Written by S NAGARAJAN
Date: 2 JUNE 2018
Time uploaded in London – 7- 11 am (British Summer Time)
Post No. 5068
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
வளமான வாழ்க்கைக்கு வாஸ்து
காசு மேலே காசு வரும்!
ச.நாகராஜன்
வாஸ்து சாஸ்திரம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. அது பொய்க்காது.
வாஸ்து சாஸ்திரத்தின் பெருமை எல்லையற்றது. அதன் பெருமைகளைக் கேட்பதை விட உடனடி பலன்களை எதிர்பார்ப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.
எப்படி மின்சாரத்தின் தியரி பகுதியை அனைவரும் அறிய விரும்பாமல் ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரிவதை மட்டும் விரும்புகிறார்களோ அது போல, வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அதன் பயனை உடனடியாக அனுபவிக்கத் துடிப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.
ஒம்’ஸ் லாவும் (Ohm’s Law) கிர்சாஃப்ஸ் லாவும் (Kirchoff’s Law) யாருக்கு வேண்டும். ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும்; ஃபேன் சுற்ற வேண்டும்.
சரி, நேரடியாக அனைவருக்கும் பிடித்த விஷயத்திற்கு வருவோம்.
காசு மேலே காசு வரும்!
அது தானே வேண்டும்.
‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும்”
அதாவது குற்றமுற்ற பூமியில் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கின்ற பொருளை அடைந்து விட்டால் அறமும் இன்பமும் தானே வரும் என்பது ஆன்றோர் வாக்கு.
சரியாகத் தான் சொன்னார்கள்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!
வாஸ்து மூலம் காசு மேலே காசு வர வழி என்ன?
சுலபமானது; அதிகம் செலவில்லாதது – ஒரு வழி!
வடக்கு திசையைக் கவனியுங்கள் என்பது தான் அது.
வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.
செல்வம் வேண்டுவோர் முதலில் பார்க்க வேண்டிய திசை அது.
வடகிழக்கு மூலையில் – ஹாலில் – தினமும் ஒரு நல்ல பாத்திரத்தில் ஜலத்தை நிரப்பி வைக்க வேண்டும்; அதை மறு நாள் காலையில் அகற்றி விடவேண்டும். மறுபடியும் புதிய நீரை நிரப்ப வேண்டும்.
வடக்கு திசையில் – ஹாலில் – முக்கியமாக குப்பை கூளங்கள் இருக்க கூடாது.
வடக்கு திசையில் ஸ்டோர் ரூம் இருக்க கூடாது.
வடகிழக்கில் டாய்லட் இருக்கக் கூடாது.
அப்படி இருந்தால் அங்கு கல் உப்பை ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். அது ஈரமாகப் போனவுடன் அதை அகற்றி புதிய உப்பை வைக்க வேண்டும்.
வடக்கு திசை செல்வத்தின் திசை என்பதால் அங்கு காசு, பணம் உள்ள பீரோவை வைக்கலாம்.
வடக்கில் செய்யக் கூடாத ஒன்று – வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பது தான். அது மூளையின் செயல் இயக்கத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.
வடக்கு நீரின் திசை.
இந்தத் திசை வீட்டில் சுத்தமாக இருந்தால் அந்தஸ்து உயரும்; உயர் பதவி வரும்; செல்வம் சேரும். சொத்துக்கள் சேரும்.
இது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டால் – ஸ்டோர் ரூம், அழுக்கு மூட்டைகள், குப்பைகள் சேர்தல், செருப்புகளை வைத்தல் ஆகியவற்றால் பலவீனப்படுத்தப்பட்டால் – வீட்டில் செல்வம் வந்தாலும் அது உடனடியாக அகன்று விடும். இல்லத்தில் இருப்பவர் நோய்வாய்ப்படுவர். சொத்துக்கள் வில்லங்கமாகி விடும்.
ஆகவே வடக்கு திசையைக் கவனித்து வடகிழக்கு மூலையில் ஒரு பேஸினில் நீரை வைத்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் கவனியுங்கள்.
நிச்சயம் ஒரு நல்ல அறிகுறி தோன்றும்.
உடனடியாக இந்தப் பழக்கத்தை பலப்படுத்துங்கள்.
நீரில் ரோஸ் வாட்டர், பன்னீர், கங்கை ஜலம் போன்றவற்றை ஊற்றி வரவை அதிகமாக்கலாம்.
இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவுடன் உங்கள் பணவரவைப் பாருங்கள்.
வடக்கில் Clusterஐ அகற்றுங்கள்.
வாஸ்து தரும் காரண்டி – காசு மேலே காசு வரும்!
***
பயனடைந்தவுடன் அன்பர்கள் தங்கள் அனுபவத்தை எழுதி அனுப்ப மறக்க வேண்டாம்!