சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட் மர்மம் ! (Post No.9206)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9206

Date uploaded in London – –30 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட்  மர்மம் !

சுமேரியா என்றால் என்ன?

இராக் நாட்டின் ஒரு பகுதி. டைக்ரிஸ் – யூப்ரடீஸ் என்ற நதிகளின் சமவெளிப் பகுதி.

ஜிக்குராட் ZIGGURAT என்றால் என்ன?

படிப்படியாக அமைந்த சதுர கோபுரம். இந்துக் கோவில் போல இருக்கும்; ஆனால் படிப்படியாக – அதாவது கட்டம் கட்டம் ஆக சிறுத்துக் கொண்டே போகும் .  இந்துக் கோவில் முக்கோணம் போல உயரும். ZIGGURAT சிக்குராட் சதுரம், குட்டி சதுரம், குட்டி குட்டி சதுரம் என உயரும் .

இதற்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு?

பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை சூரியனை நோக்கி காயத்ரி மந்திரம் சொல்லுவார்கள். அந்த மந்திரம் நாலு வேதத்திலும் உள்ளது. உலகில் 8000 ஆண்டுகளாக பிராமணர்கள் சொல்லும், செய்யும் அற்புதம் இது. ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் ரிக் வேத காலத்தை ‘கி.மு. 6000 வரை’ என்று வான சாஸ்திர வழியில்- அடிப்படையில் நிரூபித்துள்ளனர். தள்ளிப்போன , தகிடுதத்தப் பேர்வழி மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக கி.மு 1200 என்று சொல்லிவிட்டு, பின்னர் வில்சன், விண்டர்நிட்ஸ் முதலிய அறிஞர்கள் கொடுத்த அடியில் அசந்து போய், ரிக்வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்; எவரும் அதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

அப்பேற்பட்ட பெருமை மிகு  ரிக்வேத மந்திரத்தில் ZIGGURAT சிக்குராட் வருகிறது.

XXX

ZIGGURAT சிக்குராட் – சிகரம் ஏன் கட்டினார்கள்?

இந்த சதுர கோபுரம் பற்றி பைபிள் முதல் ஹெரோடோட்டஸ் (HERODOTUS) வரை பலரும் பல சுவையான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றனர். பைபிளின் முதல்(GENESIS) அதிகாரத்தில் பேபல் கோபுரக் (TOWER OF BABEL) கதை வருகிறது. சொர்கத்துக்குப் போக மக்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கோபுரம் அமைக்க முயன்றதால், கடவுளுக்கு கோபம் வந்தது. அவர்கள் நீங்கள் எல்லோரும் பல மொழிகளைப்ப பேசுவோராகி உலகெங்கும் ஓடிப்போங்கள் என்று சபித்துவிட்டார். இந்தக் கதையில் வரும் கோபுரம் சதுர சிக்குராட் கோபுரம். அது அழிந்து போகவே பின்னர் நெபொ போலசார் மகன் நெபுகட்னேஸார் ஒரு கோபுரம் கட்டினார்.

இதுதவிர சிக்குராட் பல கட்டப்பட்டு அவற்றினுச்சசியில் — சிகரத்தில் இறைவன் சிலைகள் வைக்கப்பட்டன. நாம் குன்றுதோறும் ஆடிவரும் குமரனை வழிபடுவது போல, பக்தர்கள் படி ஏறிச் சென்று கடவுளை வழிபட்டனர் .

இந்த ஜிக்குராட் ZIGGURAT= SIKHARA என்பது சிகரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சிதைவு ஆகும். ஐயர் தலையிலுள்ள சிகா – சிகை — என்னும் குடுமியும் இதே பொருளுடைத்தே !

ஹெரோடோட்டஸ் (HERODOTUS) என்னும் அறிஞர் சொன்ன விஷயத்துக்கு முன்னர், சுவையான பிராமண விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் . பிராமணர்கள் தினமும் ‘காணாமல், கோணாமல், கண்டு’ — என்ற வகையில் மூன்று முறை சூரியனைத் தொழுவர். சூரியனைக் ‘காணாமல்’ – அதாவது சூர்யோதயத்துக்கு முன்னால் – நடுப்பகலில் – நிழல் ‘கோணாத’ நேரத்தில் – ‘கோணாமல்’ ஒரு முறை தொழுகை நடத்துவர். மாலையில் ‘கண்டு’- அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன்னர் அவனைக் ‘கண்டு’ ஒரு முறை தொழுகை நடத்துவர். இது தவிர சமிதா தானம் (பிரம்மச்சாரிகளுக்கு), ஒளபாசனம் முதலிய தீ / அக்னீ  சடங்குகள் தனி.

பிராமணர்கள் உலக மஹா அதிசயங்கள்! ஏனெனில் இன்றும் 8000 வருஷமாக ஒரு சடங்கைச் செய்யும் அதிசயங்கள். அது மட்டுமல்ல; அதை வாய் மொழியாகவே பரப்பிவரும் மஹா அதிசயங்கள்!!! அவர்கள் மூன்று முறையும் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டு காயத்ரியை – தேவியை — இருதயத்துக்குள் அமர்த்துவர்- அதாவது ‘ஆவாஹனம்’ செய்வார்கள் . அது எப்படி?

கைகளை மூன்று முறை உடப்பக்கமாக காட்டி (INVOKING) வருக, வருக , வருக என்று மூன்று முறை அழைப்பர். நாம் சினிமா வசனங்களில் கேட்கும் ‘அலை மகள், கலை மகள் , மலை மகளை’ காயத்ரீம் ஆவாஹயாமி , ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி  என்று அழைப்பர்.

இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?

அவள் Z ஜிக்குராட்டில் இருந்து — மேரு மலை ‘சிகரத்’தின் உச்சசியில் இருந்து வந்து பிராமணர் இதயத்துக்குள் அமர்வாள் ; பிராமணர்கள் தொழுகை முடித்தவுடன் அவளை திருப்பி அனுப்பும் மந்திரத்தில் ‘Z ஜிக்குராட்’ வருகிறது

தாயே! ரொம்ப THANKS தாங்க்ஸ் . திருப்பியும் சிகர உச்சிக்கே போய் விடு என்று GOOD BYE ‘குட் பை’ சொல்லுவார்கள்.

உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி

பிராம்மணோ ஹ்யணுக்ஞானம்

கச்ச தேவி யதா சுகம்”

என்ற மந்திரத்தைச் சொல்லி வழி அனுப்புவார்கள்.

மந்திரத்தின்  பொருள்

பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து , ‘மேரு மலை உச்சியில் உத்தமமான சிகர’த்திலுள்ள உனது ஆலயத்தில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய் “.

அவள் கடவுள் தானே !

பில்லியன் பிராமணர்கள் ட்ரில்லியன் தடவை கூப்பிட்டாலும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜிக்குராட் / சிகரத்தில் இருந்து இறங்கி வந்து இதயத்துள் அமர்ந்து அருள் புரியும் அற்புதமே அற்புதம் !!

ஹெரோடோடஸ் என்ற கிரேக்க அறிஞர் 2600  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் பல விஷயங்களை எழுதியதில் Z க்குராட்  விஷயமும் வருகிறது எட்டு அடுக்கு கோபுரம் பற்றி வருணிக்கையில் போகப் போக சதுரங்கள் சிறுத்துக் கொண்டே போவதாக எழுதியுள்ளார்.

இந்த சதுர கோபுரம் வானவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டதாம். இந்துக்களைப் போலவே சுமேரியர்களும் நாள், நட்சத்திரம் பார்த்து விழா க்களைக் கொண்டாடினர்.

என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சுமேரியாவில் நம்மவர்கள் குடியேறியதைக் காட்டும் 30 சிந்து – ஸரஸ்வதி நதி தீர முத்திரைகள், தேக்கு மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . சுமேரிய மன்னர்கள் பட்டியல் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது

நரம் சின் NARAM SIN , அமர் சின் AMAR SIN  முதலிய பெயர்கள் நமக்கு நர சிம்மன் / நர சந்திரன் , அமர சிம்மன்/ அமர சேனன், அமர சந்திரன் முதலிய பெயர்களை நினைவு படுத்தும் . மேல் விவரங்களை 20, 30 தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளில் தந்து விட்டேன் ; கண்டு கொள்க .

–SUBHAM —-

Tags – சுமேரியா , பிராமணர் , ஜிக்குராட் , சிகரம், காயத்ரீ

சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723)

Picture of a Traditional Tamil Wedding

 

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 20-55

 

Post No. 3723

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

 

1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

 

இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

 

2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).

 

3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.

இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.

 

4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.

பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.

 

நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.

சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.

 

இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.

 

6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான  சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..

இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க்  காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு   வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.

 

6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.

 

இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.

 

 

7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.

 

இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே  – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.

8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.

 

இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம்  கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.

 

  1. திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.

 

இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.

 

10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

 

இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.

 

11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.

 

அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

 

12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.

இது இந்துமத்தில் இல்லை

 

14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.

இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை

.

13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.

 

 

இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக  ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by  British Museum.

 

–Subham–

 

சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

sumeru_parvat9742

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.

சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்
பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி
குமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்
மேரு என்பது இந்துக்களின் புனித மலை.

இவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன?

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:
“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.”
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.

((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))

sumermap2 in modern Iraq

நாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.

கலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!

mount-meru
Meru in Kenya, East Africa

க்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.

காம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ?

pameru
Pamir– Roof of the World

இனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார்? அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா? என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.

சுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.

maha-meru-yantra
Sri Chakra and Meru: Hindu Goddess Worship

இனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.

ஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேரு என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ! இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.

khmer new year
Khmer people celebrating New Year

“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.

-சுபம்–

contact swami_48@yahoo.com

சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்?

interpreter

Indus Valley Interpreter in Akkadian Cylinder Seal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1338; தேதி அக்டோபர் 10, 2014.

உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதில் எட்டாவது மண்டலத்தில் பல புரியாத, புதிர்கள், மர்மமான விஷயங்கள் இருந்தன. இப்போது மேற்காசியாவில் உள்ள சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் பற்றி மேலும் மேலும் தகவல் கிடைக்கவே ஒவ்வொரு புதிராக விடுவிக்கப்படுகின்றது. எட்டாவது மண்டலத்தில் நிறைய வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அவைகள் —அசுரர்கள் பற்றியவை. அசுரர்கள் என்போர் — வேத காலத்தில் பிரிந்து சென்ற இந்துக்கள் தான்.

ரிக்வேதத்தில் மிகவும் விரிவாகப் பேசப்படும் யுத்தம்—தச ராக்ஞ யுத்தம்—அதாவது பத்து ராஜா போர் — இந்தப் போருக்குப் பின்னர் பல இந்துக்கள் மேற்கே ஈரானிலும் இராக்கிலும் குடியேறினர். வேதங்களைப் படித்த ஜொராஸ்தர் என்பார் தனியாக ஒரு கோஷ்டியைக் கூட்டிக்கொண்டு ஈரானுக்குப் போய் பார்ஸி மதத்தை ஸ்தாபித்தார். அவர் நிறுவிய மதம் வேத கால யாக யக்ஞங்களைப் பின்பற்றினாலும் வேதம் யாரை தேவர் என்று சொல்கிறதோ அதை அவர்கள் அசுரர் என்பர் — அதாவது கோஷ்டிப் பூசல் — ( திராவிட கழகம் உடைந்து நமது காலத்திலேயே பல ‘’மு.க.’’ க்கள் உண்டானது போல)

இது ஒரு புறமிருக்க — சில மன்னர்களின் பெயர்கள் ரிக் வேதத்திலும் பார்ஸி மதப் புத்தகமான சென் ட் அவஸ்தாவிலும் ஒன்றாக இருப்பதை பலரும் கவனித்தனர். சுமேரியாவில் பயன்படுத்தப்படும் ‘’மாண’’ என்ற எடை ரிக் வேதக் கவிதையிலும் உள்ளது. இதைக் கண்ட மாக்ஸ்முல்லர் கூட, இந்த ஒப்பீடு சரி என்றால், வேதத்தின் இந்தப் பகுதி மிகப் பழமையானதாகத் தான் இருக்கும் என்றார். இப்போது அந்தப் பகுதி எல்லாம் கி.மு.2000 ஐ ஒட்டியது என்பது ‘’நிரூபணம் ஆகிவிட்டது.’’

talageri good

Vedic Hindus Migratory Route from Talagei’s book The Rig Veda- A Historical Analysis.

உலகம் முழுதும் சுமேரிய, எகிப்திய, சீன, எபிரேய (ஹீப்ரு) வரலாற்று நூல்களில் வரும் மன்னர்களுக்கு எல்லா என்சைக்ளோ பீடியாக்களிலும் (கலைக் களஞ்சியம்) தேதி — ஆண்டு குறித்து விட்டனர். இந்தியாவில் மட்டும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைய வரலாற்றை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!!!!!

புதிய வரலாற்றின்படி பார்த்தால் எது கி.மு.2000 என்று வருகிறதோ அதுதான் ரிக்வேதத்தின் கடைசி பகுதி. இதை வைத்து ஸ்ரீஈகாந்த் தலகரி போன்றோர் இதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது ரிக் வேதத்தின் பழைய பகுதி என்று காட்டுகின்றனர். சுருங்கச் சொன்னால் வேதத்தின் பல பகுதிகள் கி.மு 4000–ஐ ஒட்டி எழுந்தது எனலாம். இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன்னர்!!!

பாரசீக மொழி ஆய்வாளர்களும் ரிக்வேதத்தின் எட்டாவது மண்டல காலமும் சென் ட் அவஸ்தாவின் காலமும் நெருங்கியவை என்று காட்டுகின்றனர். இரானிய சம்பிரதாயமும் ‘’ட்ராய்’’ நகர யுத்தத்துக்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஜொராஸ்தர் (கி.மு1800) வாழ்ந்தார் என்பர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கங்களில் சௌராஷ்டிர (குஜராத்) பகுதியில் இருந்து சென்றவரே ஜொராஸ்தர் என்கிறார் — சௌராஷ்டிர = ஜொராஸ்ட்ர.

துவாரகாபுரியில் கடலடியில் கிடைத்த பொருட்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் என்பதால் க்ருஷ்ணரின் ஆட்சிக்குப் பின்னர் துவாரகை மூழ்கியது என்ற புராணச் செய்தியும் உண்மையாகி விட்டது. ‘’இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள்’’ — என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ணர், காலதேயர் (சால்டியர்), நீவாட கவசர்கள் (கடற் கொள்ளை யர்கள்) மீது கடற்படைத் தாகுதல் நடத்தி வெற்றி கொண்டதையும் காட்டியுள்ளேன். இதே போல முருகப் பெருமான், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் தென் பகுதியில் கடற்படைத் தாக்குதல் நடத்தி கடம்பறுத்த தையும், கடல் நடுவில் இருந்த மாமரம் அழித்ததையும் (சூரபன்மன்), யவனர்களை மொட்டை அடித்து தலையில் எண்ணை பூசியதையும் காட்டியுள்ளேன் — (மாமரம் ,கடம்பமரம் என்பன அவர்களது சின்னங்கள்=காவல் மரங்கள்)

talageri rivers

இவை எல்லாம் காட்டுவது யாதெனில் இந்தியாவின் மகத்தான கடற்படை எகிப்துவரை சென்று ஆட்சி அமைத்ததாகும். மேற்காசியாவில் உள்ள மிட்டன்னிய (சிரியா) ஆட்சியாளர் அனைவரின் பெயரும் தூய சம்ஸ்கிருதத்தில் இருப்பதை உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு விட்டனர். காசைட்டுகள், ஹிட்டைட்டுகள் ஆகியோர் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உலகம் ஒப்புக்கொண்டுவிட்டது. எகிப்தைத் தாக்கிய ஹிக்சோஸ் என்பவர் யக்ஷர்கள் என்றும் பலர் கருதுவர். ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை கிடைத்த சான்றுகள் அனைத்தும் கி.மு 2000 முதல் கி.மு 1800 வரை பெரிய குடியேற்றம், படை எடுப்பு இருந்ததைக் காட்டுகின்றன. சுமேரியாவில் பல மொழிகள் பேசப்பட்டதையும் உலகம் அறியும். மெலுஹா (சிந்து சமவெளி) என்னும் இடத்தில் இருந்து வந்த மொழிபெயர்ப்பாளரின் உருவம் அக்கடிய மன்னன் படத்துடன் உள்ள சிலிண்டர் முத்திரை கிடைத்து இருக்கிறது. அது கி.மு 2500-ஐச் சேர்ந்த்து —( நரம் சின்= நரச் சந்திர என்ற மன்னன் உடையது — சின் என்பது சந்திர என்ற சொல் ஆகும் — நாம் ராமச் சந்திர, ஹரிச் சந்திர என்பது போல)

சுமேர் பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் காட்டிவிட்டேன். ஏன் இவ்வளவு கடவுள் பெயர்கள்? ஏன் இவ்வளவு மொழிகள், ஏன் இவ்வளவு மொழி பெயர்ப்பாளர்கள்? ஏன் இவ்வளவு மொழி பெயர்ப்புகள்? அதுவும் கி. மு.3000-த்தில்? ஏன் என்றால் அது உலக மக்களின் படை எடுப்புத்தளமாக விளங்கியது. சம்ஸ்கிருத நூல்களில் எகிப்துக்கும் ‘’மிஸ்ர தேசம்’’ என்று பெயர்—அதாவது கலப்பட பூமி—ஆக தூய இரத்தம் உடைய ஒரே இடம் பாரத பூமி – மற்ற எல்லா இடங்களும் ‘’கலப்படங்கள்’’ என்பது 4000 வருஷத்துக்கு முன்னிருந்த நிலை! அதாவது கி.மு. 2000.

ரகசிய எட்டாம் மண்டலம் தரும் விசித்திர தகவல்கள்
RV. 8-5-37
புரோகிதருக்கு காசு என்ற மன்னன் (இரானியர்) 100 ஒட்டகங்களையும், 10,000 பசுக்களையும் தானம் கொடுத்தான்.
((ஆர். வி. என்ற ஆங்கில எழுத்து ரிக் வேதம் என்பதன் சுருக்கம்))
RV 8-64-6
பரசு, திரிந்திர (ஈரானிய பாரசீக=பரச=பெர்சிய) ஆகியோர் ஒரு லட்சம் பரிசு தந்தனர்.
RV 8-12-9
சூரிய கிரணங்கள் எரிப்பது போல இந்திரன் அர்சசானாவை (ஈரானிய எர்ஷான்) அழித்தான்
RV 8-32-2
அர்சசானா (ஈரானிய எர்ஷான்), ஸ்ரீபிந்து, அஹி சுஷ்வ ஆகியோரைக் கொன்றான்.
RV 8-46-32
பலபூதனும், தார்க்ஷனும் புரோகிதருக்கு 100 ஒட்டகங்கள் தானம் கொடுத்தார்கள்.

இதில் ஒட்டகம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய மொழிகள் அனைத்திலும் சம்ஸ்கிருதப் பெயர்தான் (உஷ்ட்ர=ஒட்டை=ஒட்டகம்) பயன்படுத்தப்படுகிறது. இது ராஜஸ்தானுக்கு அப்பால் பாலைவனங்களில் வசிப்பது. ஈரானியர்களும் பிராமணர்களை மதித்து தானம் கொடுத்தது அவர்களும் நம்மவரே என்பதற்குச் சான்று பகரும். சங்கத் தமில் இலக்கியத்தில் ஒட்டகம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடப்படுகிறது!
earliestcivilsation map

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் – தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கு—ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து — அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி—பெண்களின் முடியைக் கத்தரித்து—கயிறு திரித்து வெற்றி பெற்ற மன்னரின் தேரை இழுத்து வந்ததையும்—இரத்த ஆறு ஓடியதையும்—சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். ஆனால் அவர்கள் தூய தமிழர்கள். அது போலவே இந்திரனால் தாக்கப்பட்ட ஆட்களும் நம்மவரே! நமது காலத்திலேயே இலங்கைத் தமிழர் குழுக்கள் ஒருவரை ஒருவர் குண்டு வைத்து தகத்து அழித்ததையும் கண்டோம்.- ஆனால் எல்லோரும் தமிழர்களே!!

மேலும் இந்திரன் என்பது ராஜா=மன்னன் என்று பொருள்படுமேயன்றி ஒரு தனி நபரைக் குறிப்பது அல்ல.

சுமேரியா மீது தாக்குதல்

தெற்கு மெசபொடோமியாவில் லார்சா என்னும் நகரம் இருக்கிறது. இங்கிருந்து ஆண்ட மன்னர்களில் ஒருவர் எமிசம் (கி.மு2004). இவருடைய பெயர் ரிக் வேத எட்டாம் மண்டலத்தில் எமுசா என்று உள்ளது. இது சம்ஸ்கிருத சப்தமில்லாத ஒரு விநோதப் பெயர். அவரை இந்திரன் கொன்றான் (8-76 முதல் 78 வரை). இதைப் பாடிய ரிஷி குருசுதி தனக்கு ‘’மாண’’ அளவு தங்கம் வேண்டும் என்று பாடுகிறார். ‘’மாண’’ என்பது அரை பவுண்டு (சுமார் முப்பது சவரன்) – என்று நூல்கள் சொல்லும்.

தைத்ரீய சம்ஹிதையில் வரும் ஒரு குறிப்பும் இதை உறுதிப்படுத்துகிறது:
‘’நீ போக முடியாத இடங்களில் எல்லாம் போய் வெல்லுவேன் என்று சொன்னாய். அசுரன் வனமோசா, ஏழு மலைகளுக்கு அப்பால் அசுரர்களுக்குக் காவலாக நிற்கிறான். அவனை அழித்து தேவர் விரும்பும் செல்வத்தைக் கொண்டுவா. அந்தப் பன்றியைக் கொல்’’.

இந்தப் பிரார்த்தனையைத் தொடர்ந்து ‘’இந்திரன் ஒரு தர்ப்பைக் கட்டின் முடிச்சைப் பிடித்து மலைகளைப் பிளந்து அவனைக் கொன்றான்’’.

ஆக எமுஷா என்பவனிடம் நிறைய செல்வம் இருந்தது தெரிகிறது. அவன் அசுர மன்னன் என்பதும் தெரிகிறது. அசீரியாவை (அசுர பூமி) ஆண்ட பல மன்னர்களின் பெயரில் அசுர என்ற சொல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். விஷ்ணுவின் வராக அவதார கதையும் இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

((சிறு வயதில் அம்புலி மாமாவிலும் வேறு பல இடங்களிலும் ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில்……………………. என்று கதைகள் படித்தோம். அவை எல்லாம் வேத கால வசனங்கள் என்பதைக் குறிப்பிடலும் பொருத்தம்))
peryplus_first_century_AD_1000px

எட்டாவது மண்டலத்தில் வரும் பல பெயர்கள் வேதத்தில் இருப்பதைப் போல அவஸ்தா நூலிலும் உள்ளன:

சுஷ்ரவ = ஹுஷ்ரவ
இஷ்டஸ்வ (1-122) = விஸ்டஸ்ப
இந்த்ரோத (8-68) = பாபிலோனிய மன்னன் இந்தாது
ஹுஷ்ரஸ்வவுடன் வேத கால மன்னன் திவோதச அதிதிக்வ உடன்பாடு செய்து கொண்டதையும் வேதம் பகரும் (1-53-9)

((சுதாச, திவோதாச என்னும் வேத கால மன்னர்களின் பெயரில் தாச என்ற பின்னொட்டு இருப்பதைக் கவனித்தல் நலம் — தாச, தஸ்யூ என்பவர்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரன் கட்டிவிட்ட பொய் மூட்டைகள் எல்லாம் இதன் மூலம் அவிழ்ந்து உதிர்ந்து விழுந்து அழியும். அவர்களுக்கு உதவியவர்கள் விஸ்வாமித்ரர், வசிஷ்டர் என்ற இரண்டு மிகப்பெரிய ரிஷிக்கள் ஆவர். புரானங்களிலும் கூட அசுர குரு சுக்ராசார்யார் என்றும் அவர் ஒரு பிராமணர் என்றும் படிக்கிறோம் சங்கத் தமிழ் இலக்கியமும் கூட குரு, சுக்ரன் ஆகிய இருவரையும் இரண்டு அந்தணர்கள் என்று புகலுவதையும் மனதிற் கொள்க. புகல்=பகர்=சொல்))

மெகஸ்தனீஸ் சொல்லும் அதிசயச் செய்தி!!!
2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதர் ஒரு முக்கிய செய்தியைச் சொல்கிறரார்:-

உலகநாடுகளில் ஒரு ஒப்பற்ற இடத்தை வகிப்பவர்கள் இந்தியர்கள். அவர்கள் பதி எழு அறியாப் பழங்குடியினர். தந்தை பாக்கஸ் முதல் மஹா அலெக்சாண்டர் வரை அவர்கள் இதுவரை 154 மன்னர்களைக் கண்டுவிட்டனர். அவர்கள் ஆண்ட காலம் 6451 ஆண்டுகள் 3 மாதங்கள்.
(மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா நமக்குக் கிடைக்காத போதிலும் பிளினி, அர்ரியன் மேற்கோள்கள் மூலம் இவற்றை நாம் அறிகிறோம். இதை அப்படியே நாம் எடுத்துக் கொண்டால் மகத சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் 2300+6451= 8751 ஆண்டுகளுக்கு முன் இருந்திருப்பான். அதாவது சுமேரிய, எகிப்திய நாகரீகங்கள் நமக்கு கொசுப் போல. நாம் இயமலை!!! — ஆயினும் அறிஞர் பெரு மக்கள் ஒரு மன்னருக்கு 20 ஆட்சி ஆண்டு சராசரி என்று நிர்ணயித்து இருப்பதால் மெகஸ்தனீசுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதே பொருத்தம். அதாவது இற்றைக்கு 5300 (2300+3000 = 5300) ஆண்டுகளுக்கு முன்— கலியுக துவக்கம் போதுதான் புதிய ஆட்சி மலர்ந்தது என்பது மகத சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் (மெகஸ்தனீஸ் நமக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்))

கிரேக்க ஆசிரியர்கள் பாக்கஸ், ஹெர்குலீஸ் என்றெலாம் நம்மவருக்கு பெயர் சூட்டுவதிலும் ஒரு தாத்பர்யம்—சூட்சுமம்—இருக்கிறது. அவர்களும் நம்மையே அவர்களுடைஅய மூதாதையர்களாகக் கருதுகின்றனர்!!!!!

silkroads2000BCE

இறுதியாக ஒரு எச்சரிக்கை:
வெள்ளைகாரர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து விடக்கூடாது. இந்திரன் என்ற சொல்லைக் கண்டவுடன் அவனுக்கு காலம் நிர்ணயித்து விடக்கூடாது. இது மன்னன், ராஜ என்ற பொதுப் பெயர்.

இரண்டாவது எச்சரிக்கை:
தசரதன், எமுஷா என்று பெயரைப் பார்த்தவுடன இவன் அவனேதான்— என்று முடிவு செய்துவிடக்குடாது. ராமாயண தசரதன், சிரியாவை ஆண்ட தசரதன் (கி.மு1400), அசோகனுடைய பேரன் தசரதன், எனது நண்பர் விருதுநகர் தசரத நாடார் ஆகிய பல தசரதன்கள் உண்டு. ராமசெஸ் என்ற பெயரில் மட்டும் எகிப்தில் 11 மன்னர்கள் உண்டு. அலெக்சாண்டர் என்ற பெயரில் நமது தாத்தா காலம் வரை பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆக ரிக் வேதத்தின் எட்டாம் மண்டலத்தின் காலம் கி.மு. 2000 ஐ ஒட்டி என்று முடிவு கட்டிவிட வேண்டாம். ஒரே பெயரில் பல மன்னர்கள் இருப்பது தெரியவந்தால் இதுவும் மாறலாம்!!!

சுபம்.

நாக ராணி: சிந்துவெளி முதல் சபரிமலை வரை


Minoan Snake Goddess 1600 BC

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாக ராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் தெரிவிக்கின்றன.
உலகத்தில் பாம்புகளைப் போற்றாத பழைய நாகரீகங்களே இல்லை. வேத காலம், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய, சுமேரிய ,பாபிலோனிய, மாயா பண்பாடுகள் அனைத்திலும் நாக உருவில் தெய்வங்கள் உண்டு. ஆயினும் இந்துக்களுக்கு இதில் மிகவும் சிறப்பான இடம் இருக்கிறது. வேத காலத்தில் போற்றப்பட்ட நாகங்களுக்கு இன்றுவரை கோவில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். உலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா இந்து தெய்வங்களும் பாம்புடன் சம்பந்தப்பட்டவை.

Indus Valley Snake God

ஆர்தர் ஈவான்ஸ் என்ற தொல்பொருள் துறை நிபுணர் கிரீட் தீவில் நாசோஸ் என்னும் நகரில் பெரிய மினோவன் நாகரீக அரண்மனையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்தார். அதில் ஒரு பெண் இரு கைகளிலும் பாம்புடன் நிற்கிறார். அவர் தெய்வமா பூசாரினியா என்று தெரியவில்லை. அந்தச் சிலை மேலை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது.

மானசா தேவி, நாகராஜன், நாக யக்ஷி முதலிய பல வடிவங்களில் சபரிமலை முதல் சிந்து சமவெளி வரை கோவில்கள் அல்லது பாம்பு ராணி சிலைகள் இருக்கின்றன. அன்று போல் இன்றும் நாகங்களைத் தெய்வமாக வழிபடும் தொடர்ச்சியையும் காண்கிறோம்.

Naga Yakshi

அயர்லாந்தில் ஹெகடெ (சக்தி என்ற சொல்லின் மருவு) என்ற நாகராணியை வணங்கினர். சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கபஜா என்னும் இடத்தில் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகள் உடைய தெய்வத்தைக் காணலாம். இதே தெய்வம் நாக யட்சி என்ற பெயரில் கர்நாடகம் கேரளம் முழுதும் உள்ளன. ஒரிசா, வங்காளம் ஆகியவற்றில் மானசா தேவி இதே உருவத்தில் வழிபடப்படுகிறாள்.

அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?

ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் பலவித தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.

அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.

வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதி மறைந்து 5000 ஆண்டுகள் ஆகியதை பாபா அணுசக்தி ஆய்வு மையமும் அமெரிக்க விண்வெளி நாஸா- வும் உறுதி செய்ததாலும் வேத காலத்தின் பழமை உறுதியாகிறது.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் Serpent Queen: Indus Valley to Sabarimalai எழுதியுள்ளேன், பெயர்களின் சரியான ஸ்பெல்லிங் முதலியன தேவைப்பட்டால் ஆங்கிலக் கட்டுரையை வாசித்து கூகிள் செய்தால் மேலும் ஆழமான தகல்களைப் பெறலாம்)

சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.

இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்.

5000 ஆண்டுகளுக்கு முன் இப்படி சுமேரியாவில் தமிழும் சம்ஸ்கிருதமும் இருப்பதை நோக்கும் போது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்ற பழைய கோட்பாடும் உயிர் பெறுகிறது. இத்துடன் இணைத்திருக்கும் படங்களைக் காண்போருக்கு, உண்மைகள் சொல்லாமலே விளங்கும்.

கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படித்தால் முழு சித்திரம் கிடைக்கும்:

1. Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu
2. The Sugarcane Mystery: Ikshwaku Dynasty and Indus Valley
3. Mysterious link between Karnataka and Indus Valley
4. Vishnu in Indus valley seal
5. Indra on Airavata in Indus valley)
*******************