Serpent Queen:Indus Valley to Sabarimalai


Picture shows Indus Snake seal

The most famous snake queen figure came from the Minoan Civilization in the island of Crete. British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with the Indus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes in her two hands. The same motif is found throughout in India from Vedic times to modern day. We have a faience figure in Indus Valley with two snakes.


Minoan Goddess 1600 BC

Rig Veda, the oldest religious book in the world, refers to a Sarpa Ranji (serpent queen). Atharva Veda also mentioned two snakes called Aligi and Viligi. Modern research by scholars showed that these were actually the names of two Assyrian Kings who lived in 3000 BC. If it is correct the Atharva Veda predates Indus Valley civilization. The fact that the Vedic civilization is older than the Indus valley is confirmed by the BARC (Bhaba Atomic Research Centre) research on Saraswati River that had frequent references in the Vedas. Saraswati River dried even before Indus culture reached its peak. May be the Indus culture was the continuation of Vedic culture. Now we have two proofs, one from the Assyrian sources and the other from the Vedas to prove its antiquity.

Manasa Devi

The serpent worship is universal. There is no ancient culture without a serpent God. Whether it is Egyptian or Mayan, Indus or Vedic, Minoan or Babylonian we see serpents with Gods and Goddesses. But Hindus are the only race in the world who maintains this culture until today. We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum.

Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent Queen. She was one of the 27 women poets of Rig Veda and her poem is in the Tenth Mandala (10-189). We have two more references to this lady in Taitriya and Aitareya Brahmanas. Sarpa Vidya (science of snakes) is mentioned in Satapatha and Gopatha Brahmanas. (see Vedic Index of name and subjects by authors AB Keith and AA Macdonell,page 438 for more details).

Aligi is the name of a kind of snake in the Atharva Veda (V-13-7) and Viligi, another snake, is also mentioned in the same hymn. Earlier scholars like AA Macdonell and AB Keith mentioned them as snakes in their Vedic Index Volumes. Bala Gangadhara Tilak did lot of research and told us that these were from the Akkadian languages. He dated the Vedas to 6000 BC. Modern research by scholars Dr Bhagawatsharan Upadhyaya and Dr Naval Viyogi showed that they were not snakes, but kings of Assyria- Aligi (Alalu) and Viligi (balalu) of 3000 BC.

Sumeria 3000 BC (see the top left)

Taimata is twice mentioned in Atharva Veda (V-13-66; V-18-4) as a species of snake according to Whitney and Bloomsfield. Once again the old Vedic translations are wrong. Actually Taimata is nothing but Tiamat found in Babylonian literature as a Goddess. May be it is the corrupted form of Sanskrit DEVA MATA (Goddess). More and more research shows many Sanskrit words in Sumerian and Babylonian literature such as Berorus (Vara Ruci), Ottaretas (Urdhwaretas), Mesopotamian god Dumuzi/Tammuz/Sammata (fish God). They are pure Sanskrit words. One and the same god was called in different names by different cultures at different times and that too in corrupted forms. When we read Sumerian names we have to remove prefixes Nan, Nin,Sin. They are equal to Sri, Sow etc. Future research will prove that they have migrated from India in the remotest time.

Naga Yakshi worshipped in all the Ayyappan temples including Sabarimalai and other goddess temples found in the Middle Eastern countries around 3000BC. We see them in Indus valley and the Vedas as well. (Please see the attached pictures and compare them). A goddess or a god will be holding two snakes in their hans on either side or will be flanked by two snakes. This is nothing new for a Hindu. All the Hindu gods are associated with snakes in one or other form.

My conclusion can be summarized as follows:

1. Vedic translations of Aligi, Viligi and Taimata are wrong and they were all really people, may be people with snake totem (Nagas).
2. Since Atharva Veda mentions Kings who lived around 3000 BC, it must be dated around that period. Rig Veda is (linguistically) older than Atharva Veda.
3. We see snake gods or goddesses in all ancient cultures. In India, we see it from Vedic days. They are worshiped until today proving that Indian culture is the oldest living culture.
4. Last but not the least; such continuity is possible only when this worship originated in India. So we can safely conclude that Hindus went to different parts of the world taking their culture. Like we lost the whole of South East Asia after 1300 year Hindu rule, we lost the Middle East long before that.

Irish Goddess Hekate (Shakti)

(Please read my other articles on Indus Valley 1. Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu 2. The Sugarcane Mystery: Ikshwaku Dynasty and Indus Valley 3. Mysterious link between Karnataka and Indus Valley 4.Vishnu in Indus valley seal 5.Indra on Airavata in Indus valley)

***************

சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் அடுத்த வீட்டில் கடன் வாங்கி வந்தாள். அரிசியைக் கண்ணில் கண்ட பாரதி அதே நேரத்தில் முற்றத்தில் குருவிகளையும் கண்டார். உடனே செல்லாம்மவிடமிருந்து தானியத்தை வாங்கி குருவிகளுக்காக இரைத்தார். செல்லம்மாவின் முகம் வாடியது. குருவிகள் உண்டது கண்டு பாரதியின் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது!

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும்
மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய கவிஞனுக்கு,

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்று பாடிய கவிஞனுக்கு,
யார் பாடம் கற்பிப்பது?

பலர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார்கள். பாரதியோவெனில் இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டான். சிட்டுக் குருவி யிடமிருந்து ஆன்மீக பாடங்களையும் கற்றான். அவரது ஆன்மீக தாகத்தைக் காட்டும் பாடல் இதோ:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு— (விட்டு)

பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாதொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு—(விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதை சொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகு முன் பாடிக் களிப்புற்று (விட்டு)

தத்தாத்ரேயர் என்ற ரிஷி இயற்கையில் தான் கண்ட எல்லாவற்றிலும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றதை பாகவதம் எடுத்துக்கூறும். (Please read my article Let Nature Be Your Teacher: William Wordswoth and Dattatreya in my blogs). வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞனும் ஏட்டுப் படிப்பு எதற்கும் உதவாது. புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வாருங்கள் என்கிறான். இவை எல்லாவற்றையும் பாரதி செயலிலேயே செய்து காட்டிவிட்டான்.

குரு கோவிந்த சிம்மன் கதை

சீக்கியர்களில் கடைசி குருவான குரு கோவிந்த சிங் மாபெரும் வீரன். மொகலாயப் பேரரசன் அவுரங்க சீப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் அவைகளைத் துச்சமாக மதித்தவன். அந்த குரு கோவிந்த சிம்மன் ஒரு சிட்டுக் குருவியைக் கூட பருந்தாக்கிக் காட்டுவேனென்று வீர முழக்கம் செய்தார். கால்சா என்னும் சீக்கிய வீரர்களின் அமைப்பை நிறுவி வீரப் படைகளை நிறுவினார். அவர் கூறிய வாசகங்களை பாரதியார் குரு கோவிந்த சிம்மனைப் பற்றி பாடிய பாடலில் ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.

குரு கோவிந்தன் உண்மையிலேயே இப்படிச் செய்து காட்டினார். அவர் கால்சா வீரர்களுக்காக செய்த அமிர்தம் ஒரு சில துளிகள் கீழே சிந்திவிட்டன. அதைச் சுவைத்த குருவிகள் உடனே வீறு கொண்டெழுந்து வானில் சீறிப் பாய்ந்தன. கழுகுகளை ஓட ஓட விரட்டின. இதைக் கண்ட வீரர்கள் குருவின் மகத்தான சக்தியை உணர்ந்தனர்.

கோவிந்த சிம்மன் எப்போதும் ஒரு வெள்ளைப் பருந்தை வைத்திருந்தார். ஒரு முறை அவர் ஒரு முஸ்லீம் கனவானின் தோட்டத்துக்குப் போனார். அந்த ஆள் ஒரு கறுப்பு பருந்தை வைத்திருந்தார். கோவிந்த சிம்மனின் வெள்ளைப் பருந்தின் மீது ஆசை வந்தது. ஒரு தந்திரத்தின் மூலம் அதைக் கைப்பற்ற எண்ணினான். இரண்டு பருந்துகளுக்கும் போட்டிவைப்போம். தோல்வி அடைந்தவர் அவரது பருந்தை மற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டார்.
குரு கோவிந்தருக்கு எதிராளியின் உள்நோக்கம் புரிந்தது. உடனே பருந்து என்ன? குருவிகளை அனுப்புகிறேன் அதனோடு உங்கள் பருந்து போடியிடட்டும் என்றார். அந்த முஸ்லீம் கனவானோ உம்முடைய குருவிகள் என் பருந்துக்கு உணவாகிவிடும் என்று சொல்லி சிரித்தார்.
கோவிந்த சிம்மன் மரத்தில் இருந்த இரண்டு சிறிய குருவிகளைப் பிடித்து பருந்தை விரட்ட அனுப்பினார். இரண்டு குருவிகளும் பருந்தை படுகாயப் படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு விரட்டிச் சென்றன. படு காயம் அடைந்த பருந்து கீழே விழுந்து இறந்தது. அப்போது குரு கோவிந்தர் சொன்ன சொற்கள் சீக்கியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சொற்களாகும்.
சிட்டுக் குருவிகளைப் பருந்துகளாக்கி சண்டையிட வைப்பேன். அப்போதுதான் என்பெயர் கோவிந்த சிம்மன். ஒன்றே கால் லட்சம் பேர் வந்தாலும் அவை எதிர்த்துப் போராடும் என்றார்:
சிடியான் சே பாஜ் பனாவோ

சவா லாக் சே ஏக் லடாவோ
தப் குரு கோவிந்த நாம் சுனாவோ

இதையே சீக்கிய குரு கூறிய சொற்களிலேயே காணலாம்:

சிரியோன் சே மே பாக் லராவுன்
தபே கோவிந்த சிம் நாம் கஹாவுன்

தமிழ் திரைப் படங்களில் சிட்டுக் குருவி

தமிழ் திரைபடங்களும் சிட்டுக் குருவிகளைப் பற்றி பாடல்கள் பாடி அவைகளின் மூலம் கருத்துக்களைப் பரப்பியுள்ளன. சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கெது சொந்த வீடு, உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர் வலம் வந்து விளையாடு (படம்: சவாலே சமாளி) என்ற பாடலில் பாரதி பாடலின் தாக்கத்தைக் காண்கிறோம்.
ஏ குருவி குருவி (படம்: முதல் மரியாதை), சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ( படம்: நல்லவனுக்கு நல்லவன்), சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்ன விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல்லே ( படம்: டவுன் பஸ்), சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே (படம்: புதிய பறவை) ஆகிய பாடல்கள் தமிழர்களின் னினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பஞ்சதந்திரக் கதைகளிலும் கூட குரங்குக்கு புத்திமதி சொன்ன குருவிகளின் கூட்டுக்கு நேர்ந்த கதி மூலம் ஒரு நீதி புகட்டப்படுகிறது. சங்க இலக்கியத்திலும் குருவிகளைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

இப்படி 2000 ஆண்டுகளுக்கு நமக்கு ஊற்றுணர்ச்சி தரும் சிட்டுக் குருவி இனம் வெகு வேகமாக அழிந்துவருவது கவலை தருகிறது. சிட்டுக் குருவிகளை காப்பது நம் கடமை.
**************

மாதவியின் 11 வகை நடனங்கள்

பழந்தமிழ் நாட்டில் இந்துமதக் கதைகள்

Picture shows famous danseuse Jyotsna Jaganathan

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்

குடைகுடிமால் அல்லியமற்கும்பம்—சுடற்விழியாற்

பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்

கொட்டியிவை காண்பதினோர் கூத்து

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” —என்று பாரதியாரால் பாராட்டப்பட்ட சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் சிறந்தது. கண்ணகி-கோவலனின் கதையைக் கூறும் இந்தக் காவியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. தமிழ் மக்களின் கலைக் களஞ்சியம் இந் நூல். இதில் நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் முதலிய எல்லாக் கலைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. இந்த காவியத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

சிலப்பதிகாரக் காவியத்தில் கண்ணகிக்கு அடுத்தபடியாக வரும் பெண் கதாபாத்திரம் மாதவி. அவள் பேரழகி. சித்திராபதியின் மகள். பூம்புகாரில் அவளை அறியாதோர் இல்லை. காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடந்தது. அதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் சீரும் சிறப்புமாக நடந்தது. சோழ மன்னன், மனம் மகிழ்ந்து மாதவிக்கு 1008 பொற்காசுகளையும் தலைக்கோல் பட்டத்தையும் தந்து கவுரவித்தான். ஐந்து வயது முதல் நாட்டியம் கற்ற மாதவி அத்துறையில் கரை கண்டு 12ஆம் வயதில் அரங்கேறினாள்.

இசையிலும் நடனத்திலும் பெரும் ஈடுபாடு கொண்ட கோவலன், மாதவியின் கலைகளில் மயங்கினான். அவனது மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின்னர் கண்ணகியை அடைகிறான். பொய்க் குற்றச் சாட்டின்பேரில் மதுரையில் கொலைத் தண்டணை பெறுகிறான். பொங்கி எழுந்த கண்ணகி மதுரையை எரித்து சேரநாடு சென்று பத்தினித் தெய்வமாகிறாள்.

இந்த அற்புதமான காவியத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களை உரைகாரர்கள் நமக்கு அளிக்கின்றனர். அத்தனையும் அற்புதமான இந்துமத புராணக் கதைகள். 2000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வாழ்வில் இந்துமதம் எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்ற பேருண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. “நன்மை வந்தெய்துக !! தீதெலாம் நலிக” என்ற வெற்றிச் செய்தியை தமிழர்கள் பறை சாற்றியது தெரிகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய விஷ்ணு, சிவன், துர்க்கை, முருகன், கண்ணன் ஆகியோரின் அழகிய 11 நடனங்களை மாதவி ஆடினாள். அவைகளைக் காண்போம்:

picture shows Japanese woman performing Bharatanatyam

எண்ணும் எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்

பண் நின்ற கூத்து பதினொன்றும்— மண்ணின் மேல்

போக்கினாள்; பூம்புகார்ப் பொன் தொடி மாதவி, தன்

வாக்கினால் ஆடு அரங்கின் வந்து

1.அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.

2.கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆடம் கொடுகொட்டி.

3.குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்

4.குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆடம் குடம் என்னும் வகை ஆகும்

5.பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.

6.மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.

7. துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆடம் துடி

8.கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்

9.பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.

10.மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள் ,பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது

11. பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.

இவைகளில் முதல் ஆறும் நின்று ஆடும் ஆட்டங்கள். ஏனைய ஐந்தும் வீழ்ந்தாடுபவை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள், நாட்டிய மேடை எப்படி இருக்க வேண்டும், எப்படி அலங்கரிக்கப் படவேண்டும் என்ற அரிய தகவல்களையும் தருகிறார்.

காவியத்தில் வேறு மூன்று இடங்களில் வேடுவர் ஆடிய ஆட்டங்கள், ஆய்ச்சியர் என்னும் இடையர்கள் ஆடிய ஆட்டம், மலைவாழ் மக்களாகிய குன்றக் குறவையர் ஆடிய ஆட்டம் என்பனவற்றையும் விளக்குகிறார். சிலப்பதிகார காவியத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் படித்து ஜீரணிக்க பாமர மக்களால் முடியாது. அத்துறையில் வல்ல அறிஞர் பெருமக்கள் வாழ் நாள் முழுதும் ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம் அது என்றால் மிகையாகாது.

சில நாத்திகர்கள் பழந்தமிழர்கள் பற்றிப் பரப்பிவரும் தவறான கண்ணோட்டத்தை சங்க இலக்கியத்தில் வரும் நூற்றுக் கணக்கான இந்துமதக் கதைகளும் சிலப்பதிகாரமும் தவிடு பொடியாக்கிவிட்டன.

 

Picture shows another famous danseuse Charulatha Jayaraman

**************

Matavi’s 11 types of Classical Dance

Hindu Themes in Ancient Tamil Dance

Picture shows famous dancer Jyotsna Jaganathan

Silappathikaram is considered the best among the five Tamil epics. Kovalan and Kannaki were the hero and heroine and Madhavi was Kovalan’s mistress. She was a famous dancer. She was the daughter of Chitrapathy.  Madhavi learnt dance from the age of five and mastered the art of classical Bharatanatyam at the age of twelve. When she performed at the annual Indra festival in the ancient Chola port city Kaveri Pumpattinam, the king gave her the royal medal and 1008 gold coins. Kovalan, who was a great lover of fine arts fell for her.

The Tamil epic Silappathikaram is an encyclopaedia of Tamil culture. It gives graphic description of all Tamil arts such as Bharatanatyam and Tamil Music. The commentators added wealth of information in their commentaries. The epic describes the Tamil country of second century C.E.

It is very interesting to know that all these dances are about Hindu mythology.

Madhavi performed eleven different types of dances according to the epic. They are:

1.Alliam: This is a dance about Lord Krishna’s victory over the mad elephant.

2.Kodukotti : This is the dance Lord Shiva performed after burning the triple cities of Asuras/demons

3.Kudai: This is about Lord Skanda’s victory over the demons

4.Kudam: Kannan performed this after winning the release of his grandson Anirudh from the prison of Banasura.

5.Pandarangam:  Brahma was entertained by Siva with  this dance after Shiva’s win over the Triple Cities of demons.

6.Mal: This describes the wrestling contest between Bana and Lord Krishna

7.Thudi: This is Skanda’s dance after defeating the demon Suran

8.Kadayam: This is the dance performed by Indrani at the north gate of palace of Banasura.

9.Pedu: Manmathan’s dance dressed as a eunuch to secure the release of his son Anirudh.

10.Marakkal: When demons sent poisonous creatures like snakes and scorpions against Goddess Durga she danced with stints (Stick dance). This is known as Marakkal literally “wooden legs”.

11.Pavai:  Goddess Lakshmi’s dance against the warring demons.

First six of the eleven dances are done in standing position and the other five are performed in lying position. There is an interesting thread that runs through all these mythological episodes. This is about a fight between the good and bad and the ultimate victory of good over evil.

Ilango, author of Silappathikaram, did not stop with Matavi’s debut performance. In three other places in the epic he narrated the hunters dance during worship of Durga, cowherds dance praising Lord Krishna and tribal dance.

Ancient Tamils were so familiar with all the Hindu mythological stories. They liked to watch such stories. This is confirmed by a lot of references to Hindu Gods and Goddesses in Sangam Tamil literature. Tamils are not only ardent Hindu devotees, but also lovers of all fine arts. Chidambaram temple stands as a monumental proof for this with all the 108 dance gestures (abhinaya) sculpted in stones.

Like Bharata, the author of Sanskrit treatise on Bharata Natyam, Silappadhikaram also gives a description of dance stage and location for the stage.

The Tamil atheist’s propaganda is exploded by all the descriptions found in ancient Tamil literature. The dancing figure found at Mohanjadaro points to the antiquity of the classical Bharatanatyam. The metal statue of a woman shows her one arm on her hips and another arm with lot of bangles. Her legs are slightly bent. This tradition is continued by the Tamil dancers even today.

**********

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 3

Picture is taken from another website.Thanks.

This article is the third part on Rebirth written by S NAGARAJAN

புனர்ஜென்ம உண்மைகள்! – 3

(அறிவியல், ஆன்மீக நோக்கில மறுபிறப்பு இரகசியங்கள்!)

 

தேவியின் பாதஸ்மரணை தரும் பலன்!

பதினெட்டு புராணங்களும் அத்தோடு பதினெட்டு உப புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் மற்றும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை.

எடுத்துக்காட்டாக தேவி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் பதினெட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் பிரக்த்ரதன் கதையைச் சொல்லலாம்.

பொதியமலையில் ஒர் சக்கிரவாக பக்ஷ¢ இருந்தது. அது பறந்தவாறே சென்று முக்தியை நல்கும் காசியை அடைந்தது.அங்கு அன்னபூரணி ஸ்தானத்தை விட்டு நீங்காது தினமும் பிரதக்ஷ¢ணமாகப் பறந்து கொண்டே இருந்தது.இந்தப் புண்ணியத்தால் இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து தேவரூபத்தோடு இரண்டு கற்பகாலம் வரை பல போகங்களை அனுபவித்துப் பின்னர் பிரகத்ரதன் என்ற பெயருடன் ஒரு க்ஷத்திரிய குலத்தில் பிறந்தது.அரசனாக விளங்கிய பிரகத்ரதன் சத்யவாதி. யாகங்களைச் செய்பவன்.ஜிதேந்திரியன். மூன்று காலங்களையும் அறியும் சக்தி கொண்டவன்.முன் ஜென்மம் தெரிந்தவன்.அவன் புகழ் எங்கும் பரவியது.

அவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தைக் கொண்டிருப்பவன் என்பதைக் கேள்விப்பட்டு முனிவர்கள் உட்பட்ட பலரும் அவனிடம் வந்தனர். அவர்கள் அவனை நோக்க,¢ ‘இப்படி திரிகால ஞானமும் பூர்வ ஜென்ம உணர்ச்சியும் உனக்கு எந்தப் புண்ணியத்தால்  வந்தது’ என்று ஆவலுடன் கேட்டனர்.

அவனோ,”பூர்வ ஜென்மத்தில் நான் சக்கரவாக பக்ஷ¢யாக இருந்தேன்.புண்ணியவசத்தால் ஞானமில்லாமலேயே அன்னபூரணியை தினம் வலம் வந்தேன்.அதனால் சுவர்க்கமடைந்து இரண்டு கற்பகாலம் சகல போகமும் அனுபவித்துப் பின் பூமியில் இந்த சரீரம் அடையப் பெற்று திரிகாலஞானமும் பூர்வஜென்ம உணர்ச்சியும் பெற்றவனாக இருக்கிறேன். ஜகதம்பிகையின் பாதஸ்மரணையின் பலத்தை யார் அறிவார்கள்! இதை நினைத்த மாத்திரத்தில் என் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்குகிறது” என்று  கூறித் தேவியைத் தொழுவதால் ஏற்படும் பலன்களை விளக்கினான்!

அனுமனே ருத்ரன்

ஆனந்த ராமாயணம் தரும் ஒரு அற்புதச் செய்தி அனும, ராம பக்தர்களையும் சிவ பக்தர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்! ஏகாதச (பதினோரு) ருத்திரர்களே குரங்குகளாக ஜனனம் எடுத்த செய்தி தான் அது! அசுரர்களின் அழிவுக்காக விஷ்ணுவுக்கு சகாயம் செய்ய வீரபத்திரன் சுக்கிரனாகவும்,சம்பு நலனாகவும்,கிரீஸன் நீலனாகவும்,மஹாயஸன் சுஷேணனாகவும்,அஜைகபாதன் ஜாம்பவானாகவும்,அஹிர்புத்னன் அங்கதனாகவும், பினாகதாரி  ததிவக்ரனாகவும்,யுதாஜித்து தாரகனாகவும்,ஸ்தானு தாலகனாகவும்,பர்க்கன் மைந்தனாகவும்,ருத்திரன் அனுமானாகவும் பிறந்தார்கள். ஆக அனுமனை வணங்கினால் சிவனுக்கு பிரீதி; விஷ்ணுவுக்கும் பிரீதி, அனுமனுக்கும் கூட பிரீதி!

 

காசியப ரிஷியே தசரதன்!

அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம் இரண்டாவது சர்க்கத்தில் (23-26 சுலோகங்களில்) பிரம்மாவிடம் விஷ்ணு கூறுவதாக  தசரதனின் முன் ஜென்மத்தை எடுத்துரைக்கிறது!

விஷ்ணு பிரம்மாவிடம், “பூர்வம் காசியப ரிஷி நம்மைப் புத்திரனாகப் பெற வேண்டித் தவம் செய்ய, நாமும் அவ்வாறே அவருக்குப் புதல்வனாகும் வரத்தைத் தந்தோம்.இப்போது அவரோ பூலோகத்தில் தசரதனாகப் பிறந்திருக்கிறார்.அவருக்கு மகனாக கௌஸல்யா தேவி கர்ப்பத்தில் நாம் அவதரிப்போம்” என்று கூறுகிறார்!

பிரம்ம புராணம் சுபத்ரை மற்றும் கௌசிகனின் முற்பிறவியை எடுத்துக் கூறுகிறது என்று ஆரம்பித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் புராண முற்பிறவி சம்பவங்கள் ஒரு பெரிய தொகுப்பு நூல் ஆகி ஏராளமான மர்மங்களை அவிழ்க்கும் முற்பிறவிக் களஞ்சியம் ஆகி விடும்! கர்மங்களின் விசித்திரச் சங்கிலித் தொடர்பு பற்றித் தெரிந்து கொண்டு பிரமிப்பின் உச்சிக்குச் சென்று விடுவோம்! எத்தனை கோடி மனிதர்களுக்குத் தான் எத்தனை கர்மங்கள்! அவர்களுக்குத் தான் கர்மபலனுக்கேற்ப எத்தனை கோடானு கோடி ஜென்மங்கள்! கோடானு கோடி சூப்பர் மெகா கம்ப்யூட்டர்கள் கூட இந்தக் கணக்கைத் துல்லியமாகப் போட முடியுமா, என்ன!

 

நான்கு முகம் இல்லாத பிரம்மா!

பாரதம் வியாஸருக்குத் தரும் செல்லப் பெயர் கூட ஒரு முற்பிறவித் தொடரின் காரணமாகத் தான் என்றால் வியப்பு மேலிடுகிறது, இல்லையா!

பகவானான வியாஸர் நான்கு முகம் இல்லாத பிரம்மா, இரண்டு கரங்கள் உள்ள விஷ்ணு, நெற்றிக் கண் இல்லாத சிவன்! என்று கீழ்க்கண்ட சுலோகத்தில் போற்றப்படுகிறார்:

அசதுர்வதநோ பிரம்மா; த்விபாஹ¤ரப ரோஹரி I

அபால லோ சநச் சம்பு: பகவான் பாத நாராயண: II

நான்கு முகமில்லாத பிரம்மாவாக அவர் படைப்புத் தொழிலில் ஈடுபட்ட சம்பவத்தை மஹாபாரத அநுசாஸன பர்வத்தில் காணலாம்.

அவசரமாக ஓடும் ஒரு புழுவைப் பார்த்த வியாஸர், ‘ஏன் இப்படி அவசரமாக ஓடுகிறாய்’ என்று கேட்கிறார். ‘எதிர் வரும் பார வண்டி என் மீது ஏறி என்னை அழிக்காமல் இருக்க ஓடுகிறேன்’, என்றது புழு! ‘உயிர் போனால் போகட்டுமே உடலில் என்ன சுகம்’ என்று கேட்ட வியாஸரிடம் அது, தான் முற்பிறவியில் மனிதனாக இருந்ததாகவும் செய்த பாவத்தால் புழுவாக ஆனதாகவும் செய்த புண்ணியத்தால் வியாஸருடன் பேசும் பாக்கியம் கிடைத்ததாகவும் கூறுகிறது. ‘உனக்கு முற்பிறவி பற்றிய அறிவு எப்படி உண்டானது’ என்று வியாஸர் கேட்க, ‘கிழவியான என் தாயாரைக் காப்பாற்றினேன், ஒரு ஏழை அந்தணருக்கு பூஜை செய்தேன்,ஒரு விருந்தாளியின் பசியை அகற்றிச் சந்தோஷப் படுத்தினேன் ஆதலால் எனக்கு இந்த அபூர்வ அறிவு உண்டாயிற்று’ என்று பதில் சொன்னது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாஸர் அதற்கு முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான்,பறவை, ஏழைப் பணியாளன், வணிகன். க்ஷத்திரியன், அரசன் என பல பிறவிகளை படிப்படியாகத் தந்தார். ஒவ்வொரு பிறவியிலும் அது வியாஸரை வணங்கியதால் இப்படி ஏற்றம் பெற்றது. இறுதியில் ஒரு வேதியராகப் பிறந்து புண்ய கருமங்களைச் செய்து அந்தப் புழு முக்தி பெற்றது!

இப்படிபிரம்மாவுக்குப் போட்டியாக ஒரு படைப்புத் தொழிலைச் செய்து ஒரு புழுவை முக்தி அடையச் செய்ததால் அவர் நான்கு முகம் இல்லாத பிரம்மா என்று போற்றப்படுகிறார். ஆனால், அறத்தின் மூலம் உயர் பிறவி பெற்று முக்தி அடையலாம் என்பதே  கதை சொல்லும் உண்மை ஆகும்.

 

காந்திஜி டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதம்

இனி நவீன யுகத்தில் நம் சம காலத்தில் வாழ்ந்த காந்திஜி புனர்ஜென்மம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைகளைப் பார்ப்போம். மகாத்மா காந்திஜி லியோ டால்ஸ்டாயின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அதனால் அவருடன் கடிதத் தொடர்பு அவருக்கு இருந்தது. ‘ஒரு ஹிந்துவுக்குக் கடிதம்’ என்ற டால்ஸ்டாயின் கட்டுரையை அவர் பிரசுரிக்க விரும்பினார்.ஆனால் அந்தக் கட்டுரையில் ஒரு பாராவில் புனர்ஜென்மத்தை மறுத்து டால்ஸ்டாய் கருத்துத் தெரிவித்திருந்தார். 1909 அக்டோபர் முதல் தேதியிட்ட கடிதத்தில் டால்ஸ்டாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் புனர்ஜென்மத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவிக்கும் அந்த பாராவை நீக்கி வெளியிட அனுமதி கேட்டார். புனர்ஜென்மம் என்பது லட்சக்கணக்கான இந்திய சீன மக்களால் நம்பப்படும் கொள்கை என்றும் அது “அனுபவத்தின் அடிப்படையிலானது” (With many, one might almost say, it is a matter of experience) என்றும் விளக்கிய காந்திஜி தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சிறையில் நொந்து வாடுவோருக்கு புனர்ஜென்மக் கொள்கை ஆறுதல் அளிக்கும் ஒன்று என்று எழுதினார். காந்திஜியின் வேண்டுகோளை ஏற்ற டால்ஸ்டாய் அதை நீக்கி வெளியிடத் தன் அனுமதியைத் தந்தார். உடனே காந்திஜி அவருக்கு நன்றி தெரிவித்து 11-10-1909 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். புனர்ஜென்மக் கொள்கை சத்யாக்ரகப் போராட்டத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் கர்மா கொள்கை மூலமே தேசத்தை எழுப்பி விட முடியும் என்பதையும் நன்கு அறிந்திருந்த மகாத்மா கர்மாவிற்கு ஏற்ற பலன் என்ற  அறவழிக் கொள்கையின் அடிப்படையில் தேசத்தை புனர் நிர்மாணம் செய்தார்.

இனி காந்திஜியே 1935ம் ஆண்டு ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்த சாந்திதேவியின் (பிறப்பு 11-12-1926 மறைவு 27-12-1987) புனர்ஜென்ம சம்பவத்தைப் பார்ப்போம். புனர்ஜென்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸனும் சாந்திதேவியை அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் 1986ல் தன் ஆய்வுக்காகச் சந்தித்ததும் குறிப்பிடத் தகுந்தது.

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் பேரரசனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு அவனுடைய ஆதிக்கம் இரு கடல் எல்லையைத் தொடும் அளவு பரவியிருந்ததாகவும் கவுதமி புத்ர சதகர்ணியின் ஆட்சி முக்கடல் இடைப்பட்ட பகுதி முழுதும் நிலவியதாகவும் கல்வெட்டுகள் கூறும்.

பராந்தக வீரநாராயண ப ண்டியனின் தளவாய்புரம் செப்பேடு:

“ஹரிச்சந்திரன் நகரழித்தவன் பரிச்சந்தம் பல கவர்ந்தும்

நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன்னியதி நல்கி

நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடாயிரம் வழங்கியும்”

என்று கூறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டு செப்பேடு.இன்னும் பல நூல்களிலும் இவ்வாறு ஒரே நாளில் 4 கடல் நீறைக் கொண்டுவந்து குளித்ததாகவும் முக்கடல் நீரில் நீராடியதாகவும் படிக்கிறோம். ஏன் இப்படிச் செய்தார்கள் ,இப்படிச் செய்ய முடியுமா? என்ற சுவையான விஷயத்தை ஆராய்வோம்.

இது உண்மைதான். ஆனால் தினமும் அவர்கள் இப்படிக் குளித்தார்களா என்பதைச் சொல்லமுடியாது. இப்போதும் கூட பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கும், பெரிய சந்யாசிகள், குருமார்கள் பிறந்ததின வைபவங்களுக்கும் பல புண்ய தீர்த்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.நாம் கூட வீடுகளில் கங்கை நீரை அவ்வப்போது பயன்படுத்துகிறோம்.

மன்னர்கள் இப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தங்களுடைய ஆட்சி எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்திப் பெருமைப் பட இது உதவியது 2. கடல் நீராடல் புனிதம் என்பது புராண இதிஹாசங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மிகத் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நம்பிக்கை.

பல்யானை செல்கெழு குட்டுவன் யானைகளை வரிசையாக நிறுத்தி அவைகளின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நீராடினான் என்று பதிற்றுப் பத்து (3ஆம் பத்து) பதிகம் கூறுகிறது.. போர்ப் படைகள் பல பெரிய நதிகளைக் கடக்க அந்தக் காலத்தில் யானைகள வரிசையாக நிறுத்தி அதன் மீது சென்றனர். இதை காளிதாசனும் (ரகு. 4-38, 16-33) கூறுவான். அலெக்சாண்டரும் இப்படிச் செய்தான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூர் கோவில் தீபாராதனை நடந்த பின்னர்தான் சாப்பிடுவானாம். தீபாராதனை முடிந்ததை அறிய அவன் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை நிறைய மணிக் கூண்டு கோபுரங்களை நிறுவினான். கோவில் மணி அடித்தவுடன் ஒவ்வொரு மணிக் கூண்டாக ஒலிக்கும். ஒரு மணிக்குண்டு ஒலியைக் கேட்டவுடன் அடுத்த மணியை தொலை தூரத்திலுள்ளவன் கேட்டு மணி அடிப்பான். இறுதியில் பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஓசை வந்தவுடன் கட்டபொம்மன் சாப்பிடுவான். இந்த மணிக்கூண்டுகளின் மிச்ச சொச்ச இடிபாடுகள் இப்பொதும் இருக்கின்றன.

மாயா இன மக்கள்

தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் 3000 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மாயா இன மக்களும் செய்திகளை அனுப்ப வேகமாக ஓடுபவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். மாயா இன மக்களுக்கு சக்கரம் பயன்படுத்தத் தெரியாததால் ஓட்டப் பந்தய வீரர்களை வைத்தே பல காரியங்களைச் சாதித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மராத்தன் ஓட்டப்போட்டியும் ஒரு வீரன் 26 மைல் ஓடிவந்து செய்தியைக் கொடுத்துவிட்டு இறந்துபோனதன் நினைவாகவே நடைபெறுகிறது. அவன் கிரேக்க வீரன்.

ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தால் இதன் பெருமையையும் அருமையையும் நாம் அறியலாம்:

மாரத்தன் ஓட்டம் (26 மைல்)- சுமார் 2 மணி நேரம் ஆகும்

ஒரு மணிக்கு 13 மைல் ஓடலாம்

10 மணி நேரத்தில் 130 மைல் ஓடலாம் (ஒரே ஆள் இப்படி ஓட முடியாது. மிகவும் தேர்ச்சி பெற்ற 10 ஓட்டக்காரர்களை அமர்த்தி ரிலே ரேஸ் ஓடச் செய்வார்கள் பழைய கால மன்னர்கள் ).

தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட கரூர், உறையூர், மதுரை ஆகியன இரண்டு கடல்களிலிருந்தும் 150 மைல்களுக்குள்ளாகவே இருந்தன. ஒருவர் காலை ஆறு மணிக்கு கடல் நீரை கலசத்தில் எடுத்துக் கொண்டு ஓடினால காலை 11 மணிக்கு 65 மைல் வந்து விடலாம். இதுவே குதிரையில் வந்தால் மூன்று மணி நேரத்தில் 75 மைல் வந்து விடலாம். ஆக காலை 6 மணிக்கு குதிரை வீரர்கள் கடல் நீர் கலசங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் காலை பத்து மணிக்குள் 100 மைல் வந்துவிடலாம். இதிலும் ஒரே குதிரையில் செல்லாமல் ரிலே ரேஸ் போல குதிரைகளை மாற்றினால் இன்னும் வேகமாக வரலாம். மதுரை பாண்டிய மன்னன் தளவாய்புரம் செப்பேட்டில் கூறியபடி நீராடலாம். நாலாவது கடல் என்று கூறுவது எது என்று தெரியவில்லை. ஒருவேளை வட திசையிலிருந்து வரும் நீராக இருக்கலாம்.

தமிழ்நாட்டுக் கோவிலகளுக்கு இன்றும் கூட சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கங்கை ஜலம் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. கன்யாகுமரி ஜில்லாவில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் இந்துக்கள் 12 சிவாலயங்களில் தரிசினம் செய்ய சுமார் 50 மைல்கள் சிவாலய ஓட்டம் ஓடுவதை இப்போதும் காணலாம்.ஆக புனித நீர், ஓட்டம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

காஞ்சி முதல் குமரி வரை புறா ரேஸ் வைத்தபோது அந்த தூரத்தை புறா 13 மணி நேரத்தில் கடந்துவிட்டது. ஆக தண்ணிரை இந்தக் காலம் போல பாலிதீன் பைகளில் அடைத்தால் புறாக்கள் கூட இன்னும் வேகமாகக் கொண்டுவந்து விடும்!!

***********

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2

The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

எழுதியவர் எஸ். நாகராஜன்

25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!

ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய இதிஹாஸமாகும்.

கீதையே என் ஹ்ருதயம்

இதன் உயிர்நாடியான பகவத்கீதை (அர்ஜுனா!கீதை என் ஹ்ருதயம்!கீதையே நான் விரும்பும் சாரம் – மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது) தெளிவாக மறுபிறப்பு உண்மையை விளக்குகிறது.

“அர்ஜுனா!எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன.உனக்கும் அப்படியே!அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்” (பஹீனி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தபII -கீதை அத்4 சுலோகம் 5)

புண்ணியம் செய்தவர்கள் “விசாலமான அந்த ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள்.ஆகவே வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்து , கோரிக்கைகளை வேண்டுபவர்கள் ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்” என்றும் கிருஷ்ணர் கீதையில்(9ம் அத்தியாயம் 21ம் சுலோகம்) உறுதிப் படுத்துகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் மஹாபாரதத்தில் வரும் ஜீவனுள்ள அனைத்து பாத்திரங்களின் பூர்வ ஜென்மங்களைப் பற்றிய சரித்திரங்களைப் படிக்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன் த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான். ராமராக அவதரித்த விஷ்ணு மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கிறார்.

மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது; ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடப்படுவதை ஆதிபர்வம் விளக்குகிறது!

நளாயனியே திரௌபதி

நளாயனியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார்.(ஆதிபர்வம்-213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவமும் கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்டவருமான மௌத்கல்யர் என்ற  மஹாமுனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயனி காம போகங்களில் திளைத்து வாழும் போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.அப்போது நளாயனியை அவர் விடவே நளாயனி பூமியில் விழுந்தாள்.தான் இது வரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயனி தெரிவிக்கவே மௌத்கல்யர் துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார், பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என் ஆசீர்வதித்து வரம் கொடுக்கிறார். ஏன் ஐந்து கணவர்கள் என்று திகைப்புடன் நளாயனி வினவ,” நீ ஐந்து முறை ‘பதியைக் கொடும்’ என்று கேட்டாய்!ஆகவே உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள்” என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயனியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.

ஹிரண்யகசிபுவே சிசுபாலன்

ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை.

ஹிரண்யகசிபுவே சிசுபாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன்  சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்டகேதுவாகவும் பிறக்கின்றனர்.அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான்.

பீஷ்மரே அஷ்டவஸ¤க்களில் கடைசி வஸ¤

அஷ்டவஸ¤க்கள்  வஸிஷ்டருடைய சாபத்தாலும் இந்திரனுடைய கட்டளையினாலும் சந்தனு ராஜாவுக்கு கங்கா தேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர்.அவர்களில் கடைசி வஸ¤வே பீஷ்மர்!ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியர்.துவாபர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது!ஸப்த மருத்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான்.விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே

பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே!ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான்.அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது.பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன்.கலியின் அம்சம் கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர்ஜென்ம விவரங்களை ஆதிபர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கிவிடலாம்!

இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஒன்றான மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது.

காந்திஜி போற்றிய புனர்ஜென்மக் கொள்கை

இதனாலெல்லாம் கவரப்பட்டுத் தான் மஹாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் மஹாபாரதத்தைப் போற்றியதோடு சுதந்திரம் பெற இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இது தவிர பதினெட்டு புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் நம்மை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தும்.அவற்றையும் மஹாத்மா காந்தி டால்ஸ்டாய்க்கு இது பற்றி கடிதம் எழுத நேரிட்ட சம்பவத்தையும் இனி பார்ப்போம்!

************************

Hindu Runners !

Ancient Hindu kings gave much importance to holy rivers and seas. They believed that immersing themselves in holy rivers or ponds or seas would wash away their sins. They visited them on auspicious days and bathed there with their family members. We have lots of references to such holy dips in Tamil and Sanskrit literature. Tamil kings visited the Himalayas and on their way they bathed in the holy Ganges. Seran Senguttuvan did this twice two thousand years ago. He brought a stone from the Himalayas and baythedit in the Ganga water and sculpted a statue for a chaste woman called Kannaki.

On special occasions like Coronation of a king or consecration ceremony of a temple or  a Pattabishekam of a head of a Mutt they brought holy river waters from different parts of the country. Some people have even boasted of getting waters from 108 holy rivers and four seas for such ceremonies. The great Gupata king Samudra Gupta boasts that his rule extended to both the seas. It was true he had access to the Bay of Bengal and the Arabian Sea. But Tamils kings are more specific about bathing. They said in the copper plates that they bathed in the waters of four seas on a single day. How is it possible?

Mayan Runners

Mayans in the Central America did not know the wheels. They had no carts. (They used wheels only in Children’s toys). So they used fast runners for different purposes for sending messages or medicines etc. They have even shown such runners in their paintings. They ran very fast like the Marathon runners.

A Cheran king  Palyanai Selkezu Kuttuvan, who ruled Kerala 2000 years ago,  made elephants to stand in a row to bring waters from the three seas, says Sangam Tamil book Pathtru Pathu.  Another king Veerapandiya Kattabomman who lived just 250 years ago built Bell Towers to ring the bell as soon as the main Arti was done in his favourite Skanda Temple at Tiruchendur. When the temple bell rang for the morning Deepa Aradhana (Arti), the bells in the towers rang in succession. They were located at a distance of a furlong or so. Even today we can see the remnants of those towers. He was so devoted to God.

How did they do it?

Dalawaipuram Copper plates  of Paranthaka Veera Narayanan of ninth century CE say that the Pandya king bathed in the waters of Four Seas on the same day. Many other Tamil kings also said the same thing. Gauthami Putra Sathkarni’s rule extended to the three seas.

A Marathon runner can run 13 miles per hour. So if the Pandya king hired relay runners each one can run 13 miles easily and pass the message or the product to another person. If he used horse riders each rider could have covered approximately 25 miles per hour. The holy waters from different seas would have reached his capital city Madurai  in four to six hours. The three great kings of Tamil Nadu Chera, Choza, Pandya had their respective capitals in Vanji (Karur), Uraiyur and Madurai. All these cities are within 150 miles from the three seas (Bay of Bengal , Arabian sea and Indian ocean). More over in Kanyakumari, India’s southern most town, all the three seas meet and people thronged this place for holy dips from time immemorial.

In Kanyakumari  district there are 12 important Shiva temples. On Shivratri day every year, thousands of devoted Hindus run 50 miles and cover all the temples at one go. They were given all facilities all along the route. They chant Govinda while running. This strengthens the unity between the followers of Shiva and Vishnu. There is a story behind this ritual linking Mahabharata and Purusha Mrugam.

Even today, Hindus bring Ganges waters in pots and use it on special religious occasions. Several temples in Tamil Nadu receive Ganges water in trucks on regular basis. Hindus believe that they have to visit Varanasi at least once in a life time and bring the holy Ganges water to Rameswaram in Tamil Nadu and bathe the Shivaling with it. Such beliefs give not only mental satisfaction, but also generate a good income to tourist industry.

 

***************

 

மறுபிறப்பு உண்மையா ?- Part 1

புனர்ஜென்ம உண்மைகள்! – 1

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

ஹிந்துமதத்தின் அடிநாதமான உண்மை: மறுபிறப்பு!

Written by S. Nagarajan

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்தவம்,இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் ஹிந்துமதத்திற்கும் உள்ள  அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம்.

மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது, அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது ஹிந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவி தான் ஒருவருக்கு உண்டு; அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன.

தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவி தான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர்  நீண்ட ஆயுளுடன் இருக்க,  பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும், ஒருவர் ஏன் செல்வந்தராகவும் இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

ஆனால் பிளேட்டோ,பித்தகோரஸ்,லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் •ப்ராங்க்ளின்,எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ,ஹென்றி•போர்டு, சி.ஜே.ஜங் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னிபெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து

‘ரீ இன்கார்னேஷன்’ என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்க¨லைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மை தான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்!

மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.

இதிஹாஸ, புராணங்கள் கூற்று!

ஹிந்து மத இதிஹாஸங்களான ராமாயணம், மஹாபாரதம் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை; பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களோ நுணுகிப் படித்து உண்மை உணரவேண்டியவை!

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்!

சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, “முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ!ஆகவே தான் கொடுமை கொண்டு  மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது” (கீத்ருஸம் து மயா பாபம் புரா ஜன்மாந்தரே க்ருதம்I யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸ¤தாருணம்II 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!

சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும் போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன் சீதையைக் கொடுமைப் படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள்:”அவர்கள் வெறும் ஊழியர்கள் தான்!அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்!நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவு தான்!” என்று திட்டவட்டமாகக் கூறுகிறாள்! (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம்,39ம் சுலோகம்)

சீதையின் முன் ஜென்மம் தான் என்ன? இதற்கு உத்தரகாண்டத்தில் 17ம் அத்தியாயத்தில் 44 சுலோகங்களில் விடையைக் காண்கிறோம்;வியக்கிறோம்!

சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இது தான்:-

ஒரு முறை ராவணன் பூமியைச் சுற்றி வரும் போது ஹிமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான் காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ,  பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், தன் பெயர் வேதவதி என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும்,தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும்,இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும்,இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும் அதன்பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, “நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல  முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும்.ஆகவே அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன்” என்று கூறி அக்னியில் புகுந்தாள்.

பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள்.அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான்.அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, “இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள்” என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான்.கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள்.அங்கு ஜனக மஹாராஜன் உழும் போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள்.

உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள்.

கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின்

முற்பிறப்பு ரகசியம் பற்றிய அழகிய பெரிய கதையின் சுருக்கம் இது தான்!

உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!

சாதாரணமாக ராமபட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தரகாண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும் ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை)

உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்! சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை; படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இனி அடுத்து மஹாபாரதத்தைப் பார்க்கலாம்!

(இந்தக் கட்டுரையை எழுதியவர் என் சகோதரர் எஸ். நாகராஜன்)

யானை பற்றிய நூறு பழமொழிகள்

Guruvayur’s famous Valiya Kesavan elephant

 

20 000 Tamil Proverbs என்று ஆங்கிலத்திலும் 20000 தமிழ் பழமொழிகள என்ற எனது இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்: தமிழ் ஒரு கடல், சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்

மேற்கூறிய கட்டுரையில் கூறியது போலவே தமிழ் மொழி மிகவும் வளமான ஒரு மொழி. உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் பழமையான சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் 20,000 க்கும் மேலாக இருந்தபோதிலும் அவை தனிப்பாடல்கள், நீதி நெறி புகட்டும் குறள் பாக்கள் என்ற வகையில் சேர்ந்துவிடும்.

இதோ யானை பற்றிய நூறு பழமொழிகள். பாமர மனிதன் ஆனை என்றே சொல்லுவான். யானை என்பது எழுத்து வழக்கு-இலக்கிய வழக்கு

 

Punnathurkotta elephant camp with 64 elephants

1. யானை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே

2. யானைக்கும் கூட அடி சறுக்கும்

3. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல

4. யானையைப் பார்த்து நாய் குரைத்த மாதிரி

5 .யானை உண்ட விளங்கனி

6. யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்

7. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

8. வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல

9. யானை முதல் எறும்பு வரை

10. ரத கஜ துரக பதாதி உடன் வந்தான் மன்னன்

11. யானைப் பல் காண்பான் பகல் (பழமொழி)

12. யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்ளும்

13. ஆனைக்கும் பானைக்கும் சரி

14. ஆனக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்

15.யானைக்கு அல்வா வாங்கிப் போட்ட கதைதான்

16. யானைப் பசிக்கு சோளப் பொறி

17. யானை கண்ட பிறவிக்குருடர்கள் அடித்துக்கொண்டதுபோல

18. ஆனை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்

19. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்

20. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?

Elephant playing drums

21. ஆனையிருந்து அரசாண்டவிடத்திலே பூனையிருந்து புலம்பியழுகிறது

22. ஆனை இலைக் கறி, பூனை பொறிக்கறி

23. ஆனை உயரம் பூனை ஆகுமா?

24. ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவது போல

25. ஆனை ஏறியும் சந்து வழி நுழைவானேன்?

26. ஆனை ஒரு குட்டி போட்டும் பலன், பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை

27. ஆனை கட்டத் தாள், வான முட்டப்போர்

28. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன் ஓட்டை கறுத்தால் உதவி என்ன?

29. ஆனை காணாமற் போனால் அரிக்கன் சட்டி குண்டு சட்டிகளில் தேடுவதா?

30. ஆனை குட்டி போடும் என்று நம்பி லத்தி போட்டது போல

31. ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?

32. ஆனை குத்தும் தோட்டிக்குப் பிணக்கா?

33. ஆனை கேடு அரசு கேடு உண்டோ?

34. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக் குட்டி கேட்கிறதா?

35. ஆனை கொடிற்றில் அடங்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?

36. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா?

37. ஆனைக் கவடும் பூனைத் திருடும்

38. ஆனைக்கிட்டுக் கெட்டவன் குடத்தில் கையிட்டாற்போல

39. ஆனைக்கில்லை கானலும் மழையும்

40. ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்

Surin City, Thailand

41. ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல

42. ஆனைக்கு சிட்டுக் குருவி மத்தியஸ்தம் போனாற்போல

43. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக் குட்டிக்குப் பஞ்சமா?

44. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்

45. ஆனைக்குத் தேரை இட்டது போல

46. ஆனைக்குத் தேரை ஊனா?

47. ஆனைக்குமுண்டு அவ கேடு

48. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பை கண்டால் பயம்

49. ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லையா?

50. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்தாற்போல

51. ஆனைச் சவாரி செய்தவன் பூனைச் சவாரிக்கு அஞ்சுவானா?

52. ஆனை தழுவிய கையால் பூனையைத் தழுவுறதா?

53. ஆனை தன்னைக் கட்ட சங்கிலியைத் தன் கையாலேயே கொடுத்தது போல

54. ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது

55. ஆனை நிழல் பார்க்க தவளை அழித்தாற்போல

56. ஆனை படுத்தால் ஆட்டுக் குட்டிக்குத் தாழுமா?

57. ஆனை படுத்தால் ஆள் மட்டம்

58. ஆனை படுத்தால் குதிரை மட்டமாவது இராதா?

59. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா?

60. ஆனை புலி வந்தாலும் தாண்டுவாள்

Famous elephant Echo

61. ஆனை போகிற வழியில் எறும்பு தாரை விட்டாற் போல

62. ஆனை போகிற வழியில் போன வீதியில் ஆட்டுக் குட்டி போகிறது வருத்தமா?

63. ஆனை மதத்தால் (கொழுத்தால்) வாழைத் தண்டு, ஆண்பிள்ளை மதத்தால் கீரைத் தண்டு

64. ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா?

65. ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?

66. ஆனை மேல ஏறுவேன் வீர மணி கட்டுவேன்

67. ஆனை மேல இடும் பாரத்தைப் பூனை மேல இடலாமா?

68. ஆனை மேல இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல்

69. ஆனை மேல போகிறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டா அகப்படுமா?

70. ஆனை மேல போகிறவனையும் பானையோட தின்றான் என்கிறது

71. ஆனையும் அருகம் புல்லினால் தடைப் படும்

72. ஆனையும் ஆனையும் முட்டும் போது இடையில் அகப்பட்ட கொசுகு போல

73. ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன

74. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?

75. ஆனையைக் கட்டி சுளகாலே மறைப்பாள்

76. ஆனையைக் குத்தி சுளகாலே மூடுவாள்

77. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?

78. ஆனையைத் தண்ணீரில் இழுக்கும் முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?

79. ஆனையைத் தேட பூதக் கண்ணாடி வேண்டுமா?

Kenya’s famous elephant

80. ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் (பானையில்) அடைப்பதும், அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்

81. ஆனையை வித்துவானுகும் பூனையைக் குறவனுக்கும் கொடு

82. ஆனையை விற்றா பூனைக்கு பரிகாரம் (வைத்தியம்) செய்யறது?

83. ஆனையை விற்று துறட்டிக்கு மன்றாடுகிறான்

84. ஆனை லத்தி ஆனை ஆகுமா?

85. ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டின் வயிறு நிறையாது

86. ஆனை வாயில போன கரும்பு போல

87. ஆனை வால் பிடித்து கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்து கரை ஏற முடியுமா?

88. ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி

89. ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம்

90. ஆனை விழுந்தால் கொம்பு ,புலி விழுந்தால் தோல்

91. ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தில்

92 .யானை தொட்டாலும் மரணம் வரும்

93. யானை முன்னே முயல் முக்கினது போல

94. யானை வந்தால் ஏறுவேன், சப்பாணி வந்தால் நகருவேன்

95. யானை வாய்க் கரும்பும், பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்பி வாரா

96. யானை விற்றால் யானை லாபம், பானை விற்றால் பானை லாபம்

97. யானைக்கு சிம்ம சொப்பனம் போல

98. பன்றிக் குட்டி யானை ஆகுமா?

99 .மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை

100. யானையால் யானை யாத்தற்று

101. சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சேர நாடு வேழமுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து

102.வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்

103. வேழத்தை ஒத்த வினைவந்தால் தீர்வது எப்படி?

104.வேழம் முழங்கினாற் போல

 

இவை ஒவ்வொன்று பற்றியும் ஒரு கதையும் ஆய்வுக் கட்டுரையும் எழுதலாம். அவ்வளவு பொருள் பொதிந்த பழ மொழிகள்.

 

Sri Lanka Elephants