தண்ணீரிலும் தங்கம் உண்டு.

எகிப்து, இந்தியா, கிரீஸ், மாயா போன்ற பழைய நாகரீகங்கள் அனைத்தும் தங்கத்தைப் பயன்படுத்தின. கி.மு 2600 முதல் பழங்கால தங்க நகைகள் கிடைக்கின்றன.

சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பெரு, கனடா, கானா, இந்தோநேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் தங்க உற்பத்தியில் முதலிடம் வகித்தன.

உலகில் அதிக அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை வகித்து வருகிறது. 2011ல் 911 டன்னும், 2012ல் 800 டன்னும் இறக்குமதி செய்தது. அடுத்த ஆண்டு இது 600 டன்களாக குறையும் என்று உலோகத்துறை நிபுணர்கள் கணக்குப் போடுகிறார்கள்.

Gold coins issued by Raja Raja choza and Kumara Gupta

உலக மார்க்கெட்டில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நாலு சவரன். இது சொக்கத் தங்கம்=24 காரட் தங்கம். இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1666 டாலர். இது 2000 டாலராக உயரும் என்று எதிர்பார்த்தனர். 2012ல் அப்படி உயர்வில்லை. ஆனால் 2013ல் கட்டாயம் 2000 டாலர் ஒரு அவுன்ஸ் என்ற நிலை வரும் என்பது அவர்கள் கருத்து. இதற்குக் காரணம் ஆட்டம் காணும் மேலை நாட்டுப் பொருளாதாரமாகும். பங்கு மார்க்கெட், பாங்குகள் எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றன. ஆகையால் புத்திசாலி முதலீட்டாளர்கள் எல்லோரும் தங்கமே தங்கம் என்று புகழ்பாடத் துவங்கிவிட்டனர். பெரும்பாலான பாங்குகளும் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன.

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி

Pasupathinath Temple at Kathmandu, Nepal

எழுதியவர்: ச.நாகராஜன் 

 

வானவியல், கணித, ஜோதிட மேதை

 

ஸ்ரீபதி புதிய பாதையை ஜோதிடர்களுக்குக் காண்பித்த மகா மேதை! இவர் வாழ்ந்த காலம் கி.பி.1019 முதல் 1066 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீபதியின் தந்தையார் பெயர் நாகதேவர். நாகதேவரின் தந்தையாரான கேசவரும் ஒரு ஜோதிட மேதை தான். பிரபல ஜோதிட மேதையான லல்லரின் ஜோதிட நூல்களைக் கற்றுத் தேர்ந்த  ஸ்ரீபதி பெரும் வானவியல் நிபுணராகவும் கணித மேதையாகவும் ஜோதிடத்தில் புது நெறி காட்டும் புரவலராகவும் திகழ்ந்தார். கோளங்களைப் பற்றிய இவரது ஆராய்ச்சி குறிப்பிடத் தகுந்தது.

 

 

நேபாளத்தை சேர்ந்தவர்

துருவ மானஸம் (1056ல் எழுதியது) என்னும் நூலில் இவர் தன்னைப் பற்றிக் கூறுகையில்,”நேபாளத்தைச் சேர்ந்த கபிலவாஸ்துவில் ரோஹிணி நதி பாயும் ஊர் எங்களது ஊர்” எனக் குறிப்பிடுகிறார்.இந்த நூல் 105 செய்யுள்களைக் கொண்டது. இதில் கிரகங்களிருக்கும் நிலைகள், செல்லும் பாதை, கிரகணங்கள் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன.நாளுக்கு நாள் இவர் புகழ் பாரதமெங்கு பரவியது. மூன்று ஸ்கந்தங்களிலும் வல்லவரான இவர் பல அரிய நூல்களை இயற்றினார். ஆகவே இவரை மரியாதையாக அனைவரும் ஸ்ரீபதி பட்டர் என அழைக்கலாயினர்.

Another View of the Paupathinath Temple

ஸ்ரீபதி பத்ததி

ஜோதிடர்களுக்கு சவாலான ஒரு விஷயம் பாவம் மற்றும் ராசி சந்திகளில் இருக்கும் கிரகங்களின் பலத்தை நிர்ணயிப்பது தான். பராசரர் வழியிலிருந்து மாறி இவர் புது பத்ததியை உருவாக்கினார். இதன் படி பத்தாம் இடத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அதையொட்டி பல புதிய பாதைகளை சுட்டிக் காட்டினார். இந்த பத்ததி (வழிமுறை) கற்பதற்கு மிகவும் கடினமானது. என்றாலும் கூட  மிகவும் பிரபலமானது.ஜாதக பத்ததி அல்லது ஸ்ரீபதிபத்ததி என்ற பெயரால் இது சிறப்புற அழைக்கப்பெற்று ஜோதிடர்களின் மனம் கவர்ந்த நூலாக இன்று விளங்குகிறது.

 

 

ஸ்ரீபதியின் இதர நூல்கள்

வராஹமிஹிரரின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அவரை வியந்து போற்றி அவர் பாதையில் தான் ஒரு வழி நூலையும் இயற்றினார். இவரது சித்தாந்தசேகரம் என்ற அரிய வானவியல் நூல் 19 அத்தியாயங்களைக் கொண்டது. 125 செய்யுள்களைக் கொண்ட இவரது கணிததிலகா பூர்த்தியாகாத ஒரு நூல்.ஜோதிட மேதை ஸ்ரீதரரின் நூலை ஒட்டி அவர் இதை எழுதத் தொடங்கினார்.இதன் 14ம் அத்தியாயத்தில் அல்ஜீப்ராவின் பல்வேறு சமன்பாடுகளையும் சூத்திரங்களையும் அவர் அன்றே விளக்கி இருப்பதைக் காணும் மேலை நாட்டார் இன்று வியந்து அவரைப் போற்றுகின்றனர்.திக்கோதிதகரணம் (1039ல் எழுதியது) சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றி 20 செய்யுள்களில் விளக்குகிறது.20அத்தியாயங்கள் கொண்ட ஜ்யோதிஷ ரத்னமாலா லல்லரின் ஜ்யோதிஷரத்னகோசத்தைத் தழுவி இவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்கு மராத்தியமொழியில் இவர் ஒரு விளக்க உரையையும் எழுதினார். மராத்திய மொழியின் புராதன நூலாக இது இலங்குகிறது.ரத்னமாலையில் இவர் மக்களைப் பரிவுடன் அழைக்கும் பாங்கு வியந்து போற்றுதற்கு உரியது.

 

 

மறைந்த நூல்கள் பல    

ஸ்ரீபதி எழுதிய பல நூல்கள் மறைந்து விட்டன. பீஜ கணிதம் போன்ற இவரது சிறந்த நூல்கள் இன்று காணக் கிடைக்கவில்லை.(என்றாலும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்த கிருஷ்ணமிசிரர் என்னும் அந்தணர் இவரது அரிய நூலான சித்தாந்த சேகர விவரணத்தை வியாக்யானத்தோடு முதல் 4 அத்தியாயம் 75 சுலோகங்கள் வரை அச்சிட்டுள்ளார்.)

 

ஜோதிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு பத்ததியை உருவாக்கி புது வழி காட்டியவர் ஸ்ரீபதி என்பதால் இவரது நூல்களை ஜோதிட ஆர்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேடிக் கற்று வருகின்றனர்.

******************

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம்

முன்னர் வெளியான சந்தானம் சுவாமிநாதன் கட்டுரைகள்: (1) டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியுமா? (2) “உலக அழிவு” பற்றி மகா பாரதம். இவ் வரிசையில் இதோ மூன்றாவது கட்டுரை:

 

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:

1.திருடர்கள் மன்னர்கள் ஆகிவிடுவர். மன்னர்கள் திருடர்கள் ஆகிவிடுவர்.

2.மக்களின் சொத்துக்களை ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து அதைக் கெட்ட வழியில் செலவிடுவர்.

3.கொஞ்சம் படித்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரிய சாமியார்களாகக் கருதப்படுவர்.

4.நிறைய நாடோடிகள் (அகதிகள்?) நாடு நாடாகச் செல்வர்.

5.தாய்மார்களின் கர்ப்பத்திலேயே கருக்கள் அழிக்கப்படும்

6. கோர மிருகங்களின் தொல்லைகள் அதிகரிக்கும்

7.மக்கள் தவறான முடிவுகளுக்கு ஜே போடுவார்கள்

8.ஒருவரை ஒருவர் நம்பமாட்டார்கள். பொறாமை அதிகரிக்கும்.

9.ஆயுட்காலம் குறையும். பலர் 16 வயதி இறப்பார்கள்.

10.பசி, பிணி இவற்றால் கஷ்டப்படுவோர் பூமிக்கடியில் வசிப்பார்கள்.

11.இளம் பெண்கள் கற்பை விலை பேசுவார்கள்

12. மழைக்கான அதிபதி கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட காலங்களில் மழையைக் கொட்டுவான்.

13.கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிப்பர்.

14.கடுமையான, அசிங்கமான மொழி பயன்படுத்தப்படும்

15.பிச்சைக்காரர்கள், வேலை இல்லாதோர் அதிகரிப்பர்

16.ஆட்சியாலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மக்களின் செல்வத்தை வரிகள் மூலம் பறிப்பதில் குறியாக இருப்பர்.

17.பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருக்கும். வேறு லட்சியம் அதுவும் இல்லாமல் பானக்காரர்களின் சொல் கேட்பர்.

18.தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

19.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படும்.

லிங்க புராணம் எழுதப்பட்டு 1500 ஆண்டுகட்கு மேலாகிவிட்டது. அப்போதே இப்படி உலகம் தறிகெட்டுப் போகும் என்று எப்படிக் கண்டுபிடித்தனர்? ஞானிகளின் த்ரிகால ஞானம் (முக்காலப் பார்வை) என்றே சொல்ல வேண்டும்.

Contact swami_48@yahoo.com

 

Indus Valley Cities in Ramayana

Ramayana Wonders Part 5

Indus Valley Cities in Ramayana

The “destruction of Indus Valley cities” was debated by scholars at one time. The latest theory is that the civilisation declined not because of attacks by foreigners but by natural catastrophes. The changing course of Sarasvati river and the resultant drought may be one of the causes. Ramayana gives valuable information about Indus valley. It was ruled by the Gandharvas and Rama sent  Bharata to conquer the cities. The description of the Indus cities by Valmiki matches very well with Harappa and Mohanjo Daro. Gargya says these words:

“There is a country of Gandharvas, rich in fruits and roots, situated on the banks of Sindhu river; that the country is extremely fertile. The Gandharvas, armed and skilful warriors , defend it. When you have conquered them and destroyed their magnificent CITADELS, take possession of their CITIES, which are WELL CONSTRUCTED , none other can achieve this; the country is extremely beautiful.(Uttara Kanda, chapter 100)

Rajavalia, Sri Lankan history book, puts Rama’s date as 1844 years before the Buddha. This means Rama lived in2500 BC which coincides with the Indus Valley Civilization. Since information given by Rajavalia and Valmiki coincides we may consider it authentic.

Mahabharata war took place after Ram’s time. Mahabharata also has lot of references to Indus Kingdom. Jayadratha was called Sindhuraja and Saindharva. He was the husband of Duryodhana’s sister Dushala. He was one of the eleven commanders of Kaurava army. He fought valiantly, but killed by Arjuna. Jayadratha’s father was Vridhakshetra. He ruled Indus valley area.

Legendary Lovers

Laila and Majnu, Anarkali and Salim, Romeo and Juliet, Antony and Cleopatra, Ambikapathy and Amaravathy, Shah Jahan and Mumtaj, Adhimanthi and Attnathi (Tamil), Kovalan and Madhavi, Radha and Krishna

We know a list of popular legendary lovers or couples. But Valmiki gives another list of ideal couples (Sundara Kanda ,chapter 24):

Sita told the Rakshasa women, “I will follow Rama

As Suvarchala follows the Sun (Surya)

Sachi  follows Indra

Arundhati follows Vashista

Rohini follows Sachin (Moon)

Lopamudra follows Agastya

Sukanya follows  Syavana

Savitri follows Satyavan

Shrimati follows Kapila

Madayanti follows Sandasa

Keshini follows Sagara

Damayanti follows Nishada (Nalan)

Swaha follows  Agni”.

 

This stanza throws light on ancient Indian society. Women were very intelligent and well informed. The way Sita argued in Ramayana and Draupadi argued in Mahabharata showed that they were well educated. They believed in values such as chastity and husband is god like.

Diplomatic Immunity

In the modern world embassies are given special rights. The embassy building is considered part of that particular country. No one can enter it without the country’s permission. Diplomatic staff have immunity. Unless it is a serious criminal offence they can’t be detained, they can only be deported. This was applicable to messengers in the olden days. We have more information about the rules governing ambassadors in Mahabharata and Arthashastra. Krishna has acted like messenger several times. In the Ramayana, when Ravana passed death sentence on Hanuman, Vibhishana pointed out to him how an ambassador should be treated. After listening to him, Ravana changed his mind and commuted death sentence to the punishment of setting fire to his tail.

Vibhishana pointed out:

1.No envoy is put to death 2.Mutilation of the body, the whip, the stripes, shaving of the head, branding ,one or all of these can be inflicted on a messenger. 3.The virtuous do not give way to wrath 4. It is on those who sent him must be punished, not the messenger. Whether he be honest or not, the responsibility lies with them.

 

Big, Big Numbers

Some Tamils have been circulating big numbers as Tamil numbers. They are not. They are Sanskrit numbers. We have been reading about them from the beginning of Vedic literature. They are not found in Sangam Tamil literature, but in early Sanskrit literature.  Commentators on Tamil work Paripatal refers to big numbers, but gives only Sanskrit words such as Sangam, Padmam, Samudram etc. Valmiki also speaks of big numbers Yuddha Kanda chapter 28:

 

“O King, a hundred thousand multiplied by a hundred is called a Koti

Hundred thousand such Kotis  make one Shanku

A hundred thousand such shankus  make one Maha Shanku

A hundred thousand such Maha Shankus make one Vrinda

A hundred thousand such Vrindas make one Maha Vrinda

A hundred thousand such Maha Vrindas make one Padma

A hundred thousand such Padmas make one  Maha Padma

A hundred thousand such Maha Padmas make one  Kharva

A hundred thousand such Kharvas make one Samudra

A hundred thousand such Samudras make one Ogna

A hundred thousand such Ognas make one Maha Ogna

When we read the number of monkeys that marched to Lanka, it may sound a big exaggeration. What Valmiki wanted to emphasize is that they knew huge numbers and huge army of monkeys took part in the war.

Earlier Vedic literature also speaks about huge numbers which is a proof for mathematical genius of Indians. Other cultures could speak only in 40s or multiple of 40s at the time.

Contd. ……………….. in Ramayana Wonders part 6

 

Please read other posts by Santanam Swaminathan : 1. Ram –the Best PR Man 2. தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 3.நாமும் அனுமார் ஆகலாம் 4.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 5.ராமாயண வினா-விடை (க்விஸ்) 5.Where is Rama Setu (Rama’s Bridge) ? 6.Did Sita Devi Die in Earth Quake? 7. Ramayana Wonders Part1 (8) . Ramayana Wonders Part2 :How many miles did Rama walk? (9) Ramayana Wonders Part 3: Rama and Sanskrit G’ramma’r 10) Part 4: Who can read all 300 Ramayanas?

Contact swami_48@yahoo.com

 

“உலக அழிவு” பற்றி மகாபாரதம்

மகா பாரதத்தில் இல்லாதது எதுவும் இல்லை. “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம்” என்பது பெரியோர் வாக்கு. அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப் பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) தனித் தனி கட்டுரைகள் எழுதிவிட்டேன்.

இப்பொழுது மாயன் காலண்டரில் உலக அழிவு பற்றி இருப்பதாக வதந்தி கிளம்பி இருப்பதால் எல்லோருக்கும் இதில் ஆர்வம் பிறந்திருக்கிறது. மகாபாரதம் கலியுக முடிவு பற்றி என்ன சொல்லி இருக்கிறது எனபதைச் சொல்லுகிறேன். பல இடங்களில் உலக முடிவு பற்றிப் பேசப்பட்டாலும் வன பர்வத்தில் கலியுகத்தின் இறுதிக் காலம் பற்றி விரிவாகக் காணலாம்.

நம்மைப் போலவே பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கும் இதில் ஆர்வம் இருந்திருக்கிறது. இது ஒரு அதிசயமான, ஆர்வமூட்டும் விஷயம் என்று பீடிகை போட்டுவிட்டு, மார்க்கண்டேய முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்கிறார் தர்மர்:

தர்மங்களும் நற்குணங்களும் அழிந்தபின்னர் என்ன நடக்கும்? அப்போது மனிதர்கள் என்ன உண்ணுவார்கள், எப்படிப் பொழுதைக் கழிப்பார்கள்?, அவர்கள் எந்த அளவுக்கு பலம் உடையவர்களாக இருப்பர்? கலியுகம் முடிந்த பின்னர் கிருத யுகம் துவங்குமா?

(தர்மரின் கேள்விகளை இந்தக் காலத்தில் படிக்கும்போது நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று எண்ணி வியக்க வேண்டியுள்ளது. அன்றாட உப்பு ,புளி, மிளகு பற்றிப் பேசாமல் இந்தப் பூவுலகின் தோற்றம், முன்னேற்றம், முடிவு குறித்து சிந்திப்பதை வேறு எங்கும் காண முடியாது. இந்துப் புராணங்களிலும் மகாபாரதத்திலும் மட்டுமே காண முடியும்)

மார்கண்டேய முனிவரின் பதிலில் உள்ள ‘பாயிண்டு’களை மட்டும் பார்ப்போம்:

1.கிருத (சத்திய) யுகத்தில் ஏமாற்று, மோசடி, பேராசை, பொய் கிடையாது. அப்போது தர்மம் என்னும் மாட்டுக்கு நான்கு கால்கள் இருந்தன. திரேதா யுகத்தில் பாவங்கள், ஒரு காலை வெட்டிவிட்டன. அடுத்த தூவாபர யுகத்தில் பாவங்கள் பெருகி அறம் அழியவே தர்மத்துக்கு இரண்டு கால்கள் மட்டுமே எஞ்சின. கலியுகத்திலோ இது ஒரே கால் ஆகிவிடும்.

2.ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் உடல் பலம், ஆன்ம பலம், புத்தி ஆகியன குறைந்து கொண்டே வரும். கலியுகத்தில் நான்கு வருணத்தாரும் பொய்யாக ஆசார அனுஷடானங்களைப் பின்பற்றுவர். ஒருவரை ஒருவர் ஏமாற்றுவர். போலி அறிஞர்கள் பொய்மை வாதத்தால் உண்மையை மறைப்பர். ஆயுள் குறைவால அதிகம் கற்க முடியாது. கல்விக் குறைவால் விவேகம் வராது. பேராசை, காமம், கோபம், அறியாமை ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் வஞ்சிப்பர். முதல் மூன்று ஜாதியினர் நாலாவது ஜாதி அளவுக்கு தாழ்ந்து விடுவர்.

3.மீன், ஆடு முதலிய உணவு அதிகரிக்கும். பசுமாடுகள் குறைந்துவிடும். ஆசை காரணமாக ஒருவரை ஒருவர் கொல்லுவர். மனைவியர் நண்பர்கள் போல இருப்பார்கள். திருடர்கள், நாஸ்தீகர்கள் அதிகரிப்பர். தானியங்கள் விளையாமையால் ஆறுகளிலும் ஏரிகளிலும் இறங்கி பயிர் செய்வர். அப்படியும் வறண்ட பூமியாகவே இருக்கும்

4. அப்பன் , மகன் சொத்தையும், மகன் அப்பன் சொத்தையும் அபகரிப்பன். சாஸ்திர விதிகளுக்குப் புறம்பான விஷயங்களை அனுபவிப்பர். பிராமணர்கள் வேதங்களை நிந்திப்பர்.. ஹோமம் முதலியவற்றைப் பின்பற்றார்.

5.மிலேச்சர் போன்று நடக்கத் துவங்குவர். யாக யக்ஞங்கள் நடக்காது. மகிழ்ச்சி குறையும். பலமும் அறிவும் குறையும் ஒருவர் ஒருவருடன் வாதிடுவர். காக்கும் தொழிலில் உள்ளவர்கள் தண்டனை அளிப்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவர். அவர்கள் நேர்மையான மக்களையும் அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்களையும் அபகரிப்பர்.

6. மனைவிமார்கள், கணவனுக்கு பணிவிடை செய்யார். பார்லி, கோதுமை விளையும் நாடுகளை நோக்கி மக்கள் செல்லுவர். ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் மதியார். வருண வேறுபாடுகள் அகன்று எல்லோரும் ஒரே மாதிரி இருப்பர். தோட்டங்களையும் மரங்களையும் அழிப்பர்.ஐயோ போன்ற கதறல்கள் அதிகரிக்கும்.

கல்கி அவதாரம்

7. சூரியன், சந்திரன், குரு மூவரும் புஷ்ய நட்சத்திரத்துடன் ஒரே ராசியில் பிரவேசிக்கையில் புதிய கிருத யுகம் துவங்கும். (பீஷ்ம பர்வத்தில் ஓரிடத்தில் யுக முடிவில் சந்திரனை ஐந்து கிரகங்கள் பீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நிறைய கிரகங்கள் ஒரே ராசியில் சேருவது பொதுவாக நன்மை இல்லை என்பது கருத்து.)

இந்த நேரத்தில் சம்பல என்னும் ஊரில் ஒரு பிராமணர் குடும்பத்தில் கல்கி அவதரிப்பார். அவர் விஷ்ணுவின் புகழ் பாடுவார். தீயோரை அழித்து நல்லோரைக் காப்பாற்றுவார். அவர் பிறந்த பின்னர் பூமி எங்கும் மழையும் சுபிட்சமும் அமைதியும் நல்லாட்சியும் நிலைபெறும். அவர் கிருதயுகத்தைத் துவக்கிவைப்பார். அவர் துராசாரம் மிக்க மிலேச்சர்கள் அனைவரையும் ஒழிப்பார். அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னராக விளங்குவார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஆயுதங்களும் படை பலமும் வந்து குவியும். கல்கி என்பவர் மகா பலவானாகவும், புத்திமானாகவும், குணவானாகவும், தேஜோமயமாகவும் ஜொலிப்பார். (வேறு சில புராணங்களில் அவர் வெண் புரவியில் (வெள்ளைக் குதிரை) பவனி வருவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது).

 

8. உலக அழிவின்போது ஏற்படும் இயற்கைச் சீற்ற வருணணைகளைப் படிக்கையில் பூகம்பம், கடல் சீற்றம், சுனாமி, பெருந்தீ, வறட்சி, வெள்ளம், எரிமலைச் சீற்றம், விண்கல் வீச்சு —ஆகிய எல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆக முன்னோர்களும் தர்மம் குன்றும் போது இயற்கையும் மாறுபடும் என்று எதிர்பார்க்கின்றனர்.

9. இவை எதுவும் நாளையே நடைபெறப் போவதில்லை. ஆனால் சில விஷயங்கள் இப்போதே நடப்பதை மறுப்பதற்குமில்லை. இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இதே வன பர்வத்தைப் படித்து புது அர்த்தம் ஏதேனும் புலப்படுகிறதா என்பதைப் பார்ப்போம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவில்லை

-திரு ஞான சம்பந்தர்

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில், தேன் கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்; மாமயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்; அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கை எழுத்தே

-அருணகிரிநாதர்

சந்தானம் சுவாமிநாதன் எழுதிய இவைகளையும் காண்க:

(1)பழமொழியில் இந்துமதம் (2) Do Hindus Believe in E.T.s and Aliens? (3)Bhishma: First Man to Practise Acupuncture (4) Great Engineers of Ancient India 5) டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியுமா?

மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

Picture shows Edilpur Copper Plate of Sena Dynasty

மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

By ச.நாகராஜன் 

 

வங்க மன்னன் வல்லாளன் 

வங்காளத்தை ஆண்ட ஒரு மா மன்னன் நாட்டை ஆளுவதில்  வல்லவனாக இருந்ததோடு ஜோதிடத்திலும் வல்லவனாக இருந்தான் என்றால் ஆச்சரியமான விஷயம் தானே அது! சேனர் வமிசத்தைச் சேர்ந்த மன்னன் வல்லாள சேனன் (கி.பி.1160 முதல் 1178ம் ஆண்டு முடிய அரசாண்டவன் ) பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவன்.பகைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன்.அவனைப் பற்றிய தாமிரச் செப்பேடுகள் அவன் புகழைப் பாடுகின்றன.மகதத்தில் நிகழ்ந்த போரில் பால வமிசத்தைச் சேர்ந்த மன்னர்களை அவன் வென்றான்.வல்லாள சேனரின் தந்தையான விஜய சேனர் அரசாண்ட போதே வல்லாளன் மிதிலைக்கு எதிரான போரில் அவருடன் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். சாளுக்கிய ராணியான ராம்தேவியை மணம் புரிந்து கொண்டான்.

 

தன சாகரம் மற்றும் அற்புத சாகரம் 

வல்லாளன் பல் கலை வித்தகன். பேரறிஞன். ஜோதிடத்தில் புலி. சிறந்த சிவ பக்தன்.தனசாகர் என்ற நூலை 1168ம் ஆண்டு அவன் இயற்றினான். அடுத்து அற்புத சாகரம் என்ற ஜோதிட நூலை 1169ம் ஆண்டு எழுதலானான். ஆனால் அபூர்வமான இந்த நூல் முற்றுப் பெறவில்லை.18 ஆண்டுகள் நாட்டைத் திறம்பட ஆண்ட வல்லாளன் இறுதிக் காலத்தில் தன் மகன் லக்ஷ்மண சேனரிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு தன் மனைவியுடன் திரிவேணி சங்கமத்தின் அருகே கங்கைக் கரையில் அழகுற ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கி இருந்தான். இப்போதைய பங்களா தேஷில் டாக்காவில் உள்ள தாகேஸ்வரி ஆலயத்தை நிர்மாணித்தவன் இவனே என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.தனக்கு முன்னால் ஜோதிடத்தில் வல்லவர்களாக இருந்த அனைத்து ரிஷிகள், மேதைகள் ஆகியோரின் நூல்கள் அனைத்தையும் வல்லாளன் முதலில் கற்றுத் தேர்ந்தான். பின்னர் தான் கண்டு பிடித்த அரிய முத்தான கருத்துகளைத் தொகுத்து அற்புத சாகரம் என்ற நூலை எழுதலானான்.

 

அற்புத சாகரம்

 பராசரர்,காஸ்யபர்,கர்கர்,வராஹமிஹிரர்,ரிஷிபுத்திரர்,வஸந்தராஜர்,  பிரம்மகுப்தர், பட்ட பலபத்ரா உள்ளிட்ட ஏராளமான மேதைகளை வல்லாளன் குறிப்பிடுவதால் இவன் அத்துணை பேரையும் நன்கு அறிந்தவன், அவர்களின் நூல்களைக் கரைத்துக் குடித்தவன் என்பது தெளிவாக விளங்குகிறது!தனது புதுமையான நூலின் அத்தியாயங்களுக்கு அத்தியாயம் என்றோ அதிகாரம் என்றோ பெயர்களைச் சூட்டாமல் சுழல் என்று பெயரைச் சூட்டினான் வல்லாளன். இதன் படி இவனது அற்புத சாகரத்தில் பூனைச் சுழல், நாய்ச் சுழல், நரிச் சுழல்,பல்லிச் சுழல், எறும்புச் சுழல், பறவைச் சுழல்,ஈச் சுழல், கொதுகுச் சுழல், சிலந்திச் சுழல், வண்டுச் சுழல், தவளைச் சுழல், கருங்குருவிச் சுழல்,கிருஷ்ணபட்சிச் சுழல், காகச் சுழல், இடிச் சுழல், பரிதி வட்டச் சுழல் என்பன போன்ற சுழல்கள் ஏராளம் உள்ளன். ஒவ்வொரு சுழலும் ஏன் ஏற்படுகிறது,அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப நவ கிரகங்கள் தரும் பலன்கள் என்னென்ன என்பனவற்றை அவன் விளக்கும் விதமே சுவாரசியமானது! சப்தரிஷி மண்டலத்தின் தோற்றத்தையும் வல்லாளன் அழகுற விவரிக்கிறான். பூமி, ராகு, கேதுக்கள் பற்றிய இவனது ஆராய்ச்சி பல புதிய உண்மைகளை விளக்குகிறது.

 

ஜோதிடத்தில் ஒரு மா மன்னன் ஆர்வம் உடையவனாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அதில் வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து புதிய பாணியில் சிறந்த கருத்துக்களைக் கொண்ட ஒரு நூலை எழுதியது தான் அற்புதமான விஷயமாக ஆகிறது. அற்புத சாகரத்தை எழுதிய மன்னன் அற்புத மன்னனே எனச் சொல்ல வைக்கிறது.

 

My brother S Nagarajan’s other articles on Astrology, Astrologers and Astronomers are available on this blog. Please read them: swami.

Contact swami_48@yahoo.com

 

****************

தக்காளி ரசத்தின் மகிமை

 

தமிழர்களின் சாப்பாட்டில் சாம்பார், ரசம், தயிர்/மோர் என்று மூன்று ‘கோர்ஸ்’ உணவு இருக்கும். இன்றும் தமிழ்நாட்டு ஹோட்டல்களில் இதே முறை பின்பற்றப்படுகிறது. கல்யாணச் சாப்பாடுகளிலும் இதுதான் பிரதானம். சப்பாத்தி, பரொட்டா போன்றவை எல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. கூட்டு, காய்கறிகள் மற்ற வெஞ்சனம் (சைட் டிஷ்) ஆகும். தமிழ் பிராமணர் வீடுகளில் இன்றும் இதே வழக்கம் நீடிக்கிறது. இந்த தக்காளி புற்றுநோயை ஒழித்துவிடும் என்று இப்போது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தக்காளிக்கு சிவப்பு நிறம் கிடைக்க உதவுவது லைகோபின் என்னும் ஒரு பொருளாகும். இது புற்றுநோயின் எதிரி. அதாவது புற்று நோய் செல்களுக்கான ரத்த சப்ளையத் தடுத்துவிடுகிறது. இதை பிரிட்டனில் போர்ட்மவுத் பல்கலைக்கழகத்தில் பார்மஸி பிரிவைச் சேர்ந்த ம்ருதுலா சோப்ராவும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்தனர். சமைக்கப்பட்ட தக்காளி நன்கு வேலை செய்கிறது. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தைக் கடத்திச் சென்று தங்களுக்குப் பயன்படுத்தும். அதை தக்காளியின் லைகோபின் தடுக்கிறது அல்லது மெதுவாகச் செயல்படவைக்கிறது.

சோதனைச் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மனித உடலிலும் நடைபெறுகிறதா என்பதை அடுத்து ஆராயப்போகிறார்கள்.அவர்கள் முடிவை அறிவிப்பதற்கு முன்னால் நானே சொல்லிவிடுகிறேன். தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிடுவதன் காரணமே அதன் மருத்துவ குணத்தால்தானே.

தக்காளியை 2500 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்க அஸ்டெக் (ஆஸ்தீக) நாகரீக மக்கள் கண்டுபிடித்தனர். பிறகு ஸ்பானியர்கள் இதை இலகம் முழுதும் கொண்டுசென்றனர். பிரிட்டிஷார் மூலம் நமக்கும் 300 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்தது.

 

If you are a health freak, please read also other posts by Santanam Swaminathan:

1.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 2.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அலெக்சாண்டரும் 3.வடக்கே தலை வைக்காதே 4. Amazing Medical Knowledge of Tamils 5. Why do Hindus practise Homeopathy? 6. Hindu Wisdom: Copper Kills Bacteria 7. Copper kills Cancer 8. How did a Pandya King get a Golden Hand?

Tomatoes prevent cancer

Dr Mridula Chopra and colleagues at the University of Portsmouth tested the effect of the nutrient lycopene on the simple mechanism through which cancer cells hijack a body’s healthy blood supply to grow and spread.

They found that lycopene, which is what gives tomatoes their red colour, intercepts cancer’s ability to make the connections it needs to attach to a healthy blood supply.

The researchers, from the university’s School of Pharmacy and Biomedical Sciences, are now calling for tests to check if the same reaction occurs in the human body.

Director of the research Dr Chopra said: ”This simple chemical reaction was shown to occur at lycopene concentrations that can easily be achieved by eating processed tomatoes.”

Tamil’s three course meals contain rice with Sambar, Tomato Rasam and Curd/Yogurt. All the hotels serve the same until today. In traditional weddings these are must items. But tomatoes are not Indian vegetables. They came from South American Aztecs through the Spaniards. British brought them to India 300 years ago.

Copper kills cancer cells

( On 27th May 2012 ,I posted an article “Hindu Wisdom: Copper kills Bacteria” in this blog. Now we have one more news item in support of this view. Hindusare allowed to use only copper vessels in religious ceremonies. Iron or stainless steel is not allowed. Bronze and brass slowly replaced the copper in homes. But in temples still copper is used).

(News in London News Papers)

A drug used to treat alcohol addiction could help destroy deadly brain tumours, research has shown.

For more than 60 years, disulfiram has been used as part of therapy to wean people off alcohol. It makes the body acutely sensitive to alcohol, producing an unpleasant reaction.

Now scientists believe the drug could offer new hope to patients with glioblastoma, the most common and deadly form of brain cancer.

Unlike most drugs, disulfiram is able to penetrate the “blood-brain barrier” – a physical and molecular wall that keeps toxic substances out of the brain. It is used with copper gluconate.

Study leader Dr Weiguang Wang, from the University of Wolverhampton, said: “We’ve been studying the cancer-fighting properties of disulfiram for over a decade, so it’s very exciting to have reached a stage where clinical trials may be possible.

“The idea of using copper to tackle cancer was first suggested by UK scientists in the 1920s, but this is the first time that scientists have found a way of successfully transporting excess copper into cancer cells and shown how this can be combined with conventional chemotherapy treatment to help kill glioblastoma cells. We’re now working on the best way to deliver dilsulfiram and hope to begin clinical trials in cancer patients as soon as funding can be secured.”

The research is published in the British Journal of Cancer.

Elephant Coffee- a cup £30 (Rs2500)

London newspapers have published an interesting news story about coffee that comes out of an elephant’s bottom! It is called black ivory coffee. Because of its super taste, it is one of the most expensive coffees in the word at £30 a cup (Rs 2500). The reason for its good taste is every coffee bean is plucked out of elephant’s dung. They feed the coffee beans to elephants and the animal’s stomach acid improves it flavour.

 

This coffee is called crap-uccino. Canadian Blake Dinkin spent £300,000 developing this idea. He used a herd of twenty elephants for this. The first 70 kilo coffee he produced in Thailand has sold out. He expects a good demand for this black ivory coffee.

It raises a moral question. Can we use elephants to make them eat what they can’t digest? When it comes to money, morality disappears in western countries.

Hindus reverence to Elephants & cows

Hindus revered two animals the most –cow and elephant. They did two pujas everyday in all the temples and Mutts for cow and elephant. They are known as Go Puja (cow worship) and Gaja Puja (elephant worship). They not only respected these animals but used their parts as well. Even a primitive man would have done it. There is no wonder. But Hindus went one step further and found out the medical values of their urine and excretory materials.

Pancha gavyam (five products from Go=Gau=cow) is from the cow. Hindus must consume the urine, cow’s dung, milk, curd and butter at all ritual functions. The cow dung is anti bacterial and is used by the Hindus for thousands of years as cleaning materials in kitchen and front of the houses. Now cow’s urine is sold in bottles. People will slowly realise its medical value. I will consider these as Hindu discoveries.

The hair from elephant tails is used as a talisman against diseases in Kerala, India. The mahout used to give it when we give him money. Elephant’s urine was also used by orthodox Hindus. When I spent my boyhood days in Madurai, Tamil Nadu, India I have done it along with other elders. When I went to Guruvayur elephant sanctuary, I bought the elephant’s hair. As soon as the elephants excrete the dung people used to run and stamp on it so that all the fissures and sores on the foot disappear. When I was a boy all these were fun rather than religious or scientific. Now after reading the elephant dung coffee news I realise its value.

People pay the mahout to get the water blown out from the trunk of an elephant. Whoever drenches in that water will get immunity from diseases. This is seen in 2200 year old (Bharhut sculptures) Gajalakshmi statues where Goddess Lakshmi is bathed by two elephants. I have already written about Gajalakshmi’s travel to Sri Lanka and Denmark. The figure is found in Denmark and Sri Lanka.

Elephant dung and cow’s dung are used as manure. Cow’s milk is also used all over the world. I have a feeling Hindus were the first one to introduce them to the human beings. There are some reasons to believe so. They worshipped these two animals above all other animals and started using them well before others. They found out their medicinal values. They banned beef eating. Beef spreads killer diseases such as Mad Cow Disease. Millions of cows were slaughtered after this disease spread to Europe in the past few years. Certain countries beef was banned by UK leading to economic wars. Beef sale dropped out heavily in the supermarkets after the scientists’ revelation that it can spread to human beings. Lot of people stopped eating red meat and switched over to chicken and fish. A lot more have become vegetarians.

 

Read also my previous posts:

1.யானை பற்றிய நூறு பழமொழிகள் 2.Gajalakshmi in Kalidasa and Sangam Literature 3.Gajendra Moksha in Africa

Contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com