31 முக்கிய சித்தர் பாடல்கள் (Post No.7634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7634

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மார்ச் 2020 காலண்டர்

(மாசி மாதம் -விகாரி வருஷம்)

பண்டிகை நாட்கள் – மார்ச் 8 உலக மகளிர் தினம்; 8 மாசி மகம் 9 ஹோலி/காம தஹனம்; 14-காரடையான் நோன்பு; 25-யுகாதி புத்தாண்டு தினம்.

அமாவாசை-24; பௌர்ணமி-9; ஏகாதசி -5/6, 20

முகூர்த்த தினங்கள்– மார்ச் 5, 6, 12, 13, 22, 30

நந்த வனத்திலோர் ஆண்டி –  – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்

கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

—கடுவெளிச் சித்தர்

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

நெளிந்து நெளிந்து  நெளிந்து   ஆடு பாம்பே சிவன்

சீர்பாதங் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!

–பாம்பாட்டிச் சித்தர்

XXX

மார்ச் 2 திங்கட்  கிழமை

நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல  பாம்பே

பாதலத்திற் குடிபுகும் பைங்கொள்  பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே !

XXx

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

எட்டு மலைகளைப்  பந்தாய் எடுத்து எறி குவோம்

 ஏழு கடலையும் குடித்து ஏப்பமி டுவோம்

மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்

மகராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 4 புதன் கிழமை

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்

முந் நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்

தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 5 வியாழக் கிழமை

வேந்தன் செய்த சிருட்டிகள் போல வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும்  செய்கை இதென்று ஆடுபாம்பே!

XXX

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்

அதற்கு மேல் ஒரு கலையான தறிந்தோம்

மறுப்பற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 7 சனிக் கிழமை

சீறுபு லி யானை யாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறு பெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச்  செய்குவோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

யானை சேனை தேர் பரியாவும் அணியாய்

யமன் வரும்போது துணை யாமோ அறிவாய்

XXX

மார்ச் 9 திங்கட் கிழமை

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு  மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல் விழுந்து மேவு மாந்தர்

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும்  கிளி போல்

உடல் போனால் ஓடுவாரென்று என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 11 புதன் கிழமை

மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்

மானே என்றும் தேனே என்றும்  வான் அமுதென்றும்

ஒயிலான வன்ன மயிற் கொத்தவளென்றும்

ஓதாமற் கடிந்தோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 12 வியாழக் கிழமை

நாறு மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளும்  கழுவினும் அதன் நாற்றம் போமோ

கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்கா தென்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள் யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டேங்காண் 

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளை

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 14 சனிக் கிழமை

மனமென்னும் குதிரையை வாகனமாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயிற் பூட்டி

சினமென்னும் சீனியின் மேற் சீராய் ஏறித்

தெளிவிடம் சாரி விட்டு ஆடுபாம்பே

Xxx

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி ?

புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ ?அஞ்ஞா னம்?

போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே !

xxx

மார்ச் 16 திங்கட்  கிழமை

சதுர் வேதம் ஆறுவகை சாத்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்றும்  ஆகமம்

விதம் விதமானவான  வேறு நூல்களும்

வீணான நூல்களே என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரி  ந்துங் கதி எய்தல் இல்லையே

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே !

xxxx

மார்ச் 18 புதன்  கிழமை

ஆயிரத்தெட்டித ழ் வீட் டில்  அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம்  நிறைந்திடும் அன்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கி வளர் காரண ச் சித்தன்

கண்ணுள் ஒளியாயினான் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 19 வியாழக் கிழமை

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே

விண்டவர்கள் ஒருகாலும் கண்டிடார்களே

கொண்டகோலம் உள்ள வர்கள்  கோள் நிலை காணார்

கூத்தாடி கூத்தா டியே நீ ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்

Xxx

மார்ச் 21 சனிக் கிழமை

ஓம்காரக்  கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே

Xxxx

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்

Xxxx

மார்ச் 23 திங்கட் கிழமை

பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்

சிவ்வுருவாகியே  நின்றோம் என்றே

சீர் பாதங் கண்டு தெளிந்து

Xxx

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

தா ந்திமி திமி தந்தக் கோனாரே

தீந்திமி திமி திந்தக் கோனாரே

ஆனந்தக் கோனாரே – அருள்

ஆனந்தக் கோனாரே

–இடைக்காட்டுச் சித்தர்

Xxx

மார்ச் 25 புதன் கிழமை

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்ததென்று என்ணேடா தாண்டவக்கோனே

சி னமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – முத்தி

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே

Xxxx

மார்ச் 26 வியாழக் கிழமை

ஆறாதாரத் தெய்வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு

Xxxx

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

ஆதி பகவனையே பசுவே !

அன்பராய் நினைப்பாயேல்

சோதி  பரகதிதான் பசுவே !

சொந்தமது ஆகாதோ?

Xxx

மார்ச் 28 சனிக் கிழமை

மனம், வாக்கு, காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத

தினகரனை நெஞ்சசமத்தில் சேவித்துப் போற்றீரே

xxx

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

பாலிற்  சுவை போலும் பழத்தில் மது போலும்

நூலிற் பொருள் போலும் நுண் பொருளைப் போற்றீரே

Xxxx

மார்ச் 30 திங்கட்  கிழமை

கை  விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல்

மெய் விளக்குன்னுளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

Xxx

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்

முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே

Xxxx subham xxxx

ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி! (Post.7633)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7633

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.

சம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.

தெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.

ஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்?

இப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.

தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.

அருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.

தலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.

சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே

கலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய

கங்கரா கோணாகலா மதியக் கோடீர

சங்கரா சோணா சலா.

இதன் பொருள் :-

நாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத

புலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய

கம் – பிரமகபாலத்தைத் தாங்கிய

கரா – கரத்தை உடையவனே

கோணா – மாறுபடாத

கலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த

கோடீர – ஜடாபாரத்தை உடையவனே

சங்கரா – சங்கரனே

சோணாசலா – அருணாசலனே

சலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ

சங்கம் தா – சங்க வளையலைக் கொடு

பூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு

மேகலை தான் – மேகலையைக் கொடு

இந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.

அருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.

சோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.

அருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.

இப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.

பின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.

இராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

தமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை!

 tags – இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி, 

–subham–

Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7632

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Muslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)

1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை

முதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.

ஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.

“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு  என்றான் . தமிழன் தான்  சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச்  சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.

தமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே? என்றார்.

துலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.

மாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.

துலுக்கன் தோற்றான்; தமிழன் வென்றான்.

1850ம் ஆண்டு கதை

ஒரிஜினல் தமிழில் படியுங்கள். சுவையாக இருக்கும்.

subham

நூறு எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? (Post No.7631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7631

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2822020

ஒவ்வொரு மூலிகைக்கும் துவங்கும்  எழுத்தும் அதற்கான எண்களும் இதோ –

1அதி….. 7.வல்…… 11.திப்….. 15.நா…. 19.கண்….. 27.சிறு….. 33. நெ…… 37.மி…. 40.அரு…. 46.ஆடா….. 50.ஆடு……58.குங்…… 64.குப் …….69. முட…… 76.கீழா….. 81.நில….. 86.பொன்…. 92.கடு….. 97. வி……….

விடை கீழே உளது………………………

Answers

1அதிமதுரம் 7.வல்லாரை 11.திப்பிலி 15.நாயுருவி 19.கண்டங்கத்திரி 27.சிறுவழுதுணை 33. நெருஞ்சி 37.மிளகு 40.அருகம்புல் 46.ஆடாதோடை 50.ஆடுதின்னாப்பாலை, 58.குங்கிலியம் 64.குப்பைமேனி 69. முக்கத்தான் 76.கீழாநெல்லி 81.நிலவேம்பு, 86.பொன்னாங்காணி 92.கடுக்காய், 97. வில்வம்

–subham–

MY APPEARANCE AND DISAPPEARANCE (Post No 7630)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7630

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

DEATH BED ANECDOTES

During his last illness a number of Pennsylvania politicians called upon Thaddeus Stevens (1792- 1868) to pay their respects and in the course of conversation one of him remarked on his appearance.

“Ah, gentlemen, he said, it is not my appearance that I am concerned about jut now, but my disappearance.”

xxx

CUTTING THROAT IS A HOBBY!

Serope Davies, said Lord Byron, is a wit and a man of the world and feels as much as such a character can do.

Davies was a great gambler and was always backing horses, and when at Cambridge, as a student , he had a peculiar habit of attempting to cut his throat after every Newmarket meeting  when he lost.

Indeed so frequently did he amuse himself  in this way that on one occasion the doctor who was sent for declined to hasten himself when he heard it was Serope’s throat that he was required to attend to, saying,

“There is no  danger of him, I have sewn him up six times already”.

Serope Davies,was enabled to survive this little  peculiarity over forty years and died a Serope Davies,death in Paris.

xxx

I AM GOING ON MY JOURNEY; DOCTORS HELPED ME

Sir Samuel Garth (1661-1719) , the London doctor, lay dying.  The presence of officious friends troubled him; and when he saw his doctors consulting together, he raised his head from his pillow and said with a smile,

“Dear gentlemen! let me die a natural death”.

After he had received extreme unction, a friend approached him, and asked how he was feeling,

“I am going on my journey, was the answer.

They, pointing to doctors, have greased my boots already.

(unction= treatment with a medicinal oil or ointment)

Xxx subham xxxx

அப்பா ,உனக்காக ! எல்லாம் உனக்காக! (Post No.7629)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7629

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். அவனுடைய தந்தையை மரியாதைக் குறைவாக நடத்துவதில் அவனுக்குப் பேரானந்தம். அவன் தந்தையோ மஹா கிழடு . பொக்கை வாய். ஒன்றும் அறியாத அப்பாவி. அவருக்கு தினமும் உடைந்த பானை  ஓட்டில் கஞ்சி வார்த்தான் அந்தக் கிராதகன் . இதையெல்லாம் பேரன் பார்த்துக் கொண்டே இருந்தான் . அவன் பள்ளி செல்லும் வயதுடைய மாணவன். பள்ளியில் வாத்தியாரும் ‘மாதா , பிதா , குரு  தெய்வம்’ என்று சொல்லிக் கொடுத்ததை நெட்டுரு போட்டவன். அவனுடைய தந்தை தன் தாத்தாவை நடத்தும் முறை பிடிக்கவில்லை. ஆனால் முரட்டு அப்பாவிடம் சொன்னால் முதுகில் ‘டின் கட்டி’ விடுவார் என்பது தெரியும். அவன் மஹா புத்திசாலி. அவனுக்கு ஒரு நல்ல ‘ஐடியா’ (Idea) கிடைத்தது.

முரட்டு அப்பா வெளியே போனபோது கஞ்சி வார்க்கும் உடைந்த பானை ஓட்டை ஒளித்து வைத்தான் .

முரட்டு அப்பன் திரும்பி வந்தவுடன் அந்தக் கிழவனுக்கு கஞ்சி கொடுப்பதற்காக பானை ஓட்டைத் தே டினான் ; கிடைக்கவில்லை. ஆத்திரம் பொங்கியது. கம்பை எடுத்தான்; கிழட்டுத் தந்தையின் முதுகில் ஒரு போடு போட்டான் .

ஏ கிழவா! பானை ஓட்டில் கஞ்சி குடிக்கப் பிடிக்காததால் அதை ஒளித்துவைத்தாயா ? எங்கே யாவது தூக்கிப் போட்டாயா ? என்று தடியை ஓங்கினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவனது மகன் ஓடி வந்தான் ; “அப்பா தாத்தாவை அடிக்காதே ; நான்தான் அதை பத்திரமாக  எடுத்து வைத்து இருக்கிறேன்” என்றான் .

“ஏன்டா ! மடையா? அதை எதற்கடா தொட்டாய்? துஷ்டா!” என்றான்.

“அப்பா, அது உடைந்து ஓடாய்ப் போய்க் கிடக்கிறது. உனக்கு வயதாகும் போது கஞ்சி வார்ப்பதற்காக நான்தான் பத்திர படுத்தி வைத்தேன்” என்றான்.

பையன் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றிச் சொன்ன விஷயம் அவன் நெஞ்சில் பாய்ந்த வேலாகத் தைத்தது.

பின்னர் புதிய வெள்ளிக் கிண்ணம் (Silver Bowl)  வாங்கி வந்து கிழவனுக்கு நல்ல அமுது ஊட்டினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சமணர் கோவிலில் விவசாயி அழுதது ஏன்?

ஒரு நூறு  ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டான். அப்போது ஒரு கிராமத்தான் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான்.ஒரு முறை வானம் பொய்த்தது; பூமி வறண்டது ; பயிர்கள் பொய்த்தன. ஆயினும் வரி வசூல் செய்பவன் , அந்த கிராமத்துக்கு வந்து எல்லோரையும் விரட்டி, மிரட்டி, உருட்டி வரியை வாங்கிச் சுருட்டி கொண்டு சென்றான். கொடுக்காவிடில் வெள்ளைக்கார துரை துப்பாக்கியோடு வருவார் என்றும் அதட்டினான். அந்த அப்பாவி விவசாயியும் தன்னிடமிருந்து மாடு, வீடு , காடு , துணி மணிகள் எல்லாவற்றையும் விற்று வரி கட்டினான். அப்படியும் கொஞ்சம பாக்கி இருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு நாள் வெள்ளைக்கார கலெக்டரே குதிரையில் வரி வசூல் செய்ய வருவதை பார்த்தான். இனிமேல் இருந்தால் தன்னைப் பிடித்து அடித்து உதைப்பார்கள் என்று பயந்து ஒற்றைக் கோவணத்தோடு தலை தெறிக்க ஓடினான் .

ரொம்ப தூரம் போனவுடன் இளைப்பாறுவதற்காக ஒரு பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான் . அது ஒரு ஜைன மத கோவில் . எல்லா சமணர் சிலைகளும் ஆடையின்றி நிர்வாண கோ லத்தில் இருக்கும் ; ஏனெனில் சமண மத தீர்த்தங்கரர் என்னும் புனிதர்கள் ஜிதேந்திரியர்கள். ஐந்து புலன்களையும் வென்ற மாவீரர்கள்.அது இந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. அவனோ ஞான சூன்யம்.

நிர்வாண சிலையைக் கண்டான்; ஐயோ நான் வீட்டு வாசலை எல்லாம் விற்றபின்னர் எனக்கு இந்தக் கோவணம்தான் மிஞ்சியது. உனக்கு எவ்வளப்பா வரி பாக்கி? இப்படிக் கோவணம் கூட இல்லாமல் ஊருக்கு வெளியே வந்து அம்மணமாக நிற்கிறாயே ! என்று சிலையைக் கட்டிக்கொண்டு ‘கோ’ வென்று கதறி அழுதான்  .

Tags –பானை ஓடு , கோவணம் , நிர்வாண , சிலை, சமணர்

Xxxxsubham xxxx

கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்! (Post No.7628)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7628

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

ஏழு விஷயங்கள் ஒருவனின் கவலையை உடனடியாகத் தீர்க்கக் கூடியவையாகும்.

அவை யாவை?

  1. பண்டிதர்களின் சபை
  2. மஹாபாரதம்
  3. நல்ல கவிதையைப் படிப்பது
  4. வாத்திய இசை
  5. அருமையான பாட்டு
  6. அன்பான மனைவி
  7. நல்ல நண்பன்

இந்த ஏழும் இருப்பின் கவலை ஏது?

இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:

வித்வத்கோஷ்டி பாரதம் காவ்ய சிந்தா தந்த்ரி வாத்யம் சுப்ரயுக்தம் கேயம் |

இஷ்டா பார்யா தத்சமானம் ச மித்ரம் சத்ய: சோகம் நாசயந்தீஹ சப்த ||

Seven things could put an immediate stoppage to worry, viz –

An assembly of scholars,

The text of Mahabharata

Study of poetry

Instrumental music

Well accomplished song

A loving wife

And a suitable friend  (Translation by Dr N.P.Unni)

ஏழு ‘ஸ்காரம் இருந்தால் கவலையே இல்லை!

ஒருவனுக்கு ஏழு ஸகாரம் இருந்தால் கவலையே இருக்காது. அந்த ஏழு ‘ஸ’காரங்கள் எவை தெரியுமா?

  1. ஸம்பத்
  2. ஸரஸ்வதி
  3. ஸத்யம்
  4. ஸந்தானம்
  5. ஸதனுக்ரஹ:
  6. ஸத்தா
  7. ஸுக்ருதஸம்பார:

செல்வம், நல்ல கல்வி, சத்யம், நல்ல புத்திரர்கள்,நல்லோரின் ஆசீர்வாதம், இருத்தல்,  புண்யத்தின் சேர்க்கை இந்த ஏழும் இருந்தால் கவலை தான் ஏது? இவை கிடைப்பது துர்லபம் தான்!

இதைக் கூறும் சுபாஷிதம் இதோ:-

ஸம்பத்ஸரஸ்வதி ஸத்யம் ஸந்தானம் ஸதனுக்ரஹ: |

ஸத்தா ஸுக்ருதசம்பார: ஸகாரா: ஸப்த துர்லபா: ||

The seven Sakaras (words beginning with the syllable ‘Sa’ are said to be Sampat (wealth),Saraswathi (learning), Satyam (Truth), Santhanam (Childern) Sadanugrah (blessing of the noble), satta (existence) and sukrutasambhara (collection of merit).

(Translation by Dr N.P.Unni)

மூர்க்கரை எப்படி அடையாளம் காண்பது?

மூர்க்கரை அடையாளம் காண ஒரு சுலபமான வழி உள்ளது. அவர்களின் ஆறு குணங்களைப் பார்த்தாலே போதும் அவன் மூர்க்கன் தான் என்பதை உறுதிப் படுத்த. அந்த ஆறு குணங்கள் எவை?

  1. கர்வம்
  2. கெட்ட வார்த்தைகள்
  3. பகைமை
  4. அனாவசியமான விதண்டாவாதம்
  5. கடமையைச் செய்ய மறுப்பது
  6. ஒரு செயலைச் செய்யும் போது அலட்சியமாகச் செய்வது

இதை விவரிக்கும் சுபாஷிதம் இது தான்:-

மூர்க சின்ஹானி பீடதி கர்வோ துர்வசனம் முகே |

விரோதி தீர்கவாதி க்ருத்யக்ருத்யம் ந மன்யதே ||

There are six characteristics for a wicked fellow – pride, nasty words, enemity, given to much talk, refusal to do duty, and carelessness in actions.   

                                                                  (Translation by Dr N.P.Unni)

தீயே இல்லாமல் உடலை எரிக்கும் ஐந்து விஷயங்கள்!

தீயே தேவை இல்லை. கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் உடலைத் தானே தஹித்து விடும்!

  1. மனைவியைப் பிரிந்திருப்பது
  2. உறவினர்கள் வதந்தியைப் பரப்புவது
  3. கடன் இருப்பது
  4. மோசமான ஒருவனிடம் வேலை பார்ப்பது
  5. தரித்திரமான காலத்தில் பிரியமான ஒருவரைப் பார்ப்பது

இந்த ஐந்தும் தானே உடலை எரித்து விடும்.

இதைக் கூறும் சுபாஷிதம் இது:

பார்யா வியோக: ஸ்வஜனாபவாதோ க்ருணஸ்ய சேஷம் க்ருபணஸ்ய சேவா |

தாரித்ர்ய காலே ப்ரியதர்சனம் ச விநாக்நினா பஞ்ச தஹந்தி காத்ரம் ||

Five things burn one’s limbs without the use of fire – viz.,

Separation from the wife

Scandal from relatives

The balance of debt

Attendance on a wretched person

And the sight of a dear one in times of penury

                                                             (Translation by Dr N.P.Unni)

பட்டு பட்டென்று விஷயங்களை பிட்டு பிட்டு வைக்கும் சுபாஷிதங்களிடமிருந்து வாழ்க்கைக்கான பாடங்கள் பலவற்றைக் கற்கலாம்!

***

SWAMI CROSSWORD 2722020 (Post No.7627)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7627

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ACROSS

1. -7 LETTERS-OLDEST RELIGIOUS BOOK IN THE WORLD

6. – 6- NORTH; REPLY

9. – 4- (WITH LONG SOUND) GARLAND

10.– 6- THESAURUS/DICTIONARY IN SANSKRIT

11. – 7- THAT WHICH IS INDESTRUCTIBLE; INEXHAUSTIBLE

DOWN

1. – 10 LETTERS-KALIDASA’S WORK ON SEASONS

2.– 5- SONG OR VERSE IN SANSKRIT AND PRAKRIT; ALSO ANCIENT POEMS IN ZEND AVESTA

3. -6- VOW; FASTING; RELIGIOUS OBSERVANCE OF SILENCE ETC

4. – 5- CONTINUOUS FLOW OR SHOWER OF A THING.

5. – 7 – EIGHTH DAY AFTER FULL MOON OR NEW MOON; KRISHNA’S BIRTH DAY

7. – ONE OF THE THREE GUNAS; MEANS DARKNESS; INERTIA, LACK OF ACTION

8. – 7- MYSTIC POET OF KASI OF 15TH CENTURY

On Women, Wine & Vices -31 Quotations from Jataka Tales (Post No.7626)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7626

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

March 2020 Good Thoughts Calendar

FESTIVALS – MARCH 8- MASI MAKAM;  9 HOLI, KAMA DAHANAM; 14-KARADAIYAN NONBU; 25 UGADI NEW YEAR.

AUSPICIOUS DAYS – 5, 6, 12, 13, 22, 30

NEW MOON DAY/AMAVASYAI-24; FULL MOON DAY/PURNIMA- 9;

EKADASI/FASTING DAYS- 5/6, 20

Following quotations are taken from Buddhist Jataka Tales.

MARCH 1 SUNDAY

SECRET

His secret no man should disclose, but guard like treasure trove

Disclosure of a secret thing no wise man would approve

Xxx

MARCH 2 MONDAY

Wisemen to woman or a foe their secrets never betray

Trust not slaves by appetite; creatures of impulse they.

Xxx

MARCH 3 TUESDAY

No comrade ought thy innermost thoughts to share

The best of friends ofttimes most foolish are

And if too wise, of treachery beware

Xxx

MARCH 4 WEDNESDAY

FRIENDS

May good be with you all that here I see.

Betray ye not your friends. how vile is he

That sins against a friend with treachery

Xxx

MARCH 5 THURSDAY

All who on earth to friends have proved untrue,

As lepers here their sin must ever rue

And when the body falls, in hell are born anew

Xxx

MARCH 6 FRIDAY

DRINKING

Even modest folk, intoxicate

With wine, will most indecent be,

And wisest men, when drunk, will prate

And babble very foolishly

Xxx

MARCH 7 SATURDAY

This jar nor oil nor ghee doth hold

no honey or molasses here,

but vices more than can be told

are stored within its round sphere

xxx

MARCH 8 SUNDAY

Who dinks will fall, poor silly fool,

into some hole or pit impure

or headlong sink in loathsome pool

and eat what he would fain abjure.

Xxx

MARCH 9 MONDAY

The man that drinks is filled with pride

And his own parents will revile,

Or ties of blood and kin defied

Will dare the marriage bed defile.

Xxx

MARCH 10 TUESDAY

The man that drinks will dare to slay

A righteous priest or brahmin true

And then in suffering worlds for aye

The sinful deed will have to rue

Xxx

MARCH 11 WEDNESDAY

Who drink will sin in triple wise,

In word, in action, and in thought

Then sink to hell, to agonize

For all the evil they have wrought.

Xxx

MARCH 12 THURSDAY

Silver and gold and household gear

Oxen and fields and stores of grain

All, all is lost; strong drink, I fear

Has proved of wealthy home the bane

Xxx

MARCH 13 FRIDAY

GLUTTON

The slave to appetite no other pleasure knows

Poor careless fool, so blind is he to coming woes

Xxx

MARCH 14 SATURDAY

WOMEN

Four things can never sated be – list well to these my words—

Ocean, kings, brahmins, womenkind these four, O King of birds

All streams in earth that find their home will not the ocean fill

Though all may with its waters mix, something is lacking still

Xxx

MARCH 15 SUNDAY

BRAHMIN

A brahmin cons his Vedas and his legendary lore,

Yet still he sacred knowledge lacks and craves for more and more

Xxx

MARCH 16 MONDAY

KING

A king by conquest he holds the world, its mountains, seas and all

The endless treasures it contains his very own may call,

Yet sights for worlds beyond the sea, for this count too small.

Xxx

MARCH 17 TUESDAY

WOMAN

One woman may have husbands eight, compliant to her will,

All heroes bold, well competent love’s duties fulfil,

Yet on a ninth her love she sets, for something lacks still.

Xxxx

MARCH 18 WEDNESDAY

Women like flames devour their prey,

Women like floods sweep all away,

Women are pests, like thorns are they,

Women for gold oft go astray.

Xxx

MARCH 19 THURSDAY

That man with net might catch the breeze

Or single-handed bale out sea

Clap with one hand, who once should dare,

His thoughts let range on woman fair

Xxx

MARCH 20 FRIDAY

With women, clever jades , Truth aye is found a rarity

Their ways as much perplex as those of fishes in the sea

Xxx

MARCH 21 SATURDAY

Soft-speaking, ill to satisfy, as rivers hard to fill,

Down – down they sink; who women know should flee far from them still

Xxx

MARCH 22 SUNDAY

And whomsoever they may serve for gold or for desire

They burn him up like fuel burns cast in a blazing fire

Xxx

MARCH 23 MONDAY

Even a wise man may dare to exchange a word,

With goblin foe armed with sharp whetted sword,

Fierce snake he may assail, but never too bold

Alone with woman should he converse hold.

XXX

MARCH 24 TUESDAY

MURDER

One who knows how frail our life is, and how transient things of sense

Never thinks to slay another, but abides in innocence

Xxx

MARCH 25 WEDNESDAY

No king should conquer one who aye inviolate should be

No friend should get the better of a friend by treachery;

She of her lord that stands in fear is no true wife, I hold,

Nor children they noursh not a father when he is old

Xxx

MARCH 26 THURSDAY

No council hall is that wherein the wise do not appear

Nor wise are they that do not preach the Truth both far and near

The wise are they lust and hate and error lay aside 

And never fail to preach the Truth to mortals far and wide.

Xxx

MARCH 27 FRIDAY

Preach, glorify Truth, and lift the sages flag on high

Emblem of saints is goodly speech, Truth is the flag they fly.

Xxx

MARCH 28 SATURDAY

Right is like the high road

Wrong is but a bye-road

Right to heaven aye wins its way

Wrong to hell leads men astray

Xxx

MARCH 29 SUNDAY

From pride’s root cometh sloth; from sloth cometh loss and decay;

Decay is the parent of sin.  All sloth, O great king, put away.

Xxx

MARCH 30 MONDAY

Great king, ever open thine ears, and list to what people may say,

That seeing and hearing the truth, thou mayst win to good fortune thy way.

Xxx

MARCH 31 TUESDAY

I have true men to counsel me, free from all stain or blame

Ready to die, if need there be, for my good cause and name

I have a wife of equal birth, obedient, kind in word,

With children blest, good  looks, fair name, compliant with her lord

—Subham—

புத்தர் சொன்ன உணவுகள். மருந்துகள் (Post No.7625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7625

Date uploaded in London – 27 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

புத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று அனுமதித்தவுடன் உணவு, உடை, நடத்தை (நடை உடை பாவனை) முதலிய பல விஷயங்களில் கேள்விகள் எழுந்தன. புத்தர் உயிருடன் இருக்கும் வரை அவரே பதில் கொடுத்ததாக பிற்கால நூல்கள் காட்டுகின்றன. அவர் இறந்தவுடன் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை ஏற்பட்டவுடன் மூன்று முறை மஹா நாடு கூட்டி புதிய, புதிய விதிகளை இயற்றினர் . யார் புத்த பிட்சு? என்பதை ஒரு அறிஞர் குழு முடிவு செய்தது . மஹா நாட்டு பந்தல் வாசலில் அமர்ந்து கேள்வி கேட்டனர் . சரியான பதில்  சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் எழுந்த புத்த மத நூல்களில் அந்த விதிகள் தொகுக்கப்பட்டன. அவைகளில் உள்ள உணவு, மருந்து விஷயங்கள் பற்றிய சுவையான செய்திகள் இதோ ….

விநயபீடகா நூல்களில் இருந்து இவை தொகுக்கப்பட்டன. இதைத் தொகுத்தவர் நாளந்தா மஹாவிஹார பேராசிரியர் சி. எஸ். உபாசிக் ஆவார்; அது பாலி மொழியில் உள்ளது.

அகடயூஸ

பாசிப்பருப்பை பாதி கொதிக்கவைத்த கஞ்சி. இதை புத்த பிட்சுக்களுக்கு மருந்தாகக் கொடுப்பதை புத்தர் அனுமதித்தார்

அந்தோ பக்கம் , அந்தோ உ த்தம் / பிண்டம்

பவுத்த விஹாரத்துக்குள் சமைக்கப்பட்ட உணவை பிட்சுக்கள் சாப்பிடக்கூடாது .

வெளியில் பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். விஹாரத்துக்குள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பயன்படுத்துவது தவறு.

அம்ப பாண

மாம்பழச்சாறு சாப்பிடலாம். புத்தர் அனுமதித்த எட்டு வகைப் பழச் சாறுகளில் இதுவும் ஒன்று. இது ‘யாம காலிக’. அதாவது பகலிலும் இரவிலும் சாப்பிடலாம் .

பல காதநீய, பல பாஜக , பல பேஷஜ

எல்லா வகைப் பழங்களையும் சாப்பிட புத்தர் அனுமதித்தார் .

பாலி மொழி நூல்கள் குறிப்பிட்ட கறிகாய் ,பழங்களில் பலா , மா , தேங்காய் , புளி ,கத்தரிக்காய் முதலியன உள்ளன .

‘பல பாஜக’ என்பவர் சங்கத்துக்கு பழங்களை விநியோகிப்பவர் .

‘பல பேஷஜ’ என்பன மருந்துச் சரக்குகள் — பிப்பலி,  விளங்க , மரிச ஹரிதிக, விபிடக , ஆமலக, கொத்தபல(அதாவது மிளகு, கடுக்காய், திப்பிலி, நெல்லிக்காய் முதலியன)

பழம்’ தமிழ்ச்  சொல்லா?

2700 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதுள்ள பாகிஸ்தானில் பிறந்த, உலக மகா இலக்கண மேதை பாணினி , பலம் /பழம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் . ஆனால் வேதத்தில் ‘பிப்பல’ என்ற சொல்லே உளது. இது ‘ஆப்பிள்’ (Pippala = Berries= Apple) போன்ற சொற்களைத் தோற்றுவித்தது . இதுவே பல /பழ ஆயிற்றா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பாலி மொழி நூல்களில் “பல” (பழம்) மலிந்து கிடக்கிறது.

புத்தர் அனுமதித்த எட்டு வகை பல/பழ  ரசங்கள்

மாம்பழ ரசம், நாவல் பழரசம் , காட்டு வாழைப்பழ ரசம், வாழைப் பழரசம், திராட்சைப் பழரசம், ‘மது ரசம் /இலுப்பைப் பழம்’ , ‘சாலூக பாண / அல்லிப் பூ வேரின் சாறு’ , ‘பாருசக/ பலசாக /தடச்சி’- க்ரிவியா ஏஸியாடிகா Grewia asiatica

கோ ரஸா

புத்தர் அறிவித்ததாக பவுத்த நூல்கள் செப்புவதாவது-

பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைச் சாப்பிட நான் உங்ககளை அனுமதிக்கிறேன்- பால், தயிர், மோர், நெய் , வெண்ணெய்.

இப்போது வெளிநாட்டில் பரவி வரும் (Vegan) வேகன் கொள்கை பழங்கால இந்தியாவில் கிடையாது. வெளிநாட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாமிசம் , மருந்து ஊசி ஆகியன கொடுப்பதால் பலருக்கும் ‘லாக்டோஸ்’ (Lactose) (பாலில் உள்ள ஒரு பொருள்) ஒவ்வாமை வந்து விட்டது. ஆகையால் பால் பொருட்கள் எதையும் உபயோகிக்கக்கூடாது என்ற வேகன் VEGAN கொளகை பரவி வருகிறது. பழங்கால ரிஷிகள் பாலையும் தேனையும் கலந்த உணவையே சாப்பிட்டனர். ஒரு நாடு வளம் பொருந்தியது என்று சொல்ல, அந்த நாட்டில் “பாலும் தேனும் ஆறாக ஓடிற்று” என்ற சொற்றோடர் சம்ஸ்கிருத நூல்களிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டது .

மண் சோறு சாப்பிடு (கரதின்னகாபாதோ)

ஏதேனும் ஒரு வீட்டில் பிச்சை  கேட்டபோது அந்த வீட்டுப் பெண்மணி , புத்த பிட்சுவை மயக்குவதற்காக ஏதேனும் மாய மருந்துகளை , வசிய விஷயங்களைக் கலந்ததாகத் தெரிந்துவிட்டால் , அந்த மாய, வசியத்தை முறிக்க, கலப்பையில் ஒட்டியிருக்கும் ‘சேறு/ சகதி’யைக் கரை த்துக் குடிக்க வேண்டும் . இதன் பெயர் ‘சீதா லோலி’. சீதா தேவி இப்படிக்கு கலப்பையில் உழுகலனில்  பிறந்ததால் அவளுக்கு ஜனக மாமன்னன் ‘சீதா’ என்று பெயரிட்டான் . ஒரு பூமியை யாகத்துக்காக  செம்மைப் படுத்துகையில் மன்னன் வந்து ‘தங்க ஏர்’ கொண்டு அந்த இடத்தை  உழுதல் பழங்கால வழக்கம் .

இந்து மஹா அதிசயம்

உலகில் இந்துக்களைப்  போல இயற்கை நண்பர்கள் எவருமிலர் . ஸீதாவுக்கு ‘கலப்பை/ஸீதா’ என்று பெயரிட்டது போல பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலைக்கு பறவைப் பெண் (Shakuntala= Bird) என்று பெயரிடப்பட்டது. இதுபோல புராண இதிஹாசங்களிலும் , வேத ரிஷிகளின் பெயர்களிலும் 50 பெயர்கள் பறவைகள், மிருகங்களின் பெயர்கள் ஆகும் .

அரசமரம் – பிப்பலதான்

ஆந்தை – கௌசிகன்

ஆமை – காஸ்யபன்

காகம் – பரத்வாஜன்

வேணு – மூங்கில்

இப்படி ஐம்பது பெயர்கள் கிடைக்கின்றன.

இந்துக்கள் இயற்கையில் இன்பம் அனுபவித்தார்கள். காகத்துக்கும் ஆந்தைக்கும் மனிதர்களை போல மதிப்பு தந்தார்கள் .

இந்தப் பெயர்கள் பற்றிய எனது ஆராய்சசியைத் தனியே வரைவேன். தமிழிலும் ஆந்தை (பிசிர் ஆந்தை) காகம் (காக்கை பாடினியார் ) முதலியன உண்டு. தமிழ், சம்ஸ்கிருத பெயர் பட்டியலை பின்னர் தருகிறேன்.

சங்க இலக்கியத்தில், குப்தர்கள் கல்வெட்டுக்களில்  20க்கும் மேலான நாகர் (பாம்பு) பெயர்கள் இருக்கின்றன.

Xxx

குருடு , ஊமை ,செவிடு

குருடர்கள், செவிடர்கள், ஊமைகளை புத்த பிட்சுக்களாக ‘சன்யாசம்’ கொடுக்கக்கூடாது. அந்த மாதிரி நடந்தால் அதில் பங்கேற்போரும் தவறு செய்தவர்களே.

இணைந்த கை விரல் உடையோர், ஆறு விரல்கள் உடையோரையும் பிட்சுக்களாக்கக்கூடாது. நொண்டி, முடவன்,குள்ளன் ஆகியோரும் பிட்சுக்களாகத் தடை விதித்தார் புத்தர். பிராமணர்கள் பவுத்தர்களாக மதம் மாறியபோது அவருடைய முகம் பிரகாசத்தால் ஒளிவிட்டது.

பாலி மொழி அகராதியையும் புத்தமத அகராதியையும் ஆராய்ந்தால் ஆரிய – திராவிட மொழிக் கொள்கைளைத் தவிடு பொடியாக்கலாம் . தமிழும் சம்ஸ்கிருதமும் மிகவும் நெருக்கமானவை, ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை  என்பதை நிரூபிக்கலாம். உலகிலுள்ள பழங்கால மொழிகளில் தமிழும் சம்ஸ்கிதமும் விரவிக் கிடப்பதைக் காட்டி இங்கிருந்தே நாகரீகம் பரவியது என்பதையும் காட்டலாம். திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெள்ளைக்காரன் கொள்கைக்கு முடிவு கட்டலாம் .

Xxx

புத்தர், பெண்களுக்கு எதிரானவர் என்பதை இந்தியாவின் ராஷ்டிரபதியாக இருந்த , உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவரது தம்மபத மொழிபெயர்ப்பில் எடுத்துக் காட்டுகளுடன் தந்தார். (முன்னரே இதுபற்றி எழுதிவிட்டேன்) பிரதம சிஷ்யன் ஆனந்தன் கெஞ்சிக் கூத்தாடவே ‘தொலைந்து போ, பெண்களையும் புத்த பிட்சுணிகளாக்கு !’ ஆனால் ஒன்றைக்  குறித்துக் கொள் ; எனது மதம் எக்காலம் வரை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று கணக்கிட்டேனோ அதில் பாதி காலத்தில் என் மதம் போய்விடும்’ என்றார் .

இன்றும் புத்த மத நூல்ளில் ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்றே விதிகள் உள .

ஒரே ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம் .

ஆராம (தோட்டம் ,பூங்கா)

புராதன இந்தியாவில் மக்கள் இன்பத்துடன் வாழ்ந்தனர். நகரெங்கும் பூங்காக்களும் தோட்டங்களும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பீஹார் மாநிலத்தில் வைசாலி நகரில் 7000க்கும் அதிகமான தோட்டங்கள் (ஆராம) தோப்புகள், நந்தவனங்கள், பூங்காக்கள் இருந்தன. இவைகளுக்கு புத்த பிட்சுணிக்கள் போகக்கூடாது என்று புத்தர் தடை விதித்தார்.

புத்தர் சொன்ன எல்லாம், பிற்காலத்தில் மூன்று மஹாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் ‘‘த்ரி பீடகம்’ (மூன்று பெட்டிகள்) என்ற புஸ்தகங்களாக வெளியிடப்பட்டன. புத்தர் உலவியது முழுதும் இன்றைய இந்தியாவின் பீஹார் , உத்தர பிரதேச மாநிலங்களாகும் . பீஹார் என்ற பெயரே (புத்த) ”விஹார” என்ற சொல்லில் இருந்து வந்ததே !

Reference

kd.6.34.21 Then the Lord on this occasion, having given reasoned talk, addressed the monks, saying: “I allow you, monks, five products of the cow: milk, curds, butter-milk, butter, ghee. There are, monks, wilderness roads with little water, with little food; it is not easy to go along them without provisions for the journey. I allow you, monks, to look about for provisions for a journey: husked rice for him who has need of husked rice; kidney-beans for him who has need of kidney-beans; beans for him who has need of beans; salt for him who has need of salt; Vin.1.245 sugar for him who has need of sugar; oil for him who has need of oil; ghee for him who has need of ghee. 

—subham —