‘இனிய தமிழ்நாடு’ – கம்பன் பாராட்டு (Post No. 3510)

Written by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  7-58 am

 

Post No.3510

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழ் மொழியைப் பாராட்ட வாய்ப்பு கிடைத்தால் கம்பன் நழுவ விடுவானா? பால காண்டத்தில் அவன் துவக்கிய பாராட்டுரை கிஷ்கிந்தா காண்டம் வரை நீடிக்கிறது. அகத்திய மகரிஷியைக் குறிப்பிட்ட

போதெல்லாம் தமிழையும் சேர்த்தே பாடினான்.

 

இப்பொழுது, சீதையைத் தேடுவதற்குப் புறப்பட்ட வானரங்கள் ஒவ்வொரு திசையை நோக்கியும் பட்டாளம் பட்டாமாகப் புறப்பட்டார்கள். தென் திசை நோக்கிச் சென்ற வானரங்கள் குறித்து கம்பன் பாடுகிறான்:–

 

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ

மனையின் மாட்சிகுலாம் மலை மண்டலம்

வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்

இனிய தென்  தமிழ்நாடு சென்றெய்தினார்

-ஆறுசெல் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானர வீரர்கள், நீர்வளம் கொண்ட சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, இல்லறத்தின் சிறப்புமிக்க சேரநாட்டைச் சேர்ந்தார்கள். அங்கும் சீதையைக் காணாமல், இனிய தமிழ் வழங்கப் பெறுகின்ற தென் பாண்டிநாட்டைச் சேர்ந்தார்கள்.

அத்திருத் தகு நாட்டினை அண்டர்நாடு

ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ

எத்திறத்திலும் ஏழ் உலகும் புகழ்

முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்

 

பொருள்:_

ஏழ் உலகத்திலும் புகழப்படுகின்ற முத்துக்களையும் இயல்-இசை-நாடகம் என்ற மூன்று தமிழையும் தன்னிடத்தில் தோற்றுவித்து பெருமை பெறுவதால் செல்வத்தால் சிறப்பு பெற்ற அந்தப் பாண்டிய நாட்டை தேவர் உலகம் ஒத்திருக்கும் என்றால் அது ஏற்புடையதுதானே.

 

முத்தும் முத்தமிழும் தந்த நாடு பாண்டியநாடு!

 

இதைத் தொடர்ந்து வரும் மூன்றாவது பாட்டிலும்

 

என்ற தென் தமிழ்நாட்டினை எங்கனும்

சென்றுநாடித் திரிந்து திரிந்தினார்

பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்

துன்றல் அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்

 

பொருள்:

ஒழுக்கத்தில் சிறந்த அந்த வானரர்கள், அழகிய தமிழ்நாடு என்று மேலே சிறப்பிக்கப்பட்ட பாண்டிய நாட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். அடர்ந்த இருள் போன்ற கூந்தலை உடைய சீதையைக்  காணாமல்,  துன்பம் கொண்டவர்களாகி இறக்கும் நிலமைதனை எட்டிப்பார்த்து மேலே சென்றார்கள்.

 

இதை சங்க காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் 30,000 வரிகளில் ஏறத்தாழ 20 இடங்களில் மட்டுமே தமிழ் என்ற சொல்லைக் காணலாம்!

 

தமிழ்நாடு என்ற சொல் பரிபாடல் திரட்டில் (9-1) என்ற ஒரே இடத்தில் மட்டும் காணப்படும். பொதுவாகத் திரட்டில் வரும் விஷயங்கள் பிற்காலத்தியவை என்ற கருத்து உண்டு.

 

ஆனால் தமிழகம் என்ற சொல் மிகப்பழைய பகுதியான புறநானூற்றிலேயே (168-18) காணப்படுகிறது.

 

அந்த காலப் புலவர்கள், தமிழ்  வாழ்க என்று வெறும் கூச்சல் போடுவோர் அல்ல. ஆக்கபூர்வமான வேலைகள் செய்து தமிழை வளர்த்தவர்கள்!

 

—Subahm–

 

பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள் (Post No.3438)

 

Written by London swaminathan

 

Date: 11 December 2016

 

Time uploaded in London: 7-06 am

 

Post No.3438

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பெண்களின் குரலைக் குயில் போல இருக்கிறது என்றும் சொல்லைக் கிளி போல இருக்கிறது என்றும் போற்றுவது கவிகளின் மரபு.

 

தமிழ் மொழியைத் தேனினும் இனிய மொழி என்று பாராட்டுவதை அறிவோம். ஆனால் ஒரு சொல்லை எடுத்து அதைத் தேனிலும் அமிர்தத்திலும் குழைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?

இது கம்பனும் அவரைப் பின்தொடர்ந்து பாரதியாரும் செய்த ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியின் முடிவுதான் இந்த இரண்டு பாடல்களும்!

 

 

 

அளவு இல கார் எனும் அப்பெரும்பருவம் வந்தணைந்தால்

தளர்வர் என்பது தவம் புரிவோர் கட்கும் தகுமால்

கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்

 

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ

—–கம்பன் பாடல், கிட்கிந்தாக் காண்டம்,கார்காலப் படலம்

 

பொருள்:–

ஓர் அளவில்லாத சிறப்புடைய கார்காலம் வந்து விட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் மனம் தளர்ந்து போவார்கள். ஆகவே தேன், அமிழ்தம் ஆகிய இரண்டிலும் தோய்த்து எடுத்தது போன்ற இனிமையான சொற்களைப் பேசும் சீதையின் தோள்களைத் தழுவிய இராமனுக்கு, கார்காலம் துன்பம் தந்தது என்றால் அது துன்பம் என்று கொள்ளத் தக்கதோ?

 

பாரதி என்ன கம்பனுக்கு சளைத்தவனா?

இதோ பாருங்கள்! பாரதி பாட்டை!

 

“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை

வேலவா! — அங்கொர்

வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடி

யானது வேலவா!

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு

வள்ளியைக் — கண்டு

சொக்கி மரமென நின்றனை தென்மலைக்

காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட

பாதகன் – சிங்கன்

கண்ணிரண்டாயிரங் காக்கைக்கிரையிட்ட

வேலவா!

பல்லினை காட்டி வெண்முத்தைப் பழித்திடும்

வள்ளியை –  ஒரு

பார்ப்பனக் கோலந்தரித்துக் கரம்தொட்ட

வேலவா!

–சுப்பிரமணிய பாரதியார்

ஆக இரு கவிஞர்களும் நமக்கும் அவர்களுடைய கவிதைகளைத் தேனில் குழைத்துத் தந்துவிட்டார்கள்!

 

தேன் தமிழ்

 

தமிழுக்குள்ள ஏராளமான சிறப்பு அடை மொழிகளின் பட்டியலை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கொடுத்துவிட்டேன். தமிழ் என்றாலேயே இனிமை என்பது புலவர்தம் கருத்து. ஆனால் கம்பன் மேலும் ஒரு படி சென்று தமிழ் என்றால் தேன் என்பான்:-

 

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்

தமிழ் நிகர் நறவமும் தனித் தண் தேறலும்

இமிழ்கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன

கமழ்வுறத் துவன்றிய கணக்கில் கொட்பது

–கிட்கிந்தா காண்டம், பிலம்புக்கு நீங்கு படலம்

 

பொருள்:-

மேலும் அந்த நகரம் அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும், தமிழ் மொழியைப் போன்ற தேனும் குளிர்ந்த மதுவும், இனைய பழங்களின் தொகுதியும் — இவை போன்ற மற்ற உணவுப் பொருட்களும் நறுமணம் வீசுமாறு நிறைந்துள்ள எல்லையற்ற பெருமை உடையது — கிட்கிந்தா காண்டம்

 

தேன் தமிழை நாமும் மாந்தி, தமிழ் போதையில் திளைப்போம்.

 

–subham–

 

வாட் இஸ் யுவர் புரஃபஷன்? நோ ப்ராப்ளம்? –கம்பன் காட்டும் தலைவனின் தத்துவம்!

4c39e-kamban

Written by S NAGARAJAN

Date: 13 September 2016

Time uploaded in London: 8-48 AM

Post No.3150

Pictures are taken from various sources; thanks.

 

.நாகராஜன்

 

myst-kambar-fdc

வாட் இஸ் யுவர் புரஃபஷன்?  (What is your profession?)

எது வினை?

நோ ப்ராப்ளம்? (No Problem?)

இடர் இலை?

யுவர் வைஃப் அண்ட் இன்டெலிஜெண்ட் சில்ட்ரன் ஆர் ஆல் வித் மைட்டி ஸ்ட்ரெந்த்? (Your wife and intelligent children are all with mighty strength?)

இனிதின் நும் மனையும் மதி தரும் குமரரும் வலியர் கொல்?

இன்று நம் நாட்டில் எந்தத் தலைவரேனும் நினைத்த இடத்திற்குத் தனியாகச் சென்று தமது குடி மக்களைப் பார்த்து இப்படி கேள்விகளைக் கேட்க முடியுமா?

குறைந்த பட்சம் கற்பனையிலாவது?

ஊஹூம், முடியாது! தொண்டர்களுடனும் குண்டர்களுடனும் அல்லவா அவர்கள்நெடும் பயணம்மேற்கொள்கின்றனர்!

ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் உளவுத்துறை ரிபோர்ட் கே சொன்ன பிறகு தனது கட்சித் தொண்டர்கள் பாதுகாப்பாகச் சுற்றி வர புல்லட் ஃப்ரூப் மேடையில் மக்கள் தலைவர், ‘அனைவரும் எப்படித் தம் மீது அன்பைப் பொழிகிறார்கள்என்று மீடியாக்காரர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துவீர உரைஆற்றுவார்.

ஆனால் கம்பன் காட்டும் ராம தத்துவம் வேறு!

ராமன் நிஜமான தலைவன் என்பதைக் காட்ட விரும்புகிறான் கம்பன்.

அயோத்தி நகரத்து மாந்தர் இராமனும் இலட்சுமணனனும் எப்போது வரப் போகிறார்கள் என்று காத்திருப்பார்களாம்!

எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்

முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா

எது வினை இடர் இலை இனிதின் நும் மனையும்

மதி தரு குமரரும் வலியர் கொல்எனவே’                                                         

  • (பாடல் 134, திரு அவதாரப் படலம், பால காண்டம்)

நகர  மாந்தருடனான இராமனின் முதல் பேச்சு இங்கு இப்படிப் பதிவாகிறது!

என்ன ஒரு அற்புதமான சுருக்கமான பேச்சு!

கருணை சாதாரண  கருணை அல்ல, முதிர் தரு கருணை!!

உமது மக்கள் வலியர் கொல் என்று கேட்கவில்லை!

மதி தரு குமரர் என்கிறான்.

ஜீனியஸ்இன்டெலிஜெண்ட் புத்திரர்கள் நலமா என்கிறான்.

ஆக அயோத்தி வாழ் மக்களின் அறிவுத் திறனும் இராமனின் அருள் திறனும் ஒரு பாடலில் நான்கே வரிகளில் டிராமாடிக்காகநாடக பாணியில் சொல்லப் படுகிறது.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைவனின் தத்துவம் விளக்கப்படுகிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும்செக்யூரிட்டி தேவையில்லாத மக்கள் தலைவன் இராமன் என்பதையும் கண்டு மனம் மகிழ்கிறோம்!

இராமனைப் போற்றிப் புகழ்வதா அல்லது அவனை நமக்கு இப்படி இனம் காட்டும் கம்பனைப் புகழ்வதா?!

என் ஓட்டு கம்பனுக்கே!

உங்கள் ஓட்டு?!

******

 

 

 

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137)

sugreeva

Written by London Swaminathan

 

Date: 9 September 2016

 

Time uploaded in London: 9-04 AM

 

 

Post No.3137

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகம் முழுதும் அகதிகள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுக்குப் பல நாடுகள் அடைக்கலம் தருகின்றன. இவையெல்லாம் சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடு. யாராவது ஒருவர் உன்னைச் சரண் அடைகிறேன் என்று மற்றவர் காலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்து தர்மக் கோட்பாடு. ராமாயணத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பேசப்படுவது சரணாகதி தத்துவம் ஆகும். இது ராமாயணத்தின் பிற்பகுதியில் விபிஷணன் சரண் அடையும்போது பெருமளவில் விவாதிக்கப்படுகிறது; விவரிக்கப் படுகிறது. அதற்கெல்லாம் பீடிகை போடும்படியாக கிஷ்கிந்தா காண்டத்திலேயே கம்பன் சில பொன்மொழிகளை உதிர்க்கிறான். இதோ இரண்டு பொன் மொழிகள்:–

 

ஒடுங்கல் இல்  உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி

தொடங்கின மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ

 

பொருள்:-

பரந்த இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் விரும்பியவற்றை உதவி, வேள்வி, தவம் முதலியவற்றை நிறைவேற்றும்படி மேலோர் செய்வர் அல்லவா? அததகைய அறங்களுள், எமன் போன்ற எதிரிக்குப் பயந்து நம்மிடம் சரண் அடைந்தவர்க்கு அஞ்சாதே என்று அருள் காட்டுவதை விடப் பெரிய அறம்/தர்மம் வேறு ஏதாவது உளதோ?

 

இது யார் சொன்னது? எங்கே சொன்னது?

 

ராம லெட்சுமணர்களைச் சந்தித்த அனுமன் சுக்ரீவனுக்கு, வாலியினால் ஏற்பட்ட துனபங்களை விவரித்துவிட்டு சரண் அடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது (இந்து) தர்மம் அல்லவா? என்கிறான்.

28_24_kishkinta_vali-fight-ground

சுக்ரீவன் இதைத் தன் வாயாலேயே சொல்லி காலில் விழும்  ஒரு பாடலும் வருகிறது:–

 

முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை

இருள்நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர இக்குன்று

அரண் அடைத்து ஆகி உய்ந்தேன்  ஆர் உயிர் துறக்கலாற்றேன்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

பொருள்:-

என் அண்ணனான வாலி, தம்பியாகிய என்னை அடிப்பதற்காக ஓங்கிய கைகளுடன் இவ்வுலகத்துக்கு அப்பாலும் எல்லா உலகங்களிலும் என்னைத் துரத்தி வந்தான். இம்மலையே பாதுகாப்பான இடம் என்பதால் இங்கே வந்தேன்; உயிரை விடவும் மனம் இல்லை; உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும் – என்று சொன்னான் சுக்ரீவன்

 

என்னைத் தாங்குதல் தருமம் என்றான் என்ற வாக்கியத்தில்தான் இந்து தர்மக் கோட்பாடு பளிச்சிடுகிறது.

 

இன்று உலகம் முழுதும் அகதிகள் வாழ வழிவகுத்தது இந்து மதம். சுக்ரீவன், வாலி என்பவர்கள் ஓரிரு தனி நபர்கள். ஆயினும் போரில் சரண் அடைந்தவர்களையும் காப்பாற்றுவது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது. சரியான ஆயுதம் இல்லாதவர்ளையும், ஆயுதமே வைத்திராதவர்களையும் தாக்கக்கூடாது என்பதும் தெளிவாககக்  கூறப்பட்டுள்ளது.

 

புருஷோத்தமன் (போரஸ்) என்ற மன்னனை அலெக்ஸாண்டர் வென்று விட்டான். உனக்கு என்ன வேண்டும்? உயிர்ப்பிச்சை வேண்டுமா? இவ்வளவு சிறிய மன்னனாலும் என்னையே திணறடித்துவீடாய்! — என்றான். அவனோ சிறிதும் அஞ்சாமல் என்னை மன்னன் போலவே நடத்த வேண்டும் என்றான். அதன்படியே செய்தான் அலெக்ஸாண்டர். இது தர்மம் என்பதால் அப்படிக்கேட்டான் புருஷோத்தமன (போரஸ்). இந்துமதத்தின் பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறிந்து யோகிகளைச் சந்திக்கவே இந்தியாவுக்கு வந்தவன் அலெக்ஸாண்டர் என்பதால் உடனே அவனை மன்னன் போலக் கருதி அவன் ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைத்தான் என்பதை நாம் அறிவோம்.

 

வாழ்க சரணாகதி தத்துவம்!! வாழ்க அகதிகள்!!

 

 

 

இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010)

heart-pierced-by-cupids-a-007

 

Article written by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3010

Time uploaded in London :–  7-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள், காதல் இவைகளைக் குறிப்பிடுகையில் இதயம் போன்று ஒரு படம் எழுதி அதில் ஒரு அம்புக்குறி போடுவதைக் காண்கிறோம். இது அதர்வ வேதத்தில் உள்ள உருவகம்; இதை இன்றும் காதலர் தினத்தன்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது பற்றியும் தமிழில் இருதயம் என்றே சொல் இல்லை என்பதையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். குருத்து என்பதே ஹ்ருத் என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது, இதுவே ஹார்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம் என்றும் குருதி (இரத்தம்) என்பதே இதற்கு ஆதாரம் என்றும் எழுதினேன். இதன் மூலமாக பழைய மொழிக் கொள்கைகள் பித்தலாட்டம் என்றும் ஆரிய-திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு இல்லை என்பதையும் நிலைநாட்டினேன். இதை உலகம் விரைவில் ஏற்கும்.நிற்க.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு. இதுவும் இந்துக்கள் கற்பித்ததே.

அன்பு எனும் சிறையில் அகப்பட்ட யாருக்கும் இது பொருந்தும்! ராமனை எப்போதும் தன் இதயத்தில் காட்டும் அனுமனின் படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

 

கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது. ராவணனின் இதயத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாம்!

 

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட

எயிலுடை இலங்கை வேந்தன் இதயம் ஆம்  சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

உயர்ந்த மதிலையுடைய இலங்கைக்கு அரசனான ராவணன், மயில் போன்ற சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைப்பதற்கு முன்னர், தனது இதயம் என்னும் சிறையில் வைத்தான். அப்பொழுதே வெய்யிலில் உருகும் வெண்ணை போல அவனது மனமும் உருகிற்று. (ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்).

 

 

வெய்யிலில் உருகும் வெண்ணெய் என்ற உவமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கது.

 

நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திலேயேதான் இதுபோன்ற உவமைகள் தோன்ற முடியும். இது அதர்வண வேதத்திலேயே வருவதால் கம்பன் அந்த உவமையைக் கையாண்டதில் வியப்பொன்றும் இல்லை. பாரத சமுதாயமே பழங்கால உலகின் தலைவன், முதல்வன் என்பதில் இனிமேலும் ஐயப்பாட்டிற்கு இடமுண்டோ?

 

–சுபம்—

 

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda ( Research article written by London Swaminathan, posted on 26 September 2012)

 

உங்களுக்குப் பிடித்த ‘ஐயோ’ பாடல் எது?

IMG_4887 (2)

பாரதி பழகுவோம்

உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது?

 

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by S NAGARAJAN

Date : 9 September  2015

Post No. 2141

Time uploaded in London: – காலை 10-10

 

By .நாகராஜன்

 

என்ன கேள்வி இது?

இது என்ன சார், கேள்வியே சற்று விபரீதமாய் இக்கிறது? யாருக்காவது ஐயோ பிடிக்குமா?

 

ஐயோ, ஐயோ. அந்தஐயோவைச் சொல்லவில்லை சார் இந்த ஐயோ கொஞ்சம் வேறு மாதிரி! ஆனாலும் கட்டுரையின் கடைசியில் நீங்கள் நினைக்கும் அந்தஐயோவும் வருகிறது.

 

உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? கீழே அறிஞர்களும் பக்தர்களும் ரசித்த பாடல்கள் பல உள்ளன! பாருங்கள், படியுங்கள், பின்னர் தேர்ந்தெடுங்கள்!

 

 

அழியா அழகுடையான்

முதலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல். இதன் சிறப்பை எடுத்துக் கூற ஒரு பெரும் நூலே எழுத வேண்டும். சந்த அமைப்பு, பொருளின் ஆழம், நாடகக் காட்சி, சொல்லாட்சி, உவமைத் திறன், அடுக்கிக் கொண்டே போய் க்ளைமாக்ஸ் காண்பிப்பது என இப்படி இந்தப் பாடலைத் திறனாய்வு செய்வதற்கான அம்சங்களைக் கூறிக் கொண்டே போகலாம்! ரசிக்கும் வரை ரசியுங்கள்.

 

 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் இலக்கியத்தின் சிகரமான பாடல்களில் சத்தியமாக இதுவும் ஒன்றுஏன், உயர்வு நவிற்சி அணி இல்லாமல் தமிழ் இலக்கியத்தின் என்பதை உலக இலக்கியத்தின் என்று கூட சுலபமாக மாற்றிச் சொல்லி விடலாம். அப்படி ஒரு தகுதி கொண்ட பாடல் இது.

 

 

வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் 

 பொய்யோவெனும் இடையாளொடும் இடையானொடும் போனான்    

 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ                                 

ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்!

 

லட்சுமணன் சீதையுடன் ராமபிரான் சென்ற காட்சி! சூரியனின் ஒளியே வேத புருஷனான ராமனின் மேனி ஒளியில் மங்கியதாம். அவன் மை வண்ணனா, மரகத நிறத்தவனா? அவனுக்கு உவமையாகக் கடலைச் சொல்வதா, மழை முகிலைச் சொல்வதா, பொறுக்க முடியாத வர்ணனை நிலையில் ஐயோ என்று கம்பன் மயங்குகிறான். இதன் அருமையை எழுத சில வரிகள் போதாது; இடம் கருதி அடுத்த பாடலுக்குப் போவோம்.

 

 

சிந்தை கவர்ந்த செய்யவாய்

 

திருப்பாணாழ்வார் ஜாதியில் தாழ்ந்தவர் என்று மக்களால் ஒதுக்கப்பட்டாலும் கூட இறைவனின் நீதியால் உயர்ந்தவர். ஶ்ரீரங்கத்தில் லோகசாரங்கர் என்னும் கோவில் பட்டர் அவரை ஒதுக்கித் தள்ளுகிறார். பக்தர் என்பதால் அவர் மீது பட்ட அடியை இறைவன் தானே ஏற்க, லோகசாரங்க பட்டர் மனம் வருந்தி அவரை இறைவன் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறார். இறைவனைத் தரிசித்த ஆழ்வார் உணர்ச்சிப் பெருக்கால் பாடல் மழை பொழிகிறார். அவற்றில் இரு பாடல்கள்!

 

கையினார் சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்                              

மெய்யனார் துளப விரையார் கமழ் நீள்முடியெம்                                  

 ஐயனார் அணியரங்கனார் அரவினணை மிசை மேய மாயனார்                  

செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

 

vatapatra sayi

இன்னொரு பாடல்:-

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்                            

ஞாலமேழும் உண்டான அரங்கத்தரவினணையான்                                  

கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்                        

நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே

 

மாயனார் செய்யவாய் சிந்தை கவர்ந்ததையும் நீலமேனி நெஞ்சினில் நிறை கொண்டதையும் உணர்ந்த ஆழ்வார் அதைச் சொல்ல வார்த்தையின்றி ஐயோ என வர்ணனையின் உச்சிக்குச் செல்கிறார்.

 

கம்பனின் கவித்திறத்தின் முடிவும் ஒரு ஐயோ! ஆழ்வார் இறைவனை நெஞ்சில் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கின் முடிவும் ஒரு ஐயோ!

 

கருட உற்சவமும் எலி மேல் அமர்ந்த யானையும்

 

இனி கவிமழை பொழியும் காளமேகப் புலவரின் பாடல்களுக்கு வருவோம்.

கருட உற்சவத்தைச் சேவித்து அவர் இகழ்வது போலப் பாடிய பாடல் இது:-

 

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர் தம்                                                  

திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்                                             

இருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ!                                

பருந்து எடுத்துப் போகிறதே பார்!

 

அவரே காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இது:-

மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்                                        

பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? – மாப்பார்                                           

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ!                                        

எலி இழுத்துப் போகின்றது, ஏன்?

 

பருந்து எடுத்துப் போன விதத்திற்கும் எலி இழுத்துப் போனதற்கும் ஒரு ஐயோ போடும் போது பாடலின் சுவை கூடி விட்டது, இல்லையா?

இப்படி ஐந்து ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

 

 IMG_5157 (2)

இன்னும் ஒரு ஐயோ பாடலை உலக நலத்தையே சிந்திக்கும் தாயுமானவர் பாடி இருக்கிறார். இதோ அது:-

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

சிவ வெள்ளம் பொங்கித் ததும்புகையில் சவ வெள்ளமாகக் குவிகிறீர்களே! எடுத்த தேகம் விழும் முன் அகண்டாகார சிவ வெள்ளத்தில் சேர வாரும் ஜெகத்தீரே, பூரணமாய் ஏக உருவாய் கிடக்குது ஐயோ! என்று புலம்பி நம்மைக் கூவி அழைக்கிறார். இரக்கம் மேலிட்டு அவர் கூவும் கூவலைப் போன்று நலம் ததும்பும் கூவல் இன்னும் ஒன்று மாதிரிக்குக் கூட இல்லையே!

 

இப்படி ஆறு ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

 

சூதும் பாவமும் பண்ணினால் ஐயோவென்று போவான்!

 

இன்னொரு பாடல். மகாகவி பாரதியாரின் புதிய கோணங்கிப் பாடல்.

பெரிய பாடல் முழுவதுமாக இங்கு தரப்படவில்லை. முக்கியமான சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:-

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது;                                       

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது                                          

சொல்லடி சொல்லடி சக்தி மா காளி,                                        

வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!                                                 

தரித்திரம் போகுது; செல்வம் வளருது;                                           

படிப்பு வளருது; பாவம் தொலையுது;                                                   

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்                                         

போவான் போவான் ஐயோவென்று போவான்                                         

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது

உங்கள் முன் ஏழு ஐயோ பாடல்கள் உள்ளன. ஒன்று கவிதா நயத்தின் சக்கரவர்த்தியான ராம பக்த கம்பன் பாடியது. இலக்கிய சிகரத்தின் ஏற்றத்தைக் காண்பிக்கும் ஐயோ அது

இன்னொரு உத்தம பக்தன் கண்ணாரத் தன் தெய்வத்தை தரிசித்து நெஞ்சு நெகிழ்ந்து உள்ளம் கசிந்து உணர்வூறச் சொன்ன இரண்டு ஐயோ. அது பக்தி பரவசத்தின் உச்ச உணர்வின் வெளிப்பாட்டைக் காண்பிக்கும் ஐயோ!

அடுத்து கவிஞனான சிலேடைப் புலவன் காலத்திற்கேற்ப இகழ்கிறார்போலப் புகழ்ந்து அனைவரையும் ரசிக்க வைத்து ரஸனையின் உச்சத்தில் இறை நினைப்பைத் தந்த இரண்டு ஐயோ! கவிதா மேதா விலாசமும் அனைவரையும் ஈர்க்கும் வேடிக்கை விநோதமும் கலந்த ஐயோ அது.

அடுத்து இரக்கக் கடலில் ஊறி இருக்கும் தாயுமானவர் கூறுவது. சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, அதை அனுபவியுங்களேன் என்று

இரக்கம் ததும்பக் கூறும் ஐயோ அது.

அடுத்து தேசம் ஒன்றையே தன் தெய்வமாகப் பார்த்து பாவித்து தேசபக்தி ஒன்றையே உடலாக உயிராகக் கொண்ட கவிஞன், நாட்டின் தரித்திரத்திற்கும் இன்ன பிற தாழ்வுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்த ஆய்வின் முடிவுபடித்தவர் செய்யும் சூதிற்கு மன்னிப்பே இல்லை என்பது அவனது முடிவு. படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் எப்படிப் போவான் என்பதைச் சுட்டிக் காட்டும் ஐயோ அது. கவிதாசக்தி தெய்வீகம் கலந்த தேசபக்தியாக மாறி, கெட்ட கலியின் போக்கை மாற்ற, படிச்சவன் செய்யும் சூதிற்கு தரும் தண்டனை அந்த ஐயோ!

இதில் எமக்குப் பிடித்தது தேசத்தை முன்னேற்ற வழி சொன்ன கவிஞனின் ஐயோ! அந்த ஐயோ என்ற தீயினில் தீமைகள் தூசாகி அழியும்; புதிய கிருத யுகம் மலரும்; அப்போது அழியா அழகுடைய அண்ணலையும், நெஞ்சு நிறை கொண்ட நீலமேனியையும், கருட உற்சவ பெருமாளையும் எலி சுமந்த பிள்ளையாரையும் துதிப்பது எளிது; சிவானந்த வெள்ளத்தில் நீந்தித் திளைப்பதும் சுலபம் தான்!

தீய சக்திகள் ஐயோ என்று போகட்டும்; தெய்வத் திருநாடு செழிக்கட்டும்.

எமது தேர்வு ஒரு புறம் இருக்கட்டும்; உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? ஏன்??

தேர்ந்தெடுத்து விட்டீர்களா!

ஒரு வரி எழுதிப் போடுங்களேன்விமரிசனப் பகுதியில்!

*********

 படங்களுக்கு நன்றி; முக நூல் மற்றும் மலர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

கங்கையின் பாவம் எப்படிப் போகும்? கம்பன் தரும் அதிசயத் தகவல்

gaumukh

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2140

Time uploaded in London: – காலை 9-01

மஹாபாவங்களைச் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் போய் நீராடியவுடன் அந்தப் பாபங்கள் நீங்கி புண்ணிய ஆத்மாக்களாக வெளியே வருகின்றனர். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக கங்கையில் சேர்ந்த பாபங்களை எல்லாம் கங்கா தேவி என்ன செய்வாள்? அவளிடம் சேர்ந்த பாபம் எப்படிப் போகும்? இதற்கு கம்பன் விடை சொல்கிறான். ராமபிரான் போன்ற புண்யாத்மாக்கள், கங்கையில் நீராடினால், அந்தப் பாபங்கள் கங்கா தேவியிடமிருந்து அகன்றுவிடும்.

ganga-sacred-confluence

கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை

உன்னின் நீகினென் உய்ந்தனென் யான் என்றாள்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–என்றும் அழியாத ஜீவநதியான கங்காதேவி ராமனை வணங்கி, “ இவ்வுலகத்தில் உள்ளவர்கள், தாம் செய்த – சொல்ல இயலாத பெரும் பாவங்களை என்னில் மூழ்கி நீக்கிக் கொள்வார்கள். என்னிடம் சேர்ந்த அந்தப் பாபங்களை எல்லாம், இன்று நீ நீராடியதன் மூலம் நான் போக்கிக் கொண்டேன்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல!

கங்கை என்னும் கடவுள் திருநதி

தங்கி வைகும் தபோதர் யாவரும்

எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–கங்கை என்னும் தெய்வத் திருநதிக் கரையில் வாழும் தவ சீலர்கள் அனைவரும், தவத்தின் மூலம் நாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கேயே வந்துவிட்டது என்று அழகிய விழிகளை உடைய ராமனைக் காண்பதற்காக அவனிருக்கும் இடத்திற்கு சென்றனர்.

river-ganges-map

‘கங்கை என்னும் கடவுள் திருநதி’, ‘கன்னி நீக்க அருங் கங்கை’, ‘தள்ளும் நீர்ப் பெருங் கங்கை’, ‘வெண் நிறக் கங்கை’, ‘கங்கை அரும் புனல்’, ‘விரி திரைப் புனல் கங்கை’, ‘நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி’ – என்றெல்லாம் கங்கையை வருணிக்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்!

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி

–என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?

கங்கையோ கன்னி இளம் பெண். அவளுக்கு நரைத்த கூந்தல் எப்படி வரும்? அலைகள் வீசி, நுரை பொங்குவதால், அது நரைத்த கூந்தலுடைய ஒரு பெண் போலத் தோன்றுகிறதாம்! இது கம்பனின் கற்பனை! பொதுவாக நதிகளைக் கன்னி இளம் பெண்ணாகவும், கட்டழகிகளாகவும் வருணிப்பது இந்திய மரபு. காவிரியையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியையும் இளங்கோ அடிகள், சிலப்பதிகாரத்தில் வருணிப்பதைப் படித்தோருக்கு இது நன்கு விளங்கும்.

கம்பன் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது!!!

LEAD Technologies Inc. V1.01

LEAD Technologies Inc. V1.01

–சுபம்–

நான் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை – கம்பன்

பணிவு

Written by London swaminathan

Post No.1851; Date: 7 May 2015

Uploaded at London time: 19-51

புலவர்கள் பணிவும் அடக்கமும்!!

வாய் ஆறாக வயிறு களனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நிற்கும். செவி ஆறாகச் சிந்தை களனாக உணரத் தக்க கவிச் சுவையோ தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும்.

வால்மீகி முனிவர் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்தவர். பின்னர் முனிவர் ஆனவர். காட்டில் வசித்த அவர் ஒருநாள், ஒரு வேடனைக் கண்டார். ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த நேரத்தில் ஆண் பறவையை வில்லால் அடித்துக் கொன்றான் வேடன். பெண் பறவையோ சோகத்துடன் தனது கணவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உடனே வால்மீகி, அவனைச் சபித்தார். அந்த சாபம் பாடல் வடிவில் வெடித்தது. அட! இது என்ன ஆச்சர்யம்! நான் சபித்த சாபம் “அனுஷ்டுப் சந்தஸ்” என்ற யாப்பில் ஒரு பாடலாக வந்ததே என்று வியந்தார். அதாவது, “சோகத்திலிருந்து ஸ்லோகம்” பிறந்தது.

அந்த நேரத்தில் பிரம்மதேவன் அவர் முன்னிலையில் தோன்றி சகல குண சம்பன்னனான, சத்ய பராக்ரமனான இராமபிரானின் தெய்வீகக் கதையைப் பாடச் சொன்னார். அப்படிப் பிறந்ததே ராமாயணம்.

இப்பேற்பட்ட வால்மீகியின் அற்புதமான ராமயணத்தைப் பாடவே தான் தமிழில் ராமாயணத்தை இயற்ற முயன்றதாக கவிச் சக்ரவர்த்தி கம்பன் கூறுகிறான்:

“வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”

இதற்கு முன் தனது செயலானது, ஒரு பெரிய பாற்கடலை பூனை நக்கி, நக்கி குடிக்க முயற்சிப்பது போலத்தான் தன் முயற்சியும் என்று அவை அடக்கத்துடன் கூறுகிறார்:

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

பூசை=பூனை, காசு இல் கொற்றம்= குற்றமற்ற வெற்றியை உடைய

கவிதை என்பது என்ன?

உள்ளத்திலிருந்து பீறிட்டெழும் உணர்ச்சியே கவிதை. இந்த உணர்ச்சி இரக்கத்தின் காரணமாகவோ, அன்பின் காரணமாகவோ , அழகை ரசிப்பதன் காரணமாகவோ, தார்மீக கோபத்தின் காரணமாகவோ எழக்கூடும்.

காளிதாசன் எழுதிய மாளவிகா அக்னி மித்ரம் என்ற நாடகத்தில் சொல்லுகிறார்:

பழையதெல்லாம் நல்லது; புதியது எல்லாம் பயனற்றது என்று ஒதுக்கி விடாதீர்கள். அறிவுள்ள விமர்சகர்கள் தக்க முறையில் ஆராய்ந்து முடிவு எடுப்பர். மூடர்களோவெனில் மற்றவர் முடிவைச் சார்ந்து நிற்பர் என்கிறார்.

ரகுவம்ச காவியத்துவக்கத்தில் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படது போல சூர்ய வம்சப் பேரரசர்கள் பற்றித் தான் எழுத முயற்சிப்பதாகவும், இது ஒரு பெரிய சமுத்திரத்தை சிறிய படகின் மூலம் கடப்பதற்குச் சமம் என்றும் சொல்லுவார்.

ஆயினும் முன்னோர்கள் (வால்மீகி போன்ற ஆதி கவிகள்) ஏற்கனவே துளைத்த வைரத்தில் நூலை நுழைப்பது தனக்கு சிரமமான பணியல்ல என்றும் பணிவோடு பேசுகிறார்.

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி

இந்தியில் ஒரு பழமொழி உண்டு:

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி—என்று. சூரியன் (ரவி) பூக முடியாத இடத்திலும் கவி(ஞன்) புகுந்து விடுவான் என்பது இதன் பொருள். இதற்கு உதாரணமானவர்கள்: வால்மீகி, காளிதாசன், கம்பன், இளங்கோ, பாரதி முதலியவர்கள் ஆவர்.

பெரிய கலைக் களஞ்சியத்தை – ப்ருஹத் ஜாதகம் – ப்ருஹத் சம்ஹிதா முதலிய நூல்களை எழுதிய வராஹமிகிரர்,

சோதிட சாத்திரம் என்னும் பாற்கடலை, எனது புத்தி என்னும் மந்தர மலையால் கடைந்து, உலகிற்கு சந்திரன் போல ஒளியூட்டக்கூடிய சாத்திரத்தைக் கொடுக்கிறேன். முன்னோர் சொன்ன எல்லாவற்றையும் சுருக்கித் தந்துள்ளேன். அவற்றுடன் எனது நூலை ஒப்பிட்டு, தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுங்கள் என்று அடக்கமாக வாசிக்கிறார்.

கவிஞர்கள் மாபெரும் அறிவாளிகள்; அதே நேரத்தில் மிக மிகப் பணிவுடையோர்.

கவிஞர்கள் இறக்கலாம்; கவிதைகள் இறக்காது; அவை அமரத்துவம் வாய்ந்தவை!

“கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” – கம்பன்

RAMAYANA-BALLET-WEB-BANNER2

இந்தோநேஷிய ராமாயண நாடகம்

கட்டுரை எண்: 1733 தேதி:- 20 மார்ச் 2015

லண்டன் நேரம்:– காலை 5-13

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

எழுதியவர்: — ச.நாகராஜன்

ராமன் கதை கேளுங்கள் !

 

சீதையின் திருமணம்

 

ராமன் சீதையை மிதிலையில் கண்டு சிவதனுசை ஒடித்து திருமணம் புரிந்து கொள்வதைக் கதையாகக் கேட்பதென்றால் அனைவருக்குமே காலம் காலமாக ஒரே மகிழ்ச்சி தான்!

கம்பன் சீதையின் முழு அழகை வர்ணிக்க முடியாமல் திணறுகிறான். ஏன், சீதையின் முத்துமாலை அணிவதைக் கூடத் தன்னால் திறம்பட வர்ணிக்க முடியவில்லை என்று அவனே கூறுகிறான் இப்படி:-

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?

வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”

கோலங்காண் படலம் பாடல் 8

முத்துமாலை நட்சத்திரங்கள் கோர்த்த ஒன்றா! நகையில் நிலாத் தவழலா! மார்பில் தவழும் முத்து மாலையை என்ன சொல்லிப் புகல்வேன் நான்?”, என்கிறான் அவன்.

இராமன் வில்லை எடுத்து முறித்ததை அவன் சொல்லும் பாணி உலக இலக்கியத்தில் மிக்க ஏற்றம் பெற்ற தனி பாணி! (Unique style)

கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

 

கார்முகப்படலம் பாடல் 34

அவ்வளவு தான்! சிவ தனுசை எடுத்தது கண்டனர்; பிறகு இற்றது கேட்டனர்!!

இதே இப்படி என்றால் திருமணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறான் கம்பன்! அப்படித் தனக்குத் திறமை இல்லை என்று சொல்லி அவன் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்குத் தான் ரசிப்பதில் ரசனைத் திறமை இல்லை என்று நினைக்கத் தோன்றும்!!!

im159.guimet-D

கம்போடிய ராமாயண சிற்பங்கள், கெய்மே மியூசியம், பாரீஸ்

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாடலைப் பார்ப்போம்:-

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நால்மறை, ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன அண்டம்

கடிமணப் படலம் பாடல் 94

இப்படி ஒரு சில பாடல்களே மனதை மயக்குகிறது என்றால் முழு ராமாயணத்தையும் கேட்டால் நாம் சிறகடித்துப் பறக்க மாட்டோம்!

இராமாயணச் சாவடிகள்

காலம் காலமாக ராமாயணம் ஆங்காங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் ப்ரவசனகர்த்தாக்களால் சொல்லப்பட்டு வந்து கொண்டே இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள், நூல்கள், சுவடிகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. பல சாவடிகள் இதற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக மதுரையில் வடக்குமாசிவீதியில் இராமாயணச் சாவடி என்ற  ஒரு மண்டபத்தை இன்றும் காணலாம். இது போல நாடெங்கும் ஆயிரக்கணக்கில் மண்டபங்கள் உள்ளன.

இது தவிர கோவில்களில் உள்ள மண்டபங்களிலும், ஆற்றங்கரை மேடைகளிலும், இப்படி ராமன் கதை கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

சிப்பிக்குள் முத்து

இதைக் காட்சி அமைப்பாகக் கொண்ட ஒரு திரைப்படம் சிப்பிக்குள் முத்து. (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்). ஆடிஸத்தால் சற்று மனநலம் குன்றிய கமலஹாசன், அன்றைய கதாநாயகி ராதிகா ஆகியோர் நடித்து, தெலுங்கிலும் தமிழிலும் பெரும் வெற்றியைக் கொண்ட இந்தப் படம் வெளியான ஆண்டு 1986. படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்.

பாடலை இயற்றியவர் வைரமுத்து. பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்த மேடையில் கதாகாலக்ஷேபமாக ராமன் கதை பாடப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் ராம ஸ்தோத்திர வரிகளில் ஒன்றான “ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ” என்பதும் பாடலில் இடம் பெறுகிறது.

ராமனும், ராமபத்ரனும், ராமசந்திரனும் ஆகிய ராமனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகத்தின் பகுதி மந்திரமாகக் கருதப்படும் ஒன்று.

0603 (1)

கர்நாடாக மாநிலம், ராமாயண சிற்பங்கள்

ராமன் கதை கேளுங்கள்

கமலஹாசன் செருப்பைக் கையில் ஏந்தி வந்து கூட்டத்தில் ஒருவராக அமர்வதையும், இளம் விதவையான ராதிகா தன் குழந்தையுடன் அங்கு இருப்பதையும் சுவாரசியமாக பாகவதர் கதை கூற பக்க வாத்தியங்கள் முழங்க கிராம மக்களுக்கு ஏற்ப எளிய தமிழில் ராமாயணம் இசையுடன் வழங்கப்படுவதையும் காட்சி சித்தரிக்கிறது. நீண்ட கதையாக சொல்லப்படுவதால் பாடல் 6 நிமிடம் 31 வினாடிகள் நீடிக்கிறது!

பாடலைப் பார்ப்போம்:-

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்)

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,

ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,

வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க

ஶ்ரீ ராமசந்திர மூர்த்தி.. கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்

யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார் (புலிகளின்)

தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்

இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆஹா!

நடந்தாள் .. சீதை நடந்தாள்

விழி மலர்ந்தாள் .. சபை அளந்தாள்

வரவு கண்டு, அவள் அழகு கண்டு

சிவ தனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது! (ராமன் கதை)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது

உடைபட விழுந்தார் – சிலர் எழுந்தார்

தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட,

சட்டென்று பூமியில் விழுந்தார்

காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்

சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா (ஆஹா)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ

தசரத ராமன் தான் தாவி வந்தான்

வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்

மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட

ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு!

அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே

இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே (காண)

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

ஶ்ரீராமனே அதோ பாரப்பா.. ..

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீரகுராமன் கதை கேளுங்கள்!

தசரத ராமா! ஜனகன் உன் மாமா!!

“வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார்”, “தசரத ராமா, ஜனகன் உன் மாமா”, போன்ற சொற்றொடர்கள் கிராமத்தினரை மனம் மகிழ வைக்கும், இல்லையா! இளையராஜாவின் இசைத்திறனை கம்பனின் பாணியில் ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என்று சொல்லி விட வேண்டியது தான்!

ராமாயணத்தை, அதிலும் சீதா திருமணத்தைப் படம் தந்தது என்ற மகிழ்ச்சியில் அதைப் பாராட்டலாம் இல்லையா, நிச்சயமாக!

*******

ஆசை பற்றி அறையலுற்றேன்…..

கம்பன்1

கட்டுரையாளர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை:- 1183; தேதி:–20 July 2014.

கம்பன் பாடிய ராமாயணப் பாடலில் பால காண்டத்தில் மிகவும் பணிவோடு சொல்கிறான்:

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

பின்னர் ஒரு பாடலில் மூவர் பாடிய ராமாயணத்தில் முதல்வர் (வால்மீகி) பாடியதை வைத்துப் பாடியதாகக் கூறுகிறான். அந்த முதல்வர் வால்மீகி என்பதை அதற்குப் பின் வரும் பாடலில் பெயரைச் சொல்லியே உறுதிப் படுத்துகிறான். ஆனால் அந்த மூவர் யார் என்பதற்கு உரைகாரர்கள் வசிஷ்டர், போதாயனர், வால்மீகி ஆகியோர் எழுதியவை என்கின்றனர். நமக்குக் கிடைத்திருப்பதோ வால்மீகி ராமாயணம் ஒன்றுதான். காளிதாசன் ரகுவம்சத்தில் எழுதியதைக் கம்பன் திரும்பச் சொன்னானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இதோ கீழ்வரும் பாடலைப் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

கம்பன்3

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)

பொருள்:– முத்தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்த புலவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பு:– பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அரைவேக்காடுகள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமோ!!

தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ! (10)

பொருள்:– தேவ பாஷையான — (கடவுளரைப் போற்றும் வேதம் உள்ள மொழி) —-சம்ஸ்கிருதத்தில் மூவர் —-(வால்மீகி, வசிட்டர், போதாயனர்) — இராமன் கதையைப் பாடினர். அவர்களுள் முதன்மையான நாவல்லமை மிக்கோனைப் — (வால்மீகி) – பின்பற்றி தமிழில் நான் பாடுகிறேன்.

raghuvamsa_of_kalidasa

காளிதாசன் ரகுவம்சம்

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயோ மதி:
திதீர்ஷு:துஷ்தரம் மோஹாத் உடுபேனாஸ்மி சாகரம்

பொருள்:– சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அந்த வம்சத்தின் பெருமையோ சிறந்தது. நானோ மிகக் குறைவான அறிவுடையவன். கடக்க முடியாத சமுத்திரத்தை ஒரு சிறு படகின் மூலம் ஒருவன் கடக்க விரும்புவது போல என் சிறு மதியால் கடல் போன்ற இந்த சரித்திரத்தைக் கூறப் போகிறேன்.

மந்த: கவியச: ப்ரார்த்தி கமிஷ்யாம் உபஹாஸ்யதாம்
ப்ராம்சு லப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

பொருள்:– குறைந்த அறிவுடைய நான் கவியின் புகழை அடைய விரும்புகிறேன். உயரமான மனிதன் மட்டுமே அடையக்கூடிய பழத்தை குள்ளமான நான் கைகளை நீட்டிப் பறிக்க முயலும்போது பரிகசிக்கப்படும் நிலையை அடைவேன்.

அதவா க்ருதவாக் தூரே வம்சேஸ்மின் பூர்வசூரிபி:
மணௌ வஜ்ர சாமுத்கீர்ணே சூத்ரயேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாவிடினும் முன்னோர் சென்ற வழியில் சென்று என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன். எப்படி வஜ்ர ஊசியினால் துளைக்கப்பட்ட துவாரத்தில் நூல் எளிதில் செல்லுமோ அப்படி முன்னோர் —- (வால்மீகி) — போட்ட துளை வழியாகச் செல்வேன்.
—ரகுவம்சம் முதல் சர்கம் பாடல் 2, 3, 4

மேலும் இரண்டு ஸ்லோகங்களில் ரகுவம்ச மன்னர்களின் குணங்கள் தன் காதில் விழுந்துவிட்டதால், ஏற்பட்ட உந்துதலால் துணிச்சலாக இந்தக் காவிய முயற்சியில் இறங்கியதாகவும் தனக்கு சொற்செல்வம் குறைவே என்றும் பணிவுடன் கூறுகிறார். தங்கம் சுத்தமானதா இல்லையா என்பதை அக்னியில் (தீயில்) போட்டு பரிசோதிப்பது போல பெரியோர்கள் என் காவியத்தைப் பரிசோதிக்கட்டும் என்கிறார்.

கம்பனையும் காளிதாசனையும் படிக்கும்போது கம்பன் காளிதாசனைப் பின்பற்றினானோ ( அறிமுகப் பாடல்களில் மட்டும்) என்று எண்ண வேண்டி இருக்கிறது. ஆனால் இரு புலவர்களும் எவ்வளவு பணிவோடு துவங்கினர் ! அவை இரண்டும் எப்படி உலகப் பிரசித்தம் அடைந்து விட்டன!!

‘வித்யா விநயன்ன சம்பதே’= பணிவால் கிடைப்பதே கல்வி; கல்விக்கு இலக்கணம் பணிவு!

இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் மேலும் ஒரு பாடல் ஆதிசங்கரரின் அபூர்வ சௌந்தர்ய லஹரி (அழகின் அலைகள்) துதியில் வரும் ஒரு பாடலாகும்.

lahari

சௌந்தர்ய லஹரி

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய – க்ரமண – மசனாத்யாஹுதி – விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில – மாத்மார்ப்பண – த்ருசா
ஸபர்யா – பர்யாயஸ் – தவ பவது யன்மே விலசிதம்
–சௌந்தர்ய லஹரி பாடல் 27

ஆதிசங்கரர் கூறுகிறார்:

தாயே! நான் ஆத்மாவை உனக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் என்ன பேசினாலும் அதையெல்லாம் உனது ஜபமாகக் கொள்ளவேண்டும். நான் என் கைகளால் செய்யும் அத்தனையையும் உனது முத்திரைகளின் விளக்கமாகக் கொள்ள வேண்டும். நான் நடப்பதையெல்லாம் உன்னை வலம் வருவதாகக் கொள்ள வேண்டும். நான் சாப்பிடுவதை எல்லாம் உனக்கு வேள்வித் தீயில் ஆகுதி செய்ததாகக் கொள்ள வேண்டும், நான் படுத்துக் கொண்டால் அதைக் கீழே விழுந்து வணங்கியதாகக் கொள்ள வேண்டும். எனது செயல்கள் அனைத்தும் உனது பூஜையாகக் கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட்டால் — எதையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் நிலை வந்துவிட்டால் — எல்லோரும் சங்கரர் ஆகிவிடுவர்.

வாழ்க கம்பன், காளிதாசன், ஆதி சங்கரன்!!!