ஆலயம் அறிவோம் – திங்களூர் (Post No.10,439)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,439

Date uploaded in London – – 13 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 12-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திங்களூர்

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரகங்களில் மனதிற்கு அதிபதியான சந்திர பகவானின் சிறப்புத் தலமான திங்களூர் திருத்தலம் ஆகும். தமிழகத்தில், திருவையாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது.

இங்குள்ள கைலாச நாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும்
இறைவனின் திருநாமம் : ஸ்ரீ கைலாச நாதர்
அம்மன் : பெரியநாயகி ஸ்தல வ்ருக்ஷம் : வில்வ மரம்
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி விசேஷ மூர்த்தி: சந்திர பகவான்

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவாகவே அதை சிவபிரான் குடித்து தன் கண்டத்தில் அடக்கினார். அப்போது விஷத்தின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கமுற்றனர். அந்த விஷத்துடன் எழுந்து வந்த சந்திர பகவான் தேவர்களின் மயக்கத்தை நீக்கினார். ஆகவே இத்தலம் திங்களூர் என்னும் பெயரைப் பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தின் போது 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். அதற்கு மறுநாள் பௌர்ணமி பிரதமை அன்று மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளி லிங்கத்தின் மீது படும்; அன்று சந்திர பூஜை நடக்கும். இங்கு சந்திர பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது.

இங்கு தான் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் பிறந்தார்.
இங்குள்ள ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது என்ற போதிலும் தெற்குப் பக்க வாயிலே பிரதான வாயிலாக உள்ளது. கர்ப க்ருஹத்தில் கைலாச நாதர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். அம்மன் பெரிய நாயகி தெற்குப் பார்த்துக் காட்சி அளிக்கிறார். வெளி பிரகாரத்தில் வலம் வரும் போது விஷம் தீர்த்த விநாயகர், சுப்ரமண்யரை தரிசிக்கலாம். இன்னும் தக்ஷிணாமூர்த்தி, கஜலெக்ஷ்மி, பைரவர் உள்ளிட்ட சந்திகளும் இங்கு அமைந்துள்ளன.
கோவிலுக்கு முன்பு சந்திர தீர்த்தம் அமைந்துள்ளது.

சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு நீராடி விட்டு இறைவனை தரிசிப்பது மரபு. திங்களூரில் சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் பால் பெரும் அன்பு கொண்டவர். அவர் பெயரால் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அனைவருக்கும் சேவை செய்து வந்தார். ஒரு சமயம் அங்கு விஜயம் செய்த திருநாவுக்கரசர் தனது பெயர் கொண்ட தண்ணீர்ப் பந்தல், அன்னதான சாலை, மருத்துவ சாலை ஆகியனவற்றைக் கண்டு வியப்புற்று இதை அமைத்தவர் யார் என்று கேட்க அனைவரும் அப்பூதி அடிகள் பற்றிக் கூறினர். அவரது இல்லம் சென்றார் நாவுக்கரசர். அவரைக் கண்ணுற்ற அப்பூதி அடிகளார் மனம் மிக மகிழ்ந்து அவருக்கு அமுது படைக்கத் தயாரானார். வீட்டிலிருந்த தன் மூத்த மகனை அழைத்து வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப, அவன் வாழை இலை பறிக்கும் போது, அவனை ஒரு நாகம் தீண்டி அவன் இறந்தான். துக்கம் தாளாத அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதை நிறுத்தாது, மகனின் சவத்தை மூடி விட்டுப் பரிமாறலானார். மகனுக்குத் திருநீறு இட வேண்டும், அவன் எங்கே என்று கேட்டார் நாவுக்கரசர். அப்பூதி அடிகளார் புலம்பி அழுதார். உடனே நடந்ததை அறிந்த அப்பர் பிரான் அவனது சவம் அருகே சென்று ‘ஒன்று கொலாம்’ என்று தொடங்கும் ‘விஷம் தீர்த்த திருப்பதிகத்தைப்’ பாடினார். அவன் உடனே உயிர்த்தெழுந்தான். அனைவரும் மகிழ்ந்தனர். இந்த வரலாற்றைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் 45 பாடல்களில் மிக அழகுற விளக்குகிறார்.

இந்த ஆலயத்தில் உள் மண்டபத்தில் இடப்புறம் அப்பூதி அடிகள், அவர் மனைவியார், மகன் மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோரின் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு தரிசிக்கலாம்.

‘சந்த்ரமா மனஸோ ஜாத’ என்று புருஷ ஸூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம் மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். ஜனன லக்னத்தின் படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில் சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி உள்ளது. இதையே தான் ‘விதி கெட்டா மதியைப் பாரு’ என்ற முது மொழி உணர்த்துகிறது.

தென்கிழக்கு திசை சந்திரனுக்கு உரியது. உகந்த நிறம் வெள்ளை. மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தைத் தருபவன் என்று சந்திரனை யஜுர் வேதம் புகழ்கிறது. முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினமாகும். வெள்ளை குதிரை சந்திரனின் வாகனம். மலர் – வெள்ளை அரளி மலர். அதி தேவதை நீர்; ப்ரத்யதி தேவதை கௌரி. நெல்லும் பச்சரிசியும் சந்திரனுக்கு உகந்த தானியம். சமித்து – எருக்கு.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பெரிய நாயகியும் ஸ்ரீ கைலாஸ நாதரும், சந்திர பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

ததிசங்க துஷாராபம் க்ஷீ ரோதார்ணவ சம்பவம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம் ||

தயிர், சங்கு பனி போன்ற வெண்மையானவன். பாற் கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன் என்று வேதத்தால் அழைக்கப்படுபவன். சிவனின் ஜடாமகுடத்தின் ஆபரணம். அந்த சந்திரனை நமஸ்கரிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!


TAGS- சந்திரன் ,திங்களூர், கைலாச நாதர் கோவில் ,அப்பூதி அடிகள்

அமாவாசைக்கு பெயர் வந்தது எப்படி? சூரிய-சந்திரன் கண்ணாமூச்சி! (10,424)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,424
Date uploaded in London – – 8 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்தின் ஏழாவது காண்டத்தில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் சூரியன், சந்திரன் மற்றும் அமாவாசை , பெளர்ணமி பற்றிய பாடல்களாகும்

1000 moon seeing festival at Puttapaarthi
Grand Yagna at Puttaparthi

சூக்தம் 394 அமாவாசை
‘அம்’ என்ற சொல்லுக்கு ஒன்றாகக் கூடியிருத்தல் என்று பொருள் . ‘வச’ என்றால் வசித்தல். இந்த ரிக் வேத கால ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை நாம் எல்லோரும் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்துகிறோம். தமிழில் ‘வசிக்கிறேன்’ என்றால் எல்லோருக்கும் புரியும். அதுமட்டுமல்ல ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் என்றால் லெட்சுமிக்கு மார்பில் நிரந்தர வசிப்பிடம் கொடுத்த பெருமாளைக் குறிக்கும். பல கட்டிடங்களிலும் ஹோட்டல்களிலும் ‘நிவாஸ்’ என்ற சொல்லையும் காணலாம் .

இன்னொரு முக்கிய விஷயம் இந்த துதி தேவி மீதான துதியாகும். இந்துக்கள் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் தேவியரைத் துதித்து யாக யக்ஞங்கள் செய்வர் ; பிற்காலத்தில் இது நின்றுபோய், வெறும் பூஜையாக மாறிவிட்டது இன்றும் முழுநிலவு நாளன்று தேவி பூஜை, அல்லது விளக்கு பூஜை நடக்கும்.
XXX
அனுமதி என்றால் என்ன?

தமிழர்களும் மற்ற மொழியினரும் அனுமதி (ADMISSION, PERMISSION) என்ற சொல்லை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். சம்மதம், பெர்மிஷன், அட்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். இது உண்மையில் நமக்கு எல்லாம் நன்மை செய்யும் தேவதையின் பெயர் ஆகும்; நமக்கு வேண்டியதை எல்லாம் அனுமதிப்பதால் அந்த தேவதையை நாம் அனுமதி என்கிறோம்.

பவுர்ணமி தேவதையை ‘அனுமதி’ என்றும் அமாவசை தேவதையை ‘குஹு’ என்றும் அழைப்பர். இது தவிர சுபகா, ராகா முதலிய தேவதைகளும் நமக்கு வேண்டியனவற்றைத் தரும் தேவதைகள் ஆவர்.

உலகில் இந்துக்கள் மட்டுமே எல்லா பவுர்ணமிகளிலும் விழாக் கொண்டாடுகின்றனர். எல்லா அமாவா களையும் நீத்தார் நினைவுக்காக ஒதுக்கிவிட்டனர்.

அவர்கள் ஆதி காலம் முதல் கிரங்களையும் சூரிய சந்திரனையும் வணங்கினர் ; கிரகணங்களை முன் அறிவித்தனர் ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும் நீத்தார் கடன் செலுத்தினர். கும்ப மேளா போன்ற விழாக்கள் வியாழன் கிரஹத்தின் சஞ்சாரத்தை ஒட்டி செய்யப்பட்டது. தீபாவளி போன்ற பண்டிகைகள் அமாவாசையை ஒட்டி அமைந்துள்ளன.
XXX


சூக்தம் 395 பவுர்ணமி பற்றியது.
இதில் சந்திரனை நீண்ட ஆயுளுடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இந்துக்கள் மட்டுமே சந்திரனை தாவர வளர்ச்சியுடனும் தொடர்பு படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதை விஞ்ஞானிகளும் உறுதி செய்கையில் இந்தியர்கள் பெருமை கொள்ளலாம்.
சத்ய சாய் பாபா போன்றோர் சஹஸ்ர சந்திர தரிசன நிகழ்ச்சியை உலகம் வியக்கும் வண்ணம் நடத்திக்காட்டியதால் ஆயிரம் பிறை காணுதல் எவ்வளவு முக்கியமானது என்று தெரிகிறது.
இது சந்திர தரிசனத்தின் பெருமையை உலகிற்கு அறிவிக்கத்தான் என்றால் மிகையாகாது.

இந்த துதியில் சந்திரனை ‘போர்த் தெய்வம்’ (GOD OF WAR) என்று சொன்னதற்கும் ‘பலம் வாய்ந்த காளை’ (MIGHTY BULL) என்று வருணித்ததற்கும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரன் மனதைப் பாதிப்பவன் என்ற ஒரு குறிப்பு ரிக்வேதத்தில் (10-90) உளது

மனு போன்றோரும் ஏனையோரும் அம்மாவாசை, முழுநிலவு நாட்களில் செய்யும் யக்ஞங்கள் ‘நினைத்தை எல்லாம் வாரி வழங்கும்’ என்று கூறுகின்றனர். அதனால்தான் முழு நிலவு தேவதைக்கே ‘அனுமதி’ என்று பெயர் கொடுத்துவிட்டனர்.
சூக்தம் 396 ‘சூரியனும் சந்திரனும்’ என்ற தலைப்பில் உளது . உலகில் நாமும் சூரியன் மறைவது உதிப்பது, நிலவு உதிப்பது மறைவது ஆகியவற்றைக் காண்கிறோம். ஆனால் இந்த வேத. காலப் புலவர் மட்டும் கற்பனைச் சிறகை தட்டிவிட்டார். சூரியனும் சந்திரனும் இரண்டு இளைஞர்கள் போல கடலில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடுகின்றனர் என்கிறார். அற்புதமான கற்பனை! கண்ணாமூச்சி விளையாடாத சிறுவர் இருக்கமுடியாது அந்த விளையாட்டை இருவரும் விளையாடுவது என்பது இயற்கையிலேயே நடைபெறும் உதயமும் அஸ்தமனமும் ஆகும்.

நிலவை தாவர வளர்ச்சசியுடனும் ஆயுளுடனும் தொடர்பு படுத்தும் இந்த துதிகளுக்கு இதுவரை வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆதரவு தரவில்லை. எதிர்காலக் கண்டுபிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை ருசுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை அதனால்தான் நாம் சஹஸ்ர சந்திர தரிசனத்த்தை ஒரு மைல் கல்லாக வைத்துக் கொண்டாடுகிறோம்.

நிலவை ஒரு தினத்தின் கொடி (Flag of the Day) என்றும் இந்த துதி வருணிக்கிறது. உலகில் கொடிகளைக் கண்டுபிடித்தவர்களும் நாம்தான்!
ராமாயண, மஹாபாரதத்தில் ஒவ்வொருவருக்கும் கொடிகள் உள்ளன. சிந்து சமவெளியிலும் ஊர்வலத்தில் கொடி போன்ற ஒன்றை ஏந்திச் செல்லுகின்றனர். இன்றும்கூட தமிழ் நாட்டு கோவில் வீதி உலாக்களில் சுவாமிக்கு முன்னர் கொடிகள் , பாவட்டாக்கள் , சின்னங்களைத் தூக்கிச் செல்வதைக் காண்கிறோம்

அதர்வண வேதத்தில் உள்ள இந்த மூன்று துதிகளும் நமக்கு ஏராளமான விஷயங்களைத் தருகின்றன. ‘சாத்யர்கள்’ என்னும் வானுறை தெய்வங்களையும் ரிஷி குறிப்பிடுகிறார்.

கடலில் அலைகளை அதிகரிக்கும் பவுர்ணமி அமாவாசை தினங்களில் வேதம் கற்பிக்கும் பள்ளிகள் இன்றும் அடைக்கப்படுகின்றன. அதே போல அஷ்டமி நவமி அன்றும் வேதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை எல்லாம் சந்திரனின் நடமாட்டத்தை நன்கு அறிந்த ரிஷி முனிவர்கள் செய்த ஏற்பாடு.

KANCHI SHANKARACHARYA ATTENDED SAHSRA CHANDRA DARSANA FESTIVAL IN 2008  (AT PUTTAPARTHI)

(இது தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளேன்
–subham–
TAGS –அனுமதி குஹு , ராகா , பெளர்ணமி, அமாவாசை , கண்ணாமூச்சி , சூரியன், சந்திரன்

அம்புலி மாமா வா வா !!!- 1 (Post. 9271)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9271

Date uploaded in London – –     16 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அம்புலி மாமா வா வா !!!- 1

S SRINIVASAN

அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்

கவர்ச்சி நாயகன், காதல் மன்னன், இரவிற்கு அதிபதி, மனோகாரகன்,

சந்திரனை வணங்கி என் உரையை ஆரம்பிக்கிறேன். வணக்கம்.

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO THIS TALK; ALSO AVAILABLE IN YOUTUBE.COM/GNANAMAYAM

வேறு எந்த நவ கிரகத்திற்கும் இல்லாத ஒரு பெருமை சந்திரனுக்கே

உண்டு. அதை முதலில் சொல்லியே ஆகவேண்டும்.எந்நாட்டவர்க்கும்

இறைவனான தென்னாடுடைய சிவனின் தலையில் பிறை வடிவமாக அமரந்த பெருமை சந்திரனுக்கே உண்டு!!!சூரியன் பகலுக்கு ராஜாவென்றால், சந்திரன் இரவுக்கு ராணி!!!எல்லா நாட்டினருக்கும்

இதுவே காதல் தெய்வம்!!!

சந்திரனின் பிறப்பு

அத்திரி மகரிஷியும், அனசூயையையும் ஆனந்தமாக இல்லறம் நடத்தி

வருகையில் மூன்று தவ சிரேஷ்டர்கள் அவர்கள் வசிக்கும் வாயிலுக்கு

வந்தனர். அத்திரியும் அனசூயையும் காலில் விழுந்து குடிசைக்குள் வர

வழைத்து விருந்துபசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

என்ன பாக்கியம் செய்தோமோ இந்த ஏழையின் குடிலுக்கு நீங்கள்

எழுந்தருளியதற்கு….. நீங்களனைவரும் விருந்துண்டே செல்ல வேண்டும் என்றார்கள்அத்திரியும் அனசூயையும்.

அம்மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள் விருந்துண்கிறோம்

ஆனால்

ஒரு கண்டிஷன்…….என்ன அது???

“விருந்து பரிமாறும் பெண்மணி நிர்வாணத்துடன் தான் விருந்து பரிமாற வேண்டும்”

அதிர்ந்து போனார்கள் தம்பதியினர்………சோதனையை சந்தித்தாள்

அனசூயை. அம்மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றினாள், தன் தவ வலிமையினால்!!! விருந்தும் படைத்தாள்!!!அங்கு அதே சமயம் வந்த நாரதர், கலைமகள், அலைமகள், மலை மகளிரிடம் சென்று அவர்களின் புருஷன்மார்கள் குழந்தைகளாக மாறியிருப்பதை கூறினார். அலறிப்புடைத்துக்கொண்டு ஓடி வந்து அவர்கள் அனசூயையின் காலில் விழுந்தனர். முப்பெரும் தேவியரும் அவர்கள் கணவன்மார்களும் தன்னகத்தே வந்ததைக் கண்டு அத்திரியும் அனசூயையும் அவர்கள் காலில் விழுந்தனர். தேவர்களைவரும் கூடினர் இந்தக் காட்சியைக்

காண !!!

அனசூயா உனது கற்பின் பெருமையை உலகத்திற்குணர்த்தவே இப்படி ஒரு நாடகமாடினோம்.வேண்டிய வரங்களைக்கேளுங்கள்……..குழந்தை வரம் வேண்டினர் தம்பதியினர்.

மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் : சோமன், துர்வாசர், தத்தாத்தி

ரேயன்.

அவர்களின் சோமன்தான் நமது சந்திரன். துர்வாசர் தவசியானார், தத்தாதிரேயன் தேவரானார். சோமன் சந்திரனாகி இரவுக்கு அதிபனாகி,ரஜினிபதி எனப்பெயர் பெற்றார்.ரஜினிபதி என்றால் இரவுக்கு அதிபதி என்று பெயராம்!!!

மிகமிக அழகான சந்தினுக்கு தனக்கு தெரிந்தவற்றை கற்பித்து

வயது வந்தவுடன் தேவ குருவிடம் பாடம் கற்க அனுப்பினார் அத்திரி.

தேவ குருவின் மனைவி தாரை இவனழகில் மயங்கி மையல் கொண்டாள்.

சந்திரனின் திருமணம்

சந்திரனின் அழகில் மயங்கிய தட்சனின் மகள்கள் 27 பேரும் சந்திரனையே மணந்தனர்.அந்த 27 பேர்களில் ரோகிணியிடம் மிக அன்பாக நடந்தான் சந்திரன்…. மற்ற 26 பேர்களும் தகப்பனார் தட்சனிடம் complaint செய்ய, கோபம் கொண்ட தட்சன் ஒரு நாளைக்கு ஒரு கலை வீதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். சந்திரன் ஓடிப் போய் சிவனின் காலடியில் விழ,சாபத்தை நான் எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது, ஆனால்,

மீண்டும் நீ வளர வரம் கொடுக்கிறேன் என்று வரம் கொடுத்தார். அன்றிலிருந்து சந்திரன் 14 நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும், மற்ற 14 நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும் விளங்குகிறார்.

அரிஸ்டாட்டில் கூறுவது- “சந்திரன் மனித உடலில் மிகுதியாக ஆதிக்கம் செலுத்துகிறது”.

மருத்துவத் தந்தை ஹிப்பாக்ரடீஸ் கூறுவது- கோள்களின் கதியை அறியாமல் எந்த மருத்துவராலும் சரியாக மருத்துவம் செய்ய முடியாது.

பௌர்ணமியின் பெருமை

ஜாதகத்தில் சூரியனுக்கு நேர் எதிர் கட்டத்தில் சந்திரன் இருந்தால்

அவர் பௌர்ணமியன்று பிறந்தவராவார்.

சூரியனின் மாற்றத்தைப் பொறுத்தே மாதங்கள் பிறக்கின்றன.ஆனால்

மாதங்களின் பெயர்களோ பௌர்ணமி எந்த நட்சத்திரத்தின் அருகில்

சந்திரன் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதம்

விளங்குகிறது. உதாரணமாக, சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி

வருவதினால் அந்த மாத த்தின் பெயர் சித்திரை. விசாக நடசத்திரத்தில் பௌர்ணமி வருவதினால் அந்த மாதத்தின் பெயர் வைகாசி……

ஒவ்வொரு பௌர்ணமியும் மிக மிக விசேஷமானவை என்பது

மட்டுமல்லாது விழாக்களாக கொண்டாடப் படுகின்றன.பௌர்ணமி

மந்திர உபதேசமானவர்களுக்கு மிக முக்கிய நாளாகும் . மந்திர உரு

ஏற்றுவது, அம்மனை உபாசிப்பது, பால் குடம்எடுப்பது போன்ற விழாக்கள் நடத்துகின்றனர் இந்த நாளில்.சந்திரனின் கவர்ச்சி காரணமாக

கடல் அலைகள் உயர்ந்து வீசும் காட்சி கண்ணுக்கு விருந்து.

வெளிநாட்டு மக்களும் உள்நாட்டு மக்களும் கன்யா குமரி கடற்கரையில் பௌர்ணமி அன்று கும்பலாக காத்திருந்து ஒரே சமயத்தில் மேற்கே சூரியன் மறைவதையும், சந்திரன் உதயமாவதையும்

இரண்டு தங்கத்தகடுகளை கண்டு களிப்பது உலகில் வேறெங்கும்

காணக்கிடைக்காத காட்சி !!!

அமாவாசையின் பெருமை

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே கட்டதிலிருந்தால்அவர் அமாவாசையன்று பிறந்திருக்கிறார் என்று அர்த்தம்.பௌர்ணமி

ஒரு விசேஷமான நாள் என்றால் அமாவாசை அதைவிட விசேஷமான

நாளாகும். முன்னோர்கள் வெகு ஆவலுடன. நம் எள்ளுக்கும் , தண்ணீருக்கும் காத்திருக்கும் நாள். நல்ல காரியங்கள் தொடங்கும்

நாள்…. அமாவாசையன்று “திருஷ்டி”கழிப்பதென்பது தொன்று தொட்ட வழக்கமாகும். மந்திரிப்பதற்கும், மந்திரம் கற்க ஆரம்பிக்கவும் சிறந்தநாள்.புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்சம்

என்ற 15 நாட்களுக்கும் பித்ருக்களை திருப்தி செய்யும் நாட்கள்.

இறந்த திதி தெரியாதவர்கள், துர்மரணமடைந்தவர்கள் முதலியோருக்கு திதி செய்ய சிறந்த நாள்.ஆடி அமாவாசையும் இது போலவே தான்……..ஆடி 18 ல் காதலர் வெவ்வேறு சித்திரான்னங்களுடன் உண்டு மகிழும் சிறந்த நாள்!!!

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே,

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே !!!

சந்திரன் ஒரு பெரும் யாகம் நடத்தினான்.எல்லா முனிவர்களும், தேவர்களும் கலந்து கொண்டனர்.தேவ குருவின் மனைவி தாரையும்

கலந்து கொண்டாள். யாகம் முடிந்து குருவுடன் திரும்பாமல் சந்திரனிடையே தங்கிவிட்டாள் தாரை. தேவர்களனைவரும்

சந்திரனைக் கண்டித்து தாரையை திருப்பி அனுப்புமாறு கேட்டனர்.

வலிய வந்த சீதேவியை தான் திருப்பி அனுப்ப முடியாது என சட்டம்

பேசினான் சந்திரன். வில்லெடுத்தார் சிவன். பயந்த பிரும்மா

ஒரு வழியாக “ பஞ்சாயத்து” பண்ண தாரையை அனுப்பினான்

சந்திரன்.

குரு ஏற்றக்கொள்ள மறுத்தார்.சாபம் கொடுத்தார். கர்ப்பமானாள் தாரை……..

அழகான குழந்தையான“ புதனை“பெற்றெடுத்தாள்.

சந்திரனின் மனைவி ரோகிணியே புதனை வளர்த்தாள்.

To be continued…………………………………………

tags- அம்புலி மாமா, சந்திரன், 

சந்திரனில் ஒரு கிராமம்!(Post No 2812)

moon value

Written  BY S NAGARAJAN

Date: 15 May 2016

 

Post No. 2812

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 13-5-16  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

 

சந்திரனில் ஒரு கிராமம்!

ச.நாகராஜன்

 

 

“சந்திரனைக் குறி வையுங்கள். ஒருவேளை தவறி விட்டாலும் ஒரு நட்சத்திரத்தை அடையலாம்.”

டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன்

 

 

உல்கெங்கும் சந்திரனில் ஒரு கிராமம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2016 ஏப்ரல்  மாத ஆரம்பத்தில் 32வது விண்வெளி கருத்தரங்கம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் எப்படி இந்த கிராம திட்டத்தை நிறைவேற்றுவது என்பதை ஆர்வலர்கள் தீவிரமாகப் பரிசீலித்தனர்.

 

 

நாஸாவோ செவ்வாய்ப் பயணத்தில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பதால் சந்திரனில் கிராமம் அமைக்கும் திட்டத்திற்கு அவ்வளவாக ஆதர்வு காட்டவில்லை.

 

 

ஆனால் சந்திரனில் ஒரு தளத்தை முதலில் அமைத்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்லும் பயணம் சுலபமாகும் என்று அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கருத்தை முன் வைத்தனர்.இரண்டாயிரத்து இருபதுகளில் இது முடிந்து விட்டால் இரண்டாயிரத்து முப்பதுகளில் செவ்வாய்ப் பயணம் உருவாகி விடும் என்பது அவர்களின் கணிப்பு.

இதற்கிடையில் இப்போது வெளியாகி உலகில் பரபரப்பூட்டை ஊட்டும் ஒரு புத்தகமாக பால் ஸ்புடிஸ் என்ப்வர் எழுதிய ‘தி வால்யூ ஆஃப்  தி மூன்’ என்ற புத்தகம் அமைகிறது.

 

 

ஸ்புடிஸ் சந்திரனைப் பற்றிய ஒரு ஸ்பெஷலிஸ்ட். முதலில் சந்திரனில் மனித குலம் குடியேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் விஞ்ஞானி.

ரொபாட்டுகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி அங்கிருக்கும் நீர் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் பயன்படுத்தி அற்புதமான ஒரு குடியிருப்பை அமைத்து விடலாம் என்பது அவரது ஆலோசனை.

 

 

இந்தியாவின் சந்திராயன் – 1 திட்டத்தை அவர் வெகுவாக ஆதரிக்கிறார்.

 

நாஸாவின் செவ்வாய் மோகத்தில் அவருக்கு சந்தேகம்! சமீப காலத்தில் நிச்சயமாக செவ்வாய்க்குச் செல்ல  முடியாது; அப்படியே போனாலும் அது மனிதனின் கால் பதிக்கும் பயணமாகவே அமையும். ஆனால் சந்திரன் அருகில்  இருக்கும் கிரகம். அதில் காலனி ஏற்படுத்துவது என்பது சுலபம் என்கிறார் அவர்.

 

 

சந்திரனில் நீர் இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தப் பனிக்கட்டி நீரைப் பயன்படுத்துவதோடு சந்திரனில் எப்போதுமே வெளிச்சமாக இருக்கும் பகுதியைப் பயன்படுத்தினால் சூரிய ஒளி பிரதேசத்தில் சரியான தளம் ஒன்றை அமைக்க முடியும். அங்கிருந்து மனிதர்களின் சந்திரனுக்கும் பூமிக்குமான பயணம் சுலபமாகும், சாடலைட்டுகளை சர்வீஸ் செயவதும் சுலபம். இது இன்னும் தொலைதூரப் பயணங்களுக்கு வழி வகுத்து அப்பயணங்களை எளிதாக்கும் என்று விவரமாக அவர் விளக்குகிறார்.

 

 

இந்த திட்டத்திற்கு 2011இல் உத்தேசிக்கப்பட்ட செலவு சுமார் 88 பில்லியன் டாலராகும் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

இப்போது கொஞ்சம் கூட செலவாகும்.

ஆனால் சந்திர தளத்தை அமைத்து விட்டால் டெலி ஆபரேடட் ரொபாட்டுகள் அனைத்து வேலைகளையும் அங்கு செய்து மனிதர்கள் வாழத் தக்க ஒரு கிராமத்தை உருவாக்கி விடும். சந்திரனில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏராளமான காரணங்கள் உள்ளன.

 

முதலில் தளம் அமைக்கும் தேசத்தின் கௌரவம் உயரும். அறிவியல் புதிய பரிமாணத்தை எட்டும். வணிகம் உயரும். சந்திர பயணங்கள் ஏற்பட்டு கிரகங்களுக்கு இடையேயான பயணம் ஆரம்பிக்கும்.

 

 

 

1972இலிருந்து ஒருவரும் சந்திரனுக்குச் செல்லவில்லை. இரண்டாயிர்த்து இருபதுகளிலிருந்து இந்த நிலை மாறும். இப்படி ஒரு சந்திர கிராமம் அமைய வேண்டுமெனில் மேலும் பல கருத்தரங்கங்கள் தேவை. இதை ஜாம் செஷன் என்று அழைக்கின்றனர்.

 

ஆனால் இப்படிப்பட்ட தளம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ப்ல நாடுகளும் விரும்புகின்றன. அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் திட்டம் வெற்றி பெறும்.

 

 

யூரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸியின் டைரக்டராக 2015இல் பொறுப்பெற்றவுடன் ஜோஹன் டயட்ரிச் வோர்னர்  இதை வலியுறுத்தினார்.

 

சந்திர கான்க்ரீட்டைக் கொண்டு பாறைகள் உள்ள பகுதியில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு கிராமம் அமைக்கலாம். கிராமம் என்றால் ஒரு சர்ச், ஒரு டவுன் ஹால், வீடுகள் என்று அர்த்தமில்லை. ரொபாட்டுகள்  மற்றும் மனிதர்களின் செய்ல்பாட்டிற்கு உதவும் ஒரு தளம், அவ்வளவு தான்,

 

ஆனால் இதிலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. சந்திரனின் உஷ்ணநிலை மாறுபாடு அபாரமாக இருக்கும். சூரிய கதிரியக்கம் வேறு அதிகம். அத்துடன் விண்கற்கள் மோதாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.

 

 

விண்வெளி வீரர்கள் சிறிது சிறிதாக அங்கு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றனர். ஓடுபாதையில் விண்கலத்திலேயே உருவாக்கப்பட்ட உணவுவகைகளை அவர்கள் சாப்பிடுவது உள்ளிட்ட பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

 

விண்வெளி கருத்தரங்கமும் சந்திர தளம் அமைப்பதற்கு ஆதரவாக வெளியாகியுள்ள புதிய புத்தகமும் நல்ல முயற்சிக்கான ஆரம்பம் என்று சந்திரப் பிரியர்கள் கருதுகின்றனர்.

 

einstein

 

அறிவியல் அறிஞர்கள் வாழ்வில .. ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க சிறந்த ஒரு மனிதரும் கூட என்று அவரது வாழ்க்கைச் சமபவங்கள் பல நிரூபித்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இது:

 

1903ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார் மேரி க்யூரி. (தோற்றம் 7-11-1867 மறைவு 4-7-1934). அவரது கணவரான பியரியுடன் இணைந்து இப்பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.

1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் அவர் கணவர் அகால மரணம் அடைய அவர் விதவையானார். பெரும் துக்கம் அவரை ஆட்கொண்டது.

 

 

காலப்போக்கில் ஆறுதல் அடைந்த அவர்  மனம், பால் லாங்வின் (Paul Langevin) என்ற  இயற்பியல் பேராசிரியரின் மீது நாட்டம் கொண்டது. பால் தன் மனைவியிடமிருந்து ஒதுங்கித் தனித்து வாழ்ந்து வந்தார். ஏனெனில் அடிதடிக்குத் தயங்காதவர் அவர் மனைவி.

 

இருவரின் காதலும் வளர்ந்ததைப் பார்க்கச் சகிக்காத பாலின் மனைவி  அவரது வீட்டின் கதவை உடைத்து காதல் கடிதங்களைக் கைப்பற்ற ஒரு ஆள் மூலமாக ஏற்பாடு செய்தார். அந்தக் கடிதங்களை பத்திரிகைகளுக்கு வேறு அனுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வளவு தான், பத்திரிகைகள் மேரி க்யூரியைக் கண்டபடி சித்தரிக்க ஆரம்பித்தன.

 

 

 

இதனால் மிகவும் மன வருத்தமுற்றார் அவர். இதற்கிடையே ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். மாநாட்டிலிருந்து திரும்பி பாரிஸுக்கு வந்த அவர் தன் வீட்டின் முன்னால் திரண்டிருந்த கோபம் கொண்ட கும்ப்லைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டை விட்டு தனது மகள்களுடன் வெளியேறிய அவர் தன் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புக நேர்ந்தது.

 

இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் மிகுந்த வருத்தம் அடைந்தார். மேரி க்யூரியை அபூர்வமான அறிவு கொண்ட பிழையில்லாத நேர்மையான பெண்மணி என்று அவர் கணித்து வைத்திருந்தார். ஆனால் பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக அவரைச் சித்தரித்து அவருக்கு களங்கத்தை உண்டாக்கின. குறிப்பாக அவரது அறிவியல் சாதனையை மட்டம் தட்ட வேண்டும் என்பதே அவற்றின் குறிக்கோளாக இருந்தது.

 

 

ஆறுதல் கடிதங்கள் எழுதுவதில் புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு கடிதத்தை மேரி க்யூரிக்கு எழுதி அதில் தனது உறுதியான ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். களங்கமே இல்லாத நபர் என்று மேரியை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார்.

 

“இந்தக் கடிதத்தை எழுதுவதைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம், ஆனால் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் கோபமடைகிறேன், உங்களின் அறிவையும் உங்கள் ஆற்றலையும் நேர்மையையும் பார்த்து நான் வியக்கிறேன். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன். கண்டதை எல்லாம் படித்து குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கும் லாங்வினுக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீண்ட கடிதம் ஒன்றை ஐன்ஸ்டீன் எழுதினார்.

 

இதைப் பார்த்த மேரி பெரும் ஆறுதலை அடைந்தார். தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை ‘ஐன்ஸ்டீன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில்  வால்டர் ஐஸக்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

**********

 

சந்திரன் உலகை அழிப்பானா? (Post No.2737)

Blood-Moon-350143

Written BY S NAGARAJAN
Date: 19 April 2016

 

Post No. 2737

 

Time uploaded in London :–  8-28  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

பாக்யா வார இதழில் 15 -4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

 

ச.நாகராஜன்

 

blood-moon-2014-2-537x405

“சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது” –அறிவியல் செய்தி

 

சூரிய கிரகணம் பற்றிப் பேசும் போது ஒரு முக்கியமான செய்தியை அறிவியல் தருகிறது.

 

 

இனி அடுத்து வரும் மிகப் பெரிய சூரிய கிரகணம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. அமெரிக்காவில் இதை நன்கு பார்க்க முடியும். அங்கு ஜனத்தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை பார்க்க முடியும் என்பதால் இதை அமெரிக்கா கோலாகலமாக வரவேற்க இருக்கிறது. இதையொட்டி என்னவெல்லாம் உற்பாதம் நிகழும் என்பதைக் குறித்து ஜோதிடர்கள் இப்போதே தங்கள் ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நிகழவிருக்கிறது.

 

 

இனி சந்திர கிரகணம் பற்றிய சில சுவையான செய்திகளைப் பார்க்கலாம்.

 

 

பௌர்ணமி தினங்களில் நிகழும் சந்திர கிரகணத்தைப் பற்றி உலகின் எல்லா நாகரீகங்களும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன.

 

முக்கியமாக செக்ஸ் உறவு தவிர்க்கப்பட வேண்டும். கிரகண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னர் குளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நம்பிக்கைகள் ஏராளம்.

 

 

சூரியனுக்கு எதிரில் சந்திரன் வரும் போது நடுவில் இருக்கும் பூமியின் நிழல் சந்திரனின் மிது பட சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் சுற்றுப் பாதை பூமியின் பாதையிலிருந்து  ஐந்து டிகிரி கோணத்தில் தள்ளி இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரகணம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்  கோட்டில் வந்தால் அது Syzygy  என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் சேர்ந்து இணைக்கப்பட்டிருத்தல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

 

பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் அல்லது சிவப்பு நிலவு என்கிறோம். ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால்  உலகம் அழியவில்லை!

 

 

blood moon 3

அதிக பட்சமாக சந்திர கிரகணத்தின் நேரம் 220 நிமிடங்களே! இதில் பூரண சந்திர கிரகணம் என்பது அதிக பட்சமாக சுமார் நூறு நிமிடங்களே நீடிக்கும்.

 

இன்னும் நூறு கோடி வருடங்கள் கழித்து நிகழும் சந்திர கிரகணம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். இதற்கான காரணம் சந்திரன் பூமியிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.6 அங்குலம் நகர்வதினால் தான்! கிரகணங்கள் நிகழும் போது விஞ்ஞானிகளுக்குக் கொண்டாட்டம் தான். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் தீவிரப் படுத்துவார்கள்.

 

ஆனால் உலக மக்களுக்கோ பல வித கவலைகள்! எஸ்கிமோக்கள் சந்திர கிரகணத்தின் போது பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இல்லையேல் வியாதி வந்து விடும் என்பது அவ்ர்களின் நம்பிக்கை.

 

தாய்லாந்திலோ கிரகணத்தின் போது பட்டாசு வெடிப்பது வழக்கம். இதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுவாக உலகின் முடிவைத் தெரிவிக்க ஏற்படுவதே கிரகணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி கிரகணத்தை ஏற்படுத்துவது கெட்ட ஆவிகளே என்று அவர்கள் நம்புவதால் பானைகளைத் தட்டி ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் ஆவிகளை அவர்கள் துரத்துவார்கள்.

 

 

இன்னும் யூதர்கள், மாயா நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். கிரேக்கர்கள் என இப்படி ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கைகளையும் ஆராயப் புகுந்தால் பெரிய நூலையே தொகுக்க வேண்டியிருக்கும்.

 

ஆனால் கிரகணம் என்பது இயற்கையில் நிகழும் ஒரு அற்புத நிகழ்வு;  என்பது நபிகள் நாயகத்தின் அருளுரை!

 

கிரகணங்கள் வருகின்றன, போகின்றன; உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

 

விஞ்ஞானிகள் தரும் அறிவுரைகளை மனதில் கொண்டு பாதுகாப்பாக கிரகணங்களைப் பார்த்தால் பல இயற்கை விந்தைகளைக் கண்டு மகிழலாம் என்பது உறுதி.

 

marconi

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

 

1902ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியன்று முதல் தொலைத் தொடர்புச் செய்தி மார்கோனி ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்பப்பட்டது.  1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரிட்டன் மன்னர் ஏழாம் ஹென்றிக்கு தொலைதூரச் செய்தியை முதலில் அனுப்பினார். இதிலிருந்தே உலகம் சுருங்கிப் போனது. உடனடிச் செய்திப் பரிமாற்றம் அமுலுக்கு வந்தது.

 

 

உலகின் பெரிய கடல் விபத்தான டைடானிக் நிகழ்வில் மார்கோனியின் கண்டுபிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவம் பிரபலமான ஒன்று.

 

 

டைடானிக் மூழ்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கர்பதீயா என்னும் கப்பல் நியூயார்க்கிலிருந்து ரிஜேகா என்னும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  அந்தக் கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டர் ஹரால்ட் காட்டம் டைட்டானிக்கின் அவசர செய்தியை முதலில் கேட்கவில்லை. பின்னர் டைடானிக் மூழ்கும் செய்தி அவருக்குக் கிடைத்தவுடன் வேகமாகச் சென்று காப்டன் ஆர்தர் ஹென்றியை எழுப்பினார். அவர் உடனே 58 மைல் தொலைவில் தள்ளி இருந்த டைடானிக் நோக்கி கப்பலை விரைந்து ஓட்டிச் சென்றார். உரிய தருணத்தில் அங்கு சேர்ந்த காப்டன் 705 பேரைக் காப்பாற்றினார்.

 

 

விபத்து பற்றி மார்கோனி கோர்ட்டில் தனது சாட்சியத்தை அளிக்கும் போது கடலிலிருந்து எப்படி செய்திகளை ஆபத்துக் காலத்தில் அனுப்ப முடியும் என்பது பற்றி விளக்கினார். பிரிட்டனின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும் டைடானிக் விபத்து பற்றிய தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில்,” காப்பாற்றப்பட்ட அனைவரும் ஒரே ஒருவரால் காப்பாற்றப்பட்டனர், அவர் தான் மார்கோனி, அவரது கண்டுபிடிப்பே இப்படி அனைவரையும் காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டு அவர் மார்கோனியைப் பாராட்டினார்.

அனைவரும் அறிவியல் கண்டுபிடிப்பால் மகிழ்ந்தனர்.

******

 

தற்குறிப்பேற்ற அணி!

kokku sunset

Compiled  by S NAGARAJAN

Post No.2274

Date: 26 October 2015

Time uploaded in London: 7-56 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

தமிழ் என்னும் விந்தை

கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!

 

.நாகராஜன்

 

கவிதா அலங்காரம்

கவிதைக்கு அழகு அலங்காரம். அணி. இந்திய இலக்கியங்களுக்கே உரித்தான தனி ஒரு சிறப்பு அணிகள்.

அணிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஆனால் தமிழில் தண்டியலங்காரம் 37 அணிகளைப் பற்றி விவரிக்கிறது.

இவற்றை அறிந்து கவிதையைச் சுவைப்பதால் தனி ஒரு இன்பம் ஏற்படும்.

உதாரணத்திற்கு ஒரு அணியை எடுத்துக் கொள்வோம்.

சூரியன் உதயம், சூரியன் அஸ்தமனம், சந்திரோதயம் ஆகியவை அன்றாடம் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள். சூரிய சந்திரர் உள்ளவரை என்பது நாம் அன்றாடம் உபயோக்கிக்கும் வார்த்தைகள் – ஒரு கருத்திற்கு அழுத்தம் தர இதைப் பயன்படுத்துகிறோம்.

இராமன் சூரிய குலத் தோன்றல். பாண்டவர்கள் சந்திர குலத்தில் உதித்தவர்கள். இராமாயணத்தில் வால்மீகி, கம்பன் சூரியனை தங்கள் மனதில் ஏற்றி வணங்கி அவ்வப்பொழுது தங்களின் குறிப்பை சூரியன் வாயிலாகச் சொல்வர். சந்திரன் வாயிலாகச் சொல்வர்.

அதே போல வியாஸரும், வில்லிப்புத்தூராரும் தங்கள் கருத்தை சூரிய, சந்திரர் வாயிலாக அழகுறச் சொல்வர்.

moon

ஏனைய கவிஞர்களையும் எடுத்து அலசி ஆராய்ந்தால் சூரிய, சந்திரருக்கு மட்டுமே பல்லாயிரக்கணக்கான பக்கங்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.

இதே போலத் தான் வானிலிருந்து பொழியும் மழை. இது அவ்வப்பொழுது நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. இதிலும் கவிஞன் தன் கண்ணோட்டத்தில் ஒரு சிறப்பைக் காணுகிறான். இப்படி ஒவ்வொன்றாகத் தொகுக்க ஆரம்பித்தால் பல உயர்ந்த கருத்துக்களின் பொக்கிஷம் நம்மிடம் இருக்கும்!

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா, சூரிய சந்திரரோ!

அனுமனின் கண்களை வர்ணிக்க வந்த வால்மீகி மஹரிஷி இப்படிக் கூறுகிறார்:

பிங்கே பிங்காக்ஷமுக்யஸ்ய ப்ருஹதீ பரிமண்டலே I

சக்ஷுஷீ சம்ப்ராகாஸேதே சந்த்ர ஸூர்யா விவோதிதௌ II (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் ஸ்லோகம் 59)

இதன் பொருள்: வானரச்ரேஷ்டரான அனுமாருடைய பிங்கள வர்ணமான பெரிய இரண்டு கண்கள் பரிமண்டலத்தில் உதயமான சந்திர சூரியர் போல் நன்கு விளங்கின!

இதைப் படித்தவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாரதியாரின் பாடல் தான்!

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா! சூரிய சந்திரரோ!

விழிகளைச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உவமையாகக் கூறுவதில் தான் என்ன ஒரு இன்பம்! ஆழ்ந்த கருத்து!!

வள்ளலைப் போல வழங்கும் வானம்

தற்குறிப்பேற்ற அணி என்று பெயர் பெற்ற சிறப்பான அணியில் கவிஞர்கள் தம் மனோதர்மத்திற்கு ஏற்றவாறு தரும் உண்மைகள், கற்பனைகள், கருத்துக்கள் ஏராளம்.

ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போமா?

கம்பனின் பால காண்டம். ஆற்றுப்படலம். நான்காவது பாடல்:

புள்ளி மால்வரை பொன்னென னோக்கிவான்                                          

வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்                                        

உள்ளி யுள்ளவெ லாமுவந் தீயுமவ்                                            

வள்ளியோரின் வழங்கின மேகமே

 

இமயமலை பொன் நிறமாக ஒளிர்கிறது. அதைப் பார்த்த ஆகாயத்திற்கு ஒரே சந்தோஷம்! அதனால் மழைத் தாரையைக் கொட்டியது.

வானத்திலிருந்து மழை பெய்யும் சாதாரண சம்பவம் தான்! ஆனால் கவிஞனின் கண்களில் அது பட்டவுடன் பிரம்மாண்டமான சிறப்பைப் பெறுகிறதுமலையைப் பார்த்த வானம் சந்தோஷமடைந்து நீரைப் பெய்ததே, அது எது போல இருந்தது தெரியுமாதன்னிடமுள்ள பொருளை எல்லாம் மனமுவந்து கொடுக்கும் வள்ளலைப் போல இருந்தது!

 

 

வள்ளியோர்கொடுக்கும் குணம் உடைய வள்ளல்கள்; உள்ளி என்ற சொல்லுக்கான பொருளாக பயனைக் கருதிக் கொடுப்பதை எண்ணிஎன்ற பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உள்ளி என்பதற்கு செல்வம் நிலையாக இருப்பதல்ல என்பதை எண்ணிஎன்று கொள்ளல் வேண்டும். நில்லா உலகத்து நிலைமை தூக்கி என பொருநராற்றுப் படை இந்தக் கருத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது.

தன்மைத் தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம்.

 

இது போன்ற லட்சக் கணக்கான பாடல்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

அவ்வப்பொழுது இவற்றைக் கருத்தூன்றிப் படித்தால் உயர்ந்த கருத்துக்கள் உள்ளத்தில் ஏறும். உன்னத உயரத்திற்கு ஏறி விடுவோம்! இல்லையா!

****************

சான்றோரும் சந்திரனும்; சான்றோரும் பாம்புகளும்

moon

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1541; தேதி 4 January, 2015.

சான்றோரும் சந்திரனும் ஒன்றுதான்; ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்! சன்றோரும் சந்திரனும் பிரகாசமானவர்கள்; குளிர்ச்சி மிக்கவர்கள். இவை இரண்டுக்கும் பொது. ஆனால் சந்திரனில் மான் போலவும் முயல் போலவும் தோன்றும் களங்கம் உண்டு. சான்றோரிடத்தில் இப்படி ஒரு களங்கம் வந்தால் அவர்கள் மறு கணமே உயிர் துறப்பர். சந்திரனோவெனில் தேய்ந்தும் வளர்ந்தும் தொடர்ந்து இருக்கும்!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் மன் – திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து

தேய்வர் ஒரு மாசுறின் (நாலடியார்)

வள்ளுவனும் கூட இதையே சொல்லுவான்:-

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (969)

குடிப் பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக் கண் மறுப்போல் உயர்ந்து 957

காளிதாசன் – குமார சம்பவம் 1-3

இவர்களுக்கு எல்லாம் முன்னரே உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் இதைச் சொல்லிவிட்டான். இமய மலை அழகை வருணிக்கும் அவன், அதில் பனி மூடியிருப்பது ஒரு குறையாகாது என்பான். இதற்கு நிலவையே எடுத்துக் காட்டுகிறான. சந்திரனில் ஒரு களங்கம் இருந்தாலும் அது வீசும் வெள்ளி நிற ஒளியில் அந்தக் களங்கம் பொலிவிழந்து போகவில்லையா? என்று குமாரசம்பவம் என்னும் அற்புத காவியத்தில் சொல்லுகிறான்.

pictures-of-king-cobra-snakes

மேன் மக்களும் பாம்பும்

மேன் மக்கள் — தண்ணீர் பாம்பு போன்றவர்கள்; விஷமில்லாத பாம்பு என்பதால் தண்ணீர் பாம்பு எப்போதும் கரையில் கிடக்கும்.யாரும் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுவும் அஞ்சி ஓடுவதில்லை! மேன் மக்கள் அதைப் போன்றவர்கள்.

கீழ் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். நல்ல பாம்பு விஷம் உடையது ஆகையால் அது கரந்துறையும்; மறைந்து வாழும். கீழ் மக்களும் அத்தகையோரே.

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத்தவர் – அவ்வையாரின் வாக்குண்டாம்

பசுவுக்குத் தண்ணீர் கொடுத்தால் அது பாலாகப் பொழிந்து தள்ளுகிறது.

பாம்புக்குப் பாலையே கொடுத்தாலும் அது விஷமாகக் கக்குகிறது.

மேன் மக்களும் கீழ் மக்களும் பசுவும் பாம்பும் போன்றவர்களே. எந்த நூல்களைப் படித்தாலும் மேலோர்கள் அதில் நல்ல பொருளையே காண்பர். இவர்கள் பசு அனையர். தண்ணீரை உட்கொண்டு பால் தருவது போல நல்ல கருத்துக்களை வெளியிடுவர்.

northern-water-snake

அதே நூல்கள் கீழ் மக்களிடம் கிடைத்தாலோ கெட்ட பொருளைக் காண்பர். அர்த்தத்தை அனர்த்தமாக ஆக்கிவிடுவர். வெளிநாட்டு அறிஞர்கள் என்ற பெயரில் இந்துமத நூல்களை இழித்துரைக்கும் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். இந்து மத நூல்களில் எவ்வளவு நல்ல கருத்து இருந்தாலும் அதைத் திரித்தும் கரித்தும் மறித்தும் சிரித்தும் பழித்தும் பேசுவர்.

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளியாம் உய்ர்ந்தார் கண் ஞானம் அதுபோற்

களியாங் கடையார் மாட்டு (அறநெறிச்சாரம்)

ஒரு குட்டிக் கதை

துரியோதனன், தர்மன் (யுதிஷ்டிரன்) ஆகிய இருவரும் கண்ணனிடம் சென்றனர். உலகிலேயே மிகக் கெட்டவனையும், மிக நல்லவனையும் கண்டுபிடித்து வாருங்கள் என்கிறான் கண்ணன் – இருவரும் சென்றனர். உலகில் ஒரு கெட்டவர் கூட கண்ணுக்குத் தெரியவில்லையே என்று திரும்பி வந்து விட்டான் தர்மன். கொஞ்ச நேரம் கழித்து துரியோதனனும் வந்தான். உலகில் நல்லோரே இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்றான். வெளிநாட்டில் இருந்து இந்து மதத்தைக் குறை கூறி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் அறிஞர்கள் – துரியோதனனின் தம்பிகள்!!

Snake-5_1421019i

குன்றின் மேல் இட்ட விளக்கு

கன்றி முதிர்ந்த கழியப் பன்னாள் செயினும்

ஒன்றும் சிறியார் கண் என்றானும் தோன்றாதாம்;

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு  (பழமொழி)

கீழோர்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்குப் புதிய கெட்ட பெயர் என்று ஒன்று வராது. ஆனால் மேன் மக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் உலகமே அதைப் பற்றிப் பேசி இகழும். அது மலையின் மீது வைத்த விளக்கிற்குச் சமம். உலகமே அதைப் பார்க்கமுடியும்! ஆகையால் அவர்கள் மாசு மருவற்ற தூய வாழ்க்கை வாழ வேண்டும். எத்தனையோ சாமியார்கள் பற்றி பலவகையான செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் அந்த ஒரு கெட்ட செய்தி அவர்களை அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது.

light house

சங்க காலத்தில் வாழ்ந்த கபிலன் என்ற பார்ப்பனப் புலவனை ஐந்து சங்கப் புலவர்கள் பாராட்டுகின்றனர். ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று. மூவேந்தர்களுக்கு உலகமே பயந்து நின்றது — ஆனால் கபிலன் பயப்படவில்லை! அவர்களை எள்ளி நகை ஆடுகிறார். இதோ பார் பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டான். நேரே வந்து அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான் என்கிறார். ஆயினும் மூவேந்தர்களும் அவனை வஞ்சனையால் கொன்று விடுகின்றனர். புலன் அழுக்கற்று இருந்ததால் யாருக்கும் அஞ்சாத துணிவு சாணக்கியனுக்கும் கபிலனுக்கும் இருந்தது!

மண் குடமும் பொன் குடமும்

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று

அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் – சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால் – அவ்வையின் வாக்குண்டாம்

மண் குடம் உடைந்தால் குப்பைத் தொட்டியில் போடுவர். பொன் குடம் உடைந்தாலோ தங்கத்தை உருக்கி அழகான புதிய பொன் குடம் செய்து விடுவர். பெரியோர்களுக்கு, அவர்களுடைய முன்வினைப் பயனால் வறுமையோ, நோயோ வந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. மென்மேலும் புகழ் கூடும். அவர்கள் எப்போதும் மேலோர்களே என்கிறார் அவ்வையார். ரமண மகரிஷிக்கும், ராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் புற்று நோய் வந்தது. அவர்கள் மனம் கஷ்டப்படவும் இல்லை. அவர்கள் புஅழ் குன்றவும் இல்லை. பாரதியார் வறுமையில் வாடினார். ஆனால் சிறுமை என்னும் செயல்களில் இறங்கவில்லை. இன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் என்ற பெயரே எஞ்சி நிற்கிறது.

தமிழ்ப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவோம். எளிய நடை! அரிய கருத்து! அழகான உவமை! தமிழ் ஒரு உலக மகா பொக்கிஷம்!!!

வாழ்க மேன்மக்கள்  வளர்க தமிழ்!!

contact swami_48@yahoo.com

நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2

el_010_moon_hare

 

(Hare on moon is in Sanskrit and Sangam Tamil literature; it is in Buddhist Jataka stories and Mayan culture.

(நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு Part -1 என்ற எனது முந்திய கட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்கவும்:லண்டன் சுவாமிநாதன்)

 

பிரிட்டிஷ் மஹாராணியின் பேரன் வில்லியத்துக்கு ஆண் குழந்தை பிறந்த (July, 2013) நாளன்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு செய்தி வெளியிட்டன. அது மேலை நாடுகளில் சந்திரன் பற்றிய நம்பிக்கை என்ன என்பதைக் காட்டுகிறது. பௌர்ணமியை ஒட்டி புதிய ராஜா பிறப்பார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று மகப்பேறு தாதிமார்கள் கூறினர்.

 

பிரிட்டனில் பிரசவ ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் தாதியர் இப்படி அலுத்துக் கொள்வார்களாம்: ‘’அடடா! இன்று பௌர்ணமி தினம்! நான் இன்று சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். இன்று மிகவும் வேலை வரும்”. அதாவது பௌர்ணமி என்றால் அதிகம் குழந்தைகள் பிறக்கும் என்பது மேலை நாட்டார் நம்பிக்கை. கடல் அலைகள் பௌர்ணமி அன்று பொங்கும், அது போல தாய்மார்களின் கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீரும் (பனிக்குடம்) பொங்கி குழந்தையை விரைவில் வெளியே தள்ளும் எனபது இதன் பொருள். ஆயினுமிது விஞ்ஞான உண்மையா எனபதை நிரூபிக்க போதுமான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.

 

பிராமணர்களும் பௌத்தர்களும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் படிப்பதை விட்டு உபவாசம் இருப்பதில் பொருள் இருப்பதை சமீபத்திய பத்திரிக்கை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி, சதுர்தசி நாட்களில் பிராமண வேத அத்தியயனம் இருக்காது. இதே போல பவுத்தர்கள் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களில் உபோசத் (உபவாசம்) இருப்பார்கள். இந்த நாட்களில் கடல் அலைகளின் சீற்ற்ம அதிகரிப்பதால் மீனவர்கள் கூட மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஆக கடலில் ஏற்படும் மாற்றம் உடலிலும் உண்டு என்பதை இந்துக்கள் அறிந்திருந்தார்கள். ‘’அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு’’ என்பது இந்துக்களின் கொள்கை.

pirai sudi

Hindu God Shiva with crescent moon ( in Tamil Pirai Soodi)

 

கடல் அலைகளில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அளந்து பார்த்ததில் பௌர்ணமி நாட்களில் இரு மடங்கு இருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பைத் தந்துள்ளது.( The level of bacteria in water varies with the lunar cycle and highest during a full and new moon, a study of California beaches found). கடலில் வளரும் பவளம் என்னும் பிரணிகளில் இருந்தே நமக்கு நவரத்தினக்களில் ஒன்றான பவளம் கிடைக்கிறது. இந்தப் பவளப்பூச்சிகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் முட்டைகளை வெளியிடுகின்றன.

பசிபிக் தீவுகளில் வாழும் நண்டுகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் குடியேற்றம் செய்கின்றன. ஆக முழு நிலவு எனபது பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது உயிரியல் விஞ்ஞானிகள் அறிந்ததே.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் முழு நிலவு (பௌர்ணமி) நாட்களில் நித்திரை/தூகம் கெடுவது உண்மையே. மக்களின் ஹார்மோன் அளவை அளந்து பார்த்ததில் ஹார்மோன் அளவு குறைவதும் இதனால் 20 நிமிடம் தூக்கம் குறைவதும் தெரியவந்துள்ளது. (Despite modern comforts, lunar cycles still alter our brain activity. Swiss researchers found hormones which regulate our sleep drop during a full moon, giving us 20 minutes less in the land of nod).

sikh with crescent moon

A Sikh with crescent moon

சிலருக்கு நிமிடக் கணக்கில் இல்லாமல் மணிக் கணக்கிலும் போகலாம். மொட்டை மாடியில் சந்திரனுக்கு நேரே தூங்கக்கூடாது என்று பாட்டிமார்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிச் செய்திகள் அனைத்தும் விஞ்ஞான பத்திரிக்கைகளில் வந்தவற்றின் சுருக்கம். மேலும் விவரம் வேண்டுவோர் New Scientist, Nature பத்திரிக்கைகளில் பெறலாம்.

தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.

ஏற்கனவே ஆங்கிலத்தில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

 

CylinderSealMoonGod

 

Moon was worshiped as Nanna in Mesopotamia. Pictures are taken from different websites; thanks.

contact swami_48@yahoo.com