Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தினசரி பேப்பரில் தவறாமல் வரும் செய்தி________என்பவர் குண்டர்
தடைசட்டதின் கீழ் கைது செய்யப்பட்டார், என்ற செய்தி நிறைய வருவதைப் பார்க்கலாம்.
குண்டர்= hooligan, gangster, goon (in American English)
குண்டர் சட்டம் என்றால் என்ன???
குண்டர்கள் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர் “தமிழ்நாடு கள்ளச் சாரயம் காய்ச்சுவோர், போதைப்
பொருள் குற்றவாளிகள்,குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நிலங்களை அபகரிப்போர்,மணல்
திருட்டு, வீடியோ குற்றவாளிகளின் அபகாரசெயல் தடுப்பு சட்டம்”
“குண்டர்கள்” என்ற்வரையரையை விளக்கும்போது இந்திய குற்ற
இயல்்சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும்
குற்றம் எதையாவது செய்யக் கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் எனக் கருதினாலே இக்குற்றத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.அதாவது ஒருவர் குற்றத்தை புரிவதற்கு முன்பே அதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தை
சேர்ந்தது இந்த குண்டர்கள் சட்டம்!!!
இதில் முக்கிய விஷயங்கள் என்னவென்றால்
கைது செய்யப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் வாதிடக் கூடாது. கைது செய்யப்பட்ட நபரோ, அவரது நண்பரோ, உறவினரோதான் வாதிட முடியும்.
நீதி மன்றத்தில் இது விசாரிக்கப்பட மாட்டாது.
கைது செய்யப்பட்டவர் முறையீட்டுக் குழுவைத்தான் அணுக வேண்டும்.இந்தக் குழு , ஓர் உயர் நீதி மன்ற நீதிபதி,ஒரு அமர்வு நீதிபதி,ஒர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோரைக்கொண்ட ஒரு விசாரணைகுழு ஆகும்
இக்குழுவினால் குற்றம் உறுதி செய்யப் பட்டால் அந்த நபரை 12 மாதம் சிறையில் வைக்கலாம்
மாநில அரசு விரும்பினால், முன் கூட்டியே விடுவிக்கலாம்.
தமிழ் முருகனைத் தமிழால் துதிக்க விரும்பும் அருணகிரிநாதர் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ் ஆய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து என்று கூறுகிறார்.
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற்பதிநகர் உறைவோனே என முருகன் வாழும் இடம் தமிழ் வாழும் இடம் என்பதைத் தெரியப்படுத்துகிறார் அவர்.
முத்தமிழை ஆயும் வரிசைக்கார என்று தமிழ் வேளை அழைக்கும் அருணகிரிநாதர் தனக்கும் தமிழால் பாட அருள் வேண்டுகிறார்.
அதனால் தான் எங்கும் காண முடியாத சந்த வரிசைகளை அவர் பாடலில் காண முடிகிறது.
அடுக்குச் சொல்லில் வல்லவரான அவர் இரு இரு சொற்களில் பெரிய உண்மைகளை விளக்கி விடுவார்.
படைக்கப் பங்கயன்
துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் என்பார்
நீதிக்குப் பிங்கலன்
பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென்று என்பார்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் அவர் சொல்லும் புராணக் கதைகளும் தெய்வீகத் திருவிளையாடல்களும் மகான்களின் அற்புத சரிதங்களும் ஏராளம்; அவற்றைக் கண்டு பிரமிப்போம்; வியப்போம்!
விநாயகர் பாரதம் எழுதியதையும், இராமாயணத்தில் இராமனது வீரச் செயலையும் மஹாபாரதத்தில் அர்ஜுனனின் பராக்ரமத்தையும் இன்னும் இது போன்ற ஏராளமான சரிதங்களையும் அவர் சுவைபட ஓரிரு வரிகளில் தந்து நம் சிந்தையைத் தூண்டி விடுவார்.அப்படி அவர் கூறிய ஒரு திருவிளையாடலை மட்டும் இங்கு எடுத்துக்காட்டிற்காகச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
முருகனின் சிறப்பான ஒரு தமிழ் விளையாட்டை அவர் ‘பத்தி தரள’ என்று தொடங்கும் திருப்புகழின் கடைசி வரியில் கூறுகிறார்.
பாடல் இதோ:
பத்தி தரள கொத்து ஒளிர் வரி
பட்ட புளக செப்பு இள முலை
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள
பத்மத்தியர் அற்பு கடுகடு
கண் சத்தியர் மெத்த திரவிய
பட்சத்தியர் இக்கு சிலை உரு விலி சேரும்
சித்த தருணர்க்கு கனி அத
ரம் புத்தமுதை தரும் அவர்
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம்
தெட்டில் படு கட்ட கனவிய
பட்சத்து அருளற்று உற்று உனது அடி
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ
மத்த பிரமத்த கய முக
னை குத்தி மிதித்து கழுகுகள்
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட
மற்றை பதினெட்டு கண வகை
சத்திக்க நடிக்க பலபல
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே
முத்தி பரமத்தை கருதிய
சித்தத்தினில் முற்ற தவ முனி
முற்பட்டு உழை பெற்று தருகுற மகள் மேல் மால்
முற்ற திரி வெற்றி குருபர
முற்பட்ட முரட்டு புலவனை
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே
இந்தத் திருப்புகழில் ‘முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே’ என்ற வரிகளில் ஒரு பெரும் வரலாறு அடங்கியுள்ளது.
பொய்யாமொழிப் புலவர் என்னும் பெரும் புலவர் ஒருவர் அகத்துறையில் தன்னைப் போலப் பாடுவார் யாரும் இல்லை என்று எண்ணம் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் பாலை நிலத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வேடுவ உருவம் மேற்கொண்டு அவரை எதிர்ப்பட்ட முருகக் கடவுள், ‘நீங்கள் யார்?” எனக் கேட்டார்.
“யாம் ஒரு தமிழ்ப் புலவர்” என்று பதில் சொன்னார் புலவர்.
“அப்படியானால் இந்தப் பாலை நிலத்தைச் சிறப்பித்து ஒரு வெண்பா பாடுங்கள் பார்ப்போம்” என்றார் முருகன்.
“உமது பெயர் என்ன?” என்று கேட்டார் புலவர்.
“எனது பெயர் முட்டை” என்றார் முருகக் கடவுள். அத்துடன் புலவர் பாடும் பாடல் சுரம் போக்குத் துறையாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
உடனே புலவர்.
“பொன் போலுங் கள்ளிப் பொறி பறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்
மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர் போம்
கானவேல் முட்டைக்குங் காடு
இதன் பொருள் :-
மின் போலும் – மின்னலை நிகர்க்கின்ற
மானம் – பெருமை உடைய
வேல் – வேலாயுதத்தை ஏந்திய
முட்டைக்கு மாறு ஆய – முட்டை என்பவனுக்கு மாறுபட்ட
தெவ்வர் போம் – பகைவர் போகின்ற
கான – மணம் வீசுகின்ற
வேல் முள் தைக்கும் காடு – வேல் முள் தைக்கின்ற காட்டில்
பொன் போலும் – பொன்னை நிகர்க்கும்
கள்ளிப் பொறி பறக்கும் – கள்ளிச் செடிகளிலிருந்து நெருப்புப் பொறி பறக்கின்ற
கானலிலே – கானல் பரவிய பாலை நிலத்தில்
என் பேதை – என் பேதைப் பெண்ணானவள்
செல்லற்கு இயைந்தனள் – செல்வதற்கு மனம் இசைந்தாள்
ஏ – அடடா, இது என்ன பாவம்!
இந்தப் பாடலைக் கேட்ட முருக பிரான், பாடல் அவ்வளவாகச் சிறந்து விளங்கவில்லை என்று கூறித் தானே ஒரு பாடலைப் பாடி அருளினார் இப்படி:
“விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடு மென் றேங்கிச் – செழுங்கொண்டல்
பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே
பொய்யா மொழிப் பகைஞர் போல்”
இதன் பொருள் :-
“விழுந்த துளி அந்தரத்தே வேம் என்றும் – விழுந்த மழைத்துளியானது ஆகாயத்திற்குத் தான் ஏகும் என்றும்
வீழின் – வீழ்ந்தால்
எழுந்து – மேலே தாவி
சுடர் சுடும் என்று – அனலானது சுடும் என்று
ஏங்கி – ஏக்கமுற்று
செழுங் கொண்டல் – செழுமையாகிய மேகங்கள்
பொய்யாத கானகத்தில் – பொய்யாத காட்டில்
பொய்யாமொழிப் பகைஞர் போல் – பொய்யாமொழிப் புலவரது பகைவர்கள் போல
பெய்வளையும் சென்றனளே – வளையலை அணிந்த என் பெண்ணும் போனாள்
ஏ – அடடா, இது என்ன பாவம்!
இந்தப் பாடலைக் கேட்ட பொய்யாமொழிப் புலவர் பாடலின் அருமை கண்டு திகைத்துப் போனார். எதிரில் இருப்பது குமரக் கடவுளே என்பதை உணர்ந்து அவரைத் துதித்தார்.
முருகனும் அவர் முன் தோன்றி அருள் பாலித்து அவர் நாவில் வேல் கொண்டு ஊன்றிச் சென்றார்.
இதைத் தான் அருணகிரி நாதர் தன் பாடலில் கூறிச் சிறப்பிக்கிறார்.
இந்த நிகழ்ச்சி திருமுருகன் பூண்டித் திருத்தலத்தின் அருகில் நடந்ததாகக் கர்ணபரம்பரை வழக்காகப் பெரியோர் கூறுகின்றனர்.
இப்படி அருள் பெற்ற பெரும் புலவரான பொய்யாமொழிப் புலவர் காளையார் கோயில் சென்று மிகவும் பிரசித்தி பெற்றார். பின்பு அங்கிருந்து புறப்பட்டார். தஞ்சைவாணன் கோவை பாடிப் பெரும் புகழ் பெற்றார். பின் மதுரை சென்று சில அற்புதங்களை நிகழ்த்தினார்.
பின் சீனக்கன் என்ற வள்ளலுடன் நட்பு பூண்டு அவருடன் இருந்தார்.
அவர் உயிர் துறக்கவே அவர் உடலுடன் உடன்கட்டை ஏறினார் என்பர் பெரியோர்.
இத்தகைய முருகனின் அருள் விளையாடலைக் கொண்டது கொங்கு மண்டலமே என்று பாடல் 97இல் கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.
பாடல் இதோ:-
முட்டையென் பேர் சுரம் போக்கா வொரு பா மொழியெனக் கேட்
டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்
சுட்டழகில்லை யீ தென்று விழுந்த துளியென்றுநன்
மட்டவிழ் தார் முருகோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
முட்டை என்பது என் பெயர். சுரம் போக்காக ஒரு பாடல் கூறுவாயாக எனக் கேட்க, பொய்யா மொழிப் புலவர் மகிழ்ந்து பொன் போலும் என ஒரு வெண்பா பாடலை உரைக்க, அதைக் கேட்டு, இது அழகில்லை என்று கூறி, விழுந்த துளி என்ற ஒரு வெண்பாவை முருக வேள் பாடி அருளியதும் கொங்கு மண்டலத்திலே தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“THE INDIA WE HAVE LOST” , EDITOR PARAMESH CHOUDHURY, NEW DELHI, 1997 IS A VALUABLE BOOK WITH LOT OF INFORMATION ABOUT INDIA’S FOREIGN ADVENTURES 5000 YEARS AGO. HE IS QUOTING ALL FROM EARLY WRITERS.
Two Seals (2800 BCE) found in Ur and Kish of Mesopotamia (IRAQ) are particularly of Mohenjo-Daro type. 16 seals have been found in Ur and 14 in Kish and other places, 30 seals in all.
Besides these, there are also other indications of intercourse between India and Mesopotamia: broken portions of earthen jars, toilets sets, horns on the head of human figures, trefoil decoration on cloth, beads, covers of jars etc
XXX
Sumerian in Rig Veda- URU , KISH
The following verses are found in the Rig Veda (RV):-
1. NE’ER doth the man repent, who, seeking profit, bringeth his gift to the far-striding Visnu.
He who adoreth him with all his spirit winneth himself so great a benefactor.
2. Thou, Visnu, constant in thy courses, gavest good-will to all men, and a hymn that lasteth,
That thou mightst move us to abundant comfort of very splendid wealth with store of horses.
3. Three times strode forth this God in all his grandeur over this earth bright with a hundred splendours.
Foremost be Visnu, stronger than the strongest: for glorious is his name who lives for ever.
4. Over this earth with mighty step strode Visnu, ready to give it for a home to Manu.
In him the humble people trust for safety: he, nobly born, hath made them spacious dwellings.
(URU+KISH= URUKSHITI-SPACIOUS DWELLINGS)
5. To-day I laud this name, O gipivista, I, skilled in rules, the name of thee the Noble.
Yea, I the poor and weak praise thee the Mighty who dwellest in the realm beyond this region.
6. What was there to be blamed in thee, O Visnu, when thou declaredst, I am Sipivista?
Hide not this form from us, nor keep it secret, since thou didst wear another shape in battle.
7. O Visnu, unto thee my lips cry Vasat! Let this mine offering, Sipivista, please thee.
May these my songs of eulogy exalt thee. Preserve us evermore, ye Gods, with blessings.
XXX
TAMIL LITERATURE
In Tamil literature we have Uru, Urukezu used in several places and Uru means in Tamil—
Beauty – from Sanskrit Rupa (Rupa is a common name for girls from Kanyakumari to Kashmir)
Statue/figure/idol – from Sanskrit Rupa
Disease, Musical piece, Boat/ship and Big/long/Spacious
Surprisingly Sayana translated URU as ‘spacious’ as in Tamil!
(Uru Kesa= Beautiful hair in Maori according to A Kalyanaraman of Aryatarangini)
But the actual meaning is Uru and Kish are two place names where from different kings ruled. It is confirmed as place names in other RV verses:-
“Oh, Soma flow for Indra , Varuna and Vayu. Let our wealth remain intact. Let the Devas assemble in Urukshiti hearing the sound of your sacrifice “(9-84-1)
“Oh Fire , blaze in your glory and burn the Rakshasas in the houses in Uru” (RV 10-118-8)
“The dwellers of Uru worshipped you who are the most worshipful with hymns of praise” (10-118-9)
The names Ur and Kish in ancient Mesopotamia (Iraq) are clearly the corruptions of the word URU-KSHITI
Kshiti is colloquially pronounced as Kish
Uru is used in other places in Mesopotamia as Uru, Uruk, Urkashade etc.
Even modern names of ancient places of India are corrupted, some beyond recognition.
xxx
Kishkinda in Patanjali
All Indians know about Kishkinda of Hanuman and Anjaneya of Ramayana. Scholars have identified this place with Hampi in modern Karnataka state of India.
But Patanjali mentioned another Kishkinda 2300 years ago.
Sudras outside Aryavarta lived in Kishkinda-Gabdikam, Saka- Yavanam, and Saurya- Krauncham.
All these places are outside present India.
So, Kish people might have gone to Sumeria. Sumerians clearly say that they came from East and from a mountainous area. All Sumerian scholars repeated this but identified the East and Mountainous area with different places. My research shows that they went from Himalayan area. For the same reason Valmiki also named Kishkinda for the rocky areas of South India in Ramayana.
xxx
This is confirmed by other evidence:
“The Indus Script and the Rig Veda” by Egbert Richter Ushanas (New Delhi, 1997) gives detailed comparison of Sumerian seals and Indus seals. He interpreted all the seals on the basis of Rig Veda .
A beautiful summary is available from Aryatarangini of A Kalyanaraman (Asia Publishing House, 1969)
Here is the gist in bullet points…………..
NOTE II TO CHAPTER III
VISHNU IN MESOPOTAMIA
In the paper submitted to the All India Oriental Conference in 1964, Shri BK Chattopadhyaya makes the following points-
1.Apropos of the Indus Valley seals (dated circa 2500 BCE) found at Ur and Kish in Mesopotamia, there is mention of a place valled Uru-Kshiti, in Rig Veda 7-100-4 as below:
2.Vishnu traversed the world , in order to give lands to his worshippers! Those who worshipped him got a fixed abode . He created Uru- Kshiti
In another verse in RV 10-84-1
Oh Soma, flow for Indra, Varuna and Vayu; Let Gods assemble at Uru-Kshiti, hearing the recitation of your mantras!
Further in RV 10-118-8 occur these significant paasages-
Oh, Agni, blaze in the houses of Uru and destroy the Rakshasas; the dwellers of Uru kindled you (Agni) with hymns.
Finally in RV 8-68-12/13 the word Uru occurs in a context which suggests that it is a name of a place and not the equivalent of ‘great’ or ‘much’ as interpreted by Sayana (died in 1387 CE) .
Dr Marshall believed that Indus seals were carried to Ur and Kish by people hailing from India and settling in Mesopotamia .
Mr Chattopadhya holds that the first invasion of Sumeria by the Hindus took place in 3500 BCE.
Rudra and Shiva are not two different deities but one and the same as we find in Yajur Veda and the Indus valley people worshipped Shiva and Sakti. The religion of Mohenjo-Daro must have been Vedic, concludes B K Chattopadhyaya.
Xxx
Sayana was wrong
Urukshaya is translated as BIG HOUSE IS NOT HAPPY by Sayana who lived 600 years ago. He tried to interpret Vedas which came about in 4500 BCE. So he couldn’t have understood it fully.
From the statement that Vishnu gave Urukshit to his followers which has been explained by Sayana to mean that Vishnu took it from the Asuras and gave it to the Devas and for the fact that Indian seals of 2800 BCE have been found in Uru and Kish it is clear that the Vedic Hindus established a colony in Mesopotamia in that early date. Sumerian literature also say that they came from the East, from a mountainous area and settled in the ‘plains’.
Later Hittites (corruption of Kshatrias; even today Kshatrias call themselves Khatti in North India) and Kaassites form Kasi/Varanasi also settled there from 1900 BCE.
Xxx
Uru in other RV verses
Uru -kaksa in 6-45-3 = dwelling on the Ganges or name of a person
Uru- ksaya in 10-118-8/9
According to Ludwig translation of the RV,
A family of singers and worshippers of Agni. They are knows as Uru ksayas.
Tamil Uzavu= ploughing is in other Verses
Urvara denotes a piece of ploughland . it occurs from first mandala to tenth mandala of RV, in all ten books! In Tamil it is Uzavu (cultivation) uzavaaram- cultivated land;
Uzu – plough. English word Plough came from this Ur/Uzu/
R =L; P=U
xxxx
My Evidence
My research shows that Ur and Kish Kings have Sanskrit names:
Kish
Enmebaragesi – Kesi suffix is very common India ; even Maoris of New Zealand had Uru kesi as a name. we have Neelakesi , Rishikesi etc. he ruled kish in 2650 BCE
Agga is the next king we know of. It is Aja whom we find in Raghuvamsam of Kalidasa and puranas.
Ur nanshe ruled in 2500 BCE
Ur in Sumerian means dog as well. But here it may be his town – Ur
Tamil poets are called with their town names in Sangam literature.
Then we have Akul – shiva’s name followed by 5 names with Natum . it may be Nathan like my name swami Nathan.
Kings of Ur
First king is
Ur Nammu – 2112 BCE
Shulgi 2094 BCE
Then we have three Sanskrit names
Sin is Chandra / moon in Sumerian ; I read it as sena ; Mahabharata has many sena names
We have
Ramachandra
Kaushik Chandra and many more chanders
In Sumer we have
Amar sin – 2046 BCE
Shu sin – 2037 BCE
Ibbi sin – 2026 BCE
I gave only the kings who ruled 4000 years ago.
So there is no doubt that they were Hindus who went there and settled and ruled. Later Mitannian kings have very pure Sanskrit names from 1400 BCE.
xx
So far as archaeological evidence is concerned , a piece of Indian teak found in the ruins of Ur of the Chaldess at Al Muqayyar (Sayce, Hibbert Lectures, 1887, pp 18, 136-137 was the first indication of a commercial contact between India and Sumer.
xxx
A .V. Pandya identified the Asuras in Rig Veda with Assyrians in the Middle East in his article ‘Some Ancient Cities of Iraq in Early Indian Literature’ (Ballabh Vidhyamandir Research Bulletin, Vol.I, Issue I, 1957).
11 May 2014 — Picture of Eagle headed genie from Assyria 883 BCE. There are 60,000 lines on clay tablets in chaste Sumerian ’emegir’ and another 60,000 …
19 Sept 2020 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com I wrote about Sumukan Mystery six year ago. Now I have got …
2 Aug 2015 — (I have already shown that even the most popular Valentine day symbol of an ‘arrow piercing the heart’ is from the Atharva Veda). bes. image of …
18 Nov 2014 — God Baal of Sumer ( Indra of Sumer) Research paper written by London … of clay which is then brought to life is another image of creation.
Posts about Sumer written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; thanks. Rig Veda, the oldest book in the world, contains references to …
31 Oct 2019 — 7159 Pictures are taken from various sources; beware of copyright … blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … I have chosen 30 Sumerian Proverbs which are similar to Indian …
31 Oct 2019 — Posts about Sumerian Proverbs written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …
14 Sept 2014 — He is a Hindu god from India travelling to different parts of the world. In my previous article, I published the pictures of Laos and Mongolia stamps …
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
தெய்வத் தமிழுக்குச் சிறப்பைத் தருவது அதில் அமைந்துள்ள இறைவனைப் பாடித் துதிக்கும் அற்புதப் பாடல்களே.
இந்தப் பாடல்களில் புதிய ஒளியையும் புதிய சந்தத்தையும் புதிய மெருகையும் தந்தவர் அருணகிரிநாதர். வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரி நாதர் முருகனைப் போற்றித் துதிக்கும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளினார். அதில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது 1324 அற்புதமான பாடல்கள். தனி ஒரு சந்தத்தில் துள்ளு நடை போட்டு இறைவனின் விளையாடல்களை அள்ளித் தரும் திருப்புகழில் 857 சந்தங்கள் உள்ளன; 178 தாள அமைப்புகள் உள்ளன என்பது அதிசயிக்கத் தக்க ஒரு விஷயமாகும்.
அருணகிரிநாதர் திருப்புகழை எப்படிப் பாடுவது என்று தியானம் செய்த நிலையில் முருகனே முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர என அடி எடுத்துக் கொடுத்தான்.
அருணகிரிநாதர் இயற்றி அருளிய திருப்புகழ் என நாம் சொல்லும் போது அருணகிரிநாதரும் சற்று நகைக்கிறார்; முருகனும் சற்றுப் புன்முறுவல் பூக்கிறான்.
ஏனெனில் அருணகிரிநாதரே கூறுகிறார்,
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தததனால் என்று கந்தர் அனுபூதியில்! (பாடல் 17)
ஆக அருணகிரிநாதர் நாவால் முருகனே அருளிய தெய்வீகப் பாடல்கள் திருப்புகழ் அமிர்தமாகும்.
அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று அந்தத் தலத்தின் மஹிமையையும் அங்கு நடந்த இறைவனின் அருள் விளையாடல்களையும் அற்புத சந்தம் அமைத்துப் பாடியுள்ளார். இப்படி அவர் சென்ற தலங்கள் சுமார் 200 தலங்களாகும்.
இந்தத் திருப்புகழை தினமும் ஓதுங்கள் என அருளாளர்கள் கூறியதோடு அவற்றின் மகிமையையும் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத
நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்
என்பதன் மூலம் வேதம், சகல வித்தை, கீத நாதம், ஞானம் ஆகிய அனைத்தும் இதில் உள்ளது என்பது பெறப்படுகிறது.
அத்தோடு இதைப் பாடி என்ன பெறலாம் என்பதற்கும் பதில் உண்டு:
ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ
டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேயிக் கூறு
என்ற பாடலின் மூலம் வளமும் நலமும் பெறுவதோடு முக்திப் பேறும் கிடைக்கப் பெறும் என்பது உறுதியாகிறது.
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்த பிரஸித்தரே என்று கூறுகிறது சித்து வகுப்பு.
அருணகிரிநாதர் சரித்திரத்தில் ஏராளமான அற்புதங்கள் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் தேவி உபாசகனான சம்பந்தாண்டான் என்பவன் அவர் மீது பொறாமை கொண்டு அருணகிரிநாதரை ஆதரித்த பிரபுடதேவமாராஜனிடம் அவரை பொது மன்றத்தில் முருகனைக் காட்டுமாறு வற்புறுத்த அதை சிரமேற்கொண்டு அருணகிரிநாதர், “கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே! சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே” என்று பாட முருகன் அனைவரும் முன் காட்சி தந்தார். தேவியைக் காட்ட இயலாத சம்பந்தாண்டான் தெளிவு பெற்றான். மக்களும் மன்னனும் மகிழ்ச்சி அடைந்தனர்.
‘அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட’ என்று ஆரம்பிக்கும் திருப்புகழில் உதய தாம மார்பான பிரபுடதேவ மாராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே என அவர் பாட மயிலும் ஆடி தானும் ஆடி வந்தான் முருகன் என்கிறது வரலாறு.
அன்றாடம் காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை அத்தனை அனுஷ்டானங்களுக்கு உகந்த திருப்புகழ் பாடல்கள் உண்டு. எழுந்தவுடன் முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் என்பார் அவர்.
திருநீற்றை எழுந்தவுடன் நெற்றியில் இட வேண்டும். ‘நீறதிட்டு நினைப்பவர் புத்தியில் நேசம் மெத்த அளித்தருள் சற்குரு’ என்பார் முருகனை அவர். துணையாய்க் காவல் செய்வாய் என்ற திருப்புகழை ஓதி உறங்கினால் காவலுக்கு இருப்பான் வேலவன்! இப்படி காலை முதல் இரவு வரை பாட வெண்டிய திருப்புகழ் பாடல்கள் பல உண்டு.
முருகனைத் துதிப்போருக்கு நோய்கள் அண்டா; கர்மவினையால் வரும் நோய்களைப் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர்.
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறினை எரிசூலை சூலை
பெருவலி வேறும் உள நோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படி உனதாள்கள் அருள்வாயே
என்று பாடும் போது நோய்கள் நம்மை அண்டா; அண்டியவையும் நம்மை நலியச் செய்யா என்பது உறுதி.
அருணகிரிநாதருக்கு ஜெபமாலை கொடுத்து அருளியவன் குமரன்.
உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
என அவர் உருகுகிறார்; நம்மையும் உருக வைக்கிறார்.
இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன் குடி பெருமாளே என்று கூறி அவருக்கு முருகன் ஜெபமாலை தந்ததைக் கூறி அருளுகிறார்.
முருகனை எப்படி அறிவது?
அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே என்கிறார் அவர். நுண்ணறிவால் அறிய வேண்டியதை அறி; ஸயின்ஸ் கூறும் நுண்ணறிவைப் பயன்படுத்தி அவனை அறி; பின்னர் அவன் இருதாள் இறைஞ்சு; அப்போது உன் இடர் களையும் என்ற ரகசியத்தைக் கூறுகிறார்.
விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் உரிய முறையில் இணைத்த மகான் அவர்.
அணுவில் அசைவாய் என்று அவர் கூறும் போதே நவீன அறிவியல் இப்போது கண்டுபிடித்த அணு அசைவை ஆடம் மற்றும் பார்டிகிளை அன்றே அவர் கண்டு உரைத்ததை நினைத்து வியக்கிறோம்.
அருணகிரிநாதர் நமக்கென வேண்டுவதில் சமர்த்தர்.
இகபர சௌபாக்யம் அருள்வாயே என்று கூறுவதால் பக்தர்களுக்கு இகவாழ்வும் சிறக்க வேண்டும் பர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று கூறி அவ்விரண்டும் முருகனைத் துதித்தால் கிடைப்பது உறுதி என்று அறுதியிட்டு உரைக்கிறார்.
என்றனுயிர்க்காதரவுற்றருள்வாயே, நீடு கழலிணைகள் சேர அருள்வாயே
செஞ்சொற் தருவாயே அடியிணை தந்து நீ ஆண்டருள்வாய்
மலர் தாள் கமலம் அருள்வாயே வந்து நீ அன்பில் ஆள்வாய்
சந்தப் பதம் வைத்தருள்வாயே என இப்படி ஒவ்வொரு பாடலிலும் நமக்கு வேண்டியதைக் கேட்டு நம்மைப் பாடித் துதிக்க வைப்பது அவர் சிறப்பாகும்.
சுப்ரமணியன் என்றாலேயே வெற்றி அருள்பவன் என்றே பொருள் என்பதை மஹாபாரதம் விவரிக்கும்.
அசுரருடன் போருக்குச் செல்கையில் மற்ற தேவர்களின் பின்னே வெற்றி தேவதை செல்லும். ஆனால் முருகன் சூரபன்மனுடன் போருக்குச் செல்கையில் அவனுக்கு முன்னே வெற்றி தேவதை சென்றதாம். அதாவது Cause and effect – அதாவது காரண காரியம் என்பது முறை. இங்கு செயலுக்கு முன்னேயே வெற்றி உறுதி செய்யப்படுகிறது என்கிறார் வியாஸ பகவான் முருகனைப் பற்றிச் சொல்லும் போது.
ஆகவே தான் வெற்றி வடிவேலனை வெற்றி அருள்வாய் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
உயர் திருப்புகழ் விருப்பமெனச் செப்பன என்னக்கருள்கை மறவேனே என்று முருகனின் அருளை நினைத்து உருகுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -30
Sutra 3-3-64
Ni pata – studying ; in Tamil ‘padi’= study
பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உபயோகித்த மாணவ, பாடம், படி, பாடசாலை ஆகியவற்றை இன்றும் தமிழர்கள் உபயோகிக்கின்றனர். இலங்கையில் எல்லா பள்ளிக்கூடங்களும் பாடசாலை என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லால் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் வேத பாட சாலைகளுக்கு மட்டும் அப்பெயர் இருக்கிறது.
Pati, paatam/lesson, mmanava/student are all in panini.
Tamils use all these Sanskrit words.
Sri lankan tamils even use paatasaalai, but tamil nasu tamils use this only for vedic schools- veda paata saalaa
Naatham – sweet sound is used in all Indian languages
நாதம் – இனிய ஒலி , கீதம், ஓசை
Xxx
3-3-65
Panini use the word veena
We come across naradar veenai from the days of silappadikaram
வீணை என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழில் இல்லை. குறளில்கூட யாழ் தான் . சிலப்பதிகாரத்தில் முதல் முதலில் வீணை வருகிறது. பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்துகிறார்.
Xxx
3-3-66
Pana – handful
Paana – business, coomerce; already explained;
Related to pana, karsha pana, money, paanis of rig veda etc
பண – கையளவு
மூல பண – கையளவு முள்ளங்கி
மூல – முள்ளங்கி
பாண = பணம்
MULA PANA – HANDFUL OF RADISH
Xxx
3-3—67
Matha – proudness
Matha – madness
Un’matha’ – mad
மத – செருக்கு, கர்வம்
உன்’மத்த’MAD – பைத்தியம்
யானைக்கு ‘மதம்’ பிடித்தது
Xxx
3-3-69
Samaaja – gathering
Brahmana samaajam
Sangeetha samajam
Used all over india.
சமாஜம் -குழு, கூட்டம்,
பிராமண சமாஜம்
மதுரையில் இசைக்கல்லூரி – ‘சத்குரு சங்கீத ஸமாஜம்’ என்று அழைக்கப்படுகிறது
Sadguru Sangeetha samaajam is in Madurai.
Xxxxx
3-3-75
HavE – ‘hey’ calling someone
ஹவே = ஹே /ஆங்கிலம்; ஏய் /தமிழ்
Xxx
3-3-82
Ayas – metal, iron
அயஸ் என்றால் உலோகம்; அதாவது பொன்
ஐம்பொன் என்பதால் 5 உலோகங்களை போன் என்று அழைத்தோம். வள்ளுவரும் ஓரிடத்தில் தங்கம் என்றும் இன்னுமொரு இடத்தில் இரும்பு என்றும் பயன்படுத்துகிறார். வெள்ளைக்காரர்கள் ரிக் வேதத் தை மொழிபெயர்த்தபோது எல்லா ‘அயஸ்’ சொல்லையும் இரும்பு என்று மொழி பெயர்த்து மஹா குழப்பத்தை உண்டுபண்ணினர் ; இப்போது தெளிவு பிறந்து வருகிறது ; அயஸ் என்பதிலிருந்து ஆங்கிலச் சொல் ஐரன் /அயன் வந்தது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திங்கள் தோறும் லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-1-2021 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை இது. இதை யூடியூப் மற்றும் facebook.com/gnanamayam தொடுப்பில் எந்த நாளும், எந்த நேரமும் காணலாம்!
ஒளிவட்ட உண்மைகள்!
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று AURA எனப்படும் ஒளிவட்டம் பற்றிய உண்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் -அவ்ரா – AURA- உள்ளது. இது பழங்காலம் தொட்டே இருந்து வரும் ஒரு நம்பிக்கை. எல்லா மதத்தினரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அனைத்து மத ஸ்தாபகர்கள், மகான்கள், ஞானிகள், பெரியோர்கள் ஆகியோரின் உருவங்களைச் சுற்றி ஒரு ஜோதி வட்டம் எல்லாப் படங்களிலும் போடப்பட்டிருப்பதே இதற்கான சான்று!
அவ்ராவை – ஒளி வட்டத்தை – மனித உடலிலிருந்து உடலைச் சுற்றிலும் நிரந்தரமாக வரும் ஒளிவீச்சு (Permanent Radiation from Human Body) என்று விவரிக்கின்றனர்.
இது நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1. நிம்பஸ் (Nimbus) 2. ஹாலோ (Halo) 3. அரோலா (Aureola 4) க்ளோரி (Glory).
நிம்பஸும் ஹாலோவும் தலையிலிருந்து வருபவை.அரோலா முழு உடலிலிருந்தும் வருவது. க்ளோரி தலை மற்றும் உடலிலிருந்து வருவது ஆகும்.
பிரம்மஞானசபையை – Theosophical Society-ஐச் சேர்ந்தோர் இதை ஐந்தாகப் பிரிக்கின்றனர் இப்படி: 1. ஆரோக்கிய ஒளிவட்டம் (Health Aura) 2. முக்கிய ஒளிவட்டம் (Vital Aura) 3. கர்ம ஒளிவட்டம் (Karmic Aura) 4. குணாதிசய ஒளிவட்டம் (The Aura of Character) 5. ஆன்மீக ஒளிவட்டம் (The Aura of Spritual Nature)
எல்லா ஒளிவட்டங்களிலும் வண்ணங்கள் பல காணப்படுகின்றன.
இந்த வண்ணங்களை வைத்துக் குறிப்பிட்ட மனிதனின் குணாதிசயங்களைக் கண்டுபிடிப்பதோடு அவன் உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகளையும் கூற முடியும்!
பிரகாசமான சிவப்பு நிறம் கோபம் மற்றும் வன்மையைக் குறிக்கிறது. மங்கலான சிவப்பு நிறம் காமம் மற்றும் அடங்கா இச்சையைக் குறிக்கிறது. பழுப்பு நிறம் பேராசையையும் ரோஸ் நிறம் அன்பையும், மஞ்சள் நிறம் மிக உயரிய அறிவுத் திறனையும், இளஞ்சிவப்பு ஆன்மீகத்தையும் பச்சை ஏமாற்றுதல், பொறாமை ஆகியவற்றையும் அடர்த்தியான பச்சை இரக்கத்தையும் குறிக்கின்றன.கருமை ஒளிவட்டம் எதிர்பாராத மரணம் சம்பவிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஒளிவட்டம் உண்மையே என்று அறிவியல் பூர்வமாக முதலில் கண்ட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஜே. கில்னர் (Walter J.Kilner) ஆவார். இவர் 1847இல் பிறந்தார். 1920ஆம் ஆண்டு மறைந்தார். லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவ மனையில் மருத்துவராக இவர் பணி புரிந்தார்.
‘Thr Human Aura’ என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். ஏராளமான பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விளக்கமாகக் கூறும் நூல் இது.
1908ஆம் ஆண்டே மனித ஒளிவட்டம் பற்றிய கருத்து கில்னரின் மனத்தில் ஊன்றி விட்டது. கோல்தர் டை எனப்படும் டிக்யானினை (Coal Tar dye – Dicyanin)
வைத்து அவர் ஒளிவட்டத்தைக் காண வகை செய்தார். நூற்றுக்கணக்கான சோதனைகளைப் பொறுமையாக நடத்திய பின்பே 1911ஆம் ஆண்டில் தாம் கண்ட ஆய்வு முடிவுகளை ‘The Human atmosphere’ என்ற நூலாக எழுதி வெளியிட்டார். ஒளிவட்டம் காணும் முறையை இதில் அவர் விளக்கி எழுதியிருந்தார்.
வழக்கம் போலவே இதை நம்பாதோரின் கடுமையான விமரிசனத்திற்கு இந்த நூல் இலக்காயிற்று. ஆனால் தனது முயற்சியில் சிறிதும் மனம் தளராத கில்னர் இதை மேலும் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார்.
1914இல் பிரபல அறிஞர் சர் ஆலிவர் லாட்ஜ் இவர் சோதனைகளில் அக்கறை செலுத்தினார். 1920இல் திருத்தப்பட்ட பதிப்பாக இவரது நூல் மீண்டும் வெளியிடப்பட்டது. 23-6-1920 அன்று தனது 73ஆம் வயதில் மறைந்த இவர் தனது நூல் வெளியிடப்பட்டதைப் பார்க்க முடியவில்லை. பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ இதழ் 1922இல் இவரைப் பாராட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது.
உயிர் இருக்கும் வரை ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் இருக்கும் ஒளிவட்டம் உயிர பிரிந்தவுடன் மறைந்து விடுகிறது.
ஒரு மனிதனின் ஒளிவட்டத்தை எப்படிக் காண்பது?
இதற்கு இரண்டு கண்ணாடி ஸ்கிரீன்கள் வேண்டும். இவற்றின் மீது டிக்யானின் டை உள்ள ஆல்கஹால் கரைசல் தடவப்பட வேண்டும். கண்ணாடியில் ஒன்று அடர்ந்த பூச்சுடனும் மற்றது லேசான பூச்சுடனும் இருத்தல் வேண்டும். இந்த ஸ்கிரீன்களை, உபயோகிக்காதபோது அவற்றை இருட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கெமிக்கல்கள் அழிந்து அவை பயனற்றுப் போய்விடும்.
இந்த கண்ணாடி வழியே யாரைப் பார்த்தாலும் அவரின் உருவத்தைச் சுற்றிப் பனி போல இன்னொரு உருவச்சுற்று தெரியும். பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டோருக்கு ஸ்கிரீனே தேவை இல்லை. வெறும் கண்ணாலேயே ஒளி வட்டத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஒளி உருவத்தைப் பார்க்கவே முடியாதவர் அடந்த பூச்சுக் கண்ணாடி வழியே முதலில் பார்த்து விட்டு பிறகு லேசான பூச்சுக் கண்ணாடி வழியே பார்த்தால் ஒளி உருவம் இருப்பது தெளிவாகத் தெரியும்.
ஒளிவட்டத்தை விவரிப்பது என்பது இன்னொரு விஷயம்! அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளிச்சம் அதிகப் பிரகாசமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நபரையும் பொறுத்தே ஒளிவட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். வெளிச்சம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குப் போகும் முறையில் இருப்பதே சிறந்த முறை. அதாவது ஒளிவட்டம் பார்க்கப்பட வேண்டியவர் ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி நிற்க ஒளிவட்டம் பார்ப்பவர் ஜன்னலை நோக்கி நிற்க வேண்டும்.
இந்த ஒளிவட்ட சோதனை மூலம் வியாதிகளை இனம் கண்டு சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.
நல்ல ஆரோக்கியம் உள்ள மனிதரின் ஒளிவட்ட வண்ணம் நீலம் மற்றும் சாம்பல் கலந்த ஒன்றாக இருக்கும். தலையைச் சுற்றி எட்டு அங்குலம் ஒளிவட்டமும் மற்ற இடங்களில் ஐந்து அங்குலமும் ஒரு பிரபல விளையாட்டு வீரருக்கு இருந்தது. அப்போது அவருக்கு வயது 33. இதே அளவு அவருக்கு முன்னும் பின்னும் ஒளி பரவி இருந்ததையும் பார்க்க முடிந்தது.
அடுத்து ஆரோக்கியம் உள்ள ஒரு பெண்மணிக்கு வெளி ஒளிவட்டம் நாலரை அங்குலமாக இருக்க, கால் அருகே நான்கு அங்குலமாகக் குறைந்து இருந்தது. நீலம் கலந்த சாம்பல் நிற உள் ஒளிவட்டத்தைச் சுலபமாகத் தனியே பார்க்க முடிந்தது. மூன்றரை அங்குலம் முன்பின் அனைத்துப் பக்கமும் இருந்தது. கைகால்களில் மட்டும் அது மூன்று அங்குலமாகக் குறைந்திருந்தது.
ஐலீன் காரட் (Eileen Garrett) என்னும் பெண்மணி ஒளிவட்டத்தைப் பார்ப்பதில் வல்லவர். அவர் ஒரு க்ளர்வாயண்ட் (Clairvoyant). அதாவது கட்புலனுக்குப் புலனாகாமல் உள்ளவற்றை காணும் திறன் கொண்டவர். தமது சுயசரிதையில் தாம் கண்ட காட்சிகளை அவர் விவரிக்கிறார்:
குழந்தையாக இருக்கும் போதே மனிதர்களின் குணாதிசயங்கள் அவர்களின் சுற்று ஒளியை (Surround) பொறுத்தே இருக்கும் என்று தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறுகிறார்.
“அவர்களின் ஒளியின் தரத்தைப் பொறுத்தும் அதன் வண்ணங்களைப் பொறுத்தும் அவர்களது பர்ஸனாலிடியை என்னால் நிர்ணயிக்க முடியும் . சிலர் மிளிரும் ஒளியுடன் நடக்கும் போது இன்னும் சிலரோ மங்கலான ஒளியுடன் நடப்பார்கள். மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட இது உண்டு. அவைகளைச் சுற்றி இருக்கும் ஒளியைப் பொறுத்து மரங்கள் மற்றும் பூக்களுக்கு ஜீவத்தன்மை இருக்கிறது. மிருகங்கள் ஒன்றுக்கு ஒன்று எப்படி நடந்து கொள்கின்றன என்பதைக் கவனித்தேன். அவைகளால் ஏனையவற்றின் சுற்று ஒளியை உணர முடிகிறது என்று என்னால் கூற முடியும். பருந்தைக் கண்டு எலி எப்படி உடனே ரீ-ஆக்ட் ஆகிறது?! அதே போல நண்பர்கள் மற்றும் எதிரிகளை இனம் காண இந்தச் சுற்று ஒளி அவற்றிற்கு உதவி புரிகிறது” என்று இப்படி விளக்கமாகக் கூறுகிறார் அவர்.
இன்னொரு சுவையான சம்பவம். இது ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பற்றிய ஒன்றாகும். உலகின் மிகப் பிரபலமான விஞ்ஞானி பாரனோவ்ஸ்கி ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தார். அவர் வெறும் கண்களாலேயே ஒளிவட்டத்தை நன்கு பார்க்க வல்லவர். ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் புட்டபர்த்தியில் பார்த்த பின்னர் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறினார் : “நான் ஜனாதிபதி ஃபோர்டு, எலிஸபத் மஹாராணி, கிரீஸ் தேசத்து ராணி போன்ற பிரபலமானவர்களுடன் ஒரே மேடையில் பேசியவன். என்றாலும் இன்றைய எனது அனுபவம் விநோதமான ஒன்றாக இருக்கிறது. பாபாவின் ஒளிவட்டம் ஆகாயத்தை எட்டும் இளஞ்சிவப்பு வண்ணமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படிப்பட்ட ஒரு ஒளிவட்டத்தை -அவ்ராவை – என் வாழ்நாளில் கண்டதே இல்லை. அவர் நடக்கும் போது அந்த பிரம்மாண்டமான இளஞ்சிவப்பும் ஆகாயத்தை ஊடுருவிச் செல்கிறது. அன்பின் உருவான இளஞ்சிவப்பாகவே இவர் இருப்பதால்
இவரை ‘Love Walking on two feet’ – ‘நடமாடும் அன்பின் உருவம்’ என்றே அழைக்கலாம் என்றார் அவர்.
ஒளி வட்டத்தைக் காண உதவும் காமராக்கள் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரது ஒளிவட்டத்தையும் இந்த காமரா மூலம் படம் எடுத்து அதை பரிசோதித்து அவரவர் பலனை அறிய இப்போது முடிகிறது!
நோயாளிகள் தங்களது நோயை இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையைப் பெற முடியும்; நோய் வருவதை முன்கூட்டியே அறிய முடியும்; ஆகவே அதிலிருந்து ஒருவர் வரப்போகும் அபாயத்திலிருந்து தன்னை ஒருவர் காத்துக் கொள்ள முடியும்.
ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஒருவர் தனது கோபம் போன்ற தீய குணங்களை அறவே அகற்ற இந்த ஒளிவட்டத்தைக் கண்டு தனது முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ளலாம். இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கொண்ட ஜோதி ஒளிவட்டத்தை அடையலாம்!
ஒளிவட்டம் பற்றி அறிந்து கொள்வது என்பது அறிவியல் நமக்குத் தந்த பரிசுகளில் முக்கியமான ஒன்றாகும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THE HIGHLIGHT OF GNANAMAYAM BROADCAST ON MONDAY 25TH JANUARY 2021 WAS THE TALK INTERVIEW BY GUEST SPEAKERS:-
1.DR KAUSHIK CHANDRA MALLIK FROM KOLKATA
Dr. Kaushik Chandra Mallik
Dr. Kaushik Chandra Mallik MS,FRCS,Consultant Urologist practising in kolkata, West Bengal.
His association with Shastra Dharma Prachar Sabha, founded by Shrimat Upendramohan has been since his birth, so he has practically grown up within the Sabha.
Jayanti Shastrani,Drabanti dambhika,Hrisyanti shanto, Nipatanti nastikah is his motto.
He spoke about the concept of India existed even before British came to India. He cited lot of example from the life of great philosopher Adi Shnakara. He told the listeners Shankar’s march from Kaladi in south to Bhadrikashram in the Himalayas and his establishen of Four Mutts in four corers of Bharath showed his concept of India. He wiped out Durmathas and cleanded the Hindu practices
Mr Showan Sengupta
Following him Mr Showan Sengupta of Kolkata rendered an excellent Sanskrit hymn on Krishna.
Mrs Sindhuja Chandramouli from Chennai
2.Second Guest speaker of the day was Mrs Sindhuja Chandramouli from Chennai. She is one of the youngest Upanyasakas of Tamil Nadu. She has lectured on 150 topics. Her approach was to show that patriotism and devotion to gods are like two eyes. So she started covering unconventional subjects such as freedom fighters, social reformers and even shrines and festivals in addition to conventional topics touching Puranas and Itihasas. . She explained with great humour how she was sucked into this field of giving discourses. She became crazy with Tirukkural after memorising the 1330 couplets to win a competition. Her mother forced her to learn them. Later hearing a Bhagavathar’s talk on Kanchi Paramacharya she started lecturing with his blessing on the same stage with songs.
She also demonstrated how the Upanyas began in those days and how she does it in modern days. She gave examples from the life of Ramana Maharishi and Swami Vivekananda to show how even small bytes of information can attract the attention of the devotees. With her traditional knowledge in music, she became a shining example to others. Mrs Vaishnavi Anand introduced her and asked her relevant questions to elucidate good information within half hour.
ஆடல் பாடல் கதை கவிதை இவற்றின் துணை கொண்டு கதை சொல்லி ஒருவரின் பெருமை மற்றும் அவரது பராக்கிரமங்களை நமக்கு தெரிவிக்க வல்ல கலையே ஹரிகதை அல்லது கதாகலாக்ஷேபம் எண்பதாவது.
இக்கலை பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் இருந்து வருகிறது. லவனும் குசனும் ராமாயண கதையை ஸ்ரீ ராமரு க்கு வர்ணித்தது ஹரிகதைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி மஹாபெரியவரினுடைய தீவிர பக்தி கொண்டவர் . தனது சிறு பிராயம் முதலாக கதாகாலஷேபம் செய்வதில் அவரின் அருள் கொண்டு தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு சைல்ட் prodigy என கூறினால் அது மிகை ஆகாது .
ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி கிட்டத்தட்ட 17 வருடங்களாக ஹரிகதை நிகழ்ச்சிகளை தமது தாயார் ஸ்ரீமதி உஷா ஏகாம்பரம் அவர் அவரின் துணை கொண்டு செய்து வருகிறார் .
ஆல் இந்தியா ராடியோ இவருக்கு ‘ஏ ‘ grade in ஹரிகதை என அறிவித்திருக்கிறது.
இவர்
தமிழக அரசின் ‘கலைவளர்மணி”
திருக்குறளின் 1330 குறளையும் 100 வகையாக ஒப்புவித்தமைக்காக வேர்ல்ட் திருக்குறள் forum வழங்கிய “திருக்குறள் மாமணி”
தெய்வ தமிழ் இசை மன்றம் மற்றும் கிருஷ்ண கான சபா வழங்கிய “ஹரிகதை வித்தகர் ” போன்ற விருதுகள் பெற்று இருக்கிறார்.
ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி அவர்கள் பிரம்ம கான சபா , கிருஷ்ண காண சபா, தி மியூசிக் அகாடமி, நாரத கான சபா போன்ற பல முக்கிய சபைகளில் கதாகாலஷேபம் செய்ந்திருக்கிறார்.
ஸ்ரீலங்கா,அபுதாபி, துபாய், போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் இலக்கிய பொக்கிஷங்களை ஹரிகதை யின் வாயிலாக கொண்டு சேர்த்திருக்கிறார்.
நந்தனார் சரித்திரம், தீர ஆஞ்சநேயர் சமவாதம், மஹாபலி வைபவம், தமிழிசையில் நவபக்தி போன்ற 150கும் மேற்பட்ட தலைப்புகளில் கதாகாலஷேபம் செய்திருக்கிறார்.
ஆன்மீக பணியில் ஈடுபடுவதையே தனது பாக்கியமாக கருதும் சிந்துஜா அவர்கள் , கடவுள் பக்திக்கு நிகரானது தேச பக்தி என்று வலியுறுத்துகிறார். அதோடு நிற்காமல் தனது கதாகாலக்ஷேபத்தை ராமாயண மஹாபாரத கதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்றைய தன்னலமில்லா தேச தலைவர்களின் பெருமைகளையும் ஹரிகதையின் வாயிலாக நமக்கு எடுத்து கூற தவற வில்லை.
இன்று ஞானமயம் நிகழ்ச்சியில் நமது சிறப்பு விருந்தினராக தமது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்ள இணைகிறார் ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி
வணக்கம் சிந்துஜா
Gnanamayam promised the guest speakers of the day that they would be given more time during their next appearance.
Mr S Nagarajan of Bengaluru spoke about the Auras and Dr N Kannan spoke about the Vaishnavites’ fascination with the Tamil language.
Producer Kalayana sundara Sivacharya spoke about the ongoing Tiruppugaz Recitation to celebrate oncoming Thaipusam festival.
Mrs Lakshmi Ramaswami’s disciples sang Tiruppugaz for prayer.
2.TALK BY Dr Kaushik Chandra Mallik from Kolkota and
DEVOTIONAL SANSKRIT SONG BY MR SHOVAN SENGUPTA- BOTH 15 MINUTES
XXX
MR. S.NAGARAJAN’S TALK- 8 on AURAS
KALYANJI’S announcement ABOUT THAIPUSAM-4
DR KANNAN’S TALK ON ALVARS
APPRX. 70 MINUTES
XXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THE TAMIL THUNDER BROADCAST KNOWN AS THAMIL MUZAKKAM BROADCAST THE FOLLOWING PROGRAMMES ON SUNDAY 24TH JANUARY 2021 AS PART OF ITS WEEKLY TAMIL BROADCAST.
WORLD HINDU NEWS ROUND UP WAS READ BY MRS SUJATHA RENGANATHAN IN ENGLISH AND BY MRS VAISHNAVI ANAND IN TAMIL.
THE SPECIAL FEATURE OF THE BROADCAST WAS THE SONGS OF THE POST PONGAL FESTIVAL KANU PONGAL . IT IS KANU, KANUPPIDI AND KAANUM PONGAL. ALL MAKE SENSE BECAUSE THEY DISPLAY COLOURED RICE FOR THE CROWS AND SPARROWS AND WICH THE FAMILY TO LIVE HAPPILY SHARING EVERYTHING LIKE THE CROWS.
USUAL TEMPLE VIEW – ALAYAM ARIVOM – COVERED THE MOST FAMOUS KRISHNA TEMPLE IN KERALA (GURUVAYUR)..
AS USUAL THIRUPPUGAZ WAS RENDERD BY MRS JAYANTHI SUNDAR AND MISS KEERTHANA RAMALINGAM.
LONDON SWAMINATHAN’S THIRUPPUGAZ RESEAARCH ARTICLE—LIST OF PEOPLE WHO GO TO HELL ACCORDING TO ARUNAGII WAS READ BY MRS VAISHAVI ANAND.
EALIER PRAYER WAS RENDERED BY MASTER KUMARAGURUPARAN THYAGARAJA OF MALAYSIA AND THIRUPPUGAZ WAS RENDERED BY THE DISCIPES OF MRS LAKSHMI RAMASWAMY OF CHENNAI.
KANU SONGS WERE SUG BY MRS ANNAPURANAI PANCHANATHAN, DAYA NARAYANAN AND SWARNALATHA.
KANU SONGS IN TAMIL
கணுப் பண்டிகை பாடல் :
( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )
கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்.
கணுப் பிடியும்
காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்.
பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்.
மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்.
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்.
கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.
வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்.
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.
எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்.
கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.
தூப தீபம் காட்டி வெச்சேன்
தூய மனதோடு நானும் வெச்சேன்.
கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை வணங்கி வெச்சேன்.
ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்.
கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்.
கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்.
காக்கைக் கூட்டம் போல
எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்
THIRUMATHY SWARNALATHA
XXXXXXXXXXXXXXXXXX
AGENDA
THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER (PART OF GNANA MAYAM CHANNEL)
24-1-2021 SUNDAY
PRAYER- MASTER KUMARAGURUPARAN THYGARAJA, MALAYSIA
MRS BRHANNAYAKI SATHYANARAYANAN’S TALK ON TEMPLES- GURUVAYUR
Thiruppugaz by MRS JAYANTHI SUNDAR & MS KEERTHANA RAMALINGAM
XXX
WORLD HINDU NEWS ROUND UP–
IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN
IN TAMIL BY MRS VAISHNAVI ANAND
XXX
LONDON SWAMINATHAN’S ARTICLE READ BY MRS VAISHNAVI ANAND (LIST OF PEOPLE WHO GO TO THE HELL ACCORDIN TO THIRUPPUGAZ)
KANU SONG BY MRS SWARNALATHA
KANU SONG BY MRS DAYA NARAYANAN
KANUP SONG BY MRS ANNA PANCHANATHAN
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES